Tuesday, 6 May 2025

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர்

 *துருவ் விக்ரம் நடிக்கும்,  “பைசன் காளமடான்”  திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!*




இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில்,  துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும்,  ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான  “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின்  தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.


நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை,  அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.

Bison Kaalamaadan’ will light up screens this Diwali. Mari Selvaraj's next explodes in theatres

 *‘Bison Kaalamaadan’ will light up screens this Diwali. Mari Selvaraj's next explodes in theatres on October 17 – A Diwali celebration awaits with Applause Entertainment & Neelam Studios*




The wait is over. The much-anticipated Tamil sports drama Bison Kaalamaadan is all set to hit theatres on October 17, 2025, as the biggest Diwali celebration in Tamil cinema this year. Produced by Applause Entertainment and Neelam Studios and directed by the acclaimed Mari Selvaraj, this gripping tale of guts and glory promises to captivate audiences. 


Starring Dhruv Vikram in a transformative role, Bison Kaalamaadan brings together a stellar ensemble cast including Anupama Parameswaran, Director Ameer, Director Lal, Pasupathy and Rajisha Vijayan.


Directed by Mari Selvaraj and produced by Applause Entertainment and Neelam Studios, this film marks another significant milestone in Applause’s journey into Tamil cinema, continuing their commitment to collaborate with top-tier talent and deliver powerful, story-driven films.

சந்தானம் நடிக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தின்

 *சந்தானம் நடிக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு* 





நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசுகையில், ''ஒவ்வொரு இன்டர்வியூவிலும் நான் எஸ் டி ஆரின் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன். அவர் இந்த மேடையில் இருக்கும்போது நானும் இருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இதுவே என்னுடைய பெரிய இலக்கு என்றும் சொல்லலாம். 


இந்த குழுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். நிறைய சுயாதீன இசை கலைஞர்களுடன் பணியாற்றுவேன். இந்தப் படத்தில் கெளுத்தி என்ற சுயாதீன கலைஞர் பாடல் எழுதியிருக்கிறார். வங்கல் புள்ள விக்கி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு ரசிப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த வாரம் படம் வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்," என்றார். 


நடிகர் நிழல்கள் ரவி பேசுகையில், ''சந்தானத்தின் ரசிகர்களுக்கு என் முதல் நன்றி.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர் ஆர்யா, கிஷோர், சந்தானம், பிரேம் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்துவிட்டேன், காமெடியாக நடிக்கவில்லையே என்று எண்ணியிருந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும் , நடிகர் சந்தானமும் இணைந்து ' டிக்கிலோனா' திரைப்படத்தில் எனக்கு ஒரு நகைச்சுவை வேடத்தை வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து 'வடக்குப்பட்டி ராமசாமி 'படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவும் வெற்றி பெற செய்தார்கள். இதற்காக சந்தானத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் மெக்டவல்ஸ் எனும் கப்பலில் கேப்டனாக பணி புரியும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். சினிமாவில் காமெடியை பார்த்து ரசிக்கிறோம் அல்லது அதை பற்றி விமர்சிக்கிறோம். ஆனால் உண்மையில் காமெடியாக நடிப்பது தான் கஷ்டமானது.  சந்தானம் அதை எளிதாக செய்கிறார் என்றால் அது கடவுளின் கொடை. 


இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பதேவின் தந்தையும் ஒளிப்பதிவாளர் தான். அவருடைய ஒளிப்பதிவில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். 


இந்த திரைப்படம் முழுவதும் கப்பலின் பின்னணியில் நடைபெறுகிறது. இதற்காக கலை இயக்குநர் மோகன் அற்புதமாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார்,'' என்றார்.


நடிகை கீதிகா திவாரி பேசுகையில், ''இந்த படத்தில் பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. சினிமா மீதான சந்தானத்தின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது.  படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அக்கறை வெளிப்பட்டது. 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்ற போதும் உற்சாகம் குறையாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பணியாற்ற வைத்தார். 


இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


நடிகை கஸ்தூரி பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக பெரிய முதலாளி ஆர்யாவிற்கும், சின்ன முதலாளி கிஷோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  


நான் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் ரசிகை. சந்தானம் சாருடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்தில் பணியாற்றும் போது அவருடைய எளிமை, கடின உழைப்பை பார்த்து வியந்தேன். அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்றும் சொல்வேன். 


நான் தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். 


இயக்குநர் பிரேம் ஆனந்த் என்னிடம் கதையை சொல்லும்போது நீங்கள் சந்தானத்திற்கு அம்மா என்றார், நான் பதறினேன். முதல் காட்சியில் மட்டும் தான் அம்மா, அதன் பிறகு படம் முழுவதும் அலப்பறை தான் என்றார். கதை கேட்கும் போது நான் எப்படி சிரித்தேனோ அதேபோல் தான் ரசிகர்கள் நீங்கள் திரையரங்கத்தில் படத்தை பார்க்கும் போதும் சிரிப்பீர்கள்.  இந்தப் படத்தில் நான் தான் கவர்ச்சி மாம். 


உள்ளொன்று வைத்து புறம் பேசாத, மனதில் தோன்றியதை பட்டென்று பேசும் எஸ் டி ஆரை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர் நேர்மையானவர். பெருந்தன்மையானவர். அவரைப்பற்றி வெளியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசினாலும், அவரைப்பற்றி அவரிடம் பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும். 


எனக்கு மனச்சோர்வாக இருக்கும்போது இப்படத்திற்காக பின்னணி பேச அழைப்பு விடுத்தார்கள். படத்தின் டப்பிங் பார்த்துவிட்டு எனக்கு சரியாகி விட்டது. மனச்சோர்வு பறந்து விட்டது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வேற மாதிரி பார்த்து ரசிப்பீர்கள். இந்தக் கோடை விடுமுறைக்கு உங்களது கவலைகளை கழட்டி வைத்து விட்டு இந்த படத்தை பார்த்தால் உற்சாகம் அடைவீர்கள், சந்தோஷம் அடைவீர்கள்,'' என்றார். 


இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் பேசுகையில், ''என்னை இயக்குநராக இங்கு நிற்க வைத்திருக்கும் சந்தானத்திற்கும் , இயக்குநர் ராம் பாலாவிற்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்களை உயர்த்தி விட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து சந்தோஷம் அடைபவர் தான் சந்தானம். அவருக்கும் ஒரு காட்பாதர் இருக்கிறார். அவருடைய வளர்ச்சியை கண்டு சந்தோஷமடையும் எஸ் டி ஆர் தான் அது. அவரும் இங்கு இருக்கிறார். 


'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தின் இயக்குநர் என்று சொல்லிக் கொள்வதை விட, இப்படத்தின் கதையை நானும் இணைந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் இயக்குநர் தான் வெளிச்சத்திற்கு வருவார். அந்தப் படத்தின் கதாசிரியர் வெளியே தெரிய மாட்டார். அது போல் இந்த படத்திற்கு நடைபெறக்கூடாது. இந்தப் படத்தில் என்னுடன் முருகன், சேது ஆகிய இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றால் அதில் இவர்களுக்கும் பங்கு உண்டு. 


இந்தப் படத்தின் ஐடியாவை 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் கதையை சொல்வதற்கு முன்னாலேயே சந்தானத்திடம் சொன்னேன். அவர் ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதனால் அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கும் வரை காத்திரு என்றார். சின்ன பட்ஜெட்டில் உன் திறமையை வெளிப்படுத்து, அந்த திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு அதை எடுக்கலாம் என்றார். சந்தானத்தின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் சொன்னது போல் இப்படத்திற்கான தயாரிப்பாளரையும் கொடுத்தது.‌ 


ஆர்யா போன்ற தூய மனம் கொண்ட தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்தது வரம் தான். எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரைப் போலவே இப்படத்திற்கு முதுகெலும்பாக செயல்பட்டவர் கிஷோர். 


'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இதிலும் இணைந்து பணியாற்று இருக்கிறார்கள். இதில் ஓ ஜி சாண்டாவை பார்ப்பீர்கள். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட இதில் நடித்திருக்கும் கிச்சா எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும். 


இப்படத்தின் ஹீரோயின் கீதிகா. அவர் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அழுக்கான ஆடையை கொடுத்து நடிக்க சொன்னோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்தார். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். 


ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் எப்படி ஒரு புதிய வீரரை அணியில் இடம்பெறச் செய்தார்களோ, அதே போல் எங்கள் அணியில் நிழல்கள் ரவியை நாங்கள் இணைத்துக் கொண்டோம். அவருடைய நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும். 


இந்த படம் மல்டி ஜானர் மூவியாக இருக்கும். குழந்தைகள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்தப் படம் இருக்கும். மனிதனுக்கு உள்ள உணர்வுகள் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டது. மன அழுத்தம், பயம், கோபம் இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. இதயத்தை தொடும் படத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டிரஸ் பஸ்டர் மூவியை கொடுப்பதற்கு சந்தானம் மட்டும்தான் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நம்பி வாங்க...! சிரிச்சிட்டு போங்க..! நன்றி,'' என்றார். 


நடிகர் ஆர்யா பேசுகையில், ''இந்தப் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை சந்தானம் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஏற்கனவே மூன்று பாகங்களை எடுத்திருக்கிறார்கள். இனிமேல் இதில் என்ன புதிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தான் இயக்குநர் பிரேம் ஆனந்திடம் கதையைக் கேட்க தொடங்கினேன். ஆனால் அவர் கதையை சொன்ன விதம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையைக் கேட்டு முடித்தவுடன் இதனை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்தால் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றேன். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து கடுமையாக உழைத்து திரைக்கதையாக கொடுக்கும் போது பெரிய பட்ஜெட் படமாக இருந்தது. இதற்காக நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் பேசினேன்.‌ அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தான் கிஷோரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த திரைப்படத்திற்காக சந்தானத்தையும், இயக்குநர் பிரேம் ஆனந்தையும் கிஷோரிடம் ஒப்படைத்து விட்டேன். இதுதான் என்னுடைய பணி. அதன் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு உருவாக்கிய படம் தான் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. 


ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. 


இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நட்புக்காகவே ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக இங்கு வருகை தந்த சிலம்பரசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 


நடிகர் சந்தானம் பேசுகையில், ''தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடைய ஆன்மா எங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் என நம்புகிறேன். 


இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவரைப் பற்றி நான் பல மேடைகளிலும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார்.  'காதல் அழிவதில்லை' படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் 'மன்மதன்' படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிலம்பரசன். 

படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவாதம் நடைபெற்றது. "நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வரவேண்டும். அதற்காக எப்படி உன்னை அறிமுகப்படுத்துவது" என விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என்னுடைய யோசனையையும் சொன்னேன்.‌ அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதை ஏன் நான் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும்  இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும்.  சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.


அடுத்ததாக என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான ஆர்யா.  ஆர்யாவை மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆர்யா தான் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்டை சார்ந்த கிஷோரை அறிமுகப்படுத்தினார்.  அவரை நான் 'கிளாரிட்டி 'கிஷோர் என்று தான் அழைப்பேன்.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ஆர்யா என் உயிர் நண்பர். 'கல்லூரியின் கதை' படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அழகான பெண்கள் சற்று சந்தேகத்துடன் என்னை  பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி நடித்து காட்டினேன். இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும் கவனித்து விட்டு, எங்களிடம் கேட்டனர், பிறகு சமாளித்தோம். ஆனால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விடவில்லை. 'சேட்டை' படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டைட்டிலில் இடம் பெற வைத்தார். 'லிங்கா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது அவர் என்னிடம் நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே என் நண்பர் ஆர்யா செய்த வேலை அது என விளக்கம் அளித்தேன். 


இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஆனந்த் ஆர்யாவிடம் விவரித்தார் அவருக்கும் பிடித்து விட்டது. படத்தின் பணிகள் தொடங்கின. இந்த தருணத்தில் நான் சென்னையின் புறநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாங்கி, அதனை சீரமைத்து அங்கு குடும்பத்தினருடன் சென்று வசிக்கலாம் என திட்டமிட்டேன். இதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் என்னுடைய மனைவியும், அம்மாவும் அந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவார்கள். இந்தத் தருணத்தில் ஒரு முறை ஆர்யா எனக்கு போன் செய்த போது வீட்டை புதுப்பிக்கும் பணியில் இருக்கிறேன் என்று சொன்னேன் உடனடியாக அவர் அந்த வீட்டிற்கு வந்தார். வீட்டை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டு என்று சொல்லிவிட்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்க, ஆர்யா அவரது நண்பருக்கு போன் செய்து வீட்டை இடிக்கும் பணியில் தீவிரம் காட்டி விட்டார். இந்த விஷயத்தை நான் எங்கள் வீட்டில் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் என்னுடைய அம்மாவும், மனைவியும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வீடு இல்லாததை கண்டு திகைத்து விட்டார்கள். அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டை காணவில்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்களிடம் நடந்ததை சொன்னேன். ஆர்யா சொன்னால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் சொன்னேன். அப்போது என்னுடைய அம்மா நீங்கள் இருவரும் படத்தில்தான் இப்படி நடிப்பீர்கள். நிஜத்திலுமா இப்படி இருப்பீர்கள் எனக் கேட்டார். இந்த லெவலில் தான் எங்களுடைய பிரண்ட்ஷிப் இருக்கிறது. 


'கல்லூரியின் கதை' படத்தில் தொடங்கிய எங்கள் நட்பில் நாங்கள் இருவரும் எதற்காகவும் பயந்ததில்லை. எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்வோம். வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோம். எது வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்பார். அந்த ஒரு சக்தி தான் அவரை இங்கு தயாரிப்பாளராக நிற்க வைத்து இருக்கிறது. என்னையும் நாயகனாக உயர்த்தி இருக்கிறது. 


இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்காதே உன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆர்யா நம்பிக்கை கொடுத்தார். படத்தை வெற்றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆர்யாவுக்கு தருவேன் என்று நம்புகிறேன். 


இந்தப் படத்தின் இயக்குநரான பிரேம் ஆனந்தை நான் தமிழ் சினிமாவின் கிறிஸ்டோபர் நோலன் என்று தான் சொல்வேன். ஒரு கதையை சொன்னால் அதனை பல லேயர்களில் சொல்வார். 'டிடி ரிட்டர்ன்ஸ்' படம் ஒரு ஹாரர் படம் என்றாலும் அதில் ஒரு கேம் ஷோ இருக்கும். அந்த கேமிற்குள் ஒரு திருட்டு கும்பலின் அட்வென்ச்சர் இருக்கும். இப்படி மல்டி லேயரில் ஒரு கதையை கச்சிதமாக உருவாக்குவார். அதேபோல் தான் இந்தப் படத்தின் கதையையும் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் தெளிவாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார். அந்த வகையில் ஆனந்த்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்திற்காக பணியாற்றிய முருகன், சேது உள்ளிட்ட என்னுடைய குழுவினருக்கும், இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் மாறனுக்கு டிவி காமெடி இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லிக்கு தலைகீழாக நடக்கும் காமெடி இருக்கிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு ஒரு எலி காமெடி இருக்கிறது. நிழல்கள் ரவி சாருக்கு ஒரு டாய்லெட் காமெடி இருக்கிறது. யாஷிகா ஆனந்திற்கு ஒரு பாட்டில் காமெடி இருக்கிறது. கஸ்தூரி மேடத்திற்கு ஒரு புக் காமெடி இருக்கிறது. இதற்கெல்லாம் திரையரங்கத்தில் கைத்தட்டல் கிடைக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நகைச்சுவை காட்சிகளில் பங்களிப்பு இருக்கிறது. 


ஒரு படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைதான். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன. படத்தைப் பார்க்கும்போது பின்னணி இசைக்காகவும் நீங்கள் கைதட்டுவீர்கள். குறிப்பாக மொட்டை ராஜேந்திரனுக்காக இவர் வாசித்திருக்கும் பின்னணி இசை ரசிகர்களை கவரும். இதற்காக ஆஃப்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் ஹீரோயின் கீதிகா வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்த திரைப்படத்தில் புதிதாக என்ன இருக்கிறது என்றால், ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கௌதம் வாசுதேவ் மேனனும், செல்வராகவனும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.  


ஒருவர் மிகுந்த உயரத்திற்கு செல்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. உதாரணத்திற்கு ராமாயணத்தில் அனைவரும் ராமரை புகழ்கிறார்கள் என்றால்.. அவருடன் இருந்த சீதை, லட்சுமணன், விபீஷணன், பரதன், ராவணன் என எல்லா கேரக்டரும் சேர்ந்தது தான் ராமர் எனும் வெளிப்பாடு. அந்த வகையில் ஒருவர் உயரத்திற்கு செல்கிறார் என்றால் அவருடைய தனித்திறமை மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவரை சுற்றி  இருப்பவர்களும் தான் காரணம் என்பேன். இங்கு நான் உயர்வதற்கு சிலம்பரசன், ஆர்யா என பலரும் காரணமாக உள்ளார்கள். 


மே 16ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் காமெடியை இடம்பெறச் செய்திருக்கிறோம். டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை விட மும்மடங்கு காமெடியுடன் கூடிய விருந்து இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள்,'' என்றார். 


நடிகர் சிலம்பரசன் பேசுகையில், ''இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். நான் முதலில் சினிமா ரசிகன். ஒரு ரசிகனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன். அது சந்தானம் படமாக இருந்தாலும் அவருக்கும், எனக்குமான நெருங்கிய தொடர்புகளை எல்லாம் படம் பார்க்கும்போது சற்று தள்ளி வைத்து விடுவேன். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய மெனக்கெட்டு வித்தியாசமாக ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1 பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சந்தானத்தின் உடல் மொழி, வசன உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. முதலில் இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


நடிகர் ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பர். நண்பர் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.


இயக்குநர் பிரேம் ஆனந்த் - சந்தானத்தின் பிரத்யேக குழுவில் இருப்பவர். இங்கு அவருடைய குழுவில் உள்ள முருகன், சேது ஆகியோரை மேடையில் சந்தானம் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் 'மன்மதன்' பட காலகட்டத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் இவர்களுடன் சந்தானம் விவாதித்துக் கொண்டிருப்பார். இவர்கள் யார் என மனதிற்குள் கேள்வி எழும்.  சந்தானத்திடம் கேட்ட போது என்னுடைய நண்பர்கள் தான் என விளக்கம் அளித்தார். இதை ஏன் நான் விவரிக்கிறேன் என்றால் அன்று தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. இந்தப் படம் வரை ஒரு துளி அன்பும், அக்கறையும் குறையாமல் அவர்கள் தங்களுடைய உழைப்பை வழங்குகிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதனால் இயக்குநர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட அந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இசையமைப்பாளர் ஆஃப்ரோ புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


'வேட்டை மன்னன்' படத்தில் நடித்த போதே எனக்கு ரெடின் கிங்ஸ்லியை தெரியும். அப்போதே இயக்குநர் நெல்சனிடம் இவர் எதிர்காலத்தில் பெரிய காமெடியனாக வருவார் என்று சொன்னேன். அப்போது நெல்சன் சிரித்தார். இன்று நெல்சன், ரெடின் இல்லாமல் எந்த படத்தையும் இயக்குவதில்லை. 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் இயக்குநர் கௌதம் மேனனை இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.  இதற்காகவாவது உங்களை நான் சும்மா விடப்போவதில்லை. இருந்தாலும் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 


சந்தானத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சந்தானம் எல்லா மேடைகளிலும் உங்களை குறிப்பிட்டு பேசுகிறார். இதன் பின்னணி என்ன என்று என்னிடம் பலமுறை பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அதுதான் அவரின் கேரக்டர் என பதிலளித்திருக்கிறேன்.  


இந்தத் தருணத்தில் அனைவரிடத்திலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் இதை புறக்கணித்து விடுவார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள். 


சந்தானத்தின் இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும். 


'எஸ் டி ஆர் 49' இல் நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம். ஏன் என்பதை சொல்ல விரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது.

காந்தா' படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத்

 *'காந்தா' படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது!*



நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் 'காந்தா' திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள இருவரின் முதல் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.


சமீபத்தில், படக்குழு நடிகர் சமுத்திரக்கனியின் பவர்ஃபுல்லான கதாப்பாத்திர தோற்றத்தை வெளியிட்டது.


இன்று படக்குழு அழகு மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் திறமையான நடிகை பாக்கியஸ்ரீ போர்சேவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வசீகரிக்கும் புன்னகையுடன் கார் ஜன்னலை எட்டிப்பார்த்தபடி அவர் அந்த போஸ்டரில் இருக்கிறார். அவரது வசீகரிக்கும் பார்வை கவிதைத்துவமாக அமைந்துள்ளது. 


1950களின் மெட்ராஸின் பரபரப்பான தெருக்களோடு செட் அமைக்கப்பட்டு  'காந்தா' படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ராணா டகுபதி தலைமையிலான ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.


இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கும் இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது.

Kaantha Bhagyashri Embraces Timeless Beauty

 *Kaantha Bhagyashri Embraces Timeless Beauty*



Dulquer Salman's upcoming period film Kaantha features Bhagyashri Borse playing the female lead opposite him, and the first look of both received superb response.


Recently,the makers introduced Samuthirakani's character through a first look poster that presented him a powerful avatar.


Today, the makers unveiled a captivating new poster featuring Bhagyashri Borse, who embodies timeless beauty in traditional attire.


With her enchanting smile and a gaze full of quiet wonder, Bhagyashri is seen seated gracefully in a car, looking out the window.


The subtle magic in her eyes hints at a deeper story, while the soft eleganyof her expression adds a poetic charm to the frame.


Set in the bustling streets of 1950's Madras, Kaantha is a period drama brought to life by spirit media, headed by Rana Daggubati, and Dulquer Salman's Wayfarer films.


Helmed by director Selvamani Selvaraj,the film is getting ready for its theatrical release

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intravesical Reimplantation surgery on an eight-year-old girl who endured years of constant discomfort due to distressing urinary incontinence and has finally found relief. Diagnosed with a rare condition called ectopic ureter, her recovery today stands as a testament to the power of perseverance, compassionate care, and thorough clinical expertise.




An ectopic ureter is a congenital condition in which the tube that transports urine from the kidney to the bladder, known as the ureter, opens outside the bladder instead of connecting to it properly. This might result in aberrant urine drainage, which can cause symptoms like incontinence, especially in females.

Since infancy, the child had been suffering from continuous dribbling of urine, leaving her dependent on diapers both day and night. Despite multiple attempts to find a solution over the years and her condition being misattributed to recurrent urinary tract infections and vulvovaginitis, she continued to battle the physical discomfort of constant wetness, severe skin excoriations, and the emotional pain of isolation and stigma.

The child’s journey took a hopeful turn when she came under the care of Dr. Sangeetha, Senior Consultant, Paediatric Nephrologist at Kauvery Hospital, Radial Road. During a detailed clinical evaluation, a crucial observation—continuous urinary leakage from the urethra—guided the team toward the suspected diagnosis of ectopic ureter, a rare congenital anomaly where the ureter does not connect to the bladder in the typical position.

Further investigations, including ultrasound, MR urogram, and cystoscopy, provided critical insights into the child’s condition. The confirmation of the diagnosis paved the way for surgical correction. Under the expert hands of Dr. Raghul M, Consultant, Paediatric Surgery, the child underwent a bilateral intravesical ureteric reimplantation surgery.

The transformation post-surgery has been nothing short of remarkable. After years of battling incontinence, the young girl is now continent during both day and night, able to comfortably hold urine for up to two hours—an achievement that once seemed impossible. She now embraces life with renewed confidence and joy.

“Ectopic ureter, though rare, can be a hidden cause of persistent urinary incontinence, especially in young girls,” explained Dr. Sangeetha. “In this case, a detailed history and clinical examination helped us finally uncover the root cause and offer her a chance at a normal, happy childhood.” 

Kauvery Hospital, Radial Road, is a leading healthcare institution offering advanced treatments and surgical interventions in neurology, cardiology, women and child wellness, gastroenterology, orthopaedics, joint reconstruction, urology, nephrology and other specialities. With a dedicated team of experts and state-of-the-art medical facilities with 250+ beds comprising 50+ critical care beds, 20+ NICU beds, 7+ operation theatres, advanced Cath labs, cutting-edge neuro diagnostic equipment like 3T MRI and 4K + 3D neuro microscope, transplant facilities and 24/7 dialysis unit, it provides world-class medical care to patients from around the globe.

உடனடி நோயறிதல் காரணமாகத் தீர்த்து வைக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின்

 உடனடி நோயறிதல் காரணமாகத் தீர்த்து வைக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் - சென்னை, 26 ஏப்ரல், 2025




ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிறுநீர் கட்டுப்பாடின்மை காரணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து அசௌகரியத்தை அனுபவித்த எட்டு வயது சிறுமிக்கு, ஒரு தனித்துவமான பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Reimplantation Surgery) அறுவைs சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எக்டோபிக் யூரிட்டர் (Ectopic Ureter) எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சையினால் இறுதியாக முழு நிவாரணம் பெற்றுள்ளார். அவர், இன்று குணமடைந்து வருவது விடாமுயற்சி, கருணைகூர் பராமரிப்பு, மற்றும் முழுமையான மருத்துவ நிபுணத்துவத்தின் வல்லமைக்கு சான்றாக நிற்கிறது.


எக்டோபிக் யூரிட்டர் என்பது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பையுடன் சரியாக இணையாமல், சிறுநீர்ப்பைக்கு வெளியே இணைந்திருக்கும் ஒரு பிறவி குறைப்பாடாகும். இது சிறுநீர் வெளியேற்றத்தில் ஒழுங்கற்றத்தனத்தை ஏற்படுத்தி, சிறுநீர் கட்டுப்பாடின்மை போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும், குறிப்பாக பெண்களில்.


குழந்தைப் பருவத்திலிருந்தே, அச்சிறுமி தொடர்ந்து சிறுநீர் கசிவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் இரவும் பகலும் டயப்பர்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிலையிருந்தது. பல ஆண்டுகளாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருடைய பிரச்சனை என்பது மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் வுல்வோவஜினைடிஸ் (Vulvovaginitis) என்று தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஈரப்பதம், கடுமையான தோல் உரிதல் போன்ற  உடல் அசௌகரியத்துடனும், தனிமை, பழிச்சொல் போன்ற மனவலியுடனும் போராடியுள்ளார்.


ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் குழந்தை -சிறுநீரக மருத்துவ நிபுணரும், மூத்த ஆலோசகரும், மருத்துவருமான சங்கீதாவின் பராமரிப்பின் கீழ் வந்தபோது, குழந்தையின் பயணம் நம்பிக்கைக்குரிய திருப்பத்தை எடுத்தது. விரிவான மருத்துவ மதிப்பீட்டின் போது,  சிறுநீர்க்குழாயிலிருந்து தொடர்ச்சியான சிறுநீர் கசிவிற்குக் காரணம், எக்டோபிக் யூரிட்டராக இருக்குமோ என்ற சந்தேகத்தை அடைந்தது மருத்துவ குழு. 

அல்ட்ராசவுண்ட், MR யூரோகிராம் மற்றும் சிஸ்டோஸ்கோபி உள்ளிட்ட மேலதிக மருத்துவ ஆய்வுகள், குழந்தையின் நிலை குறித்து முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கின. நோயைக் கண்டறிந்ததும், அறுவைச் சிகிச்சை தான் தீர்வு எனும் தெளிவு கிடைக்கப்பெற்றது. குழந்தை அறுவைச் சிகிச்சை நிபுணரும் மருத்துவரான ராகுல் M அவர்களின் நிபுணத்துவத்தின் கீழ், குழந்தைக்கு பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் யூரிட்ரிக் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Ureteric Reimplantation Surgery) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மாற்றம் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகச் சிறுநீர் கட்டுப்பாடின்மையில் போராடிய பிறகு, அந்த சிறுமி தற்போது பகலிலும் இரவிலும் நிம்மதியாக இருக்கிறார். இரண்டு மணி நேரம் வரை சிறுநீரைக் கட்டுப்படுத்தும் சாதனை என்பது, ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக இருந்தது. இப்போது அவர் புது நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.


“எக்டோபிக் யூரிட்டர் என்பது அரிதான நோயாக இருந்தாலும், விடாப்பிடியான சிறுநீர் கட்டுப்பாடின்மைக்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம், குறிப்பாக இளம் பெண்களில்" என்று மருத்துவர் சங்கீதா விளக்கினார். "இந்த விஷயத்தில், விரிவான வரலாறு மருத்துவ பரிசோதனைகளின் வழியாக மூல காரணத்தைக் கண்டறிந்து, அவளுக்கு ஒரு சாதாரண, மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்க எங்களுக்கு உதவியது" என்றார்.


சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரசிகர் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல்கள்

 *நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரசிகர் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல்கள்*


லவ் டுடே, டிராகன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்திருந்த  நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் ரசிகர் மன்றம் சார்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களும், பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களும், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களும் வழங்கப்பட்டது..








பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

R. K. வித்யாதரன்


Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் " ஸ்கூல் "










இந்த படத்தில் யோகிபாபு,பூமிகா சாவ்லா,கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள்.


இந்த படத்தின் இயக்குனர் 

R. K. வித்யாதரன் யோகி பாபு பற்றி பகிர்ந்தவை....


சமீபத்தில் நடந்த யோகி பாபு நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவில்லை என்று மேடையிலேயே படு மோசமாக விமர்சித்துள்ளனர்.


என்னை பொறுத்தவரை அவர் அப்படி செய்ய கூடிய நடிகர் கிடையாது. முறையாக அவரிடம் பேசி தேதி, நேரம் வாங்கி படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக கலந்துகொள்வார்.


ஸ்கூல் படம் துவங்கியது முதல் இன்றுவரை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். பட பூஜை நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா என எல்லா பிரமோஷன்களுக்கும் வருகை தந்துள்ளார். 


அவர் சினிமாவை நேசிக்கும் நல்ல மனிதர் என்பதால் இத்தனை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார் இயக்குனர் R. K. வித்யாதரன்.


ஸ்கூல் படம் கோடை கொண்டாடமாக இம்மாதம் 23 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Monday, 5 May 2025

#STR49 Movie Launched with a Grand Pooja Ceremony!

 #STR49 Movie Launched with a Grand Pooja Ceremony!


Kicking off with a grand pooja ceremony, the much-awaited film #STR49—starring the ever-charismatic Silambarasan TR and helmed by Parking sensation Ramkumar Balakrishnan—was officially launched today under the prestigious banner of Dawn Pictures, with dynamic producer Aakash Baskaran backing the project in style, amidst the presence of the star-studded cast and film industry luminaries.










The film is set against a college backdrop and is being made as a vibrant commercial entertainer, aiming to bring back the vintage charm of Silambarasan TR on screen. In this movie, Silambarasan plays the role of a college student.


Director Ramkumar Balakrishnan, who captured attention with Parking, is taking a different route this time by crafting a mass commercial film that will appeal to audiences across all sections.


After a long gap, actor Santhanam joins hands with Silambarasan TR again.


The female lead is played by Kayadu Lohar, a young actress who has won hearts among the youth. VTV Ganesh also plays a significant role in the film.


Dawn Pictures, known for producing grand films featuring leading stars, is backing #STR49 with a massive budget under the production of Aakash Baskaran.


Cast


Silambarasan TR

Santhanam

Kayadu Lohar

VTV Ganesh



CREW


Producer : Aakash Baskaran (Dawn Pictures)

Director : Ramkumar Balakrishnan

DOP:Manoj Paramahamsa

Music : Sai Abhyankkar

Art : Subentar PL

Costume Designer : Praveen Raja

Publicity Designer : Kabilan Chelliah

Executive Producer : Veera Sankar

Marketing Head : Manoj Maddy

பாராட்டுக்களைக் குவிக்கும் மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!

 *பாராட்டுக்களைக் குவிக்கும் மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!*


*அறிமுக இயக்குநர் இராம் இந்திரா  இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும்  திரில்லர் டிராமா  “மனிதர்கள்” !!*



Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர்  இராம் இந்திரா  இயக்கத்தில், புதுமுகங்களின்





நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மனிதர்கள்”. 


இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, முன்னணி திரைப்பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் தயாரிப்பாளர் சி.வி. குமார் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ளனர்.


சகதிக்குள் மல்லுக்கட்டும் மனிதர்களை  வித்தியாசமான களத்தில்,  காட்சிப்படுத்தியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், திரை ஆர்வலர்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. 


ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா. 


படம் குறித்து இயக்குநர் இராம் இந்திரா கூறியதாவது…

இது நண்பர்களின் உதவியால், கிரவுட் ஃபண்டிங் முயற்சியில் உருவான திரைப்படம். மனிதனின் மனம் வித்தியாசமானது, நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக்குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்தப்படம். ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், ரசிகர்கள் ரசிக்கும் திரில்லராக உருவாக்கியுள்ளோம். இது முழுக்க இரவில் நடக்கும் கதை, இதுவரை திரையில் பார்த்த இரவாக இது இருக்காது, நீங்கள் நேரில் அனுபவிக்கும் இரவின் நிறத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளோம். திண்டுக்கல் என் சொந்த ஊர் என்பதால் அங்கேயே முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடித்தோம். என் ஊர் மக்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். 


இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், விரைவில் திரைக்குக் கொண்டு வரப் படக்குழு திட்டமிட்டுள்ளனர். திரையரங்கு வெளியீட்டுத் தேதி,  விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தொழில் நுட்ப குழு 

எழுத்து - இயக்கம் -  இராம் இந்திரா 

ஒளிப்பதிவு - அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்,

இசை - அனிலேஷ் எல் மேத்யூ ,

படத்தொகுப்பு - தின்சா,

கலை - மகேந்திரன் பாண்டியன்,

பாடல் - கார்த்திக் நேத்தா,

ஒப்பனை - அ சபரி கிரிசன்,

துனைத்தயாரிப்பு - தரணிதரன் பரிமளா குலோத்துங்கன்,

நா யுவராஜ்,

உதவி இயக்கம் - லோகேஷ் க கண்ணன்,

சண்டை பயிற்சி - வின் வீரா,

ஒளிக்கலவை - ஆனந்த் இராமச்சந்திரன்,

சப்தம் - சதீஷ்,

வண்ணம் - வசந்த் செ கார்த்திக்,

வரைகலை - ஆன்டனி பிரிட்டோ,

விளம்பர வடிவமைப்பு  - ரிவர் சைடு ஹவுஸ்.


தயாரிப்பு (producers):

இராஜேந்திர பிரசாத்,

நவீன்,

மு.கி.சாம்பசிவம். (Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures) 


மக்கள் தொடர்பு :  சதீஷ், சிவா (AIM)

Dawn Pictures தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார்

 *Dawn Pictures தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும், #STR49 படம்  பூஜையுடன் துவங்கியது !!*










*#STR49 திரைப்படம் இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது !!*


Dawn Pictures சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில், பார்க்கிங் படப்புகழ்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும்  #STR49 படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாக நடைபெற்றது. 


விண்டேஜ் சிலம்பரசனை திரையில் மீண்டும் காணும் வகையில், கல்லூரி பின்னணியில் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் சிலம்பரசன் TR கல்லூரி மாணவனாக நடிக்கிறார். 


பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.


இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிலம்பரசன் TR உடன் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்கிறார். இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த நாயகி கயாடு லோஹர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் VTV கணேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 


பல  முன்னணி நட்சத்திர  நடிகர்களின் நடிப்பில் பல பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கி வரும், Dawn Pictures சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் மிகப்பெரும் பொருட்செலவில் #STR49 படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். 


நடிகர்கள் 

சிலம்பரசன் TR

சந்தானம்

கயாடு லோஹர்

VTV கணேஷ்


தொழில் நுட்ப குழு 

தயாரிப்பாளர் - ஆகாஷ் பாஸ்கரன் (டான் பிக்சர்ஸ்) 

இயக்குநர் : ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு :மனோஜ் பரமஹம்சா 

இசை: சாய் அபயங்கர் 

கலை: இயக்கம் : சுபேந்தர் PL 

ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா 

விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன் செல்லையா நிர்வாக தயாரிப்பாளர்: வீர சங்கர்

மார்க்கெட்டிங்: மனோஜ் மேடி

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் "நாக் நாக்" பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

 *ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் "நாக் நாக்" பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!*

*இயக்குநர் ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் புதிய களத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம்  “நாக் நாக்” !!*







பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் "நாக் நாக்". இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் படம், அதன் வெளியீட்டு தருணத்திலேயே ஒரு முக்கிய வலு சேர்க்கும் விதமாக, தேஜாவு, தருணம் போன்ற தரமான படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது "ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்" நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார்.


ஒரு புதிய சினிமா அனுபவத்தை 'நாக் நாக்' திரைப்படம் நிச்சயம் தரும். இந்தப் படத்தின் தனித்துவமான கதைக்கருவும், தரமான உருவாக்கமும் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இந்தப் படத்துடன் கைகோர்த்துள்ளார்.


இதுகுறித்து அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், "நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன் நோக்கமே, திறமையான புதிய இயக்குனர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தரமான கதைகளை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். 'நாக் நாக்' பார்த்தபோது, இது மிகவும் தனித்துவமான, தரமான உள்ளடக்கம் என்று எனக்கு தோன்றியது. அதனால் உடனடியாக இந்த படக் குழுவினருடன் இணைய முடிவு செய்தேன். இப்படி ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.


இயக்குநர் ராகவ் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தனது திரைப்பயணம் மற்றும் இந்தப் படம் பற்றி கூறியதாவது. "இது எனக்கு ஒரு முக்கியமான தருணம்... மிகவும் தனிப்பட்ட பயணத்தின் ஒரு பகுதி. இத்தனை காலமாக நீங்கள் என்னை ஒரு நடிகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், இன்று முதல்முறையாக ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்," என்று ராகவ் ரங்கநாதன் கூறினார். "இயக்கம் என்பது எனக்குள் எப்போதும் ஒரு அமைதியான கனவாக இருந்தது. சொல்லப்போனால், அது ஒரு தொடர்ச்சியான தட்டல். இப்போது... நாக் நாக் மூலம் அந்தக் கனவு நனவாகியுள்ளது."


படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது: "ஆம், நான் இந்தப் படத்தை எனக்காக எழுதினேன் - ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வழக்கமான ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. பெரிய பட்ஜெட்டில் ஹீரோ பறக்கும் காட்சிகளோ, மெதுவாக நடக்கும் காட்சிகளோ (அப்படி செய்ய எங்களிடம் பட்ஜெட்டும் இல்லை 😄) இந்தப் படத்தில் இருக்காது. 'நாக் நாக்'கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது. கதையேதான் ஹீரோ."


அவர் தொடர்ந்து பேசுகையில், "அந்தக் கதை எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. திரையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சொந்தமானது. கே.பாலச்சந்தர் போன்ற ஆரம்பகால இயக்குநர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது, துணைக் கதாபாத்திரங்களின் ஆழம்தான். 'எதிர்நீச்சல்' போன்ற படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனது படத்திலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் உங்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு படத்தைத் தான் நான் உருவாக்க முயன்றேன்."


தனது இயக்கம் மற்றும் கதை சொல்லும் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பற்றி ராகவ் விளக்கினார்: "இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது? நடன ரியாலிட்டி ஷோக்களில் என் மனைவியையும் என்னையும் சிலர் பார்த்திருக்கலாம். நாங்கள் சில போட்டிகளில் வென்றதும் உண்டு. அப்போது எனக்கு கிடைத்த பாராட்டுகளில் நான் மிகவும் பொக்கிஷமாக கருதியது, 'நீங்கள் வெறும் நடனமாடவில்லை - ஒரு கதையைச் சொல்கிறீர்கள்' என்பதுதான். அது எனக்கு பெரிய அர்த்தம் தந்தது. ஏனெனில் அந்த நடனங்களுக்கான பெரும்பாலான கதைகள் - கருத்துக்கள் - என்னிடமிருந்து உருவானவைதான். அந்த நடன ஒத்திகை அறைகளில்தான் எனக்குள் படைப்பாற்றல் இருப்பதை உணர்ந்தேன். சொல்லப்போனால், மானாட மயிலாட நிகழ்ச்சியில் எங்கள் பெர்ஃபாமென்ஸ்களுக்கு பிறகு, என் தலைக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் என்று கலா மாஸ்டர் சொல்வார்கள். அப்படித்தான் எனக்குள் இருந்த கதைசொல்லி பிறந்தான்."


'நாக் நாக்' அதனுடைய ஒரு நீட்சிதான் என்று கூறிய அவர், "நான் இதற்கு முன்பு பார்த்திராத, யாரும் ஆராயாத ஒரு கதைக்கருவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இது புதியது, பரபரப்பானது, மேலும்... உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தை நீங்கள் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்."


தனது முதல் பட இயக்குநராக உணரும் பொறுப்பு குறித்துப் பேசிய ராகவ் ரங்கநாதன், தனது உத்வேகத்தைப் பகிர்ந்து கொண்டார்: "எனக்கு 'எந்திரன்' படத்தில் சில காட்சிகளில் நடித்த வாய்ப்பு கிடைத்தது, அதைப் பற்றி இன்றும் பலர் பேசுகிறார்கள். அல்லது 'நஞ்சுபுரம்' போன்ற ஒரு படம், அது வெளிவந்த போது பலரை சென்றடையவில்லை என்றாலும், இன்று அதன் இசை, கதை, ஆத்மாவுக்காக பாராட்டப்படுகிறது. இருந்தாலும், இந்தப் படம் எனக்கு வேறுபட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இந்த முறை எல்லாமே என் மீதுதான். முழுப் பொறுப்பும் சுமையும் என் மீதுதான்."


இது அவரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தைரியத்தை நினைவுபடுத்தியது: "இது என்னை ஒருவரிடம் கொண்டு செல்கிறது. அவருடைய தைரியம் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தனது திரைப்பயணத்தில் ஒரு சவாலான காலகட்டத்தில், அவர் 'நாடோடி மன்னன்' என்ற படத்துக்காக அனைத்தையும் முதலீடு செய்தார்... பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பிரபலமாக சொன்னதுண்டு: 'இந்தப் படம் தோற்றால் நான் நாடோடியாகிறேன். வெற்றி பெற்றால் மன்னனாகிறேன்'." அத்தகைய நம்பிக்கைதான் தனக்கு இப்போது உத்வேகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திருவள்ளுவர் வாக்கையும் அவர் குறிப்பிட்டார்: "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்."


தனது நம்பிக்கையுடன் அவர் நிறைவு செய்தார்: "தமிழ் திரைப்படத் துறையில் வெற்றிக் கதவுகளை நான் நீண்டகாலமாகத் தட்டிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் 'நாக் நாக்' மூலம்... அந்தக் கதவு இறுதியாகத் திறக்கும் என நம்புகிறேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த உங்களுக்கு நன்றி. இந்தப் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்."


முக்கிய கதாபாத்திரங்களில்:


இப்படத்தில் திறமையான நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள்:


கார்த்திக் குமார்

சனம் ஷெட்டி

லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி

பப்லு பிரித்விராஜ்

வட்சன் சக்கரவர்த்தி

ஐஸ்வர்யா

கலை


இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் சார்பாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ராஜா பட்டாச்சார்ஜியும், இசையமைப்பை நவீன் சுந்தரும் கவனித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் பிரதிபலிக்கும் வகையில், படத்தின் மர்மம் மற்றும் ஃபேன்டஸிக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் இசை அமைந்துள்ளது.


இப்படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.