Featured post

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ...

Tuesday, 30 June 2026

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 சங்கங்களின் தலைவர், செயலாளர் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம்,  இன்று 30.6.2026 சென்னை Accord ஹோட்டலில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் நன்மை கருதி முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளது. அதில் குறிப்பாக தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்காத வண்ணம்,  தமிழ்த் திரையுலகில்  புதிய முயற்சியாக, சிறிய, மத்திமம், பெரிய பட்ஜெட் என்று மூன்று வகையாக பிரித்து அதற்குரிய சம்பளம் வழங்க  அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முடிவு செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளார். இது இந்திய திரையுலகிற்கு எடுத்துக்காட்டாய் அமையும் என்பதில் ஐயமில்லை. 









மேற்படி கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. கலைப்புலி எஸ் தாணு, துணைத்தலைவர் திரு.s. கமலக்கண்ணன் செயலாளர்கள் திரு. S. கதிரேசன், திரு. ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் n. சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி சுஜாதா விஜயகுமார், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திரு.டி. சிவா, பொருளாளர் திரு.தனஞ்செயன் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர் திரு. ஆர்.வீ.உதயகுமார், இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்துகொண்டார்கள்..

இயக்குனர் வ.கௌதமன் தொழிலதிபர் க.கண்ணன் இல்ல திருமண நிகழ்வு புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கண்வென்ஷன் சென்டரில் இனிதே நடைபெற்றது.*

இயக்குனர் வ.கௌதமன் தொழிலதிபர் க.கண்ணன் இல்ல திருமண நிகழ்வு புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கண்வென்ஷன் சென்டரில் இனிதே நடைபெற்றது.* 



மணமக்கள் 

க.குணாநிதி பி.ஆர்க்.,

கௌ.பரஞ்சோதி பிகாம்., எம்.பிஏ., இணையர்களை நேரில் வந்து மனம் நிறைந்து வாழ்த்தியவர்களின் பட்டியல்


முன்னாள் முதல்வர்  திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி

மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான்

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்

மேல்மருவத்தூர் செந்தில் அடிகளார்,

முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன்

 திமுக எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.இராசா, மேனாள் அமைச்சர், தற்போதைய குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின்   எம்பி ப.இரவிக்குமார்,

 விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன், வானூர் எம்எல்ஏ கௌதம், புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன், நெய்வேலி எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன், சபா.இராஜேந்திரன், பாண்டி எம்எல்ஏக்கள் செந்தில் கவுண்டர், பாஸ்கர், பாமக சேர்மன் மா.க.ஸ்டாலின், சுப இளவரசன், திராவிட வெற்றிக் கழகம் மல்லை சத்யா, 


நடிகர்கள் சத்தியராஜ் ராதாரவி, செந்தில் சமுத்திரக்கனி, பொன்வண்ணன்  தம்பி ராமையா, ஏகன், இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா,


இயக்குநர்கள் தங்கர்பச்சார், சேரன், மு.களஞ்சியம் சீனுராமசாமி, சற்குணம், புகழேந்தி தங்கராஜ், லெனின் வடமலை


தயாரிப்பாளர்கள் 

த.மணிவண்ணன்

சுரேஷ் காமாட்சி, சரவணராஜா, கிருஷ்ணமூர்த்தி,

குறள் அமுதன், சுந்தரவரதன், அருளானந்தம்,

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா


நீதியரசர்கள் கலையரசன், புகழேந்தி,


நியூஸ் 18 தலைமை செய்தியாசிரியர்

கார்த்திகை செல்வன்

மேனாள் சன் நியூஸ் தலைமை செய்தியாசிரியர் இராஜா, ராஜ் டிவி ரவீந்திரன்,

புதுயுகம் கார்மல்

ஊடகர்கள் ஏகலைவன் , கார்ட்டூனிஸ்ட் பாலா


கல்வியாளர்கள்

விஜடி சங்கர்

டெல்டா இளமாறன்

எஸ் ராஜேந்திரன்

விருதை சுந்தரவடிவேலு  புனிதா கணேசன்


தமிழ்நாடு அரசு மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், தனவேல் ஐஏஎஸ்


