Featured post

Tribute to Late Sowcar Janaki Madam

 *Tribute to Late Sowcar Janaki Madam* *தென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது ...

Saturday, 22 August 2026

Tribute to Late Sowcar Janaki Madam

 *Tribute to Late Sowcar Janaki Madam*


*தென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!*


இந்தியத் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான அத்தியாயம் இன்று முடிவுக்கு வந்தது!


ஒரு நடிகை என்பதைக் கடந்து, கண்ணியம், அறிவுத்திறன் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞராக பல தலைமுறை ரசிகர்களுக்கும் நடிகை செளகார் ஜானகி திகழ்ந்தார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார்.


திரையுலகின் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகத் தொடங்கி, பின்னர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மறக்க முடியாத குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று, உண்மையான கலைத்திறன் என்பது வயது, தோற்றம் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பதை சௌகார் ஜானகி நிரூபித்தார். அவரது குரல், முகபாவனைகள் மற்றும் திரை ஆளுமை ஆகியவை ஒரு காட்சியையே தன்வசப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை.


தென்னிந்தியத் திரையுலகின் அடித்தளத்தை உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களில் ஒருவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பு, நமது திரையுலக வரலாற்றின் பக்கங்களில் காலம் கடந்தும் என்றும் நிலைத்திருக்கும்.


அவரது மறைவு திரையுலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அவருக்குப் பின் வரும் பல தலைமுறை நடிகர்களுக்கு விலைமதிப்பற்ற கலை மரபையும் விட்டுச் சென்றுள்ளார்.


மகத்தான கலைஞர்கள் ஒருபோதும் உண்மையில் நம்மை விட்டுப் பிரிவதில்லை. அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், வெளிப்படுத்திய உணர்வுகள் மற்றும் நம் நினைவுகள் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.


அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.


அமைதியாக இளைப்பாறுங்கள், சௌகார் ஜானகி அம்மா!

திரைத்துறையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்றும் அழியாது.

Tribute to Late Sowcar Janaki Madam

 *Tribute to Late Sowcar Janaki Madam*






Sowcar Janaki, one of the towering personalities of South Indian cinema, passed away today at the age of 94. Her death marks the end of a remarkable era. 


A Timeless Legend — Sowcar Janaki


The passing of Sowcar Janaki is the end of an extraordinary chapter in Indian cinema.


For generations of audiences, she was far more than an actress. She was a performer of immense dignity, intelligence and emotional depth, who brought an unmistakable authenticity to every character she portrayed.


From leading roles in her early years to some of the most memorable character performances of her later career, Sowcar Janaki demonstrated that true artistry does not depend on age, image or convention. Her voice, expressions and presence could command a scene with remarkable ease.


She belonged to a generation of artistes who built the very foundations of South Indian cinema, and her contribution across Tamil, Telugu, Kannada and Malayalam cinema will remain an enduring part of our film history.


Her passing leaves a deep void in the industry, but also an invaluable legacy for generations of actors who follow.


A great artiste has taken her final bow.

But legends never truly leave us—they live on through the characters, emotions and memories they gave us.


My deepest condolences to her family, friends, admirers and the entire film fraternity.


Rest in peace, Sowcar Janaki Amma.

Your presence on our screens will remain eternal.

Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri, draws inspiration for his name from two legendary names

 Actor Abdool Lee – Profile


Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri, draws inspiration for his name from two legendary names — Stan Lee and Spike Lee — which also inspired his choice of “Lee” in his name.





His journey into acting received a major boost through YouTube sketch  videos, which gave him an opportunity to showcase his comic timing and performance skills.


He counts legendary comedians Goundamani and Baliah among his inspirations. He admires how they could make audiences laugh while also convincingly portraying negative shades within comedy characters.


A Velammal alumnus with a B.E., Abdool Lee has acted in around 35plus  films so far.


Actor Soori after watching Modharathri  mentioned , “You remind me of my mama,” a compliment that remains special to him.


His recent credits include GDN, Katta Kusthi 2, and the web series Heart Beat and Local times. 


For Motha Raathiri, Abdool Lee expresses his heartfelt gratitude to the Mythri Movies producers and director Raja Karuppusamy for the opportunity and confidence placed in him.


He also extends special thanks to hero Rishi Kanth, whose support and encouragement made the experience particularly memorable because of their 13+ years friendship 


With Motha Raathiri, Abdool Lee hopes to take his journey forward by exploring characters that blend comedy, characterisation and shades of negativity and much more

நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”...நடிகர் அப்துல் லீ!

