Featured post

திரைக்கலைஞன் நா. முத்துக்குமாருக்காக எட்டு இசையமைப்பாளர்கள் ஒரே

 *திரைக்கலைஞன் நா. முத்துக்குமாருக்காக எட்டு  இசையமைப்பாளர்கள்  ஒரே மேடையில்! பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி* *ஜூலை-19 இல்  சென்னையில் மிக பிரமாண்...

Saturday, 21 June 2025

திரைக்கலைஞன் நா. முத்துக்குமாருக்காக எட்டு இசையமைப்பாளர்கள் ஒரே

 *திரைக்கலைஞன் நா. முத்துக்குமாருக்காக எட்டு  இசையமைப்பாளர்கள்  ஒரே மேடையில்! பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி*







*ஜூலை-19 இல்  சென்னையில் மிக பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக நடைபெறும் நா.முத்துக்குமார் 5௦-ஆம் ஆண்டு பொன் விழா*


தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர், 


இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர். 


 இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர்  - இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் - இயக்குநர்  ஆர் வி உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஞ்செயன்,  இயக்குநர் விஜய் , எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா ஆகியோர் கலந்துகொண்ட 'ஆனந்த யாழை' விழா சென்னையில் நடைபெற்றது.  


 இதுபோன்ற நிகழ்ச்சிகளைத்  திறம்பட நடத்தி வரும் ஏசிடிசி நிறுவனத்துடன் கைகோர்த்து ஆனந்த யாழை விழாவை நடத்த இருக்கின்றனர்.


வரும் ஜூலை 19 ஆம்  தேதி இந்த விழா நேரு உள்ளரங்கம்- சென்னையில்  நடைபெற இருக்கிறது. 


இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ் தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஒரு சேர ஒரு நிகழ்வில் இசைப் பந்தி வைப்பது இதுவே முதல் முறை. 


குரல் வளம் மிக்க கலைஞர்களான சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு உத்தரா உன்னிகிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் தங்களது பங்களிப்பைத்  தர இருக்கிறார்கள்.


 இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இசைந்துள்ளனர்.  .


இந்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை இன்று நடைபெற்ற அறிவிப்பு விழாவில் கலந்துகொண்ட, நா முத்துக்குமாருடன் இணைந்து பயணித்த பிரபல திரைக்கலைஞர்களுடன்,  ஏசிடிசி நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குநர் (Managing Director)  ஹேமந்த் மற்றும் இணை இயக்குநர் ( Joint Director) சரண் இணைந்து   வெளியிட்டனர். 


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட *தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது* ,


“இது இயக்குநர் விஜய்யின் கனவு. அந்தக் கனவை நினைவாக்க ஒரு பெரிய டீம் தேவைப்படுகிறது. அந்த நிறுவனம்தான் ஏ சி டி சி. 8000 பேரை அழைத்து நேரு ஸ்டேடியத்தில் விழா நடத்த முடிவெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. நா.முத்துக்குமார் நம்மோடு இல்லாவிட்டாலும் நம் மனதில் எப்போதும் இருப்பார். 2009ல் கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்து, தெய்வத்திருமகள், தாண்டவம் என பல படங்களில் மறக்க முடியாத பல அற்புதமான பாடல்களைக்  கொடுத்துள்ளார். ஒரு இந்திப் படத்தின் தமிழ் டப்பிங்கிற்காக 7 பாடல்களை இரண்டு நாட்களில் எழுதிக் கொடுத்தார், வேலை கொடுத்த உடனே அவ்வளவு வேகமாக பாடல்களை உருவாக்கினார். அவரது ஆர்வமும் ஈடுபாடும் வியக்க வைக்கும். ஒவ்வொரு வருடம் நிறைவு பெறும்போதும் இந்த வருடத்தில் எந்தெந்த பாடல்கள் எழுதியிருக்கிறேன் என எனக்கு ஒரு பட்டியல் அனுப்பி வைப்பார். ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி, புத்தகங்களை, கவிதைத்  தொகுப்புகளை எழுதி பலரது மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற நா.முத்துக்குமாரின் திடீர் மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்த ஒன்று.


