Featured post

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்... நடிகர் சௌந்தரராஜா

 *சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்... நடிகர் சௌந்தரராஜா*  நடிகர்...

Friday, 26 June 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்... நடிகர் சௌந்தரராஜா

 *சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்... நடிகர் சௌந்தரராஜா* 






நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.


இந்நிலையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களாக மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலையோரங்கள் மற்றும் தெருக்களில் வளர்க்கப்பட்டு வரும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்று மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நடிகர் சௌந்தரராஜா தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு சமூகப் பணியில் ஈடுபட்டனர்.

Andharan Movie Review

 Andharan Tamil Movie Review 

Prajean, Ivana, Varun, Adhiran, Anupama Kumar, Phathmen நடிப்புல Santhosh Raavanan direction ல Shri Krish Pictures M. K. Sambasivam produce பண்ணி வந்திருக்கிற படம் தான் Andharan . 

இது ஒரு mystery thriller படம்னு தான் சொல்லணும். கதை ரொம்ப simple தாங்க. karthika னு ஒரு பொண்ணு இருக்காங்க. இவங்களுக்கு marriage fix பண்ணுறாங்க. ஆனா இதுல தான் ஒரு பிரச்சனை இருக்கு. அதாவுது, இவங்களுக்கு fix ஆகுற மாப்பிள்ளை லாம் மர்மமான முறை ல இறந்து போயிடுறாங்க. இந்த மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு officer வராரு. இவரும் இந்த மர்மத்தோட முடிச்ச அவிழ்க்க try பண்ணுறாரு அப்போ தான் பல உண்மைகளும், அதிர்ச்சிகளும் காத்துகிட்டு இருக்கு. அது என்னது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


santhosh ravanan க்கு இது தான் முதல் படம். தன்னோட முதல் படத்துலயே suspense ஆனா thrilling கதையை audience க்கு குடுத்திருக்காரு. இந்த படத்தோட மிக பெரிய வெற்றியே இந்த கதைல இருக்கற atmosphere தான். படத்தோட ஆரம்பத்துல இருந்து climax வரைக்கும் அந்த suspense அப்புறம் mystery tone அ நல்ல எடுத்துட்டு வந்திருக்காரு. அதுனாலே audience ஓட கவனம் எங்கயும் சிதறவிடாம இருக்கு. clues கூட ரொம்ப clever அ design பண்ணிருக்காரு director. இதுகொஞ்சம் பாக்க புதுசா இருந்தது. அங்க அங்க ஒரு சில scenes அ predict பண்ணுற மாதிரி இருந்தாலும், climax  portion  ரொம்ப satisfying அ இருந்தது. 


படத்துல நடிச்சிருக்க actors  ஓட performance  னு பாக்கும்போது prajin  ஓட நடிப்பு நல்ல இருந்தது. ஒரு investigating  officer அ இவரு விசாரணையை handle  பண்ணுற விதமா இருக்கட்டும், clues அ connect பண்ணுற விதமா இருக்கட்டும் எல்லாமே பாக்க அட்டகாசமா  இருந்தது. ivana  varun தான் karthika வா நடிச்சிருக்காங்க. இவங்களோட பயம், vulnerability னு இவங்களுக்கு கொடுக்கப்பட்ட role ல நல்லாவே நடிச்சிருக்காங்க. supporting actors ஆனா Anupama Kumar and Senthil Kumari ஓட presence யும் இந்த கதைக்கு நல்ல suit யிருந்தது. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது Kishore Ramachandran’ ஓட  cinematography இந்த கதைக்கான tension அப்புறம் suspense elements அ super அ கேமரா ல பதிவு பண்ணிருக்கரு. hari s r ஓட bgm mystery scenes அ நல்ல elevate யும் பண்ணிருக்கு. editing யும் இந்த படத்துக்கு பக்காவா குடுத்திருக்காங்க. 


மொத்தத்துல emotional ஆனா storytelling , audience அ முழுசா engage பண்ண வைக்கிற மாதிரி ஒரு நல்ல mystery thriller , actors ஓட strong ஆனா performance னு எல்லாமே இருக்கற padam தான் இது. சோ miss பண்ணாம உங்க family and friends ஓட போய் பாருங்க.

