Featured post

திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா

 *“திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம்*  *“தியேட்டர்கள் எல்லாம் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன” ; நிழ...

Friday, 25 April 2025

திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா

 *“திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம்* 

























*“தியேட்டர்கள் எல்லாம் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன” ; நிழற்குடை பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வேதனை*


*“ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும்” ; இயக்குநர் கே.பாக்யராஜ்*


*“சோம்பேறிகள் கூட ரஜினிகாந்த் இயங்குவதை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள்” ; நிழற்குடை விழாவில் சிலாகித்த சீமான்*


*“குழந்தையை வளர்த்து விடுவது என்பது வேறு.. குழந்தை வளர்ப்பு என்பது வேறு” ; நிழற்குடை விழாவில் இயக்குநர் பேரரசு நெத்தியடி பேச்சு* 


தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்..


தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.


தமிழ்நாடு மற்றும் புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது. உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது..


இதனையடுத்து ‘நிழற்குடை’ படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி, நடிகை வனிதா விஜயகுமார், நமீதா, தயாரிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


*இந்த நிகழ்வில் இயக்குநர் சிவா ஆறுமுகம் பேசும்போது,*


“இந்த படத்தில் இன்றைக்கு தேவையான கருத்தை ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு பிடிக்கும் விதமாக நான் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்கு நானே தான் தயாரிப்பாளர். இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு போராட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்து ஆதரவாக இருந்தனர்” என்று கூறினார்.


*நாயகன் விஜித் பேசும்போது,*


“கடந்த வருடம் நான் நடித்த ஒயிட் ரோஸ் என்கிற படம் வெளியானது. அதை தொடர்ந்து எனக்கு கே/எஸ் அதிகமான் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது/ கதை சொல்ல வேண்டாம் என்று கூறினாலும் கூட, அரை மணி நேரம் சொன்னார்கள். கதை பிடித்து இருந்தது. எப்போது சார் தேதிகள் வேண்டும் என கேட்டபோது கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் சொல்கிறோம் என்று சொன்னதும் எனக்கு இந்த படத்தில் நாம் நடிக்கிறோமா, எதற்காக நம்மை அழைத்தார்கள், என்ன கதாபாத்திரம் பண்ண போகிறோம் என சிறிய குழப்பமும் சந்தேகமும் வந்தது. ஆனால் ஒரு வாரம் கழித்து மீண்டும் எனக்கு அழைப்பு வந்தபோது இந்த படத்தில் நான் நடிப்பதை உறுதி செய்தார்கள். அது மட்டுமல்ல என்னுடைய மகளுக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். தேவயானி இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்று சொன்னதும் கொஞ்சம் எனக்கு படபடப்பாகத்தான் இருந்தது. ஆனால் முதல் நாள் படப்படிப்பிலிருந்து அவர் என்னை எளிதாக உணர வைத்து விட்டார், இந்தப்படத்தில் நான் நடித்தது எல்லாமே பல சீனியர் நடிகர்களுடன் தான்” என்று கூறினார்.


*நாயகி கண்மணி பேசும்போது,* 


“இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக சின்னத்திரையில் தான் நடித்து வந்தேன். அதேசமயம் இந்த படத்தில் நடிக்க வந்தபோது எப்படி ஒரு பெரிய நடிகையை நடத்துவார்களோ அதேபோல முறையாக, நல்ல விதமாக நடத்தினார்கள். என்னுடைய முதல் மேடை இது. சின்னத்திரைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் எனக்கு நீங்கள் கொடுத்து வந்த அதே அன்பையும் ஆதரவையும் வெள்ளித்திரையிலும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். படம் சிறிய படமாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே இதற்கு மிகப்பெரிய கடின உழைப்பை கொடுத்திருக்கிறோம். ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இது இருக்கும்” என்று கூறினார்.


*நடிகர் ராஜ்கபூர் பேசும்போது,*


“இப்போது வரும் படங்களில் எல்லாமே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள் ஆனால் இது எண்பதுகளில் வந்தது போன்று குடும்ப அம்சத்தை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது. வெளிநாட்டிற்கு சென்று வேலை வாய்ப்பு தேடும் ஒரு தம்பதியினரின் சிரமத்தை இது சொல்கிறது. எல்லோரும் வெளிநாட்டுக்கு சென்று தான் வேலை பார்க்க வேண்டுமா என்கிற கேள்வியையும், பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற படிப்பினையையும் இந்த படம் கொடுக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.


*நடிகர் ரவிமரியா பேசும்போது,* 


“எனக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தின் இயக்குநர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு முன்பு இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை திரையிட்டார்கள். அதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் பார்த்தவர்கள் எல்லோரும் இந்த படத்தை பார்க்காமல் நீங்கள் மிஸ் பண்ணி விட்டீர்கள், அருமையான பீல் குட் படம் என்று சொன்னார்கள். படத்தின் கதையைக் கேட்டதும் அதை உணர்ந்தேன்” என்று கூறினார்.


*நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது,* 


“தேவயானியின் மிகப்பெரிய ரசிகை நான். எல்லோருக்கும் காதல் கோட்டை தேவயானியை பிடிக்கும் என்றால் எனக்கு கல்லூரி வாசல் படத்தில் நடித்த அந்த பப்ளியான தேவயானியை ரொம்ப பிடிக்கும். ரொம்பவே எளிமையான நல்ல இதயம் கொண்டவர். அவரை  இந்த திரை உலகின் தேவசேனா இன்று தாராளமாக சொல்லலாம். விஜய் சொன்னது போல 20 வயதில் ஒரு பெண் ஹீரோயினாக இருப்பது அதிசயம் அல்ல. ஆனால் 40 வயதிலும் கதாநாயகியாக நிற்பது தான் பெரிய விஷயம். மனோரமா ஆச்சி, ஊர்வசி போல அவரும் ஒரு இடத்தை பெறுவார், தற்போதைய சூழலில் ஒரு பெண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ஒரு படம் திரையரங்கு ரிலீசுக்கு வருவதே சாதனை என்று தான் சொல்ல வேண்டும். சின்ன படம்  என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நல்ல படம் என்று சொல்லலாம்” என்று கூறினார்.


*நடிகர் நகுல் பேசும்போது,*


“இயக்குனர் கே.எஸ் அதியமான், சிவா ஆறுமுகம் ஆகியோர் இணைந்திருப்பதால் இந்த படம் நிச்சயம் ஒரு கருத்துள்ள படமாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். கண்மணி பாடல் மனதை தொடும் விதமாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன. கே.எஸ் அதியமான் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவரால் தான் நாங்கள் சினிமாவுக்கு வந்தோம். தமிழர்களாகவே மாறிவிட்டோம். அதனால் இது எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி போல தான், என்னுடைய அக்காவின் கடின உழைப்பை சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். இப்போது என் அம்மா இல்லை என்றாலும் அக்கா உருவில் அம்மாவை பார்க்கிறேன். இந்த கதை கூட அக்காவை கொஞ்சம் தொடர்புபடுத்தும் விதமாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.


*தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,* 


“நாயகன் விஜித் என்னை அழைத்து இந்த படத்தை பார்க்கச் சொன்னார். ஒரு நாயகன், நாயகி மட்டுமல்ல, நடிகை தேவயானி இந்த படத்தை தூக்கி நிறுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த படத்தை வெளியிட முன் வந்த பிளாக் பஸ்டர் நிறுவனத்திற்கு நன்றி. சின்ன படம், பெரிய படம் என்று பட்ஜெட்டை வைத்து சொல்வதை விட ஓடும் படம், பெரிய படம், ஓடாத படம் சின்ன படம் என்று தான் நான் சொல்வேன்” என்று கூறினார்.


*இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது,*


“இந்த நிழற்குடை எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு படமாக, எல்லோரும்  பார்க்கும் ஒரு நல்ல படமாக இருக்கும். நல்ல படங்களை காண்பது என்பதே அரிதாக இருக்கிறது. தன்னை 30 வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய அதே குழுவினருடன் மீண்டும் தேவயானி இணைந்து நடிப்பதும் மீண்டும் ஒரே குழுவினராக அவர்கள் இங்கே அமர்ந்திருப்பதும் ஒரு மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய நீண்ட நெடிய பயணத்தில் எவ்வளவோ நிழல்கள் நம் பயணத்திற்கு துணையாக இருந்திருக்கின்றது. நிழல் இல்லாத நேரத்தில் கூட சற்றென்று ஒரு குடையாக எத்தனையோ நல்ல உள்ளங்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரும் திரும்பி பார்க்கும் ஒரு விஷயமாக இந்த நிழற்குடை இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.


*நடிகை நமீதா பேசும்போது,*


“இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் இப்போது நாட்டில் நடக்கக்கூடிய ஒரு நிஜம் தான். இந்த சமயத்தில் என் வீட்டில் இருக்கும் என் மாமியார், மற்றும்  ஆயாம்மாக்கள் இருவருக்கும் நன்றி சொல்லணும். ஆயாம்மா பணிக்கு இப்போது நல்ல மதிப்பும் சம்பளமும் இருக்கிறது. அம்மா இல்லாத இடத்தில் அவர்தான் அம்மா. இந்த படத்தில் அதை கொஞ்சம் திரில்லிங் அம்சங்கள் சேர்ந்து காட்டி இருக்கிறார்கள். படம் பார்ப்பவர்கள் பல இடங்களில் தங்களுடன் அதை தொடர்பு படுத்திக் கொள்வார்கள்” என்று கூறினார்.


*தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது,*


“இந்த படத்தை பார்த்ததும் மனம் நெகிழ்ந்து போனேன். இன்று சிறிய படங்களின் நிலைமை மிக கேவலமான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட இந்த படத்தை தயாரித்து இயக்கியதற்காக இயக்குநர் சிவா ஆறுமுகத்தை பாராட்ட வேண்டும். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜித் ஒரு அற்புதமான நடிகராக தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷமாக, இன்னொரு நடிகர் திலகமாக இருக்கும் தேவயானி இந்த படத்தில் இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவருடைய இயல்பான குணமாகவே அது இருப்பதால் அவருக்கு அது எளிதாக போய்விட்டது. அவருக்கு இந்த படம் நிறைய விருதுகளை கொண்டு வந்து சேர்க்கும்” என்று கூறினார்.


*இயக்குநர் பேரரசு பேசும்போது,*


“நடிகைகளில் சகலகலாவல்லி என்றால் அது நடிகை தேவயானி தான்.. நடிகை, சமூக சேவை, டீச்சர், தயாரிப்பாளர், இப்போது இயக்குநர் என பல முகங்கள் காட்டுகிறார். விரைவில் அவர் இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். 100 படம் நடித்திருக்கிறார். வீட்டிலேயே கணவர் இருக்கிறார். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி ஒரு டைரக்சன் கோர்ஸ் படித்துவிட்டு குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த காலகட்டத்திற்கு மிக அவசியமான படம் தான் இந்த நிழற்குடை. குழந்தையை வளர்த்து விடுவது என்பது வேறு.. குழந்தை வளர்ப்பு என்பது வேறு. குழந்தையை பெற்றால் மட்டும் போதாது. வளர்க்க வேண்டும். அதைத்தான் இந்த நிழற்குடை சொல்கிறது. குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் குறைவாக இருக்கிறது. அவர்களை அன்பு காட்டி அரவணையுங்கள். குழந்தையை நீங்கள் ஒழுங்காக வளர்த்தால் தான் நாளை அதனுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்று கூறினார்.


*நடிகை தேவயானி பேசும்போது,*


“என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடி இருக்கிறது” என்று கூறினார்.


*தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,*


எனக்கும் இது ஒரு குடும்ப விழா தான். இயக்குநர் கே.எஸ்.அதியமான்  என்னுடைய ஊர்க்காரர். தற்போது அவர் இயக்கி வரும் படத்தை நான் தயாரித்து வருகிறேன். பாதி பட வேலைகள் முடிந்து விட்டன. இந்த படத்தில் பிரிவியூ காட்சி திரையிட்ட போதும் சரி, இந்த நிகழ்வின் போதும் சரி.. நடிகை தேவயானி தனது சொந்த விசேஷம் போல அனைவரையும் வரவேற்று உபசரிப்பதை பார்க்க முடிந்தது. இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகள், தாங்கள் நடித்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே வர தயங்குகிறார்கள். திரையரங்குகளில் படம் பிக்கப் ஆகும் வரை தூக்காமல் ஓட்டுவது நம் கையில் இல்லை. அதற்கு வேண்டுமென்றால் நாம் டைம் டிராவல் செய்து 90 க்கு தான் செல்ல வேண்டும். இன்று அது தியேட்டர்காரர்களின் கையில் தான் இருக்கிறது. ஒரு காட்சி நன்றாக ஓடவில்லை என்றாலே அடுத்த காட்சியில் படத்தை மாற்றி விடுகிறார்கள்” என்று கூறினார்.


*பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,* 


இந்த படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக கண்களுக்கு இனிமையாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளருக்கு தான் முதல் வாழ்த்து சொல்ல வேண்டும். நடிகர் விஜயத்தை பார்க்கும்போது கார்த்திகை பார்த்தது போல இருந்தது. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு ஹீரோவாக வலம் வருவார். எப்போதும் இதேபோல பணிவாகவும் இருக்க வேண்டும்.


நல்ல படம் வர வேண்டும் என்று சொல்கிறோம். நல்ல படத்தை ஓட வைத்தால் தானே அடுத்து இன்னொரு நல்ல படம் வரும். சமூகத்திற்கு தேவையான கருத்தம்சம் கொண்ட ஒரு படத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். இதை ஓட வைத்தால் தான் அடுத்தவர்கள் நல்ல படம் எடுக்க முன்வருவார்கள். இப்போதைய சூழலில் தியேட்டர்கள் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன. டிக்கெட் கட்டணத்தை விட அவர்களுக்கு கேண்டீன் வியாபாரம் தான் மிகப்பெரியதாக தெரிகிறது. அதனாலேயே அதற்கேற்ற மாதிரியான படங்களை தயாரிக்க வேண்டிய சூழல் இன்று இருக்கிறது 


உற்பத்திக்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடியாத சூழலில் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பேர் யாரென்றால் ஒருவர் விவசாயி.. இன்னொருவர் சினிமா தயாரிப்பாளர்.. இருவருமே தமிழக மக்களை வாழவைக்கிற, சிந்திக்க வைக்கின்ற, சிரிக்க வைக்கின்ற இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக மாறினால் மட்டுமே தங்களது பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்க முடியும்.


நானும் ரோஜாவும் திருமணம் செய்தது, குஷ்பூவும் சுந்தர்சியும் திருமணம் செய்தது எல்லாம் பரபரப்பு செய்தி ஆனால் தேவயானி திருமணம் செய்தது மற்றவர்களுக்கெல்லாம் ஷாக்கிங் ஆன செய்தி. உங்கள் திருமணத்திற்கு பிறகான தேவயானியின் வாழ்க்கை திரையுலகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு பாடம் தான். அந்த கலாச்சாரத்தை இந்த படத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். கத்திரி வெயிலுக்கு எப்படி குடை சிறப்பாக இருக்குமோ, அதுபோல கத்திரி வெயிலாக காய்ந்து கிடக்கும் இந்த தமிழ் சினிமாவிற்கு இந்த நிழற்குடை படம் ஒரு சிறப்பாக அமையும். அண்ணன் சீமான் அவர்கள் கருப்பாக இருந்தார்கள். சிவப்பாக இருந்தார்கள்.. இப்போது எந்த வண்ணமும் இல்லாமல் தூய்மையாக இருக்கிறார்கள். எப்போதும் இதேபோல இருக்க வேண்டும்” என்று பேசினார்.


இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,


“எங்க அம்மா எனக்கு இந்த பெயரை வைத்து பெருமைப்பட வைத்துவிட்டார். ஆனால் இயக்குனர் ராஜகுமாரனின் நிஜ பெயரே அதுதானா ? இல்லை சினிமாவுக்கு வந்த பின் வைத்துக் கொண்டாரா என்பதைவிட தேவயானி கிடைக்கும்போது அவர் உண்மையானவை ராஜகுமாரன் ஆகிவிட்டார். சினிமாவைப் பொறுத்தவரை சில பேருக்கு மட்டும் இவர்களுக்கெல்லாம் எப்படி படம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்கிற எண்ணம் ஏற்படும். அதேபோல சில பேரை பார்க்கும்போது இவர்களுக்கு ஏன் படமே கிடைப்பது இல்லை என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி இரண்டாவது லிஸ்டில் இருப்பவர் தான் இயக்குனர் கே.எஸ் அதியமான். ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும் என்று சொல்வது போல, சினிமாவில் அதிர்ஷ்டம் சில நேரம் திறமைசாலிகளுக்கு கை கொடுக்காது. நிழற்குடை. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தின் இயக்குனர் சிவா ஆறுமுகத்திற்கு கே.எஸ் அதியமான் உள்ளிட்ட பட குழுவினர் நிழற்குடையாக இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு நிழற்குடையாக தேவையானி நிற்கிறார்” என்று பேசினார்.


*நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,*


“இது நம்முடைய குடும்ப நிகழ்வு போல தான். நான் வரும்போது என்னை வரவேற்ற தேவயானி, நீங்கள் வந்ததற்கு நன்றி என்றார். ஆனால் நான் சொன்னேன் நீங்கள் இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி என்று. காரணம் முன்பு கே.ஆர் விஜயா, அடுத்து ரேவதி ஆகியோரைப் போல இப்போது தேவயானி நடித்தால் அது நல்ல படமாக தான் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் பெயரை பதிவு செய்யும் விதமாக நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். பணம் வருகிறதே என்பதற்காக எல்லா படங்களையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை ஒருபோதும் அவருக்கு கெடுத்துக் கொண்டதில்லை. அந்த நற்பெயர் தான் 30 வருடம் கழித்தும் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு காரணம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாதே. தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு ஒரு நல்ல வெற்றிப்படம் தரவில்லை என்கிற குற்ற உணர்வு இப்போதும் எனக்கு இருக்கிறது. தம்பி படத்துக்கு அடுத்தபடியாக பகலவன் என்கிற படத்தை அவருக்காக எடுக்க இருந்தேன். ஆனால் மாதவன் அதில் நடிக்க மறுத்துவிட்டார். காரணம் தம்பி படத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் தான் ஆனால் அதன்பிறகு தான் வாழ்த்துக்கள் படத்தை அவருக்காக இயங்கினேன். ஆனால் படம் சரியாக போகவில்லை. இந்த இடத்தில் சொல்கிறேன், என்றைக்காவது ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட இழப்பை நான் சரி செய்வேன்.. கே.எஸ் அதியமான் போன்ற இயக்குனர்கள் இப்போது ரொம்ப குறைவு. தாலியை கழற்றி எறிந்து விட்டு இன்னொரு நபருடன் புரட்சி திருமணம் செய்யும்படி கதை எழுதியவரும் பாக்கியராஜ் தான்.. அதே தாலியை கழட்ட மாட்டார்கள் அதுதான் கலாச்சாரம் என்று ஒரு கதையை எழுதி அதையும் வெற்றி படமாக்கியவர் நம் பாக்யராஜ் காரணம். அவரது எழுத்தின் வன்மை அப்படி.


எளிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு குடும்பப்பாங்கான படமாக கொடுத்து வெற்றி அடைய வேண்டும் என்றால் அது அவரால் மட்டும் தான் முடியும். கே.எஸ் கோபாலகிருஷ்ணன் போல பாக்கியராஜ் நம் திரை உலகில் ஒரு மைல் கல். அவர் நம் கூட இருக்கிறார் என்பதை பெருமை. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குருதேவ் அற்புதமாக காட்சிகளை படமாக்கி உள்ளார் என்பது தெரிகிறது. அடிதடி ஆக்சன் படங்களுக்கு இசையமைப்பதை விட இப்படி மென்மையான உணர்வுகளை கடத்தும் படத்திற்கு இசையமைப்பது ஒரு சவால். அதிலும் மனதில் நிற்பது போல மென்மையான இசையால் வருடுவது என்பது மிகக் கடினம். அதை இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் அழகாக செய்துள்ளார்.


ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு பெண் பாடலாசிரியர் பாடல் எழுதியிருப்பது பெருமையாக இருக்கிறது. பெரிய படம் சின்ன படம் என்கிற அளவு எல்லாம் இல்லை. ஓடுகிற படம், ஓடாத படம் அவ்வளவுதான்.. தெலுங்கில் ஆறு கோடியில் எடுக்கப்பட்ட கோர்ட் என்கிற படம் 60 கோடி வசூலித்துள்ளது. இந்த நிழற்குடை படம் நிச்சயம் வெல்லும். தியேட்டர்கள் இந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை. ஆனால் விரைவில் அதற்கான சூழல் வர இருக்கிறது. பெரிய பெரிய வளாகங்களில் சின்ன படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சட்டம் வரும். பல இரவுகள் பசி பட்டினியுடன் கிடந்து இந்த சினிமாவை நேசித்தவர்கள் நாங்கள்.. அவ்வளவு எளிதாக சினிமாவை அழிய விட்டுவிட மாட்டோம். செல்வமணி சொன்னது போல விவசாயி, தயாரிப்பாளர் இருவருமே தங்களது உற்பத்திக்கான விலையை தீர்மானிக்கும் காலத்தை உருவாக்குவோம்.


சிவா ஆறுமுகம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் என்ன நடந்தாலும் கூட சினிமாவை விட்டு அவர் வெளியேறவில்லை. அவரது மகனும் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். துவங்குவது எல்லோருக்கும் எளிது தான். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.


அய்யா ரஜினிகாந்தை தூரகுதில் இருந்தே பார்த்து வந்த நிலையில்  நேரில் பார்க்கும் வாய்ப்பு வந்தது. இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இவ்வளவு படம் நடித்து, இவ்வளவு சாதித்த பிறகும். புதிதாக ஒன்றை தெரிந்து கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பார்க்கும்போது இவர் ஏன் ஜெயிக்க மாட்டார் என நமக்கே தோணும். என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் இருங்கள் என்று கூறிவிட்டு அவர் உள்ளே நடந்து சென்றபோது சினிமாவில் படத்தில் பார்க்கும் அதே வேகம் தான் நிஜத்திலும் அவரிடம் இருந்தது. சோம்பேறிகள் கூட அவர் இயங்குவதை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள் இந்த தேடலும் வெறியும் இருக்கும் ஒவ்வொருவரும் உச்சத்தை தொடலாம் சாதிக்கலாம்.


ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியை அதன் தாய் தான். இந்த படம் தாய்மையை பற்றி சொல்கிறது. நீங்கள் எவ்வளவு உயர்த்திற்கு சென்றாலும் உங்களைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உங்களுடைய தாய் தான். இந்தத் தாய்மை கதாபாத்திரத்தை தாங்கி நிற்கின்ற தகுதி நம் தேவயானிக்கு இருக்கிறது. நிழற்குடை படத்திலிருந்து திரையரங்கின் தொடக்க காட்சிக்கு மக்களை அழைத்து வருவதற்கு அவரே போதும்” என்று கூறினார்.


*தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்*  


தயாரிப்பு ; தர்ஷன் பிலிம்ஸ் ஜோதிசிவா


கதை திரைக்கதை இயக்கம் ; சிவா ஆறுமுகம் 


வசனம் ; ஹிமேஷ்பாலா


இசை ; நரேன் பாலகுமார் 


ஒளிப்பதிவு ;ஆர் பி குருதேவ்


கலை இயக்கம் ; விஜய் ஆனந்த் 


படத்தொகுப்பு ; ரோலக்ஸ் 


மக்கள் தொடர்பு ; 

A ஜான்/ தேன்மொழி

Vallamai Review

Vallamai Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vallamai படத்தோட review அ தான் பாக்க போறோம். Premgi Amaran, Dhivadarshini, Deepa Shankar, CR Rajith நடிச்சிருக்க இந்த படத்தை Karuppaiyaa Murugan தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா saravanan அ நடிச்சிருக்க premgi க்கு boomika வா நடிச்சிருக்க dhivadharshini னு ஒரு பொண்ணு இருக்கும். 

இவரோட wife இறந்துபோயிடுறதுனால கிராமத்தில இருந்து சென்னை க்கு வந்துடுறாங்க. அதோட saravanan க்கு காது கேட்காது அதுனால ear machine எப்பவுமே போற்றுப்பாரு. சென்னை க்கு வந்த ஒடனே ஒரு சின்ன வீட்டை  வாடகைக்கு எடுத்து தாங்குறாரு. தன்னோட பொண்ண ஒரு governement ஸ்கூல் ல சேத்து விட்டுடுறாரு. saravanan சினிமா போஸ்டர் அ சுவர் ல ஓட்டுற வேலைய செய்ய ஆரம்பிக்குறாரு. இவங்களோட பக்கத்துக்கு வீட்ல ஒரு தாத்தா வும் பேரனும் இருக்காங்க. இந்த தாத்தா எப்பவுமே பெட்ரோல் அ திருடுவாரு. 

Vallamai Movie Video Review:

https://youtu.be/8lM0aba5T-w?si=xNG1uprtp-iRQbE2

ஒரு நாள் தன்னோட பொண்ண ஸ்கூல் ல இருந்து கூட்டிட்டு வரும் போது வயிறு ரொம்ப வலிக்குது னு சொல்லற அதோட bleed யும் ஆகுது. தன்னோட பொண்ணு age attend தான் பண்ணிருக்க னு நினைச்சு doctor கிட்ட கூட்டிட்டு போறாரு. ஆனா doctor check பண்ணி பாத்துட்டு யாரோ இந்த பொண்ண abuse பண்ணிருக்காங்க னு சொல்லறாங்க. தன்னோட பொண்ணு கிட்ட இதை பத்தி கேட்கும் போது chocolate சாப்பிட்டேன் அதுக்கு அப்புறம் எனக்கு ஏதும் தெரியாது னு சொல்லற. இதை பத்தி விசாரிக்கும் போது பக்கத்துக்கு வீட்ல இருக்க அந்த பையன் அடிக்கடி இவளுக்கு chocolate குடுப்பான். அடுத்ததா பாத்தீங்கன்னா இந்த பொண்ணு படிக்கற ஸ்கூல் ல 50 லட்சம் டொனேஷன் குடுத்துருப்பாரு chakravarthi  யா நடிச்சிருக்க C R  rajith . இவளோ பெரிய amount குடுத்திருக்கதுனால இவரை school க்கு chief guest அ கூப்ட்ருப்பாங்க. அந்த program ல boomikka  bharathanatiyam dance பண்ணி முடிச்சிருப்பாங்க. இதே dress ஓட அப்பா முன்னாடி நிக்கணும் னு ரொம்ப ஆசையோட இருப்ப. அப்போ தான் school ல வேலை பாக்குற peon ஒருத்தன் இந்த பொண்ண பாத்து உன்னோட dress கிளிஞ்சிருக்கு னு சொல்லி restroom ல dress மாத்திக்கோ னு சொல்லற. இந்த பொன்னும் dress மாத்திக்கிறதுக்காக restroom போற அப்போ இவளுக்கு  தெரியாம இவனும் பின்னாடி போறான். restroom எல்லாமே lock ஆயிருக்கிறதுனால என்ன பண்ணரன்னு தெரியாம முழிக்கிற அப்போ தான் car ஓட driver இந்த வண்டி பெருசு தான் வேணும்னா இந்த வண்டிக்குள்ள dress மாத்திக்கோ னு சொல்லற. school க்கு chiefguest அ வந்த chakravarthi ஓட car இது. இந்த பொன்னும் வண்டியில ஏறுற.   


இதுல மூணு பேரு மேல சந்தேகம் வருது. இவங்க ல யாரு இந்த தப்பு பண்ணது ? சரவணன் வில்லன் அ கண்டுபிடிக்கிறாரா ? வில்லன் அ கண்டுபிடிச்சி police கிட்ட ஒப்படைக்கிறாரா இல்ல இவரே தண்டனை குடுக்கிறாரா ன்றது தான் இந்த படத்தோட  மீதி கதையை இருக்கு. 


இதுவரையும் premgi அ comedy role ல தான் பாத்துருப்போம். ஆனா முதல் தடவையா ஒரு serious  ஆனா emotional ஆனா character அ choose பண்ணி நடிச்சிருக்காரு. இவரோட  நடிப்பு ரொம்ப sincere அ இருந்தது. இந்த படத்துல ஒரு சில loopholes இருந்தது. இப்போ லாம் school ல சின்ன வயசுலயே good touch bad touch . stranger is danger னு எல்லாமே சொல்லி குடுக்க ஆரம்பிக்கறாங்க. அப்படி இருக்கும் போது boomika ஓட character கொஞ்சம் பெரிய பொண்ணு தான். யாரு  னு தெரியாத ஒரு driver சொல்லற னு car ல ஏறுறது கொஞ்சம் வேடிக்கையா இருந்தது. அதே மாதிரி boomika வ check up க்கு doctor கிட்ட கூட்டிட்டு வரும் போது. இது abuse னு தெரிஞ்சும் டாக்டர்,  saravanan கிட்ட இதை police கிட்ட complain பண்ணாதீங்க னு advice பண்ணறாங்க. இது reality ல possible ஏ கிடையாது உங்களுக்கே தெரியும். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு  மட்டும் கவனம் குடுத்திருந்தாங்க னா கண்டிப்பா இந்த படம் இன்னும் செமயா தான் இருந்திருக்கும். 


 இருந்தாலும் harsh reality  ல நடக்கற விஷயங்களை தான் காமிச்சிருக்காங்க. சொல்ல போன ஜாக்கிரதையா இருக்கணும் ன்ற awareness அ  மக்களுக்கு குடுக்கற மாதிரி இருந்தது. sooraj nallusamy ஓட cinematography அற்புதமா set யிருந்தது. அதுவும் முக்கியமா night scenes ல ரொம்ப clear  அ எடுத்துருந்தாரு. இந்த படத்தோட director தான் music அ compose பண்ணிருக்காரு. இவரோட bgm நெறயா emotional ஆனா scenes  அ ஒரு step மேல கொண்டு போயிருக்குனு தான் சொல்லணும். 


மொத்தத்துல actors ஓட strong ஆனா performance , super ஆனா visuals அப்புறம் ஒரு social message எடுத்து சொல்லற ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த வல்லமை. கண்டிப்பா  இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Thursday, 24 April 2025

Until Dawn Review

Until Dawn Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம until dawn ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு survival horror movie னு சொல்லலாம். 2015 ல வெளி வந்த ஒரு video game ஓட title யா தான் இந்த படத்துக்கு வச்சிருக்காங்க. அது மட்டும் இல்ல இந்த game ஓட theme தான் இந்த படம் னு கூட சொல்லலாம். lights out , shazam போன்ற படங்களை இயக்கிய  David F. Sandberg , இந்த படத்தை இயக்கி இருக்காரு. Ella Rubin, Michael Cimino, Odessa A'zion, Ji-young Yoo, Belmont Cameli, and Peter Stormare னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.

