Featured post

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்

 முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க...

Sunday, 23 August 2026

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்

 முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்






சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன் திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!


முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு தரச் சான்றிதழாகக் கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு.


இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.அந்தப் படமும் பட உருவாக்கத்தின் நேர்த்திக்காகப்  பேசப்பட்டது.


அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில்

 பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.


கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,தென்காசி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.இந்தப் பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.


இப்படத்தின் கதை திரைக்கதை ஒரு பக்கம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தாலும் இதில் பங்களித்துள்ள நடிப்புக் கலைஞர்களின் பாத்திரச் சித்தரிப்புகளும்  பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும்.

பிக் பாஸ் புகழ் சித்து இதில் ஒரு புதிய பரிமாணத்தில் முகம் காட்டியிருக்கிறார்.கொலைகளைத் துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் இவர் வருகிறார். அவருக்கு இது ஒரு மைல்கல்லாக அமையும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


இன்னொரு பிக் பாஸ் பிரபலமான தர்ஷிகா இதில் சித்துவின் மனைவியாக ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். 


மற்றொரு பிக்பாஸ் முகமாகி இன்று பிரபல நடிகையாக இருக்கும் ரித்விகா இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.அவர் நடித்துள்ள பாத்திரம் யாரும் எதிர்பாராத ஒன்றாகவும் இருக்கும்.


நிழல்கள் ரவி ,வேல ராமமூர்த்தி போன்ற அனுபவ நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.


படம் தொடங்கியது முதல் இறுதி வரை தொடரும் சஸ்பென்சையும் விறுவிறுப்பையும் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

இது ரசிகர்களுக்கு ஒரு நல்லதொரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.


படத்தின் தரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு  உருவாக்கியதால் பொறுமையாகப் படத்தைச் செதுக்கி செதுக்கி முழுமையான செய்தொழில் நேர்த்தியுடன்  உருவாக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி.


படத்தைப் பார்த்த திரை உலகப் பிரமுகர்கள் அனைவருமே இது ஒரு நம்பிக்கைக்குரிய படமாக மாறி இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்கள்.


இந்தப் படம் முன்பே வெளியாகியிருக்க வேண்டியது. 'ஜனநாயகன்' வெளிவந்ததால் வெளியீட்டுத்தேதி மாற்றி வைக்கப்பட்டது. எனவே வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் வெளிவர இருக்கிறது.


ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர் அனுபவத்திற்குத் தயாராக இருங்கள்.

ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

 *‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!*










*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.*


அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில் இயக்குநர்  தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,


“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு  மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில்  என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.


அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.


ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”


நடிகை கலா பேசியதாவது..,


“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.


அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.


இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,


“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம்,  இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.

என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகை சோனா பேசியதாவது..,


“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக  இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”


தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,


“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.


இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.


அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.


இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”


இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,


“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.


இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.


இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.


இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”


நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,


“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.


நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.


இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”


நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,


“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார்.

ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.


என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.


அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.


 இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.”

இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.

அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Middle Class Mappillai’ (MCM): A film about challenges faced by 90s kids in finding a suitable bride

 Middle Class Mappillai’ (MCM): A film about challenges faced by 90s kids in finding a suitable bride*






*Made on Aanshva Productions banner, the film is written, directed and headlined by Prabhu Ekambaram*


IT professional Prabhu Ekambaram is turning his passion for filmmaking into reality with 'Middle Class Mappillai' (MCM), a feature film he wrote, directed, and stars in under the banner of Aanshva Productions.


Backed by Aanshva Productions, the film features Haripriya as the female lead, while Sheeba Christy, Aroul D. Shankar and Elizabeth play important roles.


Speaking about 'Middle Class Mappillai', director Prabhu Ekambaram said, “The film will present in an entertaining manner the struggles faced by 90s kids, particularly the difficulties they encounter in finding a suitable bride. We are making the film in a way that realistically reflects the lives and experiences of middle-class families."


Rashaanth Arwin has composed the music for 'Middle Class Mappillai', with Abishek handling the cinematography. The film has editing by Suriya Murugan and lyrics by VJP Raghupathi.


