Featured post

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!

 நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு! டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் ...

Tuesday, 7 April 2026

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!

 நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!




























டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.

இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார் பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.


இன்றைய விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ஃபைவ் ஸ்டார் செந்தில் ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா. SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் ஸ்ரீகணேஷ் கணேஷ் K பாபு வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.


தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:-


பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.


இயக்குநர் சரண் பேசியதாவது:-


பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:-


பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.


இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.


இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:-


இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது:-


இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.


நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது:-


எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


நடிகர் விஷால் பேசியதாவது:-


நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.


நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.


இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


நடிகை தேவயானி பேசியதாவது:-


ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். 


முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.


அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது.

அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.


ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:-


'எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.


பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.


இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.


இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-


அனைவருக்கும் வணக்கம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.

முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கள் நடிப்பது மகிழ்ச்சி ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி கண்மணி புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.


மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சார் சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார் பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும் மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.


நடிகர் பிரஷாந்த் பேசியதாவது:-


இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.


இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.


எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.


இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.


இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இந்தியாவில் ரூபாய் 1,000 கோடியை நெருங்கும் துரந்தர் பழிவாங்கல்

 *இந்தியாவில் ரூபாய் 1,000 கோடியை நெருங்கும் துரந்தர் பழிவாங்கல்!*



2-வது வார முடிவில் ரூபாய் 950 கோடியை (இந்திய நெட் வசூல்) கடந்தது! உலகளவில் ரூபாய் 1,500 கோடி வசூலித்து சாதனைபயணத்தை தொடர்கிறது!


ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை தொடர்கிறது. 2-வது வார முடிவில் இதுவரை இல்லாத வேகத்தில் ரூபாய் 961 கோடி (நெட்) வசூலித்து, இந்தியாவில் ரூபாய் 1,000 கோடி என்ற இமாலய மைல்கல்லை நெருங்கியுள்ளது. 


உலகளவிலும் திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை உலகளவில் ரூபாய் 1,501 கோடி பிரம்மாண்ட வசூலை குவித்து சர்வதேச அளவிலும் தனது அசாதாரணமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. வெறும் இரண்டு வாரங்களில், இந்திய சினிமாவின் உலகளாவிய அளவுகோல்களை மாற்றியமைத்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது.


பிரம்மாண்டமான ஓப்பனிங் மற்றும் சாதனை படைத்த இரண்டாவது வார இறுதிக்கு பிறகு, 2-வது வாரத்தின் வேலை நாட்களிலும் (திங்கள் முதல் வியாழன் வரை) படம் மிக வலுவாக நின்றது. இந்தியா மற்றும் முக்கிய சர்வதேச சந்தைகளில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்து குறிப்பிடத்தக்க வசூலை குவித்துள்ளது.


*வசூல் விவரம் (இந்தியா)*


*முதல் வார மொத்தம் (8 நாட்கள்) – ரூபாய் 690.00 கோடி (நெட்)*

*2-வது வார இறுதி மொத்தம் – ரூபாய் 177.00 கோடி*


*2-வது வார வேலை நாட்கள்*


நாள் 12 – திங்கள் – ரூபாய் 26 கோடி

நாள் 13 – செவ்வாய் – ரூபாய் 28 கோடி

நாள் 14 – புதன் – ரூபாய் 21 கோடி

நாள் 15 – வியாழன் – ரூபாய் 19 கோடி


*2-வது வார மொத்தம் – ரூபாய் 271 கோடி*


இந்தியா NBOC (நெட் வசூல்) – ரூபாய் 961.00 கோடி

இந்தியா GBOC (க்ராஸ் வசூல்) – ரூபாய் 1,134 கோடி


*வெளிநாடுகள் (OVERSEAS)*


வாரம் 1 + வாரம் 2 – ரூபாய் 367 கோடி


*உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்*


ரூபாய் 1,501 கோடிகள்

 

*துரந்தர் பழிவாங்கல் - சாதனை பயணம்*


- எக்காலத்திற்கும் சிறந்த ஓப்பனிங் வசூல் செய்த ஹிந்தி படம்

- கட்டண பிரிவியூ  மூலம் அதிக வசூல் செய்த படம்

- உலகளவில் முதல் வார இறுதியில் அதிக வசூல்

- அதிக முதல் வார வசூல்

- அதிக 2-வது வார வசூல்

- உலகளவில் மிக வேகமாக ரூபாய் 1000 கோடியை எட்டிய படம்

- மிக வேகமாக 100, 200, 300, 400, 500, 600, 700, 800 மற்றும் 900 கோடிகளை எட்டிய படம்

- வெளிநாட்டு சந்தைகளில் (முதல் வாரத்திற்குள்) மிகப்பெரிய வசூல் செய்த இந்திய படம்

- வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்தியப் படம்

- 'துரந்தர் பாகம் 1' படத்தின் வாழ்நாள் வெளிநாட்டு வசூலை வெறும் 10 நாட்களில் முறியடித்தது.