பிரம்மாண்டமாக நடந்த 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' படத்தின் துவக்க விழா

 பிரம்மாண்டமாக நடந்த 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' படத்தின் துவக்க விழா

















ரெடின்கிங்ஸ்லி ,யோகி பாபு,

 இணைந்து நடிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படம்  பூஜையுடன் இனிதே தொடங்கியது!



ரக்ஷிசிதா மஹாலட்சுமி, யாஷிகா ஆனந்த், இளமை துள்ளலுடன் 'லாலி பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி 'பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்



Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது.


யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 Movies இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி. அகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ரெம்பன் பால்ராஜ் கலை இயக்குநராகவும், ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக சேலம் சரவணன் செயல்படுகிறார்.


பட  விழாவில் இயக்குனர் கே.ஆர் செந்தில்நாதன் பேசியது.


அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். இன்று முதல் நாளாகவே எங்கள் படத்தின் பூஜை விழாவுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை தயாரிப்பாளர் திரு. மஞ்சுநாத் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரச்சிதா மேடம், யாஷிகா மேடம் மற்றும் இங்கு வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். 



இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், நடிகையும் அரசியல்வாதியுமான YGM மதுவந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



நடிகர் மெல்வின் பேசியதாவது.., 


“இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிறது. இயக்குநர் கதையை சொன்னபோதே அதற்காக நாங்கள் தயாராக ஆரம்பித்துவிட்டோம். கண்டிப்பாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படம் வெளியான பிறகு மற்ற விஷயங்களை விரிவாகப் பேசலாம். நன்றி.



நடிகர் அமித் பார்கவ் பேசியதாவது..


“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். ஒரு திரைப்படம் உருவாவது என்பது மிகவும் நீண்ட பயணம். ஒரு கதை எழுதுவதிலிருந்து அதை திரைப்படமாக உருவாக்கி, மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை எத்தனையோ சவால்களையும், தடைகளையும் கடக்க வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே அந்தப் பயணத்தின் அருமை புரியும். ஒரு கதையை உருவாக்கி, போட்டோஷூட் நடத்தி, இன்று பூஜை விழா வரை கொண்டு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதுவே ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் கருதுகிறேன்.


இயக்குநர் செந்தில்நாதன் சாரின் பார்வையும், இந்தப் படத்தின் கதையும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”


வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது.., 


“இந்த நிகழ்வில் என்னை அழைத்த இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் மஞ்சுநாத் அவர்களுக்கும், சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறுவதற்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சகோதரர்களாகிய நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவையும் இந்தப் படத்திற்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் அனைவரிடமும் சென்று சேர உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.


ஒரு திரைப்படத்தைத் தொடங்கி, அதை உருவாக்கி, திரையரங்குகளுக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினமான பயணம் என்பதை ஒரு தயாரிப்பாளராக நானும் நன்கு அறிவேன். அந்தப் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மாபெரும் வெற்றி பெற்று, நூறாவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. வணக்கம்.”





இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசியதாவது..,


“இங்கு கலந்து கொண்டுள்ள அனைத்து கலைஞர்களுக்கும், விஜயரத்னம் சாருக்கும், செந்தில் சாருக்கும் எனது வாழ்த்துகள். செந்தில் சாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”


நடிகை மதுவந்தி  பேசியதாவது.., “அனைவருக்கும் வணக்கம். மேடையில் அமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் மஞ்சுநாத் சார், இயக்குநர் செந்தில்நாதன் சார், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி மற்றும் இந்தப் படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.


இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகிறேன். போஸ்டரில் என் புகைப்படம் இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம், ஆனால் இந்தப் படத்தில் நான் இருப்பது உறுதி.இது வித்தியாசமான களத்தில் உருவாகும் ஒரு திரைப்படம். குறிப்பாக, இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.


இந்தப் பூஜை விழாவோடு மட்டும் இல்லாமல், இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று இதே உற்சாகத்துடன் வெற்றி விழாவையும் கொண்டாடுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”




நடிகை அஸ்மிதா பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.


மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”



நடிகை யாஷிகாஆனந்த் பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்காக தயாரிப்பாளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வந்துள்ள சக நடிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.


இந்தப் படத்தை விரைவில் திரையரங்குகளில் உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் அனைவரையும் சந்திப்போம். நன்றி.”



