Featured post

யோலோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது

 *"யோலோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது!!* *அண்ணா யுனிவர்சிடி கல்லூரி விழாவில்,  ஆயிரக்கணக்கான மாணவர்கள்...

Sunday, 23 March 2025

யோலோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது

 *"யோலோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது!!*










*அண்ணா யுனிவர்சிடி கல்லூரி விழாவில்,  ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில்,  “யோலோ” படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது !!*


*ஜாலியான ஃபேண்டஸி ரோம் காம் திரைப்படமான, "யோலோ"   பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது!!*


MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள “யோலோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல்  வெளியாகியுள்ளது. 


அண்ணா யுனிவர்சிடியில் நடந்து வரும் கேட்வே 2025 கல்லூரி விழாவில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், யோலோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், முதல் சிங்கிள் பாடலான “ ஐம் ஃபரம் உளுந்தூர்பேட்டை” பாடலும் வெளியிடப்பட்டது. 


இளமை துள்ளும் அட்டகாசமான இசையில் அமைந்த இப்பாடலுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 


Gen Z தலைமுறையைக் கவரும் வகையில், பார்த்தவுடன் ரொமான்ஸை தூண்டும் வகையில், காதலர்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் சிங்கிள் பாடல்,  திரை ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்று வருகிறது.  


நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்வில் நடந்தால் எனும் ஃபேண்டஸி தான் இந்தப் படத்தின் மையம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக,  இப்படம் உருவாகியுள்ளது. 


இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படத்தை  இயக்கியுள்ளார். 


இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். 


இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில், ரசிகர்களைக் கொள்ளை கொள்ளும் வகையிலான 6 பாடல்கள் படத்தில் உள்ளது. இதில் ஒரு அழகான மெலடிப் பாடலை பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும்  பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.


படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.  



தொழில் நுட்பக் குழு

தயாரிப்பு நிறுவனம் - MR Motion Pictures

தயாரிப்பாளார் - மகேஷ் செல்வராஜ்  

இயக்கம் - S. சாம்

ஒளிப்பதிவு - சூரஜ் நல்லுசாமி

இசை - சகிஷ்னா சேவியர்

எடிட்டிங் - A L ரமேஷ்

கலை இயக்கம் – M தேவேந்திரன்

கதை - ராம்ஸ் முருகன்

ஸ்டண்ட் - டேஞ்சர் மணி 

நடனம் – கலைக்குமார், ரகு தாபா

திரைக்கதை - S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்

பாடல்கள் - முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ்

உடைகள் - நட்ராஜ்

உடை வடிவமைப்பு - மீனாட்சி ஸ்ரீதரன்

ஸ்டில்ஸ் - மணியன்

தயாரிப்பு நிர்வாகி -புதுக்கோட்டை M. நாகு

விளம்பர வடிவமைப்பு – யாதவ் JBS

மக்கள் தொடர்பு - சதீஷ் ( AIM )


Song Link ▶️ https://youtu.be/x1LoxN1mG9Q?si=ENjJ-eIhbrmshHFI

சீயான் விக்ரம் நடிக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' ஹைதராபாத் ப்ரமோஷன்-

 *சீயான் விக்ரம் நடிக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு*








HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. 


எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீரதீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது . இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம்  சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் -  மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப் படுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நேற்று ஹைதராபாத்தில்  பத்திரிகையாளர்கள்  சந்திப்பு நடைபெற்றது. 


இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர் என் வி ஆர் சினிமாஸ் என். வி. பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 


விநியோகஸ்தர் / தயாரிப்பாளர் பிரசாத் பேசுகையில், '' வீர தீர சூரன் படம் சிறப்பாக தயாராகி இருக்கிறது. நடித்திருக்கும் கலைஞர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். அதிலும் சீயான் விக்ரம் இந்த படத்திற்காக  அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். 


இங்கு நான்கு படங்கள் வெளியானாலும் ஐந்து படங்கள் வெளியானாலும் பார்த்து ரசிப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல சினிமாவை எதிர்பார்க்கிறார்கள். இரண்டரை மணி நேரம் சினிமாவிற்காக ஒதுக்குகிறார்கள் என்றால்.. அவர்களை திருப்திப்படுத்துவது படக் குழுவினரின் கடமை. ஒரு படம் நன்றாக இருந்தால் காலைக்காட்சியில் இருந்து வேர்ட் ஆஃப் மவுத் மூலமாகவும், சமூக வலைதள பக்கத்தில் ஒரே ஒரு போஸ்ட் போட்டாலும் போதும். படம் ஹிட் ஆகிவிடும். காலை காட்சியை விட இரவு காட்சியில் நிலைமை தலைகீழாக மாறிவிடும். அந்த வகையில் :வீர தீர சூரன்' திரைப்படம் இங்கு திரையிடப்பட்டு சென்சேஸனல் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.  படத்தில் நடித்த நடிகர்களுக்கு நல்ல பெயர், புகழ் கிடைக்க வேண்டும். இந்த படத்தில் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும். இதற்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் '' என்றார். 


நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில், '' அனைவருக்கும் வணக்கம். தெலுங்கிலும் சில நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். அதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லருக்கும் இங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.


தமிழாக இருந்தாலும்... தெலுங்காக இருந்தாலும் ... கன்னடமாக இருந்தாலும் ... மலையாளமாக இருந்தாலும்... ரசிகர்கள். எந்த ஜானரிலான படங்களாக இருந்தாலும் நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளுக்கு ஆதரவு தருகிறார்கள். 


இந்தப் படம் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட படம். இருந்தாலும் இது கிராமிய பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. மார்ட்டின் ஸ்கோர்செஸி ராஜமுந்திரி கதைக்களமாக கொண்டு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ..! அப்படி இருக்கும் இந்த திரைப்படம். இயக்குநர் அருண்குமார் பெருந்தன்மையானவர் நல்ல மனிதர். திறமைசாலி. 


இந்த படத்தில் 15 நிமிட நீளத்திற்கு ஒரு சிங்கிள் ஷாட் இருக்கிறது. அது இரவு நேரத்தில் வரும் காட்சி. சிங்கிள் ஷாட்டில் படமாக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். இதற்காக பத்து நாட்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒத்திகையில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு நடிகர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகையில் ஈடுபட்டார்கள். நான்காவது நாள் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அது கடைசி நாள் படப்பிடிப்பு. அன்று இந்த காட்சியை படமாக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருந்தோம். முதல் டேக் ஐந்து நிமிடங்களில் ஒருங்கிணைப்பு இல்லாததால் திட்டமிட்டபடி படமாக்கப்படவில்லை. அடுத்த டேக் ஒன்பது நிமிடங்கள் வரை சென்றது. அதன் பிறகு மூன்று- நான்கு- ஐந்து -ஆறு -ஏழு -என்று டேக் சென்று கொண்டே இருந்தது. ஒருங்கிணைப்பில் துல்லியம் இல்லாததால்.. இயக்குநர் எதிர்பார்த்தபடி அந்த காட்சி அமையவில்லை. மணி அதிகாலை 4 மணியை நெருங்கி கொண்டிருந்தது. மீண்டும் அனைத்தையும் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் ஆகும். திட்டமிட்டபடி காட்சியை படமாக்க முடியாதோ..! என்ற கவலையில்.. இயக்குநர் கண்களில் இருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. அதன் பிறகு நாங்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்லி.. தற்போது மீண்டும் முயற்சிக்கும் போது வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்தோம். அனைவரும் இந்த காட்சி நன்றாக வரவேண்டும் என பிரார்த்தனை செய்ய தொடங்கினோம். அதன் பிறகு சரியாக 5:00 மணிக்கு நடிக்க தொடங்கினோம். அந்த ஷாட் எந்தவித தடங்கலும் இல்லாமல் 5: 16க்கு நிறைவடைந்தது. 