DHURANDHARTHEREVENGE INCHES AWAY FROM ₹1,000 CRORE IN INDIA

 *#DHURANDHARTHEREVENGE INCHES AWAY FROM ₹1,000 CRORE IN INDIA!*



*CROSSES ₹950 CRORES (INDIA NETT) BY END OF WEEK 2*


*CONTINUES RECORD-SMASHING GLOBAL RUN, GROSSING ₹1,500 CRORES WORLDWIDE*


Jio Studios & B62 Studios’ Aditya Dhar directorial *#DhurandharTheRevenge* continues its historic box-office domination, now just inches away from the coveted ₹1,000 Crore nett milestone in India, earning a phenomenal *₹961 Crores nett by the end of Week 2,* a feat never achieved at this pace before.


Globally, the film continues to soar with a staggering *₹1,501 Crores worldwide gross*, underlining its extraordinary international dominance as well.


Within just two weeks, it also emerged as the *biggest Indian grosser*, redefining global benchmarks for Indian cinema.


After a thunderous opening and a record second weekend, the film has held exceptionally strong through the weekdays of Week 2 (Monday to Thursday), delivering remarkable collections and maintaining its dominance across India and key international markets.


*BREAK-UP (INDIA)*


*WEEK 1 TOTAL (8 DAYS) – ₹690.00 Cr (nett)*

*Second Weekend Total – ₹177.00 Cr*


*WEEK 2 WEEKDAYS*


Day 12 – Monday – ₹26 Cr

Day 13 – Tuesday – ₹28 Cr

Day 14 – Wednesday – ₹21 Cr

Day 15 – Thursday – ₹19 Cr


*Week 2 Total – ₹271 Cr*


*India NBOC – ₹961.00 Cr*


*India GBOC – ₹1,134 Cr*


*OVERSEAS*

*Week 1 + Week 2 – ₹367 Cr*


*GROSS BOX OFFICE WORLDWIDE*


*₹1,501 CRORES*

 

*Dhurandhar The Revenge — Record Run*

- Biggest Hindi opener of all time

- Highest paid previews ever

- Biggest opening weekend worldwide

- Highest first week collections

- Highest second week collections

- Fastest film to ₹1000 Crores globally

- Fastest 100 cr, 200 cr, 300 cr, 400 cr, 500 cr, 600 cr, 700 cr, 800 cr & 900 cr

- Biggest Indian film ever in overseas markets (within Week 1)

- Highest grossing Indian film in North America

- Surpassed Dhurandhar Part 1 overseas lifetime in just 10 days

Monday, 6 April 2026

வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

 *“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!*



ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை" மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ''நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.


மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.


இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 


இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.


Link :  

https://youtu.be/OS1131P0Qw8?si=jQg0g4JV1tQhWmoK

நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு !

 நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3வது சிங்கிள் வெளியீடு ! 

தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்! 



நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில், மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மதுரை ராப் இசைக்குழு மதுரை சோல்ட்ஜர்ஸுடன் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். சமூக அவலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதுரை சோல்ட்ஜர்ஸ் இணைந்து பாடியுள்ளனர். தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், சமூக விழிப்புணர்வை தூண்டும் விதமாக இந்தப் பாடல் உருவாகியிருப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய்  தயாரித்து இயக்கும் இப்படம், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாக பேசும்,  புதுமையான ரொமான்டிக் திரில்லராக புதிய முயற்சியாக உருவாகியுள்ளது. நாயகனாக ஜெய் நடித்துள்ள இப்படத்தில், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கருடா ராம், ஶ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சமூகத்தின் கடுமையான உண்மைகளை பிரதிபலிப்பதாக பாராட்டப்பட்டன. மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக பேசவுள்ளது.


இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை ரிச்சர்ட் M நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S கண்ணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.


முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிறகு வரும் மே மாதத்தில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.


https://youtu.be/XYS6TD2AgdY?si=UTbMlMhR2Fls42aJ

Saturday, 4 April 2026

Biker Movie Review

Biker Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம biker padathoda review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது abhilash reddy . இந்த படத்துல sharwanand, malavika nair, brahmaji,    னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இது ஒரு non linear format கதையை எடுத்திருக்காங்க. motocross ன்ற sports அ மெய்யப்படுத்தி எடுத்திருக்க படம் இது. இந்த கதை 1990 ல இருந்து 2000 வரைக்கும் நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. vikas narayanan அ நடிச்சிருக்க sharwanand அப்புறம் ananya வா நடிச்சிருக்க malavika nair ரெண்டு பேரும் husband அன்ட் wife அ இருக்காங்க. இவங்களுக்கு ஒரு சின்ன பையனும் இருக்கான். படத்தோட ஆரம்பத்துல ஒரு சந்தோசமான குடும்பம் மாதிரி தான் தெரியுது. ஆனா போக போக தான் இதுல இருக்க பொய் என்னனு தெரியும். 


family relationships , sentiments , emotions னு எல்லாமே ரொம்ப தெளிவா audience க்கு காமிச்சிருக்காரு இந்த படத்தோட director . இந்த characters ஓட past ல நடந்த ஒரு விஷயம் heal ஆனா தான் இவங்க problem solve ஆகும். அதுக்கு vikas மறுபடியும் motocross ல participate பண்ணி win ஆகணும். இப்போ இந்த motocross racing coimbatore ல நடக்குது. என்னதான் நெறய characters telugu ல பேசுனாலும் ஒரு சிலவங்க மத்த language அ பேசுற மாதிரி காமிச்சிருக்காங்க. இதெல்லாம் பாக்க எதார்த்தமா இருந்தது. இவங்களோட பையன்  biker மாதிரி dress பண்ணிட்டு, அவனோட அப்பா தான் எனக்கு superhero னு சொல்லுறான்.  இந்த scenes லாம் பாக்கும்போது நமக்கு jersey படம் தான் ஞாபகத்துக்கு வருது. 


jersey படத்தை inspire பண்ணி இந்த படத்தை எடுத்த மாதிரி இருக்கு. ஏன்னா இதை பாக்கும்போது அதே emotional sports படம் மாதிரி தான் இருந்தது. இந்த director , இதுக்கு முன்னாடி எடுத்த படங்களான Loser அப்புறம்  Maa Nanna Superhero ல இருக்கற idea வை இதுலயும்  use பண்ணிருக்காரு. படத்துல இருக்கற supporting characters க்கும் importance குடுத்திருக்காங்க. உதாரணத்துக்கு, tulasi ஓட character அ சொல்லலாம். 1990 ல நடந்த ஒரு விஷயம் இவங்களுக்கு ஒரு மோசமான விஷயமா இருந்திருக்கும், இருந்தாலும் அதா ரொம்ப calm அ handle பண்ணி ஒரு strong ஆனா character அ வாழக்கையை நடத்திட்டு இருப்பாங்க. என்னதான் இவங்களோட screentime கம்மியா இருந்தாலும் ananya வை encourage பன்னுறதே ஒரு பெரிய plus point அமைச்சிருந்தது. 


இந்த படத்துல அப்பா, பையன் அப்புறம் sports அ சுத்தி கதை நகர்ந்தாலும், ananya ஓட character அ strong அ தான் குடுத்திருக்காங்க. இவங்க வர scenes யும் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு.  jersey படத்தை விட இந்த படம் நல்ல commercial ஆவும் entertaining ஆவும் இருக்கு. அந்த சின்ன பையன், அவனோட அப்பாவான vikas அ hero மாதிரி பாப்பான் அதுல இருந்தே vikas க்கு அவங்க அப்பா sunil அ நடிச்சிருக்க rajasekhar அ எவ்ளோ பிடிக்கும் னு நல்ல தெரியும். vikas க்கு அவரோட அப்பா தான் coach அ இருப்பாரு. vikas ஓட எதிரிக்கும், vikas ஓட அப்பாக்கும் இருக்கற சின்ன relationship  யும் ரொம்ப meaningful அ இருக்கும். vikas அப்புறம் ananya க்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் practical அ மாறிடுவாங்க. இவங்க சேந்து எடுக்கற decision எல்லாமே mature ஆவும் இருக்கும். இன்னொரு முக்கியமான அழகான bond னு அது ananya அப்புறம் tulasi ஓடது தான்.

