Featured post

India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May 22nd

 *India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May 22nd* https://www.instagram.com/reel/...

Thursday, 21 May 2026

India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May 22nd

 *India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May 22nd*



https://www.instagram.com/reel/DYkgfmsM3oU/?igsh=NGF5eTlhcjJ2N3h3


Mumbai, May 21st, 2026: After setting theatres ablaze and emerging as the biggest blockbuster ever, Dhurandhar is now set to make its way into homes across the country. 


From bustling cities to small towns, audiences across India will be able to experience the world of Dhurandhar on JioHotstar from May 22 in its RAW and Undekha version.

Streaming in its raw and unfiltered form, the film offers viewers a deeper and more immersive look into the world of Dhurandhar, with undekha moments crafted specially for audiences on JioHotstar. Whether discovering the film for the first time or revisiting the blockbuster, viewers can expect an intense cinematic experience packed with action, drama, emotion, and larger-than-life storytelling in its truest form.


With JioHotstar taking Dhurandhar beyond theatres and into every corner of India, the film for the first time is now set to reach audiences far and wide, making one of the country’s biggest cinematic spectacles more accessible than ever before.


Presented by Jio Studios, a B62 Studios production, Dhurandhar, written, directed, and produced by Aditya Dhar, produced by Jyoti Deshpande and Lokesh Dhar, uncovers the untold saga of the origins of the unknown men.


*About JioHotstar*

JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology, and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

Wednesday, 20 May 2026

கங்கணம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

 *'கங்கணம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு* 






கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்கணம்’. அ.இசையரசன் இதன் கதை எழுதி இயக்கியுள்ளார். தேசிய நாடகப்ப பயற்சிப்பள்ளி மற்றும்  தென்னகப் பண்பாட்டு மையம் பயிற்சி பெற்ற இவர், ‘என் கண்ணே’ என்கிற குறும்படத்தை இயக்கி ஐந்து விருதுகளையும் பெற்றவர்.


இப்படத்தில் கதாநாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி சந்திரசேகர், பிராணா ஆகியோர் நடிக்கின்றனர்.. முக்கிய வேடத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். பான் இந்தியா நடிகர் சம்பத்ராம் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர  விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, KM..பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ் மற்றும் சிரஞ்சன் கே.ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, செல்வா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை தமீம் அன்சாரி அமைத்துள்ளார். ஒளிப்பதிவை G.A.சிவசுந்தர் கவனிக்க, படத்தொகுப்பை ஜோ.ஜெயபாலன் மேற்கொண்டுள்ளார். நடனத்தை தினா மற்றும் ஜாய் மதி கவனித்துள்ளனர்.

.

படம் குறித்து இயக்குநர் இசையரசன் கூறும்போது, “தன் குடும்பத்தில் வில்லனால் ஏற்பட்ட கொடூரத்திற்காக கதாநாயகனும்,தனக்கு வில்லனால் ஏற்பட்ட உச்சகட்ட அவமானத்திற்காக சரவணனும், தன் மக்களுக்கு நிகழும் அடக்குமுறைக்கும் வன்கொடுமைக்காகவும் தலித் இளைஞர்கள் ஒரு குழுவாகவும். மூன்று துருவங்களாக பழி தீர்க்க முயற்சிப்பதை சமூக சிந்தனையோடு உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.. 


இதன் படப்பிடிப்பு மேலூர், தேனி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட 56 நாட்கள் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் நாடக கலைஞர்கள் பூமி ராஜன், பந்தா பசுபதி ஆகியோரை பயன்படுத்தியுள்ளோம்.. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்றார்.


தற்போது ‘கங்கணம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர், நடிகர் சத்யராஜ், நடிகை ரோகிணி மற்றும் தஞ்சாவூர் மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் டாக்டர் S ஆசிப் அலி ஆகியோர் அடுத்தடுத்து ‘கங்கணம்’ படத்தின் போஸ்டர்களை வெளியிட இருக்கின்றனர்.

.

*நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*


*நடிகர்கள்* : கூத்துப்பட்டறை சௌந்தர், அஸ்வினி சந்திரசேகர், பிராணா, பருத்திவீரன் சரவணன், சம்பத் ராம், விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, K.M பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கே.ஜி.


