Featured post

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை

 தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS  – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை !!  இசைப் பயணத்தின் புதிய மைல்கல்: ‘புரியாத புதிர்...

Saturday, 31 January 2026

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை

 தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS  – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை !! 








இசைப் பயணத்தின் புதிய மைல்கல்: ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழக அரசு விருது பெற்ற சாம் CS !!


தமிழக அரசு சார்பில் 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகள் வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு, 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழக அரசு மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான பின்னணி இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த  சாம் CS விருது பெற்றிருப்பது, அவரை நேசிக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து தன் தனித்துவமான பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ‘ஒரு இரவு’, ‘அம்புலி’ போன்ற படங்களின் மூலம் இசைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு, ஆர் டி எக்ஸ், புஷ்பா 2, மஹாவதார் நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் உருவாக்கிய த்ரில்லிங் மற்றும் உணர்வுப்பூர்வமான இசை, ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, ‘புரியாத புதிர்’ படத்தில் கதையின் மனநிலையை நுணுக்கமாக பிரதிபலிக்கும் அவரது இசை, படத்தின் த்ரில்லர் அனுபவத்தை இன்னும் தீவிரமாக்கியதாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில், அந்தப் படத்திற்காக தமிழக அரசு சார்பில் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது, இது அவரது இசைப் பயணத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.


இந்த விருது குறித்து இசையமைப்பாளர் Sam C. S. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்கு தமிழக அரசு மாநில விருது வழங்கியிருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் ஆழ்ந்த மனநிறைவையும் தருகிறது. ஒரு இசையமைப்பாளராக எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன். இது என்னை மேலும் உற்சாகப்படுத்தும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. இத்தருணத்தில் ‘புரியாத புதிர்’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் திரைப் பயணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் ரசிகர்களின் மனதைத் தொடும், அவர்களை மகிழ்விக்கும் தரமான படைப்புகளில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


பாலிவுட் தொடங்கி இந்தியாவின் பல மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் உள்ளிட்ட, பல முக்கியமான படைப்புகளில் சாம் CS இசையமைப்பாளராக  பணியாற்றி வருகிறார். அதில் முக்கியமாக ரவிமோகனின் "கராத்தே பாபு", கார்த்தியின் "சர்தார் 2' உள்ளிட்ட பல பிரபலங்களின் டங்களில் பணியாற்றி வருகிறார். இந்த தமிழக அரசு மாநில விருது, அவரது இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்

 இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்



அபிஷன் ஜீவந்த் நடிக்கும் 'வித் லவ் ( With Love)' படத்தின் டிரெய்லர் வெளியீடு

'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ் ( With Love )' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள்.


அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வித் லவ் ' ( With Love) எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த்,  அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன்,  சரவணன், தேனி முருகன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை K. சுரேஷ்குமார் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.‌  


இதில் கதையின் நாயகனான அபிஷன் ஜீவிந்த் மற்றும் கதாநாயகி அனஸ்வரா ராஜன், தான் பள்ளிப் பருவத்தில் காதலித்தவர்களிடம் சொல்லமுடியாத காதலை சொல்ல இணைந்து பயணிப்பதும் ...அது தொடர்பான காட்சிகள், வசனங்கள் - பின்னணி இசை என அனைத்து அம்சங்களிலும் இருப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.


இப்படத்தின் டைட்டில் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது .  


பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது



Link : https://www.youtube.com/watch?v=je1xB5ColOQ

Friday, 30 January 2026

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து*

2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, ஏழு வருடங்களுக்கான, தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பெற்றுள்ள நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்; 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் விருது பெற்றுள்ள சின்னத்திரை நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினரான பல தயாரிப்பாளர்களின் திரைப்படங்கள் இவ்விருதுகளை பெற்றுள்ளது, நமது சங்கத்திற்கு பெருமையை தந்துள்ளது.


கலைஞர்களை கௌரவித்து, அடையாளமும், அங்கீகாரமும் வழங்கியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தேர்வுக்குழுவினருக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.


பல வருடங்களாக, இந்த விருதுகளுக்காக காத்திருந்த கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த நற்செய்தி மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பிப்ரவரி 13, 2026 அன்று, விருது பெரும் அனைவருக்கும், இவ்விருதுகளை வழங்க உள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நமது சங்கத்தின் நன்றிகள்.



