Featured post

Sattendru Marudhu Vaanilai Movie Review

Sattendru Marudhu Vaanilai Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  படத்தோட review வை தான் பாக்க போறோம்.   இந்த படத்துல jai, meenakshi...

Friday, 15 May 2026

Sattendru Marudhu Vaanilai Movie Review

Sattendru Marudhu Vaanilai Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  படத்தோட review வை தான் பாக்க போறோம்.   இந்த படத்துல jai, meenakshi, garudan ram, yogibabu னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது babu jay.   சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம். 



Jai ஒரு IT கம்பெனி ல வேலை பாத்துட்டு இருக்காரு. அதஎ கம்பெனி ல தான் மீனாட்சி கோவிந்தராஜன் யும் வேலை பாத்துட்டு இருக்காங்க. ஜெய் க்கு meenakshi யா பாத்த ஒடனே காதல் வருது. அன்னிக்கே ஒரு பெரிய பிரச்சனை ல இருந்து meenakshi யா காப்பாத்தி விட்டுடுறாரு. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் love பண்ண ஆரம்பிக்குறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல கல்யாணமும் பண்ணிக்ராங்க. marriage முடிஞ்சு ஹனிமூன் க்காக கொடைக்கானல் க்கு போறாங்க. 


கொடைக்கானல் ல தான் கருடன் ராம் ஒரு resort  அ நடத்திட்டு வராரு. இந்த resort ல தான் ஜெய் யும் meenakshi யும் வந்து தங்குறாங்க. எல்லாம் smooth அ போற மாதிரி தான் இருக்கும் ஆனா இதுக்கு அப்புறம் தான் பிரச்சனையே. ஹனிமூன் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் ரெண்டு பேருக்குமே சண்டை அதிகமா வர ஆரம்பிக்குது. இது மட்டும் கிடையாது, ஜெய் இன்னொரு விஷயமும் கண்டுபிடிக்குறாரு. அது என்னனா கருடன் ராம் ஓட resort ல ரகசியமா ஒரு விஷயம் நடக்கும். 


இன்னொரு பக்கம் meenakshi யா வேற ஒருத்தர் க்கு கல்யாணம் பண்ணி வைக்கறத்துக்காக இவங்களோட அப்பாவான மினிஸ்டர் அஜய் பிளான் பண்ணுறாரு. அந்த மாப்பிளை மீனாட்சி ஓட friend அ தான் இருப்பாரு. இவரு meenkashi யா கல்யாணம் பண்ணிக்க ready அ யிருக்க ஒரு காரணம் இருக்கு. அது பணமும் மரியாதையையும் தான். 


இவ்ளோ பிரச்சனைகளையும் தான்டி இவங ரெண்டு பேரும் ஒன்னு சேருவார்களா மாட்டாங்களா ன்றது தான் படத்தோட மீதி கதையா இருக்கு. 


படத்தில நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது ஜெய் ஓட நடிப்பு அருமையா இருந்தது. meenakshi ஓட நடிப்பு எதார்த்தமாவும் genuine ஆவும் இருந்தது. முக்கியமா இவங்க ரெண்டு பேரோட chemistry நல்ல ஒர்க் out ஆயிருந்தது. வில்லத்தனதால audience அ மிரட்டிருக்காரு கருடன் ராம் அதே மாதிரி இன்னொரு வில்லன் அ வளம் வந்திருக்காரு அஜய். yogi babu ஒட comedy சிரிக்க வைக்கற விதமா அமைச்சிருக்கு. 


ஒரு commercial படத்துக்கு தேவையான காதல், சண்டை, பகை, திரில்லர் னு எல்லாமே கொண்டு வந்திருக்காரு டைரக்டர். என்னதான் படம் ஆரம்புத்துல மெதுவா போனாலும் கதை போக போக சுடு பிடிக்க ஆரம்பிக்குது. krish கோபாலகிருஷ்ணன் ஒட songs,  bgm அப்புறம் richard ம் nathan ஓட சினிமாட்டோக்ராபி ரெண்டுமே இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. 


