Featured post

Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy

 Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy family drama written and directed by ‘Naai Sekar’ fame Kishore ...

Friday, 11 July 2025

Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy

 Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy family drama written and directed by ‘Naai Sekar’ fame Kishore Rajkumar, who also plays the protagonist*







*Popular Malayalam actress Anna Ben to play the female lead, alongside a stellar ensemble cast*


India’s leading media production and talent management company, Noise and Grains, known for producing some of the grandest and most successful cultural events in the Indian entertainment space, is now making its foray into film production.


Under the Noise and Grains banner, producers Karthik Srinivas and Mahaveer Ashok are bankrolling this upcoming romantic-comedy family drama, written and directed by Kishore Rajkumar, who also plays the male lead. Kishore, best known for directing 'Naai Sekar', has also acted in films like 'Comali', 'Kaithi', 'VIP 2', 'Imaikkaa Nodigal', and 'Kee', and has created many short films and YouTube videos.


The yet-to-be-titled film not just marks Kishore Rajkumar’s return as a director but also his maiden venture as the protagonist. The female lead is played by acclaimed Malayalam actress Anna Ben, who also starred in the Tamil film 'Kottukkaali'. The movie will feature several prominent actors in pivotal roles.


Speaking about the film, Kishore Rajkumar shared, "This is a story filled with romance and humour. The screenplay is crafted to deliver a complete feel-good experience to the audience. The driving force behind this project is none other than the legendary K. Bhagyaraj sir. There’s a feel among film lovers that movies like the ones he used to direct are no longer being made — this film aims to fill that gap."


He added, "This lively film revolves around compatibility in relationships and places strong emphasis on the female lead. I am thrilled to be working with the incredibly talented Anna Ben. I sincerely thank Noise and Grains for giving me this opportunity."


The film’s cinematography and co-writing responsibilities are handled by Praveen Balu, while editing is overseen by Ram Pandian. Both of them had earlier collaborated with Kishore Rajkumar on 'Naai Sekar', where actor Sathish made his debut as a lead. Art direction is managed by SriSasikumar K.

Costume designer Kiruthikha Sekar 

Executive Producer  - SN Asraf / Naresh Dinakaran


More exciting updates and official announcements about the film produced by Noise and Grains and directed by Kishore Rajkumar will be revealed soon by the production team.

இயக்குநர் அமீர் சொன்னதற்கான அர்த்தம் ‘கெவி’ படம் வெளியாகும்போது மக்களுக்குப்

 *“இயக்குநர் அமீர் சொன்னதற்கான அர்த்தம் ‘கெவி’ படம் வெளியாகும்போது மக்களுக்குப் புரியும்” -இயக்குநர் தமிழ் தயாளன்*




*மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’ திரைப்படம் ஜூலை 18 இல் வெளியாகிறது*


ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி  சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். 


 ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. 


இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன்

சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர். 


படம் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 


இயக்குநர் தமிழ் தயாளன் படம் குறித்து பேசும்போது, “நாமெல்லாம் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் அங்குள்ள இயற்கையை ரசித்து விட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறோம். 


ஆனால் அந்த இயற்கையோடு இணைந்து அங்கே வாழ்கின்ற கவனிக்கப்படாத, குரலற்ற தங்களது வலியைக் கூட சொல்ல முடியாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை நம் கவனத்திற்கு வருவதில்லை. 


அவர்களைக் கடந்து தான் நாம் சென்று வருவோம். ஆனால் அவர்கள் நம் கவனத்தில் வராமலேயே போய் விடுவார்கள். 


அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, வலியை வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்வது தான் இந்த கெவி படத்தின் நோக்கம்  இதற்காக கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே கிட்டத்தட்ட 110 நாட்கள் தங்கி இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.


கெவி படமானது வரும் ஜூலை  18 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அமீர், இந்த படத்தை கட்டாயம் தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு விஷயத்தைக்  கூறியிருந்தார். இந்த படத்தைப் பார்க்கும் போது தான், ரசிகர்கள் அமீர் எதற்காக அப்படி சொன்னார் என்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதில் சொல்லப்பட்டிருக்கும் மக்களின் வலியையும் புரிந்து கொள்ள முடியும்.


ஒரு உயிர் பிறப்பது இயற்கை. ஆனால் தானாகவே சாவது என்பது அந்த உயிர்கள் மீது, மக்கள் மீது தொடுக்கப்படும் ஒரு மிகப்பெரிய வன்முறை. 