 *”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”...நடிகர் அப்துல் லீ!*





‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியவர் அப்துல் லீ. இங்கு தனது காமெடி டைமிங் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார்.


திரைத்துறையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி மற்றும் பாலையா ஆகியோரை தனது இன்ஸ்பிரேஷன் என்கிறார் அப்துல் லீ. நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குள்ளேயே எதிர்மறையான சாயல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, அதே நேரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர்களின் திறமையை மிகவும் ரசிப்பதாகக் கூறுகிறார்.


வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவரான அப்துல் லீ, பி.இ. பட்டம் பெற்றவர். இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சூரி, “திரையில் உங்களைப் பார்த்தபோது என் மாமா நியாபகம் வந்தது” என்றார். நடிகர் சூரியின் இந்த பாராட்டு தனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார் அப்துல் லீ.


சமீபத்தில் வெளியான ‘ஜி.டி.என்.’, ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படங்கள் மற்றும் ’ஹார்ட் பீட்’, ’லோக்கல் டைம்ஸ்’ உள்ளிட்ட இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, தன் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் ராஜா கருப்புசாமிக்கும் அப்துல் லீ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.


மேலும், கதாநாயகன் ரிஷிகாந்துக்கும் தனக்கும் 13 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு உள்ளது என்றும், இந்தப் படத்தில் அவர் அளித்த ஆதரவும் தனக்கு மறக்க முடியாததாக அமைந்தது என்கிறார். ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அப்துல் லீ, நகைச்சுவை, குணச்சித்திர மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்கள் என தொடர்ந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Sumithra Devi — From Kannagi to Keerthi

 Sumithra Devi — From Kannagi to Keerthi










Before the camera found her, Sumithra found acting on a school stage—playing Kannagi, a character whose fire, dignity and emotional strength gave her an early taste of performance.


A Visual Communication graduate from Vaishnav College, Chromepet, Sumithra brings a visual sensibility to her craft. Her training in classical dance has given her an instinctive command over movement, expression and body language. She is also widely admired within her circles for her dancing skills, with dance being one of the talents that has consistently earned her appreciation.


In Motha Raathiri, she steps into the role of Keerthi, bringing to the character a combination of natural charm and quiet confidence. Her dusky beauty gives her a distinctive screen presence—an earthy, contemporary appeal that doesn’t need excessive styling to make an impression. There is a warmth to her complexion and an understated elegance that may remind audiences of the natural screen appeal of Nandita Das and Aishwarya Rajesh. Like them, Sumithra carries her dusky beauty with authenticity, while retaining a distinct identity of her own.


But what truly sets Sumithra apart is her Tamil diction. Her pronunciation is crisp, natural and beautifully rooted, allowing even simple lines to carry personality. There is an effortless ease in the way she speaks Tamil—an increasingly rare quality on screen.


Sumithra is a great admirer of Vijay both as an actor and as a performer. His screen presence, discipline and ability to connect with audiences have made a strong impression on her and truly believes that he is a great inspiration to all the youngsters of this land.  


She also looks up to Tamannaah Bhatia’s dancing, while her own classical dance background continues to influence the way she approaches performance.


Sumithra is particularly grateful to Mythri Movie Makers for creating a platform where so many new faces have been given an opportunity to be part of a single film. She believes that giving fresh talent such a significant opportunity is both encouraging and exciting, and feels fortunate to have begun her cinematic journey with Motha Raathiri.


From a schoolgirl performing Kannagi to Keerthi in Motha Raathiri, Sumithra’s journey is only beginning. With her dusky elegance, expressive face, classical dance skills and particularly strong Tamil diction, she has all the qualities to emerge as one of the film’s most noticeable discoveries.


Motha Raathiri is directed by Raja Karuppasamy and produced by Mythri Movie Makers, with Sumithra Devi L. playing an important role in the ensemble cast.

இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!

 *”இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!*










தனது பள்ளி காலத்திலேயே நடிப்பின்மீது ஆர்வம் கொண்டர் சுமித்ரா. தீவிரம், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரம் ஏற்று பள்ளி மேடையில் நடித்தது, அவரது நடிப்புப் பயணத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா பரதநாட்டியத்தில் தேர்ந்தவர். இந்த நடனப் பயிற்சி, முகபாவனைகள் மற்றும் உடல் மொழி ஆகியவை அவருக்கு இயல்பான ஆளுமையையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. 


