Featured post

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர்

 ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில்,  நடன இயக்குநர் சதீஷ்  இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!  ரோமியோ பிக்சர்...

Tuesday, 11 February 2025

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர்

 ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில்,  நடன இயக்குநர் சதீஷ்  இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! 



ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக,  இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில்,  உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக்  இன்று வெளியாகியுள்ளது. 


காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலீஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், புதுமையான, மிகவும் வித்தியாசாமான ஃபர்ஸ்ட்லுக், பார்ப்பவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்திருப்பது, மேலும் படத்தின் ஆவலைத் தூண்டுகிறது. 


தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தை  தயாரித்துள்ளார். 


டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து, நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் விதத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். 


தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, “அயோத்தி” படப்புகழ் ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர்  ஜென் மார்டின்  இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார், எடிட்டராக RC பிரனவ் பணியாற்ற, மோகன் மகேந்திரன் கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைப்பயிற்சி - பீட்டர் ஹெயின். 


இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

Paridhabangal Productions presents “Oh God Beautiful” Title Teaser Revealed

 *Paridhabangal Productions presents “Oh God Beautiful” Title Teaser Revealed!!*

 


The title teaser of ‘Paridhabangal’ fame Gopi & Sudhakar starrer “Oh God Beautiful”, a fantasy entertainer, directed by debut filmmaker Vishnu Vijayan and produced by Paridhabangal Productions is out now. 


The film will be exceptionally unique from a regular commercial cinema and will revolve around the day-to-day life experiences of an ordinary middle-class family. Significantly, the film will reflect the routine incidents and moments from our daily lives, infused with comedic and fantastical elements. 


The expectations for the film had touched the pinnacle of excitement, among the fans and film enthusiasts from the day of announcement. Significantly, the recently unveiled title teaser has struck cyberspace and all platforms, thereby garnering a colossal response from the fans.


The story of ‘Oh God Beautiful’ revolves around two young men and the interesting incidents that occur in their lives. Gopi and Sudhakar, who have conquered the hearts of large-scale audiences through their fantabulous works in ‘Paridhabangal’ are playing the lead roles in this film. The film has an ensemble star cast including  Vinsu Sam, VTV Ganesh, Ramesh Khanna, Suresh Chakravarthy, Viji Chandrasekhar, Subatra Robert, Muruganandham, Prasanna, Yuvaraj Ganesan, Haritha, Goutham, Balakumaran, Guhan, Saathvick, Aazhiya, Benedict & others. 


The film has been shot in and around the exotic locales of Chennai. With the shooting wrapped up, the postproduction work is progressing briskly now. 

 

The official announcement on ‘Oh God Beautiful’ teaser, the first single and worldwide theatrical release will be revealed soon. 

Trailer: https://youtu.be/mllwRjIPBw8

*Technical Crew* 


Directors Of Photography -Shakthivel & KB Shree Karthik 

Editor - Sam RDX 

Songs - JC Joe 

Background Score & Additional Songs - Arun Gowtham 

PRO - Sathish (AIM)

பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட டைட்டில் டீசர் வெளியானது

 *பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட டைட்டில் டீசர் வெளியானது!!*



பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படமான “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. 


வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப  வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து  இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையான இந்தக் கதையில், ஃபேண்டஸி கலந்து ரசிகர்கள் சிரித்து மகிழும் வண்ணம் ஒரு அட்டகாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும். 


படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தும் விதமாக, நகைச்சுவை ததும்பிய அசத்தலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள டைட்டில் டீசர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.  


இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இவர்களுடன் VTV கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் & பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. 


“ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

Trailer : https://youtu.be/mllwRjIPBw8

தொழில்நுட்ப குழு விபரம் 

ஒளிப்பதிவு : சக்திவேல், K B ஶ்ரீ கார்த்திக்

இசை : JC ஜோ

பின்னணி இசை & கூடுதல் பாடல்கள் - அருண் கௌதம்

எடிட்டிங் : சாம் Rdx

மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)

Prime Video Announces the Global Premiere of the Second Season of its Acclaimed Tamil

 *Prime Video Announces the Global Premiere of the Second Season of its Acclaimed Tamil Original Crime Thriller Series Suzhal—The Vortex, Launching on February 28*





A gripping crime thriller, Suzhal—The Vortex Season 2 is set against the backdrop of the visually striking Ashtakaali festival as the story unfolds in the small fictional village of Kaalipattanam


Produced under the banner of Wallwatcher Films, written and created by Pushkar and Gayatri, and directed by Bramma and Sarjun KM, Suzhal—The Vortex Season 2 is a crime thriller interwoven with elements of family dynamics, love, sacrifice, and raw human emotions


The series features a talented ensemble cast, including Kathir and Aishwarya Rajesh in the lead along with Lal, Saravanan, Gouri Kishan, Monisha Blessy, Samyuktha Vishwanathan, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Rini, Kalaivani Bhaskar, and Ashwini Nambiar in pivotal roles, along with Manjima Mohan and Kayal Chandran making special appearances


Suzhal-The Vortex Season 2 is set to premiere exclusively on Prime Video in India and over 240 countries and territories worldwide on February 28


Mumbai, India—February 11, 2025—Prime Video, India’s most-loved entertainment destination, today announced February 28 as the premiere date for the second season of its critically acclaimed crime thriller Original series Suzhal-The Vortex. This new season of the award-winning series is set against the backdrop of the Ashtakaali festival, an annual festival held in the fictional village of Kaalipattanam in Tamil Nadu. Produced under the banner of Wallwatcher Films, written and created by Pushkar and Gayatri, and directed by Bramma and Sarjun KM, the series features a highly talented ensemble cast, including Kathir and Aishwarya Rajesh returning in lead roles, along with Lal, Saravanan, Gouri Kishan, Monisha Blessy, Samyuktha Vishwanathan, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Rini, Kalaivani Bhaskar, and Ashwini Nambiar in pivotal roles, along with Manjima Mohan and Kayal Chandran making special appearances. The second season picks up from the momentous climax of season one, with Nandini (Aishwarya) staring at an uncertain future in prison, while Sakkarai (Kathir) reaches a mystifying village with a sinister history. But an unexpected murder casts a dark shadow on the village and its natives, spreading far and wide. The series is set to exclusively premiere on Prime Video in India and over 240 countries and territories worldwide on February 28 in Tamil, Telugu, Hindi, Malayalam, and Kannada with English subtitles. 


A mind-bending suspense thriller, the second season of Suzhal—The Vortex delivers a gripping narrative with its compelling storyline and power-packed performances. Interwoven with themes of familial bonds, love, sacrifice, integrity, revenge, and fear, this season unravels a fresh mystery centered around a death that threatens to disrupt the intricate social fabric of Kaalipattanam while exposing the hidden fractures beneath its surface. Reflecting the depths of human psychology and the conflicts within oneself and with others, Suzhal—The Vortex Season 2 plunges audience into a world of secrets and lies, keeping them on edge with unexpected twists and turns until the very end.


“At Prime Video, our unrelenting endeavor is to create compelling yet authentic local stories that can resonate with a diverse audience around the world. The first season of Suzhal – The Vortex is a great testament to local stories breaking through at a global level, and winning appreciation from viewers and critics alike,” said Nikhil Madhok, Head of Originals, Prime Video, India. “We’re thrilled to bring a second season of this clutter-breaking series, as we build on this very successful collaboration with Wallwatcher Films. Experts at what they do, Pushkar and Gayatri are adept in crafting compelling narratives in the thriller-mystery genre with such rich cultural nuances, and we’re confident that the second season too will delight our audiences.”


Writers, creators, and producers of the series under the banner of Wallwatcher Films—Pushkar and Gayatri said, “The love and adulation that the first season of Suzhal—The Vortex received, followed by Vadhandhi—The Fable of Velonie, our second collaboration which garnered widespread acclaim as well, is a testament to how streaming has paved the way for local stories with a compelling narrative across formats, region- and language-agnostic. We crafted the second season that further expands the world of Suzhal—The Vortex, delving deeper into an even darker, mysterious, and absorbing crime that is entangled with the lives of the natives of a fictional village and the visually vibrant festival of Ashtakaali. Under the masterful direction of Bramma and Sarjun, the spectacular performances by Kathir, Aishwarya, and Lal, and the ensemble cast that includes an eclectic mix of experienced and fresh talent, the series highlights the versatility of local storytelling that can appeal to a wider audience. We are delighted to collaborate with Prime Video to build on the franchise, as they not only empower creators while offering a much larger canvas for their creative vision but are also instrumental in showcasing content to a global audience through their service.” 


