Featured post

Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director

 Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director with #RAPO23, Introducing Veera through a Strik...

Friday, 15 May 2026

Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director

 Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director with #RAPO23, Introducing Veera through a Strikingly Stylish Poster- Produced by Krishna Pothineni on Rapo Cinematics.*



Energetic Star Ram Pothineni, a multi-faceted performer who has consistently showcased his versatility on screen, takes a Bold new step.After turning lyricist with his previous film Andhra King Taluka- a feat that earned him wide appreciation, he also surprised audiences by lending his vocals for the first time. Now, the talented star is ready to take a giant leap. With his 23rd film, #RAPO23, Ram steps into the director’s chair, marking his debut as a filmmaker. The project, formally announced on the occasion of his birthday, is set to be a stylish Psychological Action Thriller. A genre that is barely explored in Telugu cinema.


#RAPO23 will be produced by Krishna Pothineni under the newly formed Rapo Cinematics banner. Interestingly with this move, Ram joins the elite league of Stars-turned-Directors such as Sr. NTR, Krishna, and Pawan Kalyan.


The makers have also unveiled a striking birthday special poster that introduces Ram Pothineni’s character, Veera. The poster radiates a dark, intense, and gritty tone featuring Ram from behind, clad in a leather jacket. His sharp, V-cut hairstyle amplifies the raw attitude of the character. Dominating the backdrop is a bold red “V”, symbolizing both Veera and a sense of rebellion, danger, and dominance. The faint outlines of towering skyscrapers on either side evoke a cold, crime-infested cityscape. Adding to the mystery, the tagline “The Story of a Lone Wolf” hints at a protagonist driven by solitude, instinct, and a complex psychological landscape.


#RAPO23 promises a powerful and groundbreaking narrative conceived by Ram Pothineni himself for his directorial debut. He is set to portray Veera in a completely new, never-before-seen avatar, and the transformation is already evident in the announcement poster’s styling and mood.


The film’s regular shoot is set to begin in June, with the makers eyeing a December release this year. Further details about the cast and technical crew will be revealed in the coming days, building anticipation around what is poised to be one of Ram Pothineni’s most ambitious ventures yet.


Cast: Ram Pothineni


Technical Crew:

Writer, Director: Ram Pothineni

Producer: Krishna Pothineni

Banner: Rapo Cinematics

PRO: Yuvraaj

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி

 *இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!*



எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது.


பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள Rapo Cinematics நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்-இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.


படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர், ராம் போதினேனியின் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. லெதர் ஜாக்கெட்டுடன் பின்னால் இருந்து நிற்கும் ராமின் தோற்றம், படத்தின் டார்க், இன்டென்ஸ் மற்றும் தனித்துவமான  மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவரது V-cut ஹேர் ஸ்டைல், கதாபாத்திரத்தின் அட்டகாசமான அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துகிறது.


போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.


ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.


படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடிப்பு: ராம் போதினேனி


தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம்  : ராம் போதினேனி

தயாரிப்பு: கிருஷ்ணா போதினேனி

பேனர்: Rapo Cinematics

மக்கள் தொடர்பு - யுவராஜ்


Exam Webseries Review

 Exam தமிழ் webseries Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம exam webseries ஓட review அ தான் பாக்க போறோம். இந்த webseries amazon prime ல ஒளிபரப்பு ஆகுது. இந்த webseries ஓட கதையை எழுதி இயக்கி இருக்கிறது சற்குணம். இதுல துஷாரா விஜயன் அப்புறம் அப்பாஸ் தான் மெயின் ரோல் ல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இதோட கதை என்னனு பாத்திடலாம்.


maramalli யா நடிச்சிருக்க adithi balan deputy supertindant of police அ இருப்பாங்க. இவங்க அந்த posting அ accept பண்ணுறதுக்குள்ள jhansi யா நடிச்சிருக்க துஷாரா விஜயன் இவங்கள கடத்திட்டு போயிடுறாங்க. அதுமட்டும் இல்ல jhansi தான் maramalli ஓட dsp posting யும் accept பண்ணிடறாங்க. jhansi இது பண்ணுறதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு. இவங்க jayachandran அ நடிச்சிருக்க abbas நடத்துற ஒரு secret operation ல கலந்துக்குறாங்க. அந்த operation ஓட முக்கிய goal என்னனா governement நடத்துற exams க்கு பின்னாடி இருக்கற scam அ வெளிப்படுத்துறது தான். இந்த scam அ jayachandran யும் jhansi யும் வெளி கொண்டு வந்தங்களா இல்லையா ன்றது தான் இந்த series ஓட கதையை இருக்கு. 


