Featured post

நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ₹4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

 நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ₹4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந...

Thursday, 23 July 2026

நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ₹4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

 நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ₹4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் குழந்தைகளுக்காக ₹4 லட்சம் மதிப்பிலான 51 தங்க மோதிரங்கள், பேபி ஹேர் கிட்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.


இந்த நலத்திட்டம் அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனை, புரசைவாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் பாண்டியன் அவர்கள், குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்வை சிறப்பித்தார்.


சமூக அக்கறையையும், மனிதநேயத்தையும் முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Director Ram's Yezhu Kadal Yezhu Malai Set for Worldwide Release on October 1

 *Director Ram's Yezhu Kadal Yezhu Malai Set for Worldwide Release on October 1*






_*Nivin Pauly-Soori-Anjali starrer Yezhu Kadal Yezhu Malai Release Date Announced*_


Producer Suresh Kamatchi’s V House Productions has officially announced that acclaimed filmmaker Ram's much-awaited Yezhu Kadal Yezhu Malai will have a worldwide theatrical release on October 1.


Known for crafting emotionally poignant and relatable stories that creates a deep impact on audiences, director Ram returns with yet another compelling story to enthral the cinephiles. The film marks Nivin Pauly's return to Tamil cinema as a leading man after a brief hiatus, while Soori, who has successfully reinvented himself as a versatile lead actor in recent years, plays an equally significant role alongside him. The well-celebrated actress Anjali, who never stops scoring brownie points in diversified female protagonist roles is essaying the critical female lead in this movie. 


Reuniting with director Ram once again, Yuvan Shankar Raja has composed the music for the film, continuing a creative partnership that has delivered some of the most memorable soundtracks in Tamil cinema. The makers have now confirmed that Yezhu Kadal Yezhu Malai will arrive in theatres worldwide on October 1.


Adding more to the intrigue of unveiling the release date, the film’s teaser glimpse has turned out to be yet another talk of the town for its captivating presentation. Nivin Pauly, who has been consistently ruling the hearts of South Indian audiences with his back-to-back memorable content-driven entertainers has spiked up the expectation levels of this film, appearing in a striking new avatar. Furthermore, Soori in a stylishly presented role promises to match the film's emotional intensity. The teaser, set against the backdrop of a memorable train journey: hints at a unique theatrical  experience that only Ram can deliver. It also rekindles the excitement of seeing Soori's comic timing, even as he continues to earn acclaim for his recent string of intense, performance-driven roles.


Although the film has been ready for release for some time, Yezhu Kadal Yezhu Malai has enjoyed a remarkable journey across several prestigious international film festivals, earning accolades in multiple categories. Having garnered widespread appreciation on the global stage, the film is now set to begin its theatrical journey on October 1, assuring a beautiful experience to audiences worldwide.

ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

 *‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு* 






*அக்-1ல் வெளியாகும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’*


*நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ ; அக்-1ல் ரிலீஸ்*


வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. 


நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.. சமீப காலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்புத் தாரகை என்று ரசிகர்களால் பாராட்டப்படும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார்.


இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையை தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 


ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் நிவின்பாலியின் வித்தியாசமான தோற்றமும் நடிப்பும், அவருக்கு ஈடு கொடுக்கும் ஸ்டைலிஷான லுக்கில் சூரியின் நடிப்பும் அந்த ரயில் பயணமும், நிச்சயமாக இயக்குநர் ராம் இப்படத்தின் மூலம் ரசிகர்களைப் புது உலகத்திற்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமீப நாட்களாக சீரியஸான கதாபாத்திரங்களில் கதைநாயகனாக நடித்து வரும் சூரியின் காமெடியை மீண்டும் இப்படத்தில் பார்த்து ரசிக்க முடியும் என்கிற நம்பிக்கையையும் இந்த டீசர் தருகிறது.


படம் ஏற்கனவே தயாராகிவிட்டாலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் விருதுகளை வென்று, அந்தப் பெருமையுடன் தற்போது அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.

Jananayagan Movie Review

 Jananayagan Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு வரும் நாளைக்கு வரும் சென்சார் பிரச்சனை scenes ல violent அ இருக்கு, இந்த படம் telegram ல release ஆயிடுச்சு. 



