Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Wednesday 31 August 2022

இளையராஜாவின் 1417வது படம்:

 இளையராஜாவின் 1417வது படம்:


 ஆதிராஜன் இயக்கத்தில்  பிரஜன் - மனிஷா யாதவ் நடிக்கும்


 "நினைவெல்லாம் நீயடா" படப்பிடிப்பு நிறைவு!!



லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் "நினைவெல்லாம்  நீயடா". இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில்  பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில்‌ நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது.










 இவர்களுடன் முக்கிய இடத்தில் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மற்றும் மனோபாலா முத்துராமன் மதுமிதா ரஞ்சன் குமார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தமிழ்செல்வி  ஆகியோரும் நடித்திருக்கின்றனர். மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்  முத்திரை பதித்திருக்கிறார்.


 ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை கையாள ஆசிஸ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.  பிரதீப் தினேஷ் மாஸ்டர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கலையை முனிகிருஷ்ணா  கவனிக்க பாடல்களை பழனி பாரதி, சினேகன் எழுதியிருக்கிறார்கள். "இதயமே... இதயமே" என்று தொடங்கும் ஒரு பாடலை இளையராஜா எழுதி கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

 மாஸ்டர்கள்   தினேஷ்,  தினா ஆகியோர் நடன காட்சிகளை ரசனையாக வடிவமைத்திருக்கின்றனர்‌‌. தயாரிப்பு நிர்வாகம்: இளங்கோ.


பள்ளிப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும்  இந்த படத்தை சென்னை கொடைக்கானல் திருப்போரூர் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் 41 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் ‌இயக்குநர் ஆதிராஜன். இத‌ற்காக தயாரிப்பாளர் ராயல் பாபு இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.


இறுதி நாள் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்றது. கொட்டும் மழையில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி மற்றும் மாணவியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. மாலையில் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.



தற்போது படத்தின் டப்பிங் நடந்து வருகிறது. படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Maestro Isaignani Ilaiyaraaja’s 1417th movie

 Maestro Isaignani Ilaiyaraaja’s 1417th movie

Aadhiraajan directorial

Prajan-Manisha Yadav starrer “Ninaivellam Neeyada shooting wrapped up


Lega Theatres Royal Babu presents ‘Ninaivellam Neeyada’, written and directed by Aadhiraajan, which marks the 1417th musical venture of Maestro Isaignani Ilaiyaraaja. The movie features Prajan in the lead role and Manisha Yadav in the female lead role, who will be seen performing a unique character. Debutant Sinamika plays another female lead role in this movie. New faces Rohit and Yuva Lakshmi will be seen playing the younger version of the lead actors in this movie.










Besides, Redin Kingsley will be tickling our funny bones with his hilarious role in this movie. The others in the star cast include Manobala, Muthuraman, Madhumitha, Ranjan Kumar, Producer P.L. Thenappan, Thamizh Selvi, and a few more prominent actors. Filmmaker R.V. Udhayakumar appears in a pivotal role as a psychiatrist.


Raja Bhattacharjee is handling cinematography for this movie and Axis Joseph is taking care of editing. Pradeep Dinesh Master is choreographing action sequences. Muni Krishna (Art), and Pazhani Bharathi-Sneghan (Lyrics) are the others, technical crew. Isaignani Ilaiyaraaja has penned lyrics for the song ‘Idhayamae Idhayamae’ and Yuvan Shankar Raja has crooned it. The others in the technical team include Dinesh-Dheena (Choreography) and Elango (Executive Production). 


The movie based on the first love blossoming during the adolescent phase in school days filmed across Chennai, Kodaikanal, and Thiru Porur Thirumazhisai has completed its shoot in 41 days. Elated with the perfectionism of director Aadhiraajan, producer Royal Babu has appreciated him. 


The last day shoot was held at EVP Studios IN Chennai, where Prajan, Sinamika, Yuva Lakshmi, and a few students shot an important sequence amidst the heavy rainfall. As a token of celebrating the wrap-up, the crew as a part of the traditional ritual broke the pumpkin and cut the cake joyfully. 


Currently, the dubbing works are happening in full swing for ‘Ninaivellam Neeyada’, which is scheduled for November 2022 release.

சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக்

 சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக் 


பெங்களூர் முதல் பாங்காக் வரை படபிடிப்பு ! 


பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் அறிமுகம். 



சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள். 

இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது. 


இப்படத்தை,

ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். 


 இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார். 



இதில், சந்தானம் ஜோடியாக,  'தாராள பிரபு' ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள். 


வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்க்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில்  வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன்  'சந்தானம்' பாணியில் டைரக்டர் உருவாக்கி இருக்கிறார். 



இரண்டு பாடல்களுக்காக 12 வித விதமான செட் அமைத்து அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார்கள். 



இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது. 


தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj ) 


இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya ) 


ஒளிப்பதிவு: சுதாகர் ராஜ் ( Sudhakar Raj ) 


கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere ) 


எடிட்டிங்: நாகூரா ராமசந்த்ரா ( 'DON' fame Nagoorah Ramachandrah ) 


ஸ்டண்ட்: Dr.ரவி வர்மா ( Dr.Ravi Varma ), 

                 டேவிட் காஸ்டில்லோ ( David Castillo )

 

நடனம்: குலபுஷா, சந்தோஷ் சேகர் ( Kulabhushah, santhosh Shekar ) 


Pro: ஜான்சன் ( Johnson )


தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj ) .

"SIGNATURE" new film produced by M.S.Murugaraj starring Spiffing Duo of

 "SIGNATURE" new film produced by M.S.Murugaraj starring Spiffing Duo of  Actor Jeevan And Actor Natty.


M.S.Murugaraj who has produced well acclaimed films like "Ya Ya" and "Bakrid" under his banner "M10 Productions" has named his third film as "Signature".


Every signature of us is important.

"Signature" is a film which shows how a #signature can play a crucial role in a persons life.


"Thirutupayalae" fame JEEVAN  is acting in a character who steals personal data from common people.






Actor NATTY is playing a character who hunts down people using those data.


The story is based on this two characters who joins together and cheats everyone.


Along with them actors like Ilavarasu,Hareesh Peradi, 

Mansoor Ali Khan,George,Maaran and many more will be acting in the film.The Audition for female lead is going on in full swing.


The biggest highlight is that a well known actor is about to act in this film.


Jagadheesan Subu who directed the film "Bakrid" is directing this film.


Cinematography - 

Sreenivasan Dayanathi


Stunt - Dhilip Subbarayan


Dance - Kalyan, Dinesh


Editing - Kalai


Screenplay - Pon Parthiban


Art Director - Michael



The film shooting started with a pooja Today on the Auspicious day of Vinayagar Chathurthi.Actors Jeevan and Natty participated in the first day of shooting.Following this shooting will continue at full swing at chennai,Mumbai and Dubai.Director Hari and Actor Hareesh Peradi participated in the Auspicious pooja.




Samantha's Yashoda Teaser ready to stream on September 9th

 Samantha's Yashoda Teaser ready to stream on September 9th


Amidst the huge expectations, Samantha's 'Yashoda' teaser is all set to stir up the buzz on September 9th.


While the earlier released suspense glimpse raised curiosity, the talented direction duo Hari-Harish are ready to stream an engaging cut of this high-octane action thriller.


The announcement poster had an intriguing touch with Samantha's click that seemed to be taken post an edge-of-the-seat action sequence.


Senior producer Sivalenka Krishna Prasad is super confident about the output and is planning for a Grand release across 5 languages in Theatres under Sridevi Movies banner soon.

                         

Besides Samantha, Varalaxmi Sarathkumar, Unni Mukundan, Rao Ramesh, Murali Sharma, Sampath Raj, Shatru, Madhurima, Kalpika Ganesh, Divya Sripada, Priyanka Sharma and others are playing major roles.


Music: Manisharma,

Dialogues: Pulagam Chinnarayana, Dr. Challa Bhagyalaxmi

Lyrics: Chandrabose, Ramajogiah Sastry

Creative Director: Hemambar Jasthi

Camera: M. Sukumar

Art: Ashok

Fights: వెంకట్, Yannick Ben

Editor: Marthand. K. Venkatesh

Line Producer: Vidya Sivalenka

Co-producer: Chinta Gopalakrishna Reddy

Direction: Hari - Harish

Producer: Sivalenka Krishna Prasad

Banner: Sridevi Movies.

Santhanam's next film titled as "Kick". Shoot happened

 Santhanam's next film titled as "Kick".