 

இந்த மாதிரி emotional scenes அப்பரும் sports scenes தான் இந்த படத்தை interesting அ எடுத்துட்டு போகுது. bike racing scenes எல்லாமே mass அ அமைச்சிருந்தது. முக்கியமா yuvaraj ஓட cinematography racing scenes எல்லாம் பக்கவா எடுத்துருக்காரு. sync Cinema and Kannan Ganpath ஓட soundmixing அப்புறம் sound design எல்லாம் racing scenes அ இன்னும் தத்ரூபமா காமிச்சிருக்காங்க. 1990 ல இருந்து 2000 வரைக்கும் இந்த bike racing எப்படில்லாம் மாறிருக்கு றத்தை தெளிவா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. இந்த படத்துல நெறய interesting ஆனா bike racing scenes அ வச்சிருக்காங்க ஆனா அதுல ஒரு scene மட்டும் highlight அ இருந்தது. 


atul kulkarni தான் இந்த படத்தோட villain . இவரோட character அ இன்னும் detailed அ எழுந்திருந்த நல்ல இருந்திருக்கும். 1990 ல இருக்கற settings எல்லாமே detailed அ குடுத்திருக்காங்க. உதாரணத்துக்கு vijay ஓட posters , basha படத்தோட poster , coimbatore ல இருக்கற textile mills அ பத்தி பேசுறது, னு நெறய சொல்லிட்டே போலாம். இந்த படத்தோட மிக பெரிய பலம் ந அது ghibran ஓட music அப்புறம் bgm தான். different time period அ படத்துல காமிச்சிருந்தாலும் அந்த period க்கு ஏத்த மாதிரி music அ போட்ருக்க விதம் super அ இருந்தது. முக்கியமா emotional scenes க்கு லாம் இவரோட bgm அருமையா இருந்தது. 

படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sharwanand ஒரு strong ஆனா performance மூலமா comeback குடுத்திருக்காரு. malavika nair ஓட acting எதார்த்தமா வும் genuine ஆவும் இருந்தது. 


ஒரு நல்ல விறுவிறுப்பான sports ட்ராமா படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

Friday, 3 April 2026

பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்

 *‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்*



*தனுஷின் ‘கர’ படத்தை தொடர்ந்து ‘பரீட்’ படத்திற்காக பாடிய அருண்ராஜா காமராஜ்* 


ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். 


‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார்.


சமீபத்தில் ‘பரீட்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து  இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ், இப்படத்திற்காக பாடிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.


இதுகுறித்து இயக்குநர் ஹாரூண் கூறும்போது, “நடிகர் வெற்றி இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்பொறுப்பை எடுத்துக்கொண்ட பிறகு அவர் காவல்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை நிகழ்த்துகிறார். அதை சொல்லும் விதமாக ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்றது போன்று போலீஸுக்கு என்று ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்.


இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரை அழைத்து பாட வைத்துள்ளோம். இந்தப் பாடலை ஜூனியர் நித்யா என்பவர் எழுதியுள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் ‘ஸ்டவ் மேல கடாய்’ என்கிற பாடல் மூலம் பிரபலமானவர்.


தற்போது தனுஷ் நடித்து வரும் ‘கர’ படத்திற்காக அருண்ராஜா காமராஜ், தானே ஒரு பாடல் எழுதி, பாடியும் உள்ளார். அதற்கு அடுத்ததாக எங்களது ‘பரீட்’ படத்திற்காக அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரீட்’ படத்தின். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாக இருக்கிறது” என்று கூறினார்..

முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது

 *முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*



அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.


பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக் குறிக்கும் படத்தின் பெயரை போலவே போர்ச்சுகல், மால்டா, லே–லடாக், சென்னை மற்றும் வெளிநாடுகளின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரிய நடிகர்கள் பட்டாளமும், தொழில்நுட்பக் குழுவும் இருந்ததால், திட்டமிட்ட காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது இயக்குநருக்கு சவாலாக இருக்கும் எனக் கருதி, தேவைப்பட்டால் காலத்தையும் பட்ஜெட்டையும் நீட்டிக்க நான் தயாராக இருந்தேன். ஆனால், இயக்குநர் அஜய் ஞானமுத்து அர்ப்பணிப்புடன், திட்டமிட்ட 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார்” என்றார்.


