Featured post

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு

 *துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு* துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த 'மி...

Tuesday, 28 July 2026

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு

 *துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு*

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த 'மிட்டாய் மழை' !


நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'மிட்டாய் மழை- Mittai Mazhai' யை வெளியிட்டுள்ளனர்.‌


ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'மிட்டாய் மழை' பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்... நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. 


பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்... பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்... விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல் - ஆகியவற்றை உணர்த்தும் கவித்துவமான உவமைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.‌


துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி,  ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா- Aakasamlo Oka Thara- AOT' திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார். லைட் பாக்ஸ் மீடியா ( Lightbox Media) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.‌


*‘MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY*


The makers of AOT celebrated Dulquer Salmaan’s birthday by unveiling the film’s first single, “Mittai Mazhai.”


Composed by GV Prakash Kumar, Mittai Mazhai is a feel-good melody that beautifully captures the emotional heartbeat of the story. Told from the heroine’s perspective, the song portrays her dream of touching the stars and the silent encouragement of the man who helps her move forward. It is a touching tribute to a unique bond that transcends traditional definitions of love.


Penned by Balaji Venugopal and sung by Ramya Behara, the song is enriched with poetic metaphors that symbolize perseverance, hope, and the quiet power that drives every dream.


Starring Dulquer Salmaan, Satvika Veeravalli, and Shruti Haasan, Aakasamlo Oka Tara is directed by Pavan Sadineni, produced by Sandeep Gunnam and Ramya Gunnam under Lightbox Media. The film is presented by Swapna Cinema and Geetha Arts.


https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*

 *தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*












*வெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்' - அமைச்சர் ராஜ்மோகன்*


தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை - தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.    


தயாரிப்பு நிறுவனம் - தயாரிப்பாளர் - திரைப்படம் - நட்சத்திர கலைஞர்கள் - தொழில்நுட்ப கலைஞர்கள் - விளம்பரங்கள் - பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்கள் - திரையரங்குகள் - ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் - என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும்  சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதனை முறையாக ஆவணப்படுத்தும் வரலாறு வரை தங்களுடைய பணிகளை செழுமையாக முழுமையான அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பவர்கள் தான் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள்.  சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள இந்தத் தருணத்திலும் பத்திரிக்கை தொடர்பாளர்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாக வேண்டிய செய்திகளையும்... சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு விளக்கங்கள் வெளியிடும் பொறுப்பினையும்.. ஏற்று அயராது உழைக்கும் பத்திரிகை தொடர்பாளர்களின் நலன்களுக்காக இயங்கும் சங்கத்திற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி யுவராஜ் தலைவராகவும், என். விஜய முரளி செயலாளராகவும், வீ. கே. சுந்தர் பொருளாளராகவும், எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோர் இணை செயலாளராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் - தமிழ் திரைப்படத்தின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்- தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்- தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்-  நடிகர்கள் அர்ஜுன் தாஸ் -அசோக் செல்வன்- தயாரிப்பாளரும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் - தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் - தயாரிப்பாளர் ஜே. எம். பஷீர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' திரைப்படத் துறையில் முக்கியமான சங்கம்- தவிர்க்க முடியாத சங்கம்- பி.ஆர்.ஓ சங்கம். எண்ணற்ற சங்கங்கள் இருந்தாலும்... இந்த சங்கம் முக்கியமானது. தேர்தல் நடைபெற்று ,தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி. யுவராஜ் ஒரு துடிப்பான இளைஞர். அவரது தலைமையில் இந்த சங்கம் சிறப்பாக செயல்படும். இதற்கு நான் சார்ந்த தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


தமிழ் திரைப்படத் துறையில் எல்லா சங்கங்களுக்கும் ஒரு அலுவலகம் சொந்தமாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு  என எந்த அலுவலகமும் இல்லை. இந்த அலுவலகம் வாடகையில் தான் இயங்கி வருகிறது. புதிதாக அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கினால்.. நாங்கள் கட்டடத்தை கட்டிக் கொள்கிறோம். இதனை வழங்கினால் சிஎம்முக்கும் , அமைச்சருக்கும் காலத்திற்கும் அழியாத நற்பெயர் கிடைக்கும். பெருமையாகவும் இருக்கும். 


2015 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய மானியங்கள் வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க வேண்டும் என தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் . 


அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், '' இந்த உலகத்துடன் ஒரு உறவு பாலமாய் தமிழ் சினிமாவை- இந்த கலைத்துறையை- இணைக்கக் கூடிய அத்தனை சினிமா பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை தொடர்பாளர்களுக்கும் நான் நெஞ்சார தலை வணங்குகிறேன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். 


இங்கு பணியாற்றும் அனைத்து பிஆர்ஓக்களிடமும் நான் எஃப் எம்மில் பணியாற்றிய போதும்.... சோசியல் மீடியாவில் பணியாற்றிய போதும்... தனியாக யூட்யூப் சேனலை தொடங்கிய போதும்.... திட்டு வாங்கிய ஒருவன் என்றால், அது நான் தான். கடந்த காலங்களில் இத்துறையில் பத்திரிகைகளுக்கும், வெப்சைட்களுக்கும் என பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அனுமதிப்பது தொடர்பான சிக்கல்கள் உருவானது. அப்போதும் பொறுமையாக இருந்து விளக்கமும், ஆதரவும் அளித்தனர். அதன் பிறகு கால மாற்றத்தை -தொழில்நுட்ப மாற்றத்தை- உணர்ந்து ஆதரவை வழங்கத் தொடங்கினார். 


அத்துடன் அனைத்து பிஆர்ஓக்களுக்கும்... நல்ல தமிழில் குறைவான சம்பளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளர் ஒருவர் தேவை என்றால்... உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவது நான் தான். மலிவு விலை தொகுப்பாளர் என்றால் ராஜ்மோகன் தான். அது நான்தான் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது அல்ல. விருது என்றால் ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் அனுமதியை பெற்று வெள்ளித்திரை- சின்னத்திரை- தமிழ் திரை- விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


நல்ல படைப்புகள் தான் நமக்கு ஆக்சிஜன். தமிழ் சினிமாவில் தன் தலையை உண்மையிலேயே அடமானம் வைத்து முதலீடு செய்யும் முதலாளிகள் என்றால் ... அது நம்முடைய தயாரிப்பாளர்கள் தான். 


தயாரிப்பாளர்களால் சில தருணங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியங்களை தர இயலாத போது.. அவர்களுக்கு பட வாய்ப்பையே வழங்கியுள்ளனர். அத்தகைய தாயுள்ளம் கொண்டவர்கள் தான் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இல்லை என்றால் நாம் யாரும் இங்கில்லை.‌


தமிழ் சினிமாவில் கைகளாக இருப்பவர்கள் தான் பாடலாசிரியர்கள்- பாடகர்கள்- பாடகிகள்- இசையமைப்பாளர்கள்-. படத்திற்காக ஓடியதா? இளையராஜாவின் இசைக்காக ஓடியதா? என தெரியாத பல வொண்டர்ஃபுல் மேஜிக் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. 


தமிழ் சினிமாவை தாங்கிக் கொண்டு ஓடக்கூடிய கால்கள் என்றால்... ஃபைட் மாஸ்டர்ஸ் மற்றும் டான்ஸ் மாஸ்டர்ஸ் தான். இவர்கள் ரத்தத்தை வியர்வையாக கொட்டி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். 


தமிழ் சினிமாவின் வயிறாக திகழ்பவர்கள் புரொடக்ஷன். அஞ்சு பேர் இருந்தால்.. கேரவனில் சாப்பாடு. 50 பேர் இருந்தால் கேரவன் அருகே சாப்பாடு. 500 பேர் இருந்தால் சாப்பாட்டை எப்படியாவது வழங்கி விடுவார்கள். 'காந்தி' திரைப்படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு லட்சம் பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனராம். இந்தியாவில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவு மதிய உணவு எப்படி கொடுத்திருப்பார்கள்? எப்போது உணவு இடைவேளை வழங்கப்பட்டிருக்கும்? என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவே முடியாது.


இந்த சினிமாவின் நாடி நரம்புகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முகம் தெரியாத நாயகர்களாக இருப்பவர்கள்... ரத்தமாக இருப்பவர்கள்... யார் என்றால் பி ஆர் ஓக்கள் ஆகிய நீங்கள் தான். நீங்கள் ஓடி ஓடி அங்கு செல்ல வேண்டும்.... இங்கு செல்ல வேண்டும்.. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.... என ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.


