Featured post

"யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

 "யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு  பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்...

Friday, 13 March 2026

"யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

 "யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு 

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,  ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான  கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. 


அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.'யூத்' திரைப்படத்தை முதல் பாடலான 'முட்ட கலக்கி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பறந்தனே பெண்ணே' பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான 'ஆச புள்ள' வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.


இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இந்நிலையில் இப்படத்தின் திரைப்பட முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 



இந்நிகழ்வினில் 


நடிகை நளினி பேசியதாவது.., 


நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கருணாஸ் சார் மற்றும் அவர்களின் மகன் கென் என்னை அழைத்து இந்த ‘யூத்’ படத்தில் நடிக்க வைத்தார். முதலில் ஒரு சிறிய வேஷம் தான் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் நடிக்கும்போது நான் மீண்டும் ஒரு புதிய அனுபவம் பெற்றேன். ஷூட்டிங்கில் அவர்கள் என்னை மிகவும் கவனமாக கையாண்டு, என் நடிப்பை மேலும் மெருகேற்றி வைத்தார். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்துவிட்டது.


இந்த ‘யூத்’ பட டீம் மிகவும் எனர்ஜியாக வேலை செய்கிறார்கள்.  கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஷூட்டிங் செய்வார்கள். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அவர்கள் அர்ப்பணிப்பு பார்க்கும்போது மகிழ்ச்சி தான். என் வாழ்க்கையில் நான் முதன்முறையாக டப்பிங் தியேட்டருக்கு போய் டப்பிங் பேசினேன். அதற்கும் இந்த படக்குழுவே காரணம். இந்த படத்தில் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திய கென்னுக்கும், கருணாஸ் அவர்களுக்கும், முழு யூத் டீமுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடவுள் உங்களுக்கு இன்னும் பெரிய வெற்றிகளை கொடுக்கட்டும்.





நடிகை தேவதர்ஷிணி பேசியதாவது.., 


யூத் படத்தின் ஹீரோ கேன் கருணாஸுக்கு முதலில் வாழ்த்துகள். இந்த படத்தில் அவருடைய முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவர் இசை ரசிகர்களை கவரும். நளினி மேடம் டிவி ஷீட்டிங்கில் 6மணிக்கு கிளம்பி விடுவார் ஆனால், இப்படத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து டயலாக் படித்து, முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


கென் கருணாஸை ஒரு நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் அவர் ஒரு இயக்குநராக இன்னும் பெரிய அளவில் பிரகாசிப்பார். இந்த படம் வெளியான பிறகு, நடிகர் கென்னை விட இயக்குநர் கென்னை மக்கள் அதிகமாக பாராட்டுவார்கள்”சுராஜ் சாருடன் பணியாற்றியது மிக அருமையான அனுபவம்.  இந்த படத்தில் அவர் தான் ஒரிஜினல் ஹீரோ, கலக்கியிருக்கிறார்

“இந்த படத்தின் மூலம் பலருக்கு வாய்ப்பு கொடுத்த கேன் கருணாஸுக்கு நன்றி. இந்த ‘யூத்’ படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”. 




நடிகை மீனாட்சி தினேஷ் பேசியதாவது.., 


யூத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.“என் வாழ்க்கையில் லக் ஒன்றே இல்லை என்று நினைத்தேன். ஆனால் கென்னை சந்தித்த பிறகு தான் எனக்கு லக் வந்தது போல உணர்கிறேன். இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்கு அவருக்கு நன்றி”. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற பெரிய கலைஞர்கள் முன்னிலையில் இந்த மேடையில் நிற்பது கனவு நனவானது போல இருக்கிறது. 


தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும், ஒளிப்பதிவாளர் விக்கி சாருக்கும் பெரிய  நன்றி இந்த படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது என்றும் அனைவரும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள்,  சுராஜ் சார், நளினி மேடம் மற்றும் மற்ற நடிகர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. 




நடிகை பிரியன்ஷி யாதவ் பேசியதாவது.., 


இந்த படம் எங்களுக்கு  ஒரு கனவு திட்டம். இந்த படம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று பேசிக்கொண்டே இருப்போம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு மிகவும் நன்றி.  தமிழ் மொழி தெரியாதிருந்தாலும், படக்குழுவில் இருந்த டீம், முழு யூனிட்டும் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள்.  நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மையாக உழைத்திருக்கிறோம். இந்த படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும், நன்றி. 




நடிகை அனிஷ்மா பேசியதாவது..,


“எனக்கு இந்த மேடையில் நிற்பதே மிகவும் பதட்டமாக இருக்கிறது. இத்தனை பெரிய ரசிகர்கள் முன்னால் பேசுவது ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த கென்னுக்கு மிகவும் நன்றி. இது என்னுடைய கனவு திரைப்படம் போல தான்.