’மொத ராத்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்திற்கு தேவையான வசீகரம் மற்றும் அமைதியை தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சுமித்ரா,  நடிகைகள் நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே சுமித்ராவின் மாநிற அழகும் தனித்திறமையும் திரையில் அவருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுத்துள்ளது. அதிகப்படியான அலங்காரம் தேவையில்லாமலேயே பார்வையாளர்களைக் கவரக்கூடிய மண் சார்ந்த தோற்றம் அவரிடம் உள்ளது.  அதேபோல, சுமித்ராவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பேசும் எளிய வசனங்கள்கூட அவரை தனித்து காட்டுகிறது. 


நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை தான் என்கிறார் சுமித்ரா. விஜய்யின் திரை வசீகரம், ஒழுக்கம் மற்றும் ரசிகர்களுடன் இணையும் திறன் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு விஜய் மிகப்பெரிய உத்வேகம் என்கிறார். அதேபோல், நடிகை தமன்னா பாட்டியாவின் நடனத்தையும் அவர் மிகவும் ரசிக்கிறார். 


ஒரே திரைப்படத்தில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை உருவாக்கி, உற்சாகமளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு சுமித்ரா நன்றி தெரிவித்துள்ளார். ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியிருப்பது தனது அதிர்ஷ்டம் என்கிறார். 


பள்ளி மாணவியாக கண்ணகி கதாபாத்திரத்தில் நடித்ததிலிருந்து ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் கீர்த்தியாக சுமித்ராவின் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அவரது மாநிற அழகு, முகபாவனைகள், நடனத் திறமை மற்றும்தமிழ் உச்சரிப்பு போன்றவை தமிழ் திரைத்துறைக்கு மற்றுமொரு திறமையான நடிகை கிடைத்துவிட்டதை சுட்டிக்காட்டுகிறது. 


‘மொத ராத்திரி’ திரைப்படத்தை ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில், சுமித்ரா தேவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்

 *‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!*














யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.


இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று முயற்சி. இந்த தளத்தில் இலவசமாக திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரும்பினால் அதையும் நன்கொடையாக தாராளமாக அளிக்கலாம். அந்த தொகையும் ஆதரவற்ற மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும். 


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யுவர்பேக்கர்ஸ் பிளே ஓடிடி துவக்க விழா தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. முன்னதாக இந்த ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கும் மனிதம், வி3, கோட்டா, மெல்லிசை, தாவுத், ஓ பட்டர்ஃபிளை போன்ற திரைப்படங்களின் டிரைலரும் திரையிடப்பட்டது.


*இந்த நிகழ்வில் யுவர்பேக்கர்ஸ் ஓடிடி நிறுவனர் கிஷோர் ஆதித்யா பேசும்போது,*


 “இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த யுவர்பேக்கர்ஸ் பவுண்டேஷன் துவக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. பாண்டிச்சேரியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டோம். கடலுக்குள் சென்று கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கை கிளீன் செய்து கின்னஸ் சாதனை படைத்தோம். மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்கள் கூட எங்கள் சேவையை குறித்து பாராட்டினார். பெண்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உழைத்து வருகிறோம். 


சினிமாவை பொறுத்தவரை விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை நாங்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் வினியோகம் செய்தோம். தொடர்ந்து இன்ஃபினிட்டி, கழுமரம் போன்ற படங்களையும், அதனைத் தொடர்ந்து மனிதம் படத்தையும் தயாரித்தோம்.


ஓடிடியிலும் மக்கள் பெரிய படங்களையே பார்க்க விரும்புகிறார்கள், முன் வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஓடிடியின் மூலம் சின்ன படங்களை பார்க்க வைக்க ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். இதில் சப்ஸ்க்ரிப்ஷன் கட்டணம் கிடையாது. இலவசமாக படத்தை பார்க்கலாம். இம்பாக்ட் டிக்கெட் என்ற ஆப்ஷன் உண்டு, அதில் பயனர்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். அந்த தொகையிலும் பெரும்பகுதி சமூக சேவைக்கு தான் செல்கிறது. மீதம் உள்ள ஒரு பங்கு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இந்த ஓடிடியில் இன்னொரு SOS சிறப்பு அம்சமும் உண்டு. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களையும் தடுக்கும் ஒரு முயற்சி. மேலும் AI மூலம் திரைப்படங்களையும் உருவாக்க இருக்கிறோம். இது அடுத்த கட்டமாக செயல்பாட்டுக்கு வரும்.