*தொழில்நுட்ப கலைஞர்கள்*


இயக்குநர் : அ.இசையரசன்

ஒளிப்பதிவு ;: G.A சிவசுந்தர்

இசை : செல்வா

இசை (பின்னணி ): தமீம் அன்சாரி

பாடல்கள் : யுகபாரதி

படத்தொகுப்பு : ஜோ.ஜெயபாலன்

தயாரிப்பு மேலாளர் : ஏ.ஆர். கார்த்திகேயன்

பாடகர்கள் : தெருக்குரல் அறிவு, ஸ்ரீ நிஷா, வி.எம்.மகாலிங்கம், கயல் கோபு

நடனம் : தினா, ஜாய் மதி

கலை இயக்குனர் : கல்லை தேவா

சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா

ஒப்பனை ; இதயா ஜேம்ஸ் 

ஸ்டில்ஸ் ; ரங்காராவ் 

மக்கள் தொடர்பு : A. ஜான்

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

 *கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*



*அமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா” – ரசிகர்களை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!*


*வரவேற்பைக் குவிக்கும் “தாழ் திறவா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !!*


*கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!*


திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும்  வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.


இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.


ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.


இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.


இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.


இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.


தொழில்நுட்பக் குழு :


தயாரிப்பு - பார்மன் பிக்சர்ஸ்

இணை தயாரிப்பாளர் - விவேக் கே.ஆர்

கதை, திரைக்கதை, இயக்கம் - பரணி சேகரன்

இசை - ஓஷோ வெங்கட்

ஒளிப்பதிவு - சாலமன் போஸ் டி.எஸ் / ஜபெஸ் கே கணேஷ்

கலை இயக்கம் - K.A. ராகவ குமார்

எடிட்டிங் - மணிகண்டன் எஸ்

ஆடை வடிவமைப்பு - சுகிர்தா பி

உடை அலங்காரம் - கோபால்

மேக்கப் - வினோத் சுகுமாரன்

சண்டைக்காட்சிகள் - ரக்கர் ராம்

VFX - சோசோ ஸ்டுடியோ

VFX  - மேற்பார்வை - வெங்கடேஷ்

SFX - சிங்க் சினிமா

DI - ஃபயர்ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்

தயாரிப்பு மேற்பார்வை - சௌந்தரராஜன் / தமிழ்ச்செல்வன்

தயாரிப்பு நிர்வாகம் - முகேஷ் ஷர்மா

விளம்பர வடிவமைப்பு - நெக்ஸ்ட்ஜென் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு - யுவராஜ்

Uthara Unnikrishnan reimagines Shri Venkatesa Suprabhatham with contemporary devotional rendition*

 Uthara Unnikrishnan reimagines Shri Venkatesa Suprabhatham with contemporary devotional rendition*









*Shri Venkatesa Suprabhatham by Uthara Unnikrishnan unveiled on major platforms*


The sacred dawn hymn Shri Venkatesa Suprabhatham, one of the most revered compositions in Indian devotional tradition, was unveiled in a new contemporary rendition featuring acclaimed young vocalist Uthara Unnikrishnan. It was released on May 20 on platforms like Jio Saavn, Gaana, Apple Music, Spotify, YouTube Music, Insta Reels, Tik Tok etc. The lyric video will be released on May 23 on Rajshri Soul YouTube Channel. 


Widely popularised by the legendary M. S. Subbulakshmi, the hymn continues to hold a timeless place in spiritual practice, and this new interpretation seeks to honour its sanctity while engaging today’s listeners through a refreshed musical approach.


Originally composed in the early 15th century by Shri Prathivadhi Bhayankaram Annangaracharya, the Suprabhatham has been reimagined in this version with music composed by Prithvi Chandrashekar and produced by Sandeep Reddy of Sea Records for Rajshri Soul YouTube channel. The project aims to preserve the devotional depth of the original while presenting it through a contemporary soundscape that resonates with modern audiences.


At the heart of this rendition is Uthara Unnikrishnan, a Carnatic vocalist and playback singer known for her versatility across classical, film, and fusion genres. Trained from the age of six under Dr. Sudha Raja, and further guided by her father, renowned vocalist P. Unnikrishnan, Uthara brings a strong foundation in both Carnatic and Hindustani traditions, shaped under the mentorship of eminent gurus including Pandit Nagaraj Rao Havaldar and Kaushik Aithal.


Uthara made a remarkable entry into playback singing with the song 'Azhage Azhage' in the film 'Saivam' (2014), composed by G. V. Prakash Kumar. The song earned her the National Film Award for Best Female Playback Singer, making her the youngest recipient of the honour for a debut film song. She further gained acclaim for 'Nadhi Pogum Koozhangal' from Pisasu, composed by Arrol Corelli, reinforcing her reputation as a soulful and expressive vocalist.


Over the years, Uthara has received numerous accolades, including the Tamil Nadu State Film Award, Filmfare Award South, SIIMA Award, Vijay Award, Mirchi Music Award, and recognition from various cultural institutions such as the Shanmukhananda Sabha and Bharath Kalachar, which honoured her as “Yuva Kala Bharathi.” She has also been recognised as one of Reliance Foundation’s “Unstoppable 21” young achievers for 2025.


Through this new rendition of Shri Venkatesa Suprabhatham, Uthara Unnikrishnan continues her artistic journey of bridging tradition and contemporary expression. The project stands as a devotional offering that seeks to preserve the essence of the timeless hymn while ensuring its relevance and resonance for present and future generations.


***

உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

*உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்*








*உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது*


இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.


பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.


15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட சுப்ரபாதத்தின் புதிய பதிப்பிற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க, ராஜஸ்ரீ சோல் (Rajshri Soul) யுடியூப் சேனலுக்காக சீ ரெக்கார்ட்ஸ் (Sea Records) நிறுவனத்தின் சந்தீப் ரெட்டி தயாரித்துள்ளார். மே 23, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த பாடல், மூலப் பாடலின் பக்தி ஆழத்தைப் போற்றுவதோடு, நவீன ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற சமகால இசை வடிவத்தில் அதை வழங்கவும் முயல்கிறது.


இப்புதிய வடிவத்தின் முக்கிய அம்சாகத் திகழும் உத்தரா உன்னிகிருஷ்ணன், கர்நாடக இசையிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்களிலும், 'ஃபியூஷன்' (Fusion) இசை வடிவங்களிலும் தனது பன்முகத்தன்மைக்காக அறியப்படும் பாடகி ஆவார். ஆறு வயதிலிருந்தே டாக்டர் சுதா ராஜாவிடம் முறையாகப் பயிற்சி பெற்ற இவர், பின்னர் தனது தந்தையும் புகழ்பெற்ற பாடகருமான பி. உன்னிகிருஷ்ணனின் வழிகாட்டுதலோடு இத்துறையில் வளர்ந்தார். பண்டிட் நாகராஜ் ராவ் ஹவால்தர் மற்றும் கௌஷிக் ஐதல் போன்ற தலைசிறந்த கலைஞர்களின் வழிகாட்டுதலோடு, கர்நாடக மற்றும் இந்துஸ்தானி ஆகிய இரு இசை மரபுகளிலும் திறமை கொண்டவராக உத்தரா திகழ்கிறார்.


ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த 'சைவம்' (2014) திரைப்படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே' பாடல் மூலம், திரைப்பட பின்னணிப் பாடகியாக உத்தரா மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றார். இப்பாடலுக்காக அவருக்கு 'சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது' கிடைத்தது; இதன் மூலம், தனது முதல் திரைப்படப் பாடலுக்கே இவ்விருதைப் பெறும் மிக இளைய பாடகி என்ற பெருமையையும் அவர் பெற்றார். தொடர்ந்து அரோல் கோரல்லி இசையமைத்த 'பிசாசு' திரைப்படத்தின் 'நதி போகும் கூழாங்கற்கள்' பாடல் மூலமும் அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருது (தெற்கு), SIIMA விருது, விஜய் விருது மற்றும் மிர்ச்சி இசை விருது ஆகியவை இவரது விருது பட்டியலில் அடங்கும். மேலும், சண்முகானந்தா சபா மற்றும் பாரத் கலாச்சார் போன்ற பல்வேறு கலாச்சார அமைப்புகளும் இவரைச் கெளரவித்துள்ளன. குறிப்பாக, பாரத் கலாச்சார் இவருக்கு “யுவ கலா பாரதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 2025ம் ஆண்டிற்கான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் “Unstoppable 21” இளம் சாதனையாளர்களில் ஒருவராகவும் இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.


“ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்” இந்தப் புதிய வடிவத்தின் மூலம், மரபு இசைக்கும் சமகால இசைக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழும் தனது கலைப் பயணத்தை உத்தரா உன்னிகிருஷ்ணன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். காலத்தால் அழியாத இப்பாடலின் சாரத்தை இம்முயற்சி அப்படியே பாதுகாப்பதோடு, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இது பொருத்தமானதாகவும் நெஞ்சில் ஆழப் பதியக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பக்திப் படைப்பாக விளங்குகிறது.

