Featured post

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !

 இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட  “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின...

Wednesday, 15 April 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !

 இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட  “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 









சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்”  டிரெய்லர் !! 


முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில்,  நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். 


ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும்  மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம். 


தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில்,  ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் இந்தக் கதை, ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார்.  மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர்களுடன், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 


செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பு - G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்


இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது. 


தொழில்நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு நிறுவனம் - சத்யஜோதி

தயாரிப்பு - T.G.தியாகராஜன்

இணை தயாரிப்பு - G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்

எழுத்து இயக்கம் - D.D.பாலச்சந்திரன்

ஒளிப்பதிவு - A. M எட்வின் சகாய்

எடிட்டிங்க்  - நாகூரான் இராமச்சந்திரன் 

ஸ்டண்ட் - தளபதி தினேஷ்

கலை இயக்கம் - அதூரி ஜெய்குமார்

மக்கள் தொடர்பு - சதீஷ் AIM


https://youtu.be/iFv3N9mX5gU?si=Msl2r0DAy_LyZkx4

Kuttram Kadithal 2 Arrives Amid Sky-High Expectations!

 *Kuttram Kadithal 2 Arrives Amid Sky-High Expectations!*






The original Kuttram Kadithal, directed by Bramma G and produced by JSK Sathish Kumar,  carved a unique niche in 2014, clinching National Awards for its poignant exploration of teacher-student dynamics set against a school backdrop. Critically acclaimed and commercially triumphant, it captivated audiences across International and National panorama. 


Now, director SK Jeeva's Kuttram Kadithal 2, and produced by JSK Sathish Kumar, who also stars in a pivotal role, raises the bar as a gripping social thriller, diverging from its predecessor’s ‘Social Drama’ domain, while retaining the evocative school setting.


Actor Pandiarjan will be seen in a different character from what he has done so far in his career. Significantly, audiences who have watched him entertain will be surprised by his unique role.


The makers are delighted that those who have watched the visuals are raving about the brilliant making and riveting narration. The official announcement on the film’s release date will be made soon, and the film will be screened at various international film festivals.


The film, shot across the breathtaking locales of Kodaikanal, Dindigul, Nagercoil, and Chennai's suburbs, the film boasts an stellar ensemble: Pandiarajan (in a groundbreaking new avatar), Appu Kutty, Balaji Murugadoss, Deepak, Paval, Padman, PL Thenappan, Chandini Tamilarasan, Keerthi Chawla, Viji Chandrasekar, Lovelyn, Jovita Livingston, Roshan, and more. 


The screenplay is written jointly by SK Jeeva and JSK. The technical crew includes DK (Music), C.S. Prem Kumar (Editor), Sathish G (Cinematography), Mahesh Mathew (Stunt Master), Manas (Choreography), Raja Gurusamy (Lyricist), P. Arumugam (Production Executive), Sindhu Grafix-Pavan Kumar G (Designs), Nandha (Posters), R. Nandhakumar (Colourist), Varna Digital Studio (DI & VFX), Raja Nallaiah (Audiography), Rekha - Raan T Art (PRO).

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

 குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!






2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், இயக்குநர் பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகி, ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்ட ஆழமான கதை மூலம் தேசிய விருதுகளை வென்று தனித்துவமான இடத்தைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது.


இப்போது, அதன் தொடர்ச்சியாக  குற்றம் கடிதல் 2, இயக்குநர் S. K. ஜீவா இயக்கத்தில், மீண்டும் JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகிறது. இவரே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். குற்றம் கடிதல் முதல் பாகம் சமூக அவலம் பற்றிப் பேசியது. ஆனால் இந்த படம் அத்தன்மையிலிருந்து விலகி, ஒரு சமூக த்ரில்லர் வகையில் உருவாகி, அதே சமயம் பள்ளிக்கூடப் பின்னணியைத் தக்க வைத்துள்ளது.


நடிகர் பாண்டியராஜன் தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த உள்ளார்.


படத்தின் காட்சிகளைப் பார்த்தவர்கள், அதன் சிறப்பான தயாரிப்பையும், சுவாரஸ்யமான கதை சொல்லலையும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது.