கவிஞர்கள் காசி ஆனந்தன், அறிவுமதி, பச்சியப்பன், கவிபாஸ்கர், பூவை சாரதி எழுத்தாளர்கள் ஆறு இராமநாதன் கண்மணி குணசேகரன், தமிழ்மகன், மணவழகன், அமுல்ராஜ் இளங்கோவன், இரவிக்குமார்,

பாடகர்கள் அந்தோணி, புதுவை சித்தன், மனித வள பயிற்சி நிபுணர் சான்றோன்,


தொழிலதிபர்கள்

பல்லாவரம் இராமமூர்த்தி, அண்ணாதுரை, டெல்டா செல்வக்குமார்

லண்டன் சிவந்தன், செல்வன் சீமான், ஆடிட்டர் நம்பி ஆரூரன், வில்லியப்பன்


மருத்துவர்கள் தொல்காப்பியன், சித்தா தணிக்காசலம், வேலாயுதம், கண்ணன்

உள்ளிட்ட பேராசிரியர்களும் ஆசிரியர்களும்  பல்வேறு துறைகளின் ஆளுமைமிக்க பெரியோர்களும் கலந்துகொண்டனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக பேரன்பும் பெரும்பாசமும் நிறைந்த சொந்தங்கள், உறவுகள், நட்புகள் என அனைவரும் இடைவெளி இல்லாது இறுக கைப்பற்றி இத்திருமணத்தை நடத்திக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் இருவீட்டார்களின் சார்பில் தலைவணங்கி எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


குறிப்பு: பெயர் குறிப்பிட மறந்தவர்கள் பெரிய மனதோடு மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  நினைவுக்குள் வர வர பட்டியலில் சேர்த்துக்கொள்கிறோம்.


வந்திருந்த அனைத்து விருந்தினர்களையும் இயக்குனர் வ.கௌதமன், மல்லிகா கௌதமன்

தொழிலதிபர் க.கண்ணன்

க.சம்பாவதி க.சத்தியசீலன் த.மணிவண்ணன்

கீதாஞ்சலி மணிவண்ணன் 

தமிழ் கௌதமன் ஆவல் கணேசன் அம்பத்தூர் மணி,

புலவர் இரத்தினவேலன் வெங்கடேசன்

தமிழ் கௌதமன்

லெனின் வடமலை

தமிழ்ப்பேரரசு கட்சி அவைத்தலைவர் சரவணன், கு.முடிமன்னன், அ.பிரபாகரன்,

திருமலை, கயல் ஆகியோர் வரவேற்றனர்

நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி

 *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*









ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார்.  ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது .


கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ,  சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


படத்தின் கதாநாயகியான அத்விதி ஷெட்டி கடந்த 11 ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறையில் பணியாற்றி வருபவர். பல விருது பெற்ற படங்களிலும், வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ள இவர். சமீபத்தில் நடித்து வெளியான இரண்டு படங்களில், துளு மொழிப் படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது..


அதுமட்டுமல்ல இவர் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞரும் கூட..  கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கில் சுமார் ஐந்து நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ‘நோவா’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்துள்ளார்.


‘நோவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறும்போது, “இதில் “வல்லபி. ராணுவ அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இதுவரையிலான திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவமும், வலுவான நடிப்பு வாய்ப்பும், நிறைய வசனங்களும் உள்ளன.. 

இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். அதோடு நிறைய சஸ்பென்ஸும் இருக்கிறது.


எனக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு தமிழ் புரியும்.. தமிழ் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லாததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்பில் நான் வசனங்களை மிக விரைவாக கற்றுக்கொண்டதாகவும் என் லிப்-சிங்க் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டினார்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் நான் கிளிசரின் பயன்படுத்தாமல் நடித்ததை கண்டு மொத்த படக்குழுவிடமிருந்தும் கைதட்டல் கிடைத்தது.. பொதுவாகவே அழுகைக் காட்சிகளில் நான் கிளிசரின் பயன்படுத்துவதில்லை.