அவர் மறைந்த அந்த சமயத்தில் நானும் இயக்குநர் விஜய்யும் அவருக்கு ஒரு நினைவேந்தல் நடத்த வேண்டும் எனப்  பேசினோம். ஆனால் ஒரு முறை அப்படி திட்டமிட்டும் அது கைகூடி வரவில்லை. ஆனால் இந்த 2025 ஆம் வருடத்தில் நா.முத்துக்குமாரின் 50 ஆவது வருடத்தை கொண்டாடுவதற்கான வாய்ப்பு அருமையாக உருவாகி உள்ளது. நா.முத்துக்குமாரை நினைத்தாலே ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற பாடல் தான் நினைவுக்கு வரும். அதையே இந்த நிகழ்ச்சிக்கு டைட்டில் ஆக வைத்திருப்பது மிகமிகப் பொருத்தம்” என்று கூறினார்..


*இயக்குநர் ராம் பேசும்போது* 


“நா முத்துக்குமார் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரை உலகத்திற்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்த் திரை இசைப் பாடல்களைக் கேட்கக்கூடிய எல்லோருடைய வீடுகளிலும் ஆனந்த யாழை மீட்டிக் கொண்டிருக்கிறார். மீட்டப் போகிறார். நா.முத்துக்குமார் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் இல்லை. முத்துக்குமார் எப்போதும் இமயமலை  என்றாலும் தன்னை பனித்துளி அளவே காட்டிக் கொள்வார். நான் முதல் படம் எடுக்கக் காரணமாக இருந்தவரே முத்துக்குமார் தான். திரையுலகில் உள்ள நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் முதலில் பேசுவது முத்துக்குமாரைப் பற்றித் தான் இருக்கும். இது நா.முத்துக்குமாரை தமிழகம் முழுக்க கொண்டாடப் போகிற ஒரு விழா. முத்துக்குமாரின் சாதனைகளை, முத்துக்குமாரின் வரிகளை என்றென்றும் தமிழகத்தில் நிலைத்திருக்குமாறு செய்யக்கூடிய விழா. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு நடந்திராத ஒரு விழா என்று கூட சொல்லலாம்” என்று கூறினார்.


*எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசும்போது,*


சில நாட்களுக்கு முன்பு இறந்து போனவர்களைக் கூட உடனடியாக மறந்து விடும் இன்றைய சூழலில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் நம்மை விட்டுப் பிரிந்து போனாலும் கூட இன்று எவ்வளவு பேர் நினைவுகளில் ஒரு மனிதன் இருக்கிறார் என்பது மட்டும்தான் வரலாறு. 


தான் ஒரு கவிஞனா அல்லது ஒரு பாடல் ஆசிரியரா என்கிற போராட்டம் கடைசி வரை முத்துக்குமாருக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் கவிதை, பாடல் என இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்த ஒரு மனிதர் அவர். கடைசி வரை புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருந்தவர். சினிமாவிலும், சினிமாவிற்கு வெளியே இலக்கியத்திலும் நிறைய பேரை இணைக்கும் ஒரு தொடர்பு பாலமாக நா.முத்துக்குமார் இருந்தார்” என்று கூறினார்.


*எழுத்தாளர் அஜயன் பாலா பேசும்போது,*


தமிழகம் எத்தனையோ முத்துக்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்த முத்துக்களும் பல முத்துக்கள் உருவாகக்  காரணமாக இருந்திருக்கிறது. அந்த முத்துக்களில் எல்லாம் அரிய முத்தாக உருவானவர் நா.முத்துக்குமார்.  அவர் இறந்து இத்தனை வருடம் கழித்து ஐம்பதாவது வருடத்தில் இப்படி ஒரு பாராட்டு விழாவை சிறப்பான ஒரு நிகழ்வாகக்  கொண்டாடுவது என்பது தான் அவன் எப்படி வாழ்ந்தான், அவன் எப்படிப்பட்ட கவிஞன் என்பதற்கான அடையாளமாக இருக்கும். என் வாழ்க்கையில் நான் ஒரு இருண்ட அறைக்குள் இருந்தேன். எனக்குள் பல வெளிச்சங்களை உருவாக்கி பல உறவுகளை உருவாக்கிக் கொடுத்தவன் நா முத்துக்குமார். நட்பு என்ற வார்த்தைக்கு சரியான உதாரணமாக இருந்தவன் நா முத்துக்குமார்.

அவன் பாட்டு எழுதக்  கிளம்புகிறான் என்றால் அவரை நம்பி கோடம்பாக்கத்தில் ஐந்து அறைகளில் இருப்பவர்கள் சாப்பாட்டுக்காக காத்திருப்பார்கள். அவனது திருமண வாழ்க்கைக்கு முன்பாக தினசரி இதுபோன்ற பல நண்பர்களுக்கு வயிறார உணவு அளித்துக் கொண்டிருந்தான். கவிஞர், எழுத்தாளர் மட்டுமல்ல.. நா முத்துக்குமார் ஒரு சிறந்த மனிதன். வேறு எந்தத் திரையுலகிலும் ஒரு நண்பனுக்காக, கவிஞனுக்காக இப்படி ஒரு விழா நடந்தது இல்லை. இங்கே இப்படி ஒரு விழா நடப்பது ஒரு முத்திரை” என்று கூறினார்.


*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*


நா.முத்துக்குமார் ஒரு அருமையான எழுத்தாளன். அற்புதமான படைப்பாளி. மிகச்சிறந்த கவிஞன். அவரது நினைவைக்  கொண்டாடுவதற்காக அவரது ஐம்பதாவது விழா ஆண்டிலே அவரது படைப்பாற்றலை போற்றும் விதமாக இந்த விழா எடுக்கப்படுகிறது. இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். எத்தனை படைப்பாளர்களுக்கு இது போன்று விழா எடுக்க வேண்டும் என மற்றவர்கள் நினைக்கிறார்களோ தெரியாது. அந்த அளவிற்கு அவர் ஒரு கவிஞராக மட்டுமல்ல.. ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். மற்றவர்களை மகிழ்வித்து மகிழக்கூடிய ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். கதையோட்டத்துடன் பாடல்களை எழுதக்கூடிய கவிஞர்கள் இப்போது இல்லை. ஆனால் ரத்தத்தோடும் உணர்வோடும் இன்று வரை ஒவ்வொரு எழுத்தும் வாழ்க்கையில்  எண்ணிப் பார்க்கக் கூடிய வரிகளைத் தந்து சென்றவர்தான் நா முத்துக்குமார்” என்று கூறினார்.


*இயக்குநர் லிங்குசாமி பேசும்போது,*


“’தேரடி வீதியில் தேவதை வந்தால்’ என்கிற பாடல் தான் நா முத்துக்குமார் எனக்காக முதன் முதலில் எழுதிய பாடல். ஒரு படத்தில் பறவை பறந்த பிறகும் கிளையின் நடனம் முடியவில்லை என அவர்  எழுதிய வரிகள் போல தான், அவர் மறைந்தும் இன்னும் அவர் நினைவுகள் மறையாமல் இருக்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் எழுதுவதற்கு நேரம் இல்லாமல் சொல்லச் சொல்ல எழுதிக்கொள்ளும் அளவிற்கு பிஸியான பாடல் ஆசிரியராக மாறினார். எல்லா இசை அமைப்பாளர்களோடும் இணக்கமாக இருந்த ஒரு பாடல் ஆசிரியர். தொடர்ந்து வருடம் தோறும் அதிக பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியராக இருந்தார். தனது பாடல் வரிகளால் சில நேரம் ட்யூனையே கூட மாற்றி விடுவார். அவருக்கான விழாவை அவர் இறந்த அந்த காலகட்டத்திலேயே நடத்துவதற்கு சில முயற்சிகள் எடுத்தோம். ஆனால் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது. அந்த பொறுப்பும் சரியாக இயக்குநர் விஜய்யிடம் வந்திருக்கிறது. வீடு மாறிப் போன ஒரு விருந்தாளி போல தான் அவரது மறைவை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.


*இயக்குநர் விஜய் பேசும்போது,*


இந்த விழா நடப்பதற்கு மிக முக்கிய காரணமான ஏ சி டி சி குழுவுக்கு நன்றி. 2016ல் நா முத்துக்குமார் மறைந்த சில நாட்கள் கழித்து இயக்குநர் செல்வமணி என்னை அழைத்து முத்துக்குமாருக்கு ஒரு நினைவு விழா எடுக்க வேண்டும் என்று கூறினார். இதை முதலில் ஆரம்பித்தது அவர்தான். இந்த நிகழ்வு பற்றி சொன்னதும் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பலரும் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கான்சர்ட் செய்வதாக முன்வந்தார்கள். இது ஒரு பிரம்மாண்ட விழாவாக அமையப் போகிறது. அதைக் கொண்டாடும் தருணம் இது” என்று கூறினார்.


*பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது,* 


“எனக்குள் சினிமாவுக்கு செல்லும் ஆர்வத்தைத்  தூண்டி வைத்து என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தது என்னுடைய அண்ணன் தான், நான் இயக்குநராக வளர்ந்து தயாரிப்பாளராக மாறிய பின்னர் ஒரு நாள் காஞ்சிபுரத்திலிருந்து நா முத்துக்குமாரையும் என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். அப்போது ஒரு கவிதைப்  புத்தகம் வெளியிடும் முயற்சியில் அவர் இருந்தார். நா முத்துக்குமாரைப்  பொருத்தவரை அவர் ஒரு ஞானக்கிறுக்கன். ஒரு கட்டத்தில் அவர் பேசுவதே பாடல் வரியாகவோ இலக்கியமாகவோ மாறியது. அம்மாவின் பாசத்தைப் பற்றி பலர் பாடல் எழுதிய நிலையில் அவர் பாடல் எழுதிய பின்பு தான் அப்பாவின் பாசத்தை பலரும் கொண்டாட ஆரம்பித்தார்கள்.


முத்துக்குமாரைப் பொருத்தவரை தன்னை யாராவது புகழ்ந்தாலும் கூச்சப்படுவார்.. தனக்கு யாராவது சம்பளம் பாக்கி வைத்தால் அதைக் கேட்பதற்கும்  கூச்சப்படுவார். அவர் மறைந்த  அந்த சமயத்திலேயே அவருக்கு நினைவு விழா நடத்துவதற்கு முயற்சி எடுத்தோம். ஆனால் சில காரணங்களால் அது அப்படியே தடைபட்டு நின்று விட்டது.


இத்தனை வருடங்கள் கழித்தும் கூட அத்தனை இயக்குநர்களும் இந்த விழாவை நடத்துவதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று சொல்கிறார்களே அது தான் நா முத்துக்குமாரின் வெற்றி. இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடப்பதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். அதை உதவியாக இல்லாமல் எங்கள் கடமையாக நினைத்து செய்து தருகிறோம்” என்று கூறினார்.

.

*ஏ சி டி சி இணைச்செயலாளர் சரண் பேசும்போது,*


“இப்படி ஒரு விழா எடுக்க இருக்கிறோம் என்று நாங்கள் முடிவு செய்து மொத்தம் எட்டு இசை அமைப்பாளர்கள், அந்த நல்ல மனிதருக்காக நாங்கள் வந்து இசையமைக்கிறோம் பாடுகிறோம் என்று சொன்னதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்தியாவிலேயே எட்டு இசை அமைப்பாளர்கள் சேர்ந்து பண்ணும் கான்சர்ட் இதுதான் முதல் முறை. நா முத்துக்குமாருக்கு ஒரு காணிக்கையாக இதை நடத்த இருக்கிறோம்” 


இசை மற்றும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னோடியாக இருப்பது தான் ஏ சி டி சி நிறுவனம். நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற இசைக்கலைஞர்களை வைத்து மிகப் பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது. எந்த ஒரு சிறப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யும் திறன் கொண்ட  நிறுவனம். அந்த வகையில் பாடல்களால் மக்கள் மனதில் நிறைந்த நா முத்துக்குமார் அவர்களின் 50 வது ஆண்டு விழாவை எடுப்பதில் பெருமை அடைகிறது ஏ சி டி சி நிறுவனம் என்று கூறினார். ..


நிறைவாக தயாரிப்பாளர் தனஞ்செயன் எங்களுடன் இணைந்து பணியாற்றும் பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இத்தனை பத்திரிகை தொடர்பாளர்களை ஒன்று சேரப் பார்ப்பதே மகிழ்வாக இருக்கிறது. இவ்விழா வெற்றிகரமாக நிகழும் எனக் கூறினார்.

நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக்

 *நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!*




ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. 'புஷ்பா 2' திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது.


நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புஷ்பா2' திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 'ஸ்ட்ரீ 2', 'பதான்', 'அனிமல்' மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது. 


இந்த நம்பரையும் தாண்டி, படத்தின் எமோஷனல் தருணங்கள்தான் ஆடியன்ஸை கனெக்ட் செய்திருக்கிறது. பாலிவுட் ஜெயண்ட்ஸை தாண்டி புஷ்பா ராஜாக அல்லு அர்ஜூனை பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் கொண்டாடி வருகின்றனர். 


இந்த சாதனை நடிகர் அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல். தேசிய விருது பெற்றதில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக உருவானது என தன்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் அடுத்தடுத்து உயரத்தை அடைந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.

Allu Arjun Beats Giants: Pushpa2 Becomes Most Watched across Nation

 Allu Arjun Beats Giants: Pushpa2 Becomes Most Watched across Nation




Icon Star Allu Arjun has become a sensation in every home across the nation with his iconic character, Pushpa Raj. The epic character continues to make a lasting impact. After setting the big screen ablaze with its thunderous box office performance and collecting a jaw-dropping 1800 crore worldwide, the film's Hindi version recently had its world television premiere.


As we all know, Allu Arjun enjoys massive stardom among Hindi-speaking audiences. As expected, the film has now claimed dominance on television, delivering a staggering 5.1 TVR rating and reaching a massive 5.4 crore viewers. This feat makes it the most-watched televised film event of the year, even surpassing some of India’s biggest blockbusters like Stree 2, Pathaan, Animal, and many more.


Beyond just impressive numbers, what truly stands out is the deep emotional connection and engagement audiences have with the film. Surpassing Bollywood giants and reaching every home across nation with a dubbed release is a remarkable feat, and whether in cinemas or at home, viewers continue to celebrate Allu Arjun’s powerful portrayal of Pushpa Raj.


This record-breaking television premiere marks another significant milestone in Allu Arjun’s career. From winning a National Award to emerging as a symbol of pan-India stardom, Allu Arjun’s legacy only continues to grow stronger with every success.

வார் 2வில் ஹ்ரித்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் இடையிலான மோதலுக்கான

 *'வார் 2வில் ஹ்ரித்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் இடையிலான மோதலுக்கான சரியான கதைக்களத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது '- அயன் முகர்ஜி*



யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வார் 2 .இப்படம்  இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் YRF ஸ்பை யுனிவர்சலில் இது ஆறாவது படமாகும். இந்திய சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரையும் மோத வைப்பதற்காக கதைக்களத்தை  வார்  2 படத்தில் வடிவமைப்பதில், தான் எவ்வாறு முழுமையாக கவனம் செலுத்தினார் என்பதை அயன் முகர்ஜி கூறியுள்ளார் . 


அயன் முகர்ஜி கூறுகையில் , “வார் 2 போன்ற மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தை முன்னெடுத்துச் சென்று அதில் என் சொந்த முத்திரையைப் பதிப்பது ஒரு பெரிய பொறுப்பு. வார் 2 படத்தை இயக்குவதை நான் முதல் படத்திற்கு ஒரு மரியாதை செலுத்தும் வாய்ப்பாகப் பார்த்தேன். இல்லையெனில், இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற உரிமையை ஏற்க முடியாது . மிகப்பெரிய பிளாக்பஸ்டர் தொடருடன் இணையும் போது நீங்கள் விளையாட்டு தனமாக இருக்க முடியாது. ஒருவர் ஏற்கனவே உருவாக்கிய படத்தை எடுத்துக்கொண்டு, பின்னர் அந்த படத்தின் ரசிகர்களையும், நம் நாட்டின் இந்த பிரம்மாண்டமான சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்களையும் ஒரு புதிய பயணத்தில் செல்ல வைக்க வேண்டும்,ஒரு இயக்குநராக, நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த உணர்வை வழங்குவதற்காக நான் முழுமையாக என்னை அர்ப்பணித்தேன்.”


அவர் மேலும் கூறுகையில் , “வார் 2 படத்தின் அனைத்து பார்வையாளர்களின் திரையரங்க அனுபவத்தை உயர்த்துவதற்காக நிறைய திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளை உருவாக்குவதிலும், கதைக்களத்தையும் மோதலையும் வடிவமைப்பதிலும் அதிக நேரம் செலவிடப்பட்டது.இது ஹ்ரித்திக் ரோஷனுக்கும், என்.டி.ஆருக்கும் இடையேயான மோதலை உருவாக்குவதற்கு தேவையாக இருந்தது.”


வார் 2 இந்திய சினிமாவின் வலிமையைக் கொண்டாடும் ஒரு படம். ஏனெனில் இப்படம் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரை வேறு எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு அற்புதமான தியேட்டர் அனுவத்தை ரசிகர்களுக்கு தர காத்திருக்கிறது. 


இந்த இரண்டு பெரிய நடிகர்களும் இந்திய சினிமாவிற்காக ஒன்றினைந்து நடித்துள்ளனர் . இதனால் அவர்களின் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதில் என்ன மாதிரியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் . மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் அமர்ந்திருக்கும்போது அவர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஒவ்வொரு நொடியும் யோசித்துக்கொண்டிருக்கிறோம் .” என இவ்வாறு தெரிவித்துள்ளார் .


வார் 2 படம் இந்தாண்டு வருகின்ற ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது  .

Crafting the storyline needed to mount the face off between Hrithik Roshan & NTR took most

 *‘Crafting the storyline needed to mount the face off between Hrithik Roshan & NTR took most amount of time!’: Ayan Mukerji* 



Yash Raj Films’ War 2, directed by Ayan Mukerji, is the most awaited film of 2025. The massive pan-India action spectacle produced by Aditya Chopra, is the sixth film from the fabled YRF Spy Universe franchise, that has only delivered blockbusters. Ayan reveals how he focussed entirely on crafting the storyline of War 2 because he wanted a conflict that was big enough to pit two icons of Indian cinema, Hrithik Roshan against NTR. 


Ayan says, “It is a huge responsibility to take forward a hugely loved franchise like War and leave your own mark on it. I saw directing War 2 as a relishing opportunity to give a hat-tip to the first film. You can’t have fun otherwise while coming on board such a huge blockbuster franchise. One has to take what has been set and then make the fans of the film and the fans of these gigantic superstars of our country go on a journey that is new, that hopefully leaves them hungry for more. As a director, I have to be honest, I immersed myself into delivering this feeling.”


He adds, “Everything about War 2 has been crafted with a lot of planning to elevate the theatrical experience of the audience. The maximum time spent was on the action set pieces and crafting the storyline and the conflict which was needed to mount the face off between Hrithik Roshan and NTR.”


Ayan calls War 2 a film that celebrates the might of Indian cinema as it brings Hrithik and NTR together for a jaw-dropping, adrenaline pumping theatrical experience like no other. 


The director says, “War 2 is truly the coming together of Indian cinema with these two huge actors joining forces. We were aware of the expectations this pairing would set in the minds of their fans and the audience and every second was spent thinking of how to give them an experience of a lifetime when they sit in the theatres.”


War 2 is scheduled to hit theatres worldwide on August 14, 2025.

Friday, 20 June 2025

28 YEARS LATER Horror Releasing around the world from

 28 YEARS LATER

Horror

Releasing around the world from June 18, 2025





Academy Award®-winning director Danny Boyle and Academy Award®-nominated writer Alex Garland reunite for 28 Years Later, a terrifying new "auteur horror" story set in the world created by 28 Days Later. It’s been almost three decades since the rage virus escaped a biological weapons laboratory, and now, still in a ruthlessly enforced quarantine, some have found ways to exist amidst the infected. One such group of survivors lives on a small island connected to the mainland by a single, heavily-defended causeway. When one of the group leaves the island on a mission into the dark heart of the mainland, he discovers secrets, wonders, and horrors that have mutated not only the infected but other survivors as well.


