Featured post

சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு

*சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு* திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுர...

Friday, 7 August 2026

சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு

*சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு*



திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது. 


‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


"மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் குறித்த தன் ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நூல் வழியே பதிவு செய்துள்ளார்" என்று 'பெரும் மௌனங்கள்' நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான கே.வி. சைலஜா தெரிவித்துள்ளார்.

Suriya’s ‘Vishwanath & Sons’ Trailer Promises a Heartwarming Big-Screen Experience*

 Suriya’s ‘Vishwanath & Sons’ Trailer Promises a Heartwarming Big-Screen Experience*



The much-awaited trailer of Vishwanath & Sons, starring Suriya, is finally out and it promises a happy, emotional, pleasant and wholesome big-screen experience. Directed by Venky Atluri and produced by Suryadevara Naga Vamsi and Sai Soujanya, the film is gearing up to be one of the biggest family entertainers of the year.


The trailer opens the doors to the world of Sanjay Vishwanath, an international pistol shooter who continues to chase his dreams even in his 40s. Suriya effortlessly balances style, warmth, humour and emotion, delivering a performance that instantly strikes a chord. His charismatic screen presence, coupled with Venky Atluri’s heartfelt writing, promises one of his most endearing performances in recent years.


Mamitha Baiju brings her signature charm to the screen, while Radhika Sarathkumar, Raveena Tandon and the stellar ensemble cast add depth to this emotional journey. G. V. Prakash Kumar’s soulful music, Nimish Ravi’s rich visuals and Venky Atluri’s signature storytelling further elevate the trailer.


During the grand audio launch event in Coimbatore, the team confidently spoke about the film’s emotional strength and its ability to connect with audiences of all ages. The trailer now validates every bit of that confidence, leaving viewers with the promise of a memorable theatrical experience.


Produced under Sithara Entertainments and Fortune Four Cinemas, and presented by Srikara Studios, Vishwanath & Sons is all set for a grand worldwide release on August 14, 2026, promising audiences a world of unforgettable emotions this Independence Day weekend.


Link : 

https://www.youtube.com/watch?v=jZHoM2YhFCY

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

 *சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு*



*சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்: மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்கிறது*


சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் - இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. 


நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் - ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்... வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும்... இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச்சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்த படம் அமையும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. 


திரையில் மமிதா பைஜூ தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த.. ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுபூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை... நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளிப்பதிவு... வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி... ஆகியவை இந்த ட்ரெய்லரை மேலும் மெருகூட்டுகிறது. 


கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையை பேச்சில் வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் முழுமையாக உறுதிப்படுத்தி இருப்பதுடன் மறக்க முடியாத திரையரங்க அனுபவத்திற்கான உத்திரவாதத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. 


 சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் - ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.

https://www.youtube.com/watch?v=jZHoM2YhFCY


புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா - கவின் நடித்த ‘ஹாய்

 *புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா - கவின் நடித்த ‘ஹாய்’*



*தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.*


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.


முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு போஸ்டர் மூலம் ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்,


“பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னர்களின் உணர்வை நினைவூட்டும் திரைப்படமாக இது இருக்கும்” என்றார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதாலும், நயன்தாரா - கவின் இணையும் முதல் திரைப்படம் என்பதாலும், அனுபவம் மிக்க நட்சத்திர பட்டாளம் ஒன்றாக இணைந்திருப்பதாலும், ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

 *வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!*



*நகைச்சுவை,ஃபேண்டஸி கலந்த  ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பு!*


உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.


தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன்  நிற்கிறார்கள்.  சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்பக் கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.


தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.


தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன்,  திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம், தயாரிப்பு: செ. ஹரி உத்ரா

வசனம் : செ. ஹரி உத்ரா, P. ரஞ்சித் குமார்

ஒளிப்பதிவு: K.S. பழனி

இசை: A.J. அலி மிர்சாக்

படத்தொகுப்பு: பிரசாந்த், S.B. ராஜா

கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி

சண்டைப்பயிற்சி: கனல் V. கண்ணன், கனல் S. குகன்

நடனம்: I. ராதிகா, ராஜேஷ் கிறிஸ்டி

பாடல் வரிகள் : மோகன் ராஜன், கவிஞர் சாரதி 

நிர்வாக தயாரிப்பாளர்கள்: மனோவ் செல்வராஜ், தனகோபால், M. விஸ்வநாதன், சேட்டு K

இணை தயாரிப்பாளர்கள்: பாலகங்காதரன், திவ்யா ஜகத், ஜனார்த்தனன் V.

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது

 ‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது












இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.


விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.




இந்நிகழ்வினில் 


தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:


“இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்.


தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. பல ஆண்டுகளாக இந்த இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே பயணித்து வருகின்றன. அதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.


நான் தயாரித்த ஜிகர்தண்டா திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் மதுரையில் இருக்கும் ஒரு பிரபல ரவுடியை மையமாகக் கொண்ட கதை அது. ஆனால் இறுதியில் அந்த ரவுடி சினிமாவின் தாக்கத்தால் தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நடிகராக மாறுகிறார். ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களைக்கூட மாற்றும் சக்தி கலைக்கும் குறிப்பாக சினிமாவுக்கும் இருக்கிறது என்பதைத்தான் அந்தப் படம் எடுத்துக் காட்டியது. அதேபோல ஹெச். ராஜா அவர்களும் அரசியலில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அவரது பேச்சுத் திறனும், செயல்பாடுகளும் அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் எப்போதும் ஒன்றாகவே பயணிக்கின்றன என்று சொல்கிறேன்.


இந்தப் படத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்து உதவி பேராசிரியராக பணியாற்றியவர். பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே மருத்துவராக உயர்ந்த நிலையில் இருந்தபோதும் சினிமா மீதான அவருடைய ஆர்வம் அவரை மீண்டும் இங்கே அழைத்து வந்து இந்தப் படத்தை இயக்க வைத்திருக்கிறது. அதுதான் சினிமாவின் ஈர்ப்பு.


ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களும், புதிய இயக்குநர்களும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதுதான் கலை உலகத்தின் மீதான அவர்களின் காதலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் படத்தை இயக்கிய டாக்டர் எஸ். ராஜா அவர்களுக்கும், தயாரிப்பாளர் சுப்புலட்சுமி ஜெயராம் அவர்களுக்கும், படத்தொகுப்பாளர் ராஜா முகமது அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘செய்! செய்யாதே!’ திரைப்படம் வெற்றி பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி… அனைவருக்கும் நன்றி.”




முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். முதலில், இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்புக் குழுவினருமான ராஜா அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். எங்களுடன் அரசியல் பயணத்தில் இருந்தவர், இன்று திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். பொதுவாக திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அரசியலில் இருந்த ஒருவர் திரைத்துறைக்கு வந்து ஒரு சமூகப் பொறுப்புள்ள திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் பாராட்டத்தக்க விஷயம்.


மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக டாக்டர் சௌந்தரராஜன் அவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள். மனதிற்கு நெருக்கமானவர்களைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பேசும்போது அதை மறந்துவிட்டேன். அதற்காகவும் அவர்களிடம் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படம் முழுவதும் மதுரையை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். மதுரையுடன் எனக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. எனது தந்தை எனக்கு ‘தமிழிசை’ என்று பெயர் வைத்தது கூட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்தான். அதனால் மதுரை என்றாலே எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறது.


இப்படத்தில் நடித்திருக்கும் எங்கள் அண்ணன் ஆளுமை ராஜா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.  இந்தப் படத்தில் குரு விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஒரு முக்கியமான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவ விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு மற்றும் நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.”



இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) பேசியதாவது.., 


இந்த திரைப்படத்தின் கதையை அக்கா தமிழிசை மிக அழகாக கூறிவிட்டார். இப்படம் மருத்துவ துறையை பற்றிய படம் அதோடு 

இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் கடமையை பேசுகிறது. 


