Featured post

சிக்மா போட்டோ இந்தியா – பி.பி. போட்டோகிராபி இணைந்து உலக புகைப்பட தினக் கொண்டாட்டம்

 சிக்மா போட்டோ இந்தியா – பி.பி. போட்டோகிராபி இணைந்து உலக புகைப்பட தினக் கொண்டாட்டம் “Frames of Belonging: Photography, Community & Conne...

Thursday, 27 August 2026

சிக்மா போட்டோ இந்தியா – பி.பி. போட்டோகிராபி இணைந்து உலக புகைப்பட தினக் கொண்டாட்டம்

 சிக்மா போட்டோ இந்தியா – பி.பி. போட்டோகிராபி இணைந்து உலக புகைப்பட தினக் கொண்டாட்டம்






“Frames of Belonging: Photography, Community & Connection” என்ற தலைப்பில், சிக்மா போட்டோ இந்தியா மற்றும் பி.பி. போட்டோகிராபி இணைந்து உலக புகைப்பட தினத்தை சிறப்பாகக் கொண்டாடின.

புகைப்படக் கலை தொடர்பான அர்த்தமுள்ள அனுபவங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்தும் புதிய கூட்டாண்மையின் முதல் நிகழ்ச்சியாக இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புகைப்படக் கலைஞர்கள், கலைஞர்கள், புகைப்படத் துறை கல்வியாளர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். புகைப்படத்தின் வளர்ந்து வரும் பங்கு மற்றும் வலுவான படைப்பாற்றல் சமூகங்களை உருவாக்குவதன் அவசியம் குறித்து நிகழ்வில் விரிவாகப் பேசப்பட்டது.

கலைஞர் கலந்துரையாடல்

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ஹரிஹரன் கோபால் தலைமையில் கலைஞர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அவர் தனது புகைப்படக் கலைப் பயணம் மற்றும் படைப்புமுறை குறித்து பகிர்ந்து கொண்டார்.

மேலும், நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத புகைப்படக் கலைஞர் ரம்யா ஸ்ரீராம் அவர்களின் புகைப்படப் பணிகள் குறித்தும் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மருத்துவ அவசரநிலை காரணமாக ரம்யா ஸ்ரீராம் நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலையில், அவருக்கு நிகழ்ச்சியில் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

“Beyond the Feed” – புகைப்படம், அல்காரிதம் மற்றும் AI

இதனைத் தொடர்ந்து “Beyond the Feed: Photography in the Age of Algorithms & AI” என்ற தலைப்பில் சிறப்பு குழு விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் ஆர். பிரசன்னா வெங்கடேஷ், அனிதா சாத்தியம் மற்றும் நவீன்ராஜ் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரியா பானிக் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, விவாதத்தை வழிநடத்தினார்.

சமூக ஊடகங்களின் அல்காரிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அதிகம் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய காட்சிக் கலாச்சாரத்தில், புகைப்படக் கலைஞர்கள் எவ்வாறு தங்களது தனித்துவத்தையும் உண்மைத்தன்மையையும் பாதுகாத்து அர்த்தமுள்ள படைப்புகளை உருவாக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பி.பி. போட்டோகிராபியின் நிறுவனர் பிரியா பானிக் கூறுகையில்:

“புகைப்படம் என்பது ஒரு படத்தை உருவாக்குவதைக் காட்டிலும் பெரியது. அது மனிதர்களையும், கருத்துகளையும், கதைகளையும் இணைக்கும் ஒரு வழியாக இருக்க வேண்டும். புகைப்படக் கலைஞர்கள் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், கலந்துரையாடவும், தங்களது படைப்புகளை வெளிப்படுத்தவும் ஒரு வலுவான சமூகத்தை உருவாக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துவதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கம்.”

ஆண்டு முழுவதும் தொடரும் நிகழ்ச்சிகள்

இந்த உலக புகைப்பட தினக் கொண்டாட்டம், சிக்மா போட்டோ இந்தியாவுக்காக பி.பி. போட்டோகிராபி ஒருங்கிணைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான தொடக்கமாக அமைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கலைஞர் கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள், பயிலரங்குகள், போட்டோ வாக் நிகழ்ச்சிகள், சமூக அடிப்படையிலான புகைப்பட அனுபவங்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தங்களது படைப்புகளை வெளிப்படுத்தவும், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளவும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளன.

இந்தக் கூட்டாண்மையின் மூலம் இந்தியாவில் புகைப்படக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் வலுவான சூழலை உருவாக்குவதே நோக்கமாகும். கற்றல், உரையாடல், புதிய முயற்சிகள் மற்றும் படைப்பாற்றல் பரிமாற்றத்திற்கான அனைவருக்கும் அணுகக்கூடிய தளங்களை உருவாக்குவதன் மூலம் புகைப்படத் துறையை மேலும் வளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

“Frames of Belonging” என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் பல கதைகள், உரையாடல்கள் மற்றும் புதிய இணைப்புகள் தொடர்ந்து உருவாக உள்ளன.

Hi Movie Review

 HI Tamil Movie Review 

Hi Movie Rating :4.5/5

ஹாய் மக்களே, இன்னிக்கு நம்ம Hi படத்தோட review-வை தான் பாக்கப் போறோம். இந்த படத்துல Kavin மற்றும் Nayanthara முக்கிய கதாபாத்திரங்கள்ல நடித்திருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் different age group-ல இருக்குறதால, படம் announce ஆனதுல இருந்தே இவங்களோட pairing-க்கு ஒரு தனி எதிர்பார்ப்பு இருந்துச்சு. இந்த படத்தை இயக்கி இருக்கறது Vishnu Edavan. Rowdy Pictures, Seven Screen Studio மற்றும் Zee Studios இணைந்து இந்த படத்தை தயாரிச்சிருக்காங்க.



இந்த படம் ஒரு feel-good romantic drama. Love, comedy, family sentiment, emotionsன்னு எல்லாமே கலந்து ஒரு அழகான கதையா உருவாக்கியிருக்காங்க. சுமார் 2 மணி நேரம் 24 நிமிஷம் runtime-ல படம் இருக்கு. Family audience-க்கும், காதல் கதைகளை ரசிக்குறவங்களுக்கும் பிடிக்குற மாதிரி screenplay-ஐ entertaining-ஆ கொண்டு போயிருக்காங்க.


படத்தோட கதை Chennai-ல இருக்குற ஒரு apartment complex-ஐ சுற்றி நடக்குது. Nayanthara மற்றும் Kavin ரெண்டு பேரும் ஒரே apartment-ல வசிக்குறாங்க. Nayanthara ஒரு simple ஆன வாழ்க்கையை வாழுற Devayani கதாபாத்திரத்துல நடித்திருக்காங்க. இன்னொரு பக்கம் Kavin ஒரு software employee-ஆவும், இந்த version-ல ஒரு cop character-ஆவும் வர்றாரு. ரெண்டு பேரும் எதிர்பாராத விதமா meet பண்ணிக்குறாங்க. ஆரம்பத்துல சாதாரண acquaintance-ஆ இருக்குற relationship, கொஞ்சம் கொஞ்சமா close friendship-ஆ மாறுது.