கென் இந்த வயதிலேயே மிகவும் கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படம் அவருடைய வாழ்க்கையை இன்னும் பெரிய அளவில் மாற்றும் என்று நம்புகிறேன்”.


தயாரிப்பாளர் கருப்பையா, மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி. “ஜி.வி. பிரகாஷ் சார் இசைக்கு நான் பெரிய ரசிகை. அவருடைய பாடல்களுக்கு வீட்டிலேயே டான்ஸ் ஆடியிருக்கிறேன். இன்று அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். மேலும், சுராஜ் சார், தேவதர்ஷிணி மேடம் மற்றும் முழு படக்குழுவுக்கும் நன்றி, இந்த படம் அனைவருக்காகவும் வெற்றி பெற வேண்டும்.





நடிகர் சுராஜ் பேசியதாவது.., 


எல்லா தமிழ் மக்களுக்கும் வணக்கம். இது என்னுடைய இரண்டாவது தமிழ் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி மேம், நளினி மேம் போன்ற அனுபவமுள்ள நடிகைகளுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. அதேபோல் அனிஷ்மா, மீனாட்சி, பிரியாஞ்சி ஆகிய ஹீரோயின்களும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். சின்னாவின் மிமிக்ரி திறமை எனக்கு மிகவும் பிடிக்கும்.


கென் கேரளா வந்து கதையை சொன்னபோது ஒவ்வொரு கேரக்டரின் உணர்ச்சிகளையும் நடித்துக் காட்டி கதையை விவரித்தார். கூடவே மொபைலில் படம் முழுவதையும் முன்கூட்டியே எடுத்துக் காட்டினார். அப்போதே படம் பார்த்த மாதிரி உணர்வு வந்தது. கென் ஸ்கிரீன் பிரெஸன்ஸும், சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்பது உறுதி. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் மிகப் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார். அவரும் தமிழில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சார் இசை மிகவும் அருமையாக உள்ளது. அவருடைய இசைக்கு நான் பெரிய ரசிகன்.


இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் தனுஷ் சார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் சார் ஆகியோருக்கும் நன்றி. வெற்றிமாறன் சார் இயக்கிய படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன் என்றும், அவருடன் ஒரு நாள் வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை.  “இந்த ‘யூத்’ படத்தில் நம்ம வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் இருக்கும். மார்ச் 19 அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குக்கு வந்து ஆதரிக்க வேண்டும்” நன்றி. 





நடிகர் கருணாஸ் பேசியதாவது.., 


இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் பெருமையான தருணம்.  “கென்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்தியது வெற்றிமாறன். அதே நேரத்தில் அவரிடம் இருந்து இயக்கம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது தனுஷ். இந்த இருவரும் இங்கே வந்து அவனுக்காக நிற்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி”


தனுஷ் “நான் அவரை முதன்முதலாக சந்தித்த போது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ‘காதல் கொண்டேன்’ படத்தை பார்த்த பிறகு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நடிகர் கிடைத்திருக்கிறார் என்று நான் சொன்னேன். இன்று இந்திய சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்”.


“நான் சிறு வயதிலிருந்தே மேடைகளில் இருந்து மக்களை சந்தித்து வருகிறேன். சினிமாவை நாம் உண்மையாக நேசித்தால், சினிமா ஒருபோதும் நம்மை கைவிடாது என்று நான் நம்புகிறேன்” கென் இந்த படத்தை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளார், தயாரிப்பாளர் கருப்பையா மற்றும் அவரது குழுவினர் இந்த படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சம்பளம் கேட்காமல் இந்த படத்திற்கு இசை அமைத்ததற்கு நன்றி. இறுதியாக, “இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றி. ‘யூத்’ படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” நன்றி. 


தயாரிப்பாளர் கருப்பையா பேசியதாவது.., 

கென்னை எனக்கு நல்ல பழக்கம் அவர் கதை வைத்து சுற்றிக்கொண்டிருந்த போது நானும் படம் செய்ய சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு தயாரிப்பில் என்னை செய்ய சொன்னபோது நான் கென் கதையை முதலில் செய்யலாம் என முடிவு செய்து கதை கேட்டேன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. பின் அந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. ஆனால் இந்தப்படத்தை விட மனமில்லை என்ன ஆனாலும் ஓகே என நானே இப்படத்தை ஆரம்பித்தேன். கென் அற்புதமாக இப்படத்தை உருவாக்கி தந்தார். படம் விற்பனையும் ஆகிவிட்டது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்த பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தாருக்கு நன்றி. 

இப்படத்தில் பணியாற்றிய சுராஜ் சார், நாயகிகள் உட்பட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன் அவர் வந்து வாழ்த்தியது பெருமை. வெற்றிமாறன் சாருக்கு மிகப்பெரிய நன்றி அனைவருக்கும் நன்றி. 





இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது…


“தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற மிகவும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர்களிடம் கற்றுக்கொண்ட ஒரு பையன் தான் கென். ஆனால் அவர் ஒரு பேக் பெஞ்சர் மாதிரி ஜாலியாக ஒரு யூத் படத்தை எடுத்திருக்கிறார். பள்ளி பின்னணியில் பசங்களின் வாழ்க்கையை வைத்து ஒரு கலகலப்பான படம் பண்ணியிருக்கிறார் கருணாஸ் மூலம் தான் இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, நான் முதல் படத்தில் நடிக்கும் போது அவரிடம் இருந்து தன்னுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது, அதற்காகவே அவர் மகன் படத்தில் வேலை செய்ய நினைத்தேன். 


இந்த படத்தில் நடித்த தேவதர்ஷினி, நளினி, சுராஜ் மற்றும் மூன்று ஹீரோயின்களான பிரியாஞ்சி, மீனாட்சி, அனிஷ்மா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ‘யூத்’ படம் கண்டிப்பாக ஒரு நல்ல யூத் என்டர்டெயினராக இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும்” நன்றி. 





இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,


“இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான்” கென்னுக்கு என் வாழ்த்துக்கள்.  கென்  கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார்.


“கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது”. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார் செதுக்கியிருக்கிறார்.“கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த ‘யூத்’ படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்”  வாழ்த்துக்கள்.




இயக்குநர் நடிகர் கென் கருணாஸ் பேசியதாவது.., 


“இந்த படத்தில் என்னை நம்பி நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. என்னை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களை நினைவுகூறுகிறேன் அவர் ஆசிர்வாதம் இருக்குமென நம்புகிறேன்.  அதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் எனது திறமையை கண்டுபிடித்து ஊக்கமளித்தவர் அவருக்கு  நன்றி.


தனுஷ் சார் தெரிந்தோ தெரியாமலோ அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்று நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு அவர் ஒரு முக்கிய காரணம்” அவருக்கு என் நன்றி.  அவர் முன்னால் நான் இயக்குநராக மேடையில் நிற்பது பெருமை. இந்த படத்தை தயாரித்த கருப்பையா மற்றும் அவரது குழுவினருக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அளித்த ஆதரவுக்கும் நன்றி. இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் நன்றி.




கிரேஸ் கருணாஸ் பேசியதாவது…, 


தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.அசுரன் படத்தின் போது கென்னுக்கு ஒரு கேரக்டர் கிடைத்தபோது, அவர் படப்பிடிப்பிலும் படிப்பிலும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது, ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு பெரிய அனுபவமாக அமைந்தது..


“ஒரு நடிகன் நல்லா நடித்தான் என்று சொல்வது பெரிய விஷயம் இல்லை. அந்த கேரக்டரை அவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று மக்கள் நினைத்தால் தான் அவர் உண்மையான நடிகன். தனுஷ்  நடிப்பில் ஒரு “யூனிவர்சிட்டி” போல கென், அவருடன் இருந்தாலே நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் வந்திருப்பது நம்பமுடியாத கனவு போல உள்ளது.  இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. தயாரிப்பாளர் பெரிய அளவில் முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டும்”  நன்றி.





நடிகர் தனுஷ் பேசியதாவது.., 


முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராடுக்கள். “23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்த படத்தை தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையாதான்”. கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். 


ஒரு படத்திற்கு ஒரு அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்தது தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி. 


படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் இந்த படத்திற்கு ஒரு பெரிய வலிமையாக உள்ளனர்.  


அசுரன் படத்தில் முதலில் கென்னைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும். 


இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது,  நான் இப்போது வேண்டாமே என்றேன் ஆனா அதை 

தவறென்று நிரூபித்திருக்கிறார். 


“முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கேன் தனது கவனத்தை முழுவதும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கேனுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.




பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள “யூத்" திரைப்படம், மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

KAATTAAN’ TRAILER EXPANDS THE MYSTERY AROUND MUTHU’S SEVERED HEAD*

 KAATTAAN’ TRAILER EXPANDS THE MYSTERY AROUND MUTHU’S SEVERED HEAD*





Chennai, March 13, 2026: Following its internet-shattering teaser, which unveiled the bizarre mystery of a severed head, JioHotstar has dropped the gripping trailer for its upcoming series ‘Muthu Alias Kaattaan’, diving deeper into the show's intriguing world.


While the teaser ignited curiosity with Muthu's shocking severed head, the trailer expands the narrative, revealing layered accounts from characters who paint vastly different portraits of the man. Feared outlaw or misunderstood hero? As perspectives clash, the mystery deepens, slowly unraveling the truth behind Muthu and the events that led to his gruesome discovery.


Headlined by Vijay Sethupathi, the series also features Milind Soman, Sudev Nair, and Muthukumar, among other prominent faces.


