Featured post

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!  ...

Thursday, 10 July 2025

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!  



ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லர் வெளியானது !!  


இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில்,  தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது.  நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும்  ஜூலை 18, 2025 அன்று முதல் ZEE5 இல்  ஸ்ட்ரீமாகவுள்ளது. 


புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன் கலக்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.  தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன்,   15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன்  உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV  நடித்திருக்கிறார். 


சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.


அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார்.  “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார்.  உணர்வுப்பூர்வமான கதையுடன்,  சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 


ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

https://www.youtube.com/watch?v=69rZbS_JnBk

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மார்ஷல்

 *ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மார்ஷல்* 








*டாணாக்காரன் இயக்குநருடன் கார்த்தி இணையும் மார்ஷல் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது*


*ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்*


*கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது*


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்ச‌ன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு "மார்ஷல்" எனத் தலைப்பிட்டுள்ளனர். 


’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் (டாணாக்காரன் இயக்குநர்) மற்றொரு லட்சிய முயற்சியாக இந்தப் படம் அமைய இருக்கிறது.இன்று (வடபழனி, பிரசாத் ஸ்டுடியோவில்) நடைபெற்ற மார்ஷல் பட பூஜை நிகழ்ச்சியில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மத்தியில் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டனர்.


மார்ஷல் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு போன்ற சிறந்த திறமையாளர்கள் பணிபுரிய உள்ளனர்.


இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு மற்றும் இஷான் சக்சேனா தலைமையிலான ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் 1960-களின் ராமேஸ்வரத்தை மீண்டும் உருவாக்கும் விரிவான செட்கள் இடம்பெற இருக்கிறது.


மார்ஷல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Actor Karthi's Marshal shooting takes off with ritual pooja ceremony

 *Actor Karthi's Marshal shooting takes off with ritual pooja ceremony*








Dream Warrior Pictures, in collaboration with IVY Entertainment has announced a grand period action drama titled Marshal, set in 1960’s at Rameshwaram. The film marks another ambitious venture for actor Karthi and director Tamizh (Taanakkaran fame) following acclaimed projects like Theeran Adhigaaram Ondru and Kaithi.


At the auspicious puja event held today at ( Prasad Studios, Vadapalani ) the producers unveiled the title of the movie bringing together the film’s cast and crew in a celebratory atmosphere. 


Marshal features a star-studded cast including Kalyani Priyadarshan, Sathyaraj, Prabhu, Lal, John Kokken, Easwari Rao, and others. The technical crew boasts top talents like music composer Sai Abhyankar (his first period film), cinematographer Sathyan Sooryan, editor Philomin Raj, and production designer Arun Venjaramoodu.


Produced by SR Prakash Babu and SR Prabu of Dream Warrior Pictures, and co-produced by IVY Entertainment led by its Chairman Ishan Saksena, the film will feature elaborate sets recreating 1960s Rameshwaram. Marshal is planned as a pan-Indian release in Tamil, Telugu, Malayalam, Kannada, and Hindi.

பறந்து போ" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

 "பறந்து போ" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!








இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பையும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியையும் பெற்றுள்ளது, மகிழ்ச்சியான இத்தருணத்தில்  உலகெங்கிலும் "பறந்து போ" திரைப்படத்தை வெளியீடு செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தனது அலுவலகத்தில் படக்குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்.


இக்கொண்டாட்டத்தில் இயக்குநர் ராம், நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோருடன் ஜியோ ஹாட்ஸ்டாரின் பிரதீப் மில்ராய் பீட்டர், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸின் கருப்புச்சாமி மற்றும சங்கர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இந்த நிகழ்வில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ்

 *சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?*



'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' MCU உலகில் சில்வர் சர்ஃபர் மற்றும் கேலக்டஸுடன் மீண்டும் நுழையவிருக்கும் நிலையில், தமிழ்- தெலுங்கு என தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை பார்க்கலாம். 


