Featured post

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி

 *நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!* BTG Universal நிறுவனத்த...

Friday, 7 November 2025

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி

 *நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!*




BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார்.


அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


டேட்டா பிரைவசி, சைபர் தடயவியல் உள்ளிட்ட மென்பொருள் துறையில் உலகளவில் பெயர் பெற்ற திரு. பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார்.


முன்னதாக, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடித்த “டிமாண்டி காலனி 2” ஹாரர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அடுத்து, இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில், வைபவ் மற்றும் அதுல்யா நடித்த “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்த இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் திரு. பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் அவர்களின் திரை வாழ்க்கையில் பிரம்மாண்டமான படைப்பாக “ரெட்ட தல” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.

இப்படம் 2025 டிசம்பர் 18ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.



தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்


தயாரிப்பு: BTG Universal

தயாரிப்பாளர்: பாபி பாலச்சந்திரன்

இயக்கம்: கிரிஷ் திருக்குமரன்

இசை: சாம் C.S.

ஒளிப்பதிவு: டிஜோ டாமி

எடிட்டிங்: ஆண்டனி

ஸ்டண்ட்: P.C. ஸ்டண்ட்ஸ்

கலை இயக்கம்: அருண்சங்கர் துரை

உடை வடிவமைப்பு: கிருத்திகா சேகர்

நடன அமைப்பு: சுரேன் R., பாபி ஆன்டனி

பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, சாம் C.S., விவேகா

VFX மேற்பார்வை: H. மோனேஷ்

நிர்வாக தயாரிப்பாளர்: மணிகண்டன்

தயாரிப்பு மேற்பார்வை: S.R. லோகநாதன்

DI: ஸ்ரீஜித் சாரங்க்

ஒலி வடிவமைப்பு: T. உதயகுமார் (Sound Vibe)

பப்ளிசிட்டி டிசைனிங்: பிரதூல் N.T.

பப்ளிசிட்டி போட்டோகிராஃபர்: வெங்கட் ராம்

ஸ்டில்ஸ்: மணியன்

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

Predator Badlands Movie Review

 Predator Badlands Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம predator badlands படத்தோட review அ தான் பாக்க போறோம். இது predator series ஓட 7 part னு சொல்லலாம். இன்னிக்கு தான் இந்த படம் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தை பத்தி பாக்கலாம். predator படத்துக்கு fanbase அதிகம் னு தான் சொல்லணும். ஏன்னா ஓவுவுறு படத்லயும் aliens க்கும் மனுஷங்களுக்கும் நடுவுல நடக்கற சண்டையை ரொம்ப interesting அ காமிச்சிருப்பாங்க. கதையும் ரொம்ப விறுவிறுப்பா போகும். ஆனா இந்த படம் கொஞ்சம் வித்யாசமா இருக்கு னு தான் சொல்லணும். எப்பவுமே violence அதிகமாவும் sci fi theme யும் இருக்கற predator series ல இந்த படத்துல மட்டும் alien கொஞ்சம் soft nature அ இருக்காரு. இந்த சின்ன predator alien பேர் தான் dek . இந்த dek ஓட emotional journey அப்புறம் self acceptance அ சொல்லற விதமா இருக்கு னு சொல்லலாம். பழைய predator படத்தோட fans க்கு இது ரொம்ப வித்யாசமா இருக்கும். இருந்தாலும் modern storytelling க்கு ஏத்த மாதிரி கதை சொல்லிருக்கிறதுனால நெறய பேர்க்கு பிடிக்கவும் chance இருக்கு. இன்னும் சொல்ல போன கொஞ்சம் family friendly அ இருக்கற மாதிரி இந்த story அ ready பண்ணிருக்காங்க. 


2004 ல வெளி வந்த alien vs predator ல இந்த predators அ கொஞ்சம் பாவமா காமிச்சிருப்பாங்க ஆனா இந்த படம் அதையும் தாண்டி ஒரு படி முன்னாடி போயிருக்குனு தான் சொல்லணும். maybe இது disney pictures க்கு கீழ படம் வரதுனால violence அ இல்லாம predator ஓட coming of age படம் மாதிரி எடுத்திருக்காங்க போல. இதுக்கு முன்னாடி வந்த part ஆனா prey ல intense ஆனா violence இருந்தாலும் ஒரு emotional depth இருக்கும் ஆனா இதுல ரொம்ப soft அ கதையை எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். இப்போ இந்த படத்தோட கதை என்னனா dek ன்ற predator alien revenge காகவும் அதோட self discovery காகவும் தன்னோட வீட்டை விட்டு ஓடி போயிடுது. இப்படி வரும்போது தான் synthetic cyborg thia வா  நடிச்சிருக்க elle fanning ஓட friend ஆகுது. இவங்க ரெண்டு பேரும் friend ஆகுற இடத்தோட பேர் தான் death planet . இந்த dek எதுக்காக இந்த இடத்துக்கு வந்திருக்கும்னா அதோட கூட்டத்துல தலைசிறந்த warrior னு பேர் எடுக்கணும்ன்றதுக்காக  kallisk ன்ற ஒரு மிருகத்தை  கொலை பண்ணத்தான் வந்திருக்கும். இப்போ இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா weyland yutani  ன்ற ஒரு private company யும் இதை தேடி தான் வந்திருப்பாங்க. இந்த company ஓட நோக்கமே aliens அ research பண்ணுறது தான். அவங்களோட சுயலாபத்துக்காக தான் இந்த மாதிரி alien  related விஷயங்களை பண்ணுவாங்க. 1979 ல வெளி வந்த alien படத்துல  இந்த company  அ பத்தி detailed அ காமிச்சிருப்பாங்க. இப்போ இந்த company தான் இந்த படத்துல வருது. இவங்க ரெண்டு பேரும் மோதிக்கிறது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


predator series லேயே இது தான் முதல் படம் இந்த alien predator hero வா இருக்கிறது. ஆனா hero வா இதை கொண்டு வந்து அந்த mystery look எல்லாம் தூக்கிட்டாங்க. predators எப்பவுமே ரொம்ப sharp அ இருக்கும் அதோட குடுத்த வேலைய பக்காவா முடிச்சிடும். ஆனா இந்த dek அ பாத்தீங்கன்னா அந்த மிருகத்தை தேடி போறது எல்லாம் ok வா தான் இருக்கும். ஆனா அதோட சோக கதையை சொல்லி பொலம்புறது தான் கஷ்டமா இருக்கும். என்ன தான் இதுக்கு soft nature அ குடுத்திருந்தாலும் கொஞ்சம் பழைய predators ஓட characters அ குடுத்துருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். மத்தபடி கதையை ரொம்ப interesting அ தான் கொண்டு போயிருக்காங்க. இந்த predator இருக்கற world அ இருக்கட்டும் visuals அ இருக்கட்டும் ரெண்டுமே அதிரடியா இருந்தது. dan trachtenberg இந்த உலகத்தை create பண்ணிருக்காரு அதோட ஒரு சில creatures யும் உருவாக்கி இருக்காரு இதெல்லாமே அந்த dek கிட்ட சண்டை போட்டு தோத்து போய்டும். CGI shots எல்லாமே அட்டகாசமா குடுத்திருத்தங்க. action scenes யும் mass அ இருந்தது. அதோட ella fanning ஓட comedy யும் இந்த படத்துல super அ workout ஆயிருக்கு. 