Talking about the trailer, Vijay Sethupathi, said, “When Manikandan first narrated Kaattaan to me, he shared a six-page synopsis. I was instantly hooked by the character and the world he had imagined. Working on this series gave me a real sense of peace as an actor. I truly hope that when audiences watch it, they walk away with something meaningful to reflect on.”


Sharing his thoughts on the trailer, Milind Soman, said, "As someone who is selective about projects he chooses, Kaattaan stood out for its gripping narrative and bold characters and Sivettan was a role I couldn't resist. Working on the series was an absolute thrill from the immersive sets, sharp direction, and collaborating with Vijay Sethupathi and the team brought this enigmatic figure to life in ways that pushed me creatively."  


The series is created by National Award-winning filmmaker M. Manikandan, known for his distinctive storytelling voice. Direction is helmed by M. Manikandan and B. Ajith Kumar, while acclaimed cinematographers Madhu Neelakandan and N. Shanmuga Sundaram craft the striking visual language of the series. The music is composed by Rajesh Murugesan, adding a powerful sonic dimension to the world of Kaattaan.

Muthu Alias Kaattaan will stream from March 27 exclusively on JioHotstar in seven languages — Tamil, Hindi, Telugu, Malayalam, Kannada, Marathi, and Bengali.



TRAILER LINK: 




https://www.youtube.com/watch?v=6QhTM9QuP_Y

காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள

*காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது*





 ஜியோஹாட்ஸ்டார்  வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும்  " முத்து என்கிற காட்டான்  " வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக  நடிகர் விஜய்சேதுபதியின்  துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.


முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள  டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது.


இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன்  பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில்  காட்டப்படும்  டிரெய்லர்  வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது .


முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன.


நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.


டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன்

மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.


தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் எம். மணிகண்டன் உருவாக்கிய இந்தத் தொடர், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படுகிறது. இதை எம். மணிகண்டனும், பி. அஜித் குமாரும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தர் இந்தத் தொடரின் வலுவான காட்சித்தன்மையை வடிவமைத்துள்ளனர். ‘காட்டான்’-ன் உலகத்திற்கு சக்திவாய்ந்த ஒலிபரிமாணத்தை வழங்கும் வகையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார். முத்து என்கிற காட்டான்’, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

TRAILER LINK:

 https://www.youtube.com/watch?v=6QhTM9QuP_Y

*

Netflix Opens Eyeline Studios in Hyderabad, Anchoring Long-Term Investment in

*Netflix Opens Eyeline Studios in Hyderabad, Anchoring Long-Term Investment in India’sGrowing AVGC Sector*




 Netflix today announced the launch of Eyeline Studios, its globalproduction and innovation studio in Hyderabad, expanding its presence in India and marking asignificant long-term capability investment in India’s Animation, Visual Effects, Gaming, andComics (AVGC) ecosystem.


 The launch aligns with Netflix’s global strategy to expand itsproduction innovation infrastructure. It positions India as a core node in global productionpipelines, embedding advanced visual effects, virtual production, and next-generationproduction technology. The launch event was led by Jeff Shapiro -CEO, Eyeline Studios,alongside Hon’ble Chief Minister of Telangana Shri Anumula Revanth Reddy, SecretaryMinistry of Information and Broadcasting Shri Sanjay Jaju, and Indian Actor and Film ProducerRana Daggubati.


The new office spans 32000 sqft and features state-of-the-art technology for advancedvisual effects and generative virtual effects, all supported by a robust hybrid cloudinfrastructure. The facility has a modern workspace designed to foster collaboration,creativity, and employee well-being.


 The Hyderabad facility is the fifth global location forEyeline, building on the network established in Los Angeles, Vancouver, Seoul, and London.Designed as a fully integrated part of Eyeline’s global network, the studio will contribute tohigh-end visual storytelling worldwide.With sustained policy momentum and a strong focus on skilling, India is strengthening itsposition as a global hub for creative technology and digital production. The launch of EyelineStudios’ India office aligns with this direction by embedding global production standards,advanced tools, and integrated workflows within the country. By anchoring production andinnovation capabilities in Hyderabad, Eyeline is making a long-term investment ininfrastructure, talent development, and deeper global integration.Shri Anumula Revanth Reddy, Hon’ble Chief Minister of Telangana, said, “Hyderabad isproud to welcome Eyeline and Netflix to Telangana. Hyderabad is a natural home for Netflixbecause both are global successes that continue to create new opportunities and careers. Inmany ways, both Netflix and Hyderabad are gateways bringing together opportunities andtalent from across the globe. Our city has always been a place where creativity, technology and global talent converge, making it a natural home for companies shaping the future ofstorytelling. 