அப்படி என்றால் சினிமாவில் இதயம் யார்? உண்மையிலேயே தன்னுடைய இதயத்தை பற்றி கவலைப்படாத இயக்குநர்கள் தான். அவர்கள் தான் தங்களுடைய இதயத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது ஒரு நல்ல படத்தை எடுத்து விட மாட்டோமா...! எடுத்து விட முடியாதா..! என 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தின் காவேரி கார்னர் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான அண்ணன்களை  நான் அறிவேன். இந்த மொத்த சினிமாவின் உடலுக்கும் ஒரு அழகான ஸ்கின் வேண்டுமல்லவா.. அது நம்முடைய மேக்கப் டிபார்ட்மெண்ட். இப்படி எல்லாமே இருக்கும் சினிமாவில் ஆக்சிஜன் யார்? என்றால் துணை இயக்குநர்கள் தான் . இயக்குநர்கள் இல்லாமல் கூட இரண்டு மணி நேரங்களில் ஏதேனும் சில ஷாட்களை படமாக்கலாம். துணை இயக்குநர்கள் இல்லாமல் ஒரு ஷாட்டை கூட படமாக்க  முடியாது. இவர்களும் முகம் தெரியாத ஹீரோக்கள் தான். இப்படி எத்தனையோ முகம் தெரியாத ஹீரோக்கள் சினிமாவில் இருக்கிறார்கள். இப்படி அத்தனை நபர்களிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர்கள் இந்த பிஆர்ஓ க்கள்.


அண்ணன் செல்வமணி பேசுகையில் பேமெண்ட் பென்டிங் பற்றி குறிப்பிட்டார். அது என்ன? என்பதை நான் கூறுகிறேன். கடந்த காலத்தில் எல்லா சங்கங்களும் சேர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு  நூற்றாண்டு விழாவை கொண்டாடினர். அந்த விழாவில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக இயக்குநர் லிங்குசாமி -பாண்டிராஜ் -என பலரிடமிருந்து போன் கால்ஸ் வந்து கொண்டே இருந்தது. அப்போது எனக்கு இந்த நிகழ்ச்சிக்கான ஊதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருந்தது. அதனால் நான் சமாளித்துக் கொண்டே பதில் அளித்தேன். அதன் பிறகு ஒரு பிஆர்ஓ போன் செய்து, 'ஒரு நிமிடம் ஆர் கே செல்வமணி உங்களிடம் பேச வேண்டும்' என்றார். அவர் போன் செய்தவுடன், 'நான் வந்து கொண்டிருக்கிறேன்' என சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து ஒரு மாதம் வரை எனக்குத் தெரிந்து யாரும் தூங்க கூடவில்லை. தொடர்ந்து அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏராளமான ஸ்கிரிப்டுகளை எழுதி எழுதி அதனை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் மொத்த பேரும் வருகை தந்திருந்தனர். இப்படிப்பட்ட மனித உழைப்பு எனக்குத் தெரிந்து இதுவரை இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட நேர்மையான உழைப்பை வழங்குவது திரை உலகம் தான். இவர்கள் அனைவரும் நடமாடும் உழைப்பாளர்கள் சிலைகள் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை உரிமையுடன் கேட்கலாம். 


'தவமாய் தவமிருந்து' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக இயக்குநர் சேரனுக்கு தேசிய விருதுகளை கொட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு காத்திரமான படைப்பு.‌ நாங்கள்தான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களுக்கு என்னென்ன தேவையோ...! அவை அனைத்தையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.


முதல் சந்திப்பில் தமிழக முதல்வர் என்னை அழைத்து, 'மானியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் படங்கள் எதுவும் பெண்டிங் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவு படுத்துங்கள் ' என சொன்னார். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு காலத்தில் தமிழ்நாடு தான் சினிமாவில் கேப்பிட்டல் ஆக இருந்தது. இங்கு தான் அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும். கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு மாநிலங்கள் சென்றது. அதற்கு பலதரப்பட்ட காரணங்கள். அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்வதுதான் எங்களுடைய வேலை.


சூட்டிங் ஸ்பாட்டில் மேனேஜரோ... பி ஆர் ஓக்களோ... பர்மிஷனுக்காக பலருக்கு காசு கொடுக்க வேண்டியதிருந்தது. அதற்கு தற்போது 'நோ ' சொல்லப்பட்டிருக்கிறது. யார் கேட்டாலும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். உங்களுடன் சிஎம் இருக்கிறார். புரொடக்ஷன் மற்றும் ஆர்டிஸ்டிகளுக்கு என்ன தேவையோ... அதை மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள். 


உலகத்தில் வேலையை செய்வதற்காக யாரும் பாராட்ட மாட்டார்கள் ஏனெனில் நம்முடைய சிஸ்டம் அப்படி மாறிவிட்டது நாம் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதை உண்மையாக செய்து கொண்டிருக்கிறோம். ஒளிவு மறைவு இல்லாமல்... வெளிப்படை தன்மையுடன் இயங்குவதற்கான ஒரு முயற்சிதான். ஏனெனில் சினிமா துறையில் தான் கருவாகி... உருவாகி... இன்று ஒரு மாமனிதர் முதலமைச்சர் ஆக கிடைத்திருக்கிறார். 


இந்த மேடையில் எங்களுடைய அண்ணன்கள் எதையெல்லாம் வேண்டுமென கேட்டார்களோ... அதை எல்லாம் செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 


முத்துக்காளை மனைவிக்கு ஒரு பிரச்சனை என்று போது.. என்னை அழைக்கவில்லை என்றாலும்.. நானாக சென்று, 'அவர்களை நடிகராக பார்க்காதீர்கள். ஒரு கல்வியாளராக பாருங்கள் 'என்று அறிவுறுத்தி முழுமையான மருத்துவ சிகிச்சையை கிடைக்கச் செய்தோம். 


பாவா லக்ஷ்மணன் அண்ணனுடன் நான் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருப்பினும் எம்எல்ஏ ஹாஸ்டலில் அவருக்கு இடம் கொடுத்துவிட்டேன். கேப்டன் இல்லையென்றால் என்ன.... கேப்டனின் படங்களை பார்த்து தான் நாங்கள் அனைவரும் வளர்ந்திருக்கிறோம். நீங்கள் வாருங்கள் என்று அவரை அன்புடன் அழைத்து அந்த விடுதி அறையை கொடுத்தேன். 


பாரதிராஜா- பாக்யராஜ்- மறைந்த போது ஓடோடி சென்று முழு அரசு மரியாதை வழங்கியது. அது எங்களுடைய கடமை. அவர்களுக்கு செய்யாமல் நாங்கள் வேறு யாருக்கு செய்யப் போகிறோம். 


நான் பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் குழந்தைகள்.. என்னுடைய அறைக்கு வந்தவுடன்.. அவர்களை ஒரு குட்டி நாற்காலியில் அமர வைப்பேன். சாக்லேட் தருவேன். அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடுவேன். அவர்களின் பெற்றோர்கள் தான் பதட்டமடைவார்கள்.  ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையை பார்த்து அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள். அப்போது ஒரு அதிகாரி நல்லதொரு ஐடியாவை கொடுத்தார். அதன்படி சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள தியேட்டரில் சென்னையில் அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு உலக சினிமாவை திரையிட்டோம். அந்த பிள்ளைகள் அந்த சினிமாவை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதை பார்த்தவுடன் இத்தகைய முயற்சிகள் இனி மாதம் தோறும் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதை தொடங்கி விட்டோம்.


நாங்கள் பேசும்போது எங்களுடன் பேசாத அந்த குழந்தைகள்.... திரையில் தெரியும் மீனுடன் பேசுகிறது. மானுடன் பேசுகிறது. சிரித்து விளையாடினர். படத்தின் இடைவேளையின் போது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல அவர்களின் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் உற்சாகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். 


கிட்டத்தட்ட நானும் அப்படித்தான்.. கிடைத்த வேலைகளை செய்து, எப்படியாவது ஒரு நிலைக்கு உயர்ந்திட வேண்டும் என உழைத்துக் கொண்டே இருந்தேன். இன்று இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன் என்றால் ..இவை அனைத்தும் திரைக்கலை தந்த ஒரு வலிமை. இதயத்தை தொடக்கூடிய ஒரு உணர்வு. நல்ல படைப்புகளை பார்த்து... படித்து... கேட்டு... வளர்ந்தது. இதையெல்லாம் ...இப்படி எல்லாம் ... செய்ய வேண்டும் என்று நினைத்து, எனக்கு மாண்புமிகு முதல்வர் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு இது. அவர் என் மீது வைத்த நம்பிக்கை. என் மீது இங்கு உள்ள எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கை. இதனை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். கடைசி மூச்சு வரை நேர்மையாக வேலை செய்து, உங்கள் அத்தனை பேரின் கோரிக்கையையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் ஆலோசனையும், அனுமதியும் பெற்று... என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என உறுதி அளிப்பதுடன்..வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்'' என்றார்.

அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

 *‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு  விழா!!*



‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில்  ‘அன்பே டயானா’ திரைப்படம்  ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். 


இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.



இந்நிகழ்வினில்… 



பாடலாசிரியர் உத்தமன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ‘சுடுவானத்திலா’ என்ற பாடலை எழுதும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கரின் இனிய இசையிலும், அழகான காட்சிகளுடனும் அந்தப் பாடல் ரசிகர்களை சென்றடைந்திருப்பது எனக்கு பெரும் சந்தோஷம்.


இந்தப் படத்தை தயாரித்துள்ள மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இதற்கு முன்பு தயாரித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. அதன் தயாரிப்பாளர் யுவராஜை நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அதேபோல், இயக்குநர் பாரி இளவழகனும் இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர். அவரையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இசையமைப்பாளர் பரத் மூலமாக இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததோடு, அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதற்காக பரத்துக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பில் பங்காற்றிய சத்யா காரிகால் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, நடிகர் கோபி என்னுடைய கல்லூரி ஜூனியர். இந்தப் படத்தில் அனைவரும் கவனிக்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரைப் பற்றி ஒரு சீனியராக பெருமையுடன் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இந்தப் படம் இன்று மக்கள் மத்தியில் வெற்றிப் பெற்றதற்கு உறுதுணையாக இருந்த ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”



பாடலாசிரியர் பாக்கியம் சங்கர்  பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். அன்பே டயானா திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே இயக்குநர் பாரி இளவழகன் என்னை தொடர்புகொண்டு, ‘ஜிகர்தண்டா’ படத்தின் பாடல்களைப் போல நினைவில் நிற்கும் ஒரு பாடல் வேண்டும் என்று கூறினார். அந்த முதல் உரையாடலிலேயே இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.


அதன் பிறகு இசையமைப்பாளர் பரத் சங்கரை சந்தித்தேன். அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானதாக இருந்தது. அப்போதுதான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷையும் நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.


இந்தப் படம் வடசென்னையை பின்னணியாகக் கொண்டிருந்தாலும், அதற்கான வழக்கமான வன்முறைச் சாயலைத் தேர்ந்தெடுக்காமல், கத்தியும் ரத்தமும் இல்லாத, அழகான காதல் கதையைச் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். வடசென்னை என்றாலே ஒரு குறிப்பிட்ட மாதிரியான கதைகள்தான் வரும் என்ற எண்ணத்தை உடைத்து, வண்ணமயமான, உணர்வுபூர்வமான திரைப்படத்தை இயக்குநர் பாரி உருவாக்கியுள்ளார்.


ஒருநாள் பாரி என்னிடம், ‘15 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நான் உதவி இயக்குநராக உங்களை சந்தித்திருக்கிறேன்’ என்று கூறினார். அது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அப்போது நான் அவரை அன்பாக நடத்தி இருப்பேன் என்பதால்தான், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை நினைவில் வைத்து இந்தப் படத்திற்கு அழைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.


இப்படிப்பட்ட மனதை வருடும், குடும்பம் முழுவதும் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படங்களை உருவாக்குவதற்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு மிகவும் அவசியம். இன்றைய சூழலில் இத்தகைய படங்களை தயாரித்து, வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்காக தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இசையமைப்பாளர் பரத் சங்கர் உள்ளிட்ட இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்.


அன்பே டயானா போன்ற நல்ல குடும்பப் படங்கள் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் ரசிகர்கள் மனதார சிரித்து ரசிப்பதை நேரில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் என் நன்றிகள். வணக்கம்.”




பாடலாசிரியர் முத்தமிழ் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். அன்பே டயானா திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் நான் இணையும் நான்காவது படம் இது. அதேபோல், இந்த நிறுவனத்தின் வெற்றிவிழா மேடையில் நிற்பதும் எனக்கு நான்காவது முறை. இதற்கான வாய்ப்பை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்த ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் ‘அன்பை’ மையமாகக் கொண்டிருந்தது. குட்நைட் திரைப்படம் கணவன்-மனைவிக்கிடையேயான அன்பைப் பேசியது. லவ்வர் காதலர்களின் உறவைப் பதிவு செய்தது. டூரிஸ்ட் ஃபேமிலி மனிதாபிமானத்தை மையமாகக் கொண்ட அன்பைச் சொன்னது. அதேபோல் அன்பே டயானா ஜாதி, மத எல்லைகளைக் கடந்து காதலும் அன்பும்தான் மிகப் பெரியது என்ற அழகான கருத்தை முன்வைக்கிறது. இத்தகைய கதைகளைத் தேர்வு செய்யும் இந்த நிறுவனத்தின் பயணம் மிகவும் தரமானதாகவும், இன்றைய காலத்திற்கு தேவையானதாகவும் இருக்கிறது.


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறது. அவர்கள் தயாரித்து வரும் அடுத்த படங்களும் மிகப்பெரிய கவனத்தைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இயக்குநர் பாரி இளவழகனும், இசையமைப்பாளர் பரத் சங்கரும் தீவிரமான படைப்பாளிகள். குறிப்பாக கவுண்டமணி சார் மீது இருவருக்கும் இருக்கும் அபிமானம் அளவிட முடியாதது. இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பித்தால், அவர்களது உரையாடல் முழுவதும் கவுண்டமணி சாரின் வசனங்களும் நகைச்சுவையும் நிரம்பியிருக்கும். அந்த உற்சாகத்தைப் பார்ப்பதே மிகவும் ரசிக்கத்தக்க அனுபவமாக இருக்கும்.


இந்தப் படத்தில் நான்கு பாடல்களை எழுதும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அடுத்த படத்தில் இயக்குநர் பாரியின் பேனாவையே ‘திருடி’ கொண்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், இயக்குநராக மட்டுமல்லாமல், பாடல் எழுதுவதிலும் அவருக்கு சிறந்த திறமை இருக்கிறது. இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர்கள் பாக்கியம் சங்கர், உத்தமன் ஆகியோருடன் ஒரே படத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.


இசையமைப்பாளர் பரத் சங்கர் மிகவும் திறமையானவர் மட்டுமல்ல, எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுபவர். அவருடன் பணியாற்றியது இனிமையான அனுபவமாக இருந்தது.


நடிகர் கோபி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் கதையை முதன்முதலில் கேட்டபோதே அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று நான் நினைத்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது.


சத்யா மேம், சரவணன் சார் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினரும், இந்த அணியுடன் தொடர்ந்து இன்னும் பல வெற்றிப் படங்களை வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் சுதர்சனின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் இன்னும் பல நல்ல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும்.


இந்த வெற்றிக்கு காரணமான படக்குழுவினர், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.”





தயாரிப்பாளர் சத்யா காரிகாலன்  பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட இன்று அனைவரும் ஒன்றுகூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இது முதல் திரைப்படத் தயாரிப்பு. நான் இதுவரை கல்வித் துறையில், குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் பணியாற்றி வந்துள்ளேன். சினிமா எனக்கு ஒரு புதிய அனுபவமாக மட்டுமல்ல, அர்த்தமுள்ள ஒரு பயணமாகவும் அமைந்துள்ளது.


இந்தப் பயணத்தின் முதல் அடியிலிருந்து என்னை நம்பிக்கையுடன் ஊக்குவித்து வழிநடத்தியவர் திரு. சரவணன் சார். சிலர் ஒரு கதவு இருப்பதைக் காட்டுவார்கள், சிலர் அந்தக் கதவைத் திறந்து வைப்பார்கள். ஆனால் வெகு சிலர்தான் அந்தக் கதவுக்கு அப்பால் இருக்கும் உலகத்தை அறிமுகப்படுத்துவார்கள். அந்த வகையில், சினிமா உலகிற்குள் எங்களை அழைத்துச் சென்ற முக்கியமான நபர் சரவணன் சார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எங்களின் முதல் தயாரிப்பிலேயே நம்பிக்கையுடன் கைகோர்த்து பயணித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் அந்த நிறுவனம், எங்கள் முதல் முயற்சியில் தோளோடு தோள் நின்றது மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது. யுவராஜ் ஒரு தனி மனிதர் அல்ல; அவருக்குப் பின்னால் ஒரு வலுவான அணியே இருக்கிறது. நாங்களும் அவர்களுடன் இணைந்து ஒரே குடும்பமாக இந்தப் பயணத்தை தொடர்கிறோம்.


