Featured post

Abhishek Nama’s ambitious project Nagabandham is gearing up for a grand worldwide release on July 3

 Abhishek Nama’s ambitious project Nagabandham is gearing up for a grand worldwide release on July 3.* Produced by Kishore Annapureddy and N...

Sunday, 14 June 2026

Abhishek Nama’s ambitious project Nagabandham is gearing up for a grand worldwide release on July 3

 Abhishek Nama’s ambitious project Nagabandham is gearing up for a grand worldwide release on July 3.*







Produced by Kishore Annapureddy and Nishitha Nagireddy under the banners of NIK Studios and Abhishek Pictures, the team launched the Anantha Padmanabha Swamy Ratha Yatra in Hyderabad as part of the film’s promotional campaign.


Speaking at the event, lead actor Virat Karrna expressed his gratitude to everyone who attended despite the heavy rain.



“Our entire team has worked tirelessly on this film for the past two years. I hope you all visit theatres on July 3 and bless us in the same way you have blessed this event.


“As part of this yatra, we will travel to several cities, and I hope audiences will make our film a grand success.


“I am grateful to director Abhishek Nama for giving me the opportunity to be part of his dream project.


“Though our producers, Nishitha and Kishore, are newcomers, they backed the film with tremendous courage and conviction. My thanks also to Nabha for sharing the screen with me,” he said.


Director Abhishek Nama stated that the initiative goes beyond film promotion.


“Thank you all for travelling from far-off places and joining us despite the rain. This is not merely a promotional event for a film. It is an effort to reconnect with our culture, traditions and roots, and to pass them on to future generations.


“I hope this initiative resonates with everyone, and we seek your blessings and support.


“I am thankful to our producers for supporting such a massive vision. This project would not have been possible without them.


“I pushed Virat to his limits during the making of the film, and he dedicated himself completely, even working through a severe illness. After watching this film, audiences will truly understand his potential. I can assure you of that.


“Thanks to Nabha as well. I hope everyone enjoys the music composed by Junaid and Abhi. We wish for the Anantha Padmanabha Swamy Ratha Yatra to become a grand success,” he said.


The team also unveiled a grand idol of Anantha Padmanabha Swamy at the event, offering a spiritually enriching experience to devotees and attendees.

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

 *அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்*






ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’ – ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை


அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.


NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


“கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும்  ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.


இந்த ரதயாத்திரையின் ஒரு பகுதியாக பல நகரங்களுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். ரசிகர்கள் எங்கள் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்.


என்னை தனது கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்த இயக்குநர் அபிஷேக் நாமாவுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.


எங்கள் தயாரிப்பாளர்களான நிஷிதா மற்றும் கிஷோர் புதியவர்கள் என்றாலும், மிகுந்த தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இந்தப் படத்தை ஆதரித்துள்ளனர். என்னுடன் நடித்த நபாவிற்கும் எனது நன்றிகள்,” என்றார்.


இயக்குநர் அபிஷேக் நாமா பேசுகையில், இந்த முயற்சி திரைப்பட விளம்பரத்தைத் தாண்டிய ஒன்று என்று குறிப்பிட்டார்.


“தொலைதூர இடங்களிலிருந்து மழையையும் பொருட்படுத்தாமல் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது ஒரு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மட்டுமல்ல. நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு முயற்சி. அதை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இதை பார்க்கிறோம்.


இந்த முயற்சி அனைவரின் மனதையும் தொடும் என்று நம்புகிறேன். உங்கள் ஆசீர்வாதங்களும் ஆதரவும் எங்களுக்கு தேவை.


இத்தகைய பிரம்மாண்டமான கனவை நனவாக்க உதவிய எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றியுள்ளவன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்காது.


படப்பிடிப்பின் போது விராட்டை அவரது எல்லைகளைத் தாண்டி உழைக்க வைத்தேன். கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கிடையிலும் அவர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். இந்தப் படத்தை பார்த்த பிறகு அவரது திறமையை ரசிகர்கள் உண்மையாக உணர்வார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.


நபாவிற்கும் எனது நன்றிகள். ஜுனைத் மற்றும் அபி அமைத்துள்ள இசையை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை மிகப்பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துகிறோம்,” என்றார்.


இந்த நிகழ்வில் அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட சிலையும் படக்குழுவினரால் திறந்து வைக்கப்பட்டது. அது பக்தர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆன்மிக உணர்வை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.


சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !*

 *சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது  படப்பிடிப்பு !*


*சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம் … தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!*








தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.


சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு, சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


“சீயான் 63” அனைவரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்  ஆகியோர் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவரது இசை, படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை மேலும் உயர்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.


விக்ரமின் தனித்துவமான திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக உருவாகும் “சீயான் 63”, வலுவான கூட்டணி, தரமான தொழில்நுட்பக் குழு, பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் அனைவரையும் கவரும் ஃபேமிலி திரில்லர் ஆக்சன் கதை ஆகியவற்றால் தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


அறிவிப்பின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய “சீயான் 63”, தற்போது படப்பிடிப்பு தொடக்கத்துடன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், விக்ரம் ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இசையால் மிரட்டிய சாம் CS!

 இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இசையால் மிரட்டிய சாம் CS!







ஒரே நாளில் இரண்டு ஜானர்கள்… இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய சாம் CS!


ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!


இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS.


நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன.


உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்க காரணமாக அவரது இசை அமைகிறது.


அதே நேரத்தில், முற்றிலும் மாறுபட்ட உலகத்தை கொண்ட “டபுள் ஆக்குபன்ஸி”, ஃபேண்டஸி மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தேவையான நவீன இசை பாணி, துடிப்பான சவுண்ட் மற்றும் புதிய தலைமுறை ரசிகர்களை ஈர்க்கும் இசை மொழியை சாம் CS திறமையாக உருவாக்கியுள்ளார். படத்தின் கற்பனை உலகத்திற்கு ஏற்ற இசை அனுபவத்தை அவர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களின் ஜானர், உணர்வு, கதை சொல்லும் முறை என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டவை. அந்த இரண்டு உலகங்களுக்கும் ஏற்ற இசையை உருவாக்கி, ஒரு இசையமைப்பாளராக தனது பல்துறை திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் சாம் CS.


சமீப காலங்களில் பின்னணி இசை மட்டுமல்லாமல், பாடல்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ஒவ்வொரு படைப்பிலும் புதிய இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். கதையின் தேவையை புரிந்து அதற்கேற்ப தனது இசை மொழியை மாற்றிக்கொள்ளும் திறமையே அவரை இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.


தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


அதில் முக்கியமாக புஷ்கர் காயத்திரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, 13 June 2026

Prime Video Announces June 18 as the Exclusive Global Streaming Premiere of Drishyam 3*

 Prime Video Announces June 18 as the Exclusive Global Streaming Premiere of Drishyam 3*






Written and directed by Jeethu Joseph, presented by PEN Studios and Panorama Studios and produced by Antony Perumbavoor, Aashirvad Cinemas, the thriller drama stars Mohanlal, Meena, and Siddique in lead roles. George Kutty returns as the protector, once again forced to defend his family when the past resurfaces with deadly consequences


Prime members in India and over 200 countries and territories worldwide can stream Drishyam 3 in Malayalam, with dubbed versions in Telugu, Tamil, and Kannada, exclusively on Prime Video from June 18 


MUMBAI, India—June 13, 2026: Prime Video, India’s most-loved entertainment destination, today announced the exclusive global streaming premiere of Drishyam 3, the highly anticipated next chapter in one of Indian cinema’s most celebrated thriller drama franchises, known for its taut narrative, sharp twists, and gripping performances that have, over the years, garnered a strong and loyal fan base across languages and demographics. Written and directed by Jeethu Joseph,  presented by Pen Studios & Panorama Studios and produced by Antony Perumbavoor, Aashirvad Cinemas, the film reunites Mohanlal, Meena, and Siddique, bringing audiences back into the world of George Kutty and his family. Following its successful theatrical run, Drishyam 3 will stream exclusively on Prime Video from June 18 in Malayalam with dubbed versions in Telugu, Tamil, and Kannada for audiences in India and across more than 200 countries and territories worldwide. Drishyam 3 joins Prime Video’s blockbuster lineup for Prime Day. This July, Amazon Prime Day is back in India for its tenth edition. Prime members can look forward to great deals, bigger savings, exciting new launches, blockbuster entertainment, and more.