XXX


ABOUT WALLWATCHER FILMS

Founded and run by Pushkar & Gayatri, Wallwatcher Films has produced three long-format tentpole shows, ‘Suzhal – The Vortex’ (Seasons 1 & 2) and ‘Vadhandhi’, for Amazon Prime Video and a short titled ‘The Mask’, which is a part of the Putham Pudhu Kaali anthology series. The company has also produced the feature film ‘Aelay’, available on Netflix. Wallwatcher Films is all geared up to release their next major project, Suzhal - The Vortex Season 2. Pushkar & Gayatri curate all the projects produced by Wallwatcher Films, and they mentor the projects as Creative Producers. Both seasons of Suzhal - The Vortex were written and created by Pushkar & Gayatri. https://www.wallwatcherfilms.com/ 


ABOUT PRIME VIDEO

Prime Video is a one-stop entertainment destination offering customers a vast collection of premium programming in one application available across several devices. On Prime Video, customers can find their favourite Indian and international original series, movies, TV shows, and more, across multiple languages – including Indian-produced Original series like Paatal Lok, Citadel: Honey Bunny, Mirzapur, Farzi, Panchayat, The Family Man, Dhootha, Jubilee, Dahaad, Made in Heaven, Suzhal – The Vortex, Inspector Rishi, Poacher, Indian Police Force, Rainbow Rishta, Wedding.con; Original movies like Maja Ma, Ammu, Mast Mein Rehne Ka; popular global Originals like Citadel, The Lord of The Rings: The Rings of Power, Citadel: Diana, Fallout, Reacher, The Boys, The Wheel of Time, Road House, The Idea of You; some of the biggest post-theatrical films; direct-to-service films such as Shershaah, Soorarai Pottru, Sardar Udham, Bawaal, Gehraiyaan, Jai Bhim, Jalsa, Sherni, Narappa, Sarpatta Parambarai, Kuruthi, Joji, Malik, Pippa, #HOME, Sharmajee Ki Beti, and many more of such titles. Additionally, Prime Video’s video entertainment marketplace, offers customers programming from partners such as Lionsgate Play, Discovery+ Crunchyroll, BBC Player, Sony Pictures – Stream, MGM+, FanCode, Chaupal, Manorama Max, Eros Now, Hoichoi, Anime Times, to name a few, via Prime Video add-on-subscriptions, as well as the option to rent movies, regardless of whether customers have a Prime membership or not. Customers can also go behind the scenes of their favourite movies and series with exclusive X-Ray access. Prime Video is one benefit among many that provides savings, convenience, and entertainment as part of the Prime membership. For more info visit www.amazon.com/primevideo.

பிரைம் வீடியோ அதன் மிகப் புகழ்பெற்ற தமிழ் ஒரிஜினல் கிரைம் த்ரில்லர்

 *பிரைம் வீடியோ அதன் மிகப் புகழ்பெற்ற தமிழ் ஒரிஜினல் கிரைம் த்ரில்லர் தொடரான சுழல்—தி வோர்டெக்ஸ் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28 அன்று உலகளவில் வெளியிடப்படுவதை அறிவித்தது.*




ஒரு பரபரப்பான மனதைக் கவரும் ஒரு க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி 

காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின் 

பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது, 


புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு,  பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2, குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு க்ரைம் திரில்லர் ஆகும்.



இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்கள் உட்பட லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் அடங்கிய ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்


சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.