மொத்தத்துல ஒரு நல்ல interesting ஆனா ஸ்டோரி தான். சோ மிஸ் பண்ணாம theatre ல போய் பாருங்க.

எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”

 *எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத  மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !*



பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு,  பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”.


நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில்,  உருவாகும்  மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது.


இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் “Globe Trotter” எனும் உலகில் “கும்பா”வாக மாறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இதுவரை நாம் பார்த்ததற்கு மாறாக, கொடூரமான, இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் திறமை கொண்ட வில்லனாக தோன்றுகிறார். போஸ்டரில் அவர் ஒரு ஹைடெக் வீல் சேரில் அமர்ந்தபடி காணப்படுகிறார் – கதாப்பாத்திர போஸ்டர் லுக் புதிய நியூ ஏஜ்  வில்லனாக அவரை அறிமுகப்படுத்துகிறது.


“Globe Trotter” என்பது ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுவின் கூட்டணியில் உருவாகும், மிகப்புதுமையான ஒரு சாகச உலகம் ஆகும். இந்த இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர், தற்போது அந்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ராஜமௌலி ஏற்கனவே இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் பதித்துள்ளார், இப்போது தென்னிந்திய முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவுடன் இணையும் இந்தக் கூட்டணி, அடுத்த பெரிய நிகழ்வாக மாறியுள்ளது. மேலும் தற்போதைய நிகழ்வு படத்தின் புரமோசன்  பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.


இந்த கதாப்பாத்திர போஸ்டர் ராஜமௌலி எப்போதும் எதிலும் தனிச்சிறப்பு கொண்டவர்.  இந்த போஸ்டர் அவரது தனித்துவமான முத்திரையுடன் வெளியாகியுள்ளது. தற்போது அதைக் காட்டிலும் அதிகமான ஹைப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற, ஆஸ்கர் வென்ற RRRக்கு பிறகு வெளியாகும் இந்தப் படம் குறித்து, எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது. Globe Trotter லாஞ்ச் நிகழ்ச்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வாக இருக்கப் போகிறது. அது நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அந்த நாளுக்கான தயாரிப்புகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் ஏற்கனவே அந்த உற்சாகத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.


முன்னதாக ராஜமௌலி தனது X (Twitter) பக்கத்தில் கதாப்பாத்திரங்களின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார், தற்போது அது வெளியானதும் இணையம் முழுவதும் தீயாக பரவி பாராட்டுக்களை பெற்று வருகிறது. பிரித்விராஜின் அந்த தீவிரமான மற்றும் மிரட்டும் வகையிலான தோற்றம், ராஜமௌலியின் அடுத்த உலக அளவிலான சாகச கற்பனைக்குப் மிகப் பொருத்தமானதாக வெளிப்படுகிறது.


இந்த கும்பா  கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் #GlobeTrotter நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்துள்ளது. அந்த நிகழ்ச்சி நவம்பர் 15 அன்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.


முன்னதாக ராஜமௌலி தனது பதிவில்..,


“மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன் கிளைமேக்ஸ் ஷூட் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் #GlobeTrotter நிகழ்வுக்கான தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எப்போதும் செய்யாத அளவுக்கு ஒன்றை முயற்சி செய்கிறோம். நவம்பர் 15 அன்று அதை நீங்கள் அனுபவிப்பதை காண ஆவலுடன்  காத்திருக்கிறேன் .”


இயக்குநர்  தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் கிளைமேக்ஸ் காட்சி மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள் பங்கேற்க மிகப்பெரிய அளவில் எடுக்கப்படுகிறது, மேலும் GlobeTrotter  நிகழ்வுக்கான தயாரிப்புகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு குழுவின் தகவல்படி, இது ராஜமௌலி திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான, மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.


பிரித்விராஜ் சுகுமாரனின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு இந்த வார “அனவுன்ஸ்மெண்ட் வீக்” ( Announcement week) உடைய தொடக்கமாகும், இதில் ராஜமௌலி கூறியபடி, நவம்பர் 15 நிகழ்வுக்கு முன் பல அப்டேட்களும் சர்ப்ரைஸ்களும் வெளியாகவுள்ளன.


இந்தப் படத்தின் புரோமோஷன் அப்டேட்கள் பல கட்டங்களாக வெளியிடப்படவுள்ளது, முதலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அதன் பிறகு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறும் “மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில்” முடிவடையும் என்று உள் வட்டாரங்கள் கூறுகின்றன.

SS Rajamouli and Mahesh Babu’s Next Unveils Prithviraj Sukumaran’s First Look as KUMBHA

 *SS Rajamouli and Mahesh Babu’s Next Unveils Prithviraj Sukumaran’s First Look as KUMBHA Ahead of the Grand #GlobeTrotter Event*



This is the biggest upcoming Indian project starring Mahesh Babu, Priyanka Chopra and directed by SS Rajamouli after the phenomenal global domination with the Baahubali franchise and RRR.


The wait is finally over! Director, the visionary SS Rajamouli has unveiled the first-look poster of Prithviraj Sukumaran from his upcoming mega project, and it’s everything fans hoped for, intense, powerful, and cinematic.


The very first asset from India’s most anticipated film has been revealed. The first look of Malayalam industry superstar Prithviraj Sukumaran as KUMBHA from the world of Globe Trotter is finally here. In the film, Prithviraj transforms into KUMBHA, a sinister, ruthless, and commanding antagonist unlike anything we have seen before. The poster shows him in a high-tech wheelchair, introducing him as a new-age villain.


Globe Trotter is SS Rajamouli and Mahesh Babu’s most ambitious world-building venture yet. Fans have been waiting for years to see these two come together, and the excitement is at its peak. Rajamouli has already put Indian cinema on the global map, and now his collaboration with South superstar Mahesh Babu is the next big thing to watch out for. This marks the beginning of the promotional journey.


