Featured post

Mandavetti’ Teaser Unleashes a Chilling Supernatural Mystery with Komalee Prasad at the Heart of the Darkness*

 *’Mandavetti’ Teaser Unleashes a Chilling Supernatural Mystery with Komalee Prasad at the Heart of the Darkness* _*Saranraj Senthilkumar’s ...

Tuesday, 15 September 2026

Mandavetti’ Teaser Unleashes a Chilling Supernatural Mystery with Komalee Prasad at the Heart of the Darkness*

 *’Mandavetti’ Teaser Unleashes a Chilling Supernatural Mystery with Komalee Prasad at the Heart of the Darkness*



_*Saranraj Senthilkumar’s Supernatural Crime Thriller Promises an Eerie World of Fear, Folklore and the Unknown.*_


The mystery surrounding ‘Mandavetti’ deepens with the release of its two-minute teaser, which plunges audiences into a disturbing world where fear arrives without warning and the line between the known and the supernatural begins to disappear. Directed by Saranraj Senthilkumar, the teaser wastes no time in establishing an unsettling atmosphere, opening with a woman in a trance-like state whose presence immediately creates an inexplicable sense of dread.


From there, the teaser unfolds through a series of mysterious happenings, fragmented conversations and unsettling glimpses of characters attempting to make sense of something far beyond their understanding. At the centre of these conversations is ‘Senji Saamy’, an enigmatic force whose presence appears to be closely connected to the strange events unfolding around them. Rather than revealing the answers, the teaser carefully leaves the mystery intact, creating the feeling that every revelation could lead to something far more disturbing.


The visual language of ‘Mandavetti’ plays a crucial role in building this world. Shadows, locations, expressions and fleeting images combine with Deepak Venugopal’s background score to create an atmosphere that grows increasingly ominous as the teaser progresses. The result is a glimpse that leans into psychological unease and supernatural mystery, promising a story where folklore and human fear collide.


With Komalee Prasad leading the film, the teaser also offers glimpses of the intense transformation that the actress has undergone for a character steeped in vulnerability, rage, suffering and mysticism. Her presence gives the supernatural world an emotional centre, while the teaser’s fragmented storytelling leaves audiences with one compelling question: What exactly is ‘Senji Saamy’, and why has its presence begun to haunt this world?


Written, directed and produced by Saranraj Senthilkumar under the banner of Tuskers Den Pictures, Mandavetti is conceived as a dark supernatural crime thriller blending psychological tension, folklore and raw human emotions. The film explores the mysterious mythology surrounding “Senji,” a fierce local deity, whose presence drives the story into deeply unsettling and emotionally charged territory.


The film features Prakash Manithan as the cinematographer, Guna Palinisamy as the editor and Deepak Venugopalas the music director. Gowtham has choreographed the stunts, while Sangeetha Sen is the costume designer. Tony J is handling sound mixing, Balaganghadaran is overseeing DI grading, Vijayan is responsible for VFX. Mahendran Kandasamy is the production manager and Narmada is the makeup artist. The film’s PROs are Suresh Chandra and Abdul Nassar.

நடிகை கோமலி பிராத் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் நேச்சுரல் திரில்லரான 'மண்டவெட்டி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

 *நடிகை கோமலி பிராத் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் நேச்சுரல் திரில்லரான 'மண்டவெட்டி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு!*



சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அமானுஷ்ய கிரைம் த்ரில்லர் திரைப்படம் அச்சம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் அறியப்படாத மர்மங்களை உள்ளடக்கிய ஒரு அமானுஷ்ய உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


தற்போது வெளியாகியுள்ள 'மண்டவெட்டி' திரைப்படத்தின் இரண்டு நிமிட டீசர் மூலம் இந்த திரைப்படத்தை சுற்றியுள்ள மர்மம் மேலும் தீவிரமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் அச்சம் தோன்றக்கூடிய பதற்றமான உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த டீசர் அழைத்துச் செல்கிறது. அறிந்தவற்றுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையிலான எல்லை மெல்ல மறைந்து போகும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர், மயக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் காட்சியுடன் தொடங்குகிறது. அவரது இருப்பே உடனே அச்சத்தை ஏற்படுத்துகிறது.


அதனைத் தொடர்ந்து, மர்மமான சம்பவங்கள், துண்டு துண்டான உரையாடல்கள் மற்றும் தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியைப் புரிந்துகொள்ள முயலும் கதாபாத்திரங்களின் பதற்றமான காட்சிகள் என டீசர் நகர்கிறது. இந்த உரையாடல்களின் மையத்தில் ‘செஞ்சி சாமி' எனப்படும் மர்மமான சக்தி இடம்பெறுகிறது. சுற்றிலும் நிகழும் விசித்திரமான சம்பவங்களுடன் இந்த சக்திக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. ஆனால், டீசர் எந்தவொரு விடையையும் வெளிப்படையாகக் கூறாமல் மர்மத்தை அப்படியே தக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிய்ய்ம் அதைவிட பயமுறுத்தும் மற்றொரு உண்மைக்கு அழைத்து செல்லும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.


‘மண்டவெட்டி' திரைப்படத்தின் காட்சியமைப்பும் இந்த அமானுஷ்ய உலகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருள் சூழ்ந்த நிழல்கள், கதைக்களத்திற்கேற்ற இடங்கள், கதாபாத்திரங்களின் முகபாவனைகள் மற்றும் கணநேரத்தில் தோன்றி மறையும் காட்சிகள் ஆகியவை தீபக் வேணுகோபாலின் பின்னணி இசையுடன் இணைந்து டீசரின் பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்கின்றன. உளவியல் ரீதியிலான அசௌகரிய உணர்வையும் அமானுஷ்ய மர்மத்தையும் முன்னிறுத்தும் இந்த டீசர், நாட்டுப்புற நம்பிக்கைகளும் மனிதர்களின் அச்சமும் மோதும் ஒரு கதையை எதிர்பார்க்க வைக்கிறது.


திரைப்படத்தின் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். பலவீனம், கோபம், வேதனை மற்றும் ஆன்மிக மர்மம் என பல்வேறு உணர்வுகளை கொண்ட கதாபாத்திரமாக திரையில் தோன்ற அவர் மேற்கொண்டுள்ள மாற்றத்தையும் டீசர் காட்டுகிறது. மேலும், செஞ்சி சாமி என்பது உண்மையில் என்ன, இந்த உலகையே அதன் இருப்பு ஏன் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது என்ற கேள்விகளையும் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்புகிறது. 


டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரித்துள்ள ‘மண்டவெட்டி' திரைப்படம், உளவியல் ரீதியான பதற்றம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கும் இருண்ட அமானுஷ்ய கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. செஞ்சி எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள மர்மமான தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான அச்சத்தையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை நகர்கிறது.


இப்படத்திற்கு பிரகாஷ் மனிதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். குணா பழனிசாமி படத்தொகுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை கெளதம் வடிவமைத்துள்ளார். சங்கீதா சென் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். டோனி ஜெ ஒலி கலவைப் பணியை மேற்கொண்டுள்ளார். பாலகங்காதரன் டிஐ கிரேடிங் பணிகளை கவனித்துள்ளார். விஜயன் விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறார். மகேந்திரன் கந்தசாமி தயாரிப்பு மேலாளராகவும், நர்மதா மேக்கப் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் மக்கள் தொடர்பாளர்களாக சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

ஐந்து மொழிகளில் உருவாகி வரும் " ஃபீல் மை லவ் " படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது!

 ஐந்து மொழிகளில் உருவாகி வரும்    " ஃபீல் மை லவ் " படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது! 




காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் 'ஃபீல் மை லவ் " இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது! 



இறுதி கட்டப் பணிகளை நெருங்கியுள்ளது " ஃபீல் மை லவ் " 

ஹரி பிரகாஷ்.எம் இயக்கியுள்ளார்! 


பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல 'பான்-இந்தியா' (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் " Feel My Love " ஃபீல் மை லவ் "


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.


ஹவுஸ் மேட்ஸ்' (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்துவருகிறார்.


திறமையான இசையமைப்பாளர்களான ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.


லவ்' (LOVE), 'கொலை சேவல்' (Kolai Seval) போன்ற படங்கள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விளம்பரப் படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.


ஹரி பிரகாஷ் எம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.


"வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்" என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.


இறுதிக்கட்டப் பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. 


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிவரும் இந்த 

படத்தின்  இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!

 *சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!*



*அட்டகாசமான வீடியோவுடன் தலைப்பை அறிவித்த படக்குழு  – கமர்ஷியல் ஆக்ஷன் விருந்துக்கு தயாராகும் படம்!*


தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, ரசிகர்களை கவரும் வகையிலான அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. 


சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஒரு அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் தொடங்குகிறது. கல்யாண ஆர்டர் ஒன்றுக்காக சமையல் நடைபெறும் அழகான வீட்டிற்குள் விக்ரம் நுழைவதில் இருந்து காட்சிகள் நகர்கின்றன. தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறும் அந்தப் பகுதி, ஒரு அமைதியான, மகிழ்ச்சியான குடும்பத்தின் சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது.


ஆனால், வீடியோவின் அடுத்த நொடியிலேயே மொத்த சூழலும் தலைகீழாக மாறுகிறது. குடும்பப் பின்னணியில் இருந்து அதிரடியான ஆக்ஷன் உலகத்திற்குள் காட்சிகள் திடீரென பயணிக்கின்றன. விக்ரம் ஒரு பூட்டிய அறையைத் திறந்து உள்ளே செல்வதும், அங்கு அடிபட்டு கிடக்கும் அடியாட்களுடன் அவர் பேசும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் விக்ரமின் கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ அமைந்துள்ளது. குடும்ப உணர்வுகளும் கமர்ஷியல் ஆக்ஷனும் இணைந்த இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


‘பவர்ஹவுஸ்’ அனைவரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஐடியாலஜி செண்டிமெண்ட் கலந்த  ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சீயான் விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு  அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடும்பப் பின்னணியில் தொடங்கி அதிரடியான ஆக்ஷன் காட்சிகளாக மாறும் வீடியோவும், ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.


https://youtu.be/IKEUlp3JIKk

ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்"இராவணன் சோலையில் சிவன் மலை"

 *ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்"இராவணன் சோலையில் சிவன் மலை"*









இசைஞானி இளையராஜா இசையில்  இப்படத்தின் பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது. 


திரு இசைஞானி இளையராஜா,  திரு கங்கை அமரன்,  திரு இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா இனிதே துவங்கியது..


தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர்.  


உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம், இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்டமாக படப்பிடிப்பு துவங்குகிறது. 


இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 


ஒளிப்பதிவு - எம் வி பன்னீர்செல்வம் 

எடிட்டிங் -  காசி விஸ்வநாதன்

சண்டைப்பயிர்ச்சி - மைக்கேல்

மக்கள் தொடர்பு - டைமண்ட் பாபு

Monday, 14 September 2026

தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்"

 தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்"








பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகனின் " பனங்காட்டான் "


ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன்  தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பனங்காட்டான்" 


மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பான விமர்சனங்களை பெற்ற  கிடுகு,கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார் 


இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன், மாஸ்டர் ரோஹித்,செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ் குமார் ஆகியோர் முக்கி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்திற்கு சுந்தர். N இசையமைத்துள்ளார்.


ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ளார் 


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வீரமுருகன்.


படம் பற்றி இயக்குனர் வீரமுருகன் பகிர்ந்தவை...


தென் மாவட்டத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளேன்.


ஒரு முக்கிய பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போக கூடாது என்று இன்று வரை மறைமுகமாக அதனை கடைபிடித்து வருகின்றனர்.

அது என்ன மாதிரியான கட்டுப்பாடு, அது சமூகத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது,என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் இந்த " பனங்காட்டான் " 


பாலமேடு ,தூத்துக்குடி, ராமநாடு, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம்,  விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்றார் இயக்குனர் வீரமுருகன்.


