Featured post

திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”...‘

 *“திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”...‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி ...

Tuesday, 18 August 2026

திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”...‘

 *“திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”...‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!*




சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.


சில கதாபாத்திரங்கள் ஒரு நடிகரிடம் எதை எதிர்பார்க்கின்றன என்பதனால் மட்டுமல்லாமல், அவை தங்களுடன் கொண்டுவரும் உலகத்தினாலும் சிறப்பானதாக மாறுகின்றன. பிரியா பவானி சங்கரைப் பொறுத்தவரை, ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அத்தகைய மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.


அன்பான மனைவியாகவும், பாசமுள்ள தாயாகவும் காவேரி என்ற கதாபாத்திரத்தில் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதைக்களத்தில், காவேரி மற்றும் ரவி தேஜா கதாபாத்திரத்திற்கும் இடையேயான அன்பும் நெருக்கமும் படத்தின் கதாபாத்திர அறிமுகம் மற்றும் புரமோஷன் காட்சிகள் மூலம் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதே நேரத்தில், படத்தின் கதைக்களம் தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான உறவு, நம்பிக்கை மற்றும் மனமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.


’இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியா பவானி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “காவேரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான கதாபாத்திரம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, சிவா நிர்வாணா உருவாக்கியிருந்த உணர்வுப்பூர்வமான உலகத்தைப் புரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட நேர்மையான மற்றும் வலிமையான கதையில் நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உறவுகளில் நிறைய அன்பும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இருக்கின்றன. அதனால் காவேரி கதாபாத்திரம் எனக்கும் ஸ்பெஷல்”


”ரவி தேஜா சாருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். எல்லோருடனும் அன்பாகவும் இயல்பாகவும் பழகினார். அதனால் எங்களுக்கும் நடிப்பது எளிதாகவும் மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள் குறித்து சிவா மிகவும் தெளிவாக இருந்தார். அவரது வழிகாட்டுதலுடன் பணியாற்றியது அழகான அனுபவம்”.


மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு முடிந்தபோது, இந்த திரைப்படத்தைத் தாண்டியும் நாங்கள் எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஏராளமான காட்சிகளில் நடித்தோம், ஆயிரக்கணக்கான நினைவுகளை உருவாக்கினோம், எங்களுக்குள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பல நகைச்சுவையான தருணங்களைப் பகிர்ந்துகொண்டோம், நிறைய சிரித்தோம். நாம் பணியாற்றும் மனிதர்கள், நம்முடன் எடுத்துச் செல்லும் நினைவுகளின் முக்கியமான பகுதியாக மாறிவிடும் பயணங்களில் இதுவும் ஒன்று. 


இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், குறிப்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார், ஒய். ரவி சங்கர் சார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் பக்தி சார்ந்த உலகத்துடன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை இணைந்திருக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தத் திரைப்படத்தையும், அதன் கதாபாத்திரங்களையும், நாங்கள் இதில் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளையும் ரசிகர்கள் தங்களுடன் இணைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார். 


சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர். சிவ் சனானா இணைத் தயாரிப்பாளராகவும், நீரஜ் கல்யாண் டி-சீரிஸின் தலைவராகவும், செர்ரி தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுகின்றனர்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்து, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம், மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் இயக்குநர் சிவா நிர்வாணா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

My role in Modha Rathri has a lot of emotions and love infused together”: Anishma Anilkumar on Her Mature Role in ‘Modha Rathiri’*

 *“My role in Modha Rathri has a lot of emotions and love infused together”: Anishma Anilkumar on Her Mature Role in ‘Modha Rathiri’*






Anishma Anilkumar is rapidly emerging as one of the promising young performers to watch in Tamil cinema. With ‘Sirai’ and ‘Youth’ earning her strong appreciation, she has already begun building a reputation for choosing varied characters rather than settling into a familiar mould. That ability to explore contrasting shades so early in her career has made her a performer audiences are increasingly watching with interest. Now, with ‘Modha Rathiri’, Anishma takes another step forward by portraying a more mature woman whose emotions, expectations and inner conflicts become an important part of the story.


