Featured post

Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam

 Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam, Launching on May 15* From creative producers Push...

Monday, 27 April 2026

Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam

 Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam, Launching on May 15*






From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, written and directed by A. Sarkunam, the suspense drama features Dushara Vijayan and Aditi Balan in the lead, with Abbas playing a pivotal role


Exam will stream exclusively on Prime Video on May 15 in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages, including English



MUMBAI, India—April 27, 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today announced May 15 as the global premiere date for its upcoming Tamil Original series, Exam. From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, the seven-episode series written and directed by National Award-winner A. Sarkunam promises a tense, emotionally charged suspense drama set against the pressure-filled environment of a competitive exam. Featuring Dushara Vijayan and Aditi Balan in the lead, and Abbas playing a pivotal role, Exam will stream exclusively on Prime Video in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages including English.


“Exam is a very timely and relevant story that captures the emotional intensity of competitive exams and masterfully transforms it into a thrilling high-stakes drama. We believe it is a story that will resonate deeply with millions. It’s a privilege to once again collaborate with Pushkar and Gayatri after the success of Suzhal—The Vortex season 1 and 2, and Vadhandhi—The Fable of Velonie. We are excited to bring this story to our customers across the world on May 15,” said Nikhil Madhok, Director & Head of Originals, Prime Video, India.


“With Exam, we wanted to dig into ambition, injustice, and those moral crossroads that people face when pushed to the edge,” shared creative producers Pushkar and Gayatri. “At the heart of this story is a young woman who refuses to remain powerless. Her journey is not about glamorizing defiance, but about exploring the emotional and ethical cost of standing up to a system stacked against her. Prime Video has been an incredible collaborator in taking our stories global before, and we believe it’s the perfect home to bring Exam to audiences worldwide.”

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’

 *பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான  ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின்  உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*






வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்


‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்


சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சீரிஸை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “எக்ஸாம்” தொடர் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.


பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”


கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”


‘எக்ஸாம்’ சீரிஸை மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

Saturday, 25 April 2026

தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS)

 *தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே.  ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவிப்பை பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் Chairman குஷால் கங்காரியா, MD தினேஷ் கங்காரியா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.*



வணிகம் மற்றும் குடியுரிமை பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாக, பி.எம். ஜே. ஜுவெல்ஸ் நிறுவனம், ஏப்ரல் 23 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.


தமிழ்நாடு  முழுவதும் உள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கும்  வகையில், "GO VOTE. GET INKED. CELEBRATE THE MOVEMENT“ எனும் ஸ்லோகன் அதாவது  வாக்களியுங்கள் – விரலில் மை வைத்துக்கொள்ளுங்கள் – அந்த தருணத்தை கொண்டாடுங்கள்” என்ற வலுவான செய்தியுடன் இந்த சலுகையை அறிவித்துள்ளது. 


இந்த சிறப்பு பிரச்சாரத்தின் கீழ், வாக்களித்ததற்கான சான்றாக தங்களது சுட்டுவிரலில் அழியாத மை குறியுடன் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் ஷோரூமுக்கு வருகிற எந்த வாடிக்கையாளருக்கும், உடனடியாக ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 மேலும் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் வகையில், இந்த சலுகை 2026 ஏப்ரல் 30ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த முயற்சி குறித்து  பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் Chairman குஷால் கங்காரியா கூறும்போது, 

வாக்களிப்பதே நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும்,  தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் பங்கேற்பும் நாட்டை வலுப்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். 


தங்கள் ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றும் மக்களை கௌரவிக்கும் விதமாகவே இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  வாக்களித்தபின்,  பெருமையுடன் அந்த விரல் மை குறியுடன் தங்கள் ஷோரூமுக்கு வரும்போது, வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதோடு மட்டுமல்லாமல், வலுவான இந்தியாவை உருவாக்கும் தங்கள் பங்களிப்பையும் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார். 


பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிர்வாக இயக்குநர் தினேஷ் கங்காரியா, 

இந்த திட்டம்,  தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்து வாக்களித்திருந்தாலும்,   சென்னையில் உள்ள தங்களுடைய  எந்த ஷோரூமையும் அணுகி, தங்கள் மை குறியைக் காட்டி ரூ.5,000 தள்ளுபடியைப் பெறலாம் என்று கூறினார்.


