Featured post

தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்

 *"தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்* சாதாரணமாக ஒரு கதாபாத்தி...

Sunday, 17 May 2026

தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்

 *"தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்*






சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் 'மண்டவெட்டி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி.


இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, "'மண்டவெட்டி' திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு உடல்ரீதியாகவும் மாறி வாழ்ந்திருக்கிறார் கோமலி. மிகுந்த சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல் ரீதியாக கடினமான தருணங்கள் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு அவர் நடித்தார். இந்தக் கதை, தன்னைவிட பலமிக்க சக்தியுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையையும், மனக்குழப்பங்களையும் மையமாகக் கொண்டது. அதனால் இந்த கதாபாத்திரம் பலவீனம், கொந்தளிப்பு, வலி மற்றும் மீண்டு வரும் மனவலிமை என இவை அனைத்தையும் கோமலி தேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்". 


மேலும் அவர் கூறியதாவது, "சூப்பர் நேச்சுரல் கதையை படம் மையமாகக் கொண்டிருந்தாலும் உணர்வு சார்ந்த உண்மைகளையும் 'மண்டவெட்டி' பேசும். பழமைவாதத்தில் இருந்து தன்னையே மீண்டும் கண்டுபிடிக்க முயலும் ஒரு பெண்ணின் கதையே இதன் மையம். அந்தக் கதாபாத்திரத்திற்கு கோமலியின் அற்புதமான நடிப்பை படக்குழுவே வியந்து பாராட்டியது" என்றார். 


டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'மண்டவெட்டி' திரைப்படம் பதட்டம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். 'செஞ்சி' எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தை மையமாகக் கொண்ட மர்மமான புராணக் கதையைக் கொண்டு, மனதை பதறவைக்கும் மற்றும் உணர்வுப்பூர்வமான உலகிற்குள் இந்த திரைப்படம் பயணிக்கிறது. தற்போது படத்தின்ன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


*தொழில்நுட்பக் குழு:*


தயாரிப்பு நிறுவனம் : டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,

தயாரிப்பாளர் & இயக்குநர் : சரண்ராஜ் செந்தில்குமார்,

ஒளிப்பதிவு : பிரகாஷ் மனிதன்,

படத்தொகுப்பு : குணா பழனிசாமி,

இசையமைப்பாளர் : தீபக் வேணுகோபால்,

சண்டைக் காட்சிகள் : கெளதம்,

உடை வடிவமைப்பு : சங்கீதா சென்,

ஒலி கலவை : டோனி ஜே ஆண்டனி,

டிஐ கிரேடிங் : பாலகங்காதரன்,

சிஜிஐ : விஜயன்,

தயாரிப்பு மேலாளர் : மகேந்திரன் கந்தசாமி,

ஒப்பனை : நர்மதா

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்

Komalee Prasad has given her complete heart and soul for Mandavetti” - Director Saranraj

 *“Komalee Prasad has given her complete heart and soul for Mandavetti” - Director Saranraj Senthilkumar Praises The Actress’s Fierce Transformation*






Certain performances go beyond merely portraying a character, they demand emotional surrender, physical endurance and a willingness to step into deeply unfamiliar emotional terrain. Actress Komalee Prasad appears to have embraced exactly such a challenge in Mandavetti, director Saranraj Senthilkumar’s upcoming supernatural crime thriller, where she plays a character layered with vulnerability, rage, suffering and mysticism.

 

Director Saranraj Senthilkumar says: “From the very beginning, I knew Mandavetti needed an actress who could carry extraordinary emotional depth while also embodying fearlessness. Komalee Prasad did not merely perform the role, she lived through the emotional and physical intensity the character demanded. There were moments of extreme exhaustion, emotionally draining sequences and physically demanding situations, but her sincerity and commitment never wavered. Since the story revolves around a woman battling a force far greater than herself while navigating unbearable agony and emotional chaos, the performance demanded multiple layers, fragility, ferocity, pain and resilience. Komalee embraced all of it with remarkable conviction.”


Furthermore, he adds, “The soul of Mandavetti lies in its emotional truth despite the supernatural world surrounding it. At its core, it is the story of a woman trying to reclaim herself while confronting an ancient force that has chosen her for reasons she slowly begins to uncover. Komalee brought an honesty to the character that deeply moved us as a team.”


Written, directed and produced by Saranraj Senthilkumar under the banner of Tuskers Den Pictures, Mandavetti is conceived as a dark supernatural crime thriller blending psychological tension, folklore and raw human emotions. Featuring Komalee Prasad in the lead role, the film explores the mysterious mythology surrounding “Senji,” a fierce local deity whose presence drives the story into deeply unsettling and emotionally charged territory. The film is currently progressing through post-production stages.