The direction team comprises Srujith, Naveen and Jaisankar. Nikil Murukan is the Publicist, while Raps Prasaath is the Creative Director. Publicity designs are by Ramesh Senthil and Praveen, with still photography by Santhosh.


Made on Aanshva Productions banner and written, directed and headlined by Prabhu Ekambaram, 'Middle Class Mappillai' has completed its shooting. Post-production work is currently progressing at a brisk pace, and the team is planning to release the film soon.


***

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' (MCM)

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' (MCM)* 







*திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் சிக்கல்களை சுவாரசியமாக சொல்லும் திரைப்படம்* 


முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். 


ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர் மற்றும் எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 


'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரபு ஏகாம்பரம், "90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்," என்றார். 


'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பு: சூரிய முருகன்; பாடல்கள்: வி.ஜெ.பி. ரகுபதி; இயக்குநர் குழு: ஸ்ருஜித், நவீன், ஜெய்சங்கர்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; கிரியேட்டிவ் இயக்குநர்: ராப்ஸ் பிரசாத்; பப்ளிசிட்டி டிசைனர்: ரமேஷ் செந்தில், பிரவீண்; ஸ்டில்ஸ்: சந்தோஷ். 


ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

 *’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!*










மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.


தயாரிப்பாளர் ரவி சங்கர், "திரில்லர், குடும்ப கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று விதமான லேயர்களோடு இயக்குநர் சிவா இந்த கதையை எங்களிடம் சொன்னார். எப்படி இது சாத்தியமாகும் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதை சிவா நேர்த்தியாக இந்த படத்தில் செய்து காட்டினார். மாஸ் மகாராஜா ரவி தேஜா, நடிகை பிரியா பவானி சங்கர் என நடிகர்களும், தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த கல்ட் கிளாசிக் படத்தை திரையரங்குகளில் ரசிப்பார்கள். சிவா நிர்வாணாவின் இந்த படத்தை அந்த கடவுள் ஐயப்பாவே தேர்வு செய்து உள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்". 


வசனகர்த்தா விஜய் பாலாஜி, "மைத்ரி மூவி மேக்கர்ஸூடன் ஏற்கனவே இரண்டு படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். மூன்று தந்தைகளுக்கும் இடையே நடைபெறும் கதை இது. இந்தப் படத்திற்கு பெரும் பலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்தான். மெட்ராஸ் தினத்தில் சென்னை வந்திருக்கிறார் மாஸ் மகாராஜா. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்".


பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், " ரவி தேஜா சாரின் படத்திற்கு பாடல் எழுதியிருப்பது நான் கனவிலும் நினைக்காத ஒன்று. தமிழ் படத்தை விட இந்தப் படத்தை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரியா பவானி சங்கரின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸில் நெகிழ்ந்து விட்டேன். இந்தப் படத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களுமே கதையோடு ஒன்றிய முக்கியமான பாடல்கள். நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும்". 


ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா, " ரவி தேஜா சாரின் படத்தில் பணிபுரிந்திருப்பது பெருமையான விஷயம். சிவா சார் கதையை சிறப்பாக எடுத்துள்ளார். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் இது புதுவிதமான கதையாக இருக்கும்".


குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா, "இந்த படம் எனக்கு ரொமவே ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவா சார், மாஸ் மகாராஜா ரவி தேஜா சார், பிரியா பவானி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி".


நடிகை பிரியா பவானி சங்கர், " படத்தின் கதை கேட்ட போது அதில் மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்த போது படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பது உறுதியானது. மிகப்பெரிய கதாநாயகனின் படம் என்ற போதிலும் படப்பிடிப்பின் போது எந்த விதமான மாற்றமும் செய்யாமல் சொன்ன கதையை அப்படியே இயக்குநர் சிவா எடுத்துள்ளார். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது. ரவி தேஜா சாருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். வேறு மொழியில் இருந்து வந்த படம் என்று தமிழ் ரசிகர்கள் நிச்சயம் இதை நினைக்க மாட்டார்கள். மொழி என்பது தடையல்ல! அப்பா- மகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த படம் வெற்றி பெறும்".


