Featured post

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் 'மேரிகோல்ட்

*டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் 'மேரிகோல்ட்'* *திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில...

Thursday, 13 August 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் 'மேரிகோல்ட்

*டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் 'மேரிகோல்ட்'*






*திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் கதையில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணைய, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்*


டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளர் ஆவார். 


திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் விறுவிறுப்பான கதையான இதில் 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். ரக்ஷன் மற்றும் நம்ரிதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இத்திரைப்படம் அமைகிறது.  


இத்திரைப்படத்தில் சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ஆர். நிர்மல் கையாளுகிறார். கிரியேட்டிவ் புரொடியூசர்: சஞ்ஜெய் விஜய் ராகவண், கலை: ஜி. துரைராஜ், நடனம்: தீபு எம், ஸ்டண்ட்: அபிஷேக் ஸ்ரீனிவாசன். 


டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, சுகன்யா, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கும் 'மேரிகோல்ட் திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


---


*Trident Arts announces 'Mary Gold', produced by R. Ravindran and directed by Priyan Rajendran*


*Prabhu and Sukanya reunite on screen after 31 years; Rakshan and Namritha play pivotal roles in a story set against the backdrop of Tirunelveli and Thoothukudi*


Trident Arts has announced its 21st production, titled 'Mary Gold'. The film is produced by R. Ravindran and directed by Priyan Rajendran. Sudharsan is the Co-Producer. 


Set against the backdrop of Tirunelveli and Thoothukudi, 'Mary Gold' is an engaging and fast-paced story that marks the reunion of the popular on-screen pair Prabhu and Sukanya after 31 years. The duo had previously starred together in films such as 'Senthamizh Paattu', 'Chinna Mappillai' and 'Mr. Madras'. Rakshan and Namritha also play important roles in the film.


Set in southern Tamil Nadu, the film revolves around the intriguing rivalry between characters from Tirunelveli and Thoothukudi, while exploring their distinctive lifestyles. At its heart, 'Mary Gold' is an emotional family drama with an engaging narrative.


The film features Singampuli, Vadivukkarasi, Imaan Annachi, Vivek Prasanna, Stalin and Vadivel Murugan in important roles.


Mallikarjun is the cinematographer, while Siddhu Kumar composes the music. R. Nirmal handles the editing. The technical crew includes G. Durai Raj as Art Director, Deepu M as Choreographer and Abishek Srinivasan as Stunt Director. Sanjay Vijayraghavan is the Creative Producer. 


Produced by R. Ravindran under the Trident Arts banner and directed by Priyan Rajendran, 'Mari Gold' stars Prabhu, Sukanya, Rakshan and Namritha in the lead roles. Further announcements regarding the film will be released officially soon.


***

Dulquer Salmaan’s ‘I Am Game’ Set for September 3 Release; Big Global Release Planned

Dulquer Salmaan’s ‘I Am Game’ Set for September 3 Release; Big Global Release Planned*




Dulquer Salmaan’s highly anticipated film ‘I Am Game’ has a new release date. The film is set to hit theatres worldwide on September 3, 2026, in what is expected to be a massive global release. The film was initially announced as an Onam release on August 20, but the release has now been pushed by two weeks to facilitate a much wider theatrical rollout. Produced by Dulquer Salmaan’s Wayfarer Films, this big-budget fantasy thriller is touted as one of the biggest films of Dulquer’s career. The film is directed by Nahas Hidhayath.


Produced by Dulquer Salmaan and Jom Varghese under the Wayfarer Films banner, ‘I Am Game’ has a screenplay written by Sajeer Baba, Ismail Abu Bakr and Bilal Moidu. The dialogues have been penned by Sajeer Baba, Adarsh Sukumaran and Shabas Rasheed.


Dulquer Salmaan has announced that the film, which has generated tremendous anticipation among fans and moviegoers, will now arrive as an even bigger theatrical release. In a social media post, he stated that the release was being moved to September 3 to take the film to more markets and reach a larger global audience. The actor also confirmed that ‘I Am Game’ will have a pan-Indian release in Malayalam, Tamil, Telugu, Hindi and Kannada, bringing the film to audiences across the country. Dulquer Salmaan and Wayfarer Films stated that the date change was made to ensure that the mega-scale theatrical experience receives a release that matches the film’s enormous canvas and scale.


The film’s trailer and first song, released earlier, have already received an overwhelming response from audiences. The trailer was released in Malayalam, Tamil, Telugu, Hindi and Kannada and generated significant pan-Indian attention. The first song has also emerged as a major hit. The trailer, which kept viewers hooked from start to finish, offered glimpses of spectacular visuals, high-energy action and thrilling chase sequences, promising a grand theatrical experience. The film is expected to be a stylish fantasy thriller unlike anything Malayalam cinema audiences have seen before. Dulquer Salmaan has been presented in an extremely stylish and mass-oriented avatar, adding to the excitement surrounding the project.


Shot across more than 100 locations across South India, ‘I Am Game’ is gearing up to become one of the biggest releases in Malayalam cinema. Marking Dulquer Salmaan’s 40th film, this big-budget fantasy thriller features an impressive ensemble cast including Antony Varghese, Tamil actor-filmmaker Mysskin, Kaayadu Lohar, Kathir, Parth Tiwari and Tamil actress Samyuktha Viswanathan, among others.


Zee Music has acquired the music rights to the film. The music composed by Jakes Bejoy and the action sequences choreographed by Anbariv Masters are expected to be among the major highlights, judging by the trailer and the first song. ‘I Am Game’ is also the next production from Wayfarer Films following the blockbuster success of Lokah: Chapter 1 - Chandra. The film marks director Nahas Hidhayath’s next project after the blockbuster ‘RDX’.


Line Producer: Bibin Perumbilly, Cinematography: Jimshi Khalid, Music: Jakes Bejoy, Editing: Chaman Chacko, Production Heads: Sujoy James, Devadevan, Production Designer: Ajayan Chalissery, Action: Anbariv Masters, Makeup: Ronex Xavier, Costume: Mashar Hamsa, Production Controller: Deepak Parameswaran, Associate Director: Rohith Chandrasekhar, Lyrics: Manu Manjith, Vinayak Sasikumar, VFX: Thoufeeq (Eggwhite), Poster Design: Ten Point, Sound Design: Sync Cinema, Sound Mix: Kannan Ganapathy, Stills: SBK, Marketing Head: Vijith Viswanathan.

துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது –

 *துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!*




துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.


துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.


ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தை இன்னும் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவமாக கொண்டு வருவதற்காக செப்டம்பர் 3-ம் தேதிக்கு வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.


மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாகும் என்றும் துல்கர் சல்மான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளவில் அதிகமான ரசிகர்களை சென்றடையும் வகையில் இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான டிரெய்லர், பான்-இந்தியா அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள டிரெய்லரில் பிரம்மாண்டமான காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் மற்றும் பரபரப்பான சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக “ஐ ம் கேம்” இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலிஷான மற்றும் மாஸ் அவதாரத்தில் தோன்றியுள்ளார்.


தென்னிந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.


இந்த பிரம்மாண்ட படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் இசை உரிமையை Zee Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். டிரெய்லர் மற்றும் முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது, இசையும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹைலைட்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘Lokah: Chapter 1 - Chandra’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ‘ஐ ம் கேம்’. அதேபோல், பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘RDX’-க்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும்.


தொழில்நுட்பக் குழு


லைன் புரொட்யூசர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சாமன் சாக்கோ

புரொடக்‌ஷன் ஹெட்ஸ்: சுஜாய் ஜேம்ஸ், தேவதேவன்

புரொடக்‌ஷன் டிசைனர்: அஜயன் சாலிசேரி

ஆக்ஷன்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா

புரொடக்‌ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஸ்வரன்

அசோசியேட் இயக்குநர்: ரோஹித் சந்திரசேகர்

பாடல்கள்: மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX: தௌஃபீக் (Eggwhite)

போஸ்டர் டிசைன்: Ten Point

சவுண்ட் டிசைன்: Sync Cinema

சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: SBK

மார்க்கெட்டிங் ஹெட்: விஜித் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு - யுவராஜ் 


‘I Am Game’ – செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!


*

என் தாத்தா மாதிரி நானும் தெருகூத்து நாடகம் ஆடுவேன்.

 “என் தாத்தா மாதிரி நானும் தெருகூத்து நாடகம் ஆடுவேன்..”










நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன்,

ராம்குமாரின் இரண்டாவது மகன் 

தர்ஷன் கணேசன் 

நாயகனாக அறிமுகம்!

பலத்த எடிபார்ப்புடன் வரும் 

“லெனின் பாண்டியன்”.


அவருடன்  சிறிய உரையாடல்!!


*“என் தாத்தாவின் பெயரைச் சுமந்து நடப்பதைவிட, அவர் பெருமைப்படும் அளவுக்கு என்னுடைய சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும்” ; நடிகர் தர்ஷன் கணேசன்* 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த தலைமுறை நடிகராக அறிமுகமாகிறார் தர்ஷன் கணேசன்,. அவர் ஹீரோவாக முதன்முறையாக அறிமுகமாகும் படம்‘லெனின் பாண்டியன்’ !


முதலில் என்னை நம்பி.. என்னை அறிமுகப்படுத்திய சத்திய ஜோதி தியாகராஜன் சாருக்கு என்  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

படத்தில் எனக்கு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம். 

“இது ஒரு கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நான் நகரில் பிறந்து வளர்ந்ததால், எனது நடிப்பையும் திறமையையும் பயிற்சியையும் வெளிப்படுத்த இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் இருக்கும் என்று நினைத்தேன். கதை மானாமதுரை கிராமத்தில் நடப்பதால் ஒரே ஊரில் போய் ஒரு மாதம்  தங்கி இருந்து அங்கு உள்ளவர்களின் வாழ்க்கையைடும், உணர்வுகளையும், உடல் மொழிகளையும் தெரிந்து கொண்டேன். மக்களைக் கவனித்து அவர்களைப் பற்றி நிறையப் படித்தேன், அவர்களுடன் பழகினேன், அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டேன். நான் ஒரு காவல் நிலையத்திற்குச் சென்று அங்கே சுமார் இரண்டு நாட்கள் அமர்ந்திருந்தேன்... அது கண்களைத் திறக்கும் ஒரு அனுபவமாக இருந்தது. 


என்னுடைய தாத்தா தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு ஒரு இலக்கணத்தை வகுத்தவர். நான் இந்தக் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருப்பதுடன், நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது நூறு சதவீத உழைப்பையும் நேர்மையையும் கொடுப்பதுதான். நான் கடினமாக உழைத்தால், மக்கள் என் வேலையை விரும்பினால், , "இந்தப் பையன் இந்தக் குடும்பத்திலிருந்து வந்தவன் மட்டுமல்ல, தன் வேலையைச் சரியாகச் செய்கிறான்" என்று அவர்கள் தானாகவே எனக்கு ஆதரவு தர முன் வருவார்கள்..


நான் தனியாக நின்று எனது சொந்த நடிப்பு பயணத்தை உருவாக்க முயற்சிப்பதுதான் எனது தாத்தாவுக்கு நான் செய்யும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும். எனது தாத்தா மற்றும் பிரபு சித்தப்பாவிடமிருந்து எனது சொந்த வேலையைப் பற்றி எங்களால் முடிந்தவரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். 


நான் ஆரம்பத்திலேயே தெருக்கூத்து செய்ய ஆரம்பித்தேன்... அதுவும் மராத்தி தெருக்கூத்து. என் தாத்தாவும் கம்பளத்தார் கூத்து எனப்படும் தெருக்கூத்துடன் தான் பயணத்தைத் தொடங்கினார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி, தாத்தா ஒரு பன்முகக் கலைஞர்.

 நீங்கள் நாடகம் செய்யும்போது, அது உங்களுக்கு அனைத்து வகையான நடிப்பையும் கற்றுக்கொடுகிறது, என்பார். மேலும், தெருக்கூத்து, யதார்த்த நாடகம், மற்றும் பாணி நாடகம் உள்ளது, அங்கு நீங்கள் பாடி நடிக்க வேண்டும், மற்றும் நடனமாட வேண்டும், என்பார். 


ஒரு நடிகராக நான் பயிற்சியைப் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை, ஒரு முழுமையான நடிகர் நடிக்க, பாட மற்றும் நடனமாடத் தெரிந்திருக்க வேண்டும். நான் என் தாத்தாவின் நடிப்பின் தீவிர ரசிகன். ஏனென்றால், அவரிடம் இருந்த வீச்சு மற்றும் பன்முகத்தன்மை இணையற்றது. ஒரு நடிகராக அவர் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டுகள் வேலை செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கற்பனை செய்து பாருங்கள், நடிப்புத் திறன் மற்றும் அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு அவருக்கு இருந்தது என்றால் அவர் அதெல்லாம் செய்திருக்க வேண்டும்..


சில பேர் நடிப்பு என்பது உள்ளார்ந்த திறமை என்று கருதுகிறார்கள்; சிலரோ வேறு எந்த கலை போலவும் இல்லை, நீங்கள் பயிற்சி செய்யும்போது அதை மெருகூட்டுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை இது இரண்டின் கலவை என்று நான் நினைக்கிறேன். திறமையை விட, நீங்கள் நடிப்பு என்ற கலையின் மீது விருப்பம் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் போன்ற ஒரு ஈர்ப்பு உங்களிடம் இருக்க வேண்டும், மேலும் அதற்காகப் பயிற்சி செய்ய வேண்டும். நடிப்புக்கு ஒழுக்கம் தேவை. நடிப்பு என்பது கற்பிக்கப்படுவதைக் காட்டிலும் கற்றுக் கொள்ளப்படக்கூடியது என்று நான் நினைக்கிறேன். உங்களிடம் ஒழுக்கம் இருந்து, அதைப் பயிற்சி செய்தால் அதைக் கற்றுக்கொள்ளலாம்.


“லெனின் பாண்டியன்” எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தின் மூலம் நான் என்னுடைய நடிப்பை நிரூபிக்க வேண்டும் என்று உழைத்திருக்கிறேன் . சிவாஜி கணேசனின் பேரன் என்ற அடையாளம் என்னுடன் எப்போதும் இருக்கும். அதை நான் மறுக்கவும் விரும்பவில்லை. ஆனால் அந்த அடையாளத்திற்குள் மட்டும் நான் இருக்கவும் விரும்பவில்லை. என் தாத்தாவின் பெயரைச் சுமந்து நடப்பதைவிட, அவர் பெருமைப்படும் அளவுக்கு என்னுடைய சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய இலக்கு” என்கிறார் தர்ஷன் கணேசன்.

Mass Maharaja Ravi Teja, Shiva Nirvana, Mythri Movie Makers’ Irumudi Telugu-Tamil Trailer Released, Promises

Mass Maharaja Ravi Teja, Shiva Nirvana, Mythri Movie Makers’ Irumudi Telugu-Tamil Trailer Released, Promises To Be A Rollercoaster Ride Of Emotions

 


Mass Maharaja Ravi Teja’s much-awaited film Irumudi is steadily building anticipation ahead of its theatrical release on August 21st. Directed by Shiva Nirvana and produced by Mythri Movie Makers, the film has already generated considerable interest with its glimpse and songs, offering audiences a peek into its world and characters. The makers have now taken the excitement a notch higher with the theatrical trailer, which was unveiled today in Telugu and Tamil languages.

 

For the first time, the trailer gives a clear picture of the film’s core storyline. Ravi Teja plays a middle-class family man who takes great care of his wife and daughter. His affection, however, extends beyond his own family, as he treats every girl in his village like his own daughter. When something happens to any of them, his protective instinct turns into uncontrollable aggression.

 

His biggest weakness is his addiction to alcohol. At the same time, he wears the Ayyappa mala every year, transforming into a completely different and peaceful person during that period. When a series of girls are mysteriously killed in the village, the central question is whether he can put an end to the violence.

 

Shiva Nirvana blended family emotions, action, suspense and thriller elements into an unusual family entertainer. The combination itself promises a distinctive experience. A particularly striking moment in the trailer is when Ravi Teja’s daughter admits that even she is scared of seeing her father’s aggression, underlining the emotional complexity of the protagonist and showcasing Shiva Nirvana’s ability to create powerful family moments.

 

Ravi Teja owns the character in every frame. He looks perfectly suited to the role of a caring family man who can turn intensely aggressive when confronted with injustice. His alcohol addiction adds another layer to the character, while the contrast between his aggressive nature and the calmness he embraces after wearing the Ayyappa mala makes the character even more intriguing.

 

Priya Bhavani Shankar is impressive as Ravi Teja’s wife, who yearns for a peaceful family life, while Baby Nakshatra brings warmth and emotion to the father-daughter relationship. Sai Kumar makes an impact as the Guru Swamy, and Swasika has a substantial role with negative shades.

 

Mythri Movie Makers mounted the film on a right budget without compromising on production values. Cinematographer Vishnu Sarma captures the rustic setting with authenticity, giving the film a grounded visual texture. GV Prakash Kumar’s powerful background score elevates the intensity of the trailer and adds considerable weight to the emotional and action-packed moments. The brief inclusion of the highly anticipated Mallepula Pallaki song towards the end delivers goosebumps. The technical team also includes production designer Sahi Suresh and editor Prawin Pudi.

 

The theatrical trailer is a well-cut package that effectively presents the film’s family emotions, action, suspense, and thriller elements in the right proportions. With nine more days to go for its theatrical release, Irumudi has certainly raised expectations with its trailer and set the bar high for what promises to be a distinctive family entertainer. It indeed promises to be a rollercoaster ride of emotions, keeping audiences engaged from start to finish.

 

Cast: Mass Maharaja Ravi Teja, Priya Bhavani Shankar, Sai Kumar, Baby Nakshathra, Ajay Ghosh, Ramesh Indira, Swasika, Meesala Lakshman, Rajkumar Kasireddy, Ramana Bhargav, Kishore Kancherapalem, Karthik Adusumalli, and Mahesh

 

Technical Crew:

Story, Screenplay, Dialogues, Direction: Shiva Nirvana

Producers: Naveen Yerneni and Y Ravi Shankar

Banner: Mythri Movie Makers

Music: GV Prakash Kumar

DOP: Vishnu Sarma

Production Designer: Sahi Suresh

Editing: Prawin Pudi

Script Co-Ordinator: Naresh babu P

Co-Director: Suresh

Make-Up: Srinivas Raju

Costumer Designer: Rajesh

Poster Designer: Yellow Tooths

PRO: Vamsi Shekar

Marketing: First Show

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி

 *மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!* 



*உணர்வுப்பூர்வமான ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு தயாராகுங்கள்!*


மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் திரையரங்க டிரெய்லர்  தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று வெளியானது.


ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளை மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்ளும் அவர், தனது குடும்பத்தினரிடம் மட்டுமின்றி தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தனது மகளாகவே கருதி அன்பு செலுத்துகிறார். அவர்களில் யாருக்காவது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாக்க ஆக்ரோஷத்தின் எல்லைக்கே செல்ல தயாராக இருக்கிறார் என படத்தின் மையக்கதையை தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் தெளிவாகக் காட்டுகிறது. 


அதேவேளையில், மதுப்பழக்கம் அவரது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ஆண்டுதோறும் அவர் ஐயப்ப மாலை அணிந்து விரதம் மேற்கொள்கிறார். அந்த காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட, அமைதியான மனிதராக மாறுகிறார். இந்நிலையில், கிராமத்தில் அடுத்தடுத்து சில பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரவி தேஜாவால் முடிந்ததா என்பதே படத்தின் கதை.


குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களை சிவா நிர்வாணா வித்தியாசமான முறையில் இணைத்து ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார்.  ரவி தேஜாவின் மகள் தனது தந்தையின் கோபத்தைப் பார்த்து தனக்கே பயமாக இருக்கிறது என்று கூறும் தருணம் டிரெய்லரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கதாநாயகனின் உணர்வுப்பூர்வமான சிக்கலான தன்மையை இந்தக் காட்சி அழுத்தமாக வெளிப்படுத்தும் அதேசமயம், குடும்ப உணர்வுகளை வலுவாக காட்சிப்படுத்துவதில் சிவா நிர்வாணாவின் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது.


ஒவ்வொரு காட்சியிலும் ரவி தேஜா கதாபாத்திரத்தை முழுமையாக தன்னுடையதாக மாற்றியுள்ளார். அன்பான குடும்பத் தலைவராகவும், அநீதியை எதிர்கொள்ளும்போது தீவிரமான ஆக்ரோஷம் கொண்ட மனிதராகவும் அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். மதுவுக்கு அடிமையான அவரது கதாபாத்திரம் கதைக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது. இதுமட்டுமல்லாது, அவரது ஆக்ரோஷமான குணத்திற்கும், ஐயப்ப மாலை அணிந்த பிறகு அவர் வெளிப்படுத்தும் அமைதியான குணத்திற்கும் இடையேயான முரண்பாடு கதாபாத்திரத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘மல்லெபுல பல்லக்கி’ பாடலின் சிறிய பகுதி டிரெய்லரின் இறுதியில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.


அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கும் ரவி தேஜாவின் மனைவி கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர் சிறப்பாக நடித்துள்ளார். தந்தை, மகள் உறவின் அன்பை பேபி நக்‌ஷத்ரா அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.சாய் குமார், குரு சுவாமியாகவும், நடிகை ஸ்வாசிகா எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 


குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த திரையரங்க டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்னும் 9 நாட்களில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘இருமுடி’ தனது டிரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில், உணர்வுகளின் ரோலர்கோஸ்டர் பயணமாக ‘இருமுடி’ அமையும் என டிரெய்லர் உறுதியளிக்கிறது.


*நடிகர்கள்:* மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசலா லக்ஷ்மண், ராஜ்குமார் கசிரெட்டி, ரமண பார்கவ், கிஷோர் காஞ்சேரபாலெம், கார்த்திக் அடுசுமல்லி மற்றும் மகேஷ்.

 

*தொழில்நுட்பக்குழு விவரம்:*


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சிவா நிர்வாணா,

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா,

தயாரிப்பு வடிவமைப்பு: சாஹி சுரேஷ்,

படத்தொகுப்பு: பிரவீன் புடி,

ஸ்கிரிப்ட் ஒருங்கிணைப்பாளர்: நரேஷ் பாபு பி,

இணை இயக்குநர்: சுரேஷ்,

மேக்கப்: ஸ்ரீனிவாஸ் ராஜு,

ஆடை வடிவமைப்பு: ராஜேஷ்,

போஸ்டர் வடிவமைப்பு: யெல்லோ டூத்,

மக்கள் தொடர்பு: வம்சி சேகர்

மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

 *அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  டீசர் வெளியீடு*




அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அன்பில் அவன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.


ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன்பில் அவன்' திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி-  அசோக் செல்வன் - அபிநயா செல்வம்-  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


இத்திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் தருணத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம்- கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசுகையில்,


''ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு நல்லதொரு கதைக்காக பொறுமையுடன் காத்திருந்தோம். இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தக் கதையை எங்களிடம் சொன்னதும் எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அசோக் செல்வனும் எங்களுக்கு முழு நம்பிக்கையும், ஒத்துழைப்பும் அளித்தார்.


இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து செப்டம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இன்று முதல் இப்படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து இருக்கிறோம்.


'ஓ மை கடவுளே' படத்திற்குப் பிறகு எங்களுடைய தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து நல்லதொரு படைப்பாக ரசிகர்களிடம் சமர்ப்பிக்கிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


அசோக் செல்வனுக்கு 'போர் தொழில்', 'ப்ளூ ஸ்டார்' ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து 'அன்பில் அவன்' படத்தை மட்டும்  தேர்ந்தெடுத்து முழு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார்.


இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசுகையில்,


'' என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி.


அன்பில் அவன் - கனவைப் பற்றி பேசும் திரைப்படம். அதிலும் பெண்களின் கனவு -அதற்கான துரத்தல்- அதற்கான மெனக்கடல்- போராட்டம்- சவால்கள்-  ஆகியவற்றை பற்றி உணர்வுபூர்வமாகவும், காதலுடனும் பேசுகிறது.


அழகான விஷுவல்ஸ்- அசோக் செல்வன் & பிரீத்தி முகுந்தன் என இரண்டு  ஃபிரெஷ்ஷான ஸ்கிரீன் ஃபேர்-  திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவினர்- இந்த ஆண்டின் சிறந்த மியூசிக் ஆல்பமாக இந்த படத்தின் பாடல்கள் வரும் அளவிற்கு அற்புதமான இசை - ரசிகர்கள் விரும்பும் வகையிலான திரையரங்க அனுபவம்- என பல அம்சங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.


இந்தப் படம் பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் பிடிக்கும். ஏனெனில் அவர்களின் கனவு பற்றி பேசுகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு பெண்களும் தனக்கான பாய் பிரண்ட்-  ஹஸ்பண்ட் - இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்வார்கள் என நான் நம்புகிறேன்'' என்றார்.


நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்,


'அன்பில் அவன்' என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு. இந்த படத்திற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.


இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும்... திருமணமான பெண்களுக்கும்... பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த சக நடிகரான அசோக் செல்வனுக்கு நன்றி. சக நடிகைக்கு அதிக அளவில் திரை பங்களிப்பை அளித்து, இப்படத்தை உருவாக்கியதற்காக அவருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்,


''என்னுடைய நடிப்பில் ஒரு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது.


சினிமா குடும்பத்தின் முன்னோர்களான பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி.


சில நேரங்களில் சில திரைப்படங்களில் பணியாற்றும் போது அது வெளிவருவதற்காக சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். அதை நாம்  அனுமதிக்கத்தான் வேண்டும்.


ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு வகையில் புதிதாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதற்காக ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று உழைப்பவன் நான்.


இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை. தற்போது சினிமா மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். கதையை விட அந்த கதையை சொல்லும் ஸ்டைல்தான் அதாவது ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதுவும் அந்த கதை-  திரைக்கதை - திரையரங்கத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு என்ன அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றம் ஏற்பட்டதாக எனக்குள் உணர்ந்தேன்.


இந்தப் படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்கு முன் இதே போல் நிறைய கதை வெளியாகி இருக்கிறது. ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே... அது வழங்கக்கூடிய திரையரங்க அனுபவம்... நிச்சயம் புதிதாக ரசிக்கக் கூடியதாக இருக்கும் என முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்.‌


இந்தப் படத்தில் ரசிகர்கள் ரசிக்க கூடிய தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ் நிறைய உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் ரசிக்கக்கூடிய நிறைய மொமென்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.


இது பெண்களை... அவர்கள் படும் கஷ்டங்களை மட்டும் பேசவில்லை. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கிறது. அதிலும் இந்த படத்திற்கு ஒரு பெண் தயாரிப்பாளர் பக்கபலமாக இருந்து தயாரிக்கும் போது.. அதன் வலிமை இன்னும் அதிகமாக இருக்கும்.‌

நான் உறுதியாக சொல்கிறேன் 'அன்பில் அவன்' திரைப்படம் நின்று பேசும்.‌


அன்பில் அவன் - காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பது தான் இப்படத்தின் ஒன் லைன்.


காதல் - புத்திசாலியை முட்டாளாக்கும். சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதை பிரதிபலிக்கும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.


இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படம்- அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் அழகான காதல் கதை.


இந்தப் படத்தை இதுவரை பார்த்தவர்கள் அனைவரும் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பை பாராட்டினார்கள். படம் வெளியான பிறகு ரசிகர்களின் பாராட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.


இந்த படைப்பு கோவிந்த் வசந்தாவின் கான்ஸர்ட். '96 'படத்திற்கு இணையாக இப்படத்தின் இசையும் பேசப்படும்'' என்றார்



https://www.youtube.com/watch?v=Zukiks37bDs

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

 *அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  டீசர் வெளியீடு*









அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அன்பில் அவன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.


ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன்பில் அவன்' திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி-  அசோக் செல்வன் - அபிநயா செல்வம்-  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


இத்திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் தருணத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம்- கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசுகையில்,


''ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு நல்லதொரு கதைக்காக பொறுமையுடன் காத்திருந்தோம். இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தக் கதையை எங்களிடம் சொன்னதும் எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அசோக் செல்வனும் எங்களுக்கு முழு நம்பிக்கையும், ஒத்துழைப்பும் அளித்தார்.


இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து செப்டம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இன்று முதல் இப்படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து இருக்கிறோம்.


'ஓ மை கடவுளே' படத்திற்குப் பிறகு எங்களுடைய தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து நல்லதொரு படைப்பாக ரசிகர்களிடம் சமர்ப்பிக்கிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


அசோக் செல்வனுக்கு 'போர் தொழில்', 'ப்ளூ ஸ்டார்' ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து 'அன்பில் அவன்' படத்தை மட்டும்  தேர்ந்தெடுத்து முழு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார்.


இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசுகையில்,


'' என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி.


அன்பில் அவன் - கனவைப் பற்றி பேசும் திரைப்படம். அதிலும் பெண்களின் கனவு -அதற்கான துரத்தல்- அதற்கான மெனக்கடல்- போராட்டம்- சவால்கள்-  ஆகியவற்றை பற்றி உணர்வுபூர்வமாகவும், காதலுடனும் பேசுகிறது.


அழகான விஷுவல்ஸ்- அசோக் செல்வன் & பிரீத்தி முகுந்தன் என இரண்டு  ஃபிரெஷ்ஷான ஸ்கிரீன் ஃபேர்-  திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவினர்- இந்த ஆண்டின் சிறந்த மியூசிக் ஆல்பமாக இந்த படத்தின் பாடல்கள் வரும் அளவிற்கு அற்புதமான இசை - ரசிகர்கள் விரும்பும் வகையிலான திரையரங்க அனுபவம்- என பல அம்சங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.


இந்தப் படம் பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் பிடிக்கும். ஏனெனில் அவர்களின் கனவு பற்றி பேசுகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு பெண்களும் தனக்கான பாய் பிரண்ட்-  ஹஸ்பண்ட் - இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்வார்கள் என நான் நம்புகிறேன்'' என்றார்.


நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்,


'அன்பில் அவன்' என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு. இந்த படத்திற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.


இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும்... திருமணமான பெண்களுக்கும்... பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த சக நடிகரான அசோக் செல்வனுக்கு நன்றி. சக நடிகைக்கு அதிக அளவில் திரை பங்களிப்பை அளித்து, இப்படத்தை உருவாக்கியதற்காக அவருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்,


''என்னுடைய நடிப்பில் ஒரு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது.


சினிமா குடும்பத்தின் முன்னோர்களான பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி.


சில நேரங்களில் சில திரைப்படங்களில் பணியாற்றும் போது அது வெளிவருவதற்காக சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். அதை நாம்  அனுமதிக்கத்தான் வேண்டும்.


ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு வகையில் புதிதாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதற்காக ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று உழைப்பவன் நான்.


இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை. தற்போது சினிமா மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். கதையை விட அந்த கதையை சொல்லும் ஸ்டைல்தான் அதாவது ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதுவும் அந்த கதை-  திரைக்கதை - திரையரங்கத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு என்ன அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றம் ஏற்பட்டதாக எனக்குள் உணர்ந்தேன்.


இந்தப் படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்கு முன் இதே போல் நிறைய கதை வெளியாகி இருக்கிறது. ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே... அது வழங்கக்கூடிய திரையரங்க அனுபவம்... நிச்சயம் புதிதாக ரசிக்கக் கூடியதாக இருக்கும் என முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்.‌


இந்தப் படத்தில் ரசிகர்கள் ரசிக்க கூடிய தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ் நிறைய உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் ரசிக்கக்கூடிய நிறைய மொமென்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.


இது பெண்களை... அவர்கள் படும் கஷ்டங்களை மட்டும் பேசவில்லை. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கிறது. அதிலும் இந்த படத்திற்கு ஒரு பெண் தயாரிப்பாளர் பக்கபலமாக இருந்து தயாரிக்கும் போது.. அதன் வலிமை இன்னும் அதிகமாக இருக்கும்.‌

நான் உறுதியாக சொல்கிறேன் 'அன்பில் அவன்' திரைப்படம் நின்று பேசும்.‌


அன்பில் அவன் - காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பது தான் இப்படத்தின் ஒன் லைன்.


காதல் - புத்திசாலியை முட்டாளாக்கும். சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதை பிரதிபலிக்கும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.


இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படம்- அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் அழகான காதல் கதை.


இந்தப் படத்தை இதுவரை பார்த்தவர்கள் அனைவரும் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பை பாராட்டினார்கள். படம் வெளியான பிறகு ரசிகர்களின் பாராட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.


இந்த படைப்பு கோவிந்த் வசந்தாவின் கான்ஸர்ட். '96 'படத்திற்கு இணையாக இப்படத்தின் இசையும் பேசப்படும்'' என்றார்



https://www.youtube.com/watch?v=Zukiks37bDs

Bigg Boss Tamil 10: The hunt for the next Bigg Boss contestant begins : here’s everything to know

 *Bigg Boss Tamil 10: The hunt for the next Bigg Boss contestant begins : here’s everything to know*


https://www.instagram.com/reel/Db70SHERrZx/?igsh=MXYyZzVwZ3Fzazc0bg== 


The Bigg Boss Tamil universe is all set to enter a new chapter with a special format that brings everyday people into the spotlight. Ahead of the upcoming tenth season, the franchise is introducing a new platform that gives aspiring contestants from different walks of life an opportunity to showcase their personalities and compete for a chance to enter the Bigg Boss house. From the new format and judging panel to the host, selection process and premiere details, here’s everything you need to know.


*How did the search for contestants begin?*


The journey began with a special audition call to audiences across Tamil Nadu. Vijay Sethupathi featured in a promo inviting people to send in audition videos and explain why they deserved a place in the Bigg Boss universe.The response saw a strong number of entries from across the Tamil audience, setting the selection process in motion and giving aspiring contestants a chance to step beyond the conventional world of celebrity reality television. 


*What is Bigg Boss: The Common Man?*


Bigg Boss: The Common Man is a special show created to discover everyday people with the personality, individuality and presence to make their mark in the Bigg Boss universe. Aspiring contestants from different walks of life get an opportunity to step forward, face a panel of judges and showcase what makes them stand apart.The show gives common people a chance to move closer to becoming part of the Bigg Boss universe, with the selected winner or winners eventually getting the opportunity to enter the Bigg Boss Tamil Season 10 house as contestants.


*Who are the judges?*


The judging panel brings together three familiar faces from the Bigg Boss Tamil universe — Aari Arujunan, Raju Jeyamohan and Oviya.Aari Arujunan, who won Bigg Boss Tamil Season 4, and Raju Jeyamohan, who lifted the trophy in Season 5, will now return to the franchise in a completely different role. Oviya, who became one of the most popular and talked-about contestants following her stint in the very first season of Bigg Boss Tamil, will also be part of the panel. From the judges and host to the launch date - BB common man.docxHaving experienced the pressures, scrutiny and unpredictability of the Bigg Boss house themselves, the trio will now evaluate aspiring contestants hoping to make an impression and earn their place in the main show.


*Who is hosting the show?*


Taking charge as the host is Maya S. Krishnan, another familiar face from the Bigg Boss universe.Known for her energetic personality and ability to drive conversations, Maya will guide contestants through the selection process, interact with the judges and bring together the different personalities competing for their chance to enter the Bigg Boss house. 


*Where is the show being shot?*


The show has its own dedicated set at EVP Film City in Chennai. Importantly, this is a separate set created specifically for the new format and is not the main Bigg Boss house.

Since this is not a captive reality format, contestants will arrive at the set for their shoots and challenges and leave once their participation is complete. 


*What will contestants have to do?*


The aspiring contestants will be put through a series of challenges designed to test their personality, individuality and ability to entertain audiences.From personality driven interactions to task-based challenges, participants will have to consistently prove that they have what it takes to make an impact inside the Bigg Boss house. Their performances will be evaluated by Aari Arujunan, Raju Jeyamohan and Oviya. 


*What does the winner get?*


The stakes go beyond simply winning the new show. The selected winner or winners will get the opportunity to enter the Bigg Boss Tamil Season 10 house as contestants.This makes the format a direct pathway for everyday people to potentially become part of the main Bigg Boss season and marks a significant expansion of the franchise beyond its usual celebrity contestants.


*When does the show premiere?*


The new show is set to premiere on August 16 on JioHotstar and Star Vijay, with new episodes airing every day.Viewers can catch the show on Star Vijay from Monday to Friday at 10:00 PM, while the Saturday and Sunday episodes will air at 5:30 PM. The show will also stream on JioHotstar. 



*The opportunity is here. The stage is set. Now it’s time to see who turns their personality into their ticket to the Bigg Boss house. Catch the journey to Bigg Boss Tamil 10, exclusively on JioHotstar and Star Vijay.*