படப்பிடிப்பின் நடுவில் என் பாட்டி காலமானார். அவருடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது தான் வீட்டிலிருந்து அந்த செய்தி வந்தது. அதேசமயம் முக்கியமான காட்சியில் நடிக்கவேண்டி இருந்ததால் முதலில் அந்தக் காட்சியை முடித்தேன். அதன் பிறகு மங்களூருக்குச் சென்றேன். அதிலும் மூணாரில் இருந்து சரியான் போக்குவரத்து வசதி இல்லாததால் கொச்சி, பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இறுதியாக என் பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. அடுத்த நாளே மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பி வந்தேன். மனதளவில் அது மிகவும் கடினமான காலம். என்றாலும் என் குடும்பத்தினர், "உன் குழுவிற்கு நீ தேவைப்படுகிறாய்; திரும்பிச் செல்" என்று ஊக்கமளித்ததை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினேன். 


பெரும்பாலும் நாங்கள் மலைப்பகுதி மற்று காடுகளின் உள்ளார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியதால் எங்களுக்கான காரவன்கள் தூரத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. கழிப்பறைக்குச் செல்லவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. மேலும் நான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்ததால் கனமான ராணுவ பூட்ஸ்களை அணிய வேண்டியிருந்தது. அவற்றை அணிந்து நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் இருந்துதான் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்கினேன். 


படத்தில் என் அறிமுகக் காட்சியே மழைக் காட்சியாக இருந்தது. நள்ளிரவு நேரத்தில் மூணாரின் கடும் குளிரில் டேங்கர் தண்ணீரை எங்கள் மீது ஊற்றி படமாக்கினர். 24 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது 


இயக்குநர் மைலோவின் சினிமா பார்வை மிகவும் வித்தியாசமானது. பார்வையாளர்களுக்கு புதுமையான அறிவியல் புனைகதை திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். "நோவா" அதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்


படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் உதவியாக இருந்தனர். தமிழ் உச்சரிப்பு, வசனங்கள் போன்றவற்றில் எனக்கு உதவினர். என். குடும்பத்திலிருந்து தூரமாக இருந்ததால் படக்குழுவே எனக்கு ஒரு குடும்பமாக மாறிவிட்டது. நோவா" வெளியான பிறகு தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்..

Actress Adhvithi Shetty Makes Tamil Debut as an Army Officer in ‘NOVA

 *Actress Adhvithi Shetty Makes Tamil Debut as an Army Officer in ‘NOVA’*









‘NOVA: Phase One – The Arrival’, bankrolled by Royal Fortuna Creations, marks the directorial debut of Milo in cinema industry.,  The film is conceptualised, crafted and materialized as a “Horror Sci-Fi Supernatural Fantasy Thriller.” 


Bigg Boss fame Raiza Wilson is playing the protagonist’s role, and Kannada actress Adhvithi Shetty appears as another heroine. The film also features ‘Aanmai Thavarael’ fame Dhruva, Bengali actress Kruttika Biswas, Malayalam actor Joe John Chacko, Sendrayan, YouTube sensations - Finally Swathika and Finally Krishna in pivotal roles.


While the postproduction phase is briskly progressing, the makers are planning to bring the theatrical release soon 


It is noteworthy that actress Adhvithi Shetty, who plays one of the lead roles in the film, has carved a niche of excellence in the Kannada film industry for the last 11 years. Her wide-array of  several award winning and commercially successful films, have been the epitome of her success. Not to miss the fact that two of her recent releases gained significant attention, with one of her Tulu language films, achieving a remarkable feat of accomplishment, by completing 100-days milestone in the theatres. 


Apart from acting, Adhvithi Shetty is also a trained dancer. She has participated in nearly five dance reality shows across Kannada, Hindi, and Telugu, and is now stepping into Tamil cinema through ‘NOVA’.


Actress Adhvithi Shetty said: “I play the role of ‘Vallabhi’, an army officer in this film. Among all the characters I have portrayed so far in my acting journey, NOVA proves to be something unique for it has offered me a different and challenging role, which I haven’t done before. The character carries immense importance, offers strong scope for performance, and involves a lot of dialogues. Since this is a science fiction film with plenty of suspense elements, it turned out to be a major challenge for me.


I can understand Tamil and I enjoy watching Tamil films. However, since I did not have Tamil speaking friends, I never really got the opportunity to speak the language fluently. During the shoot, I learnt the dialogues very quickly, and the team appreciated my lip sync and performance. In one emotional scene, I performed without using glycerine, and the entire team applauded me for it. In general, I never use glycerine for crying scenes.”


