Featured post

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!*

 *காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' அறிவித்த ஜ...

Thursday, 2 July 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!*

 *காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!*







தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான 'செகண்ட் லவ்'-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜியோஹாட்ஸ்டார் தமிழ், 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில் இருந்து மீள்வது மற்றும் மீண்டும் காதலை கண்டடையும் மகிழ்ச்சியை இந்த புரோமோ மூலம் பார்க்கலாம். புரோமோவின் இறுதியில், "காதலுக்கு காரணம் தேவையில்லை. இது காதலின் பிராண்ட் நியூ சீசன்" என இந்த நிகழ்ச்சியின் கேப்ஷனை ரம்யா கிருஷ்ணன் சொல்கிறார். 


கடந்த காலத்தை விட்டு விலகி, வாழ்க்கையில் புதிய உறவையும், புதிய காதலையும் தேடும் நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக 'செகண்ட் லவ்' இருக்கும். உணர்வுப்பூர்வமான தருணங்கள், நம்பிக்கை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளை இணைக்கும் இந்த நிகழ்ச்சி, நவீன கால உறவுகளையும், மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலையும் புதிய கோணத்தில் வழங்க இருக்கிறது. 


பிக் பாஸ் போன்ற மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தரமான மற்றும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இந்திய ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பனிஜாய் ஆசியா கூட்டணி. தற்போது 'செகண்ட் லவ்' மூலம் மீண்டும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. 

 

'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் மூலம், நம்பிக்கை, மனமாற்றம் மற்றும் காதலை கொண்டாடும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சியை தனது ஒரிஜினல்ஸில் இணைத்துள்ளது ஜியோஹாட்ஸ்டார்.


'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் வெளியீட்டை முன்னிட்டு வெளியாகும் புதிய அப்டேட்களை அறிய, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடருங்கள்.


ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 13 முதல் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சி தமிழில் ஸ்ட்ரீம் ஆகும்.


*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LOVE NEEDS NO REASON: JIOHOTSTAR ANNOUNCES ‘SECOND LOVE’, A FIRST-OF-ITS-KIND TAMIL DATING REALITY SHOW HOSTED BY RAMYA KRISHNAN

 LOVE NEEDS NO REASON: JIOHOTSTAR ANNOUNCES ‘SECOND LOVE’, A FIRST-OF-ITS-KIND TAMIL DATING REALITY SHOW HOSTED BY RAMYA KRISHNAN








JioHotstar is set to redefine the dating reality space in Tamil with the launch of ‘Second Love’, an all-new reality series premiering July 13. Hosted by the iconic Ramya Krishnan, the show marks the platform's first-ever dating reality format in Tamil, celebrating the belief that everyone deserves another chance at love. 

Building excitement for the launch, JioHotstar Tamil has unveiled the show's first promo in the form of a vibrant music video led by Ramya Krishnan, who effortlessly introduces audiences to the heart of Second Love. With Shrutika Arjun making an appearance as the show's Cupid, the promo celebrates hope, healing, and the joy of finding love again. It culminates with Ramya Krishnan delivering the show's powerful message: "Love needs no reason. It's love's brand-new season." — perfectly capturing the spirit of Second Love. 

Second Love promises to be a refreshing reality experience where individuals looking to move on from the past are given an opportunity to rediscover companionship and embrace new beginnings. Blending heartfelt emotions, hope, humour, and meaningful connections, the series offers a fresh perspective on modern relationships and the courage to open one's heart again. 

The series also marks another exciting collaboration between JioHotstar and Banijay Asia, following the phenomenal success of marquee reality properties like Bigg Boss. Together, they continue to bring premium, genre-defining unscripted entertainment to audiences across the country. 

With Second Love, JioHotstar expands its growing slate of original reality programming, introducing a unique format that celebrates hope, healing, and the many possibilities of love. 

Follow JioHotstar and JioHotstar Tamil across social media platforms for more exciting updates on Second Love in the lead-up to its premiere. 