ஒரு கட்டத்துல Kavin-க்கு Nayanthara மேல love வந்துடுது. அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறாரு. ஆனா தன்னோட காதலை அவங்ககிட்ட எப்படி சொல்லப் போறாரு, அந்த காதலுக்கு என்னென்ன பிரச்சனைகள் வருது, கடைசில இவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்தாங்களா என்பதுதான் படத்தோட முக்கியமான கதை.


இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் Kavin மற்றும் Nayanthara-வோட chemistry. ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற friendship மெதுவா love-ஆ மாறுற விதம் ரொம்ப natural-ஆ இருக்கு. ஒரே நாள்ல காதல் வந்துடுச்சு னு காட்டாம, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு அந்த bond develop ஆகுற மாதிரி scenes அமைச்சிருக்காங்க.


Kavin performance-ஐ பத்தி பாத்தோம்னா sema lively-ஆ இருக்கு. குறிப்பா அவரோட Kovai Tamil slang, expressions மற்றும் comic timing நல்லா work ஆகுது. First half முழுக்க Kavin வர்ற scenes நல்ல entertainment கொடுக்குது. Nayanthara உடனான அவரோட combination இன்னும் ரசிக்குற மாதிரி இருக்கு.


Truth or Dare portions மற்றும் red-light area-ல வர்ற சில sequences எல்லாமே நல்ல comedy moments-ஆ அமைஞ்சிருக்கு. குறிப்பா இவங்க ரெண்டு பேரோட friendship எப்படி காதலா மாறுது என்பதைக் காட்டியிருக்குற விதம் ரொம்ப அழகா இருக்கு. சில scenes நினைவுல நிக்குற மாதிரி இருக்கு.


Nayanthara Devayani character-ல ரொம்ப அழகா இருக்காங்க. Screen presence மற்றும் glamour-ஓட சேர்த்து character-க்கு தேவையான emotional depth-ஐயும் நல்லா கொண்டு வந்திருக்காங்க. குறிப்பா second half-ல family emotions மற்றும் relationship-related scenes அதிகமா வரும்போது அவங்களோட performance இன்னும் engaging-ஆ இருக்கு.


இந்த படத்துல supporting cast-ம் ஒரு பெரிய strength. K. Bhagyaraj, Prabhu, Sarath Kumar, Raadhika Sarathkumar, VTV Ganesh னு experienced actors பலரும் இருக்காங்க. குறிப்பா Bhagyaraj-க்கு father character-ல நல்ல scenes கிடைச்சிருக்கு. அவரோட presence வரும் இடங்கள்ல family emotion இன்னும் strong ஆகுது.


Prabhu, Nayanthara-வோட father character-ல நடித்திருக்காரு. அந்த கதாபாத்திரம் மூலமா கதைக்குள்ள இன்னொரு emotional layer கிடைக்குது. Family relationships மற்றும் parents-ஓட feelings-ஐ கதைக்குள்ள கொண்டு வர்றதுல இவரோட portions நல்லா அமைஞ்சிருக்கு.


First half-ல romance மற்றும் comedyக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. Friendship, fun moments, love develop ஆகுற விதம் என அந்த portion ரொம்ப light-hearted-ஆ போகுது. Kavin-ஓட comedy timing மற்றும் Nayanthara-வோட calm performance இந்த பகுதிக்கு நல்ல balance கொடுக்குது.


Second half-ல கதை family drama பக்கம் நகருது. Family secrets, relationships, marriage மற்றும் அதனை சுற்றி வர்ற challenges எல்லாமே கதைக்குள்ள வருது. பல dramatic situations வந்தாலும், படத்தோட entertainment factor தொடர்ந்து maintain ஆகுது. Comedy, emotions மற்றும் family sentiment மூன்றையும் நல்ல balance-ல கொண்டு போயிருக்காங்க.


Music-ஐ பத்தி சொல்லணும்னா Jane Martin ஓட songs மற்றும் background score படத்துக்கு நல்ல energy கொடுக்குது. குறிப்பா “Rasgulla” மற்றும் “Drunken Chest” songs நல்ல fun vibe கொடுக்குது. Comedy scenes வரும்போதும், emotional moments வரும்போதும் BGM அதுக்கேத்த மாதிரி support பண்ணுது.


Climax பக்கத்துல வர்ற special appearances மற்றும் voice contributions கூட படத்தோட entertainment value-ஐ இன்னும் அதிகப்படுத்துது. Theatre audience-க்கு surprise moments மாதிரி இந்த portions work ஆகுது.


Director Vishnu Edavan-க்கு ஒரு special appreciation கொடுக்கணும். Romance மட்டும் இல்லாம comedy, family sentiment மற்றும் emotional drama எல்லாத்தையும் ஒரே படத்துல engaging-ஆ கொண்டு வந்திருக்காரு. பெரிய action sequences இல்லாம, மனிதர்களோட relationships மற்றும் genuine love-ஐ மையமா வைத்து ஒரு entertaining படம் கொடுத்திருக்காரு.


குறிப்பா ஒரு friendship எப்படி காதலா மாறுது, அந்த காதல் குடும்பத்துக்குள்ள என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வருது, கல்யாணத்தை சுற்றி என்னென்ன emotions இருக்கு என்பதையெல்லாம் simple-ஆவும் enjoyable-ஆவும் சொல்லியிருக்காங்க.


மொத்தத்துல Hi ஒரு light-hearted ஆன feel-good romantic entertainer. Kavin-ஓட lively performance, Nayanthara-வோட screen presence, ரெண்டு பேரோட chemistry, comedy, family emotions, catchy songs மற்றும் நல்ல supporting cast எல்லாமே படத்துக்கு பெரிய plus points.


சோ தொடர்ந்து heavy action மற்றும் serious movies பார்த்துட்டு ஒரு அழகான காதல் கதை, comedy, family emotionsன்னு ஜாலியா ஒரு படம் பார்க்கணும்னு நினைக்குறவங்க Hi படத்தை theatre-ல தாராளமா பார்க்கலாம். Love, laughter, emotions எல்லாம் கலந்து ஒரு pleasant-ஆன theatrical experience கொடுக்குற படமா இது இருக்கும்!

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

 *ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!*






பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிப்பில் காமெடி, காதல், நட்பு, குடும்பம் கலந்த கலர்ஃபுல் என்டர்டெய்னர்!


இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 24.08.26 நேற்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது.


பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது.


சாதாரண விஷயங்கள்… செம கலாட்டா!


நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே சாதாரணமானவைதான். ஆனால் சரியான மனிதர்கள் ஒன்று சேர்ந்து, சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக திரும்பும்போது… அந்தச் சாதாரண விஷயங்களே செம கலாட்டாவாக மாறிவிடும்!


அப்படிப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு, நட்பு, காதல், குடும்ப உறவுகள், misunderstanding, comedy என ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணையும் கதையாக இப்படம் உருவாகிறது.


சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு நடுவே emotion என, ரசிக்கவும் feel பண்ணவும் வைக்கும் ஒரு ஜாலியான திரை அனுபவமாக படம் உருவாகி வருகிறது.


கதையின் பலம்… திரைக்கதையின் வேகம்… இயக்கத்தின் ரசனை!


இப்படத்தின் முக்கிய கிரியேட்டிவ் கூட்டணியாக டாக்டர் எஸ். கார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சீயோன் ராஜா இணைந்துள்ளனர்.


கதை, வசனம் மற்றும் தயாரிப்பு – டாக்டர் எஸ். கார்த்திகேயன்

திரைக்கதை மற்றும் இயக்கம் – சீயோன் ராஜா

தயாரிப்பு நிறுவனம் – பெஸ்டி பிக்சர்ஸ்


கதையின் மையத்தையும் கதாபாத்திரங்களின் உலகத்தையும் உருவாக்கியிருக்கும் டாக்டர் எஸ். கார்த்திகேயனின் கதை மற்றும் வசனத்தை, சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்து, தனது இயக்குநர் பார்வையில் திரைக்கு கொண்டு வருகிறார் சீயோன் ராஜா.


இளம் நட்சத்திரங்கள்… அனுபவம் வாய்ந்த காமெடி கூட்டணி!


இப்படத்தில் ரோஷன் மற்றும் சபரி கணேஷ் கதாநாயகர்களாகவும், அஸ்மிதா மற்றும் வர்ணா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர்.


மேலும் ரமேஷ் கண்ணா கதாநாயகனின் தந்தையாகவும், சுஜாதா (பருத்திவீரன்) தாயாகவும் நடிக்கின்றனர்.


அதோடு அஸ்மிதா (மஸ்காரா), கஞ்சா கருப்பு, லொள்ளு சபா சுவாமிநாதன், மதுரை காளையன் மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.


இளம் நடிகர்களின் energy-க்கும், அனுபவம் வாய்ந்த நடிகர்களின் comedy timing-க்கும் இடையேயான combination, கதையின் கலாட்டாவை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் அமைந்துள்ளது.


டெக்னிக்கல் டீமும் அசத்தல்!


ஒளிப்பதிவு – வினோத் பெருமாள்

கலை இயக்கம் – ஜெயா முருகன்

இசை – விக்னேஷ் ராஜா

மேலாண்மை – வினு சுந்தரம்

மக்கள் தொடர்பு – பரணி அழகிரி (PRO)

ஆடை வடிவமைப்பு – Beaulet


இளமைத் துடிப்பு நிறைந்த visuals, catchy music, இயல்பான கதாபாத்திரங்கள் மற்றும் கலகலப்பான சூழ்நிலைகள் என ஒவ்வொரு அம்சத்திலும் ரசிகர்களுக்கு ரசனையான அனுபவத்தை வழங்க படக்குழு பணியாற்றி வருகிறது.


‘பொதுநலன்கருதி’ முதல்… புதிய வண்ணத்தில் சீயோன் ராஜா!


இயக்குநர் சீயோன் ராஜாவின் ‘பொதுநலன்கருதி’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, அவரது ‘சமூகவிரோதி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.



ஒரு பக்கம் இளமை…

மறுபக்கம் குடும்பம்…

நடுவில் காதலும் நட்பும்…

அனைத்தையும் சுற்றி செம கலாட்டாவும்!


இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும், தலைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகி, சினிமா ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் படக்குழு தற்போது fun mode-ல் பரபரப்பாக பணியாற்றி வருகிறது.


சிரிக்கலாம்… ரசிக்கலாம்… feel பண்ணலாம்… குடும்பத்தோடு கொண்டாடலாம்! ❤️🎬🔥

NOVA’ — A Tamil Film That Questions Time, Science and the Unknown

 ‘NOVA’ — A Tamil Film That Questions Time, Science and the Unknown







Produced by Royal Fortuna Creations and featuring Raiza Wilson, Dhruva, Adhivathi Shetty, Senrayan, Hrithika Biswas and “Finally” Swathika, ‘NOVA – Phase One: The Arrival’, directed by Milo, is gearing up for its theatrical release.


The title itself is intriguing. When asked about it, director Milo says that instead of following the familiar path of ghosts, haunted bungalows and revenge stories that usually define horror films in Tamil cinema, he has attempted to create a distinctive world that brings together time, human memories, science and fear.


The screenplay of NOVA is one of its biggest highlights. Rather than giving the audience immediate answers, the narrative is designed to keep raising questions throughout the film.


“This film should not be viewed merely as a horror film. It uses fear as a medium to tell a larger mystery. Our intention is to ensure that audiences walk out of the theatre with a few questions still lingering in their minds,” says director Milo.


One of the biggest visual challenges in NOVA was ensuring that sunlight would not appear in any scene of the film.


For this very reason, the team waited for dark clouds to gather before filming several sequences.


The 32-day shoot came with its own set of challenges, particularly due to the demanding natural surroundings.


According to Milo, the entire film was shot in a mountainous village in Kerala, and even reaching the shooting location itself was a challenge.


“Getting to that location was extremely difficult. The terrain was so challenging that there were days when someone would get hurt. But that was the location the story demanded. So, from the actors to the technical crew, everyone worked extremely hard,” says Milo.


There was only one reason behind all these difficulties — to ensure that the world created on screen never felt artificial.


A Screenplay That Doesn’t Spell Everything Out


Another distinctive aspect of NOVA is the director’s strong belief in the intelligence of the audience.


“The film needs to be watched very carefully from beginning to end. Because I have immense faith in the audience, I have deliberately avoided spelling everything out,” says Milo.


As a result, every small scene, every dialogue and even every character’s look could have a purpose.


The team has consciously chosen not to reveal the film’s central mystery.


Because in NOVA, certain truths are not meant to be told to the audience… they are meant to be discovered by them.


According to Milo, NOVA cannot be confined to a single genre.


Ghosts, demons, science fiction, the supernatural, space and different periods of history — the film brings together several distinct worlds and connects them in unexpected ways.


The team also reveals that several actors from outside the state have played important special appearances in the film.


However, none of these details have been revealed in a way that would give away the film’s crucial secrets.