The poster carries SS Rajamouli’s signature touch. He is always in a league of his own, and this one has pushed the hype to the next level. Coming right after the globally acclaimed and Oscar-winning RRR, expectations are sky-high. The Globe Trotter launch event is set to be the biggest event ever in Indian cinema. It’s happening on November 15 at Ramoji Film City, Hyderabad. Everyone can already feel the momentum, the kind of reveals planned for that day are going to be on another level.


Earlier today, Rajamouli had taken to X to announce that the poster would drop soon, and now, the reveal is here, setting the internet abuzz. The striking first look presents Prithviraj in a rugged and commanding avatar, radiating a quiet strength that perfectly aligns with Rajamouli’s vision for his next global-scale adventure.


The reveal comes just days before the film’s much-awaited #GlobeTrotter event, scheduled for November 15 at Ramoji Film City, Hyderabad.


In his earlier post, Rajamouli wrote,


“Amidst the climax shoot on set with all three, there’s a lot more prep happening around the #GlobeTrotter event, as we’re trying something far beyond what we’ve done before. Can’t wait for you all to experience it on Nov 15th (sic).”


The filmmaker revealed that the team is currently filming the climax sequence, featuring all three leads together, adding that preparations are in full swing for the upcoming event. Sources close to the production describe the ongoing shoot as one of the most elaborate sequences ever mounted in a Rajamouli film.


The unveiling of Prithviraj’s look marks the beginning of the announcement week, which, according to Rajamouli, will feature “multiple updates and surprises” leading up to the November 15 event. The film’s promotions are set to roll out in phases, starting with the first-look posters and culminating in what insiders are calling a “massive, experiential showcase” at Ramoji Film City.

The Girl Friend Movie Review

The Girl Friend Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the girlfriend படத்தோட review அ தான் பாக்க போறோம். Rashmika Mandanna, Dheekshith Shetty, Rao Ramesh, Anu Emmanuel, Rohini னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது rahul ravindran . இப்போ இருக்கற period ல நம்ம face பண்ணிட்டு இருக்கற gender politics அ பத்தி பேச கூடிய படமா இது இருக்குனு சொல்லலாம். bhooma வா நடிச்சிருக்க rashmika mandana ஒரு MA டிகிரி படிக்கற student அ இருக்காங்க. இவங்க vikram அ நடிச்சிருக்க dheekshith shetty அ love பண்ண ஆரம்பிக்கறாங்க. மேல் ஓட்டமா பாக்கும் போது love story மாதிரி தெரியலாம் ஆனா ஒரு பொண்ணோட self discovery journey அ பத்தி சொல்லற விதமா இந்த படம் அமைச்சிருக்கு. இந்த male dominated society அவளுக்கான இடத்தை கண்டுபிடிக்கறதுக்கான ஒரு போராட்டம் னே சொல்லலாம். 

இந்த படத்தோட கதையே booma ஓட perspective ல தான் இருக்கும். ஆனா இவங்களோட இந்த story ல இவங்க main character கிடையாது. இன்னும் சொல்ல போன இவங்க main character அ காமிச்சாலும் இவங்களே சொந்தமா முடிவு எடுக்கறதுக்கான உரிமை இவங்களுக்கு கிடையாது. ஆண் ஆதிக்கம் எப்படி பெண்களை ஒதுக்கி வைக்குது ன்றத்துக்கு நல்ல உதாரணம் இந்த படம் னு சொல்லலாம். இவளோட life ல இருக்கற ஓவுவுறு ஆணும் தான் இவ எப்படி அவளோட life அ lead பண்ணனும் னு சொல்லுவாங்க. ஒரு பக்கம் vikram marriage பண்ணதுக்கு அப்புறம் இவ எப்படி இருக்கணும் னு சொல்லுவான். இன்னொரு பக்கம் இவளோட அப்பா rao ramesh booma college ல இருக்கணுமா இல்லையா னு முடிவு எடுக்கறதே அவரை தான் இருக்கும். இது எல்லாத்தயும் ரொம்ப அமைதியா எடுத்துட்டு போற booma. durga வா நடிச்சிருக்க anu emmanuvel யும் நெறய விஷயங்களை booma கிட்ட சொல்லற. ஆனா இதெல்லாத்தயும் கேட்டும் booma பெருசா react பண்ணிக்காம அமைதியா தான் இருப்ப.


இவளோட life அ இவ control க்கு எடுத்துட்டு வர கொஞ்சம் time எடுக்கும். booma ஓட இந்த transformation அ ஒரு process மாதிரி காமிச்சிருப்பாங்க. இதுவே ரொம்ப genuine அ இருந்தது. இதுல booma நெறய இடங்கள் ல silent அ இருக்கிறேதே ஒரு plus point  தான் இந்த கதைக்கு. என்னதான் ஆண் ஆதிக்கம் ன்ற ஒரு விஷயம் அந்த காலத்துல தான் உண்டு இப்போ கிடையாது னு சொன்னாலும், இன்னும் நெறய இடங்கள் ல அது ஒளிஞ்சு இருக்கு ன்றது தான் உண்மை ன்றதா ரொம்ப அழகா காமிச்சிருக்காங்க. இந்த படத்துல ஒரு plus point ஏ social message அ சொல்லறோம் ன்ற பேர்ல ரொம்ப emotional அ கதையை கொண்டு போகாதது தான். ஆனா அதுக்காக  sentimental  scenes லாம் கிடையாது னு சொல்ல முடியாது இருக்கு ஆனா ரொம்ப சோகமா எடுத்துட்டு போயிருக்க மாட்டாங்க. நெறய எடத்துல சின்ன சின்ன விஷயங்களுக்கு லாம் detail குடுத்திருக்க விதம் அழகா இருந்தது. அதாவுது அவளோட room அ விட்டு வெளில வரும் போது shawl அ எடுத்து போட்டுகிறதா இருக்கட்டும் இல்லனா போற வழில திடுருனு யாராவுது அவளோட வழிய தடுக்கறதா  இருக்கட்டும் இதெல்லாமே ரொம்ப depth அ குடுத்திருக்காங்க. அதே மாதிரி toxic relationship ல இருக்கிறதா பத்தியும் காமிச்சிருப்பாங்க. vikram ஒரு toxic character அ portray பண்ணிருப்பாங்க. இந்த character அ நல்ல நடிச்சிருக்கரு deekshith shetty. 