  

Streaming Details 

Title: Second Love 

Premiere Date: July 13 

Platform: JioHotstar 

Language: Tamil 

 

About JioHotstar 

JioHotstar is India’s leading premium streaming platform, offering an expansive collection of blockbuster movies, original series, live sports, and entertainment across multiple languages. With a mission to bring world-class storytelling to every screen, JioHotstar continues to redefine the digital entertainment experience through innovation, inclusivity, and exceptional content.

Mythri Movie Makers Announced Their 4th Tamil Film, Featuring Dhruv Vikram, Directed by Karan A Kumar; The Project #MythriTamil04 #DV4 Begins With Traditional Pooja Ceremony

 Mythri Movie Makers Announced Their 4th Tamil Film, Featuring Dhruv Vikram, Directed by Karan A Kumar; The Project #MythriTamil04 #DV4 Begins With Traditional Pooja Ceremony*






Leading Pan India Production House Mythri Movie Makers is not restricting themselves to Telugu industry, and are making films in other languages as well. Meanwhile, they have announced their fourth Tamil venture, which marks 4th film as a lead actor for Dhruv Vikram. Karan Aravind Kumar will direct the movie billed to be an out-and-out commercial entertainer.


The project #MythriTamil04 #DV4 has officially been kickstarted, with a grand pooja ceremony held at Mythri office - MRC Nagar, Chennai. The launch event witnessed the presence of the film's cast, crew, and several special guests. Dhruv Vikram looked stylish in a black polo T-shirt paired with cream trousers as he joined director Karan Aravind Kumar and the team for the auspicious occasion.


Director Keerthiswaran sounded the clapboard for the muhurtham shot. Directors Adhik Ravichandran, Ravikumar, Keerthiswaran, Antony Bhagyaraj, Raja, Sasi and Hi Nanna fame Shouryuv graced the launching ceremony.


Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, DV4 promises to showcase Dhruv Vikram in a completely mass-oriented avatar. Known for experimenting with intense and performance-driven roles, the young actor now appears ready to embrace a unique entertainer aimed at appealing to a wider audience.


Karan Aravind Kumar has also co-written the screenplay with Saby. The film boasts a talented technical crew. Cinematography will be handled by Viki, while Jayasuriya joins the project as editor. Costume designer Praveen Raja, production designer GM Sekhar, and action choreographer Vikram Mor complete the impressive lineup behind the camera.


Other details are awaited.


Cast: Dhruv Vikram


Technical Crew:

Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili

Banner: Mythri Movie Makers

Director: Karan Arvind Kumar

PRO: Yuvraaj

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) - இயக்குநர் கரண் அரவிந்த் குமார் - துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ '#MythriTamil04 '#DV4'

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) - இயக்குநர் கரண் அரவிந்த் குமார் - துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ '#MythriTamil04  '#DV4' படத்தின் தொடக்க விழா*






துருவ் விக்ரம் நடிக்கும் '#DV 4' பட தொடக்க விழா


துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நான்காவது படமாகவும் இது அமைய உள்ளது.


இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில்  தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் .



மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும்  தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- 'ஹாய் நானா' சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்-  ஆண்டனி பாக்யராஜ் - ராஜா -  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.


அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார்.  இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஜெயசூர்யா மேற்கொள்கிறார். தேசிய விருதை வென்ற விக்ரம் மோர் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கிறார். கமர்ஷியல் என்டர்டடெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி & ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.


'பைசன்' படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்தில், அவர் முற்றிலும் மாஸ் ( Mass) பாணியிலான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற இளம் நடிகரான துருவ் விக்ரம் தற்போது பரந்த அளவிலான ரசிகர்களைக் கவரும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.


அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி ', பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட் 'ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.


அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

 *“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*








முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது..,


“அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ  நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


இந்தப் படம் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இப்படம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு உத்வேகத்தை அளிக்கும்.