“During the shoot, my grandmother passed away. I was extremely close to her. I received the news from home while I was on the sets. At the same time, I had an important scene to complete, so I finished shooting first and then travelled to Mangaluru. Since there was no proper transport facility from Munnar, I had to travel through Kochi and Bengaluru. Unfortunately, I could not even see my grandmother one last time. The very next day, I returned to the shoot. Emotionally, it was one of the most difficult phases for me. However, my family encouraged me, saying, ‘Your team needs you, go back and complete your work,’ which motivated me to return.”


“Most of the shooting took place in deep forest areas and hilly terrains, where our caravans had to be parked far away. Even going to the restroom meant walking long distances. Since I was portraying an army officer, I had to wear heavy military boots, and walking in them itself was extremely difficult. It was during this experience that I developed an even deeper respect for the sacrifices made by our soldiers who protect the nation.”


“My introduction scene in the film itself was a rain sequence. It was shot at midnight in the freezing cold weather of Munnar, where tanker water was poured on us for filming. We shot continuously for 24 hours, and it was an extremely challenging experience.”


“Director Milo’s ambitious drive and  his visualisation proficiency is very different. His intention is to offer audiences a refreshing science fiction film experience, and I strongly believe ‘NOVA’ will stand as a wonderful attempt in that direction.”


“Everyone on the sets was extremely supportive. They helped me with Tamil pronunciation and dialogues. Since I was away from my family, the entire film crew gradually became like a family to me. After the release of ‘NOVA’, I would love to act in many more Tamil films.”

Vision Cinema House's 'Haiku' Takes the Next Step; Aegan Commences Dubbing*

 *Vision Cinema House's 'Haiku' Takes the Next Step; Aegan Commences Dubbing*





Following the successful completion of its extensive shooting schedule, Vision Cinema House's  Haiku has officially entered its post-production phase with the commencement of dubbing. Lead actor Aegan began dubbing for the film,  following a traditional pooja ceremony held in Chennai.


Written and directed by Yuvaraj Chinnasamy, Haiku is produced by Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu under the banner of Vision Cinema House. Starring Aegan, Femina George, and Sridevi in the lead roles, the film recently wrapped up an extensive shooting schedule across Kerala, Coimbatore, and Chennai, and now moves one step closer to completion with the commencement of post-production.


Producers Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu said, "The commencement of dubbing marks another important milestone in the journey of Haiku. We are delighted with the sincerity, discipline, and commitment shown by our director, cast, and technicians at every stage of production. Every phase has progressed smoothly, and we are confident that the same passion will continue through the remaining stages of post-production. We look forward to bringing Haiku to audiences very soon. The postproduction work is briskly progressing, and we are working day and night to deliver the film's release at the earliest.”


Haiku features additional screenplay by Hari Haran Ram, with Priyesh Guruswamy handling cinematography, Sakthi Pranesh overseeing editing, Siddhu Kumar composing the music, and Prem serving as the art director.


Even before the completion of shooting, Haiku had secured its post-theatrical digital streaming rights with Netflix, reaffirming the platform's confidence in the film's storytelling and universal emotional appeal. With dubbing now underway, Haiku continues its journey through post-production, with further updates on the film to be announced soon.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*

 *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*





விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார்.


யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் நிறைவை நோக்கி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.


டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறியதாவது, "'ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் நேர்மையான உழைப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படப்பிடிப்பின் ஒவ்வொரு கட்டமும் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவடைந்துள்ளது. அதே உற்சாகமும் அர்ப்பணிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் தொடரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ’ஹைக்கூ’ திரைப்படத்தை விரைவில் ரசிகர்களிடம் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தை விரைவில் வெளியிடுவதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகிறோம்" என்றார். 

 

ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் பணியாற்றியுள்ளார்.


படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே, 'ஹைக்கூ' திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியது. இதன் மூலம் இப்படத்தின் கதை மற்றும் உணர்வுப்பூர்வமான களம் மீது அந்நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகியுள்ளது. 

தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'ஹைக்கூ' திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்

 *மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!*



பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர்  திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, One Purpose… One Divine Reckoning) என்ற டேக்லைன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.


இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் இணைவதால், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.


