Featured post

Made in Korea Movie Review

Made in Korea Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம made in korea படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது...

Saturday, 14 March 2026

Made in Korea Movie Review

Made in Korea Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம made in korea படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Ra. Karthik. இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதி இருக்காரு.  இந்த படத்துல Priyanka Mohan , Park Hye-jin, Si-hun Baek, Rishikanth, Ha-Ram Jo ,  Jae-hyeon Jang   னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை produce பண்ணிருக்கிறது Sreenidhi Sagar. இது ஒரு indo - korean movie. இந்த படம் netflix ல release ஆயிருக்கு. இந்த படம் tamil, telugu, malayalam, hindi, kannada ளையும் release பண்ணிருக்காங்க.   சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இப்போல்லாம் எங்க பாத்தாலும் south korea , K POP , K drama இதெல்லாமே trending ல இருக்கு. இந்த trending க்கு ஏத்த மாதிரி தான் இந்த கதையை கொண்டு வந்திருக்காங்க. indian storytelling மூலமா K drama vibes அ director கொண்டு வந்திருக்காரு. Priyanka Arul Mohan தான் shenba வா நடிச்சிருக்காங்க. இவங்க tamilnadu ல இருக்கற ஒரு சின்ன ஊரை சேந்தவங்க. இவங்களுக்கு korean culture மேல அவ்ளோ பைத்தியமா  இருப்பாங்க. இவங்களுக்கு K drama , k pop songs எல்லாமே ரொம்ப பிடிக்கும். ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ஆசை பட்ட மாதிரியே loan எடுத்து seoul க்கு போறாங்க. ஆனா இவங்க நினைச்சா மாதிரி seoul இல்ல. culture different அ இருக்கு, language பிரச்சனை, அவங்க சந்திக்கிற சவால்கள் னு கஷ்டப்படுறாங்க. என்னதான் seoul க்கு இவங்க ஆசை பட்டு போனாலும், ஒரு புது chapter இவங்க life ல தொடங்க ஆரம்பிக்குது. புது friends கிடைக்குது, முன்னாடி இருந்ததா விட இன்னும் தைரியமா இருக்காங்க. இந்த படத்துல ஒருத்தரோட அடையாளம், ஏக்கம் அப்புறம் எதிர்பாராம கிடைக்கற நட்பை பத்தி சொல்லுற விதமா அமைச்சிருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது priyanka mohan ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. இவங்களோட நடிப்பு எதார்த்தமாவும், sincere ஆவும் இருந்தது. இவங்களோட performance அ பாராட்டி social media ல நெறய audience post போட்டிருக்காங்க. நெறய பேர் இது ஒரு feel good movie நும் share பண்ணிருக்காங்க. korean wave நம்ம நாட்டுல அதிகமாவே உண்டு அதுக்கு மிக பெரிய காரணம் BTS தான். அந்த வகைல இப்போ இருக்கற k drama fans அப்புறம் GEN z க்கு கண்டிப்பா இந்த படம் பிடிக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. 


cultural fusion, seoul அப்புறம் tamilnadu ல இருக்கற hillstation ஓட அழகு னு படம் பாக்கவே ரொம்ப colourful அ இருந்தது. ஒரு அழகான indo korean படம் தான் இது.   இப்போ இந்த படம் netflix ல available அ இருக்கு.  family எல்லாம் ஒண்ணா சேந்து பாக்கவேண்டிய படம் தான் இந்த made in korea. சோ miss பண்ணாம பாருங்க.

Vowels Movie Review

 Vowels Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vowels  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை  Hemanth Kumar, Dhilip Kumar, Sangeeth, Santhosh Ravi, Jagan Rajendran னு மொத்தம் 5 பேர் இயக்கிருக்காங்க.  இந்த படத்துலYugi Sethu, Chinni Jayanth, Raj Ayyappa, Deepak Paramesh, Samyuktha Viswanathanனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



atlas map book அ பத்தி எல்லாரும் கேள்வி பட்டிருப்பிங்க. atlas book அ பாத்தீங்கன்னா எல்லா வகையான map யும் நீங்க பாக்கலாம். இந்த படத்தோட tagline அ பாத்தீங்கன்னா an atlas of love . அதாவுது different ஆனா love journey தான் இந்த படத்தோட கதையே ன்ற மாதிரி ஒரு clue குடுத்திருக்காங்க. இதுக்கு ஏத்த மாதிரி மொத்தம் அஞ்சு பேரோட காதல் கதைகளை காமிக்கறாங்க. ஓவுவுறு கதையும் கிட்டத்தட்ட 30 நிமிஷம் கிட்ட வருது. and ஓவுவுறு கதைகளும் வேற வேற மாதிரி தான் இருக்கும். இந்த படத்தோட ஆரம்பமே mars இல் ஒரு அழகி ன்ற ஒரு சின்ன கதையோட தான் ஆரம்பிக்குது. இந்த குட்டி கதையோட ஹீரோ movie critic podcaster அ இருக்காரு. இவரோட வேலையே படத்தை deep அ analyse பண்ணி மக்களுக்கு எடுத்து சொல்லுறது தான். முதல் scene லேயே camera வழியா ஒரு பொண்ணை காமிக்கறாங்க. அந்த பொண்ணோட அழகையும் பத்தி சொல்லுறாங்க. கூடியே சீக்கிரமே ஒரு twist ஒன்னு வருது. அது என்னனா hero திடுருனு camera முன்னாடி உக்காந்துகிட்டு ஒரு குற்றத்தை பண்ணிட்டேன் னு வாக்குமூலம் குடுத்துட்டு இருக்காரு. அதுக்கு அப்புறம் ஒரு flashback காமிக்கறாங்க அதுல இவங்க ரெண்டு பேரும் எப்படி சந்திச்சாங்க ன்ற விஷயத்தை காமிப்பாங்க. இந்த flashback ல இந்த ரெண்டு characters யும் நெறய படத்தை பத்தி பேசிருப்பாங்க. உதாரணத்துக்கு The Shawshank Redemption அப்புறம்  Kanchivaram படங்களை சொல்லலாம். இதுல இருந்தே director க்கு cinema எவ்ளோ பிடிக்கும் ன்றதை பத்தியும் தெரிஞ்சுக்கலாம். 


