Featured post

Star studded Night: Kuberaa Audio Launch Lights Up the stadium

 *Star-Studded Night: Kuberaa Audio Launch Lights Up the stadium* Chennai witnessed a glittering evening as the audio launch of the much-awa...

Monday, 2 June 2025

Star studded Night: Kuberaa Audio Launch Lights Up the stadium

 *Star-Studded Night: Kuberaa Audio Launch Lights Up the stadium*










Chennai witnessed a glittering evening as the audio launch of the much-awaited Tamil-Telugu bilingual film Kuberaa took place, with a packed gathering of fans, media, and film industry stalwarts.


Present at the event were lead actors Dhanush, Nagarjuna, Rashmika Mandanna, director Sekhar Kammula, music composer Devi Sri Prasad, producers Suniel Narang and Jhanvi Narang, Bharat Narang, Simran Narang, cinematographer Niketh Bommi, production designer Thotta Tharani, and lyricists Viveka, Chandrabose, and Nanda Kishore — all sharing their experiences and excitement about the film.


*Rashmika Mandanna - Actor*

Rashmika Mandanna, responding to the loud cheers from the fans, playfully said, “I love you too!” She expressed her heartfelt thanks to Sekhar Kammula for inviting her into his cinematic world and revealed her desire to collaborate with Dhanush again, this time in a full-fledged romantic film.


*Devi Sri Prasad - Music Director*

Devi Sri Prasad thanked the fans and audience for their unwavering love and the overwhelming response to Kuberaa’s songs — Poyivaa Nanba and Trance of Kuberaa. Recalling his musical journey with Dhanush, from Kutty to Venghai and now Kuberaa, he said he eagerly looks forward to this successful combo delighting audiences again.


*Sekhar Kammula- Filmmaker*

Director Sekhar Kammula heaped praise on Dhanush, calling him a “phenomenal persona” — an actor, director, producer, singer, lyricist, all rolled into one. Confident about the film’s success, he declared, “Kuberaa is a brilliant film. Kuberaa is a very brilliant film. Kuberaa is a very, very, very brilliant film.” He extended his heartfelt thanks to his technical and creative team for their tireless effort and especially lauded costume designer Kavya Sriram, saying she truly deserves an award for her exceptional work.


*Nagarjuna - Actor*

Veteran actor Nagarjuna shared nostalgic memories of Chennai, reminiscing about being born in Adyar, studying at Guindy Engineering College, marrying someone from Chennai, and beginning his career here. He expressed his gratitude for the continuous love Chennai audiences have shown him and teased, “Right after Kuberaa, Superstar Rajinikanth’s Coolie is waiting to surprise audiences!”


*Dhanush - Actor*

As the event neared its emotional peak, Dhanush took the stage, opening with “Oh Namah Shivaay.” Reflecting on the state of the world, he said, “This is Kalikaalam — a time where hatred, negativity, and jealousy thrive; evil seems to prevail over good. I’m grateful to have worked with Sekhar Kammula, a pure soul, like a divine angel from heaven. My heartfelt gratitude and respect to producers Suniel Narang Sir and Jhanvi Narang for their unwavering belief in the story of Kuberaa and for supporting such incredible films time and again!”


Sharing a powerful personal moment, Dhanush recalled shooting his first scene in Kuberaa under the blazing sun, barefoot, in tattered clothes on the lands of Tirupathi, playing a beggar — a role that reminded him of life’s deeper truths. He compared it to his past experience in Banaras during Raanjhaana, where he found himself amidst funeral pyres, realizing that “greed, money, worldly pleasures — they are nothing; what matters is a pure soul.” Dhanush declared with conviction, “This film will make you all realize that. I’m 2000 times confident about the kind of result Kuberaa will bring.”


With a cast and crew deeply passionate about their craft, Kuberaa promises to deliver not just entertainment, but a profound cinematic experience.

Sunday, 1 June 2025

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை

 *உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா*







ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.


பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். 


இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற 'அக்யூஸ்ட்' இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், "அக்யூஸ்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்திருக்கும் திரையுலக முன்னணியினர், ஊடக நண்பர்கள், மற்றும் படக்குழுவினரை வரவேற்கிறேன். இந்த படம் நல்லபடியாக நிறைவடைந்ததற்கும் இன்றைய நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் உதயா தான் முக்கிய காரணம். திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்றார். 


தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பேசுகையில், "உதயாவின் தந்தை ஏ.எல். அழகப்பன் அவர்களும் நானும் நீண்டகால நண்பர்கள். எனவே உதயாவை எனக்கு சிறுவயது முதலே தெரியும். திரையுலகில் நீண்ட காலமாக போராடி வருகிறார். 'அக்யூஸ்ட்' காட்சிகள் பார்த்தேன், உதயாவின் திறமை பளிச்சிடுகிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படம் உதயாவின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக திகழும். படக்குழிவினருக்கு வாழ்த்துகள்," என்றார். 


'அக்யூஸ்ட்' படத்தில் நடித்துள்ள பவன், பிரபாகர், ஓ மரியா புகழ் டானி, சுபத்ரா, தீபா பாஸ்கர் ஆகியோர் பேசுகையில் இப்படத்தில் பங்காற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அனைவரின் ஒத்துழைப்போடு 'அக்யூஸ்ட்' மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதாக கூறினர். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல பழகியதாக அவர்கள் தெரிவித்தனர். 


'அக்யூஸ்ட்' படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசுகையில், "திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு இருக்கிறீர்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர். 


படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும், நன்றி," என்றார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ மற்றும் கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசுகையில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். 


இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், "என் குழுவில் பணியாற்றிய அனைத்து இசை மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்துள்ள அனைவரும் பாடலை பாராட்டினார்கள். அதற்கு முக்கிய காரணம் எனது குழுவினர் தான்.   'அக்யூஸ்ட்' படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம். எனவே உங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் மிகவும் எளிமையானவர்கள், இயக்குநர் நட்பானவர், உதயா மிகவும் இனியவர். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி, வணக்கம்," என்றார். 


வீடியோ அழைப்பில் பேசிய நடிகர் யோகி பாபு, "வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்," என்றார்.


பாடலாசிரியர் பத்மஜா ஸ்ரீராம் பேசுகையில், "இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் மிகுந்த சுதந்திரம் அளிப்பார். இப்படத்தில் பணியாற்றியது ஒரு மிக நல்ல அனுபவம். குழுவினர் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள், கடவுளுக்கு நன்றி," என்றார். 


பாடலாசிரியர் ஹைட் கார்த்தி பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். நரேன் பாலகுமாரும் நானும் நீண்ட நாளாக ஒன்றாக பணியாற்றி வருகிறோம். இப்படத்தில் சுடச்சுட பிரியாணி என்ற பாடலை நான் எழுதியுள்ளேன், அதற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி. இந்த பாடலுக்கு நான் நடனமும் ஆடியுள்ளேன். டிரெய்லர் பார்க்கும் போதே 'அக்யூஸ்ட்' பெரிய ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்," என்றார்.


அடுத்ததாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அழகன் தமிழ்மணி, செந்தாமரை கண்ணன், ஜெயசீலன், ஜி.எஸ். முரளி, ராமச்சந்திரன், அன்பு, சுரேஷ், சாலை சகாதேவன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், "உதயா அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். அவர், அவரது தந்தை ஏ.எல். அழகப்பன் சார், சகோதரர் விஜய் ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். உதயா சாரின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது. எனவே, 'அக்யூஸ்ட்' மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை," என்றார். 


நடிகை ஜான்விகா பேசுகையில், "என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் உதயா சாருக்கு நன்றி. சிறப்பான பாடல்களை தந்துள்ள இசையமைப்பாளருக்கு நன்றி. திறமைகளுக்கு தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். 'அக்யூஸ்ட்' படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன், விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன்," என்றார். 


நடிகர் அஜ்மல் பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்," என்றார். 


இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் பேசுகையில், "கஷ்டப்பட்ட அனைவரும் வெற்றி பெற்றதில்லை, ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தவர்களே. உண்மையாக, நேர்மையாக கஷ்டப்பட்டால் நிச்சயம் வெல்லலாம், அப்படிப்பட்ட குழு இது, அனைவரும் மிகவும் திறமையானவர்கள். இவர்கள் வெற்றியடைந்தால் சினிமா மேலும் வெற்றி பெறும். 'அக்யூஸ்ட்' வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 


நடிகர் ஆனந்த்பாபு பேசுகையில், "எல்லோருக்கும் வணக்கம். உதயா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஏ.எல். அழகப்பன் எனது தந்தையை போன்றவர். உதயாவின் 25வது ஆண்டு படமான 'அக்யூஸ்ட்' வெற்றி விழா கொண்டாடும், நன்றி," என்றார். 


பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், "அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை, உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார். 


தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பேசுகையில், "இந்தப் படம் எப்படி தொடங்கியது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கஷ்டப்பட்டு இதை கட்டமைத்த சகோதரர் உதயாவுக்கு பாராட்டுகள். செல்வமணி சார் சொன்னது போல உதயாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது, இதை அவர் பிடித்துக்கொள்ள வேண்டும். திறமையான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது, டிரெய்லரும் பாடல்களும் அருமை. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 


தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசுகையில், "எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். உதயா அவரது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறார். அவரது தாயார் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி," என்றார். 


நடிகர் உதயா பேசுகையில், "எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


'அக்யூஸ்ட்' படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக 'அக்யூஸ்ட்' படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன்," என்றார். 


***

Epic Unveiling, Unik Star Nikhil, Bharat Krishnamachari, Pixel Studio’s Pan India Project

 Epic Unveiling, Unik Star Nikhil, Bharat Krishnamachari, Pixel Studio’s Pan India Project Swayambhu Massive Poster Unveiled On The Actor’s Birthday, Teaser Soon



Unik Star Nikhil got nationwide recognition with the Pan India level success of his movie Karthikeya 2, and he is now coming up with another Pan India venture Swayambhu, which marks his landmark 20th. Currently in production, Swayambhu is a grand-scale historical action epic directed by Bharat Krishnamachari. The film will present Nikhil in a never-before-seen avatar, as a legendary warrior, promising a powerful blend of intense drama, visual spectacle, and cultural depth. Produced by Bhuvan and Sreekar under the banner of Pixel Studios and presented by Tagore Madhu, this project is being crafted with top-tier production, and technical values and a strong Pan-India vision.


Team Swayambhu dropped a massive poster on Nikhil's birthday, featuring the powerful duo, Nikhil and Samyuktha. Set against a backdrop of war, the poster introduces an Ancient sceptre - the Sengol!


Nikhil looks intense and powerful, like a true and legendary warrior holding a sword, caught in the middle of battle. Beside him, Samyuktha stands strong with a bow and arrow, ready to take aim. The poster itself is a testament to the film’s grand scale and promises a visually stunning experience. The presence of the Sengol in the background adds a sense of power and significance.


The Sengol is a Symbol of power and Righteousness. From the Ancient kingdoms to India's independence, the Sengol's significance is legendary. According to our ancient history, Lord Rama received the Sengol as a symbol of righteous rule, setting the precedent for just leadership.


Recently, Prime Minister Narendra Modi installed the Sengol near the Speaker's seat in the new Parliament building, paying homage to India's rich heritage. 


Now, Swayambhu weaves its story around these Powerful Backdrops and the upcoming teaser release will reveal more into this exciting world.


The anticipation is palpable! Can't wait to witness the epic tale unfold.


Nabha Natesh is the other female leads in the movie. KK Senthil Kumar handles the cinematography, while Ravi Basrur scores the music. M Prabhaharan and Raveendra are the production designers.