மேலும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சண்டைப் பயிற்சி இயக்குநர்  பீட்டர் ஹெய்ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளரின் பணியையும் பாராட்டிய அவர், படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. “அங்கீகாரம்” யாரும் தவறவிடக் கூடாத படம் என்றும், அனைவரும் திரையரங்குகளில் பார்த்து படத்திற்கு இன்னும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.



நடிகை இசபெல்லா பேசியதாவது..,


“அங்கீகாரம்" எனக்கு கிடைத்த முதல் அடையாளம். இதுவரை மேடையேறி பேசியதில்லை. முதன்முறையாக இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றி.


இயக்குநர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து, இந்தப் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தார். கே ஜெ ஆர் சார் மிகவும் கம்ஃபர்ட்டாக நடிக்க வைத்தார். படத்தில் எனக்கு ‘தங்கமயில்’ என்ற பெயர் வைத்ததற்கும் நன்றி. ஜிப்ரான் சாரின் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரைப் போன்ற கலைஞருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு முழுவதும் என்னை ஊக்கப்படுத்தினார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை இவ்வளவு அழகாக திரையில் காட்டிய எடிட்டர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”



நடிகை வசுந்தரா பேசியதாவது,


“அங்கீகாரம் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். சினிமாவுக்காக தேவையில்லாத மிகைப்படுத்தல்களை சேர்க்காமல், வாழ்க்கைக்கு நெருக்கமான முறையில் முக்கியமான ஒரு கருத்தை இயக்குநர் தென்பாதியான் சொல்லியிருக்கிறார்.


இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கே.ஜெ.ஆர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய மாற்றமும், அர்ப்பணிப்பும் மிகவும் பிரமிக்க வைத்தது. பீட்டர் ஹெயின் மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஜிப்ரான் சாரின் இசை எப்போதும் போல அற்புதமாக அமைந்துள்ளது.


அருண், பிரசாந்த், அஜித் ஆகிய இளம் தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒரு கதையை நம்பி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படம் வெற்றி பெற்றால்தான் இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாகும். இந்தப் படத்தையும் உங்கள் மனதில் இடம் கொடுத்து, தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”



இசையமைப்பாளர்  ஜிப்ரான் பேசியதாவது..,


“அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த விமர்சனங்களும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதற்காக அனைவருக்கும் என் நன்றி. கே.ஜெ.ஆர் தயாரிப்பாளராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும், சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அடுத்த படமும் அதுபோன்ற முக்கியமான கருத்தை பேசும் படமாக இருக்கும்.


ஒரு கதைக்குள் மனிதர்களின் உணர்வுகளை இயல்பாக கொண்டு வருவது மிகவும் கடினம். அதை இயக்குநர் தென்பாதியான் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கதையின் எழுத்து மிகவும் வலுவாக உள்ளது. இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாக, உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். குறிப்பாக இரண்டாவது வாரத்திலும் இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நன்றி.”



சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசியதாவது..,


“அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த பாராட்டும், நேர்மையான விமர்சனங்களும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. புதுமுக ஹீரோவான கே.ஜெ.ஆர் மீது எனக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்திற்காக அவர் எடுத்த உழைப்பும், உடல்மாற்றமும், அர்ப்பணிப்பும் சாதாரணமானது அல்ல. ஒரு தடகள வீரராக திரையில் இயல்பாகத் தோன்றுவதற்காக கடுமையாக உழைத்துள்ளார்.


இந்தப் படத்தின் பின்னால் இயக்குநர் தென்பாதியான் , கே.ஜெ.ஆர், தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் கடின உழைப்பு இருக்கிறது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்காக இயக்குநருக்கு என் பாராட்டுகள்.


இந்தப் படத்திற்காக நாங்களும் பல மாதங்கள் ஆய்வு செய்து பணியாற்றினோம். படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்தனர். குறிப்பாக மூன்று தயாரிப்பாளர்களின் ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது. ஒளிப்பதிவாளரும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். அங்கீகாரம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான படம். அனைவருக்கும் நன்றி.”


ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத் பேசியதாவது..,


“இயக்குநர் தென்பாதியான் காட்சிகளை முன்கூட்டியே தெளிவாக கற்பனை செய்து வைத்திருப்பார். அதனால் பல சவாலான இடங்களில்கூட, கஷ்டங்கள் இருந்தாலும் அதே இடத்தில் படமாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அந்த நம்பிக்கையால்தான் படத்தின் காட்சிகள் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளன.


ஸ்போர்ட்ஸ் காட்சிகளை படமாக்கும்போது பீட்டர் ஹெய்ன் மாஸ்டருடன் பணியாற்றுவது ஆரம்பத்தில் பயமாக இருந்தது. அவர் ஒரு ஜாம்பவான் ஆனால் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை ஒரு மென்டராகவும், வழிகாட்டியாகவும் இருந்து ஒவ்வொரு காட்சியையும் விரிவாக விளக்கி மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார். இந்தப் படத்தின் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்ததற்கு அவருடைய பங்களிப்புதான் முக்கிய காரணம்.


படத்தின் முதல் கியூப் திரையிடலை பார்த்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். இயக்குநரை கட்டிப்பிடித்து ‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என்று சொன்னேன். ஜிப்ரான் சாரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. பத்திரிகையாளர்கள் படத்தை பாஸிடிவாக எழுதி மக்களிடம் கொண்டு சென்றது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது.


படத்தில் நடித்த நடிகர்கள், கலரிஸ்ட், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் முதல் அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”



எடிட்டர் தினேஷ்குமார் பேசியதாவது..,


“முதலில் அங்கீகாரம் படத்திற்கு ஆதரவு அளித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் தென்பாதியான் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.


இந்தப் படத்தில் பணியாற்றிய ஜிப்ரான், பீட்டர் ஹெய்ன், சம்பத் ஆழ்வார், ஏ.விஸ்வநாத் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் காட்சிகள் சினிமாத்தனத்தை மீறாமல் இயல்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் அமைந்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாகும். அனைவரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.”


இயக்குநர் தென்பாதியான் பேசியதாவது…,


“இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்தக் கதையை முதலில் கேஜிஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன். பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது கேஜிஆர், ‘இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் கொடுத்த விமர்சனங்களிலும் அது பிரதிபலித்திருக்கிறது.


இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தார்கள். ஜிப்ரான் சார் அற்புதமான இசையைக் கொடுத்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, ‘இந்த ஹீரோவுக்கா?’ என்று முதலில் கேட்டார். ஆனால் கதையை முழுமையாகக் கேட்ட பிறகு மிகவும் பிடித்துப்போய், இந்தப் படத்தில் இணைந்தார். அவர் இணைந்த பிறகு, இந்தப் படம் இன்னும் பெரிய உயரத்தை அடைந்தது. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த வாரங்களிலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவு வேண்டும். நன்றி.”


தயாரிப்பாளர் அருள் முருகன் பேசியதாவது..,


ஸ்வஸ்திக் விஷன்ஸ்  நிறுவனத்தின் முதல் படம் இது. எங்களுடைய ஹீரோ கே.ஜி. சார் வந்திருக்கிறார். எங்களை நம்பி, இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள் உழைத்திருக்கிறார். நான் தயாரிப்பாளராக இருப்பதற்கு முன்பு, அவரிடம் மேனேஜராகத்தான் என்னுடைய கேரியரைத் தொடங்கினேன். இன்று இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்கிறேன். அதற்கு ரொம்ப நன்றி சார்.


அடுத்து ஜே.பி. அண்ணா, அதாவது இந்தப் படத்தின் இயக்குநர். முதல் நாளிலிருந்தே இன்று வரை அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய எழுத்தையும், அவர் சொல்ல வந்த விஷயங்களையும் படமாக உருவாக்கியிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்கள் தொழில் நுட்ப  கலைஞர்கள் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் அண்ணா என ஒளிப்பதிவாளர் அனைவரும் கடுமையான உழைப்பை தந்துள்ளனர். இப்படத்தை எப்படியாவது நீங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  நன்றி.



தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர் பேசியதவது..,


முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் தென்பாதியான் (ஜே.பி.) அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் முக்கிய காரணமே அவர்தான். இந்தக் கதைக்காக நிறைய ஆய்வுகள் செய்தார். ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காக பல இடங்களுக்குப் பயணம் செய்து, மிகுந்த உழைப்பைச் செலவிட்டார்.


அதேபோல் தயாரிப்பாளரும் எங்கள் அண்ணனுமான கே ஜெ ஆர் இந்தப் படத்திற்காக முழு ஆதரவையும் அளித்தார். இந்த மாதிரியான படத்தை உருவாக்குவதற்கு நிறைய காலமும் உழைப்பும் தேவைப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். தொழில்நுட்பக் குழு முழு ஆதரவு தந்ததனர்


“அங்கீகாரம்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இன்னும் இப்படத்திற்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.


தயாரிப்பாளர் நடிகர் கே ஜெ ஆர் பேசியதாவது..,


முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது.


இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை மீடியம் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.



இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் உட்பட அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.


ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.


விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பையும், ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பையும், ஷெரீப் நடன அமைப்பையும் கவனித்துள்ளனர்.


இப்படம் மக்களின் பேராதரவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Wednesday, 1 July 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸின் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!*

 *மைத்ரி மூவி மேக்கர்ஸின் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!*



சில  திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என அனைத்தும் சேர்ந்ததுதான். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் படமாக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் படப்பிடிப்பை குறித்த காலத்திற்குள் முடித்து கொடுத்தார். திரைக்கதையின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் இடையறாத கவனம் பாராட்டுக்குரியவை. இந்தத் திரைப்படம் நல்லபடியாக வர உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர். 


இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, "‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது எனக்கு நிறைவாக உள்ளது. எனது கதையில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றார். 


*நடிகர்கள்:* ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சுரேந்திரன் பரஞ்சோதி, படத்தொகுப்பாளராக அசோக் அர்ஜுனன், இசையமைப்பாளராக பரத் சங்கர், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, கலை இயக்குநராக ஏ. பாலுமகேந்திரா மற்றும் விளம்பர வடிவமைப்பாளராக வியாகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


பின்னணிப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 'மொத ராத்திரி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Mythri Movie Makers' 'Modha Rathiri' Wraps Up Shooting; Post-Production Begins in Full Swing*

 *Mythri Movie Makers' 'Modha Rathiri' Wraps Up Shooting; Post-Production Begins in Full Swing*

Few films generate immense excitement from the very moment they are announced. The anticipation only grows stronger when such a project comes from a production house that has consistently delivered both Pan Indian blockbusters and acclaimed regional entertainers. Continuing its earnest endeavour to bring compelling stories to Tamil cinema, Mythri Movie Makers has been steadily expanding its creative footprint with a promising slate of projects. Among them is "Modha Rathiri", which has now successfully completed its shooting schedule. Directed by Raja Karuppasamy, the film stars Rishikanth and Anishma Anilkumar in the lead roles.


Producers Naveen Yerneni and Y. Ravi Shankar said, "Completing a film on schedule is never merely about planning; it reflects the commitment, discipline, and collective effort of an entire team. Director Raja Karuppasamy has handled this responsibility with remarkable clarity and conviction. Despite this being his directorial debut, he displayed the confidence and maturity of an experienced filmmaker, ensuring that every schedule progressed seamlessly. His dedication to the script, meticulous execution, and unwavering focus deserve immense appreciation. We are equally grateful to our cast, technicians, and crew members for their wholehearted contribution in bringing this project to life.”