நடிகை ரச்சிதா பேசியதாவது.., 


“பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஏற்கனவே பலரும் கூறியதுபோல், ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம். ஒரு கதையை உருவாக்கும் கட்டத்திலிருந்தே பல சவால்கள் தொடங்கிவிடுகின்றன. இயக்குநர் செந்தில்நாதன் சாருடன் கதையைப் பற்றி பேசும்போதெல்லாம், இரண்டு வாரங்களுக்கு முன் பேசிய விஷயங்கள் மீண்டும் மாறியிருக்கும். கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும்.


இந்தப் படம் செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும்; அதுபோல இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. அந்தக் கனவு முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது. திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெறுகிறது. இனி இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம்.


போஸ்டரைப் பார்த்தவுடன் நான் ‘பி.டி. மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை படத்தில் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அனைவருக்கும் நன்றி.”





இயக்குநர் சங்கம் சார்பில் R V  உதயகுமார்  பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது. இந்த மேடையைப் பார்த்தாலே அந்த உற்சாகம் தெரிகிறது. இன்று இங்கு வந்தவுடன் எனது அத்தனை சோர்வும் மறைந்துவிட்டது.


இயக்குநர் செந்தில்நாதன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் அச்சு, தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை இவ்வளவு பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்குவதே பெரிய விஷயம். ஒரு திரைப்படத்தை ஆரம்பிப்பதில் இருந்து அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வரும் வரை எண்ணற்ற போராட்டங்களும் சவால்களும் இருக்கின்றன. படப்பிடிப்பில் வரும் சவால்களைவிட, அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் கதை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு அல்லது இசை மட்டுமே தீர்மானிப்பதில்லை. அந்தப் படத்தை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். அதற்கு நல்ல உள்ளடக்கம் (Content) மட்டுமல்ல, நல்ல நேரமும் (Timing) அவசியம்.


இந்த இரண்டும் சிறப்பாக அமையும்போது தான் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படமும் அந்த வெற்றியைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”





வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செந்தில்நாதன் சாரை எனக்கு பல காலமாக தெரியும். அவர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், ஓடிய ஓட்டமும், பட்ட கஷ்டங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.


இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”





தயாரிப்பாளர்,  நடிகர் மஞ்சுநாத் பேசியதாவது.., 


இந்த விழாவிற்கு வருகை தந்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து, அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி



விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.



வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செந்தில்நாதன் சாரை எனக்கு பல காலமாக தெரியும். அவர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், ஓடிய ஓட்டமும், பட்ட கஷ்டங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.


இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”



விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Mammatiyaan Stars Web Series Review

Mammatiyaan Stars Web Series Review


zee 5 ல வர series க்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. அந்தவகைள ஒரு sports webseries இன்னிக்கு release ஆகுது. அது தான் mammatiyaan . Savir Sudhakar தான் இதை direct பண்ணிருக்காரு. இதுல sports , friendship , sportsmanship , emotions னு எல்லாமே balanced அ குடுத்திருக்காங்க. அதுமட்டுமில்ல யாரெல்லாம் அவங்க dreams நிறைவேறணும் னு  போராடுறாங்களோ அவங்க சந்திக்கிற problems என்னனா ன்றதையும் தெளிவா இதுல காமிச்சிருக்காங்க. இதெல்லாமே audience ஆழ கண்டிப்பா relate பண்ணிக்க முடியும். 



ஒரு சின்ன town ல இருக்கற சில athletes அ introduce பண்ணுறாங்க. இவங்க விளையாட்டை நல்ல விளையாடி தனக்கு னு ஒரு பேரா சம்பாதிக்கணும் னு நினைக்கிறாங்க. ஆனா இவங்களோட குடும்ப சூழல் அதுக்கு ஒத்து வரமாட்டிங்கது. ஒரு பக்கம் family pressure, இன்னொரு பக்கம் personal problem அப்புறம் competition யும் அதிகமா இருக்கு. இருந்தாலும் ஜெயிக்கணும் ண்றதுக்காக எல்லா தடங்கல்களையும் தாண்டி வர முயற்சி பண்ணுறாங்க. usual அ sports drama நாளே கண்டிப்பா win பண்ணுறது தான் climax அ இருக்கும். ஆனா இதுல அப்படி இல்ல. game ல ஜெயிக்கணும் னு நினைக்கிற பசங்களோட emotions, அவங்களோட உணர்வுகள்  னு அவங்கள சுத்தி தான் கதையே நகருது. sports ல தீவிரம் ஆகும்போது அவங்களோட character எவ்ளோ change ஆகுது, அவங்களுக்கான confidence அ எப்படி வளத்துக்கறாங்க  றத்தை ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க. 