சமூக பொறுப்புணர்வு மற்றும் ஜனநாயகத்தின் மீதான அன்பு காரணமாகவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்தாகவும், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும் தெரிவித்த அவர்,  மாநிலம் முழுவதும் வாக்களிப்பு பங்கேற்பை ஊக்குவிப்பதே தங்களுடைய  நோக்கம் என்றார். 


இந்நிகழ்ச்சியில்,  சென்னையில் பிறந்து, தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு, பிரத்யேக வடிவமைப்புடைய கைக்காப்பை அணிந்து, வாக்காளர்களை உற்சாகமாக வாக்களிக்க அழைத்தார்.  அவர் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார். இந்த விளம்பரத்தில்

"வாக்களிப்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது  பெருமை!” என்ற தமிழ் வாசகம் இடம்பிடித்து இருந்தது. 


மகேஷ் பாபு தற்போது புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் “வாரணாசி” என்ற மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.


60 ஆண்டுகளாக நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக விளங்கும் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சிறந்த நகை சேவையை வழங்கி வருகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பல கிளைகளுடன், தரம், நம்பிக்கை மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.


இந்த சலுகை, 2026 ஏப்ரல் 23ஆம் தேதி வாக்களித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். வாங்கும் நேரத்தில் விரல் மை குறியைக் காட்ட வேண்டும். இது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Friday, 24 April 2026

ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு

 *ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*






*250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!*


*சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!*


இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.


“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.


மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரம்மாண்டமான அணியில் சாம் CS தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.


“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது.


இப்படத்தில் சாம் CS ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் CS பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் "கராத்தே பாபு", கார்த்தியின் "சர்தார் 2" படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GV Prakash Kumar’s ‘Happy Raj’ Begins Its Digital Celebration on OTT After a Successful Theatrical Run*

 *GV Prakash Kumar’s ‘Happy Raj’ Begins Its Digital Celebration on OTT After a Successful Theatrical Run*



Following a successful and well-received theatrical run, Happy Raj, starring G. V. Prakash Kumar, is all set to entertain audiences once again as it premieres today on Amazon Prime Video across India and on SimplySouth for audiences outside India.



The film, which emerged as a refreshing new-gen family entertainer in theatres, garnered appreciation for its vibrant storytelling, relatable emotions, and engaging performances. With its digital release, Happy Raj now reaches a wider global audience, bringing its blend of romance, humor, and heartfelt moments straight into homes.



Written and directed by debutant Maria Raja Elanchezian, and produced by Jaivarda of Beyond Pictures and co produced by Jaikanth Suresh who played a pivotal role in aligning and bringing this project together, ensuring its smooth journey from development to release.



The theatrical trailer, unveiled by Dhanush, had earlier ignited strong buzz and set the tone for the film’s success.



Happy Raj features an ensemble cast including Sri Gouri Priya, George Maryan, Abbas, Geetha Kailasam, Adhirchi Arun, and Madurai Muthu, among others, each contributing to the film’s lively and entertaining narrative.



Backed by a strong technical team, the film boasts music by Justin Prabhakaran, cinematography by Madhan Christopher, and editing by Selva RK, ensuring a visually appealing and emotionally engaging experience.



After winning hearts on the big screen, Happy Raj now promises to recreate the same magic on OTT, making it a perfect watch for families and friends to enjoy together from the comfort of their homes.

திரையரங்க வெற்றிக்குப் பிறகு ‘ஹேப்பி ராஜ்’ – டிஜிட்டல் கொண்டாட்டம் (OTT-யில்) தொடக்கம்!

 திரையரங்க வெற்றிக்குப் பிறகு  ‘ஹேப்பி ராஜ்’ – டிஜிட்டல் கொண்டாட்டம் (OTT-யில்) தொடக்கம்!



திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாராட்டுகளைப் பெற்ற ஹேப்பி ராஜ் திரைப்படம், தற்போது தனது டிஜிட்டல் பயணத்தை தொடங்கியுள்ளது. G. V. பிரகாஷ் குமார் நடித்துள்ள இந்தப் படம், இன்று முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் வெளிநாடுகளில் SimplySouth மூலம் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளது.



திரையரங்குகளில் புதிய  விதமான குடும்ப பொழுதுபோக்கு படமாக பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம், தனது உயர்ந்த கதை சொல்லல், நெருக்கமான உணர்ச்சிகள் மற்றும் சுவாரஸ்யமான நடிப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்றது. இப்போது OTT வெளியீட்டின் மூலம், இது மேலும் அதிகமாக ரசிகர்களை சென்றடைகிறது.


