Featured post

ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது

 *ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar)  புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!* ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அத...

Wednesday, 4 March 2026

ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது

 *ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar)  புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!*












ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், இதன் ஒளிபரப்புத் திட்டமிடப்பட்டுள்ளது.


பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார்.


‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார  திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் (Chef) ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஒருபுறம் அவரது லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டிற்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலே இந்த சீரிஸின் மையக்கரு.


கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய வில்லனாகவும் ‘தலைவாசல்’ விஜய் நடித்துள்ளார். சமையலறையின் பரபரப்பான சூழலைத் தனது மிரட்டலான நடிப்பால் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


காமெடி, டிராமா, லட்சியம் மற்றும் ஒரு சொகுசு விடுதியின் பின்னணியில் நடக்கும் கலாட்டாக்கள் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குத் சீரிஸாக ‘ரிசார்ட்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரிசார்ட் சீரிஸ் வரும்  மார்ச் 13 முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்களாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.  


 (JioHotstar)ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

JioHotstar இந்தியாவின் முன்னணி பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். பல மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய ஹிட் திரைப்படங்கள், அசல் தொடர்கள், நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் விரிவான தளமாக இது திகழ்கிறது. உலகத் தரமான கதைகளை ஒவ்வொரு திரைக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன், புதுமை, உள்ளடக்கச் சேர்க்கை மற்றும் சிறப்பான கதைகள் மூலம் டிஜிட்டல் பொழுதுபோக்கை புதிய தளத்திற்கு எடுத்துச் வருகிறது.


🔗 https://youtu.be/rlLjLSD3e70?si=BHBMhk0V-subITXl

Owing to Rising Tension in the Middle East, release of Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-ups rescheduled to 4th June, 2026

 Owing to Rising Tension in the Middle East, release of Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-ups rescheduled to 4th June, 2026*



*Release of Yash-Starrer Toxic Shifted to June 4 Due to Middle East Tensions*


*Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups Postponed to June 4, 2026 Amid Middle East Instability*


KVN Productions and Monster Mind Creations today announced a strategic rescheduling of the global theatrical release for the highly anticipated action-drama, Toxic: A Fairy Tale for Grown-ups. Originally slated for a worldwide premiere on March 19, 2026, the film’s release is being moved to 4th June, 2026, due to the ongoing volatile escalation and regional instability in the Middle East.


As advised by one of their major distribution partner Phars Films, the decision to reschedule the release was made in response to escalating tensions and the resulting disruptions to cinema operations across the Gulf region, a key market for the film’s multi-language global rollout. The producers have been closely monitoring the rapidly evolving regional developments with the utmost caution. This announcement comes at a time when the makers were gearing up for a grand trailer launch for 8th March in Bangalore, with media from across the country. The makers had already mapped out the film’s final promotional schedule ahead of its earlier release date of 19th March 2026.


Even though the film’s first single, ‘Tabaahi,’ was ready for its scheduled debut on 2nd March, the makers chose to hold the music video and momentarily pause the promotional rollout which was locked and to be activated within a day or two.


An official statement from KVN Productions and Monster Mind Creations Stated -


Toxic: A Fairy Tale for Grown-ups is a film we conceptualized with the vision to create cinema for a global audience. Filmed in Kannada and English, it is built with the conviction to connect with viewers both at home and across the world.


After years of dedicated labour, we were excited to share our film with you all on the 19th of March. However, the current uncertainty, especially in the Middle East, has created a situation that impacts our goal to reach and connect with the widest possible audience.


Therefore, in the interest of our partners and our audience, we have made the difficult but carefully considered decision to reschedule our release.We thank you for your understanding and patience and look forward to your continued love and support.


Toxic: A Fairy Tale for Grown-ups will now be released in cinemas across the globe in English and Indian languages on 4th June 2026.


See you at the movies.



Toxic stars Yash, Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria in pivotal roles. Written by Yash and directed by Geetu Mohandas, the film has been shot simultaneously in Kannada and English, with dubbed versions in Hindi, Tamil, Telugu, and Malayalam — reinforcing its global ambition. Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is slated for release on 4th June, 2026.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக ராக்கிங் ஸ்டார் யாஷ்

 *மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  (Toxic: A Fairy Tale for Grown-ups) திரை


ப்படம்  வெளியீட்டு தேதி ஜூன் 4,2026க்கு மாற்றப்பட்டது.*


*மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்*


*மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  திரைப்படம் வெளியீட்டு தேதி 4 ஜூன் 2026க்கு ஒத்திவைப்பு*


கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான Phars Films வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்‌ஃப் நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், மார்ச் 8ஆம் தேதி பெங்களூரில் நாடு முழுவதிலிருந்தும் ஊடகங்களை அழைத்து ஒரு பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். மேலும் 2026 மார்ச் 19 வெளியீட்டை முன்னிட்டு இறுதி கட்ட புரமோஷன் திட்டங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தன.


படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2 அன்று வெளியிட தயாராக இருந்தபோதிலும், தயாரிப்பாளர்கள் அந்த மியூசிக் வீடியோவை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி, இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் தொடங்கவிருந்த புரமோஷன் நடவடிக்கைகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.


கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பிறகு, இந்த படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம்.


உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம்.”


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'   திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் சந்திப்போம்.


டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் எழுதியுள்ள இந்த படத்தை, கீது மோகன்தாஸ்  இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள, இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations தயாரிக்கும் இந்த படம் 2026 ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது



*

Vasool Mannan Movie Review

Vasool Mannan Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வசூல் மன்னன் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Arumugam Mathappan. இந்த படத்துல Sridevaa Krishnan, Niveda R. Nair, Saravana Subbaiya, Vela ராமமூர்த்தி, Saravana Sakthi.னு பலர் நடிச்சிருக்காங்க. srideva ஏற்கனவே சிறகடிக்க  ஆசை ன்ற serial ல நடிச்சு famous ஆனவரு. இந்த படம் மூலமா சினிமா ல actor அ அறிமுகம் ஆகுறாரு.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

இந்த படத்துல நெறய கதைகள் ஒண்ணா சேருது அதெல்லாம் பாக்கலாம். முதலாவுது, saravanan அ நடிச்சிருக்க Sridevaa Krishnan ஊர் முழுக்க கடன் வாங்கி வச்சிருக்காரு. கடனை திருப்பி குடுக்காம அவங்கள ஏமாத்திட்டு இருக்காரு. இந்த காரணத்துனால அந்த ஊர் மக்கள் எல்லாரும் இவரை அல்வா சரவணன் னு சொல்லி கூப்பிடுவாங்க. இவரு மட்டும் தனியா இல்ல இவருகூட இவரு மாமா  saravana sakthi யும் சேந்து ஊர் ல லூட்டி அடிக்கிறாங்க. ரெண்டாவுது, பல business அ பண்ணிட்டு இருக்கற velaramamoorthy. இவரோட பொண்ணு தான் nivetha. இவங்களுக்கு police ஆகணும் னு ரொம்ப ஆசை. அதுனால எப்பவுமே police uniform போட்டுட்டு ஊரை சுத்திட்டு இருப்பாங்க.  மூணாவுது, saravana subbaiya வை காமிக்கறாங்க. இவரு ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர். ஒருத்தரோட murder அ பத்தி மக்களுக்கு தெரியப்படுத்துனும் ண்றதுக்காக clues அ கண்டுபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரு. 


ஒரு கட்டத்துக்கு மேல நிவேதாவும் sreedeva வும் சந்திக்கறாங்க. இந்த பொன்னையும் ஏமாத்திடுறாரு, அப்போ தான் nivetha க்கு sreedeva ஓட உண்மையான முகம் என்னனு தெரிய வருது. police ஆனதுக்கு அப்புறம் முதல் encounter நீதான் னு சபதம் எடுக்கறாங்க nivetha. இந்த மூணு கதைகளும் எப்படி சந்திக்குது  இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sreedeva ஓட acting natural அ இருந்தது. serial ல நடிச்ச அனுபவம் cinema ல கைகுடுத்திருக்கு னு தான் சொல்லணும். இவரு கடன் குடுத்தவங்கள ஏமாத்துறது, அவங்க பக்கத்துல வரக்கூடாது ண்றதுக்காக police கிட்ட பந்தோபஸ்து கேட்குறது னு இவரு அடிக்கற looty நல்ல இருந்தது. saravana sakthi ஓட comedy scenes எல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. முக்கியமா பாதுகாப்புக்கு வர police கிட்ட இருக்கற  gun அ எடுத்து இவரு பண்ணுற அட்டகாசம் எல்லாம் audience அ சிரிக்க வைக்குது. nivetha ஓட performance யும் நல்ல இருந்தது. எப்பவும்போல வில்லத்தனத்தால மிரட்டிட்டு போயிருக்காரு velaramamoorthy. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது barani ஓட bgm அப்புறம் songs எல்லாம் இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. என்னதான்  இது ஒரு சின்ன budget படமா இருந்தாலும் cinematography தான் இந்த படத்துக்கு highlight அ அமைச்சிருக்கு. ஒரு சின்ன கதையா இருந்தாலும் மக்களுக்கு interesting அ இருக்கற மாதிரி கொண்டு போயிருக்காரு director.    


