Featured post

கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை

 *‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!* எங்கள் திரைப்படம் முழுக்க முழுக்க க...

Friday, 6 February 2026

கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை

 *‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!*



எங்கள் திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை அடிப்படையில் காவல் துறையை மையப்படுத்திய கதை. இதில் பயன்படுத்தப்படும் ’பண்டட்’ என்ற சொல் ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு வழக்கத்தில் உள்ள பெயர் மட்டுமே. இந்தக் கதை முழுவதுமே தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் மற்றும் அவர் எடுக்கும் தேர்வுகளை மையமாகக் கொண்டது. எந்தவொரு சாதியையோ, மதத்தையோ அல்லது சமூகத்தையோ பிரதிபலிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இந்தக் கதை உருவாக்கப்படவில்லை.


ஒரு கதை சொல்லியாக மிகுந்த பொறுப்புணர்வோடு என்னுடைய கதைகளை அணுகுகிறேன். என் படங்களின் மூலம் நான் சொல்லும் கதைகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் விதமாகவும் அவர்களை மரியாதையோடு நடத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.  இதற்கு முன்பு நான் இயக்கிய மற்ற படங்களைப் போலவே, இந்தத் திரைப்படமும் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் திரைப்படத்தின் தலைப்பு சிலரை காயப்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்கும்போது கதையின் சூழலை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால், படத்தின் கிளிம்ப்ஸ் வைத்து மட்டுமே கதை தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது. இதன் பொருட்டும், பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இதுவரை படத்திற்கென செய்த புரோமோஷனல் மெட்டீரியல்ஸ் அனைத்தையும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தை முழுமையாக பார்த்து பார்வையாளர்கள் நிச்சயம் கதையை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

Official Statement from Neeraj Pandey on Ghooskhor Pandat

 *Official Statement from Neeraj Pandey on Ghooskhor Pandat*

Our film is a fictional cop drama, and the term “Pandat” is used simply as a colloquial name for a fictional character. 



The story focuses on an individual’s actions and choices and does not comment on or represent any caste, religion, or community. As a filmmaker, I approach my work with a deep sense of responsibility - to tell stories that are thoughtful and respectful. 

This film, like my earlier work, has been created with sincere intent and solely to entertain audiences. We understand that the title of the film has caused hurt to some viewers, and we genuinely acknowledge those feelings. In light of these concerns, we have decided to take down all promotional materials for the time being, as we believe the film should be experienced in its entirety and understood in the context of the story we intended to tell, rather than judged on partial glimpses. I look forward to sharing the film with audiences soon.

தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதுபெற்ற கவிஞர் தாமரை*

 *‘தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர்  விருதுபெற்ற கவிஞர் தாமரை* 






*‘தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்கு தமிழக அரசின் 2 விருதுகள்” ; உற்சாகத்தில் படக்குழுவினர்*


*தமிழக அரசின் 2 விருதுகளைப் பெற்ற ‘தாய்நிலம்’ படம் கோடை வெளியீட்டிற்குத்  தயாராகிறது* 


நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்நிலம்’. இப்படத்தை அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் திரு அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் இவர் இசையமைக்கும் முதல் படம் இது.


அப்பா, மகள் பாசப் பின்னணியில் இலங்கைப் போரின் கோர தாண்டவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி, வர்ஷா ரஞ்சித் பாடியுள்ள ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடல் ஈழத் தமிழ் மக்களின் இழப்புகளையும் வலியையும் அனாதையாகத் தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் பற்றி கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது.


‘தாய்நிலம் திரைப்படம்’ மாஸ்கோ, டோராண்டோ, ஸ்வீடன், பெங்களூரு இன்டர்நேஷனல், உட்பட 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டது. அதில் சிறந்த திரைப்படம், சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு உட்பட ஒன்பது விருதுகளை பெற்றது. 

 

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திரைப்பட விருதுகளில் 2020 ஆம் ஆண்டிற்கான விருதுகள் பட்டியலில் இந்த ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடலை எழுதியதற்காக கவிஞர் தாமரைக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும், இந்தப் பாடலை பாடிய வர்ஷா ரஞ்சித்துக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது ‘தாய்நிலம்’ படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இந்தப் பாடலுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது குறித்து 'தாய் நிலம்' படத்தின் இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் கூறும்போது, 


“அகதிகளாகப் புலம்பெயரும் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த ‘தாய்நிலம்’ படம் உருவாகியுள்ளது. அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், கிளைமாக்ஸுக்கு முன்னதாக ஒரு அழுத்தமான பாடல் மூலம் காட்சிகளை நகர்த்த வேண்டிய தேவை இருந்தது.


