Featured post

50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மெட்ராஸ் முதலை வங்கி: ‘Save The Reptiles’

 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மெட்ராஸ் முதலை வங்கி: ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணம் தொடக்கம் 22 மாநிலங்கள் வழியாக 15...

Sunday, 30 August 2026

50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மெட்ராஸ் முதலை வங்கி: ‘Save The Reptiles’

 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மெட்ராஸ் முதலை வங்கி: ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணம் தொடக்கம்

















22 மாநிலங்கள் வழியாக 15,000 கி.மீ. பயணம்; ஊர்வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து 120 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்


சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இன்று (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மெட்ராஸ் முதலை வங்கி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நிறுவனத்தின் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.


அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027 வரை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை மெட்ராஸ் முதலை வங்கிக்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் குழுவாக வருகை தரும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.


இதனுடன், இந்தியாவிலேயே முதல்முறையாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து நாடு தழுவிய மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மெட்ராஸ் முதலை வங்கி அறிவித்துள்ளது. மெட்ராஸ் முதலை வங்கி மற்றும் The Reptile Conservancy Alliance இணைந்து ‘Save The Reptiles’ என்ற பெயரில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளன.


இன்று தொடங்கும் இந்த விழிப்புணர்வு பயணம் டிசம்பர் 2026 வரை சுமார் 120 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தப் பயணத்தில் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் கடக்கப்படவுள்ளது.


பயணத்தின் போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாநில வனத்துறை அதிகாரிகள், வன உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.


50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணத்தை ஊடகங்கள் முன்னிலையில் தொடங்குவதில் மெட்ராஸ் முதலை வங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.


இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் மக்களிடம் சென்றடையவும், ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கவும் ஊடக நண்பர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் கேட்டுக்கொள்ளப்பட்டது.


49 ஆண்டுகால அர்ப்பணிப்பான பயணத்தை நிறைவு செய்து 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மெட்ராஸ் முதலை வங்கி, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘Save The Reptiles’ மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய பயணத்தையும் முன்னெடுக்கிறது.

Saturday, 29 August 2026

ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI

 *ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI*


The much-awaited title and motion poster of Original Monster were unveiled at a special event in Mumbai on August 28, marking the official introduction of the highly anticipated film to audiences beyond its home industry and setting the stage for its pan-Indian journey.


The event brought together the film’s principal members along with some of the most respected names from the Indian film industry. The occasion was graced by Director R. Chandru, renowned producer and presenter Mr. Anand Pandit, Pan-India Superstar Dr. Shivarajkumar, Smt. Geetha Shivarajkumar, popular actor Sunil, music director Ajaneesh Loknath and cinematographer AJ Shetty, making it a memorable evening for the entire Original Monster team.


The much-awaited motion poster was officially launched in the presence of Dr. Shivarajkumar, R. Chandru, Anand Pandit, Geetha Shivarajkumar and the film’s core team, marking the first time the title Original Monster was presented to the audience.


The launch received an enthusiastic response from the gathering, with the event turning into a celebration of the film’s powerful collaboration and creative vision. The presence of acclaimed talents such as Sunil, Ajaneesh Loknath and AJ Shetty further reflected the diverse and accomplished creative team behind the project.


The Mumbai event concluded on a highly positive note, with the title and motion poster receiving strong appreciation from the media, guests and members of the film fraternity present at the occasion.


With its title and motion poster now unveiled, Original Monster embarks on the next phase of its promotional journey, building anticipation among audiences across India. The Mumbai launch marks an important milestone as the film takes its first major step towards establishing its presence on the pan-Indian stage.


🔗














https://youtu.be/bfrZLRxsink

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

 *ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு















மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது.


இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர்.


மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ்குமார் மற்றும் படத்தின் முக்கியக் குழுவினரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஒரிஜினல் மான்ஸ்டர் என்ற தலைப்பு முதன்முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்த வெளியீட்டிற்கு அங்கு கூடியிருந்தவர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் சிறப்பான கூட்டணி மற்றும் படைப்பாற்றல் பார்வையின் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு அமைந்தது. சுனில், அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஏ.ஜே. ஷெட்டி போன்ற பாராட்டுக்குரிய திறமையாளர்களின் பங்கேற்பு, இப்படத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறப்பான படைப்புக் குழுவையும் எடுத்துக்காட்டியது.


மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு ஊடகங்கள், விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட திரையுலகைச் சேர்ந்தவர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், மிகுந்த உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது.


தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படம் தனது அடுத்தகட்ட விளம்பரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மும்பை வெளியீட்டு நிகழ்வு, பான் இந்தியா அளவில் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கில் இப்படம் எடுத்து வைக்கும் முதல் முக்கியமான அடியாக அமைந்துள்ளது.


🔗 https://youtu.be/bfrZLRxsink

Kyraa Vasudevan on Her Malayalam Debut Khalifa: “Malayalam Cinema Chose Me and Truly Gave Me So Much Love

 *Kyraa Vasudevan on Her Malayalam Debut Khalifa: “Malayalam Cinema Chose Me and Truly Gave Me So Much Love”*






Actress Kyraa Vasudevan opens up about her Malayalam debut Khalifa, expressing gratitude for the opportunity to work with Prithviraj Sukumaran, director Vyshak and writer Jinu V. Abraham.


Speaking about making her debut alongside such established names, Kyraa says the experience came with immense pressure, but the entire team made her feel comfortable and supported throughout the journey.


“I am truly grateful that I got my debut with Prithviraj, under Vyshak sir’s direction and with Jinu sir’s writing. There was a lot of pressure because I was making my debut alongside so many legends, and they all believed in me and had high hopes for me. But the director, Prithviraj, Jinu sir and the entire team made me feel extremely comfortable and guided me throughout the film. I am truly grateful and thankful for that.”


For Kyraa, the sets of Khalifa became a place of constant learning. She particularly credits director Vyshak for helping her understand the technical aspects of filmmaking and performance.


“There was so much to learn every single day on the sets of Khalifa. Vyshak sir taught me so many things technically — from understanding how to perform according to the lens and the frame to understanding how lighting works. I learnt something new every day.”


Recalling her first stunt sequence, Kyraa says she was nervous initially, but Vyshak ensured that she felt safe and confident throughout the process.


“I was very nervous when I did my stunt sequence for the first time, but Vyshak sir made sure that I felt at home and safe. He truly supported me throughout the entire process and helped me overcome my nervousness.”


Kyraa also speaks fondly about her experience working with Prithviraj, describing him as a warm and comforting co-star.


“Prithviraj was a very comforting co-star. He was extremely kind and welcoming, and it was truly a pleasure working with him and the entire team. I feel blessed to have made my debut with Prithviraj. I don’t know how many people get an opportunity like this, so I made sure that I gave my 200 percent and did justice to the role.”


For Kyraa, Khalifa is more than just her first Malayalam film. She says Kerala and Malayalam cinema have already found a special place in her heart, and she hopes to continue working in the industry regardless of how many languages she works in.


“Malayalam cinema and Kerala have a very special place in my heart. I will make sure that I keep working in the Malayalam industry, no matter how many languages I work in. Malayalam cinema has become my home, especially because my first release is happening here. Malayalam cinema chose me and truly gave me so much love. I will always choose to come back again and again and work in many more projects here. It is my home.”


Kyraa also expresses how warmly the Khalifa team welcomed her, making her feel at home despite coming from another state.


“I don’t feel like I am in a different state anymore. That is how the Khalifa team made me feel. I will always be grateful and thankful for that.”

கலீஃபா' பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நடிகை கைரா வாசுதேவன்

 *'கலீஃபா' பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நடிகை கைரா வாசுதேவன்*






*மலையாளத்தில் அறிமுகமான 'கலீஃபா' பட அனுபவங்களை விவரிக்கும் நடிகை கைரா வாசுதேவன்*


*மலையாள திரையுலகம் என்னைத் தேர்ந்தெடுத்து, அளவற்ற அன்பையும் அளித்தது- கைரா வாசுதேவன்*


நடிகை கைரா வாசுதேவன்- பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான 'கலீஃபா' திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏராளமான ரசிகர்களால் இணையத்தில் தேடப்படும் பிரபலமாக மாறி இருக்கிறார் நடிகை கைரா வாசுதேவன். இந்த தருணத்தில் நடிகை கைரா வாசுதேவன் மலையாளத்தில் அறிமுகமான 'கலீஃபா' திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். 


இது தொடர்பாக நடிகை கைரா வாசுதேவன் பேசுகையில், 


'' பிருத்விராஜ் சுகுமாரன் - இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி. ஆபிரகாம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. 


பிருத்விராஜ் சுகுமாரன் - இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர்  ஜினு வி.ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து எனது முதல் மலையாள படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து அறிமுகமாவதால் மிகுந்த அழுத்தம் இருந்தது. அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்ததுடன் என் மீது பெரிய எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தனர்.