அதுக்கு அப்புறம் இவங்க இந்த relationship ல இருந்து வெளில வரதும் அதோட peaceful அ இவங்க life அ lead பண்ணுற moments நல்ல இருக்கும். bhooma வவும் சரி durga வும் சரி வேற எந்த baggage யும் இல்லாம life அ lead பண்ணுவாங்க. relationship நாளே ஒரு சில பிரச்சனைகள் இருக்கும். அதெல்லாம் ரொம்ப detailed அ காமிச்சிருக்க மாட்டாங்க. உதாரணத்துக்கு vikram க்கு perfect அ bhooma set ஆகலாம் ஆனா bhooma க்கு vikram சரியான partner அ இருப்பானா ன்றது தான் கேள்வியே. இந்த மாதிரி நெறயா விஷயங்களை நம்மள யோசிக்க வைக்குது னு சொல்லலாம். ஒரு  சில எடத்துல தனக்கு தான் vikram வேணும் ண்றதுக்காக durga selfish அ தெரிஞ்சாலும் கடைசில அவங்க bhooma க்கு தான் support அ இருப்பாங்க. இதுவே ரொம்ப gentle அ இருந்தது பாக்குறதுக்கு. ஒரு maturity ஓட இந்த படத்தோட கதையை முடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். 


bhooma ஒரு challenging ஆனா character. rashmika இந்த character ல super அ perform பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். இவங்களோட life ல நடக்கற பல விஷயங்கள் audience ஆலா கண்டிப்பா relate பண்ணிக்க முடியும். இவங்க தான் இந்த படத்துக்கு uyir னு கூட சொல்லலாம். அந்தளவுக்கு amazing அ நடிச்சிருக்காங்க. krishna vasanth ஓட cinematography super அ இருந்தது. அதுவும் characters ரொம்ப suffocating அ feel பண்ணுற scenes லாம் ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. prashanth r vigari ஓட songs and bgm இந்த படத்துக்கு கூடுதல்   பலம் னே சொல்லலாம். 


கடைசில எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அவங்களுக்கான space எடுத்துகிறது தான் இந்த படத்தோட climax அ இருக்கு. ஒரு genuine ஆனா good feel movie னு தான் இதை சொல்லுவேன். சோ கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணாம theatre ல போய் பாருங்க.

Jatadhara Telugu Movie

Jatadhara Telugu Movie

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம jatadhara படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Venkat Kalyan and Abhishek Jaiswal .  இந்த படத்துல Sudheer Babu, Sonakshi Sinha,  Divya Khosla  Shilpa Shirodkar, Indira Krishna, Ravi Prakash, Jhansi, Rajeev Kanakala, Srinivas Avasarala, Rohit Pathak, னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் telugu  ளையும் hindi ளையும் release ஆயிருக்கு. இது ஒரு supernatural thriller movie னு தான் சொல்லணும். இந்த கதையோட background அ பாத்தீங்கன்னா anatha padamanaba samy kovil அ தான் காமிச்சிருப்பாங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



pishach bhandan ன்ற ஒரு சாபம்  இருக்கும். இதை பண்டைய காலத்துல உருவாக்குனாங்க. இதுக்கு காரணம் கோயில் ல இருக்கற விலைமதிப்புள்ள சுரங்கத்தை பாதுகாக்குறதுக்கக தான். கெட்ட எண்ணதோட யாரு இந்த சாபத்தை உடைக்கரங்களோ அப்போ ஒரு துர்த்தேவதை வரும் அதோட அது சாபத்தை உடைச்சவங்கள கொன்னுடும் னு சொல்லுறாங்க. இந்த துர்த்தேவதையா வராங்க sonakshi sinha . இப்போ தான் shiva வா நடிச்சிருக்க sudheer babu வராரு. இவரு ஒரு ghost hunter அ இருக்காரு இவரை பொறுத்த வரைக்கும் கண்ணால பாக்குற வரைக்கும் எதுமே நம்ப மாட்டாரு. இந்த சாபத்தை பத்தி investigate பண்ண ஆரம்பிக்குறாரு. அதுல இருந்து இவரோட journey ஏ மாறிடுது. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இதை ஒரு horror movie னு சொல்லிட முடியாது. மூடநம்பிக்கைக்கும் logic க்கும் இருக்கற வித்யாசத்தை காமிக்க்ர விதமா இந்த படம் அமைச்சிருக்கு. நெறய விஷயங்களை நம்மள யோசிக்கவும் வைக்குது னு சொல்லலாம். படத்தோட first half அ ரொம்ப பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா suspense அ build பண்ணுறாங்க. அப்படியே second half ல இருந்து தான் கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது. இந்த படத்துல நெறய scenes visual ஆவும் highlight ஆவும் இருந்தது. உதாரணத்துக்கு பழங்கால கோயில்களா இருக்கட்டும், rituals பண்ணுற scenes அ இருக்கட்டும் கடைசில climax ல வர shiva தாண்டவமா இருக்கட்டும் எல்லாமே amazing அ இருந்தது. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance அ பாக்கும் போது sonakshi shinha ஓட acting அ பத்தி சொல்லியே ஆகணும். இவங்களுக்கு dialogues ரொம்ப கம்மியா இருந்தாலும் ஒரு துர்த்தேவதையா இவங்களோட body language , facial expressions எல்லாமே அட்டகாசமா இருந்தது. sudheer babu ஓட acting யும் super அ இருந்தது. அதுவும் emotional scenes அ இருக்கட்டும் action scenes அ இருக்கட்டும் எல்லாமே பக்கவா இருந்தது. divya khosla sitara ன்ற character ல அருமையா நடிச்சிருக்காங்க. மத்த supporting actors அ நடிச்ச Rajeev Kanakala, Ravi Prakash, Shilpa Shirodkar,  Indira Krishna, Subhalekha Sudhakar னு இவங்களோட நடிப்பும் பிரமாதமா இருந்தது. 

இந்த படத்தோட technical aspects அ பாக்கும் போது Sai Krishna Karne அப்புறம்  Shyam Babu Meriga ஓட dialogues எல்லாமே audience அ யோசிக்க வைக்கிற விதமா இருந்தது னு தான் சொல்லணும். இவங்களோட dialogues ல ஒரு philosophy ஓட சேந்து வரும் அதெல்லாமே கேட்க நல்ல இருந்தது. directors  Venkat Kalyan and Abhishek Jaiswal யும் சேந்து பழங்கால நம்பிக்கையோட இந்த காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி ஒரு story அ கொண்டு வந்திருக்காங்க. இதுக்கே இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய கைதட்டலை குடுத்து ஆகணும். Sameer Kalyani ஓட cinematography super அ இருந்தது. முக்கியமா கேரளா ஓட அழகு, அங்க இருக்கிற கோயில்கள், மர்மமான முறைல நடக்கற சடங்குகள் னு audience க்கு appealing அ இருக்கற மாதிரி camera  ல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். special effects லாம் கூட super அ இருந்தது. அதோட இந்த படத்துல rajiv raj ஓட  bgm and songs  நல்ல இருந்தது. முக்கியமா bgm தான் வேற level ல இருந்தது.  sound design,  மந்திரத்தை ஓதுறது, எக்கோ அடிக்கிறது னு எல்லாமே ஒரு suspense mood க்கு கதையை எடுத்துட்டு போயிருக்கு. இந்த supernatural setting க்கு ஏத்த மாதிரி classical ragas அ சேத்து bgm ல use பண்ணிருக்கறது தான் highlight அ இருந்தது. shivastotram ல use பண்ணிருந்தாங்க அதுவும் நல்ல இருந்தது. 