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல பாக்க miss  பண்ணிடாதீங்க.

Tuesday, 3 March 2026

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. GKM தமிழ்குமரன்

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவர்கள் தலைமையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் திரு. மணிகண்டன் (MJD Production) அவர்கள் சங்கத்திற்கு ரூபாய். பத்து லட்சம் (Rs.10,00,000/-) நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவர்களுடன், துணைத் தலைவர் திரு.ஆர்.கே. சுரேஷ், செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், பொருளாளர் திரு.சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி.சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



சிறப்பான இந்த தொடக்கத்திற்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு

 *மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு!*




ZEE5, ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் அறிவித்தது!


இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது


திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற  திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில்  தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது.


லிங்க் - https://www.youtube.com/watch?v=FRTJ8TWC78g


Zee Studios, Moviemill மற்றும் Kyoorius  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. கிஷோர் பாண்டுரங்க் பெலகர் எழுதி இயக்கியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன திரைப்படமாக இது திகழ்கிறது. முழுவதும் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ள இந்தப் படம், ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் இசையால் மேலும் வலுப்பெறுகிறது.


‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார சிரமங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ள சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்து சொல்கிறது. எதிர்பாராத விதமாக அவர்கள் பாதைகள் ஒன்றாக மோதும் போது, அது உயிர்வாழ்வுக்கான போராட்டமாக, மனித உறவுகளின் தீவிரமான கதையாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாமல், நடிப்பு, காட்சிகள் மற்றும் இசை மூலமாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு முழுமையான மற்றும் மனதை நெகிழ்விக்கும் அனுபவத்தை வழங்குகிறது.


நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது: 

“ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் கருத்துடன் பார்வையாளர்கள் இணைந்து, தங்கள் சொந்த அனுபவமாக இந்த கதையை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.”


அதிதி ராவ் ஹைதரி கூறியதாவது: 

“‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் மேலும் பரந்த பார்வையாளர்களை இந்த படம் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பார்வையாளர்களை கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளை கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை.”


இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் கூறியதாவது: 

“‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையை சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது ZEE5 இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி.”


‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் மார்ச் 6 முதல் ZEE5-ல் தவறாமல் காணுங்கள்!


ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.


Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

Kenatha Kaanom Pre-Release Event!

 *Kenatha Kaanom Pre-Release Event!* 

















Yogi Babu starrer “Kenatha Kaanom” is all set for the worldwide theatrical release.Marking this special occasion, the entire team interacted with press and media fraternity. Adding an emotional essence to the event was the entire cast and crew sharing their saddened thoughts and experience about Late Filmmaker Suresh Sangaiah, who is no more with us. 


Here are some excerpts from the event. 


RB Talkies Ramesh Babu said, “I am truly delighted to be part of this occasion and to address our friends from the press and media fraternity. It has been a privilege to work with the entire team of ‘Kenatha Kaanom’. Even before our beloved director Suresh Sangaiah narrated the script of KK, we had watched ‘Oru Kidaiyin Karunai Manu’ and deeply admired his craft. He was in relentless pursuit of shaping this film with authenticity. In fact, he specifically required a location with a house that had no terrace. After a long search, when we finally found one, we faced the serious challenge of flooding. Despite the obstacles, we moved forward with conviction. Though he is not physically present with us today, his family is here. His dreams will certainly come true through this film.”


Actress Rachael Rebecca said, “Kenatha Kaanom is a very special film and extremely close to my heart. Beyond being an acting experience, it carries deep personal reflections for me. The place and the people I encountered during this journey left a lasting impact on me. The film explores strong political and psychological dimensions, and I am confident it will significantly impress the audience. It was a pleasure working with Nivas K Prasanna. I hope the film satisfies everyone.”