அடுத்த segment eros , இதை direct பண்ணது dhilip kumar . இதுவும் ஒரு love story தான். இதுல yugi sethu வும் சின்னி jayanth யும் இருக்காங்க. ஆனா இவங்க ரெண்டு பேரும் ஒரே time ல screen ல வரமாட்டாங்க. yugi sethu தான் eros யா நடிச்சிருப்பாரு. eros தான் greece நாட்டோட காதல் க்கான கடவுள். ஒரு  ஆளு க்கு breakup ஆயிருக்கும் அதுனால தன்னோட வாழக்கையை முடிக்கணும் னு முடிவு பண்ணிட்டு இருப்பாரு. இவருகிட்ட தான் Eros கதையை சொல்லிட்டு இருப்பாரு. இதுல yugi sethu வார்தைகளால விளையாடுறது, comedy பண்ணுறது னு எல்லாமே நல்ல இருக்கும். இந்த portion பாக்கும்போது audience க்கு கண்டிப்பா refreshing ஆவும் இருக்கும். இதுக்கு நடுவுல வர சின்ன கதை தான் chinnijayanth ஓடது. இவருக்கு ஒரு flashback story இருக்கும், கிட்டத்தட்ட powerpandi படத்துல வர கதை தான் இவரோட life ல நடந்திருக்கும். அதுனால இவரோட scenes மட்டும் நம்ம easy அ guess பண்ணற மாதிரி அமைச்சிருக்கும். 


மூணாவுது segment தான் வர்ணஜாலம், இதை direct பண்ணது santosh ravi. இதுல deepak paramesh அப்புறம் samyuktha viswanathan நடிச்சிருப்பாங்க. இந்த கதை முக்காவாசி hospital குள்ள தான் நடக்கும். இந்த கதையோட idea ரொம்ப simple love க்கான அடிப்படையே நம்பிக்கை தான். samyuktha ஒரு cancer patient அ இருப்பாங்க and deepak ஒரு photographer. ஒருத்தர் மனத்தளவு ல ரொம்ப பாதிக்கப்பட்ட அவங்கள காப்பாத்திக்க யாருகிட்டயும் பழகாம இருப்பாங்க. ஆனா காதல் னு ஒரு விஷயம் வரும்போது ஒருத்தர் மேல நம்பிக்கை வைக்க திறந்த மனசோட பழகுறது தான் சரியான விஷயம். இந்த segment ஓட time கம்மியா இருந்தாலும், emotional ஆவும் எதார்த்தமாவும் இந்த கதையை மக்களுக்கு கொண்டு போய் சேத்துருக்காங்க னு தான் சொல்லணும்.  eros ஜாலி ஆவும் happy ending ஓட இருந்தாலும் வர்ணஜாலம் ஒரு sincere ஆனா love story அ காமிச்சிருக்காங்க. 


நாலவுது segment தான் மீண்டும் ஒரு பயணம், இதை direct பண்ணது jagan rajendran . இது love story அ இருந்தாலும் road safety அ பத்தி ஒரு awareness சொல்லுற மாதிரி தான் இருக்கு. இந்த கதை ஒரு motorcycle racing அ பத்தி இருக்கு. raj ayappa தான் ஒரு mass ஆனா biker அ நடிச்சிருக்காரு. இந்த segment ல bike racing main அ இருந்தாலும் racing scenes ரொம்ப கம்மியா தான் இருக்கு. இந்த கதை மூலமா சொல்ல வர விஷயமும் ரொம்ப simple அ தான் இருக்கும் இருந்தாலும் suspense அ கடைசி வரைக்கும் கொண்டு வந்திருப்பாங்க. அஞ்சவுது segment தான் reload, இதை direct பண்ணது hemanth kumar. இந்த கதை ல வருவாங்க எல்லாரும் ஏதோ ஒரு mafia group அ சேந்தவங்க மாதிரி இருப்பாங்க. ஆனா இவங்களோட background அ clear அ காமிச்சிருக்க மாட்டாங்க. இந்த கதை ல relationship க்கு நடுவுல நம்பிக்கை இல்லனா அது எப்படி இருக்கும் ன்றதை காமிக்க்ர  விதமா அமைச்சிருக்கும். lovers  க்கு நடுவுல  trust மட்டும் இல்லனா overthink பண்ண வைக்கும்,  overthinking வந்துச்சுன்னா அந்த love நிலைச்சு நிக்காது. 


இந்த அஞ்சு different  ஆனா love story  அ வச்சு இந்த anthology படத்தை கொண்டு வந்திருக்காங்க directors . இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கது Saravanaa Subramaniam.  எல்லா கதைகளையும் ஒரு song  அ குடுத்திருக்காரு. அதே மாதிரி bgm மும் இந்த படத்துக்கு highlight அ அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

Kolai Seval Movie Review

 Kolai Seval Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம   kolai seval  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது VR Thudhivaanan.  இந்த படத்துலY Kalaiyarasan, Deepa Balu, Bala Saravanan, Gajarajனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



tamilcinema புராணங்கள் பத்தின கதைகளை காமிச்சிருக்கு. ஆனா ஊர் பகுதிகள் ல வழிபடுற கடவுள்கள், காவல் தெய்வங்களை பத்தின கதைகள் ரொம்ப rare தான். உதாரணத்துக்கு விருமாண்டி படத்துல Pekkaaman அப்புறம்  Virumandi தெய்வங்களுக்கு நடுவுல வர சண்டையை பத்தி சொல்லிருப்பாங்க. இந்த kolai seval படத்துல ஜாதிப்ரச்சனைல ஒரு பொண்ணை கொலை பண்ணிடுறாங்க கடைசில கொலைப்பண்ணபட்ட அந்த பொண்ணை தெய்வமா வழிபடுறாங்க அந்த ஊர் மக்கள். இந்த கதையை தான் ரொம்ப interesting அ மக்களுக்கு எடுத்து சொல்லிருக்காரு director. 


