Featured post

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்பி தயாரிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய

 கேப்டன் சினி  கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்பி தயாரிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சி...

Monday, 7 September 2026

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்பி தயாரிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய

 கேப்டன் சினி  கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்பி தயாரிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சிறப்பாக சென்னையில் நடைபெற்றது.



இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார்.


இப்படத்தை கட்டப்பாவ காணோம் பட இயக்குனர் மணிசியோன் இயக்குகிறார்..

ஒளிப்பதிவு பிரசன்ன குமார், இசை மனு இரவிச்சந்திரன்


இப்படத்தின் பூஜையில் பிரேமலதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடிக்க படபிடிப்பு துவங்கியது, மேலும் டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர்,பட்டிமன்றம் ராஜா,பிரகதி, காயத்ரி, இயக்குனர் திரு ஒளிப்பதிவாளர் அர்வி ஆகியோர் கலந்து கொண்டனர் 


 

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் திரு இயக்கத்தில் வாணவேடிக்கை படத்தின் படப்பிடிப்பு மற்றும் புரொடக்சன் நம்பர் 10 படத்தின் படப்பிடிப்பு இரண்டும் தற்போது  முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...


இப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 6. மணிக்கு நடிகர்  சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்..

Shruti Haasan’s Legal Stand Against AI Misuse Marks an Important Step for Artists

 Shruti Haasan’s Legal Stand Against AI Misuse Marks an Important Step for Artists*



In an age where artificial intelligence can recreate a person’s face, voice and likeness within seconds, consent and identity protection have become more important than ever. Actor and singer Shruti Haasan has taken a strong legal stand against the unauthorised use of her identity through AI-generated deepfakes, morphed images, manipulated videos and other misleading digital content.


The Bombay High Court has granted Shruti Haasan interim protection after finding a strong prima facie case in her favour. The court also directed the removal of specific content identified in her petition, observing that its continued circulation could cause irreparable harm to her reputation, goodwill and commercial interests.


This issue extends far beyond one individual. For years, actresses and other public figures have faced the circulation of morphed photographs, fake endorsements and misleading content across social media. The rise of generative AI has made such misuse easier, faster and increasingly difficult for audiences to identify.


A person’s face, voice or likeness should never be used without consent. Public visibility does not give anyone the right to digitally manipulate an artist’s identity, falsely associate them with a product or place them in fabricated and harmful situations.


Shruti Haasan’s decision to take legal action therefore represents a timely and necessary move. By standing up for her rights, she is also bringing greater attention to the need for consent, accountability and digital safety in the entertainment industry.


Her action could encourage more actresses and artists to challenge the misuse of their identities instead of accepting it as an unavoidable part of being in the public eye. It also sends a clear message to platforms, content creators and AI companies: technology cannot be allowed to replace consent.


While this interim order is an important development, it is also the beginning of a larger conversation about how India must protect individuals in the rapidly evolving AI era. Shruti Haasan is leading from the front and her stand could help make social media a safer, cleaner and more responsible space for everyone.

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்:

 *AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !!*

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.


இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பிட்ட போலிப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஆணையிட்டுள்ள நீதிமன்றம், இவை தொடர்ந்து இணையத்தில் உலாவுவது அவரது நற்பெயருக்கும், சமூக மதிப்பிற்கும், வர்த்தக ரீதியான வாய்ப்புகளுக்கும் மீட்க முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த விவகாரம் ஸ்ருதி ஹாசன் என்ற தனிநபரோடு முடிந்துபோவதல்ல. பல காலமாகவே நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்களின் புகைப்படங்களை உருமாற்றுவதும், அவர்களின் பெயரில் போலி விளம்பரங்களை வெளியிடுவதும் சமூக ஊடகங்களில் தொடர்கதையாக உள்ளது. தற்போது 'ஜெனரேட்டிவ் AI' தொழில்நுட்பத்தின் வருகையால், இதுபோன்ற போலி உள்ளடக்கங்களை மிக எளிதாகவும் வேகமாகவும் உருவாக்க முடிகிறது; அதேவேளையில் எது உண்மை, எது போலி என்று கண்டறிவது சாமானிய மக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.


