Featured post

Rajadhiraaj Yatra, the grand Krishna Leela theatrical production, to be staged in Chennai

 *Rajadhiraaj Yatra, the grand Krishna Leela theatrical production, to be staged in Chennai* *Noise and Grains in association with Laughing ...

Tuesday, 17 March 2026

Rajadhiraaj Yatra, the grand Krishna Leela theatrical production, to be staged in Chennai

 *Rajadhiraaj Yatra, the grand Krishna Leela theatrical production, to be staged in Chennai*







*Noise and Grains in association with Laughing Water Productions (LWP), Hombale Entertainment and Kalanation Foundation presents Rajadhiraaj Yatra in Chennai*


*The spectacular production celebrating the divine life of Lord Sri Krishna will be staged on March 27, 28 and 29 at Sir Mutha Venkatasubba Rao Concert Hall*


Chennai is set to witness the grandeur of *Rajadhiraaj Yatra*, a magnificent theatrical production celebrating the glories and divine life of Lord Sri Krishna. After captivating audiences across cities, the production will now be staged in Chennai for the very first time.


*Rajadhiraaj Yatra*, conceptualised by Shri Dhanraj Nathwani, will be presented in Chennai by *Noise and Grains* in association with *Laughing Water Productions (LWP), Hombale Entertainment and Kalanation Foundation*.


Mounted on a grand scale and inspired by the visual richness of international Broadway-style productions, *Rajadhiraaj Yatra* promises a spectacular theatrical experience. The production combines powerful storytelling with music, dance, elaborate stage design and immersive visual effects, making it a feast for the eyes, ears and the soul.


The play will be staged at *Sir Mutha Venkatasubba Rao Concert Hall, Harrington Road, Chetpet, Chennai*, for *three days only — March 27, 28 and 29*.


Show timings are as follows:

• *March 27 – 7:00 PM*

• *March 28 – 2:00 PM and 7:00 PM*

• *March 29 – 11:30 AM and 4:30 PM*


Presented in *Hindi*, the production transcends language through its powerful visuals, music and storytelling, making it accessible and engaging for audiences from all linguistic and cultural backgrounds.


*Rajadhiraaj Yatra* is a large-scale cultural and devotional production that brings to life the many facets of Lord Sri Krishna — from the playful child of Gokul and the beloved of Vrindavan, to the wise philosopher of the Bhagavad Gita and the majestic king of Dwaraka. Through its vibrant performances and artistic storytelling, the production celebrates Krishna’s compassion, wisdom, courage and timeless teachings.


Tickets for the show are available on *BookMyShow*.

ராஜாதிராஜ் யாத்ரா', பிரம்மாண்டமான‌ கிருஷ்ண லீலை நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது

 *'ராஜாதிராஜ் யாத்ரா', பிரம்மாண்டமான‌ கிருஷ்ண லீலை நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது*







*'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது*


*சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் நடைபெறுகிறது*


'ராஜாதிராஜ் யாத்ரா' எனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளையும் தெய்வீக வாழ்க்கையையும் போற்றும் பிரம்மாண்டமான நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது. பல்வேறு நகரங்களில் அரங்கேற்றப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்நாடகம் முதல் முறையாக சென்னையில் நிகழவுள்ளது.


திரு தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள‌ 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது. 


அமெரிக்காவின் பிராட்வே மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளைப் போல அதிக பொருட்செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட அரங்குகளோடு இசை, நடனம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என‌ பார்வையாளர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் ரசனைக்கும் விருந்து படைக்கும் வகையில் இந்த நாடகம் திகழும். 


சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் 'ராஜாதிராஜ் யாத்ரா' அரங்கேற்றப்படும்.


காட்சி நேரங்கள் பின்வருமாறு:

• *மார்ச் 27 – மாலை 7:00 மணி*

• *மார்ச் 28 – பிற்பகல் 2:00 மணி மற்றும் மாலை 7:00 மணி*

• *மார்ச் 29 – காலை 11:30 மணி மற்றும் மாலை 4:30 மணி*


இந்தி மொழியிலான இந்த நாடகம் அனைத்து மொழி ஆன்மிக அன்பர்கள் மற்றும் கலை ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் தெரிவித்துள்ளது.