In the years since Drishyam 2, George Kutty appears to have secured the future he always wanted for his family, he has even adapted his past into a successful film. But the past refuses to stay buried. When two journalists begin investigating the real-life inspirations behind the film, and a carefully orchestrated marriage proposal for his daughter Anju turns out to be a deadly trap, George Kutty finds himself drawn into his most emotionally charged and dangerous battle yet. With old adversaries back with renewed motive, and fear, guilt, and suspicion closing in from every side, George Kutty, the protector, must once again rely on his wits to protect the people he loves, and the secrets that bind them together. 


“Very few franchises in Indian cinema have achieved what Drishyam has, a story that began originally in Malayalam over a decade ago has since been embraced across languages and borders. What Jeethu Joseph and Mohanlal have crafted across three films is a masterclass in sustained storytelling, each chapter deepening the emotional and moral complexity of a family audience that feel they know intimately. George Kutty is no longer just a character; he is part of the collective imagination of Indian cinema,” said Manish Menghani, Director & Head of Content Licensing, Prime Video India. “With Drishyam 3, one of India’s most successful film franchises, we are proud to continue this legacy on Prime Video, taking exemplary stories from India to audiences around the world.”


"With Drishyam 3, my intention was not just to continue the story, but to delve deeper into the mind of George Kutty. Over the years, he has become a man defined by the choices he made to protect his family, but beneath his resilience lies a father who has been forced to live with constant fear, uncertainty, and the weight of his past. This chapter explores the psychological toll of those experiences, making it perhaps the most intimate and emotionally layered film in the franchise. We wanted to examine not only what George Kutty does, but what those decisions have cost him as a person. I am thrilled that audiences across the world will now be able to experience this new chapter on Prime Video,” said writer and director Jeethu Joseph.


“George Kutty is a character who has stayed with audiences for many years, and that love is something I deeply cherish. The reason audiences connect with Drishyam is that, beyond the mystery, it is rooted in a deeply human story about family, love, and survival. I am grateful for the affection audiences have shown George Kutty through the years and thrilled that Drishyam 3 will now reach audiences across the globe on Prime Video,” said Mohanlal.


https://www.instagram.com/p/DZg0FZriF6o/?igsh=MTJqd2VpaWJna3BsZg==

பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3”

 *பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.*






ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார்.


இந்தியாவிலும் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள், த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை மலையாளம், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன், ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக காணலாம்.



இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, இந்திய சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் திரில்லர்-டிராமா திரைப்படத் தொடர்களில் ஒன்றான த்ரிஷ்யம் திரைப்படத் தொடரின் அடுத்த அத்தியாயமான “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் உலகளாவிய பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளது.


தனித்துவமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள இந்தத் திரைப்படத் தொடர், மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இப்படம், Pen Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas மூலம் உருவாகியுள்ளது.


மோகன்லால், மீனா மற்றும் சித்திக் மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைக்குள் பார்வையாளர்களை மீண்டும் அழைத்துச் செல்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னட டப்பிங் பதிப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது.


திரிஷ்யம் 2 சம்பவங்களுக்குப் பிறகு, ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்திற்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார். தனது கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெற்றிகரமான திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார். ஆனால் கடந்த காலம் புதைக்கப்பட்ட இடத்திலேயே நிலைத்திருக்க மறுக்கிறது.


அந்தத் திரைப்படத்தின் உண்மைக் கதையை ஆராயத் தொடங்கும் இரு பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது மகள் அஞ்சுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண முயற்சி, உயிருக்கு ஆபத்தான சதியாக மாறும்போது, ஜார்ஜ்குட்டி தனது வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் ஆபத்தான போராட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்.


பழைய எதிரிகள் புதிய நோக்கத்துடன் மீண்டும் வர, பயம், குற்றவுணர்வு மற்றும் சந்தேகங்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும் சூழலில், தனது குடும்பத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ரகசியங்களையும் காப்பாற்ற ஜார்ஜ்குட்டி மீண்டும் தனது புத்திக்கூர்மையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


*பிரைம் வீடியோ இந்தியாவின் Content Licensing பிரிவின் இயக்குநரும் தலைவருமான மனீஷ் மெங்கானி கூறுகையில்..,* 


“இந்திய சினிமாவில் திரிஷ்யம் போன்ற சாதனையை நிகழ்த்திய திரைப்படத் தொடர்கள் மிகக் குறைவு. ஒரு தசாப்தத்திற்கு முன்பு மலையாளத்தில் தொடங்கிய இந்தக் கதை, இன்று மொழிகளையும் நாடுகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது. ஜீத்து ஜோசப்பும் மோகன்லாலும் இணைந்து உருவாக்கிய இந்த மூன்று திரைப்படங்கள், நீடித்த கதை சொல்லலின் சிறந்த உதாரணமாகும். ஜார்ஜ்குட்டி இனி ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல; இந்திய சினிமாவின் கூட்டு நினைவின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். இந்தியாவின் மிக வெற்றிகரமான திரைப்படத் தொடர்களில் ஒன்றான திரிஷ்யம் 3-ஐ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.




*இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறுகையில்..,*


“திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ்குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார். ஆனால் அவரது மனதின் ஆழத்தில், பயம், நிச்சயமின்மை மற்றும் கடந்த காலத்தின் சுமையுடன் வாழும் ஒரு தந்தை இருக்கிறார். இந்த அத்தியாயம் அந்த மன அழுத்தங்களின் தாக்கத்தை ஆராய்கிறது. அதனால் இது இந்தத் தொடரில் மிகவும் நெருக்கமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இதை பிரைம் வீடியோவில் காணப்போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.


நடிகர் மோகன்லால் கூறுகையில்..,* 


“ஜார்ஜ்குட்டி என்ற கதாபாத்திரம் பல ஆண்டுகளாக ரசிகர்களுடன் பயணித்து வருகிறது. அவர்கள் அளித்த அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். திரிஷ்யம் ரசிகர்களுக்கு பிடிக்க காரணம், அதன் மர்மக் கதையைத் தாண்டி குடும்பம், அன்பு மற்றும் உயிர்வாழ்தல் பற்றிய மனிதநேயமான கதையாக இருப்பதுதான். ஜார்ஜ்குட்டிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. திரிஷ்யம் 3 இப்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

https://www.instagram.com/p/DZg0FZriF6o/?igsh=MTJqd2VpaWJna3BsZg==


ஜூன் 18 முதல் “திரிஷ்யம் 3” திரைப்படத்தை ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

Friday, 12 June 2026

Charukesi Movie Review

Charukesi Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம charukesi படத்தோட  review அ தான் பாக்க போறோம்.   இந்த படத்தை இயக்கி இருக்காரு suresh krishna . இந்த படத்துல Y. G. Mahendran, Suhasini Maniratnam, Raj Ayyappa , satyaraj , samuthirakani ,  Ramya Pandian னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



ஒரு legendary carnatic vocalist அ சுத்தி தான் இந்த கதையே நகருது. இவருக்கு alzheimer disease னால பாதிக்க படுறாரு. அதுனால இவரோட நினைவுகள் மறந்து போகுது. சில சமயம் ஞாபகமும் வருது. இப்படி இவரோட நினைவுகள் மறக்கும்போது தான் இவரோட குடும்பத்துல இருக்கற சில பிரச்சனைகள் மெதுவா வெளில வருது. இந்த மாதிரி பிரச்சனைகளை மறக்குறதுக்கும் மன்னிக்கிறதுக்கும் music தான் இவருக்கு உதவிய இருக்கு. அது என்னனா பிரச்சனைகள்? music எப்படி இவரோட life க்கு healing medium அ அமைச்சிருக்கு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது yg mahendran அப்புறம் suhasini maniratnam ஓட performance தான் இந்த படத்துல highlight அ இருக்கு. இவங்க இந்த படத்தோட மொத்த weight  யும் தூக்கி நிறுத்தி இருக்காங்க னு சொல்லலாம். அடுத்தது சத்தியராஜ், இவரோட performance அ பத்தி சொல்லவே வேண்டாம். கொடுக்கப்பட்ட character அ மிக கச்சிதமா பண்ணிருக்காரு. samuthirakani ஓட character யும் நல்ல இருந்தது. மத்த supporting actors ஓட நடிப்பும் decent அ குடுத்திருக்காங்க. 


இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது deva தான். இந்த படத்தோட cultural heritage atmosphere க்கு ஏத்த மாதிரி background score யையும் songs யும் அமைச்சிருக்காரு. kona venkat எழுதின இந்த கதையை எமோஷனல் storytelling மூலமா இந்த story அ சொல்லிருக்காரு director. b l sanjay ஓட cinematography யும் நல்ல இருந்தது. vasudevan ஓட art direction யும் கதைக்கு நல்ல suit யிருந்தது. suresh krishna, pa vijay அப்புறம் vasanth ஓட screenplay யும் super அ இருந்தது.  