Actress Anishma Anilkumar says: “What attracted me to ‘Modha Rathiri’ was the emotional space of my character. She is a woman who carries many thoughts and feelings within her, but she doesn't necessarily express everything openly. I feel there is something very beautiful about portraying such a character because women often experience many emotions simultaneously, especially when they find themselves in an unfamiliar situation. I wanted to approach her with honesty rather than simply playing her as a conventional heroine.”


“This film gave me an opportunity to explore a more mature side of myself as an actor. There is humour and entertainment in the story, but beneath those situations are very real emotions, particularly the expectations, nervousness and uncertainties that can surround a woman entering a new phase of her life. I am grateful to Raja for trusting me with this character and to our producers for giving me the opportunity. Rishikanth has been a wonderful co-star, and I believe audiences will connect with the emotional side of our characters.”


Rather than treating her character merely as a part of the film's comic situations, Modha Rathiri gives Anishma room to explore the quieter emotions that accompany a major transition in a woman's life. Her character's perspective adds another dimension to a story that unfolds through relationships, family dynamics and unexpected circumstances.


The film brings together Rishikanth and Anishma Anilkumar in the lead, alongside Chetan, A. Venkatesh, Bagavathi Perumal, Abdool Lee, Shelly Kishore, Sangeetha Balan, Banupriya, Sumithra Devi L., Varshini Karmegham, Karthikeyan, Velan and Kowshik Kabilan, among others. Bharath Sankar composes the music, while Surendran Paranjothi handles cinematography and Ashok Arjunan takes care of the edit. Poornima Ramaswamy is the Costume Designer and A. Balumahendra is the Art Director.


For Anishma, Modha Rathiri arrives at an interesting stage of her career, after making an impression with diverse roles in her early films, she now gets an opportunity to inhabit a character with greater emotional maturity. Directed by debutant Raja Karuppasamy, the film is produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under Mythri Movie Makers and is set to reach audiences worldwide on August 21, 2026.

மொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”...நடிகை அனிஷ்மா அனில்குமார்!*

 *‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”...நடிகை அனிஷ்மா அனில்குமார்!*






‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அனிஷ்மா அனில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய கதாபாத்திரம் தனக்குள் நிறைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு பெண் அல்ல. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் அழகு இருப்பதாக நான் உணர்கிறேன். குறிப்பாக, பெண்கள் பல நேரங்களில் ஒரே சமயத்தில் பல்வேறு உணர்வுகளை அனுபவிப்பார்கள். அதிலும், அவர்கள் முற்றிலும் புதிதான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது அந்த உணர்வுகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால், வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அவரை சித்தரிக்காமல், உண்மைத்தன்மையுடன் அணுக வேண்டும் என்று விரும்பினேன்” என்றார். 


“ஒரு நடிகையாக என்னுடைய முதிர்ச்சியான பக்கத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது. கதையில் நகைச்சுவையும் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. ஆனால், அந்தச் சூழ்நிலையில் மிகவும் உண்மையான உணர்வுகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒரு பெண் தனது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நுழையும்போது ஏற்படக்கூடிய எதிர்பார்ப்புகள், பதற்றம் மற்றும் பல்வேறு சந்தேகங்கள் போன்ற உணர்வுகள் இதில் இருக்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தை நடிக்க எனக்கு வாய்ப்பளித்த ராஜாவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. கதாநாயகன் ரிஷிகாந்தும் சிறப்பாக நடித்துள்ளார். எங்களது கதாபாத்திரங்களுடன் நிச்சயம் பார்வையாளர்கள் தங்களை பொருத்தி பார்ப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.


கதையின் நகைச்சுவையான சூழ்நிலைகளில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே அனிஷ்மாவின் கதாபாத்திரம் இல்லாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான மாற்றத்தின்போது உருவாகும் அமைதியான மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தவும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் அவருக்கு வாய்ப்பளித்துள்ளது. உறவுகள், குடும்பச் சூழல்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் வழியாக கதை நகரும் நிலையில், அனிஷ்மா கதாபாத்திரம் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 


இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அசோக் அர்ஜுனன் படத்தொகுப்புப் பணியை கவனித்துள்ளார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகவும், ஏ. பாலுமகேந்திரா கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.


