Featured post

Immortal Movie Review

Immortal Tamil Movie Review Immortal Movie Rating:4.5/5 ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு வித்தியாசமான concept-ஐ வைத்து வந்திர...

Saturday, 5 September 2026

Immortal Movie Review

Immortal Tamil Movie Review

Immortal Movie Rating:4.5/5

ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு வித்தியாசமான concept-ஐ வைத்து வந்திருக்கிற fantasy thriller movie. படத்தோட பெயர் ‘Immortal



இந்த படத்துல நம்ம GV Prakash தான் hero. அவருக்கு ஜோடியாக Kayadu Lohar நடித்திருக்காங்க. அறிமுக இயக்குநர் Mariyappan Chinna இயக்கியிருக்கிற இந்த படம், ஆரம்பத்துல ஒரு simple-ஆன romantic story மாதிரி நம்மளுக்கு தெரிஞ்சாலும், கொஞ்சம் கொஞ்சமா mystery மற்றும் supernatural world-க்குள்ள நம்மள கொண்டு போகுது.


சரி… முதல்ல கதையைப் பற்றி சுருக்கமா பார்த்துடலாம்.


GV Prakash ஒரு இளைஞரா இருக்காரு. சென்னையில தங்குறதுக்கு ஒரு நல்ல இடம் தேடிக்கிட்டு இருக்காரு. அதுவும் அவருக்கு வசதியான budget-ல ஒரு இடம் கிடைக்கணும்.


அந்த search-ல தான் Kayadu Lohar-ஓட character அவருக்கு அறிமுகமாகுது.


அவங்க இருக்குற வீடு ரொம்பவே luxurious-ஆ இருக்கு. ஒரு கட்டத்துல அந்த வீட்டுலேயே GV Prakash தங்குற மாதிரி சூழ்நிலை உருவாகுது.


ஆரம்பத்துல இவர்களுக்குள்ள ஒரு attraction develop ஆகுது. காதல் சம்பந்தப்பட்ட scenes-ல கதை ரொம்ப normal-ஆ தான் போகுது.


ஆனா ஒரு stage-க்கு மேல, “இங்க ஏதோ சரியில்லையே…”ன்னு நமக்கே ஒரு சந்தேகம் வர ஆரம்பிக்குது.


Kayadu-வோட character-ஐ சுற்றி சில விஷயங்கள் mysterious-ஆ இருக்குது. என்ன நடக்குது, அவங்க பின்னணி என்னன்னு நமக்கு உடனே புரியாது.


அந்த mystery-யை இன்னும் அதிகமா build பண்ணி, interval-ல ஒரு important twist கொடுத்திருக்காங்க.


அந்த twist வந்ததும் படத்தோட entire mood-மே மாறிடுது.


முதல் பாதி வரைக்கும் ஒரு romantic angle-ல போய்க்கிட்டு இருந்த கதை, அதுக்கப்புறம் mystery, survival மற்றும் fantasy thriller zone-க்கு shift ஆகுது.


அதுதான் இந்த படத்தோட interesting part.


Second half-ல GV Prakash ஒரு unusual situation-க்குள்ள சிக்கிக்கிறாரு. அங்கிருந்து எப்படி வெளியே வரப்போறாரு, Kayadu-வோட உண்மையான பின்னணி என்ன, அவங்களைச் சுற்றி இருக்குற அந்த mysterious creature என்ன என்பதெல்லாம் ஒவ்வொன்னா reveal ஆக ஆரம்பிக்குது.


இந்த விஷயங்களை எல்லாம் ஒரே shot-ல சொல்லாம, கொஞ்சம் கொஞ்சமா information கொடுத்து audience-ஐ curious-ஆ வைத்திருக்கிறாங்க.


அதனால second half போகப் போக நம்மளுக்கும் “அடுத்து என்ன?”ன்னு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம் வந்துடுது.


Performance-க்கு வந்தா, GV Prakash இந்த role-க்கு நல்லா suit ஆகியிருக்காரு.


ஒரு சாதாரண இளைஞனா ஆரம்பிச்சு, எதிர்பாராத ஒரு சூழ்நிலைக்குள்ள மாட்டிக்கிட்ட பிறகு அவரோட behaviour மாறுற விதத்தை நல்லா carry பண்ணியிருக்காரு.


Particularly mystery அதிகமாகும் இடங்கள்ல அவரோட reactions மற்றும் emotions கதைக்கு தேவையான impact-ஐ கொடுக்குது.


Kayadu Lohar-க்கு கொடுக்கப்பட்டிருக்கிற character ரொம்பவே different.


அவங்க character-ஐப் பற்றி ஆரம்பத்துல நமக்கு முழுசா எதுவுமே தெரியாது. அதனால அவங்க screen-ல வர்ற ஒவ்வொரு scene-ம் ஒரு mystery feel-ஐ maintain பண்ணுது.


அந்த mysterious personality-ஐ Kayadu நல்லாவே bring out பண்ணியிருக்காங்க.


Supporting cast-ல TM Karthik, Kumar Natarajan, Lollu Sabha Maaran, Aaditya Kathir உள்ளிட்ட பலர் நடித்திருக்காங்க.


ஒவ்வொருத்தருக்கும் கொடுக்கப்பட்ட portions-ஐ அவங்க neat-ஆ handle பண்ணியிருக்காங்க.


குறிப்பா TM Karthik-க்கு வர்ற character கதையோட mystery-க்கு இன்னும் ஒரு layer சேர்க்குது. அவரோட character மூலமா Kayadu-வைச் சுற்றி நடக்குற சில விஷயங்கள் இன்னும் interesting-ஆ மாறுது.


Technical side-ல படம் எப்படி இருக்குன்னு பார்த்தா, cinematography நல்லா இருக்கு.


Arun Radhakrishnan ஓட  visuals படத்தோட mood-க்கு சரியா match ஆகுது. குறிப்பா mysterious locations மற்றும் creature சம்பந்தப்பட்ட scenes-ல lighting மற்றும் framing நல்ல atmosphere create பண்ணுது.


படம் முழுக்க ஒரு eerie feel இருக்கணும்னு நினைச்சிருக்காங்க. அந்த feeling-ஐ visuals நல்லா support பண்ணுது.


அதே மாதிரி Sam CS ஓட  music மற்றும் background score இந்த படத்துக்கு முக்கியமான plus.


ஒரு scene-ல என்ன நடக்கப்போகுதுன்னு audience-க்கு தெரியாம இருக்கும்போது, background score மூலமா tension-ஐ அதிகரிக்கிறாங்க.


Creature சம்பந்தப்பட்ட portions வரும்போது music மற்றும் sound இரண்டுமே சேர்ந்து அந்த scenes-க்கு நல்ல impact கொடுக்குது.


Creature portions-ஐப் பொறுத்தவரைக்கும் TOW VFX – The Ordinary Works team-க்கு special mention கொடுக்கணும்.


அந்த supernatural elements-ஐ screen-ல கொண்டு வர்ற விதம் படத்தோட fantasy world-க்கு நல்ல support-ஆ இருக்கு.


அதோட Ghatam Sivaவோட sound design மற்றும் mixing கூட அந்த creature scenes-க்கு இன்னும் depth கொடுக்குது.


ஒரு creature screen-ல வரும்போது அதை visuals மூலமா மட்டும் காட்டாம, sound மூலமாவும் ஒரு presence create பண்ணியிருக்காங்க.


Editing-ஐ Rajesh M handle பண்ணியிருக்காரு.


