Featured post

லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

 'லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்! “பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் ...

Wednesday, 29 April 2026

லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

 'லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!



“பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகும் Love Oh Love திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும், உற்சாகமும் நேரத்தியும் நிறைந்த அட்டவணைக்குப் பிறகு வெற்றிகரமாக இன்று நிறைவு பெற்றுள்ளது.


மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தனித்துவமான நகர்ப்புற அழகையும், நவீன காதல் கதைக்கான பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.


சமீபத்தில், படத்தின் First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது ஆதரவும் வாழ்த்துகளும், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


Zinema Media and Entertainment Ltd தயாரிப்பில், தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors G.  தனஞ்ஜெயன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.


படத்தில் பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புகழ்) கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன்  தெலுங்கு you tube புகழ் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


இசையை FOXn என்ற இசையமைப்பாளர் ஜோடி (பிரதீப் PJ & Wayne Pavey) அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை P. G. முத்தையா கவனித்துள்ள நிலையில், தேசிய விருது பெற்ற N. B. ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை P. மகேந்திரன் கவனித்துள்ளார்.


தயாரிப்பாளர்களான தினேஷ் ராஜ் மற்றும் G. தனஞ்ஜெயன் ஆகியோர் படப்பிடிப்பு முழுவதிலும் நேரடியாக ஈடுபட்டு, இயக்குநரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப படம் சிறப்பாக உருவாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் (Post Production) வேகமாக நடைபெற்று வருகின்றன. Love Oh Love, 2026 கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இளைஞர்களின் உறவுகளை நவீன கோணத்தில், உணர்ச்சிப் பூர்வமாகவும், மனதைத் தொடும் வகையிலும் சொல்லும் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


PRO: ரேகா

Love Oh Love’ Shoot Wrapped; Post-Production in Full Swing*

 *‘Love Oh Love’ Shoot Wrapped; Post-Production in Full Swing*



The romantic entertainer “Love Oh Love”, starring Pavish Narayan, Naga Durga, Director Selvaraghavan, Director K.S. Ravikumar, Vanitha Vijayakumar, Ramya, Adithya Kathir and many others, written and directed by Magesh Rajendran has successfully wrapped its entire shoot today after an intensive and vibrant filming schedule. The film has been shot majorly in Chennai capturing the city’s unique charm and urban flavour as a backdrop to this modern love story and few portions in Ooty.



The team recently celebrated a special milestone when the film’s first look posters were unveiled by Makkal Selvan Vijay Sethupathi. His gracious support and wishes have significantly boosted the film’s visibility and anticipation.



Produced by Zinema Media and Entertainment Ltd, Dinesh Raj, along with Creative Entertainers & Distributors’ G Dhananjheyan, the film is written and directed by Magesh Rajendran. “Love Oh Love” features Pavish Narayan (of Nilavukku Enmel Ennadi Kobam fame) alongside Naga Durga, a well-known Telugu YouTube sensation making her Tamil cinema debut.



Music for the film is composed by FOXn, an exciting composer duo from North Madras comprising Pradeep PJ and Wayne Pavey, who are set to deliver a fresh and emotionally engaging soundtrack. The film’s technical team includes cinematographer P.G. Muthaiah, National Award-winning editor N.B. Srikanth, and art director P. Mahendran.



Both the Producers Dinesh Raj and G Dhananjheyan were actively involved in the shoot and making throughout and are delighted the film has come out well and shot as planned by the Director with an ensemble cast and crew.



With the shoot now wrapped, post-production work is progressing at a brisk pace. “Love Oh Love” is slated for a Summer 2026 theatrical release.



Promising a youthful, heartfelt, and contemporary take on relationships, the film is poised to strike a chord with all audiences.



PRO: Rekha

Tuesday, 28 April 2026

கோலிவுட்டின் ' புதிய வரவு' க்ரித்திக் மோகன்: அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட் - ஒரு அதிரடிப் பயணம்!

 கோலிவுட்டின் ' புதிய வரவு' க்ரித்திக் மோகன்: அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட் - ஒரு அதிரடிப் பயணம்!







தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான் க்ரித்திக் மோகன்! கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'பிரேக்பாஸ்ட்' திரைப்படம், இவரை ஒரு மெச்சூர்ட் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது.


ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் 'அச்சமின்றி' படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை 'படிப்பு தான் முக்கியம்' எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார்.


கவனிக்க வைத்த கதாபாத்திரங்கள்:

சுப்புராம் இயக்கத்தில், வெளியாகி கவனத்தை ஈர்த்த அஞ்சாமை திரைப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக/ விதார்த் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்களையும் கலங்க வைத்தார்.


இப்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், காதல் மனைவியிடம் அன்புப் போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து,  காதல் காட்சிகளிலும், எமோஷனல் சீன்களிலும் செம ஸ்கோர் செய்திருக்கிறார்!


அடுத்து,  ஓசூர் அருகே நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தில், வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார்.


இது தவிர, மேலும் இரண்டு முக்கிய படங்களில் கமிட் ஆகி கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரத் தயாராகிவிட்டார்.


துடிப்பான நடிப்பு, எதார்த்தமான முகம் - தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான ஹீரோவாக வலம் வருவார்..

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

 *காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!*



*Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.*


ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


 ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.


இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,


“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”


உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.


இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,


“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”


பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.


ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.


Kajal Aggarwal and Shreyas Talpade's The India Story set for July 24 release

 Kajal Aggarwal and Shreyas Talpade's The India Story set for July 24 release*



Presented by Zee Studios in association with MIG Production & Studios.


A gripping new socio-national drama, The India Story, starring  Kajal Aggarwal and Shreyas Talpade, is all set to hit theatres on July 24. Directed by Chettan DK and produced and written by Sagar B Shinde, the film promises to delve into a hard-hitting and relevant issue that resonates on a national scale.


At its core, The India Story, also referred to as The India Story: Slow Poison in progress, explores the alarming consequences of chemical misuse, particularly in the context of pesticide farming and related scandals. Moving beyond the lens of a single family’s ordeal, the narrative expands to reflect a much larger crisis affecting public health and safety. The film attempts to shed light on systemic lapses and the urgent need for stricter regulatory frameworks to prevent such widespread harm.


Speaking about the motivation behind the film, producer Sagar B Shinde shared, “We chose to tell this story because it reflects a reality that often goes unnoticed but impacts countless lives across the country. The misuse of chemicals, especially in pesticide farming, is not just an environmental concern, it’s a human crisis. Through this film, we hope to raise awareness and initiate meaningful conversations around accountability and change.”


With a storyline rooted in real-world concerns, the makers aim to strike a balance between compelling storytelling and social commentary. The film is expected to highlight the often-overlooked repercussions of industrial negligence while also questioning the accountability of powerful corporations.


Director Chettan DK praised the collective effort behind the film, saying, “Every member of the team, from the crew to the cast, has put in immense dedication to bring authenticity to this story. Kajal and Shreyas have delivered incredibly nuanced performances, and their commitment has truly elevated the film. We’ve worked hard to ensure that the narrative remains both engaging and impactful.”


Kajal Aggarwal, who has consistently explored diverse roles and Shreyas Talpade, known for his versatility, come together for the first time, bringing a fresh on-screen pairing. Their collaboration is anticipated to add emotional depth and intensity to a narrative that is both thought-provoking and unsettling.


As audiences increasingly gravitate towards content-driven cinema, The India Story positions itself as a timely and impactful release. With its strong message and engaging premise, the film is poised to spark conversations while delivering a gripping cinematic experience, backed by co-producers Sumit Bagade, Anita Jadhav, Vinayak Saidani, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi, and further elevated by the work of DOP Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave. The film is all set to release in Tamil ,Hindi, and Telugu language.


A Zee Studios Worldwide Release

Monday, 27 April 2026

Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam

 Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam, Launching on May 15*






From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, written and directed by A. Sarkunam, the suspense drama features Dushara Vijayan and Aditi Balan in the lead, with Abbas playing a pivotal role


Exam will stream exclusively on Prime Video on May 15 in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages, including English



MUMBAI, India—April 27, 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today announced May 15 as the global premiere date for its upcoming Tamil Original series, Exam. From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, the seven-episode series written and directed by National Award-winner A. Sarkunam promises a tense, emotionally charged suspense drama set against the pressure-filled environment of a competitive exam. Featuring Dushara Vijayan and Aditi Balan in the lead, and Abbas playing a pivotal role, Exam will stream exclusively on Prime Video in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages including English.


“Exam is a very timely and relevant story that captures the emotional intensity of competitive exams and masterfully transforms it into a thrilling high-stakes drama. We believe it is a story that will resonate deeply with millions. It’s a privilege to once again collaborate with Pushkar and Gayatri after the success of Suzhal—The Vortex season 1 and 2, and Vadhandhi—The Fable of Velonie. We are excited to bring this story to our customers across the world on May 15,” said Nikhil Madhok, Director & Head of Originals, Prime Video, India.


“With Exam, we wanted to dig into ambition, injustice, and those moral crossroads that people face when pushed to the edge,” shared creative producers Pushkar and Gayatri. “At the heart of this story is a young woman who refuses to remain powerless. Her journey is not about glamorizing defiance, but about exploring the emotional and ethical cost of standing up to a system stacked against her. Prime Video has been an incredible collaborator in taking our stories global before, and we believe it’s the perfect home to bring Exam to audiences worldwide.”

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’

 *பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான  ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின்  உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*






வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்


‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்


சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சீரிஸை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “எக்ஸாம்” தொடர் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.


பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”


கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”


‘எக்ஸாம்’ சீரிஸை மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

Saturday, 25 April 2026

தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS)

 *தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே.  ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவிப்பை பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் Chairman குஷால் கங்காரியா, MD தினேஷ் கங்காரியா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.*



வணிகம் மற்றும் குடியுரிமை பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாக, பி.எம். ஜே. ஜுவெல்ஸ் நிறுவனம், ஏப்ரல் 23 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.


தமிழ்நாடு  முழுவதும் உள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கும்  வகையில், "GO VOTE. GET INKED. CELEBRATE THE MOVEMENT“ எனும் ஸ்லோகன் அதாவது  வாக்களியுங்கள் – விரலில் மை வைத்துக்கொள்ளுங்கள் – அந்த தருணத்தை கொண்டாடுங்கள்” என்ற வலுவான செய்தியுடன் இந்த சலுகையை அறிவித்துள்ளது. 


இந்த சிறப்பு பிரச்சாரத்தின் கீழ், வாக்களித்ததற்கான சான்றாக தங்களது சுட்டுவிரலில் அழியாத மை குறியுடன் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் ஷோரூமுக்கு வருகிற எந்த வாடிக்கையாளருக்கும், உடனடியாக ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 மேலும் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் வகையில், இந்த சலுகை 2026 ஏப்ரல் 30ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த முயற்சி குறித்து  பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் Chairman குஷால் கங்காரியா கூறும்போது, 

வாக்களிப்பதே நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும்,  தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் பங்கேற்பும் நாட்டை வலுப்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். 


தங்கள் ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றும் மக்களை கௌரவிக்கும் விதமாகவே இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  வாக்களித்தபின்,  பெருமையுடன் அந்த விரல் மை குறியுடன் தங்கள் ஷோரூமுக்கு வரும்போது, வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதோடு மட்டுமல்லாமல், வலுவான இந்தியாவை உருவாக்கும் தங்கள் பங்களிப்பையும் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார். 


பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிர்வாக இயக்குநர் தினேஷ் கங்காரியா, 

இந்த திட்டம்,  தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்து வாக்களித்திருந்தாலும்,   சென்னையில் உள்ள தங்களுடைய  எந்த ஷோரூமையும் அணுகி, தங்கள் மை குறியைக் காட்டி ரூ.5,000 தள்ளுபடியைப் பெறலாம் என்று கூறினார்.


சமூக பொறுப்புணர்வு மற்றும் ஜனநாயகத்தின் மீதான அன்பு காரணமாகவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்தாகவும், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும் தெரிவித்த அவர்,  மாநிலம் முழுவதும் வாக்களிப்பு பங்கேற்பை ஊக்குவிப்பதே தங்களுடைய  நோக்கம் என்றார். 


இந்நிகழ்ச்சியில்,  சென்னையில் பிறந்து, தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு, பிரத்யேக வடிவமைப்புடைய கைக்காப்பை அணிந்து, வாக்காளர்களை உற்சாகமாக வாக்களிக்க அழைத்தார்.  அவர் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார். இந்த விளம்பரத்தில்

"வாக்களிப்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது  பெருமை!” என்ற தமிழ் வாசகம் இடம்பிடித்து இருந்தது. 


மகேஷ் பாபு தற்போது புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் “வாரணாசி” என்ற மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.


60 ஆண்டுகளாக நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக விளங்கும் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சிறந்த நகை சேவையை வழங்கி வருகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பல கிளைகளுடன், தரம், நம்பிக்கை மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.


இந்த சலுகை, 2026 ஏப்ரல் 23ஆம் தேதி வாக்களித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். வாங்கும் நேரத்தில் விரல் மை குறியைக் காட்ட வேண்டும். இது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Friday, 24 April 2026

ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு

 *ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*






*250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!*


*சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!*


இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.


“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.


மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரம்மாண்டமான அணியில் சாம் CS தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.


“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது.


இப்படத்தில் சாம் CS ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் CS பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் "கராத்தே பாபு", கார்த்தியின் "சர்தார் 2" படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.