Featured post

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்

 திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்! 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்...

Thursday, 27 March 2025

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்

 திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!






'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது.


இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'பண்டிட் குயின்' படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா.


'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பட்டேன். காளியின் சாராம்சமே கடும் தியாகங்கள் தான். படக்குழுவினரும் தங்களுடைய கடும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். மேலும், படத்திற்கான தியாகங்களுக்கு காளி நிச்சயம் வெற்றி தருவாள் என்ற உறுதியுடன் உள்ளனர். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது" என்றார்.

Global Star Ram Charan, Janhvi Kapoor, Buchi Babu Sana, AR Rahman, Venkata Satish Kilaru,

 *Global Star Ram Charan, Janhvi Kapoor, Buchi Babu Sana, AR Rahman, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings Pan India Film PEDDI, Jaw-Dropping First Look Unleashed*



Global Star Ram Charan is all set to take the silver screen by storm once again with his highly awaited 16th film, directed by National-Award Winning director Buchi Babu Sana of Uppena fame. This pan-India spectacle is presented by the Pan India production house Mythri Movie Makers, with the creative force of Sukumar Writings. The film is produced by the visionary Venkata Satish Kilaru under his ambitious banner Vriddhi Cinemas.


Before the real storm hits, the makers yesterday released a pre-look poster, sparking immense curiosity ahead of the first look reveal. Extending birthday wishes to Ram Charan, the makers unveiled the film’s title as PEDDI. The title perfectly encapsulates the power and gravitas of Ram Charan’s character, hinting at something truly monumental.


Ram Charan undergoes a stunning, rugged metamorphosis for PEDDI, shedding his superstar aura to embrace an intense, earthy, and fiercely raw character. The first look poster captures him in a gritty, no-nonsense avatar- with his piercing eyes, messy hair, untamed beard, and nose ring- exuding an air of unshakable dominance. Clad in a rugged attire, and smoking a cigar, Ram Charan embodies a character that’s unapologetically fierce and deeply rooted in raw power. Adding to the intrigue, a second poster reveals him holding an old cricket bat, with a rustic village stadium illuminated by floodlights in the background. These posters have sparked curiosity about the film’s backdrop and narrative, suggesting a blend of rural intensity and gripping drama.


Buchi Babu’s meticulous approach to Ram Charan’s character is evident in the first-look posters, showcasing a transformative portrayal with deep attention to detail. The posters promise a raw character with layers that will unfold, highlighting Buchi Babu’s commitment to crafting something unique, and Ram Charan’s dedication to give authenticity to the character.


PEDDI is being mounted on an epic scale with an unprecedented budget, cutting-edge technology, breathtaking visuals, and world-class production values. The sheer scope and magnitude of this film are enough to get fans and industry insiders alike talking, and it’s poised to deliver an experience that will leave audiences in awe.


The film boasts an exceptional ensemble cast, uniting some of the most acclaimed and cherished actors from across different film industries. A standout feature of the movie is the presence of Kannada megastar Shiva Rajkumar, who portrays a key character. Janhvi Kapoor is the leading lady, while Jagapathi Babu, and Divyendu Sharma are the other prominent cast.


The movie has top-tier technicians handling different crafts. The music, composed by the Oscar-winning AR Rahman, guarantees a soundtrack that will be nothing short of unforgettable. The stunning visuals are brought to life by renowned cinematographer R. Rathnavelu ISC, while National-Award winning Navin Nooli takes care of editing and Avinash Kolla adds his creative brilliance as the production designer.


With the buzz around PEDDI already at a fever pitch, the jaw-dropping first-look poster has only amplified the anticipation. With a team of National Award-winning talents behind the project, PEDDI is set to be nothing short of a magnum opus.


Cast: Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma


Technical Crew:

Writer, Director: Buchi Babu Sana

Presents: Mythri Movie Makers, Sukumar Writings

Banner: Vriddhi Cinemas

Producer: Venkata Satish Kilaru

Music Director: AR Rahman

DOP: R Rathnavelu

Production Design: Avinash Kolla

Editor: Navin Nooli

Production Design: Avinash Kolla

Executive Producer: V. Y. Praveen Kumar

குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும் 'பெடி ( PEDDI) 'படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

 *'குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும் 'பெடி ( PEDDI) 'படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு*



'குளோபல் ஸ்டார்' ராம்சரண் - ஜான்வி கபூர் - புச்சிபாபு சனா - ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு - விருத்தி சினிமாஸ்-  மைத்ரி மூவி மேக்கர்ஸ் - சுகுமார் ரைட்டிங்ஸ் -  ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌


தேசிய விருது பெற்ற 'உப்பென்னா ' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குளோபல் ஸ்டார்' ராம் சரணின் 16 வது படமாக தயாராகும் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கும் இந்த கூட்டணி, வெள்ளித்திரையில் புயலை கிளப்ப தயாராக உள்ளனர். இந்த பான் இந்திய திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது‌. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட‌ சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். 