படத்தோட runtime சுமார் 131 minutes தான். அதனால தேவையில்லாத அளவுக்கு scenes நீளமா போகாம, story ஒரு compact flow-ல முடிஞ்சிடுது.


இது இந்த மாதிரி thriller படத்துக்கு நல்ல விஷயம்.


Direction-ஐ பொறுத்தவரைக்கும், இயக்குநர் Mariyappan Chinna ஒரு different idea-வை தமிழ் சினிமாவுல try பண்ணியிருக்காரு.


ஏன்னா நம்ம சினிமாவுல காதல், action, crime, horrorன்னு நிறைய genres பார்த்திருக்கோம்.


ஆனா romance , fantasy ,mysterious creature , survival thriller இதையெல்லாம் ஒரே கதைக்குள்ள கொண்டு வர்ற முயற்சி கொஞ்சம் fresh-ஆ இருக்கு.


அதனால படத்தோட concept தான் முதல்ல நம்ம attention-ஐ பிடிக்குது.


Screenplay-ல இன்னும் கொஞ்சம் depth கொடுத்திருந்தா இந்த idea இன்னும் பெரிய impact கொடுத்திருக்கும். குறிப்பா அந்த central mystery-ஐ இன்னும் விரிவா explore பண்ணியிருந்தா audience-க்கு அந்த fantasy world இன்னும் strong-ஆ connect ஆகியிருக்கும்.


ஆனா overall-ஆ பார்க்கும்போது, புதுசா ஏதாவது முயற்சி பண்ணணும்னு நினைச்சிருக்கிற debut director-க்கு இது ஒரு நல்ல starting point.


இன்னொரு interesting விஷயம் என்னன்னா, இது AK Film Factory-யோட முதல் production venture.


அறிமுக production banner-ஆ இருந்தாலும், வழக்கமான safe subject-ஐ தேர்வு பண்ணாம, creature-based fantasy thriller மாதிரி ஒரு unusual genre-ஐ எடுத்திருக்காங்க. அந்த முயற்சிக்காகவே இந்த production team-ஐ பாராட்டலாம்.


மொத்தத்துல…


‘Immortal’ ஆரம்பத்துல ஒரு romantic story மாதிரி நம்மளுக்குள்ள வருது. ஆனா interval-க்கு பிறகு படம் முழுசாவே வேறொரு direction-க்கு போயிடுது.


GV Prakash ஓட  performance, Kayadu Lohar-ஓட mysterious character, fantasy elements, creature portions, Sam CS-ோட BGM, VFX மற்றும் cinematography எல்லாமே சேர்ந்து படத்துக்கு ஒரு தனி mood உருவாக்குது.


Particularly second half-ல mystery reveal ஆகுற விதமும், GV Prakash அந்த strange situation-ல இருந்து எப்படி வெளியே வரப்போறாருன்ற curiosity-யும் நம்மள தொடர்ந்து படத்தோட connect ஆக வைக்குது.


தமிழ்ல இதுபோன்ற fantasy creature survival thrillers ரொம்ப அதிகமா வர்றது இல்ல. அந்த வகையில ‘Immortal’ ஒரு different attemptஆ இருக்கு.


So, வழக்கமான commercial stories-ல இருந்து கொஞ்சம் மாறி, romance-ல ஆரம்பிச்சு mystery மற்றும் fantasy thriller-ஆ மாறுற ஒரு movie பார்க்கணும்னு நினைக்கிறவங்க இந்த படத்தை try பண்ணிப் பார்க்கலாம்.


‘Immortal’ – காதல் கதையா ஆரம்பிச்சு… ஒரு mysterious உலகத்துக்குள்ள கூட்டிட்டு போற ஒரு வித்தியாசமான thriller!

I'm Game Movie Review

 I'm Game Tamil Movie Review 

I'm Game Movie Rating: 3.5/5

ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது Dulquer Salmaan நீண்ட இடைவெளிக்குப் பிறகு Malayalam cinema-க்கு திரும்பியிருக்கிற I’m Game திரைப்படம்.

இந்த படம் ஒரு சாதாரண commercial entertainer கிடையாது. Supernatural elements, action, humour, cricket betting, revenge, twistsன்னு நிறைய விஷயங்களை ஒரே கதைக்குள்ள கொண்டு வந்திருக்காங்க. அதனால ஆரம்பத்துல இருந்தே படம் எந்த direction-ல போகப்போகுதுன்னு நம்மளால easy-ஆ guess பண்ண முடியாத மாதிரி ஒரு curiosity இருக்கு.


இந்த படத்தை Nahas Hidhayath இயக்கியிருக்காரு. இவர் முன்னாடி RDX மூலமா கவனம் பெற்றவர். இப்போ I’m Game மூலமா இன்னும் பெரிய scale-ல ஒரு entertainer கொடுக்க முயற்சி பண்ணியிருக்காரு.


சரி, இப்போ கதைக்குள்ள போகலாம்.


Dulquer Salmaan இந்த படத்துல Dan John என்ற character-ல நடித்திருக்காரு.


Dan ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். பணத்துக்கு எந்த shortage-மே இல்ல. Family business-ஐ பார்த்துக்கிட்டாலும், அவனுக்கு வாழ்க்கையில வேறொரு விஷயத்துல தான் அதிகமான interest.


அதுதான் betting மற்றும் gambling.


Excitement கிடைக்கணும், பெரிய பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்துல தொடர்ந்து risk எடுக்கிறான். அதனால் அவனோட வாழ்க்கையில எதிர்பாராத சில பிரச்சனைகள் உருவாகுது.


ஆனா அந்த நேரத்துல நடக்குற ஒரு unexpected incident தான் கதையையே வேறொரு பாதைக்கு கொண்டு போகுது.


அதுக்கப்புறம் Dan-ஓட வாழ்க்கையில சில வித்தியாசமான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்குது. Accident, transplant, அதுக்கப்புறம் வர்ற supernatural elements… இதெல்லாம் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்பு கொண்டிருக்கு என்பதுதான் கதையோட முக்கியமான mystery.


இந்த concept தான் I’m Game படத்தோட interesting point.


முதல் பாதியில Dulquer Salmaan தான் முழு attention-ஐ எடுத்துக்கிறாரு.


Dan ஆரம்பத்துல நமக்கு ரொம்ப பிடிக்கிற மாதிரியான hero கிடையாது. Selfish-ஆ இருக்கிறாரு, தன்னோட ஆசைக்காக எதையும் risk பண்ணக்கூடிய character.


ஆனா அந்த character-ஐ Dulquer ரொம்ப confidently handle பண்ணியிருக்காரு.


Humour-ஆ இருந்தாலும், action-ஆ இருந்தாலும், attitude-ஆ இருந்தாலும், அவரோட screen presence நல்லா work ஆகுது. குறிப்பா first half-ல வரும் சில sequences-ஐ Dulquer-ோட performance தான் இன்னும் entertaining-ஆ மாற்றுது.


Dan-ஓட personality-யை முழுசா நல்லவனா மாற்றாம, அவனோட past மற்றும் அவன் எடுத்த சில decisions மூலமா அவன் ஏன் இப்படிப்பட்ட ஆளா இருக்கிறான் என்பதையும் படம் நமக்கு புரிய வைக்குது.


இதனால conventional hero character இல்லாம, கொஞ்சம் different shades கொண்ட protagonist-ஆ Dan இருக்கிறாரு.


படத்தோட supernatural portion தான் இன்னொரு முக்கியமான attraction.