நன்றியுடன்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,

தலைவர் மற்றும் நிர்வாகிகள்.

அமேசான் பிரைமில் "படையாண்ட மாவீரா

 *அமேசான் பிரைமில் "படையாண்ட மாவீரா"*



வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெறும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய "படையாண்ட மாவீரா"   

 

தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது. 


வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் "படையாண்ட மாவீரா" கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.


படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா  

தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடித்திருக்கிறார்.


மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார்,

பின்னணி இசை சாம் சிஎஸ்,  பாடல்கள் "கவிப்பேரரசு" வைரமுத்து.  "ஸ்டண்ட்" சில்வா, நடனம் தினேஷ்,  ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன், வெற்றிவேல் மகேந்திரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் முருகன்.


சாதி, மதம், மொழி, இனம், நாடு கடந்து தன் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் இப்படைப்பு மெய்சிலிப்போடு கொண்டாட வைக்கும் என  உறுதிபட சொல்லும் இயக்குநர் வ.கௌதமன் மேலும் இப்படைப்பினை குடும்பங்களோடு பார்ப்பதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதும் மிக மிக முக்கியமானது என்கிறார்.


பார்க்குமிடம் அமேசான் பிரைம் ஓடிடி ரெண்டல் தளம்.


Check it out now on Prime Video!


https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.a2016b0a-5e0a-4ee2-afc9-175cdc116f92&ref_=atv_dp_share_mv&r=web

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் ‘மரகதமலை

 பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் ‘மரகதமலை’!






அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘மரகதமலை’!


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் ‘மரகதமலை’ படம் பிடிக்கும் - இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை


தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’. 


அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். 


இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.


படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ள இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.லதா, பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேசுகையில், “எனக்கு மேஜிக்கல், ராஜா, ராணி, மிருகங்கள் படங்கள் பிடிக்கும், அப்படிப்பட்ட படம் எடுக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. அதனால் நானே கதை எழுதி, இயக்கி தயாரித்திருக்கிறேன்.


மரகதமலை படத்தின் கதையை 18 ஆம் நூற்றாண்டில் நடப்பது போல் எழுதியிருக்கிறேன். ஜமீனிடம் இருக்கும் புதையலை கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அவர்களிடத்தில் இருந்து புதையலை காப்பாற்றுவதற்கான ஜமீன் தன் மனைவி, பிள்ளையை காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது அனைவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ?, ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா /, என்பதை தான் சாகசங்கள் நிறைந்த மாயாஜால உலகத்தோடு சொல்லியிருக்கிறேன்.


தடா வனப்பகுதியில் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குதிரையை மட்டும் ஒரிஜினலாக பயன்படுத்தி விட்டு, மற்ற விலங்குகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஆனால், அது கிராபிக்ஸ் போல் தெரியாதவாறு காட்சிகள் தரமாக வந்திருக்கிறது. அதேபோல், படத்தில் டிராகனையும் உருவாக்கியிருக்கிறோம், தமிழ் சினிமாவில் டிராகனை இதுவரை யாரும் படத்தில் பயன்படுத்தியதில்லை, நாங்கள் தான் முதல் முறையாக செய்திருக்கிறோம். இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும்.


தடா வனப்பகுதியில் கடந்த 15 வருடங்களாக படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், நாங்கள் சிறுவர்களுக்கான படம் எடுப்பதால் எங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம், இரவு நேரங்களில் அப்பகுதியில் புலிகள் வருவதோடு, பல விஷ பாம்புகளும் வரும் என்று எச்சரித்தார்கள். சிறுவர்களை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியதால் மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்பு அம்சங்களோடு படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.


படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது. ஒரு விநாயகர் பாடலை நான் எழுதியிருக்கிறேன், மிக சிறப்பாக வந்திருக்கிறது. பாடகி சின்மயி இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். பாடல்கள் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். ஒளிப்பதிவாளர் முத்தையாவின் பணி நிச்சயம் பேசப்படும். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரும் பிரபலமானவர்கள். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக நாங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டை படம் தாண்டியது. எனவே படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. 