Cast: Nikhil, Samyuktha, Nabha Natesh


Technical Crew:

Writer, Director: Bharat Krishnamachari

Producers: Bhuvan and Sreekar

Banner: Pixel Studios

Presents: Tagore Madhu

DOP: KK Senthil Kumar

Music: Ravi Basrur

Editor: Tammiraju

Dialogues: Vijay Kamisetty 

Production Designers: M Prabhaharan, Raveendar

Action: King Solomon, Stunt Silva

Lyrics: Ramajogayya Sastry

PRO: Vamsi-Shekar,

PRO: Suresh Chandra- Abdul Nasser

Marketing: First Show

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி

 *பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார் நிகில் நடிக்கும் 'சுயம்பு' படத்தின் மேஸிவ் போஸ்டர் நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!*



'கார்த்திகேயா 2' படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான 'சுயம்பு' இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகர் நிகில் இதற்கு முன்பு பார்த்திராத கதாபாத்திரத்தில் வலுவான போர் வீரராக நடிக்கிறார். இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் இருவரும் இணைந்து பிக்சல் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். தாகூர் மது இந்த படத்தை வழங்குகிறார்.


போர் பின்னணியில் செங்கோல் ஏந்தியபடி நிகில் மற்றும் சம்யுக்தா இருவரும் இருக்கும்படி 'சுயம்பு' படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை நிகில் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளது. 


இந்த போஸ்டரில் நிகில் தீவிரமாகவும் வலுவானவராகவும் போர்க்களத்தின் நடுவில் வாளேந்தி நிற்கிறார். வில் மற்றும் அம்புடன் சம்யுக்தாவும் வீரப்பெண்மணியாக இந்த போஸ்டரில் இருக்கிறார். இந்த போஸ்டரே படம் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. 


சக்தி மற்றும் நீதியின் சின்னம் தான் செங்கோல். பண்டைய ராஜ்ஜியங்கள் முதல் இந்தியாவின் சுதந்திரம் வரை செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  நமது பண்டைய வரலாற்றின் படி, ராமர் தனது ஆட்சியின் போது செங்கோல் வைத்திருந்தார். நீதியுடன் நடக்கும் ஆட்சிக்கு இது முன்னுதாரணமாக அமைந்தது. 


இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை நிலைநாட்டினார். 


தற்போது 'சுயம்பு' திரைப்படமும் இந்த வலுவான கதைக்களத்தை சுற்றியே அமைந்துள்ளது. வரவிருக்கும் டீசர் இந்த உலகத்தை இன்னும் விரிவாகக் காட்ட இருக்கிறது. 



நபா நடேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 


*தொழில்நுட்பக் குழு:*


எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,

தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,

பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,

வழங்குபவர்: தாகூர் மது,

ஒளிப்பதிவு: கே.கே.செந்தில் குமார்,

இசை: ரவி பஸ்ரூர்,

எடிட்டர்: தம்மிராஜு,

வசனம்: விஜய் காமிசெட்டி,

தயாரிப்பு வடிவமைப்பாளர்கள்: எம் பிரபாகரன், ரவீந்தர்,

ஸ்டண்ட்: கிங் சாலமன், ஸ்டண்ட் சில்வா,

பாடல் வரிகள்: ராமஜோகய்யா சாஸ்திரி,

மக்கள் தொடர்பு: வம்சி-சேகர் (தெலுங்கு),

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர் (தமிழ்),

மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில்

 *SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.*










*ஸ்ட்ரீட் ஹீரோவில் இருந்து  ஸ்டேடியம் சூப்பர் ஸ்டாராக!*

 

*வெற்றிப்பரிசு 3 கோடி ரூபாயை வெல்லப்போவது யார்?*


தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10  டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக  தொடங்கப்பட்டது.


 தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா முழுவதிலுமிருந்து புதைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது.  சிறந்த வீரர்களைக் கொண்ட 12  அணிகள் இந்த ஆகஸ்டில் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய பரிசுத்தொகையான ரூபாய் 3 கோடியை வெல்ல களம் எதிர்கொண்டு விளையாடுகின்றன. 


இந்த சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் தலைவர், ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி,  பிரபல நடிகர் ரவி மோகன்,  SSPL இன் தலைமை செயல் அதிகாரியும் இயக்குநருமான L.T. ஆனந்த், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, லீக்-கை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆரவாரமாக 5 அடி உயர வெற்றிக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. 


SSPL இன்  அதிகாரப்பூர்வ  லோகோ மற்றும் விளையாட்டு கீதம் ஆகியவை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றன.  


இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அங்கமாக கிரிக்கெட்  மாறிவிட்டது.  பெரும்பாலோர் தங்களது கிரிக்கெட் விளையாட்டை டென்னிஸ் பந்துகளில் இருந்து தொடங்குகின்றனர்.   கிரிக்கெட்  விளையாட்டு என்பதை விட, பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களில் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக உள்ளது. 


கிரிக்கெட் அரங்கங்கள் வரலாறுகளை வெளிப்படுத்தும் என்றாலும், நாட்டின் குறுகிய பாதைகள்,  மற்றும் பரபரப்பான தெருக்களில் பார்த்தால் எதிர்கால நட்சத்திரங்கள் உண்மையிலேயே பிறக்கும் இடம் அது என்று நம்ப முடியும்.  


 இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்கு பஞ்சமில்லை,  ஆனால் அதை முன்னெடுத்துச் செல்ல சரியான தளம் இல்லை. 


தெரு கிரிக்கெட்டுகள் மிகச் சாதாரணமாகவும் மற்றும் டென்னிஸ் பந்துகளுடனும் விளையாடப்பட்டாலும்  வடிகட்டப்படாத திறமைகளுக்கு நீண்ட காலமாக வழி வகுத்துள்ளது.


 இங்குதான் தோனி மற்றும் விராட் கோலி உள்ளிட்ட இந்தியாவின் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதலில் தங்கள் திறமைகள்,  ஆற்றல் மற்றும் மன உறுதியை வளர்த்தனர். இந்த சிறிய தொடக்கத்திலிருந்து, எண்ணற்ற கிரிக்கெட் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச புகழைப் பெற்றுள்ளனர்.  


SSPL தெரு கிரிக்கெட்டின் சிறந்தவர்கள் மைய அரங்கை எடுக்கக்கூடிய ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை வழங்குகிறது. மேலும் தெரு கிரிக்கெட்டின் ஒப்பிடமுடியாத ஆர்வத்தை உலகத் தரம் வாய்ந்த அரங்கங்களுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு லட்சிய டி 10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி இது. இந்த டி 10  கிரிக்கெட் லீக் 8 ஓவர் டென்னிஸ் பந்து மற்றும் 2 ஓவர் டேப் பந்து 12 வயதுக்கு மேற்பட்ட  வீரர்களுக்கானது.  இதன்  நுழைவுக் கட்டணம்  வெறும் ரூபாய் 699 மற்றும் ஜிஎஸ்டி மட்டுமே.  


தேர்வுகள் அனைத்து மாநிலங்களிலும், மெட்ரோ நகரங்கள் மற்றும் மெட்ரோ அல்லாத இடங்களில் நடைபெறும். 3 நிலை தேர்வு செயல்முறை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும். வீரர் தேர்வு மற்றும் விளையாட்டு கண்காணிப்பில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பு,  டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை மற்றும் உற்சாகத்தை தொழில்முறை தரங்களுக்கு அங்கீகரிப்பது SSPL - ஐ மற்ற போட்டிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. 


உள்ளூர் திறமைகளை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இதுவரை கிடைக்கப்பட்ட வரவேற்பு, ஸ்டேடியம் கிடைக்கும் பட்சத்தில் ஷார்ஜாவில்  இறுதிப் போட்டிகளை நடத்துவதை கருத்தில் கொள்ள வழிவகுத்துள்ளது. 


வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விளையாட்டு SSPL இன் முக்கிய அம்சங்களில் ஒன்று.  தேர்வின் அனைத்து மட்டங்களிலும் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையை பராமரிப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. 


 சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், பங்கேற்பாளர்களின் அறிக்கை அட்டைகளைப் பகிர்வதன் மூலமும் இது நடைமுறைப்படுத்தப்படும். 

 தகுதி தேர்வில் நடைபெறும் சோதனைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும். மேலும் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் விளையாட்டைப் பார்க்க அனுமதி வழங்கப்படும். 


சமீபத்திய தொழில்நுட்பம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு,  விளையாட்டைக் கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இது பயன்படுத்தப்படும். இதை உண்மையிலேயே தனித்துவமாக்குவது என்னவென்றால், இந்த அளவிலான உயர்நிலை மற்றும் விலையுயர்ந்த தொழில்நுட்பம் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் இதுவரை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. 


