Featured post

Legend Saravanan’s blockbuster 'Leader' to premiere on Amazon Prime Video on May 29

 Legend Saravanan’s blockbuster 'Leader' to premiere on Amazon Prime Video on May 29* *'Leader' starring Legend Saravanan wi...

Wednesday, 27 May 2026

Legend Saravanan’s blockbuster 'Leader' to premiere on Amazon Prime Video on May 29

 Legend Saravanan’s blockbuster 'Leader' to premiere on Amazon Prime Video on May 29*



*'Leader' starring Legend Saravanan will stream on Amazon Prime Video in Tamil, Telugu, Malayalam, and Kannada*


After its grand theatrical release across the world on April 3, 'Leader', starring Legend Saravanan, emerged as a massive success with overwhelming support from audiences everywhere. The film has secured its place among this year’s blockbuster hits.


Written and directed with gripping intensity by R.S. Durai Senthilkumar, the film received widespread appreciation from audiences and critics alike for Legend Saravanan’s high-octane action sequences and emotionally powerful performance.


As fans from various quarters eagerly awaited updates regarding the film’s OTT release, the makers have now officially announced that 'Leader' will premiere on Amazon Prime Video this Friday, May 29, in Tamil, Telugu, Malayalam, and Kannada languages.


The team has expressed confidence that the film will receive the same enthusiastic response on OTT as it did during its successful theatrical run.


Produced on a grand scale by Legend Saravana Stores Productions, 'Leader' features Legend Saravanan in the role of a loving father who takes on immense challenges for the sake of his child. Payal Rajput plays the female lead, while Shaam, Andrea Jeremiah, Lal, Prabhakar, Amritha Aiyer, VTV Ganesh and others appear in pivotal roles.


With soul-stirring music composed by Ghibran Vaibodha, stunning visuals captured by cinematographer S. Venkatesh, razor-sharp editing by Pradeep E. Ragav, and thrilling action choreography by Mahesh Mathew, 'Leader' promises a complete entertainment package loaded with action, suspense, emotion, and excitement as it heads to OTT audiences worldwide.


***

திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டிய லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம்

*திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டிய லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது*



*லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது*


உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.


ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் விறுவிறுப்பான எழுத்து மற்றும் பரபரப்பான இயக்கத்தில் உருவான இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை பெற்றது. 


'லீடர்' திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று பலதரப்பட்ட ரசிகர்களும் ஆர்வமுடன் கேட்டு வந்த நிலையில் இது குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


வரும் வெள்ளிக்கிழமை மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'லீடர்' திரைப்படம் வெளியாகிறது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது போன்றே ஓடிடியிலும் இப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள 'லீடர்' திரைப்படத்தில் தன் குழந்தைக்காக சவால்களை எதிர்கொள்ளும் ஒரு பாசமிகு தந்தையாக லெஜெண்ட் சரவணன் நடித்துள்ளார். பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக ஒடிடியை நோக்கி 'லீடர்' வந்துக் கொண்டிருக்கிறது.



International Lawyer Harihara Arun Somasankar G Announces the Launch of His New Novel 'Finally Us

 *International Lawyer Harihara Arun Somasankar G Announces the Launch of His New Novel 'Finally Us'*



International Lawyer and author Harihara Arun Somasankar G is set to launch his latest literary work, 'Finally Us' — an emotional and deeply human love story that explores grief, healing, silence, and the courage to love again. 


Known for a distinguished legal career spanning criminal, civil, and constitutional law, Harihara Arun Somasankar G now presents a sensitive and evocative narrative that moves beyond courtrooms into the emotional complexities of the human heart. 


A Tale of Love Found Between the Waves, Finally Us follows the journey of Rana, a man who stopped believing in love after losing his mother to the sea, and Maya, an optimistic architect whose warmth slowly breaks through the walls he built around himself. What begins as an accidental meeting evolves into a quiet and profound emotional connection shaped by shared silences, longing, heartbreak, and destiny.


The novel is described as a slow-burn emotional romance that reflects on second chances, emotional healing, and the transformative power of love. The story culminates at the very sea that once defined loss for Rana -becoming the place where truth, healing, and love finally return. 