ஒருவரின் ஒப்புதல் இன்றி அவரது முகம், குரல் அல்லது தோற்றத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. ஒருவர் திரைத் துறையிலோ அல்லது பொதுவெளியிலோ பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக, அவரது அனுமதியின்றி அவரது தோற்றத்தை டிஜிட்டல் முறையில் மாற்றவோ, தயாரிப்புகளுக்குப் போலியாகப் பயன்படுத்தவோ, தவறான சூழல்களில் சித்தரிக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.


அந்த வகையில், ஸ்ருதி ஹாசன் மேற்கொண்டுள்ள இந்தச் சட்ட நடவடிக்கை மிகவும் அவசியமான, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். தனது சுயமரியாதைக்காகவும் உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்துள்ளதன் மூலம், கலைத் துறையில் 'தனிநபர் சம்மதம்' (Consent), பொறுப்புடைமை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த முக்கியமான உரையாடலைத் தொடங்கி வைத்துள்ளார்.


பிரபலமாக இருப்பதால் இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்து, தங்கள் அடையாளம் திருடப்படும்போது அதைச் சட்டப்படி எதிர்கொள்ள பிற கலைஞர்களுக்கும் இது பெரும் துணிச்சலைத் தரும். அதேபோல, "தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அது ஒருவரின் சம்மதத்திற்கு மேலானது அல்ல" என்ற உறுதியான எச்சரிக்கையை AI நிறுவனங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும், டிஜிட்டல் படைப்பாளிகளுக்கும் இது உணர்த்துகிறது.


நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு ஒரு தொடக்கப் புள்ளிதான் என்றாலும், அசுர வேகத்தில் வளரும் AI காலத்தில் இந்தியக் குடிமக்களின் டிஜிட்டல் அடையாளங்களை எவ்வாறு சட்டப்படி பாதுகாப்பது என்பது குறித்த பரந்த விவாதத்திற்கு இது வித்திட்டுள்ளது. இப்போராட்டத்தின் மூலம் ஸ்ருதி ஹாசன் முன்மாதிரியாக நின்று, கலைஞர்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைப் பதித்துள்ளார்.

Sunday, 6 September 2026

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

 *உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு*






தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.


இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்.


சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம்.


அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும்.


அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு. கமல்ஹாசன் அவர்கள். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம். எங்களை நேரம் ஒதுக்கி சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்து, சங்கத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்," என்று தெரிவித்துள்ளனர். 


***

மொத ராத்திரி' திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

 *'மொத ராத்திரி' திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*














ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மொத ராத்திரி'. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. 


தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, "இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.  ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. 'குட் பேட் அக்லி', 'டியூட்' படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு 'இருமுடி கட்டு' படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.


ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி,"நல்ல படத்தில் வேலை செய்து இருக்கிறோம் என்று திருப்தி உள்ளது. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி".


படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன், "என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி. அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன். என் முதல் படத்திலேயே எனக்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சி".


பப்ளிசிட்டி டிசைனர் வியாகி, "ராஜா கதை சொன்னதிலிருந்து இது எங்களுடைய படமாகிவிட்டது. படத்தில் எல்லோருமே பாசிட்டிவாக இருந்தார்கள். அதனுடைய ரிசல்ட் பிரம்மாண்ட வெற்றியாக மாறியிருக்கிறது".


நடிகை சுமித்ரா தேவி, " இந்த படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். எங்கள் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இயக்குநருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி". 


நடிகை வர்ஷினி கார்மேகம், "தயாரிப்பாளர்கள், இயக்குநர் ராஜா, ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது". 


நடிகர் திலீப், " படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பல நாட்கள் கழித்து திரையரங்குகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியுடன் செல்வதை பார்த்தேன். நன்றி"


நடிகை இனியா ராம், " அறிமுக இயக்குநர் ராஜாவின் கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. படம் பார்த்த பலரும் என்னிடம் பாக்யராஜ் படம் பார்த்தது போல உள்ளது என்றார்கள். நிச்சயம் அடுத்த ஐந்து வருடத்திற்குள் இயக்குநர் ராஜா முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருப்பார். ரிஷிகாந்தும் திறமையான நடிகர். தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி".