“If we reveal everything about the film in advance, the experience of watching NOVA would change completely. So, certain things have to be discovered by the audience themselves inside the theatre,” says Milo.


Raiza Wilson’s character in NOVA is also said to be unlike anything she has portrayed before.


Most notably, her character does not have a single dialogue in the film.


Yet, without words, she creates the presence of the character through her eyes and body language, says the team.


“You will see Raiza in a completely different way in this film. She has no dialogue at all. But her eyes themselves will communicate a lot,” says Milo.


Director Milo is unwilling to reveal too much about the plot of NOVA.


And the reason is understandable.


The film’s greatest strength lies in its mystery.


Is it a science-based film?


Is it supernatural?


Or is it something beyond our imagination?


“Certain truths in NOVA are not meant to be told to the audience; they are meant to be discovered by them.”

நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

 ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும்  திரைப்படமா?







ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “நோவா"


பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ் சினிமாவில் திகில் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான பாதையைத் தாண்டி, காலம், மனிதர்களின் நினைவுகள், அறிவியல் மற்றும் பயம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சி செய்திருப்பதாகக் கூறுகிறார்.


பார்வையாளர்களுக்கு பதில்களை உடனடியாக வழங்காமல், படம் முழுவதும் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


“இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில கேள்விகளுடன் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்,” என்கிறார் இயக்குநர் மைலோ.


சூரியனே இல்லாத ஒரு திரைப்படம்!


நோவாவின் மிகப்பெரிய காட்சியமைப்புச் சவால்களில் ஒன்று, படத்தின் எந்தக் காட்சியிலும் சூரிய ஒளி தெரியக்கூடாது என்பதுதான்.


இதற்காகவே படப்பிடிப்பின்போது கருமேகங்கள் சூழும் வரை காத்திருந்து பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.


தொடர்ந்து 32 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில், இயற்கைச் சூழலும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறது.


முழுப் படப்பிடிப்பும் கேரளாவில் உள்ள மலைப்பகுதி கிராமம் ஒன்றில் நடைபெற்றது, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதே ஒரு சவாலாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்.


“அந்த இடத்திற்குச் செல்வதே மிகவும் கடினம். தினமும் யாருக்காவது அடிபடும் அளவுக்கு பாதை மிகவும் சிரமமானதாக இருந்தது. ஆனால் அந்த இடம்தான் கதைக்குத் தேவைப்பட்டது. அதனால் நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டுப் பணியாற்றினார்கள்,” என்கிறார் மைலோ.


இந்தச் சிரமங்களுக்கெல்லாம் காரணம் ஒன்றுதான் — திரையில் அந்த உலகம் செயற்கையாகத் தெரியக்கூடாது என்பதற்காக.


நோவாவில் பார்வையாளர்களின் அறிவாற்றல் மீது இயக்குநர் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பு.


“படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். பார்வையாளர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால், எதையும் பெரிதாக விளக்கிச் சொல்லவில்லை,” என்கிறார் மைலோ.


அதனால் படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய காட்சிக்கும், வசனத்திற்கும், கதாபாத்திரத்தின் பார்வைக்கும் கூட ஒரு காரணம் இருக்கலாம்.


படத்தின் உண்மையான மர்மம் என்ன என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பதையே படக்குழு விரும்புகிறது.


ஏனென்றால் நோவாவில் சில உண்மைகள் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுவதற்காக அல்ல… அவர்கள் கண்டுபிடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.


நோவா ஒரு குறிப்பிட்ட வகைத் திரைப்படத்திற்குள் மட்டும் அடங்கும் படமல்ல.


பேய், பிசாசு, அறிவியல் புனைவு, அமானுஷ்யம், விண்வெளி, வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்கள் என பல வித்தியாசமான உலகங்கள் ஒன்றோடொன்று இணையும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


மேலும், பல வெளிமாநில நடிகர்கள் முக்கியமான சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.


ஆனால் இவற்றில் எதுவும் கதையின் முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தும் அளவிற்கு முன்கூட்டியே கூறப்படவில்லை.


“இந்தப் படத்தைப் பற்றி எல்லாவற்றையும் முன்கூட்டியே சொல்லிவிட்டால், நோவாவைப் பார்த்த அனுபவமே மாறிவிடும். அதனால் சில விஷயங்களைப் பார்வையாளர்களே திரையரங்கில் கண்டுபிடிக்க வேண்டும்,” 


நோவாவில் ரைசா வில்சனின் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.


குறிப்பாக, ரைசாவின் கதாபாத்திரத்திற்கு ஒரு வசனம் கூட கிடையாது.


ஆனால் வசனங்கள் இல்லாமலேயே பார்வை மற்றும் உடல் மொழியின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் இருப்பை உணர்த்தியிருக்கிறது.


“ரைசாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறு விதமாகப் பார்ப்பீர்கள். அவருக்கு வசனமே கிடையாது. ஆனால் அவருடைய பார்வையே நிறைய விஷயங்களைச் சொல்லும்,” என்கிறார் மைலோ.

Wednesday, 26 August 2026

Toxic Movie Review

Toxic Tamil Movie Review

Toxic Movie Rating: 4/5

ஹாய் மக்களே, இன்னிக்கு நம்ம Toxic: A Fairy Tale for Grown Ups படத்தோட review-வை தான் பாக்கப் போறோம். இந்த படத்துல Yash, Nayanthara, Kiara Advani, Tara Sutaria, Huma Qureshi, Rukmini Vasanth, Sudev Nair னு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது Geetu Mohandas. Yash இந்த படத்துக்கு story, screenplay மற்றும் dialogues-லயும் பங்களிச்சிருக்காரு.



இந்த படத்தோட கதை Goa Portuguese ஆட்சிக்குள் இருந்த காலகட்டத்துல நடக்குது. அந்த நேரத்துல அங்க நடக்குற illegal opium trade-ஐ தன்னோட control-க்குள் கொண்டு வரணும்னு நினைக்குற Raya கதாபாத்திரத்துல Yash நடித்திருக்காரு. Crime boss Salvador-க்கு நம்பிக்கையான ஆளா இருக்குற Raya, கொஞ்சம் கொஞ்சமா தன்னோட empire-ஐ உருவாக்க ஆரம்பிக்குறாரு.


Raya-வோட வாழ்க்கையில அவரோட sister Ganga ரொம்ப முக்கியமானவங்க. Ganga கதாபாத்திரத்துல Nayanthara நடித்திருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் Goa-ல இருக்குற எல்லா illegal business-ஐயும் தங்களோட control-க்குள் கொண்டு வரணும்னு ஒரு பெரிய ambition இருக்கு. அதுக்காக Raya எந்த எல்லைக்கும் போக தயாரா இருக்குறாரு.