Speaking about the book, Harihara Arun Somasankar G  said: “Finally Us" is not merely a love story. It is about emotional survival, silent battles, and the hope that love can still find us even after life changes us completely.” 


Harihara Arun Somasankar G currently practices as an International Lawyer and has previously served as Government Advocate (Prosecutor) for the State of Tamil Nadu. Over the years, Harihara Arun Somasankar G has handled significant criminal and constitutional matters and has been associated with legal advisory work connected to international criminal law. The legal work and interpretative approach of Harihara Arun Somasankar G have received recognition from the Hon’ble High Court of Madras.


A graduate of ILS Law College, Pune, Harihara Arun Somasankar G has also pursued advanced legal and international academic programs associated with institutions including Stanford University, the University of  Oxford, and Cardiff University. Alongside notable legal achievements, Harihara Arun Somasankar G has authored works such as Earthman: The Defender of the World and My Little Princess, reflecting a diverse literary voice and creative depth. 


With Finally Us, Harihara Arun Somasankar G brings readers a heartfelt contemporary romance that resonates with themes of vulnerability, emotional resilience, and the beauty of finding love when it is least expected. 


Book Details 

Title:Finally Us

Author: Harihara Arun Somasankar G

Genre: Contemporary Romance / Emotional Fiction

சர்வதேச வழக்கறிஞர் திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி மனித

 *சர்வதேச வழக்கறிஞர் திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி மனித உணர்வுகளையும் காதலையும் அடிப்படையாகக் கொண்டு எழுதிய புதிய நாவல் 'ஃபைனலி அஸ்' (Finally Us) வெளியிடப்பட்டது.*



சர்வதேச வழக்கறிஞரும்,  எழுத்தாளருமான திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி தனது புதிய இலக்கியப் படைப்பான  'ஃபைனலி அஸ்' என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.  மனித உணர்வுகளின் ஆழத்தைத் தொட்டுச் செல்லும் இந்த நாவல், துயரம்,  மனப்பக்குவம்,  மௌனம் மற்றும் மீண்டும் காதல் வயப்படும் மனநிலையை மையமாகக் கொண்டு, எழுதப்பட்ட உணர்ச்சிபூர்வமான காதல் கதை இது. 


குற்றவியல், சிவில் மற்றும் அரசியலமைப்பு சட்டத் துறைகளில் சிறப்பான அனுபவம் கொண்ட ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி, இந்த நாவல் மூலம் நீதிமன்ற உலகத்தைக் கடந்த மனித மனத்தின் உணர்ச்சி மற்றும் பரிமாணங்களை மிக நுணுக்கமாகவும்,  ஆழமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.


'ஃபைனலி அஸ்'

 நாவல்,  கடலில் தனது தாயை பறிகொடுத்த ராணா என்ற இளைஞன்,  காதலின் மீதான நம்பிக்கையை இழந்து  வாழ்வதில் தொடங்குகிறது. பின்னர் உற்சாகத்தோடு வாழும் கட்டிடக் கலைஞரான மாயாவின் வருகையால் அவரது வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. எதிர்பாராத சந்திப்பாக தொடங்கும் இந்த உறவு, மௌனம், ஏக்கம், மனவேதனை மற்றும் விதியின் பின்னணியில் ஆழமான உணர்ச்சி பிணைப்பாக வளர்வதை விவரிக்கிறது. மேலும், இந்நாவல் இரண்டாவது வாய்ப்பு, உணர்வுகளை மீட்டெடுத்தல் மற்றும் காதலின் மாற்றத்திறன் போன்ற கருத்துகளை மையமாகக் கொண்ட,  மென்மையான காதல் கதையாக விவரிக்கப்படுகிறது. ராணாவுக்கு ஒருகாலத்தில் இழப்பின் அடையாளமாக இருந்த கடலே, இறுதியில் உண்மை, ஆறுதல் மற்றும் காதல் மீண்டும் மலரும் இடமாக மாறுகிறது. 