Shoot happened from bangalore to bangkok.


Famous kannada director Prasanthraj is making his debut in tamil.


The new film of Santhanam has been named as "Kick".The shooting of the film started at bangalore few months before.Following it the shoot happened at full swing in chennai.The final schedule happened at Bangkok for 15 days and the shoot was wrapped up.


The film was produced by NaveenRaj under his banner FORTUNE FILMS.


Famous kannada director Prasanthraj is making his debut in tamil through this film.He has directed many hit films in kannada like Love  Guru,Gaana Bajaana,Whistle,Orange.


Actress Tanya Hope who acted in the hit film 'Dharala Prabhu' has been roped in as the female lead.The film is packed with talented actors like Thambi Ramaiah,Brahmanandam,Senthil,Kovai Sarala,Mansoor Alikhan,Manobala,Y.G.Mahendran,Mottai Rajendran,Vaiyapuri,Muthukaalai.Ragini Dwivedi,Shakila,Crane Manohar,KingKong,Cool Suresh,Sethu and Anthony.


Each moment in our life is a kick.The hero of the film is a person who works in a Advertising company,and he  expects to have kick in his every action.The story revolves around the hero and heroine who works in different Advertising companies and the Cat and Mouse fight between them due to the rivalry.The director has made this film as a full length comedy film with Santhanam's touch.


12 different kind of sets was made to shoot 2 songs in the film with a big budget.


This will be a Agmark Santhanam film.The film can be enjoyed along with family.


Production; Naveen Raj


Music: Arjun Janya


Cinematography: Sudhakar Raj


Art: Mohan B.Kere


Editing : 'Don' fame Nagoorah Ramachandrah


Stunt: Dr.Ravi Varma, David Castillo


Dance : Kulabhushah,Santhosh Shekar


PRO: Johnson

சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக்

 சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக் 


பெங்களூர் முதல் பாங்காக் வரை படபிடிப்பு ! 


பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் அறிமுகம். 







சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள். 

இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது. 


இப்படத்தை,

ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். 


 இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார். 



இதில், சந்தானம் ஜோடியாக,  'தாராள பிரபு' ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள். 


வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்க்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில்  வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன்  'சந்தானம்' பாணியில் டைரக்டர் உருவாக்கி இருக்கிறார். 



இரண்டு பாடல்களுக்காக 12 வித விதமான செட் அமைத்து அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார்கள். 



இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது. 


தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj ) 


இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya ) 


ஒளிப்பதிவு: சுதாகர் ராஜ் ( Sudhakar Raj ) 


கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere ) 


எடிட்டிங்: நாகூரா ராமசந்த்ரா ( 'DON' fame Nagoorah Ramachandrah ) 


ஸ்டண்ட்: Dr.ரவி வர்மா ( Dr.Ravi Varma ), 

                 டேவிட் காஸ்டில்லோ ( David Castillo )

 

நடனம்: குலபுஷா, சந்தோஷ் சேகர் ( Kulabhushah, santhosh Shekar ) 


Pro: ஜான்சன் ( Johnson )


தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj ) .

Tuesday 30 August 2022

52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:

 52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த '21 கிராம்ஸ்' பைலட் பிலிம்!


இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.

இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் '21 கிராம்ஸ்'.







 இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.


இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார்.


இப்படத்திற்கு  சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் என்கிற இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொடர்களிலும் விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அனுபவம் உண்டு.



இப்படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் சித்தார்த், ராக்கி புகழ்  நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.


இந்தப் படம் பற்றிய அனுபவத்தை இயக்குநர் யான் சசி கூறும் போது,


" முழு நீளத்திரைப்படம் இயக்குவது தான் எனது கனவு . அப்படி நான் ஒரு படத்திற்காகப் பேசி ஒரு பெரிய  நிறுவனத்தால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.படம் துவங்க வேண்டிய நேரத்தில் கொரோனா காலம் வந்து விட்டது. தாமதமாகிக் கொண்டே வந்தது. இடையில் ஏதாவது செய்யலாம் என்று ஒரு சிறு முயற்சியாக 15 நிமிடத்தில் ஓடக்கூடிய ஒரு பைலட் பிலிம்  போல் இதை உருவாக்குவது எனத் திட்டமிட்டேன். ஆனால் அதன் கதை வளர்ந்து விரிவாகி, அந்தக் கதை தானே பெருக்கிக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக  52 நிமிடங்களில் ஓடக்கூடிய படமாக உருமாறி உருவாகியுள்ளது.