*Technical Team**



Banner: Tuskers Den Pictures


Producer & Director: Saranraj Senthilkumar


Cinematography: Prakash Manithan


Editor: Guna Palinisamy


Music Director: Deepak Venugopal


Stunt Choreography: Gowtham


Costume Design: Sangeetha Sen

Sound Mixing : Tony J Antony 

DI Grading : Balaganghadaran

CGI : Vijayan

Production Manager : Mahendran Kandasamy

Makeup: Narmada

PRO: Suresh Chandra – Abdul Nassar

Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post

 *Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post*





Filmmaker Atlee and wife Priya Atlee have revealed the name of their baby daughter through a social media post. The couple announced that they have named their newborn “Miyou.”


The announcement was shared alongside a soft pastel visual featuring the baby’s tiny hand. The image also carried the text, “A tiny person with the biggest place in our hearts.”


Sharing the post, the couple wrote, “Our art of love now has a name 💕🧿 MIYOU — beauty, gentleness & love. With luv, MEER, PRIYA & ATLEE 💕🧿.” The post highlighted the meaning behind the name, describing Miyou as symbolising beauty, gentleness and love.


Soon after the reveal, fans and members of the film industry flooded social media with congratulatory wishes for the family. The post quickly gained attention online, with many appreciating the emotional yet minimal style of the announcement.



அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்....

 *அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு  “மியூ” (Miyou) எனப்  பெயர் சூட்டியுள்ளார்கள்....*





தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள  பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.


இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.


இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது  “மியூ” (Miyou)  — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர்,  ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர்.


மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த பெயர் வெளியானதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உணர்ச்சிபூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்த இந்த அறிவிப்பு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


*Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post*


Filmmaker Atlee and wife Priya Atlee have revealed the name of their baby daughter through a social media post. The couple announced that they have named their newborn “Miyou.”


The announcement was shared alongside a soft pastel visual featuring the baby’s tiny hand. The image also carried the text, “A tiny person with the biggest place in our hearts.”


Sharing the post, the couple wrote, “Our art of love now has a name 💕🧿 MIYOU — beauty, gentleness & love. With luv, MEER, PRIYA & ATLEE 💕🧿.” The post highlighted the meaning behind the name, describing Miyou as symbolising beauty, gentleness and love.


Soon after the reveal, fans and members of the film industry flooded social media with congratulatory wishes for the family. The post quickly gained attention online, with many appreciating the emotional yet minimal style of the announcement.



https://www.instagram.com/reel/DYbXHRVisae/?igsh=ajF5eWRtaXJuaTN1

அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று 17.5.2026 சூப்பர் ஸ்டார் *ரஜினிகாந்த் பேசியதாவது

 அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று  17.5.2026 சூப்பர் ஸ்டார்

*ரஜினிகாந்த் பேசியதாவது*.



தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்ன பத்தி ஒரு ரெண்டு மூணு விமர்சனங்கள் சோசியல் மீடியால அரசியல் உலகத்தில பரவலா வந்திற்றுக்கு... அதுக்கு வந்து நான் விடை கொடுக்கலைன்னு சொன்னா அது வந்து உண்மையா ஆயிடும்... நான் நேற்று பெங்களூர் சென்றிருக்கும்போது நீங்க யாராவது வந்து இருப்பீங்க விடை கொடுக்கலாம் என்று நினைத்தேன்... திரும்பி வரும்போதும் அங்க மீடியா யாரும் இல்ல.. பதினெட்டாம் தேதி கேரளாவில் ஷூட்டில் இருந்தது அப்போதும் அதற்கு விடை கொடுக்கலாம் என்று இருந்தேன் அப்போதும் நீங்க யாரும் வரல..


 முதலாவதாக தேர்தல் முடிவுகள் வந்தபோது நான் ஸ்டாலின் சாரை போய் பார்த்தேன் அது கொஞ்சம் விமர்சனங்கள் வந்துச்சு.. ஸ்டாலின் சார் என்னுடைய 38 ஆண்டுகளாக நண்பர் எங்களுடைய நட்பு கொள்கைகள்,அரசியலுக்கு அப்பாற்பட்டது... ஜனநாயகத்தின் தோல்வி வெற்றி சகஜம்.. இருந்தாலும் ஸ்டாலின் சார்  கொளத்தூரில் தோற்றது எனக்கு சங்கடமாக இருந்தது.. அப்படியா நான் பேசுறேன் அதற்காக நண்பன் என்ற முறையில் நட்பு முறையில் நான் போய் பார்த்தேன்.... அதுக்கு நான் விஜய் வந்து சிஎம் ஆக கூடாது.. அவர் வரக்கூடாதுன்னு  அதை தடுக்க பார்த்தேன்.. மேலும்.. வேறு ஏதோ ரெண்டு பெரிய பார்ட்டி வந்து சேரணும்னு சொல்றாங்க... அப்படின்னு சில விமர்சனங்கள் வருது... அந்த சூழ்நிலையில அப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படிப் பேச ரஜினிகாந்த் ஒரு தரம் கெட்ட ஆள் இல்லை.. அதை நான் தெளிவுபடுத்துகிறேன்      


