Featured post

தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்"

 தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்" பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிட...

Monday, 14 September 2026

தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்"

 தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்"








பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகனின் " பனங்காட்டான் "


ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன்  தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பனங்காட்டான்" 


மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பான விமர்சனங்களை பெற்ற  கிடுகு,கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார் 


இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன், மாஸ்டர் ரோஹித்,செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ் குமார் ஆகியோர் முக்கி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்திற்கு சுந்தர். N இசையமைத்துள்ளார்.


ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ளார் 


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வீரமுருகன்.


படம் பற்றி இயக்குனர் வீரமுருகன் பகிர்ந்தவை...


தென் மாவட்டத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளேன்.


ஒரு முக்கிய பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போக கூடாது என்று இன்று வரை மறைமுகமாக அதனை கடைபிடித்து வருகின்றனர்.

அது என்ன மாதிரியான கட்டுப்பாடு, அது சமூகத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது,என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் இந்த " பனங்காட்டான் " 


பாலமேடு ,தூத்துக்குடி, ராமநாடு, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம்,  விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்றார் இயக்குனர் வீரமுருகன்.


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

டிஎன்பிபிஎல் (TNPPL) சீசன் 2: சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சி பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்டமாக அறிமுகம்!

 *டிஎன்பிபிஎல் (TNPPL) சீசன் 2: சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சி பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்டமாக அறிமுகம்!

டிஎன்பிபிஎல் (TNPPL) சீசன் 2: சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பி.வி. சிந்து, ஜோஷ்னா சின்னப்பா 


டிஎன்பிபிஎல் (TNPPL) சீசன் 2: சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சி - பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக அறிமுகம்* 



சென்னை: தமிழ்நாடு பிரீமியர் பிக்கிள் பால் லீக் (TNPPL) தொடரின் இரண்டாவது சீசனை முன்னிட்டு, 'சென்னை தமிழ் டைட்டன்ஸ்' அணி தனது புதிய ஜெர்சியை (Jersey)  சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.


இவ்விழாவில் பேட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி. சிந்து மற்றும் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு ஜெர்சியை வெளியிட்டனர். மேலும், பிரபல நடிகர் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.


தமிழ் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் 'நோவா லைஃப் ஸ்பேசஸ்' (NOVA Life Spaces) செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அணியின் இந்த புதிய தோற்றம், வீரர்களின் துடிப்பான ஆற்றலையும் வரவிருக்கும் சீசனுக்கான தயார் நிலையையும் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


விழாவில் பிரபலங்களின் பேசியதாவது:


பி.வி. சிந்து: "இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தொடர்கள் விளையாட்டை மேம்படுத்துவதுடன், மக்களையும் ஒன்றிணைக்கின்றன." என்றார் 


ஜோஷ்னா சின்னப்பா பேசும்போது: "டிஎன்பிபிஎல் தொடர் புதிய திறமையாளர்களை உருவாக்க ஒரு சிறந்த தளம். தமிழ் டைட்டன்ஸ் அணியின் இந்த பயணத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்." என்றார் 


சரத்குமார் பேசும்போது: "விளையாட்டுக்கு மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல் உண்டு. தமிழ் டைட்டன்ஸ் அணியின் இந்த அறிமுக சீசனில் அவர்களுடன் இணைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்." என்றார் 


புதிய பொலிவுடனும், உறுதியான இலக்குடனும் களமிறங்கும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணி, இந்த இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்போடு தயாராகி வருகிறது.

Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra

 *Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra*






Produced by Junglee Pictures and Dr. Jayantilal Gada (Pen Studios), Daayra is directed by National Award-winning filmmaker Meghna Gulzar and stars Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran in lead roles


31st August, 2026: The trailer of Daayra is here, offering a gripping first look at a story where truth is never absolute, justice is open to interpretation, and every decision comes with a consequence. Releasing in cinemas on 18th September 2026, this Meghna Gulzar directorial explores crime, justice and punishment through a riveting, layered, emotionally charged narrative, written by Yash Keswani Sima Agarwal and Meghna Gulzar.


Inspired by true events, Daayra unfolds in the aftermath of a crime that grips the nation sparking widespread outrage, while setting a series of events and 2 investigations in motion. As the search for answers deepens, two senior police officers, played by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran, find themselves navigating the same system through different approaches to duty and justice, on opposing sides of a case that challenges the very idea of right and wrong. 


Rooted in realism, the trailer steadily builds tension as new revelations shift the way we see the case. Its sharp, thought-provoking dialogues raise difficult questions on truth and justice. At the same time, Daayra looks beyond the crime itself to explore public perception and the narratives that emerge.


At its heart, Daayra asks questions that have no easy answers: How quickly can a narrative become a verdict? When everyone has an opinion, who gets to decide what justice looks like? And when we are only spectators, what do we choose to believe? 


The trailer also offers glimpses of the wider ensemble, with powerful performances by Jitendra Joshi, Kshitee Jog, Kanwaljeet Singh, Sandeep Kulkarni and Trupti Khamkar. Alongside Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran, they bring added emotional depth to a story shaped by conflicting perspectives, difficult choices and the consequences of decisions made.


Actor Kareena Kapoor Khan said, “What I loved about working with Meghna is that she makes you question everything you think you know about a character. There’s so much thought behind every detail, but she never takes away your instinct as an actor. Playing DCP Ajooni Kohli stayed with me… because she pushed me into a space I hadn’t really explored before, and at this stage in my career, that’s always exciting. And then to have Prithviraj opposite me was such a pleasure. He’s an incredibly intelligent actor… very present, very instinctive… and there was an ease to working together that I really enjoyed. This was one of those films where the people you’re surrounded by make the experience that much richer.”


Actor Prithviraj Sukumaran said, “What drew me to DCP Raman Kumar was the complexity beneath his composed exterior and the questions he finds himself grappling with during the investigation. What I admire is how the film maintains that objectivity right till the very end, allowing the audience to form their own perspective. Meghna Gulzar is a filmmaker whose craft I have closely followed and Daayra gave me the opportunity to work with her. It was a rewarding experience and working with Kareena made the journey even more special. I hope the audience connects with the world we have created, a story that is gripping and deeply human”


Director Meghna Gulzar said, "Daayra doesn’t sit comfortably in black and white. It explores the grey and dismantles it. As a filmmaker, that grey space is always challenging, and yet compelling – where characters make choices, live with them, and the audience is left to engage with what unfolds. The main protagonists of Daayra are brought to life with towering performances by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran. I’m grateful that I got this dynamic combination of actors, along with an exceptional ensemble cast, to explore the delicate lines of law and justice that traverse the story of Daayra. I am very excited to share this world of grey with the audience and welcome them into it!"


Amrita Pandey, CEO, Junglee Pictures, said, “At Junglee Pictures, we have always gravitated towards stories that come from the world around us, particularly those inspired by true events or real experiences. Daayra has been a story we have developed closely with our writers and Meghna, and it is a film that feels deeply relevant to the times we live in, while approaching its subject with the sensitivity it deserves. It is also a powerful crime thriller, driven by conflict, moral dilemmas, difficult choices and two very strong points of view. To have powerhouse performers like Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran bring these characters to life makes it even more exciting. Daayra also marks our first co production  with PEN Studios, and we are delighted to be on this journey with them. For our team, it is wonderful to be working with Meghna for the third time after Talvar and Raazi. We have loved making this film and hope audiences connect with it as deeply as we have.”

Dr. Jayantilal Gada, CMD, Pen Studios said, "Cinema can entertain, but it can also ask the right questions. Daayra belongs to the latter, and that is what makes this story particularly special to us. Meghna Gulzar is a filmmaker who has consistently created cinema that makes you think, and her ability to tell a story with depth, sensitivity and restraint is truly remarkable. Bringing together two celebrated actors like Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran adds another compelling dimension to the film, with both actors bringing immense conviction and intensity to their roles. It has also been wonderful to collaborate with a content-first studio like Junglee Pictures, whose vision and commitment to meaningful storytelling align closely with ours. We hope Daayra not only grips audiences but also stays with them, leaving them with questions and conversations long after they leave the theatre.”


With Daayra, Meghna Gulzar brings together a layered story and a strong ensemble to examine the difficult choices that emerge when personal conviction meets the boundaries of law. Distributed by Pen Marudhar, Daayra releases in cinemas on 18th September 2026.


Trailer link - https://bit.ly/DaayraOfficialTrailerOutNow

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2

 *வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்  டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி ( Mookuthi Amman 2: Mahasakthi' ) படத்தின் டீசர் வெளியீடு*




தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் 'ரைஸ் ஆஃப் மஹாசக்தி' டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ் ஆப்  மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், 'மைனா' நந்தினி, 'கருடா' ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை - வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் - குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் - ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர். 