அசலான புயல் தாக்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் நேற்று இப்படத்தின் ஒரு ஃபிரீ லுக் போஸ்டரை வெளியிட்டனர். இது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதற்கு முன்னதாக பெரும் ஆர்வத்தை தூண்டியது. ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த படக்குழுவினர், இப்படத்தின் டைட்டிலை பெடி ( PEDDI) என்று வெளியிட்டுள்ளனர். இந்த தலைப்பு ராம்சரண் கதாபாத்திரத்தின் சக்தி மற்றும் ஈர்ப்பை மிகச் சரியாக உள்ளடக்கி இருக்கிறது. உண்மையிலேயே மகத்தான ஒன்றை இந்த டைட்டில் குறிக்கிறது. 


பெடி ( PEDDI ) படத்திற்காக ராம் சரண் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றம் பெற்றிருக்கிறார். ஒரு தீவிரமான மண் சார்ந்த-  அழுத்தமான கதாபாத்திரத்தை தழுவி இருக்கிறார் ராம் சரண். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-  அவரை ஓர் கரடு முரடான அவதாரத்தில் வெளிப்படுத்துகிறது. துளையிடும் கண்கள் - கலைந்த கூந்தல் - சீர் படுத்தாத தாடி மற்றும் பிரத்யேக மூக்கு வளையத்துடன் அசைக்க முடியாத ஆதிக்கத்தினை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. கரடு முரடான உடையில், ஒரு சுருட்டினை புகைக்கும் ராம் சரண் - மன்னிப்பு கேட்காமல் கடுமையான மற்றும் ஆழமாக வேரூன்றிய ஒரு கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார். இதனுடன் இணைந்து வெளியிடப்பட்ட இரண்டாவது போஸ்டரில், அவர் ஒரு பழைய கிரிக்கெட் மட்டையை ஏந்தி இருப்பதை காண முடிகிறது. பின்னணியில் வெள்ளை விளக்குகளால் ஒளிரும் ஒரு கிராமப்புற அரங்கமும் இடம்‌பிடித்திருக்கிறது. இந்த போஸ்டர்கள் படத்தின் பின்னணி மற்றும் கதை பற்றிய ஆர்வத்தை தூண்டி உள்ளன. இது கிராமப்புற தீவிரம் மற்றும் அழுத்தமான நாடகத்தின் கலவையை குறிக்கிறது. 


ராம் சரணின் கதாபாத்திரத்தை இயக்குநர் புச்சிபாபு கவனமாக அணுகி இருப்பது... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெளிவாக தெரிகிறது. ஆழ்ந்த கவனம் செலுத்தி ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த போஸ்டர் பல்வேறு அடுக்குகளுடன் கூடிய ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை உறுதி செய்கிறது. தனித்துவமான ஒன்றை வடிவமைப்பதில் புச்சிபாபுவின் அர்ப்பணிப்பையும், கதாபாத்திரத்திற்கு நம்பகத் தன்மையை வழங்குகிறது. அத்துடன் ராம்சரணின் அர்ப்பணிப்பையும் காட்சிப்படுத்துகிறது. 


பெடி( PEDDI)  இதற்கு முன் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பட்ஜெட் - அதிநவீன தொழில்நுட்பம் - வியக்க வைக்க கூடிய காட்சி அமைப்புகள் - உலக தரம் வாய்ந்த தயாரிப்பு மதிப்பு-  என பிரம்மாண்டமாக உருவாகிறது. இவை ரசிகர்களையும் , தொழில்துறையினரையும் பேச வைத்திருக்கிறது. அத்துடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் ஒரு அனுபவத்தை வழங்கவும் தயாராக உள்ளது. 