 ஒரு நல்ல  கதைக்களம் தான். கண்டிப்பா இந்த படத்தை போய் பாருங்க.

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது

 *FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது*



தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை, FIFA தொடர்களின் பரவலான அளவுக்கும் ரசிகர்களின் ஆர்வத்திற்கும் ஏற்றவாறு, ஆழமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதோடு, தனது விளையாட்டு உள்ளடக்கப் பட்டியலை வலுப்படுத்தும் ZEE5-இன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.


பார்வை அனுபவத்திற்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில், இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியா, FIFA World Cup 2026-க்கான ZEE5-இன் நிபுணர் குழுவில் இணைகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாக மதிக்கப்படும் பூட்டியா, தனது சிறப்பான விளையாட்டு வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் இந்திய கால்பந்திற்கான பங்களிப்புகள் மூலம் நாட்டில் இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விளையாட்டைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், மிகுந்த அனுபவமும், தொடரைப் பற்றி ஆழமான பார்வைகளைப் பெற விரும்பும் ரசிகர்களுக்கு அவரை மதிப்புமிக்க குரலாக மாற்றுகின்றன.


நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக இணைவது குறித்து பாய்சுங் பூட்டியா கூறியதாவது:


"இந்தியாவில் பல தலைமுறை கால்பந்து ரசிகர்களுக்கு FIFA World Cup என்பது உத்வேகம், உயர்வான கனவுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் ஆதாரமாக இருந்து வருகிறது. இது விளையாட்டைத் தாண்டி மக்களை ஒரே ஆர்வத்தின் மூலம் ஒன்றிணைக்கும் ஒரு தொடர். நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக ZEE5 மற்றும் Unite8 Sports உடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகக் கோப்பையை மிகவும் சிறப்பாக்கும் கதைகள், போட்டி உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத தருணங்களுடன் ரசிகர்களை மேலும் நெருக்கமாக இணைக்க பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விளையாட்டிற்கும் அதன் ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்."


FIFA World Cup 2026 போட்டிகளை ஜூன் 11 முதல் ZEE5-ல் மட்டும் நேரலையில் காணத் தவறாதீர்கள்!


ZEE5 மற்றும் Unite8-ல் FIFA World Cup 2026 பற்றி


FIFA World Cup 2026™️, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உலகின் மிகப் புகழ்பெற்ற கால்பந்து தொடர்களை கொண்டு வருவதற்காக, 2034 வரை நீளும் Zee Entertainment மற்றும் FIFA இடையிலான முக்கியமான நீண்டகால கூட்டாண்மையின் தொடக்கமாக அமைகிறது. தனது இரண்டு தளங்களான ZEE5 மற்றும் Unite8-ஐ பயன்படுத்தி, Zee Entertainment ஒப்பற்ற பார்வை அனுபவத்தை வழங்கவுள்ளது. FIFA World Cup 2026™️ போட்டிகளின் முழுமையான ஒளிபரப்பை ஆங்கிலம், இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வழங்குவதன் மூலம், ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் போட்டியின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க முடியும்.


இந்த கூட்டாண்மை, FIFA World Cup 2030™️, FIFA Women’s World Cup 2027™️ உள்ளிட்ட பல முக்கிய FIFA தொடர்களையும், பிற முன்னணி சர்வதேச போட்டிகளையும் உள்ளடக்கிய விரிவான உரிமைப் பட்டியலை கொண்டுள்ளது. உயர்தர ஸ்ட்ரீமிங், வளமான பிராந்திய மொழி சேவைகள் மற்றும் ரசிகர்களை மையமாகக் கொண்ட ஆழமான அனுபவங்கள் மூலம், ZEE5 மற்றும் Unite8 உலக கால்பந்தை கோடிக்கணக்கான இந்திய பார்வையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருவதையும், நாட்டில் கால்பந்து ரசிகர் வட்டாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!

 *ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!*



*‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.*


சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார்.


மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம், தரமான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் வலிமையால், இந்த திரைப்படம் தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மண்ணின் இயல்பான வாழ்க்கை முறையையும், அப்பா – மகன் உறவின் உணர்வுபூர்வமான தருணங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.