Featured post

Mythri Movie Makers' New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled 'Jackie - No Retakes Allowed'

 Mythri Movie Makers' New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled 'Jackie - No Retakes Allowed', ...

Sunday, 13 September 2026

Mythri Movie Makers' New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled 'Jackie - No Retakes Allowed'

 Mythri Movie Makers' New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled 'Jackie - No Retakes Allowed', First Look Poster Promises Stylish Action Extravaganza.*

 


Leading Pan India Production House Mythri Movie Makers continues to expand its footprint beyond Telugu cinema, and the production house is now making its mark in Tamil with an exciting fourth venture, starring Kollywood Star Dhruv Vikram. Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, the film is directed by Karan Arvind Kumar. Dhruv, who has established himself with performances in diverse and intense roles, is now taking up a commercial subject that is designed to connect with a broader section of the audience.

 

The makers today unveiled the title along with the film’s first-look poster. Titled 'Jackie- No retakes allowed', the first look presents Dhruv Vikram in a larger-than-life mass avatar. The poster blends a gritty live-action treatment with a stylish comic-book-inspired aesthetic, instantly creating curiosity around the character and the world of the stylish action extravaganza.

 

Dhruv appears in a stylish brown outfit, sporting a distinctive hairstyle and an intense expression. His fierce posture adds to the character’s commanding presence, while his prominently extended fist gives the poster a dynamic, action-packed feel. The tagline “No Retakes Allowed” further amplifies the film’s edgy tone.

 

The first look succeeds in establishing Jackie as a stylish and action-driven commercial entertainer while offering a peek of Dhruv Vikram’s powerful new screen persona.

 

The film also boasts an impressive technical crew. National Award-winning composer Santhosh Narayanan is scoring the music, while Viki is handling the cinematography. Jayasuriya is responsible for the editing, with GM Sekhar overseeing production design. Renowned action choreographer Vikram Mor is designing the film’s action sequences.

 

*Cast* : Dhruv Vikram

 

*Technical Crew:*


Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili

Banner: Mythri Movie Makers

Director: Karan Arvind Kumar

Music: Santhosh Narayanan

DOP: Viki

Editing: Jayasuriya S

Production Design: GM Sekhar

Action: Vikram Mor

PRO: Yuvraaj

Marketing : First Show

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie - No Retakes Allowed) ’!!*

 *துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்  ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie - No Retakes Allowed) ’!!* 



மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.


படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.


ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.


இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் – இசை, விக்கி – ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் – படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் –தயாரிப்பு வடிவமைப்பாளர், விக்ரம் மோர் – சண்டைப்பயிற்சி என சிறப்பான தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கின்றனர். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.


“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’

 *“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’*






Actor Karunaas, who has successfully completed 25 years in the Tamil film industry, continues to explore diverse characters across different genres. After establishing himself through a wide range of memorable performances, the actor now takes on a challenging and emotionally driven role in Enna Vilai, written and directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor. Karunaas plays Thavasimuthu, a coin redeemer who retrieves coins offered by devotees into the sea near Rameswaram. With the film gearing up for its theatrical release on September 17, the actor shares his experience of being part of a story rooted in an unusual livelihood and a larger struggle for dignity and survival.


Speaking about his role in Enna Vilai, Karunaas says, “Thavasimuthu is a character that demanded a completely different approach from me. He is a man whose life and livelihood are closely connected to the sea, and the circumstances he faces gradually take him into a much larger struggle. What made the character special for me was the emotional journey he goes through. Enna Vilai deals with a very unique premise, but beneath that is a deeply human story about survival, dignity and the right to live with self-respect. I was very happy to take up a role that gave me the opportunity to explore these emotions as an actor.”


He adds, “Sajeev Pazhoor has written the story with great clarity and has brought a strong social relevance to the narrative without compromising on its emotional core. His understanding of the characters and the world they belong to made the experience very interesting for me. Working alongside Nimisha Sajayan and the rest of the cast was also a wonderful experience. I believe Enna Vilai will connect with audiences because it speaks about an ordinary man and an extraordinary situation in a very compelling manner.”


Set against a socially relevant backdrop, Enna Vilai revolves around a man who retrieves coins offered by devotees into the sea near Rameswaram, with his struggle for dignity and survival eventually leading to a significant legal battle.


The film features Karunaas, Nimisha Sajayan, Vijayalakshmi Veeramani, Saasha, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalitesand others.


Written and directed by Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The technical crew comprises Sam C.S. (Music), Alby Antony (Cinematography) and Sreejith Sarang (Editing). Enna Vilai is gearing up for its worldwide theatrical release on September 17, 2026.

நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”...‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!

 *“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”...‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!*






தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் சவால் நிறைந்த, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுக்கும் நாணய மீட்பாளரான தவசிமுத்து கதாபாத்திரத்தில் இந்த படத்தில் கருணாஸ் நடித்துள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வித்தியாசமான வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட கதையையும், கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டத்தையும் பற்றி பேசுகிறது. 


இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார், “தவசிமுத்து கதாபாத்திரம் என்னிடம் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தது. அவரது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படிப்படியாக அவரை மிகப்பெரிய போராட்டத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தை எனக்குச் சிறப்பானதாக மாற்றியது, அவர் கடந்து செல்லும் உணர்வுப்பூர்வமான பயணம்தான். ‘என்ன விலை’ திரைப்படத்தின் கருவாக வாழ்வாதாரம், கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை பேசுகிறது. ஒரு நடிகராக இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி”


மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “சஜீவ் பழூர் மிகவும் தெளிவான பார்வையுடன் இந்தக் கதையை எழுதியுள்ளார். உணர்வுப்பூர்வமான மைய கதையை சமரசம் செய்யாமல், வலுவான சமூக கருத்தையும் இதில் பேசியுள்ளார். கதாபாத்திரங்கள் மற்றும் அவை சார்ந்த உலகத்தைப் பற்றிய அவரது புரிதல், இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தை எனக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றியது. நிமிஷா சஜயன் மற்றும் படத்தின் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் அசாதாரணமான சூழ்நிலையை மிகவும் அழுத்தமாகப் பேசுவதால், ‘என்ன விலை’ திரைப்படத்தை நிச்சயம் ரசிகர்கள் தங்களுடன் பொருத்தி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார். 


சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.


இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார்.


சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

DHIK. DHIK..DHIK…' டீசர் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது, தற்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது..

DHIK. DHIK..DHIK…' டீசர் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது, தற்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது..








JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் திரைப்படம் 'Dhik.Dhik..Dhik…' படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது..


டீசர் வெளியீட்டுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் டீசரை வெளியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் படத்தின் மீதான கவனம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது.


தற்போது 'Dhik. Dhik.. Dhik…' டீசர் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் டீசரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். டீசருக்கு கிடைத்த டிஜிட்டல் வரவேற்பும், திரையரங்குகளில் நடைபெறும் திரையிடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


 ஒரே இரவில் நடக்கும் கதை, பரபரப்பான சூழல் மற்றும் த்ரில்லர்  கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது..


JSK Satish Kumar தயாரிப்பில், JSK Film Corporation சார்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் Srinivasan Sivajirao இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் Raghu Rajagopal உடன் இணைந்து படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.


சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முழுக் கதையும் ஒரே இரவில் நடக்கின்றது.


 சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்புடன், குடும்ப உணர்வுகளையும் இணைத்து, இன்றைய காலகட்டத்துடன் தேவையான சமூக கருத்தையும் படம் பேசுகின்றது.


படத்தில் Pavel Navageethan, JSK Satish Kumar, Chandini Tamilarasan, Sandra Amy மற்றும் Bijesh Nagesh ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.


‘Thanga Meengal’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘Kuttram Kadithal’ உள்ளிட்ட தரமான, வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்துள்ள JSK Film Corporation, 'Dhik.Dhik..Dhik…' படத்தின் மூலமும் தனது தனித்துவமான கதைகளை தொடர்ந்து வழங்குகின்றது.



‘Fire’ படத்தைத் தொடர்ந்து, JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Kuttram Kadithal 2’ திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படம் தற்போது திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் வருகிறது.


படத்தின் ஒளிப்பதிவை Raghu Rajagopal, இசையை DK, படத்தொகுப்பை Prem B, கலை இயக்கத்தை SS Susee Devaraj ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.


