Featured post

Red Giant Movies Brings Rajinikanth and Kamal Haasan Together After 47 Years for ‘KHxRK’*

 *Red Giant Movies Brings Rajinikanth and Kamal Haasan Together After 47 Years for ‘KHxRK’*  https://youtu.be/TROFVicWrTE?si=DGMRt7BxoT8V66p...

Saturday, 21 February 2026

Red Giant Movies Brings Rajinikanth and Kamal Haasan Together After 47 Years for ‘KHxRK’*

 *Red Giant Movies Brings Rajinikanth and Kamal Haasan Together After 47 Years for ‘KHxRK’* 

https://youtu.be/TROFVicWrTE?si=DGMRt7BxoT8V66ph

Indian cinema is set to witness a historic moment as two of its most iconic legends — Rajinikanth and Kamal Haasan — reunite after 47 years for a prestigious, once-in-a-lifetime cinematic collaboration, tentatively titled "KHxRK"


The two screen icons last worked together in the late 1970s, and their reunion marks one of the most significant events in contemporary Indian film history. Their coming together represents the convergence of two extraordinary legacies that have shaped generations of audiences across India and globally.


The project is being produced by Red Giant Movies, who have successfully brought these two cinematic giants together for this landmark collaboration. The production house has envisioned this film as a celebration of scale, legacy, and storytelling at its finest.


Sharing their thoughts, a spokesperson from Red Giant Movies said:


"_Bringing together Rajinikanth sir and Kamal Haasan sir for this film is truly a dream come true for all of us at Red Giant Movies. We feel deeply honoured, grateful, and incredibly excited to facilitate this reunion after 47 years. This is a historic and emotional moment for Indian cinema, and we embark on this journey with immense gratitude and responsibility. We are committed to creating a cinematic experience that celebrates their legacy in the most powerful way."_ 


The film will be helmed by acclaimed director Nelson Dilipkumar, who delivered the blockbuster success Jailer and has established himself as one of the most dynamic commercial filmmakers in the country. Music for the film will be composed by Anirudh Ravichander, whose powerful soundscapes have consistently elevated large-scale cinematic experiences.


Further details regarding the film remain under wraps and will be announced in due course.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும்

 *ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’*

https://youtu.be/TROFVicWrTE?si=DGMRt7BxoT8V66ph

இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும்.


1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அபாரமான கலைப் பயணங்கள், இத்திரைப்படத்தின் மூலம் ஒன்றாக சங்கமிக்கின்றன.


இந்த மாபெரும் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த வரலாற்றுச் சந்திப்பை சாத்தியமாக்கியதில் பெருமை கொள்கின்ற தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை அளவிலும், பாரம்பரியத்திலும், கதை சொல்லுதலிலும் உயர்ந்த தரத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.


ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:


“ரஜினிகாந்த் அவர்களையும் கமல்ஹாசன் அவர்களையும் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைப்பது எங்களுக்கெல்லாம் ஒரு கனவு நனவாகும் தருணம். இந்த வரலாற்று மற்றும் உணர்ச்சிமிகு தருணத்தை சாத்தியமாக்குவதில் எங்களுக்கு மிகுந்த பெருமையும் நன்றியும் உள்ளது. அவர்களின் அபாரமான பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு வலுவான திரை அனுபவத்தை உருவாக்க எங்கள் முழு அர்ப்பணிப்புடன் இந்தப் பயணத்தை தொடங்குகிறோம்.”


இந்த திரைப்படத்தை ‘ஜெயிலர்’ வெற்றிப் படத்தை வழங்கிய புகழ்பெற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் இசையை இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளரான  அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார். அவரது இசை வடிவங்கள், பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு தொடர்ந்து சிறப்பூட்டிவருகின்றன.


படம் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ஏ படம் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வருகிறது.

 *மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ஏ படம் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வருகிறது...*






*பிப்ரவரி 27 வெளியாகும் ஏ படம்*


*ஏ படம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன்*


மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்..


இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் இந்த ஏ படம் 


இப்படத்தில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக மேகா ஸ்ரீ இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா

ஆகியோர் நடித்துள்ளனர். 



இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது...



இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ராஜ கணபதி கூறுகையில் 


நாங்கள் திரைப்படத்தை  அழகாக எடுத்தோம் ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கான சுமார் 45க்கும் மேற்பட்ட காட்சியில் வெட்டுகொடுத்தார்கள்.. இதனால் நாங்கள் சுமார் 18 மாதங்கள் கோர்ட் வாசலில் அலைந்து மிக சிரமப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றோம்.

ஒரு வழியாக இப்போது படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி திரைக்கு வருகிறது..


இப்படத்தில் நான் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன்..


இந்த சமுதாயத்தில் நிலவும் அவலங்களை அம்பேத்கர் பேசுவது போல் பேசி நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது..


இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டது மேலும் எங்களுக்கு மகிழ்ச்சி எங்களுடைய நல்ல படத்தை

அனைவரும் திரையில்  பார்த்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்..

மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு

 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "  










அமானுஷ்யங்கள் நிறைந்த ஹாரர் படம் "99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் 

எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் 

" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "


இந்தப் படத்தில் சபரி, 

ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். 

கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். 


இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.


இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா

ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.

பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்.

தயாரிப்பு ஒருங்கிணைப்பு - மஹேந்திரன் 

கிரியேட்டிவ் டைரக்டர்  - ரவி பார்கவன் 

தயாரிப்பு நிறுவனம் - மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.

இணை தயாரிப்பு - சுஜாதா மூர்த்தி 

கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.


படம் பற்றித் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி  பகிர்ந்தவை...


படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு 

" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " 

என்று பெயர் வைத்துள்ளோம்.


அந்தக் குடியிருப்பில் நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் குடியிருப்பு வாசிகளை அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்துகின்றன.

அவை ஏன் நடைபெறுகின்றன? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை ஹாரர் கலந்து குடும்பத்தோடு பார்க்க கூடிய சுவாரஸ்யமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம்.


இதுவரை சினிமாவில் காட்டப்படாத  ஐநூறு புத்த பிக்குகள் நடித்துள்ளனர் 

இதற்காக அரசு அனுமதியை பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கினோம். மேலும், AI-CG காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில், மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் இப்படத்தின் முக்கிய அம்சமாகும்.


இந்த படத்தின் மூன்று விதமான ஆன்மீகம் சார்ந்த பாடல்கள் இடம்பெற இருக்கிறது. அதில் "அருவா மீசை காரன்" என்ற கருப்பசாமி பாடலும், "யாரு பிள்ளையாரு"  என்ற விநாயகர் பாடலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


படத்தை வருகிற மார்ச் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்றார் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி.

Friday, 20 February 2026

எம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

 எம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!


எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம்  கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

“எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள  ஆக்சன் திரில்லர் திரைப்படமான “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.


ஒரு இளைஞனுக்கும்,  நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விசயம், எப்படி உலக அளவிலான  வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


இப்படத்தில் நாயகனாக வெற்றி நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A. வெங்கடேஷ், அருள் D. சங்கர், விஜய் டிவி ராமர்,ஜீவா ரவி, அஜித் விக்னேஷ், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.


இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் படத்தின் டிரெய்லரும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தொழில்நுட்பக் குழு விவரங்கள்

தயாரிப்பு : எம். மூர்த்தி – எம்.எம். ஸ்டூடியோஸ்

எழுத்து இயக்கம் : தீரன் அருண்குமார்

ஒளிப்பதிவு : சந்தோஷ் குமார் வீராசாமி

இசை : கவாஸ்கர் அவிநாஷ்

பாடல் வரிகள் : மோகன் ராஜன்

எடிட்டிங் : தினேஷ்குமார்

ஆர்ட் : C.S. பாலசந்தர்

சண்டைப்பயிற்சி : “மெட்ரோ” மகேஷ்





யாரிப்பு மேற்பார்வை : V.கலைசங்கர்

புரடக்சன் கண்ட்ரோலர் : M சிவக்குமார்

மக்கள்  தொடர்பு : சதீஷ் (AIM)

மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின்

 *மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு*




வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் "மை டியர் டாலி". அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக சிவராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு திரைத்துறை கடந்து வரவேற்பும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, படத்தின் வருவாயில் ஒருபங்கை புற்றுநோயை எதிர்த்து போராடும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதாக தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா அறிவித்து இருப்பது மனிதம் மீதுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு, மேலும் பலரை இப்படி செய்யவும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


மை டியர் டாலி திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி கே சேகர் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சித்தார்த் மேற்கொண்டுள்ளார். எம். ஃபாஸில் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நிர்வாக தயாரிப்பு பணிகளை ஆர்.திருமலை மேற்கொண்டுள்ளார்.

Second Case Of Seetharam Movie Review

Second Case Of Seetharam Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம second case of seetharam படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Vijay Raghavendra, Gopalkrishna Deshpande, Usha Bhandari னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது deviprasad shetty . Seetharam Benoy Case No. 18 படத்தோட second part தான் இது. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

SI seetharam யா நடிச்சிருக்க vijay raghavendra யும் அவரோட team ஒரு serious ஆனா case அ handle பண்ணுறாங்க. அதுவும் மர்மமான முறைல கொலைகள் நடக்குது, அதுவும் ஓவுவுறு victim மும் சாகுறதுக்கு முன்னாடி killer அவங்கள torcher பண்ணி தான் சாகடிக்கறா. இப்படி ஒரு victim ஓட body அ postmortem பண்ணும்போது forensic report ல killer கண்டிப்பா psychopath அ தான் இருக்கணும் ன்ற result அ சொல்லுறாங்க. அடுத்த கொலை நடக்குறதுக்குள்ள killer அ பிடிக்கணும் னு seetharam மும் அவரோட team மும் மும்முரமா இருக்காங்க ஆனா killer இவங்கள விட ஒரு step முன்னாடி இருக்கான். இந்த killer யாரு இவனை police பிடிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 



2021 ல இந்த படத்தோட first part release ஆனா போ என்னதான் கதை interesting அ இருந்தாலும் அதா கொண்டு வந்த விதம் அந்தளவுக்கு நல்ல இல்ல னு நெறய mixed reviews வந்துச்சு. இந்த first part அ இயக்குன director deviprasad shetty க்கு இது தான் முதல் படம். ஆனா இந்த படத்துல கதையா இருக்கட்டும் அதா கொண்டு வந்த விதமா இருக்கட்டும் ரெண்டுமே அட்டகாசமா இருந்தது. படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vijay raghavendra ஓட acting ரொம்ப interesting ஆ கொண்டு வந்திருக்காங்க. என்னதான் இவரு police அ இருந்தாலும் இவரும் ஒரு மனுஷன் தான். அதுனால சில தப்புகள் நடக்குது அதுஎல்லாமே எதார்த்தமா இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப நல்ல perform பண்ணிருக்காங்க. இந்த படத்தோட highlight ஆனா விஷயம் killer தான். இவன் கொலை பண்ணுற எல்லா victims ஓட body ளையும் 50 வெட்டுகள் இருக்கும். அந்த அளவுக்கு torcher பண்ணி தான் இவங்கள கொலைபன்னிருப்பான். 


அதுனால killer mentally stable கிடையாது ன்ற report police க்கு கிடைக்கும். இந்த killer ஓட characterisation அ ரொம்ப interesting அ director கொண்டு போயிருக்காரு. இவன் பண்ண கொலைகளை justify பண்ணாம இந்த character ஓட intelligence அ பாராட்டற மாதிரியும் அமைச்சிருக்காரு director. classical music அ சுத்தி தான் இந்த படத்தோட கதையும் நகுறது. usual அ பொண்ணுங்க art அப்புறம் music அ தேடி போறதுக்கு காரணம் ஒரு self discovery அ இதை பாக்குறாங்க. இந்த வலயத்துக்குள்ள ஆண்கள் வரும்போது தான் தேவையில்லாத பிரச்சனைகளும் வருது. gender and power dynamics அ பத்தி ஒரு social message யும் இந்த படத்துல குடுத்திருக்காரு director. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது Devi Prasad Shetty, Sathwik Hebbarதான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. Navaneeth Sham ஓட bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல அழகா set யிருந்தது. Hemanth Acharya ஓட cinematography இந்த thriller கதைக்கு அட்டகாசமா set பண்ணிருக்காரு.  Shashank Narayana ஓட editing audience ஓட கவனம் சிதறாத மாதிரி crisp அ கதையை edit பண்ணிருக்காங்க. art direction யும் நல்ல இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல thriller  கதைக்களம் தான் இது . சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Arivaan Movie Review

Arivaan Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம arivaan படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Ananth Nag , Janany Kunaseelan , Boys Rajan , Birla Bose , Gowri Shankar Roshni னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது arunprasath , இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



surya வா நடிச்சிருக்க ananth nag ஒரு police officer . இவரை neyveli க்கு transfer பண்ணுறாங்க. நெய்வேலி ல தொடர்ந்து நெறய கொலைகள் நடந்துட்டு இருக்கு. முக்கியமா இந்த கொலைகள் இவரு transfer ஆகி சில நாட்கள் லேயே நடக்க ஆரம்பிக்குது. இந்த கொலைகள் எல்லாமே மர்மமான முறை ல நடக்குது. கடைசில இந்த case அ handle பண்ணுற பொறுப்பு surya கிட்ட தான் வருது. திடுருனு இவரு fiance ஓட அப்பாவும் இறந்து போய்டுறாரு. surya ஓட fiance தான் vinitha வா நடிச்சிருக்க janany kunaseelan . இவங்க ஒரு youtube channel அ நடத்திட்டு இருப்பாங்க. அப்பா இறந்து போனதுனால ரொம்ப depression ல இருப்பாங்க. இவங்கள இந்த depression ல இருந்து வெளில வரவைக்குறதுக்காக case ஓட details அ இவங்ககிட்ட குடுத்து verify பண்ண சொல்லுறாரு. 


இந்த investigation நடந்துட்டு இருக்கும்போது தான் killer அ பத்தி ஒரு முக்கியமான clue அ கண்டுபிடிக்குறாரு. ஆனா அதே சமயம் இவரோட fiance உயிருக்கும் ஆபத்து வருது. அப்படி என்ன clue வை surya கண்டுபிடிச்சாரு? இதுனால ஏன் vinisha ஓட உயிர்க்கு  ஆபத்து வருது? இந்த கொலைகள் ஏன் நடக்குது  ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தை இயக்கி இருக்கிறது arun prasad . reality ல நடக்கற ஒரு விஷயத்தை எடுத்து அதா மக்களுக்கு புரிர மாதிரி கதையை கொண்டு வந்திருக்காரு. அது மட்டும்  இல்ல ஒரு அழகான social message யையும் சொல்லிருக்காரு. இந்த படத்தோட highlight ஆனா விஷயம் ந அது கண்டிப்பா climax தான். ஒரு பக்கம் tension இன்னொரு பக்கம் emotion னு ரெண்டுமே super அ balance பண்ணி climax அ கொண்டு வந்திருக்காங்க. படத்தோட visuals  எல்லாமே அழகா இருந்தது. cinematography யும் bright ஆவும் colourful ஆவும் இருந்தது. படத்தோட music  யும் இந்த கதைக்கு அழகா set யிருந்தது. படத்தோட dialogues யும் நல்ல இருந்தது. இந்த படத்தோட editing யும் sharp அ குடுத்திருக்காங்க. 

  

lead actors ல இருந்து supporting actors வரைக்கும் ஒரு neat ஆனா performance அ குடுத்திருக்காங்க னு தான்  சொல்லணும். அவங்க அவங்க role அ புரிஞ்சுக்கிட்டு super அ நடிச்சிருக்காங்க. anathnag ஒரு பக்காவான police அ நடிச்சிருக்காரு. இவரு investigate பண்ணுற விதமா இருக்கட்டும், action sequences ல எதிரிகளை அடிக்கிறதா இருக்கட்டும், clues அ கண்டுபிடிக்க இவரு புத்திசாலித்தனமா யோசிக்கிற விதமா இருக்கட்டும் எல்லாமே அட்டகாசமா இருந்தது. janany ஓட characterisation யும் நல்ல இருந்தது. இவங்களோட role யும் முக்கியமானதா இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

LSS Tamil Movie Review

LSS Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம LSS படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Aadhav Krishna ,Simran Advani ,Badava Gopi, Vinodhini, Jawa Sundaresan, Bagavathi Perumal, Ilavarasu, Rohit, Dhananjeyan,  Muthu Buvan. னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது R. Mahalakshmi Murugan . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



SHIVA வ நடிச்சிருக்க aadhav krishna ஒரு college ல படிக்கறாரு. இவரு ஒரு intelligent ஆனா student. இவரு pooja வா நடிச்சிருக்க simran யா love பண்ணுறாரு. pooja ஒரு பணக்கார வீட்டு பொண்ண இருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் ரொம்ப sincere அ love பண்ணுவாங்க. பூஜா அவங்க அம்மாவை பாக்குறதுக்காக இவங்களும் இவரோட boyfrined shiva வும் ஒண்ணா சேந்து kashi க்கு போவாங்க. ஆனா இங்க தான் ஒரு பெரிய twist நடக்குது. kashi க்கு இவங்க ரெண்டு பேரும் போகும் போது பூஜா ஒரு accident ல சிக்கிடுறாங்க. accident ரொம்ப serious அ இருந்ததனால இவங்க coma stage க்கு போய்டுவாங்க. இப்போ இந்த விஷயம் இந்த ரெண்டு பேரோட family  க்கும் தெரிய வருது. இதுல main suspect shiva தான் நினைச்சு police யும் இவரை arrest பண்ணிடுறாங்க. pooja ஓட family யும் என்ன நடந்துச்சு ன்றதா விசாரிக்க ஆரம்பிக்குது. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு collegestudents க்கு நடுவுல இருக்கற love , trust , அவங்க love ல face பண்ணுற பிரச்சனைகள் னு ரொம்ப ஆழமா இந்த characters அ design பண்ணிருக்காங்க. heroine எதுக்காக அவங்க அம்மாவை தேடி போறாங்க ன்ற விஷயத்தையும் நல்ல convey  பண்ணிருந்தாங்க. love ன்ற concept ஆயும் தாண்டி suspense யும் thriller யும் balance பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். action scenes யும் decent அ இருந்தது. படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது aadhav krishna middle class family அ சேந்தவரா ரொம்ப புத்திசாலியான பையன நடிச்சிருக்காரு. இவரோட நடிப்பும் ரொம்ப எதார்த்தமா இருந்தது. simran ஒரு north indian பொண்ண ரொம்ப cute அ நடிச்சிருந்தாங்க. இவங்க வந்த எல்லா scenes யும் refreshing அ இருந்தது. முக்கியமா இவங்க ரெண்டு பேரோட chemistry யும் நல்ல இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப நல்ல perform பண்ணிருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது jb films தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. ashwamitra ஓட bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல அழகா set யிருந்தது. sathishkumar ஓட cinematography யும் bright ஆவும் colourful ஆவும் இருந்தது. எப்பவும் போல srikanth N b ஓட editing audience ஓட கவனம் சிதறாத மாதிரி crisp அ கதையை edit பண்ணிருக்காங்க. art direction யும் நல்ல இருந்தது. 


மொத்தத்துல இந்த love subscribe share  ஒரு நல்ல கதைக்களம் தான். சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.