அவுட் ரைட் முறையிலும், ஷேர் முறையிலும் படத்தை வாங்கி இந்த ஓடிடியில் வெளியிட இருக்கிறோம். இந்த ஓடிடியின் வளர்ச்சி பல சிறிய படங்களுக்கு நிரந்தர வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. எதையும் எதிர்பாராமல் நம் கடமையை செய்து வந்தால் நாம் எதிர்பாராத நல்லது நமக்கு நடக்கும். ஆதரவு கொடுங்கள். நன்றி” என்றார்.


*FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,*


 “ஓடிடியும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல ஓடிடி வந்தது. இப்போது ஓடிடி சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது. முன்பு போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் இப்போது படம் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். மேலும் அவர்கள் தான் ரிலீஸ் தேதியையே முடிவு செய்கிறார்கள். இப்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோவும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாது. அப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா இருக்கிறது. 


தமிழில் ஒரு ஓடிடி நிறுவனம் துவங்கியது மகிழ்ச்சி. இந்த விழாவுக்கு நான் வருவதற்கு ஒரு முக்கியமான சுய நல காரணமும் உண்டு. இந்த லாபத்தில் 20% தொழிலாளர்களுக்கு தரப் போகிறேன் என கிஷோர் உறுதி அளித்திருக்கிறார். நல்ல தரமான படங்களை வாங்கி ரசிகர்களுக்கு தாருங்கள். அப்போது தான் நிறைய ரசிகர்கள் உங்களை நம்பி வருவார்கள். 


ஒரு திரைப்படம் வெற்றி அடையலாம் அல்லது தோல்வி அடையலாம். ஆனால் தற்போது நிறைய குப்பையான படங்கள் வெளி வருகின்றன. அப்படி இருக்கும் சூழலில் நல்ல படங்களை மட்டுமே வாங்கி வெளியிடுங்கள். தமிழ் சினிமாவில் சுமார் 1000 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதில் நிச்சயம் ஒரு 200 நல்ல படங்களாவது இருக்கும். அதை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்றார்.


*நடிகர் எஸ்.வீ.சேகர் பேசும்போது,* 


“வழக்கமாக சில விழாக்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் வந்து சம்பந்தம் இல்லாதவற்றை பேசி அது பேசுபொருளாகி விடுகிறது. விழாவின் நோக்கம் மறைந்து விடுகிறது. அப்படி இல்லாமல் இந்த விழாவுக்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசுகிறேன். 6 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த ஃபவுண்டேஷன் தறபோது லாப நோக்கமற்ற ஓடிடி தளத்தை துவக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஓடிடியில் கஜானா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வெள்ளை அறிக்கையும் விடுகிறார்கள். பணம் போடுபவர்களுக்கு திரும்ப பணம் வந்தால் தான் அது பிஸினஸ். உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. நல்ல தொழிலாகவும் இது அமைய வேண்டும். நீங்கள் இலவசமாக தருகிறீர்கள் என்பதாலேயே மக்கள் உங்கள் கண்டெண்டை பார்க்க மாட்டார்கள். தரம் மிகவும் முக்கியம், அதற்கேற்ப நல்ல நல்ல கண்டெண்டை பார்த்து வாங்குங்கள். ஓடிடி என்றாலே ஒரு சில முன்னணி நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வருகிறது. அதை தாண்டி ஜெயிக்க வேண்டும். நல்ல அனுபவசாலிகளின் ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்களின் ரசனைகளை புரிந்து கொண்டு படங்களை எடுங்கள். நீங்கள் செய்யும் சேவையே உங்களை காப்பாற்றும்” என்றார்.


*நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,*


 “ஓடிடி என்றாலே பண முதலைகளின் கோட்டை. உலகில் எங்கு சென்றாலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஒரு ஓடிடி வேண்டுமென்றால் அதற்கு அரசு தான் ஏதாவது முன்னெடுப்பு எடுக்க வேண்டும். இதுவரை அப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நெட்ஃபிளிக்ஸில், அமேசானில் லட்சக்கணக்கான படங்கள் இருக்கின்றன. அனாலும் அதில் எல்லாவற்றையும் நாம் பார்ப்பதில்லை, தேர்வு செய்து தான் பார்க்கிறோம். அது போல தான் மக்களும் தேர்வு செய்து தான் படங்களை பார்ப்பார்கள். அதனால் புதுப்புது கண்டெண்டை கொடுக்க முயற்சி செய்யுங்கள். இளைஞர்களின் கற்பனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களை நல்ல உயரத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார்.