இந்த அழகிய இலக்கியப் படைப்பின் உரிமையாளர் திரு.  ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி உரையாற்றும்போது,  

'ஃபைனலி அஸ்' என்பது வெறும் காதல் கதை மட்டுமல்ல என்றும்,  வாழ்க்கை தலைகீழாக மாறிய பின்னரும், காதல் நம்மைத் தேடி மீண்டும் வர முடியும் என்ற நம்பிக்கையையும், மனதின் அமைதியான போராட்டங்களையும் பேசும் கதை இது என்றும் தெரிவித்தார். 


திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி தற்போது சர்வதேச வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு வழக்கறிஞராகவும் (Government Advocate/Prosecutor) பணியாற்றியுள்ளார். குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ள அவர், சர்வதேச குற்றவியல் சட்ட ஆலோசனையும் வழங்கி வருகிறார். அவரின் சட்ட அணுகுமுறையும் விளக்கத் திறனும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாராட்டைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


புனேயிலுள்ள ஐ.எல்.எஸ். சட்டக் கல்லூரியில்  (ILS Law College) பட்டம் பெற்ற திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்,  (Stanford University) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்,  (University of Oxford) மற்றும் கார்டிஃப் பல்கலைக்கழகம்  (Cardiff University) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்த,  சட்ட மற்றும் சர்வதேச கல்வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.


சட்டத் துறையில் சாதனைகள் புரிந்ததுடன், இலக்கியத்துறையிலும் சாதனை படைத்துள்ள இவர், முன்னதாக எர்த்மேன்: தி டிஃபண்டர் ஆஃப் தி வேர்ல்டு (Earthman: The Defender of the World) மற்றும் மை லிட்டில் பிரின்ஸஸ்  (My Little Princess) போன்ற படைப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்.  இதன் மூலம் அவரது பல்துறை இலக்கிய ஆற்றலும் படைப்பாற்றலும் வெளிப்படுகின்றன.


 'ஃபைனலி அஸ்' நாவல் மூலம், எதிர்பாராத தருணங்களில் காதலை கண்டுபிடிக்கும் மனித உணர்வுகளின் அழகையும், மனவலிமையையும், உணர்ச்சி நெகிழ்ச்சியையும் வாசகர்களிடம் இவரது எழுத்துகள் கொண்டு சேர்க்கின்றன.

Tuesday, 26 May 2026

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்

 டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்

திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், "உறவுகள்" என்ற தலைப்பில் "உயிரிணையே"  இசை

ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது 






இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன்,

தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்... 


இவ்விழாவில்

திரு கங்கை அமரன் அவர்கள் பேசியதாவது...


தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களைப் பற்றி பேசும் பொழுது...அவரின் நல்ல எண்ணம் தான் இப்படத்தின் தொகுப்பு என்றும்... அருமையான சமூக உறவுகளை..ஏஐ தொழில்நுட்பத்துடன்  நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார்..எங்கள் அண்ணா இசைஞானி யின் வாசிப்பில் தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம்...எங்கள் குழந்தைகளை அண்ணனிடம் தான் சாரீரம் கற்று கொள்ள அனுப்புவோம்... அப்படிப்பட்ட குருக்களு டன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.. இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா?இல்லையா? என்பது தெரியவில்லை... முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலை யாக பாடுவோம்... இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம்..AI இல் பீட் (feed) பண்ணி பாடுகின்றோம்... அதற்கு நாம் எப்படி நம்மளை பெருமைபடுத்தி கொள்வது?...உண்மை யை சொல்ல வேண்டுமென்றால்  Ai தொழில்நுட்பம் நம்மளை கெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி நம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது... ஒரு தீம் ஐ AI இல் கொடு த்துவிட்டால், அதுவே பாட்டெழுதிவிடுகிறது.... இதில் எப்படி நம்ம பேரை போட்டுக் கொள்வது.. எதற்கு சொல்கிறேன் என்றால் வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும், எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.. வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை.. 50 வருட வாழ்க்கையை இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களை நேசித்து அழைத்துச் செல்லுங்கள்... கனவோ நினைவோ இசையே எங்கள் மூச்சு... என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Monday, 25 May 2026

Ram Charan Will Win a National Award for Peddi, and Audiences Will Be Amazed: Kannada Superstar Shiva Rajkumar

 Ram Charan Will Win a National Award for Peddi, and Audiences Will Be Amazed: Kannada Superstar Shiva Rajkumar*





Mega Power Star Ram Charan’s rural action drama Peddi is directed by Buchi Babu Sana, presented by Mythri Movie Makers and Sukumar Writings, and produced on a grand scale by Venkata Satish Kilaru under the Vriddhi Cinemas banner. With chartbuster songs and a powerful trailer, expectations are sky-high. The film releases worldwide on June 4th.

Kannada Superstar Shiva Rajkumar, who plays a key role, shared his experience during his interaction with media.


What excited you when Buchi Babu narrated the story?

Peddi has a fantastic story, and my character is excellent. I genuinely wanted to be part of such a powerful film. I’m very happy with the role I got to play.


What is special about your character, Gournaidu?

Gournaidu has a clear purpose and strong motivation. Director Buchi Babu has presented the character beautifully.


Are you playing Ram Charan’s coach in the movie?

It is somewhat similar to a coach’s role. Peddi’s journey is extraordinary, and many characters come into his life along the way. The bond between Peddi and Gournaidu is very interesting. The love, affection, and emotional connect between them will resonate with audiences.


Tell us about Ram Charan’s performance:

I truly believe Ram Charan will win a National Award for this film. His physical transformation and performance are outstanding. He worked incredibly hard and stayed fully dedicated to this role for nearly two years. He completely immersed himself in the character and performed with absolute honesty.


How was the shooting experience for Peddi?

Ram Charan, director Buchi Babu Sana, and all the technicians treated me with great respect and affection. We worked like a family, and that supportive atmosphere helped me perform even better.


Tell us about director Buchi Babu:

Buchi Babu has shaped the film brilliantly. His filmmaking style and execution are top-notch. He captured exactly what the story needed. His storytelling is exceptional- he is a fantastic director.


What about the other characters?

Along with my character, Buchi Babu has crafted Jagapathi Babu’s role and every other character wonderfully. Additionally, Rathnavelu’s visuals will mesmerize audiences.


The movie features multiple sports, right?

Yes, the film includes several sports, but each one is deeply connected to the story. Audiences will thoroughly enjoy this aspect on the big screen.


There is a lot of discussion about the climax. What can we expect?

The climax is very surprising. You have to experience it in theaters to truly feel its impact. Peddi’s journey is remarkable and will be loved by everyone.


Tell us about the producer Satish:

Satish is a very passionate producer. He has mounted this prestigious project with excellent production values.


How do you prepare for a role?

Once the director narrates the story, I visualize a style for the character and discuss it with him. Then, I blend his ideas with my own to fully understand and portray the role.


What kind of roles do you prefer?

I like playing characters that connect with my heart. Gournaidu in Peddi is exactly that kind of role.


What are your current projects?

I am currently working on Gummadi Narsayya and Jailer 2. If good scripts come my way, I would definitely love to do more Telugu films

ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி

 *ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி  ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!*



*கிளைமாக்ஸ் முதல் கதாபாத்திரங்கள் வரை “பெத்தி” படத்தில் பல ஆச்சரியங்கள்  காத்திருக்கிறது – சிவராஜ்குமார் !!*


கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.


இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.


அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.


இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.


பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.


பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.


*



.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி....

 பத்திரிகை செய்தி


 மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி....


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அளித்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து,  தற்போதைய தமிழ் சினிமா சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்ட மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், புதியதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் முதல் 7 நாட்கள் திரையரங்குகளில் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்றும், மேலும் உள்ளூர் பண்டிகை காலங்களில் மற்றும்  பொது விடுமுறை நாட்களில் 5 காட்சிகள் திரையிடலாம் என்ற அனுமதி  அளித்துள்ளது திரையுலகினரிடையே மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி அறிவிப்பு நல்ல திரைப்படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்களிடம் உத்வேகம்  அளித்துள்ளது.  இந்த அறிவிப்பினை அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இந்த அறிவிப்பினை வெளியிட உறுதுணையாக இருந்த மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

 *திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!*






2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான 18வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, நேற்று (மே 24, 2026) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. திரைப்படத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்த நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டனர்.


