Featured post

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்

 ஊடக நண்பர்களுக்கு வணக்கம் பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இசைஞானி திரு. இளையராஜா அவர்களையும், மூன்று திரைப்படங்களுக்கு கதை, வசனம்...

Wednesday, 16 September 2026

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்

 ஊடக நண்பர்களுக்கு வணக்கம்


பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இசைஞானி திரு. இளையராஜா அவர்களையும், மூன்று திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய திரு. சரத்குமார் அவர்களையும் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன், இணைச் செயலாளர் பாஸ்கர் சக்தி, செயற்குழு உறுப்பினர் நவீன் ஆகியோர் சந்தித்தோம்.








“நீங்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக இருப்பது சங்கத்திற்குப் பெருமை” என்ற எங்களது வேண்டுகோளை இருவரும் உடனடியாக ஏற்றுக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கையெழுத்திட்டார்கள். எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் இருவருக்கும் ஒரு பேனா அன்புடன் வழங்கப்பட்டது.


நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணையும் தகுதியுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் பங்களித்து வரும் பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களைச் சங்கத்தில் இணைக்கும் நமது பணி தொடர்ந்து நடைபெறும். 


#SWAN

Tuesday, 15 September 2026

தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 *‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*








V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.


முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பை உருவாக்கியுள்ளார்.


தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி, சமூகத்தின் மற்றொரு பக்கத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சதுரங்க கட்டங்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவர்களைச் சுற்றிலும் நகரும் செஸ் காய்கள், கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சி என போஸ்டர் முழுவதும் கதையின் போராட்டத்தையும் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.


இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.


திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers” – Actress Nimisha Sajayan

 *“I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers” – Actress Nimisha Sajayan*





Acclaimed actress Nimisha Sajayan has consistently stood out for the remarkable naturalism and emotional depth she brings to every character. With an eclectic body of work spanning multiple languages and industries, she has steadily established herself as one of the most compelling performers of her generation. Her recent performances, including the much-appreciated Hindi release Babita Singh Reporting, has further reflected her ability to inhabit vastly different characters with complete conviction. As Enna Vilai heads towards its theatrical release, the actress is receiving encouraging appreciation from the early previews and press screenings, particularly for the emotional dimension of her character.


“When Sajeev narrated the story to me, he didn’t tell me which character he had in mind for me. He simply said, ‘Okay, now you pick.’ There were two beautifully written characters, and Rishi’s character was also brilliantly written. So, I was genuinely curious and a little sceptical about whether he was considering me for Vijayalakshmi’s character or role of Kanchana. But honestly, I was happy either way. I was completely open to taking up Viji’s character as well because I really liked the space the character offered..”


“But I already had a soft corner for Kanchana’s character. So, when Sajeev finally told me that the character was Kanchana, I was overwhelmed. I was almost in tears. I just hugged him and asked him, ‘Why did you do this?’ I wasn’t sure which character he was going to offer me because both were so beautifully and strongly written. But the moment he said, ‘It’s you,’ it became a very emotional moment for me. The beauty of Enna Vilai is that every character has a deep emotional arc. I didn’t have many combination scenes with Karunaas sir, but his performance is extraordinary. Vijayalakshmi’s character is also very hard-hitting, and she has excelled as a performer. I am so glad that the press and media fraternity has received the film so warmly. It is a bliss to receive such heartfelt appreciation for my character. Director Sajeev deserves all the credit for bringing these characters to life. I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers.”


Rooted in a socially relevant premise, Enna Vilai follows a man whose means of survival is tied to the coins devotees offer to the sea near Rameswaram. What begins as a struggle for dignity and livelihood gradually develops into a larger legal battle, bringing questions of justice, survival and human dignity into sharp focus.


The film brings together an ensemble cast featuring Karunaas, Nimisha Sajayan, Vijayalakshmi Veeramani, Saasha, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalites and others.


Written and directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The film features music by Sam C.S., cinematography by Alby Antony and editing by Sreejith Sarang. Enna Vilai is set to arrive worldwide in theatres on September 17, 2026.

என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

 *“என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!*





கவனம் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பாராட்டு பெற்று வருபவர் நடிகை நிமிஷா சஜயன். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது தலைமுறையின் திறமையான நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்திப் படமான ’பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது மாறுபட்ட கதாபாத்திரங்கள் இவரது நடிப்பு திறனுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த படங்கள் வரிசையில் ‘என்ன விலை‘ திரைப்படமும்  இணைய இருக்கிறது. படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பத்திரிகையாளர் திரையிடல்களில் கிடைத்துவரும் வரவேற்பு, படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.


நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, “சஜீவ் என்னிடம் கதையைச் சொன்னபோது, எனக்காக எந்தக் கதாபாத்திரத்தை மனதில் வைத்திருக்கிறார் என்பதை அவர் சொல்லவில்லை. ‘சரி, இப்போது நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்’ என்று மட்டும் கூறினார். இரண்டு கதாபாத்திரங்களும் மிக அழகாக எழுதப்பட்டிருந்தன. ரிஷியின் கதாபாத்திரமும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால், விஜயலட்சுமி அல்லது காஞ்சனா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேனா என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், நேர்மையாகச் சொல்வதென்றால், எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பேன். விஜியின் கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருந்தேன். ஏனென்றால், அந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


ஆனால், காஞ்சனா கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. அதனால்,  காஞ்சனா கதாபாத்திரத்தில் நான் நடிக்க போவதாக சஜீவ் என்னிடம் சொன்னபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அவரைக் கட்டிப்பிடித்து, ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டேன். இரண்டு கதாபாத்திரங்களுமே மிகவும் அழகாகவும், வலுவாகவும் எழுதப்பட்டிருந்ததால், எந்தக் கதாபாத்திரத்தை அவர் எனக்கு தரப் போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘அது உங்களுக்கான கதாபாத்திரம்’ என்று அவர் சொன்ன அந்த நொடி, எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்தது. 


’என்ன விலை’ திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆழமான உணர்வுப்பூர்வமான பயணம் உள்ளது. கருணாஸ் சாருடன் எனக்கு அதிகமான காட்சிகள் இல்லை. ஆனால், அவரது நடிப்பு அசாத்தியமானது. விஜயலட்சுமி கதாபாத்திரமும் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரும் சிறப்பாக நடித்துள்ளார். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் திரைப்படத்தையும் என் கதாபாத்திரத்தையும் பாராட்டியுள்ளது மகிழ்ச்சி. இந்தக் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக உருவாக்கியதற்கான முழுப் பாராட்டும் இயக்குநர் சஜீவுக்கே சேரும். ’என்ன விலை’ திரைப்படம் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார். 


சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.


இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார். ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

Hiphop Tamizha’s Meesaya Murukku 2 Trailer Strikes a Chord with Audiences; Crosses 5 M+ Views on YouTube

 *Hiphop Tamizha’s Meesaya Murukku 2 Trailer Strikes a Chord with Audiences; Crosses 5 M+ Views on YouTube*








The highly anticipated sequel is trending across platforms, promising a vibrant mix of music, romance, comedy, action and family emotions.


The much-awaited trailer of Hiphop Tamizha’s Meesaya Murukku 2 has received a fabulous response from audiences, crossing 5 million views on YouTube and continuing to trend across social media platforms. Creating strong anticipation for the sequel, the trailer offers a vibrant mix of dance, action, comedy, romance and family emotions, while travelling across different eras to connect with audiences from the 80s generation to Gen Z.


Adding to the growing excitement around the film, the recently released ‘Kalaivaniye’, the fifth single from the album, has received an overwhelming response from music lovers. The song joins the already popular tracks ‘Aura 10/10,’ ‘Pappali Pazhamey,’ ‘Goindhamma’ and ‘Adi Podi,’ all of which have emerged as chartbusters, dominating music platforms and social media.


With every song bringing its own distinct flavour, Meesaya Murukku 2 is shaping up to be a vibrant musical entertainer that blends youthful energy, romance, humour, friendship and family emotions. Hiphop Tamizha, who takes on multiple responsibilities as the writer, director and music composer, apart from playing the lead role, promises audiences yet another entertaining and musically rich experience.


The film features Hiphop Tamizha, Chaithra J Achar, Ketika Sharma and Ramya Ranganathan in prominent roles, alongside Harshath Khan, Karunaas, Nasser, Aadukalam Naren and Sha Ra.


Following the massive anticipation generated by its trailer and chartbuster songs, Meesaya Murukku 2 is gearing up for a worldwide theatrical release on September 25, 2026.


With its unique blend of music, romance, emotions, humour and celebration, Meesaya Murukku 2 promises an experience that goes beyond a conventional theatrical outing, it’s a concert in theatres.


*CAST*

* Hiphop Tamizha

* Chaithra J Achar

* Ketika Sharma

* Ramya Ranganathan

* Harshath Khan

* Karunaas

* Nasser

* Aadukalam Naren

* Sha Ra


*CREW*

* Writer & Director: Hiphop Tamizha

* Produced by: Avni Movies & Benzz Media Pvt. Ltd.

