Featured post

*90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

*90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்* *நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பா...

Monday, 6 July 2026

*90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

*90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்*
















*நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் 'அருள்வான்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*


90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி - ஆரவ் ,ரம்யா பாண்டியன் -கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் 'அருள்வான்' திரைப்படத்தினை பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 


இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, 'பருத்திவீரன்' சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனிக்க.. லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ்  பிரைவேட் லிமிடெட்  சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஜி சரவணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வழங்குகிறார். 


எதிர்வரும் 17 ஆம் திகதி தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த 'அருள்வான்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இணை தயாரிப்பாளர் திருமதி சுபா சரவணன், இயக்குநர் கணேஷ் விநாயகன், இணை தயாரிப்பாளர்கள் சரண், சரத் , நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட் , நடிகைகள் ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநர் இளையராஜா , ஒளிப்பதிவாளர் எம். சுகுமார், கலை இயக்குனர் லால்குடி' இளையராஜா ,சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


நடிகர் காளி வெங்கட் பேசுகையில், '' இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். மனிதர்களும், மிருகங்களும் நடமாட கடினமான மலைப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. மலைப்பகுதியில் முட்புதர்களாக இருக்கும் இடத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் பின்னோக்கி ஓடிக் கொண்டிருப்பார். நாங்கள் அவரை பின்தொடர்ந்து செல்வதே சவாலானதாக இருக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதே சவாலானதாக இருக்கும். 


ஒரு நாள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு செல்வதற்கு எந்த வசதியும் இல்லை. நடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான 'டென்ட்'டை அவர்களே தூக்கிக் கொண்டு சென்று, ,அங்கு டென்ட் அடித்து தங்க வேண்டும். படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளூர் வழிகாட்டி ஒருவர் வேகமாக மலைப்பகுதியில் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்வது கடினமானதாக இருந்தது. ஓரிடத்தில் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்லும் போது 'திக் திக் 'என்று இருந்தது.  இவ்வளவு இருந்தும் இறுதி கட்ட படப்பிடிப்பில் இரண்டு நாள் என்னால்  கலந்து கொள்ள முடியவில்லை. அந்தப் படத்தில் சின்ன வேடத்தில் நடித்த எனக்கே அவ்வளவு சவால்கள் இருந்தது என்றால் ..இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும். அனைவருக்கும் இது கடினமான - மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் இப்படத்தின் காட்சிகளை இயக்குநர் எனக்கு காண்பித்த போது மிகவும்  உற்சாகமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் சுகுமார் ஏற்கனவே காட்டில் பிறந்த மனிதரைப் போலவே படமெடுப்பார். ஆனால் இந்த படத்தில் காட்டை வேறொரு கோணத்தில் காண்பித்திருக்கிறார். படத்தில் எல்லா படப்பிடிப்பு தளங்களும் மேகத்திற்கு மேலே தான் இருந்தது. அதாவது சொர்க்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது போல் இருந்தது. 


இவற்றையெல்லாம் கடந்து இப்படத்தின் கதை மிகவும் முக்கியமானது. அடிப்படைக் கல்வியைப் பற்றி பேசும் ஒரு படம். இந்த படம் வெளியான பிறகு நிச்சயமாக பேசப்படும். 


நடிகர் அருள்நிதி ஒரு படத்திற்கு சாதாரணமாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். அவருடைய கதை தேர்வு பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றால்... இந்தப் படம் மிக நன்றாக இருக்கும். இப்படத்தில் உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார். 


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசுகையில், '' பொதுவாக திரைப்பட விநியோகம் என்பது வர்த்தகத்தை சார்ந்தது. இதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். அது கருத்தியல் ரீதியாகவும்... காட்சி அமைப்பு ரீதியாகவும் அல்லது அதில் பங்களிப்பு செய்திருக்கும் கலைஞர்களுக்காக என ஏதோ ஒரு விசயம் மனதிற்கு நெருக்கமாக அமைந்திருக்கும். அதுபோன்ற படங்களையும் வெளியிட்டிருக்கிறோம். 


ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை பற்றி எனக்குள் நிறைய கேள்விகள் இருக்கிறது. இது தொடர்பாக பல விசயங்களை நான் பகிர்ந்து கொண்டதில்லை. அரசு பள்ளியில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்களை பற்றி 2026 ஆம் ஆண்டில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் 2000 ஆம் ஆண்டில் கதை நடப்பது போல் விவரித்திருக்கிறார்கள்.‌ இந்த படத்தை பார்க்கும் போதே என்னவோ செய்தது.‌ இந்தக் கதையில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய கதை மாந்தர்கள் கூட நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது. 