வருங்காலங்களில் இந்த வன்முறை நடக்கக் கூடாது. அந்த மக்களும் கவனிக்கப்பட வேண்டும். அவர்களது கதறல் சத்தமும் இந்த உலகிற்கு கேட்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் எல்லாமே கிடைக்க வேண்டும் என்கிற கோணத்தில் தான் இந்த படம் தயாராகி உள்ளது என்றார்.


ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. 


*தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்* 


தயாரிப்பாளர் ; பெருமாள் G - ஜெகன் ஜெயசூர்யா 


இணை தயாரிப்பாளர்கள் ; ஜெக சிற்பியன், வருண்குமார், ஆதவன், உமர் ஃபரூக், மணி கண்ணன்


எழுத்து – இயக்கம் ; தமிழ் தயாளன் 


இசை ; பாலசுப்பிரமணியன் ஜி & சா.ராஜாரவிவர்மா


ஒளிப்பதிவு ; ஜெகன் ஜெயசூர்யா 


படத்தொகுப்பு ; ஹரி குமரன் 


சண்டை பயிற்சி ; டான் அசோக் 


வசனம் ; ராசி தங்கதுரை, கிருபாகரன் ஏசய்யா


மக்கள் தொடர்பு ; A. ஜான்

Desingu Raja 2 Movie Review

 Desingu Raja 2 Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம desingu raja part 2 படத்தோட review அ தான் பாக்க போறோம். ezhil தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இந்த படத்துல vemal , jananathan , pujitha , harshita , pugazh , sneha gupta , singampuli , chaams , madhumitha , ravi mariya னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட first part 2013 ல release ஆகி இருந்தது. இந்த படம் செம hit னே சொல்லலாம். ஒரு நல்ல காமெடி entertainment படமா இது அமைச்சிருந்தது.

 அதுனால இந்த படம் மக்கள் ஓட மனசுல நிலைச்சு நின்னுச்சு. இப்போ இந்த படத்தோட second part அ 12 வருஷம் கழிச்சு இன்னிக்கு release ஆகி வெற்றிகரமா theatre ல release ஆகி ஓடிட்டு இருக்கு. 


ezhil ஓட படங்கள்னாலே comedy ஓட தான் கதை நகரும். அதே மாதிரி தான் இந்த படமும் அமைச்சிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். ஒரு agricultural college ல படிச்சிட்டு இருக்காங்க மூணு friends . இதுல ரெண்டு பசங்க அப்புறம் ஒரு பொண்ணு. இவங்க close friends அ இருந்தாலும்  college முடிஞ்சதுக்குப்புறும் மூணு பேரும் வேற வேற வழில போயிடுறாங்க. pujitha ஒரு உயர்ந்த  police பதைவி ல இருக்காங்க. vimal police  inspector அ இருக்காரு அப்புறம் கடைசியா jana nathan  rowdy அ ஆகிடுறாரு. ரொம்ப வருஷம் கழிச்சு இவங்க மூணு பேரும் சந்திச்சிக்குறாங்க. இதுல ஒரு rowdy அ கொன்னுடுவாங்க ஆனா அவனோட தலை miss ஆயிடுது அதுமட்டுமில்லாம minister ஓட blackmail வீடியோ னு இவங்க மூணு பேரும் connect ஆகுறாங்க. இதுக்கு அப்புறம் இவங்க மூணு பேரும் சேந்து எல்லா பிரச்னையும் solve பன்னங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட climax portions எல்லாமே ஒரு காட்டுக்குள்ள வச்சு தான் எடுத்திருக்காங்க . அதுனால climax portions எல்லாமே super அ இருந்தது.  first part ல நெறய comedy scenes இருக்கு னு உங்களுக்கே தெரியும். அதுவும் ravi mariya , soori , singampuli ,chamms ஓட காமெடி ultimate அ இருக்கும். இன்னும் சொல்ல போன இவங்க வர எல்லா scenes யுயுமே comedy அ தான் இருக்கும். ஆனா இந்த படத்துல இவங்க எல்லாரும் இருந்தும் comedy scenes நெறய இல்ல. first part போலவே இந்த படத்துலயும் comedy scenes க்கு கொஞ்சம் importance குடுத்துருந்த இந்த படம் இன்னும் நல்ல இருந்திருக்கும். pugazh அப்புறம் ravi mariya ஓட காமெடி எல்லாமே ரசிக்கிற விதமா இருந்தது. படத்தோட flow கொஞ்சம் slow அ  இருந்தது. கதையை கொஞ்சம் strong அ முக்கியமான scenes யும் மட்டும் வச்சிருந்த இந்த படம் இன்னுமே நல்ல இருந்திருக்கும். 


