Featured post

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு…

 கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு…...

Tuesday, 7 July 2026

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு…

 கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு…







இலங்கையின் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியின் குடும்பத் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகம் சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


இந்த நிகழ்வில், லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைகா  புரொடக்‌ஷன்ஸ்  தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான G.K.M தமிழ் குமரன் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


மேலும், இயக்குநர் ஜேசன் சஞ்சய், இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


உறவினர்கள், நண்பர்கள், திரையுலக மற்றும் தொழில்துறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த திருமண விழா, மகிழ்ச்சிகரமான சூழலில் சிறப்பாக நடைபெற்றது.

Mr. Bhaarath is a Rom-Com infused with Laughter-riot that will engage universal crowds” - Actor Bhaarath

 _*“Mr. Bhaarath is a Rom-Com infused with Laughter-riot that will engage universal crowds” - Actor Bhaarath*_


The phase of YouTubers emerging as winners on silver screens has become the most admirable thing in the Tamil film industry. With many incredibly proving their craftsmanship, the crew of ‘Mr. Bhaarath’ has kept the audiences hooked onto this project from its announcement. The fun-filled title glimpse announcement featuring Director Lokesh Kanagaraj - Producer of this film in a hilarious shade made everyone excited. With the film all set to enthrall the audiences soon in the theaters, both actor Bhaarath and Director Niranjan are elated to share their experience on creating this film. 





A title is often the first identity of a film, and for "Mr. Bhaarath", that identity comes with an interesting story of its own. The film was initially titled "Masterpiece", but the makers later discovered that the title had already been associated with films in the Kannada and Telugu industries. Keen on giving the project a unique identity, they decided to look for a fresh title.


It was filmmaker Lokesh Kanagaraj who suggested "Mr. Bhaarath", a title that instantly reflected with the team. However, carrying the legacy of Superstar Rajinikanth's iconic blockbuster of the same name naturally brought with it a sense of responsibility. After obtaining the official No Objection Certificate (NOC) from AVM Studios, the makers were delighted to christen the film "Mr. Bhaarath.”


Presented by Lokesh Kanagaraj and produced by Sudhan Sundaram, Lokesh Kanagaraj, and Jagadish Palanisami, Mr. Bhaarath marks the arrival of six fresh talents, making it one of the most exciting debut ventures in recent times. The film introduces Bhaarath as the lead actor alongside Samyuktha Viswanathan, while also marking the directorial debut of Niranjan. The project further introduces Pranav Muniraj as music director, Bhavna Govardan as art director, Dhivakar Dennis as editor, and Samyuktha Viswanathan as the female lead, making it a collective debut for six passionate artistes and technicians.


Sharing his excitement, Bhaarath says, ”I have previously appeared as the hero's friend in films like Prince and Love Today. Stepping into my first film as a lead actor itself is a dream come true, and what makes it even more special is that six of us are beginning our cinematic journey together through Mr. Bhaarath. I sincerely hope audiences embrace all of us with the same love and encouragement.”


Speaking about his character, he adds, "I play a Quality Check Officer in a toy manufacturing company. My character is extremely innocent—so innocent that he doesn't even realise when a girl is expressing her love for him. He's an orphan brought up by his grandfather, played by R. Sundarrajan sir. Audiences will also get to enjoy shades of Sir's vintage humour through our relationship, which forms one of the emotional strengths of the film.”


The makers reveal that Samyuktha Viswanathan portrays a Toy Designer, whose difficult childhood and emotionally fractured family life shape her outlook on relationships. Her encounter with Bhaarath's pure-hearted innocence forms the emotional core of this character-driven entertainer.


Written and directed by Niranjan, Mr. Bhaarath promises a refreshing blend of humour, emotions, romance, and relatable human relationships. Rather than relying on spectacle, the film places its faith in memorable characters and emotionally engaging storytelling.


The film features Bhaarath, Samyuktha Viswanathan, Bala Saravanan, Nidhi Pradeep, R. Sundarrajan, Linga, and Adithya Kathir in pivotal roles.


The technical crew comprises Om Narayan (Cinematography), Pranav Muniraj (Music), Dhivakar Dennis (Editing), Bhavna Govardan (Art Direction), Navaa Rambo Rajkumar (Costume Design), Suren G. & Azhagiyakoothan (Sound Design), Azhar (Choreography), Shyed Malik S (Makeup), Kannal V Kannan & Kannal S Gugan (Stunts), Aadhavan Subramanian(Associate Executive Producer), T. Selvaraj, Parthiban Selvam, Manjunathan (Production Executive), Kowshik KS (Colorist), Amudhan Priyan(Publicity Designs), Pradeep Boopathi M. (Creative Producer), and R. Umamaheswaran (Executive Producer).


