Featured post

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

 *உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு* தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிக...

Sunday, 6 September 2026

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

 *உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு*






தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.


இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்.


சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம்.


அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும்.


அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு. கமல்ஹாசன் அவர்கள். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம். எங்களை நேரம் ஒதுக்கி சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்து, சங்கத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்," என்று தெரிவித்துள்ளனர். 


***

மொத ராத்திரி' திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

 *'மொத ராத்திரி' திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*














ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மொத ராத்திரி'. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. 


தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, "இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.  ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. 'குட் பேட் அக்லி', 'டியூட்' படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு 'இருமுடி கட்டு' படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.


ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி,"நல்ல படத்தில் வேலை செய்து இருக்கிறோம் என்று திருப்தி உள்ளது. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி".


படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன், "என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி. அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன். என் முதல் படத்திலேயே எனக்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சி".


பப்ளிசிட்டி டிசைனர் வியாகி, "ராஜா கதை சொன்னதிலிருந்து இது எங்களுடைய படமாகிவிட்டது. படத்தில் எல்லோருமே பாசிட்டிவாக இருந்தார்கள். அதனுடைய ரிசல்ட் பிரம்மாண்ட வெற்றியாக மாறியிருக்கிறது".


நடிகை சுமித்ரா தேவி, " இந்த படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். எங்கள் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இயக்குநருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி". 


நடிகை வர்ஷினி கார்மேகம், "தயாரிப்பாளர்கள், இயக்குநர் ராஜா, ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது". 


நடிகர் திலீப், " படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பல நாட்கள் கழித்து திரையரங்குகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியுடன் செல்வதை பார்த்தேன். நன்றி"


நடிகை இனியா ராம், " அறிமுக இயக்குநர் ராஜாவின் கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. படம் பார்த்த பலரும் என்னிடம் பாக்யராஜ் படம் பார்த்தது போல உள்ளது என்றார்கள். நிச்சயம் அடுத்த ஐந்து வருடத்திற்குள் இயக்குநர் ராஜா முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருப்பார். ரிஷிகாந்தும் திறமையான நடிகர். தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி".


நடிகை தீபிகா, "கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்த படம் மூலம் எங்கள் எல்லோருக்கும் அடையாளம் கிடைத்துள்ளது".


நடிகர் கார்த்திகேயன் டிகே, ", எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி.  படத்தில் நடித்தவர்களுக்கும் பணிபுரிந்தவர்களுக்கும் இந்த படம் ரொம்பவே முக்கியமானது. நீண்ட பயணத்தின் முதல் படியாக இந்த வெற்றியை பார்க்கிறேன். நன்றி".


நடிகர் அப்துல் லீ, " வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்தில் நடித்த நடிகர்களையும் தொழில்நுட்ப குழுவினரையும் அடுத்த நிலைக்கு இந்த படம் எடுத்து சென்றுள்ளது. பல வருட உழைப்பிற்கு பிறகு என்னுடைய முகமும் இந்த படத்தின் போஸ்டரில் வந்திருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி". 


இசையமைப்பாளர் பரத் சங்கர், "என்னுடைய இசை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான மைல்கல். சின்ன படம், பெரிய படம் என்று கிடையாது. நல்ல படம், சுமாரான படம் என்று வேண்டுமானால் பிரிக்கலாம். ஓடக்கூடிய படத்தின் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ராஜா அடிக்கடி சொல்வார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை தயாரிக்க முன்வந்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி".


நடிகர் சேத்தன், "புதிய திறமையானவர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இயக்குநர் ராஜாவுக்கும் நன்றி. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தோம். இந்தப் படத்தில் இருந்து பல சூப்பர் ஸ்டார்களும், லேடி சூப்பர் ஸ்டார்களும் உருவாக இருக்கிறார்கள். ரிஷியை திரையில் பார்க்கும்பொழுது இளவயது அமிதாப்பச்சனை பார்ப்பது போல இருந்தது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி".


இயக்குநர் ராஜா கருப்பசாமி, "என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும், என் படக்குழுவினருக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்பது மகிழ்ச்சி. அனிஷ்மா திறமையான நடிகை. ஆறு வருடத்திற்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. சின்ன படங்களுக்கு எப்போதுமே உங்கள் ஆதரவு தேவை. அது மட்டும் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்".