'ராஜாதிராஜ் யாத்ரா' இசை, நடனம் மற்றும் கதைசொல்லல் மூலம் கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் தெய்வீக பெருமைகளை முன்வைக்கும் பெரிய அளவிலான கலைப் படைப்பாகும். கோகுலத்தின் குறும்பு குழந்தை முதல் ஞானமுள்ள தத்துவஞானி மற்றும் துவாரகையின் மாமன்னர் என இந்த நிகழ்ச்சி கிருஷ்ணரை பல வடிவங்களில் சித்தரிக்கிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணை, தைரியம் மற்றும் போதனைகளை இந்த நாடகம் எடுத்துரைக்கிறது. மறக்கமுடியாத‌ கலாச்சார அனுபவமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் புக் மை ஷோ தளத்தில் கிடைக்கும்.


***

யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அனிருத் ரவிச்சந்தரின் புதிய இசைப்பதிவு

 *யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அனிருத் ரவிச்சந்தரின் புதிய இசைப்பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் பிரத்யேக கூட்டாண்மையை அமைத்துள்ளது*



முன்னோடி கலைஞரான அனிருத் ரவிச்சந்தர் திரைப்படங்கள் அல்லாத மற்ற இசை வெளியீடுகளுக்காகத் தொடங்கியுள்ள அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ்  எனும் புதிய நிறுவனத்தின் பிரத்யேக கூட்டாளராக யுனிவர்சல் மியூசிக் இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உலகளாவிய ஒப்பந்தம், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பை வலுப்படுத்துகிறது.


மும்பை, 17 மார்ச் 2026 – இசை சார்ந்த பொழுதுபோக்குத் துறையில் உலக முன்னணி நிறுவனமாகத் திகழும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவான யுனிவர்சல் மியூசிக் இந்தியா, பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் தொடங்கியுள்ள சுயாதீன இசைப் பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் (Albuquerque Records) உடன் ஒரு பிரத்யேக கூட்டாண்மை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் இந்த லேபிளில் ஒப்பந்தமாகும் எதிர்கால கலைஞர்களின் பாப்  மற்றும் ஹிப்-ஹாப் இசை ஆல்பங்களை யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து வெளியிடும். இந்த நிறுவனத்தின் கீழ் முதல் இசை வெளியீடு அனிருத் பங்கேற்புடன் ஏப்ரல் தொடக்கத்தில் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த உலகளாவிய கூட்டாண்மையானது, அனிருத்தின் கலைத்திறனின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் நெருக்கமாக இணைந்து செயல்படும். காலப்போக்கில், இந்த நிறுவனம் இப்பகுதியைச் சேர்ந்த வளர்ந்து வரும் பாப், ஹிப்-ஹாப் ஆகிய கலைஞர்களுக்கான தளமாக மாறும்.


கடந்த 15 ஆண்டுகளில் அனிருத்தின் சாதனைப் பட்டியல் பொறாமைப்படத் தக்கதாகவும், ஈடுஇணையற்றதாகவும் உள்ளது. 2012-ஆம் ஆண்டு 'ஒய் திஸ் கொலவெறி டி' என்ற உலகளாவிய வைரல் ஹிட் பாடலின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், இதுவரை தனது 770-க்கும் மேற்பட்ட பாடல்களின் மூலம் 13 பில்லியனுக்கும் அதிகமான ஆடியோ ஸ்ட்ரீம்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் ஸ்பாட்டிஃபை தளத்தில் மொத்த ஸ்ட்ரீம்களின் அடிப்படையில் தென்னிந்தியாவின் முதன்மைக் கலைஞராக அவர் உருவெடுத்துள்ளார். அத்துடன், தமிழ்த் திரைப்பட பின்னணி இசைத்துறையில் (OST) மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான இவர், ஹுக்கும், வாத்தி கமிங், அரபிக் குத்து, மோனிகா, A23 தீம், ஆஜா ராஜா, ஆயா ஷேர் உட்பட பல உலகளாவிய சார்ட்பஸ்டர் வெற்றிகளை வழங்கியுள்ளார்.


யுனிவர்சல் மியூசிக் இந்தியா, நான்கு முக்கியத் தென்னிந்திய மொழிச் சந்தைகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு) பரவியுள்ள செழுமையான கலைத்திறன் மற்றும் கலாச்சாரத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி, தென்னிந்திய பிராந்தியத்தில் ஒரு நிலையான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்தப் பிராந்தியத்தின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான அனிருத் உடனான இந்த ஒப்பந்தம், இங்கிருந்து வெளியாகும் முன்னோடி இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல உதவும். மேலும், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் இருப்பை இது மேலும் விரிவுபடுத்துகிறது.