 ஒரு entertaining ஆனா திரைக்கதை தான் இது. சோ மறக்காம உங்க family and friend ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்க miss பண்ணிடாதீங்க.

Karuppu Movie Revuew

Karuppu Tamil Movie Revuew


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம கருப்பு படத்தோட review அ தான் பாக்க போறோம். R j balaji ஓட இயக்குதுல suriya , trisha , yogibabu  Indrans, நட்டிSubramaniam, Swasika, Sshivada, Supreeth Reddy , r j balaji னு பலர் நடிச்சிருக்காங்க. இது suriya ஓட 45 ஆவுது திரைப்படம். சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 




ஏழு கிணறு எடத்துல இருக்கற ஒரு court அ தன்னோட control க்கு கொண்டு வந்து ஆட்டி வைக்குறாரு lawyer baby kannan அ நடிச்சிருக்க r j balaji . இவரோட control ல இருக்கற court க்கு ஒரே ஒரு goal தான். அதாவுது case கொண்டு வர மக்கள் பணத்தை கொண்டு வந்து குடுத்தாங்க ந அவங்க அந்த case ல ஜெயிக்கலாம் இல்லனா அவங்க பக்கம் நியாயமே இருந்தாலும் தோத்து தான் போவாங்க. பெரிய பெரிய background ல இருக்கற ஆட்கள் கிட்ட இருந்து பணத்தை வாங்கி அவங்கள தண்டனை ல இருந்து தப்பிக்க வைக்கறாரு baby kannan . கிட்டத்தட்ட இவரு court யே  legal ஆனா கட்டப்பஞ்சாயத் அ நடத்திட்டு வராரு. இப்படி இருக்கற ஒரு எடத்துல தான் ஒரு case வருது. binu வா நடிச்சிருக்க anaga maya ravi க்கு ஒரு operation பண்ணனும் அதுக்கு பணத்தை ready பண்ணுறதுக்காக இந்த பொண்ணோட அப்பாவான indrans நகையை எடுத்துட்டு போறாரு. இந்த நகையை விக்க போற எடத்துல திடுருனு திருடன்க திருடிட்டு போயிடுறாங்க. கடைசில ஒரு வழியா இவரு police கிட்ட complaint பண்ணி நகையையும் மீட்டு எடுத்துடுறாரு. ஆனா இங்க தான் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு. இந்த காப்பாத்துன நகையை court ல வந்து தான் எடுத்துக்கணும் னு police இவருகிட்ட சொல்லிடுறாங்க. 


வேற வழியே இல்லாம indrans யும் சரி னு சொல்லிட்டு baby kannan control ல இருக்கற அந்த court க்கு வராரு. இவருகிட்ட இருந்து பணத்தை பிடுங்கனும் ண்றதுக்காக என்னன்னவோ காரணம் சொல்லி அலைக்கழிக்குறாரு baby kannan. இப்படி இவரு பிரச்சனை ல இருக்கும்போது தான் lawyer saravanan அ நடிச்சிருக்க suriya இவரோட case  அ வாதாட ஆஜர் ஆகுறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு. 