நடிகர் பகவதி பெருமாள், "சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இது போன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். அந்த வகையில், இந்த கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பலருடைய வாழ்க்கையில் இந்த படம் ஒளி ஏற்றி இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் படம் செய்பவர்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்".


நடிகர் ரிஷிகாந்த், " உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தந்த ஊடகத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஆறு வருடங்களாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி".

Saturday, 5 September 2026

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai

 Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai*



The team of ‘Bethlehem Kudumba Unit’ recently had a special and memorable interaction with Ulaganayagan Kamal Haasan at his office in Chennai.


Kamal Haasan had watched the film and appreciated the work of the entire team, congratulating them for their efforts and the film’s engaging presentation. The interaction turned into a memorable moment for the team, with Kamal Haasan sharing his appreciation and words of encouragement with the cast and crew.


The meeting was attended by the film’s director Girish A.D., actors Dileesh Pothan, Fahadh Faasil, Kiran Josey, Sangeeth Prathap and Unnimaya, along with Future Runup Films Distributors Arun Narayanan and Anup Kumar.


Produced by Bhavana Studios, Bethlehem Kudumba Unit has already emerged as a major success in Malayalam, receiving strong appreciation from audiences and establishing itself as one of the notable Malayalam releases. The film is now reaching Tamil audiences as well, where it continues to create awareness and build its audience following.


Kamal Haasan’s appreciation of the film and the team adds another special moment to the film’s journey. His words of encouragement have brought immense happiness to the entire team as they continue their journey with the film.


The memorable interaction between Ulaganayagan Kamal Haasan and the ‘Bethlehem Kudumba Unit’ team marks a special occasion for the film and its entire cast and crew.

பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

 *‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!*



*‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னை அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து சிறப்பான தருணத்தை பகிர்ந்து கொண்டனர்.*


இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பகிர்ந்து கொண்டது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.


இந்த சந்திப்பில் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.


பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து தனது ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறது


இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியது, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. உலகநாயகன் பாராட்டும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரின் இந்த சந்திப்பு, திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது


விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

 *விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!*







*ஜீத்து ஜோசப் கதையில் உருவான படம்… ஆர். மாதேஷ் இயக்கத்தில் புதிய கலாட்டா!  இப்படத்தை புன்னகை பூ கீதா தயாரித்துள்ளார்*


*லண்டன் சாப்ட்வேர் கம்பெனி பின்னணியில் காதலும்… மோதலும்… காமெடியும்!*


*விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா!*


‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது.


காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.


அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.


மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா  மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளார். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.


இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.


காதலில் ஆரம்பித்து… சண்டையில் சிக்கி… காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’!


விமல் – ஸ்ரேயா இணைந்து நடிக்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Mohanlal - Vishnu Mohan Film titled ‘Operation Ganga’; Produced by Gokulam Gopalan

 Mohanlal - Vishnu Mohan Film titled ‘Operation Ganga’; Produced by Gokulam Gopalan




The title of L367, the upcoming Mohanlal film produced by Gokulam Gopalan under the banner of Sree Gokulam Movies, has been announced. Written and directed by Vishnu Mohan, the film has been titled ‘Operation Ganga’. Co-producers are Baiju Gopalan and V. C. Praveen, while Krishnamoorthy is the Executive Producer. The title announcement of the film, which is being mounted on a grand canvas with a mega budget, was eagerly awaited by fans and cinema lovers. ‘Operation Ganga’ is the third film directed by Vishnu Mohan, who shot to prominence by winning a National Award with his debut film ‘Meppadiyan’ itself.



‘Operation Ganga’ was the historic evacuation mission carried out by India against the backdrop of the Ukraine-Russia war. Based on this backdrop, the film has commenced shooting in Georgia. Mohanlal will soon join the film. A 180-day shooting schedule has been planned across Poland, Georgia, Kazakhstan, Delhi, Dehradun and Kochi. 


Along with Mohanlal, prominent actors including Bollywood star Arjun Rampal, Adil Hussain, Bhagyashri Borse and Parthiban are also part of the film. Featuring actors and technicians from abroad and Bollywood, the film is being mounted as one of the biggest films produced by Sri Gokulam Movies.