இயக்குநர் சிவா நிர்வாணா, "தமிழ் சினிமாவோடு எப்போதும் எனக்கு எமோஷனல் கனெக்ட் உண்டு. குறிப்பாக பாரதிராஜா சார், பாக்யராஜ் சார் படங்கள் மிகவும் பிடிக்கும். திரையரங்குகளை விட்டு ரசிகர்கள் வெளியேறும் பொழுது அவர்களுக்கு அந்த படத்தில் இருந்து எடுத்துக் கொள்ள நிச்சயம் ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும். அந்த மாதிரி படங்களை இயக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அந்த வகையில் தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது. குடும்பத்துடன் பார்த்து மகிழும் திரைப்படம் ஆக 'இருமுடி கட்டு' இருக்கும். இந்த படம் பார்த்து முடித்ததும் அதன் தாக்கத்தால் நிச்சயம் உங்கள் மகள், மனைவியை பற்றி யோசிப்பீர்கள். தெலுங்கில் படம் சூப்பர் ஹிட். குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். அதை போலவே தமிழிலும் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். படத்திற்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தில் பிரியாவின் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி தேஜா சாரை இந்த படத்தில் வேறொரு கோணத்தில் பார்க்கலாம். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்". 


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "ஒரு படத்திற்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம். 'பொல்லாதவன்', 'ராஜா ராணி' படங்களின் கதை கேட்டபொழுது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது. அதுபோலவே 'இருமுடி கட்டு' படத்தின் கதை கேட்டபோதும் நிச்சயம் இது வெற்றி பெறும் என தோன்றியது. இங்கே நிறைய ஹீரோக்கள் ரவி தேஜா சாருக்கு ரசிகர்கள். 'பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு எப்படி தனித்துவம் இருந்ததோ அது போலவே கமர்சியல் படங்களில் ரவி தேஜா சருக்கும் தனித்துவம் இருக்கிறது. நிறைய இயக்குநர்களும் அவருக்கு ரசிகர்கள். இனி சிவா படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி விடுவார்கள். தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்த படத்திற்காக பல விருதுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். குடும்பத்தோடு நிச்சயம் நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். தொழில்நுட்ப  குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி". 


நடிகர் ரவி தேஜா, "இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷ்குமாரின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா.  தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். நட்சத்திராவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பிரியாவும் சிறப்பாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி. இயக்குநர் சிவாவை எனக்கு பிடிக்கும். அது ஏன் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

Saturday, 22 August 2026

Tribute to Late Sowcar Janaki Madam

 *Tribute to Late Sowcar Janaki Madam*






*தென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!*


இந்தியத் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான அத்தியாயம் இன்று முடிவுக்கு வந்தது!


ஒரு நடிகை என்பதைக் கடந்து, கண்ணியம், அறிவுத்திறன் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞராக பல தலைமுறை ரசிகர்களுக்கும் நடிகை செளகார் ஜானகி திகழ்ந்தார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார்.


திரையுலகின் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகத் தொடங்கி, பின்னர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மறக்க முடியாத குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று, உண்மையான கலைத்திறன் என்பது வயது, தோற்றம் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பதை சௌகார் ஜானகி நிரூபித்தார். அவரது குரல், முகபாவனைகள் மற்றும் திரை ஆளுமை ஆகியவை ஒரு காட்சியையே தன்வசப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை.


தென்னிந்தியத் திரையுலகின் அடித்தளத்தை உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களில் ஒருவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பு, நமது திரையுலக வரலாற்றின் பக்கங்களில் காலம் கடந்தும் என்றும் நிலைத்திருக்கும்.


அவரது மறைவு திரையுலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அவருக்குப் பின் வரும் பல தலைமுறை நடிகர்களுக்கு விலைமதிப்பற்ற கலை மரபையும் விட்டுச் சென்றுள்ளார்.


மகத்தான கலைஞர்கள் ஒருபோதும் உண்மையில் நம்மை விட்டுப் பிரிவதில்லை. அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், வெளிப்படுத்திய உணர்வுகள் மற்றும் நம் நினைவுகள் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.


அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.


அமைதியாக இளைப்பாறுங்கள், சௌகார் ஜானகி அம்மா!