இரண்டாவதாக நான் விஜய் வாழ்த்தவில்லை என்று சொல்கிறார்கள்


அவர் ஜெயிச்ச உடனே நான் எக்ஸ்ட்ராத்துல வாழ்த்துக்கள் பதிவிட்டேன் 

 

நான் 2016ல அரசியலுக்கு வரேன்னு சொன்னபோது ஏர்போர்ட்டில் மீடியாக்காரங்க இருப்பாங்க அவர்களுக்கு பதில் சொல்வது வழக்கம்... அதேபோல் . மீடியா காரங்க இருப்பாங்களான்னு கேட்டபோது மீடியாக்காரர்கள் இல்லை என்று சொன்னார்கள்... திடீர் என்று ஒரு சின்ன போன் வைத்துக்கொண்டு ஒருவர் கேள்வி கேட்க அவர் மீடியாக்காரன் இல்லாதது போல் எனக்கு தெரிந்தது... திடீரென்று வந்து விஜய் சிஎம் ஆயிட்டாரு அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேள்விகள் எழுப்ப,... நான் ஷாக் ஆயிட்டேன் மீடியா மாதிரியே தெரியல எனக்கு.. நான் சிரித்துக் கொண்டே போய் விட்டேன்.. அதற்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று  ஒரு விமர்சனம் வைக்கிறார்கள்.. மற்றொன்று விஜய் மேல் எனக்கு பொறாமை என்று.. நான் அரசியலில் இல்ல அரசியலில் இருந்து விலகி விட்டேன் நான் அரசியலில் இல்லாத போது எனக்கு ஏன் அவர் மேல் பொறாமை.. ஒருவேளை கமலஹாசன் முதலமைச்சராக வந்திருந்தா பொறாமை வந்திருக்குமோ தெரியாது....அப்போ கூட  வந்திருக்காது... கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது...  எனக்கும் விஜய் க்கும் ஒரு ஜெனரேஷன் கேப் இருக்கு. கிட்டத்தட்ட 25 வருடம்.. நான் முதலிலேயே சொல்லி இருக்கேன் நான் வந்து விஜய கம்பேர் பண்ணா அது எனக்கு நல்லதல்ல  கெட்ட பேரு.. விஜய் என்ன கம்பேர் பண்ண அது அவருக்கு கெட்ட பேரு.. விஜயை நான் சின்ன வயசுல இருந்து அவரை பார்த்துகிட்டு இருக்கேன்.. அவர் முதலமைச்சர் ஆனதில்  எனக்கு என்ன பொறாமை...  அதுவும் இந்த சின்ன வயசுல 52 வயசுல எம்ஜிஆர் என்டிஆர் சாதனை பண்ணத விட  ஜாஸ்தி.. கம்ப்ளிட்டா சென்டர் பிஜேபி.. எவ்ளோ பெரிய பவர்ஃபுல் சென்டர்.. இங்க ரெண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளா வந்து  ஜெயிச்சிருக்காங்க.. அதுவும் சினிமா இண்டஸ்ட்ரில இருந்து எனக்கு பொறாமை இல்ல ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம்.. சோ எனக்கு பொறாமை இல்ல விஜய் அவங்க கிட்ட நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு  ஜனங்க கிட்ட.. அந்த எதற்கு எதிர்பார்ப்பு எல்லாம் அவர் சந்திச்சு மக்களுக்கு நல்லது செய்யணும்.. செய்வாங்க.. என்ற நம்பிக்கை இருக்கு... அவருக்கு வாழ்த்துக்கள்... 

 பதவியேற்பு விழாவின்போது ஜெயலலிதா அவர்கள் ஆசைப்பட்டிருந்தாங்க நான் போயிருந்தேன் அது மட்டும் சொல்ல நினைத்தேன் மிஸ் ஆயிடுச்சு... நினைவு கூர்கிறேன்..


என்று ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து  உரையாடினார்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*

 *வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*













*இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!*


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  தயாரிப்பில்  “96, மெய்யழகன்"  படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி  K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.


தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு  இசையமைத்த கோவிந்த் வசந்தா  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி போன்ற

 *அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி போன்ற படங்களை இயக்கிய வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கும் "பூ காய் கனி"*












*இண்டிபெண்டன்ட் ஆல்பங்களில் நடித்த kCP மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக அறிமுகமாகும் "பூ காய் கனி"*


*கொட்டாச்சியின் மகள் மானசி கதாநாயகியாக அறிமுகமாகும் "பூ காய் கனி"*


*தளபதி விஜய் அவர்கள் விரைவில் ஆட்சி அமைப்பாரென்று தளபதி கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சொன்ன *விசிறி* படத்தை தயாரித்தவர் திரு *A.ஜமால் சாகிப்* அவர்கள்....

மீண்டும் தயாரிக்கும் படம் *பூ காய் கனி*



இப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை....


இப்படத்தை

*அரும்பு மீசை குறும்பு பார்வை*, *வெண்ணிலா வீடு* ,*விசிறி*, போன்ற படங்களை இயக்கிய.

இயக்குனர் *வெற்றிவீரன் மகாலிங்கம்*இயக்குகிறார்.


இவர் சமீபத்தில் தான் *அயலி* வெப் தொடர்  நட்சத்திரங்களுடன் விஜய் டிவி *புகழ் * நடித்த *சூட்கேஸ்* படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 

இப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது....


மேலும் தற்போது  முழுக்க முழுக்க மண்வாசத்துடன் எழுதி இயக்கும் படம் தான் 

*பூ காய் கனி*.



தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான  திரைக்கதை  கொண்ட படமாக இருக்கும் என்கிறார்....


*சூட்கேஸ்* படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த *ராஜேஸ்வரி வெற்றிவீரன்* அவர்கள் *பூ காய் கனி* படத்தை *பழையனூர் சந்தனம் பட கம்பெனி* சார்பாக தயாரிக்கிறார் 


 *பூ காய் கனி* படத்தில்  கதையின் நாயகனாக *KCP மிதுன் சக்கரவர்த்தி* அறிமுகமாகிறார்...

இவர் *அடியே வெள்ளழகி,ஏன் என்னை காதலிச்ச* போன்ற  இண்டிபெண்டண்ட்  ஆல்பங்களில் நாயகனாக நடித்துள்ளார்


அதுமட்டும் இன்றி  நாயகனுக்கு தேவையான முழு பயிற்சியையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ...


அடுத்ததாக கதையின் மையக்கருவாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பவர்...


உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற *டூலெட்* படத்தின் கதை நாயகனான *சந்தோஷ் நம்பிராஜன்* மலைக்கள்ளன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார்....


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் *மானசி* நடிகர் கொட்டாசியின் மகளான இவர் *பூ காய் கனி* படத்தில்...கதைநாயகியாக அடுத்த படிக்கட்டு  எடுத்து வைக்கிறார்.


*பூ காய் கனி* படத்தின்  இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கத்தின் மகனான *ராஜூ மகாலிங்கம்* ஐந்து வயதிலிருந்து *புஷ்பா  ,ராயன், ஜவான்* போன்ற படங்களில்  பின்னணி குரல் கொடுத்தவர்....

*அதர்வா* நடித்த *தனல்* படத்தில் வில்லன் அஸ்வினுக்கு மகனாக நடித்தவர்...

*பூ காய் கனி* படத்தில்  நாயகனின் சிறு வயது பாத்திரத்தில் நடிக்கிறார்...

அத்தோடு இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்...


மேலும் முக்கிய நிகழ்வாக *மாயன் விருமாண்டி* போன்ற  படத்திற்குப் பிறகு *கூத்துப்பட்டரையில்* இருந்து பயிற்சி பெற்ற பத்துக்கும் அதிகமான நடிகர்களை இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். 


ஒளிப்பதிவாளர் *பி ஜி முத்தையா* 


இசை 

*தன்ராஜ் மாணிக்கம்* 


பாடல்கள்: கருமாத்தூர் *மணிமாறன்*- *வெற்றிவீரன் மகாலிங்கம்*


பல வெற்றி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியது  மட்டுமின்றி *வல்லினம்* படத்திற்கு தேசிய விருது பெற்ற *V.J.சாபு ஜோசப்*  அவர்கள் படத்தொகுப்பை கவனிக்கிறார்.