Actor Ramakrishnan said, “Tamil Cinema will forever miss a filmmaker like Suresh Sangaiah. Though he is not with us today, he has gifted us a beautiful film through which he will remain immortal. During filming, he faced several health challenges. Rachael tried immensely to support him, and Yogi Babu took great care of him as well. This film carries substantial political relevance. Hotstar is known for selecting distinctive scripts, and I believe Kenatha Kaanom will be a valuable addition for audiences.”


Director Susienthiran said, “Yogi Babu has become one of the most bankable and dependable actors for small and medium budget films. Nivas K Prasanna continues to do commendable work. I had long wished to collaborate with Lovelyn. Though she comes from an affluent family, she wears greasepaint purely out of passion. I sincerely hope the director’s family receives the appreciation and recognition his hard work deserves.”


Director Vasantha Balan said, “Suresh Sangaiah is one of my favourite directors. After watching the trailer of Kenatha Kaanom, I strongly felt it will deliver a powerful political statement. Every director aspires to breathe their last while creating cinema, but seeing his family here in pain deeply saddens me. I am confident this film will mark a significant milestone in the Indian Film Industry.”


Director Nelson Venkatesan said, “I have always maintained that ‘Oru Kidaiyin Karunai Manu’ is an awe-inspiring film, and it was through that film I became acquainted with Suresh Sangaiah. Even today, it leaves a deep impact. Although it received international acclaim, it did not get the regional recognition it deserved. He was a beautiful and dedicated soul who worked tirelessly until his last breath. Ramesh Babu is extremely selective in producing films, and I am grateful he invited me today. Yogi Babu is a boon to the industry. Lovelyn is immensely talented and will scale greater heights. I am confident Kenatha Kaanom will reach a wider audience.”


Distributor Guhan said, “The genre itself is interesting. It is a comedy drama, and such films are warmly welcomed by audiences. I truly believe Suresh Sangaiah is present with us in spirit. He did extensive groundwork before the shoot began. Films like this will surely impress everyone.”


Actress Lovelyn Chandrashekhar said, “Kenatha Kaanom is extremely special to me, and I deeply miss Suresh Sangaiah sir. The producers were wonderful to work with. Yogi Babu sir is humble and grounded. Nivas K Prasanna has given life to this film through his music. I thank those who helped me learn to ride the bullet bike for this role. I did not get the opportunity to work with Rachael this time, but I hope we collaborate soon. I sincerely hope everyone loves this movie.”

Director Karu Pazhaniappan said, “While many here have known Producer Ramesh Babu sir for a long time, I met him only yesterday. Any producer who genuinely supports directors and assistant directors deserves appreciation. Ramesh Babu is one such person. When social commentary comes from a comedian like Vadivelu sir, it instantly creates impact. The dialogue ‘Kenatha Kaanom’ carries that depth. Now Yogi Babu is playing the lead in a film with that powerful title. Maestro Ilaiyaraaja composes music for passion, not money, which is why he stands tall even today. I believe Nivas K Prasanna shares that same dedication. Jio Hotstar has encouraged meaningful cinema and added great value to this project. Kenatha Kaanom will surely win hearts.”


Cinematographer Thyagu said, “A film like Kenatha Kaanom requires courageous producers, and I thank Ramesh sir and Jagan Sir. Despite his health challenges, Suresh Sangaiah delivered remarkable work. Yogi Babu sir was a tremendous pillar of support. Many first-time actors were part of this project, yet the rehearsals matched the standards of a big-budget film. The pre-production phase was extensive, and the producers stood firmly behind the vision.”


Music Director Nivas K Prasanna said, “I carry many memories associated with Kenatha Kaanom. It began in 2023 during a pooja ceremony, where I agreed to compose for this film even before listening to the script. That decision was purely out of trust in Ramesh Babu sir and Suresh Sangaiah sir. I believe this film will become a cherished one for all of us. Thank you.”


Director Suresh Sangaiah’s wife Thansi Fathima said, “Suresh sir often told me that the entire cast and crew were like his family. During moments of grief, many of them called me, but I did not know how to respond at the time. I sincerely apologise and thank them for their unwavering support. Suresh was always passionate about portraying realistic reflections of nativity.”


Actor Yogi Babu said, “Initially, I was the first choice for Kidaiyin Karuppu, but I was deeply involved in comedy roles and lacked the confidence to take it up then. Today, I feel grateful to have done a meaningful film for him. He was committed to capturing every scene with realism. I thank all the assistant directors for their dedication. When his daughter spoke today, I could truly feel his presence. I also aspire to write a script and provide an opportunity for an assistant director to make their debut.”