நான் எடுத்துக்கொண்ட கதை அதன் வீரியத்தால் பல பிரச்சினைகளைத் தாண்டி முழுப் படமாக வடிவம் பெற்று இன்று பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதைப் திரையிட்டுக் காட்டிய போது அனைவரும் இப்படிக் கூட இதைச் சொல்ல முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய போது பல இடங்களில்  விருதுகளைப் பெற்றுள்ளது.


கல்கட்டா சர்வதேச கல்ட்டு திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த  நடிகர் , சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு விருதுகளைப் பெற்றது. அந்தத் திரைப்பட விழாவில் தான் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது .


அதேபோல தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் திரைப்பட விழா, டோக்கியோ, இத்தாலி ரோம்,அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழாக்கள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களில்  இதுவரை 17 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்திருக்கின்றன. 52 நிமிடங்களில் ஒரு முழு படத்திற்கான  திருப்தியை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இது உருவாகி உள்ளது. 


இப்படத்தில் அறிமுகம் ஆகியுள்ள கதாநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள பூ ராமு அவர்களின் நடிப்பும் பேசப்படும் . 


நாங்கள் ஒரு புது படக் குழுவாக இருந்தாலும் கதையையும் இந்த முயற்சியையும் ஊக்கப்படுத்தும் வகையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது .அவரது இறப்பு எங்களைப் போல வளரும் இளம் இயக்குனர்களுக்கு பெரிய இழப்புதான்.


படத்தை முடித்து திரையிட்டுக் காட்டிய போது

பலரும் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் எங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தன. திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் கிடைத்து வரும் விருதுகளும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை எனக்கு அளித்து வருகிறது." என்கிறார் இயக்குநர் யான் சசி.


Director - yaan sasi

Actors - poo ramu / moganesh

Dop - sounderrajan / anbu dennis

Music director - vijay siddharth

Editor - pk

First look of Vetri-Shivani starrer 'Bumper'


*First look of Vetri-Shivani starrer 'Bumper' produced by Vetha Pictures and directed by Selvakumar to be released on Vinayaka Chathurthi*


Actor Vetri of '8 Thottakkal' and 'Jiivi' fame is playing the lead role in 'Bumper', a Tamil film based on Kerala bumper lottery.


The film being produced by S. Thiagaraja, B.E., on Vetha Pictures banner is being directed by M. Selvakumar, who had earlier worked with filmmakers like Meera Kathiravan and 'Komban' and the much-recent 'Viruman' fame Muthaiah.  


The shoot is completely over and it was carried out in Thoothukudi, Thiruvananthapuram, Punalur, Sabarimala and other areas. The film has taken shape well and the post-production works are currently in the final stage. 




The first look poster of the movie will be released on August 31, the auspicious day of Vinayaka Chathurthi. 'Bumper' is heading for a grand release and an official announcement on this will be made soon.


Shivani Narayanan is the heroine of the movie, while Thangadurai will be seen in an interesting role.


Social media sensation G P Muthu, who enjoys a huge fan following, plays an interesting role in 'Bumper' and scenes involving him are going to be highly entertaining, says the film's team. 


The team had carried out the shoot at Peruvazhi Paathai route from Erumeli to Sabarimala by obtaining necessary permission from the Kerala government. 


Music for 'Bumper' is composed by Govind Vasantha, while lyrics are by Karthik Netha. According to director Selvakumar, "Kerala bumper lottery forms the backdrop of this film. Vetri is playing the protagonist, and actor Hareesh Peradi is doing a very important character."


Cinematographer Vinoth Rathinasamy, who has worked in films such as 'Nedunalvaadai', 'MGR Magan', 'Aalambana' and 'Kadamaiyai Sei' is wielding the camera for this movie. Editing is by Mu. Kasi Viswanathan.


Starring '8 Thottakkal' and 'Jiivi' fame Vetri as protagonist, 'Bumper' is produced by S. Thiagaraja and directed by M. Selvakumar.


***

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் 'பம்பர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி என்று வெளியாகிறது*


கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.


வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் சமீபத்தில் வெளியான 'விருமன்' புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். 


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 31 விநாயக சதுர்த்தி தினத்தன்று வெளியாகிறது. வித்தியாசமான முறையில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  


பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் படத்தின் வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்தார். 


தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் மிகவும் சுவாரசியமான முறையில் தயாராகி உள்ளது என்று குழுவினர் தெரிவிக்கின்றனர். 




'பம்பர்' படத்தின் கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.


இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் எனும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஜி பி முத்து நடிக்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். 


'பம்பர்' படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். 


இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது நினைவிருக்கலாம்.  


படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.


படத்தின் ஒளிப்பதிவை 'நெடுநல்வாடை', 'எம்ஜிஆர் மகன்', 'ஆலம்பனா' மற்றும் 'கடமையை செய்' ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.


‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார் இயக்குகிறார்.


*


மேதகு-2' திரைப்படம் 'மூவி வு'ட் ஒடிடி தளத்தில் வெளியானது

 *'மேதகு-2' திரைப்படம் 'மூவி வு'ட் ஒடிடி தளத்தில் வெளியானது..*


கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. இந்த 'மேதகு' முதல் பாகமும் தற்போது, அதன் இரண்டாம் பாகமான ‘மேதகு-2’ கடந்த ஆகஸ்ட் - 28 ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.




சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.


இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.


1983- ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.


அதே போன்று 1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்த சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம்.


கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர்  நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.


இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம்,  பாடகர்கள் சைந்தவி,  புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப்படத்திற்காக வழங்கியுள்ளனர்.


கடந்த  ஆகஸ்ட்-19 ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


தற்போது வளர்ந்து வரும் ஒடிடி யான 'மூவி வுட்' மேதகு மற்றும் மேதகு 2 ஆகிய இரண்டு பாகங்களையும் கடந்த ஆகஸ்ட் - 28 ஆம் தேதி வெளியிட்டுள்ளார்கள்.

பேப்பர் ராக்கெட்” வெற்றியைப் பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங்

 “பேப்பர் ராக்கெட்”  வெற்றியைப் பற்றி  இசையமைப்பாளர் சைமன் கே.கிங்*

சமீப காலத்தில், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் வெப் தொடர், கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள "பேப்பர் ராக்கெட்". இந்த ஹிட் தொடருக்கு, தனது இசையால் மெருகூட்டியுள்ள  இசையமைப்பாளர் சைமன் கே.கிங், தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பல்வேறு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளார்.

தான் இசையமைத்த “சத்யா” திரைப்படத்தின் “யவ்வனா” என்ற சூப்பர்ஹிட் பாடல் வெளியான உடனேயே தன்னை அணுகிய முதல் இயக்குனர் கிருத்திகா உதயநிதி தான் என்றும், அடுத்த படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் கூறியது தான், இந்த அருமையான பயணத்தின் ஆரம்பம் என்றும் கூறுகிறார், சைமன்.





"பேப்பர் ராக்கெட் வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மட்டுமல்லாமல் பரவலான பார்வையாளர்களையும் சென்றடைந்துள்ளது. ரம்யா நம்பீசன் பாடிய "சேரநாடு" என்ற தமிழ்-மலையாளம் இருமொழிப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சமீப காலங்களில் வெளியாகும் திரைப்படங்களின் கதைகளில் முன்பு போல் பாடல்களுக்கு முக்கிய பங்கு இல்லை என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால், இயக்குனர் கிருத்திகா எப்போதுமே தனது கதைகளில்  பாடல்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனாலேயே பேப்பர் ராக்கெட்டில் அற்புதமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன" என்று சைமன் கே.கிங் கூறுகிறார்.

"மிகவும் திறமையான இசையமைப்பாளர்களான தரன் மற்றும் வேத் ஷங்கர் ஆகியோருடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம். இந்த அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் கிருத்திகாவுக்கு நன்றி" என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சைமன் கே.கிங்.