சில இயக்குநர்களிடம் என் கதையை சொன்ன போது, அவர்கள் பல மாற்றங்கள் செய்ய தொடங்கி விட்டார்கள், ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. என் கதை நான் எழுதியது போலவே எந்தவித மாற்றமும் இன்றி திரைப்படமாக வேண்டும் என்பது தான் என் விருப்பம். எனவே, மற்றவர்களிடம் கொடுத்து இயக்க சொல்வதை விட நாமே இயக்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டேன், அப்படி தான் நான் இயக்குநர் ஆனேன். 


சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அனைத்து அம்சங்கள் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு படமாக மரகதமலை இருக்கும். படத்தை முடித்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாவதோடு, படம் பற்றிய மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை அடுத்தடுத்த சந்திப்புகளில் தெரிவிப்போம்.” என்றார்..


எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கல் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக நா.விஜய் பணியாற்றுகிறார்.

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu



ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற விருதை பெற உள்ளேன். விழா பிப்ரவரி மாதம் 13ம் தேதி கலைவாணர் அரங்கில். விருது வழங்குபவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். இந்த சந்தோஷ நேரத்தில் என்னை அறிமுகப்படுத்திய, தொடர்ந்து வாய்ப்பு அளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

Tks to my producer 

Sundar. C

Thursday, 29 January 2026

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*

 *ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம்,  மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*



இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில்  வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு,  ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமே “சிறை” படத்தின் மையம். அதிகாரம், மனிதநேயம், மனசாட்சியின் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து நகரும் இந்த கதை, ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கிறது. நாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்‌ஷய் குமார் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.


இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.


திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ZEE நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ZEE5 இல் வெளியானதும் “சிறை” திரைப்படம் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் வலுவான விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்ததன் விளைவாக, படம் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


மண் சார்ந்த உண்மைக் கதைகளை தரமான உருவாக்கத்துடன் வழங்கும் ZEE5 தமிழ், தொடர்ந்து இப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளை தமிழ்  பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக கொண்டு வருகிறது. அந்த வரிசையில் “சிறை” திரைப்படம், தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஓடிடி சாதனைகளில் ஒன்றாக தன்னை பதிவு செய்துள்ளது. 


உணர்வுபூர்வமான, தாக்கம் மிக்க ஒரு அனுபவத்தை தேடும் ரசிகர்கள், “சிறை” திரைப்படத்தை ZEE5 தளத்தில் தவறாமல் கண்டுகளிக்கலாம்.

Mellisai Tamil Movie Review

Mellisai Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம   mellisai   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dhirav. இந்த படத்துல G.Kishore Kumar ,Subatra ,MaryanRobert ,George Maryan ,Harish Uthaman ,Dhananya Varshini ,Jaswant Manikandan னு பலர் நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். 


rajan அ நடிச்சிருக்க kishore ஒரு school ல pt teacher அ work பண்ணிட்டு இருக்காரு. இவருக்கு singing ன்றது passion ஒரு பக்கம் teacher அ இருந்தாலும் இவரோட passion யும் follow பண்ணிட்டு இருக்காரு. இவரோட wife தான் vidya வ நடிச்சிருக்க Subatra Robert , இவங்களும் அதே school ல தான் ஒரு teacher அ work பண்ணிட்டு இருப்பாங்க. இவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. இவங்க ஒரு சாதாரண middle  class family தான். ரொம்ப வசதி இல்லனாலும் இருக்கிறதா வச்சுக்கிட்டு சந்தோசமா இருக்கற ஒரு குடும்பம் தான் இவங்க. இப்போ Rajan க்கு அவரோட job எல்லாம் பிரச்சனை ஆயிடுது, அதே சமயம் இவரோட பெரிய பையன்க்கு ஒரு IT கம்பெனி ல வேலை கிடைக்குது. வேலை கிடைச்சு family க்கு support பண்ணுற பையனோட character வேற மாதிரி மாறிடுது. இதுனால இவங்க குடும்பத்துல ஒரு விரிசல் விழுது. இந்த விரிசல் சரி ஆச்சா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு middle class family க்குல  வர பிரச்சனைகள், ego , கோவம், பொறாமை , பசங்க parents கிட்ட திமிர நடந்துக்கறது னு பல விஷயங்களை இந்த படத்துல காமிச்சிருக்காங்க. kishore எப்பவும் போல ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காரு. ஒரு பக்கம் தன்னோட job ல வர பிரச்சனைகளை நினச்சு வர வருத்தம் இன்னொரு பக்கம் அவரோட பெரிய பையன்க்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு நினச்சு வர பெருமை னு ரொம்ப நேர்த்தியா நடிச்சிருக்காரு. subathra ஓட performance யும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட கதையை ஒரு flashback story மாதிரி தான் கொண்டு வந்திருக்காங்க. இதுல வர நெறய விஷயங்கள் real life ல நடக்கிறது தான் அதுனால அதா  பாக்கும்போது audience ஆழ relate பன்னிக்கமுடியும். music, visual எல்லாமே அட்டகாசமா இருந்தது. இந்த படத்தை பாக்கும்போது பசங்க வாழக்கை ல parents ஓட importance எவ்ளோ முக்கியம், emotional அ connect ஆகுறது, life ல நெறய விஷயங்கள் இருந்தாலும் நேரத்துக்கு ஏத்த மாதிரி priority குடுக்க தெரிறது னு நெறய விஷயங்களை இந்த படம் மூலமா சொல்லிருக்காங்க.  