This partnership reflects our shared ambition to build globally relevant creativeecosystems, and I am confident that Eyeline’s presence will further strengthen Hyderabad’sposition as a leading hub for film, technology and the AVGC sector. On behalf of theGovernment and the people of Telangana, I look forward to supporting their journey as theycreate new opportunities for talent and storytelling from Hyderabad to the world.”Shri Sanjay Jaju, Secretary, Ministry of Information & Broadcasting, Government of India,said, “I am in a place where I have been brought up and which I love. Jeff met me last year, andI can’t believe this could be made so fast. 


This is the right place for Eyeline Studios, the place ofBaahubali. We are a country with a rich history of storytellers. Entertainment lies at thecross-section of technological prowess and the art of storytelling. Hyderabad has a huge historyin AVGC. Most major Hollywood studios already have small offices in Hyderabad. IICT, whichwas set up last year, will also have a campus here. Pan-India films are being made out ofHyderabad, and with leadership and vision, this ecosystem will continue to grow.”Shri. D. Sridhar Babu, Minister for IT, Electronics & Communications, Industries &Commerce, Government of Telangana commented, “I welcome Eyeline Studios toHyderabad. It aligns with the vision of our Hon’ble Chief Minister and the Government to see thecreative energy of Hyderabad should grow and Hyderabad becomes the capital of storytelling.


Netflix’s decision to come up with their production footprint in India reflects the confidence in thecreative talent available in India. Our government is always looking for skilling the talentrequired to tutor students. The objective of the government is to build a talent pool across VFXand animation. Technology is taking the lead and we are at the disruption of things. With EyelineStudios, we will be number one the best storytelling place in the globe.”During the inauguration, actor and producer Rana Daggubati said, “Today it feels verynostalgic for me.


 After coming here, many memories came back. About 20 years ago, around2005–2006, there were very few opportunities like this in Hyderabad, and Ted Sarandos wasjust starting to connect with the industry at that time. Today, seeing people like Jeff Shapirocome to Hyderabad and speak about this place as the next future hub of creativity shows howfar Hyderabad has progressed. For this, I must first thank the audiences who kept pushingfilmmakers to go beyond boundaries and constantly ask for bigger and newer cinema. 


Thefilmmakers and producers out of Hyderabad kept pushing the bar higher. With this momentum,and with Eyeline Studios coming here has supported the industry in a huge, phenomenal way,I would like to welcome everyone. I truly believe it’s a great future for anyone who wants to bean artist, work in movies, or be part of storytelling. Thank you to everyone in the governmentand the leadership of the state for supporting this journey. Together, we will make this abeautiful and entertaining city.”Jeff Shapiro, CEO, Eyeline Studios, said, “India has long played a defining role in globalvisual effects, not just because of scale, but because of the depth of creative and technical talent here. When we looked at where to establish our presence, Hyderabad stood outimmediately. It brings together a strong technology backbone, world-class engineeringcapability, and a film culture that understands ambition. The talent in this city and across Indiacombines artistic craft with impeccable technical precision. That’s exactly the foundation weneed to build long-term capability and contribute meaningfully to global storytelling fromhere.”

இந்தியாவின் வளர்ந்து வரும் AVGC துறையில் நீண்டகால முதலீட்டை

 *இந்தியாவின் வளர்ந்து வரும் AVGC துறையில் நீண்டகால முதலீட்டை வலுப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ்( Eyeline Studios) தொடங்கிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்!*




நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய தயாரிப்பு மற்றும் இன்னோவேஷன் ஸ்டுடியோவான ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன் இந்தியாவின் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறையில் நீண்டகால முதலீட்டையும் குறிக்கிறது.


உலகளாவிய தயாரிப்பு மற்றும் புதுமை கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொடக்கம் அமைந்துள்ளது. மேம்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ், விர்ச்சுவல் புரொடக்‌ஷன் மற்றும் அடுத்த தலைமுறை தயாரிப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உலகளவில் இந்தியாவை முக்கிய மையமாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் ஐலைன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ, தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் இந்திய நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


32,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம், அதிநவீன விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஜெனரேட்டிவ் விர்ச்சுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்ப வசதிகளுடன், வலுவான ஹைபிரிட் கிளவுட் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் ஒத்துழைப்பு, படைப்பாற்றல் மற்றும் அவர்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் நவீன பணிச்சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸ், வான்கூவர், சியோல் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் இயங்கி வருவதை தொடர்ந்து ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ் ஐந்தாவது உலகளாவிய மையத்தை அமைத்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப காட்சியமைப்புகளுடன் உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் ஒருங்கிணைந்த தயாரிப்பு மையமாக இது செயல்படும்.தொடர்ச்சியான அரசுக் கொள்கை ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் மூலம் கிரியேட்டிவ் டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் தயாரிப்பில்  இந்தியா உலக அரங்கில் வலுப்படுத்தி வருகிறது.  ஐலைன் ஸ்டுடியோஸ் இந்திய அலுவலகம் தொடங்கப்படுவது உலகளாவிய தயாரிப்பு தரம், மேம்பட்ட கருவிகள் மற்றும் ஒருங்கிணைந்த பணிச்சூழலை நாட்டுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


