Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Saturday, 10 January 2026

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review 

*ParAsakthi Movie Rating: 4.5//5*

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது sudha kongara . இந்த படத்துல sivakarthikeyan, sreeleela, jayam ravi , atharva  னு பலர் நடிச்சருக்காங்க. ரொம்ப நாலா நம்ம காத்துகிட்டு இருந்த படம் இன்னிக்கு release  ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.



ஒரு language அ மக்களுக்கு அரசாங்கம் திணிக்கும்போது மக்கள் எப்படி கஷ்டப்படுறாங்க. அவங்களோட வாழக்கை எப்படி பாதிக்கப்படுது ன்றது தான் parasakthi . இந்த படத்தோட 1960 ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. எடுத்த ஒடனே கதைக்குள்ள போயிடுறாங்க. hindi திணிப்பு க்கு எதிரா செயல் படுறாங்க புறநானுறு ன்ற ஒரு gang . இதுல தான் sivakarthikeyan இருக்காரு. போராட்டத்துக்காக ஒரு train யா எரிச்சுடுறாரு sivakarthikeyan யும் அவராக team மும். இப்போ இந்த கூட்டத்தை பிடிக்கணும் ட்றதுக்காக ravi mohan தீவிரமா இருக்காரு. இப்போ இந்த train accident ல sivakarthikeyan ஓட friend இறந்து போய்டுறாரு. அதுனால இனிமே இந்த மாதிரி வன்முறைல ஈடுபடக்கூடாது னு முடிவு எடுத்து இந்த team அ விட்டு வெளில வந்துடுறாரு. ஆனா sivakarthikeyan ஓட தம்பிய நடிச்சிருக்க adharva இந்த கூட்டத்துல சேந்துடுறாரு. இப்போ sivakarthikeyan  hindi படிச்சு delhi ல வேலைக்கு போகலாம் னு நினைக்குறாரு. 


hindi படிச்சா தான் வேலை கிடைக்கும் னு நிலைமை வருது, அதுனால sivakarthikeyan  க்கு முன்னாடியே ஒரு பையன் இறந்து போயிடுறேன். sivakarthikeyan க்கும் வேலை கிடைக்காம போயிடுது. அதுனால மறுபடியும் புறநாநூறு ல சேருறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half னு பாக்கும்போது sivakarthikeyan அப்புறம் sreeleela ஓட romantic portions எல்லாம் நல்ல இருந்தது. அதே மாதிரி hindi language க்கு எதிரா நடக்கற போராட்ட scenes எல்லாம் ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காங்க. படத்தோட second half கொஞ்சம் slow போனாலும் மக்களுக்கு சொல்ல வர விஷயத்தை பக்காவா சொல்லிட்டாங்க. அதாவுது ஹிந்தி திணிப்பு க்கு எல்லாரும் எதிரா இருக்காங்களே தவிர hindi மொழி க்கு கிடையாது. இதை ரொம்ப தெளிவா இந்த படத்துல சொல்லிருக்காங்க. அப்புறம் dialogues , art direction , actors போட்ருக்க costumes னு எல்லாமே super அ இருந்தது. 

actors ஓட performance னு பாக்கும்போது sivakarthikeyan chezhiyan  அ ஒரு wonderful ஆனா performance அ குடுத்திருக்காங்க. மக்களுக்கு ஒரு impact அ குடுக்கற மாதிரி இவரோட character அமைச்சிருக்கு. என்னதான் போராட்டத்தால உயிர் போகுது னு நினைச்சு கைவிட்டாலும் கடைசில இந்த நாட்டுல எது கிடைக்கணும் நாலும் போராடி தான் ஆகணும் னு எடுக்கற எல்லா முடிவும் அருமையா இருந்தது.  ravimohan எப்பவும் போல அவரோட style ல அசத்திட்டு  போயிருக்காரு னு தான் சொல்லணும். ஒரு villain அ நல்ல நடிச்சிருக்காரு. ஒரு officer அ அரசாங்கத்துக்கு மட்டும் தான் support பண்ணுறாரு மக்கள் இறந்து போனாலும் பரவாயில்லை நம்ம நினைச்சது தான் நடக்கணும் னு நினைக்குறாரு. adharva தான் இந்த கதைக்கு முக்கியமான character ல நடிச்சிருக்காரு. இவரோட performance யும் நல்ல இருந்தது. sreeleela ஓட acting யும் நல்ல இருந்தது. இவங்களோட character க்கு இன்னும் detail குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். படத்துல நடிச்சிருக்க மத்த supporting  actors  யும் அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காரு. rana dagubathi cameo  role ல நடிச்சிருக்காரு. 


