Featured post

சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்

 சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் " ஆல்பாஸ் " இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்ச...

Saturday, 15 August 2026

சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்

 சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்

" ஆல்பாஸ் " இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூரலிகான் காட்டம் !


























ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !


மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக  நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன்.

‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இனறு நடைபெற்ற இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 


இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசியதாவது.., 


“என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க முடிகிறது. ஆனால் எல்லாரும் முன்னாடி நின்று பேசுவது என்றால் ரொம்பவே பதட்டமாகவும், நடுக்கமாகவும் இருக்கிறது. அதனால் மன்னித்துக்கொள்ளுங்கள். இங்கு இந்த விழாவிற்கு வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. 

நிஜமாகவே இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு, எங்களுக்கு நல்லபடியாக ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை பார்த்து எங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்” நன்றி.


இயக்குநர் மைதீன் பேசியதாவது.., 


இன்று இந்த விழாவிற்கு வருகை தந்த ஐயா ஆர் வி உதயகுமார், இயக்குநர் விக்ரமன், அண்ணன் மன்சூர் அலிகான் ஆகிய அனைவருக்கும் நன்றி. 


ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு சார் இப்படத்தில் சில நாட்கள் மட்டும் வேலை செய்து தந்தார். எங்களுக்கு சிக்கல் எழுந்த போது மூத்த ஆளுமையாக இருந்தும் சில நாட்கள் மட்டும் வேலை செய்து தந்தார் அவருக்கு என் மிகப்பெரிய நன்றிகள். 

உதவி இயக்குநர்களின் வலி அவர்களின் அடையாளம் சினிமாவில் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கான வாய்பு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கான அடையாளம் கிடைக்கும். பலர் இன்னும் அந்த வாய்பில்லாமல் இருக்கிறார்கள். 

இந்தப்படத்தில் துஷ்யந்த் நடிக்க வைக்க அணுகியபோது, அவர் அப்பா தான் சொல்வார் என்றார். எனக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் சார் தான் அப்பா என்பது தெரியாது.  ஜெயப்பிரகாஷ்   சாரை சந்தித்து முழு கதையை சொன்னேன். அவர் ஒரு தயாரிப்பாளர், அவர்களின் வலி புரிந்து அக்கறையுடன் அறிவுரை சொல்வார் என நினைத்து முழு கதை சொன்னேன். 

கதை கேட்டு அழகர் கேரக்டர் யார் செய்கிறார்கள் என்று கேட்டார். நான் உங்களை கூட நினைத்திருந்தேன் ஆனால் சம்பளம் பெரிதாகிவிடும் என்றேன், ஆனால் சம்பளம் ஒரு விஷயமே இல்லை நான் நடிக்கிறேன் என்று வந்தார் அவர் மனதுக்கு என் பெரிய நன்றி. 

ஜேம்ஸ் வசந்தன் சாரிடமும் அப்படித்தான் தயங்கி தான் சென்றேன் கதை பிடித்தால் தான் சொல்வேன் என்றார், கதை படித்துவிட்டு இதை அப்படியே எடுத்து விடுவீர்களா? என்றார். நான் கண்டிப்பாக எடுப்பேன் என்றேன் அப்படி என்றால் நான் கண்டிப்பாக இசை அமைக்கிறேன் என்று சொன்னார். அவருக்கு என் நன்றிகள். 


இம்மாதிரியான ஆளுமைகள், உதவிகளால் தான் இப்படம் சாத்தியமானது. நம் தேடலை எப்போதும் நிறுத்தக்கூடாது. என் தயாரிப்பாளர் மோகனா மேடம் அவர்களுக்கு பெரிய நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும். இப்படத்தில் உழைத்த நடிகர் நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., 


“‘ஆல் பாஸ்’ படத்தின் டிரெய்லரும், பாடல்களும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கின்றன. படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோயின் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார். அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஹீரோ எனது நண்பர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் மகன். ஆனால், படத்தில் அவர் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அறிமுகமான காலத்திலிருந்தே தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திலும் நல்ல இசையைத் தந்திருக்கிறார். அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கின்றன.

‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” நன்றி.


இயக்குநர் விக்ரமன் பேசியதாவது..


“இந்தப் படத்தின் குழுவைப் பற்றி எனக்கு பெரிதாகத் தெரியாது. இந்தப் படத்தின் இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தபோது, இயக்குநர் சேரனுக்கு அழைப்பிதழ் வைத்தார். அதேபோல் எனக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது நான், ‘யார் ஹீரோ?’ என்று கேட்டேன். அதற்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் மகன் என்று கூறினார்.

நடிகர் ஜெயப்பிரகாஷுக்கும் எனக்கும் சுமார் 30 வருட பந்தம் இருக்கிறது. அவரை நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாற்றியதே நான்தான். அந்த அளவுக்கு நானும் அவரும் நெருக்கமானவர்கள்.

இந்தப் படத்தின் டிரெய்லரையும், பாடல்களையும் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் இருந்தது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.


நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது..,


‘ஆல் பாஸ்’  அற்புதமான படம், ஜேம்ஸ் வசந்தன் எனக்கு பிடித்த கலைஞர். நீட் மாணவர்களை 11,12 ஆம் வகுப்பிலேயே அந்த சப்ஜெக்டை படிக்க வையுங்கள் தைரியமாக பேசினார். அவருக்கு என் நன்றிகள். 

ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவது போல விளம்பரம் செய்யுங்கள். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இப்படத்தில் தமிழகத்திற்கு நல்ல கதாநாயகன் நாயகி கிடைத்துள்ளார்கள் பாடல் மிக நன்றாக உள்ளது. மோகன் ராஜன் அற்புதமான பாடல் எழுதி வருகிறார். நடித்த நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். 

நான் கருப்பு படத்தில் க்ளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன் ஆனால் அதை அப்படியே தூக்கி விட்டார்கள், என்ன அநிநியாயம் இது, யூடுயூப்பில் வெளியிடுவோம் என்று அதையும் செய்யவில்லை,  சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராக தயாரிப்பாளராக இருக்கிறேன்.  எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும். 

நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்பாக எழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்’ என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு அழுக்குப்படுத்தும் சனியன்கள் நாட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

‘ஆல் பாஸ்’ ஒரு அற்புதமான பெயர். இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். குறிப்பாக ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் மரியாதை செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது. சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா. ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையை உண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நன்றி, வணக்கம், வாழ்த்துகள்” என்றார்.


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,


“இயக்குநர் ஆர் வி உதயகுமார் அனைவரையும் பற்றி மிக அழகாகப் பேசியதோடு, இந்தப் படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் இணைந்து பணியாற்றிய விதத்தை எடுத்துக்காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்த படக்குழுவிடமும் ஒரு நல்ல வைப்ரேஷனும், எனர்ஜியும், சிறப்பான ஒருங்கிணைப்பும் இருந்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பாடல்கள், அவர் இப்படத்திற்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

தமிழ் சினிமாவில் தற்போது வாரந்தோறும் பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் ‘ஆல் பாஸ்’ சரியான நேரத்தில் வெளியாகி, ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெய்ன்மென்ட் படமாக அமையும் என்று நம்புகிறேன்.

வடசென்னை என்றாலே ஆக்ரோஷம், அடிதடி போன்ற ஒரு பிம்பம் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் வடசென்னையில் மிகவும் இயல்பான, எளிமையான வாழ்க்கை வாழும் மக்கள் அதிகம். அந்த வாழ்வியலை இந்தப் படம் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக குறுகலான தெருக்கள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் என சவாலான இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அந்தச் சவால்களை படக்குழுவினர் சிறப்பாக எதிர்கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் மோகனா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். புதிய தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கும் அவர், நல்ல படத்தை கொடுத்து வெற்றி பெற வேண்டும்.

ஜே.பி. சார் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய மகனையும் இந்தப் படத்தில் பார்த்தேன். நல்ல திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும்.

நாயகி ஜனனி உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள அனைவருக்கும், வினோதினி உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ‘ஆல் பாஸ்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார். நன்றி. வணக்கம்”


நடிகை ஜனனி பேசியதாவது.., 


“இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ஊடக நண்பர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் மைதீன் முதன்முதலில் என்னை சந்தித்து இந்தக் கதையைச் சொன்னபோதே, கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக கதையின் பின்னணியும், படப்பிடிப்பு நடைபெறவிருந்த லொகேஷன்கள் குறித்த அவரது அணுகுமுறையும் என்னை கவர்ந்தது.

இயக்குநர் மைதீன் கதையை மிகவும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன விதத்திலேயே இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. என்னைவிட அவர்கள் மிகப்பெரிய ஆளுமைகள் அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. 

‘ஆல் பாஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” நன்றி.


நடிகர் துஷ்யந்த் பேசியதாவது.., 


“முதலில் விக்ரமன் சார், ஆர் வி உதயகுமார் சார், மன்சூர் அலிகான் சார் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனக்கு இந்த பாசிட்டிவான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மைதீன் மற்றும் தயாரிப்பாளர் மோகனா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படத்தில் பல கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பின்போது பலருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்வளவு பெரிய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது, இந்தப் படம் நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

இந்த கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது திரைப்பயணத்தில் இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் மறக்க முடியாத வகையில் நினைவில் வைத்திருப்பேன்.

இந்தப் படத்தில் எனது தந்தையும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இது என்னுடைய நான்காவது படம். என்னுடைய முதல் படமான ‘ஈசன்’ படத்திற்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இயக்குநர் சசிகுமார் சார் இயக்கிய அந்தப் படத்தில் நான் மிகவும் சிறிய வயதில் நடித்தேன். அப்போது எனக்கு சினிமா மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. ஒரு படத்தில் நடிப்பதே எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. சினிமா பற்றி எதுவும் தெரியாத அந்த காலகட்டத்தில் சசிகுமார் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார்.

2008 முதல் 2026 வரை தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது தந்தை எனக்கு அளித்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படத்தின் இயக்குநர் மைதீன் வடசென்னையை ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் எடிட்டர் சார் முற்றிலும் வித்தியாசமான பார்வையுடன் படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்.