Vaibhav Murugesan ,  Lavanya Anbazhagan,  Venkeda Balamurali ,  Savir Sudhakar ,  Vivek Prasanna  தான் இதுல நடிச்சிருக்காங்க. இவங்களோட ஓவுவுறு character யும் இந்த series  க்கு important அ இருக்கு. அதுனாலயே இவங்க team அ வந்து களம் இறங்கும்போது இன்னும் ஸ்வாரஸ்யமா இருக்குனு சொல்லலாம். இவங்களோட journey யும் interesting அ இருக்கு. friendship , பிரச்சனைகள், அதுக்கான தீர்வு , character growth னு director கொண்டு வந்த எல்லா elements யும் திருப்திகரமா அமைச்சிருந்தது. 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம zee 5 ல இன்னிக்கு release ஆகுற இந்த series அ miss பண்ணிடாதீங்க.

சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!*

 *சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!*






இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன.


இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் Reshma Shyam இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை Shali C எழுதியுள்ளார். காதலியை ஒரு “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடல், வழக்கமான காதல் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.


சிவப்பு நிற பின்னணியில், டார்க் விஷுவல் டோனில், அழகான நடன அசைவுகளுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிகள், நடனம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று கலந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.


இசை என்பது கதையின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மொழி என்பதை பலமுறை நிரூபித்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலிலும் புதுமையான மெலடி மற்றும் நவீன இசை அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாடல் முடிந்த பிறகும் அதன் தாளம் மற்றும் மெலடி மனதில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது.


🔗https://youtu.be/-vlnhbtkyhw?si=X-_vwXntJsEkWFP5

RAAJ KAMAL FILMS INTERNATIONAL KAMAL HAASAN PROUDLY PRESENTS SUPERSTAR RAJINIKANTH “DHARMAN”

RAAJ KAMAL FILMS INTERNATIONAL

KAMAL HAASAN PROUDLY PRESENTS

SUPERSTAR RAJINIKANTH

“DHARMAN”





DIRECTED BY ASHWATH MARIMUTHU

MUSIC BY ANIRUDH RAVICHANDER

ACTION BY ANBARIV

PRODUCED BY KAMAL HAASAN - R. MAHENDRAN



24, June 2026


RaajKamal Films International (RKFI) today commenced the inaugural shoot of its highly anticipated new production, 'DHARMAN', starring Superstar Rajinikanth. The film's title and first look were unveiled today, offering eager audiences their first glimpse into one of Indian cinema’s most anticipated events in recent years.


Few friendships in world cinema have endured as long, or remained as beloved, as that of Kamal Haasan and Superstar Rajinikanth. After more than five decades at the forefront of Indian cinema, the two icons come together for the first time in a producer-actor collaboration through 'DHARMAN'. Produced under the banner of RaajKamal Films International by Kamal Haasan and R. Mahendran, the film also marks Superstar Rajinikanth's first appearance in an RKFI production, making it a proud moment in the 46-year journey of one of Indian cinema’s most iconic studios.


The film is directed by Ashwath Marimuthu, who has emerged as a distinctive voice in contemporary Indian cinema and is widely regarded as one of the industry's most exciting young directors.


Joining Superstar Rajinikanth on screen are Simran, one of the most celebrated artists in South Indian cinema, and Raashii Khanna, a versatile performer acclaimed for her work across Tamil, Telugu and Hindi films.


The film boasts an exceptional creative team, with music composed by global sensation Anirudh Ravichander. Action choreography will be handled by the National Award-winning duo Anbariv, renowned for crafting some of Indian cinema's most memorable action sequences. The film's visual world will be captured by cinematographer Niketh Bommireddy, with Karthik Rajkumar serving as Production Designer. Pradeep E. Ragav joins as Editor, while Annadurai serves as Art Director and Co-produced by Disney.