* Producers: Khushbu Sundar & ACS Arun Kumar

* Music Director: Hiphop Tamizha

* Editor: Fenny Oliver

* Director of Photography: Balaji Subramanyam

* Additional DOP: Madhesh Manickam

* CEO, Benzz Media: R Madhan Kumar

* Executive Producer: Anandita Sundar

* Creative Producer: Aswin Raam

* Costume Designer: Poornima Ramaswamy

* Art Director: V S Dinesh Kumar

* Production Executive: P Balagopi

* Choreography: Baba Baskar, Santhosh, Raghu Thapa

* Stunt Director: Action Sandhosh

* DI: Knack Studios

* Colorist: Prasath Somasekar

* VFX: 85FX, Hocus Pocus

* Additional Dialogues: Karan Karky & Nithish D

* Title Card Animation: Ashwin Kumar

* Marketing: Bonk Digital

* Production Marketing Team: Beatroute

* Publicity Designs: Raghavartz

* Hair & Make-up Designer: Velmurugan

* Costumer: Arun

* Still Photographer: P K Raja

* Sound Mixing: Kannan Ganpat

* Sound Design: A Sathish Kumar

* Production Controller: Hari Venkat C

* Production Manager: Vignesh Rathinam

* PRO: Riaz K Ahmed, Paras Riyaz, Sathish (S2 Media)

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசாயா முருக்கு 2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!

 *ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசாயா முருக்கு 2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!*







80கள் முதல் Gen Z தலைமுறை வரை ரசிகர்களை கவரும் வகையில் இசை, காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.


ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீசாயா முருக்கு 2’ திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்திலேயே யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறது.


படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள டிரெய்லர், நடனம், ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருங்கிணைத்து, அனைத்து தலைமுறை ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, 80களின் தலைமுறை முதல் இன்றைய Gen Z தலைமுறை வரை வெவ்வேறு காலகட்டங்களின் உணர்வுகளை இணைக்கும் வகையில் இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் வெளியான ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘கலைவாணியே’ பாடலுக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே வெளியான ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே, ‘கோயிந்தம்மா’ மற்றும் ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, சார்ட் பஸ்டர் பாடல்களாக உருவெடுத்து, இசை தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன.


ஒவ்வொரு பாடலும் தனக்கென தனித்துவமான இசை மற்றும் உணர்வை கொண்டுள்ள நிலையில், ‘மீசாயா முருக்கு 2’ இளமைத் துடிப்பு, காதல், நகைச்சுவை, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளை இசையுடன் இணைக்கும் வண்ணமயமான இசை கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.


இப்படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் இசையமைப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இதன் மூலம் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு மற்றும் இசை விருந்தை வழங்கத் தயாராகி வருகிறார்.


இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா, சைத்ரா ஜே. ஆச்சார், கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


டிரெய்லருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பும், சார்ட் பஸ்டர் பாடல்களும் ஏற்படுத்தியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ‘மீசாயா முருக்கு 2’ திரைப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசாயா முருக்கு 2’, வழக்கமான திரையரங்க அனுபவத்தைத் தாண்டி, திரையரங்குகளையே ஒரு இசைக் கச்சேரியாக மாற்றும் வண்ணமயமான கொண்டாட்டமாக அமையவுள்ளது.


*நடிகர்கள்*

• ஹிப்ஹாப் தமிழா

• சைத்ரா ஜே ஆச்சார்

• கேதிகா ஷர்மா

• ரம்யா ரங்கநாதன்

• ஹர்ஷத் கான்

• கருணாஸ்

• நாசர்

• ஆடுகளம் நரேன்

• கருணாகரன்


*தொழில்நுட்பக் கலைஞர்கள்*

கதை, இயக்கம்: ஹிப்ஹாப் தமிழா

தயாரிப்பு: அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்

இசை: ஹிப்ஹாப் தமிழா

படத்தொகுப்பு: பென்னி ஒலிவர்

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்

கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

CEO – பென்ஸ் மீடியா: ஆர். மதன் குமார்

நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்

ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி

கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார்

புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்: பி. பாலகோபி

நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா

சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்

DI: Knack Studios

கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்

VFX: 85FX, Hocus Pocus

கூடுதல் வசனங்கள்: கரண் கார்க்கி, நிதிஷ் D

டைட்டில் கார்டு அனிமேஷன்: அஷ்வின் குமார்

மார்க்கெட்டிங்: Bonk Digital

புரொடக்ஷன் மார்க்கெட்டிங்: Beatroute

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: Raghavartz

முடி & மேக்கப் வடிவமைப்பு: வேல்முருகன்

காஸ்ட்யூமர்: அருண்

ஸ்டில் புகைப்படம்: பி.கே. ராஜா

ஒலிக்கலவை: கண்ணன் கணபத்

ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ்குமார்

புரொடக்ஷன் கண்ட்ரோலர்: ஹரி வெங்கட் C

புரொடக்ஷன் மேனேஜர்: விக்னேஷ் ரத்தினம்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 Media)

பிக் பாஸ் தமிழ் வீட்டில் பரபரப்பு: ஷமாவுடன் வாக்குவாதத்தில் ஆவேசமான அவினாஷ் – “ஒவ்வொரு முறையும் ரூல்ஸை மாத்திக்கிட்டே இருக்கீங்க!