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் 'ரைஸ் ஆஃப்  மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்... ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால்.. இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌


https://www.youtube.com/watch?v=UUfAemccAJ0

Sunday, 13 September 2026

Mythri Movie Makers' New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled 'Jackie - No Retakes Allowed'

 Mythri Movie Makers' New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled 'Jackie - No Retakes Allowed', First Look Poster Promises Stylish Action Extravaganza.*

 


Leading Pan India Production House Mythri Movie Makers continues to expand its footprint beyond Telugu cinema, and the production house is now making its mark in Tamil with an exciting fourth venture, starring Kollywood Star Dhruv Vikram. Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, the film is directed by Karan Arvind Kumar. Dhruv, who has established himself with performances in diverse and intense roles, is now taking up a commercial subject that is designed to connect with a broader section of the audience.

 

The makers today unveiled the title along with the film’s first-look poster. Titled 'Jackie- No retakes allowed', the first look presents Dhruv Vikram in a larger-than-life mass avatar. The poster blends a gritty live-action treatment with a stylish comic-book-inspired aesthetic, instantly creating curiosity around the character and the world of the stylish action extravaganza.

 

Dhruv appears in a stylish brown outfit, sporting a distinctive hairstyle and an intense expression. His fierce posture adds to the character’s commanding presence, while his prominently extended fist gives the poster a dynamic, action-packed feel. The tagline “No Retakes Allowed” further amplifies the film’s edgy tone.

 

The first look succeeds in establishing Jackie as a stylish and action-driven commercial entertainer while offering a peek of Dhruv Vikram’s powerful new screen persona.

 

The film also boasts an impressive technical crew. National Award-winning composer Santhosh Narayanan is scoring the music, while Viki is handling the cinematography. Jayasuriya is responsible for the editing, with GM Sekhar overseeing production design. Renowned action choreographer Vikram Mor is designing the film’s action sequences.

 

*Cast* : Dhruv Vikram

 

*Technical Crew:*


Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili

Banner: Mythri Movie Makers

Director: Karan Arvind Kumar

Music: Santhosh Narayanan

DOP: Viki

Editing: Jayasuriya S

Production Design: GM Sekhar

Action: Vikram Mor

PRO: Yuvraaj

Marketing : First Show

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie - No Retakes Allowed) ’!!*

 *துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்  ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie - No Retakes Allowed) ’!!* 



மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.


படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.


ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.


இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் – இசை, விக்கி – ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் – படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் –தயாரிப்பு வடிவமைப்பாளர், விக்ரம் மோர் – சண்டைப்பயிற்சி என சிறப்பான தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கின்றனர். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.


“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’

 *“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’*






Actor Karunaas, who has successfully completed 25 years in the Tamil film industry, continues to explore diverse characters across different genres. After establishing himself through a wide range of memorable performances, the actor now takes on a challenging and emotionally driven role in Enna Vilai, written and directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor. Karunaas plays Thavasimuthu, a coin redeemer who retrieves coins offered by devotees into the sea near Rameswaram. With the film gearing up for its theatrical release on September 17, the actor shares his experience of being part of a story rooted in an unusual livelihood and a larger struggle for dignity and survival.


Speaking about his role in Enna Vilai, Karunaas says, “Thavasimuthu is a character that demanded a completely different approach from me. He is a man whose life and livelihood are closely connected to the sea, and the circumstances he faces gradually take him into a much larger struggle. What made the character special for me was the emotional journey he goes through. Enna Vilai deals with a very unique premise, but beneath that is a deeply human story about survival, dignity and the right to live with self-respect. I was very happy to take up a role that gave me the opportunity to explore these emotions as an actor.”


He adds, “Sajeev Pazhoor has written the story with great clarity and has brought a strong social relevance to the narrative without compromising on its emotional core. His understanding of the characters and the world they belong to made the experience very interesting for me. Working alongside Nimisha Sajayan and the rest of the cast was also a wonderful experience. I believe Enna Vilai will connect with audiences because it speaks about an ordinary man and an extraordinary situation in a very compelling manner.”


Set against a socially relevant backdrop, Enna Vilai revolves around a man who retrieves coins offered by devotees into the sea near Rameswaram, with his struggle for dignity and survival eventually leading to a significant legal battle.


The film features Karunaas, Nimisha Sajayan, Vijayalakshmi Veeramani, Saasha, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalitesand others.


Written and directed by Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The technical crew comprises Sam C.S. (Music), Alby Antony (Cinematography) and Sreejith Sarang (Editing). Enna Vilai is gearing up for its worldwide theatrical release on September 17, 2026.

நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”...‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!

 *“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”...‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!*






தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் சவால் நிறைந்த, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுக்கும் நாணய மீட்பாளரான தவசிமுத்து கதாபாத்திரத்தில் இந்த படத்தில் கருணாஸ் நடித்துள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வித்தியாசமான வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட கதையையும், கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டத்தையும் பற்றி பேசுகிறது. 


இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார், “தவசிமுத்து கதாபாத்திரம் என்னிடம் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தது. அவரது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படிப்படியாக அவரை மிகப்பெரிய போராட்டத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தை எனக்குச் சிறப்பானதாக மாற்றியது, அவர் கடந்து செல்லும் உணர்வுப்பூர்வமான பயணம்தான். ‘என்ன விலை’ திரைப்படத்தின் கருவாக வாழ்வாதாரம், கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை பேசுகிறது. ஒரு நடிகராக இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி”


மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “சஜீவ் பழூர் மிகவும் தெளிவான பார்வையுடன் இந்தக் கதையை எழுதியுள்ளார். உணர்வுப்பூர்வமான மைய கதையை சமரசம் செய்யாமல், வலுவான சமூக கருத்தையும் இதில் பேசியுள்ளார். கதாபாத்திரங்கள் மற்றும் அவை சார்ந்த உலகத்தைப் பற்றிய அவரது புரிதல், இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தை எனக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றியது. நிமிஷா சஜயன் மற்றும் படத்தின் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் அசாதாரணமான சூழ்நிலையை மிகவும் அழுத்தமாகப் பேசுவதால், ‘என்ன விலை’ திரைப்படத்தை நிச்சயம் ரசிகர்கள் தங்களுடன் பொருத்தி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார். 


சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.


இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார்.


சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

DHIK. DHIK..DHIK…' டீசர் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது, தற்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது..

DHIK. DHIK..DHIK…' டீசர் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது, தற்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது..








JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் திரைப்படம் 'Dhik.Dhik..Dhik…' படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது..


டீசர் வெளியீட்டுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் டீசரை வெளியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் படத்தின் மீதான கவனம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது.


தற்போது 'Dhik. Dhik.. Dhik…' டீசர் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் டீசரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். டீசருக்கு கிடைத்த டிஜிட்டல் வரவேற்பும், திரையரங்குகளில் நடைபெறும் திரையிடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


 ஒரே இரவில் நடக்கும் கதை, பரபரப்பான சூழல் மற்றும் த்ரில்லர்  கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது..


JSK Satish Kumar தயாரிப்பில், JSK Film Corporation சார்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் Srinivasan Sivajirao இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் Raghu Rajagopal உடன் இணைந்து படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.


சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முழுக் கதையும் ஒரே இரவில் நடக்கின்றது.


 சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்புடன், குடும்ப உணர்வுகளையும் இணைத்து, இன்றைய காலகட்டத்துடன் தேவையான சமூக கருத்தையும் படம் பேசுகின்றது.


படத்தில் Pavel Navageethan, JSK Satish Kumar, Chandini Tamilarasan, Sandra Amy மற்றும் Bijesh Nagesh ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.


‘Thanga Meengal’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘Kuttram Kadithal’ உள்ளிட்ட தரமான, வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்துள்ள JSK Film Corporation, 'Dhik.Dhik..Dhik…' படத்தின் மூலமும் தனது தனித்துவமான கதைகளை தொடர்ந்து வழங்குகின்றது.



‘Fire’ படத்தைத் தொடர்ந்து, JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Kuttram Kadithal 2’ திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படம் தற்போது திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் வருகிறது.


படத்தின் ஒளிப்பதிவை Raghu Rajagopal, இசையை DK, படத்தொகுப்பை Prem B, கலை இயக்கத்தை SS Susee Devaraj ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.


24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகள், முன்னணி திரையுலக பிரபலங்களின் ஆதரவு மற்றும் தற்போது திரையரங்குகளில் டீசர் திரையிடப்பட்டு வருவது என 'Dhik. Dhik.. Dhik…'படத்தின் புரமோஷன் பயணம் சிறப்பான தொடக்கத்தைப் பெற்று இருக்கின்றது.


இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை JSK Film Corporation விரைவில் வெளியிடும்..