இந்த படத்தில் பல்வேறு திரைப்பட துறைகளை சார்ந்த மிகவும் பாராட்டப்பட்ட விரும்பப்படும் நடிகர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது.  இந்த திரைப்படத்தில் 'குளோபல் ஸ்டார் 'ராம் சரணுடன் கன்னட மெகா ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ,ஜெகபதி பாபு ,திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


இந்த திரைப்படத்தில் திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்திருக்கிறார்கள். ஆஸ்கார் விருதினை வென்ற ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அதனால் இப்படத்தின் இசை - மறக்க முடியாத இசை தொகுப்பை வழங்கும் என்பதை உறுதி செய்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருதினை பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார். இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லாவும்  இணைந்திருக்கிறார். 


பெடி ( PEDDI) பற்றிய பரபரப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் - படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. தேசிய விருது பெற்ற திறமையான கலைஞர்களின் குழு படத்தின் பின்னணியில் இருப்பதால் பெடி ( PEDDI) ஒரு மகத்தான படைப்பாக இருக்கும். 


நடிகர்கள் : ராம்சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார் ,ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா 


தொழில்நுட்பக் குழு : 


எழுத்து & இயக்கம் : புச்சி பாபு சனா 

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் 

தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ் 

தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாரு 

இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் 

ஒளிப்பதிவு : ஆர் . ரத்னவேலு ISC

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு : நவீன் நூலி 

நிர்வாக தயாரிப்பாளர் : வி ஒய் பிரவீண் குமார்.

சம்பலில் இருந்து குலசேகரபட்டினம் வரை நீண்ட தூரம் பயணித்திருந்தேன்”

 *"சம்பலில் இருந்து குலசேகரபட்டினம் வரை நீண்ட தூரம் பயணித்திருந்தேன்” நடிகை சீமா பிஸ்வாஸ்!*



'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது.


இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'பண்டிட் குயின்' படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா. 


'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பட்டேன். காளியின் சாராம்சமே கடும் தியாகங்கள் தான். படக்குழுவினரும் தங்களுடைய கடும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். மேலும், படத்திற்கான தியாகங்களுக்கு காளி நிச்சயம் வெற்றி தருவாள் என்ற உறுதியுடன் உள்ளனர். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது" என்றார்.

I had traveled a long way from Chambal to Kulasekara Patnam,” says Seema Biswas

 “I had traveled a long way from Chambal to Kulasekara Patnam,” says Seema Biswas.



The special screening of Om Kali Jai Kali received a phenomenal response. Some audience who watched the movie felt an intense divine presence, as if the spirit of the goddess had descended upon them. The atmosphere was heightened by religious devotees who lit camphor, creating a mystical, almost sacred ambiance. The entire place took on a festive look, brimming with energy and reverence.


The cast of the series was celebrated, with Seema Biswas, who played a pivotal role, drawing particular admiration. Reflecting on her journey, she recalled her iconic performance in Bandit Queen and expressed confidence that her role as Kathadi would surpass even her most acclaimed past performances.


She also spoke about the numerous challenges faced during filming, including serious injuries to both artists and technicians. “The terrains of Kulasekara Patnam and Chambal Valley are equally unforgiving, but the people were incredibly warm. I was treated with immense respect and love . Some believe that the very essence of Kali demands such sacrifices, and those involved in the film are confident that their hardships and bloodshed will not be in vain, but rather, will be rewarded in ways yet to unfold she added .


I strongly believe that the spirit of Kali is not merely invoked—it is endured, success is ensured when we find faith in our work too.

Pradeep Ranganathan, Mamitha Baiju, Keerthiswaran, Mythri Movie Makers

 Pradeep Ranganathan, Mamitha Baiju, Keerthiswaran, Mythri Movie Makers Telugu-Tamil Bilingual #PR04 Launched Grandly






Pradeep Ranganathan, who made a remarkable acting debut with the blockbuster Love Today, which he also directed, has since gained widespread popularity with his recent hit Dragon, which was successful in both Tamil and Telugu. With a string of consecutive successes, Pradeep Ranganathan has made a name for himself not only in Tamil cinema but also in Telugu. The Pan-India production house Mythri Movie Makers has announced a Tamil-Telugu bilingual project starring Pradeep Ranganathan in the lead. The film will mark the directorial debut of Keerthiswaran, who previously worked as an assistant director on several high-profile projects.


The movie, #PR04, was launched today with a grand pooja ceremony. The first visuals from the muhurtham ceremony reveal an intriguing sequence featuring Pradeep Ranganathan, starting with an intense stare and culminating in a playful kiss, hinting at the film's promise of being a full-fledged entertainer with a fresh, new-age storyline.


Mamitha Baiju, known for her role in Premalu, stars as the lead actress, while senior actor Sarath Kumar plays a crucial role in the film.


Mythri Movie Makers has enlisted a talented team of technicians for this project. The music will be composed by the rising sensation Sai Abhyankkar, while Niketh Bommi handles the cinematography. Latha Naidu serves as the production designer, and Barath Vikraman is the editor.


The film's shoot is currently underway.


Cast: Pradeep Ranganathan, Sarath Kumar, Mamitha Baiju, Hridhu Haroon, Dravid Selvam & Others.


Technical Crew:

Writer & Director: Keerthiswaran

Producers: Naveen Yerneni, Y Ravi Shankar

CEO: Cherry

Executive Producer: Anil Yerneni

Music: Sai Abhyankkar

Cinematographer: Niketh Bommi

Production Designer: Latha Naidu

Costume Designer: Poornima Ramaswamy

Editor: Barath Vikraman

Tamil PRO: Suresh Chandra, Satish 

Telugu PRO: Vamsi-Shekar

Marketing: First Show

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில்

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கும் #PR04 படம் பிரம்மாண்டமாக தொடங்கியது!*






பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த 'லவ் டுடே' படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான 'டிராகன்' படமும் தமிழ் தெலுங்கில் பெரும் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கான இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்திருக்கிறார். இப்பொழுது பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு பல பெரிய படங்களில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று #PR04 திரைப்படம் பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியது. படத்தின் முதல் காட்சி பிரதீப் ரங்கநாதன் இடம் பெறும்படி படமாக்கப்பட்டது. தீவிரமான காட்சிகளுடன் தொடங்கி விளையாட்டான முத்தத்துடன் இந்த காட்சி முடிவடைந்தது. இதிலிருந்து இந்த படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் சார்ந்து ஒரு நியூ ஏஜ் கதையாக இருக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது.


'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜு இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள். வளர்ந்து வரும் மியூசிக்கல் சென்சேஷன் சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவை கையாளுகிறார். லதா நாயுடு தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், பரத் விக்ரமன் எடிட்டராகவும் பணியாற்றுகிறார்.


படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.


*நடிகர்கள்*: பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு, ஹிருது ஹரூன், டிராவிட் செல்வம் மற்றும் பலர்.


*தொழில்நுட்பக் குழு:*

எழுத்து மற்றும் இயக்கம்: கீர்த்தீஸ்வரன்,

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y ரவிசங்கர்,

தலைமை செயல் அதிகாரி: செர்ரி,

நிர்வாக தயாரிப்பாளர்: அனில் எர்னேனி,

இசை: சாய் அபயங்கர்,

ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: லதா நாயுடு,

ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்,

மக்கள் தொடர்பு (தமிழ்): சுரேஷ் சந்திரா, சதீஷ் 

மக்கள் தொடர்பு (தெலுங்கு) : வம்சி-சேகர்

மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ மதுரை - திருச்சி ப்ரமோஷன்

 *'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ மதுரை - திருச்சி ப்ரமோஷன்*






HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மதுரை மற்றும் திருச்சியில்  நடைபெற்றது. 


எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீர தீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம்  சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் -  மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரத்தை தொடர்ந்து  நேற்று  மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னணியில்  பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சீயான் விக்ரம், துஷாரா விஜயன், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், '' எங்களை உற்சாகப்படுத்தும் மாணவ மாணவிகளுக்கு நன்றி. அனைவரும் 27ஆம் தேதி அன்று வீர தீர சூரன் படத்தை தியேட்டரில் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும். 


'சாமி' படத்தில் சீயான் சாரும், திரிஷா மேடமும் ரொமான்ஸ் செய்திருப்பார்கள். உங்களைப் போலவே நானும் அதற்கு மிகப்பெரிய ரசிகை. உங்களுக்கு பிடித்ததை போல் இந்த படத்திலும் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. படத்தில் ஆக்சன் - ரொமான்ஸ்-  மாஸ்-  என எல்லாமும் இருக்கும். நாங்கள் அனைவரும் ரசிகர்களாகிய உங்களின் மனதை கொத்தாக எடுத்து செல்வோம். 


இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மேலூரில் தான் நடைபெற்றது. இயக்குநர் அருண்குமார் சார் 'சித்தா' போன்ற படத்தை இயக்கியவர். அவர் எப்போதும் பெண் கதாபாத்திரங்களை அழுத்தமாக எழுதக்கூடியவர். இந்தப் படத்தில் என் கேரக்டரின் பெயர் கலைவாணி. கலைவாணி - காளி இந்த  இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும். 


அனைத்து மேடைகளிலும் சொல்வதைத் தான் இங்கும் சொல்கிறேன். இந்த குழுவுடன் தொடர்ந்து பத்து படங்களில் பணியாற்ற வேண்டும் என்று சொன்னாலும் பணியாற்றுவேன். '' என்றார். 


இயக்குநர் அருண்குமார் பேசுகையில், '' நான் மதுரையில் தான் பிறந்தேன். வளர்ந்தேன். படித்தேன். இந்த நிகழ்வு நடக்கும் தனியார் கல்லூரிக்கு அருகே தான் எங்கள் வீடு இருக்கிறது. இந்த கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள். முதன் முறையாக வருகை தந்திருக்கிறேன். உங்களுடைய உற்சாகமான - ஆரவாரமான வரவேற்பு நன்றி. பரவை தான் என்னுடைய சொந்த ஊர் அங்கிருந்து இங்கு வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.‌


அனைவரும் 'வீர தீர சூரன்' படத்தை தியேட்டருக்கு வருகை தந்து பாருங்கள். சீயான் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். ஏனெனில் நானும் ஒரு சீயானின் ரசிகன் தான். 


இங்குள்ள சிந்தாமணி தியேட்டரில் தான் 'தூள்' திரைப்படம் பார்த்தேன். ரசித்தேன். இன்று அவர் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக சீயான் விக்ரமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


'வீர தீர சூரன் - பார்ட் 2' படத்திற்கு கிடைக்கும் வரவேற்புக்கு பிறகு தான் பார்ட் ஒன் படத்தை எடுக்க வேண்டும். இதுவரை அதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை. ஆனால் நிச்சயமாக முதல் பாகம் வெளியாகும்.‌ '' என்றார். 


சீயான் விக்ரம் பேசுகையில், '' மங்கையர்க்கரசி என்ற பெயரே சிறப்பாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளான நீங்கள் அனைவரும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் கண்ட கனவுகளை நனவாக்குவதற்காக  தொடர்ந்து செல்லுங்கள். பெரிதாக கனவு காணுங்கள். 


இயக்குநர் அருண் குமாரை நான் 'சித்தா' என்று தான் அழைப்பேன். தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த இயக்குநர். இந்தத் திரைப்படத்தை அழகாக இயக்கியிருக்கிறார். இந்த படம் மதுரையில் நடக்கும் கதை. அதனால்தான் உங்களை சந்திப்பதற்கு வேட்டி அணிந்து வந்திருக்கிறேன். அதனால் தான் மீசையை முறுக்கி இருக்கிறேன். ஆனால் படத்தில் என்னை அழுக்காக்கி நாஸ்தி செய்திருக்கிறார்கள். அதனால் தான் தற்போது கூலிங் கிளாஸ் அணிந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு ஒரே ஒரு உடை தான். படம் முழுவதும் அந்த உடையில் தான் இருப்பேன். 


கமர்சியல் சினிமா என்று சொல்வார்கள் தானே.. அதனை யதார்த்தமாக உருவாக்கி இருக்கிறோம். அதனால் இந்த படத்தை பார்த்து நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். இந்தப் படத்தில் இடம்பெறும்  ரொமான்ஸ் காட்சிகளை இயக்குநர் மிகவும் ஷட்டிலாக காண்பித்திருக்கிறார். இதற்கு உங்களின் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றவுடன்.. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தருணத்திலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 


இந்தப் படத்தில் அழகான துஷாராவையும் பார்க்கலாம். ஆக்ரோஷமான துஷாராவையும் பார்க்கலாம். அவருடைய நடிப்பு பிரமாதம். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


அத்துடன் மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மேடையில் பாடல் பாடியும், நடனம் ஆடியும், செல்ஃபி எடுத்துக் கொண்டும் அனைவரையும் சீயான் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் உற்சாகப்படுத்தினார்கள்.

Wednesday, 26 March 2025

The Door Movie Review

The Door Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம door ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jaaidev  direct பண்ண இந்த படத்துல bhavana , Ganesh Venkatram, Jayaprakash, Nandhu, Sriranjini, Kapil Velavan, and Priya Venkatலாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட concept ஒரு horror  படமா குடுத்திருக்காங்க. 2010 ல வெளி வந்த asal  படத்துக்கு அப்புறமா கிட்ட தட்ட 13 வருஷம் கழிச்சு இந்த படம் மூலமா comeback குடுத்திருக்காங்க னு தான் சொல்லியாகணும். இந்த படத்தை இவங்களோட husband naveen  rajan  தான் produce  பண்ணிருக்காரு. அதோட இந்த படத்தோட டைரக்டர் வேற யாரும் கிடையாது   bhavana  ஓட தம்பி   தான். 



இது bhavana  ஓட 86 வது படம். இந்த படத்தோட poster  அ இவங்க birthday  ஆனா போன வருஷம் june  6 ஆம் தேதி release  பண்ணிருந்தாங்க. varun உன்னி தான் இந்த படத்துக்கு music  composer  and  goutham  g  தான் cinematography portions அ handle பண்ணிருக்காரு. முதல் ல இந்த படத்துல வேற ஒரு heroine நடிக்க வேண்டியதா இருந்தந்து ஒரு சில காரணத்துனால நானே இந்த படத்துல நடிச்சிட்டேன் னு பாவனா ஒரு interview ல சொல்லிருக்காங்க. 


இந்த படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா பாவனா ஒரு construction  site ல ஒர்க் பண்ணறாங்க. இவங்களுக்கும் இவங்களோட அப்பாக்கும் ஏதோ ஒரு சண்டை வருது அதுனால பேசாம இருக்காங்க. அப்போ தான் bhavana ஓட construction  site  ல ஒரு தடங்கல் வருது அதாவது அந்த எடத்துல ஒரு சின்ன கோவில் ஒன்னு இருக்கும் அதா இடிச்சிடுங்க னு பாவனா சொல்லறாங்க. அப்போ இவங்களுக்கு அப்பா கிட்ட இருந்து call வருது, ஆனா இவங்க attend பண்ணல மறுநாள் பாத்த இவங்களோட அப்பா மர்மமான முறை ல இறந்து கிடக்குறாங்க. இந்த phase ல இருந்து மீண்டு வரதுக்கு ஒரு  break எடுக்கறாங்க. அப்புறம் மறுபடியும் construction site க்கு போய் வேலை பாக்க ஆரம்பிக்குறாங்க. அந்த கோவில் இடிச்சதுக்கு  அப்புறம் ஏதோ ஒரு அமோனிஷ்யாம ஒரு சத்தம் கேட்குது. இந்த sound effects லாம் ரொம்ப super  அ இருந்தது. இதுக்கு அப்புறம் இவங்களுக்கு ஏதோ ஒரு பொண்ணு அழகுற சத்தம் கேட்குது அது என்னனு பாக்கும் போது மாயமா மறஞ்சுடுது. பாவனா ஓட native மதுரை தான் construction க்காக சென்னை ல ஒரு room ல தங்கிட்டு இருப்பாங்க. இங்கயும் நெறய விஷயங்களை பாக்குறாங்க ஆனா நம்ப மறுக்கறாங்க அதுக்கு காரணம் இவங்களுக்கு சாமி பக்தியும் சரி மூட நம்பிக்கை மேலையும் பெருசா அபிப்ராயம் கிடையாது. இந்த பேய் க்கும் பாவனா க்கும் என்ன சம்பந்தம்? இந்த பேய் தான் பாவனா ஓட அப்பாவை கொன்னுச்சா ? இந்த பேய் முதல யாரு ன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ற விதமா இந்த door திரைப்படம் அமைச்சிருக்கு. 


படத்தோட ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்கும் ரொம்ப interesting அ கதையை எடுத்துட்டு போயிருக்காங்க. படத்தோட  direction  அ பாக்கும் போது எந்த distractions  யும் இல்லாம ரொம்ப straight  forward  அ கதையை மக்கள் க்கு குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். இந்த படத்தோட highlight அ இருக்கற scenes ந அது கண்டிப்பா preclimax யும் climax scenes யும் தான். இன்னொரு விஷயம் என்னனா sound mixing  தான். horror concept க்கு ஏத்த மாதிரி அருமையான sound effects அ குடுத்திருத்தங்க. vfx லாம் கூட ரொம்ப கம்மியா தான் இந்த படத்துல use பண்ணிருக்காங்க. நெறய scenes பயமுறுத்தற மாதிரியும் திகிலா வும் இருக்குனு தான் சொல்லணும். 


மொத்தத்துல ஒரு thrilling  ஆனா horror படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாருங்க.