Another highlight of ‘Operation Ganga’ is that renowned music composer Shashwat Sachdev is composing the music for the film after the massive success of the pan-Indian film ‘Dhurandhar’. Miroslav Kuba Brozek, the cinematographer of ‘Pushpa 1’ and ‘Pushpa 2’, is handling the camera for the film. Se Young Oh, the action director of ‘Dhurandhar’ and ‘Kill’, is also part of the film.


Rajeevan, the production designer of films including ‘GOAT’, ‘Meiyazhagan’, ‘Amaran’ and ‘Kathanar’; editor Shameer Muhammed; sound designer Bishwadeep Chatterjee, who has worked on films including ‘Dhurandhar’, ‘Uri’, ‘3 Idiots’ and ‘Padmaavat’; K. V. Sanjith, the VFX supervisor of ‘Kantara’; Squadron Leader Verlin Panwar, who has worked as a military advisor on films including ‘Safed Sagar’, ‘Border 2’ and ‘Fighter’; ‘Lokah’ costume director Melvy J; makeup artist Ronex Xavier; and production controller Rinni Divakar are among the prominent technicians who are part of ‘Operation Ganga’.


‘Ottakkomban’ starring Suresh Gopi, ‘Kathanar’ starring Jayasurya, and ‘Killer’ directed by S. J. Suryah, are the other big projects currently being prepared under the banner of Sree Gokulam Movies.


Cinematography - Miroslav Kuba Brozek, Music - Shashwat Sachdev, Action Direction - Se Young Oh, Production Design - Rajeevan, Editing - Shameer Muhammed, Sound Design - Bishwadeep Chatterjee, VFX Supervision - K. V. Sanjith, Military Advisor - Squadron Leader Verlin Panwar, Costume Design - Melvy J, Makeup - Ronex Xavier, Production Controller - Rinni Divakar

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

*மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது*




*கோகுலம் கோபாலன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’*


மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் L367 படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.


ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


விஷ்ணு மோகன் இயக்கும் மூன்றாவது படம் இது. இவர் இயக்குநராக அறிமுகமான ‘மேப்படியான்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்று கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரஷ்யா – உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆபரேஷன் கங்கா’ மீட்புப் பணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. மோகன்லால் விரைவில் படப்பிடிப்பில் இணைகிறார். மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலந்து, ஜார்ஜியா, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


மோகன்லாலுடன் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். வெளிநாடு மற்றும் பாலிவுட்டை சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக ‘ஆபரேஷன் கங்கா’ உருவாகி வருகிறது.


இப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, ‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபல இசையமைப்பாளர் ஷாஷ்வத் சச்தேவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


‘புஷ்பா 1’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக், ‘ஆபரேஷன் கங்கா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘துரந்தர்’, ‘கில்’ உள்ளிட்ட படங்களின் ஆக்ஷன் இயக்குநர் சே யங் ஓ இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.


‘GOAT’, ‘மெய்யழகன்’, ‘அமரன்’, ‘கதனார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் இப்படத்தின் புரொடக்‌ஷன் டிசைனை கவனிக்கிறார்.


எடிட்டராக ஷமீர் முகமது, ‘துரந்தர்’, ‘யூரி’, ‘3 இடியட்ஸ்’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிஷ்வதீப் சட்டர்ஜி சவுண்ட் டிசைனராகவும் பணியாற்றுகின்றனர்.


‘காந்தாரா’ படத்தின் VFX மேற்பார்வையாளராக பணியாற்றிய கே.வி. சஞ்சித் இப்படத்தின் VFX பணிகளை கவனிக்கிறார். ‘Safed Sagar’, ‘Border 2’, ‘Fighter’ உள்ளிட்ட படங்களில் மிலிட்டரி ஆலோசகராக பணியாற்றிய Squadron Leader Verlin Panwar, இப்படத்திலும் மிலிட்டரி ஆலோசகராக இணைந்துள்ளார்.