எங்கள் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். டிரெய்லரையும், பாடல்களையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘ஆல் பாஸ்’ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். நன்றி” என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது.., 


இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முழுமையாக கதையைச் சொன்னார். கதையில் இருந்த ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அழகாக எடுத்துச் சொன்னார். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் நடிப்பீர்களா ? என ஆச்சரியமாக கேட்டார். 

‘நடிக்கத்தானே வந்திருக்கிறோம்… கண்டிப்பாக செய்கிறேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.

இயக்குநர் மைதீன் இந்தப் படத்தை மிகவும் இயல்பான படமாக உருவாக்கியிருக்கிறார். நான் முதலில் கேட்ட கதைக்கும், பின்னர் டப்பிங் செய்யும்போது பார்த்த படத்திற்கும் எந்த மாற்றமும் இல்லை. படத்தில் பேசப்படும் வசனங்களாக இருந்தாலும் சரி, காட்டப்படும் வீடுகளாக இருந்தாலும் சரி, அனைத்துமே அந்த வாழ்வியலை விட்டு விலகாமல் இருக்கிறது.

ஒரு சமையல்காரர், ஒரு பெயிண்டர், ஒரு சைக்கிள் கடைக்காரர் என மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து, அவர்களுடைய குடும்பங்கள், குழந்தைகள், அவர்களுக்குள் நடக்கும் சந்தோஷங்கள், சண்டைகள் என மிகவும் இயல்பான விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது.

சினிமாவில் நிறைய அனுபவம் கொண்ட சரத் சார் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவருடைய பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

பாடல்களும் இசையும் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. சில காட்சிகளில் இசை அந்தக் காட்சியின் உணர்வை இன்னும் அழகாக கொண்டு சென்றிருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் சார் பசங்க படத்திற்கும் ஈசன் படத்திற்கும்,  இசையமைத்துள்ளார், இப்போது இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மகிழ்ச்சி. 

வடசென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் காட்டாமல், அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கையை இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது. வடசென்னை மக்கள் இப்படித்தான் இருப்பார்கள், இப்படித்தான் பேசுவார்கள், குழந்தைகளுக்குள் இப்படித்தான் நட்பு இருக்கும் என்பதை மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் காட்டியிருக்கிறார்கள்.

புதிய தயாரிப்பாளராக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கும் மோகனா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டது என்று நிறுத்திவிடாமல், தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” நன்றி.


இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது.., 


ஆல் பாஸ் படத்தில் அனைத்து கலைஞர்களும் மிக அற்புதமாக உழைத்துள்ளார்கள். வினோதினி எங்கேயும் எப்போதும் நடித்த நடிப்பு அவரை என் மனதில் ஆழமாக இருத்தியது. அதே போல் அனைவருமே இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

நான் எல்லா படத்தையும் மனதுக்கு நெருக்கமாக பார்ப்பேன், அப்படி சில படங்களை பார்க்கும்போது, ஏன் இவ்வளவு வன்முறை எனத் தோன்றும். ஆனால் இந்தப்படம் பார்க்கும் போது உங்களுக்கு இப்படி எந்த கேள்வியும் தோன்றாது. மன அமைதி கிடைக்கும். இப்படத்தின் கலை இயக்குநருக்கு தேசிய விருது கிடைக்கும் அந்தளவு உழைத்திருக்கிறார். மோகன் ராஜன் என்னுடன் தான் முதல் படத்தில் பணிபுரிந்தார் அவர் வளர்ச்சி எனக்கு சந்தோசம், இப்படத்தில் நான்கு பாடல் எழுதியுள்ளார். இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து இசை கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.  இயக்குநர் வடசென்னையை யாரும் காட்டாத கோணத்தில் காட்டியுள்ளார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.  நன்றி. 




இப்படத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி. வாத்தியாராக நடித்த அருவி மதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவு செய்த தில்ராஜு, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.

‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ். பாஸ்கர் இப்படத்திற்கும் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன். டி பணியாற்றியுள்ளார். நடன இயக்குநராக ஐ. ராதிகா, சண்டைப் பயிற்சியாளராக மெட்ரோ மகேஷ் பணியாற்றியுள்ளனர்.

ஒப்பனை – எல்.வி. ராஜா, உடைகள் – ஏ.எஸ். வாசன், ஸ்டில்ஸ் – அண்ணாதுரை, விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

வடசென்னையின் மற்றொரு முகத்தை, அப்பகுதி மக்களின் இயல்பான வாழ்வியலுடன் சொல்லும் படமாக ‘ஆல் பாஸ்’ உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் கவனம் பெற்றுள்ளது.

Friday, 14 August 2026

துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது

 *துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!*



துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.


துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.


ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தை இன்னும் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவமாக கொண்டு வருவதற்காக செப்டம்பர் 3-ம் தேதிக்கு வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.


மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாகும் என்றும் துல்கர் சல்மான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளவில் அதிகமான ரசிகர்களை சென்றடையும் வகையில் இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான டிரெய்லர், பான்-இந்தியா அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள டிரெய்லரில் பிரம்மாண்டமான காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் மற்றும் பரபரப்பான சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக “ஐ ம் கேம்” இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலிஷான மற்றும் மாஸ் அவதாரத்தில் தோன்றியுள்ளார்.


தென்னிந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.


இந்த பிரம்மாண்ட படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் இசை உரிமையை Zee Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். டிரெய்லர் மற்றும் முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது, இசையும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹைலைட்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘Lokah: Chapter 1 - Chandra’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ‘ஐ ம் கேம்’. அதேபோல், பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘RDX’-க்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும்.


தொழில்நுட்பக் குழு


லைன் புரொட்யூசர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சாமன் சாக்கோ

புரொடக்‌ஷன் ஹெட்ஸ்: சுஜாய் ஜேம்ஸ், தேவதேவன்

புரொடக்‌ஷன் டிசைனர்: அஜயன் சாலிசேரி

ஆக்ஷன்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா

புரொடக்‌ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஸ்வரன்

அசோசியேட் இயக்குநர்: ரோஹித் சந்திரசேகர்

பாடல்கள்: மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX: தௌஃபீக் (Eggwhite)

போஸ்டர் டிசைன்: Ten Point

சவுண்ட் டிசைன்: Sync Cinema

சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: SBK

மார்க்கெட்டிங் ஹெட்: விஜித் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு - யுவராஜ் 


‘I Am Game’ – செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!


*Dulquer Salmaan’s ‘I Am Game’ Set for September 3 Release; Big Global Release Planned*


Dulquer Salmaan’s highly anticipated film ‘I Am Game’ has a new release date. The film is set to hit theatres worldwide on September 3, 2026, in what is expected to be a massive global release. The film was initially announced as an Onam release on August 20, but the release has now been pushed by two weeks to facilitate a much wider theatrical rollout. Produced by Dulquer Salmaan’s Wayfarer Films, this big-budget fantasy thriller is touted as one of the biggest films of Dulquer’s career. The film is directed by Nahas Hidhayath.


Produced by Dulquer Salmaan and Jom Varghese under the Wayfarer Films banner, ‘I Am Game’ has a screenplay written by Sajeer Baba, Ismail Abu Bakr and Bilal Moidu. The dialogues have been penned by Sajeer Baba, Adarsh Sukumaran and Shabas Rasheed.


Dulquer Salmaan has announced that the film, which has generated tremendous anticipation among fans and moviegoers, will now arrive as an even bigger theatrical release. In a social media post, he stated that the release was being moved to September 3 to take the film to more markets and reach a larger global audience. The actor also confirmed that ‘I Am Game’ will have a pan-Indian release in Malayalam, Tamil, Telugu, Hindi and Kannada, bringing the film to audiences across the country. Dulquer Salmaan and Wayfarer Films stated that the date change was made to ensure that the mega-scale theatrical experience receives a release that matches the film’s enormous canvas and scale.


The film’s trailer and first song, released earlier, have already received an overwhelming response from audiences. The trailer was released in Malayalam, Tamil, Telugu, Hindi and Kannada and generated significant pan-Indian attention. The first song has also emerged as a major hit. The trailer, which kept viewers hooked from start to finish, offered glimpses of spectacular visuals, high-energy action and thrilling chase sequences, promising a grand theatrical experience. The film is expected to be a stylish fantasy thriller unlike anything Malayalam cinema audiences have seen before. Dulquer Salmaan has been presented in an extremely stylish and mass-oriented avatar, adding to the excitement surrounding the project.


Shot across more than 100 locations across South India, ‘I Am Game’ is gearing up to become one of the biggest releases in Malayalam cinema. Marking Dulquer Salmaan’s 40th film, this big-budget fantasy thriller features an impressive ensemble cast including Antony Varghese, Tamil actor-filmmaker Mysskin, Kaayadu Lohar, Kathir, Parth Tiwari and Tamil actress Samyuktha Viswanathan, among others.


Zee Music has acquired the music rights to the film. The music composed by Jakes Bejoy and the action sequences choreographed by Anbariv Masters are expected to be among the major highlights, judging by the trailer and the first song. ‘I Am Game’ is also the next production from Wayfarer Films following the blockbuster success of Lokah: Chapter 1 - Chandra. The film marks director Nahas Hidhayath’s next project after the blockbuster ‘RDX’.


Line Producer: Bibin Perumbilly, Cinematography: Jimshi Khalid, Music: Jakes Bejoy, Editing: Chaman Chacko, Production Heads: Sujoy James, Devadevan, Production Designer: Ajayan Chalissery, Action: Anbariv Masters, Makeup: Ronex Xavier, Costume: Mashar Hamsa, Production Controller: Deepak Parameswaran, Associate Director: Rohith Chandrasekhar, Lyrics: Manu Manjith, Vinayak Sasikumar, VFX: Thoufeeq (Eggwhite), Poster Design: Ten Point, Sound Design: Sync Cinema, Sound Mix: Kannan Ganapathy, Stills: SBK, Marketing Head: Vijith Viswanathan.

அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

 *‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –*

*காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !*


முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.


“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது.


இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன. காதலின் இனிமையான தருணங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த மெலடி, பாடல் வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை போர்த்தொழில் படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.


பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


தற்போது “ஆசை வரமே” பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. காதல், இசை மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு ஒரு அழகான காதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


https://www.youtube.com/watch?v=xwUz3tSlMZ4

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது

 *நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது*



தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது.


உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்தில் அணுகும் மனதைத் தொடும் கதையாகும். தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை குடும்பத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பயணமே இதன் மையக் கருத்தாகும். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கி, ஒரு துணையைத் தேட விரும்பும் அவளது முடிவு, குடும்பம், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் தனக்கான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான தைரியம் ஆகிய கேள்விகளை அவளுக்கு முன்வைக்கிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன் மற்றும் பாலாஜி சக்திவேல் நடித்துள்ள இந்த திரைப்படம், நுணுக்கமான கதை சொல்லலையும் இயல்பான நடிப்பையும் ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பெறும் ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. நூறு சாமி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ZEE5-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இதன் மூலம், பிராந்திய சந்தைகளில் உள்ள பார்வையாளர்களையும் திரைப்படம் சென்றடைந்துள்ளது.


திரைப்படத்தின் டிஜிட்டல் வெற்றியைப் பற்றி பேசிய ZEE5 தமிழ் & மலையாளம் வணிகத் தலைவர் லாய்ட் சேவியர் கூறுகையில், “நூறு சாமி திரைப்படத்திற்கு தமிழ் ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள அன்பான வரவேற்பைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது ஒரு சிறப்பான மைல்கல், குறிப்பாக மனித உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு கதைக்கு இது மிகப் பெரிய சாதனையாகும். குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை கண்டுபிடிக்கும் வாய்ப்பைப் பற்றி இந்த திரைப்படம் பேசுகிறது. இந்த உணர்வுகள் பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களுடன் இணைந்திருப்பதைப் பார்ப்பது மனதிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.


தனது நன்றியைத் தெரிவித்த இயக்குநர் சசி கூறுகையில், “நூறு சாமி திரைப்படத்திற்கு ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து இவ்வளவு அன்பு கிடைப்பதைப் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நேர்மையுடனும் உணர்வுடனும் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த கதை இத்தனை பேருடன் இணைந்து, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம். இந்த திரைப்படத்தை பார்த்து, ஆதரித்து, அன்பைப் பகிர்ந்த அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.


100 மில்லியன் பார்வை நிமிடங்கள் என்ற இந்த மைல்கல், டிஜிட்டல் தளங்களில் உணர்வுபூர்வமான பிராந்திய கதைகளுக்கான பார்வையாளர்களின் வளர்ந்து வரும் வரவேற்பை பிரதிபலிக்கிறது. குடும்பம், உறவுகள் மற்றும் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புக்கான விருப்பத்தை நேர்மையாக சித்தரிக்கும் நூறு சாமி, அதன் திரையரங்கு பயணத்தைத் தாண்டியும் புதிய பார்வையாளர்களை தொடர்ந்து சென்றடைந்து, அவர்களுடன் தனது உறவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.


நூறு சாமி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

After seven years of keeping his iconic Baahubali display picture across social media, Prabhas has finally made a change, and fans

 After seven years of keeping his iconic Baahubali display picture across social media, Prabhas has finally made a change, and fans believe it signals the beginning of a brand-new chapter. The undisputed pan-India superstar has updated his display picture with a striking new look from Fauzi, creating an instant wave of excitement online*



The timing has only added to the buzz, with the change arriving at the start of Independence month, perfectly aligning with the patriotic backdrop of the much-awaited film. For many fans, this isn't just a profile picture update but a symbolic moment that marks the transition from one landmark era to another.


The internet was quick to react, with social media platforms flooding with excitement over Prabhas' intense new avatar and what it could mean for Fauzi.

 

The conversation has continued to gain momentum across platforms. Many believe the update reflects the scale and ambition of the upcoming film, while others see it as the perfect way to kick off the month of independence. For countless fans, Prabhas remains one of the greatest actors on the face of the earth, and this simple yet symbolic display picture change has only strengthened their excitement for what's next. 


As discussions continue to spread across entertainment pages and fan communities, the display picture change has become much more than a simple social media update. It has reignited excitement around Prabhas, strengthened anticipation for Fauzi, and given fans a memorable moment that signals the arrival of what they hope will be another defining chapter in the superstar's career.


#PrabhasDP https://www.instagram.com/actorPrabhas

ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் - (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்

 *ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் - (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்*



சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக திகழ்ந்த 'பாகுபலி' படத் தோற்றத்திலான சுயவிவர படத்தை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருந்த பிரபாஸ்- இறுதியாக அதில் மாற்றம் செய்துள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 


இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரபாஸ் - 'ஃபௌஜி- Fauzi' படத்திற்கான தனது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய தோற்றத்தை INSTA DP படமாக இடம்பெறச் செய்துள்ளார். இது இணையத்தில் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


சுதந்திர தின மாதம் தொடங்கும் வேளையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது... மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய இப்படத்தின் தேச பக்தி சார்ந்த பின்னணியுடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதால்... இது மேலும் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.‌ பல ரசிகர்களுக்கு இது சாதாரணமான சுய விவரப்பட மாற்றம் மட்டுமல்ல... ஒரு முக்கிய சகாப்தத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதை குறிக்கும் குறியீட்டு நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. 