அதே நேரத்துல Salvador-ஓட daughter Rebecca-வை Raya திருமணம் செய்யப் போறாரு. Tara Sutaria இந்த character-ல நடித்திருக்காங்க. ஆனா Raya-வோட வாழ்க்கை வேறொரு direction-க்கு போகுது. Nadia என்ற circus performer கதாபாத்திரத்துல Kiara Advani கதைக்குள்ள வர்றாங்க. Nadia-வை பார்த்ததும் Raya-வோட வாழ்க்கையில ஒரு unexpected emotional change ஏற்படுது.


Raya பொதுவா emotions-ஐ வெளிப்படுத்தாத, violence-ஐ ரொம்ப சாதாரணமா எடுத்துக்குற ஒரு மனிதர். ஆனா Nadia அவனோட அந்த இன்னொரு முகத்தை வெளிக்கொண்டு வர்றாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் develop ஆகுற relationship தான் கதைக்கு ஒரு emotional layer கொடுக்குது. Nadia மூலமா Raya தன்னோட actions-ஐயும், அவனுக்குள்ள இருக்குற மனிதனையும் கொஞ்சம் கொஞ்சமா face பண்ண ஆரம்பிக்குறாரு.


ஆனா Raya-வோட வாழ்க்கை முழுக்க violence-ஆல நிரம்பியிருக்கு. ஒரு கட்டத்துல தன்னோட sister Ganga-வை காப்பாத்த violence-ஐ பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வருது. அதுக்கப்புறம் violence அவனோட வாழ்க்கையில இருந்து பிரிக்க முடியாத ஒரு விஷயமா மாறிடுது. Guns, knives, axes, bombs என action sequences படம் முழுக்க ஒரு பெரிய scale-ல அமைக்கப்பட்டிருக்கு.


இந்த படத்துல எனக்கு interesting-ஆ இருந்த விஷயம் என்னன்னா, Raya-வை வெறும் ஒரு powerful gangster-ஆ மட்டும் காட்டாம, அவனோட emotional side-ஐயும் explore பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க. குறிப்பா அவன் தன்னோட வாழ்க்கையில முக்கியமான மனிதர்களை இழந்த பிறகு உள்ளுக்குள்ள எப்படி empty ஆகிறான் என்பதுதான் கதையோட deeper emotional layer.


அந்த இடத்துல அவனோட மகன் Ticket கதைக்குள்ள வர்றாரு. Ticket கதாபாத்திரத்துலயும் Yash தான் நடித்திருக்காரு. Raya மற்றும் Ticket இருவருக்கும் இருக்கும் relationship கதைக்கு ஒரு புதிய dimension கொடுக்குது. தன்னோட வாழ்க்கை முழுக்க violence-ல போய்ட்டு இருக்குற Raya-வை, அவனோட மகனே ஒரு different reality-க்கு கொண்டு வர்ற மாதிரி இந்த portion அமைக்கப்பட்டிருக்கு.


Yash performance-ஐ பத்தி சொல்லியே ஆகணும். Raya character-க்கு தேவையான intensity-ஐ அவர் முழுசா கொண்டு வந்திருக்காரு. Body language, dialogue delivery, screen presence எல்லாமே ஒரு larger-than-life gangster feel கொடுக்குது. குறிப்பா Raya-வோட vulnerable moments வரும்போது Yash கொடுக்குற performance ரொம்ப different-ஆ இருக்கு.


அதே மாதிரி Ticket character-ல வரும்போது Yash completely வேற மாதிரியான energy-யை கொண்டு வந்திருக்காரு. அந்த character-ஓட unpredictable nature மற்றும் reckless attitude நல்லா work ஆகுது. ஒரே படத்துல இரண்டு வேற வேற shades-ஐ handle பண்ணியிருப்பது அவரோட performance-க்கு இன்னொரு plus.


Nayanthara Ganga character-ல முக்கியமான role பண்ணிருக்காங்க. Raya-வோட ambition-க்கு பின்னாடி இருக்குற ஒரு முக்கியமான driving force-ஆ Ganga இருக்காங்க. Raya மேல இருக்குற அன்பு, family-க்காக எதையும் செய்யணும்னு நினைக்குற attitude என Nayanthara character-க்கு நல்ல weight கொடுத்திருக்காங்க.


Kiara Advani-யோட Nadia character படத்துக்கு ஒரு soft emotional layer கொடுக்குது. Circus performer-ஆ இருக்குற Nadia, Raya-வோட aggressive personality-க்கு ஒரு complete contrast. Kiara அந்த character-ஐ calm-ஆவும் graceful-ஆவும் handle பண்ணிருக்காங்க. குறிப்பா Raya-வோட emotional side-ஐ வெளிக்கொண்டு வர்ற scenes நல்லா இருக்கு.


Tara Sutaria, Huma Qureshi மற்றும் Rukmini Vasanth ஆகியோரும் கதையோட முக்கியமான பெண் கதாபாத்திரங்கள்ல வர்றாங்க. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி shades கொடுக்கப்பட்டிருப்பதால் படத்தோட world இன்னும் பெரியதாக தெரிகிறது. Sudev Nair-க்கும் ஒரு முக்கியமான character இருந்தாலும், அவரோட screen presence இன்னும் நிறைய இடங்கள்ல பயன்படுத்தியிருக்கலாம் என்ற அளவுக்கு அந்த character-க்கு potential இருக்கு.


படத்தோட மிகப்பெரிய strength-ல ஒன்று visuals. Production design ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு. Goa-வோட அந்த காலகட்டத்தை ஒரு dark, stylish world-ஆ உருவாக்கியிருக்காங்க. Sets, costumes, vehicles, action locations என ஒவ்வொரு frame-ம் ஒரு பெரிய cinematic scale-ல இருக்கு.


Cinematography-யும் இந்த visual world-க்கு நல்ல support கொடுக்குது. Dark shades, dramatic lighting மற்றும் பெரிய scale compositions மூலமா Raya-வோட world-ஐ ஒரு fairy-tale மாதிரி இல்லாம ஒரு adult gangster fantasy மாதிரி present பண்ணியிருக்காங்க. Theatre-ல பார்க்கும்போது இந்த visuals இன்னும் பெரிய impact கொடுக்குற மாதிரி இருக்கு.


Action sequences-ம் படத்தோட முக்கியமான highlights. Gun fights, explosions, hand-to-hand combat என ஒவ்வொரு action block-ம் பெரிய scale-ல design பண்ணப்பட்டிருக்கு. Yash-ஐ ஒரு larger-than-life action hero-வா establish பண்ணுறதுல இந்த sequences நல்லா work ஆகுது.