இந்த படத்துக்கு vidyasagar தான் இசை அமைச்சிருக்காரு. bgm and songs எல்லாமே இந்த படத்தோட கதைக்கு பொருந்தி இருந்தது. Selva R ஓட cinematography super அ இருந்தது. anandha lingakumar ஓட editing இன்னும் கொஞ்சம் sharp அ இருந்த படம் இன்னும் நல்ல இருந்திருக்கும். 


மத்தபடி ஒரு நல்ல comedy படம் தான் இந்த desingu raja 2. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Mrs & Mr Movie Review

 Mrs & Mr Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mrs & mr ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Vanitha Vijayakumar , Robert ,Shakeela, Aarthi Ganeshkar, Srinivasan, Ambika, Sriman , kiran rathod,  Ganeshkar னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct  பண்ணிருக்கறது vanitha vijayakumar அண்ட் இந்த படத்தை இவங்களோட பொண்ணு jovika vijayakumar தான் produce பண்ணிருக்காங்க. இந்த படத்தோட poster அ superstar rajinikanth தான் release பண்ணி இருந்தாரு. 



இந்த படத்தோட trailer release ஆனதுல இருந்து viral அ போயிடு இருக்கு னு தான் சொல்லணும். சோ இன்னிக்கு release ஆயிருக்கிற இந்த படத்தோட கதை என்னனு பாப்போம் வாங்க. robert யும் vanitha வும் husband and wife அ இருக்காங்க. vanitha க்கு அம்மா ஆகணும் ன்ற ஆசை இருக்கும் ஆனா இவங்களோட husband இதுக்கு ஒத்துக்க மாட்டிங்கிறாங்க. இதுனால இவங்களுக்குள்ள நெறய சண்டைகள் வருது. aging , society pressure , personal choice னு இந்த எல்லா விஷயத்தையும் cover பண்ணுற மாதிரி கதையை கொண்டு வந்திருக்காங்க. 


40 வயசு தண்டுனதுக்கு அப்புறம் ஒரு பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும். அவளோட challenges என்னனா ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. இதெல்லாமே பாக்குறதுக்கு ஒரு realistic touch ஓட இருக்குனே சொல்லலாம். படத்துல  இன்டர்நேஷனல் locations யும் காமிச்சிருந்தாங்க அதெல்லாம் visual wise colourful அ  இருந்தது. ஒரு சில இடங்கள் ல படம் ரொம்ப slow அ move ஆகுற மாதிரி இருந்தாலும் ஒரு bold ஆனா கதைக்களத்தை கொண்டுவந்திருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது srikanth deva . bgm அண்ட் songs இந்த கதைக்கு ஏத்த மாதிரி நல்ல set யிருந்தது. d g kapil தான் இந்த படத்துக்கு cinematographer. சினிமாட்டோகிராபி ரொம்ப striking அ இருந்தது.  


கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி

*நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படம்*










*பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்*


திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது. 


நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்' திரைப்படத்தை இயக்கியவரும், 'கோமாளி', 'கைதி', 'விஐபி 2', 'இமைக்கா நொடிகள்', மற்றும் 'கீ' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்களையும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.


இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் 'கொட்டுக்காளி' தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.


திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், "காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருப்பவர் பாக்யராஜ் சார் தான். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்," என்றார். 


மேலும் பேசிய அவர், "ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி," என்றார்.


இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கவனிக்கிறார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய 'நாய் சேகர்' படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஶ்ரீ சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். ஆடை வடிவமைப்பு - கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு - எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.


நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த மேலும் சுவாரசிய தகவல்கள் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும். 


***


*Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy family drama written and directed by ‘Naai Sekar’ fame Kishore Rajkumar, who also plays the protagonist*


*Popular Malayalam actress Anna Ben to play the female lead, alongside a stellar ensemble cast*


India’s leading media production and talent management company, Noise and Grains, known for producing some of the grandest and most successful cultural events in the Indian entertainment space, is now making its foray into film production.


Under the Noise and Grains banner, producers Karthik Srinivas and Mahaveer Ashok are bankrolling this upcoming romantic-comedy family drama, written and directed by Kishore Rajkumar, who also plays the male lead. Kishore, best known for directing 'Naai Sekar', has also acted in films like 'Comali', 'Kaithi', 'VIP 2', 'Imaikkaa Nodigal', and 'Kee', and has created many short films and YouTube videos.


The yet-to-be-titled film not just marks Kishore Rajkumar’s return as a director but also his maiden venture as the protagonist. The female lead is played by acclaimed Malayalam actress Anna Ben, who also starred in the Tamil film 'Kottukkaali'. The movie will feature several prominent actors in pivotal roles.