இயக்குநர் கணேஷ் விநாயகனும் , ஒளிப்பதிவாளர் சுகுமாரும் ஏற்கனவே இணைந்து 'தேன்' எனும் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்கள். நாங்கள் தான் அந்த படத்தை வெளியிட்டோம். இந்த இருவருக்கும் காடு- மலை- மக்கள்- எனும் விசயத்தில் ஒற்றுமை உண்டு என நினைக்கிறேன். அதனால் மீண்டும் இருவரும் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 


சினிமாவில் காடு -மலை- அருவி- என்றால் சுகுமார் தான் என ஒரு 'பேட்டர்ன்'னை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் காட்டின் மொத்த அழகியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் சுகுமார்.


ஆரவ்-  ரம்யா பாண்டியன் தம்பதியினரின் நடிப்பும் முதிர்ச்சியாக இருக்கும்.  பேபி கிருத்திகாவின் நடிப்பும் நன்றாக இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து கல்வியைப் பற்றிய ஒரு கடினமான உண்மையை இப்படம் பேசி இருக்கிறது. 


இந்த படத்தில் அருள் நிதியின் பங்களிப்பையும் அவசியம் குறிப்பிட வேண்டும். திரைக்கதையில் அவர் வருகை தந்த பிறகு கலை படைப்பாக இருந்த படத்தை கமர்ஷியல் படமாக மாற்றிவிட்டார். அருள்நிதி மிகப் பெரிய பர்ஃபெக்ஷனிஸ்ட். தயாரிப்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குபவர். 


இந்தப் படத்தை வெளியிடுவதை பெருமிதமாக நினைக்கிறேன். ஏனெனில் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை திரை மொழியில் பேசக்கூடிய-  அரசியல் புரிதலுடன் கூடிய இயக்குநர்கள் மிகவும் குறைவு. இவரைப் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். 


அரசு பள்ளியில் பயிலும் முன்னாள் மாணவர்களின் நல சங்கத்திற்காக நடிகர் காளி வெங்கட் தன்னாலான பங்களிப்பை வழங்கி உள்ளது குறித்த செய்தியை பார்த்திருக்கிறேன். இது மிகவும் அழகான விசயம். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.  


இப்போதுள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் தங்களுடன் படித்த மாணவர்களுடன் தொடர்ந்து இணைய வழியிலான தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இது போன்ற சமூக ஊடக தொடர்புகள் இல்லை.  


நல்லதொரு விசயத்தை சொல்வதற்காக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால்.. தொடர்ந்து நல்ல விசயத்தை சொல்லும் படங்கள் வரும்'' என்றார். 


நடிகை பேபி கிருத்திகா பேசுகையில், '' நான் வளர்ந்து வரும் இளம் நடிகை. திரைத்துறையில் எனக்கு எந்த  பின்னணியும் இல்லை. இந்நிலையில் 'அருள்வான்' படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும்,  தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படத்தில் இவ்வளவு பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றுவேனா..! என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு நிஜமாகி இருக்கிறது.  இந்தப் படத்தில் ஜீ. வி . பிரகாஷ் குமாரின் இசையில் யுக பாரதியின் வரியில் வெளியான 'அல்லிப்பூவே ' எனும் பாடல் என்னுடைய ஃபேவரைட் .அந்தப் பாடலை இதுவரை நூறு முறைக்கும் மேல் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.  இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடினமான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்'' என்றார். 


நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், '' இந்தப் படத்தின் கதையை கேட்பதற்கு முன் கிராமத்து கதைகளில் சிறிது நாட்கள் வரை நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். இருந்தாலும் இயக்குநருக்காக இந்த கதையை கேட்டேன். கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இந்த கதையில் நடிக்கலாம் என விரும்பினேன். ஏனெனில் இந்தப் படத்தின் கரு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 


படிக்கும் போது ஒரு பள்ளியில் இந்த வசதி இல்லை... இது இல்லை... என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளோ வசதிகளோ இல்லை என்று.. நம் மண்ணிலேயே ஒரு இடம் இருக்கிறது... மக்கள் இருக்கிறார்கள்... அந்த நிலையிலும் மக்கள் வாழ்கிறார்கள்... என கேள்விப்பட்டவுடன் இதில் நிச்சயமாக என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். இதை என்னுடைய பொறுப்பாகவும் நினைத்தேன். இதுபோன்ற கதையை நம்பி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. 


வரைபடத்திலேயே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை... தொலை தொடர்பு வசதிகளே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை.... தூங்குவதற்கோ சாப்பிடுவதற்கோ எந்த வசதிகளும்  இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை... இந்த படத்தில் தான் நாங்கள் பார்த்தோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது. அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அங்கு செல்வதற்கு கடினமானதாக இருந்தாலும் அங்கு சென்ற பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டதும்.. அங்குள்ள மக்களுடன் உரையாடியதும்... மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடன் பழகி வாழும் போது அதுவும் சுவாரசியமாகவே இருந்தது. 


ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் இணைந்து ஏற்கனவே 'ரா ரா' என்ற ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் கிராமங்களை அழகியலுடன் காட்சிப்படுத்துவதை விட, இந்தப் படத்தில் பிரம்மாண்டமாக காண்பித்து இருக்கிறார். அதை இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியும் அற்புதமான விஷுவல்  ட்ரீட்டாக இருந்தது. 


அருள்நிதி- நம்பிக்கை நாயகன். இந்த படத்தில் அருள்நிதி சார் இருக்கிறார் என்று சொன்னவுடன்... என்னுடைய நண்பர்களும், தோழிகளும் 'அவர் இருக்கிறாரா..! அப்போ படம் நன்றாக இருக்கும். படம் வித்தியாசமாக இருக்கும் படத்தில் ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்' என்று சொல்கிறார்கள். அவர் அப்படி ஒரு நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்திலும் நிச்சயமாக ஒரு நல்ல விசயம் இருக்கிறது. அதைத்தான் அவரும் நம்பி இருக்கிறார். 


இந்தத் திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது என்று சொன்னவுடன் எங்களுடைய குழுவினரின் நம்பிக்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. இதற்காக அவருக்கு நன்றி. 


என்னுடைய சக நடிகர் ஆரவ். அற்புதமான அர்ப்பணிப்புள்ள நடிகர். நடிகர் காளி வெங்கட் சொன்னது போல் மலையில் செங்குத்தாக ஏறி,  அதன் பிறகு மேலே சென்று அங்குள்ள மரத்தில் ஏறி ஆரவ் நடித்தார். அதேபோல் அருவி ஒன்றின் கீழ் பகுதியில் நடுங்கும் குளிரில் அவர் உடல் முழுவதும் சந்தனத்தை பூசிக்கொண்டு நடித்தார். இவை எல்லாம் மிகவும் கடினமானது. நாங்கள் அனைவரும் அவர் உடனிருந்து பார்த்தோம். அவருடைய அர்ப்பணிப்பை கண்டு வியந்தேன். '' என்றார். 


இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. இதில் நிறைய வலிகளும் இருக்கிறது. துன்பங்களும் இருக்கிறது. 


'தகராறு', 'வீர சிவாஜி' 'ஹைப்பர்' ( கன்னடம் ) 'தேன்' ஆகிய படங்களை இயக்கியிருக்கிறேன். இதை தொடர்ந்து 'அருள்வான்' படத்தை இயக்கினேன். அருள்வான் படத்திற்கு முன்னதாக நான் இயக்கிய அனைத்து படத்திற்கும் நான் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து, கதை சொல்லி, வாய்ப்பு கேட்டு தான் இயக்கினேன். ஆனால் இந்த படத்திற்கு மட்டும் தயாரிப்பாளர் என்னை தொடர்பு கொண்டு இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் நான் இந்த தயாரிப்பாளரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். 


படத்தின் தயாரிப்பாளரான S.G.சரவணன் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். இருந்தாலும் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டவர். 


காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்க வைத்து சிறிய அளவில் தொடங்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம். ஆனால் தயாரிப்பாளர்தான் இப்படத்தினை பெரிதாக்கினார். இந்த படத்திற்கு பெரிய டெக்னீசியனை பயன்படுத்துங்கள். ஜீ வி பிரகாஷ் குமாரிடம் கேளுங்கள் என்றார். தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னுடைய நிறுவனத்திற்கு 90 பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிச்சயம் அவர் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிப்பார். அவர் சினிமாவைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனம் தொடர்ந்து வெற்றி பெற்று வளர வேண்டும். இப்படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி. 


எடிட்டர் லாரன்ஸ் கிஷோருடன் 'தேன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறேன். தேன் படத்தில் அவருக்கு சிறந்த படத் தொகுப்பாளர் என்ற மாநில விருது கிடைத்தது. இந்தப் படத்திலும் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். 


இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவும் இல்லாமல். கமர்சியல் ஃபிலிம் ஆகவும் இல்லாமல் இருக்கும். இதனை துல்லியமாக உணர்ந்து முழுமையாக படத்தை தொகுத்திருக்கிறார் லாரன்ஸ் கிஷோர். 


இந்தப் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.


இந்த கதையை என்னுடைய குழந்தை பருவத்திலிருந்து நண்பராக உள்ள ஒளிப்பதிவாளர் சுகுமாரிடம் சொன்னபோது, அவர்தான் படத்திற்கான படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்தார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினர். அனைவருக்கும் நன்றி.


இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் அதில் 50 சதவீத உழைப்பு இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் சாருக்கு சேரும். 


இந்தப் படத்திற்கு மூன்று ஹீரோக்கள். ஆரவ் -அருள்நிதி- பேபி கிருத்திகா. இதில் பேபி கிருத்திகாவின் பார்வையில் தான் இப்படத்தின் கதை இருக்கும்.‌ 


படப்பிடிப்பு தளம் சாலை வசதி இல்லாத மலை பகுதி என்பதால்.. 18 நாட்கள் அங்கேயே அனைத்து கலைஞர்களும் தங்கினார்கள்.  சரியான உணவு கிடையாது. நடைபாதை கூட இருக்காது. இரவு நேரத்தில் விலங்குகள் வரக்கூடிய அபாயம்.. இவ்வளவு இருந்தும் பேபி கிருத்திகா அர்ப்பணிப்புடன் நடித்தார். அதனால் இந்தப் படத்தில் பேபி கிருத்திகாவிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். அவருக்கு என் வாழ்த்துக்கள். 


ரம்யா பாண்டியன் - காளி வெங்கட் - வி டிவி கணேஷ் ஜான் விஜய் சரவணன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள். 


நடிகர் ஆரவ்விடம் கதை சொல்லும் முன் இந்தக் கதையில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஒரு மாணவி என இரண்டு முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறது. உங்களுக்கு சரியாக வருமா? என கேட்டுவிட்டு தான் கதையை சொல்லத் தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, 'கதை எனக்குப் பிடித்திருக்கிறது' என்றார். இந்தக் கதையை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார்? இது தனிப்பட்ட விசயம் இல்ல. சமூகம் சார்ந்த விசயம். அதனால் நான் நடிக்கிறேன்' என முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார். 


அவருடைய லைஃப் ஸ்டைல் என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால் 18 நாட்கள் அந்த மலைப்பகுதியில் டென்ட் அடித்து எங்களுடன் தங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். 


இப்படத்தின் கதையின் முற்பகுதியில் இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகளுக்காக போராடும் போராளியாக ஆரவ் இருப்பார். படத்தில் இரண்டாம் பகுதியில் இந்த சமூகத்திற்காக போராடும் மனிதராக அருள்நிதி நடித்திருக்கிறார். இந்தத் தருணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் ஆரவ்விற்கு நன்றி.


நடிகர் அருள் நிதியுடன் எனக்கு 14 ஆண்டு கால நட்பு இருக்கிறது. அவருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது.  எளிமையானவர். அன்பானவர். எல்லோரிடத்திலும் இயல்பாக பழகக்கூடியவர். இவர் வெற்றி பெற்றவர் இவர் தோல்வி அடைந்தவர் என்ற பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர். அவருக்கு கதை பிடித்திருந்தால் இணைந்து பணியாற்றுவார். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். கதையைக் கேட்டு விட்டு இதை நாம் அவசியம் சொல்ல வேண்டிய படம். நான் நடிக்கிறேன் என்றார். அவருக்கும் நன்றி. 


நான் இதற்கு முன் இயக்கிய 'தேன்' திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தான் வெளியிட்டது. இந்தப் படத்தையும் நிறைவு செய்த பிறகு அவருக்கு  திரையிட்டோம். அவருக்கும் படம் பிடித்திருந்தது. இந்தப் படத்தையும் நான் வெளியிடுகிறேன் என்று சொன்னார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்'' என்றார். 


இதன் பின்னர் நடிகர் அருள்நிதி பகிர்ந்து கொண்டதாவது....


''இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும்... பிறகு 15 நாளாகவும்.. பிறகு 20 நாளாகவும் உயர்ந்தது. 


இப்படத்தின் கதையை கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை -கதாபாத்திரத்தை- என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா? என தெரியாது. 


இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  


குழந்தைகளுக்கான  கல்வியின் அவசியம் குறித்து விவரித்திருக்கும்-  பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். '' என்றார்.


நடிகர் ஆரவ் பகிர்ந்து கொண்டதாவது...


''இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன பிறகு, இதுபோன்ற கதாபாத்திரம் திரையுலக பயணத்தில் எனக்கு மீண்டும் அமையுமா? என தெரியாது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் காளி வெங்கட் உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்த காட்சிகளில் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன்'' என்றார்.

இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீதான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல் என விக்னேஷின் அணுகுமுறை

 *அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'சூப்பர் ஹீரோ' படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது...மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!*



சமீபத்தில் வெளியிடப்பட்ட ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின்  கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் 'சூப்பர் ஹீரோ' திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.


புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக 'பலூன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக 'டிக்கிலோனா' மற்றும் தேசிய விருது பெற்ற 'பார்க்கிங்' போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக 'சூப்பர் ஹீரோ' உருவாகியுள்ளது. 


வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, தனது சிறப்பான நடிப்பால் கவனம் பெற்றுவரும் தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். 'லோகா – சாப்டர் ஒன்', சமீபத்தில் வெளியான 'பரிமளா & கோ' உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் காம்பினேஷன் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று. 


இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், 'பலூன்' திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீதான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல் என விக்னேஷின் அணுகுமுறை படக்குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு 'டிக்கிலோனா' மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற 'பார்க்கிங்' திரைப்படம் மூலம் இயக்குநர் ராமையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


'சூப்பர் ஹீரோ' திரைப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் 'குஷி', மலையாளத்தில் 'ஹிருதயம்', தமிழில் 'ஒன்ஸ் மோர்' உள்ளிட்ட படங்களில் மனதை வருடும் இசை கொடுத்த ஹிஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Arjun Das starrer “Super Hero” First Look garners phenomenal response! Two More Looks to be unveiled

 *Arjun Das starrer “Super Hero” First Look garners phenomenal response! Two More Looks to be unveiled!* 



The much-awaited first look of "Super Hero" that was recently launched has created instant spark of inquisitiveness among the cinema enthusiasts and fans. The makers will be unveiling two more looks of this film that will give more insight about the film’s world and premise. Super Hero is presented by National Award-winning producer K.S. Sinish under the banner of Soldiers Film Factory and jointly produced by Shanjan G of Redacted Studios, which with its passionate drive to create more intriguing movies has lined up more projects scheduled at different stages of production..



Having made his directorial debut with Balloon, K.S. Sinish steadily evolved as a producer by backing films such as Dikkiloona and the National Award-winning Parking, both of which reflected his consistent inclination towards fresh and engaging storytelling. Continuing that journey, Super Hero stands as another significant addition to the banner's growing repertoire of content-driven entertainers crafted for audiences across all sections.


Arjun Das, who has carved a remarkable niche through his effortless transition from a powerful antagonist to an accomplished protagonist, headlines Super Hero in what promises to be another compelling addition to his evolving filmography. Sharing screen space with him is the trending heroine Teju Ashwini, whose impressive performances in her movies have elevated expectations around this film.  Likewise, Sandy Master, who essays the antagonist in Super Hero, has also been attracting widespread attention with his growing body of work, including Lokah – Chapter One, and many hit movies including the recent release 'Parimala & Co', making this face-off one of the film's exciting highlights. 


The film marks the directorial debut of Vignesh Venugopal, who previously worked as an assistant director to K.S. Sinish during the making of Balloon. Continuing his long-standing commitment to nurturing promising filmmaking talent, Sinish introduces yet another fresh directorial voice after successfully launching Karthik Yogi through Dikkiloona and Ram through the National Award-winning Parking. Despite this being his first directorial venture, Vignesh's clarity of vision, disciplined approach, and confident storytelling have earned the appreciation of the entire team..


Music for Super Hero is composed by Hesham Abdul Wahab, whose emotionally appealing compositions in Telugu like Kushi, Hridayam, Malayalam movie Hridayam and 'Once more' in Tamil. His Midas-touch to this film has already raised the bars of expectations for Super Hero.

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

 *விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!*




*‘ஊரே படத்தைக் கொண்டாடுகிறது’… ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி; வைரலாகும் விஷ்ணு விஷால் நட்பு தருணம்*


மதுரையில் சூரியின் ‘அம்மன்’ உணவகத்தில் விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு… வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி!


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.


உரையாடலின்போது “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். நீண்ட நாள் நண்பர்களான விஷ்ணு விஷாலும் சூரியும் பகிர்ந்த அந்த அன்பான தருணம் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் நெகிழச் செய்தது.


விஷ்ணு விஷால் – சூரி இருவரின் நட்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


“கட்டா குஸ்தி 2” திரைப்படத்தில் முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியான விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரம் ஜாராவும் முக்கியமான பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், இந்த இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

KadhaiClub Launches Vertical Micro Film Contest; Invites Creators to Tell Powerful Stories on Digital Arrest Awareness

 *KadhaiClub Launches Vertical Micro Film Contest; Invites Creators to Tell Powerful Stories on Digital Arrest Awareness* 


*~ Aspiring and established filmmakers can submit their 60-second vertical micro films by 15th July 2026 for a chance to win a cash prize of ₹50,000 ~*


*Chennai, July 6, 2026:* KadhaiClub, the vertical cinema community by Kadhaishorts that aims to educate, empower and build an ecosystem for creators in the emerging vertical storytelling space, today announced the launch of its *Vertical Micro Film Contest – Digital arrest awareness vertical short film*


The initiative aims to raise awareness about the growing menace of *digital arrest scams in India* while providing aspiring and experienced filmmakers an opportunity to explore the creative possibilities of vertical storytelling and showcase their perspectives through the power of short-format content.


As part of the contest, participants are invited to *submit a 60-second vertical micro film that highlights the theme of Digital Arrest,* bringing alive stories around how individuals fall prey to online scams, the emotional and financial impact of such frauds, and the importance of staying vigilant in an increasingly digital world. Interested participants can register using the following link and the entries can be *submitted to 98400 15719 on or before 15 July 2026.*


The winning micro film will receive a *cash prize of ₹50,000,* along with an opportunity to showcase their storytelling skills on a platform dedicated to the future of vertical cinema.


The contest builds on KadhaiShorts’ commitment towards creating socially relevant content through micro storytelling. The platform recently launched its micro-drama series ‘The Outlaws’, which explores the issue of digital arrest and portrays how unsuspecting individuals can become victims of such scams. Continuing this focus on awareness and responsible storytelling, KadhaiClub is bringing together creators to present their perspectives on this critical issue through the vertical format.


With mobile-first content consumption transforming the way audiences engage with stories, vertical cinema has emerged as a powerful storytelling medium that enables creators to connect with viewers through immersive and accessible narratives. Through initiatives like this contest, KadhaiClub aims to nurture the next generation of vertical filmmakers while using the medium to highlight conversations that matter.


*About KadhaiClub:* KadhaiClub is the vertical cinema community by Kadhaishorts, created to educate, support and empower creators in the evolving world of vertical storytelling. The platform provides opportunities for filmmakers to experiment with the format, build their craft and be part of the growing vertical entertainment ecosystem.

Over 80 years, AVM Studios has been synonymous with setting benchmarks in the Indian film industry.

 Over 80 years, AVM Studios has been synonymous with setting benchmarks in the Indian film industry. 

Having produced 179 feature films, 55 television serials and one web series, our company takes pride in having produced films in six languages - Tamil, Telugu, Hindi, Kannada, Bengali and Sinhala. Over the decades, we have achieved numerous milestones and pioneered several innovations in Indian cinema. These include introducing playback singing for the first time through Nanda Kumar (1938), the first film to introduce playback with post lip synchronisation in Sri Valli (1945). In 1947, Shri. AV. Meiyappan purchased the rights of Mahakavi Bharathiyaar's songs for Naam Iruvar, and proceeded to then magnanimously gift the copyrights of all Mahakavi Bharathiyar's songs to the nation in 1949. Continuing the milestones was Andha Naal (1954) one of the first Tamil films made without songs, children’s film Hum Panchi Ek Daal Ke (1957) which won the Jawaharlal Nehru National Gold Medal, bringing together M.S.Viswanathan and Ilaiyaraaja as composers for the first time in Mella Thirandhathu Kadhavu (1986), producing Samsaram Athu Minsaram (1986), the first film to receive the President’s Gold Medal for wholesome entertainment. In 1989, Raja Chinna Roja was India’s first film to combine real actors with animation, followed by Sivaji (2007), the forerunner for films produced on a large budget and Sivaji 3D (2012), the first Indian film to use Dolby Atmos technology.

In addition, we have the distinction of having worked with six chief ministers. These include Arignar           C.N. Annadurai in Ore Iravu (1951), Dr. Kalaignar M. Karunanidhi in Parasakthi (1952),                                    Dr. M.G. Ramachandran in Anbe Vaa (1966), Dr. N. T. Rama Rao in five films between 1954 and 1970, Dr. Selvi. J. Jayalalithaa in four films between 1962 and 1970, and Mr. C. Joseph Vijay in Vettaikaaran (2009).

In 2023, we launched ‘AVM Heritage Museum’, a celebration of legacy, cinema history and our carefully preserved archives. A space that gives visitors the chance to immerse themselves into the rich history of AVM and an impressive collection of rare automobiles. 

Carrying forward this legacy of excellence, AVM is proud to announce the inauguration of the                  "AVM Convention Centre", a thoughtful space for events located right inside the iconic AVM Studios compound.

The versatile venue is designed to host a wide array of events, including corporate meetings, conventions, audio launches, weddings, receptions and engagements. To accommodate diverse culinary preferences, the venue features state-of-the-art, entirely separate modern kitchens for both vegetarian and non-vegetarian catering.

An enclosed flyer provides a comprehensive overview of all amenities and features.

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

 ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!