நல்ல புத்தகங்கள் ஒரு தலைமுறையின் சிந்தனையை மாற்றும் சக்தி கொண்டவை. அதுபோல, சிறந்த திரைப்படங்களுக்கும் சமூகத்தின் எண்ணங்களை மாற்றும் வலிமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மக்களை ஒன்றிணைத்து, மாற்றத்திற்கும் ஊக்கத்திற்கும் வழிவகுப்பதே சினிமாவின் உண்மையான நோக்கம்.


அந்த வகையில், இயக்குநர் பாரி இளவழகன் அன்பே டயானா படத்தில் காதல், சமத்துவம், தனிமனித சுதந்திரம் போன்ற கருத்துகளை யாருக்கும் போதனை செய்யாமல், நகைச்சுவையும் எளிமையும் கலந்த திரைக்கதையின் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் அழகாக சொல்லியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நடிகை ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ-இந்திய இளம்பெண்ணாக மிகவும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார். ரோஜா மேடம், சேத்தன் சார், கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களாகவே மாறி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் என் நன்றிகள்.


ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது நடிகர்கள், இயக்குநர் ஆகியோரால் மட்டுமே உருவாகாது. அதன் பின்னால் உழைக்கும் உதவி இயக்குநர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரின் கூட்டு முயற்சிதான் அந்த வெற்றிக்கான காரணம். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அன்பே டயானா திரைப்படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் படத்தை கொண்டாடிய அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகள்.”




நடிகர் பரிதாபங்கள் கோபி பேசியதாவது:


“பத்திரிகை, தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.


ஒரு திரைப்படம் எவ்வளவு சிறப்பாக உருவாகியிருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒரு படத்தை விரும்பினால் உயர்த்தியும், விரும்பவில்லை என்றால் கடந்து சென்றும் விடும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. ஆனால் நல்ல கருத்து கொண்ட ஒரு சிறிய படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறச் செய்யும் சக்தியும் உங்களிடம்தான் இருக்கிறது. அன்பே டயானா திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதற்காக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


திரையரங்குகளுக்கு மீண்டும் மக்களை வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். குறிப்பாக மொபைல் திரையில் இருந்து பெரிய திரைக்கு வர வேண்டும் என்ற எங்களின் ஆசையை விட உங்களில் பலரும் விரும்பினீர்கள்.  எங்களின் அந்த முயற்சிக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவு, எங்களைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.


அதேபோல் சமூக வலைத்தளங்களில் அன்பே டயானா குறித்து தொடர்ந்து பதிவிட்டு, படத்தை கொண்டாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதரவு இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது.


இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷின் பங்களிப்பு மிகப்பெரியது. ஒரு நல்ல படத்தை தயாரிப்பது ஒரு கலை என்றால், அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அதே அளவுக்கு பெரிய கலை. குட்நைட், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களை அவர் மக்களிடம் கொண்டு சென்ற விதத்தை நான் பார்த்திருக்கிறேன். அதே அர்ப்பணிப்புடன் அன்பே டயானா திரைப்படத்தையும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார். அதற்காக அவருக்கு என் பாராட்டுகள்.


இந்தப் படத்தில் நான் நடித்திருந்தாலும், இந்த வெற்றியின் முழு பாராட்டும் இயக்குநர் பாரி இளவழகனுக்கே சேர வேண்டும். அவர் எழுதிய கதையையும், உருவாக்கிய கதாபாத்திரத்தையும் நான் அவர் சொன்னபடி திரையில் வெளிப்படுத்த முயன்றேன். இந்தப் படத்தின் ஆன்மா முழுவதும் அவருடைய எழுத்தும், இயக்கமும்தான்.


யூடியூப் போன்ற தளங்களில் இருந்து நேரடியாக சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல. அதைவிட, இயக்குநராக தன்னை நிரூபிப்பது இன்னும் பெரிய சவால். அந்த சவாலை முழு அர்ப்பணிப்புடனும், சினிமா மீதான காதலுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கும் பாரி இளவழகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


இந்தப் படத்தின் மூலம் சினிமாவை அணுகும் விதம், கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளும் முறை என பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


மீண்டும் ஒருமுறை இந்த வெற்றிக்கு காரணமான தயாரிப்பாளர்கள், இயக்குநர், படக்குழுவினர், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.






சென்னை விநியோகஸ்தர் வம்சி பேசியதாவது:


அன்பே டயானா திரைப்படத்தின் சென்னை விநியோகத்தை மேற்கொண்டது எனக்கு ஒரு புதிய அனுபவம். திரைப்பட விநியோகத்தில் நான் களமிறங்கும் முதல் படம் இதுதான். படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்த உடனேயே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போதே தயாரிப்பாளர் யுவராஜிடம், ‘இந்தப் படத்தின் மூலமாகத்தான் என் விநியோகப் பயணத்தை தொடங்க வேண்டும்’ என்று கூறியிருந்தேன்.


நான் கடந்த 20 ஆண்டுகளாக ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் தொழில் செய்து வருகிறேன். திரைப்பட விநியோகத்தில் இறங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அந்த ஆசைக்கு அன்பே டயானா திரைப்படம் அழகான தொடக்கமாக அமைந்துள்ளது.


இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் யுவராஜ், சரவணன் சார் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இயக்குநர் பாரி இளவழகனுடன் பேசியிருக்கிறேன். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதேபோல் ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நல்ல எதிர்காலம் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.


இந்தத் திரைப்படத்தின் மூலம் நான் செய்த முதலீடு இரண்டாவது வாரத்திலேயே முழுமையாக திரும்பக் கிடைத்தது. அதை இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். புதிய துறையில் முதலீடு செய்யும்போது பலரும் தயக்கம் காட்டினார்கள். ‘ஏற்கனவே நல்ல தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள்; ஏன் இந்தத் துறைக்கு வர வேண்டும்?’ என்று பலரும் கேட்டார்கள். ஆனால் நான் நம்பிக்கையுடன் எடுத்த முடிவு இன்று சரியானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


பெரிய படங்கள் வெளியான சூழலிலும் அன்பே டயானா தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்று, நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் படத்திலேயே நல்ல திரைப்படத்தை விநியோகித்து, லாபத்தையும் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


இந்த வெற்றிக்கு காரணமான யுவராஜ், சரவணன் சார் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யுவராஜுடன் இணைந்து இன்னும் பல நல்ல திரைப்படங்களை சென்னை விநியோகத்தில் வெளியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”





கலை இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது:


அன்பே டயானா திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, இப்போதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய படங்கள் வெளியான சூழலிலும், இந்தப் படம் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்வது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.


இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இசையமைப்பாளர் பரத் சங்கர் அமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் ஒரு காட்சிக்குத் தேவையான விஷயங்களைச் சொன்னாலே, அதை எளிதாகப் புரிந்துகொண்டு சிறப்பாக திரையில் கொண்டு வந்தார். அதேபோல் இயக்குநர் பாரி இளவழகனும் தேவையற்ற ஆடம்பரங்களை எதிர்பார்க்காமல், இருக்கும் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தி படத்தை உருவாக்கியவர். அதனால் கலை இயக்குநராக எனது பணியை முழுமையாகச் செய்ய முடிந்தது.


தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுடன் பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் தயாரிப்பாளருக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இந்தப் படத்தில் அப்படியான சூழல் எதுவும் இல்லை. தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், நண்பராகவும் அவர் எப்போதும் எங்களுக்கு துணையாக இருந்தார். அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.


அன்பே டயானா பெற்றிருக்கும் இந்த வெற்றி தொடர்ந்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸின் அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”





ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் பேசியதாவது: 


இது எனக்கு முதல் வெற்றி விழா என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்பே டயானா திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, திரையரங்குகளில் காட்சிகளும் அதிகரித்து வருவதாக விநியோகஸ்தர் தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ஒளிப்பதிவாளராக இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இல்லை.


இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரே ஒருவரை காரணமாகக் கூற முடியாது. நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.


இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை ஆதரித்து வெற்றிபெறச் செய்த ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.”




படத்தொகுப்பாளர் பார்த்தா பேசியதாவது:


ஒரு நல்ல திரைக்கதையை முழுமையான திரைப்படமாக மாற்றுவதில் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் முக்கியமானது. அன்பே டயானா போன்ற அழகான படைப்பில் பணியாற்றியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.