இப்படத்தை இயக்குநராக அறிமுகமான மரியா ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கியுள்ளார். ஜெயவர்தன் தயாரிப்பில், Beyond Pictures நிறுவனம் மூலம் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ஜெயகாந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக இருந்து இந்தப் படத்தின் ஆரம்ப புள்ளியிலிருந்து படம் வெளியாவது வரை அனைத்திற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


முன்னதாக, இந்தப் படத்தின் டிரெய்லரை தனுஷ் வெளியிட்டது படத்திற்கு பெரிய வரவேற்பை உருவாக்கி, அதன் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.


Happy Raj படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், அப்பாஸ், கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங்கை செல்வா RK மேற்கொண்டுள்ளார்.


திரையரங்குகளில் பல இதயங்களைக் கவர்ந்த Happy Raj, இப்போது OTT-யிலும் அதே மாயத்தை மீண்டும் உருவாக்கி, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக வீட்டிலிருந்தே ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

 R.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!






பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் ஆகியவை மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன.


இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள மண்டாடி, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளுக்கு நகர்ந்துள்ளது.


 நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். உள்ளடக்கமிக்க திரைப்படங்களில் தனது பயணத்தை மாற்றி அமைத்து வரும் அவர், இந்தப் படத்திற்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார். அவரது நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தின் மூலம் சுகாஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவருடன் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையாளர்கள் இணைந்துள்ளனர். G.V. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை S. R. கதிர் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை D. R. K. கிரண் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங் பணியை பிரதீப் E. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளனர்.



தற்போது எடிட்டிங், சவுண்ட் டிசைன், VFX மற்றும் இசை அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அம்சத்திலும் கவனமாக பணியாற்றி, ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை உருவாக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


மண்டாடி திரைப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. “மண்டாடி” என்பது கடல் அலைகள், காற்றின் திசை, நீரோட்டம் போன்றவற்றை ஆழமாக அறிந்து, மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரை குறிக்கும் சொல். இது தலைமைத்துவம், அனுபவம் மற்றும் உறுதியை குறிக்கும் அடையாளமாக இந்தப் படத்தில் பிரதிபலிக்கிறது.


முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் மூலம் கவனம் ஈர்த்துள்ள மண்டாடி, தற்போது தனது அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.


அடுத்த பெரிய அப்டேட்டிற்காக ‘மண்டாடி’ தயாராகிக் கொண்டிருக்கிறது – காத்திருக்கவும்!

RS Infotainment’s MANDAADI Shoot Wrapped After an Intensive Schedule — Post-Production Work in Full Swing*

 *RS Infotainment’s MANDAADI Shoot Wrapped After an Intensive Schedule — Post-Production Work in Full Swing*




Esteemed production house RS Infotainment, headed by Mr. Elred Kumar, is delighted to announce that the shoot of its ambitious sports action drama MANDAADI has been successfully wrapped following an extensive and demanding schedule.



Shot across challenging terrains and coastal backdrops, particularly in the Ramanathapuram belt, the team underwent a rigorous filming process to authentically capture the raw energy and spirit of the story. The intensive schedule featured large-scale action sequences, emotionally charged moments, and visually rich sailboat racing portions, all executed with precision and passion.



Directed by Mathimaran Pugazhendhi, MANDAADI promises a deeply rooted narrative set against a unique sporting backdrop. With the shoot now wrapped, the film has swiftly moved into post-production, where work is progressing in full swing.



Headlined by Soori, who continues to redefine his journey as a powerful performer in content-driven cinema, the film demanded intense physical preparation and dedication. His performance is expected to be one of the standout highlights of the film.



The film also stars Suhas, making his Tamil debut, alongside Mahima Nambiar as the female lead. The ensemble cast includes Sathyaraj, Ravindra Vijay, Mithun and Balasaravanan, all of whom bring depth and authenticity to this emotionally rich narrative.



The technical team is equally formidable, with music composed by G. V. Prakash Kumar, cinematography by S. R. Kathir ISC, production design by D.R.K. Kiran, editing by Pradeep E. Ragav, and action choreography by the renowned Peter Hein, Dhilip Subburayan and Mahesh Mathew. Their combined expertise ensures that MANDAADI is crafted with both technical finesse and emotional resonance.