‘Lokah’ படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் மெல்வி ஜே, மேக்கப் கலைஞர் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் ரின்னி திவாகர் ஆகியோரும் இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் சுரேஷ் கோபி நடிக்கும் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயசூர்யா நடிக்கும் ‘கதனார்’ மற்றும் எஸ்.ஜே. சூர்யா இயக்கும் ‘கில்லர்’ ஆகிய பிரம்மாண்டமான படங்களும் தற்போது தயாரிப்பில் உள்ளன.


‘ஆபரேஷன் கங்கா’ படத்தின் தொழில்நுட்பக் குழு:


ஒளிப்பதிவு – மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக்

இசை – ஷாஷ்வத் சச்தேவ்

ஆக்ஷன் இயக்கம் – சே யங் ஓ

புரொடக்‌ஷன் டிசைன் – ராஜீவன்

எடிட்டிங் – ஷமீர் முகமது

சவுண்ட் டிசைன் – பிஷ்வதீப் சட்டர்ஜி

VFX மேற்பார்வை – கே.வி. சஞ்சித்

மிலிட்டரி ஆலோசகர் – Squadron Leader Verlin Panwar

காஸ்ட்யூம் டிசைன் – மெல்வி ஜே

மேக்கப் – ரோனெக்ஸ் சேவியர்

புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் – ரின்னி திவாகர்

மக்கள் தொடர்பு - சதீஷ் குமார், S2 மீடியா


4 Idiots Movie Review

 4 Idiots Tamil Movie Review

ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு fun-ஆன comedy thriller movie. படத்தோட பெயர் 4 Idiots. இந்த படத்தை Sajo Sundar Murugesan இயக்கியிருக்காரு. Pugazh, Pragya Nayan, Ravi Maria, Kumki Ashwin, Vincent Asokan, Indran Ilangovan, Thidiyan Thiruchelvamன்னு ஒரு நல்ல cast இந்த படத்துல நடித்திருக்காங்க.



இந்த படத்தோட story-ய பொறுத்தவரைக்கும், நாலு friends. இவங்க நாலு பேருமே ஒரு வித்தியாசமான profession-ல இருக்காங்க. அது என்னன்னா stealing. அதுவும் பெரிய professional thieves மாதிரி இல்லாம, கொஞ்சம் புத்திசாலித்தனம் குறைவான, தங்களோட செயல்களாலேயே comedy உருவாக்கிக்கிற மாதிரியான characters.


இவங்க வாழ்க்கை இப்படியே போய்ட்டு இருக்கும்போது தான் COVID pandemic வருது. Lockdown காரணமா வெளிய போக முடியல, அவங்களோட usual வேலைகளையும் செய்ய முடியல. அதனால எப்படியாவது ஒரு last theft பண்ணிட்டு, அதுக்கப்புறம் இந்த வாழ்க்கையையே விட்டுட்டு settle ஆகிடலாம்னு முடிவு பண்றாங்க.


அந்த நேரத்துல தான் இவங்களுக்கு ஒரு audio leak கிடைக்குது. அதுல ரெண்டு பேர் பணத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க. இதைக் கேட்டதும், நம்ம நாலு பேருக்கும் ஒரு நல்ல opportunity கிடைச்சுடுச்சுன்னு நினைச்சு, அந்த பணத்தை steal பண்ண plan போடுறாங்க.


அந்த plan-படி ஒரு ஆள் இல்லாத bungalow-க்குள்ள போறாங்க. ஆனா அங்க போன உடனே situation மாறிடுது. அந்த வீட்டோட security guard-ஆ இருக்குற Ravi Maria இவங்கள பிடிச்சுடுறாரு. அதுக்கப்புறம் அந்த வீட்டுக்குள்ள வர்ற ஒவ்வொருத்தருமே ஒரு விதமான சிக்கல்ல மாட்டிக்கிறாங்க.


ஒரு கட்டத்துல அந்த bungalow-வே ஒரு பெரிய puzzle மாதிரி ஆகிடுது. யாராலயும் அங்கிருந்து easy-ஆ வெளிய வர முடியல. இவங்க எப்படி தப்பிக்கப் போறாங்க? அந்த வீட்டுக்குள்ள உண்மையிலேயே என்ன நடக்குது? இவங்க போட்ட theft plan என்ன ஆனது? அப்படிங்கற விஷயங்கள்தான் மிச்சக் கதையை interesting-ஆ கொண்டு போகுது.