இந்த webseries ல மொத்தமா 7 episodes தான் இருக்கு. அதுவும் எல்லாமே விறுவிறுப்பா போகுது னு சொல்லலாம். maramalli ஓட kidnapping ல இருந்து ஆரம்பிச்சு jhansi ஓட நிலைமை என்னன்றதா ரொம்ப தெளிவாவும் interesting ஆவும் காமிச்சிருக்காங்க. இந்த scam க்கு பின்னாடி இருக்கற mastermind அ கண்டுபிடிக்கறதுக்கு வெறும் 10 நாள் தான் இருக்கு jhansi க்கு. இந்த mastermind தான் exams க்கு dummy candidates அ கொண்டு வரதும், question paper அ leak out பண்ணுறதும். அதோட  coaching centers நடத்துற  fraud தனம் , government departments க்கு போற லஞ்சம் னு ரொம்ப deep அ இதுல காமிச்சிருக்காங்க. என்னதான் jhansi க்கு எல்லாமே பக்காவா ready பண்ணி இந்த operation க்கு jeyachandran அனுப்பினாலும், மாட்டிக்கற நிலைமை க்கு வராங்க அதுக்கு காரணம் எதிரிகளோடு ஆட்கள் எல்லா எடத்தலையும் இருக்கிறது னால தான்.


இந்த series ல இருக்கற highlight ஆனா விஷயம் என்னனா இந்த problem ஓட solution சட்டத்தை தாண்டி வெளில இருக்கிறது தான். இந்த exams க்கு பின்னாடி இருக்கிற scammer யும் jhansi யும் இந்த system னால பாதிக்க பட்டவங்க தான். இவங்களோட பிரச்சனையா government முன்னாடி கொண்டு வரத்துக்காக rules அ மீறி வர நிலைமைக்கு தள்ள பட்டிருக்காங்க ன்றது தான் உண்மை. entrance exam ஒரு student க்கு எவ்ளோ முக்கியமானது, அதோட impact எந்தளவுக்கு இருக்கின்றதா ரொம்ப அழகா இந்த series ல காமிச்சிருக்காங்க. இந்த மெயின் கதைக்கு நடுவுல ஒரு சின்ன கதையும் குடுத்திருப்பாங்க. அதா பாக்கும் போது இன்னும் நமக்கு வருத்தத்தை தான் தரும். ஒரு மீனவர் அ காமிப்பாங்க. அவரு நல்ல படிச்சவரு தான். ஆனா அவருக்கு வர வேண்டிய ஒரு வாய்ப்பை பரிச்சிருப்பாங்க இதுனால அவரோட வாழ்க்கையே தடம் மாறிடுது. அதே மாதிரி jhansi க்கும் ஒரு flashback ஸ்டோரி அ காமிப்பாங்க. 


series ல நடிச்ச எல்லா actors ஓட performance யும் நல்ல இருந்தது. adithi balan அப்புறம் abbas க்கு இந்த series ஒரு நல்ல comeback அ அமைச்சிருக்கு. ஒரு பக்காவான thriller கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த series அ பாருங்க.

A Terrific Supernatural Folk Mystery in the Making!

 *A Terrific  Supernatural Folk Mystery in the Making!*

*Komala Hari Pictures Brings a Grand Cinematic Spectacle!* 




Komala & Hari Bhaskaran of Komala Hari Pictures is producing this film, which marks his ‘Production No.4’. The yet to be titled movie is produced on a grand scale. 