நடிகை தீபிகா, "கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்த படம் மூலம் எங்கள் எல்லோருக்கும் அடையாளம் கிடைத்துள்ளது".


நடிகர் கார்த்திகேயன் டிகே, ", எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி.  படத்தில் நடித்தவர்களுக்கும் பணிபுரிந்தவர்களுக்கும் இந்த படம் ரொம்பவே முக்கியமானது. நீண்ட பயணத்தின் முதல் படியாக இந்த வெற்றியை பார்க்கிறேன். நன்றி".


நடிகர் அப்துல் லீ, " வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்தில் நடித்த நடிகர்களையும் தொழில்நுட்ப குழுவினரையும் அடுத்த நிலைக்கு இந்த படம் எடுத்து சென்றுள்ளது. பல வருட உழைப்பிற்கு பிறகு என்னுடைய முகமும் இந்த படத்தின் போஸ்டரில் வந்திருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி". 


இசையமைப்பாளர் பரத் சங்கர், "என்னுடைய இசை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான மைல்கல். சின்ன படம், பெரிய படம் என்று கிடையாது. நல்ல படம், சுமாரான படம் என்று வேண்டுமானால் பிரிக்கலாம். ஓடக்கூடிய படத்தின் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ராஜா அடிக்கடி சொல்வார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை தயாரிக்க முன்வந்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி".


நடிகர் சேத்தன், "புதிய திறமையானவர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இயக்குநர் ராஜாவுக்கும் நன்றி. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தோம். இந்தப் படத்தில் இருந்து பல சூப்பர் ஸ்டார்களும், லேடி சூப்பர் ஸ்டார்களும் உருவாக இருக்கிறார்கள். ரிஷியை திரையில் பார்க்கும்பொழுது இளவயது அமிதாப்பச்சனை பார்ப்பது போல இருந்தது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி".


இயக்குநர் ராஜா கருப்பசாமி, "என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும், என் படக்குழுவினருக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்பது மகிழ்ச்சி. அனிஷ்மா திறமையான நடிகை. ஆறு வருடத்திற்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. சின்ன படங்களுக்கு எப்போதுமே உங்கள் ஆதரவு தேவை. அது மட்டும் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்".


நடிகர் பகவதி பெருமாள், "சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இது போன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். அந்த வகையில், இந்த கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பலருடைய வாழ்க்கையில் இந்த படம் ஒளி ஏற்றி இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் படம் செய்பவர்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்".


நடிகர் ரிஷிகாந்த், " உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தந்த ஊடகத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஆறு வருடங்களாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி".

Saturday, 5 September 2026

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai

 Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai*



The team of ‘Bethlehem Kudumba Unit’ recently had a special and memorable interaction with Ulaganayagan Kamal Haasan at his office in Chennai.


Kamal Haasan had watched the film and appreciated the work of the entire team, congratulating them for their efforts and the film’s engaging presentation. The interaction turned into a memorable moment for the team, with Kamal Haasan sharing his appreciation and words of encouragement with the cast and crew.


The meeting was attended by the film’s director Girish A.D., actors Dileesh Pothan, Fahadh Faasil, Kiran Josey, Sangeeth Prathap and Unnimaya, along with Future Runup Films Distributors Arun Narayanan and Anup Kumar.


Produced by Bhavana Studios, Bethlehem Kudumba Unit has already emerged as a major success in Malayalam, receiving strong appreciation from audiences and establishing itself as one of the notable Malayalam releases. The film is now reaching Tamil audiences as well, where it continues to create awareness and build its audience following.


Kamal Haasan’s appreciation of the film and the team adds another special moment to the film’s journey. His words of encouragement have brought immense happiness to the entire team as they continue their journey with the film.


The memorable interaction between Ulaganayagan Kamal Haasan and the ‘Bethlehem Kudumba Unit’ team marks a special occasion for the film and its entire cast and crew.

பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

 *‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!*



*‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னை அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து சிறப்பான தருணத்தை பகிர்ந்து கொண்டனர்.*


இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பகிர்ந்து கொண்டது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.