குற்றம் கடிதல் 2 திரைப்படம் கொடைக்கானல் , திண்டுக்கல், நாகர்கோயில் மற்றும் சென்னை ஆகிய சுற்றுப்புறங்களில் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ் , தீபக், பாவல், பத்மன், P. L. தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின் , ஜோவிதா லிவிங்ஸ்டன் , ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரைக்கதை S. K. ஜீவா மற்றும் JSK சதிஷ் குமார் இணைந்து எழுதியுள்ளனர்.


தொழில்நுட்பக் குழு:


இசை: DK


எடிட்டிங்: C. S. பிரேம் குமார் 


ஒளிப்பதிவு: சதிஷ் G


ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ 


நடனம்: மானஸ் 


பாடல் வரிகள்: ராஜா குருசாமி 


தயாரிப்பு நிர்வாகம்: P. ஆறுமுகம் 


டிசைன்: பவன் குமார் G


போஸ்டர்கள்: நந்தா 


கலர் கிரேடிங்: R. நந்தகுமார் 


DI & VFX: வர்ணா Digital Studio


ஆடியோ: ராஜா நல்லய்யா 


PRO: ரேகா


மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் குற்றம் கடிதல் 2, சமூக த்ரில்லர் வகையில் ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்கும் திரையரங்கு அனுபவமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடும் வேடன், அறிவு, அசல் கோலார்

 *இசை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடும் வேடன், அறிவு, அசல் கோலார்*








*சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

*வணக்கம் வணக்கம் பெங்களூர் மிகப்பெரிய வெற்றி; அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” விரைவில்*

தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கினர்.


வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன், தமிழ் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.


மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் ஹிப்-ஹாப் இசையின் பல்வேறு முகங்களை ஒரே மேடையில் கொண்டு வந்த இந்த விழா, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை தாண்டிய இசை ஒன்றிணைப்பாக அமைந்தது. ரசிகர்களின் பெரும் திரளான வருகையுடன், இந்த நிகழ்ச்சி ஒரு உற்சாகமான, சமூகத்தை இணைக்கும் அனுபவமாக மாறியது.


Alt+ மற்றும் The High Culture இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய இன்டிபெண்டென்ட் ஹிப்-ஹாப் இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கியமான கட்டமாக அமைந்தது.


மேலும், கலைஞர் வேடன் தனது மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்திய “வணக்கம் வணக்கம்” என்ற வரியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டூர் ஐபி, தற்போது இளைஞர்களிடம் வலுவான கலாச்சார அடையாளமாக உருவெடுத்து வருகிறது.


பெங்களூரில் கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து, இந்த டூரின் அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” என்ற பெயரில் விரைவில் நடைபெற உள்ளது.


இதனைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், பின்னர் உலகளாவிய அளவில் பல நாடுகளுக்கும் இந்த டூர் விரிவடைய உள்ளது.

யோகி பாபுவின் சன்னிதானம் பிஓ படம்! வெளியானது 'ஏறி வந்தோம் ஐயப்பா' பாடல்

 *யோகி பாபுவின் சன்னிதானம் பிஓ படம்! வெளியானது 'ஏறி வந்தோம் ஐயப்பா' பாடல்!*








யோகி பாபுவின் அடுத்த படமான சன்னிதானம் பிஓ-வின் முதல் சிங்கிள் 'ஏறி வந்தோம் ஐயப்பா' வெளியீடு: ஆன்மீக உணர்வை தட்டியெழுப்பும் பாடல்!


சன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் ஆழமான குரலில் உணர்வுபூர்வமாக பாடப்பட்டுள்ள இந்த பாடல், மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர்-ன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இது படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மீக பயணத்திற்கு சரியான அடித்தளத்தை அமைத்துள்ளது.


புகழ்பெற்ற இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரால் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில், தற்போது தனித்துவமான திரையனுபவத்திற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள சன்னிதானம் பிஓ திரைப்படத்தை அமுத சாரதி இயக்கியுள்ளார்; அவரே படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். இப்படத்தை மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் மற்றும் ராமசாமி வேலு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுடன் மூத்த கலைஞர்களான சித்தாரா, பிரமோத் ஷெட்டி, முன்னார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் கதையோடு ஒன்றிப்போக செய்யும் பின்னணியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சன்னிதானம் பிஓ படத்தின் மையக்கரு ஆழமான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. ஐயப்ப பக்தர்கள் சந்திக்கும் ஓர் எதிர்பாராத சம்பவத்தையும், அதனை தொடர்ந்து அவர்களின் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களையும் சுற்றியே இதன் கதை நகர்கிறது. நம்பிக்கை, மன உறுதி மற்றும் மனித உறவுகளில் வேரூன்றிய இந்த திரைப்படம், மனதை ஆழமாக தொடும் ஒரு திரையனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுதியுள்ளார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, பி.கே  படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தொழில்நுட்ப குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டைப் பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல் வரிகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