படத்தோட performance-அ பத்தி பாத்தோம்னா, Pugazh இந்த படத்துல முக்கியமான character-ல நடித்திருக்காரு. அவரை நாம பொதுவா energetic-ஆவும், அதிகமான comedy mannerisms-உடனும் தான் பார்த்திருப்போம். ஆனா இந்த படத்துல அதைவிட கொஞ்சம் controlled-ஆ, calm-ஆ அவரோட character-ஐ handle பண்ணியிருக்காரு.


அவரோட body language-ம் dialogue delivery-யும் character-க்கு ஏத்த மாதிரி இருக்கு. குறிப்பா அதிகமாக over பண்ணாம natural-ஆ நடித்திருப்பது Pugazh-க்கு ஒரு different shade-ஐ காட்டுது. அவரோட வழக்கமான style-ல இருந்து கொஞ்சம் வித்தியாசமான performance-ஆ இது இருக்கு.


அவரோட friends-ஆ வர்ற Kumki Ashwin, Indran Ilangovan மற்றும் Thidiyan Thiruchelvam மூணு பேரும் நல்ல support கொடுத்திருக்காங்க. இவங்க நாலு பேரும் சேர்ந்து வர்ற scenes-ல தான் நிறைய situational comedy உருவாகுது. ஒவ்வொருத்தரோட reaction-ம், timing-ம் சேர்ந்து சில நல்ல fun moments-ஐ கொடுக்குது.


Ravi Maria இந்த படத்துல security guard character-ல வர்றாரு. ஆரம்பத்துல சாதாரண security guard மாதிரி தெரிஞ்சாலும், போகப்போக அவரோட character எப்படி எல்லாத்தையும் handle பண்றது என்பது interesting-ஆ இருக்கு. அவரோட screen presence படத்துக்கு நல்ல energy கொடுக்குது.


Vincent Asokan-ம் antagonist side-ல தன்னோட presence-ஐ நல்லா பதிவு பண்றாரு. அவரோட character வர்ற scenes படத்துக்கு கொஞ்சம் intensity-யும் சேர்க்குது.


Heroine-ஆ வர்ற Pragya Nayan-க்கும் story-க்குள்ள ஒரு unexpected turn கொடுத்திருக்காங்க. ஆரம்பத்துல promotional material பார்த்தப்போ character glamour-க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்களோன்னு நினைக்க வைக்கும். ஆனா movie-க்குள்ள போனதும் அவரோட character-க்கு ஒரு twist வச்சிருக்காங்க. அதனால அவருக்கும் சில நல்ல performance moments கிடைக்குது.


இந்த படத்தோட இன்னொரு முக்கியமான விஷயம் cinematography. பெரும்பாலான scenes ஒரு bungalow-க்குள்ளேயே நடக்குது. ஒரே location-ல தொடர்ந்து story போகும்போது visuals interesting-ஆ இருக்கணும். அந்த விஷயத்தை cinematographer UK Senthilkumar நல்லா handle பண்ணியிருக்காரு.


ஒரே வீட்டுக்குள்ள கதையை வைத்திருந்தாலும், different angles மற்றும் camera movements மூலமா scenes-க்கு தேவையான visual variation கொடுத்திருக்காங்க. அதனால location பெரியதாக இல்லாத நிலையிலும் படம் visually engaging-ஆ இருக்கு.


Subash Munirathinam-ன் music படத்தோட mood-க்கு ஏத்த மாதிரி support பண்ணுது. Comedy மற்றும் suspense mix ஆகுற scenes-ல music தேவையான feel-ஐ கொடுக்குது.


Direction-ஐ பொறுத்தவரைக்கும், Sajo Sundar Murugesan இந்த படத்தை ஒரு full-length comedy entertainer-ஆ கொண்டு போக முயற்சி பண்ணியிருக்காரு. Four friends, ஒரு theft plan, ஒரு mysterious bungalow, அதுக்குள்ள நடக்குற unexpected situationsன்னு கதைக்குள்ள பல elements-ஐ mix பண்ணியிருக்காங்க.


Particularly, ஒரு simple comedy story-க்குள்ள ஒரு meaningful message-ஐ கொண்டு வர்றது படத்தோட interesting aspect. Climax-க்கு போகப்போக அந்த message இன்னும் clear-ஆ புரியுது.


