Featured post

அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது

 *'அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது.* *போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘...

Tuesday, 14 April 2026

அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது

 *'அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது.*











*போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘முதற்கனல்’ ; மே மாதம் வெளியாகிறது.*


ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய R.வெங்கட்டரமணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.


புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபாபத்மநாபன், கருப்பசாமி,  திருவேங்கடகிருஷ்ணன், உடன் டாக்டர்.சிவா, ராமசாமி, தனுஜா, ரோகிணி, சஜன், மணிகுமார், ஷிவகுமார், ருக்மணி, இலக்கியா, அருட்பிரகாஷ், சந்திரசேகரன், மதன், கணேஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.


‘அப்பா வேணாம்ப்பா’ படத்தில் மதுவினால் ஒரு குடும்பம் எந்த அளவிற்கு சீரழிகிறது என்பதை கமர்சியலான ஒரு படமாக கொடுத்த இயக்குநர் வெங்கட்டரமணன், இந்த ‘முதற்கனல்’ படத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது, மற்றும் அவர்களது குடும்பம் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.


படம் குறித்து இயக்குநர் வெங்கட்ட ரமணன் கூறும்போது, ”இன்று நாடெங்கிலும், ஏன் உலகெங்கிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. மதுவினால் ஏற்படும் போதை மற்றும் சீரழிவை விட இப்படிப்பட்ட சிந்தடிக் போதைப் பொருட்கள் இளைஞர்களின் வாழ்வை வெகு குறுகிய காலத்திலேயே சீரழித்து விடுகின்றன. அன்றாடம் போதைப்பொருள் வழக்குகள் குறித்து நாம் செய்திகளில் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது தான், பள்ளி செல்லும் இளைஞர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு போகும் வயதில் இருப்பவர்கள் என பலரும் இப்படி போதைப்பொருள் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தங்களையே தொலைத்துவிட்ட அவலத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது.


அதனால் இந்த விஷயத்தையே ஏன் படமாக எடுக்க கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவாகத் தான் இந்த ‘முதற்கனல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. மது அருந்த பயப்படும் சிறுவர்கள், இளைஞர்கள் கூட, இது போன்ற போதை வஸ்துக்களை, அவை மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதாலும் யாரும் அறியாமல் பயன்படுத்துவது எளிது என்பதாலும் இதன் பிடியில் சுலபமாக சிக்குகின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் உளவியல் சிக்கல், அதனால் ஒவ்வொரு குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம்.


அதேசமயம் அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஒரு குடும்ப படமாக இது தயாராகியுள்ளது. படத்தில் நடித்திருக்கும் பலரும் புதுமுகங்கள் என்றாலும் இந்த கதைக்கு அவர்கள் தான் பொருத்தமாக இருந்தார்கள். படத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். நானும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்...


மே மாதம் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது


தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்


ஒளிப்பதிவு ; கந்தசாமி கோபால் DFT-


இசை ; மீராலால்


படத்தொகுப்பு ; டிஷ்யன்சாரதி,  


பாடல்கள் ; கவிஞர். மருதபரணி, மோகன், ஆத்தூர் பெரியசாமி


டிசைன்ஸ் ; சதீஷ், 


தயாரிப்பு மேற்பார்வை ;D. ராஜேந்திரன், 


இணைத்தயாரிப்பு ; ஆர்.நட்ராஜ் DFT


மக்கள்தொடர்பு ; KSK செல்வகுமார்

தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வானம்

 தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வானம் கலைத் திருவிழா என்னும் பெயரில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது.🎉📚💙


‘வேர்ச்சொல் - தலித் இலக்கியக் கூடுகை’ மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா  ஏப்ரல் 18 & 19 தேதிகளில் சென்னையில் முழுநாள் நிகழ்வாக நடக்க இருக்கிறது. இலக்கியம், சமூக அரசியல், சினிமா எனப் பல்வேறு அமர்வுகளில் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், விமர்சகர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பல தரப்பினர் கலந்துகொள்கிறார்கள்.🖍🌸🎉📚


கவிஞர் என்.டி. ராஜ்குமார் அவர்களுக்கு ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ வழங்கப்படுகிறது. இது தவிர அவர் குறித்த நூல் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு, புத்தகக் கண்காட்சி போன்றவையும் இடம்பெறுகின்றன.✨✨🎉🎉


அறிவுப்பூர்வமான, மகிழ்வான, கொண்டாட்டமான இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.❤️❤️


உங்கள் வருகை இந்நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.✨✨✨


இடம்: முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலை அரங்கம்,

ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.