visual , story line , bgm , actors ஓட strong ஆனா performance னு எல்லாமே அட்டகாசமா இருக்கற திரைப்படம் தான் jatadhara . mythology ஓட சேந்து இருக்கிற modern storytelling தான் இந்த படம். sound and visual காகவே நீங்க இந்த படத்தை theatre ல போய் பாக்குறது worth தான். சோ மறக்காம உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க

[11/7, 1:57 PM] Abhinaya Viji Friend: the girlfriend - tamil movie 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the girlfriend படத்தோட review அ தான் பாக்க போறோம். Rashmika Mandanna, Dheekshith Shetty, Rao Ramesh, Anu Emmanuel, Rohini னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது rahul ravindran . இப்போ இருக்கற period ல நம்ம face பண்ணிட்டு இருக்கற gender politics அ பத்தி பேச கூடிய படமா இது இருக்குனு சொல்லலாம். bhooma வா நடிச்சிருக்க rashmika mandana ஒரு MA டிகிரி படிக்கற student அ இருக்காங்க. இவங்க vikram அ நடிச்சிருக்க dheekshith shetty அ love பண்ண ஆரம்பிக்கறாங்க. மேல் ஓட்டமா பாக்கும் போது love story மாதிரி தெரியலாம் ஆனா ஒரு பொண்ணோட self discovery journey அ பத்தி சொல்லற விதமா இந்த படம் அமைச்சிருக்கு. இந்த male dominated society அவளுக்கான இடத்தை கண்டுபிடிக்கறதுக்கான ஒரு போராட்டம் னே சொல்லலாம். 


இந்த படத்தோட கதையே booma ஓட perspective ல தான் இருக்கும். ஆனா இவங்களோட இந்த story ல இவங்க main character கிடையாது. இன்னும் சொல்ல போன இவங்க main character அ காமிச்சாலும் இவங்களே சொந்தமா முடிவு எடுக்கறதுக்கான உரிமை இவங்களுக்கு கிடையாது. ஆண் ஆதிக்கம் எப்படி பெண்களை ஒதுக்கி வைக்குது ன்றத்துக்கு நல்ல உதாரணம் இந்த படம் னு சொல்லலாம். இவளோட life ல இருக்கற ஓவுவுறு ஆணும் தான் இவ எப்படி அவளோட life அ lead பண்ணனும் னு சொல்லுவாங்க. ஒரு பக்கம் vikram marriage பண்ணதுக்கு அப்புறம் இவ எப்படி இருக்கணும் னு சொல்லுவான். இன்னொரு பக்கம் இவளோட அப்பா rao ramesh booma college ல இருக்கணுமா இல்லையா னு முடிவு எடுக்கறதே அவரை தான் இருக்கும். இது எல்லாத்தயும் ரொம்ப அமைதியா எடுத்துட்டு போற booma. durga வா நடிச்சிருக்க anu emmanuvel யும் நெறய விஷயங்களை booma கிட்ட சொல்லற. ஆனா இதெல்லாத்தயும் கேட்டும் booma பெருசா react பண்ணிக்காம அமைதியா தான் இருப்ப.


இவளோட life அ இவ control க்கு எடுத்துட்டு வர கொஞ்சம் time எடுக்கும். booma ஓட இந்த transformation அ ஒரு process மாதிரி காமிச்சிருப்பாங்க. இதுவே ரொம்ப genuine அ இருந்தது. இதுல booma நெறய இடங்கள் ல silent அ இருக்கிறேதே ஒரு plus point  தான் இந்த கதைக்கு. என்னதான் ஆண் ஆதிக்கம் ன்ற ஒரு விஷயம் அந்த காலத்துல தான் உண்டு இப்போ கிடையாது னு சொன்னாலும், இன்னும் நெறய இடங்கள் ல அது ஒளிஞ்சு இருக்கு ன்றது தான் உண்மை ன்றதா ரொம்ப அழகா காமிச்சிருக்காங்க. இந்த படத்துல ஒரு plus point ஏ social message அ சொல்லறோம் ன்ற பேர்ல ரொம்ப emotional அ கதையை கொண்டு போகாதது தான். ஆனா அதுக்காக  sentimental  scenes லாம் கிடையாது னு சொல்ல முடியாது இருக்கு ஆனா ரொம்ப சோகமா எடுத்துட்டு போயிருக்க மாட்டாங்க. நெறய எடத்துல சின்ன சின்ன விஷயங்களுக்கு லாம் detail குடுத்திருக்க விதம் அழகா இருந்தது. அதாவுது அவளோட room அ விட்டு வெளில வரும் போது shawl அ எடுத்து போட்டுகிறதா இருக்கட்டும் இல்லனா போற வழில திடுருனு யாராவுது அவளோட வழிய தடுக்கறதா  இருக்கட்டும் இதெல்லாமே ரொம்ப depth அ குடுத்திருக்காங்க. அதே மாதிரி toxic relationship ல இருக்கிறதா பத்தியும் காமிச்சிருப்பாங்க. vikram ஒரு toxic character அ portray பண்ணிருப்பாங்க. இந்த character அ நல்ல நடிச்சிருக்கரு deekshith shetty. 


அதுக்கு அப்புறம் இவங்க இந்த relationship ல இருந்து வெளில வரதும் அதோட peaceful அ இவங்க life அ lead பண்ணுற moments நல்ல இருக்கும். bhooma வவும் சரி durga வும் சரி வேற எந்த baggage யும் இல்லாம life அ lead பண்ணுவாங்க. relationship நாளே ஒரு சில பிரச்சனைகள் இருக்கும். அதெல்லாம் ரொம்ப detailed அ காமிச்சிருக்க மாட்டாங்க. உதாரணத்துக்கு vikram க்கு perfect அ bhooma set ஆகலாம் ஆனா bhooma க்கு vikram சரியான partner அ இருப்பானா ன்றது தான் கேள்வியே. இந்த மாதிரி நெறயா விஷயங்களை நம்மள யோசிக்க வைக்குது னு சொல்லலாம். ஒரு  சில எடத்துல தனக்கு தான் vikram வேணும் ண்றதுக்காக durga selfish அ தெரிஞ்சாலும் கடைசில அவங்க bhooma க்கு தான் support அ இருப்பாங்க. இதுவே ரொம்ப gentle அ இருந்தது பாக்குறதுக்கு. ஒரு maturity ஓட இந்த படத்தோட கதையை முடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். 


bhooma ஒரு challenging ஆனா character. rashmika இந்த character ல super அ perform பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். இவங்களோட life ல நடக்கற பல விஷயங்கள் audience ஆலா கண்டிப்பா relate பண்ணிக்க முடியும். இவங்க தான் இந்த படத்துக்கு uyir னு கூட சொல்லலாம். அந்தளவுக்கு amazing அ நடிச்சிருக்காங்க. krishna vasanth ஓட cinematography super அ இருந்தது. அதுவும் characters ரொம்ப suffocating அ feel பண்ணுற scenes லாம் ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. prashanth r vigari ஓட songs and bgm இந்த படத்துக்கு கூடுதல்   பலம் னே சொல்லலாம். 