இனிமே theatre ல release ஆகாது னு பல சர்ச்சைகள். இருந்தாலும் பல தடைகளை ஒடச்சு இன்னிக்கு வெற்றிகரமா jananayagan release ஆயிருக்கு. இந்த படம் full  அ telegram ல release ஆனது உங்களுக்கே நல்ல தெரியும். இருந்தாலும் theatre release ண்றதுனால சில scenes அப்புறம் ஒரு song யும் add பண்ணிருக்காங்க. இப்போ joseph vijay நம்ம தமிழ்நாட்டு க்கு CM அ இருக்கறதுனால The honourable chief minister of tamilnadu னு போட்டு recent அ இந்த படத்தோட poster அ release பண்ணிருந்தாங்க. அவரோட cinema career ல farewell அ முடிய வேண்டிய படம், இப்போ CM ஓட படமா களம் இறங்கிருக்கு. இதுவரைக்கும் CM posting ல இருந்துகிட்டே ஒருத்தரோட படம் release ஆனது இல்ல, Jayalalitha அவர்களோட கடைசி படம் அவங்க politics குள்ள வர்ரதுக்கு முன்னாடி release யிருந்தது. அப்புறம், MGR அவர்கள் CM ஆனதுக்கு அப்புறம் படமே நடிக்கல. அதே மாதிரி NTR அவர்களோட கடைசி படம் CM ஆகுறதுக்கு முன்னாடியே வந்திருச்சு.   இந்த படம் கிட்டத்தட்ட 30 countries ல அதுவும் 8000 screens  ல release ஆகுது னு இந்த படத்தோட producer சொல்லிருக்காரு.  இது தான் முதல் தமிழ் திரைப்படம் இந்தளவுக்கு நெறய screens ல release ஆகுறதும் கூட. 


இன்னிக்கு single அ இறங்கி இருக்குற ஜனகளோட நாயகன் ஆனா jananayagan படத்தோட review வை பாப்போம் வாங்க. venkat k narayana ஓட production ல H Vinoth ஓட direction ல வெளி வந்திருக்கிற படம் தான் இது. இதுல vijay, mamitha baiju, pooja hegde, bobby deol, prakash raj, னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இது ஒரு political action thriller. இந்த படம் தான் பாதி தான் bagavanth kesari படத்தோட remake அ இருக்கு, மீதி எல்லாமே வேற கதை தான். ஒரே line ல இந்த படத்தோட கதையை சொல்லுனும்னா அது women empowerment தான் அப்புறம் commercial க்கு தேவையான எல்லா elements யும் சேத்து கதையை கொண்டு வந்திருக்காங்க. vijay  தான் Thalapathy Vetri Kondan ன்ற character  ல நடிச்சிருக்காரு. இவரு mamitha  baiju க்கு guardian அ இருக்காரு. first half ல பாத்தீங்கன்னா vijay  அப்புறம் mamitha க்கும் இருக்கற relationship அ detailed அ காமிச்சிருப்பாங்க. அப்புறம் தான் இவங்க ரெண்டு பேரும் villain ஆனா bobby deol கிட்ட எப்படி மாட்டிக்கிறாங்க ண்றதுக்கான intro இங்க வந்துடுது. mamitha மாட்டிக்கிறதுனால vijay க்கும் bobby deol க்கு சண்டை வருது. 


அப்படியே படத்தோட second half , அட்டகாசமான fight scenes , அப்புறம் vijay யும் bobby யும் police officers அ இருந்த period , எந்த தருணத்துல bobby villain அ மாறினாரு, vijay எப்படி செய்யாத தப்புக்கு jail ல தண்டனையை அனுபவிக்குறாரு ன்ற ஒரு பெரிய flashback அ காமிக்கறாங்க. இப்போ present ல விஜய் எப்படி bobby யா தோக்கடிக்க போறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. எல்லா அரசியல்வாதிகளும் villain க்கு support அ இருக்க, ஒரு தனி மனுஷனா இவரு எப்படி நியாயத்துக்கு நிக்குறாரு ன்றது தான் கதை னு சொல்லலாம். 