இந்தக் கூட்டாண்மை குறித்து யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் தலைவர் & சிஇஓ, எஸ்விபி ஸ்ட்ரேடெஜி, ஏஎம்இஏ, தேவ்ராஜ் சன்யால் அவர்கள் கூறியதாவது: ‘அனிருத் இந்திய இசையின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கிறார் — துணிச்சலானவர், அசல் தன்மையுள்ளவர், மற்றும் அபாரமான ஆற்றல் கொண்டவர். மாற்றத்தை ஏற்படுத்தும் திறமையாளர்களைக் கண்டறிவதே யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் மிகப்பெரிய பலம்; இந்தக் கூட்டாண்மை  அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. அனிருத் தனது அடுத்த கட்ட பயணத்தைத் தொடங்கும் வேளையில், அவருக்குப் பின்னால் உறுதுணையாக நிற்பதிலும், இந்திய இசையை உலகிற்கு எடுத்துச் செல்ல உதவுவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்.’


அனிருத் ரவிச்சந்தர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்: "அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் என்பது கலைஞர்களின் ஆதரவுடன் கூடிய, உள்நாட்டிலேயே உருவான ஒரு நிறுவனமாகும். இது சுயாதீன திறமையாளர்களை வளர்த்தெடுப்பதிலும், அவர்களின் இசையை உலக மேடைக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்துகிறது. பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசைத்துறையில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் தலைமைத்துவம், அவர்களை ஒரு இயல்பான கூட்டாளராக மாற்றியுள்ளது. இந்திய சுயாதீன இசையின் அடுத்த அலைக்குத் தலைமை தாங்குவதிலும், அவற்றை உலகெங்கிலும் உள்ள இரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன்."


யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் எம்டி சனுஜீத் புஜபல் அவர்கள் இவ்வாறு கூறினார்: ‘இசைக்கு அப்பாற்பட்டும் படைப்புத்திறன் மிக்க சூழலை உருவாக்குவதில் அனிருத் நீண்டகாலமாக ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறார். திரைப்படங்களுக்காக எண்ணற்ற வெற்றிப் பாடல்களை வழங்கிய அவரது சிறப்பான சாதனைகளுடன், அவரது படைப்புகளை ஆழமாக இரசிக்கும் பிரம்மாண்டமான இரசிகர் கூட்டத்தையும் அவர் கொண்டுள்ளார். அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் என்பது பாப் மற்றும் ஹிப்-ஹாப் உலகில் அனிருத்தின் துணிச்சலான கலைப்பார்வையை பிரதிபலிக்கிறது. அவரது புதுமையான முத்திரையைப் போலவே, இந்தக் கூட்டாண்மையும் மற்றொரு மைல்கல்லான படைப்புத் தளத்தை உருவாக்கும் - இம்முறை வளர்ந்து வரும் இந்திய பாப் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட உலகிற்காக இது அமையும்.’



Universal Music India* forms exclusive partnership with *Anirudh Ravichander’s new label Albuquerque Records

 *Universal Music India* forms exclusive partnership with *Anirudh Ravichander’s new label Albuquerque Records* 



Universal Music India named as exclusive partner to new label Albuquerque Records established by trailblazing artist Anirudh Ravichander for non-film releases

Global agreement supports Universal Music India’s growing presence in pop and hip-hop, genres associated with some of the most influential names in the South Indian market.


Universal Music India, a division of Universal Music Group, the world leader in music based entertainment, today announces an exclusive partnership with Albuquerque Records – the independent record label recently launched by singer-composer Anirudh Ravichander. The partnership will see Universal Music India and Albuquerque Records release future pop and hip hop music by Anirudh Ravichander, and future artists signed to the label. The first release under the label is planned to release early April featuring Anirudh.


The global partnership will see Universal Music India work closely with Albuquerque Records to expand the influence of Anirudh’s artistry. In time the label will become home to emerging pop and hip-hop artists from the region. 


Anirudh’s track record over the last 15 years has been enviable and unparalleled. Debuting as a composer in 2012 with his global viral hit ‘Why This Kolaveri Di’, he has amassed over 13 billion audio streams across his over 770 + tracks, making him the No.1 South Indian artist on Spotify in terms of total streams.  Additionally, he is one of the most coveted composers in the Tamil Original Soundtrack (OST) space, with many global chart topping successes, including Hukum, Vaathi Coming, Arabic Kuthu, Monica ,A23 Theme, Aaja Raja, Aya Sher and more. 