Geetu Mohandas இந்த படத்துல ஒரு completely different world-ஐ உருவாக்க முயற்சி பண்ணிருக்காங்க. அவரோட previous films-ல இருந்த grounded storytelling-க்கு பதிலா இங்க ஒரு stylised gangster universe-ஐ explore பண்ணியிருக்காங்க. அதோட fairy-tale element மற்றும் adult themes-ஐ mix பண்ணியிருப்பது படத்துக்கு ஒரு unique identity கொடுக்குது.


குறிப்பா Raya-வோட character மூலமா violence ஒருத்தரோட வாழ்க்கையை எப்படி மெதுவா consume பண்ணுது, power மேல இருக்குற ஆசை எங்கே கொண்டு போகும், ஒருத்தர் தன்னோட actions-ல இருந்து எப்படி escape பண்ண முடியாம போறாரு என்பதையும் படம் explore பண்ணுது.


படத்துல characters நிறைய இருந்தாலும், ஒவ்வொருத்தரையும் வேற வேற பகுதிகள்ல கொண்டு வந்து கதையோட பெரிய world-ஐ உருவாக்கியிருக்காங்க. அதனால படம் ஒரு simple gangster story-யை விட ஒரு பெரிய crime universe மாதிரி feel கொடுக்குது.


Toxic-ல இன்னொரு முக்கியமான விஷயம் Raya மற்றும் Nadia-வோட relationship. இது வெறும் காதல் track-ஆ இல்லாம, Raya-வுக்குள்ள இருக்குற மனிதத்தன்மையை வெளிக்கொண்டு வர்ற ஒரு emotional connection-ஆ பயன்படுத்தப்பட்டிருக்கு. Nadia அவனை அவனே பார்க்காத ஒரு கண்ணாடி மாதிரி இருக்காங்க. அவளோட presence Raya-வோட character transformation-க்கு முக்கியமான காரணமா அமைகிறது.


அதே நேரத்துல Raya மற்றும் Ganga-வோட brother-sister bond-ம் கதையோட முக்கியமான emotional point. இருவரும் சேர்ந்து ஒரு பெரிய empire உருவாக்கணும்னு நினைக்குறாங்க. ஆனா அந்த ambition-க்காக அவங்க எவ்வளவு தூரம் போறாங்க என்பதுதான் கதையை இன்னும் intense ஆக்குது.


படத்தோட runtime நீளமா இருந்தாலும், அதுக்கேத்த மாதிரி ஒரு பெரிய world-ஐ establish பண்ணியிருக்காங்க. ஆரம்பத்துல இருந்து climax வரைக்கும் பல layers-ல characters மற்றும் situations expand ஆகுது. குறிப்பா second half-ல Raya-வோட past மற்றும் family emotions கதைக்கு இன்னும் depth கொடுக்குது.


மொத்தத்துல Toxic: A Fairy Tale for Grown Ups ஒரு சாதாரண gangster movie இல்ல. பெரிய scale-ல உருவாக்கப்பட்ட ஒரு stylish crime drama. Yash-ஓட powerful screen presence, Nayanthara-வோட strong character, Kiara Advani-யோட emotional performance, பிரம்மாண்டமான production design, action sequences மற்றும் visual presentation எல்லாமே படத்தோட major plus points.


குறிப்பா Yash-ஐ ஒரு different shade-ல பார்க்கணும்னு நினைக்குற ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதிய experience. Violence, power, family, love, revenge மற்றும் redemption எல்லாத்தையும் ஒரு பெரிய cinematic world-க்குள்ள கொண்டு வந்திருக்காங்க.


சோ பெரிய scale-ல ஒரு stylish gangster story, sema visuals, powerful action மற்றும் Yash-ஓட different performance பார்க்கணும்னு நினைக்குறவங்க Toxic-ஐ theatre-ல கண்டிப்பா try பண்ணலாம். குறிப்பா screen-ல பெரிய visual experience வேணும்னு நினைக்குறவங்களுக்கு இந்த படம் ஒரு proper theatrical treat-ஆ இருக்கும்!

Amaram Movie Review

Amaram Tamil Movie Review 

Amaram Movie Rating: 4/5

ஹாய் மக்களே, இன்னிக்கு நம்ம Amaram படத்தோட review-வை தான் பாக்கப் போறோம். இந்த படத்துல Rajan Tejeshwar, Ira Agarwal, George, Sai Dheena, Nagineedu, Kalki Rajan, Harish Peradi, Vasudevan Murali னு பலர் நடித்திருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது director Krishna. மலைப்பகுதியில வாழுற சாதாரண மக்களோட வாழ்க்கை, அவங்க சந்திக்குற பிரச்சனைகள், அதிகாரம், அரசியல், வன்முறைன்னு பல விஷயங்களை மையமா வச்சு இந்த கதையை உருவாக்கியிருக்காங்க.



இந்த படத்தோட கதையைப் பொறுத்தவரைக்கும் Arukan கதாபாத்திரத்துல Rajan Tejeshwar நடிச்சிருக்காரு. ஒரு மலை கிராமத்துல எந்த ஒரு பெரிய ambition-ம் இல்லாம, வாழ்க்கையை எப்படி கொண்டு போறதுன்னு தெரியாம இருக்குற ஒரு இளைஞன் தான் Arukan. ஆனா சூழ்நிலை அவனை கொஞ்சம் கொஞ்சமா ஒரு வேற மாதிரியான மனிதனா மாற்றுது.


அந்த பகுதியில இருக்குற ஏழை மற்றும் அப்பாவி மக்களை பயன்படுத்தி தங்களோட நிலத்தையும் அதிகாரத்தையும் பெருக்கிக்கொள்ள நினைக்குற influential landowners, Arukan-ஐ தங்களோட வேலைகளுக்காக பயன்படுத்த ஆரம்பிக்குறாங்க. ஒரு கட்டத்துல அவர்களுக்காக கொலை செய்யும் அளவுக்கு Arukan-ஓட வாழ்க்கை மாறிடுது. தன்னோட விருப்பத்தால இல்லாம, சூழ்நிலைகளால் ஒரு வன்முறையான வாழ்க்கைக்குள் அவன் சிக்கிக்கிறான்.


அதே நேரத்துல Sharmila Bharati என்ற கதாபாத்திரம் கதைக்குள்ள வர்றாங்க. அவங்க அப்பா கொலை செய்யப்படுற சம்பவம் தான் கதையோட மிகப்பெரிய turning point. அந்த சம்பவத்துக்கப்புறம் revenge, politics, power மற்றும் emotions எல்லாமே ஒன்றோட ஒன்று connect ஆக ஆரம்பிக்குது. Arukan மற்றும் Sharmila-வோட வாழ்க்கை எதிர்பாராத விதமா ஒன்றோட ஒன்று பின்னிப் பிணையுது. அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரோட journey எங்கே போகுது என்பதுதான் மீதி கதை.


