Featured post

Athiradi” Will Surely Connect with Tamil Audiences – Director Arun Anirudhan

 *“Athiradi” Will Surely Connect with Tamil Audiences – Director Arun Anirudhan* *Dubbing for “Athiradi” in Tamil Was a Memorable Experience...

Sunday, 17 May 2026

Athiradi” Will Surely Connect with Tamil Audiences – Director Arun Anirudhan

 *“Athiradi” Will Surely Connect with Tamil Audiences – Director Arun Anirudhan*











*Dubbing for “Athiradi” in Tamil Was a Memorable Experience – Director-Actor Basil Joseph*


*How Could I Say No When a Friend Invites Me? – Sanju Samson at the “Athiradi” Pre-Release Event*


*Basil Joseph Gives His Absolute Best in Everything He Does; I Am Here for Him – Sanju Samson*


Directed by Arun Anirudhan and starring Tovino Thomas, Basil Joseph, Vineeth Sreenivasan, Riya Shibu and several others, Athiradi is gearing up for a grand multi-language release. Jointly produced by Basil Joseph and Anandu S., the film has been written by Arun Anirudhan and Paulson Skaria. Athiradi is slated for release in Malayalam, Tamil, Kannada, Telugu and Hindi.


The pre-release event of Athiradi was held recently in Chennai in the presence of the cast and crew. Adding to the excitement of the occasion, Indian cricketer Sanju Samson attended the event as a special guest.


Director Arun Anirudhan said, “Discussions regarding the title of this film began nearly two years ago. It was Basil Joseph who suggested the title Athiradi. The word itself has a strong impact in Tamil, and similarly, the film too carries an energy and impact that suits its title. We sincerely hope audiences celebrate this film in theatres.


Working with Basil Joseph and Tovino Thomas has been a wonderful experience. The film unfolds against a college backdrop and carries elements that I believe Tamil audiences will find enjoyable and relatable.”


Writer Paulson Skaria said, “I am currently learning Tamil and trying to speak it. I genuinely want everyone to watch this film. It is a complete entertainer packed with all the ingredients for an engaging theatrical experience. The film has been performing well in Malayalam, and I strongly believe Tamil audiences will enjoy it as well.


Rather than simply translating dialogues from Malayalam into Tamil, we put in a lot of effort to ensure the dialogues feel natural and relatable to Tamil audiences. Thank you all for your support.”


Actor Basil Joseph said, “Vanakkam to everyone. I have dubbed for myself in Tamil for this film, and through the process, I have gradually learned the language. It turned out to be a very enjoyable experience. Since childhood, I have often heard the word Athiradi, and now, I find myself acting in a film carrying the same title. I believe this film will entertain audiences across all age groups.


The response in Malayalam has been extremely encouraging, and I hope Tamil audiences too will embrace it warmly. We paid special attention to ensuring the Tamil dialogues feel natural and relatable for Tamil audiences. Even the placement of Tamil songs in the film has been done carefully.


I would like to thank Sanju Samson for joining us today. We did try to cast him in the film, but he politely declined. This is a film meant to bring joy and laughter to audiences.


Dubbing in Tamil was a memorable experience. Initially, a few words felt difficult, but gradually the language became easier and more enjoyable. The writers were extremely supportive throughout. Tamil audiences have always stood behind genuine effort, and the warmth and affection received here continue to amaze me. The love I experienced during my previous visit to Chennai remains unforgettable, and I will always remain grateful to Tamil audiences.


When it comes to choosing between acting and directing, I personally enjoy directing more. Acting feels like sitting in the passenger seat, whereas directing feels like being behind the wheel. Naturally, I enjoy being in the driver’s seat. At present, I have not seriously considered balancing both acting and directing simultaneously, as both demand immense focus.”


Indian cricketer Sanju Samson said, “Vanakkam to everyone. Attending a film event is a completely new experience for me. When a friend invites you, there is simply no way you can say no. I am genuinely happy to be here.


They approached me for a small role in the film, but I told them that if I ever act, it should be a slightly bigger role. Directors are the right people to decide what kind of characters would suit me.


Basil is always cheerful and approachable, but when it comes to work, he becomes extremely focused and disciplined. Even if friends invite him for dinner, he prefers knowing in advance. Whatever he commits to, he gives his absolute best. When he invited me to this event, I could clearly see the effort he had put in, and I genuinely wanted that hard work to receive the success it deserves.


Ever since joining CSK, my sense of responsibility has naturally grown. Playing for a big franchise with so many trophies naturally comes with greater responsibility. Even outside cricket, fans shower me with affection, asking us to win matches and bring home trophies. That warmth feels truly special.


I believe I have begun a beautiful journey in Chennai. Growing up, I watched many Tamil films, and today, playing for Tamil Nadu and Chennai has made this city feel like a second home. I especially love Chennai’s food. Just last week, I visited a Nair Mess, and the food was absolutely fantastic.”

அதிரடி" தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது - இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்

 *"அதிரடி" தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது - இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்*











*நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? - அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்*


*டொவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிரடி படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்தில்*



இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அதிரடி." பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, "இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் "அதிரடி" என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அதிரடி என்பது சுத்தமான தமிழ் பெயர் தான். அதிரடி என்ற வார்த்தைக்கு ஒரு தாக்கம் இருக்கிறது, இதேபோல் இந்தப் படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் ஏற்றவாரு ஒரு தாக்கம் இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடி மகிழ வேண்டும். பசில் ஜோசப், டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்," என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும் போது, "தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறேன். எல்லாரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். என்டர்டெயின்மென்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். மலையாளத்தில் இந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தின் வசனம் மலையாளம் - தமிழ் என்று மொழி பெயர்ப்பு செய்வதை தாண்டி அதிக மெனக்கெடலுடன் வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு எழுதப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி," என்றார்.


பசில் ஜோசப் பேசும் போது, "எல்லாருக்கும் வணக்கம், இந்தப் படத்திற்கு தமிழில் நான் தான் டப்பிங் செய்துள்ளேன். இதனால் தமிழ் தெரியும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறு வயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன். தற்போது இதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள், கலாச்சாரத்துடன் ஒற்றுப் போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம். படத்தில் தமிழ் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் அவர் விரும்பவில்லை. இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். தமிழில் டப் செய்யும் போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது, பிறகு தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர். உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழில் கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை சென்னை வந்த போது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். நடிப்பு, இயக்கம் இரண்டிலும் எனக்கு இயக்கம் தான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பின் போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது, இயக்கத்தின் போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை போன்றதாகும். எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை, இரண்டையும் ஒருசேர செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்," என்றார்.


இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும் போது, "அனைவருக்கும் வணக்கம், திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர். பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர். அவர் கமிட் செய்யும் எந்தவொரு விஷயத்திற்கும் அதீத உழைப்பை கொடுப்பார். இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போதும், அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிக பொறுப்பு கூடியிருக்கிறது. பெரிய ஃபிரான்சைஸ், அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும் போது ரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள், கோப்பையை வெல்லுங்கள், தட்றோம், தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன். சிறு வயதில் நிறைய தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்து இருக்கிறேன். தற்போது தமிழ் நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறி இருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், உணவு அற்புதமாக இருந்தது, என்றார்.

தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்

 *"தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்*






சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் 'மண்டவெட்டி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி.


இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, "'மண்டவெட்டி' திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு உடல்ரீதியாகவும் மாறி வாழ்ந்திருக்கிறார் கோமலி. மிகுந்த சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல் ரீதியாக கடினமான தருணங்கள் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு அவர் நடித்தார். இந்தக் கதை, தன்னைவிட பலமிக்க சக்தியுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையையும், மனக்குழப்பங்களையும் மையமாகக் கொண்டது. அதனால் இந்த கதாபாத்திரம் பலவீனம், கொந்தளிப்பு, வலி மற்றும் மீண்டு வரும் மனவலிமை என இவை அனைத்தையும் கோமலி தேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்". 


மேலும் அவர் கூறியதாவது, "சூப்பர் நேச்சுரல் கதையை படம் மையமாகக் கொண்டிருந்தாலும் உணர்வு சார்ந்த உண்மைகளையும் 'மண்டவெட்டி' பேசும். பழமைவாதத்தில் இருந்து தன்னையே மீண்டும் கண்டுபிடிக்க முயலும் ஒரு பெண்ணின் கதையே இதன் மையம். அந்தக் கதாபாத்திரத்திற்கு கோமலியின் அற்புதமான நடிப்பை படக்குழுவே வியந்து பாராட்டியது" என்றார். 


டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'மண்டவெட்டி' திரைப்படம் பதட்டம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். 'செஞ்சி' எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தை மையமாகக் கொண்ட மர்மமான புராணக் கதையைக் கொண்டு, மனதை பதறவைக்கும் மற்றும் உணர்வுப்பூர்வமான உலகிற்குள் இந்த திரைப்படம் பயணிக்கிறது. தற்போது படத்தின்ன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


*தொழில்நுட்பக் குழு:*


தயாரிப்பு நிறுவனம் : டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,

தயாரிப்பாளர் & இயக்குநர் : சரண்ராஜ் செந்தில்குமார்,

ஒளிப்பதிவு : பிரகாஷ் மனிதன்,

படத்தொகுப்பு : குணா பழனிசாமி,

இசையமைப்பாளர் : தீபக் வேணுகோபால்,

சண்டைக் காட்சிகள் : கெளதம்,

உடை வடிவமைப்பு : சங்கீதா சென்,

ஒலி கலவை : டோனி ஜே ஆண்டனி,

டிஐ கிரேடிங் : பாலகங்காதரன்,

சிஜிஐ : விஜயன்,

தயாரிப்பு மேலாளர் : மகேந்திரன் கந்தசாமி,

ஒப்பனை : நர்மதா

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்

Komalee Prasad has given her complete heart and soul for Mandavetti” - Director Saranraj

 *“Komalee Prasad has given her complete heart and soul for Mandavetti” - Director Saranraj Senthilkumar Praises The Actress’s Fierce Transformation*






Certain performances go beyond merely portraying a character, they demand emotional surrender, physical endurance and a willingness to step into deeply unfamiliar emotional terrain. Actress Komalee Prasad appears to have embraced exactly such a challenge in Mandavetti, director Saranraj Senthilkumar’s upcoming supernatural crime thriller, where she plays a character layered with vulnerability, rage, suffering and mysticism.

 

Director Saranraj Senthilkumar says: “From the very beginning, I knew Mandavetti needed an actress who could carry extraordinary emotional depth while also embodying fearlessness. Komalee Prasad did not merely perform the role, she lived through the emotional and physical intensity the character demanded. There were moments of extreme exhaustion, emotionally draining sequences and physically demanding situations, but her sincerity and commitment never wavered. Since the story revolves around a woman battling a force far greater than herself while navigating unbearable agony and emotional chaos, the performance demanded multiple layers, fragility, ferocity, pain and resilience. Komalee embraced all of it with remarkable conviction.”


Furthermore, he adds, “The soul of Mandavetti lies in its emotional truth despite the supernatural world surrounding it. At its core, it is the story of a woman trying to reclaim herself while confronting an ancient force that has chosen her for reasons she slowly begins to uncover. Komalee brought an honesty to the character that deeply moved us as a team.”


Written, directed and produced by Saranraj Senthilkumar under the banner of Tuskers Den Pictures, Mandavetti is conceived as a dark supernatural crime thriller blending psychological tension, folklore and raw human emotions. Featuring Komalee Prasad in the lead role, the film explores the mysterious mythology surrounding “Senji,” a fierce local deity whose presence drives the story into deeply unsettling and emotionally charged territory. The film is currently progressing through post-production stages.



*Technical Team**



Banner: Tuskers Den Pictures


Producer & Director: Saranraj Senthilkumar


Cinematography: Prakash Manithan


Editor: Guna Palinisamy


Music Director: Deepak Venugopal


Stunt Choreography: Gowtham


Costume Design: Sangeetha Sen

Sound Mixing : Tony J Antony 

DI Grading : Balaganghadaran

CGI : Vijayan

Production Manager : Mahendran Kandasamy

Makeup: Narmada

PRO: Suresh Chandra – Abdul Nassar

Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post

 *Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post*





Filmmaker Atlee and wife Priya Atlee have revealed the name of their baby daughter through a social media post. The couple announced that they have named their newborn “Miyou.”


The announcement was shared alongside a soft pastel visual featuring the baby’s tiny hand. The image also carried the text, “A tiny person with the biggest place in our hearts.”


Sharing the post, the couple wrote, “Our art of love now has a name 💕🧿 MIYOU — beauty, gentleness & love. With luv, MEER, PRIYA & ATLEE 💕🧿.” The post highlighted the meaning behind the name, describing Miyou as symbolising beauty, gentleness and love.


Soon after the reveal, fans and members of the film industry flooded social media with congratulatory wishes for the family. The post quickly gained attention online, with many appreciating the emotional yet minimal style of the announcement.



அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்....

 *அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு  “மியூ” (Miyou) எனப்  பெயர் சூட்டியுள்ளார்கள்....*





தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள  பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.


இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.


இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது  “மியூ” (Miyou)  — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர்,  ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர்.


மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த பெயர் வெளியானதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உணர்ச்சிபூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்த இந்த அறிவிப்பு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


*Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post*


Filmmaker Atlee and wife Priya Atlee have revealed the name of their baby daughter through a social media post. The couple announced that they have named their newborn “Miyou.”


The announcement was shared alongside a soft pastel visual featuring the baby’s tiny hand. The image also carried the text, “A tiny person with the biggest place in our hearts.”


Sharing the post, the couple wrote, “Our art of love now has a name 💕🧿 MIYOU — beauty, gentleness & love. With luv, MEER, PRIYA & ATLEE 💕🧿.” The post highlighted the meaning behind the name, describing Miyou as symbolising beauty, gentleness and love.


Soon after the reveal, fans and members of the film industry flooded social media with congratulatory wishes for the family. The post quickly gained attention online, with many appreciating the emotional yet minimal style of the announcement.



https://www.instagram.com/reel/DYbXHRVisae/?igsh=ajF5eWRtaXJuaTN1

அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று 17.5.2026 சூப்பர் ஸ்டார் *ரஜினிகாந்த் பேசியதாவது

 அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று  17.5.2026 சூப்பர் ஸ்டார்

*ரஜினிகாந்த் பேசியதாவது*.



தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்ன பத்தி ஒரு ரெண்டு மூணு விமர்சனங்கள் சோசியல் மீடியால அரசியல் உலகத்தில பரவலா வந்திற்றுக்கு... அதுக்கு வந்து நான் விடை கொடுக்கலைன்னு சொன்னா அது வந்து உண்மையா ஆயிடும்... நான் நேற்று பெங்களூர் சென்றிருக்கும்போது நீங்க யாராவது வந்து இருப்பீங்க விடை கொடுக்கலாம் என்று நினைத்தேன்... திரும்பி வரும்போதும் அங்க மீடியா யாரும் இல்ல.. பதினெட்டாம் தேதி கேரளாவில் ஷூட்டில் இருந்தது அப்போதும் அதற்கு விடை கொடுக்கலாம் என்று இருந்தேன் அப்போதும் நீங்க யாரும் வரல..


 முதலாவதாக தேர்தல் முடிவுகள் வந்தபோது நான் ஸ்டாலின் சாரை போய் பார்த்தேன் அது கொஞ்சம் விமர்சனங்கள் வந்துச்சு.. ஸ்டாலின் சார் என்னுடைய 38 ஆண்டுகளாக நண்பர் எங்களுடைய நட்பு கொள்கைகள்,அரசியலுக்கு அப்பாற்பட்டது... ஜனநாயகத்தின் தோல்வி வெற்றி சகஜம்.. இருந்தாலும் ஸ்டாலின் சார்  கொளத்தூரில் தோற்றது எனக்கு சங்கடமாக இருந்தது.. அப்படியா நான் பேசுறேன் அதற்காக நண்பன் என்ற முறையில் நட்பு முறையில் நான் போய் பார்த்தேன்.... அதுக்கு நான் விஜய் வந்து சிஎம் ஆக கூடாது.. அவர் வரக்கூடாதுன்னு  அதை தடுக்க பார்த்தேன்.. மேலும்.. வேறு ஏதோ ரெண்டு பெரிய பார்ட்டி வந்து சேரணும்னு சொல்றாங்க... அப்படின்னு சில விமர்சனங்கள் வருது... அந்த சூழ்நிலையில அப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படிப் பேச ரஜினிகாந்த் ஒரு தரம் கெட்ட ஆள் இல்லை.. அதை நான் தெளிவுபடுத்துகிறேன்      


இரண்டாவதாக நான் விஜய் வாழ்த்தவில்லை என்று சொல்கிறார்கள்


அவர் ஜெயிச்ச உடனே நான் எக்ஸ்ட்ராத்துல வாழ்த்துக்கள் பதிவிட்டேன் 

 

நான் 2016ல அரசியலுக்கு வரேன்னு சொன்னபோது ஏர்போர்ட்டில் மீடியாக்காரங்க இருப்பாங்க அவர்களுக்கு பதில் சொல்வது வழக்கம்... அதேபோல் . மீடியா காரங்க இருப்பாங்களான்னு கேட்டபோது மீடியாக்காரர்கள் இல்லை என்று சொன்னார்கள்... திடீர் என்று ஒரு சின்ன போன் வைத்துக்கொண்டு ஒருவர் கேள்வி கேட்க அவர் மீடியாக்காரன் இல்லாதது போல் எனக்கு தெரிந்தது... திடீரென்று வந்து விஜய் சிஎம் ஆயிட்டாரு அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேள்விகள் எழுப்ப,... நான் ஷாக் ஆயிட்டேன் மீடியா மாதிரியே தெரியல எனக்கு.. நான் சிரித்துக் கொண்டே போய் விட்டேன்.. அதற்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று  ஒரு விமர்சனம் வைக்கிறார்கள்.. மற்றொன்று விஜய் மேல் எனக்கு பொறாமை என்று.. நான் அரசியலில் இல்ல அரசியலில் இருந்து விலகி விட்டேன் நான் அரசியலில் இல்லாத போது எனக்கு ஏன் அவர் மேல் பொறாமை.. ஒருவேளை கமலஹாசன் முதலமைச்சராக வந்திருந்தா பொறாமை வந்திருக்குமோ தெரியாது....அப்போ கூட  வந்திருக்காது... கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது...  எனக்கும் விஜய் க்கும் ஒரு ஜெனரேஷன் கேப் இருக்கு. கிட்டத்தட்ட 25 வருடம்.. நான் முதலிலேயே சொல்லி இருக்கேன் நான் வந்து விஜய கம்பேர் பண்ணா அது எனக்கு நல்லதல்ல  கெட்ட பேரு.. விஜய் என்ன கம்பேர் பண்ண அது அவருக்கு கெட்ட பேரு.. விஜயை நான் சின்ன வயசுல இருந்து அவரை பார்த்துகிட்டு இருக்கேன்.. அவர் முதலமைச்சர் ஆனதில்  எனக்கு என்ன பொறாமை...  அதுவும் இந்த சின்ன வயசுல 52 வயசுல எம்ஜிஆர் என்டிஆர் சாதனை பண்ணத விட  ஜாஸ்தி.. கம்ப்ளிட்டா சென்டர் பிஜேபி.. எவ்ளோ பெரிய பவர்ஃபுல் சென்டர்.. இங்க ரெண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளா வந்து  ஜெயிச்சிருக்காங்க.. அதுவும் சினிமா இண்டஸ்ட்ரில இருந்து எனக்கு பொறாமை இல்ல ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம்.. சோ எனக்கு பொறாமை இல்ல விஜய் அவங்க கிட்ட நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு  ஜனங்க கிட்ட.. அந்த எதற்கு எதிர்பார்ப்பு எல்லாம் அவர் சந்திச்சு மக்களுக்கு நல்லது செய்யணும்.. செய்வாங்க.. என்ற நம்பிக்கை இருக்கு... அவருக்கு வாழ்த்துக்கள்... 

 பதவியேற்பு விழாவின்போது ஜெயலலிதா அவர்கள் ஆசைப்பட்டிருந்தாங்க நான் போயிருந்தேன் அது மட்டும் சொல்ல நினைத்தேன் மிஸ் ஆயிடுச்சு... நினைவு கூர்கிறேன்..


என்று ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து  உரையாடினார்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*

 *வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*













*இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!*


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  தயாரிப்பில்  “96, மெய்யழகன்"  படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி  K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.


தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு  இசையமைத்த கோவிந்த் வசந்தா  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி போன்ற

 *அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி போன்ற படங்களை இயக்கிய வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கும் "பூ காய் கனி"*












*இண்டிபெண்டன்ட் ஆல்பங்களில் நடித்த kCP மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக அறிமுகமாகும் "பூ காய் கனி"*


*கொட்டாச்சியின் மகள் மானசி கதாநாயகியாக அறிமுகமாகும் "பூ காய் கனி"*


*தளபதி விஜய் அவர்கள் விரைவில் ஆட்சி அமைப்பாரென்று தளபதி கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சொன்ன *விசிறி* படத்தை தயாரித்தவர் திரு *A.ஜமால் சாகிப்* அவர்கள்....

மீண்டும் தயாரிக்கும் படம் *பூ காய் கனி*



இப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை....


இப்படத்தை

*அரும்பு மீசை குறும்பு பார்வை*, *வெண்ணிலா வீடு* ,*விசிறி*, போன்ற படங்களை இயக்கிய.

இயக்குனர் *வெற்றிவீரன் மகாலிங்கம்*இயக்குகிறார்.


இவர் சமீபத்தில் தான் *அயலி* வெப் தொடர்  நட்சத்திரங்களுடன் விஜய் டிவி *புகழ் * நடித்த *சூட்கேஸ்* படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 

இப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது....


மேலும் தற்போது  முழுக்க முழுக்க மண்வாசத்துடன் எழுதி இயக்கும் படம் தான் 

*பூ காய் கனி*.



தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான  திரைக்கதை  கொண்ட படமாக இருக்கும் என்கிறார்....


*சூட்கேஸ்* படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த *ராஜேஸ்வரி வெற்றிவீரன்* அவர்கள் *பூ காய் கனி* படத்தை *பழையனூர் சந்தனம் பட கம்பெனி* சார்பாக தயாரிக்கிறார் 


 *பூ காய் கனி* படத்தில்  கதையின் நாயகனாக *KCP மிதுன் சக்கரவர்த்தி* அறிமுகமாகிறார்...

இவர் *அடியே வெள்ளழகி,ஏன் என்னை காதலிச்ச* போன்ற  இண்டிபெண்டண்ட்  ஆல்பங்களில் நாயகனாக நடித்துள்ளார்


அதுமட்டும் இன்றி  நாயகனுக்கு தேவையான முழு பயிற்சியையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ...


அடுத்ததாக கதையின் மையக்கருவாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பவர்...


உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற *டூலெட்* படத்தின் கதை நாயகனான *சந்தோஷ் நம்பிராஜன்* மலைக்கள்ளன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார்....


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் *மானசி* நடிகர் கொட்டாசியின் மகளான இவர் *பூ காய் கனி* படத்தில்...கதைநாயகியாக அடுத்த படிக்கட்டு  எடுத்து வைக்கிறார்.


*பூ காய் கனி* படத்தின்  இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கத்தின் மகனான *ராஜூ மகாலிங்கம்* ஐந்து வயதிலிருந்து *புஷ்பா  ,ராயன், ஜவான்* போன்ற படங்களில்  பின்னணி குரல் கொடுத்தவர்....

*அதர்வா* நடித்த *தனல்* படத்தில் வில்லன் அஸ்வினுக்கு மகனாக நடித்தவர்...

*பூ காய் கனி* படத்தில்  நாயகனின் சிறு வயது பாத்திரத்தில் நடிக்கிறார்...

அத்தோடு இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்...


மேலும் முக்கிய நிகழ்வாக *மாயன் விருமாண்டி* போன்ற  படத்திற்குப் பிறகு *கூத்துப்பட்டரையில்* இருந்து பயிற்சி பெற்ற பத்துக்கும் அதிகமான நடிகர்களை இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். 


ஒளிப்பதிவாளர் *பி ஜி முத்தையா* 


இசை 

*தன்ராஜ் மாணிக்கம்* 


பாடல்கள்: கருமாத்தூர் *மணிமாறன்*- *வெற்றிவீரன் மகாலிங்கம்*


பல வெற்றி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியது  மட்டுமின்றி *வல்லினம்* படத்திற்கு தேசிய விருது பெற்ற *V.J.சாபு ஜோசப்*  அவர்கள் படத்தொகுப்பை கவனிக்கிறார்.


இந்திய அளவில் கலை இயக்குனராக ஆடை வடிவமைப்பாளராக  பல தேசிய விருதுகளை வாங்கிய கலை இயக்குனர் *பி கிருஷ்ணமூர்த்தி* அவர்கள் மறைந்து இருந்தாலும் இப்படத்திற்கு அவர்தான் கலை இயக்குனராக பணியாற்றவிருக்கிறார்...


ஆம் அவரிடம் உதவி கல இயக்குனராக ஐந்து படங்களுக்கு வேலை செய்த இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கம்...

மேற்பார்வையில் கலை இயக்கத்தை செய்து அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்...


பல முன்னணி நிறுவனங்களில்  வியாபாரம் அனுபவம் பெற்ற...

*சோனி மாறன்* அவர்கள் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்....


மக்கள் தொடர்பு:

 *ஆனந்த்* 


பப்ளிசிட்டி டிசைன்ஸ்: *செல்வா*


இணை தயாரிப்பு:

*குரு சின்னச்சாமி*