Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Monday 2 November 2020

என்.ஐ.டி மாணவர்கள் அளித்த பயிற்சியில் ஐந்தில் நான்கு அரசுப் பள்ளி மாணவர்கள்

 என்.ஐ.டி மாணவர்கள் அளித்த பயிற்சியில் ஐந்தில் நான்கு அரசுப் பள்ளி 
மாணவர்கள்   நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வில் வெற்றி


  என். ஐ. டி, திருச்சிராப்பள்ளியின் இக்னைட்  கிளப் 
பயிற்சி அளித்த இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி ஆன 
தமிழ் நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் தர வரிசை பட்டியளில் இடம் 
பெற்றுள்ளனர்.  அதில், லால்குடி அரசுப் பள்ளி மாணவர் ஹரிகிருஷ்ணன் மாநில 
அளவில் முதல் இடமும், மணச்சநல்லூர் அரசுப் பள்ளி மாணவர் கிஷோர் குமார் 




114 வது இடமும் பெற்றுள்ளனர்.  இதன் மூலம், இந்த இரு மாணவர்களுக்கும் 
தமிழ் நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும் என 
எதிர் பார்க்கப்படுகின்றது.    ஊரடங்கு காரணமாக சில தடைகள் உண்டானாலும் , 
விரைவிலேயே IGNITTE குழு உறுப்பினர்களால் மாணவர்கள் தொடர்பு கொள்ளப் 
பட்டு , 5 மாதங்களாக வகுப்புகள் தொடர்ந்து தொலைப்பேசி அழைப்பு வாயிலாக 
நடைபெற்றன.
மாணவர்களுக்கு குழு உறுப்பினர்கள் நாள் ஒன்றிற்கு 12 மணிநேரம் வினாக்களை 
அணுகும் முறை குறித்தும் , அதற்கு விடை கண்டறியும் வழி குறித்தும் உதவி 
செய்தனர்.
முன்பாக, இந்தாண்டு 4 மாணவர்கள் JEE Mains தேர்வில் தேர்ச்சி 
பெற்றுள்ளனர் , மற்றும் இருவருக்கு NIT திருச்சியில் சேர இடம் 
கிடைத்துள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி லால்குடியைச் சேர்ந்த Sethupathi P 
மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மணச்சநல்லூர் சேர்ந்த Pugazharasi S க்கு 
மின் மற்றும் மின்னணு பொறியியல் (Electrical and Electronics 
Engineering) , உலோகவியல் மற்றும் பொருள் பொறியியல் (Metallurgical and 
Materials Engineering) ஆகிய படிப்புகள் முறையே கலாய்ந்தாய்வின் மூலம் 
கிடைத்துள்ளது. இதன் மூலம் என்.ஐ.டி மாணவர்கள் அளித்த பயிற்சியில் 
ஐந்தில் நான்கு அரசுப் பள்ளி மாணவர்கள்   நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வில் 
வெற்றி பெற்றுள்ளனர்.
என். ஐ. டி, திருச்சிராப்பள்ளியின் இயக்குனர், முனைவர் மினி ஷாஜி தாமஸ்   
இக்னைட்  குழுவினருக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தமது   
மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார.

No comments:

Post a Comment