Currently in post-production, the film’s editing, sound design, VFX, and music composition are progressing at a brisk pace, with the team working meticulously to shape a compelling cinematic experience.



MANDAADI explores a unique coastal world rooted in the lives of fishing communities. The term “Mandaadi” refers to a skilled expert who leads fishing expeditions with deep knowledge of ocean currents, wind direction, and wave patterns — symbolizing leadership, instinct, and resilience, which form the emotional core of the film.



Having already generated intrigue with its striking first look, the film now sails into its next phase, steadily building anticipation among audiences and industry circles alike.



Stay tuned as MANDAADI gears up for its next big reveal.

Breakfast Movie Review

Breakfast Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம breakfast  படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கறது ar. Gandhi krishna .   இந்த படத்துல Raanav , Rosmin ,Sampath Raj , Kasturi , Archana ,Krithik Mohan ,Amitha Ranganthனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



Lakshmi யா நடிச்சிருக்க Amitha Ranganth அப்புறம் kritik mohan யும் husband and wife அ இருக்காங்க. இவங்களுக்குள்ள எப்பவுமே சண்டை வந்துகிட்டே இருக்கும், சுருக்கமா சொல்ல போன tom and jerry மாதிரி அடிச்சிக்கறாங்க. இனிமே கணவன் மனைவியா சேந்து வாழ முடியாது ன்ற முடிவுக்கு ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க. அதுனால divorce க்கும் அப்ளை பண்ணிடுறாங்க. court ல இவங்க case நடக்கும்போது , judge இவங்க கிட்ட நிரந்தரமான முடிவை எடுக்கறதுக்கு முன்னாடி  counselling போகணும் னு தீர்ப்பை சொல்லிடுறாரு. 


அதுனால இவங்களும் psychologist அ போய் சந்திக்கறாங்க. அவங்க தான் kasturi.  இவங்க ரெண்டு பேர்கிட்டயும் advice பண்ணமா ஒரு கதையை சொல்லி இவங்க மனசை மாத்த முயற்சி பண்ணுறாங்க. இந்த கதை தான் இந்த படத்துல highlight னு சொல்லலாம். அந்த கதைல raanav நல்ல படிச்சவர இருப்பாரு ஆனா road cleaner அ வேலை செஞ்சுட்டு இருப்பாரு. இன்னொரு பக்கம் பெரிய businessman அ இருக்காரு sampath raj,  இவரோட பொண்ணு தான் rosmin . raanav யும் rosmin யும் காதலிக்க ஆரம்பிக்குறாங்க. இது sampath க்கு சுத்தமா பிடிக்காது. parents ஓட எதிர்ப்பயும் மீறி கல்யாணம் பண்ணிக்ராங்க. 


ஆரம்புத்துல இவங்க ரெண்டு பேரோட life நல்ல தான் போய்ட்டு இருக்கும். ஆனா பிரச்சனை raanav ஓட குடும்பம் இவங்க கிட்ட வரும்போது தான் ஆரம்பிக்குது. இந்த குடும்பத்தால் இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை வருது, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடுறாங்க. 


அதுக்கு அப்புறம் ஒரு intense ஆனா climax portion அ வைக்கிறாங்க. அது தான் இந்த படத்தோட highlight அ இருக்கு. குடும்பத்துல நடக்கற பிரச்சனைகள், psychological distress னு எல்லாமே ரொம்ப தெளிவா காமிச்சிருக்காங்க. 


g v prakash ஓட music and bgm ரெண்டுமே இந்த கதைக்கு plus point அ அமைச்சிருக்கு. paneerselvam ஓட சினிமாட்டோக்ராபி அப்புறம் bhaskar and sujith ஓட் editing யும் பக்கவா இருக்கு. இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யும் அவங்களுக்கு குடுக்க பட்ட role ல நல்லவே நடிச்சிருக்காங்க. இருந்தாலும் sampath raj அப்புறம் kasturi ஓட நடிப்பு தான் அட்டகாசமா இருந்தது. 


gen z பசங்களுக்கு relate பண்ணிக்கிற மாதிரியான கதையை தான் கொண்டு வந்திருக்காரு டைரக்டர்.ஒரு நல்ல கதைகளம் தான் இது. சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை பாருங்க.