இயக்குநர் -பிருத்விராஜ்- ஜினு மற்றும் ஒட்டுமொத்த படக் குழுவினரும் என்னை மிகவும் இயல்பாகவும், பாதுகாப்பாகவும் உணர வைத்தனர். படம் முழுவதும் எனக்கு வழிகாட்டினர். அதற்காக நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். 


'கலீஃபா' படப்பிடிப்பு தளம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் இடமாக அமைந்தது. குறிப்பாக திரைப்பட தயாரிப்பின் தொழில்நுட்ப அம்சங்களையும், நடிப்பின் நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள இயக்குநர் வைசாக் உதவினார்.‌


'கலீஃபா' படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தன. லென்ஸ்( Lens)  மற்றும் பிரேமிற்கு( Frame ) ஏற்ப எவ்வாறு நடிப்பது என்பது முதல் லைட்டிங் ( Lighting) எவ்வாறு செயல்படுகிறது என்பது வரை... தொழில்நுட்ப ரீதியாக வைசாக் சார் எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் நான் புதிதாக ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டேன்.


இந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். முதல்முறையாக சண்டைக் காட்சியில் நடித்த போது நான் மிகவும் பதற்றம் அடைந்தேன். ஆனால் இயக்குநர் வைசாக் சார்..! நான் பாதுகாப்பாகவும், ஒரு குடும்ப சூழலில் இருப்பது போலவும் உணர்வதை உறுதி செய்தார். அந்த செயல்முறை முழுவதும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்து, எனது பதற்றத்தை விலக உதவினார்.‌


பிருத்விராஜுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.  அவர் அன்பான மற்றும் நம்பிக்கையூட்டும் ஒரு சக நடிகர்.‌ அவர் மிகவும் கனிவான- ஆதரவான- சக நடிகர். அவர் மிகவும் அன்பாகவும்... வரவேற்கும் மனப்பான்மையுடன் இருந்தார். அவருடன் ஒட்டுமொத்த குழுவும் இணைந்து பணியாற்றியது. ... உண்மையிலேயே மகிழ்ச்சியான அனுபவம். பிருத்விராஜுடன் இணைந்து எனது திரை பயணத்தை தொடங்கியதை நான் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இத்தகைய வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை .அதனால் என்னுடைய முழு ஆற்றலையும், 200 சதவீதம் வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு நிறைவான நியாயம் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 


மலையாளத் திரைப்படத் துறையும், கேரளாவும் என் இதயத்தில் மிக சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. நான் எத்தனை மொழிகளில் பணியாற்றினாலும் மலையாளத் துறையிலும் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்வேன். மலையாள திரையுலகம் எனக்கு ஒரு வீடாக மாறிவிட்டது. குறிப்பாக எனது முதல் படம் இங்குதான் வெளியாகிறது என்பதால்... இந்த உணர்வு பூர்வமான ஆழத்தைக் கொண்டிருக்கிறது. மலையாளத் திரையுலகம் என்னை தேர்ந்தெடுத்ததுடன் என் மீது அளவற்ற அன்பையும் அளித்தது. மீண்டும் மீண்டும் இங்கு வந்து பல திரைப்படங்களில் பணியாற்றவே நான் விரும்புவேன். இது எனக்கு ஒரு வீடு போன்றது. 


நான் இப்போது வேறொரு மாநிலத்தில் இருப்பதாகவே உணரவில்லை. கலீஃபா படக் குழுவினர் எனக்கு அத்தகைய உணர்வை ஏற்படுத்தித் தந்தனர். அதற்காக நான் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன்'' என்றார்.

மஞ்சிமா மோகன் - புதிய லுக்:

 மஞ்சிமா மோகன் - புதிய லுக்:

நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்:

உடல்டையைக் குறைத்து புதிய போட்டோஷூட் வெளியீடு!







'ஒரு வடக்கன் செல்பி', 'அச்சம் என்பது மடமையடா', 'FIR', 'களத்தில் சந்திப்போம்', 'தேவராட்டம்' மற்றும் 'சுழல் 2' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன்.


தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுப்பதற்காக, அவர் தன்னை முற்றிலும் புதிய லூக்கிற்கு மாற்றியுள்ளார்.


தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து, மிகவும் பொலிவாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள மஞ்சிமாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.


அவரது இந்த மாஸான மேக்ஓவர் மற்றும் புதிய கெட்டப், அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே கணிசமாக உயர்த்தியுள்ளது.