இந்த படத்தோட கதை திருவண்ணாமலை ல நடக்குது. kalaiyarasan தான் kaali ன்ற character ல நடிச்சிருக்காரு.kaali ஓட மனைவி தான் anusuya வா நடிச்சிருக்க deepa balu.  இவங்களோட குலதெய்வம் தான் நிறை சூலி ன்ற கடவுள். இந்த கடவுள்  கர்பிணியா இருக்கற மாதிரி தான் காட்சி குடுப்பாங்க. இந்த கோயில்க்கு போறதுக்கு தான் kaali யும் அவரோட குடும்பம் மும் ready ஆயிட்டு இருக்காங்க. இதுக்கு ஒரு காரணம் இருக்கு, kaali ஓட wife  pregnant அ இருப்பாங்க. இவங்களோட delivery safe அ இருக்கணும் ண்றதுக்காக தான் குலதெய்வ கோயில்க்கு போறதுக்கு plan பண்ணிருப்பாங்க.  இவங்க ready ஆயிட்டு இருக்கும்போது தான் ரெண்டு புது characters அ அறிமுகம் பண்ணுறாங்க. இவங்களும் அதே கோவில் க்கு தான் போவாங்க. கதை போக போக தான் இவங்க ரெண்டு பேரும் யாரு ன்றதை detailed அ தெரிய வரும். 


இந்த படத்தோட மொத்த கதையும் ஒரு விஷயத்தை சுத்தி தான் நடந்திருக்கும், மலை பகுதில இருக்கற அந்த கோவிலுக்கு போற hero ஓட குடும்பத்துக்கு என்ன ஆகும் ன்றது தான் கதையா இருக்கு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஆணவ கொலை யா பத்தி தான் சொல்லிருக்காங்க. உதாரணத்துக்கு anusuya காளியை கல்யாணம் பண்ணுறதுக்காக அவங்களோட குடும்பத்தை விட்டு ஓடி தான் வந்திருப்பாங்க. அதேமாதிரி இந்த soceity ல வாழுற சில பேரோட எண்ணம் எவ்ளோ கீழ்த்தனமா இருக்குன்றதை புரிய வைக்கிற மாதிரி பழைய படங்களோட தத்துவ பாட்டு  யும் bgm அ போட்டிருக்காங்க.  


balasaravana தான் kumar ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரு சென்னைக்கு வந்த காரணம் director ஆகணும் ண்றதுக்காக தான். குடி பழக்கத்தை பத்தியும் cinema வை பத்தியும் நெறய jokes  அ சொல்லிட்டு இருப்பாரு. இவரோட இந்த portion  எல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கும். இதுக்கு அப்புறம் படத்தோட கடைசில தான் kumar அ serious அ காமிச்சிருப்பாங்க. இருந்தாலும் இவரோட character க்கு இன்னும் detailing குடுத்து இருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல ஒரு பெரிய flashback portion குடுத்திருக்காங்க. இதுல kaali அப்புறம் anusuya ஓட love story , இதுனால ஏற்படுற ஜாதி பிரச்சனை, இவங்க ரெண்டு பேரோட family எப்படி பட்டது னு எல்லாம் clear அ explain பண்ணிருக்காங்க. flashback முடிஞ்சதும் climax scenes ரொம்ப violent ஆவும் ரத்தம் தெறிக்கற மாதிரி யும் குடுத்திருக்காங்க. இதுக்கு பதிலா  இந்த problem க்கு என்ன தீர்வு குடுத்த சரியா இருக்கும் ன்றதை பத்தி குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். 


இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யுமே super அ நடிச்சிருக்காங்க. இவங்களோட performance யும் எதார்த்தமாவும் இருந்தது. gajaraj தான் இந்த படத்தோட வில்லன். இவரு வர scenes எல்லாம் மிரட்டலா இருந்தாலும், இவரோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல ஒரு சில அழகான moments யும் இருந்தது. காளி ஓட அம்மா பசங்க கிட்ட அவங்க குலதெய்வ கதையை சொல்லுவாங்க. இந்த தெய்வத்தோட சிலை ஊர்காரங்களுக்கு எங்கயோ கிடைச்சிருக்கும், அதா எடுத்துட்டு வந்து தான் மக்கள் வழிபட்டுட்டு இருப்பாங்க. அதே மாதிரி anusuya, க்கு இந்த கோவிலுக்கு ஏற்கனவே வந்த மாதிரி ஒரு feeling இருக்கும். ஊர்ல வணக்கப்படுற காவல்தெய்வங்கள் ஒரு காலத்துல சாதாரண மனுஷங்களா இருக்கலாம், அவங்களும் இந்த மாதிரி பிரச்சனைகள் ல மாட்டி உயிரை விட்டிருக்கலாம் ன்ற மாதிரி director சொல்லிருப்பாரு.  கடவுளே வந்து ஜாதி ன்ற  ஒரு விஷயம்  கிடையாது னு சொன்னாலும், மக்கள் அந்த கடவுளை நிராகரிச்சிடுவாங்க,  காரணம் ஜாதியை ஆதிரிக்கற  கடவுள் தான் இவங்களுக்கு வேணும் ன்ற ஒரு voice over message அ குடுத்து இந்த படத்தை முடிச்சிருக்காங்க.  ஜாதியை விரும்புற மக்களோட மனநிலையை மாத்தவே முடியாது ன்றதை இந்த message  ஏ strong  அ சொல்லிருக்கும். 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

Vengence Movie Review

Vengeance Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vengeance படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது rahul ashok .  இந்த படத்துல abarnathi , ilavarasu , johnvijay , livingston , kaalivenkat , saravana subbiah னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

abarnathi தான் veni யா நடிச்சிருக்காங்க. இவங்க district collector . public ல இவங்களோட image ரொம்ப perfect அ இருக்கு, அதாவுது இவங்க நல்லவங்க ன்றது தான் மக்களோட opinion . படத்தை பாக்கும்போது எல்லா characters யும் மறைமுகமாவோ இல்ல நேரடியாவோ veni க்கு தான் help பண்ணுறாங்க. முதல் தடவை பாக்கும்போது twist அ இருந்தாலும் கதை போக போக இது ஒரு pattern மாதிரி இருக்கு. இவங்களோட image perfect அ இருக்கறதுக்கு காரணம் news ல இவங்கள பத்தின செய்தி அடிக்கடி வர்ரது தான். அனாதை கொழந்தைங்கள தத்து எடுத்துக்கறாங்க. news ல headlines அ வரணும் ண்றதுக்காக ஊழல் பண்ண அதிகாரிங்க மேல சீக்கிரமா action எடுக்கறாங்க. இது எல்லாம் veni ஓட வெளி தோற்றம் தான். ஆனா இவங்களுக்கு இன்னொரு முகம் இருக்கும் அது தான் ரொம்ப danger ஆனா ஒன்னு. private அ இவங்க ஒரு MLA கிட்ட இருந்து அவரு பண்ணுற illegal business ல இருந்து 20 percent share கேக்குறாங்க. இவங்கள பத்தி எந்த ஒரு news யும் மூணு நாளைக்கு தொடர்ந்து வராது அதுனால ரொம்ப பதட்டப்படுறாங்க. 