Mast Log, Messy Situations & Total Chaos RajKumar Hirani’s ‘Pritam and Pedro’ Teaser Promises Fun

 *Mast Log, Messy Situations & Total Chaos RajKumar Hirani’s ‘Pritam and Pedro’ Teaser Promises Fun* 



*Pritam and Pedro to feature Vir Hirani, Arshad Warsi, Vikrant Massey, Boman Irani and Mona Singh in pivotal roles*

Link Asset: https://www.instagram.com/reel/DYjWa7qM8M2/?igsh=ejhsbnd5NDBhZ3M3


*Mumbai, May 20th 2026:* What happens when Goa’s chaos collides with cybercrime, confusion and two completely mismatched men stuck in the middle of it all? The teaser of Pritam and Pedro offers audiences a fun first glimpse into a quirky world where data meets danda, chaos meets confusion, and two completely mismatched men seem to be stuck in the middle of it all. Introducing Vir Hirani as Pritam and Arshad Warsi as Pedro, the teaser hints at a wildly entertaining dynamic between the two, with Vikrant Massey’s Martin adding to the intrigue, alongside Boman Irani and Mona Singh, the teaser offers glimpses into a world packed with humour, madness, mystery and unmistakable Hirani-style warmth. 


Directed by acclaimed filmmaker Avinash Arun and marking Rajkumar Hirani’s much-awaited streaming debut, Pritam and Pedro promises humour, mystery and a whole lot of confusion packed into one wildly unpredictable ride. 


*Catch the show from 3rd July, only on JioHotstar.*

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

 *கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*




*அமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா” – ரசிகர்களை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!*


*வரவேற்பைக் குவிக்கும் “தாழ் திறவா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !!*


*கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!*


திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும்  வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.


இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.


ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.


இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.


இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.


இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.


தொழில்நுட்பக் குழு :


தயாரிப்பு - பார்மன் பிக்சர்ஸ்

இணை தயாரிப்பாளர் - விவேக் கே.ஆர்

கதை, திரைக்கதை, இயக்கம் - பரணி சேகரன்

இசை - ஓஷோ வெங்கட்

ஒளிப்பதிவு - சாலமன் போஸ் டி.எஸ் / ஜபெஸ் கே கணேஷ்

கலை இயக்கம் - K.A. ராகவ குமார்

எடிட்டிங் - மணிகண்டன் எஸ்

ஆடை வடிவமைப்பு - சுகிர்தா பி

உடை அலங்காரம் - கோபால்

மேக்கப் - வினோத் சுகுமாரன்

சண்டைக்காட்சிகள் - ரக்கர் ராம்

VFX - சோசோ ஸ்டுடியோ

VFX  - மேற்பார்வை - வெங்கடேஷ்

SFX - சிங்க் சினிமா

DI - ஃபயர்ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்

தயாரிப்பு மேற்பார்வை - சௌந்தரராஜன் / தமிழ்ச்செல்வன்

தயாரிப்பு நிர்வாகம் - முகேஷ் ஷர்மா

விளம்பர வடிவமைப்பு - நெக்ஸ்ட்ஜென் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு - யுவராஜ்

Tuesday, 19 May 2026

Experience Larger-Than-Life Spectacle- Epic Trailer Of Mega Power Star Ram Charan

 Experience Larger-Than-Life Spectacle- Epic Trailer Of Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi Unveiled*



Mega Power Star Ram Charan’s highly anticipated Pan-India flick Peddi is already roaring ahead even before its release, with every promo becoming a nationwide talking point. Director Buchi Babu Sana brings a raw, rooted energy to this rural action–sports saga, while the striking first-look posters, impactful character glimpses, and stirring songs have only amplified the hype. Produced ambitiously by Venkata Satish Kilaru under Vriddhi Cinemas, in collaboration with Mythri Movie Makers and Sukumar Writings, the film’s theatrical trailer was unveiled just a while ago at an event in Mumbai.


Rather than opting for a typical hero introduction, Peddi trailer unfolds a sweeping rural tapestry dominated by sweat, struggle, and an undying love for sport. The protagonist, Peddi, is a multi-talented athlete who earns his livelihood through sheer physical might. Whether it’s cricket, wrestling, or sprinting, his life is defined by the grit and passion he pours into every discipline. Adored by the children and respected by the villagers, his rapid rise draws envy, especially from a domineering landlord whose pride refuses to share the spotlight.