விக்ரம் - தென்னிந்தியா சினிமா முழுவதும் பெருமை கொள்ள வேண்டிய நட்சத்திரம். திறமையான நடிகர். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மேலும் மேலும் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றியதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். 


இந்தப் படத்தை திரையரங்குகளில் அனைவரும் பார்த்து, நல்லதொரு ஓப்பனிங்கை உருவாக்கித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகர் சீயான் விக்ரம் பேசுகையில், ''  அனைவருக்கும் வணக்கம். படத்தைப் பற்றியும் , படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் எஸ் ஜே சூர்யா விரிவாக பேசிவிட்டார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


நான் 'தூள்', 'சாமி' என மாஸாக ... ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறேன். தற்போது கூட மாஸாகத்தான் நடித்து வருகிறேன் . இருந்தாலும் ரஸ்டிக்காக நடிக்க வேண்டும் என விரும்பினேன்.  இதைத்தான் இயக்குநர் அருண்குமாரிடம் .. என்னுடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல் படம் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன்.  ரசிகர்களுக்காக அவர்கள் ரசிக்கும் படத்தை கொடுப்பதற்காக நானும், அருண்குமாரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். 


இது எமோஷனலான படம். அனைத்தும் உணர்வுபூர்வமாக இருக்கும். இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என்று சொன்னவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் இருக்கும். நல்லவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்களாகவும் இருப்பார்கள். 


நானும், எஸ் ஜே சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவரது இயக்கத்தில் வெளியான 'வாலி' படமும், என்னுடைய நடிப்பில் வெளியான 'சேது' படமும் சம காலகட்டத்தில் வெளியானது. நாங்கள் இருவரும் பல விருதுகளை சமமாக வென்றோம். 


அதன் பிறகு அவர் நடிக்க வந்து விட்டார். அவருடைய நடிப்பை பார்த்தேன். ரசித்தேன். 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது அந்த வழியாக கடந்து சென்றேன். அப்போது அவர் மகேஷ்பாபு உடன் நடிப்பதாக சொன்னார்கள்.  அதன் பிறகு ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி', 'மாநாடு', 'டான்' என  ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டி நிரோ- அல்பசினோ - போன்ற நடிகர்கள் தான் நினைவுக்கு வரூகிறார்கள். அவருடைய நடிப்பு முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. அவரிடமிருந்து நான் சில விசயங்களை கற்றுக் கொண்டேன்.  ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார்.  அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. 


இது ஒரு கமர்ஷியல் படம் தான் என்றாலும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவும் இருக்கிறது.  


இந்தப் படம் பக்கா மாஸான கமர்சியல் படம் அல்ல. ஆனால் மாஸான காட்சிகள் இருக்கிறது. கமர்சியல் எலிமெண்ட் இருக்கிறது. ஆனால் அவை நேரடியாக இருக்காது. ஆனாலும் படம் பார்க்கும் ரசிகர்களை உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ளக்கூடிய படமாக இருக்கும்.  தெலுங்கில் அருண்குமார் இயக்கிய 'சேதுபதி' படமும், 'சித்தா' படமும் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் கலவையாக இந்த 'வீரதீர சூரன் ' இருக்கும். 


இயக்குநர் அருண்குமார் சிறந்த கதாசிரியர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நூறு பேர் இருக்கிறார்கள் என்றால்.. அந்த நூறு பேருக்கும் ஒரு அழுத்தமான பின்னணி இருக்கும்.  கதைக்களம் ரியாலிட்டியுடன் இருக்கும். இப்படத்தினை டப்பிங் பேசும்போது பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குநர் ரசித்து உருவாக்கியிருக்கிறார்.  


தெலுங்கில் வெளிவரும் கதைகள் சிறப்பாக இருக்கிறது. கமர்சியல் படங்களை பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் உருவாக்குகிறார்கள். தெலுங்கு ரசிகர்கள் சின்ன பட்ஜெட் படத்தையும் கொண்டாடுகிறார்கள். பெரிய பட்ஜெட் படத்தையும் கொண்டாடுகிறார்கள். இங்கு உள்ள மக்கள் சினிமா மீதும், நட்சத்திரங்கள் மீதும் காட்டும் அன்பு அதீதமானது தனித்துவமானது. 


இந்தப் படமும் நல்ல படம். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

குறிப்பாக இந்த படத்தின் தொடக்கக் காட்சியை தவற விடாதீர்கள். இதற்காக சில நிமிடங்களுக்கு முன்பே திரையரங்கத்திற்குள் வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் '' என்றார். 


இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ நிதி கல்லூரியில்  விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரியா ஷிபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் சசி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


தயாரிப்பாளர் ரியா ஷிபு பேசுகையில், ''  'வீர தீர சூரன்' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரின் உற்சாகத்தை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கேரளாவிற்கு 'ஆர் ஆர் ஆர்' படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக ஜூனியர் என்டிஆர்- ராஜமௌலி -ராம்சரண்- ஆகியோர் வருகை தந்தனர் அவர்கள் கேரளா முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போது கிடைத்த உற்சாக வரவேற்பு ... இங்கு இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். 


'சித்தா' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். யூ . அருண்குமார் இயக்கத்தில் திறமை வாய்ந்த கலைஞர்களான விக்ரம் -எஸ் ஜே சூர்யா- சுராஜ்- துஷாரா ஆகியோர் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்' திரைப்படம் எதிர்வரும் 27ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் '' என்றார். 


இதனைத் தொடர்ந்து திரளாக கூடியிருந்த மாணவ மாணவிகள் 'வீர தீர சூரன்' படத்தின் நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டும், அவருடைய உருவப்படங்களை பரிசாக வழங்கியும் தங்களுடைய அன்பினையும் , ஆதரவையும்  உற்சாகம் குறையாமல் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். திரளாக கூடி இருந்த கல்லூரி மாணவ மாணவிகளிடத்தில் சீயான் விக்ரம் 'வீர தீர சூரன்' படத்தினை பற்றிய சிறப்பம்சங்களையும் , அனுபவங்களையும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்.