*மிஸ்டர் ஃபெண்டாஸ்டி கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா (ரீட் ரிச்சர்ட்ஸ்):*


கூர்மையான, பல அடுக்குகளுடன் உணர்வுப்பூர்வமான இந்த வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூர்யா மிகப்பொருத்தமானவர். இந்த கதாபாத்திரத்திற்கு லோகேஷ் கனகராஜ் இன்னும் ஆழமான மற்றும் கிரே ஷேட்ஸ் கொடுப்பார். 


*இன்விசிபிள் வுமன் கதாபாத்திரத்தில் நயன்தாரா (சூசன் ஸ்டோர்ம்):*


நிதானமான, கட்டளையிடும் மற்றும் வலுவான நயன்தாரா, அமைதியாக உறுதியுடனும் கட்டுப்பாடுடனும்  அணியை வழிநடத்த முடியும்.


*ஹியூமன் டார்ச் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா (ஜானி ஸ்டோர்ம்):*


பொறுப்பற்ற, வசீகரமான, வீரம் மிக்க விஜய் -ஜானி ஸ்டோர்ம் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போவார்.


*தி திங் கதாபாத்திரத்தில் ஆர். மாதவன் (பென் கிரிம்):*


பென் கிரிம் கதாபாத்திரம் பரிதாபம், வலிமை மற்றும் வலி இவற்றை கொண்டது. இவை மூன்றையும் மாதவன் தனது நடிப்பில் கொண்டு வர முடியும். அழகான அதே சமயம் சோகமான பின்னணியும் அவரது கதாபாத்திரத்திற்கு இருக்கும்.


*கேலக்டஸ் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்:*


கேலக்டஸ் வில்லன் மட்டுமல்ல! அவரது இருப்பு கடவுளை போன்றது. பிரபஞ்சத்தின் அச்சுறுத்தலையும் ஆழத்தையும்  கோபத்தையும் கடத்த பிரகாஷ்ராஜ் தான் சரியான தேர்வு. 


*சில்வர் சர்ஃபர் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி:*


தெய்வீக தன்மையையும், ஆழமான உணர்வையும் சில்வர் சர்ஃபர் கதாபாத்திரத்தில் கொண்டு வர நடிகை சாய்பல்லவி சரியான தேர்வாக இருப்பார்.  சில்வர் சர்ஃபரை ஒரு வீழ்ந்த தேவதையாக, அழகான, குற்ற உணர்ச்சி கொண்ட, புரிந்துகொள்ள முடியாத சக்திவாய்ந்தவராக சாய்பல்லவி திரையில் கொண்டு வருவார்.

South Stars x Marvel: If Lokesh Kanagaraj Directed Fantastic Four, Fantastic Four's cast would look like this

 *South Stars x Marvel: If Lokesh Kanagaraj Directed Fantastic Four, Fantastic Four's cast would look like this*



With Fantastic Four about to re-enter the MCU with a female Silver Surfer and Galactus, we imagined a grittier, rawer version set in South Indian cinema, helmed by none other than Lokesh Kanagaraj. Here’s how the cosmic quartet, and their enemiesm would look in a Tamil-Telugu crossover blockbuster.


*Suriya as Mr Fantastic (Reed Richards)*

Sharp, layered, and emotionally burdened, Suriya could portray Reed as a man of science caught in a war for survival. Lokesh would give him depth and grey shades.


*Nayanthara as Invisible Woman (Susan Storm)*

Poised, commanding, and emotionally grounded, Nayanthara could lead the team with quiet intensity and a fierce sense of duty.


*Vijay Devarakonda as Human Torch (Johnny Storm)*

Reckless, charming, but secretly heroic, Vijay brings the exact kind of chaos and charisma Johnny Storm needs.


*R. Madhavan as The Thing (Ben Grimm)*

Ben Grimm needs pathos, strength, and pain...and Madhavan can deliver all three. His version would have a beautifully tragic backstory.


*Prakash Raj as Galactus*

Galactus isn’t just a villain — he’s a godlike presence. Prakash Raj could embody cosmic menace and intellectual depth, with that signature slow-burn anger.