இது எனக்கும் முதல் வெற்றி விழா என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுவதற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணமாக இருந்தது. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேபோல், இந்தப் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் விளம்பர மற்றும் புரமோஷன் குழுவிற்கும் என் நன்றிகள்.


இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் பரத் சங்கர், அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர் பாரி இளவழகன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தக் கதையை எந்தவித சர்ச்சைகளும் இல்லாமல், அதன் உண்மையான உணர்வோடு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததுதான் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் என்று நான் நம்புகிறேன்.


திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிப் பயணம் இன்னும் நீண்ட நாட்கள் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”




இசையமைப்பாளர் பரத் சங்கர் பேசியதாவது:


அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் இந்த நன்றி தெரிவிக்கும் விழா எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது ஒரு சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், உண்மையிலேயே மனப்பூர்வமாக நன்றி சொல்லும் மேடையாக அமைந்திருக்கிறது என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.


இந்தப் படத்தின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் பெற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் தொடர்ந்து நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறோம். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்த அதே நன்றியுணர்வுடன்தான் இன்றும் இந்த மேடையில் நிற்கிறேன்.


படத்தில் நடித்த பலரையும் இதற்கு முன்பு நான் திரையில் மட்டுமே பார்த்திருந்தேன். படப்பிடிப்பின்போதும், திரையரங்கிலும் அவர்களது நடிப்பைப் பார்த்து ரசித்தேன். இன்று அனைவரையும் நேரில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.


என்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர்கள் முத்தமிழ், மோகன்ராஜன், உத்தமன் மற்றும் பாக்கியம் சங்கர் ஆகியோருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகனுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.


சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை மிகவும் எளிமையாகவும், நகைச்சுவையுடனும், ரசிக்கும்படியும் சொல்லியிருப்பதற்காக இயக்குநர் பாரியை மனதார பாராட்டுகிறேன். அதேபோல் அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு எப்போதும் தனித்துவமான ஆழமும் வலிமையும் இருக்கும். ஜமா திரைப்படத்தைப் போலவே, அன்பே டயானாவிலும் ரம்யா ரங்கநாதனின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை அவர் மிகச் சிறப்பாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார்.


இந்தப் படத்தின் இசையைப் பற்றியும், பின்னணி இசையைப் பற்றியும் தங்களது விமர்சனங்களில் குறிப்பிட்டு பாராட்டிய பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு இசையமைப்பாளராக அந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.


மேலும், இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக் கலைஞர்கள், சவுண்ட் இன்ஜினியர்கள், Sunbreak Studios, 20dB Studios மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.”



உடை வடிவமைப்பாளர்  அபி நந்தினி பேசியதாவது: 


அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றியில் பங்கேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, என் மீது முழு நம்பிக்கை வைத்து பணியாற்ற வாய்ப்பு அளித்த இயக்குநர் பாரி இளவழகனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.


இந்தப் படத்தில் இணைந்து நடித்த ரம்யா மிகவும் அன்பாகவும், ஒத்துழைப்புடனும் இருந்தார். அவருடன் பணியாற்றியது மிகவும் வசதியான, இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருடனும் இணைந்து வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”




நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியதாவது:


இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் மதிப்புமிக்க ஆதரவும், வருகையும் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறது.


இந்த வாய்ப்பை வழங்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் யுவராஜ் சார், சரவணன் சார், நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சத்யா காரிகாலன் மேம் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்பே டயானா திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்து வரும் வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


‘மேஜிக்’ கதாபாத்திரத்தை என்னை நம்பி ஒப்படைத்த இயக்குநர் பாரி இளவழகனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், படத்தொகுப்பாளர் பார்த்தா, இசையமைப்பாளர் பரத் சங்கர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள், பாடகர்கள், உடை வடிவமைப்பாளர் அபி மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. குறிப்பாக அபி வடிவமைத்த ஆடைகள் இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்தன.


என்னுடன் நடித்த ரோஜா மேம், சேத்தன் சார், எனது தந்தையாக நடித்த டென்வர் சார் மற்றும் அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.


திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் சிரித்து, கைதட்டி, ரசித்து கொண்டாடியதை நேரில் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.


ஒரு நடிகருக்கு தனது பெயரை விட, தான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரால் ரசிகர்கள் அழைப்பது மிகப்பெரிய அங்கீகாரம். ‘மேஜிக்’ என்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு சிறுமி ஓடிவந்து, “Hi Magic, you really look magical on screen” என்று கூறியதும், மற்றொரு குழந்தை “Bye Magic” என்று விடைபெற்றதும் என் மனதில் என்றும் நிற்கும் தருணங்கள்.


மேலும் பலர், ‘நீங்கள் உண்மையிலேயே ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாக இருந்தும் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே’ என்று பாராட்டினார்கள். அந்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.


படத்தில் கோபி அண்ணா, சேத்தன் சார் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பையும், குறிப்பாக இறுதிக்காட்சியில் இயக்குநர் பாரி இளவழகனுக்கு கிடைத்த கைதட்டலையும் பார்த்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.


இந்த வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவு. பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு நீங்கள் எழுதிய கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் நான் தவறாமல் பார்த்தேன். படத்தைப் பற்றியும், ஒவ்வொருவரின் நடிப்பைப் பற்றியும் நீங்கள் எழுதிய நேர்மறையான விமர்சனங்கள்தான் முதல் வாரத்தில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்களுக்கெல்லாம் என் இதயப்பூர்வமான நன்றிகள். 


இந்தப் பயணத்தில் உங்களில் பலர் எனக்கு நண்பர்களாகவும் மாறியிருக்கிறீர்கள். அதுவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.


பல போட்டி வெளியீடுகள் மற்றும் பிற சவால்கள் இருந்தபோதிலும், திரையரங்குகளில் ரசிகர்கள் தொடர்ந்து வந்து படத்தை ஆதரித்தனர். கடந்த வாரம் நான் அதிகம் பயன்படுத்திய செயலி BookMyShow தான் என்று சொல்லலாம். Instagram, WhatsApp ஆகியவற்றைவிட, திரையரங்குகளில் காட்சிகள் நிரம்பி வழிவதைப் பார்ப்பதற்காக BookMyShow-வை அதிகமாகப் பார்த்தேன்.


தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்த வாரமும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இதே அன்புடனும் ஆதரவுடனும் அன்பே டயானா திரைப்படத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”



நடிகர் சுதர்சன் பேசியதாவது:


அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றி விழா மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை பல திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன். ஆனால் இன்று அதே மேடையில் இந்தப் படத்தின் நடிகராக நின்று பேசுவது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது.


இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பாரி இளவழகன், தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.


முந்தைய நிகழ்ச்சியில்  சசிகுமார் சார் சொன்ன செட் பிராபர்டி வசனம் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் இந்தப் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்ததில் ஒரு சிறிய பங்காக அமைந்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநருக்கும், அதற்கு முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு முழு அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றுவேன் என்ற உறுதியை இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த சேத்தன் சார், ரோஜா மேம், ரம்யா, செல் முருகன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அதேபோல் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், இசையமைப்பாளர் பரத் சங்கர், படத்தொகுப்பாளர் பார்த்தா, கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர்கள் மோகன்ராஜன், பாக்கியம் சங்கர், முத்தமிழ் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், பவா மணி அண்ணா மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சஜன், விவேக், வேணு, வெங்கட், நரேன் சார், கோபால் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அன்பே டயானா திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”



ஈரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கலா பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். இன்று அன்பே டயானா திரைப்படம் பெற்றிருக்கும் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. பெரிய படங்களின் போட்டிக்கு மத்தியில் வெளியான இந்தச் சிறிய திரைப்படம் ரசிகர்களின் ஆதரவால் வெற்றி பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது.


இயக்குநர் பாரி இளவழகன் இந்தக் கதையை என்னிடம் முதன்முதலாக கூறியபோதே, இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. இன்று அந்த நம்பிக்கை நனவாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால்தான் அப்போதே அவருக்கு வாழ்த்து சொல்லி, இந்தப் படம் வெற்றி பெறும் என்று நான் கூறியிருந்தேன்.


ஒரு நல்ல கதையை உருவாக்குவது மட்டும் போதாது; அதை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். சுவையான பிரியாணியை சமைத்தாலும், அதை சரியான இடத்தில் பரிமாறினால்தான் அதன் சுவையை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். அதுபோல, அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர்.


இந்தப் படத்தைப் பற்றி தொடர்ந்து எழுதி, பேசி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் மிக முக்கியமான காரணம்.