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

டிஎன்பிபிஎல் (TNPPL) சீசன் 2: சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சி பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்டமாக அறிமுகம்!

 *டிஎன்பிபிஎல் (TNPPL) சீசன் 2: சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சி பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்டமாக அறிமுகம்!

டிஎன்பிபிஎல் (TNPPL) சீசன் 2: சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பி.வி. சிந்து, ஜோஷ்னா சின்னப்பா 


டிஎன்பிபிஎல் (TNPPL) சீசன் 2: சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சி - பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக அறிமுகம்* 



சென்னை: தமிழ்நாடு பிரீமியர் பிக்கிள் பால் லீக் (TNPPL) தொடரின் இரண்டாவது சீசனை முன்னிட்டு, 'சென்னை தமிழ் டைட்டன்ஸ்' அணி தனது புதிய ஜெர்சியை (Jersey)  சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.


இவ்விழாவில் பேட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி. சிந்து மற்றும் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு ஜெர்சியை வெளியிட்டனர். மேலும், பிரபல நடிகர் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.


தமிழ் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் 'நோவா லைஃப் ஸ்பேசஸ்' (NOVA Life Spaces) செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அணியின் இந்த புதிய தோற்றம், வீரர்களின் துடிப்பான ஆற்றலையும் வரவிருக்கும் சீசனுக்கான தயார் நிலையையும் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


விழாவில் பிரபலங்களின் பேசியதாவது:


பி.வி. சிந்து: "இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தொடர்கள் விளையாட்டை மேம்படுத்துவதுடன், மக்களையும் ஒன்றிணைக்கின்றன." என்றார் 


ஜோஷ்னா சின்னப்பா பேசும்போது: "டிஎன்பிபிஎல் தொடர் புதிய திறமையாளர்களை உருவாக்க ஒரு சிறந்த தளம். தமிழ் டைட்டன்ஸ் அணியின் இந்த பயணத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்." என்றார் 


சரத்குமார் பேசும்போது: "விளையாட்டுக்கு மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல் உண்டு. தமிழ் டைட்டன்ஸ் அணியின் இந்த அறிமுக சீசனில் அவர்களுடன் இணைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்." என்றார் 


புதிய பொலிவுடனும், உறுதியான இலக்குடனும் களமிறங்கும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணி, இந்த இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்போடு தயாராகி வருகிறது.

Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra

 *Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra*






Produced by Junglee Pictures and Dr. Jayantilal Gada (Pen Studios), Daayra is directed by National Award-winning filmmaker Meghna Gulzar and stars Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran in lead roles


31st August, 2026: The trailer of Daayra is here, offering a gripping first look at a story where truth is never absolute, justice is open to interpretation, and every decision comes with a consequence. Releasing in cinemas on 18th September 2026, this Meghna Gulzar directorial explores crime, justice and punishment through a riveting, layered, emotionally charged narrative, written by Yash Keswani Sima Agarwal and Meghna Gulzar.


Inspired by true events, Daayra unfolds in the aftermath of a crime that grips the nation sparking widespread outrage, while setting a series of events and 2 investigations in motion. As the search for answers deepens, two senior police officers, played by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran, find themselves navigating the same system through different approaches to duty and justice, on opposing sides of a case that challenges the very idea of right and wrong. 


Rooted in realism, the trailer steadily builds tension as new revelations shift the way we see the case. Its sharp, thought-provoking dialogues raise difficult questions on truth and justice. At the same time, Daayra looks beyond the crime itself to explore public perception and the narratives that emerge.


At its heart, Daayra asks questions that have no easy answers: How quickly can a narrative become a verdict? When everyone has an opinion, who gets to decide what justice looks like? And when we are only spectators, what do we choose to believe? 


The trailer also offers glimpses of the wider ensemble, with powerful performances by Jitendra Joshi, Kshitee Jog, Kanwaljeet Singh, Sandeep Kulkarni and Trupti Khamkar. Alongside Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran, they bring added emotional depth to a story shaped by conflicting perspectives, difficult choices and the consequences of decisions made.


Actor Kareena Kapoor Khan said, “What I loved about working with Meghna is that she makes you question everything you think you know about a character. There’s so much thought behind every detail, but she never takes away your instinct as an actor. Playing DCP Ajooni Kohli stayed with me… because she pushed me into a space I hadn’t really explored before, and at this stage in my career, that’s always exciting. And then to have Prithviraj opposite me was such a pleasure. He’s an incredibly intelligent actor… very present, very instinctive… and there was an ease to working together that I really enjoyed. This was one of those films where the people you’re surrounded by make the experience that much richer.”


Actor Prithviraj Sukumaran said, “What drew me to DCP Raman Kumar was the complexity beneath his composed exterior and the questions he finds himself grappling with during the investigation. What I admire is how the film maintains that objectivity right till the very end, allowing the audience to form their own perspective. Meghna Gulzar is a filmmaker whose craft I have closely followed and Daayra gave me the opportunity to work with her. It was a rewarding experience and working with Kareena made the journey even more special. I hope the audience connects with the world we have created, a story that is gripping and deeply human”


Director Meghna Gulzar said, "Daayra doesn’t sit comfortably in black and white. It explores the grey and dismantles it. As a filmmaker, that grey space is always challenging, and yet compelling – where characters make choices, live with them, and the audience is left to engage with what unfolds. The main protagonists of Daayra are brought to life with towering performances by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran. I’m grateful that I got this dynamic combination of actors, along with an exceptional ensemble cast, to explore the delicate lines of law and justice that traverse the story of Daayra. I am very excited to share this world of grey with the audience and welcome them into it!"


Amrita Pandey, CEO, Junglee Pictures, said, “At Junglee Pictures, we have always gravitated towards stories that come from the world around us, particularly those inspired by true events or real experiences. Daayra has been a story we have developed closely with our writers and Meghna, and it is a film that feels deeply relevant to the times we live in, while approaching its subject with the sensitivity it deserves. It is also a powerful crime thriller, driven by conflict, moral dilemmas, difficult choices and two very strong points of view. To have powerhouse performers like Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran bring these characters to life makes it even more exciting. Daayra also marks our first co production  with PEN Studios, and we are delighted to be on this journey with them. For our team, it is wonderful to be working with Meghna for the third time after Talvar and Raazi. We have loved making this film and hope audiences connect with it as deeply as we have.”

Dr. Jayantilal Gada, CMD, Pen Studios said, "Cinema can entertain, but it can also ask the right questions. Daayra belongs to the latter, and that is what makes this story particularly special to us. Meghna Gulzar is a filmmaker who has consistently created cinema that makes you think, and her ability to tell a story with depth, sensitivity and restraint is truly remarkable. Bringing together two celebrated actors like Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran adds another compelling dimension to the film, with both actors bringing immense conviction and intensity to their roles. It has also been wonderful to collaborate with a content-first studio like Junglee Pictures, whose vision and commitment to meaningful storytelling align closely with ours. We hope Daayra not only grips audiences but also stays with them, leaving them with questions and conversations long after they leave the theatre.”


With Daayra, Meghna Gulzar brings together a layered story and a strong ensemble to examine the difficult choices that emerge when personal conviction meets the boundaries of law. Distributed by Pen Marudhar, Daayra releases in cinemas on 18th September 2026.


Trailer link - https://bit.ly/DaayraOfficialTrailerOutNow

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2

 *வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்  டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி ( Mookuthi Amman 2: Mahasakthi' ) படத்தின் டீசர் வெளியீடு*




தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் 'ரைஸ் ஆஃப் மஹாசக்தி' டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ் ஆப்  மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், 'மைனா' நந்தினி, 'கருடா' ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை - வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் - குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் - ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர். 


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் 'ரைஸ் ஆஃப்  மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்... ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால்.. இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌


https://www.youtube.com/watch?v=UUfAemccAJ0