அடுத்ததாக,  வெற்றிகரமான இயக்குனர் இணையான புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில்,  அமேசான் ஒரிஜினலுக்காக  “வதந்தி” என்ற   மர்ம திரில்லரை நமக்கு வழங்குவதற்காக, சைமன் கே.கிங். மீண்டும் "கொலைகாரன்" படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் இணைந்துள்ளார். S.J.சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


"கொலைகாரன்" & "கபடதாரி" போன்ற புயலான த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, "பேப்பர் ராக்கெட்" ஒரு தென்றலாக வீசுவது ஒரு இனிமையான அனுபவம் என்று சிரிக்கிறார், இசையமைப்பாளர் சைமன் கே.கிங்.

Music Director Simon K.King, on the success of his debut web series

 Music Director Simon K.King, on the success of his debut web series - “Paper Rocket”


Music director Simon K.King has been receiving a lot of praise and love from the media and public for his songs and background score in the recent sensational hit web series “Paper Rocket” directed by Kiruthiga Udhayanidhi. The young composer adds that Kiruthiga Udhayanidhi was the first director to approach him immediately after the release of his superhit song “Yavvana” from the movie “Sathya” and wanted to work with him on her next project and thats how the journey began.. Simon says, “I am finally happy that paperrocket has reached a wide audience with good reception and the Tamil-Malayalam bilingual song “Cheranaadu” sung by Ramya Nambessan, has gained a lot of love and recognition”.






-  In recent times, we find that songs don’t have as much of a vital role in the narrative of a movie as before but director Kiruthiga has always given importance to songs and music in her projects, hence paperrocket has such wonderful songs. Simon K.King says, “it was also a wonderful experience working with extremely talented music directors, Dharan and Ved Shankar, and thanks to director Kiruthiga for making this happen”.

 Simultaneously, King has partnered once again with Director Andrew Louis, after the duo’s blockbuster hit “Kolaigaran”, to give us a mystery thriller, Amazon original series titled “Vadhandhi”, produced by the dynamic duo Pushkar-Gayathri, set to release later this year and starring S.J.Suryah, Nasser, Laila, Sanjana and Vivek Prasanna in leading roles. Simon concludes that after working back to back on thrillers like “Kolaigaran” & “Kabadadhaari”, Paper Rocket turned out to be a breath of fresh air.

Monday 29 August 2022

Legend Saravanan elated with success that has surpassed criticism

 *Legend Saravanan elated with success that has surpassed criticism*


*Pact to be signed soon with leading TV channel and OTT firm for rights of The Legend*


The Legend New Saravana Stores Productions' first ever venture The Legend' starring Legend Saravanan, a multi-lingual pan-India film made at a huge budget, is running successfully in theaters with great fanfare even five weeks after its release. 


When Legend Saravanan, who appeared in the commercials of his leading retail chain, was cast in the lead role of 'The Legend', various comments were made. But 'The Legend' surpassed expectations and Legend Saravanan has won the appreciation of fans. 'The Legend' is being hailed not only as an entertaining film, but as a movie with a socially conscious storyline. Audience have appreciated the subject of the film. The success of the film is the outcome of the love shown by the people for the efforts of Legend Saravanan. 




With the movie collecting around Rs 45 crore in theaters worldwide, people are now eagerly waiting for its OTT release and TV telecast. Talks for satellite rights and OTT rights of the film are nearing completion. It is learnt the satellite rights could be sold for Rs 20 crore and the OTT rights for Rs 25 crore.


'The Legend' overcame some negative reviews at the time of its release and became a commercial success. Legend Saravanan, the team and his fans are very excited about this success.


Pre-production works for Legend Saravanan's next film have started and the announcement will be made soon. 


***

விமர்சனங்களை தாண்டிய விமரிசையான வெற்றியால் உற்சாகத்தில்

 *விமர்சனங்களை தாண்டிய விமரிசையான வெற்றியால் உற்சாகத்தில் லெஜண்ட் சரவணன்*


*தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒலிபரப்பு உரிமைக்காக முன்னணி சேனல் மற்றும் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம்*





தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படமாக தயாரித்து, லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் ஐந்து வாரங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 


விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் மீறிய ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லமால், சமூக சிந்தனையுடன் கூடிய கதைக்களம் கொண்ட 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை லெஜண்ட் சரவணன் பெற்றுள்ளார். படத்தின் கதையை மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்கள். லெஜண்ட் சரவணன் முயற்சிக்கு மக்கள் வெளிப்படுத்திய அன்பு தான் இப்படத்தின் வெற்றியாகும். 