இவங்கள பத்தி ஒடனே ஒரு நல்ல செய்தி வரணும்ன்றதுக்காக இவங்க deal பேசுனா அதே MLA வை நடு ராத்திரில arrest பண்ண சொல்லி police க்கு order போடுறாங்க. இந்த விஷயம் media கேள்விப்படும்போது கண்டிப்பா headlines அ வரும் னு veni நம்புறாங்க. இதுல இருந்து இவங்க புகழுக்கு எப்படி அடிமையா இருக்காங்க ன்றது நல்லாவே தெரியும். 


இப்போ veni க்கு மறைக்கப்பட்ட past ஒன்னு இருக்கும். சின்ன வயசுல veni யா kaalivenkat தான் தத்து எடுத்திருப்பாரு. veni ஏதோ ஒரு காரணத்துக்காக இவரை கொலை பண்ணிடுற. இதோட veni நிறுத்தலை, kaalivenkat ஓட உடல் உறுப்புகளை தானம் பண்ணிருப்பா. இது பண்ணதுக்கு காரணம், இந்த விஷயம் கேள்விப்படும்போது எல்லாரும் இவளை பாராட்டு வாங்க ண்றதுக்காக தான். இந்த past ரொம்ப disturbing அ இருக்கும். என்னதான் கதை ரொம்ப interesting அ போனாலும் இதை இன்னும் perfect அ execute பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும் .படத்துல ஒரு சில scenes, veni எவ்ளோ powerful ஆனா character னு காமிக்க வச்சிருக்காங்க. உதாரணத்துக்கு, veni ஓட பழைய classmate bar license கேட்க veni கிட்ட வருவான். ஒரு அரசியல்வாதி veni யை challenge பண்ணுவான். இது மட்டும்  இல்ல prime minister ஏ வந்து veni கிட்ட national politics ல வந்து சேந்துரு னு வந்து சொல்லுவாரு. 


இந்த படத்துல நெறய twist and turns யும் இருக்கும். அதுல ஒன்னு பாத்தீங்கன்னா, veni க்கு villain அ வர ஒரு சில பேர் secret அ veni க்கு தான் help பண்ணிட்டு இருப்பாங்க. john vijay madhav ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரோட character எப்பவும் போல வில்லத்தனமா நடிச்சிருக்காரு. இவரு plan பண்ணுற விதம் , சத்தம் போடுறது எல்லாமே பாக்கும் போது ஒரு irritating ஆனா வில்லன் மாதிரி தான் இருக்கும். ilavarasu தான் Chief minister velu வா நடிச்சிருக்காரு. இவரோட performance யும் நல்ல இருந்தது. இவருக்கும் veni க்கும் எப்பவுமே set ஆகாது. இந்த படத்துல action scenes லாம் கூட வச்சிருக்காங்க. veni ஓட வீட்டுக்கு ஒரு சில guns ஓட வருவாங்க. அவங்கள எதிர்த்து சண்டை போடுவாங்க veni. படத்துல ஒரு சில இடங்கள் ல AI scenes யும் use பண்ணிருக்காங்க. 


abarnathi ஓட acting நல்ல இருந்தது. ஒரு district collector க்கு ஏத்த மாதிரி ரொம்ப அமைதி ஆவும் intelligent ஆவும் நடிச்சிருக்காங்க. இவங்க புகழுக்கு அடிமையா இருந்தாலும் ஒரு சில இடங்கள் ல இவங்க character அ ரசிக்கிற விதமாவும் அமைச்சிருக்கு. இவங்க character ரொம்ப complex அ இருந்தாலும், abarnathi அழகா நடிச்சிருக்காங்க. 


ஒரு interesting ஆனா கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

Kenatha Kanom Movie Review

Kenatha Kanom Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kenathai kanom படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Suresh Sangaiah .  இந்த படத்துல  Yogi Babu , Raichal Rabecca, George Maryan, and Lovelyn Chandrasekhar.னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இது ஒரு comedy drama படம் அதோட mystery யும் இருக்கு. சாதாரண மக்கள் ஒரு எதிர்பாராத situation ல மாட்டிக்கிட்ட எப்படி இருக்கும் ன்றது தான் இந்த படத்தோட one line கதை னு சொல்லலாம். தமிழ் cinema ல இது வரைக்கும் நெறய கதைகள் வந்துருக்கு, புதுசாவும்  try பண்ணிருக்காங்க ஆனா இந்த படத்தோட கதை கொஞ்சம் வித்யாசமாவும் refreshing  ஆவும் இருக்கு னு தான் சொல்லணும். இந்த படத்துல வர எல்லா characters யும் ஒரு சாதாரண வாழக்கையை தான் வாழ்ந்துட்டு இருப்பாங்க ஆனா திடுருனு ஏதோ ஒரு காரணத்துக்காக சிலர் மாயமா மறைஞ்சு போயிடுறாங்க. இதுனால இவங்களுக்குள்ள பயம் வருது. இந்த பிரச்சனைக்கு பின்னாடி இருக்கற ரகசியத்தை தெரிஞ்சுக்க இவங்க எல்லாரும் investigate பண்ண ஆரம்பிக்குறாங்க. அப்படி பண்ணும்போது இவங்களுக்குள்ள misunderstanding , secret னு நெறய வருது .ஓவுவுறு பிரச்னையும் தீர்க்கும்போது புதுசா ஒரு பிரச்சனை வருது. இதெல்லாமே ரொம்ப comedy ஆவும் jolly ஆவும் எடுத்துட்டு போயிருக்காரு director. 


yogibabu ஓட character தான் இதுல main அ இருக்கு. இவரோட curiosity தான் இந்த கதையை முன்னாடி நகர்த்திடு போகுது னு சொல்லலாம். இவரு மத்த characters ஓட பேசும்போது தான் நெறய comedy situations வருது. என்னதான் படம் ஆரம்பத்துல comedy அ ஆரம்பிச்சாலும், கதை போக போக trust, relationship அப்புறம் personal responsibility னு இந்த விஷயங்கள் எல்லாத்தயும் deep அ explore பண்ணிருக்காங்க. அது மட்டுமில்ல ஓவுவுறு characters யும் அவுங்க பண்ணுற செயல் க்கான  வினையை அனுபவிக்கவும்  கத்துக்கறாங்க அதோட  அவங்க எதிர்பாராத சில கசப்பான உண்மைகளையும் ஒத்துக்க வேண்டிய நிலைமையும் வருது. படம் climax  க்கு வரும்போது ஒருத்தர் காணாம போய்ட்டாரு ன்றதை தாண்டி ஒருத்தருக்கு பிரச்சனை வரும்போது அவங்க எப்படி பட்ட முடிவை எடுக்கறாங்க ன்றதை பத்தி தான் சொல்லுறாங்க. 