இதுகுறித்து தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி பகிர்ந்து கொண்டதாவது, “ஐலைன் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனங்களை தெலங்கானாவுக்கு வரவேற்பதில் ஹைதராபாத் பெருமை கொள்கிறது. உலகளாவிய வாய்ப்புகளையும் திறமைகளையும் இணைக்கும் நகரமாக ஹைதராபாத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் உலகத் திறமைகள் ஒன்றிணையும் மையமாக எங்கள் நகரம் இருந்து வருகிறது. திரைப்படம், தொழில்நுட்பம் மற்றும் AVGC துறையில் ஹைதராபாத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐலைன் வருகை அமைந்துள்ளது” என்றார். 


தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு பகிர்ந்து கொண்டதாவது, “நான் வளர்ந்த இடத்தில் இது நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு ஜெஃப் என்னை சந்தித்தார். இது இவ்வளவு வேகமாக நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தரமான நல்ல கதைகளை கொடுப்பதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறோம். ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படைப்பு உருவான இந்த இடம் ஐலைன் ஸ்டுடியோஸ் தொடக்கத்திற்கு சரியான தேர்வு. தொழில்நுட்ப திறமை மற்றும் கதை சொல்லும் கலையில்தான் எண்டர்டெயின்மெண்ட் உள்ளது. AVGC இல் ஹைதராபாத் மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான முக்கிய ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஏற்கனவே ஹைதராபாத்தில் அலுவலகங்களைக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஐஐசிடி-க்கு இங்கு ஒரு வளாகம் உண்டு. பான்-இந்தியா திரைப்படங்கள் ஹைதராபாத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த அமைப்பு தொடர்ந்து வளரும்” என்றார்.


 தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, தொழில்கள் மற்றும் வணிக அமைச்சர் ஸ்ரீ. டி. ஸ்ரீதர் பாபு கூறியதாவது, “ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்திற்கு வரவேற்கிறேன். கதை சொல்லிகளின் தலைநகரமாக ஹைதராபாத் மாற வேண்டும் என்ற நமது மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இது ஒத்துப்போகிறது.இந்தியாவின் திறமையை நம்பி இங்கு தங்கள் தயாரிப்பை தொடங்க நெட்ஃபிலிக்ஸ் முடிவு செய்திருப்பது நமக்கு பெருமைமிகு தருணம்.மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான திறமையாளர்களை அரசாங்கம் தேடிவருகிறது. விஎஃப்எக்ஸ் மற்றும் அனிமேஷனில் பல திறமையாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். சிறந்த தொழில்நுட்பத்துடனும் ஐலைன் ஸ்டுடியோஸுடனும் உலகின் சிறந்த கதை சொல்லும் இடமாக நாங்கள் முதலிடத்தில் இருப்போம்” என்றார். 


தொடக்க விழாவின் போது நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி பகிர்ந்து கொண்டதாவது, “இங்கு வந்ததும் எனக்கு பல நல்ல பழைய நினைவுகள் வந்து போகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2005-2006 ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத்தில் இத்தகைய வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தன. அந்த நேரத்தில் டெட் சரண்டோஸ் தொழில்துறையுடன் இணையத் தொடங்கி இருந்தார். இன்று, ஜெஃப் ஷாபிரோ போன்றவர்கள் ஹைதராபாத்தினை படைப்பாற்றலின் எதிர்கால மையமாகப் பேசுவதைப் பார்ப்பது, ஹைதராபாத் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. பார்வையாளர்களின் ஆதரவும், திரைத்துறையினரின் முயற்சிகளும் இதற்கு காரணம். ஐலைன் ஸ்டுடியோஸ் வருகை திரைப்படத் துறைக்கு பெரிய ஆதரவாக இருக்கும். நடிகர்களாக, திரைப்படங்களில் பணியாற்ற அல்லது கதைசொல்லலில் பங்கேற்க விரும்பும் எவருக்கும் இந்த இடம் சிறந்த எதிர்காலம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன், அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பயணத்தை ஆதரித்த அரசாங்கத்திலும் மாநிலத் தலைமையிலும் உள்ள அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இதை அழகான பொழுதுபோக்கு நகரமாக மாற்றுவோம்” என்றார்.


ஐலைன் ஸ்டுடியோஸ் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ கூறியதாவது, “உலகளவில் விஷூவல் எஃபெக்ட்ஸ் துறையில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப நுட்பம் இணைந்த திறமைகள் இந்தியாவில் அதிகம் உள்ளது. வலுவான தொழில்நுட்ப அடித்தளம் மற்றும் திரைப்பட கலாச்சாரம் காரணமாக ஹைதராபாத்தை நாங்கள் தேர்வு செய்தோம். இங்கிருந்து உலகளாவிய கதைசொல்லலில் பங்காற்ற விரும்புகிறோம். இந்த தொடக்கம், இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் தயாரிப்பு மற்றும் கதை சொல்லல் மையமாக உலகளவில் உயர்த்தும்” என்றார்.