திரைத்துறையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்றும் அழியாது.

Tribute to Late Sowcar Janaki Madam

 *Tribute to Late Sowcar Janaki Madam*






Sowcar Janaki, one of the towering personalities of South Indian cinema, passed away today at the age of 94. Her death marks the end of a remarkable era. 


A Timeless Legend — Sowcar Janaki


The passing of Sowcar Janaki is the end of an extraordinary chapter in Indian cinema.


For generations of audiences, she was far more than an actress. She was a performer of immense dignity, intelligence and emotional depth, who brought an unmistakable authenticity to every character she portrayed.


From leading roles in her early years to some of the most memorable character performances of her later career, Sowcar Janaki demonstrated that true artistry does not depend on age, image or convention. Her voice, expressions and presence could command a scene with remarkable ease.


She belonged to a generation of artistes who built the very foundations of South Indian cinema, and her contribution across Tamil, Telugu, Kannada and Malayalam cinema will remain an enduring part of our film history.


Her passing leaves a deep void in the industry, but also an invaluable legacy for generations of actors who follow.


A great artiste has taken her final bow.

But legends never truly leave us—they live on through the characters, emotions and memories they gave us.


My deepest condolences to her family, friends, admirers and the entire film fraternity.


Rest in peace, Sowcar Janaki Amma.

Your presence on our screens will remain eternal.

Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri, draws inspiration for his name from two legendary names

 Actor Abdool Lee – Profile


Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri, draws inspiration for his name from two legendary names — Stan Lee and Spike Lee — which also inspired his choice of “Lee” in his name.





His journey into acting received a major boost through YouTube sketch  videos, which gave him an opportunity to showcase his comic timing and performance skills.


He counts legendary comedians Goundamani and Baliah among his inspirations. He admires how they could make audiences laugh while also convincingly portraying negative shades within comedy characters.


A Velammal alumnus with a B.E., Abdool Lee has acted in around 35plus  films so far.


Actor Soori after watching Modharathri  mentioned , “You remind me of my mama,” a compliment that remains special to him.


His recent credits include GDN, Katta Kusthi 2, and the web series Heart Beat and Local times. 


For Motha Raathiri, Abdool Lee expresses his heartfelt gratitude to the Mythri Movies producers and director Raja Karuppusamy for the opportunity and confidence placed in him.


He also extends special thanks to hero Rishi Kanth, whose support and encouragement made the experience particularly memorable because of their 13+ years friendship 


With Motha Raathiri, Abdool Lee hopes to take his journey forward by exploring characters that blend comedy, characterisation and shades of negativity and much more

நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”...நடிகர் அப்துல் லீ!

 *”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”...நடிகர் அப்துல் லீ!*





‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியவர் அப்துல் லீ. இங்கு தனது காமெடி டைமிங் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார்.


திரைத்துறையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி மற்றும் பாலையா ஆகியோரை தனது இன்ஸ்பிரேஷன் என்கிறார் அப்துல் லீ. நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குள்ளேயே எதிர்மறையான சாயல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, அதே நேரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர்களின் திறமையை மிகவும் ரசிப்பதாகக் கூறுகிறார்.


வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவரான அப்துல் லீ, பி.இ. பட்டம் பெற்றவர். இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சூரி, “திரையில் உங்களைப் பார்த்தபோது என் மாமா நியாபகம் வந்தது” என்றார். நடிகர் சூரியின் இந்த பாராட்டு தனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார் அப்துல் லீ.


சமீபத்தில் வெளியான ‘ஜி.டி.என்.’, ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படங்கள் மற்றும் ’ஹார்ட் பீட்’, ’லோக்கல் டைம்ஸ்’ உள்ளிட்ட இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, தன் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் ராஜா கருப்புசாமிக்கும் அப்துல் லீ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.


மேலும், கதாநாயகன் ரிஷிகாந்துக்கும் தனக்கும் 13 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு உள்ளது என்றும், இந்தப் படத்தில் அவர் அளித்த ஆதரவும் தனக்கு மறக்க முடியாததாக அமைந்தது என்கிறார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அப்துல் லீ, நகைச்சுவை, குணச்சித்திர மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்கள் என தொடர்ந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.