Until Dawn Movie Video Review: https://www.youtube.com/watch?v=-aJwVhizOXI



இந்த படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா melanie ன்ற ஒரு பொண்ணு காணாம போய்டுற. இந்த melanie  clover  ஓட அக்கா. இவங்க தொலைஞ்சு ஒரு வருஷம் ஆயிருக்கும்.அவளை தேடுறதுக்காக clover  யும் அவளோட friends யும் ஒரு இடத்துக்கு வராங்க.  அங்க இருக்கற ஒரு lodge ல தங்கலாம் னு முடிவு எடுப்பாங்க. அங்க இருக்கற register அ check பண்ணி பாத்த melanie ஓட கையெழுத்து daily யும் sign பண்ணிருக்கற மாதிரி இருக்கும். ஓவுவுறு sign வேற விதமா இருக்கும் ஆனா அது melanie ஓட sign னு அவங்களுக்கு தெரியும்.  அந்த register  ல nina  ன்ற பொண்ணு sign பண்ணுவா. அன்னிக்கு night ஏ  இவங்க எல்லாரும் கொடூரமா செத்து போயிடுறாங்க. இங்க தான் பெரிய twist  நடக்குது.  திடுறுனு பாத்த மறுபடியும் இவங்க அந்த இடத்துக்கு வந்துருப்பாங்க ல அதே timeline ல இருக்காங்க. இவங்களுக்கு எப்படி செத்தோம் ன்றதும் ஞாபகம் இருக்கும். அதே சமயத்துல இவங்க உடம்பு ல அந்த காயெல்லாம் இருக்கும். இந்த time  loop ல இவங்க மாட்டிக்கிறாங்க. அதாவுது night இவங்க இறந்ததும் காலைல உயிரோட வருவாங்க.  correct அ இவங்க சாகுற time வரும் போது யாரோ ஒருத்தர் இவங்கள கொடூரமா கொன்னுடுறா. அதுவும் ஓவுவுறு night ளையும் வேற வேற ஆளு வந்து இவங்கள கொலை பண்ணுவான். ஆனா இவங்க சாகுறதுக்கும் ஒரு limit  இருக்கு. அதா மீறிட்டாங்கன்னா இவங்களால மறு நாளு உயிரோட வர முடியாது. இவங்க உயிரோட இருக்கணும் னா night ல அந்த கொலைகாரன் கிட்ட இருந்து தப்பிச்சு விடியற வரைக்கும் உயிரோட இருக்கணும்.இவங்க இதே time  loop ல மாட்டிக்கிறாங்களா இல்ல உயிரோட இந்த எடத்துல இருந்து தப்பிக்கிறாங்களா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இது ஒரு butterfly effect னே சொல்லலாம். ஏன்னா இவங்க எல்லாரும் என்ன முடிவு எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி தான் அனுபவிப்பாங்க. நெறய gore scenes , violence , scare scenes னு எக்கச்சக்கமா கொட்டி வச்சிருக்காங்க. என்னதான் கதை ரொம்ப familiar அ இருந்தாலும் அதா கொண்டு வந்த விதம் ரொம்ப interesting அ இருந்தது. இந்த characters சாகுறது எல்லாமே வேற வேற method ல இருக்கும். அது பாக்குறதுக்கு அவளோ violent அ இருக்கும். அதோட cgi ல இல்லாம இந்த scenes அ பண்ணிருக்கறதுனால இன்னும் realistic அ தெரியுது னே சொல்லலாம். சில தடவை ஒரு சில characters சாகுறதுக்கு தயாரா இருப்பாங்க. ஆனா இந்த gang குள்ள அவ்ளோ stress இருக்கும். அடுத்து என்ன பண்றதுனு தெரியாது. இன்னும் சொல்ல போன அந்த gang ல ஒரு couple இருப்பாங்க. அவங்களுக்குள்ள break up அ ஆயிடும். 


ஒரு entertaining ஆனா படம் தான் இது. கதை போக போக mystery solve ஆகுறது லாம் super அ இருந்தது. ella rubin தான் clover அ நடிச்சிருப்பாங்க. இவங்க acting பக்கவா இருந்தது. peter stormare  தான் villain அ இந்த படத்துக்கு super அ set ஆயிருக்காரு. until dawn video game அ விளைய்டினுவங்க இந்த படத்தை எப்படி பாப்பாங்க னு தெரியல ஆனா இந்த game ஓட core theme அ ரொம்ப beautiful அ இந்த படத்துல கொண்டு  வந்திருக்கங்க னு தான் சொல்லணும். ஒரு நல்ல interesting ஆன horror படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல miss பண்ணாம பாருங்க.

Gangers Movie Review

Gangers Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்த படம் sundar c ஓட direction ல வெளி வந்திருக்க gangers படத்தோட review அ தான் பாக்க போறோம். Sundar C, Vadivelu, Catherine Tresa, Vani Bhojan and Bagavathi Perumal னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. sundar c யும் வடிவேலு யும் கடைசியா நகரம் மறுபக்கம் படத்துல பாத்துருப்போம். 15 வருஷம் கழிச்சு இந்த படத்துல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க படத்தோட கதை க்கு போலாம். 

Gangers Movie Video Review: https://www.youtube.com/watch?v=oqnC_Gef7uo



ஒரு சின்ன town ல ஸ்கூல் ல படிக்கற ஒரு பொண்ணு தொலைஞ்சு போய்டுற. அதே ஸ்கூல் ல teacher அ வேலை பாத்துட்டு இருக்கற sujitha வா நடிச்சிருக்க catherine therasa இந்த பொண்ணு missing னு ஒரு case அ file பண்ணறாங்க. இதை கண்டுபிடிக்கறதுக்காக ஒரு police அ undercover operation ல அந்த school க்கு அனுப்பி வைக்கிறாங்க. அதே சமயத்துல புது pt staff அ saravanan அ நடிச்சிருக்க sundar c வராரு. அதோட இங்க தான் pt staff singaram அ நடிச்சிருக்க வடிவேலு இருக்காரு. singaram , sujitha  க்கு route விட்டுட்டு இருப்பாரு. அதே சமயத்துல saravanan அ எதிரியா பாக்க ஆரம்பிக்குறாரு. இதே town அ மூணு அன்னான் தம்பிங்க தான்  control ல வச்சுட்டு இருப்பாங்க.   அவங்க கிட்ட நெறய பணம் இருக்கும். அதா கொள்ளை அடிக்கறதுக்காக saravanan , sujitha , singaram திட்டம் போடுவாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


எப்பவும் போல sundar c ஓட படங்கள் நாளே commercial aspects அ இருக்கட்டும் இல்லனா comedy portions அ இருக்கட்டும் இதெல்லாம் miss ஏ ஆகாது. அதே மாதிரி தான் gangers படம் இருக்கும். நீங்கமனசை விட்டு சிரிக்கிற மாதிரி ஒரு அருமையான படமா தான் குடுத்திருக்காங்க. director ஓட  கடைசி படமான aranmanai 4 அப்புறம் மத கஜ ராஜா படங்கள் ல செம hit ஆச்சு. மத கஜ ராஜா ல santhanam highlight அ தெரிஞ்சுதுன்னா இந்த படத்துல vadivelu அசத்திட்டாரு னே சொல்லலாம் . story ரொம்ப strong அ இல்லனாலும் audience ஓட கவனத்தை எப்படி ஈர்க்கணும் னு director  க்கு நல்லாவே தெரிஞ்சுருக்கு. படத்தோட first  half  கொஞ்சம் slow  அ போனாலும் அதுக்கு அப்புறம் தான் இவங்க எல்லாரும் ஒரு gang  அ form  ஆகி பணத்தை கொள்ளை அடிக்கற portions  வருது. இதெல்லாம் ரொம்ப விறுவிறுப்பா , ரொம்ப comedy அ கொண்டு வந்திருக்காங்க. 