பிரபாஸின் தீவிரமான புதிய தோற்றம்-  ஃபௌஜி படத்திற்கான  முக்கியத்துவத்தை போற்றுவதாக இருக்கக்கூடும். இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறது. இணைய உலகம் இதற்கு உடனடியாகவும், உற்சாகத்துடனும் எதிர்வினையாற்றி வருகிறது. 


பல்வேறு சமூக வலைதளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து அதிகரித்து வலுப்பெற்று வருகிறது. இது வரவுள்ள இப்படத்தின் பிரம்மாண்டத்தையும்.. அதன் லட்சியத்தையும் ...இந்த மாற்றம் பிரதிபலிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். அதே தருணத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கி வைக்க இது ஒரு சிறந்த வழியாகவும் பார்க்கப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களுக்கு உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் பிரபாஸ் ஒருவராக திகழ்கிறார். எளிமையானதாக தோன்றினாலும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுய விவர புகைப்பட மாற்றம்-  அடுத்து வரவிருப்பதைப் பற்றிய அவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 


பொழுதுபோக்கு சார்ந்த பக்கங்களிலும்... ரசிகர் மன்றங்களிலும்... இது தொடர்பான விவாதங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த சுய விவர பட மாற்றம் சாதாரண சமூக ஊடக அப்டேட் என்பதை கடந்து.. ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றம் பெற்றுள்ளது. இது பிரபாஸ் மீதான உற்சாகத்தை மீண்டும் எழுச்சி அடைய செய்துள்ளது. இது ஃபௌஜி- Fauzi படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் விரிவடைய செய்துள்ளது. அத்துடன் சூப்பர் ஸ்டாரின் திரைபயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையவிருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் வருகையை உணர்த்தும்... மறக்க முடியாத தருணத்தையும் ரசிகர்களுக்கு வழங்கி உள்ளது.

https://www.instagram.com/actorPrabhas

Dubai-Based Filmmaker Zenofar Fathima Eyes Chennai for Her Next Creative Chapter

 Dubai-Based Filmmaker Zenofar Fathima Eyes Chennai for Her Next Creative Chapter



The filmmaker, producer and entrepreneur looks to build a creative bridge between the film industries of Chennai and Dubai


Chennai: Dubai-based filmmaker, producer and entrepreneur Zenofar Fathima is set to embark on an exciting new chapter in her filmmaking journey, with plans to expand her creative presence in Chennai and explore collaborations between the Indian and UAE film industries.


Born in Chennai and currently based in Dubai, Zenofar has established herself as a distinctive voice through films that explore psychological thrillers, social issues, human behaviour and contemporary themes. As the Founder and CEO of Zen Film Productions, she has directed and produced more than 20 short films, covering subjects ranging from cybercrime and domestic violence to faith and psychology.


Zenofar gained international recognition through The Reel Files, which began as a short-form horror concept and evolved into a successful anthology streaming on ZEE5 Global. Following the success of its earlier seasons, including Season 3 featuring acclaimed Bollywood actor Rahul Dev, The Reel Files Season 4 takes the franchise into a new territory with an unconventional ensemble featuring Bigg Boss 16 fame Abdu Rozik, Dubai Bling star Ebraheem Al Samadi, and Emirati content creator Ahmad Al Marzooqi.


By bringing familiar personalities into unexpected psychological-horror avatars, Zenofar aims to offer audiences a fresh and unconventional cinematic experience.


Building a Chennai–Dubai Creative Connection


With her growing international profile, Zenofar is now looking towards Chennai as an important part of her next creative chapter. She is actively exploring Chennai-based productions and collaborations that will bring together South Indian talent with artists and creative professionals from Dubai.


Her vision is to create stories that can connect audiences across India and the UAE while providing new opportunities for filmmakers, actors and other creative professionals from both regions.


Speaking about her plans, Zenofar Fathima said:


“Dubai will always remain an integral part of my filmmaking journey, but Chennai has always held a special place in my heart. I want to create stories that transcend borders while bringing together the incredible talent and cinematic cultures of India and the UAE. I see this not merely as an expansion, but as the beginning of a long-term creative partnership between two vibrant filmmaking ecosystems.”


Zenofar’s body of work also includes Ayah – The Power of Dua, created in association with Firdaus Studio by A.R. Rahman, which received recognition on the international festival circuit. Her psychological thriller Specter: Black Out also gained international attention, with its teaser showcased on the iconic Times Square billboards in New York.


With The Reel Files Season 4 further expanding her international footprint and several cross-border collaborations currently in development, Zenofar Fathima is looking forward to establishing a stronger creative presence in Chennai.