இப்படத்திற்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை வந்து பல கஷ்டங்களோடு இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.  இப்படத்தில் என் மனைவி மகள் பாடியுள்ளனர். பலர் இப்படத்திற்காக உழைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் பலர் நல்ல படைப்புகளுடன் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளைத் தந்து அந்த தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது ஆசை. 


இப்படத்தில் அண்ணன் ராஜா அவர்கள் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் எனக்காக மட்டுமே இப்படத்தில் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் நடித்துத் தந்தார். மிகச் சிறந்த உழைப்பைத் தந்திருக்கிறார். அவரைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஆச்சரியப்படுகிறேன். அவர் சிவாஜியைப் போல ஒரு அற்புதமான நடிப்பை இப்படத்தில்  தந்திருக்கிறார். அவரை வைத்து தேவர் மகன் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது கண்டிப்பாக நிறைவேறும் இப்படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவீர்கள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 




தமிழக அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேசியதாவது.., 


எனது உடல்நலக் குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்றுள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் (Make-up) போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி நடித்துக் கொடுத்துவிட்டு வந்தோம்.


சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகவும் இயல்பான முறையில் இயக்குநர் டாக்டர் ராஜா , அவரது குழுவினர் மற்றும் தம்பி குரு ஆகியோர் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். வெறும் வியாபார அல்லது லாப நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இத்திரைப்படம் மக்களிடையே நிச்சயமாகப் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது."


இப்படம் மருத்துவ துறையில் பணியாற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது. இப்படம் கண்டிப்பாக பெரிய வரவேற்பைப் பெறும் அனைவருக்கும் என் நன்றிகள். 



தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை பொழுதுபோக்குடன் எடுத்துரைக்கும் படைப்புகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வரிசையில், மருத்துவ விழிப்புணர்வு, மனிதநேயம், குடும்ப மதிப்புகள், பொறுப்பான நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு சமூகச் செய்தியை வலியுறுத்தும் திரைப்படமாக ‘செய்! செய்யாதே!’ உருவாகியுள்ளது. அரசியல் நாடகமும் சமூக மருத்துவ விழிப்புணர்வும் இணைந்த தனித்துவமான படைப்பாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.



ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) இயக்கி கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார். தயாரிப்பாளராக சுப்புலட்சுமி ஜெயராம் (கலிபோர்னியா, அமெரிக்கா) பணியாற்றியுள்ளார்.


இப்படத்தில் ஹெச். ராஜா தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாக்டர் சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் டாக்டர் எஸ். ராஜா, டாக்டர் விஜய் கதாபாத்திரத்தில் குரு விஜய் நடித்துள்ளனர். மருத்துவ நெறிமுறைகள், பொறுப்பான சுகாதார சேவை மற்றும் மனித உயிரின் மதிப்பை வலியுறுத்தும் கதைக்களம் இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.


இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொறுப்பான வாழ்க்கைத் தேர்வுகள் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.


மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம், 2026 செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


நடிகர் – நடிகைகள்:


* எச். ராஜா – தமிழ்நாடு முதலமைச்சர்

* டாக்டர் எஸ். ராஜா – டாக்டர் சந்திரபோஸ்

* குரு விஜய் – டாக்டர் விஜய்

* தர்ஷினி ரெட்டி – டாக்டர் விஜயலட்சுமி

* பிரதிக்ஷா மனோ பிரசாந்த் – திவ்யா (குழந்தை நட்சத்திரம்)

* சிதம்பரம் PDK – தங்கதுரை

* மௌனிகா ப்ரீத்தி V – டாக்டர் மௌனிகா

* தபிதா குணரத்னே – டாக்டர் பிரியா


தொழில்நுட்பக் குழு:


* தயாரிப்பு: ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்

* தயாரிப்பாளர்: சுப்புலட்சுமி ஜெயராம்

* இயக்கம் / கதை / திரைக்கதை: டாக்டர் எஸ். ராஜா (M.D., USA)