Thursday, 12 March 2026

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

 *புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!*













இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான   படைப்பு!


ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார்.


பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுவையின் பின்னணியில் நடக்கும் கதையாக இது உருவகிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, போளூர் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, மதுமிதா, ரமா, முனார் ரமேஷ், முருகதாஸ், வந்தனா, ஃபெரோஸ் கான், சுகன்யா, கௌசல்யா , சித்தார்த்

என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.


சதீஷ் எஸ். இப்படத்திற்கு இசையமைப்பதோடு பாடல்களையும் எழுதியுள்ளார். தேவசூர்யா கே. ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரஞ்சித் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் (Post-Production)  தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தொழில்நுட்பக் குழு:


எழுத்து - இயக்கம் - தயாரிப்பு: ஏ.எஸ். ரவிச்சந்திரன். 


ஒளிப்பதிவு (DOP): தேவசூர்யா கே.


இசை (Music): சதீஷ் எஸ்.


படத்தொகுப்பு (Editor): ஜி. ரஞ்சித் குமார். 


சண்டைக் காட்சிகள் (Stunt): இடிமின்னல் இளங்கோ. 


உடை வடிவமைப்பு: லட்சுமிநாராயணன். 


பாடல்வரிகள்: சதீஷ் எஸ்.


மேக்கப்: மணி. 


சிஜி (CG): பிரபா. 


ஒலி வடிவமைப்பு: சதீஷ் எஸ்.


ஸ்டில்ஸ் & பப்ளிசிட்டி டிசைன்: வேலு


தயாரிப்பு நிறுவனம்: ஏ.எஸ்.ஆர். 

பிலிம்ஸ் (ASR FILMS)


மக்கள் தொடர்பு (PRO): திரு

Jio Studios and B62 Studios’ Dhurandhar Returns to Cinemas Worldwide on March 13

 *Jio Studios and B62 Studios’ Dhurandhar Returns to Cinemas Worldwide on March 13 Ahead of Dhurandhar The Revenge Release*



The global blockbuster set for a rare international re-release as fans gear up for the sequel on March 19.


The storm of Dhurandhar is far from over. Ahead of the highly anticipated release of Dhurandhar The Revenge on March 19, Jio Studios and B62 Studios are bringing the global blockbuster Dhurandhar back to the big screen in a rare and exciting theatrical re-release across approximately 500 screens worldwide, including 250 screens across India beginning March 12 (today) and 250 overseas, beginning March 13.


For fans of the franchise, the re-release offers a thrilling opportunity to relive the phenomenon that redefined the spy-action genre and follow it up with the sequel just days later, experiencing the two chapters of the saga back-to-back on the big screen.


While re-releases of major films have occasionally been seen in India, international re-releases of Hindi films remain extremely rare, making this move a significant moment for the franchise and a testament to the immense global demand for Dhurandhar. In North America alone, the film will return to theatres across nearly 185 screens, signalling the extraordinary anticipation for the next chapter. 


Adding to the excitement, Dhurandhar The Revenge will host special Wednesday premiere shows across the USA and Canada on March 18, a day ahead of its global release. These premieres will take place largely on Premium Large Format (PLF) screens, which feature expansive wall-to-wall screens, immersive sound systems such as Dolby Atmos, enhanced projection, and luxury seating, formats typically reserved for major Hollywood event films. The mid-week premieres are already witnessing sold-out shows, underscoring the massive demand and the scale at which the sequel is poised to arrive.


The recently launched trailer of Dhurandhar The Revenge has already become a global talking point, with trade and exhibitors betting big on the film’s international run. With the first instalment returning to cinemas just days before the sequel’s release, the stage is set for audiences worldwide to once again experience the thrill, scale, and intrigue that made Dhurandhar a cinematic phenomenon.


Jio Studios presents a B62 Studios production, an Aditya Dhar film - Dhurandhar The Revenge. The high-octane spy-action thriller, written, directed and produced by Aditya Dhar and produced by Jyoti Deshpande and Lokesh Dhar, will release worldwide on March 19, 2026, in five languages — Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.