ஏப்ரல் 18 & 19 (இரண்டு நாட்கள்)

நேரம்: காலை 9 முதல் மாலை 7 வரை.


அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!

https://kynhood.com/eventcategory/Vaanam%20Art%20Festival

இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026

 *இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026*



‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிப்பதும், அவர்களது படைப்புகளை ஆய்வுநோக்கில் நினைவுகூர்வதும் ‘வேர்ச்சொல் இலக்கிய விருதின்’ நோக்கமாகும். அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ அறிஞர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன் அவர்களுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் பாமா அவர்களுக்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ப.சிவகாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இலக்கிய ஆளுமைகள் குறித்த ஆவணப்படம், தொகுப்பு நூல், அவர்களது படைப்பாக்கம் குறித்த விரிவான கலந்துரையாடல் ஆகியவற்றுக்குப் பிறகு ஒரு இலட்சம் ரூபாய் காசோலையோடு ‘வேர்ச்சொல் விருது’ அளிக்கப்பட்டுவருகிறது.


இந்த ஆண்டிற்கான (2026) ‘வேர்ச்சொல் விருது’ கவிஞர், நாடகக் கலைஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது .

 சமவெளியின் நாகரிக வாழ்வால் செரிக்கப்படாத பழங்குடி சொல்மரபை நவீன தமிழ்க் கவிதைக்கு அறிமுகப்படுத்தியவர் என்.டி.ராஜ்குமார். அவரது கவிதைகள் வடிவத்தால் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்தாலும் தமிழில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. வைதீக மதங்களையும், அதன் பொய்க்கதைகளையும் கலைத்துக் காட்டுவதோடு, பூர்வக்குடிகள் தங்களுக்கெனச் சொந்தமாகக் கொண்டிருந்த பெரும் பரப்பைத் தன் கவிதைக்குள் விரித்துக் காட்டின. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ‘வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை’ இரண்டு நாட்கள் நிகழ்வாக வரும் ஏப்ரல் 18, 19 தேதிகளில் சென்னை முத்தமிழ்ப் பேரவை, டி.என்.இராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. கூடுகையின் இரண்டாம் நாள் (19.04.2026) மாலை நான்கு மணியளவில், 2026ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் இலக்கிய விருதை, கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது

Vijay Milton’s Gods and Soldiers’ Traiser Unleashed by A.R. Murugadoss – A High-Octane

 *Vijay Milton’s Gods and Soldiers’ Traiser Unleashed by A.R. Murugadoss – A High-Octane Glimpse Packed with Adrenaline and Emotion*












The Traiser of Gods and Soldiers, much-awaited Tamil–Telugu bilingual directed by Vijay Milton, has been officially launched by acclaimed filmmaker A.R. Murugadoss, which is now winning tremendous response. Blazing with intensity and scale, the Traiser offers a gripping sneak peek into a world driven by high-stakes action, emotional undercurrents, and riveting character arcs. Staying true to the newly coined format: a fusion of trailer and teaser - the Traiser delivers a compact yet explosive cinematic experience that leaves a lasting impact.


What stands out prominently is the film’s razor-sharp editing, immersive sound design, and Sam CS’s thunderous musical score, all of which elevate the visual narrative to a whole new level. The background score, in particular, amplifies the tension and adrenaline, making every frame pulsate with energy. Well, Vijay Milton’s visual magic as a cinematographer brings on the ‘Action Feast’ mode at its best. 