The story is rooted in the long-standing culture, traditions, and heritage of society, while also bringing to light ancient art forms buried deep within the soil of the land. Designed as a cinematic record of forgotten folklore, the film is based on a true supernatural incident that reportedly unfolded in the southern districts during the mid-1980s, a haunting tale filled with blood, flesh, and unexplained horrors, now transformed into a grand cinematic narrative.


The film is written and directed by Bharathi Balakumaran, who won acclaim for his nativity based film Vizha. After deciding to bring this story to the screen, he conducted extensive research through various authentic sources to shape the screenplay as close to reality as possible.


Actor Vshvaa ( This is the correct spelling ) plays the protagonist,  a young man fighting to save his family from a curse that has haunted generations. Vshvaa, who made his debut with the film Champion, has reportedly undergone six months of intense preparation to transform himself for the role.


Talks are currently underway with a senior actor for another pivotal role. While the process has already started, the official confirmation will be made soon. The star-cast comprises prominent  actors including Mime Gopi, Aadukalam Naren, Risha Jacobs, Munishkanth, Anupama Kumar, Baba Bhaskar, Remya Suresh and several others being considered.


The shoot is scheduled to commence on the 22nd of this month and will continue for 40 consecutive days. Certain portions will also be filmed in Chennai.


*Technical Crew*


Banner: Komala Hari Pictures

Producer: Komala & Hari Bhaskaran


Writer & Director: Bharathi Balakumaran (Vizha fame)


Cinematographer: Banu Murugan (Muthina Kathirika fame)


Editor: Kalaivanan (Amaran fame)


Art Director: Pragatheeswaran 

(Pookie, Diesel fame)


Lyricist: Mohan Rajan (Lover, Lubber Pandhu fame)


Stunt Master: Dinesh Kaasi (Karafame)


Story Line  & Dialogue Writer: Kani Raja 


Pro: Johnson 

Publicly: Movie Bond 


Production Executive: G.Thiruneelagandan


Production Manager:P.Sivakumar

மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை!

 மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை!

பிரமாண்டமாக தயாரிக்கும் கோமளா ஹரி பிக்சர்ஸ். 

 “GENTLEWOMAN” படத்தை தயாரித்த

“கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக

ஒரு கதையை பிரமாண்டமாக தயாரிக்கிறார். புரொடக்‌ஷன்-4 படமான இதற்கு இன்னும் பெயர் சூட்ட படவில்லை. 




சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் மண்ணில் புதைந்த பழைய கலை வடிவங்களையும், பழமை கதையின் பதிவாக இருக்கும் விதமாக இப்பட கதை உருவாகி இருக்கிறது.

1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தை பிரமாண்ட கதையாக மாற்றியுள்ளது. 


மண் சார்ந்த படைப்பான “விழா” படத்தை

இயக்கி, அனைவர் பாராட்டையும் பெற்ற பாரதி பாலகுமாரன் இப்படத்தை வடிவமைத்து இயக்குகிறார். இந்த கதையை எடுப்பதென்று முடிவு செய்த பின்பு, உண்மைக்கு நெருக்கமான பல வழிகளில் ஆராய்ந்து கதை அமைத்து, திரைக்கதையை எழுதியுள்ளார்


இதில், நாயகனாக விஷ்வா நடிக்கிறார்.

தன் தலைமுறையின் தீரா சாபத்திலிருந்த தனது

குடும்பத்தை மீட்க போராடும் ஒரு இளஞனாக விஷ்வா நடிக்கிறார். இவர், ‘சாம்பியன்’ படம் மூலம் அறிமுகமானவர். இதற்காக, ஆறு மாதம் கடும் பயிற்சி எடுத்து கதை நாயகனாக தன்னை தயார் செய்து வருகிறார். 

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பெரிய நடிகர் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் மற்றும் பல நடிகர், நடிகை தேர்வு நடை பெற்று வருகிறது. 


இதன் படபிடிப்பு இம்மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாள்கள் நடை பெறுகிறது. சென்னையிலும் சில காட்சிகள் நடைபெறும். 



#PRODUCED BY KOMALA HARI PICTURES 

#PRODUCERS: KOMALA & HARI BHASKARAN 


#WRITER & DIRECTOR BHARATHI BALAKUMARAN 

( ‘VIZHA’ Fame ) 


#CINEMATOGRAPHER:  BANU MURUGAN ( ‘MUTHINA KATHIRIKA’ Fame )


#EDITOR:  KALAIVANAN ( ‘AMARAN’ Fame )


#ART DIRECTOR:  PRAGATHEESWARAN ( ‘POOKIE’ , ‘DIESEL’  Fame )


#LYRICIST:  MOHAN RAJAN ( ‘LOVER’, ‘LUBBER PANDHU’ Fame. 


#STUNT MASTER:  DINESH KAASI (‘KARA’ Fame)


#STORY LINE & DIALOGUE: WRITER KANI RAJA 

Pro: Johnson 

Publicity: Movie Bond 

#PRODUCTION Executive: G.Thiruneelagandan

PRODUCTION Mananger: P.Sivakumar

இசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த 'இசைஞானி' இளையராஜா! பாடல் பதிவுக்கான பரபரப்போடு

 *இசைப்பயணத்தில் 51-ம் ஆண்டில் நுழைந்த 'இசைஞானி' இளையராஜா! பாடல் பதிவுக்கான பரபரப்போடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து உற்சாகம்.*




'இசைஞானி' இளையராஜா 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து, 50 ஆண்டுகளை நிறைவு செய்து 14.5.2026 இன்று 51-வது ஆண்டில் நுழைகிறார். அதையடுத்து அவருக்கு திரையுலகினரிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது.


இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, ''ஆண்டுகள்தான் கடந்துபோகிறதே தவிர நான் முதல் படத்திற்காக எப்படி ஈடுபாட்டுடன் பணியாற்றினேனோ அதேபோல்தான் இப்போதும் பணிபுரிகிறேன். இப்போதுகூட (உடனிருந்த இயக்குநர் பால்கியை சுட்டிக்காட்டி) இவர் இயக்கும் படத்தின் பாடல் பதிவுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்றார் உற்சாகமாய்.


பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தான் இசையமைத்த முதல் படம் பற்றியும், அன்றைக்கும் இன்றைக்கும் ரசிகர்களின் மனதில் அசைக்கமுடியாத இடம்பெற்றிருக்கிற 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' பாடலுக்கு இசையமைத்த விதம் பற்றியும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.


இளையராஜாவின் 51-ம் வருட இசைப்பயணத் துவக்கத்தையொட்டி வாழ்த்த வந்திருந்த இயக்குநர் கே.பாக்யராஜ், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்பில் உடனிருந்தனர். பாடலாசிரியர் பா.விஜய் இளையராஜாவுக்கு மாலையணிவித்து, வணங்கி ஆசி பெற்றுக் கொண்டார். 


திரைப்பட பத்திரிகையாளர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Thursday, 14 May 2026

சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

 *சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு*















ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் 'சைலண்ட் இன்ஃபுளூயன்சர்' இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 


ஒளிப்பதிவாளர் இளையராஜா, "தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்றார். 


எடிட்டர் ராம் கோபி, " வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்". 


பாடலாசிரியர் ஜெயந்தி, " இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்".


கலை இயக்குநர் சம்பத் திலக், "வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி". 


வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை, "இயக்குநர் ராஜாவின் ஐடியா இது. சிறப்பாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். வாழ்த்துக்கள்". 


நடன இயக்குநர் தினேஷ், "பாடல் சிறப்பாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்". 


இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, "வீடியோ, இசை எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. நன்றி"


இயக்குநர் ராஜா பத்மநாபன், " வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது. என்னுடைய முதல் பாடலை மக்களிடம் கொண்டு போய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும்" என்றார். 


இயக்குநர் சரண், "சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய 'அமர்க்களம்' படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கிறது. இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது. பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார். என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான். இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இந்த பாடலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஏழு நாட்கள் செலவு செய்து நேர்த்தியாக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாடல் வந்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்! சினிமாத்துறையில் இருந்து இன்று முதல்வர் ஆகியிருக்கும் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள் ". 