படத்தோட technical aspects  னு பாக்கும்போது gv prakash ஓட music and  songs எல்லாமே super அ இருந்தது. இது ஒரு period drama movie இதுக்கு ஏத்த மாதிரி bgm அ பக்காவா set பண்ணிருக்காரு. Ravi K. Chandran ஓட  cinematography யும் நல்ல இருந்தது. முக்கியமா visuals எல்லா பக்காவா குடுத்திருக்காங்க. sathish surya ஓட editing யும் crisp அ இருந்தது. 

மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

Kantara Chapter 1 completes 100 days since release; enters awards consideration phase*

 Kantara Chapter 1 completes 100 days since release; enters awards consideration phase*




Kantara Chapter 1 has completed 100 days since its release, marking a significant milestone in its cinematic journey and cultural impact. Deeply rooted in Indian folklore, spiritual traditions, and indigenous storytelling, the film has received widespread appreciation from audiences and critics, establishing itself as a notable work in contemporary Indian cinema. 


Written and directed by Rishab Shetty and produced by Vijay Kiragandur under the banner of Hombale Films, the film is recognised for its immersive narrative and visual grandeur. 


As the film marks 100 days since release, Kantara Chapter 1 has also entered contention for the Academy Awards, reflecting the growing global recognition for culturally rooted and authentic Indian storytelling.

திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1” தற்போது

 *திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1”   தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !




“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக  “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது.


ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.


வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1”  திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்”   விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு,  உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது. 


“காந்தாரா சேப்டர் 1”  தற்போது இந்திய எல்லையைக் கடந்து,  உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.


இயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை

 *இயக்குநர் பா.இரஞ்சித் அறிக்கை*


ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. 



அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. 


மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம். 


- இயக்குநர் பா.இரஞ்சித்

Friday, 9 January 2026

இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’”

 *“இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’” -நடிகர் சிவகார்த்திகேயன்!*











தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 10, 2026 அன்று) வெளியாக உள்ள ’பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி தனது அனுபவங்களை சிவகார்த்திகேயன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார், “’பராசக்தி’ கதையுடன் சுதா கொங்காரா என்னை அணுகியபோது கலவையான உணர்வுகள் எனக்குள் இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும், அவரது அற்புதமான திரைக்கதைக்கு நான் நியாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகினேன். என் வழக்கமான இமேஜைத் தாண்டி, வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இயக்குநராக சுதா கொங்காரா என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ரசிகர்களும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


ரவி மோகன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கவே இல்லை. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்தான். செட்டில் அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நீண்ட காலமாக அவரை திரையில் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால், நேரில் அவரின் பணிவும் நேர்மறை அணுகுமுறையும் எனக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. இந்தப் படத்தில் அதர்வா முரளியின் நடிப்பு அவரது ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகமாக்கும். 


ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெளியான பிறகு அவரின் நடிப்பு நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும். நம் இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’. இந்த படம் சிறப்பான முழுமையான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும்.  


தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. ஒவ்வொரு காட்சியையும் உயர்ந்த தரத்துடன் உருவாக்க எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்ததற்காக அவருக்கு நன்றி” என்றார். 


டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


படத்தின் புரமோஷன் காட்சிகளே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Parasakthi powerfully chronicles the courage and sacrifice of Tamil Nadu’s youth, who shaped an indelible chapter in our nation’s history” - Actor Sivakarthikeyan

 *“Parasakthi powerfully chronicles the courage and sacrifice of Tamil Nadu’s youth, who shaped an indelible chapter in our nation’s history” - Actor  Sivakarthikeyan*










Actor Sivakarthikeyan, Tamil cinema’s pre-eminent box-office titan, continually demonstrates his remarkable versatility across diverse genres. Renowned for his discerning script selection that resonates universally, he exudes palpable excitement for his ambitious venture Parasakthi, directed by Sudha Kongara and produced by Aakash Bhaskaran of Dawn Pictures. With the film set for its worldwide theatrical release tomorrow, January 10, 2026, SK offers profound insights into this extraordinary project.