Director Raja Karuppasamy said, "Successfully completing the shooting of 'Modha Rathiri' is a truly emotional and fulfilling moment for me. I extend my heartfelt gratitude to producers Naveen Yerneni garu and Y. Ravi Shankar garu for believing in my vision, encouraging me at every stage, and giving me complete creative freedom throughout this journey. I sincerely thank Rishikanth, Anishma Anilkumar, every member of the cast, our exceptional technical team, and the entire crew for their tireless dedication and support. We now step into the post-production phase with great enthusiasm, and the work is progressing briskly. We are committed to delivering the film exactly as we visualised  it and look forward to presenting it to audiences very soon.”


"Modha Rathiri" features an ensemble cast comprising Rishikanth, Anishma Anilkumar, Chetan, A. Venkatesh, Bucks, Abdool Lee, Shelly Kishore, Sangeetha Balan, Banupriya, Sumithra Devi L., Varshini Karmegham, Karthikeyan, Velan, and Kowshik Kabilan, among others.


The film's technical crew includes Surendran Paranjothi as Director of Photography, Ashok Arjunan as Editor, Bharath Sankar as Music Director, Poornima Ramaswamy as Costume Designer, A. Balumahendra as Art Director, and Viyaki as Publicity Designer.


With post-production progressing at a brisk pace, the makers are confident about the film's next phase. Official announcements regarding the audio launch, trailer, and worldwide theatrical release date of "Modha Rathiri" will be made soon.

Tuesday, 30 June 2026

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 சங்கங்களின் தலைவர், செயலாளர் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம்,  இன்று 30.6.2026 சென்னை Accord ஹோட்டலில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் நன்மை கருதி முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளது. அதில் குறிப்பாக தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்காத வண்ணம்,  தமிழ்த் திரையுலகில்  புதிய முயற்சியாக, சிறிய, மத்திமம், பெரிய பட்ஜெட் என்று மூன்று வகையாக பிரித்து அதற்குரிய சம்பளம் வழங்க  அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முடிவு செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளார். இது இந்திய திரையுலகிற்கு எடுத்துக்காட்டாய் அமையும் என்பதில் ஐயமில்லை. 









மேற்படி கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. கலைப்புலி எஸ் தாணு, துணைத்தலைவர் திரு.s. கமலக்கண்ணன் செயலாளர்கள் திரு. S. கதிரேசன், திரு. ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் n. சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி சுஜாதா விஜயகுமார், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திரு.டி. சிவா, பொருளாளர் திரு.தனஞ்செயன் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர் திரு. ஆர்.வீ.உதயகுமார், இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்துகொண்டார்கள்..

இயக்குனர் வ.கௌதமன் தொழிலதிபர் க.கண்ணன் இல்ல திருமண நிகழ்வு புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கண்வென்ஷன் சென்டரில் இனிதே நடைபெற்றது.*

இயக்குனர் வ.கௌதமன் தொழிலதிபர் க.கண்ணன் இல்ல திருமண நிகழ்வு புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கண்வென்ஷன் சென்டரில் இனிதே நடைபெற்றது.* 



மணமக்கள் 

க.குணாநிதி பி.ஆர்க்.,

கௌ.பரஞ்சோதி பிகாம்., எம்.பிஏ., இணையர்களை நேரில் வந்து மனம் நிறைந்து வாழ்த்தியவர்களின் பட்டியல்


முன்னாள் முதல்வர்  திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி

மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான்

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்

மேல்மருவத்தூர் செந்தில் அடிகளார்,

முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன்

 திமுக எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.இராசா, மேனாள் அமைச்சர், தற்போதைய குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின்   எம்பி ப.இரவிக்குமார்,

 விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன், வானூர் எம்எல்ஏ கௌதம், புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன், நெய்வேலி எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன், சபா.இராஜேந்திரன், பாண்டி எம்எல்ஏக்கள் செந்தில் கவுண்டர், பாஸ்கர், பாமக சேர்மன் மா.க.ஸ்டாலின், சுப இளவரசன், திராவிட வெற்றிக் கழகம் மல்லை சத்யா, 