இப்போ லாம் நெறய படத்துல பழைய படங்களோட reference அ வைக்க ஆரம்பிச்சுட்டாங்க அது songs அ இருக்கும் இல்ல dialogues அ இருக்கும். அதே மாதிரி தான் sundar c யும் இந்த படத்துல ஒரு சில references அ வச்சிருக்காரு. ஆனா இவரு direct பண்ண படங்களோட reference அ தான் use பண்ணிருக்காரு.  anbe sivam , Coffee with Kadhal, and Kalakalappu இந்த படங்களோட posters அ நீங்க பாக்கலாம். அதே மாதிரி அவங்க theatre ல கூட மத கஜ ராஜா படத்தை தான் பாப்பாங்க. இந்த படத்துல ஒரு cameo role யும் இருக்கு. இதெல்லாம் ரொம்ப natural அ படத்துக்கு ஒத்து போயிருந்தது னு தான் சொல்லணும். ஒரு சில காமெடி scenes லாம் நம்ம எதிர்பாத்தது ன்ற மாதிரி தான் இருந்தது. வடிவேலு ஓட பழைய காமெடி style அதுவும் winner london படங்கள் ல எப்படி இருந்தாரோ அப்படியே தான் இந்த படத்துல இருக்காரு. அழகான பொண்ணு பின்னாடி சுத்துறது, வில்லன் கிட்ட மாட்டிகிறது, எந்த பிரச்சனை வந்தாலும் இவரை பலி ஆட நிறுத்துறது னு ஒரே comedy அ தான் இந்த படத்தை கொண்டு போயிருக்காங்க. 


மொத்தத்துல fun அ ரெண்டு மணி நேரம் time pass ஆணும் ந கண்டிப்பா இந்த படத்தை theatre ல உங்க family and friends ஓட சேந்து miss பண்ணாம பாருங்க.

சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

 *சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*


நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.









அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், '' எனக்கு இந்த மேடை மிக முக்கியமான மேடை. 'ஈசன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து..' எனும் பாடலை நாங்கள் எந்த படத்திற்காக எழுதினோமோ.. அந்தப் படத்தில் இருந்து அந்தப் பாடலை நீக்கி விட்டார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எனக்கு போன் செய்து, 'ஈசன் படத்தில் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடல் இடம்பெறுகிறது. சசிகுமார் சாருக்கு அந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது' என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த தருணங்கள் இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் ஸ்டுடியோவில் சசிகுமாரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு , 'அவர் பாடல் சிறப்பாக இருக்கிறது' என வாழ்த்தினார்.  அந்த வாழ்க்கை என்னால் மறக்க இயலாது. அந்தப் பாடல் எனக்கான அடையாளமாக அமைந்தது.


அதனைத் தொடர்ந்து யுவன் சார் ஸ்டுடியோவில் ஒருவர் என்னை சந்தித்து நான் பட தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு வாய்ப்பு தருவேன் என்று வாக்குறுதி தந்தார். அவர்தான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். அவர் தயாரித்த 'குட்நைட் ' படத்தில் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பையும் வழங்கினார். அவர் தயாரிப்பில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நானும் பணியாற்றியதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு நாயகன் சசிகுமார் என்று சொன்னவுடன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் பாடல்களை எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதேபோல் இயக்குநர் அபிஷனும் கதையை சொன்னது போல் எடுத்திருக்கிறார். சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் சிறப்பாக உருவாகும் போது தான் அதனை நாம் கொண்டாட முடியும். இந்தப் படத்தின் இயக்குநர் அபிஷன் சின்ன பையன் தான். இருந்தாலும் மிகப்பெரிய இயக்குநராக வருவார். சசிகுமார் இப்படத்தில் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மற்றொரு தயாரிப்பாளர் மகேஷ் ராஜும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மொட்டை மாடியில் ஒரு பாடலை பாடுவார். அந்தப் பாடல் யூடியூப்பில் பிரபலமானது. அந்த பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இவருடன் இணைந்து எப்போது நாம் பணியாற்றுவோம் என ஆவலுடன் காத்திருந்தேன். இயக்குநர் பொன் குமார் மூலம் '1947' எனும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். 'குட்நைட்' படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது. மிகவும் மகிழ்ச்சி. அவருடன் ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றும் அனுபவமே சிறப்பானது. அவருடைய பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

'குட்நைட் ', ' லவ்வர் ' ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெளியாகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும். படம் வெளியாவதற்கு முன் படத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. படம் வெளியான பிறகும் இந்த பேச்சு நீடிக்கும். இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பணியாற்றி அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், '' குட்நைட் - லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எங்களின் மூன்றாவது படம். இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறோம். இந்த படமும் ஹிட் ஆகும் என நம்புகிறேன்.

சசிகுமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்-  நடிகர் என பிரபலமாக இருக்கும் அவர் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து, அவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவோம் என நம்புகிறேன்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பொருத்தவரை இது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் அபி என்னை சந்தித்து கதையை சொல்லும்போது அவருக்கு 23 வயது தான். கதையை இடைவேளை வரை கேட்கும்போது அதிர்ச்சியாகி விட்டேன். முழு கதையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.‌ அந்தக் கதையை கேட்டதும் இயக்குநர் அபியை எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்திருந்தது.‌ அந்தக் கதையில் அவர் சொன்ன விசயங்கள் ஜீவன் உள்ளதாக இருந்தது. அவர் கதையை எப்படி சொன்னாரோ... அதை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.


டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை நாங்கள் குடும்பமாக இணைந்து உருவாக்கினோம். மே மாதம் முதல் தேதி அன்று இப்படத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். ஆதரவு தாருங்கள்.


இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் அற்புதமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது பல காட்சிகளுடன் நம்மால் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இதற்கு இவரின் இசை உதவி செய்திருக்கிறது.


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், நடிகைகளும் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


'குட்நைட் ','லவ்வர்' என்ற இரண்டு படத்திற்கும் வெற்றியை வழங்கி இருக்கிறீர்கள். அதனைத் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தையும் வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்'' என்றார்.


தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், '' குட்நைட் - லவ்வர் ஆகிய இரண்டு படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவால் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'யை உருவாக்க முடிந்தது. இதற்காக முதலில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இயக்குநர் அபிஷன் கதையை சொல்லத் தொடங்கியதும் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு 'மொமென்ட்ஸ்' வரும். அதைக் கேட்டவுடன் இந்த படத்தை நிச்சயம் தயாரிக்கலாம் என்றேன். அந்தத் தருணத்தில் இந்த படம் எப்படி வரும் என்று நான் நினைத்திருந்தேனோ.. அதேபோல் இயக்குநர் அபிஷன் உருவாக்கி இருந்தார். இந்த வயதில் இவ்வளவு பெரிய கடின முயற்சியை நான் கண்டதில்லை. அவர் எதிர்காலத்தில் மிக சிறப்பான இயக்குநராக வருவார்.‌ இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும்.‌ திரை உலகில் அவருக்கு பேராதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.


சசிகுமார் இல்லை என்றால் நாங்கள் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டோம். 16 வயதுடைய மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் இவரைத் தவிர வேறு யாரும் எங்களின் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையை புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிப்பதற்கு ஒரு துணிச்சல் தேவை. அதை மேற்கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்த சசிகுமாருக்கு நன்றி.  


மோகன் ராஜனின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில கலைஞர்கள் இல்லை என்றால் படம் உருவாக்க வேண்டாம் என நினைப்பேன் . அத்தகைய கலைஞர்கள் தான் மோகன் ராஜன் - ஷான் ரோல்டன் - பரத் விக்ரமன். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். சில படங்களுக்கு இசையை தவிர்த்து விட்டு ரசிக்க முடியாது. எந்த கதையை நான் கேட்டாலும் முதலில் இதில் ஷான் ரோல்டனின் இசை எப்படி இருக்கும் ... என்ன மாயஜாலம் செய்யும் ... என்று தான் யோசிப்பேன். அப்படி யோசித்துக் கொண்டுதான் கதையையே கேட்பேன். இதுவரை நான் கேட்ட கதைகளுக்கு நான் நினைத்ததை விட அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். இதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   மகேஷ் என் பார்ட்னர். பொதுவாக இரண்டு பேர் இணைந்து பணியாற்றினால் கிரியேட்டிவ் டிஃபரன்ஸ் வரும்.‌ ஆனால் மகேஷ் நான் என்ன நினைத்து செய்தாலும் அதற்கு முழு பக்க பலமாக இருப்பார். நாங்கள் இதுவரை இரண்டு படங்களை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறோம். இப்பொழுது மூன்றாவது படத்தில் இணைந்திருக்கிறோம்.  மகேசின் ஆதரவு இல்லை என்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தத் திரைப்படம் யாரையும் எந்த ஒரு தருணத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தாது என்பதை மட்டும் நான் இங்கு உறுதியாக சொல்கிறேன். இந்தத் திரைப்படம் எங்கள் குழுவினரின் நேர்மையான முயற்சி. அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அன்பை கொடுக்கும். ரசிகர்களை கவர்வதற்கான அனைத்து விசயங்களும் இப்படத்தில் உள்ளது. மே முதல் தேதி அன்று வெளியாகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.


இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசுகையில், '' பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படத்தை இயக்குவது தான் லட்சியம் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு புள்ளிக்குப் பிறகு நான் யாரிடமும் பணியாற்றாமல் கதை எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய கதையை எந்தவித தயக்கமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் கேட்டனர். கதையை கேட்ட பிறகு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள் மகேஷ் -  யுவராஜ் ஆகியோருக்கு என் முதல் நன்றி.

படத்தின் முதல் பாதி கதையை கேட்டதும் தயாரிப்பாளர் யுவராஜ் இப்படத்தை உருவாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் அற்புதமானது.‌


இப்படத்திற்கு சசிகுமார் தான் ஹீரோ என நிச்சயத்துக் கொண்டு அவரை சந்தித்து கதை சொல்லப் போனேன். கதையை அவரிடம் சொல்லும் போது அவர் எந்த ரியாக்ஷனையும் காண்பிக்கவில்லை. அதன் பிறகு நான் சற்று சோர்வடைந்தேன். அன்று மாலை தயாரிப்பாளர் யுவராஜ் போன் செய்து சசிகுமார் சாருக்கு கதை பிடித்து விட்டது என சொன்னார். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.


இப்படத்தில் குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கு சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் முதன்மையானவர் ஷான் ரோல்டன். அவரின் இசை இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்த

படத்தின் மூலம் எனக்கு பாராட்டு கிடைத்தால்.. அதில் 50 சதவீதம் ஷான் ரோல்டனைத்தான் சாரும். அந்த அளவிற்கு இந்த படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார்.


மோகன் ராஜனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் சிலிர்ப்பானது. 'முகை மழை' என்ற வார்த்தைக்கு அவர்தான் பொருள் சொல்லி புரிய வைத்தார். ஷான் ரோல்டன் - மோகன் ராஜன் ஆகிய இருவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.


சிம்ரன் மேடம் போன்ற அனுபவம் மிக்க நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.‌ மிதுன் ஜெய் சங்கர் - கமலேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நிறைய நடந்தது.‌ அதனால் முதலில் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


எல்லோரும் என்னிடம் எப்போது நம்பர் ஒன் ஆக வரப்போகிறீர்கள் ? என கேட்கிறார்கள். நான் அதற்காக வரவில்லை.‌ நல்ல படைப்புகளுக்கு இசையை வழங்கி அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் மூலமாக கிடைக்கும் நல்ல விசயங்கள் தான்.. என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.


திடீரென்று உயரத்திற்கு சென்று விட்டால்... அந்த உயரத்தில் நின்று கொண்டு, அந்த உயரத்தை தக்க வைப்பது என்பது கடினமான செயல்.‌ பலர் பல ஐடியாக்களை சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை இசை இந்த சமூகத்திற்கு எப்படி பலன் அளிக்க வேண்டும். எந்த மாதிரியான இசையை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது போன்ற சிந்தனையை கொண்டவன் நான். அந்த வகையில் நான் இதுவரை என்னுடைய சினிமா இசை பயணத்தில் சந்தித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நல்ல படங்களில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.


என்னுடைய நண்பரும் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர்மான விஜய் இப்படத்தின் கதையை கேளுங்கள் என்று சொன்னார். பொதுவாக நான் கதையை கேட்பதை தவிர்த்து விடுவேன். திரைக்கதையை வழங்கி விடுங்கள். நான் வாசித்து தெரிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன். திரைக்கதையை வாசிக்கும் போது அந்த திரைக்கதையில் இசைக்கான வேலை என்ன? என்பது தெரிந்துவிடும். ஏனெனில் சில கதாபாத்திரங்களில் மன ஓட்டத்தை இசையால் சொல்லிவிட முடியும்.  


இருந்தாலும் இப்படத்தின் இயக்குநர் அபி கதையை நான் ஒரு முறை சொல்கிறேன் கேளுங்கள் என்றார்.  கதையை இரண்டு மணி நேரம் சொன்னார். கதையை சொல்லும்போது திரையில் காட்சிகளாக இப்படித்தான் தோன்றும் என்ற விசுவலை உண்டாக்கினார்.  அவர் கதை சொன்ன விதத்தை பார்த்து வியந்து போனேன். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும்.


இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் நல்ல கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். ஒரு டிராமா இருக்க வேண்டும். குடும்ப மதிப்பீடுகள் இருக்க வேண்டும்.. என பல விசயங்கள் உண்டு. இதனை அனுபவமிக்க இயக்குநர்களுக்கு இயல்பானது. ஆனால் அபி போன்ற ஒரு புதுமுக இயக்குநருக்கு... இத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.‌


ஒரு கட்டமைப்புக்குள் இயங்குவது என்பது வேறு. ஒரு இயக்குநராக என்னுடைய குரல் இது என வெளிப்படுத்துவது வேறு. ஆனால் இயக்குநர் அபி தன் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னார். இந்தப் படம் என்னை சிந்திக்க வைத்தது. இதற்காக உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.


சசிகுமாரை இயக்குநராகவும், நடிகராகவும் பல கோணங்களில் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணைந்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பாடலாசிரியர் மோகன் ராஜன் என்னுடைய இனிய நண்பராக அறிமுகமானதற்கும் அவருடைய ஈசன் படத்தில் இடம்பெற்ற பாடல் தான். அதற்காகவும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.‌ சசிகுமாரின் நடிப்பு இந்தப் படத்தில் ஸ்பெஷலாக இருக்கும்.  இந்தப் படத்தில் அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். மகிழ்ந்தேன்.


பாடலாசிரியர் மோகன் ராஜன் -  அவருடைய தமிழ் இந்த கால இளைஞர்களுக்கு அவசியமானது. புதுமை என்பது.. ஏற்கனவே இருந்ததன் தொடர்ச்சி தான். தமிழ் திரை உலகில் பணியாற்றுகிறோம். பாடலில் தமிழுக்கு இடமில்லை என்றால் எப்படி? இது போன்ற விசயத்தில் என்னைப்போல் உறுதியாக இருந்து பாடலில் தமிழை இடம்பெறச் செய்வதில் அவருக்கும் பங்கு உண்டு. நாங்கள் தங்கிலீஷிலும் பாடல் எழுதுவதுண்டு. இருந்தாலும் தமிழிலும் பாடல்கள் இடம்பெற வேண்டும். தமிழ் மொழியை காதில் கேட்க வேண்டும். ஏனெனில் தமிழ் ஒரு செம்மொழி. அவரும் நானும் சந்தித்து பேசத் தொடங்கினால்.. நேரம் செல்வதே தெரியாது. மகிழ்ச்சி நீடிக்கும்.


கலை என்பது மகிழ்ச்சியிலிருந்து தான் பிறக்கிறது. கலைஞர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடமிருந்து பிறக்கும் கலையும் மகிழ்ச்சியாக இருக்கும். கலை என்பது உட்கிரகித்தல் தான். ஒத்த சிந்தனை உள்ளவர்கள் இணையும்போது தான் நல்ல படைப்பு கிடைக்கும். இப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தை நீங்கள் தியேட்டரில் நன்றாக அனுபவித்து ரசிப்பீர்கள்.  