இது முழுக்க serious horror mood-ல போகுற படம் கிடையாது. சில இடங்கள்ல அந்த supernatural situations-ஐ humour மற்றும் over-the-top treatment-ோட கலந்து கொடுத்திருக்காங்க.


அதனால படம் ஒரு dark thriller மாதிரி மட்டும் இல்லாம, commercial entertainment feel-ஐயும் maintain பண்ணுது.


Jakes Bejoy-ோட background score இதுக்கு நல்ல support கொடுக்குது. குறிப்பா supernatural moments மற்றும் action sequences வரும்போது BGM அந்த scenes-க்கு இன்னும் energy சேர்க்குது.


Kayadu Lohar இந்த படத்துல female lead-ஆ நடித்திருக்காங்க.


அவங்களுக்கும் Dan-க்கும் இடையில உருவாகுற equation ஆரம்பத்துல இருந்தே வழக்கமான romantic track மாதிரி இல்லாம, கதையோட mystery-க்கு தொடர்புடையதாகவே இருக்கு.


Kayadu character-ஐச் சுற்றி சில விஷயங்கள் புரியாமலே இருப்பதால், அவங்க screen-ல வர்ற ஒவ்வொரு scene-ம் கதையோட mystery-யை maintain பண்ணுது.


அடுத்து Antony Varghese.


இவர் Vignesh என்ற cricketer character-ல வர்றாரு.


அவரோட entryக்கு முன்னாடியே கதையில அவரைப் பற்றிய ஒரு expectation create பண்ணியிருக்காங்க. Screen-க்கு வந்ததும் Antony அந்த character-க்குள்ள நல்லா settle ஆகி, தனக்குக் கிடைச்ச portions-ஐ confident-ஆ handle பண்ணியிருக்காரு.


Particularly action மற்றும் emotional portions-ல அவரோட performance நல்லா work ஆகுது.


Cricket betting சம்பந்தப்பட்ட portion-ம் படத்துல முக்கியமான இடம் பிடிக்குது.


Sports-ல இருக்குற competition-ஐ money மற்றும் betting எப்படி influence பண்ணுது என்பதையும் கதை touch பண்ணுது. அதோட Dan-ஓட gambling habit-ஐ connect பண்ணியிருப்பதால், அவனோட personality மற்றும் அவன் சந்திக்கப்போற consequences இரண்டுக்கும் ஒரு link உருவாகுது.


இந்த portion மூலமா கதைக்கு ஒரு different background கிடைக்குது.


ஆனா படத்தோட real core supernatural concept தான்.


அந்த mystery எப்படி ஆரம்பிச்சது, அதோட பின்னணி என்ன, Dan-ஓட வாழ்க்கைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம் story progress ஆகும்போது கொஞ்சம் கொஞ்சமா வெளியில் வருது.


அதனால audience-ஐ தொடர்ந்து curious-ஆ வைத்திருக்குற அளவுக்கு சில interesting turns படத்துல இருக்கு.


Supporting cast-ல Mysskin, Kathir, Vinay Forrt ஆகியோர் இருக்காங்க.


அவங்க ஒவ்வொருத்தரும் கதைக்கு தேவையான இடங்கள்ல நல்ல contribution கொடுத்திருக்காங்க.


அதோட Asif Ali-யோட cameo கூட ரசிகர்களுக்கு ஒரு fun moment-ஆ அமைந்திருக்கு.


Action portions-ஐப் பொறுத்தவரைக்கும், குறிப்பா Dan தனியா handle பண்ணுற fight sequences நல்லா choreograph பண்ணப்பட்டிருக்கு.


Dan மற்றும் Vignesh சம்பந்தப்பட்ட flat sequence-ம் நல்ல staging-ோட உருவாக்கப்பட்டிருக்கு. அந்த portions-ல camera work, editing மற்றும் performance எல்லாமே ஒன்றோட ஒன்று நல்லா sync ஆகுது.


Cinematography-ஐ Jimshi Khalid handle பண்ணியிருக்காரு. Supernatural mood-க்கும் action portions-க்கும் தேவையான visual treatment கொடுத்திருக்காரு.


Chaman Chacko-வோட editing காரணமா நிறைய tonal changes இருந்தாலும் படம் overall-ஆ ஒரு commercial flow-ல நகருது.


Runtime கொஞ்சம் நீளமா இருந்தாலும், அதுக்குள்ள பல genre elements-ஐ கொண்டு வர்ற முயற்சி படத்துக்கு ஒரு பெரிய canvas feel கொடுக்குது. குறிப்பா first half ரொம்ப engaging-ஆ இருப்பதால ஆரம்ப portion நல்ல momentum-ஐ create பண்ணுது.


இந்த படத்துல எனக்கு interesting-ஆ தோணுற விஷயம் என்னன்னா, Dan ஒரு perfect hero கிடையாது.


அவன் எடுக்குற decisions எல்லாமே சரியானது கிடையாது. ஆனா படம் அவனைப் பற்றி moral lesson எடுக்க முயற்சி பண்ணாம, அவன் choices அவனோட வாழ்க்கையில என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்குது என்பதை காட்டுது.


அதுதான் character-ஐ இன்னும் interesting-ஆ மாற்றுது.


Direction-ல Nahas Hidhayath ஒரு பெரிய scale entertainer-ஐ உருவாக்க முயற்சி பண்ணியிருக்காரு.


Supernatural concept-ஐ மட்டும் வைத்துக்கிட்டு ஒரு serious mystery movie-ஆ போகாம, அதுக்குள்ள action, comedy, cricket betting, revenge மற்றும் commercial elements-ஐ கலந்து ஒரு unique flavour உருவாக்கியிருக்காரு.


சில இடங்கள்ல story இன்னும் விரிவாக explore பண்ணப்பட்டிருந்தா இன்னும் பெரிய impact கிடைத்திருக்கும். ஆனாலும் இந்த அளவுக்கு பல genre elements-ஐ ஒரே movie-ல கொண்டு வந்து audience-க்கு ஒரு different experience கொடுக்க முயற்சி பண்ணியிருப்பது நல்ல விஷயம்.


மொத்தத்துல பார்த்தா, I’m Game ஒரு straight-forward mass movie கிடையாது.


ஒரு rich youngster-ஓட carefree lifestyle-ல ஆரம்பிச்சு, gambling மற்றும் cricket betting-ஐ கடந்து, unexpected incident மூலமா supernatural world-க்குள்ள நம்மள கூட்டிட்டு போகுது.


Dulquer Salmaan-ோட performance, Kayadu Lohar-ஓட mysterious character, Antony Varghese-ன் portions, action sequences, Jakes Bejoy-ோட BGM மற்றும் supernatural elements எல்லாமே சேர்ந்து படத்துக்கு ஒரு entertaining flavour கொடுக்குது.


Particularly Dulquer-க்கு இந்த மாதிரி stylish, unpredictable character நல்லா suit ஆகியிருக்கு. அவரோட comeback-க்கு ரசிகர்கள் ரசிக்குற மாதிரியான commercial moments படத்துல இருக்கு.


அதோட post-credit scenes கூட கதையில சில விஷயங்களை connect பண்ணுற மாதிரி அமைக்கப்பட்டிருக்கு.


So, usual commercial movie மாதிரி இல்லாம, action-ம் இருக்கணும், humour-ம் இருக்கணும், அதோட ஒரு supernatural mystery-யும் இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு I’m Game ஒரு interesting watch-ஆ இருக்கும்.