உலகமெங்கிலும் திரையரங்குகளில் சுமார் 45 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில்

தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீடு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை மற்றும் ஒடிடி உரிமைக்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடையும் தருவாயில் உள்ளது. சேட்டிலைட் உரிமை 20 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியான சமயத்தில் கூறப்பட்ட சில எதிர்மறை விமர்சனங்களை கடந்து விமரிசையான வெற்றியை திரைப்படம் பெற்றுள்ளது. இந்த வெற்றியால் லெஜண்ட் சரவணன், படக்குழுவினர் மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.  


லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 


***

ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி

 *ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி- ஆஹா ஒரிஜினல்ஸின் ஜீவாவுடன் சர்க்கார்*


ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.



உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.


டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்... ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.


இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பது தான் சுவாரசியமான பகுதி. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களும், சந்தாதாரர்களும், புதிய வாடிக்கையாளர்களும் 'சர்க்கார் வித் ஜீவா'வைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.


பிரம்மாண்டமான அரங்கம் - பிரபலமான போட்டியாளர்கள் - புதிய தோற்றத்தில் ஜீவா - தமிழர்களுக்கு ஏற்ற வகையிலான நிகழ்ச்சியை பிரத்யேகமாக வழங்கும் ஆஹா டிஜிட்டல் தளம்... என இந்த கூட்டணியின் புதிய நிகழ்ச்சியான 'சர்க்கார் வித் ஜீவா'  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகர் அதர்வாவின் 'குருதி ஆட்டம்', ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று சாதனையை படைத்து வருகிறது. இதற்கு முன் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான 'மாமனிதன்', 'ஜீவி', 'ஜீவி 2' என ஏராளமான திரைப்படங்கள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள்... என பல அசலான ... தமிழர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர்  திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது.

Yuvan Shankar Raja - The globe-trotting music genius*

 *Yuvan Shankar Raja - The globe-trotting music genius*


The craze for Yuvan Shankar Raja and his music has no boundaries, literally. This was evident in the way in which the tickets for his concert were sold out in Malaysia within the first 45 minutes after the bookings were opened. This is the first time that something like this has happened in Malaysia. 


It is not just that, Yuvan also became the only star to perform back to back concerts on consecutive days in Malaysia. This shows the love that the fans have for the music composer and vice versa. Seeing this craze, the Little Maestro has been approached to perform in at least seven concerts across countries.






The concert was organised to celebrate the completion of 25 years of Yuvan in film industry. Titled Yuvan-25, the event was conducted in Kuala Lumpur at the Axiata Arena complex in Bukit Jalil.


The composer was quite delighted with the response to the two-day concert and shared his thanks to the fans on social media. "I feel soo overwhelmed. #Yuvan25 KL will be special forever. Thank you for the love. You guys are awesome! I love you all, "tweeted Yuvan, acknowledging the love he got from fans during the concert.


Yuvan had recently announced he will soon be conducting a concert in Chennai. He said the concert has been titled 'U & I' and will be organised by the Arise Entertainment at Nehru Indoor Stadium on 10 September. 


Ever since the announcement was made, fans of the music composer have been eagerly waiting to get more updates about the event. 


Yuvan will be performing in the hometown after almost 11 years and the fans are already pumped up about it. 


***

யுவன் ஷங்கர் ராஜா - உலகம் சுற்றும் இசை மேதை*

 *யுவன் ஷங்கர் ராஜா - உலகம் சுற்றும் இசை மேதை*


யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை.






அது மட்டுமின்றி, மலேசியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே கலைஞர் யுவன் மட்டும் தான். யுவன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை இது காட்டுகிறது. இந்த உற்சாகம் மற்றும் வரவேற்பை பார்த்து, உலகம் முழுவதும் குறைந்தது ஏழு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு லிட்டில் மேஸ்ட்ரோ அணுகப்பட்டுள்ளார்.


திரையுலகில் யுவன் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன்-25 என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது.


இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்த யுவன் சமூக ஊடகம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

சென்னையில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக சமீபத்தில் யுவன் அறிவித்திருந்தார். இந்த கச்சேரிக்கு 'யு & ஐ' என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.


அறிவிப்பு வெளியானது முதல், இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் களிக்க யுவனின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.


கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் யுவன். இந்த இசை மாயாஜாலத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர். 


***