 *பிக் பாஸ் தமிழ் வீட்டில் பரபரப்பு: ஷமாவுடன் வாக்குவாதத்தில் ஆவேசமான அவினாஷ் – “ஒவ்வொரு முறையும் ரூல்ஸை மாத்திக்கிட்டே இருக்கீங்க!”*


பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் ஷமா மற்றும் அவினாஷ் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவுகிறது.


வாக்குவாதத்தின் போது ஆவேசமடைந்த அவினாஷ், “நீங்க ஒவ்வொரு முறையும் ரூல்ஸை மாத்திக்கிட்டே இருக்கீங்க!” என்று கோபமாக கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.


வாக்குவாதம் தீவிரமடைய, மற்ற போட்டியாளர்கள் அவினாஷை சமாதானப்படுத்த முயற்சி செய்து அவரை பிடித்து தடுத்து நிறுத்துகின்றனர். இருப்பினும், இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது.


ஒரு கட்டத்தில், இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளும் விதமாக ஷமா ஆவேசத்துடனும் அலட்சியமாகவும் “கெளம்பு” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.


ஷமா மற்றும் அவினாஷ் இடையேயான இந்த மோதல் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


*பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.*

Heated Showdown in the Bigg Boss Tamil House! Avinash Loses His Cool as Shama Says “Kelambu”

 *Heated Showdown in the Bigg Boss Tamil House! Avinash Loses His Cool as Shama Says “Kelambu”*



Tensions rise inside the Bigg Boss Tamil Season 10 house as Shama and Avinash get into a heated argument over the rules of the game.


During the confrontation, Avinash loses his temper and furiously questions the others, saying, “You guys change the rules every time,” expressing his frustration over what he feels are changing rules and expectations.


As the argument escalates, the other housemates step in and try to hold Avinash back and calm him down. However, the heated exchange continues before Shama chooses to walk away from the conversation, dismissing Avinash with an arrogant “Kelambu.”


The tense confrontation adds another layer of drama to the house, with the clash highlighting the growing differences between the contestants.


*Tune in to Bigg Boss Tamil Season 10 at 9:30 PM on Vijay TV and stream it anytime on JioHotstar. Catch the Bigg Boss house live 24x7 on JioHotstar.*

தமிழக இயக்குனர் சபரி நாதன் இயக்கும் குஜராத்தி திரைப்படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’

 தமிழக இயக்குனர்   சபரி நாதன் இயக்கும் குஜராத்தி  திரைப்படம்

‘ஸ்ரீ கேசரி நந்தன்’

கஅட்ல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அட்ல் எம். போசாமியா தயாரித்து வழங்கும் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’, குஜராத்தி திரையுலகின் முதல் பான்இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.





இத்திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், குஜராத்தி சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படம் குஜராத்தி மொழியில் மட்டுமல்லாமல், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என மொத்தம் 7 இந்திய மொழிகளில் வெளியாகிறது.

தென்னிந்திய மற்றும் குஜராத்தி கலைஞர்களின் தனித்துவமான கூட்டணி

இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தை விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் எழுதி இயக்குகிறார்.

பிரபல நடிகர்களான அர்பித் ரங்கா மற்றும் மௌலிக் சௌஹான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

சர்வதேச தரத்திலான காட்சியமைப்பை உருவாக்குவதற்காக, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

புகழ்பெற்ற கன்னட இசையமைப்பாளர் அபிநந்தன் காஷ்யப் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் மஹிபால் சிங் ரணாவத், ராஜேஷ் தாக்கூர், ஹிரேன் படேல் மற்றும் பரேஷ் ஜக்டா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

பக்தி, கலாச்சாரம் மற்றும் மாற்றத்தின் பிரம்மாண்டக் கதை

நம்பிக்கை, பக்தி, பாரம்பரியம் மற்றும் மாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’, பாரம்பரியமான ஒரு கதையை நவீன தொழில்நுட்பத்துடனும் தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்க பாணியுடனும் இணைத்து திரையில் கொண்டுவருகிறது.

குஜராத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய மதிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக இப்படம் உருவாகிறது.

‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ராம நவமி தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

குஜராத்தி சினிமாவுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் இந்தத் திரைப்படம், இந்திய சினிமாவின் பல்வேறு பிராந்தியங்களையும் கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.