இந்த படத்துல சொல்ல வர விஷயங்களும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் னு தான் சொல்லணும். உதாரணத்துக்கு, friends அ இருக்கட்டும் family அ இருக்கட்டும், misunderstanding ன்ற ஒரு விஷயம் உள்ள வந்துட்டா அது பிரச்சனை தான். அவுங்க அவுங்க செய்யுற செயல் க்கான வினையை அவங்க அவுங்க தான் அனுபவிக்கனும். அதே சமயம் அவங்க பண்ண தப்பை திருத்திக்கவும் செய்யணும். மறப்போம் மன்னிப்போம் தான் ஒருத்தரோட மன வளர்ச்சி க்கு அடிப்படையான விஷயம் னு சொல்லிருக்காங்க. 

director suresh , comedy அ மட்டுமே நம்பாம emotional ஆனா கதையை suspense ஓட சொல்லிருக்காரு. அதுனாலயே இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி அமைச்சிருக்கு. இந்த படத்துல வர ஓவுவுறு characters க்கும் importance குடுத்திருக்காரு. அவங்க personal அ எப்படி பட்டவங்க ன்றதை time எடுத்து screen ல காமிச்சிருக்காரு. ஓவுவுறு scenes யும் audience க்கு connect ஆகுற மாதிரி natural அ கதையை நகர்த்திடு போயிருக்காரு. ஒரு பக்கம் emotional இன்னொரு பக்கம் comedy னு இருந்தாலும் இது ரெண்டுத்தயும் balance பண்ணி கதையை எடுத்துருக்காரு. இது தான் இந்த படத்துக்கு பக்க பலம் னு சொல்லலாம். 


இந்த படத்துல நடிச்ச actors ஓட performance னு பாக்கும்போது yogibabu வை பத்தி சொல்லியே ஆகணும். tamil cinema ல இருக்கற lead comedy actor இவரு தான். மறுபடியும் இவரோட performance மூலமா audience அ அவரு பக்கம் இழுத்துருக்காரு. comedy மூலமா audience அ சிரிக்க வைக்கவும் emotional scenes மூலமா audience ஓட மனசை வருடரா  மாதிரி super அ நடிச்சிருக்காரு. இவரோட face reaction , dialogue delivery எல்லாமே பக்கவா இருந்தது. rachael rebecca ஓட நடிப்பு எதார்த்தமாவும் genuine ஆவும் இருந்தது. george maryan ஓட நடிப்பும் நல்ல இருந்தது. lovelyn chandrasekar ஓட portions யும் super அ இருந்தது. 


இந்த படத்தோட technical aspect அ பாக்கும்போது Thiyagarajan  ஓட cinematography அப்புறும் visual style எல்லாமே perfect அ இருந்தது. characters க்கு நடுவுல நடக்கற conversations , அவங்களோட facial expressions , comedy timing , bodylanguage னு இதெல்லாம்  தான் main  அ focus பண்ணிருக்காங்க. இந்த கதைக்கு natural lighting அப்புறம் warm colour tones பயன்படுத்திருக்காங்க. Nivas K Prasanna ஓட music and bgm எல்லாமே அட்டகாசமா இருந்தது. comedy scenes வரும்போது energetic ஆனா bgm மும் , emotional scenes வரும்போது soft ஆனா bgm மும் use பண்ணிருக்காங்க. 


மொத்தத்துல ஒரு அசத்தலான comedy திரைப்படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

Police Family Tamil Movie Review

 Police Family Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம police  family படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது பாலு. இந்த படத்துல  saravanan, காதல் சுகுமார், nisha dubey , surekha, rojan leon னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



dhana வா நடிச்சிருக்க saravanan powerful ஆனா local don. இவரு மத்த politicians ஓட எப்பவுமே சண்டைல தான் இருப்பாரு. அதுனால இவரோட family அ கொலை பண்ணிடுறாங்க. இங்க இருந்து தப்பிக்கிறதுக்காக dhana அவரோட பையன் vinoth அ கூட்டிட்டு மதுரை க்கு வந்துடுறாரு. இப்போ ஏதோ ஒரு சில காரணத்துக்காக vinoth அ ஒரு நாலு police officers போட்டு அடிக்கிறாங்க. இந்த police team அ lead பண்ணுறது SI raja. vinoth ஓட background அப்புறம் அப்பாவோட செல்வாக்கை பத்தி தெரிஞ்சஓடனே ஆள்நடமாட்டம் இல்லாத area வா பாத்து vinoth அ தூக்கி போட்டுடறாங்க. vinoth ஓட உடம்பு ல நெறய காயங்கள் இருக்கும், மயக்க நிலமைல தான் இருப்பாரு. ஆனா மறுநாள் vinoth இறந்து போய்ட்டாரு ன்ற செய்தியும் வருது. dhana க்கும் இந்த விஷயம் தெரிய வருது. vinoth அ கொன்னது அந்த police officers தான் னு நம்பி அவங்களையும் அவங்க குடும்பத்தையும் பழி வாங்க plan பண்ணுறாரு. அதே மாதிரி அவங்க family யையும் கொள்ள ஆரம்பிக்குறாரு. இருந்தாலும் police ஆழ அவரை ஒண்ணுமே பண்ணமுடில. என்னதான் police vinoth அ போட்டு அடிச்சிருந்தாலும் அவரை கொன்னுருக்க மாட்டாங்க. யாரோ ஒருத்தர் vinoth அ கழுத்தை நெறிச்சு கொன்னுருப்பாங்க. vinoth அ யாரு கொலை பண்ணா றத்தை விசாரிக்க ஆரம்பிக்குறாங்க police. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sub inspector அ நடிச்சிருக்க raja malasamy ஓட நடிப்பு மிரட்டலா இருந்தது. இவருக்கு இது தான் முதல் படமா இருந்தாலும் எதார்த்தமா நடிச்சிருக்காரு. ஒரு police officer அ இவரோட வேகம், சாதுர்யம், பழிவாங்குற எண்ணம், ஒரு அப்பாவா தன்னோட பொண்ணுக்கு ஏற்பட்ட அநியாயத்தை  பாத்து இவருக்கு ஏற்படுற கோவம், சோகம் னு எல்லாமே super அ நடிச்சிருக்காரு.   saravanan  local don அ நடிச்சிருக்காரு. villain  அ இருந்தாலும் தன் பையன் மேல வச்சிருந்த பாசம் னால இவரு எடுக்கற revenge தான் இந்த கதையை வேகமா நகர்த்திடு போகுது. kadhal sugumar ஓட character யும் நல்ல இருந்தது. heroine  அ நடிச்சிருக்க nisha dubey அவங்க role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. மத்த supporting actors ஆனா சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா னு இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது jeyakumar thangavelu ஓட cinematography கதைக்கு ஏத்த மாதிரி எளிமையாவும் characters ஓட வலியையும் அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. jaya k dass ஓட music அப்புறம் bgm இந்த கதைக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. m s selva ஓட editing யும் இந்த கதையை sharp ஆவும் crisp ஆவும் edit பண்ணிருக்காரு. 