படத்துல நடிச்சிருக்க performances னு பாக்கும்போது vijay மறுபடியும் ஒரு பக்காவான performance அ குடுத்து ரசிகர்களை ஆட வச்சிருக்காரு. ஓவவுரு scenes யும் ஓவுவுறு dialogues யும் fans க்கு பெரிய treat அ அமைச்சிருக்கு. mamitha baiju ஓட acting யும் வேற லெவல் ல இருந்தது னு தான் சொல்லணும். இவங்களுக்கும் vijay க்கும் இருந்த அந்த bonding நல்ல workout யிருந்தது. bobby deol villain அ வந்து எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட action scenes லாம் நல்ல இருந்தது. மத்த supporting actors ஆனா Pooja Hegde, Prakash Raj, Narain, Priyamani, Gautham Vasudev Menon, Sunil, Revathy, Nassar , Nizhalgal Ravi,  னு இவங்களுக்கு கொடுக்கப்பட்ட character  ல screen time கம்மியவே இருந்தாலும் அருமையா நடிச்சிருக்காங்க. rachael rebecca படத்தோட கடைசில கொஞ்ச scenes க்கு வந்தாலும் இவங்களோட performance யும் நல்ல இருந்தது. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது anirudh தான் இந்த படத்துக்கு music director . jananayagan ஓட எல்லா songs யுயுமே வெறித்தனமான hit னு தான் சொல்லணும். முக்கியமா Thalapathy Kacheri, Oru Pere Varalaaru and Raavana Mavanda songs  க்கு லாம் theatre ஏ அதிர வைக்கிற மாதிரி fans celebrate பண்ணாங்க.  ,அதே மாதிரி action scenes க்கு லாம் bgm வேற லெவல் ல இருந்தது. Cinematographer Sathyan Sooryan  ஓட கேமரா work அ பாராட்டியே ஆகணும். emotional portions அ இருக்கட்டும், robots இருக்கற vfx scenes அ இருக்கட்டும் எல்லாமே coloruful ஆவும் bright ஆவும் இருந்தது. அடுத்தது action choreographer Anl Arasu , இவரு design பண்ண எல்லா fight scenes யும் அட்டகாசமா இருந்தது. Director h vinoth ஓட படங்கள்ல எப்பவுமே  ஒரு social  message ஓட தான் இருக்கும். அதே மாதிரி தான் இந்த படத்துலயும் இருக்கும் இருந்தாலும் இது vijay ஓட படமா இருக்கும் னு அவரு ஏற்கனவே சொல்லிருந்தாரு. அதே மாதிரி ஒரு பக்கம் vijay இன்னொரு பக்கம் social message னு கொண்டு வந்துட்டாரு. 


நம்ம இந்த படத்தை பத்தி நெறய பேசிட்டே போகலாம். கிட்டத்தட்ட 30 வருஷங்களா சின்ன பிள்ளைங்கள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் தன்னோட நடிப்பால திறமையால கட்டிப்போட்ட ஒரு நடிகர் ஓட கடைசி படம் தான் இது. சோ இது celebrate பண்ண வேண்டிய படம். சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாத்துட்டு வாங்க.

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் 'தட்டுவண்டி'

 இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் 'தட்டுவண்டி' 




சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.


இப்படத்தை, 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற 'பில்டர் கோல்டு' திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். தனது முந்தைய படைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, வித்தியாசமான கதைக்களத்துடன் 'தட்டுவண்டி' திரைப்படத்தை ரசிகர்களுக்காக உருவாக்கியுள்ளார்.


படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் 'தட்டுவண்டி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையும், திறமையான

 கலைஞர்களின் பங்களிப்பும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

 *‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி*






மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர்.


‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார்.


இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound Design), பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் (VFX) மற்றும் டிஐ (Digital Intermediate) உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் ‘காகங்கள்’, விரைவில் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது.


படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், புதிய போஸ்டர்கள் மற்றும் விளம்பரப் பொருட்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

எம் பி எல் கே சுதீஷ் மாநிலங்களவையில் இரண்டு முக்கியக் கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்தார்

 எம் பி எல் கே சுதீஷ் மாநிலங்களவையில் இரண்டு முக்கியக்  கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்தார்..



ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி மற்றொன்று தேசிய நெடுஞ்சாலைகளில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் போக்குவரத்து மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு மத்திய அமைச்சர்கள் பின்வருமாறு பதிலை கூறினார்கள்.. 



மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ், மிஷன் வாத்சல்யா திட்டத்தின் செயல்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள், மாநிலங்களுக்கு இடையேயான குழந்தைகள் மீளிணைப்பு நடைமுறைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்.


இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.