கடைசில எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அவங்களுக்கான space எடுத்துகிறது தான் இந்த படத்தோட climax அ இருக்கு. ஒரு genuine ஆனா good feel movie னு தான் இதை சொல்லுவேன். சோ கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணாம theatre ல போய் பாருங்க.

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு*

 *இந்தியன் பனோரமாவுக்கு 

இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை*  குறும்படம் தேர்வு*


 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா - இந்தியன் பனோரமா,வரும் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. 


 இதில் 

இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் 

(Official Selection) தேர்வாகி இருக்கிறது.


இப்படம் பற்றி இயக்குனர்  

இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது 


  உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு  எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 


 பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த *ஆநிரை*


 இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும்  என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த  நடுவர்களுக்கு நன்றி


 இவ்வாறு

 இ.வி.கணேஷ்பாபு கூறினார்.


 ஏற்கனவே

 இ.வி.கணேஷ்பாபு இயக்கிய குறும்படத்திற்காக *தேசிய விருது* பெற்ற, *ஸ்ரீகாந்த்தேவா* இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

 அர்ச்சுனன் மாரியப்பன்,  அஞ்சனாதமிழ்ச்செல்வி,மீரா, கௌரிசங்கர், காமாட்சிசுந்தரம்,

இ.வி.கணேஷ்பாபு மற்றும் பலர் நடித்த இந்த குறும்படத்திற்கு  ஒளிப்பதிவு

 p.செல்லத்துரை, படத்தொகுப்பு T.பன்னீர்செல்வம், ஆடியோகிராபி  UKI ஐயப்பன் செய்துள்ளனர்.

 ஞானி கிரியேஷன்ஸ் ஜெயந்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 *கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது


நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது,


என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம்.


நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல இருக்கும். லிங்குசாமி சார், போஸ் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார்.


இயக்குனர் நிதிலன் பேசும்போது,


இயக்குனர் பிரபு சாலமன் மிகவும் யதார்த்தமான, நேர்மையான மனிதர். அவர் மனதில் பட்டதை தயங்காமல் வெளிப்படையாக கூறி விடுவார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஓடாத நல்ல படம் வேண்டாம், ஓடுகின்ற மோசமான படம் வேண்டாம், ஓடுகின்ற நல்ல படம் வேண்டும் என்று பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார். அப்போது குறை நிறைகளை அழகாக எடுத்துக் கூறுவார். குறைகளைக் கூட நேர்மறையாக கூறுவார். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு பிரபு சாலமன் சார் முக்கிய காரணம். அவருக்கு என்னுடைய நன்றி.

கும்கி தமிழ் சினிமாவில் முக்கியமான படம் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல ஃபேன் பாய் சம்பவம் என்று கூறுவார்கள் அல்லவா? அதுபோல ஃபேன் சம்பவம் என்று ஒன்றை கூறினார். அவர் கூறியதை போல அப்படம் மாபெரும் வெற்றியடைந்தால் இன்னொரு அமைதிப்படை படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படம் கும்கி-2 படத்திற்கு பிறகு வெளியாகும் என்று நினைக்கிறேன்.


பைசன் படத்தில் மாஸ் காட்டிய நண்பர் பிரசன்னா, சுகுமார், மதி மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அசோசியேட் அனைவருக்கும் வாழ்த்துகள்.


கும்கி -1 படம் வெற்றிபெற்றது போல, அதைவிட பெரிதாக கும்கி-2 வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.


இயக்குனர் மடோன் அஸ்வின் பேசும்போது,


நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வு இப்போதும் வருகிறது. ஏனென்றால், நீதிபதியாக இருந்த பிரபு சாலமன் சார் இருக்கிறார். அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கீகீ-யும் இருக்கிறார். அந்த சீசனில் கலந்து கொண்ட நான், நிதிலன், பாக்கியராஜ் கண்ணன், அஸ்வத் மாரிமத்து போன்ற ஒரு குழுவை வழி நடத்தி இயக்குனர் ஆவதற்கு காரணமாக இருந்தவர் பிரபு சாலமன் சார் தான்.


என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு கதை சொல், நான் தயாரிக்கிறேன் என்றார். நான் வேலையை விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என்னிடம் இப்போது கதை இல்லை, ஆகவே உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன் என்றேன்.


அவருக்கு பிடித்த கதை சொல்லும் இடம் அவருடைய இன்னோவா கார் தான். தொடரி படம் முதல் இன்னும் வெளியாகாத மேம்போ படம் வரை ஒரு வரி கதை தெரியும். அதில் கும்கி -2 மட்டும் பேசவில்லை. பேசியிருந்தால் இந்த கதையையும் நான் படித்திருப்பேன்.


கும்கி-1 படத்தை திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தது போல இப்படத்தையும் திரையரங்கிற்கு சென்று மக்கள் கொண்டாடுவதை பார்க்க ஆவலாக உள்ளேன்.


என்னுடைய மண்டேலா மற்றும் மாவீரன் படங்களில் இருக்கும் குறை நிறைகளை கூறிய லிங்குசாமி சாருக்கு நன்றி.


இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.


இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது,


லிங்குசாமி படத்திற்கு தொடர்ந்து நான் தான் வசனம் எழுதி வருகிறேன். நன்றாக எழுதுவேன் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய நண்பன் என்ற காரணத்தினால் எனக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.


அவரது குடும்பத்தில் இருந்து மதி இரண்டாவது தலைமுறையாக சுலபமாக சினிமாவிற்கு வந்தாலும் வெற்றிபெறுவது எளிதல்ல என்பதை கொரோனா சொல்லியிருக்கிறது. மதி இதுபோல நல்ல கதைகளைக் கேட்டு நிறைய படங்கள் நடித்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


ஒரு காட்டில் பறவைகள், விலங்குகள், அணில் போன்றவை எங்கிருக்கும். காட்டில் ஒரு மழைத்துளி விழுந்தால் எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு காட்டைப் பற்றி நுணுக்கமாக அறிந்து வைத்து அழகாக காட்டியிருக்கிறார் சுகுமார். வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை அறிந்து வைத்திருக்கிறார்.