இயக்குநர் பேரரசு, "பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். நடிகர் விஜய் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக 'சிவகாசி' படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான். 'கோடம்பாக்கம் ஏரியா...' பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம். நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். ஆனால், இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர். நம் தமிழக திரைத்துறையில் இருந்து விஜய் சார் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம். இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் சார் ஆட்சி அமையும். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு. எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் இந்த விருதுகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது. அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்" என்றார். 


இயக்குநர் எழில், "படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம்.  இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்".


இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், "முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல தமிழ் திரையுலகம் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த விஜய்க்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தான் சினிமாவிலோ அரசியலிலோ ஜெயிப்பார். வயது, வேகம், விவேகம் என அனைத்தும் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். திரைத்துறைக்கு விருதுகள் கொடுப்பதை காட்டிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி தான் அவர் செயல்படுவார். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்". 


நடிகர் பலராம் ஜெ பாலாஜி, "கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது.  பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை" என்றார்.

Sivakarthikeyan Productions Unveils Its First Indie Single “Velum Mayilum” - A soul-stirring musical ode

 *Sivakarthikeyan Productions Unveils Its First Indie Single “Velum Mayilum” - A soul-stirring musical ode drenched in devotion to Lord Murugan*



_*Lyrics by Sivakarthikeyan, Directed by "Thaai Kizhavi" fame Sivakumar Murugesan &  Composed and Soulfully Rendered by Nivas K Prasanna*_


Sivakarthikeyan Productions, known for consistently encouraging and promoting promising new talents, has been playing a significant role in presenting refreshing narratives and unique voices to Tamil cinema. With a vision to back innovative storytelling and aspiring creators, the production house has introduced several noteworthy filmmakers and artistes who have contributed to the evolving landscape of contemporary Tamil cinema.

The banner’s recent release Thaai Kizhavi has been garnering tremendous response from audiences across theatrical and OTT platforms alike, further reaffirming the production house’s commitment towards meaningful and quality entertainment.


Expanding its creative horizon further, Sivakarthikeyan Productions has now stepped into the independent musical space with its first indie single, “Velum Mayilum.” The spiritually uplifting devotional track dedicated to Lord Murugan is composed and soulfully rendered by Nivas K Prasanna, with Sivakarthikeyan penning the lyrics. The beautiful song is composed by Sivakumar Murugesan, who shot to fame for his Blockbuster hit movie "Thaai Kizhavi" and Director of Sivakarthikeyan's upcoming film Seyon.


Rich in devotional fervour and rooted deeply in Tamil spiritual tradition, “Velum Mayilum” unfolds as a transcendent musical offering that beautifully captures the grace, valour and divine aura associated with Lord Murugan. Blending evocative lyricism with earthy folk textures and contemporary soundscapes, the song evokes a sense of spiritual serenity and emotional reflections that is expected to strike a chord with devotees and music lovers alike.


Interestingly, the spiritual essence surrounding “Velum Mayilum” extends beyond the song itself. Producer-lyricist Sivakarthikeyan and filmmaker Shivakumar Murugesan, whose names themselves (Both names involve Karthikeyan & Murugesan) symbolises with the divine identity of Lord Murugan, and their  deep-rooted emotional and spiritual admiration towards Divine Being..


This soulful association lends an added layer of authenticity and devotion to the musical offering.


Marking a new creative chapter, Sivakarthikeyan Productions aims to continue presenting more original and heartfelt independent musical works in the future, creating a vibrant platform for unique voices and enriching musical expressions.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் 'வேலும் மயிலும்

 *சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் 'வேலும் மயிலும்'!*



சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார். 


புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும்  அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான 'தாய் கிழவி' திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 


தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, 'வேலும் மயிலும்' வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். 'தாய் கிழவி' மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் 'சேயோன்' படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார். 


தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள 'வேலும் மயிலும்' பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.


இந்தப் பாடலின் ஆன்மீக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது. 


இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.