For the filmmaker, the move represents more than an expansion of geography. It is a return to her roots and an opportunity to create a long-term creative bridge between Chennai and Dubai, bringing together two vibrant filmmaking cultures and taking Indian stories to wider international audiences.


About Zenofar Fathima


Zenofar Fathima is a filmmaker, producer and entrepreneur based in Dubai and the Founder and CEO of Zen Film Productions. Her work spans short films, anthology content and feature-length projects, with a focus on psychological storytelling, socially relevant themes and innovative narratives. Her projects have received international recognition across festivals, streaming platforms and global media.

துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

 *துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்*



சென்னை மற்றும் துபாய் திரைப்படத் துறைகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான பாலத்தை உருவாக்கும் நோக்கில் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஸெனோஃபர் ஃபாத்திமா


சென்னை: துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது திரைப்படப் பயணத்தின் அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) திரைப்படத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அவர் ஆராய்ந்து வருகிறார்.


சென்னையில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வரும் ஸெனோஃபர், உளவியல் சார்ந்த த்ரில்லர்கள், சமூகப் பிரச்சினைகள், மனித நடத்தை மற்றும் சமகாலக் கருப்பொருட்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.


Zen Film Productions நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஸெனோஃபர், இதுவரை 20-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். சைபர் குற்றங்கள், குடும்ப வன்முறை, நம்பிக்கை, உளவியல் உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் சமகாலப் பிரச்சினைகள் அவரது படைப்புகளில் இடம்பெற்றுள்ளன.


ஸெனோஃபருக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றுத் தந்த முக்கியமான படைப்புகளில் The Reel Files குறிப்பிடத்தக்கது. முதலில் குறும்பட வடிவிலான ஹாரர் கான்செப்ட்டாகத் தொடங்கிய இந்தத் தொடர், பின்னர் ZEE5 Global தளத்தில் வெளியாகும் வெற்றிகரமான ஆந்தாலஜி தொடராக உருவெடுத்தது.


இதன் முந்தைய சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து, குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இடம்பெற்ற Season 3-க்குப் பிறகு, The Reel Files Season 4 புதிய மற்றும் எதிர்பாராத களத்தை நோக்கி நகர்கிறது.


இந்த சீசனில் Bigg Boss 16 புகழ் அப்து ரோசிக், Dubai Bling நட்சத்திரம் இப்ராஹீம் அல் சமாதி மற்றும் எமிராட்டி உள்ளடக்கப் படைப்பாளர் அஹ்மத் அல் மர்சூகி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.


பார்வையாளர்களுக்கு பரிச்சயமான பிரபலங்களை எதிர்பாராத உளவியல்-திகில் கதாபாத்திரங்களில் காட்சிப்படுத்துவதன் மூலம், வித்தியாசமான மற்றும் புதுமையான சினிமா அனுபவத்தை வழங்க ஸெனோஃபர் முயற்சி மேற்கொள்கிறார்.


சென்னை – துபாய்: புதிய படைப்பாற்றல் பாலம்


சர்வதேச அளவில் தனது படைப்புகளுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், ஸெனோஃபர் தனது அடுத்த படைப்புப் பயணத்தில் சென்னையை முக்கியமான மையமாகக் கருதுகிறார்.


சென்னையை மையமாகக் கொண்ட திரைப்படத் தயாரிப்புகள் மற்றும் புதிய கூட்டணிகளுக்கான வாய்ப்புகளை அவர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார். இதன் மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த திறமையான கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்படப் படைப்பாளிகளுடன் துபாயைச் சேர்ந்த படைப்பாளிகளை இணைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்க அவர் விரும்புகிறார்.


இந்தியா மற்றும் UAE நாடுகளின் பார்வையாளர்களை இணைக்கும் கதைகளை உருவாக்குவதோடு, இரு பிராந்தியங்களையும் சேர்ந்த திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் படைப்புத் துறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் அவரது நீண்டகால நோக்கமாக உள்ளது.


தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஸெனோஃபர் ஃபாத்திமா கூறுகையில்:


“எனது திரைப்படப் பயணத்தில் துபாய் எப்போதும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும். அதே நேரத்தில், சென்னை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம். எல்லைகளைக் கடந்து செல்லும் கதைகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தியா மற்றும் UAE-யின் அற்புதமான திறமைகளையும், இரு நாடுகளின் திரைப்படக் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன். இதை வெறும் ஒரு விரிவாக்கமாக நான் பார்க்கவில்லை. மாறாக, இரண்டு துடிப்பான திரைப்படச் சூழல்களுக்கு இடையே நீண்டகால படைப்பாற்றல் கூட்டாண்மைக்கான தொடக்கமாகவே பார்க்கிறேன்.”


ஸெனோஃபரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் Ayah – The Power of Dua திரைப்படமும் இடம்பெறுகிறது. A.R. Rahman-ன் Firdaus Studio-வுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது.


அதேபோல், அவரது உளவியல் த்ரில்லர் திரைப்படமான Specter: Black Out சர்வதேச அளவில் கவனம் பெற்றதுடன், அதன் டீசர் நியூயார்க்கின் புகழ்பெற்ற Times Square விளம்பரப் பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது.