மும்பை, இந்தியா—பிப்ரவரி 11, 2025—இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இன் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28 அன்று வெளியிடப்படவிருப்பதை இன்று அறிவித்துள்ளது. விருது வென்ற இந்தத் தொடரின் புதிய சீசனின் கதைக்களம், தமிழ்நாட்டில் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.  புஷ்கர்  (Pushkar) மற்றும்  காயத்ரி  ( Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு,  பிரம்மா ( Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில்,  கதிர் ( Kathir ) மற்றும்  ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க அவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர் மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோரும் மேலும்  (Lal, Saravanan, Gouri Kishan, Monisha Blessy, Samyuktha Vishwanathan, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Rini, Kalaivani Bhaskar, மற்றும் Ashwini Nambiar) மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ( Manjima Mohan and Kayal Chandran} ஆகியோரும் இணைந்து சிறப்பு வேடத்தில் தோன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியவேடங்களில் தோன்றி நடித்திருக்கிறார்கள். முதல் சீசனின்  அதிரடியான இறுதிக் கட்டத்தில் சிறையில் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கும் நந்தினி (ஐஸ்வர்யா) தோன்றும் காட்சியுடன் இந்த இரண்டாவது சீசன், அதே விறுவிறுப்புடன் தொடங்குகிறது, அதே சமயம் சக்காரி (கதிர்) ஒரு மர்மங்களால் சூழப்பட்ட வரலாற்றைக் கொண்ட கிராமத்தை சென்றடைகிறார். ஆனால் எதிர்பாராது நிகழும் ஒரு கொலையால் அந்த கிராமமும், கிராம மக்களும் அதிவேகமாகப் பரவும் இருண்ட சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள் இந்தத் தொடர் இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஆங்கில சப் டைட்டில்களுடன் ஒளிபரப்பாகிறது .


மனதை பதைபதைக்கச்செய்யும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரான சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2, அதன் அழுத்தமான கதைக்களம் மற்றும் ஆற்றல் மிக்க உணர்ச்சிகரமான நடிப்பாற்றலுடன் ஒரு விறுவிறுப்பான கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. குடும்ப உறவுகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல் மற்றும் அச்சம் போன்ற உணர்வு பூர்வமான கருப்பொருள்களுடன் பின்னிப்பிணைந்த இந்த சீசனின் கதைக்களம் சிக்கல் நிறைந்த புதிரான காளிபட்டணத்தின் சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு மரணத்தைச் சுற்றி வலம் வருகிறது. மேலும் ஒரு புதிய மர்மத்தையும் கட்டவிழ்க்கிறது. அதே வேளையில் அதன் ஆழத்தில் மறைந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத விசயங்களையும் வெளிக்கொண்டு வருகிறது . மனித உளவியலின் ஆழங்களையும், மற்றவர்களுடனான தனிநபர்களின் முரண்பாடுகளையும் பிரதிபலிக்கும் சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2, பார்வையாளர்களை எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் திடுக்கிடும் மாற்றங்கள் நிறைந்த ரகசியங்கள் மற்றும் பொய்களால் சூழப்பட்ட ஒரு உலகத்திற்குள் கொண்டு சென்று இறுதி வரை அவர்களை இருக்கையின் ஒரு விளிம்பில் வைக்கிறது.


"பிரைம் வீடியோவில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகைப்பட்ட பார்வையாளர்கள் அனைவரோடும் ஒரு சேர ஒத்திசைந்து ஈர்க்கக்கூடிய கருத்தாழமிக்க அதை சமயம் உண்மையான உள்ளூர் கதைகளை உருவாக்குவதே எங்களின் இடைவிடாத முயற்சியாக இருக்கிறது அந்த வகையில் உள்ளூர் கதைகள் உலக அளவிலான மக்களை சென்றடைந்து , பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுக்களை சுழல் - தி வோர்டெக்ஸ் முதல் சீசன், பெற்றிருப்பது அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.," என்று பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா, தலைவர் நிகில் மதோக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது "வால்வாட்சர் பிலிம்ஸ் உடனான இந்த வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கி, இந்த ஆரவாரமான தொடரின் இரண்டாவது சீசனை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். தங்கள் துறையில் தலைசிறந்த நிபுணர்களாக திகழும் புஷ்கர் மற்றும் காயத்ரி, இருவரும் மர்மம் நிறைந்த த்ரில்லர்- பிரிவில் கலாச்சாரப் பின்னணியோடு கதைகளை உருவாக்குவதில் விற்பன்னர்களாகத் திகழ்கிறார்கள் மேலும் இந்த இரண்டாவது சீசனும் எங்களின் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார். 


வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பின் கீழ் இந்தத் தொடரை உருவாக்கி வழங்கிய - கதாசிரியர்கள் , படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறினார்கள் “வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி ஐத் தொடர்ந்து எங்களது இரண்டாவது கூட்டு முயற்சியான சுழல் - தி வோர்டெக்ஸ் -முதல் சீசன் க்கும் கிடைத்த மாபெரும் வரவேற்பு, அன்பு மற்றும் பாராட்டுக்கள் ஒரு மனதை ஈர்க்கக்கூடிய கதைக்களத்தை கொண்ட உள்ளூர் கதைகள் வடிவங்கள், பிராந்தியங்கள் மற்றும் மொழியறிவையும் கடந்து அனைவரையும் சென்றடைய ஸ்ட்ரீமிங் எவ்வாறு வழிவகுத்தமைத்துத் தந்திருக்கிறது என்பதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் சுழல் - தி வோர்டெக்ஸ் உலகை மேலும் விரிவடையச்செய்யும் வகையில் ஒரு கற்பனைக் கிராமத்தின் பூர்வீக குடிகளின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு இருளடைந்த மர்மமான மற்றும் மனதை சில்லிடவைக்கும் ஒரு கிரைம் மற்றும் அஷ்டகாளி திருவிழாவின் கண்கொள்ளாக் காட்சிகளுடன் ஆழமாகச் சென்று அதன் இரண்டாவது சீசனை நாங்கள் வடிவமைத்தோம், பிரம்மா மற்றும் சர்ஜுனின் உன்னதமான இயக்கம், கதிர், ஐஸ்வர்யா மற்றும் லால் ஆகியோரின் அற்புதமான திறமை மிக்க நடிப்பாற்றல் ஆகியவற்றுடன் அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய திறமைகளின் மாறுபட்ட கூறுகளின் கலவையான திறமை மிக்க நடிகர்களின் குழுவோடும், இந்தத் தொடர் பரந்த அளவிலான பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையிலான உள்ளூர் கதைசொல்லலின் பல்துறைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  பிரைம் வீடியோவுடன் கூட்டணி அமைத்து இந்த கிளையுரிமையை கட்டியெழுப்புவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம், அவர்கள் இதன் மூலம் படைப்பாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், படைப்பாளிகளுக்கு தங்கள் உருவாக்கங்களை காட்சிப்படுத்த மிகப் பெரிய கேன்வாஸை வழங்குவதோடு அவர்களின் கருத்தாக்கங்களை தங்கள் சேவையின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” .

லியோ சிவக்குமார், பிரிகடா நடிப்பில் நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன்

 *லியோ சிவக்குமார், பிரிகடா நடிப்பில் நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய்” (Delivery Boy)*








அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 


இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் ,துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 


எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் பூஜை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் வழங்கும், கிருஷ்ணகுமார்

 *வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் வழங்கும், கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுத்து, இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிக்கும் ஜி.டி. நாயுடுவின் பயோபிக்கான 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆஃப் இந்தியா'!*

 




நம் நாட்டின் பொக்கிஷங்களாகக் கருதப்படும் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் இந்தியா இன்று சிறந்து விளங்குவதற்கு அளப்பறிய பங்களித்த பல மேதைகளைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் ஆகச்சிறந்த வழியாகவும் இந்த பயோபிக் படங்கள் இருக்கின்றன. கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கும், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜி.டி. நாயுடு- தி எடிசன் ஆஃப் இந்தியா’ படத்தில் நடிகர் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடிக்க இருக்கிறார். 


கடந்த 2022ல் வெளியான தேசிய விருது பெற்ற ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தினை தொடர்ந்து, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைகின்றன. கேன்ஸ் திரைப்பட விழாவில் ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் ப்ரீமியரின் போது அங்கு படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். இதுமட்டுமல்லாது, வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. இந்த வெற்றிதான் ‘ராக்கெட்ரி’ படக்கூட்டணி மீண்டும் இணைய காரணமாக அமைந்தது. 


ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்காமல் நடிகர் மாதவன் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' மற்றும் அவரது சமீபத்திய ரிலீஸான ‘சைத்தான்’ படத்தின் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. இப்போது, மாதவன் மற்றொரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க  உள்ளார். 'இந்தியாவின் எடிசன்' மற்றும் 'கோயம்புத்தூரின் வெல்த் கிரியேட்டர்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார்.


ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இந்த மாதம் படப்பிடிப்புத் தொடங்குகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கும் விதமாக ரியல் லொகேஷனில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசராக அரவிந்த் கமலநாதன் பணியாற்றுகிறார்.


பட டைட்டில் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியிடப்படும். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படுவார்கள்.

Varghese Moolan Pictures in association with Tricolour Films presents

 Varghese Moolan Pictures in association with Tricolour Films presents - 





Written & Directed by Krishnakumar Ramakumar


Actor Madhavan in biopic of ‘G.D. Naidu - The Edison of India’ 


Films honouring the unsung heroes and hidden treasures of the Indian subcontinent consistently resonate with audiences. Biopics, in particular, have become a powerful way for today's generation to learn about the iconic figures who have contributed to India's greatness across various fields. Actor Madhavan is poised to captivate film enthusiasts by portraying G.D. Naidu, the 'Edison of India,' in a new biopic written and directed by Krishnakumar Ramakumar.


Following their National Award for Best Feature Film of 2022 for "Rocketry: The Nambi Effect," Varghese Moolan Pictures and Tricolour Films are reuniting again. "Rocketry's" success began with its premiere at the prestigious Cannes Film Festival, where it received a standing ovation, and continued with both commercial success and critical acclaim. This success has generated considerable excitement for this continued collaboration.


Madhavan has consistently defied typecasting, showcasing his versatility as an actor. From the inspiring portrayal of Nambi Narayanan in "Rocketry: The Nambi Effect" to his menacing turn in "Shaitan," he has captivated audiences with diverse roles. Now, Madhavan is set to embody another compelling character: G.D. Naidu, the visionary and national hero known as the 'Edison of India' and the 'Wealth Creator of Coimbatore.' 


Filming of the Indian schedule begins this month in Coimbatore, G.D. Naidu's birthplace, with the production team committed to shooting entirely on location to capture the authenticity of his life and times. The untitled film will be produced by Varghese Moolan and Vijay Moolan of Varghese Moolan Pictures, and R. Madhavan and Sarita Madhavan of Tricolour Films. Aravind Kamalanathan takes on a dual challenge, serving as the film's cinematographer and creative producer.


The film's title will be revealed on February 18th, and the remaining cast and crew will be announced in the coming months.

காதல் என்பது பொதுவுடமை" படம் குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமான படம்

 *"காதல் என்பது பொதுவுடமை"  படம் குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமான படம் - நடிகை ரோகிணி*






*இப்படிப்பட்ட படங்களை எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டும். - நடிகர் மணிகண்டன்*



காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.


வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி,  இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன்,  இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் 

சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.





நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், 

"ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. சசி சார் அந்த நிகழ்வில் இருந்தார். நான் மேடையில் ஏறும்போது, சசி சாரைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். அங்க போனதும் நான் டோட்டலா பிளாங்க் ஆயிட்டேன். என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச முடில. அன்னிக்கு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா, என் ஃபர்ஸ்ட் தமிழ்ப்படத்தைப் பத்திப் பேசாம ஜெய்பீம் பத்தி என்னால கண்டிப்பா பேச முடியாது. அதனால் இன்னிக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார். நாங்க ரொம்பப் பெருமையா, சந்ரோஷமா, காதல் என்பது பொதுவுடைமை படத்தை உங்க முன்னாடி கொண்டு வர்றோம். ஓரிரு நாளுல, இந்தப் படம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்னு நாங்க நம்பலை. ஆனா நிச்சயம் நம்மைச் சுத்தியிருக்கிறவங்களைப் பத்தி நல்ல புரிதல் ஏற்படுங்கிறதை நாங்க நம்புறோம். அதைத்தான் இந்தப் படத்தோட வெற்றியா பார்க்கிறோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களான வினீத் சார், ரோகிணி மேம் கூட நடிக்கக் கிடைச்ச வாய்ப்பை ஆசிர்வாதமாக கருதுறேன். 