ஏறி வந்தோம் ஐயப்பா பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பயணம் ஒரு சிறப்பான ஆன்மீக உணர்வுடன் தொடங்கியுள்ளது; வரும் நாட்களில் படம் குறித்த பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள சன்னிதானம் பிஓ மே மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


*நடிகர்கள்:*


யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத், முன்னார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சாத்விக், அஸ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண், மதுசூதன் ராவ்.


*தொழில்நுட்பக் குழு:*


 வசனம் & இயக்கம்: அமுத சாரதி

 கதை & திரைக்கதை: அஜினு ஐயப்பன்

 தயாரிப்பாளர்கள்: மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் & ராமசாமி வேலு

 இணை தயாரிப்பாளர்: ஷபீர் பதான்

 தயாரிப்பு நிறுவனங்கள்: சர்வதா சினி கரேஜ் & ஷிமோகா கிரியேஷன்ஸ்

 ஒளிப்பதிவு: வினோத் பாரதி

 இசை: ஏ.ஜி.ஆர்

 படத்தொகுப்பு: பி.கே

 கலை இயக்குநர்: விஜய் தென்னரசு

 சண்டைப்பயிற்சி: மெட்ரோ மகேஷ்

 பாடலாசிரியர்: மோகன் ராஜன்

 நடன அமைப்பு: ஜாய் மதி

 ஆடை வடிவமைப்பாளர்: நடராஜ்

 ஒப்பனை: சி. சிபுகுமார்

 புரொடக்‌ஷன் கண்ட்ரோலர்கள்: ரிச்சர்ட் & டி. முருகன்

 நிர்வாகத் தயாரிப்பாளர்: விலோக் ஷெட்டி

 இணை இயக்குநர்கள்: ஷக்கி அசோக் & சுஜேஷ் ஆனி ஈப்பன்

 அசோசியேட் இயக்குநர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்

 உதவி இயக்குநர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா

 பப்ளிசிட்டி டிசைனர்: வி.எம். சிவகுமார்

 புகைப்படங்கள்: ரெனி மோன்

 மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் & பாரஸ் ரியாஸ்

 ஆடியோ லேபில்: ட்ரெண்ட் மியூசிக்

Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu's next release Sannidhanam (P.O), strikes a spiritual chord

 *Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu's next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*








The makers of Sannidhanam (P.O) have unveiled the film’s first single, 'Yeri Vanthom Ayyappa' a soulful and devotional track that beautifully captures the essence of faith and devotion associated with the Sabarimala pilgrimage.


Rendered with heartfelt intensity by Abhishek Raju and Vishnu Ram, the song is elevated by Mohan Rajan’s evocative lyrics and AGR’s stirring musical composition, setting the tone for the film’s emotional and spiritual journey.


The film had already piqued interest with its first look, unveiled by acclaimed filmmaker Cheran and celebrated actress Manju Warrier, building anticipation for a unique cinematic experience.


Produced by Sarvata Cine Garage and Shimoga Creations, Sannidhanam (P.O) is directed by Amutha Sarathi, who also handles the dialogues. The film is jointly produced by Madhusudhan Rao, V Vivekanandan, and Ramasamy Velu.


Featuring a strong ensemble led by Yogi Babu, Roopesh Shetty, and Varsha Viswanath, the film brings together talent from across industries, supported by a seasoned cast including Sithara, Pramod Shetty, Munnar Ramesh, Gajaraj, and many more.


Shot across spiritually significant and visually rich locations such as Sabarimala, Pamba, Erumeli, Chennai, and Pollachi, the film promises an authentic and immersive backdrop.


At its core, Sannidhanam (P.O) is driven by powerful human emotions, revolving around an unexpected incident faced by Ayyappa devotees and the transformative journey that unfolds thereafter. With a narrative rooted in faith, resilience, and human connection, the film aims to deliver a deeply moving cinematic experience.