நல்லது vs கெட்டது, இந்த theme ல எத்தனையோ படங்களை பாத்திருப்போம். அதே மாதிரி தான் இந்த படமும். ஒரு பக்க commercial  ஆனா mass masala குடுத்திருக்காரு director . suriya க்கே உரித்தான mass moments , அட்டகாசமான action sequences , colourful ஆனா visuals , னு எல்லாமே இந்த படத்துல amazing அ இருந்துச்சு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது, suriya க்கு இந்த படம் ஒரு நல்ல comeback அ அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். இவரோட dialogues அ இருக்கட்டும், emotional scenes அ இருக்கட்டும், அதிரடியா சண்டை போடுறது னு எல்லாமே vintage suriya திரும்ப வந்த மாதிரியே தான் இருந்தது. r j balaji ஓட நடிப்பும் நல்ல இருந்தது. ஒரு பக்கம் நக்கலா பேசி மத்தவங்கள மடக்குறது, இன்னொரு பக்கம் வில்லத்தனமா மிரட்டுறது னு ஒரு புது அவதாரத்தை இந்த படத்துல காமிச்சிருக்காரு. trisha ஓட நடிப்பும் அட்டகாசமா இருந்தது. indhrans அப்புறம் anaga ஓட emotional scenes எல்லாம் நல்ல இருந்தது. natty nadaraj இன்னொரு villain அ வந்து மிரட்டிட்டு போயிருக்காரு. shivitha சின்ன character ல நடிச்சிருந்தாலும் அழகா நடிச்சிருந்தாங்க. மத்த supporting actors அ வந்த  ஸ்வாசிகா, மாறன், ஜார்ஜ் மரியான், வேலா ராமமூர்த்தி, மன்சூர் அலிகான் இவங்களோட நடிப்பும் அட்டகாசமா இருந்தது. 


இப்போ இந்த படத்தோட technical team அ பத்தி பாக்கலாம். sai abhayankar ஓட music , bgm இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. அப்புறம் g k vishnu ஓட cinematography யா பத்தி பேசியே ஆகணும். suriya ஓட mass moments , court room ல நடக்கற விவாதங்கள், fighting scenes னு எல்லாமே ரொம்ப கச்சிதமா camera ல பதிவு  பண்ணிருக்காரு. kalaivanan ஓட editing யும் sharp and clear அ இருந்தது. 


என்னதான் சட்டங்கள் மேல இருக்கற negative அ பத்தி இந்த படத்துல காமிச்சாலும் அதே சட்டத்தை வச்சு மக்களுக்கு எவ்ளோ நல்லது பண்ண முடியும் ன்றதையும் காமிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்ல கடவுள் மனுஷன் ரூபத்துல வந்து காப்பதும் ன்ற பழமொழியை கடவுளே வந்து மக்களை காப்பதும் றத்தை ரொம்ப அழகா இந்த படத்தோட கதையை கொண்டு வந்துட்டாரு r j balaji. கடவுள் ன்ற concept இருந்தாலும்,  கதை நேர்மை க்கு அநீதி க்கும் நடுவுல நடக்கற போராட்டமா தான் காமிச்சிருக்காங்க.  இந்த படத்துல நெறய reference scenes யும் வச்சிருக்காங்க. அதெல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. 


மொத்தத்துல ஒரு mass ஆனா commercial படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்”

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!*



KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது.


மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரமாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.


முன்னதாக வெளியான டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த டீஸரில் ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. “ பிரபு  வேலு”, “வடி தேவா” போன்ற நகைச்சுவை கலந்த பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.


இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை டான் பாலா செய்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைனை மேற்கொண்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்துள்ளார்.


நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


“பேங் பேங்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் — ZEE5-ல் ‘கொலை சேவல்

 *மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் — ZEE5-ல் ‘கொலை சேவல்’*




இந்தியா, 15 மே 2026: ZEE5 தமிழ் ZEE5, பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான கொலை சேவல் தற்போது தங்களது தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம் மற்றும் மனித உறவுகளின் இருண்ட பக்கங்களை ஒரு நாட்டுப்புற பின்னணியில் ஆழமாக ஆராயும் வலுவான கதையை கொண்டுள்ளது.


தனித்துவமான தலைப்பும், இயல்பான கதை சொல்லும் முறையும் கொண்ட கொலை சேவல், அதன் யதார்த்தமான அணுகுமுறை மற்றும் சூழல்மிக்க காட்சிப்படுத்தலால் ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக புதைந்திருந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படுகின்ற ஒரு பதற்றமான விசாரணையை மையமாகக் கொண்ட இப்படம், இறுதி வரை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நகர்கிறது.


சந்தேகமும் பதற்றமும் நிறைந்த கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள கொலை சேவல், ஒரு மர்மமான கொலை சம்பவம் முழு சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பின்தொடர்கிறது. விசாரணை முன்னேறும் போது, ஒவ்வொரு கதாபாத்திரமும் சந்தேக நபராக மாற, உடைந்து போகும் உறவுகள், தனிப்பட்ட பகைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பின்னால் மறைந்திருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.


இந்தப் படத்தில் இடம்பெறும் திறமையான நட்சத்திரக் குழு, கதைக்கு உண்மைத் தன்மையும் உணர்ச்சி ஆழமும் சேர்க்கும் வலுவான நடிப்பை வழங்கியுள்ளது. யதார்த்தமான அணுகுமுறை, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் வலுவான உள்ளூர் மண்வாசனையுடன், கொலை சேவல் நாட்டுப்புற கலாசாரம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட சஸ்பென்ஸ் நாடகங்களை விரும்பும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


OTT வெளியீட்டை குறித்து பேசிய படக்குழு, “இந்தப் படத்தை மேலும் பரந்த பார்வையாளர்கள் ZEE5 மூலம் கண்டறிந்து, தங்கள் வீடுகளிலிருந்தபடியே அதன் பல அடுக்குகளைக் கொண்ட கதை சொல்லலும் நுனிக்கூர்மையான சஸ்பென்ஸையும் அனுபவிப்பார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.


கொலை சேவல் மூலம், தமிழ் ZEE5 தனது பிராந்திய உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தி, உண்மையான கதை சொல்லலை கொண்டாடும் அதே நேரத்தில் புதிய மற்றும் சுவாரஸ்யமான கதைகளை நாடும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து வருகிறது.


கொலை சேவல் தற்போது ZEE5 தளத்தில் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.


ZEE5 பற்றி:


ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பல்மொழி கதை சொல்லியாகவும் திகழ்கிறது. உலகளாவிய உள்ளடக்க முன்னணி நிறுவனமான ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் கீழ் செயல்படும் ZEE5, வீடியோ ஆன் டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக உள்ளது. ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஒரிஜினல் உள்ளடக்கங்கள், இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்களை பல இந்திய மொழிகளில் வழங்கும் விரிவான மற்றும் பல்வகை நூலகத்தை இது கொண்டுள்ளது.

Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director

 Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director with #RAPO23, Introducing Veera through a Strikingly Stylish Poster- Produced by Krishna Pothineni on Rapo Cinematics.*



Energetic Star Ram Pothineni, a multi-faceted performer who has consistently showcased his versatility on screen, takes a Bold new step.After turning lyricist with his previous film Andhra King Taluka- a feat that earned him wide appreciation, he also surprised audiences by lending his vocals for the first time. Now, the talented star is ready to take a giant leap. With his 23rd film, #RAPO23, Ram steps into the director’s chair, marking his debut as a filmmaker. The project, formally announced on the occasion of his birthday, is set to be a stylish Psychological Action Thriller. A genre that is barely explored in Telugu cinema.


#RAPO23 will be produced by Krishna Pothineni under the newly formed Rapo Cinematics banner. Interestingly with this move, Ram joins the elite league of Stars-turned-Directors such as Sr. NTR, Krishna, and Pawan Kalyan.


The makers have also unveiled a striking birthday special poster that introduces Ram Pothineni’s character, Veera. The poster radiates a dark, intense, and gritty tone featuring Ram from behind, clad in a leather jacket. His sharp, V-cut hairstyle amplifies the raw attitude of the character. Dominating the backdrop is a bold red “V”, symbolizing both Veera and a sense of rebellion, danger, and dominance. The faint outlines of towering skyscrapers on either side evoke a cold, crime-infested cityscape. Adding to the mystery, the tagline “The Story of a Lone Wolf” hints at a protagonist driven by solitude, instinct, and a complex psychological landscape.


#RAPO23 promises a powerful and groundbreaking narrative conceived by Ram Pothineni himself for his directorial debut. He is set to portray Veera in a completely new, never-before-seen avatar, and the transformation is already evident in the announcement poster’s styling and mood.


The film’s regular shoot is set to begin in June, with the makers eyeing a December release this year. Further details about the cast and technical crew will be revealed in the coming days, building anticipation around what is poised to be one of Ram Pothineni’s most ambitious ventures yet.


Cast: Ram Pothineni


Technical Crew:

Writer, Director: Ram Pothineni

Producer: Krishna Pothineni

Banner: Rapo Cinematics

PRO: Yuvraaj

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி

 *இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!*



எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது.


பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள Rapo Cinematics நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்-இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.


படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர், ராம் போதினேனியின் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. லெதர் ஜாக்கெட்டுடன் பின்னால் இருந்து நிற்கும் ராமின் தோற்றம், படத்தின் டார்க், இன்டென்ஸ் மற்றும் தனித்துவமான  மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவரது V-cut ஹேர் ஸ்டைல், கதாபாத்திரத்தின் அட்டகாசமான அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துகிறது.


போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.


ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.


படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடிப்பு: ராம் போதினேனி


தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம்  : ராம் போதினேனி

தயாரிப்பு: கிருஷ்ணா போதினேனி

பேனர்: Rapo Cinematics

மக்கள் தொடர்பு - யுவராஜ்


Exam Webseries Review

 Exam தமிழ் webseries Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம exam webseries ஓட review அ தான் பாக்க போறோம். இந்த webseries amazon prime ல ஒளிபரப்பு ஆகுது. இந்த webseries ஓட கதையை எழுதி இயக்கி இருக்கிறது சற்குணம். இதுல துஷாரா விஜயன் அப்புறம் அப்பாஸ் தான் மெயின் ரோல் ல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இதோட கதை என்னனு பாத்திடலாம்.


maramalli யா நடிச்சிருக்க adithi balan deputy supertindant of police அ இருப்பாங்க. இவங்க அந்த posting அ accept பண்ணுறதுக்குள்ள jhansi யா நடிச்சிருக்க துஷாரா விஜயன் இவங்கள கடத்திட்டு போயிடுறாங்க. அதுமட்டும் இல்ல jhansi தான் maramalli ஓட dsp posting யும் accept பண்ணிடறாங்க. jhansi இது பண்ணுறதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு. இவங்க jayachandran அ நடிச்சிருக்க abbas நடத்துற ஒரு secret operation ல கலந்துக்குறாங்க. அந்த operation ஓட முக்கிய goal என்னனா governement நடத்துற exams க்கு பின்னாடி இருக்கற scam அ வெளிப்படுத்துறது தான். இந்த scam அ jayachandran யும் jhansi யும் வெளி கொண்டு வந்தங்களா இல்லையா ன்றது தான் இந்த series ஓட கதையை இருக்கு. 


இந்த webseries ல மொத்தமா 7 episodes தான் இருக்கு. அதுவும் எல்லாமே விறுவிறுப்பா போகுது னு சொல்லலாம். maramalli ஓட kidnapping ல இருந்து ஆரம்பிச்சு jhansi ஓட நிலைமை என்னன்றதா ரொம்ப தெளிவாவும் interesting ஆவும் காமிச்சிருக்காங்க. இந்த scam க்கு பின்னாடி இருக்கற mastermind அ கண்டுபிடிக்கறதுக்கு வெறும் 10 நாள் தான் இருக்கு jhansi க்கு. இந்த mastermind தான் exams க்கு dummy candidates அ கொண்டு வரதும், question paper அ leak out பண்ணுறதும். அதோட  coaching centers நடத்துற  fraud தனம் , government departments க்கு போற லஞ்சம் னு ரொம்ப deep அ இதுல காமிச்சிருக்காங்க. என்னதான் jhansi க்கு எல்லாமே பக்காவா ready பண்ணி இந்த operation க்கு jeyachandran அனுப்பினாலும், மாட்டிக்கற நிலைமை க்கு வராங்க அதுக்கு காரணம் எதிரிகளோடு ஆட்கள் எல்லா எடத்தலையும் இருக்கிறது னால தான்.