Speaking about the film, Kishore Rajkumar shared, "This is a story filled with romance and humour. The screenplay is crafted to deliver a complete feel-good experience to the audience. The driving force behind this project is none other than the legendary K. Bhagyaraj sir. There’s a feel among film lovers that movies like the ones he used to direct are no longer being made — this film aims to fill that gap."


He added, "This lively film revolves around compatibility in relationships and places strong emphasis on the female lead. I am thrilled to be working with the incredibly talented Anna Ben. I sincerely thank Noise and Grains for giving me this opportunity."


The film’s cinematography and co-writing responsibilities are handled by Praveen Balu, while editing is overseen by Ram Pandian. Both of them had earlier collaborated with Kishore Rajkumar on 'Naai Sekar', where actor Sathish made his debut as a lead. Art direction is managed by SriSasikumar K.

Costume designer Kiruthikha Sekar 

Executive Producer  - SN Asraf / Naresh Dinakaran


More exciting updates and official announcements about the film produced by Noise and Grains and directed by Kishore Rajkumar will be revealed soon by the production team.

Thursday, 10 July 2025

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!  



ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லர் வெளியானது !!  


இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில்,  தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது.  நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும்  ஜூலை 18, 2025 அன்று முதல் ZEE5 இல்  ஸ்ட்ரீமாகவுள்ளது. 


புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன் கலக்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.  தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன்,   15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன்  உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV  நடித்திருக்கிறார். 


சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.


அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார்.  “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார்.  உணர்வுப்பூர்வமான கதையுடன்,  சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 


ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

https://www.youtube.com/watch?v=69rZbS_JnBk

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மார்ஷல்

 *ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மார்ஷல்* 








*டாணாக்காரன் இயக்குநருடன் கார்த்தி இணையும் மார்ஷல் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது*


*ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்*


*கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது*


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்ச‌ன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு "மார்ஷல்" எனத் தலைப்பிட்டுள்ளனர். 


’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் (டாணாக்காரன் இயக்குநர்) மற்றொரு லட்சிய முயற்சியாக இந்தப் படம் அமைய இருக்கிறது.இன்று (வடபழனி, பிரசாத் ஸ்டுடியோவில்) நடைபெற்ற மார்ஷல் பட பூஜை நிகழ்ச்சியில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மத்தியில் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டனர்.


மார்ஷல் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு போன்ற சிறந்த திறமையாளர்கள் பணிபுரிய உள்ளனர்.


இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு மற்றும் இஷான் சக்சேனா தலைமையிலான ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் 1960-களின் ராமேஸ்வரத்தை மீண்டும் உருவாக்கும் விரிவான செட்கள் இடம்பெற இருக்கிறது.


மார்ஷல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Actor Karthi's Marshal shooting takes off with ritual pooja ceremony

 *Actor Karthi's Marshal shooting takes off with ritual pooja ceremony*








Dream Warrior Pictures, in collaboration with IVY Entertainment has announced a grand period action drama titled Marshal, set in 1960’s at Rameshwaram. The film marks another ambitious venture for actor Karthi and director Tamizh (Taanakkaran fame) following acclaimed projects like Theeran Adhigaaram Ondru and Kaithi.


At the auspicious puja event held today at ( Prasad Studios, Vadapalani ) the producers unveiled the title of the movie bringing together the film’s cast and crew in a celebratory atmosphere. 


Marshal features a star-studded cast including Kalyani Priyadarshan, Sathyaraj, Prabhu, Lal, John Kokken, Easwari Rao, and others. The technical crew boasts top talents like music composer Sai Abhyankar (his first period film), cinematographer Sathyan Sooryan, editor Philomin Raj, and production designer Arun Venjaramoodu.


Produced by SR Prakash Babu and SR Prabu of Dream Warrior Pictures, and co-produced by IVY Entertainment led by its Chairman Ishan Saksena, the film will feature elaborate sets recreating 1960s Rameshwaram. Marshal is planned as a pan-Indian release in Tamil, Telugu, Malayalam, Kannada, and Hindi.

பறந்து போ" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

 "பறந்து போ" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!








இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பையும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியையும் பெற்றுள்ளது, மகிழ்ச்சியான இத்தருணத்தில்  உலகெங்கிலும் "பறந்து போ" திரைப்படத்தை வெளியீடு செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தனது அலுவலகத்தில் படக்குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்.


இக்கொண்டாட்டத்தில் இயக்குநர் ராம், நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோருடன் ஜியோ ஹாட்ஸ்டாரின் பிரதீப் மில்ராய் பீட்டர், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸின் கருப்புச்சாமி மற்றும சங்கர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இந்த நிகழ்வில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.