*நடிகர் மைம் கோபி பேசும்போது,*


 “நான் நடிப்பு சொல்லிக் கொடுக்க தான் கிஷோர் சாரிடம் வந்தேன். அவர் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவார். அவர் ஒரு கடும் உழைப்பாளி. எப்போது தூங்குவார் என்பது கூட தெரியவில்லை. திடீரென ஒரு நாள் அவருக்கு நடிக்க வந்த வாய்ப்பை தூக்கி எனக்கு கொடுத்தார். அந்த படத்தில் தான் நான் நடிக்கிறேன். எங்கோ எவரோ ஆரம்பித்த விஷயத்தை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். முதல் அடியை நாம் என்று எடுத்து வைக்கிறோமோ அன்று தான் சாதனை ஆகிறது. நல்ல ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார். 


*தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,*


 “பணம் சம்பாதிக்க தான் எல்லோரும் சினிமாவுக்கு வருகிறோம். ஆனால் அப்படி பணம் சம்பாதித்து சேர்த்து வைக்காமல் லாப நோக்கமற்ற ஒரு சேவையை செய்ய முன்வந்திருக்கும் கிஷோர் சாருக்கு வாழ்த்துக்கள். இன்றைய சூழலில் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான தேவை. நல்ல நோக்கத்திற்கு நன்றி” என்றார்.


*நடிகர் யூகி சேது பேசும்போது,*


 “ஓடிடி என்பது எனக்கு புரியாத விஷயமாகவே இருக்கிறது. பஞ்ச தந்திரம் தியேட்டரில் சாதாரண வெற்றி தான். ஆனா ஓடிடியில் மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள். ரீல்ஸ் பார்த்து பழக்கப்பட்ட இன்றைய இணைய உலகில் எல்லாமே வேகமாக இருக்க வேண்டும் என கேட்கிறார்கள். சினிமா அழகியலே மாறி விட்டது. 100 மார்க் வாங்கினால் தான் பாஸ் என்ற சூழலும் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே ஓடிடி படங்களை வாங்குவதில்லை. இதில் 8 வாரங்கள் கழித்து தான் படங்களை வெளியிட வேண்டும் என்ற கண்டிஷனை எல்லாம் நாம் போட முடியாது. 


சினிமாவில் வெற்றி சதவீதம் எப்போதுமே 10 முதல் 20% தான் இருந்து வருகிறது. கருத்து சொல்ற படம் என்றால் நீங்களே வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது தான். ஜனரஞ்சகம் என்பது மிக முக்கியம். நல்ல படங்களை கொடுங்கள். சினிமா மட்டும் தான் என்ன ஏது என தெரியாமலே டிக்கெட் வாங்கி பார்ப்பார்கள். சினிமாவில் மட்டும் தான் ரீஃபண்ட் கிடையாது. இந்த ஓடிடி மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும்” என்றார்.


*நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது,*


 “ஒரே தட்டில் சாப்பிட்டோம் என சொல்வார்கள், ஆனால் நானும் கிஷோர் சாரும் உண்மையிலேயே ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் தான். கிஷோர் சார் எவ்வளவோ பேருக்கு உதவிகளை செய்து வருபவர். அவரை ஒரு ஆண் அன்னை தெரஸா என்று கூட சொல்லலாம். அவர் ஆரம்பித்திருக்கும் இந்த ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.


இந்த நிகழ்வில் ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் யுவர்பேக்கர்ஸ் சி இ ஓ ஜான் ஜூலியஸ், இயக்குனர் புருனோ, தயாரிப்பாளர் ஜேகே சரவணன், ஜேகே சதிஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்…

A Powerhouse Trio : Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் இசை வல்லுநர்களை சந்தியுங்கள்!

 A Powerhouse  Trio : Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் இசை வல்லுநர்களை சந்தியுங்கள்!

மேடை தயாராகிவிட்டது, தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த பாடகரைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சி தொடங்க உள்ளது.





பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வழிகாட்ட இருக்கின்றனர்..


கார்த்திக்(karthik) கூறுகையில்,

“தமிழ்நாட்டில் பல திறமையான பாடகர்கள் இருக்கின்றனர். Tamil Idol மூலம் இதுவரை வெளிவராத பல சிறந்த குரல்களை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகின்றேன். புதிய பாடகர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதில் நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன். A.R. ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.”


பென்னி தயாள்(Benny Dayal) கூறுகையில்


“நான் ஏற்கனவே பலமுறை Hindi Idol நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய திறமைகளைப் பார்க்கும்போது ஆச்சரியம் கொடுக்கும். இப்போது தமிழ்நாட்டின் பாடகர்களைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சியில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் சென்னையில் படித்திருக்கிறேன் பல ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பாக இருக்கின்றது. அடுத்த தலைமுறை பாடகர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.”


Andrea Jeremiah கூறுகையில்,


“தமிழர்களின் வாழ்க்கையில் இசை எப்போதும் முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கின்றது... 


தமிழ்நாடு முழுவதும் பல திறமையான பாடகர்கள் இருக்கிறார்கள்.அவர்களை சந்தித்து அவர்களின் கதைகளையும் திறமைகளையும் அறிந்துகொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன். புதிய குரல்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.”



ஏ .ஆர். ரஹ்மான் தலைமையில் Tamil Idol நிகழ்ச்சியின் முதல் ஆடிஷன் ஆகஸ்ட் 23 அன்று சென்னையில் நடைபெறுகிறது.


14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் ஆடிஷனில் கலந்து கொள்ளலாம்.


இடம் - Velammal Vidyalaya Annexure, Mel Ayanambakkam, சென்னை.. ஆகஸ்ட் 23ஆம் தேதி நடக்கின்றது. 


Tamil Idol விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-யில்..

A Powerhouse Trio: Meet the Musical Maestros Judging the First Season of Tamil Idol

 A Powerhouse Trio: Meet the Musical Maestros Judging the First Season of Tamil Idol

The stage is set, the mics are ready, and the hunt for Tamil Nadu’s next major singing sensation is officially on! As the globally iconic Indian Idol franchise makes its historic debut in Tamil, all eyes have been on who will take the coveted judges' seats.





Today, the wait is finally over. Sony is thrilled to announce a star-studded, powerhouse trio who will mentor, critique, and champion the state's finest grassroots talent: legendary playback singer Karthik, the undisputed king of groove Benny Dayal, and versatile actress-singer Andrea Jeremiah. This trio brings the perfect balance of technical mastery, stage-shattering energy, and modern musicality to the panel.


Sharing their excitement about joining the biggest musical reality show in the country, the judges conveyed their heartfelt wishes to the singers who will be coming for auditions:


Karthik said, _“Tamil Nadu has such a deep and diverse musical culture, and I am certain that Tamil Idol is going to uncover voices that will surprise and inspire us. For me, the most exciting part of being a judge is not just listening to a great singer but recognizing potential and helping an artist discover what they are truly capable of. With A.R. Rahman Sir guiding this journey, we have a wonderful opportunity to create a platform where new talent can really flourish. I cannot wait to hear what Tamil Nadu has to offer.”_


Benny Dayal said, _“I have had the opportunity to be part of the Hindi Idol journey multiple times, and every time I walked onto that stage, I was blown away by the incredible talent that came forward. You realise that there are so many voices across the country with stories, dreams and an extraordinary musical instinct. To now be part of Tamil Idol and have the opportunity to discover and work with talent from Tamil Nadu is something I am genuinely excited about. I have studied in Chennai, lived here for almost ten years and built my career in Tamil music, so to see the journey of Tamil music and the city evolve from then to now makes being part of Tamil Idol even more special. I feel very happy and grateful to be part of this journey, and I cannot wait to see what the next generation of singers brings to the stage. This is going to be a very special journey.”_


Andrea Jeremiah said, _“Music has always been an integral part of who we are as Tamilians, and I believe some of the most extraordinary voices are waiting to be discovered across the state. What excites me about Tamil Idol is the opportunity to meet singers from different backgrounds, with different influences and stories, and watch them bring their individuality to the stage. I am really looking forward to this journey and to being part of a platform that gives these voices the opportunity to be heard, nurtured, and celebrated.”_


With A.R. Rahman leading the charge, Tamil Idol kicks off its first auditions in Chennai on August 23, beginning the hunt for Tamil Nadu’s next musical sensation. Aspiring singers between 14 and 30 years of age can audition at Velammal Vidyalaya Annexure, Mel Ayanambakkam, Chennai, for an opportunity to be part of this landmark talent hunt.


Tamil Idol coming soon on Sony Vizha and Sony LIV