Universal Music India has maintained a steady focus on the South Indian region, working closely with the  rich artistry and culture which spans the four key south language markets (Tamil, Malayalam, Kannada and Telugu). The arrangement with Anirudh, one of the regions most accomplished artists, will help further the presence of groundbreaking music from this region on the global stage. Additionally, it further expands Universal Music India’s presence in pop and hip-hop, genres associated with some of the most influential names in the South Indian market. 


Commenting on the partnership Devraj Sanyal, Chairman & CEO, Universal Music India; SVP Strategy, AMEA, said: ‘Anirudh represents the future of Indian music — bold, original, and with enormous potential. At Universal Music India, identifying transformative talent is our superpower, and this partnership reflects that belief. We’re proud to stand behind Anirudh as he embarks on his next chapter, and helps take more Indian music to the world.’ 


Anirudh Ravichander commented: “Albuquerque Records was built to be an artist-backed, homegrown label focused on nurturing independent talent and taking their sound to the global stage. Universal Music India’s leadership in pop and hip-hop made them the natural partner. I’m excited to champion the next wave of Indian independent voices and take them to audiences around the world.”


Sanujeet Bhujabal, MD Universal Music India said: ‘Anirudh has long been a defining force in shaping the creative landscape beyond music. Alongside his stellar track record of innumerable hit songs for films, he commands a phenomenal fanbase that engages deeply with his creative output. Albuquerque Records represents Anirudh’s bold artistic vision in the world of pop and hip hop. True to his legacy of innovation, this partnership is set to establish yet another landmark creative space—this time for the emerging world of iPop and beyond’.



Monday, 16 March 2026

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில்

 *ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!*





*ZHEN STUDIOS தயாரிப்பில், GenZ தலைமுறை ரொமான்ஸ் டிராமா “நீ Forever” மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது !!*


ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள "நீ Forever" திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.


இன்றைய GenZ  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 


நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.


இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (SaReGaMa) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 27 முதல் உங்கள் இதயங்களைக் கவர வருகிறது "நீ Forever".


தொழில்நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ் 

தயாரிப்பாளர்: புகழ் & ஈடன் 

எழுத்து  மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி 

இசை: அஸ்வின் ஹேமந்த் 

ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி 

எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன் 

கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன் 

ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக் 

ஒப்பனை: கலைவாணி பாலன் 

பாடலாசிரியர்: கு.கார்த்திக் 

ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார் 

ஒலி கலவை: அரவிந்த் மேனன் 

VFX: Hocus Pocus 

DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட் 

நடனம்: விஜயராணி 

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ் 

டப்பிங்: டி-ஸ்டுடியோஸ் 

போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்

மக்கள் தொடர்பு :  சதீஷ் (AIM)

Suriya’s ‘Vishwanath & Sons’ Teaser Unveiled - Venky Atluri Promises a Powerful Emotional Drama

 Suriya’s ‘Vishwanath & Sons’ Teaser Unveiled - Venky Atluri Promises a Powerful Emotional Drama*



The teaser of Vishwanath & Sons starring Suriya has been released, offering a glimpse into the world of Sanjay Vishwanath. Directed by Venky Atluri and produced by Suryadevara Naga Vamsi, the film promises an emotional and engaging cinematic experience.


The teaser introduces Sanjay Vishwanath, an international pistol shooter who continues to chase his dreams even in his 40s. Suriya appears in a layered role, portraying both fatherly warmth and emotional depth. His stylish presence and the impactful dialogues penned by Venky Atluri bring back shades reminiscent of his iconic performances.


Adding freshness to the narrative is Mamitha Baiju, who brings vibrant and charming energy to the film. The teaser hints at an unconventional love story involving a noticeable age gap. With Venky Atluri’s sensibility in storytelling, the film is expected to handle this aspect with depth and emotional maturity.


The teaser also highlights the film’s strong technical craft. G. V. Prakash Kumar delivers a classy and powerful background score that elevates the visuals. Cinematographer Nimish Ravi captures the film with rich and visually striking frames, while editing is handled by Navin Nooli. Production design by Banglan further enhances the film’s immersive world.