Sivakarthikeyan reflects: “When Sudha Kongara first approached me with Parasakthi,"Sudha Kongara approaching me for this film brought mixed feelings: excitement, but also doubt about whether I could live up to her masterful script. I approached every scene with profound seriousness, determined to transcend my usual persona. As a meticulous taskmaster, she drew out my finest work, which I trust audiences will embrace wholeheartedly.


I never imagined Ravi Mohan would embrace this project, and his acceptance left me in disbelief for quite some time. Yet, his warmth toward everyone on set was profoundly moving. Having long admired him on screen, it was his genuine humility and positivity in person that humbled me most, serving as perfect inspiration. Atharvaa Murali’s performance will expand his fandom immeasurably.


It was an honour to share the screen with Sreeleela, a performer of rare brilliance; I am certain she will captivate Tamil Nadu audiences and become everyone’s favourite post-release. Parasakthi powerfully chronicles the courage and sacrifice of Tamil Nadu’s youth, who shaped an indelible chapter in our nation’s history. The film promises an exceptional cinematic journey, leaving viewers with profound satisfaction from a truly wholesome experience.


Without Aakash Bhaskaran’s vision, Parasakthi would not exist. He elevated every frame to opulent perfection, and I am eternally grateful for this invaluable opportunity.”


Helmed by writer-director Sudha Kongara and produced by Aakash Bhaskaran’s Dawn Pictures, Parasakthi assembles a stellar cast: Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa Murali, and Sreeleela, for an epic historical saga. GV Prakash Kumar’s soul-stirring music, commemorating his landmark 100th film, alongside breathtaking promotional glimpses, has set the stage ablaze ahead of the worldwide release on January 10, 2026.

Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026

 Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026)




In a significant milestone for Indian cinema, the Tamil survival drama Gevi has officially entered the race for the 98th Academy Awards (Oscars 2026), becoming eligible for consideration in the Academy Awards nomination process. This comes as a major boost to the films that are made in the small

Budget but go on to win big honours. 


Directed by Tamil Dhayalan and produced by Artuptriangles Film Kampany, Gevi is a powerful survival drama inspired by true events and set against the rugged landscapes of the Western Ghats. The film tells a compelling story of survival and the fight for justice, centering on a couple living in a rural village near Kodaikanal.


The film stars Aadhavan and Sheela in the lead roles, supported by an ensemble cast that includes Jacqueline Lydia, Jeeva Subramanian, B. Ganesh, Vivek Mohan, and Umar Farook. Deeply rooted in the cultural, social, and environmental realities of rural India, Gevi presents a universally resonant narrative driven by emotional depth and cinematic scale.


Gevi has been successfully uploaded to the Academy Screening Room (ASR), the secure digital platform through which Academy members view eligible films while voting for the final nominations.


Commenting on the film’s Oscar journey, producer Jagan Jayasurya said:


“As the producer of Gevi, I believe the film possesses the scale, craft, and emotional resonance that align strongly with the Academy’s Best Picture sensibilities. The film’s reception to date has reinforced our confidence that Gevi can compete meaningfully at the highest level, and we are now seeking to engage in a focused, well-structured awards campaign.”


As an official contender for the 2026 Academy Awards, Gevi joins other notable Indian entries, including the shortlisted Homebound. Academy members will cast their votes for final nominations from January 12 to January 16, 2026, with the official list of nominees set to be announced on January 22, 2026.



About the Film

Gevi is a Tamil-language survival drama produced by Artuptriangles Film Kampany and directed by Tamil Dhayalan. Inspired by real-life events, the film explores resilience, justice, and human endurance against the unforgiving forces of nature.

தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026)

 *தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) போட்டியில் அதிகாரப்பூர்வ நுழைவு!*




இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) நாமினேஷன் புராசெஸில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருக்கும் ‘கெவி’ இனி வெளியாக இருக்கும் பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் முன்மாதிரியாக மாறியுள்ளது. 


தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆர்ட்அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவான ’கெவி’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கடினமான இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு, கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் தம்பதியின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம் மற்றும் நீதிக்கான போராட்டத்தை இந்த படம் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியது.


படத்தில் ஆதவன் மற்றும் ஷீலா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜாக்குலின் லிடியா, ஜீவா சுப்ரமணியன், பி. கணேஷ், விவேக் மோகன், உமர் ஃபரூக் உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். கிராமப்புற இந்தியாவின் பண்பாடு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் உண்மைகளை பிரதிபலிக்கும் இந்த திரைப்படம், உலகளாவிய பார்வையாளர்களும் தங்களுடன் இணைத்து கொள்ளும் வகையிலான உணர்வுப்பூர்வமான சினிமா அனுபவத்தைக் கொடுத்தது.


ஆஸ்கார் விருதுகள் பரிசீலனைக்காக, அகாடமி ஸ்கிரீனிங் ரூம் (ASR) எனப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தில் ‘கெவி’ திரைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அகாடமி உறுப்பினர்கள் படத்தை பார்வையிட்டு வாக்குப்பதிவு செய்ய முடியும்.


படத்தின் ஆஸ்கார் பயணம் குறித்து தயாரிப்பாளர் ஜெகன் ஜெயசூர்யா கூறியதாவது, “அகாடமியின் சிறந்த திரைப்படம் (Best Picture) பிரிவிற்குத் தேவையான கலைநயம் மற்றும் உணர்வுப்பூர்வமான தாக்கம் ’கெவி’ திரைப்படத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன். ‘கெவி’ திரைப்படத்திற்கு இதுவரை கிடைத்த வரவேற்பு உலகின் உயரிய விருது மேடைகளில் இந்த படம் போட்டியிடும் தகுதி கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்காக திட்டமிட்ட மற்றும் வலுவான விருது பிரச்சாரத்தை (awards campaign) மேற்கொள்ள தயாராக உள்ளோம்” என்றார்.


இந்த வருடத்தின் அகாடமி விருதுகளுக்கான அதிகாரப்பூர்வ போட்டி திரைப்படமாக நுழைந்த ‘கெவி’ திரைப்படம், ‘ஹோம்பவுண்ட்’ உள்ளிட்ட பிற முக்கிய இந்திய படங்களுடன் இணைகிறது. அகாடமி உறுப்பினர்கள் ஜனவரி 12 முதல் 16, 2026 வரை இறுதி நாமினேஷன்களுக்கான வாக்குப்பதிவை மேற்கொள்ள உள்ளனர். அதிகாரப்பூர்வ நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது.


*’கெவி’ திரைப்படம் பற்றி:*

ஆர்ட்அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் தமிழ் சர்வைவல் திரைப்படமாக ‘கெவி’ உருவாகியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம், இயற்கையின் கொடூர சக்திகளுக்கு எதிராக மனிதனின் தைரியம், நீதி மற்றும் சகிப்புத்தன்மையை பற்றி பேசுகிறது.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘அல்லு சினிமா’ஸூக்காக சிறப்பு விளம்பர படத்தை

 *ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘அல்லு சினிமா’ஸூக்காக சிறப்பு விளம்பர படத்தை படமாக்கியுள்ளார்!*



அல்லு சினிமாஸ் நிறுவனத்திற்காக உருவாகும் சிறப்பு விளம்பர படத்தின் படப்பிடிப்பை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் கௌதம் நாயுடு இயக்கியுள்ளார். உயர்தரமான சினிமா தரத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த மாத இறுதியில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள அல்லு சினிமாஸ் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக இந்த விளம்பர படம் அமைந்துள்ளது. நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை, பிரம்மாண்டம் மற்றும் தரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பர படம் தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக வெளியிடப்பட உள்ளது.


அல்லு அர்ஜுனின் வலுவான திரை இருப்பும், அவருடைய ஸ்டைலும் இந்த விளம்பர படத்தில் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.