Directed by: Danny Boyle

Written by: Alex Garland


Cast: Jodie Comer

Aaron Taylor-Johnson

Jack O'Connell 

Alfie Williams

and Ralph Fiennes

Sony Pictures Release

28 ஆண்டுகளுக்குப் பிறகு திகில்

 28 ஆண்டுகளுக்குப் பிறகு

திகில்

ஜூன் 18, 2025 முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது





அகாடமி விருது® வென்ற இயக்குனர் டேனி பாயில் மற்றும் அகாடமி விருது®-க்கு பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர் அலெக்ஸ் கார்லண்ட் ஆகியோர் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறார்கள், இது 28 நாட்கள் கழித்து உருவாக்கிய உலகில் அமைக்கப்பட்ட ஒரு திகிலூட்டும் புதிய "ஆசிரியர் திகில்" கதை. ரேஜ் வைரஸ் உயிரியல் ஆயுத ஆய்வகத்திலிருந்து தப்பித்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகிவிட்டன, இப்போதும், இரக்கமின்றி அமல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலில், சிலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அத்தகைய உயிர் பிழைத்தவர்களின் ஒரு குழு, ஒரு ஒற்றை, பெரிதும் பாதுகாக்கப்பட்ட தரைப்பாலம் மூலம் பிரதான நிலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய தீவில் வாழ்கிறது. குழுவில் ஒருவர் தீவை விட்டு பிரதான நிலத்தின் இருண்ட இதயத்திற்குள் ஒரு பயணத்தில் செல்லும்போது, ​​பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்ல, மற்ற உயிர் பிழைத்தவர்களையும் மாற்றியமைத்த ரகசியங்கள், அதிசயங்கள் மற்றும் திகில்களைக் கண்டுபிடிப்பார்.


இயக்கியவர்: டேனி பாயில்


எழுத்தாளர்: அலெக்ஸ் கார்லண்ட்


நடிகர்கள்: ஜோடி கோமர்


ஆரோன் டெய்லர்-ஜான்சன்


ஜாக் ஓ'கானல்


ஆல்ஃபி வில்லியம்ஸ்


மற்றும் ரால்ப் ஃபியன்னெஸ்

Sony Pictures Release

Kubera Movie Review

Kubera Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kubera படத்தோட review அ தான் பாக்க போறோம். Dhanush, Nagarjuna, Rashmika Mandanna, Jim Sarbh, Dalip Tahil, Sayaji Shinde னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. sekhar kammula தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம். 



jim sarbh தான் neeraj mitra வா நடிச்சிருக்காரு. இவரு ஒரு powerful ஆனா businessman . bay of bengal ல ஒரு மறைஞ்சு இருக்கற oil reserve அ கண்டு பிடிக்குறாரு. இதை மிக பெரிய profit அ மாத்துறதுக்காக பெரிய பெரிய தலைவர்களோட ஒரு secret mission அ plan பண்ணுறாரு. இதை ஒழுங்கா செயல்படுத்துறதுக்காக deepak அ நடிச்சிருக்க nagarjuna கிட்ட help கேட்குறாரு. இவரு ஒரு காலத்துல ஒரு நேர்மையான CBI officer அ வேலை பாத்துருப்பாரு ஆனா தப்பான வழிக்கு support பன்னதனால இவரு மேல ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி jail ல அடைச்சு வச்சிருப்பாங்க. neeraj ஓட வேலை செய்ய பிடிக்கலானாலும் வேற வழியே இல்லாம deepak help பண்ணுவாரு. இதை ரொம்ப silent அ முடிக்கறதுக்காக பிச்சைக்கார்களா தேடி கண்டுபிடிச்சி அவங்களுக்கே தெரியாம அவங்கள use பண்ணுறாங்க. இப்படி இந்த கூட்டத்துல இருக்கற ஒரு ஆளு தான் deva வா நடிச்சிருக்கற dhanush . இவரு ரொம்ப நல்லவரு அதே சமயம் வெகுளி ஆனவரும் கூட. ஒரு கட்டத்துக்கு மேல தன்னை கொல்ல போறாங்க னு தெரிஞ்ச ஒடனே தேவா தப்பிச்சு ஓடுறாரு. அப்படி மறைஞ்சு இருக்கும் போது தான் sameera வா நடிச்சிருக்க rashmikka mandanna வா சந்திக்கறாரு. deepak யும் neeraj யும் deva வை கண்டுபிடிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


deva வை நடிச்சிருக்க dhanush அப்படியே இந்த character ல மூழ்கிட்டாரு தான் சொல்லணும் . வெகுளித்தனமா , கருணைஉள்ளத்தோட இருக்கற ஒரு சாதாரண பிச்சைக்காரனை நடிச்சி அசத்திட்டாரு தான் சொல்லணும். இவரோட mannerisms, dialouge delivery எல்லாமே அவ்ளோ பக்கவா இருந்தது. nagarjuna ஒரு gray shaded character அ நடிச்சிருக்காரு. இவரை அதுக்காகா கெட்டவர் னு சொல்லிடமுடியாது, சந்தர்ப்ப சூழ்நிலை வேற வழியே இல்லாம தான் இவரு இப்படி நடந்துப்பாரு. ஆரம்பத்துல நேர்மையான officer அ இருக்கறதும் சரி தப்பான விஷயத்துக்கு துணை போகும் போது இவரு கம்மிக்க்ர vulnerability எல்லாமே ரொம்ப அழகா வெளிப்படுத்தி இருந்தாரு. dhanush க்கும் nagarjuna வவும் ஒண்ணா வர எல்லா scenes யுயுமே அவ்ளோ super அ இருந்தது. jim sarbh வில்லன் அ படத்துல கம்மியான நேரத்துல வந்தாலும் இவரோட cunningness எல்லாமே அசத்தல் அ இருந்தது. rashmika mandanna ரொம்ப simple ஆனா ஒரு பொண்ண நடிச்சிருக்காங்க. இவர்களுக்கும் dhanush க்கும் நடுவுல இருக்கற chemistry நல்ல இருந்தது. இந்த படத்தோட மிக பெரிய highlight scene ந அது கண்டிப்பா climax க்கு முன்னாடி வர scenes தான். 


இப்போ இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது sekhar கம்முலா ஓட direction அ பத்தி சொல்லியே ஆகணும். ஒரு bold ஆனா கதைக்களம் தான் எடுத்துருக்காரு அதோட heroes ஓட gray side யும் காமிச்சிருக்கறது ரொம்ப வித்யாசமா இருந்தது. அதோட characters ஓட எமோஷன்ஸ் யும் audience னால relate பண்ணிக்க முடிஞ்சது னு கூட சொல்லலாம். அடுத்தது niketh bommireddy ஓட cinematography super அ இந்த படத்துக்கு set ஆச்சு. ஒரு சாதாரண தெரு ல நடக்கற விஷயத்துல இருந்து oil reservoir ல நடக்கற விஷயங்கள் வரைக்கும் அவ்ளோ detailed அ இருந்தது. karthika srinivas ஓட editing super அ இருந்தது. first  half  அ மட்டும் இன்னும் கொஞ்சம் tight பன்னிருந்த நல்ல இருக்கும். art department ஓட settings எல்லாமே ரொம்ப realistic அ இருந்தது. இவங்களுக்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்தே ஆகணும். கடைசியா devi sri prasad ஓட bgm and music ரெண்டுமே fantastic அ இருந்தது. intense ஆனா scenes க்கு எல்லாமே bgm super அ இருந்தது. 


ஏழ்மை, அதிகாரம், survival னு இந்த மூணு விஷயங்களை நோக்கி தான் இந்த படம் நகருது. ஒரு social realistic ஆனா கதையை human emotions ஓட சொல்லிருக்கற ஒரு super ஆனா கதைக்களம் தான் kubera . உங்க family and friends ஓட சேந்து பாக்க வேண்டிய super ஆனா திரைப்படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு

 *"வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்!* 








நேஷனல், 18 ஜூன் 2025: யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 


மூச்சடைக்க வைக்கும் பிர்மமாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது.


எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். 


இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.


ஜுராசிக் தொடரின் மீதான தனது காதலையும், அது தனது குழந்தைப் பருவத்தில் எவ்வாறு பெரும் பங்கு வகித்தது என்பதையும் பற்றி வரவிருக்கும் 'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்'தில் டாக்டர் ஹென்றி லூமிஸாக நடித்திருக்கும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜொனாதன் பெய்லி பகிர்ந்து கொள்கிறார். “எனக்கு ஐந்து வயதாகும் போது, என் குடும்பத்தினர் என்னை ஜுராசிக் பார்க் படத்திற்கு அழைத்து சென்றனர். இது ஒருவித ஆன்மீக உணர்வைக் கொடுக்கும். ஏனெனில், இது கற்பனை மட்டுமல்ல. நவீன உலகின் கடந்த காலத்துக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பற்றி பேசியது" என்றார். 


மேலும், "கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானது.  ஸ்பீல்பெர்க் மற்றும்  ஜான் வில்லியம்ஸின் இசை என்பதால் என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை" என்றார். 


ஜுராசிக் வேர்ல்ட் - புதிய உலகம் வரும் ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது!



Jurassic World: Rebirth | Official Trailer 2


JURASSIC WORLD: REBIRTH | Official Hindi Trailer 2


JURASSIC WORLD: REBIRTH | Official Tamil Trailer 2


JURASSIC WORLD: REBIRTH | Official Telugu Trailer 2