இந்த சந்திப்பில் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.


பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து தனது ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறது


இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியது, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. உலகநாயகன் பாராட்டும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரின் இந்த சந்திப்பு, திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது


விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

 *விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!*







*ஜீத்து ஜோசப் கதையில் உருவான படம்… ஆர். மாதேஷ் இயக்கத்தில் புதிய கலாட்டா!  இப்படத்தை புன்னகை பூ கீதா தயாரித்துள்ளார்*


*லண்டன் சாப்ட்வேர் கம்பெனி பின்னணியில் காதலும்… மோதலும்… காமெடியும்!*


*விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா!*


‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது.


காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.


அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.


மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா  மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளார். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.


இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.


காதலில் ஆரம்பித்து… சண்டையில் சிக்கி… காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’!


விமல் – ஸ்ரேயா இணைந்து நடிக்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Mohanlal - Vishnu Mohan Film titled ‘Operation Ganga’; Produced by Gokulam Gopalan

 Mohanlal - Vishnu Mohan Film titled ‘Operation Ganga’; Produced by Gokulam Gopalan




The title of L367, the upcoming Mohanlal film produced by Gokulam Gopalan under the banner of Sree Gokulam Movies, has been announced. Written and directed by Vishnu Mohan, the film has been titled ‘Operation Ganga’. Co-producers are Baiju Gopalan and V. C. Praveen, while Krishnamoorthy is the Executive Producer. The title announcement of the film, which is being mounted on a grand canvas with a mega budget, was eagerly awaited by fans and cinema lovers. ‘Operation Ganga’ is the third film directed by Vishnu Mohan, who shot to prominence by winning a National Award with his debut film ‘Meppadiyan’ itself.



‘Operation Ganga’ was the historic evacuation mission carried out by India against the backdrop of the Ukraine-Russia war. Based on this backdrop, the film has commenced shooting in Georgia. Mohanlal will soon join the film. A 180-day shooting schedule has been planned across Poland, Georgia, Kazakhstan, Delhi, Dehradun and Kochi. 


Along with Mohanlal, prominent actors including Bollywood star Arjun Rampal, Adil Hussain, Bhagyashri Borse and Parthiban are also part of the film. Featuring actors and technicians from abroad and Bollywood, the film is being mounted as one of the biggest films produced by Sri Gokulam Movies.


Another highlight of ‘Operation Ganga’ is that renowned music composer Shashwat Sachdev is composing the music for the film after the massive success of the pan-Indian film ‘Dhurandhar’. Miroslav Kuba Brozek, the cinematographer of ‘Pushpa 1’ and ‘Pushpa 2’, is handling the camera for the film. Se Young Oh, the action director of ‘Dhurandhar’ and ‘Kill’, is also part of the film.


Rajeevan, the production designer of films including ‘GOAT’, ‘Meiyazhagan’, ‘Amaran’ and ‘Kathanar’; editor Shameer Muhammed; sound designer Bishwadeep Chatterjee, who has worked on films including ‘Dhurandhar’, ‘Uri’, ‘3 Idiots’ and ‘Padmaavat’; K. V. Sanjith, the VFX supervisor of ‘Kantara’; Squadron Leader Verlin Panwar, who has worked as a military advisor on films including ‘Safed Sagar’, ‘Border 2’ and ‘Fighter’; ‘Lokah’ costume director Melvy J; makeup artist Ronex Xavier; and production controller Rinni Divakar are among the prominent technicians who are part of ‘Operation Ganga’.


‘Ottakkomban’ starring Suresh Gopi, ‘Kathanar’ starring Jayasurya, and ‘Killer’ directed by S. J. Suryah, are the other big projects currently being prepared under the banner of Sree Gokulam Movies.


Cinematography - Miroslav Kuba Brozek, Music - Shashwat Sachdev, Action Direction - Se Young Oh, Production Design - Rajeevan, Editing - Shameer Muhammed, Sound Design - Bishwadeep Chatterjee, VFX Supervision - K. V. Sanjith, Military Advisor - Squadron Leader Verlin Panwar, Costume Design - Melvy J, Makeup - Ronex Xavier, Production Controller - Rinni Divakar