நடிகர்கள் சத்தியராஜ் ராதாரவி, செந்தில் சமுத்திரக்கனி, பொன்வண்ணன்  தம்பி ராமையா, ஏகன், இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா,


இயக்குநர்கள் தங்கர்பச்சார், சேரன், மு.களஞ்சியம் சீனுராமசாமி, சற்குணம், புகழேந்தி தங்கராஜ், லெனின் வடமலை


தயாரிப்பாளர்கள் 

த.மணிவண்ணன்

சுரேஷ் காமாட்சி, சரவணராஜா, கிருஷ்ணமூர்த்தி,

குறள் அமுதன், சுந்தரவரதன், அருளானந்தம்,

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா


நீதியரசர்கள் கலையரசன், புகழேந்தி,


நியூஸ் 18 தலைமை செய்தியாசிரியர்

கார்த்திகை செல்வன்

மேனாள் சன் நியூஸ் தலைமை செய்தியாசிரியர் இராஜா, ராஜ் டிவி ரவீந்திரன்,

புதுயுகம் கார்மல்

ஊடகர்கள் ஏகலைவன் , கார்ட்டூனிஸ்ட் பாலா


கல்வியாளர்கள்

விஜடி சங்கர்

டெல்டா இளமாறன்

எஸ் ராஜேந்திரன்

விருதை சுந்தரவடிவேலு  புனிதா கணேசன்


தமிழ்நாடு அரசு மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், தனவேல் ஐஏஎஸ்


கவிஞர்கள் காசி ஆனந்தன், அறிவுமதி, பச்சியப்பன், கவிபாஸ்கர், பூவை சாரதி எழுத்தாளர்கள் ஆறு இராமநாதன் கண்மணி குணசேகரன், தமிழ்மகன், மணவழகன், அமுல்ராஜ் இளங்கோவன், இரவிக்குமார்,

பாடகர்கள் அந்தோணி, புதுவை சித்தன், மனித வள பயிற்சி நிபுணர் சான்றோன்,


தொழிலதிபர்கள்

பல்லாவரம் இராமமூர்த்தி, அண்ணாதுரை, டெல்டா செல்வக்குமார்

லண்டன் சிவந்தன், செல்வன் சீமான், ஆடிட்டர் நம்பி ஆரூரன், வில்லியப்பன்


மருத்துவர்கள் தொல்காப்பியன், சித்தா தணிக்காசலம், வேலாயுதம், கண்ணன்

உள்ளிட்ட பேராசிரியர்களும் ஆசிரியர்களும்  பல்வேறு துறைகளின் ஆளுமைமிக்க பெரியோர்களும் கலந்துகொண்டனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக பேரன்பும் பெரும்பாசமும் நிறைந்த சொந்தங்கள், உறவுகள், நட்புகள் என அனைவரும் இடைவெளி இல்லாது இறுக கைப்பற்றி இத்திருமணத்தை நடத்திக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் இருவீட்டார்களின் சார்பில் தலைவணங்கி எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


குறிப்பு: பெயர் குறிப்பிட மறந்தவர்கள் பெரிய மனதோடு மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  நினைவுக்குள் வர வர பட்டியலில் சேர்த்துக்கொள்கிறோம்.


வந்திருந்த அனைத்து விருந்தினர்களையும் இயக்குனர் வ.கௌதமன், மல்லிகா கௌதமன்

தொழிலதிபர் க.கண்ணன்

க.சம்பாவதி க.சத்தியசீலன் த.மணிவண்ணன்

கீதாஞ்சலி மணிவண்ணன் 

தமிழ் கௌதமன் ஆவல் கணேசன் அம்பத்தூர் மணி,

புலவர் இரத்தினவேலன் வெங்கடேசன்

தமிழ் கௌதமன்

லெனின் வடமலை

தமிழ்ப்பேரரசு கட்சி அவைத்தலைவர் சரவணன், கு.முடிமன்னன், அ.பிரபாகரன்,

திருமலை, கயல் ஆகியோர் வரவேற்றனர்