*Sai Pallavi as Silver Surfer*

A perfect match. Sai brings ethereal presence and deep emotion to the role. She could portray the Silver Surfer as a fallen angel — graceful, guilt-ridden, and powerful beyond comprehension.

யாதும் அறியான்’ படத்தில் விஜயின் அரசியல் தொடர்பான காட்சிகள் வைத்தது ஏன்? - படக்குழு விளக்கம்

 ’யாதும் அறியான்’ படத்தில் விஜயின் அரசியல் தொடர்பான காட்சிகள் வைத்தது ஏன்? - படக்குழு விளக்கம்




விஜயின் அரசியல் காட்சிகளும், சிவகார்த்திகேயனின் பாராட்டும்! - அரசியல் மற்றும் திரையுலக கவனத்தை ஈர்த்த ‘யாதும் அறியான்’!


வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள  சைக்கோ திரில்லர் படம் ‘யாதும் அறியான்’ ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது!



தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் இரண்டையும் சற்று அதிர செய்திருக்கிறது ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலர். டிரைலரே இப்படி என்றால், படம் எப்படி இருக்கும்!, என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மக்கள் மனதில் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, டிரைலரில் 2026 ஆம் ஆண்டு விஜய் முதல்வராகி விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து, த.வெ.க தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் டிரைலரை கொண்டாடி வருவதோடு, மறுபக்கம் திரையுலக பிரபலங்கள் பலர் படத்தின் டிரைலரை பாராட்டி வருகிறார்கள்.


வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலர் மக்களிடம் பெற்ற வரவேற்பு மற்றும் திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கும் குறித்து ‘யாதும் அறியான்’ படக்குழு பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். 


படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எம்.கோபி படம் குறித்து கூறுகையில், “நான் விஜய் ரசிகன், சினிமாத்துறையில் பயணிக்கும் போது அனைவருக்கும் ஏற்படுவது போல தான், அவரை வைத்து ஒரு படம் இயக்க மாட்டோமா! என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்த நிலையில், 69 வது படத்துடன் அவர் நடிப்பதை நிறுத்துவிடப் போகிறார், என்பது அதிர்ச்சியாக இருந்தது. இனி அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், அவரைப் பற்றி பேசுவதற்கான இடம் படத்தில் அமைந்ததாலேயே அப்படிப்பட்ட காட்சிகளை வைத்தோம். அது முழுக்க முழுக்க கற்பனையானதே தவிர மற்றபடி அதில் வேறு எந்த அரசியல் பிரச்சாரமும் இல்லை.” என்றார்.


படத்தின் நாயகன் தினேஷ் கூறுகையில், “மிகப்பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், சினிமாவை பொறுத்தவரை இயக்குநர் என்ன சொன்னாரோ அதை கேட்டு மட்டுமே நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக எனது பின்புலத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையாக உழைத்திருக்கிறேன். சுமார் 15 நாட்கள் கடியான தூக்கம் இல்லாமல், உழைத்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன், என்று இயக்குநர் முடிவு செய்தப் பிறகு இந்த படத்திற்காக எப்படி எல்லாம் உழைக்க முடியுமோ அப்படி உழைத்திருக்கிறேன்.


படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்த விஜய் பற்றிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜயின் அரசியல் பிரச்சாத்திற்கான விளக்கம் போல் டிரைலர் அமைந்திருப்பதாகவும் பலர் சொல்கிறார்கள். ஆனால், முதலில் என் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் வேண்டுமா!, என்று நான் யோசித்தேன், தயங்கினேன். ஆனால், இயக்குநரின் கண்ணோட்டத்தை பொறுத்தவரை அந்த காட்சிகள் திரைக்கதையோடு பயணிப்பதால், ஒரு நடிகனாக அதை ஏற்றுக் கொண்டேன்.” என்றார்.