actors ஓட strong ஆனா performance , மனச நெருடரா மாதிரியான கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

Granny Tamil Movie Review

Granny Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம granny படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vijaya Kumaaran . இந்த படத்துல Vadivukkarasi, Dhileepan, SingaPuli, Gaja Raja, Ananthu Nag, Aparna, னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு horror thriller படம்.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.

ஒரு சின்ன கிராமத்துல ஒரு கொழந்தை மர்மமான முறை ல இறந்து போயிடுறேன். இதை பத்தி விசாரிக்கறதுக்காக police இந்த case அ handle பண்ணுறாங்க. அதே சமயம் london ல வந்த ஒரு couple க்கு அவங்களோட பூர்விக சொத்து அ ஒரு வீடு இருக்கும். இங்க தங்க வருவாங்க அப்போ அந்த வீடு முன்னாடி ஒரு வயசான பாட்டி மயங்கின நிலை ல கிடைக்கறாங்க. இவங்களுக்கு இந்த couple உதவி பண்ணுறாங்க. இந்த பாட்டி தான் வடிவுக்கரசி. இந்த வீட்டோட உண்மையான owner ஏ இவங்களோட husband தான். இவங்களோட husband மாந்த்ரீகம் பண்ணி இளமையா மாறுறதுக்கான வழிய கண்டுபிடிச்சிப்பாரு. இப்போ இங்க தான் vadivukarasi யும் இந்த couple யும் இருக்காங்க. இதை பத்தி எதுவுமே தெரியாம இந்த பிரச்சனை ல இவங்க ரெண்டு பேரும் மாட்டிக்கிறாங்க. அது மட்டும் இல்ல இவங்களுக்கு ரெண்டு பசங்களும் இருப்பாங்க. அவங்களும் பெரிய ஆபத்து ல மாட்டிக்கிறாங்க. இந்த பிரச்சனை ல இருந்து இவங்க தப்பிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட மிக பெரிய பலமே கதைக்களம் தான். அவ்ளோ interesting ஆவும் thrilling ஆவும் கதையை director கொண்டு போயிருக்காரு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா tension அ build பண்ணிட்டு போற விதம் எல்லாமே super  அ இருந்தது. vadivukarasi villain character ல நடிச்சாலே மிரட்டலா தான் இருக்கும். இந்த படத்துல இவங்கள பாத்தாலே பயம் தான் வருது. அந்தளவுக்கு இவங்க character அ detailed அ convey பண்ணிருக்காங்க. ஒரு horror படத்துக்கு என்னனா தேவையோ அதெல்லாம் இந்த படத்துல குடுத்திருக்காங்க. இந்த படத்தோட  visuals எல்லாமே பக்காவா இருந்தது. இவங்க ஒரு உண்மையான வீட்ல தான் shooting எடுத்திருக்காங்க அதுனால பாக்குறதுக்கு original அ இருந்தது. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vadivukarasi ஓட performance தான் தனித்துவமா இருக்கு. இவங்களோட screen presence அவ்ளோ strong அ இருந்தது னு தான் சொல்லணும். இவங்களுக்கு makeup போட்டு இருந்த விதமும் அட்டகாசமா இருந்தது.  Ananth Nag, Dhileepan and Singampuli இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. மத்த Supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க.  


 ஒரு பக்காவான thriller  கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.