police station ல விசாரணை நடத்தறோம் ன்ற பேர்ல நடக்கற கொலைகள் நம்ம எத்தனையோ படிச்சிருக்கோம். இதை பின்னணியா வச்சு தான் இந்த படத்தோட கதையை எடுத்திருக்காங்க. thriller , crime , suspense னு எல்லாமே இருக்கற அட்டகாசமான திரைக்கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

Friday, 13 March 2026

"யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

 "யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு 

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,  ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான  கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. 


அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.'யூத்' திரைப்படத்தை முதல் பாடலான 'முட்ட கலக்கி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பறந்தனே பெண்ணே' பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான 'ஆச புள்ள' வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.


இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இந்நிலையில் இப்படத்தின் திரைப்பட முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 



இந்நிகழ்வினில் 


நடிகை நளினி பேசியதாவது.., 


நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கருணாஸ் சார் மற்றும் அவர்களின் மகன் கென் என்னை அழைத்து இந்த ‘யூத்’ படத்தில் நடிக்க வைத்தார். முதலில் ஒரு சிறிய வேஷம் தான் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் நடிக்கும்போது நான் மீண்டும் ஒரு புதிய அனுபவம் பெற்றேன். ஷூட்டிங்கில் அவர்கள் என்னை மிகவும் கவனமாக கையாண்டு, என் நடிப்பை மேலும் மெருகேற்றி வைத்தார். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்துவிட்டது.


இந்த ‘யூத்’ பட டீம் மிகவும் எனர்ஜியாக வேலை செய்கிறார்கள்.  கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஷூட்டிங் செய்வார்கள். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அவர்கள் அர்ப்பணிப்பு பார்க்கும்போது மகிழ்ச்சி தான். என் வாழ்க்கையில் நான் முதன்முறையாக டப்பிங் தியேட்டருக்கு போய் டப்பிங் பேசினேன். அதற்கும் இந்த படக்குழுவே காரணம். இந்த படத்தில் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திய கென்னுக்கும், கருணாஸ் அவர்களுக்கும், முழு யூத் டீமுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடவுள் உங்களுக்கு இன்னும் பெரிய வெற்றிகளை கொடுக்கட்டும்.





நடிகை தேவதர்ஷிணி பேசியதாவது.., 


யூத் படத்தின் ஹீரோ கேன் கருணாஸுக்கு முதலில் வாழ்த்துகள். இந்த படத்தில் அவருடைய முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவர் இசை ரசிகர்களை கவரும். நளினி மேடம் டிவி ஷீட்டிங்கில் 6மணிக்கு கிளம்பி விடுவார் ஆனால், இப்படத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து டயலாக் படித்து, முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


கென் கருணாஸை ஒரு நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் அவர் ஒரு இயக்குநராக இன்னும் பெரிய அளவில் பிரகாசிப்பார். இந்த படம் வெளியான பிறகு, நடிகர் கென்னை விட இயக்குநர் கென்னை மக்கள் அதிகமாக பாராட்டுவார்கள்”சுராஜ் சாருடன் பணியாற்றியது மிக அருமையான அனுபவம்.  இந்த படத்தில் அவர் தான் ஒரிஜினல் ஹீரோ, கலக்கியிருக்கிறார்

“இந்த படத்தின் மூலம் பலருக்கு வாய்ப்பு கொடுத்த கேன் கருணாஸுக்கு நன்றி. இந்த ‘யூத்’ படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”. 




நடிகை மீனாட்சி தினேஷ் பேசியதாவது.., 


யூத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.“என் வாழ்க்கையில் லக் ஒன்றே இல்லை என்று நினைத்தேன். ஆனால் கென்னை சந்தித்த பிறகு தான் எனக்கு லக் வந்தது போல உணர்கிறேன். இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்கு அவருக்கு நன்றி”. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற பெரிய கலைஞர்கள் முன்னிலையில் இந்த மேடையில் நிற்பது கனவு நனவானது போல இருக்கிறது. 


தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும், ஒளிப்பதிவாளர் விக்கி சாருக்கும் பெரிய  நன்றி இந்த படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது என்றும் அனைவரும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள்,  சுராஜ் சார், நளினி மேடம் மற்றும் மற்ற நடிகர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. 




நடிகை பிரியன்ஷி யாதவ் பேசியதாவது.., 


இந்த படம் எங்களுக்கு  ஒரு கனவு திட்டம். இந்த படம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று பேசிக்கொண்டே இருப்போம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு மிகவும் நன்றி.  தமிழ் மொழி தெரியாதிருந்தாலும், படக்குழுவில் இருந்த டீம், முழு யூனிட்டும் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள்.  நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மையாக உழைத்திருக்கிறோம். இந்த படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும், நன்றி. 




நடிகை அனிஷ்மா பேசியதாவது..,


“எனக்கு இந்த மேடையில் நிற்பதே மிகவும் பதட்டமாக இருக்கிறது. இத்தனை பெரிய ரசிகர்கள் முன்னால் பேசுவது ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த கென்னுக்கு மிகவும் நன்றி. இது என்னுடைய கனவு திரைப்படம் போல தான்.

கென் இந்த வயதிலேயே மிகவும் கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படம் அவருடைய வாழ்க்கையை இன்னும் பெரிய அளவில் மாற்றும் என்று நம்புகிறேன்”.


தயாரிப்பாளர் கருப்பையா, மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி. “ஜி.வி. பிரகாஷ் சார் இசைக்கு நான் பெரிய ரசிகை. அவருடைய பாடல்களுக்கு வீட்டிலேயே டான்ஸ் ஆடியிருக்கிறேன். இன்று அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். மேலும், சுராஜ் சார், தேவதர்ஷிணி மேடம் மற்றும் முழு படக்குழுவுக்கும் நன்றி, இந்த படம் அனைவருக்காகவும் வெற்றி பெற வேண்டும்.





நடிகர் சுராஜ் பேசியதாவது.., 


எல்லா தமிழ் மக்களுக்கும் வணக்கம். இது என்னுடைய இரண்டாவது தமிழ் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி மேம், நளினி மேம் போன்ற அனுபவமுள்ள நடிகைகளுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. அதேபோல் அனிஷ்மா, மீனாட்சி, பிரியாஞ்சி ஆகிய ஹீரோயின்களும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். சின்னாவின் மிமிக்ரி திறமை எனக்கு மிகவும் பிடிக்கும்.


கென் கேரளா வந்து கதையை சொன்னபோது ஒவ்வொரு கேரக்டரின் உணர்ச்சிகளையும் நடித்துக் காட்டி கதையை விவரித்தார். கூடவே மொபைலில் படம் முழுவதையும் முன்கூட்டியே எடுத்துக் காட்டினார். அப்போதே படம் பார்த்த மாதிரி உணர்வு வந்தது. கென் ஸ்கிரீன் பிரெஸன்ஸும், சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்பது உறுதி. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் மிகப் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார். அவரும் தமிழில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சார் இசை மிகவும் அருமையாக உள்ளது. அவருடைய இசைக்கு நான் பெரிய ரசிகன்.


இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் தனுஷ் சார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் சார் ஆகியோருக்கும் நன்றி. வெற்றிமாறன் சார் இயக்கிய படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன் என்றும், அவருடன் ஒரு நாள் வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை.  “இந்த ‘யூத்’ படத்தில் நம்ம வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் இருக்கும். மார்ச் 19 அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குக்கு வந்து ஆதரிக்க வேண்டும்” நன்றி. 





நடிகர் கருணாஸ் பேசியதாவது.., 


இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் பெருமையான தருணம்.  “கென்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்தியது வெற்றிமாறன். அதே நேரத்தில் அவரிடம் இருந்து இயக்கம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது தனுஷ். இந்த இருவரும் இங்கே வந்து அவனுக்காக நிற்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி”


தனுஷ் “நான் அவரை முதன்முதலாக சந்தித்த போது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ‘காதல் கொண்டேன்’ படத்தை பார்த்த பிறகு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நடிகர் கிடைத்திருக்கிறார் என்று நான் சொன்னேன். இன்று இந்திய சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்”.


“நான் சிறு வயதிலிருந்தே மேடைகளில் இருந்து மக்களை சந்தித்து வருகிறேன். சினிமாவை நாம் உண்மையாக நேசித்தால், சினிமா ஒருபோதும் நம்மை கைவிடாது என்று நான் நம்புகிறேன்” கென் இந்த படத்தை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளார், தயாரிப்பாளர் கருப்பையா மற்றும் அவரது குழுவினர் இந்த படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சம்பளம் கேட்காமல் இந்த படத்திற்கு இசை அமைத்ததற்கு நன்றி. இறுதியாக, “இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றி. ‘யூத்’ படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” நன்றி. 


தயாரிப்பாளர் கருப்பையா பேசியதாவது.., 

கென்னை எனக்கு நல்ல பழக்கம் அவர் கதை வைத்து சுற்றிக்கொண்டிருந்த போது நானும் படம் செய்ய சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு தயாரிப்பில் என்னை செய்ய சொன்னபோது நான் கென் கதையை முதலில் செய்யலாம் என முடிவு செய்து கதை கேட்டேன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. பின் அந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. ஆனால் இந்தப்படத்தை விட மனமில்லை என்ன ஆனாலும் ஓகே என நானே இப்படத்தை ஆரம்பித்தேன். கென் அற்புதமாக இப்படத்தை உருவாக்கி தந்தார். படம் விற்பனையும் ஆகிவிட்டது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்த பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தாருக்கு நன்றி. 

இப்படத்தில் பணியாற்றிய சுராஜ் சார், நாயகிகள் உட்பட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன் அவர் வந்து வாழ்த்தியது பெருமை. வெற்றிமாறன் சாருக்கு மிகப்பெரிய நன்றி அனைவருக்கும் நன்றி. 





இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது…


“தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற மிகவும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர்களிடம் கற்றுக்கொண்ட ஒரு பையன் தான் கென். ஆனால் அவர் ஒரு பேக் பெஞ்சர் மாதிரி ஜாலியாக ஒரு யூத் படத்தை எடுத்திருக்கிறார். பள்ளி பின்னணியில் பசங்களின் வாழ்க்கையை வைத்து ஒரு கலகலப்பான படம் பண்ணியிருக்கிறார் கருணாஸ் மூலம் தான் இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, நான் முதல் படத்தில் நடிக்கும் போது அவரிடம் இருந்து தன்னுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது, அதற்காகவே அவர் மகன் படத்தில் வேலை செய்ய நினைத்தேன். 


இந்த படத்தில் நடித்த தேவதர்ஷினி, நளினி, சுராஜ் மற்றும் மூன்று ஹீரோயின்களான பிரியாஞ்சி, மீனாட்சி, அனிஷ்மா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ‘யூத்’ படம் கண்டிப்பாக ஒரு நல்ல யூத் என்டர்டெயினராக இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும்” நன்றி. 





இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,


“இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான்” கென்னுக்கு என் வாழ்த்துக்கள்.  கென்  கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார்.


“கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது”. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார் செதுக்கியிருக்கிறார்.“கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த ‘யூத்’ படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்”  வாழ்த்துக்கள்.




இயக்குநர் நடிகர் கென் கருணாஸ் பேசியதாவது.., 


“இந்த படத்தில் என்னை நம்பி நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. என்னை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களை நினைவுகூறுகிறேன் அவர் ஆசிர்வாதம் இருக்குமென நம்புகிறேன்.  அதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் எனது திறமையை கண்டுபிடித்து ஊக்கமளித்தவர் அவருக்கு  நன்றி.


தனுஷ் சார் தெரிந்தோ தெரியாமலோ அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்று நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு அவர் ஒரு முக்கிய காரணம்” அவருக்கு என் நன்றி.  அவர் முன்னால் நான் இயக்குநராக மேடையில் நிற்பது பெருமை. இந்த படத்தை தயாரித்த கருப்பையா மற்றும் அவரது குழுவினருக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அளித்த ஆதரவுக்கும் நன்றி. இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் நன்றி.




கிரேஸ் கருணாஸ் பேசியதாவது…, 


தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.அசுரன் படத்தின் போது கென்னுக்கு ஒரு கேரக்டர் கிடைத்தபோது, அவர் படப்பிடிப்பிலும் படிப்பிலும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது, ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு பெரிய அனுபவமாக அமைந்தது..


“ஒரு நடிகன் நல்லா நடித்தான் என்று சொல்வது பெரிய விஷயம் இல்லை. அந்த கேரக்டரை அவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று மக்கள் நினைத்தால் தான் அவர் உண்மையான நடிகன். தனுஷ்  நடிப்பில் ஒரு “யூனிவர்சிட்டி” போல கென், அவருடன் இருந்தாலே நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் வந்திருப்பது நம்பமுடியாத கனவு போல உள்ளது.  இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. தயாரிப்பாளர் பெரிய அளவில் முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டும்”  நன்றி.





நடிகர் தனுஷ் பேசியதாவது.., 


முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராடுக்கள். “23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்த படத்தை தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையாதான்”. கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். 


ஒரு படத்திற்கு ஒரு அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்தது தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி. 


படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் இந்த படத்திற்கு ஒரு பெரிய வலிமையாக உள்ளனர்.  


அசுரன் படத்தில் முதலில் கென்னைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும். 


இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது,  நான் இப்போது வேண்டாமே என்றேன் ஆனா அதை 

தவறென்று நிரூபித்திருக்கிறார். 


“முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கேன் தனது கவனத்தை முழுவதும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கேனுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.




பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள “யூத்" திரைப்படம், மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

KAATTAAN’ TRAILER EXPANDS THE MYSTERY AROUND MUTHU’S SEVERED HEAD*

 KAATTAAN’ TRAILER EXPANDS THE MYSTERY AROUND MUTHU’S SEVERED HEAD*





Chennai, March 13, 2026: Following its internet-shattering teaser, which unveiled the bizarre mystery of a severed head, JioHotstar has dropped the gripping trailer for its upcoming series ‘Muthu Alias Kaattaan’, diving deeper into the show's intriguing world.


While the teaser ignited curiosity with Muthu's shocking severed head, the trailer expands the narrative, revealing layered accounts from characters who paint vastly different portraits of the man. Feared outlaw or misunderstood hero? As perspectives clash, the mystery deepens, slowly unraveling the truth behind Muthu and the events that led to his gruesome discovery.


Headlined by Vijay Sethupathi, the series also features Milind Soman, Sudev Nair, and Muthukumar, among other prominent faces.


Talking about the trailer, Vijay Sethupathi, said, “When Manikandan first narrated Kaattaan to me, he shared a six-page synopsis. I was instantly hooked by the character and the world he had imagined. Working on this series gave me a real sense of peace as an actor. I truly hope that when audiences watch it, they walk away with something meaningful to reflect on.”


Sharing his thoughts on the trailer, Milind Soman, said, "As someone who is selective about projects he chooses, Kaattaan stood out for its gripping narrative and bold characters and Sivettan was a role I couldn't resist. Working on the series was an absolute thrill from the immersive sets, sharp direction, and collaborating with Vijay Sethupathi and the team brought this enigmatic figure to life in ways that pushed me creatively."  


The series is created by National Award-winning filmmaker M. Manikandan, known for his distinctive storytelling voice. Direction is helmed by M. Manikandan and B. Ajith Kumar, while acclaimed cinematographers Madhu Neelakandan and N. Shanmuga Sundaram craft the striking visual language of the series. The music is composed by Rajesh Murugesan, adding a powerful sonic dimension to the world of Kaattaan.

Muthu Alias Kaattaan will stream from March 27 exclusively on JioHotstar in seven languages — Tamil, Hindi, Telugu, Malayalam, Kannada, Marathi, and Bengali.



TRAILER LINK: 




https://www.youtube.com/watch?v=6QhTM9QuP_Y

காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள

*காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது*





 ஜியோஹாட்ஸ்டார்  வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும்  " முத்து என்கிற காட்டான்  " வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக  நடிகர் விஜய்சேதுபதியின்  துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.


முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள  டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது.


இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன்  பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில்  காட்டப்படும்  டிரெய்லர்  வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது .


முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன.


நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.


டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன்

மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.


தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் எம். மணிகண்டன் உருவாக்கிய இந்தத் தொடர், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படுகிறது. இதை எம். மணிகண்டனும், பி. அஜித் குமாரும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தர் இந்தத் தொடரின் வலுவான காட்சித்தன்மையை வடிவமைத்துள்ளனர். ‘காட்டான்’-ன் உலகத்திற்கு சக்திவாய்ந்த ஒலிபரிமாணத்தை வழங்கும் வகையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார். முத்து என்கிற காட்டான்’, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

TRAILER LINK:

 https://www.youtube.com/watch?v=6QhTM9QuP_Y

*