Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Wednesday, 17 September 2025

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA*



Teja Sajja is proving true to his super hero image, delivering back-to-back blockbusters and generating massive profits for his producers. His latest outing, Mirai, directed by Karthik Ghattamaneni, is turning out to be a sensational hit. Produced by TG Vishwa Prasad and Krithi Prasad under the People Media Factory banner, the film is on a record-breaking spree.


Mirai has crossed Rs 100 crore gross mark in just 5 days run, making it Teja Sajja’s second film to achieve this milestone after the pan-India blockbuster Hanu-Man. The movie continues to trend at the top on BookMyShow, with over 1 lakh tickets sold just yesterday.


In addition, Mirai has breached the $2 million mark at the US box office, again becoming Teja’s second film to enter this coveted club.


Teja Sajja is being lauded for his effortless performance in another challenging, action-packed role. Manoj Manchu and Shriya Saran are also receiving praise for their impactful portrayals as the main antagonist and Teja’s mother, respectively. Ritika Nayak made a strong impression as the leading lady.


Karthik Ghattamaneni’s hard work and dedication to the movie, undertaking multiple roles as writer, director, and cinematographer, has paid off with a blockbuster response from all corners. The producers have delivered world-class quality within the budget. Music director Gowra Hari also deserves special mention for his adrenaline-pumping score.


With larger-than-life storytelling and spectacular visuals, Mirai offers strong repeat value and is expected to enjoy a long and successful run at the box office. Moreover, with no major competition in its second week, trade analysts predict that the film will continue to break records in the days to come.

தேஜா சஜ்ஜா நடிப்பில், "மிராய்" திரைப்படம் – உலகளவில் 100 கோடி வசூல்

 *தேஜா சஜ்ஜா நடிப்பில்,  "மிராய்" திரைப்படம் – உலகளவில் 100 கோடி வசூல், அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து சாதனை !!*  

தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த "மிராய்" திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் – கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.


"மிராய்" வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது.  ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும். புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இப்படம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.


அத்துடன், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $2 மில்லியன் கிளப்பைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்குப் பிறகு, இந்த சாதனையை எட்டிய தேஜாவின் இரண்டாவது படம் இதுவாகும்.


சவாலான ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் மீண்டும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள தேஜா சஜ்ஜாவிற்கு  பாராட்டுகள் குவிந்து வருகிறது.  வில்லனாக நடித்த மனோஜ் மாஞ்சு மற்றும் தாயாக நடித்த ஷ்ரேயா சரண் ஆகியோரும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். கதாநாயகியாக நடித்த ரித்திகா நாயக், தனது வலுவான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு – மூன்று முக்கிய பங்குகளை ஒரே நேரத்தில் வகித்த கார்த்திக் கட்டமனேனியின் உழைப்பு இப்போது மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. தயாரிப்பாளர்கள் தரத்தில் உலகத் தரத்திற்கு இணையான படைப்பை வழங்கியுள்ளனர். இசையமைப்பாளர் கௌரா ஹரியின் அதிரடி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


பெரிய திரையில் காண வேண்டிய கதை சொல்லலும், கண்கவர் காட்சிகளும் கொண்ட மிராய், மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் ரசிகர்களை ஈர்க்கிறது. மேலும், இரண்டாவது வாரத்தில் பெரிய போட்டி எதுவும் இல்லாததால், வரும் நாட்களில் படத்தின் வசூல் சாதனைகள் இன்னும் அதிகரிக்கும் என வணிக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.



கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ்

 *கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல்  ஸ்ட்ரீமாகிறது!*



இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது.


மண் சார்ந்த பாரம்பரியக்  கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஒரு சாதாரண டிராமா மட்டுமல்ல, வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும்.


“வேடுவன்” சீரிஸ் பற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட கண்ணா ரவி கூறுகையில்.., 

“வேடுவன் கதை சொன்ன அந்த நொடியிலேயே இது எனக்கு மிக முக்கியமான படைப்பாக இருக்குமெனத் தோன்றியது. இது ஒரே ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி-தவறு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும்கூட. நடிகராக, இந்த பாத்திரம் என்னை என் கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே கொண்டு சென்று, கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ வைத்தது. வெடுவன் ஒரு சீரிஸ் மட்டும் அல்ல,  நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.”


“வேடுவன்” சீரிஸை வரும் அக்டோபர் 10 முதல்,   உங்கள் ZEE5 இல் கண்டுகளியுங்கள் !


Link 🔗https://www.youtube.com/watch?v=RM-Lio9i7ag

Tuesday, 16 September 2025

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு 

வாழ்நாள் சாதனையாளர் விருது !



நடிகர் சங்கம் அறிவிப்பு!


பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்களில் சில. 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் நடித்தார். சமீபத்தில் 90 வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு, வரும் 21 ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அவர்களும் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் இன்று அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.


#NadigarSangam #ns #siaa

@actornasser @VishalKOfficial @Karthi_Offl @PoochiMurugan 

@karunaasethu 


@johnsoncinepro

உத்ரா புரொடக்‌ஷன்ஸ்* நிறுவனத்தின் *புதிய அலுவலகம்* _திறப்பு விழா_

 *உத்ரா புரொடக்‌ஷன்ஸ்* நிறுவனத்தின் *புதிய அலுவலகம்* _திறப்பு விழா_ !! 







திரைப்பட விநியோக நிறுவனமான உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின், புதிய அலுவலகம் சென்னையில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது !! 


தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க வெளியீடு விநியோகம் செய்யும் "உத்ரா புரொடக்‌ஷன்ஸ்  நிறுவனர்

 *செ.ஹரி உத்ரா*  புதிய அலுவலகம்  சென்னை *வடபழனி* பகுதியில், *வேலாயுதம்* *காலனி* யில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது.



சிறு திரைப்படங்களில், வித்தியாசமான வெவ்வேறு கதைக் களங்களில்  மாறுபட்ட படைப்புகளை உருவாக்கி வரும் படைப்பாளிகள், சிறு படதயாரிப்பாளர்கள் அத்திரைப்படங்களை  திரையரங்கில்  வெளியீடு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும்,  *தமிழ்நாடு* , *கேரளா* , *கர்நாடகம்* போன்ற பகுதிகளில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.  உத்ரா  புரொடக்‌ஷன்ஸ்  நிறுவனம், இத்தகைய படங்களுக்கு  சிறந்த வழிகாட்டியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்து வருகிறது. 



2024 மற்றும் 2025 ஆண்டுகளில்  உத்ரா  புரொடக்‌ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் செ.ஹரி உத்ரா அவர்கள், *Gentle* *Women* , *கெவி* , *தூக்கு துரை* , *குற்றம் புதிது* தமிழ் திரைப்படங்களையும், *Jijo George*  நடித்த *ஆரோ* , *Asif Ali* யின் *ரஞ்சித் சினிமா* , *அன்போடு கண்மணி* *ஸ்ரீலங்கன் சுந்தரி* போன்ற மலையாளத் திரைப்படங்களையும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில்  வெளியீடு செய்துள்ளது...


  மேலும் இந்நிறுவனம் சார்பில் *Maria* , *YELLOW* என அடுத்தடுத்து பல படங்களை  வெளியிட மும்முரமாக  பணியாற்றியும்  வருகிறார். இதுவரை 2023, 2024, 2025 ஆகிய 3 ஆண்டுகளில் முறையே சுமார் 45க்கும் அதிகமான படங்களை திரையரங்குகளில் வெளியீடு செய்து புதுப்பட தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்துள்ளது இந்நிறுவனம். 


இந்நிறுவனம் திரையரங்கு வெளியீடு மட்டுமல்லாது, *Amazon Prime* , *AHA* , *TENTKOTTAI* , *SUN*NEXT* முதலான ஓடிடி தளங்களில், படங்களை விற்பனை ,FMS,Hindi,Other Languages, சாட்டிலைட் உரிமைகளையும் விற்றுத் தந்து,  தயாரிப்பாளர்களுக்கு லாபம் பெற்றுத் தந்து வருகிறது.  புதுப்பட தயாரிப்பாளர்கள் எளிதில் அணுகும் வண்ணம்,  

இந்நிறுவனத்தின் அலுவலகம் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்டு பிரபலங்கள் மற்றும் பெரியவர்களின் ஆசியுடன் புதிய அலுவலகம் திறப்பு விழா இனிதே நடைபெற்றது...

Monday, 15 September 2025

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team*







Over the past few weeks, the poignant love story of 18 Miles has captivated audiences. Its 14-minute prologue, presented by Think Music and directed by Sathish Selvakumar, featuring Ashok Selvan and Mirnaa in the lead, has garnered an exceptional response. Adding further lustre to this celebration, acclaimed filmmaker Mani Ratnam extended his warm appreciation to the entire team for their remarkable work.

Director Sathish Selvakumar says, “It was a truly remarkable experience for all of us in the 18 Miles team. We had the privilege of screening the prologue at the Madras Talkies office. Following a contemplative pause after the screening, Mani Ratnam sir expressed his appreciation, observing that it had been crafted with both elegance and detail. He graciously devoted time to acknowledge every individual, from heroine Mirnaa to my assistant Ashok, our editor Nash, and the wider team. For us, it was an immensely gratifying moment. Executive Producer Shivanand sir also shared his words of encouragement. Mani Ratnam sir further commended the effort that had gone into the prologue, remarking that the dedication of the team was evident in the final work."


Director Sathish Selvakumar tots up adding, 'Mani Ratnam sir's Kannathil Muthammittal was one of my greatest inspirations to evolve as a filmmaker. The emotions crossing beyond oceans and boundaries were esthetically captured by him. Today, to get warm appreciations from the versatile creator himself makes me so elated."

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team*




Over the past few weeks, the poignant love story of 18 Miles has captivated audiences. Its 14-minute prologue, presented by Think Music and directed by Sathish Selvakumar, featuring Ashok Selvan and Mirnaa in the lead, has garnered an exceptional response. Adding further lustre to this celebration, acclaimed filmmaker Mani Ratnam extended his warm appreciation to the entire team for their remarkable work.



Director Sathish Selvakumar says, “It was a truly remarkable experience for all of us in the 18 Miles team. We had the privilege of screening the prologue at the Madras Talkies office. Following a contemplative pause after the screening, Mani Ratnam sir expressed his appreciation, observing that it had been crafted with both elegance and detail. He graciously devoted time to acknowledge every individual, from heroine Mirnaa to my assistant Ashok, our editor Nash, and the wider team. For us, it was an immensely gratifying moment. Executive Producer Shivanand sir also shared his words of encouragement. Mani Ratnam sir further commended the effort that had gone into the prologue, remarking that the dedication of the team was evident in the final work."


Director Sathish Selvakumar tots up adding, 'Mani Ratnam sir's Kannathil Muthammittal was one of my greatest inspirations to evolve as a filmmaker. The emotions crossing beyond oceans and boundaries were esthetically captured by him. Today, to get warm appreciations from the versatile creator himself makes me so elated."

தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

 *“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !* 

*எனக்கு கடைசி மூன்று படங்கள் வாழ்க்கையில் உள்ள அனுபவம் கொண்டு நடித்தேன் -நடிகர் தினேஷ்* 































Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை  இயக்கத்தில், தினேஷ், கலையரசன்,

ஷபீர்,

பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்

"தண்டகாரண்யம்"



இம்மாதம் 19-ஆம் தேதி  திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை  வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக

நடைபெற்றது.


இந் நிகழ்வினில் நடிகை ரித்விகா பேசியது,


இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம். 


புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்கப்பட்டது வித்தியாசமான இடத்தில் அதனால் மிக பெரிய சவால் இருந்தது. திரை விமர்சகர்கள் சிறந்த முறையில் எழுதி, படத்தினை வெற்றி அடைய செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.


நடிகர் கலையரசன் பேசியது,


இயக்குனர் அதியன் ஒரு குழந்தை. 

 தினேஷ்,வின்சு மற்றும் சக நடிகர்கள் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள். ரித்விக இந்த படத்தில் எனக்கு அண்ணியாக  நடித்துள்ளார். 


நீலம் புரோடக்ஷன் படம் பண்ணும் பொழுது நிறைய விஷயங்கள் இருக்கும்.

தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி.


நடிகர் தினேஷ்  பேசியதாவது,


அதியன் ஆதிரை மிகவும் உணர்சிவச கூடியுவர். இருப்பினும் அவரது படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என கவனம் செலுத்த கூடியவர். படத்தில் இசையமைப்பாளர் ஜெஸ்டின் வந்த பிறகு 

மிகவும் பிரமாதம் செய்து விட்டார்.

எனக்கு கடைசி மூன்று படங்கள் வாழ்க்கையில் உள்ள அனுபவம் கொண்டு நடித்தேன். உதாரணமாக ஒருவர் மூச்சை எப்படி இழுத்து விடுவார் என யோசித்து நடித்தேன். 


அதனை மக்கள் ரசித்தனர். ரப்பர் பந்து படத்திற்கு, மக்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி.



காற்று, மலை, அனைத்தும் பொதுவானது.

என்றார்.


படத்தின் இயக்குனர் அதியன் பேசியதாவது,


படத்தின் கதையானது மகாபாரதம் பல ஆண்டுகால இருக்கிறது. அது தெரு கூத்து, நாடகம் என பல வடிவில் வந்து இருக்கின்றது. இருப்பினும் அனைத்திலும் கிருஷ்ணர் ஏன் தாமதமாக வந்தார், அதேபோல கிருஷ்ணர் சீக்கிரம் வா என திரௌபதி குரல் எழுப்புவது போல தான் இருக்கும். ஆனால் மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகில் உறியும் பொழுது சுற்றி இருக்கக்கூடிய நபர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என கேள்வி எழுப்பி இருந்தது. அதை கருப்பொருளாக வைத்துக் கொண்டு என்னுடைய இந்த படம் அமைந்திருக்கிறது. படத்தில் முதலாவதாக இயக்குனர் அமீர் நடிக்க இருந்தார் இருப்பினும் திடீரென அவர் நடிக்க முடியாததால் அந்த கதாபாத்திரத்தில் தினேஷ் நடிக்க ஒப்பு கொண்டார். ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக என்னுடைய இந்தத் திரைப்படம் குரல் எழுப்பும் என்ன நான் நம்புகிறேன். படத்தில் ஒரு பாடகர் அறிவு பாடி இருக்கிறார். 


அது படத்தின் கதைக்களத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது.

என்று தெரிவித்தார்.


இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது,


கடந்த 13 ஆண்டுகளாக குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். 


இந்தப் படத்தில் என்னுடன் சேர்ந்த தயாரித்த தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் திரைப்படத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை.

சமூகத்தைச் சரி செய்ய வேண்டும் என்கின்ற முனைப்போடு வந்திருக்கிறோம்.

நான் இயக்குனராக வரும்போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர்.


முன்பெல்லாம் இடதுசாரிகள் அதிகம் இருப்பார்கள் இருப்பினும் தற்பொழுது இருக்கக்கூடிய சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள்.


நேபாளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய கலவரம் கூட ராப் இசை கலைஞர்களுக்கு மிகப்பெரும் பங்கானது இருக்கிறது.


தொடர்ச்சியாக நீலம் ப்ரொடக்ஷனில் வேட்டுவம், பைசன் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.

Actress Saanya Iyer Scripts Success: Crowned SIIMA Most Promising Newcomer

 *Actress Saanya Iyer Scripts Success: Crowned SIIMA Most Promising Newcomer*






Rising star Saanya Iyer embodies a rare blend of youthful brilliance and artistic maturity. Her presence on screen is not merely an act of performance but an expression of grace, discipline, and an instinctive command over her craft, qualities that distinguish true artists from fleeting talents. With an elegance honed through years of dedication and an intuitive ability to inhabit diverse roles, she has become a beacon of promise in contemporary South Indian cinema.


Having spent over 15 years in the Kannada entertainment industry, Saanya’s journey is a testament to both perseverance and passion. From her early acclaim as a child actress in beloved daily soaps like Nam Amma Sharade, Arasi, and Puttagowri Maduve, to her memorable performances in films such as Gaja, Mukhaputa, and Vimukti, she has consistently left a mark on audiences and critics alike. Her victory as the Bigg Boss OTT Kannada Season 1 winner and her commanding screen presence as the female lead in Indrajith Lankesh’s Gowri (2024) further reinforce her standing as one of the most promising names in Indian cinema today.


Actress Saanya says, “I feel so honoured and grounded to have been awarded with SIIMA Most Promising New Comer 2025 (Kannada). I extend my heartfelt gratitude to the respected jury of SIIMA, my supporters for their unwavering love, media for embracing me, my family and friends who have held my hand through it all. I promise to reflect and give my all to the world of art & cinema.”


This milestone stands not merely as a recognition of Saanya Iyer’s talent, but as an affirmation of her relentless perseverance, refined discipline, and the profound resonance she evokes in her audiences. Grounded in a strong foundation in classical and contemporary dance, graced with a luminous on-screen presence, and enriched by a steadily expanding repertoire of acclaimed performances, she emerges not simply as a promising actress but as a cultural force in the making. With each new role, Saanya is poised to ascend further, offering fresh dimensions to the evolving language of Indian cinema.

SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்

 *SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!*






இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார். 


விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். 'நம் அம்மா ஷாரதே', 'அரசி', 'புட்டகௌரி மதுவே' போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 'கஜா', 'முகபுதா' மற்றும் 'விமுக்தி' போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா. 


இதுகுறித்து சான்யா பகிர்ந்து கொண்டதாவது, "கன்னட மொழியில் 2025 ஆம் வருடத்திற்கான சைமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த சைமாவின் நடுவர் குழுவினர், என்மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் ரசிகர்கள், ஊடகம், என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி! நிச்சயம் கலைக்கும் சினிமா உலகிற்கும் என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை தருவேன்" என்றார். 


இந்த விருது சான்யாவின் திறமைக்காக மட்டுமல்லாது அவரின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது. நமது பாரம்பரிய மற்றும் சமகால நடனத்தில் வலுவான அடித்தளம் கொண்ட நடிகை சான்யா நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்லாது கலாச்சார முகமாகவும் இருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பில் புதிய பரிமாணத்தைத் தொடும் சான்யா இந்திய சினிமாவின் முகமாவும் இருக்கிறார்.