Comedy-யை பொறுத்தவரைக்கும், சில scenes நல்லா laugh வர வைக்குது. குறிப்பா நாலு friends-ம் ஒரு problem-ல மாட்டிக்கிட்டு அதை சமாளிக்க முயற்சி பண்ற situations எல்லாமே light-hearted-ஆ ரசிக்கிற மாதிரி இருக்கு.


Overall-ஆ பார்த்தோம்னா, 4 Idiots ஒரு simple-ஆன comedy thriller. Four friends-ஐ மையமா வைத்து, theft-ஐ ஒரு background-ஆ எடுத்துக்கிட்டு, அதுக்குள்ள suspense, comedy மற்றும் ஒரு நல்ல message-ஐ சேர்த்து சொல்லியிருக்காங்க.


Pugazh-ன் different performance, friends-க்கிடையில வர்ற comedy moments, Ravi Maria-வோட character மற்றும் bungalow-க்குள்ள நடக்குற unexpected situations எல்லாமே படத்துக்கு plus points.


மொத்தத்துல, serious-ஆ யோசிக்காம ஒரு light-hearted movie-யா enjoy பண்ணணும்னு நினைக்கிறவங்களுக்கு 4 Idiots ஒரு நல்ல choice. Comedy-யும், கொஞ்சம் suspense-உம், அதோட ஒரு meaningful message-உம் சேர்ந்து ஒரு simple entertainment package-ஆ இந்த படம் இருக்கு.


So, உங்களுக்கு comedy genre பிடிக்கும்னா, இந்த 4 Idiots movie-யை ஒரு தடவை theatre-ல போய் பார்த்து enjoy பண்ணலாம்.

Immortal Movie Review

Immortal Tamil Movie Review

Immortal Movie Rating:4.5/5

ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு வித்தியாசமான concept-ஐ வைத்து வந்திருக்கிற fantasy thriller movie. படத்தோட பெயர் ‘Immortal



இந்த படத்துல நம்ம GV Prakash தான் hero. அவருக்கு ஜோடியாக Kayadu Lohar நடித்திருக்காங்க. அறிமுக இயக்குநர் Mariyappan Chinna இயக்கியிருக்கிற இந்த படம், ஆரம்பத்துல ஒரு simple-ஆன romantic story மாதிரி நம்மளுக்கு தெரிஞ்சாலும், கொஞ்சம் கொஞ்சமா mystery மற்றும் supernatural world-க்குள்ள நம்மள கொண்டு போகுது.


சரி… முதல்ல கதையைப் பற்றி சுருக்கமா பார்த்துடலாம்.


GV Prakash ஒரு இளைஞரா இருக்காரு. சென்னையில தங்குறதுக்கு ஒரு நல்ல இடம் தேடிக்கிட்டு இருக்காரு. அதுவும் அவருக்கு வசதியான budget-ல ஒரு இடம் கிடைக்கணும்.


அந்த search-ல தான் Kayadu Lohar-ஓட character அவருக்கு அறிமுகமாகுது.


அவங்க இருக்குற வீடு ரொம்பவே luxurious-ஆ இருக்கு. ஒரு கட்டத்துல அந்த வீட்டுலேயே GV Prakash தங்குற மாதிரி சூழ்நிலை உருவாகுது.


ஆரம்பத்துல இவர்களுக்குள்ள ஒரு attraction develop ஆகுது. காதல் சம்பந்தப்பட்ட scenes-ல கதை ரொம்ப normal-ஆ தான் போகுது.


ஆனா ஒரு stage-க்கு மேல, “இங்க ஏதோ சரியில்லையே…”ன்னு நமக்கே ஒரு சந்தேகம் வர ஆரம்பிக்குது.


Kayadu-வோட character-ஐ சுற்றி சில விஷயங்கள் mysterious-ஆ இருக்குது. என்ன நடக்குது, அவங்க பின்னணி என்னன்னு நமக்கு உடனே புரியாது.


அந்த mystery-யை இன்னும் அதிகமா build பண்ணி, interval-ல ஒரு important twist கொடுத்திருக்காங்க.


அந்த twist வந்ததும் படத்தோட entire mood-மே மாறிடுது.