அமைச்சர் தெரிவித்ததாவது:


மிஷன் வாத்சல்யா என்பது குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைத்தலை நோக்கமாகக் கொண்ட மத்திய ஆதரவு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் செயல்பாட்டை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள், திட்ட ஒப்புதல் வாரிய (PAB) கூட்டங்கள், கள ஆய்வுகள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் மூலம் கண்காணித்து வருகிறது.


பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் குறித்து, சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் பிரிவு 41-ன் படி அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு சட்டப்படி தண்டனை விதிக்கப்படும். அவற்றை அடையாளம் காணுதல், பதிவு செய்தல், ஆய்வு மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகிய பொறுப்புகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களிடம் உள்ளன. இதற்காக மத்திய அரசு அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.


தேசிய அளவிலான தணிக்கை மற்றும் குழந்தைகள் மீளிணைப்பு குறித்து, சிறார் நீதி சட்டம், 2015-ல் குழந்தைகளின் மறுவாழ்வு, குடும்பத்துடன் மீண்டும் இணைத்தல் மற்றும் பாதுகாப்பிற்கான முழுமையான சட்ட நடைமுறைகள் ஏற்கனவே உள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட பராமரிப்பு திட்டத்தின் அடிப்படையில் குடும்பம், தத்தெடுப்பு, வளர்ப்பு பராமரிப்பு அல்லது ஆதரவு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், நீதி ஆயோக்கின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO) 2025-ஆம் ஆண்டு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில், மிஷன் வாத்சல்யா திட்டம் மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதுமாக இருப்பதால் தொடர்ந்து செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் காலிப்பணியிடங்கள் குறித்து, குழந்தைகள் நலக் குழுக்கள் (CWC), சிறார் நீதி வாரியங்கள் (JJB), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் (DCPU), மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கங்கள் (SCPS), மாநில தத்தெடுப்பு வள அமைப்புகள் (SARA) மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இருப்பினும், காலிப்பணியிடங்களை நிரப்புவது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும். இதனை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


இந்த முக்கியமான பிரச்சினைகளை மாநிலங்களவையில் எழுப்பிய எம்.பி. எல்.கே. சுதீஷ், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்தவும், ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


மேலும் 




தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை குறித்து மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ்  கேள்விக்கு பதில் அளித்த நிதின் ஜெய்ராம் கட்கரி



தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள் (Intelligent Transport Systems - ITS), செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு வசதிகள் தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ் முக்கிய கேள்வி எழுப்பினார்.


இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.


அமைச்சர் தனது பதிலில் கூறியதாவது:


தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்துகளை குறைக்கும் நோக்கில் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (Advanced Traffic Management Systems - ATMS) படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இதன் கீழ் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வீடியோ சம்பவக் கண்டறிதல் மற்றும் அமலாக்க அமைப்புகள் (VIDES), தானியங்கி வாகன பதிவு எண் அடையாளக் கேமராக்கள் (ANPR), PTZ கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, போக்குவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்தல், விதிமீறல்களை கண்டறிதல், விபத்துகளை உடனுக்குடன் அறிதல் மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


தற்போது பெங்களூரு–மைசூரு, துவாரகா எக்ஸ்பிரஸ்வே, லக்னோ ரிங் ரோடு, UER-II, டெல்லி–ஆக்ரா உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ATMS திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்த தொழில்நுட்பங்கள் மூலம் பயண நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளதா என்பது குறித்து இதுவரை தனிப்பட்ட ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


ATMS அமைப்புகளுக்கான செலவினங்கள் சில தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டங்களின் மொத்த செலவிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. தனித்திட்டங்களாக செயல்படுத்தப்பட்ட பகுதிகளில், பெங்களூரு–மைசூரு திட்டத்திற்கு ரூ.3.63 கோடி, துவாரகா எக்ஸ்பிரஸ்வேக்கு ரூ.16.65 கோடி, லக்னோ ரிங் ரோடுக்கு ரூ.55.69 கோடி, UER-II திட்டத்திற்கு ரூ.28 கோடி மற்றும் டெல்லி–ஆக்ரா வழித்தடத்திற்கு ரூ.49.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 


நாடு முழுவதும் 4 வழிச்சாலை மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் (சுமார் 52,647 கிலோமீட்டர்) முழுவதும் ATMS அமைப்புகளை கட்டம் கட்டமாக விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இதற்காக உள்ளூர், மண்டல மற்றும் தேசிய கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, விபத்து மேலாண்மை, போக்குவரத்து பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நாடு முழுவதும் ஒரே தரநிலையுடன் செயல்படும் ஒருங்கிணைந்த ATMS மென்பொருள் தளமும் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


தேசிய நெடுஞ்சாலைகளில் நவீன தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவது, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் போக்குவரத்து மேலாண்மையை திறம்பட செயல்படுத்துவது குறித்து மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவல்களைப் பெறும் நோக்கில் இந்த கேள்வியை மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ் எழுப்பினார்.