Principal photography commenced today in Chennai with the film's inaugural shoot ceremony attended by the cast, crew, production team and distinguished guests.


The launch event was graced by the presence of several eminent members of the film fraternity and industry leaders, including Mr. Kalaipuli S. Dhanu, Mr. Anbuchezhian, Mr. R.K. Selva Mani, Mr. Lingusamy, Mr. Kannan (CTO, Sun Network), Mr. Shenbagamoorthi, Mr. Tamil Kumaran, Mr. Krishnan Kutty (JIO Star), Mr. Balachandran (JIO Star), Mr. Pradeep Milroy Peter (JIO Star), Mr. Anand (Saregama) and Mr. Saravanan Vinoth, making the occasion a memorable celebration of cinema and collaboration.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல்ஹாசன் பெருமையுடன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்

கமல்ஹாசன்

பெருமையுடன் வழங்கும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்


"தர்மன்"


இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து

இசை: அனிருத் ரவிச்சந்தர்

சண்டைப் பயிற்சி: அன்பரிவ்

தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன்





ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.


கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வு.


தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தரவேண்டும் என்பதில் 46 ஆண்டுகளாக எவ்வித சமரசமும் இன்றி செயல்பட்டு வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைவது இதுவே முதல்முறை.


ஓ மை கடவுளே, டிராகன் போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய, இன்றைய ஜென் Z தலைமுறையால் இளமை இயக்குனர் என்று கொண்டாடப்படும் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். தனது துள்ளல் இசையால் உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்; தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


அதிரடி சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருதுகளை வென்ற அன்பரிவ் மாஸ்டர்ஸ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ், கலை இயக்குனர் அண்ணாதுரை என இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்காற்றுகிறார்கள், மேலும் இணை தயாரிப்பாளராக டிஸ்னி இணைந்து தயாரிக்கிறார்.


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மைல்கல் திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் தொடக்க விழா மற்றும் முதற்கட்ட படப்பிடிப்பு, படக்குழுவினர், தயாரிப்பு குழுவினர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இன்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.


இந்தத் தொடக்க விழாவில் திரு. கலைப்புலி எஸ். தாணு, திரு. அன்புச்செழியன், திரு. ஆர்.கே. செல்வமணி, திரு. லிங்குசாமி, திரு. கண்ணன் (CTO, சன் நெட்வொர்க்), திரு. செண்பகமூர்த்தி, திரு. தமிழ் குமரன், திரு. கிருஷ்ணன் குட்டி (JIO Star), திரு. பாலசந்திரன் (JIO Star), திரு. பிரதீப் மில்ராய் பீட்டர் (JIO Star), திரு. ஆனந்த் (Saregama) மற்றும் திரு. சரவணன் வினோத் உள்ளிட்ட திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் துறை சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து பெரும் மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.


English Press Release 


RAAJKAMAL FILMS INTERNATIONAL

KAMAL HAASAN

PROUDLY PRESENTS

SUPERSTAR RAJINIKANTH


“DHARMAN”


DIRECTED BY ASHWATH MARIMUTHU

MUSIC BY ANIRUDH RAVICHANDER

ACTION BY ANBARIV

PRODUCED BY KAMAL HAASAN - R. MAHENDRAN



24, June 2026


RaajKamal Films International (RKFI) today commenced the inaugural shoot of its highly anticipated new production, 'DHARMAN', starring Superstar Rajinikanth. The film's title and first look were unveiled today, offering eager audiences their first glimpse into one of Indian cinema’s most anticipated events in recent years.


Few friendships in world cinema have endured as long, or remained as beloved, as that of Kamal Haasan and Superstar Rajinikanth. After more than five decades at the forefront of Indian cinema, the two icons come together for the first time in a producer-actor collaboration through 'DHARMAN'. Produced under the banner of RaajKamal Films International by Kamal Haasan and R. Mahendran, the film also marks Superstar Rajinikanth's first appearance in an RKFI production, making it a proud moment in the 46-year journey of one of Indian cinema’s most iconic studios.


The film is directed by Ashwath Marimuthu, who has emerged as a distinctive voice in contemporary Indian cinema and is widely regarded as one of the industry's most exciting young directors.


Joining Superstar Rajinikanth on screen are Simran, one of the most celebrated artists in South Indian cinema, and Raashii Khanna, a versatile performer acclaimed for her work across Tamil, Telugu and Hindi films.