இயக்குநர் அஜய் ஞானமுத்து பகிர்ந்து கொண்டதாவது, “தயாரிப்பாளர் சுதன் சாரிடம் கதை சொல்லி இறுதியானதும் கதையின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்கக்கூடாது, அதற்காக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என சொன்னார். ’டிமாண்டி காலனி’ படத்தின் பிரான்சைஸூக்கு இப்படியான தயாரிப்பாளர் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம். படத்தில் பல சவால்கள் இருந்தாலும் அதெல்லாம் படக்குழுவின் ஆதரவால் எளிதாக கடந்து வர முடிந்தது. மிகவும் திருப்தியாக மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர் அருள்நிதி மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரால்தான் திட்டப்படி 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. ’டிமாண்டி காலனி’ பிரான்சைஸ் மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதை மனதில் வைத்தே இந்த மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கோடையில் உலகம் முழுவதும் படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.


இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். குமரேஷ் டி எடிட்டிங்கை கவனிக்கிறார்.


அஜய் ஆர் ஞானமுத்து எழுதி இயக்கிய 'டிமாண்டி காலனி 3' திரைப்படம் இந்த கோடையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுதன் சுந்தரம், மனிஷ் சிங்ஹால், துர்காராம் சௌத்ரி ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

Demonte Colony 3 Completes Filming, Marches Towards a Grand Summer Release

 *Demonte Colony 3 Completes Filming, Marches Towards a Grand Summer Release*

After creating a wave of intrigue with its striking first-look reveal, followed by the unveiling of its compelling characters, Demonte Colony 3 has now successfully wrapped up its shoot. The film, which steadily built momentum with each update, is all set to enter its final phase of post-production. With anticipation running high, the makers are gearing up for a grand worldwide theatrical release in Summer.



Producer Sudhan Sundaram of Passion Studios remarks, “A director’s craftsmanship is not merely defined by narrative finesse or technical prowess, but equally by the discipline and commitment to deliver a project within its stipulated timeframe. Demonte Colony 3 has been mounted on an expansive scale, and much like its title evokes a distinct geographical identity, the film has been shot across diverse international and domestic locations, including Portugal, Malta , Leh–Ladakh, and Chennai. Given the magnitude of its star cast and technical ensemble, completing the production within schedule could have proven exceedingly arduous for any filmmaker. I was, in fact, prepared to extend both the shooting timeline and the budget, having been thoroughly captivated by the manner in which the film was taking shape. Nevertheless, director Ajay Gnanamuthu demonstrated exemplary discipline and punctuality, ensuring that the entire shoot was wrapped as planned within 80 days.”


Director Ajay Gnanamuthu says, “Upon finalising the script, Sudhan sir unequivocally emphasised that quality must remain paramount, and expressed his willingness to invest substantially to ensure that the creative vision was realised in its finest form. It is indeed a privilege for a franchise like Demonte Colony to be supported by such a proficient producer. The journey of creating Demonte Colony 3 has been immensely fulfilling. Even the most demanding challenges appeared seamless, owing to the consistent  and magnanimous support of the production team. Arulnithi’s conviction and dedication to the process were particularly inspiring. The technical crew and the entire cast stood as steadfast pillars, enabling us to complete the shoot within the planned 80-day schedule. The Demonte Colony franchise has transcended linguistic and regional boundaries, earning widespread appreciation across audiences. With the third instalment, we have endeavoured to cater to a global viewership, ensuring that the film resonates beyond conventional limits. While we have given our utmost in the making, the journey continues, as our post-production team works diligently to craft a compelling theatrical experience. We eagerly look forward to presenting the film to audiences worldwide with its theatrical release in summer.”




Demonte Colony 3 raises the stakes with a power-packed ensemble led by Arulnithi and Priya Bhavanishankar, alongside Antti Jaaskelainen, Guru Somasundaram, GM Kumar, Muthukumar, SreeKumar, Meenakshi Govindarajan, Kathir, Ashiq Hussain, Sarjano Khalid, Archana Ravichandran, and many more.

Elevating the eerie atmosphere, Sam CS delivers a gripping score, while Sivakumar Vijayan captures the haunting visuals and Kumaresh D sharpens the narrative with crisp editing.


Crafted by writer-director Ajay R Gnanamuthu, the film is gearing up for a worldwide theatrical release this summer. Backing this chilling venture are producers Sudhan Sundaram, Manish Singhal, and Durgaram Choudhary.