நடிகை ரோகிணி பேசுகையில், "இந்தப் படம் ஏன் 'கூடாது' என்பதுதான் படம் எடுக்கிறதுக்கான முதல் காரணம். 'இந்தப் படத்தை மலையாளத்தில் எடுங்க'ன்னு சொன்னபோது, 'இல்ல என் தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு'ன்னு ஒரு இயக்குநர் இப்படத்தைக் கொண்டு வந்திருக்காரு. இது சம்பந்தமான உரையாடலை எங்குத் தொடங்கவேண்டும் என யோசித்து, குடும்பத்தில் துவங்கணும் என ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கார். நான் குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்த பின், இந்த மாதிரி ஷேடுள்ள கேரக்டரில் நடிச்சதில்லை. இந்த லக்‌ஷ்மி கேரக்டரை என்னால் சரியாகப் பண்ண முடியுமான்னு நினைச்சேன். எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் இருக்கோ, அத்தனை கேள்விகளையும் லக்‌ஷ்மி மூலமாக இயக்குநர் கேட்க வச்சிருக்காரு. நான் சமூகத்தின் முகமாக இந்தப் படத்துல வர்றேன். அது ரொம்பச் சேலஞ்சிங்கா இருந்துச்சு. அதோட, ரொம்ப அன்பான ஒரு அம்மாவோட பரிதவிப்பும் லக்‌ஷ்மியிடம் இருந்தது. நான் நிறைய அம்மா பாத்திரம் பண்ணியிருக்கேன். விட்னெஸ், தண்டட்டி, 3 என நான் பண்ண ஒவ்வொரு அம்மாவும் வேற வேற அம்மா. ஹீரோக்கு அம்மாவா நடிக்கணும் என இயக்குநர் யாராச்சும் சொன்னா, 'அம்மாங்கிறது ஒரு கதாபாத்திரமே கிடையாது. ஹீரோக்கு அம்மா யாரு? கோபமானவங்களா? கஷ்டப்பட்டு வந்தவங்களா? இல்ல கர்வமா பேசுறவங்களா? அவங்களால கதையில் ஏதாச்சும் நடக்குதா?' எனக் கேட்பேன். சில படத்துல தான் நான் ரொம்ப சரியா நடிருக்கேன் எனத் திருப்தியா இருக்கும். அதுல இந்த லக்‌ஷ்மி கேரக்டரும் ஒன்னு. இது எங்களோட கதை. ஒரு அம்மா - பொண்ணு கதை. இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை என்கேஜ் செய்யும். இங்கயும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ஆடியன்ஸ் ரெடியா இருப்பாங்க என்பதை நாம் நிரூபிச்சுக் காட்டணும். எல்லாத்தையும் விட, பேசாப்பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை நாங்க செய்திருக்கிறோம்" என்றார்.




இயக்குனர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில்.

பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

நானும் எனது நண்பர் சுரேஷும் உருவாக்கிய கதை தான் இந்த 'காதல் என்பது பொதுவுடைமை'. முதலில் இதை தமிழில் எடுக்க நினைக்கவில்லை, நண்பர்கள் தான் இந்த படத்தை தமிழில் எடுக்கலாம் என்று எனக்கு ஊக்கமளித்தார்கள். 


சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசைக்காக நிறைய பேர் இங்கே வந்திருக்கிறீர்கள், சிறிய வேலையாக இருந்தாலும் தளராமல் அதை செய்ய வேண்டும். அது தானாக நமது இலக்கை அடையும். இந்த திரைப்படத்தை நாங்கள் 28 நாட்களில் எடுத்து முடித்துள்ளோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களால் தான் இதனை இவ்வளவு சீக்கிரம் முடித்தோம்.


இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன் மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருந்தார்.நான் தமிழில் படம் எடுக்க முயற்சித்த போது சில பேர் மலையாளத்திலும், ஹிந்தியிலும் எடுக்க சொன்னார்கள்.


நான் கோபத்தில் வேண்டுமென்றே எடுத்தேன்  தமிழ்நாட்டில் படத்தை வாங்க OTT தளத்தில் வாங்க மறுக்கின்றனர். இதனால் படத்தை வெளியிடுவதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் எனக்கு டிஸ்ட்ரிபியூட்டர் தனஞ்செயன் உதவியுள்ளார் அவருக்கு  நன்றி. மற்றும் இந்தப் படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.



இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில்...


தமிழ் சினிமாவில் இப்படிபட்ட படம் மெயின் ஸ்க்ரீனில் வருவதில்லை. தமிழ் சினிமாவில் ஒரு வாரத்திற்கு 7 இல் இருந்து 8 திரைப்படங்கள் வருகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒரே நேரத்தில் நிறைய  படங்கள் வெளி வந்தால் மக்கள் பார்க்க மிகவும் சிரமமாக இருக்கும்  பொறுத்திருந்து வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கோரிக்கை விடுக்கிறேன், என்றார்.


இயக்குநர் பாலாஜி தரணி தரண் பேசுகையில் 


இந்த படத்தை 10 நாட்களுக்கு முன்பாக நான்  பார்த்தேன். படம் முடிந்த பின்பு அந்த படத்தின் இயக்குநர் மற்றும் குழுவினர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது. அனைவரும் பேசுவதற்கு கூச்சப்படும் ஒரு விஷயத்தை அழகாக அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ்.படம் மிகவும் அருமையாக இருக்கிறது படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


இயக்குநர் சசி பேசுகையில் 


ஊடக நண்பர்களுக்கு வணக்கம்

படத்தில் நான் பின்னணி இசையையும், பாடலையும் மிகவும் ரசித்தேன். இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சில இயக்குநர்கள் மக்களுக்கு பிடித்த விஷயத்தை எடுப்பார்கள். சில பேர் தங்களுக்கு பிடித்த படத்தை எடுப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் இந்த காலத்தில் ஒரு முக்கியமான படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.


நடிகர் மணிகண்டன் பேசுகையில்.


நான் இந்த படத்தை பார்க்கவில்லை. அதனால் இந்த படத்தை குறித்து என்னால் தெளிவாக பேச முடியாது.

ஆனால் இந்த படத்தில் பணி புரிந்த எனது நண்பர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் இயக்குனர் ஜெயபிரகாஷ் தன்னுடைய கொள்கையில் அதீத பிடிப்போடு இருப்பவர். அவருக்கு திரைப்பட விழாவில் வெளியிடும் படத்திற்கும், சாதாரணமாக வெளியிடப்படும் கமர்ஷியல் திரைப்படத்திற்கும் இடையில் உள்ள இடை வெளியை சரி செய்ய நினைத்து கோபத்துடன் இதனை எடுத்துள்ளார். அதேபோல செங்கனி இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஜெய் பீம் படத்தில் நடிக்கும் போது டப்பிங் செய்வதற்கு அடிக்கடி நான் அழைப்பேன். தயங்காமல் வந்து செல்வார்கள் மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.


இசை அமைப்பாளர் கண்ணன் நாராயணன் பேசுகையில்.


இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் 'தலைக்கூத்தல்' படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைத்துள்ளேன். தற்போதைய சூழலில் படத்தின் முதல் பாடல் மற்றும் அனைத்து பாடல்களையும் ஆண்களே பாடுகின்றனர். இந்த படத்தில் பெண் பாடல் வேண்டும். என்பதற்காக சிறப்பாகவும் படத்திற்கு ஏற்ற மாதிரியும் பாடல் கட்சி அமைந்துள்ளது.

உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை நன்றி.



நடிகர் வினித் பேசுகையில்


அனைவருக்கும் வணக்கம்,

நான் இந்த படத்தில் நடிக்கும் போது படம் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் படம் பார்க்கும்போது அற்புதமாக வந்திருக்கிறது. படம் குறித்து நான் அதிகமாக பேசவில்லை. அது மக்கள் கண்டிப்பாக பார்த்து பேசுவார்கள். இந்த மாதிரியாக படங்களில் தான் முக்கியமான கருத்துக்கள் பலவற்றை  பார்க்க முடிகிறது. இந்த படம் வெளிப்படையான விவாதத்தை வைக்கிறது இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு படமாக அமையும் கண்டிப்பாக இது ஒரு  வெற்றி படமாக அமைய எனது வாழ்த்துக்கள் நன்றி.