Touted as a large-scale family drama with strong emotional undercurrents, Vishwanath & Sons brings together a compelling ensemble and a top-tier technical team. Director Venky Atluri, who is riding high on the success of Lucky Baskhar and Vaathi, aims to deliver another memorable entertainer.


Produced under the banners of Sithara Entertainments and Fortune Four Cinemas, and presented by Srikara Studios, the film has successfully wrapped up shooting and is gearing up for a grand worldwide theatrical release this July.


Teaser Link : 

https://www.youtube.com/watch?v=glU1Xc7dTKk

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியீடு

 *சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியீடு*



*சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி ( (Venky Atluri)- ஒரு சக்தி வாய்ந்த எமோஷனல் டிராமாவை  வழங்க உறுதியளிக்கிறார்*


சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.


இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்...ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.


மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  


படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் - கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.


வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட -ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் '- ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. 'லக்கி பாஸ்கர் ', மற்றும் 'வாத்தி' ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.


சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.


Teaser Link : 

https://www.youtube.com/watch?v=glU1Xc7dTKk


ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்

 *ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி  – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!*




*ரவி மோகன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில்!*


நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.


Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy)  மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும் அனுபவத்தை வழங்க உள்ளனர்.


2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான “தாம் தூம்”, அந்நேரத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள், அழகான காதல் தருணங்கள் ஆகியவை அந்த காலத்து இளம் தலைமுறையை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக 2K தலைமுறைக்கும் இன்றளவும் நினைவில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.


இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் அவர், அரசியல் துறையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. அந்த காலத்தில் ஹிட் பட்டியலில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.


மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான “தாம் தூம்” படம், வணிக அம்சங்களுடன் கூடிய ஒரு முழுமையான கமெர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்தது. Mediaone Global Entertainment Limited மற்றும் Ayngaran International / Metro Film (P) Ltd ஆகிய நிறுவனங்கள் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தன.


18 ஆண்டுகளுக்குப் பிறகு, “தாம் தூம்” படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலீஸ் ஆகிறது.


இதனைத் தொடர்ந்து Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy)   மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் மேலும் பல வெற்றி திரைப்படங்களையும் எதிர் வரும் காலத்தில்.   ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


ரவி மோகன் ரசிகர்களுக்கும், 2000களின் நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கும் “தாம் தூம்” ரீ-ரிலீஸ் ஒரு சிறப்பு திரை அனுபவமாக அமையும் என்பது உறுதி.

எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ்

 *'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது - டாப் ஸ்டார் பிரசாந்த்*











*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை*


சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பயனாளிக் குடும்பங்களுக்கு இல்லங்கள் முறையாகத் திறந்து வைக்கப்பட்டு, அதற்கான சாவிகளை டாப் ஸ்டார் பிரசாந்த் வழங்கினார்.


பாதுகாப்பான மற்றும் உறுதியான வீட்டு வசதியை வழங்குவதன் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறக்கட்டளையின் தொடர் திட்டமான 'ஜோய் இல்லங்கள்" (Joy Homes) திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முயற்சி அமைந்துள்ளது.


நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முயற்சிகள் மூலம் அடிப்படை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அறக்கட்டளை கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடிப்படையில் 'ஜோய் இல்லங்கள் திட்டம் 7.5 லட்சம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 500 சதுர அடி பரப்பளவில், ஏறக்குறைய செலவில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு இல்லமும், சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களுக்கு வெறும் தங்குமிடத்தை மட்டுமல்லாமல், கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


வறுமை, இயற்கை சீற்றங்கள். நாள்பட்ட நோய்கள் மற்றும் மாற்றுத்திறன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களே இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். பாதுகாப்பான வீட்டு வசதியைப் பெறுவதற்குப் பெரும்பாலும் சிரமப்படும் சமூகக் குழுக்களே இவர்கள் ஆவர். நிலையான வீட்டு வசதியை வழங்குவதன் மூலம், இத்திட்டமானது இத்தகைய நலிந்த குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் வாய்ப்புகளைத் கட்டமைத்துக்கொள்ளவும், எதிர்காலத்திற்கான தேடிக்கொள்ளவும் வழிவகை செய்கிறது.