சமீபத்தில் நான் அதிகமாக கேட்ட பாடல் தீக்கொளுத்தி. இப்பாடலும், பைசன் படமும் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு மிகப்பெரிய கதவு திறந்திருக்கிறது. இந்த சமயத்தில் கும்கி-2 வருவது இன்னமும் சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவிற்கு வாழ்த்துகள்.


மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படம் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன் என்றார்.


இயக்குனர் சரண் பேசும்போது,


இப்படம் தயாரிப்பில் இருக்கும்போது லிங்குசாமி அலுவலகத்தில் பார்த்தேன். படம் முழுவதும் காடாகவே இருக்கிறதே என்று நினைத்தேன். பிறகு தான் ஜெயந்தி லால் காடா காரணம் என்று தெரிந்தது.


நான் கதாநாயகன் மதி சார்பாக இங்கு நிற்கிறேன். ஒவ்வொரு நாயகனும் வளரும் நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு, அவர்கள் ஆர்வத்திற்கு தீனிப் போடும் இயக்குனர், எந்த தடையும் சொல்ல தயங்காத தயாரிப்பாளர் என்று இவ்வளவும் கிடைப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இவை அனைத்தும் மதிக்கு கிடைத்திருக்கிறது.


பிரபு சாலமன் படத்தில் உணர்வுபூர்வமாக இருக்கும். அவர் கைப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட தூர பயணத்திற்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது. அது போல மதியும் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.


10 வருடமாக மறைந்திருந்து இசையமைத்துக் கொண்டிருந்த நிவாஸ் கே பிரசன்னா இன்று பாடுகிறார். நீண்ட வருடத்திற்குப் பிறகு நல்ல இசையை பைசன் படத்தில் தான் கேட்டேன்.


அதேபோல், மண்டேலா படத்தைப் பார்த்து வியந்தேன். பல இளம் இயக்குனர்கள் இங்கு வந்து இந்த விழாவை ஆரம்பித்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.


நாயகியின் அப்பாவை எனக்கு நன்றாக தெரியும். அவர் நாயகியின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஷ்ரதாவை வரவேற்கிறேன்.


லிங்குசாமி ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக நுணுக்கமாக செதுக்குகிறார் என்று அருகில் இருந்து பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்டவர் இப்படத்திற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.


பலருடைய வெற்றிக்கும், அவர்களுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக திருப்பதி பிரதர்ஸ் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும். அவர்களின் 100வது படத்தின் விழாவிற்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.


கும்கி-1 படத்தை என்னுடைய படத்தின் படப்பிடிப்பில் திருநெல்வேலியில் இருந்தேன். திரையரங்கில் சென்று பார்க்கும் போது நீர்வீழ்ச்சி காட்சியில், சூப்பர் ஸ்டார் படத்திற்கு போடுவது போல திரையை சுற்றி லைட் போட்டு இப்பாடலை படமாக்கியவர் சுகுமார் என்று பெயர் போட்டார்கள். திரையரங்கில் அனைவரும் கொண்டாடினார்கள்.


யானை இருக்கும் படம் என்றும் தோற்காது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்றார்.


நடிகர் மதி பேசும்போது,


இது என்னுடைய முதல் மேடை. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய ஜெயந்தி லால் காடா சாருக்கு நன்றி.


பிரபு சாலமன் சார் படத்தின் நாயகனாக, அவருடைய பூமியாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அவர் கூறியதை கேட்டு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.


இங்கு வந்திருக்கும் இயக்குனர் அஸ்வின், நிதிலன் சார், பிருந்தா சாரதி சார், சரண் சார், ஜெகன், விஜய் பாலாஜி சார், என் நண்பன் உன்னி அனைவருக்கும் நன்றி. என்னை இப்படத்திற்கு அழைத்து வந்தது லிங்குசாமி சார் தான். சினிமாத் துறைக்கு என்னை அழைத்து வந்தது லிங்குசாமி சார் மற்றும் போஸ் சார் தான்.


சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டிருக்கிறேன். அவருடைய இசையில் இப்படம் அமைந்திருக்கிறது. பொத்தி பொத்தி பாடலை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்றார்கள்.


பைசன் படம் போல இப்படமும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் சரண்யாவிற்கு மிக்க நன்றி என்றார்.


இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது,


என்னை கதாநாயகன் என்று கூறுகிறார்கள். ஆனால், இசையில் நான் ஆன்மாவோடு கலந்து இன்னும் ஆழமாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் நடப்பதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது பிரபு சாலமன் சார் தான். 2020 கொரோனா காலத்தில் சென்னையில் சாலையில் யாரும் இருக்க மாட்டார்கள். காலையிலேயே வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் விடுவோம். ஒரு நாளைக்கு 2 வேளை தான் சாப்பாடு. ஒவ்வொரு காட்சியாக ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டே இருப்போம்.


இப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் வந்த கும்கி-யில் இமான் சார் கூட்டணியில் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில் இருந்து தான் இப்படத்திற்கான ஆன்மாவை எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு நன்றி.


நாயகன் மதி நேரத்தை மிகச் சரியாக கையாள்வதில் ஒழுக்கத்தை பார்த்தேன். 7 மணி என்றால், 7.01 மணிக்கோ, 6.59 மணிக்கோ வரமாட்டார். சரியாக 7 மணிக்கு தான் வருவார்.


இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய சக்தியாக நினைக்கிறேன் என்றார்.


தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் காடா பேசும்போது,


கும்கி-2 பட தலைப்பை பென் ஸ்டூடியோஸ்-க்கு கொடுத்ததற்காக லிங்குசாமி சாருக்கும் போஸ் சாருக்கும் நன்றி. இந்த சிறிய படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து இங்கு வந்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி.


கும்கி-2 படத்தை பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. காட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக மதி மிகவும் போராடி நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஹ்ரித்திக் ரோஷன்.


இசைக்கு மொழி கிடையாது. கும்கி முதல் படத்தில் இசை நன்றாக இருந்தது. அதுபோல, கும்கி-2 படத்தில் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மிக நன்றாக இருக்கிறது என்றார்.


இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது,


என்னுடைய நண்பர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள், குடும்ப உறவினர்கள் என என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது.