முதல் பாதி வரைக்கும் ஒரு romantic angle-ல போய்க்கிட்டு இருந்த கதை, அதுக்கப்புறம் mystery, survival மற்றும் fantasy thriller zone-க்கு shift ஆகுது.


அதுதான் இந்த படத்தோட interesting part.


Second half-ல GV Prakash ஒரு unusual situation-க்குள்ள சிக்கிக்கிறாரு. அங்கிருந்து எப்படி வெளியே வரப்போறாரு, Kayadu-வோட உண்மையான பின்னணி என்ன, அவங்களைச் சுற்றி இருக்குற அந்த mysterious creature என்ன என்பதெல்லாம் ஒவ்வொன்னா reveal ஆக ஆரம்பிக்குது.


இந்த விஷயங்களை எல்லாம் ஒரே shot-ல சொல்லாம, கொஞ்சம் கொஞ்சமா information கொடுத்து audience-ஐ curious-ஆ வைத்திருக்கிறாங்க.


அதனால second half போகப் போக நம்மளுக்கும் “அடுத்து என்ன?”ன்னு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம் வந்துடுது.


Performance-க்கு வந்தா, GV Prakash இந்த role-க்கு நல்லா suit ஆகியிருக்காரு.


ஒரு சாதாரண இளைஞனா ஆரம்பிச்சு, எதிர்பாராத ஒரு சூழ்நிலைக்குள்ள மாட்டிக்கிட்ட பிறகு அவரோட behaviour மாறுற விதத்தை நல்லா carry பண்ணியிருக்காரு.


Particularly mystery அதிகமாகும் இடங்கள்ல அவரோட reactions மற்றும் emotions கதைக்கு தேவையான impact-ஐ கொடுக்குது.


Kayadu Lohar-க்கு கொடுக்கப்பட்டிருக்கிற character ரொம்பவே different.


அவங்க character-ஐப் பற்றி ஆரம்பத்துல நமக்கு முழுசா எதுவுமே தெரியாது. அதனால அவங்க screen-ல வர்ற ஒவ்வொரு scene-ம் ஒரு mystery feel-ஐ maintain பண்ணுது.


அந்த mysterious personality-ஐ Kayadu நல்லாவே bring out பண்ணியிருக்காங்க.


Supporting cast-ல TM Karthik, Kumar Natarajan, Lollu Sabha Maaran, Aaditya Kathir உள்ளிட்ட பலர் நடித்திருக்காங்க.


ஒவ்வொருத்தருக்கும் கொடுக்கப்பட்ட portions-ஐ அவங்க neat-ஆ handle பண்ணியிருக்காங்க.


குறிப்பா TM Karthik-க்கு வர்ற character கதையோட mystery-க்கு இன்னும் ஒரு layer சேர்க்குது. அவரோட character மூலமா Kayadu-வைச் சுற்றி நடக்குற சில விஷயங்கள் இன்னும் interesting-ஆ மாறுது.


Technical side-ல படம் எப்படி இருக்குன்னு பார்த்தா, cinematography நல்லா இருக்கு.


Arun Radhakrishnan ஓட  visuals படத்தோட mood-க்கு சரியா match ஆகுது. குறிப்பா mysterious locations மற்றும் creature சம்பந்தப்பட்ட scenes-ல lighting மற்றும் framing நல்ல atmosphere create பண்ணுது.


படம் முழுக்க ஒரு eerie feel இருக்கணும்னு நினைச்சிருக்காங்க. அந்த feeling-ஐ visuals நல்லா support பண்ணுது.


அதே மாதிரி Sam CS ஓட  music மற்றும் background score இந்த படத்துக்கு முக்கியமான plus.


ஒரு scene-ல என்ன நடக்கப்போகுதுன்னு audience-க்கு தெரியாம இருக்கும்போது, background score மூலமா tension-ஐ அதிகரிக்கிறாங்க.


Creature சம்பந்தப்பட்ட portions வரும்போது music மற்றும் sound இரண்டுமே சேர்ந்து அந்த scenes-க்கு நல்ல impact கொடுக்குது.


Creature portions-ஐப் பொறுத்தவரைக்கும் TOW VFX – The Ordinary Works team-க்கு special mention கொடுக்கணும்.


அந்த supernatural elements-ஐ screen-ல கொண்டு வர்ற விதம் படத்தோட fantasy world-க்கு நல்ல support-ஆ இருக்கு.


அதோட Ghatam Sivaவோட sound design மற்றும் mixing கூட அந்த creature scenes-க்கு இன்னும் depth கொடுக்குது.


ஒரு creature screen-ல வரும்போது அதை visuals மூலமா மட்டும் காட்டாம, sound மூலமாவும் ஒரு presence create பண்ணியிருக்காங்க.


Editing-ஐ Rajesh M handle பண்ணியிருக்காரு.


படத்தோட runtime சுமார் 131 minutes தான். அதனால தேவையில்லாத அளவுக்கு scenes நீளமா போகாம, story ஒரு compact flow-ல முடிஞ்சிடுது.


இது இந்த மாதிரி thriller படத்துக்கு நல்ல விஷயம்.


Direction-ஐ பொறுத்தவரைக்கும், இயக்குநர் Mariyappan Chinna ஒரு different idea-வை தமிழ் சினிமாவுல try பண்ணியிருக்காரு.


ஏன்னா நம்ம சினிமாவுல காதல், action, crime, horrorன்னு நிறைய genres பார்த்திருக்கோம்.


ஆனா romance , fantasy ,mysterious creature , survival thriller இதையெல்லாம் ஒரே கதைக்குள்ள கொண்டு வர்ற முயற்சி கொஞ்சம் fresh-ஆ இருக்கு.


அதனால படத்தோட concept தான் முதல்ல நம்ம attention-ஐ பிடிக்குது.


Screenplay-ல இன்னும் கொஞ்சம் depth கொடுத்திருந்தா இந்த idea இன்னும் பெரிய impact கொடுத்திருக்கும். குறிப்பா அந்த central mystery-ஐ இன்னும் விரிவா explore பண்ணியிருந்தா audience-க்கு அந்த fantasy world இன்னும் strong-ஆ connect ஆகியிருக்கும்.


ஆனா overall-ஆ பார்க்கும்போது, புதுசா ஏதாவது முயற்சி பண்ணணும்னு நினைச்சிருக்கிற debut director-க்கு இது ஒரு நல்ல starting point.


இன்னொரு interesting விஷயம் என்னன்னா, இது AK Film Factory-யோட முதல் production venture.


அறிமுக production banner-ஆ இருந்தாலும், வழக்கமான safe subject-ஐ தேர்வு பண்ணாம, creature-based fantasy thriller மாதிரி ஒரு unusual genre-ஐ எடுத்திருக்காங்க. அந்த முயற்சிக்காகவே இந்த production team-ஐ பாராட்டலாம்.


மொத்தத்துல…


‘Immortal’ ஆரம்பத்துல ஒரு romantic story மாதிரி நம்மளுக்குள்ள வருது. ஆனா interval-க்கு பிறகு படம் முழுசாவே வேறொரு direction-க்கு போயிடுது.


GV Prakash ஓட  performance, Kayadu Lohar-ஓட mysterious character, fantasy elements, creature portions, Sam CS-ோட BGM, VFX மற்றும் cinematography எல்லாமே சேர்ந்து படத்துக்கு ஒரு தனி mood உருவாக்குது.


Particularly second half-ல mystery reveal ஆகுற விதமும், GV Prakash அந்த strange situation-ல இருந்து எப்படி வெளியே வரப்போறாருன்ற curiosity-யும் நம்மள தொடர்ந்து படத்தோட connect ஆக வைக்குது.


தமிழ்ல இதுபோன்ற fantasy creature survival thrillers ரொம்ப அதிகமா வர்றது இல்ல. அந்த வகையில ‘Immortal’ ஒரு different attemptஆ இருக்கு.


So, வழக்கமான commercial stories-ல இருந்து கொஞ்சம் மாறி, romance-ல ஆரம்பிச்சு mystery மற்றும் fantasy thriller-ஆ மாறுற ஒரு movie பார்க்கணும்னு நினைக்கிறவங்க இந்த படத்தை try பண்ணிப் பார்க்கலாம்.


‘Immortal’ – காதல் கதையா ஆரம்பிச்சு… ஒரு mysterious உலகத்துக்குள்ள கூட்டிட்டு போற ஒரு வித்தியாசமான thriller!