Actor Bharath commands attention with a striking screen presence, while Aari Arujunan impresses in a dashing cop avatar, adding both intensity and charisma. The Traiser also unveils a terrific villainous dimension portrayed by Suniel, bringing in a powerful layer of conflict that heightens the film’s dramatic stakes. Sprucing up with big surprise package is Paal Dabba and that’s turning more spotlights on the Traiser.  Together, the ensemble cast establishes a compelling narrative space that promises a grand theatrical spectacle.


The Traiser successfully introduces the film’s core characters and tonality, offering audiences a glimpse into its expansive storytelling canvas. Packed with racy action blocks and emotionally charged moments, it reflects director Vijay Milton’s signature style,  a blend of raw realism and stylized filmmaking that has consistently resonated with audiences.


Speaking through his craft, Vijay Milton once again showcases his distinctive storytelling approach, where action is not just spectacle, but an extension of emotion and character depth,  a trait that is clearly evident in Gods and Soldiers.


Produced by Rough Note Production, the film is shaping up to be a full-fledged theatrical feast, combining action, emotion, and socially relevant themes. The makers have announced that updates regarding the audio launch, trailer release, and worldwide theatrical release date will be revealed soon, further building anticipation around the project. The ensemble star-cast of Gods and Soldiers include  Raj Tarun, Bharath, Aari Arujunan, Sunil, Radha Ravi, Kishore, Paal Dabba, Ammu Abhirami, Prasanna Balachandran, Bharath Seeni, Vijetha Vasist, Jeffry, Imman Annachi and many others. 


With the Traiser setting the tone, Gods and Soldiers promises a cinematic experience that is both intense and immersive.

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்– அதிரடி ஆக்ஷன் மற்றும்

 விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்– அதிரடி ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த அதிரடி முன்னோட்டம்!!












தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ பிரபல இயக்குநர் A. R. முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்தப் படம், தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

 அதிரடி ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் வலுவான கதாபாத்திரங்களின் பயணம் ஆகியவற்றை இணைத்து, இந்த ட்ரைசர் ஒரு தீவிரமான சினிமா உலகத்தை சிறிய நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த முறையில் காட்டுகிறது. “ட்ரைலர் + டீசர்” என்ற புதிய வடிவமைப்பில் உருவான இந்த ட்ரைசர், குறுகிய நேரத்தில், நீண்டநாள் நினைவில் நிற்கும் அனுபவத்தை வழங்குகிறது.


இந்த ட்ரைசரில் மிக முக்கியமாக திகழ்வது, அதிவேக எடிட்டிங், ஆழமான சவுண்ட் டிசைன் மற்றும் சாம் C. S. இன் அதிரடி பின்னணி இசை. ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தையும் விறுவிறுப்பையும் அதிகரிக்கும் இந்த இசை, படத்தின் முழு அனுபவத்தையும் உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் விஜய் மில்டன் அவர்களின் காட்சிப்பதிவு, “ஆக்ஷன் விருந்து” என்ற அளவுக்கு காட்சிகளை வலுப்படுத்துகிறது.


நடிகர் பரத் வலுவான கதாபாத்திரத்தின் மூலம் திரையில் கவனம் ஈர்க்க, ஆரி அர்ஜுனன் போலீஸ் வேடத்தில் ஸ்டைலான மற்றும் தீவிரமான தோற்றத்துடன் கவர்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் சுனில் ஷெட்டியின் வலுவான நடிப்பு, கதைக்கு மேலும் வலு மற்றும் ஆழத்தைச் சேர்க்கிறது. அதிரடி சஸ்பென்ஸாக 'பால் டப்பா' அவர்களின் தோற்றமும் ட்ரைசருக்கு கூடுதல் கவனத்தை கொடுக்கிறது.


இந்த ட்ரைசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களையும், அதன் கதைத் தன்மையையும் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது. வேகமான ஆக்ஷன் காட்சிகளும், உணர்ச்சி நிரம்பிய தருணங்களும் இணைந்து, விஜய் மில்டன் அவர்களின் இயல்பான கதை சொல்லும் பாணியை பிரதிபலிக்கின்றன.