இதற்காக என்னுடன் உழைத்த என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, நான் நினைப்பதை எடுத்துக் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மதி, ஆன்ட்ரோ, ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. நெல்லையம்புதி என்ற இடத்தில் படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். முதன்முதலில் லோகேஷன் பார்க்க போகும்போது உடலில் உள்ள உள்உறுப்புகள் அனைத்து குலுங்கி போனது.


அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. ஒரு டார்மென்ட்ரிகுள்ள குளிரில் முழு படக்குழுவினரும் மிகவும் சிரமப்பட்டார்கள். அங்கிருக்கும் உன்னி கடித்து பலருக்கும் தோல் பிரச்னை வந்து அவஸ்தைப்பட்டார்கள்.


இப்படம் நீளமான பயணம். 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டு காட்டினோம். ஆனால் 2020-2021ல் ஊரடங்கு. கொரோனா வந்து அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி சார் மற்றும் ஜெயந்திலால் காடா சார் தான்.


முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன் பிறகு 2023ஆம் ஆண்டு இப்படத்திற்கான் அடுத்தகட்ட வேலைகளை தொடங்கினோம்.


எனக்கு எப்போதும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதற்காக நான் நிறைய சண்டைபோட வேண்டியிருந்தது.


தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார்.


என்னுடைய பிள்ளைகளான அஸ்வின், நிதிலன், இயக்குனர் பிருந்தா சாரதி, ஜெகன், சரண் ஆகியோர் இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள், நன்றி.


அதேபோல், பாரதி கண்ணன், இயக்குனர் திருச்செல்வம், ஆகாஷ் வந்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா காலத்தில் இறந்துவிட்டார்கள்.


டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏனென்றால், இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார். அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவிற்கு ஆன்மாவை கொடுத்திருக்கிறார்.


படம் பார்க்கும் போது பல இடங்களில் அவருடைய இசை கதையை மீண்டும் எழுதியிருப்பது தெரியும். நிவாஸ் கே பிரசன்னாவை நான் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறேன். அவர் துயரத்தை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும், படம் நன்றாக வருவதற்காகத்தான் என்று அவரும் புரிந்துகொண்டார். இது அவர் ஜொலிப்பதற்கான நேரம் என்றார்.


இயக்குனர் லிங்குசாமி பேசும்போது,


காடா சார் எங்களுக்கு காட் மாதிரி தான். அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும், நாங்கள் 2 முதல் 3 மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனால், சினிமாவிற்கு மொழி கிடையாது என்பதை நான் உணர்ந்தேன்.


காடா சார் இல்லையென்றால் ரஜினி முருகன் படம் வெளியாகி இருக்காது. பையா இந்தி படத்திற்காக சந்திக்கும் போது, 14 கோடி ரூபாய் கொடுத்தார்.


ஒரு வருடத்திற்கு ஹிந்தியில் 189 படங்கள் வெளியிட கூடிய மாபெரும் தயாரிப்பாளர் காடா அவர்கள்.


கும்கி-1 படத்தின் விழாவிற்கு ரஜினி சார் மற்றும் கமல் சார் வந்து வாழ்த்தினார்கள். ஆனால், அவர்களுடைய படங்களை ஹிந்தியில் வெளியிட கூடியவர் ஜெயந்திலால் காடா சார். அவர் மதியை அறிமுகப்படுத்தியிக்கிறார். ஹிருத்திக் ரோஷன் என்று மதியை ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.


இப்படம் மிகவும் காலதாமதமாகியிருக்கலாம். ஆனால், காடா சார் படத்தைப் பார்த்துவிட்டு பிரபு சாலமனை சிறந்த இயக்குனர் என்று பாராட்டினார்.


கும்கி-1 படம் திருவண்ணாமலையில் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பதற்காக போய் இருந்தேன். எங்கள் திரையரங்கில் இதற்கு முன் உலகம் சுற்றும் வாலிபன், திரிசூலம், ஒரு தலை ராகம், 16 வயதினிலே, முரட்டுக் காளை இதுபோன்ற படங்களுக்குத்தான் இதுபோன்ற கூட்டம் வந்தது. அந்த பட்டியல் கும்கி படமும் இடம்பெற்றிருக்கிறது என்று கூறினார்கள்.


 கும்கி-1 படத்தின் பாடல்களை விட கும்கி-2வில் இருக்குமா என்று தெரியாது. ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவின் முந்தைய படம் போல இப்படத்தில் இருந்துவிட்டாலே போதும். சினிமாவின் ஒட்டுமொத்த வெளிச்சமும் நிவாஸ் கே பிரசன்னா மீது தான் இருக்கிறது.


நிதிலன் இயக்கிய மகாராஜா படம் என்னுடைய 10 சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.


கும்கி-2 நிச்சயம் மாபெரும் வெற்றியடையும்.


இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்



தொழில்நுட்பக் குழு:


இயக்கம் – பிரபு சாலமன்

தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா

இசை – நிவாஸ் கே. பிரசன்னா

ஒளிப்பதிவு – எம். சுகுமார்

எடிட்டிங் – புவன்

கலை இயக்கம் – விஜய் தென்னரசு

சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா

ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்

தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்

ஸ்டில்ஸ் – சிவா

புரமோஷன் – சினிமாபையன்

மக்கள் தொடர்பு  – யுவராஜ்

Dan Trachtenberg's Predator: Badlands Debuts at 90% on Rotten Tomatoes, Wins Hearts with its Heart-Pounding Action

 *Dan Trachtenberg's Predator: Badlands Debuts at 90% on Rotten Tomatoes, Wins Hearts with its Heart-Pounding Action*




Director Dan Trachtenberg has cemented his status as the definitive creative steward of the Predator franchise. His latest installment, Predator: Badlands, made a strong debut with a commanding 90% critic score on Rotten Tomatoes, earning widespread critical acclaim for its heart-pounding action and fresh take on the iconic sci-fi spectacle.


Predator: Badlands continues the series' critical resurgence following the successes of Trachtenberg’s Prey and Predator: Killer of Killers. The film is praised for successfully balancing the franchise's signature gore and suspense with innovative concepts, including a reported franchise-first plot point: featuring the Predator as the main protagonist.


The film stars Elle Fanning and Dimitrius Schuster-Koloamatangi, alongside an accomplished ensemble cast. Commenting on the film’s unique appeal and connection to the fanbase, star Dimitrius Schuster-Koloamatangi said: "I hope that fans of the Predator franchise get satisfaction out of watching a film that they’ve been waiting for a long time. I think this is something people have been dying to see for a long time, and because this film literally exists because of the fans, I hope they’ll enjoy it. And I hope that it’s able to introduce a new generation of fans to the franchise and make more people root for this iconic character."


_20th Century Studio is set to release Predator: Badlands in India on 7th November in English, Hindi, Tamil, and Telugu._