சில பயணங்கள் பெரும் அறிவிப்புகளுடன் தொடங்குவதில்லை; மாறாக, பெரும் எதிர்பார்ப்புகளுடன் தான் தொடங்குகின்றன.


முன்னணி நடிகை சமந்தாவிற்கு இந்த 2026-ம் ஆண்டு புதிய தொடக்கங்களுக்கான ஆண்டாக அமைந்திருக்கிறது. வழக்கமான பாணியில் பயணிக்காமல், துணிச்சலான புதிய முயற்சிகளை மேற்கொண்டு, பல சுவாரசியமான வாய்ப்புகளுக்கு அவர் வழிவகுத்துள்ளார். அந்த வகையில், தற்போது அவரது திரைப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் மலரவிருக்கிறது.

சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) மற்றும் சமந்தா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் தற்போது கைகோர்த்துள்ளனர். ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவும், மகிழ்விக்கவும், அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளைத் தூண்டவும் கூடிய ஒரு பிரம்மாண்டமான கூட்டணியின் தொடக்கமாக இது அமைந்துள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான, கொண்டாடப்படும் நடிகையாகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் வலம் வரும் சமந்தா, எப்போதுமே சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, எதிர்பார்ப்புகளை உடைப்பதில் வல்லவர். அவரது ஒவ்வொரு புதிய முடிவும் பேசுபொருளாக மாறும் நிலையில், இந்தக் கூட்டணியும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள போதிலும், சமந்தாவின் தனித்துவமான ஈர்ப்பும், சோனி லிவ் தமிழின் தரமான பொழுதுபோக்குக் கதைகளும் இணைந்து ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


*இதுகுறித்து நடிகை சமந்தா பகிர்ந்து கொண்டதாவது:*


 "மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், புதிய தொடக்கங்களை வரவேற்கவும் இந்த ஆண்டு எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. சோனி லிவ் தமிழ் உடன் இணைந்து இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிகச் சிறந்த, சுவாரசியமான ஒரு புராஜெக்ட்டிற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். அதைப்பற்றிய விவரங்களை மிக விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்."

Something New Is Brewing

 *Something New Is Brewing!*

 

Some journeys don't begin with an announcement. They begin with anticipation. For actor Samantha, 2026 has been a year of embracing new beginnings, choosing reinvention over routine, taking bold creative leaps, and opening the door to exciting possibilities. Now, that journey is about to unfold in an all-new way.

 


Sony LIV Tamil and Samantha are coming together for a collaboration that marks the beginning of an exciting new chapter; one designed to surprise, entertain, and leave audiences wanting more.

 

One of India's most celebrated actors and entrepreneurs, Samantha has built a career on making fearless choices and constantly redefining expectations. Every new chapter has sparked conversations, and this one promises to be no different.

 

While the details remain closely guarded, the collaboration brings together Samantha's unmistakable appeal and Sony LIV Tamil's commitment to delivering compelling entertainment, setting the stage for something audiences wouldn’t want to miss.

 

Sharing her excitement, Samantha Ruth Prabhu said, _"This year has reminded me to embrace change, trust the journey and welcome new beginnings. I'm so happy to be starting this new chapter with Sony LIV Tamil. We've been working on something really exciting, and I'm looking forward to sharing it with all of you very soon"_

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் 'ஜெயன்' அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

 *இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் 'ஜெயன்' அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!*



*எலிபென்டைன் எக்ஸ் தயாரிப்பில் 'ராஜாஸ் பிளே லிஸ்ட்' என தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது.*



இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான *ஆர்.டி.பாஸ்கர்* அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான *ஜெயன்* தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் (Love Musical Subject) திரைப்படமாக இது உருவாகிறது.



குடும்ப நட்பிற்காக கதையைக் கூட கேட்காமல் திரண்ட முன்னணி பிரபலங்கள்!

தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் அவர்களின் மகன் ஜெயன் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றதும், திரையுலகில் ஜெயன் குடும்பத்தோடு உள்ள நட்புக்காக கதையைக்கூட கேட்காமல் *"என் நண்பனுக்காக நானே இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறேன்"* என்று *ரமணன் பாலகங்காதரன்* அவர்கள் முன்வந்தார். தன்‌ தம்பிக்காக இயக்குனர் *வெங்கட் பிரபு*, *"நான் கதை தருகிறேன்"* என்றும், *யுவன் சங்கர் ராஜா* *"நான் இசை அமைக்கிறேன்"* என்றும், இயக்குனர் *சுதா கொங்கரா* *"நான் கிரியேட்டிவ் புரொடியூசராக (Creative Producer) இருக்கிறேன்"* என்றும் தாங்களாகவே முன்வந்து இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

முன்னணி திரைப் பிரபலங்கள் அனைவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பிற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்சத்திரப் பட்டாளமும், பிரம்மாண்ட கூட்டணியும்!

இத்திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் *ஜெயனுடன்* இணைந்து சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


*தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன்* அவர்களின் கூற்று (Producer's Quote):


 "ஜெயனைத் திரையுலகில் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான மற்றும் புதிய வடிவிலான மியூசிக்கல் சப்ஜெக்ட் கதைகள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அந்த குறையைப் போக்கும் ஒரு சிறந்த படைப்பாக 'ராஜாஸ் பிளேலிஸ்ட்' இருக்கும். வெங்கட் பிரபு சாரின் தனித்துவமான கதை, யுவன் சாரின் மேஜிக்கல் இசை மற்றும் சுதா கொங்கரா மேமின் கிரியேட்டிவ் பங்களிப்பு என அனைத்தும் இணைந்து இந்தத் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. உணர்வுப்பூர்வமான காட்சிகளும், பிரம்மாண்டமான இசையும் கலந்த ஒரு தரமான சினிமா அனுபவத்தை எலிபென்டைன் எக்ஸ் நிறுவனம் வழங்கும்."


மேலும், இப்படத்திற்கு *வெங்கட் பிரபு* கதையெழுத, *யுவன் சங்கர் ராஜா* இசையமைக்கிறார். *சுதா கொங்கரா* கிரியேட்டிவ் புரொடியூசராகப் பொறுப்பேற்றுள்ள இத்திரைப்படத்தை "குடும்பஸ்தன்" படத்தின் ஒளிப்பதிவாளர் *சுஜித் என் சுப்ரமணியம்* இயக்குநராக அறிமுகமாகிறார்.  


இசை, நட்பு, திறமை என அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவாகும் இந்தத் திரைப்படம் ஜெயனின் திரையுலகப் பயணத்திற்கு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



திரைப்படக் குழுவினர் விவரம் (CAST AND CREW DETAILS)


முதன்மை நடிகர்கள் (Lead Artistes):


  *ஜெயன்*(Jaiyan - அறிமுகம்)


  *சோனா ஒலிக்கல்* (Sona Olickal)


  *வாகை சந்திரசேகர்* (Vagai Chandrasekhar)


  *குரு சோமசுந்தரம்* (Guru Somasundharam)


  *ரோஜு* (Roju)


  *பிபியன்*(Bibian)


  *ஆர்யா லட்சுமி* (Aarya Lakshmi)


 பிரகதீஸ்வரன் பூபாலம் (Pragadeeshwaran poobalam)


 இந்துமதி (Indhumathy)


 ரேஷ்மி (Reshmi)


 ரஞ்சித் (Rajinth)


 ராம்குமார் (Ramkumar)


 மீனா (Meena)


 திலகவதி (Thilagavathi)


தொழில்நுட்பக் கலைஞர்கள் (CREW DETAILS):


 *தயாரிப்பு:* ரமணன் பாலகங்காதரன் (Ramanan

 Balagangatharan)


 *தயாரிப்பு நிறுவனம்:* எலிபென்டைன் எக்ஸ் (Elephantine X)


 *கதை:* வெங்கட் பிரபு (Venkat Prabhu)


 *இசை:* யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja)


 *கிரியேட்டிவ் புரொடியூசர்:* சுதா கொங்கரா (Sudha Kongara)


  *திரைக்கதை & இயக்கம்:* சுஜித் என் சுப்ரமணியம் (Sujith N Subramaniam)


  *ஒளிப்பதிவு (Cinematographer):* சாய் முனீஷ் (Sai Munish)


  *படத்தொகுப்பு (Editor):* ஸ்ரீ வாட்சன் (Sri Watson)


 *கலை இயக்கம் (Art Director):* ஷனு முரளிதரன் (Shanoo Muralidharan)


  *ஆடை வடிவமைப்பு (Costume Designer):* பூர்ணிமா ராமசாமி

 (Poornima Ramaswamy)


  *சண்டைப் பயிற்சி (Stunt):* பிசி ஸ்டண்ட்ஸ் (Pc Stunts)


  *ஒலி வடிவமைப்பு (Sound Designer):*

 ஆண்டனி பி ஜெயரூபன் (Anthony B Jayaruban)


  *விஎஃப்எக்ஸ் (VFX Supervisor):* செந்தில் குமார் (Senthil Kumar)


  *நிர்வாக தயாரிப்பு (Executive Producer):* உத்ரா மீனாட்சி (Uttra Meenakshi)


 *மக்கள் தொடர்பு (PRO):* ரேகா - ரான் டி ஆர்ட் (Rekha - Raan T Art)


 *விளம்பர வடிவமைப்பு  (Publicity Design):* வியாக்கி (Viyaki)