அன்பே டயானா திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.”


தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது, 



அன்பே டையானா திரைப்படத்தை இந்த அளவுக்கு வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது நடிகர்கள் அல்லது இயக்குநரின் வெற்றி மட்டுமல்ல. திரையில் தெரியாத நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பின் பலன் தான் இந்த வெற்றி. ஒரு லைட்மேன் முதல் புரொடக்ஷன் அசிஸ்டெண்ட் வரை, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர்கள், கலை இயக்குநர், புரமோஷன் குழு, பி.ஆர்.ஓ., டிரைவர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த வெற்றி. 


எங்கள் இயக்குநர் பாரி மீது ஆரம்பத்திலிருந்தே எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவர் சொன்ன கதையும், அதை திரையில் கொண்டு வந்த விதமும் இன்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், குறிப்பாக எங்களை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த மூத்த கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பரத் சங்கர், ஒளிப்பதிவாளர் செல்லி, எடிட்டர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர் குழு, புரொடக்ஷன் குழு, புரமோஷன் குழு என ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை முழுமையாக உணர்ந்து பணியாற்றியதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. குறிப்பாக கடைசி நேர நெருக்கடிகளிலும் யாரும் சோர்வடையாமல், ஒரே இலக்குடன் உழைத்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது.


இந்தப் படத்தை முதல் நாள் முதல் கடைசி நாள் வரை எங்களுடன் பயணித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். எங்களை நம்பி திரையரங்குகளுக்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்தான் இந்த வெற்றியின் உண்மையான காரணம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு இன்னும் நல்ல படங்களை உருவாக்கும் பொறுப்பையும் தன்னம்பிக்கையையும் 

கொடுத்திருக்கிறது.


இந்த வெற்றி எங்கள் முழு குழுவிற்கும் சொந்தமானது. இதே அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன், நன்றி. 




இயக்குநர் பாரி இளவழகன் பேசியதாவது:


இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். வாழ்க்கையில் எல்லோரிடமும் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நன்றியுணர்வு மட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் நான் மட்டுமல்ல. இந்த அரங்கில் இருப்பவர்களும், இங்கு இல்லாமல் வெளியே இருந்து இந்தப் படத்திற்காக உழைத்த ஆயிரக்கணக்கானவர்களும் தான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசனைகளும், கருத்துகளும் இருக்கும். ஆனால் அவற்றைத் தாண்டி, ஒரு நல்ல திரைப்படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்றது நீங்கள்தான். இந்தப் படத்தின் வெற்றிக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.


அதேபோல், ஜமா திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவை நான் மறக்க முடியாது. அந்தப் படம் வெளியானபோது உடனடியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அது நாளுக்கு நாள் மக்களிடம் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை நனவாக்கிய ரசிகர்களுக்கும், ஜமா படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த மேடையில் நடிகர் விஜய் சேதுபதி சாருக்கு ஒரு சிறப்பு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். அன்பே டயானா கதையை அவரிடம் பகிர்ந்தபோது, ‘உங்கள் தற்போதைய பயணத்திற்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸுடன் இந்தப் படம் சரியான கூட்டணியாக இருக்கும்’ என்று கூறி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷிடமும் என்னைப் பற்றி நல்ல விதமாக பேசியிருந்தார். அந்த நம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் விஜய் சேதுபதி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆரம்பம் முதலே அவர் என் மீது வைத்த நம்பிக்கையே இன்று இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஒரு இயக்குநருக்கு தனது எழுத்தின் மீது தயாரிப்பாளர் முழுமையான நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய வரம். அன்பே டயானா படத்தில் நான் எழுதிய ஒரு வசனத்தையோ, ஒரு காட்சியையோ மாற்ற வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. என் எழுத்தையும், என் பார்வையையும் முழுமையாக நம்பி எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அந்த நம்பிக்கைக்காக அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.”


“இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து நான் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக இருந்தேன். எந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உறுதியாக இருந்தது. அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ் முழுமையாக மதித்தார்.


கோபி இந்தக் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று ரசிகர்கள் அவரை கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


அதேபோல், ரோஜா மேம் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததே எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு சிறிய படக்குழுவிற்கு அவர் அளித்த ஆதரவு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.


ரம்யா ரங்கநாதன் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இணைந்திருந்தாலும், அவர் உழைப்பு அளவிட முடியாதது. முழு படப்பிடிப்பிலும் எந்தவித சிரமமும் கொடுக்காமல், மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரது உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


பலரும் என்னிடம், ‘ஏன் அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்காமல் அன்பே டயானா என்று வைத்தீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை தலைப்பாக வைக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று நான் நம்பினேன். இன்று ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


என்னுடைய இயக்குநர் குழுவினருக்கும் இந்த மேடையில் நன்றி சொல்ல விரும்புகிறேன். இணை இயக்குநர்கள் ராகேஷ், ராகுல், பிரசாந்த், தினேஷ், ராஜன், மதன் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.


குறிப்பாக ராகுல், தயாரிப்புக் குழுவிற்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய பாலமாக செயல்பட்டார். பல விஷயங்களில் எனது பணிச்சுமையை குறைத்து, தயாரிப்புக் குழுவுடன் சிறப்பாக ஒருங்கிணைத்து பணியாற்றினார். ராகேஷ் என்னுடன் முதல் படத்திலிருந்தே பயணித்து வருகிறார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இந்தப் படத்தில் பாபா மணி செய்த பங்களிப்பை குறிப்பாக சொல்லியே ஆக வேண்டும். பெரும்பாலான காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படமாக்கப்பட்டதால், அனுமதி பெறுவது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பேசி, அனுமதிகள், ஆவணங்கள், ஏற்பாடுகள் என அனைத்தையும் முன்கூட்டியே செய்து முடித்ததால், படப்பிடிப்பு மிகவும் சுலபமாக நடந்தது. தயாரிப்புக் குழுவின் சுமையையும் அவர் வெகுவாகக் குறைத்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அதற்கு முக்கிய காரணமான வெங்கட்டுக்கு நான் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தப் படத்தை ஒரு வேலை என்ற மனநிலையுடன் அல்ல, தனது சொந்தப் படமாக நினைத்து ஒவ்வொரு போஸ்டர், வீடியோ, தியேட்டர் விஜிட் என அனைத்தையும் முழு ஈடுபாட்டுடன் கவனித்தார். குறிப்பாக ரம்யா ரங்கநாதனின் மீதான அவரது அக்கறையும், அவருக்காக செய்த உழைப்பும் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த நட்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.


அதேபோல், எங்கள் பி.ஆர்.ஓ. யுவராஜ் எந்த நேரத்தில் தொடர்புகொண்டாலும் உடனடியாக ஒத்துழைத்து, பத்திரிகையாளர் சந்திப்புகள் முதல் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்தார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”



ஈரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனர் சரவணன் பேசியதாவது:


அன்பே டயானா போன்ற தரமான, மரியாதைக்குரிய திரைப்படத்தில் எங்கள் ஈரா  என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தையும் இணைத்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேஷ், சத்யா காரிகாலன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இது எங்கள் நிறுவனத்திற்கு வாழ்நாள் பெருமையாகும். அவர்களிடம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்போம்.


எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சசிகுமார் சார், எம்.ஜி.எஸ். சிவா, டாக்டர் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். அதேபோல், என் மனைவி கலாவுக்கும், என் பிள்ளைகளுக்கும் என் அன்பும் நன்றியும்.


இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் பல சவால்கள் இருந்தாலும், அவற்றைக் கடந்து ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, ஜனநாயகன் போன்ற பெரிய திரைப்படத்துடன் வெளியானாலும், அந்தப் படம் எங்களுக்கு போட்டியாக இல்லாமல், தமிழ்ச் சினிமாவின் திருவிழா சூழலை உருவாக்கியது. அந்தப் படத்திற்கான டிக்கெட் கிடைக்காத பலரும் அன்பே டயானா திரைப்படத்தைப் பார்த்தனர். அந்த வகையில், இரண்டு படங்களும் வெற்றி பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். ஜனநாயகன் படக்குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எங்கள் நிறுவனத்தில் இதுவரை பல புதிய இயக்குநர்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் யுவராஜ் கணேஷை கதாநாயகனாக வைத்து கதைகளையும் கூறியிருக்கிறார்கள். அது அவர்மீது சினிமா உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.