இந்த பிரம்மாண்ட விழாவில் மலேசிய துணை அமைச்சர் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் ஏ2பி சீனிவாசன், லீமா ரோஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் புதிய விருது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. எடிசன் விருதுகளின் சேர்மன் செல்வகுமார் அறிவித்ததாவது, அடுத்த ஆண்டு முதல் விஜய் பெயரில் ஒரு சிறப்பு விருது அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு எடிசன் திரைப்பட விருதுகளில் வழங்கப்படும் என்றார்.


மேலும் இந்த நிகழ்வின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் 'எடிசன் மில்லியனரி கிளப் ' அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பேசிய எடிசன் விருதுகள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செல்வகுமார், உலகின் பல நாடுகளில் எடிசன் விருதுகளை விரிவுபடுத்துவதற்கும், உலகம் முழுவதிலும் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் பிசினஸ் செயவர்களை ஒன்றிணைப்பதற்குமான தளமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் மேலும் சர்வதேச தொடர்புகள் துறைக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 


இந்த ஆண்டின் முக்கிய விருதுகளில், 'பைசன்' திரைப்படத்திற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதையும், அதே படத்திற்காக மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றனர். 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படத்திற்காக ரியோ ராஜ் இந்த வருடத்தின் சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருது பெற்றார். பின்னணிப் பாடகர்களில், டிராகன் திரைப்படத்தின் 'வழித்துணையே...' பாடலுக்காக சஞ்சனா கல்மன்ஜே சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதையும், மதராசி திரைப்படத்தின் 'தங்கப்பூவே...' பாடலுக்காக ரவி ஜி சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் விருதையும் பெற்றனர்.


'மாமன்' திரைப்படத்திற்காக ஸ்வாசிகா சிறந்த கதாபாத்திர நடிகை விருதைப் பெற்றார். 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்காக விஜய் வேலுக்குட்டி சிறந்த எடிட்டர் விருதையும், அர்ஜுன் தாஸ் சிறந்த வில்லன் நடிகர் விருதையும் வென்றனர். இளம் நடிகர்களில், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்திற்காக பவிஷ் நாராயண் சிறந்த அறிமுக நடிகர் விருதையும், 'சிறை' திரைப்படத்திற்காக அனிஷ்மா அனில்குமார் சிறந்த அறிமுக நடிகை விருதையும் பெற்றனர்.


ஜூரி விருதுகள் பிரிவில் இந்திய திரைப்பட உலகின் பல முக்கிய கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நடிகர் டத்தோ ராதாரவி 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்றார். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், 'பீனிக்ஸ்' மற்றும் 'தி வெர்டிக்ட்' திரைப்படங்களுக்காக டைனமிக் பெர்ஃபார்மர் விருது பெற்றார். இந்த விருதை அவரது தாய் சாயா பெற்றுக்கொண்டார்.


பாடகி சைந்தவி 'தி வாய்ஸ் பியாண்ட் பவுண்டரிஸ்'  விருது பெற்றார். நாட்டுப்புறப் பாடகர் அந்தோணி தாசன் 'வாய்ஸ் ஆஃப் டிரெடிஷன்' விருது பெற்றார். மூத்த நடிகர் தம்பி ராமையா, 'முதல் பக்கம்' திரைப்படத்திற்காக 'வெட்ரன் பர்ஃபாமெர் அவார்ட்' பெற்றார். 


எடிசன் விருதுகள் தலைவர் செல்வகுமார் மற்றும் நடுவர் குழுவினருக்கு விருது பெற்ற பலரும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்த அங்கீகாரம் தங்களது கலைப் பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், தொடர்ந்து திரைப்படத் திறமைகளை கௌரவித்து வரும் எடிசன் விருதுகள் மீது பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.


இந்த ஆண்டின் எடிசன் திரைப்பட விருதுகள், தமிழ் சினிமாவின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டியதுடன், அதன் சாதனைகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல புதிய வாயில்களையும் திறந்து வைத்துள்ளது.