Director Buchi Babu Sana shapes this larger-than-life universe with remarkable clarity. The trailer pulses like a heartbeat- gentle in its silences, thunderous in its bursts of action. Every frame is crafted with precision, immersing viewers in a world that feels authentic, expansive, and rich with atmosphere. Instead of relying on familiar sports-drama patterns, Peddi injects its sporting sequences with raw intensity and life-or-death stakes. Massive clashes on railway platforms, gravity-defying stunts, and adrenaline-fueled fights hint at a world where sport and survival are inseparable. One standout stretch is the seamless fusion of cricket and wrestling, an audacious, high-impact sequence that instantly grabs attention.


Ram Charan appears in a fiercely athletic avatar, showcasing exceptional physical conditioning that grounds the film’s demanding sports segments. The trailer fluidly shifts between sporting worlds- from Charan swinging a rugged cricket bat under blazing floodlights to engaging in visceral mud-wrestling bouts. His transformation into Peddi is both chiseled and emotionally layered.


Janhvi Kapoor brings elegant warmth to her role, blending traditional charm with expressive nuance. The trailer further teases a powerful supporting cast- Shiva Rajkumar, Jagapathi Babu, Divyenndu, and Boman Irani, each adding weight and intrigue to the drama.


Technically, Peddi looks poised to redefine Indian cinematic spectacle. Production designer Avinash Kolla creates rustic landscapes filled with texture and authenticity. The visuals, captured by celebrated cinematographer R Rathnavelu, throb with intensity- rich tones, sweeping frames, and dynamic movement in every shot. Elevating the narrative further is a stirring score by AR Rahman, amplifying both emotional depth and action-packed moments.


The film’s production values are of international standards. Every frame feels sculpted for the big screen, promising a truly immersive theatrical experience.


This is a trailer cut like no other in recent times, and it sets the bar sky-high. The excitement is now through the roof as we count down the final couple of weeks before the film’s release.


*Cast* : Mega Power Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma, Boman Irani


*Technical Crew:*

Writer, Director: Buchi Babu Sana

Presents: Mythri Movie Makers, Sukumar Writings

Banner: Vriddhi Cinemas

Producer: Venkata Satish Kilaru

Co producer: Ishan Saksena

Music Director: AR Rahman

DOP: R Rathnavelu

Production Design: Avinash Kolla

Editor: Navin Nooli

Executive Producer: V. Y. Praveen Kumar

Marketing: First Show

PRO: Yuvraaj


https://www.youtube.com/watch?v=qu3tPDCMNeU

ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது..

 *ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது...*



மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு!


மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனை மிக்க உணர்வுகளுடன் உருவாக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள், மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்க டிரெய்லர், மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.


ஹீரோ அறிமுகத்தை தவிர்த்து, “பெத்தி” டிரெய்லர் ஒரு விரிவான கிராமத்து உலகத்தை முன்வைக்கிறது. தீரா உழைப்பு, போராட்டம் மற்றும் விளையாட்டின் மீதான தீராத காதல் ஆகியவற்றால் நிரம்பிய வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், “பெத்தி” என்ற கதாபாத்திரம் பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக வருகிறார். கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் என எந்த விளையாட்டாக இருந்தாலும், தனது உடல் வலிமை மற்றும் கடின உழைப்பால் வாழ்வாதாரம் ஈட்டும் மனிதராக அவர் காட்சியளிக்கிறார். குழந்தைகளின் அன்பையும், கிராம மக்களின் மரியாதையையும் பெறும் அவரது வளர்ச்சி, குறிப்பாக ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஜமீன்தாரின் பொறாமையை தூண்டுகிறது.


இயக்குநர் புச்சி பாபு சனா உருவாக்கிய இந்த பிரம்மாண்ட உலகம் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் தெரிகிறது. டிரெய்லர் முழுவதும் இதயத் துடிப்பைப் போல தடதடவென ஓடுகிறது – அமைதியான தருணங்களில் மென்மையாகவும், ஆக்ஷன் காட்சிகளில் இடியென வெடிப்பதுபோலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் உண்மையான மற்றும் பரந்த உலகத்திற்குள் இழுக்கப்படுகிறார்கள். வழக்கமான விளையாட்டு படங்களின் பாணியை பின்பற்றாமல், “பெத்தி” தனது விளையாட்டு காட்சிகளில் பெரும் தீவிரத்தையும் பரபரப்பையும் உருவாக்குகிறது. ரயில் நிலைய மேடைகளில் நடக்கும் மாபெரும் மோதல்கள், இயற்கையை மீறும் அளவிலான ஸ்டண்ட்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் ஆகியவை விளையாட்டும் உயிர் பிழைப்பும் ஒன்றாக கலந்த உலகத்தை சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக கிரிக்கெட் மற்றும் மல்யுத்தத்தை இணைத்து வடிவமைக்கப்பட்ட ஒரு அசாதாரண காட்சி உடனடியாக கவனத்தை ஈர்க்கிறது.


ராம் சரண், மிகவும் கடினமான உடற்திறன் பயிற்சியுடன், ஒரு வலிமையான விளையாட்டு வீரராக காட்சியளிக்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்க வெளிச்சங்களின் கீழ் பேட்டை சுழற்றும் தருணங்களிலிருந்து, சேறு கலந்த  மல்யுத்தப் போட்டிகளில் மிரட்டலாக மோதும் காட்சிகள் வரை, “பெத்தி”யாக அவர் முழுமையாக மாறியிருப்பது தெரிகிறது. உடல் மொழியிலும், உணர்ச்சிகளிலும் ஆழமான மாற்றத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.


ஜான்வி கபூர் தனது கதாபாத்திரத்தில் அழகான நளினத்தையும், பாரம்பரிய கவர்ச்சியையும் கொண்டு வந்துள்ளார். மேலும் சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி உள்ளிட்ட பலரும் கதைக்கு வலிமை சேர்க்கும் வகையில் தோன்றுகின்றனர்.


தொழில்நுட்ப ரீதியாக “பெத்தி” இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை மறுபரிசீலனை செய்யும் படமாகத் தெரிகிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா உருவாக்கிய கிராமப்புற உலகம் இயல்பும் நுணுக்கமும் நிறைந்ததாக உள்ளது. ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு காட்சிகளை வண்ணமயமான நிறங்களுடனும், பரந்த ஃப்ரேம்களுடனும், உயிரோட்டமிக்க கேமரா இயக்கத்துடனும் பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை, உணர்ச்சிகளையும் ஆக்ஷன் தருணங்களையும் மேலும் உயர்த்துகிறது.


படத்தின் தயாரிப்பு தரம் சர்வதேச அளவுக்கு இணையானதாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் பெரிய திரைக்காக செதுக்கப்பட்டதுபோல் அமைந்துள்ளது. சமீப காலங்களில் வந்த எந்த டிரெய்லரையும் விட மாறுபட்டதாக மிக அற்புதமானதாக  இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. இதனால், இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது


*நடிகர்கள் :*

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா


*தொழில்நுட்பக் குழு :*

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்

https://www.youtube.com/watch?v=qu3tPDCMNeU

When Iconic Storytelling Meets India’s Biggest Streaming Destination: JioHotstar & Rajkumar Hirani Present ‘Pritam and Pedro’, premiering July

When Iconic Storytelling Meets India’s Biggest Streaming Destination: JioHotstar & Rajkumar Hirani Present ‘Pritam and Pedro’, premiering July 3



Sometimes, the biggest stories begin with the most unexpected clues. An abandoned ATM on a beach, two unlikely men standing beside it, and a mystery strange enough to instantly spark curiosity. Pritam and Pedro marks Rajkumar Hirani’s much-anticipated streaming debut, bringing his signature blend of warmth, emotion and human storytelling into the long-format space for the very first time. The collaboration also signals an exciting coming together of cinematic storytelling and large-scale streaming entertainment, promising audiences a fresh and immersive new experience.


Pritam and Pedro, directed by acclaimed filmmaker Avinash Arun, offers just enough to draw audiences into its quirky, rooted and unpredictable world, while keeping the larger story completely under wraps.


Alok Jain, Head – Hindi & English Entertainment Business (Streaming, TV & Studios), JioStar added: “At JioHotstar, we believe some of the most compelling stories are the ones that feel deeply rooted yet universally entertaining. Stories filled with warmth, humour, emotion and human connection have always had a special place in audiences’ hearts, and there are few storytellers who have shaped that space as distinctively and consistently as Rajkumar Hirani. We are incredibly excited to partner with him for Pritam and Pedro as he makes his streaming debut, bringing his uniquely loved storytelling voice to long-format entertainment in a fresh and immersive way for audiences across the country.”


Speaking about the project, Rajkumar Hirani said: “ I’ve always enjoyed stories where very different people are forced to come together and navigate life in unexpected ways. Pritam and Pedro have a lot of humour, warmth and madness in that sense. The long-format space gave us the opportunity to spend more time with the characters and really explore their journey. It’s been an exciting experience, and I’m happy to partner with JioHotstar for it.”