இங்கு குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை பழைய விசயமாக பேசுகிறார்கள். இது தவறு. குடும்பங்கள் தான் நல்ல விசயங்களை நினைவு படுத்தும். என் குடும்பம் இல்லை என்றால் நான் இந்த தொழிலில் இருக்க முடியாது.‌ சில பேர் 'குடும்பம் தானே தடையாக இருக்கிறது' என்பார்கள். ஆனால் குடும்பம் தான் நமக்கு பக்க பலமாக இருக்கிறது. நீங்கள் தவறு செய்தால் முதலில் கேள்வி கேட்பது குடும்பம் தான். அதே தருணத்தில் நீங்கள் வீழ்ச்சி அடையும் போது உங்களை கை தூக்கி விடுவதும் குடும்பம் தான். அதனால் குடும்ப படங்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.


குடும்பங்களில் சினிமாவின் தாக்கம் அதிகம். அதனால் குடும்பத்தை பற்றிய சினிமாக்களின் எண்ணிக்கை குறையக்கூடாது. அந்த வகையில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.


நாம் கொரிய நாட்டு திரைப்படங்களை பார்த்து ரசிக்கிறோம். எந்த மாதிரியான கொரியன் படங்களை பார்த்து ரசிக்கிறோம் என்பதை பாருங்கள். மொழி என்ற எல்லையை கடந்து மனித  குடும்பத்திடம் பேசும் படங்களை தான் பார்த்து ரசிக்கிறோம். அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி தமிழ் படமா? என்று கேட்டால்.. ஆமாம் தமிழ் படம் தான். அதையும் கடந்து நம் மனித குடும்பத்திற்கு தேவையான அழகான கொண்டாடப்பட வேண்டிய கொண்டாட்டமான அன்புச் செய்தியை சொல்லப் போகும் சிறந்த படமாக இருக்கும் '' என்றார்.


நடிகர் சசிகுமார் பேசுகையில், '' படக்குழுவினர் மேடையில் இவ்வளவு விசயங்களை பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இது போன்ற மேடையில் தான் தங்களது நன்றியை தெரிவிக்க இயலும். படம் வெளியான பிறகும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை மட்டும் அறிமுக இயக்குநருக்கு அறிவுரையாக சொல்கிறேன். நன்றி தெரிவிப்பது நல்ல விசயம்.


இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவிற்காகத்தான் சற்று பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினரான நாங்கள் பேசுவதை விட.. படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.


தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த 'குட்நைட்' 'லவ்வர்' என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என நினைத்து, நான் தான் இந்த படத்தில் படத்திற்குள் வந்தேன்.  இது எனக்கு தான் பெரிய விசயம்.


கதை சொல்லும் போது இயக்குநர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதை கவனித்துக் கொண்டே இருந்தேன். இயக்குநருடன் வந்த தயாரிப்பாளர் யுவராஜ் ரியாக்சன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நான் இது போன்றதொரு நல்ல கதையை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையை சிறிது மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.


எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். அவர்களுக்கும் இந்த கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும் இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ.  அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.


இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால் இந்த கதையின் நாயகன் ஈழத்தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை பார்க்கும் போது காமெடியாக இருக்கும்.


பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும். உங்களை - ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியையும் , விசயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.  வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.


அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் . இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து- மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.


உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.


இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது? என்று கேட்டபோது அவர் 'தெனாலி' திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது 'தெனாலி', 'மொழி' போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன்.  


இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார்.   இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார்.


இந்த படத்தில் பாடல்களும், இசையும் நன்றாக இருக்கிறது.  இந்தப் படம் அன்பை போதிக்கிறது. மே மாதம் முதல் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.



https://www.youtube.com/watch?v=9sH1PoGOydc&feature=youtu.be

Wednesday, 23 April 2025

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி

 தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி,நீலிமாஇசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார், 









இப்படத்தைப்பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும் போது பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள் ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள் என்றவர் மற்றொரு விசயத்தை பகிர்கிறார், நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் தொட்டாசினுங்கி, அந்த படத்தில் தான் தேவயானியும் கதாநாயகியாக அறிமுகமானார், பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது, குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் நிழற்குடை UA சான்றிதழ் பெற்றுள்ளது இதன் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை கஃபா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தமிழ் நாடு புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனமும் பெற்றுள்ளன,

உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது. தொழில் நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு தர்ஷன் பிலிம்ஸ் 

ஜோதிசிவா

கதை திரைக்கதை இயக்கம் 

சிவா ஆறுமுகம் 

வசனம் 

ஹிமேஷ்பாலா, இசை நரேன் பாலகுமார் 

கலை இயக்கம் 

விஜய் ஆனந்த் 

படத்தொகுப்பு ரோலக்ஸ் ஒளிப்பதிவு 

ஆர் பி குருதேவ்

மக்கள் தொடர்பு A ஜான்

புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்தித்து

 புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்தித்து செங்கல்பட்டு மாவட்டம் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் சதீஷ்குமார்









 அவர்கள் தனது குடும்பத்துடன் அவரின் திருமண பத்திரிக்கையை வழங்கினர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர மக்கள் நல இயக்கத்தின் தலைவர் முருகேசன் அவர்களின் மகள் திருமண பத்திரிக்கையை வழங்கினார்கள் #ActorVishal #AllIndiaVishalFansClub #மக்கள்பணியில் 

#மக்கள்நலஇயக்கம்

Tuesday, 22 April 2025

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது

 ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது !!




ப்ளாக்பஸ்டர்  “எம்புரான்” திரைப்படம் வரும் ஏப்ரல் 24 முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!



மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “எம்புரான்” வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது. 

நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 



மோகன்லால் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க,  அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிருத்விராஜ் சுகுமாரன்,  டொவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகியுள்ளார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, ஜிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிகுட்டன், அனீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.


கேரளாவின் அரசியல் களத்திலிருந்து ஸ்டீபன் நெடும்பள்ளி திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பம் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு மத்தியில், அவர் உலகமே தேடும் குரேஷி ஆப்ரஹாமாக  எப்படி மாறினார்  என்பதை இந்தப் படம் ஆராய்கிறது. லூசிஃபர் சம்பவங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுளின் சொந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகி வருகிறது, அதே நேரத்தில் மக்கள் நீண்ட காலமாக மறைந்துபோன தங்கள் தலைவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்டீபன் இப்போது எங்கே? அவர் தனது தாயகத்தைக் காப்பாற்றத் திரும்புவாரா? உண்மையில் குரேஷி ஆப்ரஹாம் யார்? இந்தக்கேள்விகளுக்கான பதில் தான் இப்படம். 


பரபரக்கும் சம்வங்கள், அதிரடி ஆக்சன், கண்ணைப்பறிக்கும் விஷுவல்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும், ஆக்சன் திரில்லராக இப்படம் புது அனுபவம் தருகிறது.  



ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பு கலைஞர் அகிலேஷ் மோகன், இசையமைப்பாளர் தீபக் தேவ் ஆகிய முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். 


மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில், எம்புரான் திரைப்படம் ஏப்ரல் 24 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த பிரமாண்டமான சினிமா அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்.


ஜியோஹாட்ஸ்டார் 

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும், இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இணையற்ற உள்ளடக்க பட்டியல், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் ரசிகர்கள் எளிதாக அணுகுவதற்கான அமைப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Monday, 21 April 2025

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம்

 *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது*


'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஏஸ் '( ACE) எனும் திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.


இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏஸ் ' ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் . இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார்.  படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்பை ஏ.கே . முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 


மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர்-  கிளிம்ப்ஸ் - பாடல்-  ஆகியவை வெளியாகி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ரசிகர்களிடத்தில் மட்டுமின்றி திரையுலக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.