ஒரு விஷயத்துல இருந்து இன்னொரு விஷயத்துக்கு தொடர்ந்து shift ஆகுற இந்த கதையை entertainment-ஆ எடுத்துக்கிட்டு பார்த்தா, படம் ஒரு different experience கொடுக்குது.


மொத்தத்துல I’m Game என்பது ஒரு பெரிய canvas-ல உருவாக்கப்பட்ட supernatural mass entertainer. Dulquer-ோட stylish performance-ம், unpredictable story elements-ம் சேர்ந்து ரசிகர்களுக்கு ஒரு fun-filled cinematic ride-ஐ கொடுக்குது.


I’m Game – வாழ்க்கைல எல்லாமே ஒரு gamble… ஆனா இந்த game-ல அடுத்த move என்னன்னு யாராலுமே சொல்ல முடியாது!

JSK Film Corporation Announces Gripping One-Night Thriller ‘Dhik. Dhik.. Dhik…’


JSK Film Corporation Announces Gripping One-Night Thriller ‘Dhik. Dhik.. Dhik…’


JSK Film Corporation, the acclaimed production house behind National Award-winning films including Thanga Meengal and Kuttram Kadithal, officially announces its new Tamil film Dhik. Dhik.. Dhik…, produced by JSK Satish Kumar.


The film marks the directorial debut of Srinivasan Sivajirao, who has co-written the film along with Raghu Rajagopal.


Set against the backdrop of Chennai, Dhik. Dhik.. Dhik… is a gripping thriller that unfolds over the course of a single night. Blending suspense with an emotional family narrative, the film also carries a socially relevant message that resonates with contemporary times.


The film features Pavel Navageethan, JSK Satish Kumar, Chandini Tamilarasan, Sandra Amy, and Bijesh Nagesh in prominent roles.


Following Fire, JSK Film Corporation continues its journey of backing distinctive stories and content-driven cinema. The production house is also gearing up for the theatrical release of Kuttram Kadithal 2. The film is currently being screened at film festivals, and following the announcement of the festival results, the makers plan to bring the film to theatres, carrying forward the recognition and momentum it receives through its festival journey.


Continuing this slate is Dhik. Dhik.. Dhik…, which promises an intense narrative rooted in emotion, suspense, and social relevance.


On the technical front, Raghu Rajagopal handles the cinematography, DK composes the music, Prem B takes charge of editing, and SS Susee Devaraj serves as the art director.


With its intriguing title, single-night setting, and thriller-driven narrative, Dhik. Dhik.. Dhik… is set to present audiences with an engaging cinematic experience.


Further updates, including the film’s first look and other official announcements, will be unveiled by JSK Film Corporation shortly.

JSK FILM CORPORATION பத்திரிகை செய்தி

 JSK FILM CORPORATION பத்திரிகை செய்தி


JSK Film Corporation நிறுவனம் பரபரப்பான ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ படத்தை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது!


தேசிய விருது பெற்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட பாராட்டுக்குரிய படங்களை தயாரித்த JSK Film Corporation, தனது புதிய தமிழ் திரைப்படமான “திக். திக்.. திக்…” படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை JSK சதீஷ் குமார் தயாரிக்கிறார்.


இப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ரகு ராஜகோபாலுடன் இணைந்து இப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார்.


சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் “திக். திக்.. திக்…”, ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சஸ்பென்ஸுடன் உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையையும் இணைக்கும் இப்படம், சமகால சூழலுக்கு பொருந்தக்கூடிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தையும் பேசுகிறது.


இப்படத்தில் பாவல் நவகீதன், JSK சதீஷ் குமார், சாந்தினி தமிழரசன், சாண்ட்ரா ஏமி மற்றும் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


“ஃபயர்” படத்தைத் தொடர்ந்து, தனித்துவமான கதைகள் மற்றும் அழுத்தமான உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்களை ஆதரிக்கும் தனது பயணத்தை JSK Film Corporation தொடர்ந்து வருகிறது. மேலும், குற்றம் கடிதல் 2 திரைப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இப்படம் தற்போது திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. திரைப்பட விழாக்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விழாப் பயணத்தின் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் வரவேற்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


இந்த வரிசையில் அடுத்த படைப்பாக உருவாகும் “திக். திக்.. திக்…”

திரைப்படம், உணர்வு, பரபரப்பு மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தீவிரமான கதைக்களத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொழில்நுட்பக் குழுவில், ரகு ராஜகோபால் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். DK இசையமைக்கிறார். பிரேம் B படத்தொகுப்புப் பணிகளை கவனிக்கிறார். SS சுசி தேவராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.


வித்தியாசமான தலைப்பு, ஒரே இரவில் நடைபெறும் கதை மற்றும் த்ரில்லர் பின்னணியுடன் உருவாகும் திக். திக்.. திக்…, ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறது.


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இதர அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உள்ளிட்ட அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் JSK Film Corporation சார்பில் வெளியிடப்படும்.

Vikkals of Vikram' Returns to the Stage to Entertain Audiences Once Again

 'Vikkals of Vikram' Returns to the Stage to Entertain Audiences Once Again










After a brief hiatus, 'Vikkals of Vikram' is all set to return to the stage, making audiences laugh, think, and reflect.


Popular stand-up comedian and speaker Vikkals Vikram, known for bringing smiles to audiences while encouraging them to look at life's challenges from a fresh perspective, is returning to the stage with new material and renewed energy. Having recently completed his work as the lead actor in a feature film, he is now set to continue his successful stand-up comedy journey. An official announcement regarding his return has been released.


Through stand-up comedy, debates, discussions, and public speaking engagements, Vikkals Vikram has consistently addressed the everyday social issues faced by people from all walks of life. With his signature style of observational and satirical humor, he has entertained audiences while also inspiring them to think critically about the society around them.


Vikkals Vikram has recently played the lead role in "Light Weight Baby," directed by debut filmmaker K.C. Guru. Having successfully completed his commitments to the film, he is now making a comeback to the stage to perform stand-up comedy shows once again.


One of the unique aspects of his performances is the way he explores subjects such as love, family, relationships, cinema, sexuality, education, marriage, caste, and feminism. Through humor, he encourages audiences to reconsider many of the preconceived notions and social attitudes that continue to influence modern society.


His performances are not built around preaching or offering direct solutions. Instead, they are designed to spark thought and conversation, allowing audiences to arrive at their own conclusions about what is right and what is wrong. This blend of intelligence, self-reflection, and comedy has been a key reason behind the consistently strong audience turnout at his shows.


Having completed his role as a leading man in cinema, Vikkals Vikram is now focusing on the next phase of his journey through "Vikkals of Vikram." He is currently planning to take the show to several international destinations. An official announcement regarding these overseas performances will be made soon.


Stand-up comedy is not merely about making people laugh; it is also about inspiring fresh perspectives and positive change in the way people think. Through his continuous self-examination of society and his ability to present those observations with wit and humor, Vikkals Vikram has built a unique connection with audiences—one that continues to grow stronger with every performance.

மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த மேடையில் தோன்றும் 'விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்'

 *மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த மேடையில் தோன்றும் 'விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்'*










*ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் மேடையேறும் 'விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்'*


மேடை உலகில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை புன்னகை புரிய வைப்பதுடன் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பார்க்கலாமே..! என்ற எண்ணத்தை விதைக்கும் நவரச பேச்சு நாயகன் 'விக்கல்ஸ் ஆப் விக்ரம்' - திரைப்படத்தில் நாயகனாக நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்தவுடன்... மீண்டும் புதிய விசயங்களுடன் மேடை ஏறி, 'விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்' ஸ்டாண்ட் அப் காமெடியை நிகழ்ச்சியை தொடர்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 


பட்டிமன்றம்- பேச்சரங்கம்- கருத்தரங்கம்- என தமிழ் மொழியில்.. விளிம்பு நிலை மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள் வரை தினசரி சந்திக்கும் சமூகம் சார்ந்த சிக்கல்களை தனக்கே உரிய அவல நகைச்சுவை பாணியில் சரளமாக உரையாடி வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் விக்கல்ஸ் விக்ரம் இன்று வரை தனித்துவ பாணியை கடைப்பிடித்து வருகிறார். 


இவர் தற்போது அறிமுக இயக்குநர் கே. சி .குரு இயக்கத்தில் உருவான 'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பணிகளை முழுமையாக நிறைவு செய்தவுடன் மீண்டும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்த மேடைக்கு திரும்பி இருக்கிறார். 


இவருடைய ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் தனித்துவம் என்பது காதல்- குடும்பம்- உறவுகள்- சினிமா- பாலியல்- கல்வி- திருமணம் -சாதி- பெண்ணியம்- என இன்றைய சமூகத்தில் மக்களிடையே எதிர்மறையாக ஆக்கிரமித்து இருக்கும் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யும் வகையில் இவருடைய நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும். 


இவருடைய பேச்சில் அறிவுரை இருக்காது. பரிந்துரை இருக்காது. ஆனால் எது சரி எது தவறு என்பதை பார்வையாளர்களே யூகித்து முடிவெடுத்துக் கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமும், நகைச்சுவையும் இருக்கும். இதன் காரணமாகவே இவருடைய நிகழ்ச்சிகளுக்கு அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் வருகை தொடர்கிறது. 


திரைப்படத்தில் கதையின் நாயகனாக தன் பங்களிப்பை நிறைவு செய்திருக்கும் விக்கல்ஸ் விக்ரம்-  தற்போது தன்னுடைய அடுத்த திட்டமான 'விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்' நிகழ்ச்சியை பல சர்வதேச நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 


ஸ்டாண்ட் அப் காமெடி என்பது பார்வையாளர்கள் சிரிப்பதற்கு மட்டுமல்ல... நம்முடைய எண்ணங்களில் உற்சாகமான புத்தாக்கம் ஏற்பட வேண்டும் என்பதாக இருப்பதால்... இவருக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்கும். அத்துடன் இவர் இந்த சமூகத்துடனான தன்னுடைய எதிர்வினையை தொடர்ந்து சுய பரிசோதனை செய்து கொண்டு, அதனை  நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதால்.. இவரின் மேடை பேச்சை ரசித்து கொண்டே இருக்கலாம்.

Yen Ennai Edho Seidhai Movie Review

 Yen Ennai Edho Seidhai Tamil Movie Review

Yen Ennai Edho Seidhai Movie Rating:3.5/5

ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிற ஒரு அழகான romantic drama. படத்தோட பெயர் ‘Yen Ennai Edho Seidhai’



இந்த படத்தை எழுதி, இயக்கி, edit பண்ணி, produce பண்ணியிருக்கிறதோட, lead role-லயும் நடித்திருக்கிறது D. Anthony. இவருக்கு ஜோடியாக Madhumita Das நடித்திருக்காங்க. Jeeva Ravi உள்ளிட்ட பலரும் supporting characters-ல நடித்திருக்காங்க.


முதல்ல இந்த படத்தோட கதையைப் பற்றி ஒரு basic idea பார்த்துடலாம்.


ஒரு இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில உருவாகுற ஒரு relationship-ஐ மையமா வைத்து கதை நகருது. காதல் வந்ததும் எல்லாமே smooth-ஆ போயிடும் என்று இல்லாமல், வாழ்க்கை சூழ்நிலைகள், மனசுக்குள்ள இருக்குற குழப்பங்கள், சில misunderstandingsன்னு அந்த relationship பல விஷயங்களை கடந்து போகுது.


அந்த journey-ல அவங்க எடுக்குற முடிவுகள் எப்படி அவங்களையே மாற்றுது, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குற விதம் எப்படி மாறுது என்பதுதான் படத்தோட முக்கியமான விஷயம்.


இந்த படத்தோட biggest attraction என்னன்னு பார்த்தா, இது பெரிய twists அல்லது unnecessary drama-வை நம்பி போகல.


ரொம்ப simple-ஆ நம்ம வாழ்க்கையில நடக்குற feelings-ஐ மையமா வைத்து கதையை சொல்லியிருக்காங்க.


Love, expectations, longing, misunderstanding, emotional changesன்னு நம்ம எல்லாருக்குமே relate ஆகக்கூடிய விஷயங்கள்தான் கதைக்குள்ள இருக்கு.


அதனால இது ஒரு fast-paced commercial entertainer-ஆ இல்லாம, characters-ஓட emotions-ஐ கொஞ்சம் நிதானமா follow பண்ணுற மாதிரியான movie.


D. Anthony-ஓட performance-ஐ பொறுத்தவரைக்கும், அவரோட character-க்கு தேவையான emotional depth-ஐ நல்லா கொண்டு வந்திருக்காரு.


கதையின் பல moments-ல அவரோட reactions மூலமாவே character என்ன feel பண்றாருன்னு புரிஞ்சுக்க முடிகிறது.


Madhumita Das இந்த படத்துல ரொம்ப natural-ஆ இருக்காங்க.


அவங்களோட character-ல ஒரு warmth இருக்கு. குறிப்பா emotional scenes-ல overdo பண்ணாம subtle-ஆ expressions கொடுத்திருக்காங்க. Lead pair-க்கு இடையில இருக்குற chemistry-ம் கதையோட emotional flow-க்கு நல்ல support-ஆ இருக்கு.


Jeeva Ravi உள்ளிட்ட supporting actors-ம் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட roles-ஐ neat-ஆ handle பண்ணியிருக்காங்க. Main characters-ஐச் சுற்றி நடக்குற emotional journey-க்கு அவங்க portions நல்லா support பண்ணுது.


இப்போ music பற்றி சொல்லணும்னா, இந்த படத்துக்கு music மற்றும் background score ஒரு முக்கியமான plus.


Romantic scenes-ஆ இருந்தாலும், emotional moments-ஆ இருந்தாலும், அந்த particular situation-க்கு ஏத்த மாதிரி music பயன்படுத்தியிருக்காங்க.


சில நேரங்கள்ல dialogue-ஐ விட background score தான் அந்த scene-ோட feeling-ஐ நமக்கு இன்னும் strong-ஆ கொண்டு போகுது.


அதனால music பிடிக்கிற audience-க்கு இந்த படம் நல்லா connect ஆகும்.


Cinematography-யும் pleasant-ஆ இருக்கு.


Frames clean-ஆவும் visually attractive-ஆவும் இருக்குது. Lead characters-ஓட emotional moments-ஐ அழகான visuals மூலமா capture பண்ணியிருக்காங்க.


குறிப்பா calm-ஆன scenes மற்றும் romantic portions-ல visuals ஒரு soft feel கொடுக்குது.


இந்த படத்தோட storytelling-ஐப் பொறுத்தவரைக்கும், director ஒரு simple route-ஐ choose பண்ணியிருக்காரு.


பெரிய பெரிய twists-ஐ தொடர்ந்து கொடுக்காம, characters என்ன feel பண்றாங்க, அவங்களோட relationship எப்படி change ஆகுது என்பதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.