2024-ல் இருந்து 2026-க்கு கதை நகர்கிறதே படத்தில் டைம் டிராவலர் கான்சப்ட் எதாவது இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் எம்.கோபி, “படத்தில் டைம் டிராவலர் கான்சப்ட் எதுவும் இல்லை, ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள் இருக்கும், அது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும். மேலும், மற்ற சைக்கோ திரில்லர் படங்களுக்கும் எங்கள் படத்திற்கும் உள்ள வித்தியாசமே, டைம் டிராவல் போன்ற ஒரு பயணம் தான். அதை நாங்கள் எப்படி கையாண்டிருக்கிறோம், என்பதே மிக சுவாரஸ்யமாக இருக்கும்.” என்றார்.


சிவகார்த்திகேயனின் பாராட்டு குறித்து கூறிய நாயகன் தினேஷ், “படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், டிரைலர் மிகவும் நன்றாக இருக்கிறது, என்று சொன்னதோடு. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, என்று பல விசயங்களை பாராட்டி பேசினார். படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தவர் நடிகர்களின் நடிப்பு, மேக்கிங் என அனைத்தும் மிக சிறப்பாக இருப்பதாக கூறினார்.” என்றார்.


முதல் படம் நடிப்பு அனுபவம் குறித்து பேசிய நடிகர் தினேஷ், “சிறு சிறு வேடங்களில் சில படங்களில் நடித்தாலும், இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறேன். இது எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. ஒரு நண்பர் மூலமாக எனக்கு இயக்குநர் கோபி அறிமுகமானார். அவர் என்னை சந்தித்த போது, அவர் வைத்திருந்த கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன், என்று அவர் உணர்ந்ததால் மட்டுமே என்னை நடிக்க வைத்தார். நானும், 15 நாட்கள் தூக்கம் இல்லாமல் இரவு, பகலாக நடித்திருக்கிறேன். நிச்சயம் படம் மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.


இந்த தினேஷை ஹீரோவாக நடிக்க வைப்பதற்காக எழுதப்பட்ட கதையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் கோபி, “தினேஷை சந்திப்பதற்கு முன்பாகவே இந்த கதையை நான் எழுதி முடித்து விட்டேன். நானே தயாரிக்க முடிவு செய்த போது குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் பண்ண வேண்டும் என்ற திட்டத்தில் அதற்கான பணிகளை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது நண்பர் மூலம் தினேஷை சந்தித்தேன், அவருக்கு நடிக்க ஆர்வம் இருப்பதையும் அறிந்தேன், அவருடன் பேசிய போது, என் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அதை தொடர்ந்து அவரிடம் கதையை விவரித்தேன், அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே சமயம், அவரிடம் என் கதைக்கான ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன், மற்றபடி படத்தின் பொருளாதரம் தொடர்பாக உங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, என்று கூறிவிட்டேன்.


தினேஷும் தனது பணி உள்ளிட்ட அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு அறிமுக நடிகராக எங்களுடன் பயணித்தார். படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களுடன் மிக சாதாரணமாக பழகி, படக்குழு அனுபவித்த அனைத்த கஷ்ட்டங்களையும் அவரே அனுபவித்து, படத்தை 15 நாட்களில் முடிக்க உதவியாக இருந்தார். ஒரு நடிகராக நிச்சயம் இந்த படத்தில் அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், இந்த படமும் அவரது திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.” என்றார்.


பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார்.  இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


படம் முழுவதும் ஐந்து கதபாத்திரங்கள் மட்டுமே இடம் பெற்றாலும், அவர்களை கொண்டு திரைக்கதை மற்றும் காட்சிகளை திரில்லிங்காக மட்டும் இன்றி, சைக்கோ திரில்லர் பாணியில் இதுவரை பார்த்திராத ஒரு பாணி கையாளப்பட்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


தொழில்நுட்பக் குழு:


