Featured post

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’

 *நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட வி...

Saturday, 2 May 2026

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’

 *நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!*



விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். 


கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும்  திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. 


சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் வென்றுள்ள விருது முக்கிய மைல்கல் எனவும் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்தது. 


தயாரிப்பாளர் கிதேஷ் வி கூறுகையில், “தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருது கிடைத்தது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. இது திரைக்கதை வலுவையும் எங்கள் குழுவினரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். விருது வென்றிருந்தாலும் ‘என்ன விலை’ திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம். உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.ரசிகர்கள் திரையரங்கில் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.


இயக்குநர் சஜீவ் பழூர் கூறுகையில், “ஆழமான யதார்த்தமான களத்தில் இருந்து உருவான கதைதான் ‘என்ன விலை’. இந்த திரைக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விருதிற்காக என இல்லாமல், இந்த படத்தை தீவிரமான மற்றும் ஆழமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் விதமாகவும் உருவாக்கியுள்ளோம். இதனை பெரிய திரையில் படம் பார்க்கும்போது நிச்சயம் பார்வையாளர்களும் உணர்வார்கள்” என்றார்.


இந்தப் படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


’என்ன விலை’ திரைப்படம் ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.


படம் வெளியாவதற்கு முன்பே இதற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Karunaas – Nimisha Sajayan starrer “Enna Vilai” wins Best Screenplay Award at the Dadasaheb Phalke International Film Festival ahead of release*

 *Karunaas – Nimisha Sajayan starrer “Enna Vilai” wins Best Screenplay Award at the Dadasaheb Phalke International Film Festival ahead of release*



There are few films that manages to bridge the gap between award and reward. Specifically few categories of Award ensures an engaging theatrical experience - Best Screenplay. 


Kalamaya Films Githesh V presents, A Sajeev Pazhoor Directorial, Karunaas–Nimisha Sajayan starrer “Enna Vilai” continues to build strong momentum ahead of its theatrical release. The film has now been honoured with the Best Screenplay Award at the Dadasaheb Phalke International Film Festival, marking a significant early recognition for its writing and narrative strength.


Directed by Sajeev Pazhoor, Enna Vilai is a socio-political family thriller that blends an emotionally engaging story with gripping moments and a rooted cinematic treatment. The makers emphasize that while the award is a proud milestone, the film is designed as a complete theatrical experience, crafted to connect with a wide spectrum of audiences.


Producer Githesh V says, “Winning the Best Screenplay award at the Dadasaheb Phalke International Film Festival is a proud moment for all of us. It validates the strength of our story and the effort the team has put in. At the same time, ‘Enna Vilai’ is a film made for the big screen, it’s engaging, emotional, and has all the elements that will connect with a wide audience. We’re excited for audiences to experience it in theatres.”


Director Sajeev Pazhoor says,“For me, the story of ‘Enna Vilai’ comes from a very rooted and real space. Receiving this recognition for the screenplay at the Dadasaheb Phalke International Film Festival is truly special. But beyond the award, we have crafted this film as a gripping and immersive experience. It’s a story that unfolds with intensity and emotion, and I believe audiences will feel deeply connected to it on the big screen.”


The film stars Karunaas and Nimisha Sajayan in lead roles, supported by a strong ensemble cast including Y Gee Mahendran, Poornima Bhagyaraj, Mohan Ram, Lollu Sabha Swaminathan, Kavithayala Krishna, Deepa Shankar, Mottai Rajendran, Nakkalites Kavi, and many others.


Enna Vilai has been extensively shot across 56 locations including Rameswaram, Chennai, Pondicherry, and Kochi over multiple schedules, and is now progressing towards its next phase, with release details to be announced soon.


With this early honour adding to the buzz, Enna Vilai promises to deliver a compelling and immersive big-screen experience for audiences.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது!*



நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!


இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். 'புஷ்பா', 'குட் பேட் அக்லி' போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. 


இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் 'சிறை' மற்றும் 'யூத்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார். 


வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் 'மொத ராத்திரி'.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பகிர்ந்து கொண்டதாவது, "பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. 'மொத ராத்திரி' திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார். 


இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, "மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது. படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு 'மொத ராத்திரி' திரைப்படம் நிச்சயம் தரும். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி" என்றார்.


என்கேஜிங்கான கதை, புது திறமையாளர்கள் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம் என 'மொத ராத்திரி' திரைப்படம் புதுமையான அதேசமயம் எண்டர்டெயின்மெண்ட் கதைக்களத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும். 


*நடிகர்கள்:* ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா, சுமித்ரா தேவி. எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கெளஷிக் கபிலன் மற்றும் பலர்.


*தொழில்நுட்பக் குழு விவரம்:*


ஒளிப்பதிவு: சுரேந்திரன் பரஞ்சோதி,

படத்தொகுப்பு: அசோக் அர்ஜூனன்,

இசை: 'மண்டேலா', 'மாவீரன்' புகழ் பரத் சங்கர்,

ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,

கலை இயக்குனர்: ஏ. பாலுமகேந்திரா,

பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி

Mythri Movies Makers’s Third Tamil Production titled ‘Modha Rathiri’ Official Announcement!

 *Mythri Movies Makers’s Third Tamil Production titled ‘Modha Rathiri’ Official Announcement!* 



_*Filmmaker Lokesh Kanagaraj unveils the Title of this Content-Driven Entertainer*_


Mythri Movie Makers, one of Indian cinema’s most influential production houses, has consistently set benchmarks with landmark blockbusters like Pushpa franchise and Good Bad Ugly, among several other big-ticket entertainers. Known for delivering high-impact cinema, the banner now takes an exciting step forward by expanding its creative spectrum.


The first look of Mythri Movie Makers’ Production No.3 in Tamil, titled “Modha Rathiri”, has been officially unveiled, marking the beginning of a promising content-driven entertainer. Filmmaker Lokesh Kanagaraj launched the film’s title and first look this evening (May 1, 2026)) on his social media platform. The film, directed by Raja Karuppasamy,  stars Rishikanth alongside Anishma Anilkumar, who gained attention with her performance in Sirai and Youth. 


At the core of Modha Rathiri lies a gripping and intriguing premise: An unusual wedding. One night. Two strangers. Too many surprises. So many lies. What begins as a new life spirals into chaos - a night that changes everything.


Producer Naveen Yerneni - Mythri Movie Makers says, “At Mythri Movie Makers, we have always been associated with large-scale entertainers. At the same time, we strongly believe in telling powerful, content-driven stories that connect with audiences across all sections and age groups. We have always been keen on collaborating with fresh and promising talents, and this project reflects that intent. When director Raja Karuppasamy narrated the script of ‘Modha  Rathiri’, we instantly felt it was the kind of engaging and unique story we wanted to bring to the screen. We are excited to be working with a vibrant team of young actors and technicians, and we look forward to delivering a thoroughly enjoyable theatrical experience for audiences.”


Director Raja Karuppasamy says “Making my directorial debut itself is a big challenge, and to do it under a prestigious banner like Mythri Movie Makers makes it even more special. Their belief in fresh ideas and new talents has given me great confidence and responsibility. I express my gratitude to producers have giving me creative freedom, especially allowing me to work with technicians, I am comfortable to work.  With ‘Modha Rathiri’, we are creating a story that is both engaging and emotionally rooted, while offering a fresh and fresh experience. I sincerely thank producers Naveen Yerneni and Y Ravi Shankar for trusting me with this opportunity.”


The film features a vibrant ensemble cast including Rishikanth, Anishma Anilkumar, Chetan, A. Venkatesh, Bucks, Abdool Lee, Shelly Kishore, Sangeetha Balan, Banupriya, Sumithra Devi L., Varshini Karmegham, Karthikeyan, Velan, and Kowshik Kabilan among others. 


Backed by a strong technical team, the film has Surendran Paranjothi as cinematographer, Ashok Arjunan as editor, and Bharath Sankar composing the music. He is one among the promising next-gen music composers, who was extolled with praises for his commendable works in Mandela and Maaveeran. The crew also includes Poornima Ramaswamy (Costume Designer), A. Balumahendra (Art Director), and Viyaki (Publicity Designer).


With a gripping premise, fresh talent, and the backing of a powerhouse production house, Modha Rathiri promises to deliver a unique, engaging, and thoroughly entertaining theatrical experience. More updates are expected soon.

வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!

 *வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!*




Zee studios & Drumsticks Productions தயாரிப்பில்,   கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது !! 


Zee studios & Drumsticks Productions  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.  


வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர்  ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் இப்படத்தின்  கதை. 


ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். 


இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு - Zee studios & Drumsticks Productions 

தயாரிப்பாளர்கள் - வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால்

இணை தயாரிப்பாளர்கள் - S வைஷ்ணவி விவேக்சந்தர் மற்றும் வினோத் CJ

எழுத்தாளர் -  இயக்குனர்: 

பிரவீன் S விஜய்

ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட்

இசை: சாம் C S

எடிட்டர்: பிரசன்னா G.K

கலை இயக்குனர்: பிரேம் கருந்தமலை, AM ஆனந்த்ராஜ்

ஆடை வடிவமைப்பாளர்: க்வாசய் 

கீர்த்தி ஆடை வடிவமைப்பு : ஸ்ருதி மஞ்சரி

பாடல்கள் - மோகன்ராஜன், கார்த்திக் நேத்தா, உமா தேவி

விளம்பர வடிவமைப்புகள் : தினேஷ் அசோக்

நிர்வாக மேலாளர் : மணி தாமோதரன்

மக்கள் தொடர்பு : சதீஷ்   AIM

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

 *இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!* 



தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது.


இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன், அதில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் தனித்துவமான தோற்றம் மற்றும் மனநிலையை வெளிப்படுத்தும் விதம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


 ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி, அனந்திகா சனில்குமார் இணைந்து நடித்துள்ளனர். 


மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு  தலைவன் தலைவி பட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாப்பாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார்.  மேலும் 

வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


“பரிமளா & கோ” திரைப்படம் Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக  Foxn அறிமுகமாகியுள்ளார்.


திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



தொழில் நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு : Lyca Productions, Tamilkumaran Productions Pvt Ltd, Pasanga Productions

கதை, திரைக்கதை, இயக்கம் : பாண்டிராஜ்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC

இசை : Foxn

எடிட்டர் : பிரதீப் E. ராகவ்

கலை இயக்குனர் : T. ராமலிங்கம்

ஸ்டண்ட் : கலாய் கிங்ஸன்

நடன அமைப்பு : சாண்டி, பாபா பாஸ்கர்

மியூசிக் சூப்பர்வைசர் : சந்தோஷ் குமார்

ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா ராமசாமி

ஆடை : K. நடராஜ்

ஒலிப்பதிவு : M.R. ராஜாகிருஷ்ணன்

சவுண்ட் எஃபெக்ட்ஸ் : ஷ்ரேயாஸ் பத், அருண் பிரசாத்

VFX தயாரிப்பு : B.R. வெங்கடேஷ்

DI : Knack Studios

கலரிஸ்ட் : பிரசாத் சோமசேகர்

விளம்பர வடிவமைப்பு : ADFX Studio

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

தயாரிப்பு மேற்பார்வை : ராமதாஸ் & விஜய் C

சப்டைட்டில்ஸ் : ரேக்ஸ்

Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi

*Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi Shoot Wrapped Up, Releasing Worldwide On June 4*



Mega Power Star Ram Charan’s upcoming rural action drama Peddi, directed by Buchi Babu Sana, wrapped up its entire shooting part. Backed by producer Venkata Satish Kilaru under Vriddhi Cinemas, and presented by Mythri Movie Makers and Sukumar Writings, Peddi is being mounted on a massive scale. The makers have now surprised fans with a significant update. The movie will arrive in cinemas worldwide on June 4th.


The release date poster erupts with raw fury as Ram Charan stands drenched in blood, sweat, and dust, his face lifted in a primal roar. His tangled hair, wounded visage, and tattered shirt paint a vivid portrait of a man forged in chaos. The entire design radiates unfiltered aggression, making it clear that Peddi is gearing up for an explosive big-screen arrival.


The early-June slot places Peddi perfectly within the tail end of summer holidays, ensuring solid footfalls before the academic season begins. Trade circles are already viewing this date as a smart strategic move that gives the film a strong nationwide runway.


The team has completed filming a lavish special number composed by AR Rahman on an extravagant set in Hyderabad, officially wrapping up the production. This vibrant song is expected to be one of Peddi’s standout highlights. Meanwhile, post-production work has already been progressing swiftly in parallel.


Ram Charan went all out for the film, which was evident in the first two glimpses that showcased him in two completely different makeovers. He has also pushed himself further in the songs, delivering standout dance performances that elevate the film’s appeal even more.


The film boasts an impressive ensemble cast, with Janhvi Kapoor playing the female lead. Seasoned actors Shiva Rajkumar, Jagapathi Babu, Divyenndu, and Boman Irani are set to deliver powerful performances in pivotal roles. Technically, the film is fortified by top-tier talent. R. Rathnavelu handles cinematography, Navin Nooli oversees editing, and Avinash Kolla manages production design.


Positioned as a rural sports drama infused with intense action and strong emotions, Peddi is gearing up for a grand pan-India release in all South Indian languages along with Hindi.


Producer Venkata Satish Kilaru and his team are planning an aggressive promotional campaign across the country to set the bar even higher.


Cast: Mega Power Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma, Boman Irani


Technical Crew:

Writer, Director: Buchi Babu Sana

Presents: Mythri Movie Makers, Sukumar Writings

Banner: Vriddhi Cinemas

Producer: Venkata Satish Kilaru

Co producer: Ishan Saksena

Music Director: AR Rahman

DOP: R Rathnavelu

Production Design: Avinash Kolla

Editor: Navin Nooli

Executive Producer: V. Y. Praveen Kumar

Marketing: First Show

PRO: Yuvraaj

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார்

 *மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !*



மெகா பவர் ஸ்டார்  ராம் சரண் நடிக்கும் “பெத்தி” ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !


மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.


வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.


ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.


ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.


இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.


இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.


கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும் பான்-இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.


தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.


நடிகர்கள் :

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா,பொமன் இராணி


தொழில்நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பு  : அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்.


Friday, 1 May 2026

*18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!*

 *18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!*






திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 


நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி”


டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும் சந்திக்கும் ஒரு பொது பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்தான். சமூகத்தை கெடுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்”.


இயக்குநர் விக்ரமன், “எடிசன் விருதுகள் விழாவில் கலந்து கொள்வது பெருமையான தருணம். என் மகன் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வென்றான். அடுத்து அவன் நடிக்கும் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான எடிசன் விருது வெல்ல வேண்டும் என்பது என் விருப்பம். ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் போல எடிசன் விருதும் பெருமைக்குரிய விருது. இந்த விருது விழா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் என்பது என் விருப்பம்”.


நடிகர் ஜெகன், “எடிசன் விருது விழாவை மூன்று வருடங்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறேன். பலருக்கும் இந்த விருது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ராதாரவி சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதற்கு சிறந்த உதாரணம் அவர் நடித்த ‘சின்ன மாப்பிள்ளை’ என்ற திரைப்படம். அம்பிகா மேமுக்கு நான் பெரிய ரசிகன். அவரது எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். விக்ரமன் சாரின் படங்களும் எனக்கு பிடிக்கும். 18 வருடங்கள் எட்டியிருக்கும் எடிசன் விருது விழாவுக்கு வாழ்த்துக்கள்”.


நடிகை அம்பிகா, “18 வருடங்களாக நடக்கும் இந்த விருது விழாவுக்கு வாழ்த்துக்கள். செல்வாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். படப்பிடிப்பை பொருத்து விருது விழாவுக்கு வருகிறேன் என சொல்லியிருந்தேன். சரியான தருணமும் அமைந்தது. ராதாரவி அண்ணன் எனக்கு குடும்பம் போல. விழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி”.


ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, “நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து நின்றாலும் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இயக்குநர் தவிர வேறு யாரேனும் நமது பணியை பாராட்ட மாட்டார்களா, அங்கீகரிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான திறமையானவர்களை கண்டுபிடித்து எடிசன் விருதுகள் கொடுப்பது மகிழ்ச்சியான விஷயம். என்னுடைய ‘சித்திரை செவ்வானம்’ படத்திற்கும் எடிசன் விருது வாங்கியிருப்பது மறக்க முடியாத ஒன்று. ராதாரவி சார், விக்ரமன் சார், அம்பிகா மேம் போன்ற பல முன்னோடிகளால்தான் நாங்கள் இங்கிருக்கிறோம். விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


பாடகர் அந்தோணிதாசன், “இந்த விருது விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஆரம்ப காலத்தில் நான் பாடியபோது சுற்றி இருந்தவர்களின் கைத்தட்டல்தான் எனக்கு பெரிய உற்சாகம். திரைத்துறைக்கு வந்த பிறகு விருதுகள்தான் அந்த உற்சாகத்தை கொடுத்தது. என்னைப் போன்றவர்களை கெளரவிக்கும் எடிசன் விருது விழாவிற்கு எனது வணக்கங்கள்”.


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “18 வருடங்களாக நடக்கும் விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது சாதாரண விஷயம் இல்லை. சித்தாந்த ரீதியாக ராதாரவி அண்ணனுடன் முரண்பட்டாலும் அவர் மிகவும் அன்பானவர். என்னை பல இடங்களில் முன்னிறுத்தி பேசியிருக்கிறார். திரைத்துறையில் பல நண்பர்கள் எனக்கு இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு பொதுவில் பாராட்டியவர் ராதாரவி அண்ணன் தான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மழைநீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி தடை சட்டம் இதெல்லாம் என்னுடைய சாதனைகள். அதெல்லாம் பேசுபொருளாக மாறவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அதன் மையக்கரு நான் தான். இதை பொதுவில் சொல்லி பாராட்டியவர் ராதாரவி அண்ணன், தமிழ்நாட்டில் வாழுகிற மக்களுக்காகவும், உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்காகவும் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் பேரியக்கம் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி. விருது வென்றவர்களுக்கும் விருது விழாவிற்கு வருகை தந்திருக்கும் ராதாரவி, விக்ரமன், அம்பிகா உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்" என்றார்.