ராபர் படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு

 ராபர் படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு




.நகை அணிந்து  கொண்டு வெளியில் வரும் பெண்களே கவனமாக இருங்கள் ..


இப்படியொரு விழிப்புணர்வு கருத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்ற படம் ராபர்



 இந்த படக்குழுவினர் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியை சந்தித்து வாழ்த்து  பெற்றனர்.


  அப்போது, படக்கருவை பாராட்டிவிட்டு,  படக்குழுவினரிடம் "நமக்கான முழு வெற்றி கிடைக்கும் வரை ஓயாமல் போராடுங்கள், ஓடிக்கொண்டே இருங்கள்"  எப்போதும் என் உதவி இருக்கும் என்று  வாழ்த்தியுள்ளார்.


#Robber is Running successfully 💥 


Release By @SakthiFilmFct

Directed By @itsSMPandi 

Produced By @kavithareporter @akananda

Music @johanmuzic

DOP @nsuthay

Starring @Metro_Sathya

@Danielanniepope

#Jayaprakash #Sendrayan #DeepaShankar

இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் உருவாக்கத்தில் உருவாகிய அறம் செய்

 இயக்குனர் எஸ்  பாலு  வைத்தியநாதன் உருவாக்கத்தில் உருவாகிய  அறம் செய் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது 






















           இயக்குனர் எஸ்  பாலு  வைத்தியநாதன் அவர்களின் கதை எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு என்ற அனைத்து பொறுப்புகளையும் ஏற்று உருவாக்கி இருக்கிற படைத்திருக்கிற அறம் செய் திரைப்படத்தை பார்த்தோம்.

சுவேதா அவர்கள் இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் இயக்குனர் எஸ்  பாலு  வைத்தியநாதன் அவர்கள் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் அல்ல  அரசியல் மாற்றம் என்பதே இலக்கு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். கல்லூரிகளை தனியார் மயமாக்குவது அதனால் விழிமுறைகளின் சமூகத்தை சார்ந்த மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்  என்பதை ஒரு கதையோட்டமாகவும் அடிப்படை மாற்றம் இல்லாமல் அரசியலில் எந்த புதிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது  என்கிற அடிப்படையில் அறம் செய் அரசியல் அமைப்பு என்கிற இயக்கத்தை உருவாக்கி போராடுகிற இளைஞர்கள் ஒருபுறம் என்கிற அடிப்படையில்  இந்த கதையை அவர் உருவாக்கி இருக்கிறார். மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்லூரியை தனியார் மயக்கமாகக் கூடாது என்று உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுக்குகிறார்கள். தொடர் உண்ணாவிரதத்தை நடத்தி தொடங்கி பிறகு  அதனை சாகும் வரை உண்ணாவிரத அறப்போராட்டமாகவும், அரசியல் தலையீடுகளால் மாணவர்கள் வன்முறைக்கு இலக்காகுகிறார்கள். போராடுகிற மாணவி ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார்.  அந்த போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற ஒரு நிலைப்பாட்டையும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் படைத்திருக்கிறார். ஒருபுறம் ஒட்டுமொத்தத்தில் அரசியலின் மாற்றத்தை உருவாக்க வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியல் இயங்க வேண்டும். மாமேதை  கார்  மாக்ஸ் போன்றவர்களின் சிந்தனைகள் மக்களிடத்தில் போயி சேர வேண்டும். விவசாயிகள்  உள்ளிட்ட உழைக்கும் வர்கம் அணித்தளவேண்டும் என்கிற அடிப்படையிலே இளைஞர்கள் கதாநாயகிகளாக அஞ்சனா கீர்த்தி பொறுப்பேற்று நடித்திருக்கிறார் ஒரு துடிப்புள்ள இளம் பெண்ணாக புரட்சிகர சிந்தனையுள்ள பெண்ணாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறம் செய்வதே அரசியல் களம் என்ற கொள்கை முழக்கத்தோடு போன்றவற்றை அவர்கள் புதிய அமைப்பை உருவாக்கிறார்கள். அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ஆயுத போராட்டம் ஒரு தீர்வல்ல அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சட்டமே  போதும்  மக்களே நமக்கு ஆயுதம் என்றவர் போதிக்கிறார். அவர் உயர்குடியிலே பிறந்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதியின் பேத்தி ஆனால் மகாகவி பாரதியாரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரா போஸை அவர்களின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்கிற துடிப்புமிக்க இளம் பெண் அவருடைய தலைமையிலே ஒரு படை அரசியல் படை கருத்தியல் படை அமைக்கப்பட்டு அவர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போது போராட்டத்தை அறிவிக்கிறார்கள். அந்த போராட்டம் வெகு மக்கள் போராட்டமாக தருணமிக்கிறது. பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அந்த ஆறாம் செய்  அரசியல் அமைப்புகளோடு இணைந்து தலைமை செயலகத்தை முற்றிகையிட அணிதிரளுகுறார்கள். அதிலும் அரசியல் தலையீடு முதலமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் தூண்டுதலின் பேரில் குண்டர்கள் அந்த பேரணியில் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள் வெடிகுண்டு வீசி வன்முறை வெறியாட்டத்தில் இறங்குகிறார்கள். அதிலே இரண்டு போராளிகள் உயிரிழக்கிறார்கள். அப்படி உயிரிழந்த நிலையிலும் கூட நம்முடைய பயணம் நின்றுவிடக்கூடாது இலக்கை நோக்கிய பயணம் தீவிரபட வேண்டும் என்று  இலைகர்களுக்கு போதிக்க கூடிய ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி அவர்கள் நடித்திருக்கிறார். அவருடைய தாத்தா உச்சநீதிமன்ற நீதிபதி அவரை திருத்துவதற்கு முயற்சித்தும் கூட நீங்கள் கற்றுக்கொடுத்த அரசியல் தான் என்னை இயக்குகிறது. அன்றைக்கு நீங்கள் அதை விதையாக பதித்தீர்கள் அந்த விதை இன்று வளந்து வெளிச்சமாக  தருணமித்துஇருக்கிறது. ஆகவே இந்த தேசத்தின் நலனுக்காக மக்களின் விடுதலைக்காக நான் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று அவர் கிளம்புகிற போது உங்கள் பாதை ஆபத்தானது பாதுகாப்புக்கு என்னுடைய துப்பாக்கியை வைத்துக்கொள் என்று தாத்தா கொடுக்கிறபொழுது அந்த துப்பாக்கியை திருப்பி தாத்தாவிடத்திலே கொடுத்து நாங்கள் நடத்துகிற போராட்டம் ஆபத்தானது தான் அதற்கு ஆயுதம் ஒரு தீர்வல்ல மக்களே எங்களுக்கு ஆயுதமாக இருக்கிறார்கள் என்று எங்கள் மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையே எங்கள் பாதுகாப்புக்கு எனவே ஆயுதம் தேவையில்லை என்று துப்பாக்கியையும் தனது தாத்தாவிடமே திருப்பி கொடுத்து விடுகிறார். இப்படி இயக்குனர் எஸ்  பாலு  வைத்தியநாதன் அவர்கள் திலீபன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார். கல்லூரியின் போராட்டத்தை அவர்கள் தலைமையிதாங்கி வழிநடத்துகிறார் . ஆனால் அந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டவில்லை அது வெகு மக்கள் போராட்டமாக வடிவம் பெறவில்லை எனவே அறம் செய் அரசியல் அமைப்போடு இணைந்து அரசியல் மாற்றத்திற்காக போராடுவதாக முடிவெடுக்கிறார். அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஆயுதங்களோடு அந்த அமைப்பிலே தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆயுதம் ஏங்கி வருகிற போது அந்த அறம் செய் அரசியலமைப்பை வழிநடத்தக்கூடிய இளம் பெண் நீங்கள் நினைப்பதை போல ஆயுதம் ஏந்தி போராடியதற்கு தீர்வு காண முடியாது. மக்களை அமைப்பாக முடியாது மக்களையே நம் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று மக்களை அரசியல் படுத்த வேண்டும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் அவர்களிடத்திலே மருத்துவ கல்லூரி மாணவர்களிடத்திலே எடுத்துக்கூறி எல்லோரும் இணைந்து நம்முடைய பயணத்தை தொடர்வதாக இந்த திரைப்படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் எஸ்  பாலு  வைத்தியநாதன் அவர்கள். அரசியல் தலையீடுகளால் எப்படி மாணவ சமூகம் பாழாகிறது இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் கல்லூரிகளில் மாணவர்களிடையே கஞ்சா போதை பழக்கங்கள் எப்படி பரவி இருக்கிறது மது பழக்கத்தால் எப்படி சீரழிகிறார்கள் என்பது போன்ற காட்சிகளை அங்கங்கு இணைத்திருக்கிறார். அவருடைய நோக்கம் மிகவும் போற்றுதலுக்குரியது ஆட்சி மாறாட்டத்திற்கான போராட்டமாக அல்லாமல் வெளிப்படை மாற்றத்திற்கான போராட்டமாக நம்முடைய மக்கள் போராட்டம் தருணமிக்க வேண்டும் என்பது தான் இந்த திரைப்படத்தின் ஓற்றைவரி கருத்தாகும். ஒரு புரட்சிகரமான சிந்தனையை மையமாக கொண்டு ஆயுதம் தீர்வல்ல அறிவே ஆயுதமாக இயங்கப்பட வேண்டும் அதற்கு நமக்கு தலைவர்கள் முன்மாதிரியாக வழிகாட்டியிருக்கிறார்கள். மாக்ஸ் அம்பேத்கர், பெரியார் போன்ற அந்த தலைவர்களை நாங்கள் உள்வாங்கிக்கொண்டு இந்த களத்தில் இயங்க வேண்டும் என்று இளம் தலைமுறைகளுக்கு புரட்சிகரமான மாற்றம் நிகழ வேண்டும் என்று துடிக்கிற அனைவருக்கும் போதிக்கிற ஒரு படமாக வழிகாட்டுதல் படமாக இயக்குனர் எஸ்  பாலு  வைத்தியநாதன் அவர்களின்  இந்த திரைப்படம் அறம் செய் என்பது அமைந்திருக்கிறது இயக்குனருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தொல் திருமாவளவன் எடுத்துரைத்தார்.

