Featured post

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது

 *ZEE5,   அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும்  ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!*   ~ அனுராக் காஷ்யப் எழுதி, ...

Monday, 9 February 2026

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது

 *ZEE5,   அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும்  ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!*

 


~ அனுராக் காஷ்யப் எழுதி, இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம்,  பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர்  ஆகிறது~

~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~

இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த  ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல்   இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர்  ஆகிறது.


‘கென்னடி’  மும்பையை மையமாகக் கொண்டு,  நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின்  மையம்.


படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.


கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய  கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம்  இவை அனைத்தும் இணைந்து,  தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.



டிரெய்லர்: https://youtu.be/ZNZuX5zSHYw


படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,

“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை   உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”



நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,

“கென்னடி பாத்திரத்தில்  நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும்  நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”



சன்னி லியோன் கூறியதாவது..,


“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”



20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள். 


ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.


Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

Natural Star Nani's Never-Before-Seen Intro Song Aaya Sher Shot In Style For The Paradise – Anirudh's Electrifying Mass Banger

 Natural Star Nani's Never-Before-Seen Intro Song Aaya Sher Shot In Style For The Paradise – Anirudh's Electrifying Mass Banger



Natural Star Nani is turning up the heat on the sets of his ambitious film The Paradise, currently filming at a rapid speed in Hyderabad. Directed by Dasara fame Srikanth Odela and produced by Sudhakar Cherukuri under the SLV Cinemas banner, the period action drama is building massive hype with its latest update from the shoot floor.



The team has started filming for Nani's explosive introduction song Aaya Sher on a colossal set, swarming with hundreds of dancers. Rockstar Anirudh Ravichander delivered an electrifying mass banger packed with grit and high-adrenaline vibes, perfectly tuned to Nani's raw, uninhibited dance style.


Choreographer Sudhan Master, who recently worked for Vijay's Jana Nayagan, brings sharp, dynamic formations and fierce visual flair to elevate the song into a goosebump-inducing spectacle. Nani's trademark madness and dynamic moves promise to dominate the screen, marking this as one of the film's biggest highlights.


Director Srikanth Odela is crafting The Paradise with prestigious attention to detail in every aspect of production. The film features Mohan Babu, Bollywood actor Raghav Juyal, and Sampoornesh Babu in prominent roles.


Ch Sai handles cinematography, Navin Nooli serves as editor, and Avinash Kolla leads production design. The movie is set for a pan-world release in eight languages.


Cast: Nani, Mohan Babu, Raghav Juyal, Sampoornesh Babu


Technical Crew:

Writer, Director: Srikanth Odela

Producer: Sudhakar Cherukuri

Banner: SLV Cinemas

DOP: Ch Sai

Music: Anirudh Ravichander

Editing: Navin Nooli

Production Designer : Avinash Kolla

PRO: Sathish S2 Media 

Marketing: First Show

ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு

 *ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!*







*ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!*


*ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த “மை லார்ட்” படக்குழுவின் நேரடி சந்திப்பு!*


ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,  


மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும். 

ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.  


சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தாலும் அதை சாப்பிடக் கூடாது. 


“மை லார்ட்”  படம், எல்லாருமே ரசித்து, சந்தோஷமாக, ரொம்ப என்ஜாய் பண்ணி, எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய  படமாக இருக்கும். ஆனால்  அதே நேரத்தில்,  மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும்  படமாகவும் இருக்கும். 


சசி சாருக்கு  “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்”  மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி.




இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,  

மை லார்ட்  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதாவது வேலண்டைன்ஸ் டே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் பலர், “வேலண்டைன்ஸ் டேக்கும் ‘மை லார்ட்’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள். உண்மையில் இந்த படத்துக்கும் வேலண்டைன்ஸ் டேவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஏனென்றால் மை லார்ட் என்பது சசிகுமார் மற்றும் சைத்ரா (முத்துசிற்பி, சுசீலா) ஆகியோரின் காதல் நிறைந்த ஒரு தம்பதியரை மையமாக கொண்ட படம்.


ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்த படத்தின் மையம். கணவன்–மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான், உலகத்திலேயே மிகப் பெரிய காதல். அதனால் மை லார்ட்  வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது.  இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.

நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே காதல் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில், இந்த படம் கணவன்–மனைவிக்கிடையிலான காதலை பேசுகிறது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் சொல்லும் படமாக இருக்கும்.


இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல; சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர். அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.


அதேபோல் சைத்ரா இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மை லார்ட்  மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி. அந்த வகையில், அவரையும் தமிழ்நாடு வாழ வைக்கும்.


என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். 


பெரும் உழைப்புடன், முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழ வைக்கும். அனைவருக்கும் நன்றி.  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பாருங்கள்.



நடிகை சைத்ரா பேசியதாவது..,  

இந்தப்படம் மிக மிக இனிமையான அனுபவம், இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பங்குபெற்ற படத்தில் நானும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஷான் ரோல்டன் இசை அனைவருக்கும் பிடிக்கும். இப்பட பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தில் காதல் இருக்கிறது. சசிகுமார் மிக ஜாலியானவர். அவர் இயக்குநர் என்பதால்,  அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை. பொலிடிகல் டிராமாவும் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பயனுள்ள படமாக இருக்கும்.  

எல்லோரும் கண்டிப்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பார்த்து ஆதரவு தாருங்கள்.


நடிகர் சசிக்குமார் பேசியதாவது…,  

டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றி சொன்ன மாதிரி, இந்த படமும் உங்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் படம். என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள். உங்கள் குடும்பத்தோட, குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம். இளம் தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம். இப்போ உள்ள ஜெனரேஷன், வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,

“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம். ராஜுமுருகன் சார் ஸ்டைலில், கலகலப்பான காமெடியோட படம் நகரும். உங்களை சோகப்படுத்த மாட்டோம். அழ வைக்க மாட்டோம். சிரிக்க வைப்போம்… சிந்திக்க வைப்போம்.


நாயகி சைத்ரா, கர்நாடகாவிலிருந்து வந்து தமிழில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். “கன்னடத்தில் சிறந்த நடிகையாக இருப்பதுபோல, தமிழிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக வளர்வார். மை லார்ட் அவருக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும். 


படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி வந்து கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்தார்.

இசையமைப்பாளர் ஷான் குரல் எல்லோரையும் கவரும் தன்மை கொண்டது. காதல், சோகம், சந்தோஷம் – எந்த உணர்வாக இருந்தாலும் அவரது குரல் மனதில் நிற்கும். டூரிஸ்ட்  ஃபேமிலிக்குப்  பிறகு மீண்டும் இணைவது மிகுந்த சந்தோஷம்.  பிப்ரவரி 13-ஆம் தேதி, சமயத்தில் மை லார்ட் படம் வருகிறது அனைவரும் பார்த்து கொண்டாடுங்கள்.

ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,  அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன். 


இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.


“மை லார்ட்” திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

Media Relations is about more than just news; it’s about nurturing dreams

 Media Relations is about more than just news; it’s about nurturing dreams.





For the first time in India, I am proud to handle the PR for 34 films simultaneously, all born from the brilliance of Chezhiyan’s The Film School. 


Witnessing the birth of 34 unique visions simultaneously is a moment of pure pride and joy.


Sincere thanks to The Film School Director 

Chezhiyan and Directors of the 34 films for trusting me with this monumental responsibility. 🙏

ஊடகத் தொடர்பு என்பது செய்திகளைப் பற்றியது மட்டுமே அல்ல; அது கனவுகளை வளர்ப்பதைப் பற்றியதும் தான்

 ஊடகத் தொடர்பு என்பது செய்திகளைப் பற்றியது மட்டுமே அல்ல; அது கனவுகளை வளர்ப்பதைப் பற்றியதும் தான்.