24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகள், முன்னணி திரையுலக பிரபலங்களின் ஆதரவு மற்றும் தற்போது திரையரங்குகளில் டீசர் திரையிடப்பட்டு வருவது என 'Dhik. Dhik.. Dhik…'படத்தின் புரமோஷன் பயணம் சிறப்பான தொடக்கத்தைப் பெற்று இருக்கின்றது.


இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை JSK Film Corporation விரைவில் வெளியிடும்..

DHIK. DHIK.. DHIK…’ TEASER CROSSES 2 MILLION VIEWS IN JUST 24 HOURS; NOW PLAYING ACROSS THEATRES

‘DHIK. DHIK.. DHIK…’ TEASER CROSSES 2 MILLION VIEWS IN JUST 24 HOURS; NOW PLAYING ACROSS THEATRES








JSK Film Corporation’s upcoming Tamil thriller Dhik. Dhik.. Dhik… has made an impressive impact with its teaser, crossing 2 million views within just 24 hours of its release.


Adding further momentum to the teaser launch, prominent names from the Tamil film industry — Vijay Sethupathi, Venkat Prabhu, G.V. Prakash Kumar and Arya — extended their support by launching and sharing the teaser, giving the film strong visibility among audiences and cinema enthusiasts.


Taking the campaign further, the Dhik. Dhik.. Dhik… teaser is now being screened across theatres, giving moviegoers an opportunity to experience the film’s gripping world on the big screen. The extensive theatrical showcasing, coupled with the teaser’s strong digital response, has further amplified the buzz surrounding the film.


The encouraging response has heightened curiosity around Dhik. Dhik.. Dhik…, particularly for its intriguing one-night premise, tense atmosphere and thriller-driven narrative.


Produced by JSK Satish Kumar under the banner of JSK Film Corporation, the film marks the directorial debut of Srinivasan Sivajirao, who has co-written the film along with Raghu Rajagopal.


Set against the backdrop of Chennai, Dhik. Dhik.. Dhik… unfolds entirely over the course of a single night. The film combines suspense and tension with an emotional family narrative while carrying a socially relevant message that connects with contemporary times.


The film features Pavel Navageethan, JSK Satish Kumar, Chandini Tamilarasan, Sandra Amy and Bijesh Nagesh in prominent roles.


JSK Film Corporation, known for backing acclaimed and content-driven films including the National Award-winning Thanga Meengal and Kuttram Kadithal, continues its commitment to distinctive storytelling with Dhik. Dhik.. Dhik….


Following Fire, the production house is also gearing up for the theatrical release of Kuttram Kadithal 2, which is currently on its film festival journey.


On the technical front, Raghu Rajagopal handles the cinematography, DK composes the music, Prem B takes charge of editing, while SS Susee Devaraj serves as the art director.


With the teaser crossing the 2-million-view milestone in just 24 hours, receiving support from leading personalities from the film industry, and now being showcased across theatres, Dhik. Dhik.. Dhik… has begun its promotional journey on a highly encouraging note.


Further updates about the film will be announced by JSK Film Corporation shortly.

தி டார்க் ஹெவன்' திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

 'தி டார்க் ஹெவன்' திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!









ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவம்: 'தி டார்க் ஹெவன்' பட நாயகன் பிக் பாஸ் புகழ் சித்து பேச்சு


ஒரே மாதிரியான படங்களே வருகின்றன: நடிகை ரித்விகா ஆதங்கம்! 


'தி டார்க் ஹெவன்' திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!


நல்லதை கேட்டுக்கொள்கிறேன்; கேட்டதை மாற்றிக் கொள்கிறேன்: 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி பேச்சு!


நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.

அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.


கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.


செப்டம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.


அறிமுக விழாவில் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,


"நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். க்ரைம் திரில்லர் படத்திற்கு இசையமைத்தது இதுதான் முதல் முறை. இயக்குநர் பாலாஜி முதலில் அப்படிச் சொன்ன இந்தக்கதை எனக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்ன ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமானது. அதேபோல படத்தை எடுத்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்.

படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணி .ஒரு பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்க்க வேண்டும் ஆதரிக்க வேண்டும் "என்றார்.


ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே பேசும்போது,


" நான் இயக்குநர் பாலாஜியுடன் ஏற்கெனவே ’டி3 ’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இது அவருடன் பணியாற்றும் இரண்டாவது படம் .வழக்கமாக மலைப் பிரதேசங்களில் அழகான இடங்களில் படிப்பு நடத்துவது என்பது வேறு. மர்மமும் திகிலும் நிறைந்த ஒரு கதைக்கு அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது வேறு. கிரைம் திரில்லர் படங்களுக்கு இயற்கை அழகோடு மர்மமும் திகிலும் நிறைந்து காணப்படும் இடங்களாக இருக்க வேண்டும். அப்படி அழகும் மர்மமும் இணைந்த இடங்களைத் தேடி தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் படப்பிடிப்பு நடத்தினார். நாங்களும் அப்படிக் காடு,மலை என்று சிரமப்பட்டு சென்று படமாக்கினோம்.வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் நீண்ட தூரம் படப்பிடிப்புக் கருவிகளைச் சுமந்து கொண்டு சென்று படப்பிடிப்பு நடத்தினோம்.அந்த சிரமங்கள் எல்லாம் காட்சிகளைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்டும் போது இப்போது தெரிவதில்லை" என்றார்.


படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் புகழ் தர்ஷிகா பேசும்போது,


" ’தி டார்க் ஹெவன்’ எனது முதல் படம். பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அனைவரும் விரும்பிப் பார்க்கும் படங்களாக இருக்கக்கூடியவை த்ரில்லர் படங்கள்தான்.அப்படி ஒரு படமாக இந்த ’தி டார்க் ஹெவன்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக உள்ளன. நடித்திருக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்கில் சென்று இந்தப் படத்தை பார்த்து ஆதரியுங்கள்.உங்களது நேர்மையான விமர்சனங்களைக் கூறுங்கள் "என்றார்.


நடிகை ரித்விகா பேசும்போது,


"பெரிய படங்களின் வெளியீடுகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது செப்டம்பர் 18 அன்று உறுதியாக திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய த்ரில்லர் படங்கள் வருகின்றன. போலீஸ்காரர், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என்று எல்லாம் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும். ஆனால் இது கண்டிப்பாக அப்படி இருக்காது. வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும்.


ஏற்கெனவே எடுத்த படத்தை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் படம் எடுப்பது என்பது இரட்டை உழைப்பைப் போட வேண்டிய நிலை.கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அப்படி இந்தப் படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் இருமடங்கு உழைத்து இருக்கிறார்கள். சவாலான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சென்று காத்திருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப ரீதியாகவும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள்.

நாங்கள் நடிப்புக் கலைஞர்கள் ஒருமுறை நடித்தால் அவர்கள் இரண்டு மடங்கு உழைத்தார்கள்.இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.


படங்கள் திரையரங்குப் படங்கள், ஓடிடி படங்கள் என்று இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகின்றன. எல்லாப் படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.திரையரங்குக்கு வந்த பிறகு ஓடிடியில் வந்தால் மட்டும் அப்போது பார்க்கலாம் .அதுவரை திரையரங்கில் பார்ப்பது தான் நல்ல அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.’தி டார்க் ஹெவன்’ கண்டிப்பாக நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும். நம்பி வரலாம். ஏமாற்றாது" என்றார்.


படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,


"ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே வைத்து விட்டு பிறகு ஆரம்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கி முடித்து இன்று நான் உங்கள் முன் நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. அப்படி மூன்று பேருக்கு நான் நன்றி கூற வேண்டும்.ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் எடுக்கும் போது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சரண் ,கோபால் சார், மற்றும் எனது படக்குழுவினர்.இந்த மூவரும் இல்லை என்றால் இந்தப் படம் எடுத்து இருக்கவே முடியாது.அவர்களுக்கு நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்துவிட்டு மீண்டும் அதே படத்தை மறுபடியும் எடுப்பது என்பது மன ரீதியாக மிகவும் அழுத்தம் தரக்கூடிய தொந்தரவு தரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும்.அப்படி இருந்த எனது நெருக்கடியான சூழலில் சித்து சார் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் நினைக்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.கடந்த காலத்தைப் பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லை.அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று வரை சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அது ஒரு பெரிய காரணம்.அதற்கு அவருக்கு மிகவும் நன்றி.


அதேபோல இரண்டாவது முறை ஆரம்பித்தபோது பழையதைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் யாருமே பேசவில்லை; கேட்கவில்லை .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் தான் அனைவரது கவனமும் இருந்தது .அதற்கு அனைவருக்கும் நன்றி.அப்படியே படத்தை முடிக்கவும் செய்தோம்.துணை நிற்பவர்கள் சரியாக இருந்தால் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் சரியாக அமையும் என்பதற்கு இந்தப் படமே ஒரு சாட்சி. அவர்களே எனது பாடம்.அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் பெரிய அளவில் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு சென்றோம்.


இந்த படத்திற்காக அனைவரும் சிரமப்பட்டோம். சிரமங்களில் நான் பெரிதாக நினைப்பது என்னவென்றால் தூக்கம் இல்லாமல் உழைப்பது என்பதைத்தான்.மூன்று மணி நேரம் கூடத் தூங்க முடியாமல் சில நேரம் உழைத்து இருக்கிறோம். அப்போது தூக்கம் இல்லாத அந்த உடல் ரீதியான பிரச்சினை எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தத் தொந்தரவிலிருந்து மீள்வது பெரும் போராட்டமாக இருந்தது.

அதிலிருந்து மீள்வதற்கு நாங்கள்  நீண்ட நாள்கள் மிகவும் சிரமப்பட்டோம்.எனது படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா என அனைவருமே நன்றாக நடித்தார்கள் .அதுமட்டுமல்லாமல் அவர்களோடு அனுபவமுள்ள பெரிய நட்சத்திரங்களும் நடித்து இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி சார் , நிழல்கள் ரவி சார் , ஜெயக்குமார் சார் போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பில் இருந்ததால் இன்று வர முடியவில்லை.


மிகவும் முக்கியமான விஷயம் இது ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படம் என்பதுதான்.டீஸர்,டிரெய்லர் எல்லாம் பார்த்து விட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் இருவருக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். அது படைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல. எங்களது மனஸ்தாபங்கள் எல்லாம் பேக் அப் சொல்வதற்குள் காணாமல் போய்விடும்.

அவர் நல்ல திறமைசாலி .அவர் பெரிய இடத்துக்கு வருவார். எனது இதயத்தில் இருந்து இதை நான் கூறுகிறேன். இந்தப் படத்தில் ரித்விகா வருவதற்கு முன்பு இந்த படத்தின் தரம் வேறு மாதிரி இருந்தது. வந்த பிறகு அது வேறு மாதிரியான உயரத்துக்குச் சென்றது. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் நான்கு பாத்திரங்களைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறேன் . பாரி,உமையாள், கனி இன்னொரு பாத்திரம் என இந்த நான்கையும் பிரதானமாக வைத்து நான் உருவாக்கி இருக்கிறேன். ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் இந்தப் படத்திற்குப் பிறகு பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரிடம் இதைக் கேட்பார்கள்.இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிலைக்கு இன்று வந்து இருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். அனைவருக்கும் மிக்க நன்றி. செப்டம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகிறது. நல்லதொரு திரையரங்க அனுபவமாக நிச்சயமாக இந்தப் படம் இருக்கும் .படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம். நன்றி'' என்றார்.


கதை நாயகன் சித்து பேசும்போது,


"இதே சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா கம்பெனி அலுவலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.இதே பிரசாத் லேபில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கிறேன். நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் .அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது.எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி ’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும் .எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது .அதுவும் காவல் துறை சம்பந்தப்பட்ட திரில்லர் கதை என்று அமைந்திருப்பது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும் .நான் கதாநாயகனாக நடிக்கும்போது அதுவும் த்ரில்லர் படத்தில் நடிப்பது பல பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் .அப்படிப்பட்ட படம் முதல் படமாக வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது நான் கண்டிப்பாக நான் செய்கிறேன் என்றேன். அவர் அப்பொழுது சொன்னார், இது முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கதை என்றெல்லாம் சொன்னார். நான் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தை எப்படி மேலே கொண்டு செல்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது .ஒரு முடிந்து போன முடிவைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு வந்திருக்கும் வாய்ப்பை எப்படி நான் பயன்படுத்திக் கொண்டு மேலே முன்னேற வேண்டும் என்பதில் தான் என் கவனமும் இருந்தது. எனவே முடிவைப் பற்றி நான் பேசவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.


அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள்.அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது.படக் குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள்.இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது. 


வருகிற 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ஆதரியுங்கள்"என்றார்.

Saturday, 12 September 2026

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

 *இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!*





*பத்து வருடங்களுக்கு பிறகு TIFF விழாவில் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றது!*


ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. படம் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டினர்.


டொராண்டோ: கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான ‘டோரதி’, 2026 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும், சர்வதேச அளவில் பாராட்டுப் பெற்ற படங்களும் இடம்பெறும் பிரபலமான ‘சென்டர்பீஸ்’ பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை, தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றுள்ளது. இதன் மூலம், சமகாலத் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் படைப்பு சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டபோது இப்படத்திற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தனர்.


டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற இப்படத்தின் முதல் காட்சியில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயினும் நிகழ்வில் பங்கேற்றனர்.


இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் நெருக்கமாக அறிந்த ஒரு இடத்திலிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் உருவான கதைதான் ‘டோரதி’. ஆனால், இப்படம் எழுப்பும் நட்பு, பாரபட்சம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த கேள்விகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கும் பொருந்தும். TIFF திரைப்பட விழாவில் இப்படம் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படுவது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை அப்படியே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை இது கொடுத்துள்ளது. மேலும், இளையராஜா சாரின் இசை இந்தப் பயணத்துக்குத் துணையாக இருப்பது இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது”.


ஜியோ ஸ்டுடியோஸ் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே பகிர்ந்து கொண்டதாவது, “’டோரதி’ திரைப்படத்தில் பேசப்படும் கதைக்களமும் அதன் வலிமையான உணர்வுகளும் மொழி தடைகளை கடந்து உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் தகுதி உடையது. நட்பு, அடையாளம் மற்றும் மனித கண்ணியம் குறித்த கதையை கார்த்திக் உருவாக்கியுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மூலம் இந்த கதையைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். TIFF திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுவது தமிழ் சினிமாவிற்கும் முக்கியமான தருணம்” என்றார்.


சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, “TIFF திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்பட்டது சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் பயணத்தில் முக்கியமான தருணம். மனிதநேயத்தை மையமாகக் கொண்ட கதைதான் ‘டோரதி’. இந்தப் படத்தில் திறமையானவர்களை கார்த்திக் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஒன்றிணைத்துள்ளது. வலிமையான இந்தியக் கதை எங்கு வேண்டுமானாலும் பார்வையாளர்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கையே எங்களை இணைத்துள்ளது. ‘டோரதி’ தனது சர்வதேசப் பயணத்தை டொராண்டோவில் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.


‘டோரதி’ திரைப்படத்திற்கான அசல் பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜா உருவாக்கியுள்ளார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அதன் இசை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய இரண்டு பாடல்களும் யூடியூபில் தலா 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. மேலும், இவ்விரு பாடல்களும் யூடியூப் இந்தியாவின் டாப் 5 டிரெண்டிங் இசை வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, இந்த இரண்டு பாடல்களும் ‘டோரதி’ படத்தின் இசை அடையாளத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.


‘டோரதி’ திரைப்படத்தின் 18 பாடல்கள் மற்றும் இசைக்கோர்வைகள் அடங்கிய முழுமையான இசைத்தொகுப்பும் சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘டோரதி கான்சர்ட்’ நிகழ்ச்சியில், இசைக்கலைஞர்கள் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து ‘டோரதி’ திரைப்படத்தின் இசையை நேரடியாக இசைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், இளையராஜாவின் இசை திரையிலிருந்து நேரடி இசை நிகழ்ச்சி அரங்கிற்கும் பயணித்தது.


குணீத் மோங்கா கபூர், TIFF திரைப்பட விழாவுடனான தனது 15 ஆண்டுகளுக்கும் மேலான உறவை தொடர்ந்து வருகிறார். அவர் தயாரித்த TIFF திரைப்பட விழாவில் இடம்பெற்ற சில முக்கியமான படங்கள் இதோ, ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ (2010), ‘பெட்லர்ஸ்’ (2012), ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் – பாகம் 1 மற்றும் பாகம் 2’ (2012), ‘தி லஞ்ச்பாக்ஸ்’ (2013), ‘மான்சூன் ஷூட்அவுட்’ (2014), ‘கில்’ (2023), ‘யெல்லோ பஸ்’ (2023) மற்றும் இப்போது ‘டோரதி’ (2026). ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம், TIFF திரைப்பட விழாவுடனான குணீத் மோங்கா கபூரின் நீண்டகால உறவு, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடனான புதிய கூட்டணியுடன் இணைகிறது. இதன் மூலம், சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் சர்வதேசத் திரைப்பட விழாப் பயணம் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து விரிவடைகிறது.


கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம், தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இப்படத்தை வழங்குகின்றன.

Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade

 Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade





Presented by Jio Studios and produced by Sikhya Entertainment, the Tamil feature film received a standing ovation at its World Premiere


TORONTO — Karthik Subbaraj’s Tamil-language feature Dorothy has made its world premiere at the Toronto International Film Festival (TIFF) 2026, screening in the prestigious Centrepiece section alongside world premieres and acclaimed international features. Presented by Jio Studios and produced by Sikhya Entertainment in association with Dhammam Films, the film marks the first Indian Tamil feature to premiere at TIFF in the past decade, bringing one of contemporary Tamil cinema’s distinctive voices to the global stage. The film received a standing ovation at its World Premiere, marking an especially warm and memorable beginning to its international journey.


The premiere took place at Toronto’s Scotiabank Theatre, with Subbaraj joined by lead actors Keerthy Suresh, Sananth and Rishikanth, alongside producers Guneet Monga Kapoor, Achin Jain. 


Karthik Subbaraj, Writer-Director, said: “Dorothy is a story that comes from a place and culture I know intimately, but its questions around friendship, prejudice and human connection are universal. To have its world premiere at TIFF is incredibly special. It gives the film an opportunity to reach audiences across the world while staying true to the story I wanted to tell. And to have Ilaiyaraaja sir’s music accompany that journey makes it even more special.”


Jyoti Deshpande, President, Jio Studios, said: “Cinema has the ability to cross languages when the emotion at its centre is universal. Dorothy is a powerful example of that. Karthik has crafted a story about friendship, identity and human dignity that can resonate far beyond its language. At Jio Studios, we are proud to bring this deeply human story to audiences, and its premiere at TIFF is a significant moment for the film and a proud one for Tamil cinema.” 


Guneet Monga Kapoor and Achin Jain, Producers, Sikhya Entertainment, said: “TIFF has been an important part of Sikhya’s journey, and bringing Dorothy here feels particularly special. At its heart, Dorothy is a deeply human story about identity, belonging and the courage to find your way back to yourself. Working with Karthik and Jio Studios has brought together different strengths and perspectives, with the shared belief that a strong Indian story can find an audience anywhere. We’re thrilled to see Dorothy begin its international journey in Toronto.”


Dorothy is also an Ilaiyaraaja musical, with the legendary composer creating the film’s original score and songs. The soundtrack has become a significant part of the film’s pre-release conversation: “Kalyana Virundhu” and “Muthumani” have each crossed 10 million views on YouTube and both have featured among the Top 5 trending music videos on YouTube India. The two songs have helped establish the film’s musical identity well ahead of its theatrical release.


The film’s 18-track OST was also presented as a live musical experience in Chennai, with musicians performing the Dorothy score continuously for around 40 minutes. The Dorothy Concert, held at Image Auditorium, was met with a strong audience response, extending Ilaiyaraaja’s music for the film from the screen into a live concert setting.

Dorothy marks Guneet Monga Kapoor extending a relationship with the festival that spans more than 15 years. Some of her TIFF credits include That Girl in Yellow Boots (2010), Peddlers (2012), Gangs of Wasseypur – Part 1 and Part 2 (2012), The Lunchbox (2013), Monsoon Shootout (2014), Kill (2023), Yellow Bus (2023) and now Dorothy (2026). With Dorothy, Monga Kapoor brings her longstanding TIFF association together with Karthik Subbaraj and Jio Studios, extending Sikhya Entertainment’s international festival journey into Tamil cinema.


Written and directed by Karthik Subbaraj, Dorothy stars Sananth, Rishikanth and Keerthy Suresh in pivotal roles. The film will release worldwide in cinemas on September 25, 2026.

Produced by Jyoti Deshpande, Guneet Monga Kapoor and Achin Jain in association with Dhammam Films, Dorothy is backed by Jio Studios and Sikhya Entertainment.