Saturday, 22 March 2025

It Cannot get Bigger Than This! – JioStar Unveils Biggest StarCast and the Biggest Presentation

 It Cannot get Bigger Than This! – JioStar Unveils Biggest StarCast and the Biggest Presentation of TATA IPL Ever

 

~ For the first time ever, more than 170 experts will present the TATA IPL ~

 

~ More than 25 feeds across Linear TV and Digital for viewers to choose from ~

 

~ Max View, Live Audio Descriptive and Indian Sign Language feed to feature first time on digital in TATA IPL ~

 

~ AB De Villiers, Kane Williamson, Shane Watson, Virender Sehwag, Suresh Raina, Harbhajan Singh, Shikhar Dhawan, Anil Kumble, Mark Boucher, Matthew Hayden, Michael Clarke, Sunil Gavaskar, Ajay Jadeja, Navjot Singh Siddhu, Aakash Chopra, Ambati Rayudu, Kedar Jadhav, Jhulan Goswami, Mithali Raj and celebrated Bhojpuri actor Ravi Kishan are part of the star-studded panel ~

 

Mumbai, March 22, 2024: Fans and viewers are in for a treat as JioStar assembles the biggest TATA IPL ever. Less than 24 hours before India’s favourite sporting carnival turns 18, JioStar announces the never-seen-before presentation with 25 + feeds in 12 languages across linear TV and digital, brought alive by more than 170 experts that includes IPL champions, World Cup winners from India and across the world.

 

On TV, in addition to the English feed, the network will provide coverage in Hindi, Tamil, Telugu, and Kannada across JioStar Network, while on digital, the 18th season will be streamed live across 16 feeds, including 12 languages: English, Hindi, Marathi, Haryanvi, Bengali, Bhojpuri, Tamil, Telugu, Kannada, Malayalam, Gujarati and Punjabi.

 

In addition to the language options, the live streaming on JioHotstar will be complemented by multi-cam feeds, Hangout feed, first-of-its kind feed designed for young audiences and family called ‘Motu Patlu present Super Funday’.

 

“What we have assembled for the TATA IPL 2025 is nothing less than a spectacle. It is the 18th season, a milestone that deserves a celebration garnished by first-of-its kind innovations, top-of-the-line talent and a presentation that will unite millions of Indians. Our efforts will match the energy and excitement that the league brings to the country,” said JioStar – Sports Spokesperson

 

In a never-seen-before avatar, one of the world’s most accomplished batsmen and most loved global figure, Kane Williamson will make his debut as a commentator and expert in TATA IPL. The first New Zealand player to win the orange cap and two-time TATA IPL champion played with Gujarat Titans until last season.

 

The addition of IPL champion Shane Watson, former Mumbai Indians Head Coach Mark Boucher and his compatriot and Royal Challengers Bengaluru icon AB DeVilliers, former Punjab Kings mentor Virender Sehwag, former Punjab Kings skipper Shikhar Dhawan, former Chennai Super Kings star Suresh Raina, will further deepen JioStar’s key proposition of providing fans inside access from key members who until recently shared the dressing room with top franchisees.

 

After winning titles with Rajasthan Royals and Chennai Super Kings, Shane Watson continues his journey in the TATA IPL with JioStar. The line-up also includes former IPL captains and heroes including Anil Kumble, Harbhajan Singh, Ambati Rayudu, Robin Uthappa, Murali Vijay, Kedar Jadhav across multiple language feeds. Father-son duo of Anirudh Srikkanth and K Srikkanth will feature together in the Tamil expert’s panel. Manvinder Bisla, man of the match of the 2012 IPL Final, will be the face of the Haryanvi feed.

 

In the continuous endeavour to give fans and viewers immersive experience, JioStar is creating a touchpoint for second screen-engagement. While watching the action live on Linear TV, if viewers miss out on key moments, they will get an option to scan a QR code and catch the key moment on their mobile phone on JioHotstar.

 

Making the viewing experience inclusive and ensuring fans and viewers can enjoy the cricket carnival in their own way, MaxView, Live Audio Descriptive and Indian Sign Language will make their TATA IPL debut on JioHotstar. Multi-cam feed will continue to give viewers on JioHotstar options to watch TATA IPL from different angles with fan-favourite Hero Cam coming back along with Stump Cam, Batter Cam, and Bird’s Eye Cam among others.

 

The 18th season of TATA IPL will see the return of digital-exclusive and popular Hangout feed, and newly-introduced ‘Motu Patlu present Super Funday’. The special kids’ feed will feature the beloved cartoon characters Motu and Patlu as commentators, bringing a fresh, playful, and exciting twist to the TATA IPL experience.

 

The Hangout feed will give fans a light-hearted and quirky take on the perennially competitive league through new-age content creators and popular stand-up comics like Angad Singh, Kunal Saluja, Sahiba Bali, Inder Sahni, Shubham Shandilya, and Aditya Kulshreshta among others. This feed will present quintessential TATA IPL action that is expected to draw first-time viewers and non-sports audience and augment the league’s viewership.

 

In the lead-up to the 18th season, JioStar put together an exciting slate of content for fans around TATA IPL icons and captains including MS Dhoni, Sachin Tendulkar, Rohit Sharma, Virat Kohli, Hardik Pandya, Suryakumar Yadav, Rishabh Pant, KL Rahul, Ruturaj Gaikwad, Sanju Samson, Jasprit Bumrah, Pat Cummins among others.


Panel


*World Feed*

Ravi Shastri, Sunil Gavaskar, Harsha Bhogle, Murali Kartik, Deep Das Gupta, Anjum Chopra, Varun Aaron, WV Raman, Matthew Hayden, Shane Watson, Michael Clarke, Aaron Finch, Eoin Morgan, Graeme Swann, Nick Knight, Alan Wilkins, Simon Doull, Danny Morrison, K Martin, Mpumelelo Mbangwa, Natalie Germanos, Ian Bishop, Darren Ganga

*Hindi*

Virender Sehwag, Navjot Singh Siddhu, Shikhar Dhawan, Harbhajan Singh, Suresh Raina, Robin Uthappa, Ambati Rayudu, Mohd Kaif, Piyush Chawla, RP Singh, Pragyan Ojha, Sanjay Manjrekar, Sanjay Bangar, Varun Aaron, Sunil Gavaskar, Ajay Jadeja, Jatin Sapru, Anant Tyagi, Saba Karim, Deep Dasgupta, Aakash Chopra

*Marathi*

Kedar Jadhav, Aditya Tare, Dhawal Kulkarni, Kiran More, Pravin Tambe,

Salil Ankola, Siddesh Lad, Chaitanya Sant, Prasanna Sant, Nilesh Natu,

*Gujarati*

Manpreet Juneja, Rakesh Patel, Bhargav Bhatt, Sheldon Jackson, Atul Bedade, Aseem Parikh, Akash Trivedi, Shailendra Jadeja

*Bhojpuri*

Ravi Kishan, Manoj Tiwary, Sumit Kumar Mishra, Saurabh Kumar, Gulam Hussain, Shivam, Ashutosh Aman, Satya Prakash

*Bengali*

Sreevats Goswami, Jhulan Goswami, Subhomoy D, Saradindu M, Raja Venkat, Sanjeeb M, Shiladitya Roy, Gautam B

*Haryanvi*

Manvinder Bisla, Sumit Narwal, Sonu Sharma, A Chaudhary, RJ Kisna, Ravin Kundu, Vishwaas, Ashish Hooda

*Malayalam*

S Sreesanth, CM Deepak, Raiphi Gomez, Sony C, Vishnu Hariharan, Shiyas Mohammed, Aju John Thomas, Manu Krishnan, RJ Renu

*Kannada*

Anil Kumble, Robin Uthappa, Vinay Kumar, Venkatesh Prasad, Vijay Bharadwaj, Bharat Chipli, K Gowtham, B Akhil, S Aravind, J Suchith

Srinivasa Murthy, Sumesh Goni, Kiran Srinivasa, S Suresh, Pavan D, Roopesh Shetty, Madhu M

*Tamil*

Murali Vijay, L Balaji, S Badrinath, K Srikkanth, S Ramesh, R Sridhar, Anirudh Srikkanth, Yo Mahesh, Baba Aparijith, Baba Indrajith, Thirush Kamini, Arun Kartik, C Gobinath, Muthu, Ashwath Bobo, Nanee, Gowtham D, Bhavna, Sameena, Abhinav Mukund

*Telugu*

Ambati Rayudu, Hanuma Vihari, MSK Prasad, Mithali Raj, R Sridhar

T Suman, Kalyan Krishna, Ashish Reddy, Akshat Reddy, NC Kaushik, K Kollaram, VJ Sashi, Vindhya, Nandu, Pratyusha

*Punjabi*

Sarandeep Singh, Mandeep Singh, RS Sodhi, VRV Singh, Chetan Sharma, Rahul Sharma, Sunil Taneja, Gurjit Singh

*Hangout*

Kunal Saluja, Angad Ranyal, Inder Sahni, Shubham Shandilya, Aditya Kulshreshta

Rocking Star Yash’s ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ takes over Gudi Padwa, Ugadi & Eid celebrations, setting

 *Rocking Star Yash’s ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ takes over Gudi Padwa, Ugadi & Eid celebrations, setting March 19, 2026 as its grand release date*



Rocking Star Yash is set to unleash a cinematic tornado with his much-anticipated action entertainer, Toxic: A Fairy Tale for Grown-Ups, locking March 19, 2026, as its grand release date. With Ugadi, Gudi Padwa, and Chaitra Navratri ushering in the new year on March 19, followed by Eid-al-Fitr celebrations on March 20/21, Toxic is perfectly positioned to dominate a massive four-day extended weekend across India.



It doesn't get bigger than this! This Thursday's release marks a new chapter for Kannada cinema, propelling it onto the global map in all its splendor. As the first large-scale Indian project conceptualized, written, and shot in both  Kannada and English, Toxic bridges cultures and continents, presenting an international cinematic experience. The film brings together the best and highly sought after talent from Indian and International cinema, and to boost its reach, the film will be dubbed in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages, ensuring it captures hearts across boundaries.



Marking the date announcement, a jaw-dropping poster for Rocking Star Yash's 'Toxic: A Fairy Tale for Grown-Ups' has been unveiled. The action-packed image showcases Yash rousing from the flames, promising an adrenaline-fueled cinematic experience. A shadowy silhouette shrouded in smoke adds an air of mystery, hinting at the intrigue that lies within this gritty, stylized universe. This electrifying poster follows the viral birthday glimpse earlier this year, offering a deeper dive into the world of 'Toxic' and solidifying its position as a must-watch rollercoaster of action and drama.



Helming this ambitious venture is internationally acclaimed filmmaker Geetu Mohandas, a visionary director known for her emotionally resonant, award-winning cinema. With accolades like the National Award and the prestigious Global Filmmaking Award at the Sundance Film Festival under her belt, Mohandas has carved a niche on the world stage.  



Jointly produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-ups is set to hit the theatres on March 19, 2026.

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” 2026 மார்ச்

 *ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  “டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” 2026 மார்ச் 19 அன்று வெளியாகிறது !!*



ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  “டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”, வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உகாதி, குடி பட்வா, சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை வார இறுதி மூலம் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு மார்ச் 20/21 ஆம் தேதி இஃப்தார் பண்டிகையும் வருவதால்,  ரசிகர்கள் கொண்டாட இது ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தத் திரைப்படம் கன்னட சினிமாவுக்குப் புதிய உயரங்களைத் தரவுள்ள அதே சமயத்தில், உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. கன்னட மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் முதல் பெரிய இந்தியத் திரைப்படம் என்பதாலேயே ‘டாக்சிக்’ திரைப்படம், உலக நாடுகளை இணைக்கும் பாலமாக செயல்பட உள்ளது. இந்திய மற்றும் சர்வதேச சினிமாவின் திறமையான கலைஞர்கள் இப்படத்தில்  ஒருசேர பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது, இதன்மூலம் அனைத்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிக்க உள்ளது.


படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் விதமாக ஒரு அசத்தலான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், நெருப்பிலிருந்து எழும்பும் யாஷின் அதிரடியான தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது சுவாரஸ்யமான கதைப் பின்னணியை விவரிக்கிறது. இந்தப் போஸ்டர், யாஷின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட டீசருக்கு பின்னர், ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.


இந்த மாபெரும் படைப்பை இயக்கும் இயக்குநர் கீது மோகந்தாஸ், சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ஆவார். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில், திரைப்படங்கள் உணர்ச்சி மிகுந்த கதை மாந்தர்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டதற்காக, பல்வேறு விருதுகளை வென்றுள்ளன.


வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations  நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம்,  2026 மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

சரத்குமார் வெளியிட்ட 'தி வெர்டிக்ட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

 சரத்குமார் வெளியிட்ட 'தி வெர்டிக்ட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!


இன்று சரத்குமார்

'தி வெர்டிக்ட்' என்கிற தமிழ் திரைப்படத்தின் முதல் பார்வை எனப்படும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.


கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக  உருவாகி உள்ள திரைப்படம் தான்

'தி வெர்டிக்ட்'. இப்படம்

 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது .


இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

'தி வெர்டிக்ட்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்  கிருஷ்ணா சங்கர்.


 அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அவர் படம் பற்றிக் கூறும்போது,

 

'' மர்மங்களும் எதிர்பாராத முடிச்சுகளும் யூகிக்க முடியாத திருப்பங்களும் நிறைந்த திரில்லர் படமாக 

இந்த 'தி வெர்டிக்ட்' திரைப்படம் உருவாகி இருக்கிறது.இது நிச்சயமாக சிலிர்க்கும் உணர்வோடு பார்வையாளர்களை  இருக்கை நுனியில் அமர வைக்கும் "என்கிறார்.


படத்தை எழுதி இயக்கியுள்ள  அறிமுக இயக்குநர்   கிருஷ்ணா சங்கர்  படத்தைப் பற்றி பேசும்போது, 


"ஒரு பணக்கார அமெரிக்க பெண் கொலை ஆகிறாள். அவளுடன் நட்பு பாராட்டி வந்த இன்னொரு பெண் அந்தக் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறாள்.அவளது கணவர் சிக்கலில் மாட்டியுள்ள தன் மனைவியை மீட்கப் போராடுகிறார்.ஒரு பாவமும் அறியாத தன் மனைவி ஒரு நிரபராதி, என்று நம்பிக்கையுடன் காப்பாற்ற போராடும் கணவன். இது ஒரு பக்கம் என்றால், குற்ற செயல் நடந்த கதை வெவ்வேறு திருப்பங்களுடன் பயணிக்கிறது.அது ஒரு மர்மமான மர்டர் மிஸ்டரி த்ரில்லர் அனுபவமாக இருக்கும் "என்கிறார்.


தொழில்நுட்ப ரீதியாகப் படம் ஒரு அற்புதமான குழுவைக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் ,சதீஷ் சூர்யா எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். ஐஃபா (IIFA) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய அமெரிக்கப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆதித்யா ராவ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர்

ஆர். மாதவனின் இயக்கத்தில் வெளியான 'ராக்கெட்ரி :தி நம்பி எஃபெக்ட் 'படத்தின் முன்னணிப் பாடகராகவும் குரல் வடிமைப்பாளராகவும் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர் தனது தனித்துவமான இசைத் திறமையை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளன.


இந்தக் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கிறது. முழுப் படப்பிடிப்பும் அமெரிக்காவிலேயே நடத்தப்பட்டுள்ளது.


ஏதோ வெறும் பின்புலத்திற்காக அமெரிக்க நாட்டைக் காட்டாமல் அங்குள்ள வாழ்க்கை முறை, காவல்துறை, புலனாய்வு நடவடிக்கைகள், நீதிமன்றம் போன்ற அனைத்தும் நம்பகத்தன்மையுடன் படத்தில் காட்டப்பட்டுள்ளன.அந்த பரபரப்பான உலகம் பார்வையாளர்களை வசீகரித்துப் புதிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன்

 நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன்

















EMI  பட  விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு..


நமது வாழ்வியலை படம் எடுத்தால்  படம் ஜெயிக்கும்  

EMI  பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் பேச்சு ..



தமிழ் சினிமா இப்போது ஹெல்தியாக இல்லை 

EMI  பட  விழாவில் இயக்குனர்  ஆர்.வி.உதயகுமார்  பேச்சு ..


நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள் 

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்..


இன்று டாஸ்மாக் ஒரு போதை EMI இன்னொரு போதை இது இரண்டும் அழியவேண்டும்

 EMI  பட  விழாவில் இயக்குனர் பேரரசு பேச்சு..





சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் " EMI " மாதத் தவணை ". இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.  


தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட,  அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை,  எல்லோரும்  இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ்,  மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ  போட்டு தான் வாங்குகிறார்கள்.  இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ -ல ஈசியா லோன் கிடைக்கும்.


இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு  ரெண்டு மூணு மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜர்ல இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பாங்க. இதை அனுபவிக்காமல் கண்டிப்பா 90% மக்கள் இருக்க முடியாது. அவர்களின் கதை தான் இந்தப்படம். 


ஏப்ரல் மாதம்  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மல்லையன் பேசியதாவது…. 


எங்கள் பட விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரை ஆளுமைகள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். EMI  எடுத்து எத்தனையோ பேர் மனநிம்மதி இல்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். பலர்  EMI ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்,  அவர்களின் கதையை இந்த EMI படம் சொல்கிறது. EMI  எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்தப்படம் பேசியுள்ளது, அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் நன்றி. 



இயக்குநர் ஆர் வி  உதயகுமார் பேசியதாவது… 

இந்த விழாவை என் குடும்ப விழா எனச் சொல்லலாம். என் அஸிஸ்டெண்டின் அஸிஸ்டென்ட் இப்படத்தை இயக்கியுள்ளார். என் கொள்ளுப்பேரன் எனச் சொல்லலாம். EMI  அகலக்கால் வைக்காமல் நம் தகுதிக்கு எடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தான் சிக்கிக் கொள்வோம்.  இந்த படக்குழு EMI ல் தப்பித்துவிட்டார்கள். முதல் EMI  சரியாகக் கட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இங்கு இயக்குநர் பாக்யராஜ் வந்துள்ளார். அவர் தன் முதல் படத்தில் ஒரு சிறு தெருவை மையமாக வைத்து, மிக அழகான படத்தைத் தந்தவர். இப்போது யாராலும் அது முடியாது. இப்போது சரியானவர்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை, நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதையே நிறுத்தி விட்டார்கள். அந்தக்காலத்தில் படம் பூஜையின் போதே படம் விற்று விடும். ஆனால் இப்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. அப்போது 16 படம் வெளியாகி 16 படமும் ஜெயிக்கும், பல வித்தியாசமான களங்களில் படம் வரும், இப்போது அந்த மாதிரி ஹெல்தி சினிமா இல்லை. இப்போது இருக்கும் இயக்குநர்களை போனில் பிடிக்க முடியவில்லை. எங்கே போகிறது தமிழ் சினிமா?  இந்த நிலைமையை மாற்ற இம்மாதிரி EMI  படத்தை ஆதரிக்க வேண்டும். இப்போது சின்ன படங்கள் தான் ஓடுகிறது. ரப்பர் பந்து, குடும்பஸ்தன் படங்கள் வரும் வரை அதைப்பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் அந்தப்படங்கள் மிகப்பெரிய வெற்றி. அது போல இந்தப்படமும் வெற்றி பெறட்டும். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 



சின்னத்திரை புகழ் ஆதவன் பேசியதாவது.. 

படத்தில் நான் வந்த சீனை விட அதிகமாக எனக்கு போஸ்டர் வைத்துள்ளார்கள் நன்றி. வாய்ப்பு தந்த சதாசிவம் சாருக்கு நன்றி. நானும் அஜித் சாரும் ஒரே மாதிரி, வருடத்துக்கு ஒரு படம் தான் செய்வோம். இங்கு மேடை இயக்குநர் சங்கம் போல உள்ளது. வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. நயன்தாரவை போல இனிமேல் எனக்கு பிளாக் பாண்டி பட்டம் வேண்டாம் எனக் கூறியிருக்கும் பாண்டிக்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தின் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்ப இருக்கும் தயாரிப்பாளர்கள் 4 கோடிக்கு படம் செய்வதில்லை, 40 கோடிக்கு படம் செய்யவே ஆசைப்படுகிறார்கள். எது புதிதாக வந்தாலும் கதை தான் முக்கியம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என சொல்லிச்சென்ற ஆர் வி உதயகுமார் அண்ணனுக்கு நன்றி. 


நடிகை சாய் தன்யா பேசியதாவது… 

EMI  படம் மிக அழகான படம், கிருஷ்ணகிரியில் தான் ஷீட் செய்தோம். EMI  யோட கொடுமைகளை இந்தப்படத்தில் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு விழிப்புணர்வு தரும் படமாக இப்படம் இருக்கும். EMI  ஆல் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் நண்பர்களை, இந்தப்படத்திற்கு அழைத்துச் சென்று காட்டுங்கள். நன்றி.



இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது… 

இயக்குநர் பாக்யராஜ் முதலாக பெரும் ஆளுமைகள் இருக்கும் மேடையில் நான் இருப்பது எனக்குப் பெருமை. தன் சிஷ்யனுக்காக இவ்வளவு இறங்கி வேலை செய்யும் பேரரசுவுக்கு நன்றி. எத்தனை பேருக்கு இந்த மனம் வரும் என தெரியவில்லை. இந்தப்படத்தின் பாடல் விஷுவல் பார்க்கும்போது ஹீரோ பக்கத்து வீட்டு பையன் போல இயல்பாக இருக்கிறார். நன்றாக நடித்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. சன் டிவி ஆதவன், பிளாக் பாண்டி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். படத்தின் டிசைன் முதல், எல்லாமே மிகத்திட்டமிடலுடன் உருவாக்கியிருக்கிறார்கள். EMI  வாங்காத ஆளே இருக்க முடியாது, எல்லோருக்கும் மிக எளிதாக கனக்ட் ஆகும் படம். இந்தப்படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்குமென நம்புகிறேன் வாழ்த்துக்கள். 


இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சை பேசியதாவது…

10 வருடங்களுக்கு முன் இயக்குநரும் நானும் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம், அதை ஞாபகம் வைத்து, என்னை அழைத்து இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது…

இயக்குநர் பேரரசுவிற்காக தான் அத்தனை பேரும் வந்துள்ளார்கள். பேரரசு எங்கள் சங்கத்திற்காகக் கடுமையாக உழைக்கும் உழைப்பாளி, அவரின் உதவியாளார் என்பதால் தான் அனைவரும் வாழ்த்த வந்துள்ளார்கள். பாக்யராஜ் சார் வந்துள்ளார் அவருடைய படங்கள் எல்லாம் இன்றும் ரெஃபரென்ஸ் தான். அவருடைய புத்தகத்தைப் படித்தால் திரைக்கதை எழுதி விடலாம். மூத்தவர்களை எல்லோரும்  மதிக்க வேண்டும். மலையாளத்தில் வாராவாரம் பாசில் ஜோசப் கண்டெண்டுடன் படம் தருகிறார் ஆனால் அதை அந்தகாலத்திலேயே தந்தவர் பாக்யராஜ் சார்.  படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்களே கொண்டு சேர்த்து விடுவார்கள். அவர்கள் சொல்லிவிட்டால் படம் ஹிட், சதாசிவம் முதல் படத்தில் நல்ல கண்டண்ட் உடன் படம் தந்துள்ளார். இந்தப்படத்திற்கு முழு ஆதரவு தாருங்கள். புதுமுகங்களை நம்பி தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். நன்றி. 


தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது… 

என்னை இயக்குநர் சதாசிவம் அழைத்திருந்தார். சின்னப்படங்களுக்கு அழைத்தால் எப்போதும் நான் வந்துவிடுவேன். நல்ல தயாரிப்பாளர்கள் படம் எடுக்கத் தயாரிக்க வருவதில்லை என்கிறார்கள். ஆனால் நடிகர்கள் எல்லாம் தாங்களே தயாரிக்கிறார்கள். அண்ணா அம்மா எல்லாம் தயாரிப்பாளர்கள் எனும் போது, நாங்கள் என்ன தான் செய்வது. நல்ல கதைகள் வந்தால் நாங்கள் தயாரிக்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் இப்போது நல்ல கதைகள் வருவதில்லை. இந்தப்படம் நல்ல கதையுடன் வந்துள்ளது, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


இயக்குநர் அரவிந்த்ராஜ் பேசியதாவது… 

எல்லோரும் பேசும் போது, தயாரிப்பாளர் யாருக்கும் EMI வைக்கவில்லை  என்பது தெரிந்தது. அவரைப்பற்றி எல்லோரும் பெருமையாகச் சொன்னார்கள் அவருக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக அருமையாக உழைத்துள்ளனர். இயக்குநர் நடிகராகவும் நடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக இருந்தது. பார்க்க அழகாக இருந்தது. பாடல்கள் எல்லாம் சூப்பராக இருந்தது. EMI  எல்லோர் வாழ்விலும் கனக்ட் ஆகக் கூடியது. இப்படத்தில் நிறைய நல்ல விசயங்கள் சொல்லப்பட்டுள்ளது. இயக்குநர் படத்தை அழகாக எடுத்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  தமிழ் சினிமாவில் போன மாதம் மட்டும் 32 படங்கள் வந்துள்ளது. இதை எப்படி அணுகுவது எனத் தெரியவில்லை. மக்கள் நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருகிறார்கள். நல்ல படம் எடுத்துள்ளீர்கள் அதைச் சரியாக விளம்பரப் படுத்துங்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



நடிகை தேவயானி  பேசியதாவது.. 

இயக்குநர் சங்கத்திலிருந்து இந்த படத்தின் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். EMI டைட்டிலே எனக்குப் பிடித்திருந்தது. EMI வாங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லோரும் EMI வாங்குகிறோம் அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்லதாக இருக்கும், இல்லையெனில் அது பிரச்சனையாகி விடும். அதை இந்தப்படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். இயக்குநரே நடித்துள்ளார் வாழ்த்துக்கள். இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள் படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க்கையில் எப்போதும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும், புதிதாக முயற்சி செய்ய வேண்டும், அந்த வகையில் தான் இயக்கம் படித்து குறும்படம் எடுத்தேன். அதன் திரையிடல் இங்கு தான் நடந்தது. உங்கள் ஆதரவுக்கு நன்றி. 



இயக்குநர் பேரரசு பேசியதாவது.. 

என் அழைப்பை ஏற்று வந்த ஆளுமைகளுக்கு என் நன்றி. என் உதவி இயக்குநர் இயக்கியுள்ள படம் இது. சினிமாவில் முதன் முதலில் என்னை கதை எழுத வைத்தவர் பாக்யராஜ் சார் தான். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என போட வைத்தது அவர் தான்.  இயக்குநர் என்றால் அவர் தான் கதை எழுத வேண்டும், என விதியை உருவாக்கியவர் அவர் தான்.  அவர் ஒரு ஜாம்பவான். அவர் வாழ்த்த வந்திருப்பதற்கு நன்றி. EMI எல்லோரும் வாங்கியிருப்பார்கள், முதல் மூணு மாதம் கட்டுவார்கள் ஆனால் 4 வது மாதம் கட்ட மாட்டார்கள், வாங்கியவர் ஆஃபிஸ் போய்விடுவார்கள், வசூலிக்க வருபவர்களிடம்  பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆம்பளைகள் வாங்கும் EMI ஆல் பாதிக்கப்படுவது பெண்கள் தான். EMI எல்லோரும் பொறுப்போடு பார்க்க வேண்டிய அருமையான படம்,  EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது. இன்று டாஸ்மாக் ஒரு போதை, EMI இன்னொரு போதை, இது ரெண்டும் அழிய வேண்டும் நன்றி. 



இயக்குநர் சதாசிவம் சின்னராஜ்  பேசியதாவது.. 

EMI படம் என் வாழ்வில் நான் நேரிடையாக பார்த்தது.  ஒரு நண்பருக்குத் தொடர்ந்து கால் வந்து கொண்டே இருந்தது ஆனால் அவர் அட்டன் செய்யவே இல்லை, கார் எடுத்துவிட்டு EMI டார்ச்சரை அனுபவித்தார். அதை நேரில் கண்டபோது தான் இது அனைவர் வாழ்விலும் நடக்கும், அதை எடுக்கலாம் என முடிவு செய்தேன்.  முதல் முதலில் கதையைப் பேரரசு சாரிடம் சொன்னேன், இப்போது வரை படத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். முதலில் 4 பேர் சேர்ந்து தான் தயாரிப்பதாகத்தான் இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் மல்லையன்,  நீ ஏன் எல்லோருக்கும் பதில் செய்கிறாய், நானே தயாரிக்கிறேன் என்று, என்னை நம்பி இறங்கினார். அவருக்கு என் நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கான கருத்தை பேசியுள்ளோம். எல்லோர் வாழ்விலும் இதை அனுபவித்திருப்பார்கள் அதைத்தான் படமாக எடுத்துள்ளோம். நான்  முதலில் நடிப்பதாக இல்லை, எந்த ஹீரோவும் சின்ன பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்ள வில்லை அதனால் தான் நானே நடித்து விடலாம் என இறங்கி விட்டேன். நல்ல படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.



இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது…. 

EMI டைட்டிலே எளிதாக புரிகிறது. சில நேரம் பட டைட்டிலே புரியாது, இந்த டைட்டிலிலேயே எல்லாம் புரிந்து விடுகிறது. தயாரிப்பாளர் மல்லையன், இயக்குநரையே நடிகராகத் தைரியமாக ஆக்கியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இசையமைப்பாளர் மிக அருமையாகப் பாடலை தந்துள்ளார், தொழில் நுட்ப கலைஞர்கள் மிக நன்றாக வேலை பார்த்துள்ளனர். விஷுவல் பார்க்க நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்துள்ள இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.  நானே முதல் படத்திற்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன் ஆனால் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன்.  நம் வாழ்க்கையிலிருந்து கதையை எடுப்போம் என கதை செய்தேன். நம் வாழ்க்கையை எடுத்தால் படம் ஜெயிக்கும். EMI எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  காமெடி சென்ஸோடு படத்தைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்,  படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.



கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர் லொள்ளுசபா மனோகர், TKS, செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார் 


சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற " என் நண்பனே " என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இந்த படத்தின் பாடல்களை பேரரசு மற்றும் விவேக் இருவரும் எழுதியுள்ளனர்.


ஒளிப்பதிவு - பிரான்சிஸ், விடுதலை படத்தின் எடிட்டர் R. ராமர் இந்த படத்தையும் எடிட் செய்துள்ளார், நடன இயக்கத்தை தீனா, சுரேஷ் ஜீத் இருவரும் செய்துள்ளனர். 

ஸ்டண்ட் - மிராக்கில் மைக்கேல் / தயாரிப்பு மேற்பார்வை - தேக்கமலை பாலாஜி. மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்

தயாரிப்பு - மல்லையன்.