போட்டி நிலைமைகளைப் பிரதிபலிக்கும் உருவகப்படுத்தப்பட்ட சூழல்கள் மூலம் பேட்டிங் மதிப்பீடுகள் நடத்தப்படும். பந்து வீச்சு மதிப்பீடுகள் நிகழ்நேர பகுப்பாய்விற்கு தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் வேக கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 


தென்னிந்தியாவிலிருந்து 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகள் இந்த லீக்-கில் விளையாடப் போவது அதன் முக்கியமான சிறப்பு அம்சமாகும். மேலும்

* ஒவ்வொரு அணியிலும் 25 வீரர்கள் வரை தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். 


* இறுதி 500 வீரர்கள் கடுமையான பல நகர தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 300 வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி சர்வதேச தரத்தில் இந்த டென்னிஸ் பந்து T 10 லீக் நடத்தப்பட உள்ளது.


 SSPL இன் தலைவர்,

நவாப்சாதா முகமது ஆசிப் அலி மிகச் சிறந்த கிரிக்கெட் ஆர்வலர்.  இது இந்த லீக் ஆட்டத்திற்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.   அவர் நீண்ட காலமாக இதுபோன்ற விளையாட்டுகளில் சிறந்த வீரராக இருந்து வருகிறார்.  மேலும் அவர் ஒரு தீவிர கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் உள்ளார். உள்ளூர் திறமைகளை வளர்ப்பதற்காக அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறார். அவர் SSPL -ஐ ஒரு முன்முயற்சியாகக் கருதுகிறார். இது ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு சமமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு உருமாறும் தளமாக செயல்படும் என்றும் இந்தியாவின் தெரு கிரிக்கெட்டின் புகழ்பெற்ற வீரர்கள் மீது மீது கவனத்தை பிரகாசிக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கிறது. 


தமிழ் திரை உலகின் பிரபல நடிகரும் SSPL இன்  பிராண்ட் அம்பாசிடருமான ரவி மோகன்

 ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்.  அவர் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார், மேலும் SSPL க்கு நட்சத்திர அந்தஸ்தையும், பிரபலத்தையும்  உருவாக்குகிறார்.   லீக்-கின் பிராண்ட் அம்பாசிடராக, இளம் திறமைகளை ஊக்குவிப்பதிலும், நாடு தழுவிய ஈடுபாட்டை ஊக்குவிப்பதிலும் அவர்  பங்கு முக்கியமானது.  அவரது பங்கேற்பு நிறைய ஆற்றலையும், இளம் வீரர்கள் தங்கள் கிரிக்கெட் கனவுகளைத் தொடரும்போது ஊக்கத்தையும் அளிக்கிறது. 


SSPL இன் தலைமை செயல் அதிகாரியும் இயக்குனருமான L.T. ஆனந்த் முன்னணியில் இருந்து வழிநடத்துகிறார்.  மேலும் SSPL இன் செயல்பாடு, நிதி மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேற்பார்வையிடுகிறார். லீக்-கின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்துடன், அவர் ஒரு வலுவான நிறுவன அடித்தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார், அது இன்று வெற்றிகரமாக இருக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் நீடித்த விளையாட்டு இயக்கமாக மாறும். 

SSPL  இந்தியாவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்டுள்ளது. தெரு கிரிக்கெட்டை தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும், அதிக பங்குகள் கொண்ட லீக்-காக மாற்றுவதற்கான லட்சிய குறிக்கோளுடன், SSPL உண்மையிலேயே விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்கு அப்பால்  ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு உயரவும், பிரகாசிக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு சக்திவாய்ந்த தளமாக நிற்கிறது. உண்மையான திறமை எங்கும் இருக்க முடியும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க,  சரியான வாய்ப்பு மட்டுமே தேவை. ஸ்ட்ரீட் ஹீரோக்களை உண்மையில் ஸ்டேடியம் சூப்பர் ஸ்டார்களாக மாற்றுவது மட்டுமே SSPL இன் குறிக்கோள்.