யுவராஜைப் பற்றி ஒரு விஷயத்தை குறிப்பாகச் சொல்ல வேண்டும். டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த பிறகும், அந்த வெற்றியின் கர்வமோ, பெருமிதமோ அவரிடம் நான் ஒருபோதும் பார்க்கவில்லை. மாறாக, மிகவும் எளிமையாகவும், அடுத்த நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் இருந்தார். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘பணம் சம்பாதிப்பது எனக்கு முக்கியமல்ல. நல்ல படங்களை உருவாக்கி, மனநிறைவுடனும், நிம்மதியுடனும் வாழ்வதுதான் முக்கியம்’ என்று கூறினார். அந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.


அந்த நேரத்தில்தான் இயக்குநர் பாரி இளவழகன் எடுத்திருந்த ஜமா திரைப்படத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் அவர் பேசினார். ‘பாரி போன்ற திறமையான இயக்குநர்கள் தமிழ்ச் சினிமாவில் பெரிய வெற்றியை அடைய வேண்டும். அவருடன் நாம் சேர்ந்து பயணிப்போம்’ என்று அவர் கூறியதை இன்று நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.


அதேபோல், இந்தப் பயணத்தில் யுவராஜ் கணேஷுக்கு உறுதுணையாக நின்ற சத்யா காரிகாலனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டணிதான் அன்பே டயானா திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.


இந்தத் திட்டத்தில் இணைய வேண்டாம் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். சில நண்பர்கள், திரையுலகைச் சேர்ந்த முக்கியமானவர்கள்கூட, ‘இந்தப் படத்தில் இருந்து விலகிவிடுங்கள்’ என்று அறிவுரை கூறினர். ஆனால், அந்தக் கருத்துகள் அனைத்தையும் தாண்டி, யுவராஜ் கணேஷ் மீது இருந்த நம்பிக்கையால்தான் நான் இந்தப் பயணத்தில் உறுதியாக நின்றேன்.


ஒரு மனிதரை புரிந்துகொள்ள ஒரு சம்பவம் போதும். ஆனால், நல்ல மனம், நேர்மை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகிய சிறந்த குணங்களைக் கொண்ட தயாரிப்பாளர்தான் யுவராஜ் கணேஷ். அவரைப் போன்ற படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. அனைவருக்கும் நன்றி. 



‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.


சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.


‘அன்பே டயானா’ கடந்த ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Monday, 27 July 2026

ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider-Man: Brand New Day) - டாம் ஹாலண்டின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம்

 *ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider-Man: Brand New Day) - டாம் ஹாலண்டின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஜெண்டாயாவின் 'MJ' உடனான காதலை நினைவுகூரும் நெஞ்சை உருக்கும் இறுதி டிரெய்லர் வெளியீடு*


_ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் ஜூலை 30 அன்று வெளியாகிறது. இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது._



இணைப்பு: https://youtu.be/lE2QTE64r0w?si=yHkwRAe8WOPQUft6


திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ள 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் மூன்றாவது மற்றும் இறுதி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டாம் ஹாலண்ட் நடிக்கும் இப்படம், அந்தப் பிரபலமான சூப்பர் ஹீரோவாக அவர் நடிக்கும் நான்காவது தனித் திரைப்படமாகும்; இது 'ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்' (Spider-Man: No Way Home) படத்தின் நிகழ்வுகளுக்குப் பிந்தைய கதையைத் தொடர்கிறது.


அனைவரின் நினைவிலிருந்தும் பீட்டர் பார்க்கரை அழித்த மந்திரத்தால் ஏற்பட்ட துயரமான விளைவுகளையும், அதனால் அவர் வாழ்க்கையைத் தனிமையில் எதிர்கொள்ள வேண்டிய சூழலையும் இந்த புதிய டிரெய்லர் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தனது காதலியான MJ-உடன் இருக்க முடியாத பீட்டரின் வலியையும் இந்த டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. தனது புதிய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன், MJ-உடன் தான் பகிர்ந்துகொண்ட இனிய நினைவுகளை இந்த சூப்பர் ஹீரோ அசைபோடுகிறார். 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக்கும் என்று டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா முன்பு கூறியதை இந்த டிரெய்லர் உறுதிப்படுத்துகிறது.


மேலும், இப்படத்தில் மார்க் ருஃபாலோவின் 'ஹல்க்' (Hulk) கதாபாத்திரம் இடம்பெறும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; இது மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் (Marvel Cinematic Universe) ஒரு விறுவிறுப்பான புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது. இறுதி டிரெய்லரை கீழே காணலாம்:


டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு கிறிஸ் மெக்கென்னா, எரிக் சோமர்ஸ் மற்றும் ஜஸ்டின் குரிட்ஸ்கஸ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோரின் மார்வெல் காமிக் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை கெவின் ஃபீகி, ஏமி பாஸ்கல், அவி அராட் மற்றும் ரேச்சல் ஓ'கானர் ஆகியோர் தயாரித்துள்ளனர். லூயிஸ் டி'எஸ்போசிட்டோ மற்றும் டேவிட் கெய்ன் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, சேடி சிங்க், ஜேக்கப் பட்டலோன், ஜான் பெர்ன்தால், ட்ராமெல் டில்மேன், மைக்கேல் மாண்டோ மற்றும் மார்க் ருஃபாலோ ஆகியோர் நடித்துள்ளனர்.


'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் ஜூலை 30 அன்று வெளியாகிறது. இப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த அனுபவத்தை உண்மையிலேயே மறக்க முடியாததாக மாற்ற, இப்படம் இந்தியாவில் 2D, 4DX 3D, 3D SCREEN X, DOLBY CINEMA 3D, ICE 3D, DOLBY CINEMA 2D, MX4D 3D, 3D, P[XL] மற்றும் BIGPIX போன்ற பல்வேறு 'பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்' (Premium Large Format) திரையரங்குகளில் வெளியாகிறது.

Spider-Man: Brand New Day Drops A Heartbreaking Final Trailer As Tom Holland's Superhero Revisits His Love For Zendaya's M

 *Spider-Man: Brand New Day Drops A Heartbreaking Final Trailer As Tom Holland's Superhero Revisits His Love For Zendaya's M



_Spider-Man: Brand New Day is set to release on 30th July in India. The film is set to release in English, Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada._


LINK: https://youtu.be/lE2QTE64r0w?si=yHkwRAe8WOPQUft6


Spider-Man: Brand New Day has unveiled its third and final trailer just days before its highly anticipated theatrical release. Starring Tom Holland, the film marks his fourth solo outing as the beloved superhero and picks up after the events of Spider-Man: No Way Home.


The new trailer reaffirms that Peter Parker is still grappling with the heartbreaking consequences of the spell that erased him from everyone's memory, leaving him to navigate life completely alone. The trailer also explores Peter's pain of not being with the love of his life, MJ. The superhero goes down memory lane, revisiting his fond memories with MJ before accepting his new reality. The trailer reconfirms Tom Holland and Zendaya's tease that Spider-Man: Brand New Day will be an emotional watch. 


It also confirms that Mark Ruffalo's Hulk will make an appearance in the film, setting the stage for an exciting new chapter in the Marvel Cinematic Universe. Watch the final trailer below:


Directed by Destin Daniel Cretton, the film is written by Chris McKenna & Erik Sommers and Justin Kuritzkes. Based on the MARVEL Comic Book by Stan Lee and Steve Ditko, the film has been produced by Kevin Feige, p.g.a., Amy Pascal, p.g.a., Avi Arad and Rachel O'Connor, p.g.a.  Executive Producers are Louis D'Esposito and David Cain. The film stars Tom Holland, Zendaya, Sadie Sink, Jacob Batalon, Jon Bernthal, Tramell Tillman, Michael Mando and Mark Ruffalo.


Spider-Man: Brand New Day is set to release on 30th July. The film is releasing in six languages in India. These include English, Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada. To make this experience truly unforgettable, the film is releasing on multiple Premium Large Format in India like 2D, 4DX 3D, 3D SCREEN X, DOLBY CINEMA 3D, ICE 3D, DOLBY CINEMA 2D, MX4D 3D, 3D, P[XL], and BIGPIX.

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

 *இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா*








நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:


"நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.


கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது கிடைத்த வரவேற்பும், விவசாயிகளின் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா. விஜய் சரவணன் அவர்களுக்கும் இயற்கை விவசாயம் பற்றி சிறப்புரை வழங்கிய வேளாண் செம்மல் திரு.கோ.சித்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் அவர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக கருதுகிறேன்.


இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.


தற்போதைய "முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்" என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.


விவசாயிகளைப் பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமையாகும். அதிகளவில் மரங்களை நட வேண்டும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.


எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.