இதற்காக கவிஞர் தாமரை அவர்களிடம் பாடல் எழுதித்தருமாறு கேட்டுக் கொண்டபோது முதலில் சிறிய படம் என்று அவர் தயங்கினார். பின்னர் கதையை கேட்டதுமே ‘ஆகாயம் மேலே’ என்கிற இந்த அருமையான பாடலை எழுதிக் கொடுத்தார். இந்தப் பாடலை பாடியதன் மூலம் தான் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் மலையாள திரை உலகத்தைச் சேர்ந்த வர்ஷா ரஞ்சித். அவர் அறிமுகமான இந்த முதல் படத்திலேயே அவருக்கும் சிறந்த பாடகிக்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


‘தாய்நிலம்’ படத்தின் பாடல்களை சரிகம நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த பாடலுக்கு விருதுகள் கிடைத்துள்ளதைத்  தொடர்ந்து யூட்யூப் தளத்தில் பாடலைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அது மட்டுமல்ல, இந்த விருதுகள் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து சில விநியோகஸ்தர்கள் ‘தாய்நிலம்’ படத்தை வெளியிடும் எண்ணத்துடன் எங்களை அணுகி பேசி வருகிறார்கள். கோடை விடுமுறையில் வெளியிடும் விதமாக விரைவில் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.


திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்.13-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கிறார்.

Pallichattambi’ Wraps Up; Set for Theatrical Release on April 9*

 ‘Pallichattambi’ Wraps Up; Set for Theatrical Release on April 9*



The shooting of Pallichattambi, directed by Dijo Jose Antony with Tovino Thomas in the lead role, has been completed. Director Dijo announced the wrap-up of the film through his Instagram page.


Dijo Jose Antony made his directorial debut in 2018 with Queen, followed by the Blockbuster Jana Gana Mana. He later directed Malayalee From India. Known for blending strong social themes with engaging mainstream storytelling, Dijo has carved a distinct space for himself in contemporary Malayalam cinema. Pallichattambi is the biggest film of Dijo’s career so far and also marks his first-ever period film, showcasing his ambition to explore new genres and cinematic scales.


Screenwriter S. Suresh Babu, whose talent was widely recognized with just one film-Mohanlal’s Shikkar-has penned the script for Pallichattambi. His rich cinematic journey includes writing scripts for superstars like Mohanlal, Mammootty, and Jayaram, as well as new-generation actors such as Shine Tom Chacko, Soubin Shahir, and Vinayakan.


Music for the film is composed by Jakes Bejoy, who has consistently delivered hit films and chart-topping songs. Audiences are eagerly expecting another successful album from Jakes Bejoy through Pallichattambi.

Set in the 1950s-60s,


Pallichattambi is a period film where costume design plays a crucial role. The costumes are designed by Manjusha Radhakrishnan, a recipient of the Kerala State Film Award.

The film is edited by Sreejith Sarang, known for editing acclaimed films across multiple languages, while cinematography is handled by Tijo Tomy.


Pallichattambi is slated for a worldwide theatrical release on April 9. The film is produced by Noufal and Brijesh under the banner of Worldwide Films, along with Chanakya Chaitanya Charan under C Qube Bros Entertainment. Tovino Thomas will be seen in a never-before-seen look in the film, which will be released in five languages, including Malayalam.

பள்ளிச்சட்டம்பி' (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

 *'பள்ளிச்சட்டம்பி' (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது*



இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி  ( Dijo Jose Antony)  இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் 'குயின் - (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான 'ஜன கன மன' ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு 'மலையாளி ஃபிரம் இந்தியா' ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ - சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். பள்ளிச்சட்டம்பி அவரது திரைப்பயணத்தில்  முக்கியமான படமாக அமைகிறது.மேலும் இது அவரது இயக்கத்தில் வெளியாகும் முதல் பீரியாட்டிக் ஃபிலிம் என்பதால்.புதிய வகைகளையும், சினிமாவின் பரிமாணங்களை ஆராய வேண்டும் என்ற அவரது இலக்கையும் பிரதிபலிக்கிறது.