Link: https://www.instagram.com/p/DYgtS0TskCJ/?igsh=MXAzcWdkaXpldzF3OQ%3D%3D


Get ready to step into the unknown with Pritam and Pedro, coming on 3rd July only on JioHotstar.

A Dream Symphony Begins: Karthik Subbaraj Joins Hands with Maestro Ilaiyaraaja for His 10th Film

 *A Dream Symphony Begins: Karthik Subbaraj Joins Hands with Maestro Ilaiyaraaja for His 10th Film*

_*The Iconic Filmmaker’s milestone 10th film marks Maestro Ilaiyaraaja’s 1540th musical journey, promising an unforgettable cinematic experience*_


Acclaimed filmmaker Karthik Subbaraj, known for consistently pushing the boundaries of mainstream storytelling with films such as Pizza, Jigarthanda, Iraivi, Petta, Mahaan, Jigarthanda DoubleX and Retro, has officially wrapped the shoot of his much-awaited 10th directorial venture, which commenced in November last year. The film, bankrolled by Academy Award-winning Sikhya Entertainment, headed by Guneet Monga Kapoor and Achin Jain, in association with Jio Studios, marks a prestigious first-time collaboration between the celebrated filmmaker and the globally recognised production banner. With the film’s shooting wrapped up, the makers have delightedly unveiled an exciting news about Isaignani Ilaiyaraaja getting onboard as music composer. 





Making the announcement even more special is the coming together of Karthik Subbaraj and Maestro Isaignani Ilaiyaraaja, who comes on board as the composer for the film, marking the 1540th project in the legendary musician’s illustrious career. The collaboration between a filmmaker celebrated for his unique cinematic voice and one of India’s greatest musical icons has already sparked immense excitement among cinema lovers.

Speaking about the project,  Maestro Ilaiyaraaja said: “Cinema and music have always shared a deep emotional connection for me. What matters most is the honesty of the story and the people telling it. I’m happy to collaborate with Karthik Subbaraj, whose passion for cinema is very evident in his work for this film. Every film brings its own feeling and its own music. And during the composition sessions for the background scores I felt the audio should be released as an album itself as it has shaped up so well that am confident my fans will enjoy it. I hope this journey will create something that reaches people’s hearts.”

Speaking about the collaboration, filmmaker Karthik Subbaraj said: “People often say you don’t choose art, art chooses you, and my journey has truly felt like a testament to that. Working with the legendary Ilaiyaraaja sir has been a lifelong dream, and to finally have him compose music for my 10th film feels surreal and deeply special. As someone who has admired and celebrated his music for years, this collaboration means a great deal to me personally and creatively. I’m also excited to be joining hands with Sikhya Entertainment and Jio Studios on this film, alongside Guneet Monga Kapoor and Achin Jain. I can’t wait for audiences to experience what we’re creating together.”



Jyoti Deshpande, President of Jio Studios, added: “We’re excited to begin this first collaboration with Sikhya Entertainment alongside Karthik Subbaraj and the legendary Ilaiyaraaja on a film that brings together such exceptional creative talent. The project represents a powerful coming together of storytelling and music, and we’re thrilled to bring this cinematic experience to audiences on the big screen.”



Speaking about the project, producer Guneet Monga Kapoor, Sikhya Entertainment said, “This one feels deeply personal to all of us at Sikhya. Karthik Subbaraj is one of the most distinctive voices in Indian cinema today, and to see him finally make a film with Ilaiyaraaja sir, whose music has shaped generations of storytellers and cinema lovers alike, is genuinely exciting. And doing this alongside Jio Studios, our first collaboration together, makes it even more so. We back creative partnerships that feel inevitable in hindsight. This one does.”



Speaking about the collaboration, producer Achin Jain, Sikhya Entertainment said: “Karthik Subbaraj has such a distinct cinematic voice, and Ilaiyaraaja sir’s music continues to remain timeless across eras and languages. For Sikhya, this film represents the kind of ambitious, rooted storytelling we deeply believe in. Our first collaboration with Jio Studios makes it even more exciting. We’re incredibly proud to be part of a film that brings together such iconic creative forces, and we look forward to audiences experiencing this journey on the big screen.”

இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

 *இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!*



இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக  உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை தரவுள்ளது.


‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றி திரைப்படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இசைஞானி இளையராஜா பகிர்ந்து கொண்டதாவது, "எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவ. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்”


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டதாவது, "கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்".


ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட்  ஜோதி தேஷ்பாண்டே கூறியதாவது, "கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா போன்ற கலைஞர்களுடனும், சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனும் இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படத்தை, பெரிய திரையில் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்" என்றார். 


சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர், "இந்தப் படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பல தலைமுறைகளை இசையால் கவர்ந்த இளையராஜாவுடன் அவர் இணைந்திருப்பது உற்சாகமான விஷயம். ஜியோ ஸ்டுடியோஸூடன் நாங்கள் முதன்முறையாக இணைந்திருக்கிறோம். நிச்சயம் சிறந்த படமாக இது அமையும்" என்றார். 


சிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அசின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, "கார்த்திக் சுப்புராஜ் தனித்துவமான படங்களை கொடுப்பவர். இளையராஜா சாரின் இசை காலங்களையும், மொழிகளையும் தாண்டி என்றும் நிலைத்திருப்பது. ஜியோ ஸ்டுடியோஸுடன் நாங்கள் முதல் முறையாக இணைந்திருக்கிறோம்.  இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணையும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 *'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*






ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.


'பிளாஸ்ட்' படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.


இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், ''இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.


இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர்- பட தொகுப்பாளர் -சண்டை பயிற்சி இயக்குநர் - என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.


'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், ''தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.


புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.


ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் 'ஜூம்' செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை 'ஜூம்' செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


'கே ஜி எஃப்' படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிளாஸ்ட்' படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,'' என்றார்.


நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், '' என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.


நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


நடிகை அபிராமி பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.


ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.


பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.


நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


நான் சினிமாவில் காமெடி- ஹாரர்- ரொமாண்டிக் -என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌


இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.


இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் -ஆக்ஷன்- கேமரா- என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,'' என்றார்.


கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.


எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌


இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த 'பிளாஸ்ட்' திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்


இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர்   சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.


இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர். 


இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.


இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றார்.


நடிகர் அர்ஜுன் பேசுகையில், ''வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.


'பிளாஸ்ட்' திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.


படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.


நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,'' என்றார்.


***

இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம்

 *’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!*














நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் 'ஹபீபி' திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக 'ஹபீபி' இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு 'ஆயிரத்தில் ஒருவன்' படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் ". 


நடிகர் சமுத்திரக்கனி, " இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்".


இயக்குநர் மகிழ் திருமேனி, "'ஹபீபி' திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் 'ஹபீபி'. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


இயக்குநர் கணேஷ் கே பாபு, " முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் 'ஹபீபி' திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்". 


இயக்குநர் ஹரிஹரன் ராம், "நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் தினகரன் சிவலிங்கம், "மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது". 


இயக்குநர் அவிநாஷ், " இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்". 


இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, "தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்". 


தயாரிப்பாளர் தேனப்பன், "இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்". 


இயக்குநர் சேரன், "இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்". 


இயக்குநர் ஜகாரியா முகமது, "நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் சுசீந்திரன், " எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. 'ஹபீபி' படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது.  வாழ்த்துக்கள்". 


இயக்குநர் லீனா மணிமேகலை, "மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்".


இயக்குநர் வெற்றிமாறன், "'ஹபீபி' எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்".


நடிகர் நாசர், "'ஹபீபி' படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்".


இயக்குநர் துரை, "இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.  படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


தவெக எம்எல்ஏ முஸ்தபா, "இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், 'ஹபீபி' நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்".


பாடகர் சத்யன், "இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் பாண்டிராஜ், "நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்". 


இயக்குநர் அமீர், " பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும்.  அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். 'வாழை' திரைப்படத்திற்கு அடுது நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ". 


இயக்குநர் மிஷ்கின், " இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! 'ஹபீபி' ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்".


இயக்குநர் கஸ்தூரி ராஜா, "மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்".


இயக்குநர் ரஞ்சித், "நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்". 


நடிகர் ஈஷா, " விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை".


நடிகை மாளவிகா மனோஜ், "தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


இசையமைப்பாளர் சாம் சி எஸ், "வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி.  படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது"


இயக்குநர் ராம், "பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்"


இயக்குநர் மீரா கதிரவன், "படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் 'ஹபீபி'. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்".