தனது ஆரம்பகால படங்களிலேயே மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ள அனிஷ்மாவுக்கு, ‘மொத ராத்திரி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும். உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Some Characters Stay With You Long After the Film Is Over”: Priya Bhavani Shankar on Her Special Journey with ‘Irumudi Kattu

 *“Some Characters Stay With You Long After the Film Is Over”: Priya Bhavani Shankar on Her Special Journey with ‘Irumudi Kattu’*




_*The actress steps into the emotionally rooted world of Kaveri in Shiva Nirvana’s ‘Irumudi Kattu’, starring alongside Ravi Teja; the Mythri Movie Makers production arrives worldwide on August 21, 2026*_


Some characters become special not merely because of what they demand from an actor, but because of the world they bring along with them. For Priya Bhavani Shankar, her experience with Irumudi Kattu has been one such memorable journey. Directed by Shiva Nirvana and produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under the banner of Mythri Movie Makers, the much-awaited film stars Mass Maharaja Ravi Teja and is presented by T-Series Films, with a grand worldwide theatrical release scheduled for August 21, 2026.


Priya Bhavani Shankar plays Kaveri, a caring wife and doting mother, in a story that places family and emotions at its heart. The character introduction and promotional material have offered glimpses of the warmth and intimacy shared by Kaveri and Ravi Teja’s character, while the film's larger narrative explores a deeply emotional father-daughter relationship, faith and transformation.


Speaking about her experience of being part of Irumudi Kattu, Priya Bhavani Shankar says:


“Kaveri has been a very special character for me. When I heard the story and understood the emotional world Shiva Nirvana had created, I felt very happy to be part of such an honest and powerful story. There is a lot of warmth and emotion in the relationships at the heart of ‘Irumudi Kattu’, and that made the journey of portraying Kaveri particularly meaningful for me.


“Working with Ravi Teja sir has been a wonderful experience. There is such a natural warmth and ease in the way he approaches his work, and that made our scenes together very comfortable and enjoyable. Shiva has been extremely clear about the emotions he wanted to bring out in every character, and it was a beautiful experience to be guided by his vision.


“When we finally wrapped the film, I realised how much we had taken back from this journey beyond the film itself. We shot so many scenes, made a thousand memories, collected our own inside jokes and shared so many moments of laughter. It was one of those journeys where the people you work with become an important part of the memories you carry with you. It truly has been a lovely journey.


“I am grateful to the entire team, especially our producers Naveen Yerneni sir and Y. Ravi Shankar sir and everyone at Mythri Movie Makers, for giving me the opportunity to be part of this film. I also loved the way G. V. Prakash Kumar’s music complements the emotional and devotional world of ‘Irumudi Kattu’. I sincerely hope audiences connect with the film, its characters and the emotions we have put into it.”


Priya’s association with the film has already generated considerable interest, particularly following the unveiling of Kaveri, which introduced her as Ravi Teja’s wife and a caring mother. The film brings her into a distinctly family-oriented emotional space, while Shiva Nirvana’s narrative combines family drama, devotion and a transformative journey.


The film features Sai Kumar, Baby Nakshathra, Ajay Ghosh, Ramesh Indira and Swasika in important roles. Shiva Nirvana has written and directed the film, with G. V. Prakash Kumar composing the music, Vishnu Sharmahandling cinematography, Prawin Pudi serving as editor and Sahi Suresh overseeing production design.


Presented by T-Series Films and produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under Mythri Movie Makers, Irumudi Kattu brings together Ravi Teja, Priya Bhavani Shankar and Shiva Nirvana in a promising combination that explores family, emotion, faith and transformation. The film is all set for its worldwide theatrical release on August 21, 2026.

Absolutely. For a media release, I’d keep the English polished and professional,

 Absolutely. For a media release, I’d keep the English polished and professional, but closer to the original Tamil rather than making it sound overly literary. Here is a more natural press-release style translation:



Director Shiv Madhav Embarks on a New Cinematic Journey; From the Experiences of ‘3.6.9’ to His Next Grand Venture


“There is no recognition for achievements in cinema… I have now decided to move towards commercial cinema,” says Director Shiv Madhav


‘3.6.9’ Director Shiv Madhav to Direct a Hollywood-Style Science-Fiction Fantasy Superhero Film


Remembering Late Director Bhagyaraj’s Encouragement, Shiv Madhav Opens Up About His New Film


Director Shiv Madhav is one of the few filmmakers who entered the industry with innovative attempts right from the beginning. His 2023 directorial venture ‘3.6.9’ was a science-based film that created a unique place for itself.