இந்தியாவிலேயே முதல் முறையாக, செழியனின் தி ஃபிலிம் ஸ்கூலில் தேர்ச்சி பெற்ற படைப்பாளிகளின் 34 திரைப்படங்களுக்கு ஒரே நேரத்தில் மக்கள் தொடர்புப் பணிகளைக் கையாள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.


34 தனித்துவமான படைப்புகள் ஒரே நேரத்தில் உருவாவதைக் காண்பது, மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் ஒரு தருணம்.


இந்த மகத்தான பொறுப்பை என் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைத்த தி ஃபிலிம் ஸ்கூல் இயக்குநர் செழியனுக்கும், 34 இயக்குநர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 🙏

Sunday, 8 February 2026

பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் 'மின்னலே' படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்

*பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் 'மின்னலே' படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்*




*25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் மின்னலே*


சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் - ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் 'மின்னலே'. கடந்த தசாப்தங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆவது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் மாதவன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான 'மின்னலே ' திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார்.


மின்னலே - இந்த திரைப்படத்தின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமானார் என்பதும், 'அலைபாயுதே' படத்தின் வெற்றிக்குப் பிறகு மாதவன் நடித்த திரைப்படம் இது என்பதும், இப்படத்தில் அப்பாஸ் -ரீமாசென் - விவேக் - ஆகியோர் நடித்திருக்கிறார்கள் என்பதும், இந்தப் படம் 2001 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது என்பதும், இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் என்பதும் கவனிக்கத்தக்க அம்சங்களாகும். 25 ஆண்டுகள் கழித்து மின்னலே படம் வெளியாவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

*“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

















Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்


தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,

நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.  மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள். மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு குழு அனைவருக்கும் என் நன்றி. இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.


இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற 'ஆக்ஷனை' மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, 'பூக்கி' படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து 'ஆக்ஷன்-கட்' சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.


இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி. விஜய் ஆண்டனி சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான் “தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்” என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்த படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா —இந்த மூன்று பேரும் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்த படம் இப்படியாக உருவாகியிருக்காது. இயக்கக் குழு, இசை, எடிட்டிங், உடை வடிவமைப்பு, தயாரிப்பு குழு, அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள்.

அதனால்தான் இந்த படம் இவ்வளவு வேகமாகவும் அழகாகவும் உருவானது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.


நடிகர் அஜய் திஷான் பேசியதாவது..,  

இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நடந்திருக்கிறது. கதையை முதலில் படித்தபோதே, இந்த படம் மிகுந்த கவனத்தோடு, ஆழமான எழுத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் உணர்ந்தேன். உண்மை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த கதையே என்னை மிகவும் பாதித்தது. இயக்குநர் கணேஷ் சந்திரா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவருடன் வேலை செய்வது மிகுந்த ஊக்கமும் நிம்மதியும் தரும் அனுபவமாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப்படங்கள் வேலை செய்ய ஆசைப்படுகிறேன். படத்தில் உடன் நடித்த அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். தனுஷா நல்ல தோழியாக மாறி விட்டார். இந்த படத்தின் குழு அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாகவே இருந்தார்கள். அவர்களில்லாமல் இந்த படம் இவ்வளவு சீக்கிரமாகவும் ஒழுங்காகவும் முடிந்திருக்காது. உடை வடிவமைப்பாளர் மாளவிகா அவர்களுக்கும், நடன இயக்குநர் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். இந்த படம் எனக்கு ஒரு வேலை போல அல்ல; இன்னொரு வீட்டில் இருப்பது போலவே இருந்தது. அந்த அளவுக்கு அன்பும், நம்பிக்கையும் இந்த குழுவில் இருந்தது. என்னை ஆரம்பத்திலிருந்தே நம்பி ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படம் உங்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பேசியதாவது…,

இந்த படம் உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷல். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இயக்குநர் மிகப்பெரிய  திறமைசாலி. மிகவும் தனித்துவமானவர். நடிகர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரை கண்டுபிடித்தற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. அஜய் ஒரு உதவி இயக்குநர் போல தான் இருந்தார். அவர் திறமை பார்த்து ஆச்சரியாமாக இருந்தது. விஜய் ஆண்டனி சார் பாடலில் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம். ஆனால் இந்தப்படத்தில் நானும் இருப்பது பெருமை. தமிழில் எப்போது நடித்தாலும் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.