மோகன்லால் நடிப்பில் வெளியான 'ஷிகார் '( Shikkar) எனும் ஒரே படத்தின் மூலம் தனது திறமைக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற திரைக்கதை ஆசிரியர் எஸ். சுரேஷ் பாபு - 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவருடைய செழுமை மிக்க சினிமா பயணத்தில் மோகன்லால் - மம்மூட்டி - ஜெயராம் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கும், ஷைன் டாம் சாக்கோ ( Shine Tom Chacko) சௌபின் ஷாஹிர் ( Soubin Shahir) மற்றும் விநாயகன் போன்ற புதிய தலைமுறை நடிகர்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.


தொடர்ந்து வெற்றி படங்களையும் , இசை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் பாடல்களையும் வழங்கி வரும் ஜேக்ஸ் பிஜாய் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1950 - 60 கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் மூலம் ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) இடமிருந்து மற்றொரு வெற்றிகரமான இசை ஆல்பத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


'பள்ளிச்சட்டம்பி' ஒரு பீரியட் சினிமா என்பதால் ஆடை வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரள மாநில அரசின் விருது பெற்ற மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். பல மொழிகளில் படங்களை தொகுத்த அனுபவம் கொண்ட ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி கையாண்டுள்ளார்.


'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் (Worldwide Films)  நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh )ஆகியோருடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் (C Qube Bros Entertainment)  சார்பில் தயாரிப்பாளர் சானுக்யா - சைதன்யா சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள் டொவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றாத வகையில் புதிய தோற்றத்தில் காணப்படுவார். இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.


An honor that crossed the seas to find sanitation worker Padma

 *An honor that crossed the seas to find sanitation worker Padma*









*Malaysia’s Deputy Minister of Law honoured sanitation worker Padma by presenting a gold ring*


Padma hails from Pillaiyar Koil Street, Triplicane, Chennai. A sanitation worker, she was engaged in cleaning work at T. Nagar on January 11 when she found an unattended bag containing 45 sovereigns of gold jewellery on the roadside. She immediately handed it over to the Pondy Bazaar Police Station. The jewellery was later safely returned to its rightful owner.


Following this beautiful gesture, Padma started winning appreciations and was extolled with praises beyond the boundaries of Tamil Nadu. Honourable TN Chief Minister M.K. Stalin appreciating her honesty, congratulated and gifted sum of One Lakh Rupees. 


Superstar Rajinikanth invited Padma to her residence, appreciated her good gesture, and gifted a gold chain. 


In this context, recognition for sanitation worker Padma’s honesty has now crossed the seas to find her. Yes, after learning about Padma’s sincere and honest act, Malaysia’s Minister of Law, Mr. M. Kulasekaran, sent his assistant officer, Vadivukarasi, to Chennai. Through her, he honoured Padma by presenting and adorning her with a gold ring.


Officer Vadivukarasi directly visit the work place of Padma and gifted her the gold ring. During this occasion, Malaysia’s Minister of Law, Mr. M. Kulasekaran interacted with Padma through video call and congratulated her for showcasing pure honesty.

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் "நீலகண்டா"*

 *நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் "நீலகண்டா"*









*அதிரடி ஆக்ஷன் கதையில் மிரட்டும் மகேந்திரன்*


*மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரமாண்ட திரைப்படம் நீலகண்டா*


*இரண்டு மொழிகளில் வெளியாகும் மகேந்திரனின் "நீலகண்டா"*


தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, "மாஸ்டர் மகேந்திரன்" என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார்.


இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் "நீலகண்டா" திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.


நீலகண்டா திரைப்படத்தை M ஸ்ரீனிவாசுலு மற்றும் D வேணுகோபா் சார்பில் எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பும், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் மேற்கொண்டுள்ளார். நீலகண்டா திரைப்படத்திற்கு மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.


இந்தப் படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு மற்றும் சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்தப் படம் கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை மற்றும் அவனது வாழ்க்கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்ட அதிரடி ஆக்ஷன் ஜானரில் சொல்லும் கதையம்சம் கொண்டிருக்கிறது.


நடிகர் மகேந்திரனின் திரைப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Wednesday, 4 February 2026

மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி அறிமுக விழா!!

 ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி அறிமுக விழா!!






கலைமாமணி மதுரை R. முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை–நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது.


இந்த மேடை நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று ஒரு அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…


உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.

நன்றி.



தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…


முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின்  நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தாயன்பன் பேசியதாவது…

இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன்.

நன்றி.


மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…


இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…


முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

நன்றி.


‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது. மருது சகோதரர்களாக  கலைமாமணி மதுரை R. முரளிதரன், சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக மதுரை R. முரளிதரன் அவர்களின் மகள் காவ்யா நடிக்கின்றார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

With Love Movie Review

With Love Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம with love படத்தோட review அ தான் பாக்க போறோம். Abishan Jeevinth , anaswara rajan lead role ல நடிச்சிருக்காங்க. tourist family படத்தோட இயக்குனர் தான் இந்த படத்துல hero வா அறிமுகம் ஆயிருக்காரு. இந்த படத்தை இயக்கி இருக்கிறது மதன். இவரு இயக்குற முதல் படம் இது தான். இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்புறம்  எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் company யும் சேந்து produce பண்ணிருக்காங்க. இது ஒரு romantic drama movie . இந்த படத்தை premiere show ல பாத்த பல celebraties , கதையை பாராட்டி அவங்களோட social  media ல share  பண்ணிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

satya வா நடிச்சிருக்க abhishan jeevinth க்கு arrange marriage மேல சுத்தமா interest ஏ கிடையாது. அதுனால இவரோட sister ஒரு blind date ஏ ஏற்பாடு பண்ணுறாங்க. அப்படி தான் satya monisha வா நடிச்சிருக்க anaswara rajan அ சந்திக்குறாரு. ரெண்டு பேரும் பழக ஆரம்பிக்குறாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப பிடிச்சி போயிடுது. இவங்க ரெண்டு பேரும் நல்ல பேச ஆரம்பிக்குறாங்க அப்போ தான் இவங்க ரெண்டு பேரும் ஒரே school ல படிச்சிருக்காங்க னு தெரிய வருது. இதுல ஒருத்தர் senior அப்புறம் இன்னொருத்தர் junior .அப்படி பேசிட்டு இருக்கும்போது இவங்க life ல நடந்த first love , heartbreak , னு நெறய விஷயங்களை share பண்ண ஆரம்பிக்குறாங்க. இவங்க ரெண்டு பேரோட journey என்னன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half ரொம்ப fresh ஆவும் jolly ஆவும் போச்சு. மனச நெருடரா மாதிரி கதையும் சிரிக்க வைக்கிற மாதிரி scenes யும் வச்சுருக்காங்க. audience க்கு interesting அ இருக்கற மாதிரி reallife ல எதார்த்தமா நடக்கற விஷயங்களை குடுத்திருக்காங்க. உதாரணத்துக்கு life ல ஒருத்தர் க்கு வர முதல் காதல், ஒரு சில chance அ miss பண்ணுறது னு நெறய சொல்லிட்டே போலாம். அப்படியே படத்தோட second half அ பாக்கும்போது கொஞ்சம் emotional அ கதையை கொண்டு போயிருக்காங்க. life ல நடந்த ஒரு சில வருத்தமான விஷயங்களுக்கு closure கொடுக்குறது, நெருக்கமானவங்கள புரிஞ்சுகிறது னு ரொம்ப deep அ கதையை கொண்டு போயிருக்காரு director. இந்த படத்தை பாத்துட்டு வரும்போது கண்டிப்பா ஒரு நல்ல படம் பாத்தோம்னு ஒரு திருப்தி இருக்கும்னு சொல்லலாம். 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது abhishan jeevinth ஓட acting ரொம்ப natural ஆவும் sincere ஆவும் இருந்தது. அவரோட character அ புரிஞ்சுகிட்டு confident ஆனா performance அ குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். என்னதான் actor அ இவருக்கு இது முதல் படமா இருந்தாலும் romantic scenes அ இருக்கட்டும் emotional scenes அ இருக்கட்டும் ரெண்டுமே நல்ல நடிச்சிருக்காரு. anaswara rajan ஓட நடிப்பும் எதார்த்தமா இருந்தது. இவங்களோட dialogue delivery , body language னு எல்லாமே perfect அ குடுத்திருக்காங்க. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது sean roldan ஓட இசை இந்த படத்துக்கு பக்க பலம் னு சொல்லலாம். படத்துல வர emotional scenes அ இருக்கட்டும் romantic scenes அ இருக்கட்டும் மக்கள் ஓட மனசுல பதிய வைக்குற மாதிரி music அமைச்சிருக்கு. shreyas krishna ஓட cinematography bright ஆவும் colourful ஆவும் இருந்தது. 


ஒரு good feel movie னா அது இது தான். audience க்கு கண்டிப்பா இந்த படம் பிடிக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. feb 6 த் அன்னிக்கு  இந்த படம் release  ஆகுது சோ கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.