Bankrolled by a passionate team of newcomers and the guidance of accomplished filmmakers, Mr. Bhaarath aims to introduce fresh talent through a heartwarming, character-driven entertainer. The makers will soon unveil further updates from the film.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக 'மிஸ்டர் பாரத்' உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!*

 *“உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக 'மிஸ்டர் பாரத்' உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!*





யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், 'மிஸ்டர் பாரத்' திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.


ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டைட்டில் தான். 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்திற்கு முதலில் 'மாஸ்டர் பீஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்‘ தேர்வு செய்தனர். இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படமான 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதில் பொறுப்பும் இருந்தது. அதற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ என்.ஓ.சி. (No Objection Certificate) பெற்ற பிறகு, படத்திற்கு 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டது.


லோகேஷ் கனகராஜ் வழங்கும் இப்படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறது. நடிகர் பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். 


இதுகுறித்து நடிகர் பாரத் பகிர்ந்து கொண்டதாவது, "இதற்கு முன்பு 'பிரின்ஸ்', 'லவ் டுடே' போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு கனவு நனவான தருணம். அதிலும் புதியவர்கள் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை. நான் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக, அப்பாவி இளைஞனாக நடித்துள்ளேன். எந்தளவுக்கு அப்பாவியான இளைஞன் என்றால், ஒரு பெண் என்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமானவன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தாத்தா கதாபாத்திரத்தில் ஆர். சுந்தர்ராஜன் சார் நடித்துள்ளார். எங்களுக்கிடையேயான உறவில் அவரது பழைய கால நகைச்சுவை பாணியையும் ரசிகர்கள் மீண்டும் ரசிக்க முடியும். அதுவே படத்தின் பலமாக இருக்கும்" என்றார்.


கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மைகளை வடிவமைக்கும் டாய் டிசைனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், குடும்பத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்களும் அவரது வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றிய பார்வையை மாற்றியுள்ளன. அத்தகைய சூழலில், பாரத்தின் தூய்மையான மனமும் அப்பாவித்தனமும் அவரை ஈர்க்க, அதன் பிறகு நடக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களே இந்தப் படத்தின் கதை. 


இயக்குநர் நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் நகைச்சுவை, காதல், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுக்கு பதிலாக, மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான திரைக்கதையையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.


*தொழில்நுட்பக் குழு விவரம்:*


ஒளிப்பதிவு: ஓம் நாராயண், 

இசை: பிரணவ் முனிராஜ், 

படத்தொகுப்பு: திவாகர் டெனிஸ், 

கலை இயக்கம்: பாவனா கோவர்தன், 

ஆடை வடிவமைப்பு: நவா ரேம்போ ராஜ்குமார், 

ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி. மற்றும் அழகியகூத்தன், 

நடனம்: அசார், 

ஒப்பனை: சையது மாலிக் எஸ்.,

சண்டைப்பயிற்சி: கனல் வி கண்ணன் & கனல் எஸ் குகன்,

இணை நிர்வாக தயாரிப்பாளர்: ஆதவன் சுப்ரமணியன்,

தயாரிப்பு நிர்வாகி: டி.செல்வராஜ், பார்த்திபன் செல்வம், மஞ்சுநாதன்,

கலரிஸ்ட்: கெளஷிக் கே.எஸ்.,

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன், 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி எம்.,

நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உமா மகேஸ்வரன்.

Mudhal Kanal Movie Review

Mudhalkanal Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mudhalkanal படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு திரில்லர் படம் தான். இன்னிக்கு இருக்கற soceity ல பெரிய பாதிப்பு ஏற்படுது னா அது போதை பொருள் தான். இதை base பண்ணி தான் இந்த படத்தோட கதையை எடுத்திருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது venkataramanan . 



படத்துல hero க்கு நெறய விஷயங்களை சாதிக்கணும் ன்ற பல கணுவுகளோட இருக்கான். இவனுக்கு friends group னு ஒன்னு இருக்கு. ஆனா இந்த வட்டாரம் கொஞ்சம் மோசமானவங்கள இருக்காங்க. இவங்களுக்கு போதை பொருள் பயன்படுத்துற பழக்கம் இருக்கும், அதுனால hero வையும் இதுக்கு அடிமை ஆக்கிடறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல நம்ம பெரிய பிரச்சனைல மாட்டிட்டு இருக்கோம் னு hero க்கு புரிய வருது. இதுக்கு அப்புறம், இவரு இந்த addiction அ விட்டு வெளில வர்றதுக்கு  என்னனா steps எடுக்குறாரு. இவரு கண்ட கனவுகள் எல்லாத்தயும் நிறைவேத்தினரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


hero வ நடிச்சிருக்க ashwin ரொம்ப நேர்த்தியா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட acting மூலமா audience அ அவரு பக்கம் இழுத்துருக்காரு. ஒரு மனுஷன் பண்ணுற தப்பு, அதா சரிபண்ணிக்கறதுக்கான முறை னு எல்லாமே detailed  அ இந்த character க்கு குடுத்திருந்தாங்க. மத்த supporting actors ஆனா  ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ் னு இவங்களோட acting யும் ரொம்பவே நல்ல இருந்தது. 


படத்தோட technical team அ பாத்தோம்னா cinematographer கந்தசுவாமி கோபால் ஓவுவுறு scenes யும் கச்சிதமா camera ல பதிவு பன்னிருக்காரு. framing, colour, visuals னு  எல்லாமே அட்டகாசமா இருந்தது. music director  மீரா லால் ஓட songs and bgm ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. எடிட்டர் திஸ்யன் சாரதி ஓட editing யும் கதைக்கு  sharp ஆவும் short ஆவும் இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல சமூக கருத்தை சொல்லுற திரைப்படம் தான் அமைச்சிருக்கு. எல்லாரும் கண்டிப்பா பாக்க வேண்டிய படம். சோ miss பண்ணாம உங்க family and friends ஓட சேந்து போய் பாருங்க.

நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி

 *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*









ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார்.  ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது .


கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ,  சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


படத்தின் கதாநாயகியான அத்விதி ஷெட்டி கடந்த 11 ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறையில் பணியாற்றி வருபவர். பல விருது பெற்ற படங்களிலும், வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ள இவர். சமீபத்தில் நடித்து வெளியான இரண்டு படங்களில், துளு மொழிப் படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது..


அதுமட்டுமல்ல இவர் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞரும் கூட..  கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கில் சுமார் ஐந்து நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ‘நோவா’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்துள்ளார்.


‘நோவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறும்போது, “இதில் “வல்லபி. ராணுவ அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இதுவரையிலான திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவமும், வலுவான நடிப்பு வாய்ப்பும், நிறைய வசனங்களும் உள்ளன.. 

இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். அதோடு நிறைய சஸ்பென்ஸும் இருக்கிறது.


எனக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு தமிழ் புரியும்.. தமிழ் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லாததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்பில் நான் வசனங்களை மிக விரைவாக கற்றுக்கொண்டதாகவும் என் லிப்-சிங்க் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டினார்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் நான் கிளிசரின் பயன்படுத்தாமல் நடித்ததை கண்டு மொத்த படக்குழுவிடமிருந்தும் கைதட்டல் கிடைத்தது.. பொதுவாகவே அழுகைக் காட்சிகளில் நான் கிளிசரின் பயன்படுத்துவதில்லை.


படப்பிடிப்பின் நடுவில் என் பாட்டி காலமானார். அவருடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது தான் வீட்டிலிருந்து அந்த செய்தி வந்தது. அதேசமயம் முக்கியமான காட்சியில் நடிக்கவேண்டி இருந்ததால் முதலில் அந்தக் காட்சியை முடித்தேன். அதன் பிறகு மங்களூருக்குச் சென்றேன். அதிலும் மூணாரில் இருந்து சரியான் போக்குவரத்து வசதி இல்லாததால் கொச்சி, பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இறுதியாக என் பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. அடுத்த நாளே மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பி வந்தேன். மனதளவில் அது மிகவும் கடினமான காலம். என்றாலும் என் குடும்பத்தினர், "உன் குழுவிற்கு நீ தேவைப்படுகிறாய்; திரும்பிச் செல்" என்று ஊக்கமளித்ததை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினேன். 


பெரும்பாலும் நாங்கள் மலைப்பகுதி மற்று காடுகளின் உள்ளார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியதால் எங்களுக்கான காரவன்கள் தூரத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. கழிப்பறைக்குச் செல்லவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. மேலும் நான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்ததால் கனமான ராணுவ பூட்ஸ்களை அணிய வேண்டியிருந்தது. அவற்றை அணிந்து நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் இருந்துதான் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்கினேன். 


படத்தில் என் அறிமுகக் காட்சியே மழைக் காட்சியாக இருந்தது. நள்ளிரவு நேரத்தில் மூணாரின் கடும் குளிரில் டேங்கர் தண்ணீரை எங்கள் மீது ஊற்றி படமாக்கினர். 24 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது 


இயக்குனர் மிலோவின் சினிமா பார்வை மிகவும் வித்தியாசமானது. பார்வையாளர்களுக்கு புதுமையான அறிவியல் புனைகதை திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். "நோவா" அதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்


படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் உதவியாக இருந்தனர். தமிழ் உச்சரிப்பு, வசனங்கள் போன்றவற்றில் எனக்கு உதவினர். என். குடும்பத்திலிருந்து தூரமாக இருந்ததால் படக்குழுவே எனக்கு ஒரு குடும்பமாக மாறிவிட்டது. நோவா" வெளியான பிறகு தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்..

ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்

 *ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்*



இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம். 


179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் பல முன்னோடி சாதனைகளையும் புதுமைகளையும் நிகழ்த்தியுள்ளோம். பின்னணிப் பாடகர் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘நந்தகுமார்’ (1938), இந்தியத் திரைப்பட உலகில் முதல் மொழிமாற்றுப் படமான ‘ஹரிச்சந்திரா’ (1944), உதட்டசைவுக்கு ஏற்ப பாடலைப் பொருத்தும் post lip synchronisation தொழில்நுட்பத்தை பயன்படுத்திய  ‘ஸ்ரீ வள்ளி’ (1945), மகாகவி பாரதியார் பாடல்களை உரிமையாளரிடம் ஏவி. மெய்யப்பன் அவர்கள் வாங்கி திரைப் படத்தில் பயன்படுத்தியது ‘நாம் இருவர்’ (1947), அரசின் வேண்டுகோளை ஏற்று தன்னிடம் உள்ள பாரதியார் பாடல்களின் உரிமையை பெருந்தன்மையாக அரசுக்கு நன்கொடையாக ஏவிஎம் வழங்கியது (1949), பாடல்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம் ‘அந்த நாள்’ (1954), குழந்தைகளுக்கான திரைப்படத்திற்காக ஜவஹர்லால் நேரு தேசிய தங்கப் பதக்கத்தை வென்ற ‘ஹம் பஞ்சி ஏக் டால் கே’ (1957), எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்த ‘மெல்லத் திறந்தது கதவு’ (1986), ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முழுமையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படம் - ‘சம்சாரம் அது மின்சாரம்’ (1986), நடிகர்களையும் அனிமேஷனையும் ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ‘சிவாஜி’ (2007), இந்தியாவில் முதன்முதலாக Dolby Atmos  தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘சிவாஜி 3D ’ (2012) போன்ற பல மைல்கற்களை எங்கள் நிறுவனம் படைத்துள்ளது. 


மேலும், ஆறு முதலமைச்சர்கள் எங்கள் திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையையும் பெற்றுள்ளோம்.    அறிஞர் சி. என். அண்ணாதுரை ‘ஓர் இரவு’ (1951), Dr. கலைஞர் மு. கருணாநிதி ‘பராசக்தி’ (1952), Dr. எம். ஜி. இராமச்சந்திரன் ‘அன்பே வா’ (1966), Dr. என். டி. ராமாராவ், ஐந்து திரைப்படங்கள் (1954-1970), Dr. செல்வி ஜெ. ஜெயலலிதா, நான்கு திரைப்படங்கள் (1962-1970) மற்றும் திரு. சி. ஜோசப் விஜய் ‘வேட்டைக்காரன்’ (2009) ஆகிய திரைப்படங்கள் மூலம் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.


சினிமா வரலாறு மற்றும் பெருமையை கொண்டாடும் விதமாக 2023ஆம் ஆண்டு, “ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்”-ஐ நாங்கள் தொடங்கினோம். அதில் கவனமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள், உபகரணங்கள், திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட ஹெரிடேஜ் கார்கள் மற்றும் அரிதான இயந்திர சாதனங்கள் என இந்த மியூசியம் பார்வையாளர்களுக்கு பெருமை வாய்ந்த வரலாற்றை உணரும் வாய்ப்பை கொடுக்கும்.


அடுத்த முயற்சியாக “ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்” என்ற அரங்கத்தை தொடங்கி உள்ளோம்.  பல்வகை நிகழ்ச்சிகளை நடத்த வசதியாகவும் தாராளமான பார்க்கிங் வசதியுடனும், பிரம்மாண்ட மேடை அமைப்புடனும் அமைத்து உள்ளோம்.  


பொருட்காட்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், பெருநிறுவன அரங்க கூட்டங்கள், திரையுலக இசை வெளியீடு நிகழ்ச்சிகள், திருமண நிச்சயதார்தங்கள், திருமணம், திருமண வரவேற்பு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு இந்த சிறப்பு மிகுந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அரங்கங்களில் இல்லாத வசதியாக, அனைத்து மக்களும் பயன் பெரும் வகையில் சைவ மற்றும் அசைவ சமையலுக்கான தனி தனி அடுப்பறைகள் உள்ளன.

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் '7 ஸ்டார் பாய்ஸ்

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் '7 ஸ்டார் பாய்ஸ்'*



*விரைவில் தமிழில் வெளியாகும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் '7 ஸ்டார் பாய்ஸ்'*

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில்.. கால்பந்து விளையாட்டின் பின்னணியில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான '7 ஸ்டார் பாய்ஸ்' திரைப்படம் - விரைவில் தமிழில் வெளியாகிறது. 


இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள '7 ஸ்டார் பாய்ஸ்' திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ' பிகில்' ஐ எம் விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இளம் கால்பந்து விளையாட்டு வீரர்களின் கால்பந்தாட்ட கனவின் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அச்சாபு மூவி மேஜிக் மற்றும் மாஸ் மீடியா புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி எஸ் ஸ்டான்லி -  ஃபைசல் லத்தீப் - ஷோனி ஸ்டீஜோ செபஸ்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் அசோக் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறார். 


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கால்பந்தாட்ட விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள உள்ளூர் இளைஞர்கள் - உலக கால்பந்தாட்ட ஜாம்பவானான மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதை தெரிந்து கொண்ட  நாயகன்(Hero) ஆண்டனி வர்கீஸ்.. அந்த இளைஞர்களை ஒன்று திரட்டி இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஐ எம் விஜயனிடம் அறிமுகம் செய்கிறார். அவர் இந்த இளம் வீரர்களின் ஆர்வத்தையும், திறமையையும் கண்டறிவதுடன் அவர்களுக்கு பயிற்சியாளராகவும் செயல்படுகிறார் விஜயன். இந்நிலையில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டியில் இந்த இளம் வீரர்கள் அடங்கிய '7 ஸ்டார் பாய்ஸ்' குழு கலந்து கொள்கிறது. அரை இறுதி போட்டி வரை முன்னேறும் இந்த 7 ஸ்டார் பாய்ஸ் அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை. 


மேலும் இந்தக் கதையில் கால்பந்தாட்ட வீரரின் காதலும் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதி 25 நிமிடங்கள் கால்பந்தாட்ட போட்டிக்கான காட்சிகள் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்'' என்றார்


உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் இந்த தருணத்தில் கால்பந்து விளையாட்டின் பின்னணியில் இப்படம் வெளியாவதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுக்கும் என்பதும் 'காட்டாளன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான ஆண்டனி வர்கீஸ், 'பிகில்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் ஐ எம் விஜயன் ஆகியோர் நடித்திருப்பதால்... இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 


7 ஸ்டார் பாய்ஸ் திரைப்படம் தமிழில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

Sudhan Sundaram’s Passion Studios & H. Vinoth’s Aspire Ubuntu Films Join Hands for "ALMOST Nallavan",

 **Sudhan Sundaram’s Passion Studios & H. Vinoth’s Aspire Ubuntu Films Join Hands for "ALMOST Nallavan", Directed by Raju Jeyamohan**







Passion Studios has consistently established itself as one of Tamil cinema's most discerning production houses, backing content-driven entertainers that reflect strongly with audiences and critics alike. With an impressive slate of successful films, the banner continues to exhibit the innovative storytelling with fresh ideas.


Further strengthening this vision, Passion Studios has now joined hands with Aspire Ubuntu Films to present "ALMOST Nallavan", directed by actor, writer and Bigg Boss Tamil Season 5 winner Raju Jeyamohan. The film promises a refreshing blend of dark humour, rooted emotions, family entertainer and authentic rural flavour. Apart from directing the film, Raju Jeyamohan will be seen playing the lead role with Sathyaraj appearing in a pivotal character.  The word 'Almost' has a lot of critical significance, where it stays synonymous with doubts and ambiguity that goes best exemplified with terms like "Almost There...Almost Done..." Such is the essence of this film 'Almost Nallavan'.


The film’s launch happened this morning (July 6, 2026), which was a ritual pooja ceremony attended by film’s cast and crew along with eminent celebrities for the cine industry including Bramma, Hotstar Sabari, Think Music Santhosh, Adhik Ravichandran, Producer Karthik – Stone Bench Productions, RJ Balaji, Producer Lalith Kumar, Abhishek Geetham, Rangaraj Pandey, Vidhu, Director Rohin Venkatesan, and many others were present. 


Producer Sudhan Sundaram – Passion Studios says, "One of the greatest blessings for any producer is the opportunity to collaborate with passionate filmmakers who constantly strive to tell fresh and original stories. It gives me immense happiness to join hands with H. Vinoth and Raju Jeyamohan for Almost Nallavan. The film is packed with delightful humour, deeply rooted in our native culture and sensibilities.

When Raju narrated the script, I could immediately visualize the laughter and enjoyment it would bring to audiences in theatres. Its humour feels organic, the storytelling is refreshing, and the entertainment is abundant throughout. We are making this film with the intention of delivering a unique theatrical entertainer that will appeal to audiences across all age groups. We are excited to create something truly memorable together."


Producer H. Vinoth – Aspire Ubuntu Films says, "Tamil cinema audiences have always embraced films with strong and meaningful content. This year, in particular, has once again proved that viewers wholeheartedly support stories that bring freshness and originality to the screen.


Tamil cinema has given me a life beyond anything I could have imagined. The affection and encouragement I continue to receive from audiences inspire me to keep creating stories that connect with them. That very passion encouraged me to step into film production as well, with the aim of introducing promising new talents and unique storytellers.


It is an honour to collaborate with a prestigious production house like Passion Studios, which has built an exceptional reputation by consistently producing and presenting quality cinema. I am confident that Almost Nallavan will be a distinctive entertainer that audiences will thoroughly enjoy."


Actor-Director Raju Jeyamohan says, "The title Almost Nallavan perfectly reflects the central idea of the film that every individual possesses both good and flawed sides. In today's digital world, people often live with two identities: their real self and the persona they create online, sometimes believing that digital identity represents who they truly are. Our story revolves around one such individual and the unexpected journey that follows.


I am glad to be associated with   Sathyaraj sir,  Dushara Vijayan . The others in the star-cast include  Imman Annachi, Bigg Boss fame Thamarai Selvi, theatre artist Yazhini and Pritham Chakravarthy.


This is a distinctive dark comedy that I believe will entertain audiences from every walk of life. Initially, I shared the idea with Sudhan sir and  Vinoth sir, who have vast knowledge about cinema. They encouraged me to develop this as full screenplay and now we have started the film. This looks like a dream come true for me. 


My heartfelt thanks to H. Vinoth sir and Aspire Ubuntu Films, as well as Sudhan Sundaram sir and Passion Studios, for believing in this project and helping bring it to life. The film's music is composed by the sensational Foxn, who is currently delivering one chartbuster after another, and his work adds a unique energy to the film."



The film boasts a talented technical team, bringing together several accomplished technicians. Cinematography is handled by T.S. Prasanna, who previously worked as an associate to cinematographer Vijay Karthik Kannan on acclaimed films such as Jailer, Jailer 2 and Doctor. Bala Jayapradha makes her debut as an art director with Almost Nallavan, while action sequences are choreographed by Om. Editing is overseen by Govind, best known for his work in 96 and Meiyazhagan. Costume design is handled by Jefferson and Raji Thenappan, with Knack Studios spearheading the film's VFX. Backed  by a compelling narrative and a technically proficient crew, Almost Nallavan promises to offer audiences a refreshing and engaging cinematic experience.

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ

 *சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!*







நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தை தயாரிக்கிறது. 


இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள் உண்டு. ‘அல்மோஸ்ட் தேர்...’, ’அல்மோஸ்ட் டன்...’ போன்ற சொற்களைப் போலவே, இப்படத்தின் கதையிலும் அந்த வார்த்தைக்கு முக்கிய இடம் உண்டு. 


இன்று (ஜூலை 6, 2026) காலை பூஜையுடன் இப்படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பிரம்மா, ஹாட்ஸ்டார் சபரி, திங்க் மியூசிக் சந்தோஷ், ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் கார்த்திக், ஆர்.ஜே. பாலாஜி, தயாரிப்பாளர் லலித் குமார், அபிஷேக் கீதம், ரங்கராஜ் பாண்டே, விது, இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, "புதிய கதைகளை சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தயாரிப்பாளருக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரம். அந்த வகையில் ஹெச். வினோத் மற்றும் ராஜு ஜெயமோகனுடன் 'அல்மோஸ்ட் நல்லவன்' படத்தில் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நம் மண்ணின் கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் இயல்பான நகைச்சுவை இந்தப் படத்தில் உள்ளது. ராஜு இந்தக் கதையை சொன்னபோதே, திரையரங்கில் ரசிகர்கள் நிச்சயம் சிரித்து மகிழ்வார்கள் என்பது உறுதியானது. இயல்பான நகைச்சுவை, புதிய திரைக்கதை மற்றும் முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்தப் படத்தை உருவாக்குகிறோம்" என்றார். 


தயாரிப்பாளர் ஹெச். வினோத் கூறியதாவது, "நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. குறிப்பாக, இந்த வருடம் வெளியான பல நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். நான் நினைத்ததை விடவும் மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமா எனக்கு கொடுத்துள்ளது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் என்னை தொடர்ந்து நல்ல கதைகளை உருவாக்க ஊக்குவிக்கிறது. அதனால்தான் புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரிப்பாளராகவும் பயணிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து தரமான திரைப்படங்களை வழங்கி வரும் பேஷன் ஸ்டுடியோஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக உள்ளது. 'அல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படம் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார். 


நடிகரும் இயக்குநருமான ராஜு ஜெயமோகன் பகிர்ந்து கொண்டதாவது. "'அல்மோஸ்ட் நல்லவன்' என்ற தலைப்பே இந்தப் படத்தின் மையக் கருத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணங்களும், குறைகளும் இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் பலர் இரண்டு வாழ்க்கைகளை வாழ்கிறார்கள். ஒன்று அவர்களின் உண்மையான வாழ்க்கை. மற்றொன்று, சமூக வலைதளங்களில் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் முகம். சில நேரங்களில் அந்த டிஜிட்டல் அடையாளமே தங்களின் உண்மையான முகம் என்று கூட நம்பத் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் சத்யராஜ் சார், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் புகழ் தாமரை செல்வி, நாடகக் கலைஞர் யாழினி மற்றும் பிரிதம் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். 


அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய வித்தியாசமான டார்க் காமெடி மற்றும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இது. முதலில் இந்தக் கதையை சுதன் சார் மற்றும் வினோத் சாரிடம் கூறினேன். சினிமா பற்றிய அவர்களின் அனுபவமும் அறிவும் இந்தக் கதையை முழுமையான திரைக்கதையாக உருவாக்க என்னை ஊக்குவித்தது. இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தை நம்பி ஆதரவு அளித்த ஹெச். வினோத் சார், ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ், சுதன் சுந்தரம் சார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தற்போது தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி வரும் இசையமைப்பாளர் ஃபாக்ஸன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம்" என்றார். 


இப்படத்திற்கு டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் அவர்களிடம் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ’ஜெயிலர்’, ’ஜெயிலர் 2’, ’டாக்டர்’ போன்ற படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். கலை இயக்குநராக பாலா ஜெயபிரதா இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சண்டைக் காட்சிகளை ஓம் அமைத்துள்ளார். ’96’, ’மெய்யழகன்’ போன்ற படங்களில் பணியாற்றிய கோவிந்த் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஆடை வடிவமைப்பை ஜெஃபர்சன் மற்றும் ராஜி தேனப்பன் கவனிக்கின்றனர். நாக் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தின் வி எஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது.


வலுவான கதைக்களம், திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் புதுமையான திரைக்கதையுடன் உருவாகி வரும் ’அல்மோஸ்ட் நல்லவன்‘ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.