The story and screenplay are penned by Ajinu Ayyappan, with cinematography by Vinoth Bharathi and editing by PK. The technical team further includes Vijay Thennarasu (Art Director), Metro Mahesh (Stunts), Joy Mathi (Choreography), Nataraj (Costumes), and Mohan Rajan (Lyrics).


With 'Yeri Vanthom Ayyappa' now resonating among listeners, the film’s journey begins on a spiritually uplifting note, promising much more in the days ahead.


Made as a pan-Indian film in Tamil, Kannada, Telugu, Malayalam and Hindi.  Sannidhanam (P.O) is slated for May release. The official date will be announced. 


*CAST:*

Yogi Babu, Roopesh Shetty, Sithara, Pramod Shetty, Varsha Viswanath, Munnar Ramesh, Gajaraj, Raja Rudrakodi, Sathvick, Ashwin Hassan, Vinoth Sagar, Kalki Raja, Vishalini, Thashmika Lakshman, Madhusudhan Rao.


*CREW:*

Dialogues & Direction: Amutha Sarathi

Story & Screenplay: Ajinu Ayyappan

Producers: Madhusudhan Rao, V Vivekanandan & Ramasamy Velu

Co- producer: Shabeer Pathan

Banner: Sarvata Cine Garage & Shimoga Creations

DOP: Vinoth Bharathi

Music: AGR

Editor: PK

Art Director: Vijay Thennarasu

Stunt: Metro Mahesh

Lyricist: Mohan Rajan

Dance Choreographer: Joy Mathi

Costume Designer: Nataraj

Make-up: C Shibukumar

Production Controllers: Richard & D Murugan

Executive Producer: Vilok Shetty

Co-Directors: Shakki Ashok & Sujesh Annie Eapen

Associate Directors: Muthu Vijayan, Raja Sabapathy, Raja Ram

Assistant Directors: Agni Mahendran, Saravanan Jeeva

Publicity Designer: VM Shivakumar

Stills: Reni Mon

PRO: Riaz K Ahmed & Paras Riyaz

Music Label: Trend Music

Tuesday, 14 April 2026

அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது

 *'அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது.*











*போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘முதற்கனல்’ ; மே மாதம் வெளியாகிறது.*


ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய R.வெங்கட்டரமணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.


புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபாபத்மநாபன், கருப்பசாமி,  திருவேங்கடகிருஷ்ணன், உடன் டாக்டர்.சிவா, ராமசாமி, தனுஜா, ரோகிணி, சஜன், மணிகுமார், ஷிவகுமார், ருக்மணி, இலக்கியா, அருட்பிரகாஷ், சந்திரசேகரன், மதன், கணேஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.


‘அப்பா வேணாம்ப்பா’ படத்தில் மதுவினால் ஒரு குடும்பம் எந்த அளவிற்கு சீரழிகிறது என்பதை கமர்சியலான ஒரு படமாக கொடுத்த இயக்குநர் வெங்கட்டரமணன், இந்த ‘முதற்கனல்’ படத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது, மற்றும் அவர்களது குடும்பம் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.


படம் குறித்து இயக்குநர் வெங்கட்ட ரமணன் கூறும்போது, ”இன்று நாடெங்கிலும், ஏன் உலகெங்கிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. மதுவினால் ஏற்படும் போதை மற்றும் சீரழிவை விட இப்படிப்பட்ட சிந்தடிக் போதைப் பொருட்கள் இளைஞர்களின் வாழ்வை வெகு குறுகிய காலத்திலேயே சீரழித்து விடுகின்றன. அன்றாடம் போதைப்பொருள் வழக்குகள் குறித்து நாம் செய்திகளில் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது தான், பள்ளி செல்லும் இளைஞர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு போகும் வயதில் இருப்பவர்கள் என பலரும் இப்படி போதைப்பொருள் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தங்களையே தொலைத்துவிட்ட அவலத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது.


அதனால் இந்த விஷயத்தையே ஏன் படமாக எடுக்க கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவாகத் தான் இந்த ‘முதற்கனல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. மது அருந்த பயப்படும் சிறுவர்கள், இளைஞர்கள் கூட, இது போன்ற போதை வஸ்துக்களை, அவை மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதாலும் யாரும் அறியாமல் பயன்படுத்துவது எளிது என்பதாலும் இதன் பிடியில் சுலபமாக சிக்குகின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் உளவியல் சிக்கல், அதனால் ஒவ்வொரு குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம்.