The film boasts an exceptional creative team, with music composed by global sensation Anirudh Ravichander. Action choreography will be handled by the National Award-winning duo Anbariv, renowned for crafting some of Indian cinema's most memorable action sequences. The film's visual world will be captured by cinematographer Niketh Bommireddy, with Karthik Rajkumar serving as Production Designer. Pradeep E. Ragav joins as Editor, while Annadurai serves as Art Director and Co-produced by Disney.


Principal photography commenced today in Chennai with the film's inaugural shoot ceremony attended by the cast, crew, production team and distinguished guests.


The launch event was graced by the presence of several eminent members of the film fraternity and industry leaders, including Mr. Kalaipuli S. Dhanu, Mr. Anbuchezhian, Mr. R.K. Selva Mani, Mr. Lingusamy, Mr. Kannan (CTO, Sun Network), Mr. Shenbagamoorthi, Mr. Tamil Kumaran, Mr. Krishnan Kutty (JIO Star), Mr. Balachandran (JIO Star), Mr. Pradeep Milroy Peter (JIO Star), Mr. Anand (Saregama) and Mr. Saravanan Vinoth, making the occasion a memorable celebration of cinema and collaboration.

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு...விஷன் சினிமா ஹவுஸின் 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

 *ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு...விஷன் சினிமா ஹவுஸின் 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!*



படத்தின் தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பயணித்த 'ஹைக்கூ' திரைப்படத்தின்  படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேற்பட்ட கால்ஷீட், நான்கு கட்டமாக நடந்த படப்பிடிப்பு, எண்ணற்ற நினைவுகள் என நீண்ட பயணத்திற்குப் பிறகு, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் நுழைந்துள்ளது.


விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்த 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில்  தொடங்கியது. கேரளாவின் பசுமையான பகுதிகள்,கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மூன்று பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, ஸ்பென்சர் பிளாசா, அண்ணா சாலை (மவுண்ட் ரோடு), ஆச்சி ஹவுஸ், பெருங்குடி மற்றும் அடையார் பாலம் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையின் ஈசிஆர் கோவளம் கடற்கரைப் பகுதியில் நிறைவடைந்தது. 


இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறுகையில், "‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்கள் அனைவருக்கும் திருப்திகரமான தருணமாகும். இந்தக் கதையை ஆரம்பம் முதலே நம்பி, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நம்பிக்கையால்தான் நாங்கள் நினைத்தபடியே இந்தப் படத்தை உருவாக்க முடிந்தது. ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘ஹைக்கூ’ திரைப்படம் ரசிகர்களுக்கு மனதை வருடும், இதமான, தென்றல் போல இலகுவான, உணர்ச்சிப்பூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. அதை விரைவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒரு இயக்குநரின் கனவுகளை நனவாக்க தயாரிப்பாளரின் ஆதரவு மிக அவசியம். அந்த வகையில், சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்ட எனது தயாரிப்பாளர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். எதிர்காலத்தில் பல இளம் இயக்குநர்களுக்கு விஷன் சினிமா ஹவுஸ் வாய்ப்பளிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.


தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து பகிர்ந்து கொண்டதாவது, "‘ஹைக்கூ’ திரைப்படம் முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆரம்பம் முதலே இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இந்தப் படத்தை மிகத் தெளிவான பார்வையுடனும் நேர்மையான அணுகுமுறையுடனும் உருவாக்கினார். அவர் மீது முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பிலும் தங்களது முழு அர்ப்பணிப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது அருமையான அனுபவம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தவுடன் இதை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம். தரமான படைப்பும், திட்டமிட்ட நேரத்தில் அதை நிறைவு செய்வதும்தான் தயாரிப்பாளருக்கு உண்மையான மகிழ்ச்சி. இதனை இயக்குநர் யுவராஜ் சின்னசாமி சரியாக செய்து முடித்தார். இயக்குநராக அவருக்கு எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்பான வெற்றிகள் காத்திருக்கின்றன என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்றனர்.


படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே 'ஹைக்கூ' திரைப்படம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பிரீமியம் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. தற்போது டிஜிட்டல் உரிமைகள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சூழலில், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது இப்படத்தின் கதை மீது வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அனைவரையும் இணைக்கும் பொதுவான இந்த கதை, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


*நடிகர்கள்:* ஏகன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், மைம் கோபி, 'மெய்யழகன்' புகழ் இந்துமதி, 'லப்பர் பந்து' புகழ் ஜென்சன், 'சிறை' புகழ் இஸ்மத்தா பானு, 'டாக்டர்' சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


எழுத்து, இயக்கம்: யுவராஜ் சின்னசாமி,

கூடுதல் திரைக்கதை: ஹரி ஹரன் ராம்,

ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி,

படத்தொகுப்பு: சக்தி பிரணேஷ்,

இசை: சித்து குமார்,

கலை இயக்கம்: பிரேம்

Every Journey Finds Its Final Frame! Vision Cinema House's 'Haiku' Wraps Up Shooting

 *Every Journey Finds Its Final Frame! Vision Cinema House's 'Haiku' Wraps Up Shooting*



Like the quiet rhythm of its title, Haiku has completed a remarkable journey: one frame, one location, and one memory at a time. Spanning over 90 call sheets across four schedules, the film has now successfully wrapped up shooting, marking the beginning of its next creative chapter.


Produced by Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu under the banner of Vision Cinema House, Haikucommenced its journey in February this year,  amidst the serene landscapes of Erumely, Kerala. From the lush greenery of Kerala to the vibrant landscapes of Coimbatore and Chennai, Haiku travelled through diverse terrains, each becoming an integral part of its storytelling. The production featured three elaborate set pieces while also filming across several prominent Chennai landmarks, including Spencer Plaza, Anna Salai (Mount Road), Aachi House, Perungudi, and Adyar Bridge. The final schedule concluded along the shores of ECR Kovalam Beach, Chennai, where the team officially called it a wrap, bringing months of dedication, collaboration, and countless memories to a fulfilling close.


Director Yuvaraj Chinnasamy says, ”Completing the shoot of 'Haiku' is a very emotional and satisfying moment for all of us. I sincerely thank our producers, Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu, for believing in this story from day one and extending complete creative freedom throughout the journey. Their trust allowed us to make the film exactly the way we envisioned it. Working with Aegan, Sridevi, Femina George, the entire cast, technicians, and crew has been an absolute pleasure. We are shaping 'Haiku' into a film that offers audiences a soothing, breezy, and emotionally fulfilling experience on the big screen, and we can't wait to share it with everyone. Whatever the directorial team plans and executes need the support of the producer.  The support that was accorded to me by my producer is un believably.  His passion towards cinema was evident.   Iam sure Vision cinema house will be the breeding ground for many young directors in the future.”


Producers Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu say, ”Watching 'Haiku' reach this important milestone is immensely gratifying. From the very beginning, Yuvaraj Chinnasamy approached the film with remarkable clarity and sincerity, and we believed in his vision. It has been a wonderful experience working with him and the entire team, who have put their heart and soul into every schedule. We are delighted with the way the film has taken shape and are excited to present 'Haiku' to audiences after the completion of post-production. Precision in quality and timely delivery is what actually excites the producer and I give full credit to my director for this quality.  I’m sure as a director he has got great days ahead. "


Written and directed by Yuvaraj Chinnasamy, Haiku features additional screenplay by Hari Haran Ram. The film brings together an accomplished technical team comprising Priyesh Guruswamy (Cinematography), Sakthi Pranesh(Editing), Siddhu Kumar (Music), and Prem (Art Direction).


The film features an ensemble cast led by Aegan, alongside Sridevi, Femina George, Adrichi Arun, Mime Gopi, Indhumathi (Meiyazhagan fame), Jenson (Lubber Bandhu fame), Ismatha Banu (Sirai fame), 'Doctor' Shiva, and several other notable performers.


Even before the completion of shooting, Haiku had achieved a significant milestone by securing its post-theatrical digital streaming rights with Netflix. At a time when digital acquisitions have become increasingly selective, the film's early OTT deal stands as a strong vote of confidence in its storytelling. Acquired for a premium price, the film's universal theme and emotional appeal are expected to resonate with audiences beyond linguistic and regional boundaries.


With shooting now wrapped up, Vision Cinema House quietly turns the page to its next chapter. As Haiku enters post-production, the banner moves one step closer to presenting a film shaped by passion, perseverance, and the belief that meaningful stories can travel far beyond boundaries.