Wednesday, 22 July 2026

Rocking Star Yash and Tara Sutaria Reveal a New Layer of Raya and Rebecca's Story in Toxic's Thadumaarudhe

 Rocking Star Yash and Tara Sutaria Reveal a New Layer of Raya and Rebecca's Story in Toxic's Thadumaarudhe*



Following the phenomenal success of Tabaahi, Monster Mind Creations, KVN Productions and Zee Music Company present the film's second song, with Yash and Tara Sutaria taking center stage.


Following the record-breaking response to Tabaahi, Toxic: A Fairy Tale for Grown-Ups returns with Thadumaarudhe, the film's second song that unveils a new shade of love. While Tabaahi celebrated the intoxicating rush of passion, Thadumaarudhe turns inward, embracing quieter emotions—tenderness, yearning and everything left unsaid. Expanding the emotional landscape of Toxic, the song reminds us that every love story is layered, with each chapter revealing a different shade of love.


Featuring Rocking Star Yash alongside Tara Sutaria, Madhosh presents Raya and Rebecca's relationship through a completely different lens. Their chemistry carries a playful ease, yet underneath it lies emotional conflict and unspoken longing. Raya remains the same man audiences met in Tabaahi, but the way he loves Rebecca reveals a softer, more carefree side of him, while hinting at the chaos he continues to carry within.


Composed by the acclaimed trio of Tanishk Bagchi, Arslan Nizami, and Faheem Abdullah, the romantic anthem is brought to life by the soulful vocals of Siddharth Basrur, who lends his voice across all five language versions. Released as a true pan-Indian offering, the song is titled Madhosh (Hindi), Manamohaka (Kannada), Manasaagadhe (Telugu), Thadumaarudheyyy (Tamil), and MadhuMohini (Malayalam). The lyrics have been crafted by celebrated writers Pramod Maravanthe (Kannada), Arslan Nizami and Syed Murad Gilani (Hindi), RamaJogaiah Sastry (Telugu), Vignesh Shivan (Tamil), and Rajeev Govindan (Malayalam). Starring Yash, Nayanthara, Kiara Advani, Tara Sutaria, Rukmini Vasanth, and Huma Qureshi, Toxic: A Fairy Tale for Grown-Ups brings together a powerhouse ensemble cast.


Speaking about the track, composer Tanishk Bagchi said,"Madhosh is incredibly close to our hearts since Arslan, Faheem and I have come together once again, and it's even more special because it's for a film as massive as Toxic. We also had the pleasure of collaborating with the immensely talented Siddharth Basrur, who brought so much depth to the song. The track beautifully captures the emotional journey of Raya and Rebecca’s characters, expressing love, longing, and the playful nuances of romance. We hope audiences connect with its heartfelt emotions as much as we enjoyed creating it."


Speaking about the track, playback singer Siddharth Basrur said,”Madhosh isn't just about heartbreak, it's about everything that's left unsaid between two people. There's longing and vulnerability running through the song, and I wanted the vocals to reflect that honesty rather than just the pain. It's emotional, but it also has a certain intensity that keeps building, which is what makes it such a special track for me."


Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairy Tale for Grown-Ups is shot in Kannada and English, with dubbed versions across Hindi, Tamil, Telugu, Malayalam, and several other languages. Produced by KVN Productions and Monster Mind Creations, the film is set to release in theatres on August 26, 2026.



https://www.youtube.com/watch?v=B08hVmMTmNc

டாக்ஸிக்'-Toxic திரைப்படத்தின் 'தடுமாறுதே ' பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா

 *டாக்ஸிக்'-Toxic திரைப்படத்தின் 'தடுமாறுதே ' பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்* .



'தபாஹி- Tabaahi 'பாடலின் அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations) - கே வி என் புரொடக்ஷன்ஸ் ( K V N Productions) மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ( Zee Music Company) ஆகியவை இணைந்து, யாஷ் மற்றும் தாரா சுதாரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை வழங்குகின்றன.