அதேசமயம் அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஒரு குடும்ப படமாக இது தயாராகியுள்ளது. படத்தில் நடித்திருக்கும் பலரும் புதுமுகங்கள் என்றாலும் இந்த கதைக்கு அவர்கள் தான் பொருத்தமாக இருந்தார்கள். படத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். நானும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்...


மே மாதம் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது


தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்


ஒளிப்பதிவு ; கந்தசாமி கோபால் DFT-


இசை ; மீராலால்


படத்தொகுப்பு ; டிஷ்யன்சாரதி,  


பாடல்கள் ; கவிஞர். மருதபரணி, மோகன், ஆத்தூர் பெரியசாமி


டிசைன்ஸ் ; சதீஷ், 


தயாரிப்பு மேற்பார்வை ;D. ராஜேந்திரன், 


இணைத்தயாரிப்பு ; ஆர்.நட்ராஜ் DFT


மக்கள்தொடர்பு ; KSK செல்வகுமார்

தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வானம்

 தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வானம் கலைத் திருவிழா என்னும் பெயரில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது.🎉📚💙


‘வேர்ச்சொல் - தலித் இலக்கியக் கூடுகை’ மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா  ஏப்ரல் 18 & 19 தேதிகளில் சென்னையில் முழுநாள் நிகழ்வாக நடக்க இருக்கிறது. இலக்கியம், சமூக அரசியல், சினிமா எனப் பல்வேறு அமர்வுகளில் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், விமர்சகர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பல தரப்பினர் கலந்துகொள்கிறார்கள்.🖍🌸🎉📚


கவிஞர் என்.டி. ராஜ்குமார் அவர்களுக்கு ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ வழங்கப்படுகிறது. இது தவிர அவர் குறித்த நூல் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு, புத்தகக் கண்காட்சி போன்றவையும் இடம்பெறுகின்றன.✨✨🎉🎉


அறிவுப்பூர்வமான, மகிழ்வான, கொண்டாட்டமான இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.❤️❤️


உங்கள் வருகை இந்நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.✨✨✨


இடம்: முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலை அரங்கம்,

ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.


ஏப்ரல் 18 & 19 (இரண்டு நாட்கள்)

நேரம்: காலை 9 முதல் மாலை 7 வரை.


அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!

https://kynhood.com/eventcategory/Vaanam%20Art%20Festival

இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026

 *இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026*



‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிப்பதும், அவர்களது படைப்புகளை ஆய்வுநோக்கில் நினைவுகூர்வதும் ‘வேர்ச்சொல் இலக்கிய விருதின்’ நோக்கமாகும். அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ அறிஞர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன் அவர்களுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் பாமா அவர்களுக்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ப.சிவகாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இலக்கிய ஆளுமைகள் குறித்த ஆவணப்படம், தொகுப்பு நூல், அவர்களது படைப்பாக்கம் குறித்த விரிவான கலந்துரையாடல் ஆகியவற்றுக்குப் பிறகு ஒரு இலட்சம் ரூபாய் காசோலையோடு ‘வேர்ச்சொல் விருது’ அளிக்கப்பட்டுவருகிறது.


இந்த ஆண்டிற்கான (2026) ‘வேர்ச்சொல் விருது’ கவிஞர், நாடகக் கலைஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது .

 சமவெளியின் நாகரிக வாழ்வால் செரிக்கப்படாத பழங்குடி சொல்மரபை நவீன தமிழ்க் கவிதைக்கு அறிமுகப்படுத்தியவர் என்.டி.ராஜ்குமார். அவரது கவிதைகள் வடிவத்தால் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்தாலும் தமிழில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. வைதீக மதங்களையும், அதன் பொய்க்கதைகளையும் கலைத்துக் காட்டுவதோடு, பூர்வக்குடிகள் தங்களுக்கெனச் சொந்தமாகக் கொண்டிருந்த பெரும் பரப்பைத் தன் கவிதைக்குள் விரித்துக் காட்டின. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ‘வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை’ இரண்டு நாட்கள் நிகழ்வாக வரும் ஏப்ரல் 18, 19 தேதிகளில் சென்னை முத்தமிழ்ப் பேரவை, டி.என்.இராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. கூடுகையின் இரண்டாம் நாள் (19.04.2026) மாலை நான்கு மணியளவில், 2026ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் இலக்கிய விருதை, கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது