Featured post

Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan

 *'Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan has popular Malaysian actor Yuvaraj Krishnasam...

Tuesday 22 October 2024

Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan

 *'Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan has popular Malaysian actor Yuvaraj Krishnasamy in lead role*





*Based on the true events of film world and politics, 'Padaippaali' will release soon*


Bramma Anburaj, a leading distributor who has successfully distributed more than 100 films in Tamil Nadu including 'Chennai 28' and 'Perazhagan', is turning producer by bankrolling a movie titled 'Padaippaali' under his AVR Anbu Cinemas banner.


Directed by Balaji Jayabalan, the film stars Yuvaraj Krishnasamy and Balaji Jayabalan as protagonists. It is to be noted that Yuavaraj Krishnasamy has played the lead in more than 20 Malaysian Tamil films. 


The plot of 'Padaippaali' revolves around a debutant filmmaker and his movie about honour killings facing tinsel and real politics. The movie is based on some true incidents.


Actress Soundarya is debuting as the heroine in 'Padaippaali'. Famous producer K.Rajan, director of 'Kaadhal Kankattudhe'  Sivaraj, Karthikeyan Govindaraj, Prasanth Varman, A.M.S. Harikrishnan, Priyadarshini, Dominic, Andlin, Dharmaraj, Pradeep, Dayanesh, and Karthik Manas are part of the film's cast. 


S.R. Ram, who worked as music director for many films, has composed the music. Mithun Chandran and Rajes D.G. have taken care of cinematography, while Anjesh and Antony Britto are in charge of editing. SFX is by FX Studio and VFX by Cinefile Studio. Kumaraguru, Ramji, Sakthi, and Prabhu are co-directors.


Talking about 'Padaippaali', director Balaji Jayabalan said, "It is a pleasure to direct the first production of successful distributor Bramma Anburaj. Everyone including famous Malaysian actor Yuvaraj Krishnasamy has contributed very well. 'Padaippaali' will be racy from the beginning to the end."


AVR Anbu Cinemas has informed that 'Padaippaali' will be released in the theaters soon and an official announcement about it will be made very soon.


FMS distribution is acquired by POKETPLAY FILMS, Mr. Veerasegar and Mr Thiruvarasu

ஏவிஆர் அன்பு சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி ஜெயபாலனின்

 *ஏவிஆர் அன்பு சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி ஜெயபாலனின் இயக்கத்தில் பிரபல மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்கும் திரைப்படம் *படைப்பாளி'*





*திரை மற்றும் அரசியல் உலகின் உண்மை சம்பவங்களில் அடிப்படையில் உருவாகியுள்ள‌ பரபரப்பு திரைப்படமான‌ 'படைப்பாளி' விரைவில் வெளியாகிறது*


'சென்னை ‍ 28', 'பேரழகன்' உள்ளிட்ட‌ 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக‌ விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான‌ பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் 'படைப்பாளி'.


பாலாஜி ஜெயபாலன் இயக்கும் இத்திரைப்படத்தில் மலேசிய தமிழ் திரையுலகில் 20க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள‌ யுவராஜ் கிருஷ்ணசாமி மற்றும் பாலாஜி ஜெயபாலன் நாயகர்களாக நடிக்கின்றனர். தனது முதல் படத்தை இயக்கும் ஒரு இளைஞனும் ஆணவக் கொலைகள் குறித்த அவனது படைப்பும் திரையுலக மற்றும் நிஜ அரசியலை எதிர்கொள்வதே படத்தின் மையக்கரு. சில உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ள‌து.


கதாநாயகியாக நடிகை சவுந்தரியா அறிமுகமாகும் 'படைப்பாளி' திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், 'காதல் கண்கட்டுதே' திரைப்படத்தின் இயக்குநர் சிவராஜ், கார்த்திகேயன் கோவிந்தராஜ், பிரசாந் வர்மன், ஏ.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன், பிரியதர்ஷினி, டோமினிக், ஆண்ட்லின், தர்மராஜ், பிரதீப், தயனேஷ், கார்த்திக் மானஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.  பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிய எஸ்.ஆர். ராம் இசையமைத்துள்ளார்.


மிதுன் சந்திரன் மற்றும் ரஜேஸ் டி.ஜி. ஆகியோரின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின்  படத்தொகுப்பு பணிகளை ஆஞ்சேஷ் மற்றும் ஆண்டனி பிரிட்டோவும், எஸ்.ஃஎப்.எக்ஸ் பணிகளை ஃஎப்.எக்ஸ் ஸ்டுடியோவும் வி.ஃஎப்.எக்ஸ் பணிகளை சினிஃபைல் ஸ்டுடியோவும் செய்துள்ளனர். குமரகுரு, ராம்ஜி, சக்தி, பிரபு ஆகியோர் இணை இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். 


'படைப்பாளி' குறித்து பேசிய இயக்குநர் பாலாஜி ஜெயபாலன், "வெற்றிப்பட விநியோகஸ்தரான பிரம்மா அன்புராஜ் அவர்களின் முதல் தயாரிப்பை இயக்குவது மகிழ்ச்சி. பிரபல மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும் வகையில் 'படைப்பாளி' உருவாகியுள்ளது," என்றார்.


'படைப்பாளி' திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் பட நிறுவனமான‌ ஏவிஆர் அன்பு சினிமாஸ் தெரிவித்துள்ளது.


***

ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு

 *ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !!!*




















 ZEE5 நிறுவனம் அதன் அடுத்த  ஒரிஜினல் சீரிஸான,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது.  ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில்  தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர்.   


இந்த அதிரடி  திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  


இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 


பின்னர் மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 


ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது... 

எங்கள் படைப்புகளைப் பாராட்டி ஊக்கம் தரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படைப்பிற்கு உறுதுணையாக இருந்த சிஜு பிரபாகரன் சாருக்கு நன்றி. இந்த படைப்பைத் தயாரிப்பது மிக கஷ்டமான விசயம், அதைச் சாத்தியமாக்கிய அபிராமி ராமநாதன் சாருக்கு நன்றி. அஜய் மனதில் உள்ளதைப் பேசி விடுவார் இந்த சீரிஸ் உருவாக மிக முக்கிய காரணம் அவர் தான், நாகா சாருடன் ஆரம்ப காலங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரை அப்போதிருந்தே பிரமிப்பாகப் பார்த்து வருகிறேன், இன்னும் பிரமிப்பாகவே இருக்கிறது.  தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். தன்ஷிகா மிக அருமையாக நடித்துள்ளார், சந்தோஷ் பிரதாப் இந்த பாத்திரத்தை மிகச்சிறப்பாகக் கையாண்டுள்ளார். அனைத்து நடிகர்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும், நன்றி  


அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அஜய் கூறுகையில்... 

இந்த படைப்பு உருவாக 3 வருடம் ஆனது, எதற்கு 3 வருடம் என்பது நீங்கள் பார்த்த போது தெரிந்திருக்கும். ஒரு வெப்சீரிஸை  ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எடுத்தால், அது தயாரிப்பு நிறுவனத்துக்கு லாபம் தராது, ஆனால் இந்தக்கதையை மிகச் சிறப்பாக, மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் தர வேண்டும் என்ற உறுதியுடன், அபிராமி ராமநாதன் சார், நல்லம்மை ராமநாதன் அவர்கள் இணைந்து தயாரித்துள்ளார்கள். அடுத்தடுத்து வரும் வெப் சீரிஸிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் இந்த சீரிஸை தந்துள்ளார்கள், அவர்களுக்கு நன்றி. மிகச்சிறந்த ஒத்துழைப்பைத் தந்த  சிஜு சார், நண்பர் கௌஷிக் இருவருக்கும் நன்றி. கௌஷிக் இல்லாமல் இந்த சீரிஸ் சாத்தியமில்லை அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் நாகா, எதற்கும் காம்பரமைஸ் ஆகாத இயக்குநர் அவருக்கு நன்றி, நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த  சீரீஸ் பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்.



அபிராமி மீடியா ஒர்க்ஸின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கூறுகையில்...,

மிக நீண்ட நாட்களாவிட்டது, இடையில்  எங்கள் தயாரிப்பில் "விநோத சித்தம்" படத்தை உருவாக்கினோம், அது நல்ல வெற்றி. ZEE5 லிருந்து இது நல்ல கதை, தயாரியுங்கள் என்றனர், இந்த டீம் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநர் நாகாவின் மர்மதேசம் தொடருக்குத் தீவிர ரசிகன் நான், ஒய் ஜி மகேந்திரன் என்னுடன் படித்தவர், நல்ல டீம், நாகா கதை சொன்னார், ஐந்தாம் வேதம் இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியாது, இந்த சீரிஸ் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் பற்றிப் பேசுகிறது. ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் கொலையும் செய்யும், மனித உருவும் எடுக்கும், கடவுளை மீறி விடும்,  மிகப் பரபரப்பான திருப்பங்களுடன் நீங்கள்  ரசிக்கும் வகையில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ்   25 ஆம் தேதி வெளியாகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


அபிராமி மீடியா ஒர்க்ஸ் CEO டாக்டர் சீனிவாசன் கூறுகையில்...,

இந்த சீரிஸ் எடுக்கும் போது பல தடைகள் இருந்தது, அனைத்து பிரச்சனைகளையும் அபிராமி ராமநாதன் சார் மிக எளிதாகத் தீர்த்து விடுவார், இந்த சீரிஸ் எந்தளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் பார்க்கும் போதே தெரியும், இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். எங்கள் விநோத சித்தம் படத்திற்குத் தந்தது போல் இந்த சீரிஸிற்கும் முழு ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன், ZEE5 உடன் எங்களது இனிமையான பயணம் தொடரும்,  நன்றி. 


இசையமைப்பாளர் ரெவா கூறுகையில்...

அயலிக்குப் பிறகு மீண்டும் இந்த சீரிஸில் பணியாற்றியது, மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்கும் என நம்புகிறேன். இந்த சீரிஸில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் எனது நன்றி. பட குழுவினருக்கு நன்றி.


நடிகர் சந்தோஷ்  பிரதாப் கூறுகையில்...,

இந்த சீரிஸில் நடித்தது பெரிய மகிழ்ச்சி.  இந்த சீரிஸிற்காக நிறைய புதிய இடங்கள், நம்ப முடியாத இடங்களுக்கெல்லாம் பயணித்திருக்கிறேன், பல ஊர்களுக்குப் பயணித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அறிமுக நடிகர்கள் முதல் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் வரை நிறையப் பேர் இதில் நடித்துள்ளார்கள், எல்லோரிடமும் நல்ல நட்பு உள்ளது.  எல்லோருமே மிகச் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள்.  தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள் வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து போது, அனைவருக்கும் காய்ச்சல், ஆனால் யாருமே  ஓய்வெடுக்காமல் உழைத்தார்கள். நாகா சாரின் தீவிர ரசிகன்,  மிகப் பொறுமையாக அனைவரையும் கையாள்வார். அவரது பொறுமை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடன் நடித்த சிறு பையனுக்குக் காட்சியை அவ்வளவு விளக்கமாகச் சொல்லி, நடிப்பை வாங்குவார். அவரை பார்க்க ஆசையாக இருக்கும். அவருக்காகத் தான்  இந்த சீரிஸ் நடித்தேன், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன், அவருடைய படைப்பில் இன்னும் நிறைய நடிக்க ஆசை. என்னுடன் நடித்த தன்ஷிகா  மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். அவருக்கு இது முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.  ZEE5 மற்றும் அபிராமி மீடியா ஒர்க்ஸ் இருவருக்கும் நன்றி, மிகச் சிறப்பாக பார்த்துக் கொண்டார்கள். இந்த சீரிஸ் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


நடிகை தன்ஷிகா கூறுகையில்...

உங்களோடு இணைந்து இந்த சீரிஸ் பார்த்தது, மிக மிகத் திருப்தியாக இருந்தது. தாய் மொழியில் மீண்டும் ஒரு படைப்பு, மிகத் திருப்தியாக இருக்கிறது. ஐந்தாம் வேதம் மூலம் மிகச்சிறந்த குழுவுடன் இணைந்து பயணித்து மகிழ்ச்சி. என் சின்ன வயதில் மர்ம தேசம் மிகப்பெரிய பயத்தைத் தந்த சீரிஸ், எனக்கு மிகப்பிடித்த சீரிஸ், நாகா சார் கூப்பிடுகிறார் என்றவுடன் உடனே அவர் ஆபீஸ் போய்விட்டேன், ஐந்தாம் வேதம் பற்றிச் சொன்னார், அனு கதாப்பாத்திரம் பற்றிச் சொன்னார். அவர் ஐடியாவே பிரமிப்பாக இருந்தது, அவரிடம் பேசினாலே பிரமிப்பாக இருக்கும். இந்த சீரிஸில் எங்கள் படக்குழு கடுமையான உழைப்பைத் தந்துள்ளார்கள். பல தடைகள் இருந்தது, ஆனால் அபிராமி ராமநாதன் சார் அனைத்தையும் மிக எளிதாகக் கையாண்டார், அவருக்கு நன்றி. ஒய் ஜி மகேந்திரன் சார் உடன் நடித்தது மிக ஜாலியான அனுபவமாக இருந்தது. ZEE5 மூலம் இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் சென்று சேரவுள்ளது, இந்த சீரிஸை, எங்களை நம்பியதற்கு ZEE5 க்கு நன்றி. என்னை நம்பி இந்த பாத்திரம் தந்த நாகா சாருக்கு நன்றி. இந்த சீரிஸிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகர் பொன் வண்ணன் கூறுகையில்... 

இந்த படைப்பின் கதாநாயகன் நாகா சார், மர்ம தேசம் வந்து 25 வருடங்களாகிவிட்டது, 25 வருடங்கள் கடந்தும், அதே மனநிலையோடு, அதே திறமையோடு இருக்கும் நாகா சாரை பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. நாகா சார் நினைத்ததைச் செய்வதில் வல்லவர். மிகமிக நுணுக்கமான கலைஞன், ஒவ்வொரு நடிகரிடம் அவர் நடிப்பு வாங்குவதைப் பார்க்க அலாதியாக இருக்கும், இப்படிப்பட்ட மாகா கலைஞனோடு மீண்டும் இந்த ஐந்தாம் வேதம் சீரிஸில் பயணித்தது மகிழ்ச்சி. இந்த சீரிஸை தயாரித்திருக்கும் அபிராமி  ராமநாதன் அவர்களும் கலைத்துறையில் முன்னோடி. அவர் தயாரித்த விநோத சித்தம் படமும், இந்த ஐந்தாம் வேதம் சீரிஸை தயாரித்ததும் அவர் முன்னோடி சிந்தனையாளர் என்பதை நிரூபிக்கிறது. காலம் தந்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு வெப் சீரிஸ், அதை முழுமையாகப் புரிந்து கொண்டு, நல்ல கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து,, அயலி, வீரப்பன் என ZEE5 அருமையான படைப்பைத் தந்து வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த சீரிஸை அவர்கள் அனைத்து தரப்பினருடமும் எடுத்துச் செல்கிறார்கள். நடிகை தன்ஷிகா பேராண்மையிலிருந்து கவனித்து வருகிறேன் மிகச்சிறந்த நடிகை, அவருக்கு இந்த  சீரிஸ் நல்ல பெயரைப் பெற்றுத் தரும், அனைவருக்கும் நன்றி. 



நடிகர் ஒய் ஜி மகேந்திரன் கூறுகையில்...,

பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார்கள் அப்போதே தெரிந்து விட்டது, இந்த சீரிஸ் மிகப்பெரிய வெற்றி என்று, ZEE5 க்கும் அபிராமி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும், உங்களுக்கு வாழ்த்துக்கள். மிஸ்டரி இயக்குநர் நாகா, மிகத்திறமையான இயக்குநர் அவருடன் நான்கு படைப்புகளில் பணிபுரிந்துள்ளேன் அவர் ஒரு நடிகரை ஒரு பாத்திரத்திற்குத் தேர்வு செய்தால் அது கன கச்சிதமாக இருக்கும். எல்லோரிடமும் மிகச்சிறப்பாக வேலை வாங்கி விடுவார், எப்போதும் முழுக்கதையும் சொல்ல மாட்டார், நான் இன்னும் முழுமையாக சீரிஸ் பார்க்கவில்லை, பார்க்க ஆவலாக இருக்கிறேன். நாகா ரிசர்ச் செய்யாமல் ஒரு சீரிஸ் செய்யமாட்டார், அவர் பெர்ஃபெக்ஸனிஸ்ட். அவர் சின்னத்திரை ஸ்பீல்பெர்க் என்பேன். எல்லோரும் நல்ல பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


இயக்குநர் நாகா கூறுகையில் 

ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன், முழுமையாக முடிந்த பிறகு கௌஷிக்கிடம் தந்தேன், சிஜுவுக்கும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே ஆரம்பிக்கலாம் என்றார்.  7 மாதம் திரைக்கதை வேலை மட்டும் பார்த்தோம். பின்னர் தான் அபிராமி வந்தார்கள், எல்லாம் இனிமையாக நடந்தது. என்னோடு இந்த திரைக்கதையை மணிகண்டன் இணைந்து எழுதினார் அவருக்கு என் நன்றி. ஏஐ பற்றிய பயத்தை, நான் இந்த சீரிஸில் கொஞ்சம் பேசியிருக்கிறேன், இன்னும் 2 சீசன் இருக்கிறது, அதில் மனிதர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பது கதையாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்குமென நம்புகிறேன் உங்கள் ஆதரவைத்தாருங்கள் அனைவருக்கும் நன்றி. 



ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது !

பராசக்தி: சிவாஜி கணேசன் நடிப்பில் புரட்சிகரமான கதைக்களம்

 *பராசக்தி: சிவாஜி கணேசன் நடிப்பில் புரட்சிகரமான கதைக்களம் மற்றும் பின்புலம்*



ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சிவாஜி கணேசன் நடிச்ச பராசக்தி படத்தை பத்தி தான் பாக்க போறோம். இந்த படத்தை கிருஷ்ணனும் பஞ்சும் தான் இயக்கி இருக்காங்க. இந்த படத்துக்கு வசனம் எல்லாம் கலைஞர் கருணாநிதி தான் எழுதிருக்காரு. Sivaji Ganesan -  Gunasekaran ஆவும் , S. V. Sahasranamam - Chandrasekaran ஆவும் , S. S. Rajendran -  Gnanasekaran ஆவும்  Sriranjani -  Kalyani ஆவும்  Pandari Bai -  Vimala ஆவும்  நடிச்சரிப்பாங்க .  இவங்க  தான்  இந்த  படத்துக்கு  முக்கியமான  characters . இந்த படத்தோட ஸ்வாரசியமான விஷயங்களையும், படத்தோட கதையும் பாப்போம் வாங்க.  


பராசக்தி 1952-ஆம் ஆண்டு தீபாவளி அன்னிக்கு , அக்டோபர் 17-ஆம் தேதி வந்தது.   இந்த படம் தான்  சிவாஜி கணேசனுக்கும் ராஜேந்திரனுக்கும் முதல் படமும் கூட. பாவலர்  பாலசுந்தரம் எழுதுன பராசக்தி நாடகத்தை ஓட கதையை  அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் இந்த படம், இந்த படத்தோட கதையை ஒரே வரில சொல்லணும் ந  இரண்டாம் உலகப் போர் நடந்துட்டு இருக்கும்போது  ஒரு தமிழ் குடும்பத்துக்கு ஏற்படுற கஷ்டங்கள் தான் இந்த படம். 


பாவலர் பாலசுந்தரம் எழுதிய பராசக்தியும் T S நடராஜன் எழுதிய என் தங்கையும் சேர்த்து ஒரே படமா பண்ணனும் னு முடிவு பண்ணிச்சு coimbatore ல இருக்கற  Central ஸ்டுடியோஸ். ஆனா இதுக்கு T S நடராஜன் ஒதுக்கதுனால இந்த நிறுவனம் அப்படியே விட்டுருச்சு. இதுக்கு முன்னாடி சிவாஜி ஒரு நாடக நடிகர் அ இருந்த சமயம், என் தங்கை ன்ற நாடகத்துல தான் அன்னான் வேஷம் எடுத்து நடிச்சிருந்தாரு. அதுக்கு அப்புறமா பராசக்தி அ படமா எடுக்கிறதுக்கு க்கான  உரிமையை நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பி. ஏ. பெருமாள், ஏ. வி. மெய்யப்பன் ஓட support ல வாங்கினாரூ . இந்த படத்துக்கு  இசை அமைச்சர்  ஆர். சுதர்சனம், ஒளிப்பதிவு எஸ். மருதிராவ், அப்புறம்  படத்தொகுப்பை பஞ்சு "பஞ்சாபி" என்ற புனைப்பெயரில வேலை பாத்தாரு. படப்பிடிப்பு 1950-ஆம் ஆண்டுல தொடங்கி ரெண்டு வருஷமா படப்பிடிப்பு போச்சு. 