'தபாஹி' பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து, டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ( Toxic: A Fairy Tale for Grown -Ups) திரைப்படத்தில் இடம்பெறும் 'தடுமாறுதே' எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

இந்தப் பாடல் காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. 'தபாஹி' பாடல் - தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடிய நிலையில்... 'தடுமாறுதே' பாடல்-  மென்மையான உணர்வுகள்- ஏக்கம்- சொல்லப்படாத விசயங்கள் - என மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. 'டாக்ஸிக்' திரைப்படத்தின் உணர்வு பூர்வமான தளத்தை விவரிக்கும் இந்த பாடல்- ஒவ்வொரு காதல் கதையும் பல லேயர்களை கொண்டது என்பதையும், அதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்துகிறது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.


'ராக்கிங் ஸ்டார்' யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து நடித்துள்ள 'தடுமாறுதே' பாடல் - ராயா மற்றும் ரெபெக்காவின் உறவை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் இணக்கமான நடிப்பில் ஒருவித விளையாட்டுத்தனம் மிகுந்த இயல்பு வெளிப்பட்டாலும்... அதற்குள் உணர்வுபூர்வமான முரண்பாடுகளும், பகிர்ந்து கொள்ளப்படாத ஏக்கமும் மறைந்திருக்கின்றன.


'தபாஹி' பாடலில் ரசிகர்கள் பார்த்த அதே ராயாவாக அவர் தொடர்ந்தாலும்... ரெபெக்காவை அவர் நேசிக்கும் விதம், அவரது மென்மையான மற்றும் கவலையற்ற பக்கங்களை வெளிப்படுத்துகிறது. அதே தருணத்தில் தனக்குள் அவர் சுமந்து கொண்டிருக்கும் குழப்பத்தையும் உணர்த்துகிறது.


தனிஷ்க் பாக்சி- அர்ஸ்லான் நிஜாமி- ஃபஹீம் அப்துல்லா ஆகிய புகழ்பெற்ற மூவர் கூட்டணியால் இசையமைக்கப்பட்டுள்ள இந்த காதல் பாடல் - சித்தார்த் பஸ்ரூரின் உணர்வுபூர்வமான குரலில் உயிர் பெற்றுள்ளது. இவர் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் தனது குரலில் பாடியிருக்கிறார்.


இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல்.. 'மதோஷ்' (இந்தி), 'மனமோஹகா' (கன்னடம்), 'மனசகதே' (தெலுங்கு), 'தடுமாறுதே' (தமிழ்), 'மதுமோஹினி (மலையாளம்) ஆகிய பெயரில் வெளியாகி உள்ளது. பாடலுக்கான வரிகளை பிரபல எழுத்தாளர்களான பிரமோ மரவந்தே ( கன்னடம் ) அர்ஸ்லான் நிஜாமி - சையத் முராத் கிலானி (இந்தி), ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு) விக்னேஷ் சிவன் (தமிழ்), ராஜீவ் கோவிந்தன் (மலையாளம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.


யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா  குரேஷி ஆகியோர் நடிக்கும் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் திரைப்படம் -மிகச்சிறந்த நட்சத்திரக் கூட்டணியை கொண்டிருக்கிறது.


இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி பேசுகையில்,


''அர்ஸ்லான் நிஜாமி - ஃபஹீம் ஆகியோருடன் நான் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளதால் 'தடுமாறுதே' பாடல் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. அதிலும் 'டாக்ஸிக்' போன்ற பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பானதாக அமைகிறது. மிகுந்த திறமைசாலியான சித்தார்த் பஸ்ரூருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் இப்பாடலுக்கு மிகுந்த ஆழத்தை வழங்கியுள்ளார். ராயா மற்றும் ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான பயணத்தை இப்பாடல் அழகாக காட்சிப்படுத்துகிறது. காதல்- ஏக்கம் மற்றும் காதலின் விளையாட்டுத் தனமான உணர்வுகள் இதில் வெளிப்பட்டுள்ளன. நாங்கள் இந்தப் பாடலை உருவாக்கிய போது எவ்வளவு ரசித்தோமோ... அதே அளவு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிணைவார்கள் என நம்புகிறோம்'' என்றார்.