Producer Jagan said, “I am emotionally overwhelmed to see so many gathered here in honour of Suresh Sangaiah. Over the years, we have produced many films, but this one is very close to my heart. Suresh Sangaiah had numerous scripts and even wished to make a film with Nivas K Prasanna in the lead role someday. I thank the entire team for bringing this vision to life. I dedicate this film as a tribute to the immortal maker — Suresh Sangaiah.”

இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு

 *இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு*


















*சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது, பண்ணாலும் கேட்க மாட்டார்கள் - கரு பழனியப்பன்*


*நிவாஸ் கே. பிரசன்னாவின் மிகப்பெரிய ஃபேன் நான் - இயக்குநர் சுசீந்திரன்*


ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்." நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.


சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவுடன் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு பேசினர்.


அதன்படி இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது, "ஒரு கிடாயின் கருணை மனு" திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலை சொன்ன இயக்குநர், இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையை கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பை பலமடங்கு கொடுக்கக்கூடியவர். அவரது ரீ-ரெக்கார்டிங்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை," என்றார்.


இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, "கெணத்த காணோம்- வெறும் காமெடி வசனமாக உருவாகி தற்போது அரசியல் பேசும் வாக்கியமாக மாறி இருக்கிறது. கெணத்த காணோம் வரிசையில் ஆற்றை காணோம், ஏரியை காணோம் என இதை சுற்றிய அரசியல் ஆழமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தை தேடி படக்குழு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்துள்ளனர், எனினும் அதை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருக்கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, இதுதான் தமிழ் நாடு. நான் இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறேன், ஆனால் இத்தகைய நிலை மற்ற மாநிலங்களில் இல்லை. நடிகர் யோகி பாபுவுக்கு மண்டேலா எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ, அதேபோல் இந்தப் படமும் அவருக்கு இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. படம் இயக்கும் போது ஒரு இயக்குநர் மரணிப்பது பற்றி நிறைய பேசியிருக்கிறோம், ஆனால் அதன் வலி இந்த மேடையில் உணர முடிகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா "கெணத்த காணோம்" என்ற ஆழமான படைப்பை முன்னிறுத்தி இங்கிருப்பதாகவே பார்க்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்றார்.


விநியோகஸ்தர் குகன் பேசும் போது, "கெணத்த காணோம் என்ற தலைப்பு நடிகர் வடிவேலுவின் வசனமாக தொடங்கி இதில் யோகி பாபு சார் நடித்திருப்பது நல்ல காம்பினேஷன. இந்தப் படம் காமெடி டிராமா கதையம்சம் கொண்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தாய் கிழவி திரைப்படம் தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநர் இன்று இங்கு நம்முடனேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். இயக்குநருக்காக இங்கு மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி," என்றார்.


இயக்குநர், நடிகர் கரு பழனியப்பன் பேசும் போது, "அனைவருக்கும் வணக்கம், இங்கு முதலில் பேசிய சில இயக்குநர்கள் படத்திற்கு தொடர்புடையவர்களுடன் நன்கு அறிமுகமானவர்கள். தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவுடன் நீண்ட நாள் பழகியவர்கள். ஆனால், எனக்கு அவரை நேற்று தான் தெரியும். ஆனால், நீண்ட காலமாக அவரைப்பற்றிய நிறைய பேர் பேசி கேட்டிருக்கிறேன். தன் படங்கள் தவிர்த்து மற்ற படங்களில் பணியாற்றும் உதவி இயக்குநர்களைும் நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடியவர் ரமேஷ் பாபு. ஒரு இயக்குநர் இல்லாத போது, அவர் படத்தை பாராட்டி, அவரை கொண்டாடும் தயாரிப்பாளர் கிடைப்பது அரிதிலும் அரிது. அதனை சிறப்பாக செய்யும் ரமேஷ் பாபுவுக்காக இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, நடிகர் வடிவேலுவின் வசனம் அரசியல் கூற்றாகி இருப்பதாக தெரிவித்தார். வடிவேலு இல்லாமல் இன்று தமிழ் சினிமா இல்லை. அவரின் வசனங்கள் தான் இன்று அரசியல் கூற்றாக மாறி வருகிறது. சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது. அட்வைஸ் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், ஏன் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்றால் ஏற்கனவே வீட்டில் சொல்வதை கேட்காமல் தான் இங்கு வந்திருக்கிறோம்," என்றார்.


இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசும் போது, "அனைவருக்கும் வணக்கம், இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் பாபு சாரை படத்தின் பூஜையின் போது சந்தித்தேன். படத்தின் கதையை கேட்காமல் தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். படத்தின் ரீ-ரெக்கார்டிங்கின் போது தான் எனக்கும் சுரேஷ் சங்கையா சாருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அவர் தற்போது இல்லை என்றாலும், அவர் இங்கு நம்முடன் தான் இருக்கிறார். அவர் மரணிக்க சரியாக ஒரு வாரத்திற்கு முன் என்னை தொடர்பு கொண்டு, என்னை கோவில் ஒன்றுக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அவருடன் சென்று, நேரம் செலவழித்தேன். அதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை சரியான உறக்கம் இல்லாமல் இருந்தேன். அன்றிரவு கோவில் ஒன்றின் அருகே நான் மூன்று மணி நேரம் உறங்கினேன், அவர் என்னை எழுப்பாமல் என்னுடனேயே இருந்தார். அதன்பிறகு நான் அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றேன். அன்றைய நாள் அவருடன் கழித்த பிறகு எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. அவரின் நேர்மைக்காகவே இந்தப் படம் பெறும் வெற்றி பெறும், நன்றி," என்று தெரிவித்தார்.


நடிகர் யோகி பாபு பேசும் போது, "அனைருக்கும் வணக்கம், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி. சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை  கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், நன்றி" என்றார்.


இந்நிகழ்வில், நடிகர் யோகி பாபு சொன்னது போல், அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு மேடையிலேயே காசோலை வழங்கினார்.

தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!

 தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!










நடிகர் விதார்த் நடித்த “தொடக்கம்” திரைப்படம், Son of Wind Studios தயாரிப்பில், மார்ச் 2ஆம் தேதி பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மனதை உருக்கும் மற்றும் உணர்ச்சி பூர்வமான திரை அனுபவத்தை வழங்கவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் சிறப்பான தொடக்கமாக இவ்விழா அமைந்தது.


குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகிறது.

இந்தப் படத்தில் திறமையான நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர்:


சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா மற்றும் கேஷவ் ஆகியோர் நடித்துள்ளனர்.


இப்படத்தை ஒளிப்பதிவில் டிப்ளோமா பெற்ற அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான துளசி ராமன் இயக்குகிறார். இவர் முன்பு “Doppio” குறும்படத்தையும், “Punai” மற்றும் “Big Boss” போன்ற பைலட் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் “Tom and Jerry” மற்றும் “Ms. Priya” போன்ற தொடர்களையும் இயக்கிய அனுபவம் பெற்றவர். சமீபத்தில் CWC புகழ் தர்ஷன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடித்த “First Single” ஆல்பம் பாடலையும் இயக்கியுள்ளார். வலுவான காட்சிப்படைப்புத் திறனும் கதையாடல் நுணுக்கமும் கொண்ட துளசி ராமன், “தொடக்கம்” படத்திற்கு இயல்பான மற்றும் உண்மைத் தன்மையுள்ள அணுகுமுறையை வழங்குகிறார்.


தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:


இயக்குநர் – துளசி ராமன்


இசையமைப்பாளர் – பரத் ஷங்கர்


ஒளிப்பதிவாளர் – ஸ்ரீகாந்த்


எடிட்டர் – வச்சு லக்ஸ்மின்

கலை இயக்குநர் – Ralibedinez


பிஆர்ஓ – ரேகா


ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – ஜானி JD


ப்ரொடக்ஷன் மேனேஜர் – பொன்ராஜ்


மேக்கப் – ரமேஷ்


திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெறவுள்ளது. கதையின் உணர்ச்சி நயத்தை பிரதிபலிக்கும் இயற்கைச் சூழலைப் பதிவு செய்யும் வகையில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


பூஜையுடன் சிறப்பாக தொடங்கியுள்ள “தொடக்கம்” திரைப்படம் விரைவில்  படப்பிடிப்பை தொடங்கத் தயாராக உள்ளது.


Son of Wind Studios ஆதரவுடன் உருவாகும் “தொடக்கம்”, அர்த்தமுள்ள மற்றும் மனதில் நிற்கும் குடும்பக் கதையாக ரசிகர்களை சென்றடையத் தயாராக உள்ளது. திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.