The film created a world record as the first film to be shot in just 81 minutes, and also became the first film from Tamil Nadu to achieve two world records.


Released in more than 100 theatres across Tamil Nadu and Karnataka, the film received appreciation from critics. However, due to the lack of proper promotions, it did not reach the larger audience as expected.


Now, Shiv Madhav is gearing up for his next venture — a grand commercial superhero film blending science fiction and fantasy, featuring leading actors from Tamil, Telugu, Malayalam and Kannada cinema.


The film’s pre-production work and miniature work are currently progressing at a brisk pace.


Speaking about his new film, director Shiv Madhav said:


“My first film was ‘3.6.9’. It became the first film from Tamil Nadu to achieve two world records. Even in Hollywood, no one had attempted something like this. But unfortunately, people did not even get to know that one person had made a film with 100 actors in just 81 minutes.


After achieving those two world records, I thought things would move to the next level. But nothing happened the way I had expected. It felt like all my dreams had collapsed.


In North India and Kerala, when people come to know about such an achievement, they give it a lot of recognition. But unfortunately, I did not receive the same kind of recognition in my own Tamil Nadu.


At the same time, over the last three years, several producers approached me and asked me to make another film based on a record. But I did not want to continue being identified only as a filmmaker who makes record-setting films. The reason is that there is hardly any recognition for such achievements here.


Cinema is also a business. So, with that understanding, I have decided to move towards commercial cinema and have prepared myself for my next film.


This new film also has a strong scientific background. I am attempting something on a Hollywood scale, with large sets and several practical elements instead of depending completely on CGI.


The film will be a big-budget commercial entertainer with extensive use of miniatures. It is set in the 1980s and combines science and fantasy with a superhero subject. I am travelling forward with the confidence that the kind of cinema I have always wanted to make is finally going to happen.


Whenever I think about doing something that nobody in the world has attempted before, the challenge is to bring that idea onto the screen in the way I imagine it. This new film will have all the regular elements of commercial cinema. At the same time, there is a particular idea that I want to convey, and that will also be part of this film.


I am once again attempting to create a world record. But this time, I want to bring in several new elements in the making of the film and attempt something on par with Hollywood.


Over the past three years, I have learnt a lot about the possibilities in VFX, AI and other technical aspects of filmmaking. After learning all this, I am now ready to step into the field and make the film.


The actors and technicians we are bringing on board are also big names. The pre-production work is now underway, and the miniature work has already begun.


The shooting is scheduled to begin in October, and the entire film will be shot at Ramoji Film City.


Bhagyaraj sir acted in my first film, and I had planned to have him act in this film as well. Unfortunately, he is no longer with us.


Whenever I felt low or discouraged, Bhagyaraj sir would tell me, ‘Shiva, you have great potential. Move forward with confidence. You can do it.’ His words always gave me the strength to keep going.


Many times, he would invite me to his home, talk to me, motivate me and send me back with renewed confidence. Losing such a mentor has been a great pain for me.


On the day he passed away, I was standing near his feet. He knew how difficult it was for me to make my first film. He had also spoken about the film and supported me on many occasions.


Even today, I strongly believe that his blessings are with me,” he says emotionally.

இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; '3.6.9'

 *இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; '3.6.9' அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்*



*"சினிமாவில் சாதனைக்கு மரியாதையில்லை... வணிகத்தை நோக்கி என் பயணம்!" - இயக்குநர் ஷிவ் மாதவ்* 


*ஹாலிவுட் தரத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சூப்பர் ஹீரோ படம்: களமிறங்கும் '3.6.9' இயக்குநர் ஷிவ் மாதவ்*


*மறைந்த இயக்குநர் பாக்யராஜ் கொடுத்த ஊக்கம் ; புதிய படம் குறித்து மனம் திறக்கும் இயக்குநர் ஷிவ் மாதவ்* 


திரையுலகில் நுழையும்போதே புதுமையான முயற்சிகளுடன் அடியெடுத்து வைக்கும் வெகுசில படைப்பாளிகளில் ஒருவர் தான் இயக்குநர் ஷிவ் மாதவ். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ல் அறிவியல் கதையம்சத்துடன் வெளியான படம் '3.6.9'.


 உலகளவில் வெறும் 81 நிமிடங்களில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற சாதனையையும், தமிழ்நாட்டிலிருந்து இரண்டு உலக சாதனைகளைப் பெற்ற முதல் படமாகவும் இது அமைந்தது.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும், முறையான விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் இப்படம் மக்களிடையே பெரிதும் சென்றடையாமல் போனது.


இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி என ஒவ்வொரு மொழியிலிருந்தும் மிகப்பெரிய நடிகர்களை வைத்து, ஒரு பிரம்மாண்டமான கமர்சியல் மற்றும் அறிவியல், பேண்டசி கலந்த சூப்பர் ஹீரோ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் ஷிவ் மாதவ்.


 இப்படத்தின் ப்ரீ-புரொடக்சன் பணிகள் மற்றும் மினியேச்சர் ஒர்க்குகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


*படம் குறித்து இயக்குநர் ஷிவ் மாதவ் கூறும்போது,*


"என்னுடைய முதல் படம் '3.6.9'. தமிழ்நாட்டில் இரண்டு உலக சாதனை செய்த முதல் படமாக அமைந்தது. ஹாலிவுட்டில் கூட யாரும் இதை முயற்சி பண்ணல. 81 நிமிஷத்துல 100 பேர் நடிச்ச ஒரு படத்தை ஒருத்தர் எடுத்தாருங்கிறது மக்களுக்கு தெரியாமயே போயிருச்சு. அந்த ரெண்டு உலக சாதனை கிடைச்சதுக்கு அப்புறம் நாம பெரிய அளவுல போயிருவோம் அப்படின்னு நினைத்த போது, நான் நினைத்த எதுவுமே இங்க நடக்கல. என்னுடைய கனவுகள் எல்லாம் அப்படியே தகர்ந்த மாதிரி ஆயிருச்சு. 


நார்த்ல, கேரளாவுல இப்படி ஒரு சாதனை படம் எடுத்தது தெரிஞ்சதும் அவ்வளவு வரவேற்பு கொடுக்கிறாங்க. ஆனா, என்னோட தமிழ்நாட்டுல எனக்கு அந்த மரியாதை இல்லை.


அதேசமயம் கடந்த மூணு வருஷமா, வேற பல தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி மீண்டும் சாதனை படங்களை எடுக்கலாம் என்று கூறி என்னைத் தேடி வந்தார்கள். ஆனால் திரும்பவும் சாதனை படம் எடுக்கிறேன் என என்னுடைய அடையாளம் தெரியாமல் போக நான் விரும்பவில்லை. காரணம், சாதனைக்கு இங்கே மரியாதையே இல்லாம போயிருச்சு. சினிமா என்பதே வணிகம் தான். அதனால், வணிகத்தை நோக்கி நாமும் பயணிப்போம் என்கிற புரிதலுடன் தற்போது புதிய படத்திற்குத் தயாராகி விட்டேன்.


இந்தப் புதிய படத்தின் கதைக்களமும் விஞ்ஞான பின்னணியில் தான் உருவாகியுள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் முதன்முதலா, அதிக செட் போட்டு, சிஜி இல்லாம நிறைய முயற்சிகளை உள்ள கொண்டு வருகிறேன். மினியேச்சர்களை பயன்படுத்தி பெரிய பட்ஜெட்டில் கமர்சியலா, ஜாலியா, அதே நேரம் எண்பதுகளில் நடக்கிற ஒரு கதையை மையமா வச்சு, அதுல ஒரு விஞ்ஞானம், ஒரு ஃபேண்டஸி கலந்த ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டாக இது இருக்கும். அந்தவகையில் நான் எதிர்பார்த்து வந்த சினிமா, இப்ப எனக்கு கிடைக்கப் போகுது என்கிற நம்பிக்கையுடன் நான் பயணிக்கிறேன்.


உலகத்திலேயே யாரும் பண்ணாததை நாம பண்ணனும், அப்படின்னு நினைச்சு வரும்போது, நான் நினைச்ச விஷயத்தை விஷுவலா சொல்ல முடியாம போகுது. இந்த புதிய படத்தில் வழக்கமான சினிமா அம்சங்கள் எல்லாமே இருக்கும். அதே நேரம், நான் ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன், அதுவும் இதுல உள்ள இருக்கு. இதிலும் உலக சாதனைதான் பண்ண முயற்சிக்கிறேன். ஆனால் அது என்னோட முயற்சியில், ஹாலிவுட்டுக்கு நிகரா, நிறைய விஷயங்கள், படத்தோட மேக்கிங்ல பண்ணனும்னு நினைக்கிறேன். 