The Reel Files Season 4 மூலம் சர்வதேச அளவில் தனது படைப்புப் பயணத்தை மேலும் விரிவுபடுத்தி வரும் ஸெனோஃபர் ஃபாத்திமா, தற்போது சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.


அவரைப் பொறுத்தவரை, இந்தப் பயணம் வெறும் புவியியல் விரிவாக்கம் மட்டுமல்ல. தனது வேர்களை நோக்கிய ஒரு மீள்வரவும், சென்னை மற்றும் துபாய் ஆகிய இரு முக்கியமான திரைப்படச் சூழல்களுக்கு இடையே நீண்டகால படைப்பாற்றல் பாலத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பும் ஆகும்.


இரு துடிப்பான திரைப்படக் கலாச்சாரங்களையும் ஒன்றிணைத்து, இந்தியக் கதைகளை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதே அவரது அடுத்தகட்டப் பயணத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.


ஸெனோஃபர் ஃபாத்திமா குறித்து


ஸெனோஃபர் ஃபாத்திமா துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இவர் Zen Film Productions நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.


குறும்படங்கள், ஆந்தாலஜி தொடர்கள் மற்றும் முழுநீளத் திரைப்படங்கள் என பல்வேறு வடிவங்களில் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. உளவியல் சார்ந்த கதைசொல்லல், சமூக அக்கறை கொண்ட கருப்பொருட்கள் மற்றும் புதுமையான கதைக்களங்கள் இவரது படைப்புகளின் தனிச்சிறப்புகளாகும்.


அவரது திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் வாயிலாக குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

Viswanaath and Sons Movie Review

Viswanaath and Sons Movie Review

Viswanath and Sons Movie Rating:5/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் எதிர்பாத்துட்டு இருந்த viswanath and sons படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல suriya, namitha baiju, radhika, sunil, yogibabu ,னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கறது venky atluri.  இவரு ஏற்கனவே வாத்தி,  lucky bhaskar படங்களை direct பண்ணி box office குடுத்திருக்காரு. 



பரம்பரை பணக்காரன் ஆனா surya olympics ல gunshooting போட்டிக்கு தங்க பதக்கம் வாங்கி இருக்கற ஒரு வீரர். இவருக்கு 45 வயது ஆகுது. என்னதான் இவ்ளோ வயசு ஆனாலும் இன்னும் கல்யாணம் ஆகலேயே என்ற வருத்தத்தில இருக்காங்க சூர்யா ஓட் அம்மா radhika.  இருந்தாலும் இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணும் னு சூர்யா வை தொல்லை பண்ணுறாங்க ராதிகா. அதுனால வாடகை தாய் மூலமா குழந்தைய பெத்துக்குறாரு சூர்யா. 


இப்போ எல்லாரும் சந்தோசமா இருந்தாலும், இப்போ தான் ஒரு பிரச்சனையே வருது. குழந்தைக்கு bone marrow transplant surgery பண்ணணும் ன்ற கட்டாயத்துக்கு தள்ள படுறாரு. doctor யும் குழந்தையோட அம்மா bone மட்டும் தான் match ஆகும், அதுனால அம்மா வை கூட்டிட்டு வாங்க னு சொல்லுறாங்க. 


சூர்யா வும் வாடகை தாய் ஆனா mamitha baiju வை கூட்டிட்டு வரரு. ஒரு கட்டத்துக்கு மேல mamitha க்கு சூர்யா மேல love வருது. இந்த love அ surya  accept பண்ணறா,  குழந்தைக்கு நல்ல படிய surgery நடந்ததா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கி. 


படத்தோட performance அ பத்தி பாத்தோம்னா சூர்யா ஓட் நடிப்பை பத்தி பேசியே ஆகணும். அவரோட dialogue delivery,  body language,  acting னு எல்லாமே cute ஆவும் சூப்பர் ஆவும் இருந்தது. அவரொட கண்டிப்பா இருக்கட்டும், love அ இருக்கட்டும், emotions அ இருக்கட்டும், comedy அ இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. Mamitha ஓட் நடிப்பு வேற லெவல் ல இருந்தது. இன்னும் சொல்ல போன இவங்களோட acting surya க்கு equal  அ இருந்தது. இவங பண்ணுற குறும்பு தனம் சேட்டை எல்லாமே ரசிக்கிற மாதிரி அமைச்சிருந்தது. ராதிகா , சூர்யாவோட அம்மாவா நேர்த்தியவும் இயல்பாவும் நடிச்சிருந்தாங்க. 


relationship ல இருக்குற age gap,  family,  emotions னு எல்லாமே இருக்கற ஒரு அழகான படம் தான் இது. இந்த படத்தக்கு இன்னொரு plus point சினிமாட்டோக்ராபி தான். வீடா இருக்கட்டும், places அ இருக்கட்டும், hospital னு எல்லாமே ரொம்ப colourful ஆவும் visual appealing ஆவும் இருந்தது. G V prakash ஓட music and bgm ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல set ஆயிருந்தது.


மொத்தத்துல ஒரு நல்ல கதைகளம்.  சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.