இந்திய அளவில் கலை இயக்குனராக ஆடை வடிவமைப்பாளராக  பல தேசிய விருதுகளை வாங்கிய கலை இயக்குனர் *பி கிருஷ்ணமூர்த்தி* அவர்கள் மறைந்து இருந்தாலும் இப்படத்திற்கு அவர்தான் கலை இயக்குனராக பணியாற்றவிருக்கிறார்...


ஆம் அவரிடம் உதவி கல இயக்குனராக ஐந்து படங்களுக்கு வேலை செய்த இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கம்...

மேற்பார்வையில் கலை இயக்கத்தை செய்து அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்...


பல முன்னணி நிறுவனங்களில்  வியாபாரம் அனுபவம் பெற்ற...

*சோனி மாறன்* அவர்கள் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்....


மக்கள் தொடர்பு:

 *ஆனந்த்* 


பப்ளிசிட்டி டிசைன்ஸ்: *செல்வா*


இணை தயாரிப்பு:

*குரு சின்னச்சாமி*

Saturday, 16 May 2026

New Spider-Man: Brand New Day Poster Shows Tom Holland Suited Up For His Next Big Adventure

 *New Spider-Man: Brand New Day Poster Shows Tom Holland Suited Up For His Next Big Adventure*



_Spider-Man: Brand New Day is set to release on 31st July 2026 in India in English, Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam._


LINK: https://www.instagram.com/p/DYUfBDqN_6L/


Following the overwhelming response to the trailer of Spider-Man: Brand New Day, fans have been eagerly awaiting this exciting new chapter in Spider-Man’s journey. And now, the makers of the highly anticipated superhero film have unveiled a brand-new poster that is sure to amplify the excitement even further.


The newly released poster features Tom Holland’s Peter Parker with the Spider-Man suit hidden beneath his hoodie, symbolising the hero is still here to protect everyone. The poster serves as a powerful reminder that while “the world has forgotten Peter Parker,” he hasn’t forgotten them — or the responsibility that comes with being Spider-Man.


The makers have also released a special featurette that offers glimpses of the making of Spider-Man: Brand New Day. Check it out below: 


https://youtube.com/shorts/HUnNoKMMMKQ


After the record-breaking global success of Spider-Man: No Way Home, Spider-Man: Brand New Day marks an entirely new chapter for Peter Parker and Spider-Man. Four years have passed since the events of No Way Home, and Peter is now an adult living entirely alone, having voluntarily erased himself from the lives and memories of those he loves. Crime-fighting in a New York that no longer knows his name, he's devoted himself entirely to protecting his city — a full-time Spider-Man — but as the demands on him intensify, the pressure sparks a surprising physical evolution that threatens his existence, even as a strange new pattern of crimes gives rise to one of the most powerful threats he has ever faced. 


Directed by Destin Daniel Cretton, Spider-Man: Brand New Day sees Tom Holland reprise his role alongside Zendaya, Jacob Batalon, Sadie Sink, Jon Bernthal, Mark Ruffalo, Michael Mando, and Tramell Tillman in pivotal roles.


Sony Pictures Entertainment India will release Spider-Man: Brand New Day in theatres on 31st July 2026 in English, Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam across all premium formats.

ஜியோஹாட்ஸ்டாரின் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!*

 *ஜியோஹாட்ஸ்டாரின் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!*









ஜியோஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும். ஜியோஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான 'உப்பு புளி காரம்', 'ஹார்ட்பீட்' மற்றும் 'ரிசார்ட்' ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது.


இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (நடிகர் போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.


குடும்பத்தின் கலகலப்பும், உணர்வுப்பூர்வமான உறவுகளும், நகைச்சுவையான தருணங்களும் ஆரம்பத்தில் வெளியான புரோமோக்களில் காட்டப்பட்டது. பின்னர், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிப்படுகிறது. இதையடுத்து, குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர்.


நகைச்சுவை மற்றும் எமோஷனலான இந்த புரோமோக்கள் மற்றும் அன்னையர் தினத்தில் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஜியோஹாட்ஸ்டாரின் நீளமான ஒரிஜினல் தொடர்களை தொடர்ந்து ரசித்து வரும் பார்வையாளர்களை மட்டுமல்லாமல், புதிய குடும்ப ரசிகர்களையும் இந்த தொடரின் புரோமோ கவர்ந்துள்ளது.


போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் தொடரை, ’உப்பு புளி காரம்’ மற்றும் ’போலீஸ் போலீஸ்’ போன்ற வெற்றிகரமான தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.


நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் மனதை தொடும் தருணங்களை கொண்டுள்ள ’பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கும் வகையில் வாரந்தோறும் ரசிக்கத்தக்க தொடராக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று ஜியோஹாட்ஸ்டாரில் மே 27 முதல் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. 


*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.