அதனால படம் ஒரு calm mood-ல travel ஆகுது.


இந்த மாதிரி emotional romantic dramas-ஐ ரசிக்கிறவங்களுக்கு இந்த approach நல்லா work ஆகும். குறிப்பா ஒரு relationship-ல affection மட்டும் இல்லாம, understanding மற்றும் personal growth எவ்வளவு முக்கியம்னு படம் பேசுது.


கதையின் நடுப்பகுதியில் கூட characters-ஐ இன்னும் நெருக்கமா understand பண்ணிக்கிறதுக்கு நேரம் கொடுத்திருக்காங்க.


அதனால அந்த portions-ஐ ஒரு fast-moving plot-ஆ பார்க்காம, அந்த relationship-ஐ slowly experience பண்ணுற மாதிரி எடுத்துக்கிட்டா இன்னும் நல்லா connect ஆகும்.


இன்னொரு விஷயம் என்னன்னா, இது predictable twists-ஐ வைத்து audience-ஐ surprise பண்ண முயற்சி செய்யுற படம் கிடையாது.


இதோட strength வேற இடத்துல இருக்கு.


ஒரு சாதாரண relationship-ல ஏற்படுற feelings-ஐ screen-ல கொண்டு வர்றதுதான் இதோட focus.


அதனால simple romance, emotional conversations, music மற்றும் characters-ஓட journey-ஐ ரசிக்கிற audience-க்கு இது நல்ல choice-ஆ இருக்கும்.


படத்தோட runtime மற்றும் overall presentation-ம் ஒரு comfortable viewing experience கொடுக்குற மாதிரி இருக்கு.


Early audience reactions-லயும் lead performances, especially Madhumita Das-ஓட natural performance மற்றும் lead pair chemistry பற்றி positive-ஆ பேசப்பட்டிருக்கு. Music மற்றும் visuals-க்கும் நல்ல appreciation கிடைச்சிருக்கு.


அதனால் இது ஒரு பெரிய commercial spectacle-ஐ எதிர்பார்க்காம, ஒரு sincere love story-யை experience பண்ணணும்னு நினைக்கிறவங்களுக்கு சரியான movie-ஆ இருக்கலாம்.


மொத்தத்துல…


‘Yen Ennai Edho Seidhai’ ஒரு பெரிய cinematic twists நிறைந்த காதல் படம் கிடையாது. அதுக்கு பதிலா, இரண்டு மனிதர்களோட relationship-ஐ அவர்களோட emotions மற்றும் life situations மூலமா சொல்லியிருக்கிற ஒரு simple romantic drama.


D. Anthony-ஓட sincere performance, Madhumita Das-ஓட natural acting, இருவருக்கும் இடையில இருக்குற chemistry, soulful music மற்றும் அழகான visuals எல்லாமே படத்துக்கு ஒரு pleasant feel கொடுக்குது.


குறிப்பா அமைதியான காதல் கதைகள், emotional moments, melody மற்றும் character-based storytelling பிடிக்கிறவங்களுக்கு இந்த படம் நல்லா connect ஆகும்.


Fast-ஆ போகுற commercial entertainer எதிர்பார்க்காம, கொஞ்சம் relaxed-ஆ உட்கார்ந்து ஒரு relationship-ஐ experience பண்ணுற மாதிரி படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இந்த movie-ஐ try பண்ணலாம்.


சில காதல் கதைகள் பெரிய சம்பவங்களால நம்ம மனசுல நிற்கும். சில கதைகள் ரொம்ப சின்ன சின்ன உணர்வுகளால நம்மள touch பண்ணும்.


‘Yen Ennai Edho Seidhai’ அந்த second category-க்கு சேர்ந்த ஒரு soft-ஆன romantic experience.


So, love stories-ல emotions-க்கு முக்கியத்துவம் கொடுக்கிறவங்களுக்கு இந்த படம் ஒரு நல்ல feel கொடுக்க வாய்ப்பு இருக்கு.


‘Yen Ennai Edho Seidhai’ – காதல் எப்பவும் பெரிய வார்த்தைகள்ல இருக்காது… சில நேரம் ஒரு சின்ன உணர்வே முழு கதையையும் சொல்லிடும்!

கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!*

*‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!*










வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.


இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.



இந்நிகழ்வினில் இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம். இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி, படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் தொடங்கி, ஒரு ஆண்டுக்குள் வெளியாகி, 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விஷயம். இந்த வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்பெல்லாம் 100, 175, 200 நாட்கள் ஓடிய படங்களின் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பார்ப்பது வழக்கம். காலப்போக்கில் திரையரங்கு வெளியீட்டு முறைகளும், ரசிகர்கள் படம் பார்க்கும் தளங்களும் மாறிவிட்ட நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது,”


மேலும், “இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடி, அவர்களுக்கு சீல்டு வழங்குவது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். எனது உதவி இயக்குநர் காலத்தில் ஒரு படத்தின் வெற்றிக்காக எனக்குக் கிடைத்த நினைவுப் பரிசை புகைப்படத்துடன் சேர்த்து வீட்டில் வைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக நான் உருவாக்கிய படம் 50 நாட்கள் ஓடி, மீண்டும் ஒரு வெற்றிக்கான நினைவுப் பரிசைப் பெறுவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சீல்டை எனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அந்த பழைய நினைவுப் பரிசுக்கு அருகில் வைக்கப் போகிறேன். அதனால்தான் இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது,”


“இந்தப் படத்தின் மீது ஆரம்பம் முதலே விஷ்ணு விஷால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். கதை எழுதுவதிலிருந்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வது, படப்பிடிப்பு, தயாரிப்பு, வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தீவிரமாக செயல்பட்டார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்தார். இந்தப் படம் இன்று பெற்றுள்ள வெற்றியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அவருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ‘கட்டா குஸ்தி’ ஒரு பிராண்டாக உருவாக முக்கியமான அடையாளமாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்களிப்பும் மிகப்பெரியது,” இப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.




தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்று சிறப்பாக நடத்துகிறோம். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கௌரவிக்கும் வகையில் சீல்டு வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு சீல்டுகளை வழங்குவதற்காக வந்துள்ள அருமை சகோதரர் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை வந்த பத்மஸ்ரீ பிரபுதேவா அவர்கள், ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். எங்களது நட்பின் காரணமாக அவர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது,” என்றார்.


“இந்தப் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், இந்தப் படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மிகக் கடினமாக உழைத்தார். தயாரிப்பிலிருந்து படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் வரை அனைத்திலும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றியாகக் கருதப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. முன்பெல்லாம் 100 நாள், 175 நாள், 200 நாள் என திரைப்படங்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள். தற்போது அதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில், இந்த 50வது நாள் விழாவை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன்; அதேபோல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார்.


“இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குநர் செல்லா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தின் தொடக்கத்திலேயே அவர் உருவாக்கிய புரோமோ பெரிய வரவேற்பைப் பெற்றது; அப்போதே இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறோம்; அடுத்தடுத்த மாதங்களில் எங்களது புதிய படங்களும் வெளியாக உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. படத்தின் கிளைமாக்ஸை சிறப்பாக்கியவர், இந்த 50வது நாள் விழாவிலும் கலந்து கொண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.



விஷ்ணு விஷால் பேசுகையில், “அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, நமது ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு கிடைத்திருப்பது சந்தோஷம். இந்த வெற்றிக்கு உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் எனது நன்றியைத் தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான சக்தி. அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. படத்திற்கு மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த விழாவில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி. 15 நிமிட சிறப்புத் தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன். காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும், என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.


