Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Saturday 30 March 2024

The future of underprivileged students' education hangs in the balance

 The future of underprivileged students' education hangs in the balance:



Established in 1999, Rice MMS (Rural Institute of Community Education - Mathakondapalli Model School) in Hosur, Krishnagiri district, embarked on a remarkable journey with a generous grant of 90 crores from Teres des Homes (TDH - NL), a renowned Non-governmental organization in the Netherlands. Since then, it has been dedicated to offering top-notch education to numerous underprivileged students, empowering them with a world-class learning experience.


In 2014, a troubling turn of events unfolded at the school when Meru Miller took on the role of board secretary. Unfortunately, instead of upholding the school's values, Meru Miller engaged in a series of administrative irregularities. Shockingly, over five hundred children, who were receiving free education, were expelled by the school administration. Adding to the dismay, Meru Miller and Oliver Salomon unlawfully sold the school's property, valued at a staggering sixteen crores, and were involved in corrupt practices.


Journalist Mr. Sivaraman vehemently criticized this issue and lodged a formal complaint with IAS officer Mr. Dinesh Ponraj Oliver, urging for the removal of Meru Miller. He also insisted on the appointment of a new secretary in order to safeguard the educational rights of numerous underprivileged students. It is anticipated that the Tamil Nadu government will heed his plea and respond accordingly.

கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி

 கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி:



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் ரைஸ் எம்எம்எஸ் (Rural Institute of Community Education - Mathakondapalli Model School) பள்ளியானது 1999-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற தன்னார்வல நிறுவனமான தெரஸ் டெஸ் ஹோம்ஸ் (TDH - NL) அளித்த 90 கோடி நிதியின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வந்திருக்கின்றது. 


ஆனால், 2014-ஆம் ஆண்டில் பள்ளியின் குழு செயலராக இணைந்த மேரு மில்லர் என்பவரால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அப்பள்ளியில் ஏற்பட்டிருக்கின்றது. அங்கு இலவச கல்வி பயின்றுவந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வெளியேற்றி இருக்கின்றது. மேலும், பதினாறு கோடி மதிப்பிலான பள்ளியின் சொத்தை ஆலிவர் சாலமன் என்வருடன் இணைந்து மேரு மில்லர் சட்ட விரோதமாக விற்று ஊழல் செய்துள்ளார். 


இதனை வன்மையாக கண்டித்து பத்திரிக்கையாளர் திரு.சிவராமன் அவர்கள் மேரு மில்லரை பணி நீக்கம் செய்ய வேண்டி ஐஏஎஸ் அதிகாரி திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், புதிய செயலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், கேள்விக்குறியாக்கப்பட்ட பல ஏழை மாணவர்களின் கல்விநலன் காக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Thursday 28 March 2024

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.*

*முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா*











தென்னிந்திய திரையுலகில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருப்பவர் நடிகை சோனா. இவர், ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஸ்மோக்’ என்கிற வெப்சீரிஸ் மூலமாக இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.  அவருடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் பல சீசன்களாக வெளியாக இருக்கிறது.  ‘ஸ்மோக் சீசன் 1’ படப்பிடிப்பு நிறைவுறும் தருவாயில் இருக்கும் நிலையில் இதன் இயக்குனரான சோனா, இந்த வெப்சீரிஸில் தன்னுடைய சொந்த கதாபாத்திரத்தில் தானே நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.


சோனாவின் வெவ்வேறு வயதிலான காலகட்டங்களில் அவரது கதாபாத்திரமாக நடிக்கும் ஆதினி (5 வயதில்), ஜனனி (14 வயதில்) மற்றும் ஆஸ்தா அபய் (30 வயதில்) ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. யுனிக் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்புடன் சேர்ந்து வெளியான கதாபாத்திர போஸ்டரானது இந்த வெப்சீரிஸில் சோனா அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.   


இந்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ள நடிகை சோனா கூறும்போது, “புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், என்னவென்றே தெரியாத இடங்களுக்கோ அல்லது சூழல்களுக்கோ வாழ்க்கை எங்கே என்னை அழைத்து செல்லும் நிலையில் சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இதை இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும்  இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள்” என்கிறார், சோனா.


வரும் சம்மர் சீசனில் ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும்  இந்த ‘ஸ்மோக் வெப்சீரிஸை யுனிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

Actress Sona plays another lead role in her

 *Actress Sona plays another lead role in her biographical web series ‘SMOKE’* 











Actress Sona, a prominent icon in the South Indian film industry, is venturing into the realm of directing with the web series ‘SMOKE’, set to be available for streaming on the Shortflix OTT platform. Drawing inspiration from her own life experiences, the series is planned to unfold across several seasons. As the filming for ‘SMOKE SEASON 1’ nears completion, Sona, now wearing the hat of a director, has announced that she will be portraying her own character in the series.



The character posters of the actors portraying Sona at different ages have been revealed by the makers, with Adhini as the 5-year-old, Janani as the 14-year-old, and Aastha Abhay as the 30-year-old version, receiving an overwhelming response. The latest announcement from Uniq Productions with the new character poster confirms that actress Sona will embody her character in this web series. 


Actress Sona, sharing the news, says, "In a life filled with smokey dreams, to unknown places or situations where life took me, not knowing, what to exactly be. 

I direct and was a part of it all, as I tell my story, to questions asked, or questions forgotten, truth hidden or truth untold. Come into my life and visit me. 

Sona in and as Sona.”


Uniq Productions is the creator of Smoke, which will be available for streaming on the Shorflix OTT platform during the upcoming summer season.

வல்லவன் வகுத்ததடா” படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா

 “வல்லவன் வகுத்ததடா” படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டனர்  !! 



எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வல்லவன் வகுத்ததடா” திரைப்பட  டிரெய்லர் !!


Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்க, ஹைப்பர்லிங்க் திரைக்கதையில்  க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் “வல்லவன் வகுத்ததடா” திரைப்படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர். 


முன்னதாக வெளியான டீசர் படத்தின் களத்தை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக அமைந்துள்ளது. 


5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங்க் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.


இந்த டிரெய்லர்  5 கதாபாத்திரங்களின் பின்னணியை காட்டுவதுடன், பணத்திற்காக அவர்களின் உணர்ச்சிகரமான போராட்டத்தை பரபரப்பாகக் காட்டுகிறது. படபடக்கும் எடிட்டிங்  கட் , கதாபாத்திரங்களின் தவிப்பு, சிந்தனையைத் தூண்டும் வசனங்கள் என டிரெய்லர், இப்படம் மிக வித்தியாசமான களத்தில் ஒரு அருமையான திரை அனுபவம் தரும் என்பதை உறுதி செய்கிறது. 


பணம் தான் உலகின் மனித வாழ்வை தீர்மானிக்கிறது. பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையில் நடக்கும் போராட்த்தை பரபர திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம்.


இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்‌ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


Focus Studios சார்பில் விநாயக் துரை இப்படத்தைத் தயாரித்துள்ளதுடன், இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். 


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில்,  பட வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 


தொழில் நுட்ப குழு 

தயாரிப்பு நிறுவனம் : Focus Studios தயாரிப்பாளர்: விநாயக் துரை 

இயக்குநர்: விநாயக் துரை 

ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து 

இசை: சகிஷ்னா சேவியர் 

எடிட்டர்: அஜய் 

சண்டைக்காட்சி: மகேஷ் மேத்யூ 

மக்கள் தொடர்பு : சதீஷ்-சிவா (AIM)

 https://youtu.be/KjXFrKTH34I

#vallavanvaguthathada 

#focusStudiosproduction

புரட்சி இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ஆலகாலம்

 புரட்சி இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ஆலகாலம் திரைப்பட ட்ரெய்லர்!






குடும்பங்கள் கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கும் 'ஆலகாலம்' திரைப்படத்தின் ட்ரெய்லரை புரட்சி இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் வெளியிட்டார்.


ட்ரெய்லரைப் பார்த்த அவர் அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில்  நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார்.


'ஆலகாலம்' என்கிற திரைப்படம் உருக வைக்கும்  ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.


'ஆலகாலம்'என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது,  இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா  பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்,

இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையைச் சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம்.


இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா ?

தாயின் லட்சியம்,இளைஞனின் முயற்சி,காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே 'ஆலகாலம்'திரைப்படம் சொல்லும் கதை.


இப்படத்தை ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குநர்களாகி லோகேஷ் கனகராஜ், உறியடி விஜயகுமார், கார்த்திக் நரேன் போன்ற இயக்குநர்கள் முத்திரை பதித்துள்ளனர்.அவர்களைப் போன்று இப்படத்தை  இயக்கி உள்ள ஜெயகிருஷ்ணாவும் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது ரசனையின் மூலமும் தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார்.


காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் இப்படத்தில் அம்மாவாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.


 நாயகனாக,ஜெயகிருஷ்ணா, நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர்மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ளது.

தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.


ஆக்சன் செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். 


படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ள  தணிக்கைத் துறை அதிகாரிகள்,இந்தப் படம் காலத்துக்கு ஏற்ற கதையைச் சொல்கிறது என்றும் கணவன், மனைவி, அம்மா ,குடும்பம் என்பதையும் தாண்டி நல்ல சமூக நோக்கத்தோடு  உருவாகியிருக்கும் ஒரு படமாக இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள்.


தொழில் நுட்பக்குழுவைப் பொறுத்தவரை,

இயக்கம் -ஜெயகிருஷ்ணா

இசை - என்.ஆர்.ரகுநந்தன்,

ஒளிப்பதிவு -கா. சத்தியராஜ்,

எடிட்டர் -மு. காசிவிஸ்வநாதன்,

கலைஇயக்கம் -தேவேந்திரன்

நடனஇயக்குநர் -பாபா பாஸ்கர், அசார்.

ஸ்டண்ட். -ராம்குமார்,

டிசைன்ஸ் -டிசைன்பாய்ண்ட் என்று தொழில்நுட்பக் கூட்டணி உருவாகி உள்ளது.

தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.


நிர்வாகத் தயாரிப்பு.  மணி தாமோதரன்,

மக்கள் தொடர்பு -சக்திசரவணன்


ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ஆலகாலம் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம்  சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.


Trailer Link


https://youtu.be/l0ftyA3FrW0?si=jUdAGNyx6dwlJdRS

50Lac worth Bungalow Set Work Erected for a sizzling dance number featuring Vimal

 *50Lac worth Bungalow Set Work Erected for a sizzling dance number featuring Vimal and Mumbai’s top dancer Sneha Gupta for ‘Desinguraja 2’*


Filmmaker Ezhil has been discovered as a great talent by Super Good Films, marking the beginning of his directorial career with ‘Thulladha Mananum Thullum’. He has created a number of fantastic entertainers and is now focused on his upcoming project ‘Desinguraja 2’.