Performance-ஐ பத்தி பாத்தோம்னா Rajan Tejeshwar தான் படத்தோட biggest highlight. Arukan character-ஓட emotions-ஐ body language மற்றும் facial expressions மூலமா நல்லா வெளிப்படுத்தியிருக்காரு. ஒரு சாதாரண இளைஞனா ஆரம்பிச்சு, சூழ்நிலை காரணமா violence-க்குள்ள போற மனிதனா மாறுற transformation-ஐ convincing-ஆ கொண்டு வந்திருக்காரு.


குறிப்பா climax fight sequence-ல Rajan Tejeshwar ஓட screen presence sema powerful-ஆ இருக்கு. Action scenes-ல அவர் காட்டுற intensity மற்றும் energy நல்ல impact கொடுக்குது. அந்த portion படத்தோட முக்கியமான highlights-ல ஒன்றா இருக்கு.


Female lead-ஆ வர்ற Ira Agarwal-ம் நல்ல performance கொடுத்திருக்காங்க. தன்னோட அப்பாவை இழந்த ஒரு பெண்ணோட வலி, அதுக்கப்புறம் அவளுக்குள்ள உருவாகுற revenge emotion, அதே நேரத்துல இருக்குற vulnerabilityன்னு எல்லாத்தையும் balanced-ஆ பண்ணிருக்காங்க. கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகுற முக்கியமான character-ஆ Sharmila இருப்பதால, Ira-வோட performance படத்துக்கு நல்ல strength கொடுக்குது.


George G, Sai Dheena, Nagineedu, Kalki Rajan, Harish Peradi, Vasudevan Murali மற்றும் மற்ற supporting actors எல்லாரும் தங்களோட கதாபாத்திரங்களுக்கு தேவையான realistic performance கொடுத்திருக்காங்க. குறிப்பா மலை கிராமத்து மனிதர்களோட வாழ்க்கையை நம்ம கண் முன்னாடி கொண்டு வர்ற மாதிரி அவங்களோட performances இயல்பா இருக்கு.


இந்த படத்தோட இன்னொரு பெரிய plus point atmosphere மற்றும் visual presentation தான். Mountain village-ல வாழுற மக்களோட வாழ்க்கையை ரொம்ப raw-ஆவும் realistic-ஆவும் காட்டியிருக்காங்க. அந்த இடத்துல இருக்குற இயற்கை அழகும், அதே நேரத்துல அங்க வாழுற மக்களோட struggles-ம் contrast-ஆ காட்டப்படுது.


Powerful landowners எப்படி hill people-ஐ தங்களோட சுயநலத்துக்காக பயன்படுத்துறாங்க, அதிகாரம் எப்படி சாதாரண மக்களோட வாழ்க்கையை பாதிக்குது என்பதையும் கதைக்குள்ள இயல்பா கொண்டு வந்திருக்காங்க. அதனால இது வெறும் revenge story-ஆ மட்டும் இல்லாம, அந்த மக்களோட வாழ்க்கை மற்றும் struggles-ஐயும் பேசுற ஒரு meaningful drama-வா மாறுது.


Cinematography-ஐ பத்தி சொல்லியே ஆகணும். Bharath Kumar mountain locations-ஐ ரொம்ப அழகா capture பண்ணியிருக்காரு. இயற்கையோட அழகையும், கதையோட dark மற்றும் intense mood-ஐயும் ஒரே நேரத்துல visuals மூலமா கொண்டு வந்திருக்காங்க. ஒவ்வொரு location-ம் படத்தோட atmosphere-க்கு நல்லா set ஆகுது.


Mickey J. Mayer-ஓட background score-ம் emotional scenes மற்றும் intense moments-க்கு நல்ல support கொடுக்குது. குறிப்பா serious scenes வரும்போது BGM அந்த emotions-ஐ இன்னும் elevate பண்ணுது. Visuals மற்றும் music ரெண்டுமே சேர்ந்து படத்துக்கு ஒரு immersive feel கொடுக்குது.


கதையில love, revenge, violence, politics, family emotionsன்னு பல elements இருந்தாலும், அதையெல்லாம் மலைப்பகுதி மக்களோட வாழ்க்கையோட இணைச்சு சொல்லியிருக்காங்க. சில இடங்கள்ல songs மற்றும் சில scenes காரணமா வேகம் கொஞ்சம் மாறினாலும், overall ஆ கதையோட core நல்லா work ஆகுது.


மொத்தத்துல Amaram ஒரு different ஆன rural drama. மலைப்பகுதி மக்களோட வாழ்க்கை, அதிகாரத்துக்காக அவங்களை பயன்படுத்துறவர்கள், revenge, love, politics மற்றும் emotionsன்னு பல விஷயங்களை கலந்து ஒரு intense கதையா கொடுத்திருக்காங்க. Rajan Tejeshwar மற்றும் Ira Agarwal-ஓட performances, mountain locations, cinematography மற்றும் background score படத்துக்கு பெரிய plus points.


சோ rural stories, intense emotions, revenge மற்றும் politics கலந்து ஒரு different ஆன படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்க Amaram-ஐ தாராளமா try பண்ணலாம். ஒரு raw-ஆன, emotional-ஆன மற்றும் visually engaging experience-ஆ இந்த படம் இருக்கும.

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

 *தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!*





பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


டார்லிங் கிருஷ்ணா மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரை ஆளுமை பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். டீசர், படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பார்வையை வழங்குவதோடு, கதையின் மையமாக இருக்கும் தந்தை – மகன் உறவு குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


டீசர் படத்தின் முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், அதன் உணர்வுப்பூர்வமான களத்தையும், முன்னணி நடிகர்களின் வலுவான நடிப்பையும் மட்டும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் படத்தின் மையக்கருவான தந்தை – மகன் உறவு குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. தனது இயல்பான நடிப்பாலும், நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் பிரகாஷ் ராஜ், ‘ஃபாதர்’ டீசரிலும் தனது திரை இருப்பால் கவனம் ஈர்த்துள்ளார். அவரது பார்வை, முகபாவனைகள் மற்றும் நடிப்பில் வெளிப்படும் உணர்வுகள் படத்தின் மைய உணர்வுக்கு முக்கியத்துவம் சேர்ப்பதாக அமைந்துள்ளன. மேலும், பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா இருவருக்கும் இடையேயான திரை உறவு குறித்தும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


‘ஃபாதர்’ படத்தின் மையத்தில் இருப்பது ஒவ்வொரு குடும்பத்தினரும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய தந்தை – மகன் உறவு. ஒரு தந்தை தனது அன்பை எப்போதும் வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்லை. பொறுப்பு, கண்டிப்பு, தியாகம், பாதுகாப்பு என குடும்பத்திற்காக அவர் அமைதியாகச் செய்யும் எண்ணற்ற செயல்களிலேயே அந்த அன்பு வெளிப்படும். அதே நேரத்தில், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரு மகன் தனது தந்தையை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளக்கூடும். இந்த இருவருக்கும் இடையே அன்பு, புரிதலின்மை, எதிர்பார்ப்புகள், கருத்து வேறுபாடுகள் என பல உணர்வுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி ஆழமான பாசப்பிணைப்பு இருக்கும். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே ‘ஃபாதர்’ திரைப்படம் ஆராய்கிறது.