“இந்தப் படத்தின் உயிர்நாடியாக இருந்த ஜாராவை ரசிகர்கள் திரையரங்குகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அவரும் இந்த வெற்றியின் முக்கியமான பகுதியாக இருக்கிறார். இந்த வெற்றியைக் கொண்டாட அனைவரும் ஒன்றாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐசரி கணேஷ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வெற்றியை 50வது நாளில் கொண்டாடுவோம் என்று நான் அவரிடம் உறுதியளித்திருந்தேன். தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக எடுக்கும் முயற்சிக்கும் நன்றி. சினிமாவில் வெற்றி கிடைப்பது எளிதான விஷயம் அல்ல; அது அரிதாகக் கிடைக்கும் ஒன்று. அப்படி ஒரு வெற்றி கிடைக்கும்போது அதை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஐசரி சாருக்கு மீண்டும் நன்றி. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்த ராஜ்மோகன் சாருக்கும் நன்றி. அதேபோல், பிரபுதேவா சார் சிறுவயதில் இருந்தே எனது மனதின் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர். ‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு காலத்தில் நடனக் கலைஞராக வேண்டும் என்பதே எனது ஆசை. கால் காயம் காரணமாக அந்தப் பயணத்தைத் தொடர முடியவில்லை என்றாலும், பிரபுதேவா சார் எனது சிறுவயது முன்னுதாரணமாக இருந்தார். அவரது பாடல்களையும் நடனங்களையும் பின்பற்றி வளர்ந்தவன்  நான், இன்று அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி,”.


“செல்லா எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான இயக்குநர். எனது திரைப்பயணத்தில் ஒரு இயக்குநருடன் நீண்ட பயணம் அமைந்தது என்றால் அது செல்லாவுடன்தான். அவரது வளர்ச்சி மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்து வருகிறது. அவர் இன்னும் நீண்ட காலம் இதேபோன்று சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இயக்குநர்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கிறார்கள். நல்ல குடும்பப் படங்களை தொடர்ந்து கொடுங்கள். ‘கட்டா குஸ்தி 3’ படத்தையும் விரைவில் உருவாக்கலாம். வேல்ஸ் நிறுவனம் சார்பில் தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுக்கும் குஷ்மிதாவுக்கும் எனது நன்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி,” என்றார்.




தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இன்று ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் எங்களது சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பிரபுதேவா சாரும் கலந்து கொண்டுள்ளார். ஒரு படம் வெளியாகி முதல் வாரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது ஒரு விஷயம். ஆனால், அந்தப் படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடுவது மிகவும் சிறப்பான விஷயம். திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, ஜூலை 31-ஆம் தேதி ஓடிடியிலும் வெளியான இப்படம் இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து டிரெண்டாகி வருவது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.


“இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஒரு வெற்றிப் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் வழங்கப்படும் இந்த விருது வெறும் நினைவுப் பரிசு மட்டுமல்ல; படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் பெருமையையும் அங்கீகாரத்தையும் அளிக்கும் ஒரு தருணமாகும். வெற்றி விழா நடைபெற்ற நாளிலேயே, படத்தில் பங்காற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று என் தந்தை முடிவு செய்திருந்தார். அந்த எண்ணம் இன்று இந்த விழாவின் மூலம் நிறைவேறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.


“‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இந்த வெற்றியின் பின்னால் இருக்கிறது. இன்று வழங்கப்படும் இந்த அங்கீகாரம் உங்களுக்குப் பெருமையான தருணமாக அமையும் என்று நம்புகிறோம். இது ஒரு வெற்றியின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், இனிவரும் பல வெற்றிகளுக்கான அழகான தொடக்கமாகவும் அமைய வேண்டும். அனைவருக்கும் நன்றி, வணக்கம்,” என்றார்.



நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு வெற்றி விழாவில் கலந்து கொள்கிறேன். விஷ்ணு விஷால், செல்லா அய்யாவு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். முதல் பாகம் வெற்றி பெற்ற பிறகு, அதை விட சிறப்பாக இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆவல் எனக்கு இருந்தது. இந்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இன்று படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்தக் காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுவது என்பது மிகவும் அரிதான விஷயம்,” என்றார்.


“ஐசரி கணேஷ் சாருக்கு ஒரு மிடாஸ் டச் இருக்கிறது; அவர் தொடும் விஷயங்கள் எல்லாம் வெற்றியாக மாறுகின்றன. அந்த அதிர்ஷ்டம் இந்தப் படத்திற்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படக்குழுவின் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் ரசித்தேன். செல்லா அய்யாவுவின் எழுத்தில் இயல்பாகவே நகைச்சுவை கலந்த ஒரு தனித்தன்மை இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது. படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ‘கட்டா குஸ்தி 3’ படத்திலும் விரைவில் சந்திப்போம்,” என்றார்.


நடிகர் பிரபுதேவா பேசுகையில், “அனைவருக்கும் எனது வணக்கம். அமைச்சர் அவர்களுக்கும், என் அண்ணன் போன்ற ஐசரி கணேஷ் சாருக்கும், விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு, குஷ்மிதா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தபோது கணேஷ் சார் என்னை அழைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறினார். எந்த நேரமாக இருந்தாலும் அவரது அழைப்புக்காக வந்துவிடுவேன் என்று சொன்னேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு அண்ணன்-தம்பி போன்ற உறவு இருக்கிறது. விஷ்ணு விஷாலின் நலனில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். இந்தப் படத்திற்கு மட்டுமல்லாமல், தனது ஒவ்வொரு படத்திற்கும் அவர் இதே உழைப்பையும், 200 சதவீத அர்ப்பணிப்பையும் கொடுத்து வருகிறார். அவர் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அவரது மனைவி ஜ்வாலா கட்டாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் உலகத் தரம் வாய்ந்த பேட்மிண்டன் வீராங்கனை,” என்றார்.


“இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி, அதையும் வெற்றிப் படமாக மாற்றுவது மிகவும் கடினமான விஷயம். அந்த சவாலை இயக்குநர் செல்லா அய்யாவு சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. ரம்யா கிருஷ்ணன் மேடம் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் எனது வாழ்த்துகள். ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும்,”.


“குஷ்மிதாவை சிறு வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். இன்று அவர் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்று அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த நிறுவனத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பது எனது வாழ்த்து. நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற வெற்றி விழாவிலும், கலைஞர்களுக்கு சீல்டு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக ஒரு முக்கியமான இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, படத்தின் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு. என்னை அழைத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.


அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம். தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவருடன் பணியாற்றியபோது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் அமைதியாக இருப்பார். ஆனால், கேமரா முன்பு நின்றுவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார். இடைவேளையின்போது கூட செல்போனை பயன்படுத்தாமல், புத்தகம் படிப்பது, செஸ் விளையாடுவது என தனது நேரத்தைப் பயன்படுத்துவார். அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு பாடமாகும். வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவருக்கு வழங்கப்படும் இந்த கௌரவம், அவர்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.


“எங்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்ணன் ஒரு உண்மையான சினிமா காதலர். அவருக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். யாராவது உதவி கேட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனம் கொண்டவர். சினிமா மற்றும் கல்வித் துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார். ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு ஐந்து நாட்கள், ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம். இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை. தனது நடிப்புக்கு இணையாக சக நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதை நான் பாராட்டுகிறேன். படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும், குறிப்பாக விளம்பரப் பணிகளிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அபாரமானது.


“ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இவ்வளவு திறமையான கலைஞர்கள் மத்தியில் அவர் காட்டிய தன்னம்பிக்கையும் நடிப்பும் பாராட்டுக்குரியது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அதேபோல், திரையில் தெரியாத தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை, மல்யுத்தக் காட்சிகளை சிறப்பாக உருவாக்கிய ஸ்டண்ட் குழு, அதை தத்ரூபமாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர், சிறப்பாக வடிவமைத்த எடிட்டர் என ஒவ்வொருவரின் உழைப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளது. அந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று நினைத்து இந்த விழாவை நடத்தும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் என் வாழ்த்துகள். என் அண்ணன் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி" என்றார்.



நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக அமைத்து, இந்த மகிழ்ச்சியான தருணத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. விஷ்ணு விஷால் எனக்கு ஒரு அற்புதமான சக நடிகர். படம் வெளியான பிறகு, அவரை ஒரு தயாரிப்பாளராகவும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், சிறுவயதில் இருந்தே பாடல்கள் மூலம் பார்த்து ரசித்த பிரபுதேவா சாருக்கும் எனது நன்றி. நடனமாட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நடனக் கலைஞர்களின் திறமையை எப்போதும் வியப்புடன் ரசிப்பேன். இந்த விழாவில் பிரபுதேவா சார் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானது,”.


“செல்லா சார், ‘கட்டா குஸ்தி’ படத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் எத்தனை படங்களில் நடித்தாலும், கீர்த்தி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், அந்தக் கதாபாத்திரம் மூலம் மக்களிடம் நான் பெற்ற அன்பும் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் நான் பணியாற்றிய மிகவும் அன்பான இயக்குநர்களில் ஒருவர். குஷ்மிதா, நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். தயாரிப்புத் தரப்பில் ஒரு பெண்ணாக எனக்கு நல்ல நண்பராகவும் ஆதரவாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சிறப்பான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்; நாம் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படத்தின் வெற்றிக்காக 100 சதவீதம் உழைத்த எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் உங்கள் பணியை சிறப்பாகச் செய்ததால்தான் இன்று இந்த 50வது நாள் கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம்.


“என்னை அழகாகத் திரையில் காட்டியவர்கள், கீர்த்தி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியவர்கள், சண்டைக் காட்சிகளை அற்புதமாக அமைத்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. ரூச்சி, ஸ்ரவந்தி, பரத், பாஸ்கர் சார், என் அன்புக்குரிய ஜாரா மற்றும் மீனு மிஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. 


நடிகை மோக்ஷா  பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். தமிழ் மக்களின் அன்புக்கும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும்தான் ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றியுள்ளது. இனியும் இதேபோன்ற ஆதரவு எனக்குத் தேவை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு, இன்று வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான படத்தில் இடம்பெற்றிருப்பது இன்னும் கனவு போலவே இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஐசரி கணேஷ் சார், விஷ்ணு விஷால் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி,” என்றார்.


“‘மீனாட்சி’ கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநர் செல்லா சாருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது இன்னும் நம்ப முடியவில்லை. தற்போது என்னைப் பார்க்கும் பலரும் ‘மீனாட்சி’ என்றே அழைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பிற மொழி ரசிகர்களும் அந்தக் கதாபாத்திரத்தை அடையாளப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் உண்மையில் மீனாட்சி போல நீண்ட தலைமுடியுடன் இருப்பவள் அல்ல; நான் மோக்ஷா என்பதை மக்களுக்கு நம்ப வைப்பதே இப்போது சற்று சவாலாக இருக்கிறது. அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், இயக்குநர் என் மீது வைத்த நம்பிக்கையே,‘மீனாட்சி’ கதாபாத்திரம் தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்கியுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், நான் விரும்பும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான பிரபுதேவா சாருக்கும் நன்றி. வேல்ஸ் குடும்பம், ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் என அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்,” என்றார்.


குழந்தை நட்சத்திரம் ஜாரா பேசுகையில்..,

“இந்த சீல்டைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னைத் தேர்வு செய்த எனது பெற்றோர், இயக்குநர், தயாரிப்பாளர், விஷ்ணு விஷால் சார் மற்றும் ஐஸ்வர்யா மேம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னை அன்பாகவும், வசதியாகவும் உணர வைத்த எனது சக நடிகைகளான மோக்ஷா மேம், ஐஸ்வர்யா மேம் மற்றும் ரித்தி மேம் ஆகியோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பையும் அன்பையும் அளித்த அனைவருக்கும் என் நன்றி,” என்றார்.



நடிகர் யோகி பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செல்லா அய்யாவுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அந்தப் படத்தில் எனக்கு முழு நீளக் கதாபாத்திரம் கொடுத்தவர், இந்தப் படத்தில் சிறிய பகுதியாக இருந்தாலும் முக்கியமான ஒரு இடத்தில் என்னை பயன்படுத்தியிருக்கிறார். ‘கட்டா குஸ்தி’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், மூன்றாம் பாகத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இறுதியில் அந்த வசனத்தை வைத்தது செல்லா சாரின் திட்டம்தான். அதற்காக அவருக்கு எனது நன்றி,”.


“50வது நாள் வெற்றியைக் கொண்டாடுவது தற்போது மிகவும் அரிதாகிவிட்டது. இந்தப் படத்திற்காக 50வது நாள் விழாவை நடத்தி, கலைஞர்களைக் கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் 100வது நாள் விழாவையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வெற்றிப் படங்களுக்காக இதுபோன்ற விழாக்களை நடத்தி கலைஞர்களை அழைத்துக் கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கும். படப்பிடிப்பிலிருந்து நேரம் ஒதுக்கி இதுபோன்ற வெற்றி விழாக்களுக்கு வருவதும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிதான். அமைச்சர் ராஜ்மோகன், பிரபுதேவா மாஸ்டர், ஐசரி கணேஷ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி,” என்றார்.


முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ள இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம், படக்குழுவினரின் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Kamal Haasan – S.U. Arun Kumar Collaboration Creates Buzz; Look Test Goes Viral

 Kamal Haasan – S.U. Arun Kumar Collaboration Creates Buzz; Look Test Goes Viral



Kamal Haasan is once again at the centre of a wave of excitement, as his look from his upcoming film has taken social media by storm.


With Kamal Haasan headlining the project, the look test for the film was conducted yesterday, and glimpses from the test have already gone viral, creating immense curiosity and anticipation among fans and film audiences. Kamal Haasan’s striking new appearance has become a talking point across social media, with fans eagerly awaiting more details about the project.


The film marks the first collaboration between Kamal Haasan and filmmaker S. U. Arun Kumar, making the combination all the more intriguing. Known for constantly reinventing himself and embracing distinctive characters, Kamal Haasan’s latest look has once again sparked widespread interest, offering audiences a glimpse into the world being created for the film while keeping its larger narrative firmly under wraps.


The much-awaited project is jointly produced by RaajKamal Films International (RKFI) and Turmeric Media, bringing together two prominent production houses for this highly anticipated collaboration. With Kamal Haasan leading the project and S.U. Arun Kumar at the helm, the film has already generated considerable buzz even before commencing production.


Following the successful completion of the look test, the film is expected to commence shooting soon. Further details about the project will be officially revealed at a later stage.