Infinity Creations P. Ravichandran is producing this film, with Vimal playing the lead role and Pujitha Ponnada as the female lead. Jana has an important role in the movie. The star-studded cast also includes Ravi Mariya, Robo Shankar, Motta Rajendran, Pugazh from Vijay TV, Lollu Sabha Swaminathan, Singam Puli, Chaams, Vaiyapuri, Madurai Muthu, Madhumitha, Vijay TV Vinod, and many others.


Director Ezhil and Music Director Vidyasagar are reuniting after their successful collaboration in ‘Poovellam Un Vasam’.


The first phase of filming has been completed, and the crew has begun shooting the second schedule from March 20, featuring a lively song with a local touch titled ‘Dolly Dong Aana Danger-u… Rombha Danger-u’. The song, penned by Super Subbu, is sung by Jithin Raj and M.M. Manasi.


A lavish bungalow set worth Rs. 50Lac has been constructed by art director Sivashankar for this song along East Coast Road in Chennai. Choreographed by Dinesh, Vimal and renowned Bollywood dancer Sneha Gupta have teamed up for an exciting dance sequence in the song.


The song is set in a scenario where Vimal, playing a police officer, is under stress due to various issues, and he decides to relax and unwind by dancing to this song.


Vimal is set to surprise the audience with his powerful dance moves in this song, putting in a lot of effort to learn new techniques from choreographer Dinesh.


The entire team is thrilled to see his performance and is confident that his dance will be a major talking point and well-received after the film's release.


Currently, with the song being shot, the team will continue to film this schedule till the end of this month.  The production house is planning to release the film as ultimate summer treat for the audiences. 



Technical Crew 


Music: Vidyasagar 

Co-Producer: R. Balakumar 

Cinematographer: Selva R 

Editing: Anand Linga Kumar 

Art: Sivasankar 

Stunt: Fire Karthik 

Choreography: Dinesh 

Lyrics; Yugabharathi, Vivek, Subramaniam 

P.R.O: Johnson

50 லட்சம் செலவில் ‘பங்களா’ செட்

 *50 லட்சம் செலவில் ‘பங்களா’ செட்!*

*எஸ்.எழிலின் 'தேசிங்கு ராஜா 2'வுக்காக மும்பை நடன அழகியுடன் விமல் அதிரடி குத்தாட்டம்*






சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் கண்டெடுத்த பல ரத்தினங்களில் ஒருவர் தான் இயக்குநர் எழில். 

'துள்ளாத மனமும் துள்ளும்' படம்  மூலம் இயக்குநராக அறிமுகமான எழில், 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்.


இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார் பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனாவும் இரண்டாவது கதாநாயகியாக ஹர்ஷிதாவும் நடிக்கின்றனர்.

மேலும் ரவிமரியா, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், விஜய் டிவி புகழ், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, சாம்ஸ், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


'பூவெல்லாம் உன் வாசம்' படத்தை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகர் மீண்டும் 'தேசிங்கு ராஜா 2'வுக்காக்க இயக்குநர் எஸ்.எழிலுடன் இணைந்துள்ளார்.



முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.  இப்படத்தில், கவிஞர் சூப்பர் சுப்பு பாடல் வரிகளில், ஜித்தின் ராஜ், எம்.எம்.மானசி குரலில் உருவான "டோலி டாங்க் ஆனா டேஞ்சரு.. ரொம்ப டேஞ்சரு.." என்கிற பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.


இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஐம்பது லட்சம் செலவில் கலை இயக்குனர் சிவசங்கர் பிரமாண்ட பங்களா செட் ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளார். நடன இயக்குனர் தினேஷ் நடன வடிவமைப்பில் உருவாகி வரும் இந்த பாடலில் விமல் மற்றும்  பிரபல பாலிவுட் டான்சர் சினேகா குப்தா இருவரும் இணைந்து அதிரிபுதிரியான குத்தாட்டம் போட்டுள்ளனர்.


காட்சிப்படி, போலீஸ் அதிகாரியான விமல் பல பிரச்சனைகளால் டென்ஷனாக இருக்கிறார். அதனால் அந்த சூழலில் இருந்து அவர் சற்று ரிலாக்ஸ் ஆகும் விதமாக இப்படி ஒரு பாடல் படத்தில் இடம் பெறுகிறது. 


இதுவரை விமல் நடித்த படங்களில் அவர் ஆடிய நடனங்களில் இருந்து இதுபோல் இப்படி அவர் ஆடியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடனத்தில் மிரட்டி இருக்கிறார் விமல். இதற்காக சில நுணுக்கமான நடன அசைவுகளையும் தினேஷ் மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொண்டு சினேகா குப்தாவுக்கு ஈடு கொடுக்கும் விதமாக அதிரடி நடனம் ஆடி அசத்தியுள்ளார்,விமல்.


படப்பிடிப்பில் இருந்த அனைவரும் விமலின் நடனத்தை பாராட்டினார்கள். படம் வெளியான பிறகு விமலின் நடனம் குறிப்பிடும் வகையில் பேசப்படும் என படக்குழுவினர் இப்போதே கூறுகின்றனர்.


தற்போது இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் வரை  தொடர்ந்து இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. 


காமடி கலாட்டாவாக சம்மர் வெளியீடு!


இசை:  வித்யாசாகர்

இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார் 

ஒளிப்பதிவு: செல்வா.ஆர்

எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்

ஆர்ட்: சிவசங்கர்

வசனம்-முருகன்

ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக் ( Fire Karthik )

நடனம் : தினேஷ்

பாடல்கள்:யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்

பி.ஆர்.ஓ: ஜான்சன்

Wednesday 27 March 2024

என் நண்பர்களிடம் பொதுவாக தியானம் செய்யலாம் என சொன்னால், என்ன

 என் நண்பர்களிடம் பொதுவாக தியானம் செய்யலாம் என சொன்னால், என்ன சொல்றீங்க? அதெல்லாம் வயசான காலத்தில் செய்வது தானே ? என்பார்கள். இந்த மாதிரி, பொதுவான கருத்து எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் நான், வாழும் காலத்தில் தான் தியானம் தேவை என்று சொல்வேன், வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது  எதுவானாலும் அதை எதிர்கொள்ள தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு என் வாழ்வில் மிகப்பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நான் 25 வருடமாக தியானம் செய்து கொண்டிருக்கிறேன். நான் இப்போது டிரெய்னராகவும் ஶ்ரீ ராமசந்திரா மிஷனின் தியான அமைப்பில் இருக்கிறேன். என் குருநாதர் ஷாஜி. 


ஹைதராபாத்தில் *ஹன்கா சாந்திவனம்* என்ற ஒன்று இருக்கிறது. அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அமர்ந்து தியானம் செய்யலாம். என் குருநாதர் தியானம் குறித்து ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்த வேண்டும், அது தான் எனது கனவு என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அந்த நெடுநாள் கனவு மார்ச் 14,15,16 நிறைவேறுகிறது. இந்த மகா சங்கமத்தில் உலகமெங்குமிலுமிருந்து, தியானத்தில் சிறந்த குருநாதர்கள், நிறுவனங்கள் என பலர் கலந்துகொள்கின்றனர். பல நாடுகள் இதில் கலந்துகொள்கின்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். இது மிக அரிய சந்தர்ப்பம் இந்நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன். இந்த மகா சங்கமத்தில் நாம் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்பது, எனது விருப்பம். “குளோபல் ஸ்பிரிச்சுவாலிட்டி சங்கமம்” அனைவரும் வாருங்கள் பயன் பெறுங்கள் நன்றி. 


அன்புடன் 

உங்கள் 


N.லிங்குசாமி


- Johnson PRO

அனைவரையும் கலங்கடித்த காதல் திரைக்காவியம் "அழகி" மறுவெளியீடு!

 அனைவரையும் கலங்கடித்த காதல் திரைக்காவியம் "அழகி" மறுவெளியீடு!



காதலைக் கொண்டாடிய  அழகி திரைப்படம் மீண்டும் மார்ச் 29 முதல் திரையரங்குகளில் !!


தமிழ் திரையுலக வரலாற்றில், உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் வழங்கும், உதயகீதாவின் “அழகி” மிக முக்கியமான திரைப்படமாக அனைவராலும் கொண்டாடப்பட்டு மாபெரும் தாக்கத்தையும் திரையுலகில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இப்படம் மீண்டும் திரையரங்குகளை வரும் 29ம் தேதி ‘புத்தம் புதுப்பொலிவுடன்’ அலங்கரிக்க வருகிறது. 


முதல் காதலின் நினைவுகளைப் பேசும், அற்புதமான இத்திரைப்படம், இக்கால தலைமுறையினரை மகிழ்விக்க மீண்டும்  ரீ-ரிலீஸாகவுள்ளது.  


தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகக் கோலோச்சிய தங்கர் பச்சான் முதல் முறையாக எழுதி இயக்கிய திரைப்படம் அழகி. 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளிவந்தது. தங்கர் பச்சான் தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தானெழுதிய "கல்வெட்டு" எனும் சிறுகதையை மையப்படுத்தி, இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார். 


இளையராஜாவின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. 


முதல் காதல் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷலானது.  முதல் காதல் சாகும் வரையிலும் மனதோடு ஒட்டியிருக்கும், பள்ளிக்காலத்தின் முதல் காதல், வாழ்வில் எப்போதும் உடன் வரும்.  அப்படியான  முதல் காதலியை ஒருவன் சந்திக்க நேரிட்டால் என்னவாகும் என்பது தான் இப்படத்தின் கதை. 

எல்லோரின் பள்ளிக்கால நினைவுகளைக் கிளறிவிட்ட இப்படம், அனைவரின் முதல் காதல் நினைவுகளைத் தூண்டிவிட்டது.  


வெற்றி பெறாத முதல் காதல் நினைவுகளை, மூன்று பருவங்களை தாண்டிச்செல்லும் ஒரு மனிதனின் உள் உணர்வுகளை அதுவரை தமிழ் சினிமா காட்சிப்படுத்தாத வகையில் மிக இயல்பாக இப்படம் காட்சிப்படுத்தியது. 


தமிழ் சினிமாவின் எந்த இலக்கணங்களுக்குள்ளும் சிக்காத இப்படம், தமிழ் சினிமாவில் பொன்னால் பொறிக்கப்பட்ட காதல் காவியமாக அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. 


மேலும், அஜித் நடித்த ரெட், கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படங்களோடு வெளியான இப்படம்,  மற்ற அனைத்து படங்களையும் ஓரம் கட்டி, குக்கிராமங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் வரை சென்று ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றதோடு  திரையரங்குகளில்  175 நாட்களைக் கடந்து ஓடியது. 


காதல் என்பது எப்போதும் பொதுவானது, அதிலும், பள்ளிக்கால நிறைவேறா காதல்,  இக்கால தலைமுறையினரும் எளிதில் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியது. அதிகமாக காதல் திரைப்படங்கள் வராத தற்போதைய தமிழ் சினிமாவில், வேற்றுமொழி காதல் படங்கள் கூட இங்கு மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் வெளியாகும் அழகி படம்,  இக்காலத் தலைமுறையினருக்கு அக்காலகட்ட வரலாற்றைச் சொல்வதுடன், காதலைக் கொண்டாடும் வாய்ப்பாக அமையும்.


உங்கள் காதலி, உங்கள் காதலனை திருமணத்துக்கு பிறகு சந்திக்க நேர்ந்தால் நீங்கள் முதலில் பேச நினைப்பது என்னவாக இருக்கும் என்பதே மிகப் பெரிய சுவாரசியம் தான். இந்த சுவாரசியம் படம் முழுக்க இருக்கும். 

மார்ச் 29 ம்  தேதி முதல் 4K, 5:1 தொழில் நுட்பத்துடன் திரையில்..

And my journey begins finally after 25 years. My dream, my aspiration, my first thought of

 And my journey begins finally after 25 years. My dream, my aspiration, my first thought of wat I wanna be in life has come true. Yes, I take charge of a new responsibility, the most challenging in my career,that of a debutante director. 

Here we go finally. Off to London, Azerbaijan and Malta for the recce of my first directorial debut #Thupparivalan2  & #Detective2. No words to explain but just remembering wat my #Dad Mr. G.K. Reddy and #ActionKingArjun sir said. #HardWorkNeverFails. No matter wat comes by pursue your dreams persistently and consistently and one day it will come true. Thank you all for giving me this identity as an actor. Hope the support will continue for #Thupparivalan2 & #Detective2. As a director too, thanks to #Mysskin sir for bringing my dream earlier. Don't worry I never abandon anyone’s baby in real life or reel life. Will make it reach it's destination sir. God bless. Off to work now.

எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி” ; விஷால்

 *”எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி” ; விஷால்* 


ஹீரோவாக என்னுடைய பயணம்25 வருடங்களுக்கு பிறகு இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது. என்னுடைய கனவு, ஆசை, வாழக்கையில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்கிற என்னுடைய முதல் எண்ணம் எல்லாமே நிஜமாகி இருக்கிறது. ஆம்.., எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன், 


அந்தவகையில் தற்போது  நான் முதன்முதலாக இயக்கும் படத்திற்காக  லண்டன், அசர்பைஜான் மற்றும் மால்டாஆகிய இடங்களுக்கு கிளம்புகிறோம். #துப்பறிவாளன்2 & #டிடெக்டிவ்2. 


விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் என் தந்தை திரு. ஜி.கே ரெட்டி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் சார் சொன்னதுபோல கடுமையான உழைப்பு ஒருபோதும் வீணாகாது. எதுவந்தாலும் பரவயில்லை என உங்கள் கனவுகளை விடாமுயற்சியுடன் தொடரும்போது ஒருநாள் அது நிஜமாக மாறும். 

 இந்த நேரத்தில் எனது தந்தைக்கு நன்றி கூறி கொள்கிறேன். அதே போல் எனது குரு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். டைரக்டராக உங்கள் பேரை காப்பாத்துவேன். 


ஒரு நடிகர் என்கிற இந்த அடையாளத்தை தந்த அனைவருக்கும் நன்றி. #துப்பறிவாளன்2 வுக்கும் ஒரு இயக்குநராகவும் உங்களது ஆதரவு தொடரும் என நம்புகிறேன்.. எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி. கவலைப்டாதீர்கள்.. நிஜ வாழவிலோ அல்லது சினிமா வாழக்கையிலோ நான் யாருடைய குழந்தையையும் ஒருபோதும் கைவிடமாட்டேன். அதேபோல் உங்கள் குழந்தையான துப்பறிவாளன்2 வை தத்தடுத்த நான், அதை  உங்கள் இலக்கை எட்டும் விதமாக செய்வேன் சார். கடவுளின் ஆசீர்வாதம்.. இப்போது வேலைக்கு கிளம்புகிறேன்.

நன்றி!

ஹோலி கொண்டாட்டமாக ஃபேமிலி ஸ்டார் படத்திலிருந்து “மதுரமு கதா”

 *ஹோலி கொண்டாட்டமாக ஃபேமிலி ஸ்டார் படத்திலிருந்து “மதுரமு கதா” எனும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது !!*






*ஃபேமிலி ஸ்டார் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது !*  


நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர்  நடிப்பில் உருவாகி வரும்  "ஃபேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதா'  பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்முயூனிட்டியில்  பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, மை ஹோம் ஜூவல் குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 


தயாரிப்பாளர் தில் ராஜு, "எங்கள் 'ஃபேமிலி ஸ்டார் ' படக்குழுவை உற்சாகமாக வரவேற்ற அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. 'பேமிலி ஸ்டார்'  திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது. 'பேமிலி ஸ்டார்'  என்றால் என்ன என்பதை அனைவருடனும் பகிர்ந்து கொண்டேன். தங்கள் குடும்பத்தை உயர்த்த கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவருமே  'பேமிலி ஸ்டார்' தான். இந்த கதையை முதலில் கேட்டது விஜய் தான். பரசுராம் தொலைபேசி வழியே இந்த அட்டகாசமான கதையை என்னிடம் சொன்னார், கதையைக் கேட்ட 15 நிமிடங்களில் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நடுத்தர குடும்பங்களை பிரதிபலிக்கும் அழகான கதை இது.  நடுத்தர குடும்பத்தின் அனைத்து வகை உணர்ச்சிகளையும், விஜய்யின் கதாபாத்திரத்தின் வழியே படம்பிடித்துள்ளார் இயக்குநர். பாடல்கள், வசனங்கள் மற்றும் ஹீரோவின் பழக்கவழக்கங்கள் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் உங்கள் சொந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும்படி இருக்கும். வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி, பார்வையாளர்கள் குடும்பங்களோடு  திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.


படம் குறித்து ஹீரோ விஜய் தேவரகொண்டா கூறுகையில், “வண்ணங்களால் உடை கறைபட்டுவிடும் என்ற பயத்தில், பள்ளிக் காலத்தில் ஹோலி பண்டிகையை தவிர்த்து வந்தேன், ஆனால் தேர்வுக்காலத்தின் போது அனைவரும் கலர் கலராக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால், இங்கு ஹோலியை  உங்களுடன் கொண்டாடுவது தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கிறது. இப்போது உங்கள் தேர்வுகள் முடிந்துவிட்டதால், ஏப்ரல் 5 ஆம் தேதி எங்களுடன் திரையரங்குகளில் 'பேமிலி ஸ்டார்'  படத்தை பார்க்க வாருங்கள். இது நம்மைப் போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கதை, குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களின் கதை. ஒரு நல்ல சினிமா அனுபவம். என்றார்."



நாயகி மிருணாள் தாகூர் கூறுகையில், "நான் வழக்கமாக மும்பையில் ஹோலி கொண்டாடுவேன், ஆனால் இந்த முறை, 'ஃபேமிலி ஸ்டார்' படக்குழுவினருடனும், உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் ஃபேமிலி ஸ்டார்  குழுவின் ஹோலி நல்வாழ்த்துக்களை, உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் 'ஃபேமிலி ஸ்டாரை' பார்த்து ரசியுங்கள் என்றார்.



ஸ்ரீமணியின் வரிகள் மற்றும் கோபி சுந்தரின் இசையமைப்பில், ஸ்ரேயா கோஷலின் குரலில் 'மதுரமு கதா'  மூன்றாவது சிங்கிள் அழகாக அமைந்துள்ளது. பாடலின் வசீகரிக்கும் வரிகள், அதை உடனடி ஹிட் ஆக்கியுள்ளது. இதுவரை வெளியான "ஃபேமிலி ஸ்டார் "  படத்தின் அனைத்துப் பாடல்களும் உடனடி சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன, மேலும் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதை'  பாடலும், இசை ரசிகர்களை கவர்ந்திழுத்து அதே போல் பெரிய ஹிட்டாகியுள்ளது. "ஃபேமிலி ஸ்டார்" படத்தின் டிரைலர் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகிறது.


"ஃபேமிலி ஸ்டார்" படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற புகழ்பெற்ற பேனரின் கீழ் நட்சத்திர தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர்  தயாரித்துள்ளனர். இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். வாசு வர்மா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 5ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது.



நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, மிருணாள்  தாகூர் மற்றும் பலர்.


தொழில்நுட்ப குழு: 

ஒளிப்பதிவு: கே.யு.மோகனன் 

இசை: கோபி சுந்தர்

கலை இயக்குநர்: ஏ.எஸ்.பிரகாஷ் 

எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வாசு வர்மா தயாரிப்பாளர்கள்: ராஜு - ஷிரிஷ் 

எழுதி இயக்கியவர் :  பரசுராம் பெட்லா


https://www.youtube.com/watch?v=23qnknfIGog

Family Star Team launches third single "Madhuramu Kadha" in Holi Celebrations

 *Family Star Team launches third single "Madhuramu Kadha" in Holi Celebrations along with families*






The third single, 'Madhuramu Kada' lyrical song from the movie "Family Star," featuring Vijay Deverakonda, was grandly launched at My Home Jewel Gated Community in Hyderabad amid Holi celebrations. Hero Vijay Devarakonda, heroine Mrunal Thakur, and producer Dil Raju participated in this program, receiving a hearty welcome from My Home Jewel families. The event was marked by festive Holi play, dancing, and photo sessions with the movie team. On the occasion of this song launch,


Producer Dil Raju expressed his gratitude, saying, "Thank you to all the families who welcomed our 'Family Star' movie team. 'Family Star' is releasing on April 5. I have shared the essence of what 'Family Star' means. Everyone who works hard to elevate their family is a family star. Vijay was the first to hear this story. Parashuram presented a compelling story over the phone, and within 15 minutes of hearing it, I agreed. It’s a story that mirrors middle-class families, capturing all their emotions through Vijay's character. The songs, dialogues, and hero’s mannerisms will reflect your own life. On April 5, we expect family audiences will flock to theaters."


Hero Vijay Devarakonda shared, "I used to avoid the Holi festival during my school days, fearing the colors would stain. Seeing everyone fully colored, especially during exams, was a sight. However, celebrating Holi here with all of you feels like this is how the festival should be celebrated. Now that your exams are over, join us in theaters to watch 'Family Star' on April 5. It’s the story of someone from a family like ours, a tale of those who prioritize family, offering a great cinematic experience."


Heroine Mrunal Thakur added, "I usually celebrate Holi in Mumbai, but this time, I'm delighted to celebrate with the 'Family Star' movie team and all of you. Wishing your families a Happy Holi, from your family stars. We invite you to watch 'Family Star' in theaters on April 5."


Shreya Ghoshal lent her melliflous voice to 'Madhuramu Kada', with lyrics by Srimani and music composition by Gopi Sundar. The song's captivating lyrics, have made it an instant hit. All songs from "Family Star" released so far have become instant chartbusters, and the third single, 'Madhuramu Kada', is no exception, appealing to music lovers. The trailer of "Family Star" is set to be released on the 28th of this month.


"Family Star" is produced by star producers Dil Raju and Shirish under the prestigious banner of Sri Venkateswara Creations. Directed by the successful Parashuram Petla, the film promises to be a wholesome entertainer. Vasu Varma serves as the creative producer. The film is preparing for a grand theatrical release on April 5 in Telugu, Tamil, and Hindi languages.


Actors include Vijay Devarakonda, Mrunal Thakur, among others.


Technical team:

- Cinematography: KU Mohanan

- Music: Gopi sundar

- Art Director: AS Prakash

- Editor: Marthand K Venkatesh

- PRO: Yuvraaj

- Creative Producer: Vasu Varma

- Producers: Raju - Shirish

- Written and directed by Parasuram Petla


https://www.youtube.com/watch?v=23qnknfIGog

Tuesday 26 March 2024

குளோபல் ஸ்டார்' ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் - இயக்குநர் சுகுமார்

 *'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் - இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.*



புகழ் பெற்ற இயக்குநர் சுகுமாரும், 'குளோபல் ஸ்டார்' ராம்சரணும் காவிய பாணியிலான சினிமா முயற்சியில் இணையவுள்ளனர். 


எஸ். எஸ். ராஜமௌலியின் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது. 


'ஆர் ஆர் ஆர்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான 'புஷ்பா' படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார். 


இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. 


'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் -சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 'ராக்ஸ்டார்' டிஎஸ்பி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. 


இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 


'குளோபல் ஸ்டார்' ராம்சரண்  மற்றும் சுகுமார் இணைந்திருப்பதால்.. ரசிகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பான் இந்திய சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

Director Sukumar and Mythri Movie Makers Rope in Global Star Ram Charan

 *Director Sukumar and Mythri Movie Makers Rope in Global Star Ram Charan for His Next Magnum Opus!*


In a ground-breaking collaboration, renowned director Sukumar and global sensation Ram Charan are set to team up for an epic cinematic venture. 


Following the monumental success of SS Rajamouli's film ‘RRR’, Ram Charan's alliance with Sukumar marks another milestone in the actor's illustrious career.



While Ram Charan became a global icon after the blockbuster success of ‘RRR’, Sukumar became a household name as his ‘Pushpa’ franchise took the nation by storm.


Scheduled to commence production later this year, the untitled film aims for a grand release in the last quarter of 2025. 


The combination of Ram Charan, Sukumar, Mythri Movie Makers and DSP come together for the 2nd time after the blockbuster hit "Rangasthalam". 


The movie is being produced by Mythri Movie Makers and Sukumar Writings.


With these heavyweights coming together, fans can expect a Pan-India cinematic experience like never before.

ஜெயம் ரவியின் ‘ஜீனி ’ ஃபர்ஸ்ட் லுக் வசீகரிக்கும் காட்சிகளோடு ரசிகர்களைக்

ஜெயம் ரவியின் ‘ஜீனி ’ ஃபர்ஸ்ட் லுக் வசீகரிக்கும் காட்சிகளோடு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது!


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் மகிழ்விக்கும்படியான படைப்புகளை எப்போதும் கொடுத்து வருகிறார். இப்போது, அவர் ' ஜீனி  ' மூலம் பார்வையாளர்களுக்கு வியக்க வைக்கும் சினிமா அனுபவத்தைக் கொடுக்க இருப்பதை உறுதியளித்துள்ளார். ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்தின் வித்தியாசமான முதல் பார்வை இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினின் ’பிசாசு’ மற்றும் ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணீயாற்றிய அர்ஜூனன் Jr. இதில் இயக்குநராக அறிமுகமாகிறார்.


ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அர்ஜுனன் Jr., “ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் விவாதங்கள் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்து விடுவோம். ஒரு சரியான ஷாட்டுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்” என்றார்.


படம் குறித்து மேலும் அவர் கூறியதாவது, “குடும்பம் மற்றும் ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன், ஃபன், எமோஷன் போன்ற விஷயங்கள் கலந்து ’ஜீனி'  திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும், படம் வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டது என்பது அதன் முதல் பார்வையில் இருந்து தெரிகிறது. ஒரு தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளை சுற்றி படம் இருக்கும். வன்முறை, போதைப்பொருள் மற்றும் இரத்தம் இதெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதுதான் என் நோக்கம். கிட்டத்தட்ட 75% படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 3 பாடல்கள் மட்டுமே உள்ளன. அதோடு படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து விடும்” என்றார்.


மேலும், ஜெயம் ரவிக்கு இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத முற்றிலும் புதுமையான மற்றும் ஆச்சரியமான தோற்றத்துடன் கூடிய அசாதாரண கதாபாத்திரம் என்பதையும் இயக்குநர் தெரிவித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி மற்றும் வாமிகா கபி அனைவரும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது பாடல்கள் மற்றும் இசை அவரது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர். தி புரொடக்ஷன் ஹவுஸ் இந்த படத்தை பிரமாண்டமாகத் தயாரித்துள்ளனர்.


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படத்தைத் தயாரிப்பில் இயக்குநர் அர்ஜுனன் Jr. படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். லெஜெண்டரி ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்க, பிரதீப் இ ராகவ் திறமையாக படத்தை எடிட் செய்துள்ளார். யானிக் பென் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி அசத்தலாக செய்திருக்கிறார்.

Monday 25 March 2024

குமரன் சினிமாஸ் தயாரிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' பாணியில் மறு

 *'குமரன் சினிமாஸ் தயாரிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி'*






குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் 'கங்கா தேவி'. ராகவா லாரன்ஸின் சீடரும் 'சண்டிமுனி' படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம்  கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது


கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடிக்கிறார். 'கருமேகங்கள் கலைகின்றன', 'வரலாம் வா' உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 



 'அட்டு' படத்தில்  நடித்த ரிஷி ரித்விக் கதாநாயகனாக நடிக்கிறார். நளினி முக்கிய வேடத்தில் நடிக்க ஆர்த்தி, கணேஷ் இருவருமே இந்த படத்தில் முதன்முறையாக கணவன் மனைவியாக இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூப்பர் சுப்பராயன், மொட்ட ராஜேந்திரன், மற்றும் சாய்தீனா ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படம் குறித்து இயக்குநர் மில்கா செல்வகுமார் கூறும்போது, "ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஒரு ஜமீன் குடும்பத்திற்கு மருமகளாக வரப்போகும் பெண் அந்த வீட்டிற்குள் நுழைய, அடுத்தடுத்து பல பிரச்சினைகள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார் என்பதும் அதை ஜமீன் குடும்பத்தினரும் அந்த பெண்ணும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான் இந்த படத்தின் கதை.


 'நெஞ்சம் மறப்பதில்லை' பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி' படத்தில் ஹாரர், திரில்லிங், காமெடி என எல்லா அம்சங்களுமே கலந்து இருக்கின்றன" என்றார்.


வரும் தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததும் பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதை அடுத்து பாலக்காடு அரண்மனை, குற்றாலம், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சென்னையில் ஒரு பாடல் காட்சிக்காக மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 


*நடிகர்கள்* 


யோகி பாபு, ரிஷி ரித்விக், மஹானா, நளினி, ஆர்த்தி, கணேஷ், மொட்ட ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சாய் தீனா மற்றும் பலர்.


*தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம்*


தயாரிப்பு ; குமரன் சினிமாஸ் - K.N.பூமிநாதன்


இயக்கம் ; மில்கா செல்வகுமார்


இசை ; வித்யா சரண்


ஒளிப்பதிவு ; சுரேஷ்


படத்தொகுப்பு ; ஸ்ரீகாந்த் 


பாடல் ; வ.கருப்பன் மதி


நடனம் ; கலா, அசோக் ராஜா, லாரன்ஸ் சிவா


கலை ; முத்துவேல்


சண்டைப் பயிற்சி ; சூப்பர் சுப்பராயன்


தயாரிப்பு நிர்வாகம்: ஆர். ஜி. சேகர்.


காஸ்டிங் : தேஜா


மக்கள் தொடர்பு ; A.ஜான்

Kumaran Cinemas K.N. Bhoominathan presents “Ganga Devi” - A Spine-Shuddery Horror Flick on

 *Kumaran Cinemas K.N. Bhoominathan presents “Ganga Devi” - A Spine-Shuddery Horror Flick on the lines of Nenjam Marapathillai* 






'Ganga Devi’, a chilling horror-thriller film, is brought to life by the esteemed producer K.N.Bhoominathan from the prestigious Kumaran Cinemas. The talented Milkha Selvakumar, a protege of Raghava Lawrence and known for his work in 'Chandimuni', is directing this spine-tingling film.


The movie revolves around a female-centric storyline, with Mahana playing the lead role and Yogi Babu portraying the titular character. It is worth mentioning that Mahana and Yogi Babu have previously collaborated in the film 'Karumegangal Kalaigindrana'. Mahana has also gained recognition for her impressive performance in the movie 'Varlaam Varlaam Va’.


Rishi Rithvik, known for his stellar performance in the hit movie 'Attu', is performing a pivotal role. The talented Nalini will be portraying a crucial character in this film, while the beloved real-life couple Aarti and Ganesh will be showcasing their comedic chemistry on screen for the first time as an onscreen couple. The antagonistic roles will be brought to life by the trio of Super Subbarayan, Motta Rajendran, and Sai Dheena.


Director Milka Selvakumar says, “The story set against the backdrops of  honor killing, and our film delves into the life of a young woman on the precipice of matrimony, belonging to a distinguished Landlord family. As she steps foot into the ancestral abode, an inexplicable aura envelops her, ushering in a series of spine-chilling encounters. The enigmatic events that unfurl in the aftermath gradually unveil the secrets concealed within the walls, as the courageous girl and her family confront the ethereal spectacles lurking within the confines of their home.” 


Additionally, he mentions, "Ganga Devi is a film that will follow the footsteps of Nenjam Marapathillai, infused with chilling horror and suspenseful scenes."



The first schedule of the film's shooting will begin at Neikarapatti near Palani on the special occasion of Tamil New Year. After this, the shooting will continue in Palakkad Palace, Courtrallam, Hyderabad and Chennai. A huge set is being erected for a song scene in Chennai.


Technicians List:


Production House: Kumaran Cinemas KN Boominathan


Direction: Milka SelvaKumar


Music Director: Vidhya Saran


Cinematography : Suresh


Editing: Srikanth


Lyrics : Va. Karuppan Mathi


Art: MuthuVel


Action: Super Subarayan 


Production Manager : R. G. Sekar


Casting: Teja


PRO : A. John