The story of unknown men unfolds in cinemas worldwide on March 19, 2026, on the occasion of Gudi Padwa and Ugadi, and ahead of Eid.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! இன்று முதல் மீண்டும் திரையரங்குகளில் துரந்தர் முதல் பாகம்

 *ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! இன்று முதல் மீண்டும் திரையரங்குகளில் துரந்தர் முதல் பாகம்!*



ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரித்த துரந்தர் படம், துரந்தர் பழிவாங்கல் படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக மார்ச் 12 இன்று முதல் இந்தியாவிலும், மார்ச் 13 நாளை முதல் உலகம் முழுவதும் மீண்டும்  திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் மார்ச் 19 அன்று இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், உலக அளவில் பிளாக்பஸ்டர் ஆன அதன் முதல் பாகம் சர்வதேச அளவில் மீண்டும் திரையிடப்பட உள்ளது.


துரந்தர் திரைப்படத்தின் அலையே இன்னும் ஓயவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் மார்ச் 19 அன்று வெளியாக உள்ள நிலையில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான துரந்தர் முதல் பாகத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருகின்றன. உலகெங்கிலும் சுமார் 500 திரைகளில் இப்படம் மீண்டும் வெளியாகிறது. இந்தியாவில் மார்ச் 12 இன்று முதல் 250 திரைகளிலும், வெளிநாடுகளில் மார்ச் 13 முதல் 250 திரைகளிலும் திரையிடப்பட உள்ளது.


ஸ்பை-ஆக்‌ஷன் ஜானரில் புதிய மைல்கல்லை படைத்த இந்த திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை தியேட்டரில் கொண்டாடும் அற்புதமான வாய்ப்பை ரசிகர்களுக்கு இந்த ரீ-ரிலீஸ் வழங்குகிறது. முதல் பாகத்தை பார்த்த சில நாட்களிலேயே இதன் இரண்டாம் பாகத்தையும் பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு மகிழலாம்.


இந்தியாவில் முன்னணி திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்தி படங்கள் சர்வதேச அளவில் ரீ-ரிலீஸ் ஆவது மிகவும் அரிதான விஷயமாகும். அந்த வகையில் துரந்தர் படத்திற்கான உலகளாவிய எதிர்பார்ப்பை இது எடுத்துக்காட்டுகிறது. வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 185 திரைகளில் இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது. 


கூடுதல் சிறப்பம்சமாக, துரந்தர் பழிவாங்கல் திரைப்படத்தின் சிறப்பு பிரீமியர் காட்சிகள் உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 18 புதன்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் திரையிடப்பட உள்ளன. ஹாலிவுட் படங்களுக்கு இணையான டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம், மேம்பட்ட புரொஜெக்‌ஷன் மற்றும் நல்ல இருக்கைகள் கொண்ட பிரீமியம் லார்ஜ் ஃபார்மேட் திரைகளில் இந்த பிரீமியர் காட்சிகள் நடைபெறவுள்ளன. இந்த பிரீமியர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன என்பது படத்தின் மீதான மாபெரும் எதிர்பார்ப்பை உணர்த்துகிறது.


சமீபத்தில் வெளியான துரந்தர் பழிவாங்கல் ட்ரெய்லர் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இரண்டாம் பாகம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பே முதல் பாகம் மீண்டும் திரைக்கு வருவதால், துரந்தர் திரைப்படத்தின் விறுவிறுப்பையும் பிரம்மாண்டத்தையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை அனுபவிக்க  வாய்ப்பாக அமைந்துள்ளது.


ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துரந்தர் பழிவாங்கல். ஆதித்யா தர் எழுதி இயக்கியுள்ள இந்த ஹை-ஆக்டேன் ஸ்பை-ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் தயாரித்துள்ளனர். இப்படம் மார்ச் 19, 2026 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.


அடையாளம் தெரியாத மனிதர்களின் கதையான இது, குடி பத்வா, உகாதி பண்டிகைகளை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும் மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

Sathyabama Institute of Science and Technology is proud to host Kalai Saaral, AIU's

 *Sathyabama Institute of Science and Technology is proud to host Kalai Saaral, AIU's 39th Inter- University National Youth festival 2025 - 2026 in association with the Association of Indian Universities (AIU), from 10th to 14th March at its campus in Chennai.*




This prestigious inter-university cultural festival brings together the vibrant artistic talents of students from eight zones across India, with participation from 142 universities. The five-day celebration will feature 28 diverse cultural events, offering a dynamic platform for students to showcase their creativity, cultural heritage, and artistic excellence across multiple disciplines including music, dance, theatre, and literary arts.


The festival inaugurated in the presence of distinguished dignitaries. The Chief Guest, Prof. Vinay Kumar Pathak, President AIU graced the occasion and inspire the participants with his presence.


The event will also be held under the esteemed leadership of Dr. Mariazeena Johnson and Dr. Marie Johnson,whose vision for academic and cultural excellence continues to foster platforms that nurture young talent.


Kalai Saaral serves as a vibrant confluence of culture, creativity, and collaboration. The festival not only celebrates artistic expression but also promotes cultural exchange and unity among students from universities across the country. Through performances, competitions, and interactions, participants will experience a rich blend of traditions and contemporary artistic forms.