இந்த series ல இருக்கற highlight ஆனா விஷயம் என்னனா இந்த problem ஓட solution சட்டத்தை தாண்டி வெளில இருக்கிறது தான். இந்த exams க்கு பின்னாடி இருக்கிற scammer யும் jhansi யும் இந்த system னால பாதிக்க பட்டவங்க தான். இவங்களோட பிரச்சனையா government முன்னாடி கொண்டு வரத்துக்காக rules அ மீறி வர நிலைமைக்கு தள்ள பட்டிருக்காங்க ன்றது தான் உண்மை. entrance exam ஒரு student க்கு எவ்ளோ முக்கியமானது, அதோட impact எந்தளவுக்கு இருக்கின்றதா ரொம்ப அழகா இந்த series ல காமிச்சிருக்காங்க. இந்த மெயின் கதைக்கு நடுவுல ஒரு சின்ன கதையும் குடுத்திருப்பாங்க. அதா பாக்கும் போது இன்னும் நமக்கு வருத்தத்தை தான் தரும். ஒரு மீனவர் அ காமிப்பாங்க. அவரு நல்ல படிச்சவரு தான். ஆனா அவருக்கு வர வேண்டிய ஒரு வாய்ப்பை பரிச்சிருப்பாங்க இதுனால அவரோட வாழ்க்கையே தடம் மாறிடுது. அதே மாதிரி jhansi க்கும் ஒரு flashback ஸ்டோரி அ காமிப்பாங்க. 


series ல நடிச்ச எல்லா actors ஓட performance யும் நல்ல இருந்தது. adithi balan அப்புறம் abbas க்கு இந்த series ஒரு நல்ல comeback அ அமைச்சிருக்கு. ஒரு பக்காவான thriller கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த series அ பாருங்க.

A Terrific Supernatural Folk Mystery in the Making!

 *A Terrific  Supernatural Folk Mystery in the Making!*

*Komala Hari Pictures Brings a Grand Cinematic Spectacle!* 




Komala & Hari Bhaskaran of Komala Hari Pictures is producing this film, which marks his ‘Production No.4’. The yet to be titled movie is produced on a grand scale. 


The story is rooted in the long-standing culture, traditions, and heritage of society, while also bringing to light ancient art forms buried deep within the soil of the land. Designed as a cinematic record of forgotten folklore, the film is based on a true supernatural incident that reportedly unfolded in the southern districts during the mid-1980s, a haunting tale filled with blood, flesh, and unexplained horrors, now transformed into a grand cinematic narrative.


The film is written and directed by Bharathi Balakumaran, who won acclaim for his nativity based film Vizha. After deciding to bring this story to the screen, he conducted extensive research through various authentic sources to shape the screenplay as close to reality as possible.


Actor Vshvaa ( This is the correct spelling ) plays the protagonist,  a young man fighting to save his family from a curse that has haunted generations. Vshvaa, who made his debut with the film Champion, has reportedly undergone six months of intense preparation to transform himself for the role.


Talks are currently underway with a senior actor for another pivotal role. While the process has already started, the official confirmation will be made soon. The star-cast comprises prominent  actors including Mime Gopi, Aadukalam Naren, Risha Jacobs, Munishkanth, Anupama Kumar, Baba Bhaskar, Remya Suresh and several others being considered.


The shoot is scheduled to commence on the 22nd of this month and will continue for 40 consecutive days. Certain portions will also be filmed in Chennai.


*Technical Crew*


Banner: Komala Hari Pictures

Producer: Komala & Hari Bhaskaran


Writer & Director: Bharathi Balakumaran (Vizha fame)


Cinematographer: Banu Murugan (Muthina Kathirika fame)


Editor: Kalaivanan (Amaran fame)


Art Director: Pragatheeswaran 

(Pookie, Diesel fame)


Lyricist: Mohan Rajan (Lover, Lubber Pandhu fame)


Stunt Master: Dinesh Kaasi (Karafame)


Story Line  & Dialogue Writer: Kani Raja 


Pro: Johnson 

Publicly: Movie Bond 


Production Executive: G.Thiruneelagandan


Production Manager:P.Sivakumar

மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை!

 மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை!

பிரமாண்டமாக தயாரிக்கும் கோமளா ஹரி பிக்சர்ஸ். 

 “GENTLEWOMAN” படத்தை தயாரித்த

“கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக

ஒரு கதையை பிரமாண்டமாக தயாரிக்கிறார். புரொடக்‌ஷன்-4 படமான இதற்கு இன்னும் பெயர் சூட்ட படவில்லை. 




சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் மண்ணில் புதைந்த பழைய கலை வடிவங்களையும், பழமை கதையின் பதிவாக இருக்கும் விதமாக இப்பட கதை உருவாகி இருக்கிறது.

1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தை பிரமாண்ட கதையாக மாற்றியுள்ளது. 


மண் சார்ந்த படைப்பான “விழா” படத்தை

இயக்கி, அனைவர் பாராட்டையும் பெற்ற பாரதி பாலகுமாரன் இப்படத்தை வடிவமைத்து இயக்குகிறார். இந்த கதையை எடுப்பதென்று முடிவு செய்த பின்பு, உண்மைக்கு நெருக்கமான பல வழிகளில் ஆராய்ந்து கதை அமைத்து, திரைக்கதையை எழுதியுள்ளார்


இதில், நாயகனாக விஷ்வா நடிக்கிறார்.

தன் தலைமுறையின் தீரா சாபத்திலிருந்த தனது

குடும்பத்தை மீட்க போராடும் ஒரு இளஞனாக விஷ்வா நடிக்கிறார். இவர், ‘சாம்பியன்’ படம் மூலம் அறிமுகமானவர். இதற்காக, ஆறு மாதம் கடும் பயிற்சி எடுத்து கதை நாயகனாக தன்னை தயார் செய்து வருகிறார். 

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பெரிய நடிகர் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் மற்றும் பல நடிகர், நடிகை தேர்வு நடை பெற்று வருகிறது. 


இதன் படபிடிப்பு இம்மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாள்கள் நடை பெறுகிறது. சென்னையிலும் சில காட்சிகள் நடைபெறும். 



#PRODUCED BY KOMALA HARI PICTURES 

#PRODUCERS: KOMALA & HARI BHASKARAN 


#WRITER & DIRECTOR BHARATHI BALAKUMARAN 

( ‘VIZHA’ Fame ) 


#CINEMATOGRAPHER:  BANU MURUGAN ( ‘MUTHINA KATHIRIKA’ Fame )


#EDITOR:  KALAIVANAN ( ‘AMARAN’ Fame )


#ART DIRECTOR:  PRAGATHEESWARAN ( ‘POOKIE’ , ‘DIESEL’  Fame )


#LYRICIST:  MOHAN RAJAN ( ‘LOVER’, ‘LUBBER PANDHU’ Fame. 


#STUNT MASTER:  DINESH KAASI (‘KARA’ Fame)


#STORY LINE & DIALOGUE: WRITER KANI RAJA 

Pro: Johnson 

Publicity: Movie Bond 

#PRODUCTION Executive: G.Thiruneelagandan

PRODUCTION Mananger: P.Sivakumar