இந்த மூணு வருஷத்துல விஎஃப்எக்ஸ்ல இருந்து, ஏஐ உட்பட டெக்னிக்கலா நிறைய என்னென்ன பண்ணலாம்னு எல்லாம் கத்துக்கிட்டு வந்துட்டு, இப்ப படம் பண்றதுக்கு தயாராகி களத்துல இறங்குறேன்.


 அதற்கேற்ற மாதிரி நடிகர்கள், டெக்னிஷியன்கள் எல்லாமே பெரிய பெரிய ஆளுங்கதான். இப்ப முன் தயாரிப்பு பணிகள் முடிஞ்சு, மினியேச்சர் ஒர்க் எல்லாம் நடந்துட்டு இருக்கு. படப்பிடிப்பு அக்டோபர்ல துவங்க இருக்கு. இது முழுக்க முழுக்க எல்லாமே ராமோஜி ஃபிலிம் சிட்டிலதான் நடக்கப் போகுது.


என்னுடைய முதல் படத்தில் பாக்யராஜ் சார் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவர் இப்போ நம்முடன் இல்லை. நான் சில சமயம் சோர்ந்துபோன நேரங்களில் கூட பாக்கியராஜ் சார், "ஷிவா, உன்கிட்ட ஒரு பெரிய பொட்டன்ஷியல் இருக்கு. நம்பிக்கையோட ஓடு, உன்னால முடியும்"னு சொல்லி எனக்கு உந்து சக்தி கொடுத்தாரு. பல சமயங்களில் அவரோட வீட்டுக்கு கூப்பிடுவாரு, என்னை வரவச்சு, மோட்டிவேஷன் பண்ணி அனுப்புவாரு. அந்த மாதிரி ஒரு குருவை இழந்தது ஒரு பெரிய வேதனை. 


அவர் இறந்த தினத்தன்று அவரது கால்மாட்டிலேயே தான் நின்றுகொண்டு இருந்தேன். என் முதல் படம் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அவரும் அந்த படத்தைப் பத்தி எனக்காக நிறைய பேசி இருக்காரு.    இப்பவும் சாரோட ஆசீர்வாதம் எனக்கு இருக்குன்னு நம்புறேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

“ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு...மாநிலம்

 *“ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு...மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*



அரசுப் பள்ளி மாணவர்களை ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறு தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைக்க உள்ளதாக சபாநாயகர் தகவல்!


புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’ தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள NFDC-யில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, சபாநாயகர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்தத் திரையிடலில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, அமைச்சர் கில்லி சரத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


திரைப்படத்தைப் பார்த்து நெகிழ்ந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தைப் பார்த்து, ஜி.டி. நாயுடுவின் சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களை ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறு தமிழ்நாடு அரசிடம் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் ஜி.டி. நாயுடுவின் உத்வேகம் அளிக்கும் வாழ்க்கைக் கதை மாநிலம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையைச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


திரைப்படத்திலிருந்து தான் பெற்றுக்கொண்ட முக்கியமான செய்தி குறித்து பேசிய சபாநாயகர், இன்றைய இளைஞர்களிடையே சுயசார்பு, அறிவு மற்றும் தனித்திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இளைஞர்கள் தங்களுக்கான அறிவையும் திறமைகளையும் தாங்களே வளர்த்துக்கொண்டு, அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தி, வாய்ப்புகள் தங்களைத் தேடி வரும் என்று காத்திருக்காமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


முறையான கல்வி கற்பதற்கான சூழல் கடினமாக இருந்தபோதிலும், சுயமாகக் கற்றுக்கொண்டு தனது திறமைகளை வளர்த்துக்கொண்ட ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பயணம், விடாமுயற்சி, ஆர்வம் மற்றும் சுயசார்பு ஆகியவற்றால் எத்தகைய சாதனைகளை உருவாக்க முடியும் என்பதற்கான வலிமையான எடுத்துக்காட்டு என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார். மேலும், மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை முழுமையான திறனாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளாக மாற்ற முடியும் என்பதை ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் பணியையும் பாராட்டிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ‘ஜி.டி.என்.’ திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பு என்று குறிப்பிட்டார். மேலும், “’ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவை” என்றும் வலுவாக பதிவு செய்தார். திரைப்படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சபாநாயகரின் இந்தப் பாராட்டு, ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.


கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் ஆர். மாதவன், ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘ஜி.டி.என்.’ தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. கோயம்புத்தூரில் பிறந்த புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம், அவர் ’இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்டதன் பின்னணியையும் அவரது சாதனைகளையும் பதிவு செய்கிறது.

GDN IS THE NEED OF THE HOUR” — TAMIL NADU ASSEMBLY SPEAKER J.C.D. PRABHAKAR URGES STUDENTS ACROSS THE STATE TO WATCH THE FILM

 *”GDN IS THE NEED OF THE HOUR” — TAMIL NADU ASSEMBLY SPEAKER J.C.D. PRABHAKAR URGES STUDENTS ACROSS THE STATE TO WATCH THE FILM*



Speaker says he will recommend to the Tamil Nadu Government that government school students be taken to watch GDN


GDN, the biographical drama based on the extraordinary life of legendary inventor and industrialist G.D. Naidu, received a strong endorsement from Tamil Nadu Assembly Speaker J.C.D. Prabhakar, following a special private screening held over the weekend at NFDC, Chennai.


The screening was attended by J.C.D. Prabhakar, Loyola Mani, Chairman of the Tamil Nadu Textbook and Educational Services Corporation, Minister Gilli Sharath, and other distinguished guests.


Deeply moved by the film, Speaker J.C.D. Prabhakar said that school and college students across Tamil Nadu should watch GDN and draw inspiration from the remarkable life and achievements of G.D. Naidu.


Taking his appreciation a step further, the Speaker said that he intends to formally recommend to the Tamil Nadu Government that government school students be taken to watch the film, enabling the inspirational story of G.D. Naidu to reach young minds across the state.


“Self-reliance is the need of the coming generation”


Speaking about the central message he took away from the film, the Speaker highlighted the importance of self-reliance, knowledge and individual skills among today’s youth.


He emphasised that young people should develop their own knowledge and abilities, use their skills effectively and contribute to the country’s economic growth instead of waiting for opportunities to come their way.


According to the Speaker, G.D. Naidu’s largely self-taught journey, despite having very little formal education, stands as a powerful example of what determination, curiosity and self-reliance can achieve.


He also stressed the importance of students identifying their individual talents and nurturing them to their fullest potential. G.D. Naidu’s journey, he noted, demonstrates how curiosity, creativity and perseverance can be transformed into meaningful innovation.


Appreciating the performances and the entire team behind the film, Speaker J.C.D. Prabhakar described GDN as a stunning piece of work and summed up his response in a powerful statement:


“GDN movie is the need of the hour.” 


The Speaker’s endorsement comes during the film’s second week in theatres and adds significant momentum to its growing reception among audiences, critics and trade observers.


Directed by Krishnakumar Ramakumar and produced by Varghese Moolan Pictures and Tricolour Films, GDN stars R. Madhavan in the titular role. The film has music by Govind Vasantha and is currently running in theatres across Tamil Nadu and worldwide


GDN is a biographical drama based on the life of G.D. Naidu, the legendary Coimbatore-born inventor and industrialist celebrated as the “Edison of India.”

Monday, 17 August 2026

சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி”

 *சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!*





சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.


மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.


வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தமிழ் திரையுலகில் தரமான வணிகப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10வது திரைப்படம் இது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சமீப காலமாக தரமான கதைகளுக்கும் வலுவான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, “தலைவர் தம்பி தலைமையில்” மற்றும் “TN 2026” முதலாக பல வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில், இந்தப் படத்தையும் கதைக்கும் தயாரிப்பு தரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கி வருகின்றனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், குடும்ப உணர்வுகள், ஆக்சன், கிரைம், எமோஷன் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ரசிகர்களை கவரும் திறமையால் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். நான் மகான் அல்ல, பாண்டியநாடு வெற்றிப் படங்களைப் போல அப்பா–மகன் உறவை மையப்படுத்தி, மீண்டும் அதே பாணியில் விறுவிறுப்பும் உணர்வுகளும் நிறைந்த கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


சுசீந்திரன் – சாந்தனு பாக்யராஜ் கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி எஸ் இசை மற்றும் மதுரை பின்னணியில் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’, மோஷன் போஸ்டர் வெளியானதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.