இந்நிகழ்வில் மண்ணுக்கு மக்களுக்கும் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட உறுப்பினர்கள், மற்றும் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise*

 *Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise*



Created, written, and directed by Andrew Louis and produced under the banner of Wallwatcher Films by Pushkar and Gayatri as creative producers, season 2 of the critically acclaimed franchise tells a riveting tale of guilt, secrets, rumors, and redemption


 Set against the backdrop of Madurai, the edge-of-your-seat suspense drama stars M. Sasikumar in the lead, alongside Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, and Arjun Nandhakumar in pivotal roles


Streaming exclusively on Prime Video, Vadhandhi Season Two—The Mystery of Mani will be available in Tamil, along with dubs in Telugu and Hindi, and subtitles in 15 languages, including English, across India and over 240 countries and territories worldwide on August 7 


CHENNAI, India—July 27, 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today announced August 7 as the global premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the highly anticipated second season of its critically acclaimed Tamil Original suspense thriller series created, written, and directed by Andrew Louis. Produced under the banner of Wallwatcher Films by Pushkar and Gayatri as creative producers, the eight-episode series stars M. Sasikumar in the lead as SI Moosa Raza, alongside Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, and Arjun Nandhakumar in pivotal roles. Vadhandhi Season Two—The Mystery of Mani will premiere exclusively on Prime Video in Tamil with dubs in Telugu and Hindi and subtitles in 15 languages, including English, across India and over 240 countries and territories worldwide on August 7.


Set against the culturally rich backdrop of Madurai, the narrative seamlessly intertwines tradition and investigation with the raw energy and essence of the iconic Jallikattu festival. Staying true to the franchise's core themes of rumor against reality, season 2 draws audiences into a gripping mystery through layered storytelling, complex characters, and emotionally charged relationships. The season introduces Sasikumar as SI Moosa Raza, an honest, relentless police officer whose pursuit of the truth collides with politics, media frenzy, and human frailty. When skeletal remains are unearthed during the inauguration of a highway project, the investigation takes unexpected turns, leading him to an elusive prisoner named Mani. 


"Stories from the South have received immense love and appreciation from audiences across the world, and Vadhandhi is a franchise we are incredibly proud of,” said Nikhil Madhok, Director & Head of Originals, Prime Video India. “The first season carved a unique space in the suspense crime drama genre by masterfully blurring the lines between rumor and reality, and we are thrilled to bring the second season to audiences worldwide. With Andrew Louis at the helm once again, and a gripping narrative set against the vibrant cultural landscape of Madurai, season 2 takes the franchise to new heights. It is a privilege to continue our collaboration with Pushkar and Gayatri, whose ability to craft compelling, culturally rooted stories with universal appeal is unmatched. We are confident this season will keep audiences on the edge of their seats."


Creative Producers Pushkar and Gayatri said, "Season 2 builds on the franchise's unique blend of suspense, truth, and perception while telling a story that is both emotionally compelling and deeply engaging. Andrew Louis has yet again brought this vision to life brilliantly, crafting a gripping narrative that stays true to the spirit of the franchise while taking it in an exciting new direction. Sasikumar and the entire cast have delivered exceptional performances that add tremendous depth to the story. We are grateful to Prime Video for continuing to support stories that are rooted in culture yet resonate with audiences everywhere, and we can't wait for audiences in India and across the world to experience Vadhandhi Season Two—The Mystery of Mani."


XXX


ABOUT PRIME VIDEO


Prime Video is India’s largest streaming service for exclusive Originals—a one-stop entertainment destination in India offering blockbuster Originals and exclusive titles included with Prime, in addition to the widest selection of movie rentals, and 30+ add-on subscriptions (Apple TV+, Lionsgate Play, Discovery+, Crunchyroll, BBC Player, Sony Pictures – Stream, MGM+ to name a few). With the integration of the free video streaming service ‘Amazon MX Player’ into Prime Video, the unified service now offers a deeper, richer selection for an even wider base of audiences in India, with a variety of Indian and international movies and shows across Hindi, English, Tamil, Telugu, Malayalam, Kannada, and more. Prime Video is home to fan-favorites like Mirzapur, The Family Man, Panchayat, Paatal Lok, Farzi, Raakh, Subedaar, Matka King, Call Me Bae, Dhootha, Inspector Rishi, Traitors, Rise & Fall, Sankalp, Jamnapaar, Aashram and Made In India: A Titan Story. Global hits include Project Hail Mary, Off Campus, The Boys, The Lord of The Rings: The Rings of Power, Jack Ryan, The Summer I Turned Pretty, amongst others. Prime Video offers every kind of entertainment, for every kind of viewer, all in one place. For more information on Prime Video, visit www.amazon.com/primevideo.


ABOUT WALLWATCHER FILMS


Founded and run by the writer, director and creative producer duo Pushkar & Gayatri, Wallwatcher Films has produced four long-format tentpole shows, Suzhal–The Vortex (Seasons 1 & 2), Vadhandhi –The Fable of Velonie, and Exam for Amazon Prime Video and a short titled ‘The Mask’, which is a part of the Putham Pudhu Kaali anthology series. The company has also produced the feature film ‘Aelay’, available on Netflix. Wallwatcher Films is all geared up for the launch of their upcoming Prime Video Original series, Vadhandhi–The Mystery of Mani. Pushkar & Gayatri curate all projects produced by Wallwatcher Films and mentor them as Creative Producers. Both seasons of Suzhal–The Vortex were written and created by Pushkar & Gayatri. 


https://www.wallwatcherfilms.com/



ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

 *ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்*



ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. 


மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


CHENNAI,India—July 27, 2026   —  ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 


இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸான ‘வதந்தி’ சீரிஸின் இரண்டாவது சீசனான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 


ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். இதில் எம். சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பையும் கதையுடன் இயல்பாக இணைக்கும் இந்த சீசன், வதந்தி தொடரின் அடையாளமான ‘வதந்தி Vs உண்மை’ என்ற மையக்கருவை மேலும் ஆழமாக ஆராய்கிறது. பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை, சிக்கலான கதாபாத்திரங்கள், உணர்வுபூர்வமான உறவுகள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை இறுதி வரை பரபரப்பில் வைத்திருக்கும் வகையில் கதை நகர்கிறது. 


நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை. 


பிரைம் வீடியோ இந்தியா – ஒரிஜினல்ஸ் பிரிவு இயக்குநரும், தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில், 


“தென்னிந்திய கதைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘வதந்தி’ எங்களுக்கு மிகவும் பெருமை சேர்த்த தொடர்களில் ஒன்று. முதல் சீசன், வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான எல்லையை மிகவும் வித்தியாசமாக சித்தரித்து, சஸ்பென்ஸ் குற்ற திரில்லர் வகையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. இப்போது இரண்டாவது சீசனை உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் மகிழ்ச்சி எங்களுக்கு உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இயக்குநராக இணைந்திருப்பதும், மதுரையின் கலாச்சாரப் பின்னணியில் நகரும் இந்த பரபரப்பான கதை தொடரை மேலும் உயர்த்தியுள்ளது. புஷ்கர் – காயத்ரியுடன் எங்கள் கூட்டணி தொடர்வது பெருமைக்குரியது. கலாச்சார வேர்களை இழக்காமல் உலகளாவிய ரசிகர்களை கவரும் கதைகளை உருவாக்கும் அவர்களின் திறமை அபாரமானது. இந்த சீசனும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார். 


கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி கூறுகையில்,


“சஸ்பென்ஸ், உண்மை மற்றும் மனிதர்களின் பார்வை ஆகியவற்றின் தனித்துவமான கலவையைத் தக்கவைத்துக் கொண்டே, உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும் ஒரு கதையை இந்த இரண்டாவது சீசன் சொல்கிறது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இந்தக் கதையை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளார். தொடரின் அடையாளத்தைப் பாதுகாத்தபடியே, அதை புதிய திசையில் கொண்டு சென்றுள்ளார். சசிகுமார் மற்றும் முழு நடிகர் குழுவும் கதைக்கு மிகுந்த ஆழத்தை அளிக்கும் வகையில் அசாதாரணமான நடிப்பை வழங்கியுள்ளனர். கலாச்சார வேர்களைக் கொண்ட கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரைம் வீடியோவுக்கு நன்றி. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்

ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து*

 *ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து*



இந்திய இலக்கியத்தின் உச்சம் என்று கருதப்படும் ஞானபீட விருது, இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் கரண்சிங் இந்த விருதைக் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார்.


கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘இலக்கியம் மற்றும் இசை மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 


அமித் ஷாவின் வாழ்த்துக் கடிதம் வருமாறு: