Friday, 27 March 2026

Muthu Engira Kaattaan Web Series Review

Muthu Engira Kaattaan Web Series Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம muthu alias kaattan ன்ற web series ஓட  review அ தான் பாக்க போறோம். இதை இயக்கி இருக்கிறது m manikandan அப்புறம் b ajithkumar . இதுல விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா னு பல பேர் நடிச்சிருக்காங்க. இது தான் vijay sethupathi  க்கு  முதல் webseries . அது மட்டும் இல்ல இதோட producer யும் இவரு தான். இந்த series இன்னிக்கு jio hotstar ott ல release ஆகுது. இதுல மொத்தமா 10 episodes இருக்கு. 



இந்த series ஓட main hero muthu வா நடிச்சிருக்க vijay sethupathi தான். இவரோட life ல சந்தோஷமும் இருக்கும் துக்கமும் இருக்கும், இவரோட life ல நடக்கற interesting ஆனா விஷயங்கள் தான் இந்த web series ஓட கதையே. ஆரம்பத்துலயே kaalai pandiyan அ நடிச்சிருக்க vadivel murugan அ காமிக்கறாங்க. இவரு ஒரு police officer அ இருப்பாரு. என்னதான் இவரோட area ல crime rate கம்மியா இருந்தாலும் station ல வர cases அ பொறுப்பா பாத்துக்கணும் னு நினைக்கறாரு. அப்போ தான் இவங்களுக்கு ஒரு வினோதமான case ஒன்னு வருது. இந்த case muthu வை சம்பந்த பட்டதா இருக்கு. இந்த case அ kalai யும் அப்புறம் அவரோட team மும் investigate பண்ண ஆரம்பிக்குறாங்க. 

ஊர் ஓட தலைவரா இருக்காரு balaji  sakthivel , இவரு தான் muthu வை பத்தி ஒரு முக்கியமான clue வை குடுக்கறாரு. meena வை நடிச்சிருக்க risha jacobs கிட்ட தான் muthu தான்  வேலை பாத்துருக்காரு. meena ஒரு dance team அ வச்சி நடத்திட்டு இருப்பாங்க. அந்த team க்கு bouncer அ முத்து வேலை பாத்துருப்பாரு அதுமட்டும் இல்ல அவரு நெறய எடத்துல part time ல வேலை பாத்துருப்பாரு. அதுக்கு அப்புறம் ஒரு stylish ஆனா businessman அ அறிமுகம் பண்ணுறாங்க. அவரு தான் sivettan அ நடிச்சிருக்க miland soman . அப்புறம் இவரோட எதிரி தான் johny அ நடிச்சிருக்க sudev nair . இவங்க ரெண்டு பேரும் கேரளா ல தான் இருப்பாங்க. இவங்கள பாக்குறதுக்காக SI siddharthan அ நடிச்சிருக்க muthukumar யும்  thangamudi யா நடிச்சிருக்க singam puli யும் kochi க்கு போறாங்க. அதே சமயம் kalai கிடைச்ச clues அ வச்சு tamilnadu ல சுத்திட்டு இருப்பாரு. 

இந்த series ஓட கதையை எழுதி இருக்கிறது M. Manikandan , B. Ajithkumar, அப்புறம்  La Rajkumar. இந்த series அ பாக்கும்போது கிட்டத்தட்ட மலையாள படங்கள் மாதிரி தான்  இருந்தது. ஒரு சின்ன situation ல இருந்து ஆரம்பிச்சு கடைசில complex ஆனா story ல போய் முடியும். இதுக்கு நடுவுல நெறய twist and turns அப்புறம் side  tracks லாம்  வச்சுருக்காங்க. அது எல்லாமே காமிச்சதுக்கு அப்புறம் தான் main story ஓட connect ஆகும். அந்த மாதிரி தான் இந்த series யும் கதைக்களத்தை அழகா build பண்ணி மக்களுக்கு பிடிக்கிற மாதிரி interesting அ எடுத்து வச்சிருக்காங்க. இருக்கற 10 episodes ல இந்த case ல இருக்கற mystery அ solve பண்ணுறதா இருந்தாலும், ஓவுவுறு character க்கும் இருக்கற சின்ன சின்ன details யும் காமிச்சிருப்பாங்க. இது ரொம்ப serious ஆனா story கிடையாது. அதுக்கு பதிலா natural அ கிராமத்துல நடக்கற மாதிரி ஒரு positive ஆனா கதையை கொண்டு வந்திருக்காங்க. 

muthu கிராமத்துல இருக்கற எல்லா scenes யும் பாக்க genuine அ இருக்கும். என்னதான் crime series ல police characters அ ரொம்ப smart அ காமிச்சிருந்தாலும் இந்த series ல அப்படி இருக்கமாட்டாங்க. இவங்களும் muthu இருக்கற அதே கிராமத்தை சேந்தவங்க தான் அதுனால இவங்களோட investigation style கொஞ்சம் மெதுவா போனாலும் clues அ பக்கவா கண்டுபிடிச்சிடுவாங்க. இதெல்லாம் பாக்க நல்ல  இருந்தது. இதுல siddharthan character அ தான் புத்திசாலியா காமிக்கறாங்க. muthu க்கு பின்னாடி ஒளிஞ்சு இருக்கற மர்மம் சாதரணமானது கிடையாது சீக்கிரமாவே புரிஞ்சுப்பாரு.  இவரு நடுவுல english பேசறதை இருக்கட்டும், bodylanguage னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. 

kerala ல நடக்கற ஒரு சில விஷயங்கள் மட்டும் கதையை தாண்டி போற மாதிரி இருந்தது இதெல்லாம் சரியா connect பண்ணிருந்தா இன்னுமே நல்ல இருந்திருக்கும். இந்த case ல இருக்கற அந்த மர்ம முடிச்சை மெதுவா களையும் போது தான் muthu ன்ற ஆளு எப்படி பட்டவன் னு நமக்கு புரிய வரும். series ஓட ஆரம்பத்துல இருந்து ending வரைக்கும் muthu வை mystery அ வச்சுருந்தது super ஆவும் entertaining ஆவும் இருந்தது. இந்த series ரொம்ப slow வா போனாலும், ஒரு ஒரு episode ளையும் ஒரு twist வச்சிருக்காங்க. இதுக்கு நடுவுல kalai ஓட வீட்ல நடக்கற விஷயங்களையும் side track அ கொண்டு வந்திருக்காங்க. இது கதைக்கு சம்பந்தம் இல்லனாலும் kalai character அ பத்தி detailed புரிஞ்சுக்க இந்த portions எல்லாம் helpful அ இருக்கும்.  muthukumar police அ நல்ல perform பண்ணிருக்காரு. இவரு வெளில பாக்கும்போது ரொம்ப அமைதியானவரா தெரிஞ்சாலும் தன்னோட புத்திசாலித்தனத்தை வச்சு case அ handle பண்ணுற விதம் எல்லாமே நல்ல இருந்தது. 

இந்த series ஓட highlight ஆனா performance னா அது vijay sethupathi தான். இவரோட body language , எதார்த்தமான நடிப்பு, வெகுளித்தனமான பேச்சு னு audience அ அவரு பக்கம் இழுத்துருக்காரு னு தான் சொல்லணும். 


ஒரு பக்கம் crime , இன்னொரு பக்கம் மனுஷங்களோட எண்ணம் எப்படி இருக்கும் ன்றதா இந்த series ல நல்ல explore பண்ணிருக்காங்க. சோ miss பண்ணாம இந்த series அ பாருங்க.

No comments:

Post a Comment