சிறந்த தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள இல்லங்களையும் சேர்த்து, கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'ஜோய் இல்லங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மொத்த இல்லங்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ளது. இத்திட்டத்தின் அடுத்தகட்ட விரிவாக்கமாக, தெலங்கானாவில் மேலும் 50 இல்லங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன; அதேவேளையில், ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 50 இல்லங்களைக் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் அறக்கட்டளையின் வீட்டு வசதித் திட்டங்களின் வீச்சு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையானது தனது நிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு (CSR) சார்ந்த முன்னெடுப்புகளைச் சுகாதாரம், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் மையப்படுத்தியுள்ளது. குறிப்பாக, போதிய வசதிகள் அற்ற சமூகங்களில் நிலவும் கட்டமைப்பு சார்ந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையிலான திட்டங்களுக்கே அறக்கட்டளை முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் மாதாந்திர டயாலிசிஸ் கருவிகளை விநியோகித்தல், டயாலிசிஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்குதல்,மருத்துவமனை வார்டுகளை புதுப்பித்தல் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் இரத்த தான இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தல் ஆகியவை இதன் சுகாதார முயற்சிகளில் அடங்கும்.


கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், அறக்கட்டளை அதன் 'ஜோய் ஆஃப் ஹோப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியை ஆதரித்தது. கேரளாவின் திருச்சூரில், டயாலிசிஸ் மையம், நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவு மற்றும் பிற சிறப்பு சேவைகளை உள்ளடக்கிய மூத்த குடிமக்கள் பராமரிப்பு வசதியையும் அறக்கட்டளை இயக்குகிறது.


கூடுதலாக, தையல் மற்றும் அழகுக்கலை திறன்களில் தொழில் பயிற்சி திட்டங்கள் மூலம், பெண்கள் நிதி சுதந்திரத்தை அடைவதற்குத் தேவையான திறன்களுடன் அதிகாரம் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் குடும்பங்களை ஆதரிக்கவும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கவும் முடியும்.


ஜோய் ஹோம்ஸ் திட்டம், நிலையான வீட்டுவசதி என்பது சமூக மேம்பாட்டிற்கான ஒரு அடிப்படை படியாகும். குடும்பங்கள் பாதுகாப்பான வாழ்க்கையையும் பிரகாசமான எதிர்காலத்தையும் உருவாக்க உதவுகிறது என்ற அறக்கட்டளையின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.


இந்நிகழ்வில் டாப் ஸ்டார் பிரசாந்த் பேசுகையில், ''இங்கு வருகை தந்திருக்கும் என்னுடைய நண்பர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. சென்னையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி இது 18 ஆம் ஆண்டு. இன்றைய நாளில் கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பணியை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தினர் தொடங்கியிருக்கிறார்கள்.


பொதுவாக கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதை தொடர்ந்து வீட்டை கட்டிப் பார் என்றும் சொல்வார்கள் அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்கள். அதனை ஜோய் ஹோம்ஸ் என்று தொடங்கி இருக்கிறார்கள்.‌


வீடில்லாத...நிலமில்லாத.. தமிழகம் முழுவதும் உள்ள மிகவும் கஷ்டப்படும் ஐம்பது குடும்பத்தினரை தேர்வு செய்து ஒரு தரமான - அருமையான - வீட்டை அவர்களுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.


ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை. அது 'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய சந்தோஷம்.


வீடு மட்டுமல்லாமல் மக்கள் எங்கெங்கு கஷ்டப்படுகிறார்களோ..! புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றாலும்... அவர்களை தேடிச்சென்று மருத்துவ உதவி செய்கிறார்கள். இந்த கை உதவி செய்வதை அந்த கைக்கு தெரியாமல் செய்கிறார்கள். அந்த குடும்பத்தினர் முழுவதும் பொதுமக்களின் நன்மைக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள்.  அதிலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இதனை தொடர்ந்து செய்து வருவது சாதாரண விசயம் அல்ல மிகப் பெரிய விசயம்.  


நான் அனைவரிடமும் சொல்வது என்னவென்றால் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஜோய் தொலைநோக்கு சிந்தனை உள்ளவர். மனிதநேயமும் அன்பும் அக்கறையும் கொண்டவர். சிறந்த ரோல் மாடல்.  


தனி ஆளாக நின்று கடுமையாக உழைத்து இன்று ஜோய் ஆலுக்காஸ் எனும் பிரம்மாண்டத்தை உருவாக்கி இன்றும் எளிமையாகவும் பணிவாகவும் இருப்பவர். இது தொடக்கம் தான். இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை இன்னும் விரிவடையும்.


ஜோய்ஸ் ஹோம் திட்டத்தில் வீடுகளை பெறும் பயனாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.