குடும்பம், உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு மனதைத் தொடும் திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொழி, நாடு, கலாச்சாரம் என எல்லைகளைக் கடந்தும் பெற்றோர் – பிள்ளைகள் இடையேயான உறவு அனைவராலும் உணரக்கூடியது என்பதால், இப்படத்தின் கதைக்கரு பொதுவான ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


‘ஃபாதர்’ குறித்து  R. சந்துரு


“‘ஃபாதர்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தக் கதையை கேட்ட அந்த நொடியிலேயே, இதன் மைய உணர்வு ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்புபடுத்தக்கூடியது என்று உணர்ந்தேன். தந்தை – மகன் உறவு மிகவும் தனித்துவமானது. அவர்களுக்குள் அன்பு, எதிர்பார்ப்புகள், புரிதலின்மை, கருத்து வேறுபாடுகள் என அனைத்தும் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்களை இணைப்பது ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு. இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த உணர்வுகள் அணுகப்பட்ட விதம்தான். ‘ஃபாதர்’ ஒரு உறவைப் பற்றி மட்டுமே பேசவில்லை. குடும்பம், அன்பு, பொறுப்பு, தியாகம் மற்றும் பல நேரங்களில் சொல்லப்படாமல் போகும் உணர்வுகளைப் பற்றியும் பேசுகிறது.


இந்தக் கதை மொழிகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் திறன் கொண்டது என்று நான் உறுதியாக நம்பினேன். மிகுந்த நேர்மையுடனும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையுடனும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். டீசருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். முழுத் திரைப்படம் அவர்களுக்கு இன்னும் ஆழமான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை வழங்கும் என்று நம்புகிறேன்.


டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தை மிகுந்த நேர்மையுடன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் சார் ஒரு அசாத்தியமான நடிகர். அவரது இருப்பு படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்திற்கு மிகப்பெரிய ஆழத்தை சேர்த்துள்ளது. இருவரின் கூட்டணி இப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது இறுதியில் உணர்வுகளைப் பற்றியது. ஒரு கதை பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் உணர வைத்தால், அது அவர்களுடன் நீண்ட காலம் பயணிக்கும். ‘ஃபாதர்’ படத்திலும் அந்த பலத்தை நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


‘ஃபாதர்’ குறித்து இயக்குனர் ராஜ்மோகன்


‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன், ‘ஃபாதர்’ மூலம் தந்தை – மகன் உறவின் ஆழமான உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.


“என்னைப் பொறுத்தவரை ‘ஃபாதர்’ ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். தந்தை – மகன் உறவு என்பது நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. பல குடும்பங்களில் தந்தைகள் தங்களது அன்பை வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பொறுப்பு, அக்கறை, கண்டிப்பு அல்லது அவர்கள் செய்யும் தியாகங்கள் மூலமாகவே அந்த அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வுகளை ஒரு மகன் சரியான நேரத்தில் புரிந்துகொள்ளாமல் போகலாம். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே படம் ஆராய்கிறது.


அன்பால் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தத் தெரியாத இரண்டு மனிதர்களின் பயணம்தான் இந்தப் படம். பார்வையாளர்கள் தங்களது வாழ்க்கையில் பார்த்த அல்லது அனுபவித்த ஏதோ ஒன்றை இந்தக் கதையில் உணர வேண்டும் என்பதே எனது நோக்கம். டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தில் முழுத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரகாஷ் ராஜ் சார் அசாத்தியமான ஆழத்தையும் உணர்வையும் கொண்டு வந்துள்ளார். இவர்களின் உறவுதான் படத்தின் மையம்.


டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் உற்சாகமளிக்கிறது. ஆனால் டீசர் என்பது ஒரு சிறிய பார்வை மட்டுமே. ‘ஃபாதர்’ படத்தின் முழுமையான பயணம் இன்னும் வலுவான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்” என்று ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


டீசருக்கு கிடைத்துள்ள நேர்மறையான வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இந்நிலையில், படத்தைப் பார்த்து கவரப்பட்ட Macis Productions, ‘ஃபாதர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் உள்ளடக்கம் மற்றும் ரசிகர்களிடம் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் மீது விநியோக நிறுவனத்திற்கு இருக்கும் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. R. சந்துருவின் தயாரிப்பு, ராஜ்மோகனின் இயக்கம், டார்லிங் கிருஷ்ணாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் பிரகாஷ் ராஜின் வலுவான திரை இருப்பு ஆகியவற்றுடன் ‘ஃபாதர்’ ஒரு அர்த்தமுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்பட அனுபவமாக உருவாகி வருகிறது.


விரைவில் திரையரங்குகளில்!


https://youtu.be/taPTp_psBeY?si=iBGvKoRkFnxTIJvw

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !

 *ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !* 













ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.


தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். 


‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.


ஃபேமிலி ரோம் காம் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், Gen Z தலைமுறை, 2K தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் மையமாகக் கொண்டு கலகலப்பான திரைக்கதையில் உருவாகிறது.


பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.


இப்படத்தில் ஜெயராம், சிம்ரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க வாழை படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பொன்வேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்டோர் முக்கிய இணைந்து நடிக்கின்றனர்.


படத்தின் ஒளிப்பதிவை தீபக் மேற்கொள்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்பை கவனிக்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாடல்களுக்கு கார்த்திக் நேதா வரிகள் எழுதுகிறார். அனுஷா விஸ்வநாதன் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.


M. முகமது சுபியர் ஆடை வடிவமைப்பையும், ஷயத் மாலிக் S ஒப்பனைப் பணிகளையும் கவனிக்கின்றனர். SN அஸ்ரஃப் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், D. உதயகுமார் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர். சரவணகுமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சாய்ராம் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் உள்ளனர். விஜய் வெங்கடராமன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.


கன்னதாசன் DKD விளம்பர வடிவமைப்பை மேற்கொள்கிறார். ஜெய்குமார் வைரவன் ஸ்டில்ஸ் பணிகளை கவனிக்கிறார். சதீஷ் (AIM) மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜ். கதிர்ஹாசன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.


படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், இப்படத்தின் பூஜை விழா உற்சாகமாக நடைபெற்றது. இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.