* ஒளிப்பதிவு: வாசு பி. ராம்நாத்

* படத்தொகுப்பு: ராஜா முகமது

* இசை: டாக்டர் எஸ். ராஜா & ஹரிணி சுப்பு மியூசிக் டீம்

* சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் கார்த்திக்


*விநியோகம்: ஹரிணி சுப்பு இன்டர்நேஷனல் ஃபிலிம் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்

Thursday, 6 August 2026

ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவில் Producer Bazaar-ன்

ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவில் Producer Bazaar-ன் டிஸ்கவரி ஃபிலிம் மார்க்கெட் அறிமுகம்*



*உள்ளடக்க உருவாக்கம் முதல் வணிகமயமாக்கல் வரை இந்திய திரைப்படத் துறைக்கான தேசிய B2B சந்தையை உருவாக்கும் புதிய முயற்சி*


இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கங்களை வணிகமயமாக்கும் நோக்கில், Producer Bazaar முன்னெடுக்கும் Discovery Film Market (DFM), ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF)-வின் முக்கிய அங்கமாக இந்த ஆண்டு அறிமுகமாகிறது. படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், OTT தளங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்களை ஒரே தொழில்முறை வணிகச் சூழலில் இணைக்கும் தேசிய அளவிலான B2B திரைப்பட சந்தையாக இது உருவாகியுள்ளது.


BISFF மேடையில் Producer Bazaar-ன் தேசிய முன்னெடுப்பு:


ஆகஸ்ட் 15 மற்றும் 16 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் Producer Bazaar Discovery Film Market, இந்திய திரைப்படத் துறையின் படைப்பாற்றலுக்கும் வணிகத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் முக்கிய தளமாக அமையும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரைப்படத் துறையின் முன்னணி நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் முடிவெடுக்கும் நிர்வாகிகளை ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பை இந்த சந்தை வழங்குகிறது.


"இந்தியாவின் உள்ளடக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆண்டு முழுவதும் செயல்படும் சந்தையை உருவாக்குவதே எங்கள் இலக்கு" – ஜி.கே. திருநாவுக்கரசு, CEO & Founder - ProducerBazaar

இந்த முயற்சி குறித்து Producer Bazaar நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு கூறுகையில்,

"இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2,500 திரைப்படங்கள் உருவாகின்றன. ஆனால், திரைப்படங்களுக்கான தொழில்முறை Film Market-கள் ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு மட்டுமே நடைபெறுகின்றன. இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே Producer Bazaar Discovery Film Market உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலகத் தரமான கதைகளும் திறமையான படைப்பாளிகளும் ஏராளமாக இருந்தாலும், அவர்களுக்கு சரியான முதலீட்டாளர்கள், வாங்குபவர்கள், உரிமம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விநியோக வாய்ப்புகளை அடைவது இன்னும் சவாலாகவே உள்ளது.


Producer Bazaar மூலம், படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், OTT தளங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்கள் நேரடியாக இணையும் தொழில்முறை B2B சந்தையை உருவாக்குகிறோம். தரமான உள்ளடக்கங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதோடு, அர்த்தமுள்ள கூட்டாண்மைகளும் உருவாகும். இந்தியாவின் Content Economy-ஐ வலுப்படுத்தும், ஆண்டு முழுவதும் செயல்படும் Content Marketplace-ஆக Discovery Film Market-ஐ வளர்ப்பதே எங்கள் நோக்கம்."

என்றார்.


Producer Bazaar மூலம் படைப்புகள் நேரடியாக சந்தையை அடையும் வாய்ப்பு:


Producer Bazaar உருவாக்கியுள்ள இந்த தொழில்முறை சந்தையில், இந்தியாவின் முன்னணி OTT தளங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், ஸ்டுடியோக்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்கள் பங்கேற்க உள்ளனர். திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் தங்களது படைப்புகளை நேரடியாக தொழில்துறை முடிவெடுப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தி, புதிய வணிக வாய்ப்புகளையும் கூட்டாண்மைகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

Pitch to Deal, Buyer–Seller Market, Script Room – ஒரே மேடையில் முழுமையான திரைப்பட வணிக அனுபவம்

Discovery Film Market மூன்று முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Pitch to Deal – தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டுடியோக்களிடம் நேரடி Pitch.

Buyer–Seller Market – உள்ளடக்க உரிமைகள், விநியோகம் மற்றும் காப்புரிமை தொடர்பான தொழில்முறை சந்திப்புகள்.

Script Room – நிபுணர்களின் திரைக்கதை மதிப்பீடு மற்றும் தொழில்முறை ஆலோசனைகள்.

இதன் மூலம் நிதி திரட்டுதல், கூட்டுத் தயாரிப்பு, விநியோக ஒப்பந்தங்கள், Content Licensing மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெறக்கூடிய புதிய அறிவுசார் சொத்துகளை (IP) உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.


திரைப்படத் துறையின் அனைத்து பிரிவினருக்கும் திறந்த தேசிய சந்தை:


Producer Bazaar Discovery Film Market திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், OTT தளங்கள், தொலைக்காட்சி குழுமங்கள், ஒளிபரப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள், ஸ்டுடியோக்கள், முகவர்கள், அனிமேஷன் மற்றும் VFX நிறுவனங்கள், கேமிங் மற்றும் Interactive Content நிறுவனங்கள், திரைக்கதை ஆசிரியர்கள், இசை மற்றும் அறிவுசார் சொத்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவினருக்கும் திறந்த தளமாக செயல்படுகிறது.

கருத்து மட்டத்தில் இருக்கும் படைப்புகள் முதல் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் திரைப்படங்கள் வரை, சரியான தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை இந்த சந்தை உருவாக்குகிறது.


Producer Bazaar தளத்தில் பதிவு செய்து தொழில்துறை தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு:


பங்கேற்பாளர்கள் dfm.producerbazaar.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்களது கதைச் சுருக்கம், Trailer, Pitch Deck, உரிமை விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றலாம். அதன் மூலம் தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் Content Buyers உடனான திட்டமிடப்பட்ட B2B சந்திப்புகளில் பங்கேற்று, கூட்டுத் தயாரிப்பு, முதலீடு மற்றும் Content Licensing தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும். 


Producer Bazaar – இந்திய திரைப்பட வணிகத்திற்கான தொழில்நுட்ப இயக்கம்

Fipchain Technology Pvt. Ltd. நிறுவனத்தின் முன்னணி தளமான Producer Bazaar, இந்திய திரைப்படத் துறையை தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் ஒழுங்குபடுத்தவும், வெளிப்படைத்தன்மையுடனும் வணிக ரீதியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, Producer Bazaar Discovery Film Market-ஐ பெங்களூரு சர்வதேச குறும்பட விழா மேடையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்திய உள்ளடக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் வலுவான B2B Content Marketplace-ஐ உருவாக்கும் புதிய அத்தியாயத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, ProducerBazaar, ICMEG-இன் Media & Entertainment IP Summit 2026-இல் இணைந்து, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் 27–28 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்கிறது.

ProducerBazaar Launches “Discovery Film Market” at India's Only Oscar-Accredited Short Film Festival!

ProducerBazaar Launches “Discovery Film Market” at India's Only Oscar-Accredited Short Film Festival!*



*ProducerBazaar Introduces a National Marketplace for Content Discovery, Collaboration and Commercialisation*


ProducerBazaar, India's fast-growing B2B content marketplace for the media and entertainment industry, has announced the launch of the Discovery Film Market (DFM), a first-of-its-kind national business marketplace designed to connect filmmakers, producers, investors, buyers and content platforms. The inaugural edition of the Discovery Film Market will be held as part of the 16th Bengaluru International Short Film Festival (BISFF), India's only Academy Award (Oscar)-qualifying short film festival.


Scheduled on August 15 & 16, 2026 (Saturday & Sunday), in Bengaluru, the Discovery Film Market represents a significant step towards creating a structured business ecosystem where India's creative talent can directly engage with the industry's leading decision-makers. Registrations are now open at dfm.producerbazaar.com/.


Bridging India's Film Market Gap:


Speaking about the initiative, G.K. Tirunavukarasu, Founder & CEO of ProducerBazaar, said:

"India produces nearly 2,500 films every year, yet only five or six organised film markets are conducted annually. This gap has limited access to funding, distribution and business opportunities for countless creators. Through ProducerBazaar's Discovery Film Market, we are building a professional marketplace that connects creators directly with producers, buyers, investors and platforms, enabling meaningful collaborations and faster commercialisation of quality content."


"India is home to extraordinary stories and exceptional creative talent. Our vision is to build Discovery Film Market into a year-round business ecosystem that empowers creators, strengthens the content economy and positions ProducerBazaar as the preferred marketplace for discovering, buying and commercialising content."


ProducerBazaar Strengthens India's Content Business Ecosystem:


An initiative by ProducerBazaar, in association with the Bengaluru International Short Film Festival, the Discovery Film Market has been conceived as a dedicated B2B platform where stories, intellectual property and commercial opportunities come together under one roof.

The marketplace is expected to bring together leading OTT platforms, broadcasters, studios, distributors, production houses, investors, sales agents and content buyers from across India, while enabling filmmakers, writers and creators to showcase their projects, build industry relationships and unlock funding, licensing and distribution opportunities.


Three Business Pillars Driving Commercial Success:


Designed around three strategic pillars—Pitch to Deal, Buyer-Seller Market and Script Room—the Discovery Film Market provides creators with structured opportunities to transform ideas into commercially viable projects.


Here are polished English translations suitable for marketing and event collateral:


Pitch to Deal – Pitch your projects directly to producers, investors and studios.

Buyer–Seller Market – Professional meetings for content rights, distribution and licensing opportunities.

Script Room – Expert script evaluations with professional feedback and guidance.


Participants can pitch market-ready content directly to producers and investors, engage in curated buyer-seller meetings for licensing and rights transactions, and receive professional feedback from experienced industry experts through Script Room sessions. The integrated marketplace is designed to accelerate project financing, content acquisition, intellectual property development and distribution partnerships.


One Marketplace for Every Stakeholder in the Entertainment Industry:


The Discovery Film Market welcomes participation from film producers, independent filmmakers, production houses, OTT platforms, television networks, broadcasters, distributors, investors, sales agents, studios, animation and VFX companies, gaming and interactive content creators, scriptwriters, content aggregators, music labels and IP owners.

Whether a project is at the concept stage, in production or ready for release, DFM provides a structured pathway to connect with verified business partners through curated project discovery, business matchmaking and one-on-one meetings.



Technology-Driven Content Discovery and Business Matchmaking:


Powered by ProducerBazaar, the Discovery Film Market offers a structured digital ecosystem where participants can create professional profiles, upload project details including synopses, trailers, pitch decks and rights availability, and connect with verified buyers through curated business meetings.


The platform enables intelligent project discovery using targeted search filters and facilitates discussions around theatrical, OTT, television, remake, regional and international rights, co-production opportunities and investment partnerships. By simplifying the journey from concept to commercialisation, DFM aims to create long-term business relationships across the entertainment industry.


ProducerBazaar's Vision for India's Content Economy:


As the flagship platform of Fipchain Technology Pvt. Ltd., ProducerBazaar continues to drive technology-led innovation for India's media and entertainment sector. With the launch of the Discovery Film Market, ProducerBazaar is reinforcing its vision of building a national marketplace that connects creators with buyers, promotes investment, accelerates content commercialisation and expands the global reach of Indian intellectual property.


One milestone leads to another as ProducerBazaar takes its next step by joining ICMEG's flagship Media & Entertainment IP Summit 2026, taking place on 27–28 November 2026 at OM Convention, Hyderabad.