இந்த படம்  நெறய நாட்கள் வெற்றிகரமா ஓடி வர்த்தக ரீதியாவும் வெற்றி அடைஞ்சுச்சு னு தான் சொல்லணும். அப்போ இருந்த நெறய செய்தி தாள்கள் கலைஞர் ஓட டயலாக்ஸ் யும் சிவாஜி கனேசன் ஓட நடிப்பையும் பெரிதளவு ல பாராட்டி போட்டு இருந்தாங்க.  இருந்தாலும்  S. Theodore Baskaran.படி அதிகமான சர்ச்சைக்குள்ளான படம் ந அது பராசக்தி னு தான் சொல்லுறாரு. அது என்னனு பாத்தீங்கன்னா   பிராமணர்கள் களையும்  இந்து பழக்கவழக்கங்கள்,  மரபுகளை எதிர்மறையாகக் காமிச்சதுக்காக பல சர்ச்சைகளுக்கு உண்டாச்சு னு தான் சொல்லணும். இதுனால  உயர்ந்த சமுதாயத்தினர் யும்  தமிழக அரசாங்கமும் சேர்ந்து, இந்த படத்தை  தடை செய்யணும் னு சொன்னாங்க.  அப்போ மெட்ராஸ் ஓட CM அ இருந்த Rajagopalachari இந்த படத்தை ரிலீஸ் பண்ண allow பண்ணாரு.  இந்த படம் ரிலீஸ் ஆகி ஆறு மாசத்துக்கு அப்புறம் பராசக்தி யா கல் னு சொல்ற சீன் யும் , கோயில் பூசாரி ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடத்துகிற scene யும் படத்துல இருந்து தூக்கிட்டாங்க. இருந்தாலும் இந்த படத்தோட தாக்கமும், இதுல சொல்ல வர கருத்தும் இன்னிக்கு வரைக்கும் நிலைச்சு நிக்குது னு தான் சொல்லணும். சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதை என்னனு பாப்போம்.  


சந்திரசேகரன், ஞானசேகரன் மற்றும் குணசேகரன் னு மூணு அன்னான் தம்பிங்க பர்மா ல இருக்கற ரங்கூன் ன்ற ஊர்ல தங்கிட்டு இருப்பாங்க. சந்திரசேகர் அவரோட மனைவி சரஸ்வதி ஓட இருப்பாரு. இவங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்கும் அவங்க பேரு தான் கல்யாணி. இவங்க அவங்க அப்பா மாணிக்கம்பிள்ளை கிட்ட மதுரை ல இருப்பாங்க.  1942-ல  உலகப் போர் நடந்துட்டு இருக்கும் போது மூணு பேரும், அவங்களோட தங்கச்சி கல்யாணத்துக்காக மதுரை க்கு போகணும்னு முடிவு பண்ணுவாங்க. போர் ஓட நிலைமை அப்புறம் பர்மா ஓட கப்பல்களை தாக்குறது னால ஒரே ஒரு டிக்கெட் தான் குடுப்பாங்க இதுனால கடைசி தம்பியான குணசேகரன் அதைப் வாங்கி  தமிழ்நாட்டுக்குப் புறப்படுறரு . போர் னால கப்பல் ரொம்ப தாமதமா தான் தமிழ்நாட்டு க்கு வருது, இதுனால அன்னான் கல் யாரும் இல்லாம கல்யாணி ஓட கல்யாணம் நடந்து முடிஞ்சுடுது.  


கல்யாணி கர்ப்பம் ஆகுறாங்க . ஆனால், அவங்களுக்கு  குழந்தை பிறக்குறை  அதே நாலு ல தான் தங்கப்பன் ஒரு விபத்தில இறக்கிறாரூ  இதுனால  மணிக்கம்பிள்ளை அதிர்ச்சியால இறந்துடுறாரு,கல்யாணி யும்  இவங்களோட  குழந்தை யும்  ஆதரவில்லாமல இருக்கறாங்க .அப்போ தான் இவங்களோட வீடு ஏலம் க்கு விட்டுட்ருங்க  , வேற வழி இல்லாம தெருல  உணவுப் பொருள் எல்லாத்தயும் விற்பனை செய்து அவங்களோடயே  வாழ்க்கையை நடத்துரங்க . குணசேகரன், கடலில் பல மாதமா   சிக்கித் தவித்து, கடைசியா  சென்னை வராரு. ஆனா, ஒரு நடன நிகழ்ச்சி அ பாக்கும்  போது, ஒருத்தர் இவருக்கு மயக்கத்தை உண்டாக்கி, அவருடைய  பொருள்களும் கொள்ளையடிசிட்டு போய்டுறாரு . இவரோட வாழக்கை ல தொடர்ந்து நெறய விஷயங்கள் மோசமா நடக்கவே  பைத்தியமா நடிக்கிறாரூ. அப்புறமா குணசேகரன்,  அவருடய தங்கையை மதுரையில பாக்குறாரு, அப்போ தான் இவருடைய அப்பா மரணமும் தங்கச்சி ஓட   வறுமையையும் தெரியவருது. இவரும் வறுமைல இருக்கறதுனால தங்கச்சி கிட்ட தான் யாரு னு சொல்லிக்காம இருந்துடுறாரு. இவரு ஒரு பைத்தியமா தன்னோட தங்கச்சிய சுத்தி சுத்தி வருதுனாலே கல்யாணி க்கு இந்த ஆளு மேல வெறுப்பு அதிகமா வருது. இன்னும் வரையும் இவரு நம்மோட அன்னான் தெரியாம இவங்களும் இருக்காங்க. 


ஒரு கட்டத்துல கல்யாணி ஒரு வில்லன்  வேணுவால கிட்டத்தட்ட பலாத்காரம் பண்ண போற சமயத்துல , குணசேகரன் காப்த்திவிட்டுறாரு . அப்புறமா , கல்யாணி மதுரையை விட்டு திருச்சிக்கு போறாங்க , அங்க  கருப்புச்சந்தை வியாபாரி நாராயண பிள்ளையின் வீட்டில் வேலை செய்யறாங்க, இங்கயும் இந்த ஆளு இவங்ககிட்ட தப்பா நடந்துக்கும் போது, நாராயண பிள்ளை ஓட மனைவி காப்பதிவிட்டுறாங்க  இந்த பிரச்சனை னால இங்க இருக்குற வேலையும் விட்டுடறாங்க.  தன்னோடைய தங்கச்சி யா தேடி வந்த குணசேகரன் திருச்சிக்கு வராரு இங்க பணக்காரியான விமலா வ சந்திக்கறாரு. அவங்க கிட்ட இவரை பத்தியும் தங்கச்சிய பத்தியும் சொல்லறாரு அவங்க வீட்ல ஒரு நாள் தங்கிட்டு, அங்க இருந்து எதுவும் சொல்லாம வெளில வந்துடுறாரு அப்புறமா தன்னோட தங்கச்சி யா தேட ஆரம்பிக்குறாரு. 


ஜப்பான் ஆட்கள் ஓட  தாக்குதல்கள் பர்மாவில் அதிகம் ஆகும்போது , சந்திரசேகரனும் ஞானசேகரனும் இந்தியாவிற்கு திரும்ப வராங்க.. சந்திரசேகரன், சரஸ்வதி ஓட  திருச்சி க்கு வந்து நீதிபதி ஆயிடுறாரு, ஆனால் ஞானசேகரன் வர வழி ல தொலைஞ்சு போய் ஒரு கால் அ இழந்துடுறாரு. கடைசில பிச்சை எடுக்கற நிலைமை க்கு தள்ள படுறாரு. இதுனால  பிச்சைக்காரர்களுக்குனு  ஒரு சங்கத்தை உருவாக்கி அவங்கள  சீர்திருத்த வேலைகளை பண்ண ஆரம்பிக்குறாரு. கல்யாணி, சந்திரசேகரனின் ஓட வீட்டுக்கு  சாப்பாடு  கேட்டு வருவாங்க , சந்திரசேகரன் க்கு தன்னோட தங்கச்சி அடையாளம் தெரியதனால வீட்டை விட்டு தொரத்தி விட்டுவாரு. கடைசியா ஒரு கோயில்க்கு போய் ஒரு பூசாரி  கிட்ட உதைவி கேட்க்கும் போது அவரும் தப்பா நடனத்துக்கு முயற்சி பண்ணுறாரு. இப்படி வாழக்கை முழுவதும் கஷ்டங்கள் தான் வந்துட்டு இருக்குனும், குழந்தைக்கு உணவு கொடுக்க கூட முடியாதனல  கல்யாணி ஒரு ஆத்துல குழந்தையை தள்ளி விட்டு , தானும் தற்கொலை செய்ய பாக்குறாங்க , ஆனா கொஞ்ச நேரத்தில் குழந்தை யா  கொலை செய்ஞ்சதுக்காக  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வந்துடுறாங்க.


நீதிமன்றத்தில், தான் ஏன் குழந்தையை கொலை செய்ஞ்சன் என்றத்துக்கு விளக்கம் குடுக்கறாங்க அங்க நீதிபதியை இருக்கிறது இவங்க அன்னான் சந்திரசேகரன் தான். அங்க நிக்கிறது தன்னோட தங்கச்சி னு தெரியவரும்போது அதிர்ச்சி தாங்காம மயக்கம் போட்டு கீழ விழுந்துடுறாரு. 


அதே சமயத்துல  குணசேகரனும், பூஜாரியை அடிச்சதுக்காக  நீதிமன்றத்தில வந்து நிக்க வைக்கிறாங்க , அவரும் அவரோட கஷ்டங்களை சொல்லுறாரு. இங்க தான் சமூகத்துல நடக்கற கொடுமைகளை சொல்லுறாரு. இந்த வழக்கு நடுக்கும் போது விமலா கல்யாணி ஓட குழந்தைய அவங்க கிட்ட குடுக்கறாங்க. உண்மையா சொல்ல போன அந்த கொழந்தை தண்ணி ல விழம படுகு ல விழுந்திருக்கும். இதுக்கு அப்புறம்  கல்யாணி யும்  குணசேகரன் யும்  நீதிமன்றத்தால மன்னிப்பு வழங்கி விட்டுறாங்க. இதுக்கு அப்புறம் ரெண்டு பேரும்  சந்திரசேகர ஓட ஒன்னு சேந்துடுறாங்க. ஞானசேகரன் அவரோட  பிச்சைக்கார சங்கத்திற்காக நன்கொடை வாங்கும் போது திடீரென இவங்களோட  சேந்துடுறாரு. விமலா யும்  குணசேகரன் யும் கல்யாணம்  பண்ணிக்க முடிவு பண்ணுறாங்க. இதுக்கு அப்புறமா ஆதரவற்ற குழந்தைகளுக்கான எல்லா நல்ல விஷயங்களையும் இந்த குடும்பம் பண்ண ஆரம்பிக்குது.


உங்களுக்கு ஒன்னு தெரியுமா என்னதான் சிவாஜி கணேசன் ஓட முதல் படமா இது இருந்தாலும், இவரோட நடிப்பை மெய்யப்பன் க்கு பிடிக்கவேயில்லயே அதுனால K R ராமசாமி யா இவருக்கு பதிலா நடிக்க வைக்கலாம் னு சொன்னாரா. ஆனா பெருமாள் தான் இவரே நடிக்கட்டும் சொல்லி சிவாஜி யா நடிக்க வச்சுரு. அதுமட்டும் கிடையாது என்ன என்ன scenes லாம் பிடிக்கலையோ அதெல்லாம் மறுபடியும் எடுத்து அதுக்கு அப்புறம் தான் release பண்ணிருக்காங்க. அப்போ சிவாஜி கணேசன் இந்த படத்துக்கு 250 ரூபா னு மாசம் சம்பளம் வாங்கிட்டு இருந்துக்குறாரு. அப்போ இருந்த  C. N. Annadurai. ன்ற பெரிய politician ஓட வார்த்தைகளை கேட்டு நாடக கலைஞர் அ இருந்த  S. S. Rajendran, இந்த படத்துல நடிக்க சம்மதிச்சாரு.  Sriranjani Jr. க்கு பதிலா Rajasulochana நடிக்க வேண்டியதா இருந்தது ஆனா அவங்களோட pregnancy காரணமா இந்த படத்துல அவுங்க நடிக்கல. 1950 ல ரிலீஸ் ஆனா ராஜா விக்ரமா ன்ற படத்துல பண்டாரி பாய் ஓட நடிப்பை பாத்து இந்த படத்துக்கு வாய்ப்பு குடுத்திருக்காரு மெய்யப்பன்.    இந்த படத்துல கடைசியா ஒரு பாட்டு வரும் எல்லாரும் வாழ வேண்டும் னு அந்த சோங் ல அப்போ தமிழ் நாட்டு ல இருந்த அரசியல்வாதிகள் ஆனா  C. Rajagopalachari, E. V. Ramasamy, M. Bhaktavatsalam, Annadurai, and Karunanidhi. னு இவங்க எல்லாரையும் காமிச்சிருப்பாங்க.


இந்த படத்துல DMK யும் அவங்கள பத்தின விஷயங்கள் நெறய இருக்குனு தான் சொல்லணும். அதெல்லாம் என்னனு பாப்போம்.  இந்த படத்தோட title song அ பாரதிதாசன் தான் எழுதிருப்பாரு த்ராவிடத்தோட பார்வைல நம்ம நாடு எப்படி இருக்கும்ன்றது தான் பாடல் அ அமைச்சிருக்கும். இந்த படத்துல கல்யாணி க்கு பொண் கொழந்தை பிறந்த nagammai நும்  பையன்  பொறந்த  pannirselvam னு  பேர்  வைக்கலாம்  னு  முடிவு  பண்ணுவாங்க . nagammai றவுங்க  அப்போ  இருந்த  Self-Respect Movement ல  ஒரு  activist அ  இருந்தாங்க  இவங்க  E V Ramasamy ஓட  மனைவி  யும்  கூட . pannerselvam ன்றவூரு  அப்போ  இருந்த  justice party ஓட  தலைவர்  அ   இருந்தாரு . அந்த காலத்துல இந்த படம் ஒரு சமூக புரட்சி யா அமைச்சிருந்தது னு கூட சொல்லலாம் அது மட்டும் கிடையாது. அப்போ இருந்த பெரிய செய்தி நாளிதழ் எல்லாம் இந்த படத்தை  "sociological satire" னு சொல்லி இருந்தாங்க. என்னதான் இந்த படத்துல பாதிக்கு மேல கல்யாணி யா சுத்தி கதை நடந்தாலும், இந்த படத்தோட எழுத்தாளர் கல்யாணி னு பேரு வைக்கறதுக்கு ஒரு காரணம் இருக்குனு தான் சொல்லணும். gunasekaran ஓட ஒரு dialogue னு ஒன்னு வரும், அதுல என்னோட தங்கச்சி பேரு கல்யாணி ரொம்ப மங்களகரமான  பேரு ஆனா அவளோட கழுத்துல தாலி இல்ல னு சொல்லுவாரு. இங்க தான் இந்த பேருக்கும் இவங்க வாழக்கை ல நடக்கற விஷயங்களை contrast அ எடுத்து சொல்லிருப்பாங்க.  இந்த படத்துல ஜாதி மதம் னு சொல்லி அதுல நடக்கற ஏமாத்து வேலைகளும், அப்போ மெட்ராஸ் அ ஆட்சி பண்ணிட்டு இருந்த congress க்கு எதிரா  கருத்துகள் இருக்கற மாதிரி தான் இந்த படத்தோட கதை இருந்துச்சு னு தான் சொல்லணும்.


இந்த படத்துல வர ஒரு சில songs அ பாத்தீங்கன்னா ஹிந்தி ல இருந்தும் பாகிஸ்தானிய உருது ல இருந்தும் வந்த பாட்டுகளோட அடிப்படில தான் அமைச்சுது. அதுல ஒரு சிலது பாத்தீங்கன்னா poomalai ன்ற பாட்டு duppatta ன்ற படத்துல வர "Sanwariya, Tohe Koi Pukare" ன்ற பாட்ட அடிப்படையா வச்சு வரும், புது பெண்ணின் ன்ற பாட்டு Patanga ன்ற படத்துல உள்ள ஒரு பாட்ட அடிப்படையா வச்சு வந்திருக்கும். இந்த படத்துல மொத்தமா   11 பாட்டு இருக்கும் 2009 june 3 ஆம தேதி கலைஞர் ஓட 86 வது பிறந்தநாளை கொண்டாடற விதமா இந்த படத்தோட பாட்டு எல்லாத்தயும் remix பண்ணி இருந்தாங்க. 


என்னதான் இந்த படத்தோட songs music னு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த படத்துல உள்ள dialogues க்கு பெரிய fanbase அ இருக்குனு தான் சொல்லணும். அந்தளவுக்கு உணர்ச்சி பூர்வமா ட்ராவிடத்தையும், சமுதாய மாற்றத்தை நோக்கி இருக்கற படம் தான் பராசக்தி னு சொல்லலாம். இதுல வர ஒரு சில dialogues அ பாப்போம். 

சமுதாய வளர்ச்சி கிளையை அறுப்பதில்லை ஆணி வேரை பெயர்ப்பது னு பண்டாரி பாய் சிவாஜி கணேசன் ஓட சுயநலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பாங்க. இந்த நாட்டுல எப்படி ஏழைகள் அ தள்ளி வச்சுருக்காங்க அவங்கள எப்படி இந்த உயர்ந்த சமூகம் பாக்குதுனு னு சொல்லும் இந்த வரிகள். “குதிரை  க்கு  பதிலா  நரம்பு  தெறிக்க  தெறிக்க  rickshaw இழுத்து  கூனி  போயிருக்கானே . நாயைப்போல  சுருண்டு  நடைபாதையில்  குடும்பத்தோடு  தூங்குகிறான் . நாலு  கால்  பிராணியை  ஆக  பாட்ட  மனிதனை  சொன்னேன் . னு குணசேகரன் அ நடிச்ச சிவாஜி சொல்லிருப்பாரு. ” இன்னொரு scene அ பாத்தீங்கன்னா ஒரு ஹிந்தி பேசுற தமிழ் ஆளு மன்னிப்பு கேட்கும் போது சிவாஜி maaf karaojiyavuthu மண்ணாங்கட்டி கரோஜி ஆவுது னு நக்கலா பேசிட்டு வருவாரு. அதே மாதிரி பாத்தீங்கன்னா கலைஞர் ஓட நாத்திக தன்மையும் நெறய  இந்த படத்துல தென்படும். குணசேகரன் ஒரு பழத்தை திருடிட்டு போகும் போது அந்த கடைக்காரரு கடவுள்க்கிட்ட வேண்டிட்டு இருப்பாரு. இதை பாத்த     குணசேகரன் தெய்வம் தான் கேட்கலையே, அவரு மனசு தான் கல்லா போச்சே னு சொல்லுவாரு. இதே மாதிரி இன்னொரு சீன் அ பாத்தீங்கன்னா அம்மாள் சிலைக்கு பின்னாடி இருந்து வந்து எல்லார்கிட்டயும் அம்பாள் எந்த காலத்துல பேசினா ? னும் கேட்பாரு. இந்த மாதிரி ஒரு change அ அந்த காலத்துல கொண்டு வந்துருக்காங்க ன்றது ஆச்சிரியம். அதுனால தான் இன்னிக்கு வரைக்கும் இந்த படம் பெரிதளவு ல cult classic னு சொல்ல படுத்து.


இந்த படத்துல பெரிய highlight அ அந்த court scene தான். இந்த படத்துல music அ விட dialogues க்கு பெரிதளவு ல importance குடுக்க பட்டது னு தான் சொல்லணும். இந்த படம் வெற்றிகரமா 175 நாட்களுக்கு ஓடிச்சு அது மட்டும் கிடையாது அப்போ பெரிய theatre அ இருந்த மதுரை ல இருக்கற thangam theatre க்கு இது தான் முதல் படமா screening பண்ணனாக. srilanka ல இருக்கற mailan theatre ல இந்த படம் 40 வரம் ஓடிச்சு அதுக்கு அப்புறம் இந்த படத்தை telugu ல dub பண்ணி 1957 jan 11 அன்னிக்கு ரிலீஸ் ஆகா பட்டது.       


அப்போ இந்த படம் எந்தளவுக்கு தாக்கம் இருந்துது ந இந்த படத்துல வர டயலாக்ஸ் ல பேசி மார்க்கெட் ல காசு ல வாங்குவாங்களா. வெறும்  பாட்டுக்கு மட்டும் casette இல்லாம dialogues க்கும் தனியா casette போட்டு பிரபல படித்துருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படம் வந்த பிறகு தமிழ்நாடு ல காங்கிரஸ் யா கவிழ்க்கர அளவுக்கு DMK க்கு பவர் கிடைச்சது. இந்த படத்துக்கு அப்புறமா DMK ஓட powerful person அ இருந்தாரு சிவாஜி கணேசன். இன்னிக்கு வரைக்கும் இந்த படத்தோட reference அ சூப்பர்ஸ்டார் ரஜினி ல இருந்து காமெடி ஆக்டர் விவேக் வரைக்கும் அவங்க நடிச்ச படத்துல பேசிருக்காங்க.


 பராசக்தி தமிழ் சினிமாவில ஒரு trendsetter னே சொல்லலாம்.  நகைச்சுவை, நாடகம் அப்புறம்  சமூக விமர்சனம் னு ரொம்ப  சக்திவாய்ந்த படமா  எதிர்காலத்துல வர படங்களோட  கதைக்கள அமைப்பை மாற்றியமைத்தது இந்த படம் னு தான் சொல்லணும். 


 சமூக மாற்றம், மதம், அரசியல் னு எல்லாத்தயும் சொல்லற ஒரு கதையா யோசிக்க வைக்கிற  உரையாடல்கல் ,சமூக சிக்கல்களை எடுத்து சொல்லற  படமா இருக்கறதுனால, இதை cult classic படமா இன்னிக்கு வரைக்கும் நிலைச்சு நிக்குது.

சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ” படத்திற்காக சித்தார்த் பாடிய “நீ என்ன

 சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ” படத்திற்காக சித்தார்த் பாடிய “நீ என்ன பாத்தியே” பாடல் ; 

கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பாடி வெளியிட்டார்! 









7 மைல்ஸ் பெர் செகண்ட் (7 Miles per second)  நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’ (Miss You). N.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.


‘சித்தா’ படத்தின் மிப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதன் புரொமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 


அந்த வகையில் சென்னை குன்றத்தூரில் உள்ள ‘சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ கல்லூரியில் (CIT) நேற்று இதன் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் சித்தார்த், இயக்குநர் N.ராஜசேகர், பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ ஆகியோர் கலந்து கொண்டனர்.  


இந்த நிகழ்வின்போது அங்கு குழுமியிருந்த மாணவர்களிடம் உரையாடிய சித்தார்த், அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்ததுடன் ‘மிஸ் யூ’ படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும் சில மாணவர்களுடன் மிஸ் யூ படத்தின் பாடலுக்கு இணைந்து நடனமும் ஆடினார்.


இந்த படத்தில்  “நீ என்ன பாத்தியே” என்கிற ஒரு பாடலையும் பாடியுள்ளார் சித்தார்த். இந்த பாடலை மேடையில் சித்தார்த் பாடி, மாணவர்கள் மத்தியில் பாடலை  வெளியிட்டார்.


Johnson Pro

இரவினில் ஆட்டம் காட்டும் நிழல் உலக நாயகன் !

 இரவினில் ஆட்டம் காட்டும் நிழல் உலக நாயகன் !








நவம்பர் 8 முதல் உலகமெங்கும் 'இரவினில் ஆட்டம் பார் '


'இரவினில் ஆட்டம் பார் ' ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் !


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நவராத்திரி படத்தில் இடம்பெற்ற 'இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ' என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும்.


அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் 'இரவினில் ஆட்டம் பார் 'என்கிற பெயரில் ஒரு முழு நீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம்.அந்தக் காமக் கொடூரர்களையும் போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் அழித்து ஒழிக்கும் கறுப்பு நாயகன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். படத்தின் முழுக்கதையும் இரவில் நடக்கிறது.


இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியுள்ளார் ஏ. தமிழ்ச்செல்வன்.


இப்படத்தின் கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகன் நிலையில் மாரா  ராஜேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக கிரேசி வருகிறார். இவர் சன் டிவியில் வரும் மல்லி, திருமகள் தொடர்களில் நாயகியாக நடித்து வருபவர். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.


இப்படத்திற்கு ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார் பாடல்கள் -செல்வராஜா . சண்டைக் காட்சிகளுக்கு எஸ். ஆர். ஹரிமுருகனும் நடனத்திற்கு ஸ்டைல் பாலாவும் பொறுப்பேற்றுள்ளனர்.படத்தொகுப்பு எஸ் ஆர் முத்து கொடாப்பா.


சேலம் ஏற்காடு பகுதியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்துள்ளார்கள்.ஏற்கெனவே படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி பிரபலமாகி படத்திற்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. இப்படத்தில் இடம்பெற்ற 'கருங்கூந்தல் அழகுக்காரி 'பாடல் சமூக ஊடகங்களில்  பிரபலமாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


தீபாவளிப் பண்டிகை தாண்டி நவம்பர் எட்டாம் தேதி 'இரவினில் ஆட்டம் பார் ' திரைப்படம் வெளியாகத் தயாராக உள்ளது.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் 'வெனோம்: தி லாஸ்ட்

 *ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!*



மார்வெல் ஆண்டி ஹீரோ வெனோமின் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அதிக எதிர்பார்ப்பில் உள்ள ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் உலகளவிலான வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது. 


டாம் ஹார்டியின் ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதிப் படம் அக்டோபர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் வெனோம் மற்றும் விமானத்தின் மேல் உள்ள ஜெனோமார்ப் இருவரும் இருக்கும்படியான போஸ்டரும் வெளியாகியுள்ளது. 


’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்திற்கான முன்பதிவுகள் அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. டாம் ஹார்டியின் பிரியமான ஆன்டி-ஹீரோ உரிமையின் கடைசிப் பாகமான ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் த்ரில்லான ஆக்‌ஷன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களைக் கொண்டிருக்கிறது. மேலும், மார்வெலின் ஆன்டி-ஹீரோவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக விடை கொடுக்கிறது. 


மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான வெனோமாக டாம் ஹார்டி மீண்டும் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸி'ல் வருகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்களும் வேட்டையாடப்பட்டு அழிவுகரமான முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். 


இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டு கெல்லி மார்செல்  திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை அவி ஆராட், மாட் டோல்மாக், எமி பாஸ்கல், கெல்லி மார்செல், டாம் ஹார்டி மற்றும் ஹட்ச் பார்க்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.


சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா, அக்டோபர் 24, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸை' பிரத்தியேகமாக வெளியிடுகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3D மற்றும் ஐமேக்ஸ் 3Dயிலும் படம் வெளியாகிறது.

FANS REJOICE AS VENOM: THE LAST DANCE

 *FANS REJOICE AS VENOM: THE LAST DANCE NOW RELEASES A DAY EARLIER IN INDIA*



Get Ready for the MOST ANTICIPATED FILM OF THE SEASON!


Fans of Marvel’s iconic anti-hero Venom now have a new reason to rejoice, as the highly anticipated Venom: The Last Dance will be released a day earlier in India. 


As the hype for the film reaches unprecedented levels, Sony Pictures Entertainment India has just announced that Tom Hardy’s final outing as Venom will now release in Cinemas on the 24th of October. Along with this monumental announcement, they have also released a brand-new poster featuring a closer look at Venom and the Xenomorph atop the plane, further increasing the fans’ excitement.


What’s more, bookings for Venom: The Last Dance will open from Friday 18th October, allowing eager fans to book their seats in advance. With many fans calling Venom’s final film the biggest yet, the last installment of Tom Hardy’s beloved anti-hero franchise is sure to be filled with thrilling action and high stakes, promising an emotional goodbye to Marvel’s genre-defining anti-hero.



In Venom: The Last Dance, Tom Hardy returns as Venom, one of Marvel’s greatest and most complex characters, for the final film in the trilogy. Eddie and Venom are on the run. Hunted by both of their worlds and with the net closing in, the duo are forced into a devastating decision that will bring the curtains down on Venom and Eddie's last dance.

 

The film stars Tom Hardy, Chiwetel Ejiofor, Juno Temple, Rhys Ifans, Peggy Lu, Alanna Ubach and Stephen Graham. The film is directed by Kelly Marcel from a screenplay she wrote, based on a story by Hardy and Marcel. The film is produced by Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy and Hutch Parker.


_Sony Pictures Entertainment India will exclusively release Venom: The Last Dance in Indian cinemas on 24th October 2024, also in 3D and IMAX 3D in English, Hindi, Tamil and Telugu._

Monday 21 October 2024

பேண்டஸி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஆசை " சார் " படத்தின் ஒளிப்பதிவாளர்

 பேண்டஸி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஆசை " சார் " படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன் J ஹாரிஸ்












சூட்டிங்கை வேடிக்கை பார்த்து சினிமாவுக்கு வந்தேன் " சார் " படத்தின் ஒளிப்பதிவாளர் 

இனியன் J ஹாரிஸ்



எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் 2008 ஆம் ஆண்டு Dft படித்து முடித்து விட்டு  பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தன் வில்சனிடம் நான் கடவுள் படத்தின் மூலம் உதவி ஒளிப்பதிவாளராக சினிமா பயணத்தை துவங்கினார்  இனியன் J ஹாரிஸ்.  தொடர்ந்து பாலாவின் அவன் இவன், தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் தம், பாலகிருஷ்ணாவின் சிம்ஹா, பவன் கல்யானின் கபர் சிங் 2  போன்ற தெலுங்கு படங்கள் உட்பட பல படங்களில் பணியாற்றினார்.


போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி சிறந்த படமாக அனைவராலும்  அறியப்பட்ட " கன்னி மாடம் " படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக களமிறங்கினார் இனியன் J  ஹாரிஸ், இந்த படத்தின் ஒளிப்பதிவு  அனைவராலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அதை தொடர்ந்து ஒரே இரவில் நடக்கும் கதையான " யுத்த காண்டம்" படத்திற்கு சிங்கிள் ஷாட்டில் ஒளிப்பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த படம் ஜப்பானில் நடந்த ஒசாக்கா ஃபிலிம் பெஸ்டிவலில் சிறந்த படத்திற்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.


ஜீவனின் பாம்பாட்டம், கிச்சு கிச்சு மற்றும் மகத்தின் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, சம்பவம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததோடு  15 ற்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 


தற்போது போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்      " சார் " படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


அவரிடம் பேசியதாவது....

கேப்டன் விஜயகாந்த் நடித்த புது பாடகன்  படத்தின் ஷூட்டிங் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடந்தது அப்போது ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தேன். அன்றிலிருந்து தான் எனக்கு சினிமாவில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது நான் கேப்டனின் தீவிர ரசிகர்.

சினிமாவிற்கு இயக்குனராக வேண்டும் என்று தான் வந்தேன் Technical ஆ ஏதாவது கத்துக்கிறதுகாக ஒளிப்பதிவு படித்தேன் ஆனால் தற்போது முழுநேர ஒளிப்பதிவாளராகி விட்டேன்.


எந்த சீனையும் டிஸ்டப் பண்ணமா அந்த சூழ்நிலைக்கு ஏத்தாவரு வொர்க் பண்ணனும் இதை சொன்னவர் பாலுமகேந்திரா சார். அதை தான் நான் கடைப்பிடிக்கிறேன். எனக்கு பிடித்த ஒளிப்பதிவாளர் அவர் தான்.    அவரோட படத்தில் வரும் கதாபாத்திரங்கள், லைட்டிங் எதுவுமே சீன டிஸ்டர்ப் பண்ணாம இருக்கும். கண்ணிமாடம் படத்தில் நிறைய கத்துக்கிட்டேன்.


சார் படத்தில் அந்த கிராமம் , வாத்தியார் வீடு எல்லா இடத்திலும் சீன டிஸ்டர்ப் பண்ணாம பண்ணியிருப்பேன். இந்த படத்தின் ஒளிப்பதிவை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள் எல்லோருக்கும்  இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


வில்லேஜ், வரலாற்று படம் ரெண்டும் பண்ணியாச்சு நல்ல பேண்டஸி படம் பண்ணனும். அதுதான் எனக்கு ஆசை,  ஏன்னா விசுவல் எபெக்ட்ஸ் கூட மெர்ஜ் பண்ணி ஒர்க் பண்ணனும், இன்னும் சொல்லனும்னா  எஃபக்ட்ஸ் தெரியாம ஒர்க் பண்ணனும், ஒவ்வொரு பிரேமும் மேஜிக்கா தான் இருக்கும். 

அதையும் தாண்டி ஒளிப்பதிவாளராக எல்லா  ஜானர் படங்களிலும்  வொர்க் பண்ணனும்.

 

மக்கள் கொடுக்கிற கைத்தட்டல்கள் மற்றும்  நான் வேலை செஞ்ச படத்தின் இயக்குனர் அடுத்த படத்திற்கு என்னை கூப்பிட்டாலே போதும்  அதுவே எனக்கு பெரிய அவார்ட் தான் என்கிறார் சிம்பிளாக   ஒளிப்பதிவாளர் இனியன் J ஹாரிஸ்.