ஒளிப்பதிவு : எல்.டி

இசை : தர்ம பிரகாஷ்

கலை : நெல்லை லெனின்

பாடல்கள் : எஸ்.கே.சித்திக்

பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ்சுகு

சையாரா' படத்தை முதல் நாள் பார்க்க ஆர்வமாக உள்ளேன்"-சந்தீப் ரெட்டி வாங்கா

 *"சையாரா' படத்தை முதல் நாள்  பார்க்க ஆர்வமாக உள்ளேன்"-சந்தீப் ரெட்டி வாங்கா!*




இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா 'சையாரா'  படத்தை முதல் நாள் பார்க்க ஆவலாக உள்ளார் என பதிவிட்டுள்ளார் .யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து மோஹித் சூரி இயக்கியுள்ள படம் 'சையாரா'. 'அஹான் பாண்டே'  என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளனர். 'பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை' என்கிற மிகவும் பாராட்டப்பட்ட தொடரின் மூலம் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கொள்ளையடித்த' அனீத் பத்தாவை'  கதாநாயகியாக  தேர்வு செய்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. மேலும், அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். 


சந்தீப் ரெட்டி வங்கா சையாரா பட ட்ரெய்லரைப் பகிர்ந்துள்ளார். பிறகு X தளத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி , "ஒரு இதயப்பூர்வமான காதல் கதையை சாட்சியாகக் கொண்டுள்ளது சையாரா படம் . முதல் நாளில் இந்த படத்தை காண ஆர்வமாக காத்திருக்கிறேன். அறிமுக நடிகர்களுக்கு நல்வாழ்த்துக்கள் . இது முற்றிலும் மோஹித் சூரியின் மேஜிக் " என்று பதிவிட்டுள்ளார். 


இந்தப் பதிவிற்கு மோஹித் சூரி பதிலாக, "மிக்க நன்றி ! என்று பதிலளித்துள்ளார். 


அஹானும், அனீத்தும் அவரது சமூக வலைதள பக்கத்தில் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு நன்றி தெரிவித்தனர்."உங்களிடமிருந்து பெற்ற வாழ்த்து மிகவும் அர்த்தம் கொண்டது சார், மேலும் இதற்கு இரட்டிப்பு நன்றி என அஹான் பதிலளித்துள்ளார் . "இது மிகவும் அற்புதமானது! சந்தீப் சார் நன்றி.. எங்கள் பணி உங்களை அடைந்தது என்பது மிகவும் அர்த்தம் கொண்டது," என்று அனீத் பதிலளித்துள்ளார். 

சையாரா படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது .

Sandeep Reddy Vanga to watch Saiyaara on first day, Ahaan Panday & Aneet Padda react: 'This means the world..

 *Sandeep Reddy Vanga to watch Saiyaara on first day, Ahaan Panday & Aneet Padda react: 'This means the world...'*

Director Sandeep Reddy Vanga is eager to watch Saiyaara. The Yash Raj Films is produced movie and directed by Mohit Suri. Saiyaara launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine. The trailer of the film released earlier this week and Animal director Sandeep Reddy Vanga confessed he's excited to watch the film. 


Taking to X, Sandeep shared the trailer and wrote, "Witnessing a hindi heartland love story completely emphasizing on romance and drama. Waiting to watch it on the first day. Wishing the debutants all the very best :-) It's purely Mohith suri's Magic :-)". 

https://x.com/imvangasandeep/status/1942906880231391396


Mohit Suri responded to the post and said, "Thank you so much sir ! Means a lot #saiyaara." 


https://x.com/mohit11481/status/1942926985371779120


Ahaan and Aneet also expressed their gratitude towards Sandeep Reddy Vanga. They took to their social media platforms to respond to the filmmaker. "This means the world coming from you sir, thank you so much for being the maverick that you are, and double thanks for this @Sandeepreddy.vanga," Ahaan wrote. "This is just insane! Thank you Sandeep sir.. This means the world to me that my work reached you," Aneet shared. 


https://www.instagram.com/stories/ahaanpandayy/3673020108840494429/?hl=en

https://www.instagram.com/stories/aneetpadda_/?hl=en


Saiyaara is produced by Yash Raj Films’ CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.