Wednesday, 10 March 2021

இந்திய பொறியாளர்களின் சங்கம் திருச்சிராப்பள்ளி கிளை சார்பாக

இந்திய பொறியாளர்களின் சங்கம் திருச்சிராப்பள்ளி கிளை சார்பாக  சர்வதேச மகளிர் தினம் மார்ச் 09ம்  தேதி இணையவழி ஊடகவழியாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவினை கிளையின் தலைவர் Dr. N.குமரேசன், பேராசிரியர், தேசிய தொழில்நுட்பகழகம், திருச்சிராப்பள்ளி அவர்கள் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.

 




 

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், புது தில்லி  தொழில்துறை அமைப்புகள் மற்றும் தயாரிப்புகள் இயக்குநர் திருமதி ரேணுகா கெரா சர்வதேச மகளிர் தின விழாவிற்கு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார். தலைமைத்துவ குணங்கள் மற்றும் சுய மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பொறுப்புகள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார். உலக மகளிர் தலைவர்கள் மற்றும் இந்தியாவில் பஞ்சாயத்து பெண்கள் தலைவர்களை மேற்கோள் காட்டி சிறப்புரை ஆற்றினார்

விழாவின் இறுதியில் 2021 ஆண்டிற்கான சிறந்த இளம் பெண் பொறியாளர்க்கான விருது என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ஓ. தர்ஷனா அவர்களுக்கு வழங்கப்பட்டது . விருது முடிவினை ஆர்.குமார் முன்னாள் பொது மேலாளர், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் அறிவித்தார். கிளையின் தலைவர் Dr. N.குமரேசன் விருதை வழங்கினார். முன்னதாக எஸ்.சாமிதாஸ் முன்னாள் பொது மேலாளர், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் அவர்கள் தலைமை விருந்தினரை வரவேற்று சிறப்பித்தார். கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஆர். மஞ்சுளா விருது பெற்றவரை வாழ்த்தி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

விழாவின் இறுதியில் சங்க செயலாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி பெல் நிறுவன மேலாளர் திரு A. ஆனந்த் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.


No comments:

Post a Comment