நடிகை தனுஷா பேசியதாவது..,

முதலில், இவ்வளவு பெரிய படத்தில் என்னை நம்பி, எனக்கு வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நாயகியாக இது எனது முதல் திரைப்படம். அதுவும் இவ்வளவு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம். நான் உண்மையிலேயே மிகுந்த அதிர்ஷ்டசாலி. இயக்குநர் கணேஷ் சந்திரா சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு கலைஞருக்கு மிகவும் முக்கியமானது, சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் நடிக்க முடிவதுதான். அந்த நிம்மதியை முழுமையாக எனக்கு அளித்தவர் கணேஷ் சந்திரா சாரும், இந்த முழு குழுவும் தான். எத்தனை சிறிய காட்சிகளுக்காக எத்தனை முறை எடுத்தாலும், ஒரு நொடி கூட முகம் சுளிக்காமல் எப்போதும் ஊக்கம் அளித்தார்கள். அதற்காக என் மனமார்ந்த நன்றிகள். என்னுடன் நடித்த அஜய் — உங்களுக்கும் என் நன்றி. மிகவும் கனிவாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொண்டதால் இப்படத்தில் நடிக்க எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அஷ்வின், லக்ஷ்மி அம்மா — அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். இந்த திரைப்படத்தை பிப்ரவரி 13 அன்று, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்கில் கண்டிப்பாக பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.


எழுத்தாளர் புதிய பரிதி பேசியதாவது..,

இந்த படம் ஒரு சாதாரண முயற்சி அல்ல. கணேஷ் சந்திராவிடம் நான் கதையை ஒரு படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட கொடுக்கவில்லை. “படிக்க ஒரு ஸ்கிரிப்ட் கொடுங்கள்” என்றார். அதைப் படித்த இரண்டே நாளில் படம் உறுதியானது — அது எனக்கு ஒரு மேஜிக் மாதிரி இருந்தது. இந்த படத்தில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பலம் — கணேஷ் சந்திரா சாரும் , தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாரும் தான். இருவரும் கதையை அப்படியே நம்பி, அதற்கு உண்மையாக நின்றார்கள். “ஸ்கிரிப்ட் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுதியாக நின்றார்கள். ஒரு முதல் பட எழுத்தாளருக்கு இப்படி ஒரு வாய்ப்பு  கிடைப்பது அரிது. நான் எழுதும்போதே இந்த படம் என் மனதில் இசையோடு, எடிட்டிங்கோடு ஓடிக்கொண்டிருந்தது. அந்த உணர்வை இசை மூலமாகவும், எடிட்டிங் மூலமாகவும் அப்படியே திரையில் கொண்டு வந்ததற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இந்த படத்தில் இசை என்பது பின்னணி மட்டும் அல்ல, பல காட்சிகளுக்கே மாற்றாக இசை பேசுகிறது. அது இந்த படத்தின் மிகப் பெரிய பலம். இயக்கக் குழு, உடை வடிவமைப்பாளர் மாளவிகா, நடன இயக்குநர், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் ஒரு குழுவாக அல்ல — ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள். உண்மையிலேயே இந்த படம் எனக்கு ஒரு வேலை போலவே தோன்றவில்லை. ஒரு குடும்பத்தோடு இருந்து செய்த அனுபவமாகத்தான் இருந்தது. இந்த பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘HALF: The Chronicles of Two Half-Blooded Vampires’

 *பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘HALF: The Chronicles of Two Half-Blooded Vampires’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டரை வெளியிட்டது!*



பிரம்மாண்டமான த்ரில்லர் வேம்பயர் கதைக்காக ’கோலம்’ படஅணியினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கதையில் நடிகர்கள் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கொரியோகிராபியை ஹாலிவுட் ஸ்டண்ட் எக்ஸ்பர்ட் வெரி ட்ரை யூலிஸ்மேன் கவனிக்கிறார். 


பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேம்பயர் த்ரில்லர் திரைப்படமான ‘HALF’-ன் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. ‘பிரணயம்’, ‘பரிவார்’, ‘கோலம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அன்னே சஞ்சீவ் மற்றும் சஞ்சீவ் பிகே இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ’கோலம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சம்ஜத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வேம்பயர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அடையாளம், இரட்டைத் தன்மை, உயிர்வாழ்தல் மற்றும் பழிவாங்குதல் போன்றவற்றை ‘The Chronicles of Two Half-Blooded Vampires’ என்ற படத்தின் டேக்லைன் மூலம் பேசும். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பார்வை போஸ்டரின் அடர் நிறங்களும், காட்சிகளும் படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்துகிறது.


இந்த போஸ்டரில் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நடிகர் அப்பாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் கம்பேக் கொடுக்கிறார். ’கண்ணெழுதி பொட்டும் தொட்டு’, ’கதா’, ‘கிரீட்டிங்ஸ்’ போன்ற மலையாள திரைப்படங்கள் மூலம் கேரள ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் அப்பாஸ். அவரது நடிப்பு இந்த கதைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அவரது கதாபாத்திரம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஆக்ஷன் கொரியோகிராபர் வெரி ட்ரை யூலிஸ்மேன் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளது இந்த படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம். இது படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. 

 

’ஆட்டம்’, ‘வேல’, ‘மதுரம்’ போன்ற படங்களில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் மகேஷ் புவனேந்த் மற்றும் ‘2018’, ‘அய்யப்பனும் கோஷியும்’ மற்றும் ‘லூசிஃபர்’ படங்களில் பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் மோகன்தாஸ் ஆகியோர் இந்தப் படங்களில் பணியாற்றுகின்றனர். ’மேட்னி’, ‘கொண்டையும் பூணூலும்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாப்பினு, ‘ரோர்ஷாக்’, ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ போன்ற படங்களுக்கு இசையமத்த மிதுன் முகுந்தன் ஆகியோர் பணிபுரிகின்றனர். ’மாலிக்’, ’உண்டா’ மற்றும் ’இஷ்க்’ போன்ற படங்களில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் விஷ்ணு கோவிந்த்  இந்தப் படத்தின் ஆடியோகிராஃபியை கையாள்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் சம்ஜத் மற்றும் பிரவீன் விஸ்வநாத் இணைந்து எழுதியுள்ளனர். 


கதையின் வில்லனாக ரஞ்சித் சஜீவ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். நடிகர் அப்பாஸின் கம்பேக்கும் கதைக்கு வலுசேர்க்கும். 


பான்-இந்திய அளவில் பன்மொழிகளில் பிரம்மாண்டமான திரைப்படமாக ’HALF’ உருவாகியுள்ளது. பல்வேறு லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள ’HALF’ வேம்பயர் ஜானரில் மலையாள சினிமாவைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் முக்கியமான படமாக வெளியாக இருக்கிறது. 


இருண்ட சூழல், பிரம்மாண்டம் மற்றும் வலுவான தொழில்நுட்பக்குழுவுடன் ‘HALF’ மலையாள சினிமாவில் இருந்து ஒரு துணிச்சலான பான்-இந்திய படமாக உருவாகியுள்ளது. ஆக்ஷன், ஹாரர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் ஆகியவற்றுடன் ரசிகர்களுக்கு மறக்க இயலாத சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.


*தொழில்நுட்பக்குழு விவரம்:* 


தலைமை இணை இயக்குநர்: ராஜேஷ் குமார் கேஜி, 

இணை இயக்குநர்: ஜிபின் ஜாய், 

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: பினு முரளி,

ஒப்பனை: நரசிம்மசாமி, 

ஆடை வடிவமைப்பு: தன்யா பாலகிருஷ்ணன், 

புரோஸ்தெடிக்ஸ்: சேது சிவானந்தன், 

விஷுவல் எஃபெக்ட்ஸ்: ப்ராமிஸ் ஸ்டுடியோஸ், 

படங்கள்: சினாட் சேவியர், 

பப்ளிசிட்டி: டிசைன்ஸ் டிவிட்டி.

Fragrant Nature Film Creations Releases the Second Poster of HALF: The Chronicles of Two Half-Blooded Vampires

 Fragrant Nature Film Creations Releases the Second Poster of HALF: The Chronicles of Two Half-Blooded Vampires*



_The Golam team reunites for this large-scale vampire thriller starring Amala Paul, Ranjith Sajeev, Aiswarya Raj and Abbas; features Action Choreography by Hollywood stunt expert Very Tri Yulisman_


Fragrant Nature Film Creations has released the new poster of its upcoming vampire thriller HALF, offering a striking glimpse into the dark and intense world of the film. HALF is produced by Anne Sajeev and Sajeev PK under the banner of Fragrant Nature Film Creations, known for Pranayam, Pariwar, Golam; and Directed by Samjad, who made a strong and impressive debut with Golam. With HALF, the production house continues its commitment to genre-driven storytelling. Rooted in vampire mythology, HALF explores themes of identity, duality, survival, and vengeance, with the tagline “The Chronicles of Two Half-Blooded Vampires” capturing the essence of the story. The newly released poster is marked by bold colours and striking imagery, visually reflecting the film’s themes of transformation and inner conflict, while firmly establishing its dark, atmospheric tone.


The poster prominently features Amala Paul, Ranjith Sajeev, and Aiswarya Raj, while also highlighting the presence of renowned South Indian actor Abbas, marking his much-anticipated return to cinema after a long hiatus. Widely known for his work across South Indian cinema, Abbas is also familiar to Malayalam audiences through films such as Kannezhuthi Pottum Thottu, Kadha, and Greetings. His return adds a strong emotional and dramatic layer to the ensemble, sparking curiosity around his role in the narrative. Another key highlight of the project is its international collaboration, with action choreography by Very Tri Yulisman, whose work spans major Hollywood productions, lending the film a distinctive global edge.

 

The film also features award-winning Indian technicians, including National Award-winning editor Mahesh Bhuvanend, known for Aattam, Vela, and Madhuram, and production designer Mohandas, whose work in 2018, Ayyappanum Koshiyum, and Lucifer has been widely recognised.


Cinematography is handled by Pappinu, known for films such as Matinee and Konthayum Poonoolum. Music is composed by Midhun Mukundan, whose work in Rorschach and Abraham Ozler received wide acclaim. The screenplay is co-written by director Samjad and Praveen Viswanath.


Ranjith Sajeev reunites with Samjad as one of the half-blooded protagonists, while Aiswarya Raj essays the other central role. Amala Paul appears in a pivotal role, adding further depth and intrigue to the story. Abbas’ return further strengthens the cast, bringing added weight and anticipation to the film’s ensemble.


Conceived as a large-scale pan-Indian cinematic spectacle, HALF is designed for a wide theatrical experience across multiple languages and regions. Shot extensively across varied locations, the film blends scale, atmosphere, and visual grandeur to create an immersive world rooted in vampire mythology. With its ambitious canvas and high production values, HALF positions itself as a major genre film aimed at audiences across India, building strong anticipation beyond the Malayalam film landscape.


With its dark, atmospheric premise, ambitious scale, and strong technical backing, HALF positions itself as a bold and exciting pan-Indian addition to Malayalam cinema, blending action, horror, and emotional depth into a visually striking cinematic experience. The film is set to be released in Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada.


The team also has National Award-winning sound designer Vishnu Govind, known for Malik, Unda, and Ishq, handling the Audiography, Chief Associate Director Rajesh Kumar KG, Associate Director Jibin Joy, Production Controller Binu Murali. Makeup is handled by Narasimhaswamy, Costume Design by Dhanya Balakrishnan, Prosthetics by Sethu Shivanandan, Visual Effects by Promice Studios, Stills by Sinat Savier, and Publicity Designs by Tivity.