நடிகர்

என்.டி.ஆர்


தொழில்நுட்பக் குழு


தயாரிப்பு நிறுவனங்கள்: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ், என்.டி.ஆர் ஆர்ட்ஸ்

தயாரிப்பாளர்கள்: எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு), நந்தமூரி கல்யாண் ராம்

கதை, திரைக்கதை, இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

இசை: அனிருத் ரவிச்சந்தர்


*Man of Masses NTR & Visionary Filmmaker Trivikram Srinivas Reunite for a Grand Divine Cinematic Spectacle Produced by Haarika & Hassine Creations & NTR Arts*


The wait is finally over. After years of anticipation and countless conversations among fans, Man of Masses NTR and visionary filmmaker Trivikram Srinivas officially reunite for one of the most awaited films in Indian cinema. Following the blockbuster success of Aravinda Sametha Veera Raghava, the celebrated actor-director duo is set to embark on an extraordinary cinematic journey.


The project was officially announced by NTR through X platform. Featuring a trident and spear merging alongside a DNA motif, the poster carries the intriguing tagline, "One Spear, One Purpose... One Divine Reckoning." The makers have positioned the film as a grand mythological spectacle, promising a divine cinematic experience inspired by mythology and rooted in powerful storytelling.


Conceived on a grand scale and rooted in divinity, the film promises a powerful blend of mythology-inspired storytelling, intense emotions, breathtaking action and spectacular world building. The project brings together an exceptional creative team. Acclaimed Music composer Anirudh Ravichander comes on board to create a massive musical experience adding another exciting dimension to this magnum opus.


The film will be jointly produced by S. Radha Krishna (China Babu) under the prestigious Haarika & Hassine Creations banner and Nandamuri Kalyan Ram under NTR Arts. With one of Telugu cinema's most successful actor-director collaborations joining hands once again backed by two powerhouse production houses, the film is set to become one of the biggest cinematic spectacles ever mounted.


Further details regarding the cast, technical crew and production schedule will be announced soon.


Cast: Man of Masses NTR


Technical Crew:


Banner: Haarika & Hassine Creations, NTR Arts

Producers: S. Radha Krishna (China Babu), Nandamuri Kalyan Ram

Written & Directed by : Trivikram Srinivas

Music: Anirudh Ravichander

சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு

 சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட்  இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு









 இத்திரைப்படத்தின் அறிமுக நாயகன் அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ  நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு

 இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட்செளவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது 

 கல்வியில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது தமிழ் திரைப்படத்தில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க படத்தொகுப்பு r.k. செல்வன்  இத்திரைப்படம் போஸ் ப்ரோடுக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் விரைவில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்  ஆறுமுகம் மாணிக்கம் மற்றும் இயக்குனர் சந்தோஷ் சேகரன் இசை வெளியீட்டு விழா தேதியை விரைவில் அறிவிக்கப்படும்  என்று தெரிவித்தனர். 


 மக்கள் தொடர்பாளர் நித்தீஷ் ஸ்ரீராம்

நா.விஜய்

ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது " ஃபீல் மை லவ் "

ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது " ஃபீல் மை லவ் " 

ஹரி பிரகாஷ் எம் இயக்கியுள்ளார்.




















காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் 'ஃபீல் மை லவ்' (Feel My Love) ஆகஸ்டில் திரைக்கு திரைக்கு வருகிறது.


பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல 'பான்-இந்தியா' (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமல் தயாரிக்கும் படம் " Feel My Love " ஃபீல் மை லவ் "

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.


ஹவுஸ் மேட்ஸ்' (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்துவருகிறார்.


திறமையான இசையமைப்பாளர்களான ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.


லவ்' (LOVE), 'கொலை சேவல்' (Kolai Seval) போன்ற படங்கள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விளம்பரப் படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.


ஹரி பிரகாஷ் எம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.


"வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்" என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.


இப்படத்தின் இதமான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, இளைஞர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்கள் என இரு தரப்பினரையும் சமமாக ஈர்க்கும் என்று படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.


சென்னை மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்றது. 


இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மூனார் மலைப்பிரதேசத்தில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ள இப்படம், இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் தயாராகி வருகிறது. 


இதற்கிடையில் விரைவில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.