 தனது தனித்துவமான படைப்பின் மூலம் எளிய மக்களின் வாழ்வைப்பற்றிப்பேசும் விஜய் மில்டன், ஆக்சன் என்பது வெறும் சண்டை காட்சிகளால் நிரம்பியது மட்டுமல்ல, அது உணர்ச்சியும் கதாபாத்திர ஆழமும் கொண்ட ஒரு செயல் என்று மீண்டும் ஒருமுறை  இந்த காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 



Rough Note Production தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம், ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுணன் , சுனில் ஷெட்டி, ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலசந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


ஆடியோ வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ட்ரைசர் மூலம் தொடங்கிய இந்த அதிரடி ஆரம்பம், Gods and Soldiers திரைப்படத்தை ஒரு தீவிரமான மற்றும் முழுமையான சினிமா அனுபவமாக மாற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Joe” filmmaker to direct G.V. Prakash Kumar

 *Joe” filmmaker to direct G.V. Prakash Kumar*




*G.V. Prakash Kumar collaborates with “Joe” Director!*


Lark Studios & Parallel Universe Pictures collaborate for a New Film


Lark Studios and  Parallel Universe Pictures have officially announced their new collaborative project, starring G.V. Prakash Kumar in the lead role. This marks the third production venture of Lark Studios, following their blockbusters Karudan and Maaman. Pre-production is currently progressing at a brisk pace.


The film is directed by Hariharan Ram, who gained widespread acclaim with his critically and commercially successful Joe. Impressed by his distinctive storytelling, G.V. Prakash Kumar not only agreed to headline the project but also compose the music. The film will present him in a completely new dimension, for which he is undergoing intense preparation.


Malavika Manoj, who impressed audiences with her performance in Joe, plays the female lead opposite G.V. Prakash Kumar.


Cinematography is handled by Theni Eswar, known for his visually striking work in films like Karnan and Vaazhai. Talks are currently underway with prominent actors and technicians, and official announcements regarding the extended cast and crew will be made soon.


The film is scheduled to go on floors in June, with location scouting already underway.

ஜி.வி.பிரகாஷை இயக்கும் ‘ஜோ’ இயக்குநர்

 *ஜி.வி.பிரகாஷை இயக்கும் ‘ஜோ’ இயக்குநர்*




*‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்*


*லார்க் ஸ்டூடியோஸ் – பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணையும் புதிய படம்*


லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.


’ஜோ’ படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணிபுரியவுள்ளார். ‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட பல படங்களுக்கு தனது ஒளிப்பதிவின் மூலம் மெருகூட்டியவர் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் சேரன் - நடிகை அதுல்யா ரவி துவங்கி வைத்த 'நீர் மோர் பந்தல்' திறப்பு விழா

 இயக்குநர் சேரன் - நடிகை அதுல்யா ரவி துவங்கி வைத்த 'நீர் மோர் பந்தல்' திறப்பு விழா 














கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே , அருணாச்சலம் சாலையில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று சித்திரை திருநாளில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு இயக்குனரும் , நடிகருமான சேரன் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினர். இந்நிகழ்வில் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  


இதில் இயக்குநர் சேரன் பேசுகையில், '' வெயில் நூறு டிகிரிக்கு மேல் அடித்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. அனைவருக்கும் தாகம் எடுக்கிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு நீரை அருந்தினால் தான் இந்த உடலால் வெப்பத்தை தாங்க முடிகிறது. இது போன்ற தருணத்தில் நம்முடைய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வடபழநி சாலிகிராமம் பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே தாகத்தால் தவிக்கின்ற மக்களுக்கு, தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை உருவாக்கி இருக்கிறார்கள். இன்று 1000 பேருக்கு நீர் மோரை வழங்கி உள்ளனர். மேலும் இந்த சேவை தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மக்களுடைய நலன் கருதி அவர்களுடைய தாகத்தை .தணிப்பதற்காக  இந்த சங்கம் எடுத்திருக்கும் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 


இந்தப் பக்கமாக சாலையில் செல்பவர்கள் இந்த மோரை சாப்பிடலாம் நல்ல தரமாகவும் ,மணமாகவும் இருக்கிறது. இதில் கருவேப்பிலை- பச்சை மிளகாய்- எலுமிச்சம் பழம்- இஞ்சி- கொத்தமல்லி -என ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நீர் மோரை தயாரித்து வழங்குகிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் ஒரு கோப்பை நீர் மோரை அருந்தி பயனடையுங்கள் '' என்றார். 