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

 *புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்*





*ரொம்பவே அரிதாக வெளியாகும் ‘ஹை கான்செப்ட்’டில் க்ரைம் டிராமாவாக தயாராகியுள்ள ‘பீப்’*


*ஹை கான்செப்ட்’டில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய முயற்சி : விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இல.சண்முகசுந்தரின் ‘பீப்’* 


*பீப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் ; செப்டம்பரில் ரிலீஸ்* 


எம் குவெஸ்ட் மூவிஸ்  (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.  


‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா ஆகியோர் இதில் நடித்துள்ளனர் 


தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரசாந்த் விஹாரி இசையமைக்கிறார். இவர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘கேர்ள் பிரண்ட்’ படத்திற்கு இசையமைத்தவர். கன்னட திரை உலகை சேர்ந்த, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் மலையாள திரை உலகைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் டான்பாஸ்கோவின் உதவியாளர் விக்னேஷ் ஆகியோர் படத்தொகுப்பை கவனித்துள்ளனர். மிஸ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ட்ரெயின் படத்தில் பணியாற்றிய ராம்குமார் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.


‘பீப்’ படம் குறித்து இயக்குநர் இல.சண்முகசுந்தர் கூறும்போது,


“எம்பிஏ படித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு நல்ல சினிமா தர வேண்டும் என்பது ஆசை. அங்கிருந்து வெளியே வந்ததும் ‘கட்டு’ (Bind) என்கிற குறும்படத்தை இயக்கினேன்.. 1981ல் இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குறும்படம் தேசிய விருது போட்டியில் கலந்து கொள்ள நாமினேட் செய்யப்பட்டது 


சினிமாவில் நான் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் தான் ‘பீப்’ இது ஹை கான்செப்டில் (Hight Concept) பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்து உருவாகியுள்ள ஒரு க்ரைம் டிராமா. எல்லா படங்களிலும் துப்பாக்கியையும் கத்தியையும் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை சில நேரங்களில் புத்தி தான் மிக சிறந்த ஆயுதம் அதுதான் இந்த படத்தின் ஸ்பெஷல். இந்த ஜானரில் வருடத்திற்கு நான்கு படங்கள் மட்டுமே வெளியாகின்ற நிலையில் ரசிகர்களுக்கு அதை எளிதாக புரியும் வகையில் உருவாகி இருக்கும் படம் தான் ‘பீப்’.  


ஒரு புகைப்படம் என்பதே பல விஷயங்கள் அடங்கிய ஒரு புதையல் போலத்தான். இப்படத்தின் நாயகன் ஒரு புகைப்படத்தின் மூலமாக ஒரு காதலியின் மன ஓட்டத்தை மட்டுமல்ல ஒரு குற்ற வழக்கின் பின்னணியை கூட நுட்பமாக கணித்து அந்த வழக்கிற்கு தீர்வு சொல்லக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தவன். இதை ஜோதிட திறமையாகவோ  அல்லது ஆராய்ந்து பார்க்கும் மூளைத்திறன் என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு பின்னணியில் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. இதுதான் இந்த படத்தின் யுஎஸ்.பி.


ஆறு பேர் கொண்ட நண்பர்கள் குழு. அதில் ஒருவர் இறந்துவிட மற்ற நண்பர்கள் இறப்பின் மர்மத்தை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை.. ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் என்று இல்லாமல் ஹீரோயின் மற்றும் நண்பர்களாக நடிப்பவர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


வழக்கமான படங்களையே பார்த்து சலிப்படைந்த ரசிகர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை புதுமையான திரைக்கதையுடன் அணுகி திரில்லிங்காக கொடுத்திருக்கிறோம் நல்ல க்ரைம் திரில்லர் படங்களை விரும்புகின்ற, தான் இருக்கிற இடத்தில் இருந்து இன்னும் அதிக உயரத்திற்கு சொல்வதை லட்சியமாக வைத்திருக்கின்ற ரசிகர்களுக்கு ‘பீப்’ முழு திருப்தியை தரும்” என்று கூறியுள்ளார். 


பீப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் விதமாக இதன் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது 


இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், தீபக் தினகர், சுகாசினி, கோமல் சர்மா ஆகியோர் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலை-29 அன்று வெளியிட்டுள்ளனர்