இந்த பாடல் குறித்து பின்னணி பாடகர் சித்தார்த் பஸ்ரூர் பேசுகையில்,


''தடுமாறுதே ..என்பது சாதாரணமாக காதலில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது பிரிவை பற்றியது மட்டுமல்ல. இருவருக்கும் இடையே சொல்லப்படாமல் இருக்கும் உணர்வுகளை பற்றியது. இப்பாடல் முழுவதும் ஏக்கமும்... மென்மையான உணர்வுகளும்... இழையோடுகின்றன. வலியை மட்டும் வெளிப்படுத்தாமல்.. அந்த உண்மையான உணர்வுகளை எனது குரல் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது உணர்வுபூர்வமானது என்றாலும் .. இதில் படிப்படியாக அதிகரிக்கும் ஒரு தீவிர தன்மையும் உள்ளது. அதுவே எனக்கு இப்பாடலை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது'' என்றார்.


யாஷ் & கீது மோகன் தாஸ் ஆகியோர்  இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ' (Toxic A Fairy Tale for Grown -Ups) திரைப்படம் - கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.


கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

https://www.youtube.com/watch?v=B08hVmMTmNc

*Rocking Star Yash and Tara Sutaria Reveal a New Layer of Raya and Rebecca's Story in Toxic's Thadumaarudhe*


Following the phenomenal success of Tabaahi, Monster Mind Creations, KVN Productions and Zee Music Company present the film's second song, with Yash and Tara Sutaria taking center stage.


Following the record-breaking response to Tabaahi, Toxic: A Fairy Tale for Grown-Ups returns with Thadumaarudhe, the film's second song that unveils a new shade of love. While Tabaahi celebrated the intoxicating rush of passion, Thadumaarudhe turns inward, embracing quieter emotions—tenderness, yearning and everything left unsaid. Expanding the emotional landscape of Toxic, the song reminds us that every love story is layered, with each chapter revealing a different shade of love.


Featuring Rocking Star Yash alongside Tara Sutaria, Madhosh presents Raya and Rebecca's relationship through a completely different lens. Their chemistry carries a playful ease, yet underneath it lies emotional conflict and unspoken longing. Raya remains the same man audiences met in Tabaahi, but the way he loves Rebecca reveals a softer, more carefree side of him, while hinting at the chaos he continues to carry within.


Composed by the acclaimed trio of Tanishk Bagchi, Arslan Nizami, and Faheem Abdullah, the romantic anthem is brought to life by the soulful vocals of Siddharth Basrur, who lends his voice across all five language versions. Released as a true pan-Indian offering, the song is titled Madhosh (Hindi), Manamohaka (Kannada), Manasaagadhe (Telugu), Thadumaarudheyyy (Tamil), and MadhuMohini (Malayalam). The lyrics have been crafted by celebrated writers Pramod Maravanthe (Kannada), Arslan Nizami and Syed Murad Gilani (Hindi), RamaJogaiah Sastry (Telugu), Vignesh Shivan (Tamil), and Rajeev Govindan (Malayalam). Starring Yash, Nayanthara, Kiara Advani, Tara Sutaria, Rukmini Vasanth, and Huma Qureshi, Toxic: A Fairy Tale for Grown-Ups brings together a powerhouse ensemble cast.


Speaking about the track, composer Tanishk Bagchi said,"Madhosh is incredibly close to our hearts since Arslan, Faheem and I have come together once again, and it's even more special because it's for a film as massive as Toxic. We also had the pleasure of collaborating with the immensely talented Siddharth Basrur, who brought so much depth to the song. The track beautifully captures the emotional journey of Raya and Rebecca’s characters, expressing love, longing, and the playful nuances of romance. We hope audiences connect with its heartfelt emotions as much as we enjoyed creating it."


Speaking about the track, playback singer Siddharth Basrur said,”Madhosh isn't just about heartbreak, it's about everything that's left unsaid between two people. There's longing and vulnerability running through the song, and I wanted the vocals to reflect that honesty rather than just the pain. It's emotional, but it also has a certain intensity that keeps building, which is what makes it such a special track for me."


Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairy Tale for Grown-Ups is shot in Kannada and English, with dubbed versions across Hindi, Tamil, Telugu, Malayalam, and several other languages. Produced by KVN Productions and Monster Mind Creations, the film is set to release in theatres on August 26, 2026.



https://www.youtube.com/watch?v=B08hVmMTmNc