நடிகை அதுல்யா ரவி பேசுகையில், '' அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஆயிரம் பேருக்கு நீர் மோர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்வில் நானும் கலந்து கொண்டிருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இன்று ஒரு நல்ல நாள். இந்த நல்ல நாளன்று நல்ல விசயத்தை தொடங்கி இருக்கிறார்கள். நல்ல எண்ணங்களுடன் தொடங்கப்பட்டிருப்பதால் பலருக்கும் பயன்படும். குறிப்பாக கோடை காலத்தில் தாகத்துடன் நடந்து செல்பவர்களுக்கு இவர்கள் வழங்கும் நீர்மோர் தாகத்தை தணிக்கும். இது பொது மக்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்று மக்களுக்கு நல்லது செய்யும் விசயங்களில் என்னையும் கலந்து கொள்ள வைத்ததற்காக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் நடித்த

குறும் படங்களில் இருந்து  இன்று வரை

பத்திரிகையாளர்கள் அனைவரும் அவர்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களை போல் என் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள். அந்த அன்பிற்கு நன்றி. இவர்கள் இன்னும் நல்ல விசயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 


இங்கு வழங்கப்பட்ட நீர் மோரை நானும் அருந்தினேன். இயல்பாகவே கோடை காலத்தில் நான் வீட்டில் தினமும் மோர் அருந்துவேன். வீட்டில் தயாரிப்பது போல் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது,, குறிப்பாக மோரில்  தயிரும் நன்றாக இருந்தது. இதனால் இதனை அருந்தும் பொது மக்களின் ஆசியும் இவர்களுக்கு கிடைக்கும்'' என்று பேசினார், 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், தங்கள் பங்களிப்பை வழங்கி மேலும் சில நாட்கள் இந்த சேவையை தொடர விரும்புவது,  இந்த முயற்சியில் கிடைத்த வெற்றியாகும்

@athula official

@CheranDirector

Deconstruct Announces Anirudh Ravichander as Official Brand Partner: A Story Sparked

 Deconstruct Announces Anirudh Ravichander as Official Brand Partner: A Story Sparked Organically by the Internet*



In a move that reflects the evolving nature of modern-day brand collaborations, Deconstruct today announced its official partnership with music sensation Rockstar Anirudh Ravichander, a collaboration that began not in a boardroom, but on the internet.


The association traces back to a viral Instagram reel featuring Anirudh and his stylist, where eagle-eyed fans spotted a Deconstruct sunscreen subtly placed in the background. What followed was a wave of organic conversations across social media, with audiences identifying and discussing the product, turning a fleeting moment into a cultural talking point.


Recognizing the authenticity of this unplanned discovery, Deconstruct chose to embrace the moment. What started as a genuine, everyday usage instance has now evolved into a meaningful collaboration rooted in real connection rather than scripted endorsement.


“At Deconstruct, we’ve always believed that authentic moments make the most powerful stories,” said Malini Adapureddy, CEO of Deconstruct. “When we saw how organically people resonated with that moment, it felt only natural to take it forward. Anirudh embodies authenticity and relatability, values that align perfectly with our science-backed brand.”


Known for his chart-topping music and massive youth connect, Anirudh Ravichander’s effortless influence and personal style have consistently resonated with audiences across the country. This partnership marks a shift from traditional celebrity endorsements to a more culture-first, audience-led approach, where consumers drive discovery and brands respond.


With this partnership, Deconstruct continues to strengthen its positioning as a brand that listens, adapts, and grows with its community, proving that in today’s landscape, authenticity is the strongest currency.