Featured post

Legend Saravanan’s new film titled 'Leader

 Legend Saravanan’s new film titled 'Leader'* *Written and directed by R.S. Durai Senthilkumar, 'Leader' narrates extraordin...

Wednesday, 4 February 2026

Legend Saravanan’s new film titled 'Leader

 Legend Saravanan’s new film titled 'Leader'*


*Written and directed by R.S. Durai Senthilkumar, 'Leader' narrates extraordinary challenges faced by an ordinary man in a gripping and thrilling manner*


Legend Saravanan's new film written and directed by R.S. Durai Senthilkumar has been titled 'Leader'. Produced on a grand budget by Legend Saravana Stores Productions, the movie features Legend Saravanan in the lead role.


R.S. Durai Senthilkumar, one of the leading filmmakers in Tamil cinema, known for acclaimed movies such as 'Ethir Neechal', 'Kaaki Sattai', 'Kodi', 'Pattas', and 'Garudan', has made this film as a gripping entertainer. Works to bring the film to screens at the earliest are on in full swing.


Speaking about the story, the film's team shared: “An ordinary man gets caught in a war between the underworld and the police force. 'Leader' is about how he survives this intense conflict by protecting himself and those close to him.”


The film was shot across multiple locations, starting in Thoothukudi and spanning Jaipur, Ooty, and Georgia, before concluding in Chennai. Packed with mass elements, action, suspense, and thrills, 'Leader' is designed to align with contemporary trends and audience expectations.


Popular Bollywood actress Payal Rajput plays the female lead in Leader. The film also Sham, Andrea, Santhosh Prathap, Lal, Baahubali Prabhakar, Amirtha Aiyer, VTV Ganesh, Aishwarya, Aranthangi Nisha, Iyal, Jeyasmirtha, Pathman, Yogiram, OAK Sundar, Mahanadhi Shankar, Mariyam George, “Adithya” Kathir, Vel Arunachalam, Niranjan, Shoban Babu, Ashok Pandian and others in important roles.


Music for the film is composed by Ghibran Vaibhoda. Cinematography is handled by S. Venkatesh, with editing by Pradeep E. Ragav. Stunts are choreographed by Mahesh Mathew. Art direction is by G. Durairaj. Costume designers are Deepthi R.J. and Poorthi Pravin, while P. Rangasamy is the costumer. Make-up is by N. Sakthivel, Abdul, Harsha Karthik, Moovendar, and Ranjith, while hairstyling is by J. Dhanasekaran, Assault Ganesh, Sharmila, and Shivaraj.


Dubbing is by Knack, G. Kothandan, and G. Vishnuvardhan. VFX is by Phantom FX, animations by Ambani NSK, DI by L.V. Prasad Studios, colorist Ranga, mixing by T. Udayakumar, and SFX by A. Sathish Kumar. Lyrics are penned by Kabilan and Viveka, choreography by Sankkaraiyya D, and public relations by Nikil Murukan.


Further announcements, including the audio launch of 'Leader' written and directed by R.S. Durai Senthilkumar, produced by Legend Saravana Stores Productions and starring Legend Saravanan, will be made soon.


***

லெஜெண்ட் சரவணனின் புதிய படத்தின் பெயர் 'லீடர்'

லெஜெண்ட் சரவணனின் புதிய படத்தின் பெயர் 'லீடர்'*


*R.S. துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள‌ 'லீடர்' சாமானியன் எதிர்கொள்ளும் அசாதாரண சவால்களை விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் விவரிக்கிறது*


லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'லீடர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.


'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை', 'கொடி', 'பட்டாஸ்', 'கருடன்' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள R.S. துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


இப்படத்தின் கதை குறித்து விவரித்த படக்குழுவினர், "நிழல் உலகத்திற்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொண்டு தப்பிக்கிறான் என்பதே லீடர்," என்றனர். 


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று சென்னையில் நிறைவுற்றது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இப்படம் இருக்கும். 


'லீடர்' படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல், ஜெயஸ்மிர்தா, பத்மன், யோகிராம், ஓ ஏ கே சுந்தர், மகாநதி ஷங்கர், மரியம் ஜார்ஜ், "ஆதித்யா" கதிர், வேல் அருணாச்சலம், நிரஞ்சன், ஷோபன் பாபு, அசோக் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். S. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். சண்டை பயிற்சி: மகேஷ் மேத்யூ; கலை இயக்கம்: G. துரைராஜ்; உடைகள் வடிவமைப்பு: தீப்தி RJ, பூர்த்தி பிரவின்; உடைகள்: பி. ரங்கசாமி; ஒப்பனை: என். சக்திவேல், அப்துல், ஹர்ஷா கார்த்திக், மூவேந்தர், ரஞ்சித்; சிகை அலங்காரம்: ஜெ. தனசேகரன், அசால்ட் கணேஷ், ஷர்மிளா, ஷிவராஜ்; டப்பிங்: Knack, ஜி. கோதாண்டன், ஜி. விஷ்ணுவர்தன்; வி எஃப் எக்ஸ்: ஃபேந்தம் எஃப் எக்ஸ்; அனிமேஷன்: அம்பானி என் எஸ் கே; டி ஐ: எல் வி பிரசாத் ஸ்டூடியோஸ்; கலரிஸ்ட்: ரங்கா; மிக்சிங்: டி. உதய்க்குமார்; எஸ் எஃப் எக்ஸ்: ஏ. சதீஷ் குமார்; பாடல்கள்: கபிலன், விவேகா; நடனம்: சங்க‌ரையா டி; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.


லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் லெஜெண்ட் சரவணனின் நடிப்பில் R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள 'லீடர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட‌ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. 



மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி அறிமுக விழா

 ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி அறிமுக விழா!!






கலைமாமணி மதுரை R. முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை–நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது.


இந்த மேடை நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று ஒரு அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…


உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.

நன்றி.



தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…


முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின்  நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தாயன்பன் பேசியதாவது…

இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன்.

நன்றி.


மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…


இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…


முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

நன்றி.


‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது. மருது சகோதரர்களாக  கலைமாமணி மதுரை R. முரளிதரன், சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக மதுரை R. முரளிதரன் அவர்களின் மகள் காவ்யா நடிக்கின்றார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் அவர்களின் வீடியோ பதிவு

 தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் அவர்களின் வீடியோ பதிவு 

நானும் விஜய் ரசிகர் தான்

எங்களுடைய ரெட் லேபிள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அனு மோகன் விஜய் அரசியல் பற்றி பேசிய கருத்து பல ஊடகங்களில் இப்போது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியது. 


அவர் பேசிய கருத்துக்கள் முழுவதும் அவர் தனிப்பட்ட கருத்துக்களே.

 

அனு மோகன் அவர்கள் பேசியதில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை, சொல்லப்போனால் நானும் விஜய் ரசிகர் தான் நான்.


ஃபிலிம் சேம்பர் மற்றும் பெப்சி பற்றி நான் பேசிய கருத்துக்கள் அத்தனையும் உண்மையே நான் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க போவதில்லை. 


February 6th திரைக்கு வர இருக்கும் எங்கள் ரெட் லேபில் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்🙏

Tuesday, 3 February 2026

Pallichattambi unveils Kayadu Lohar’s vintage avatar in its latest poster

 Pallichattambi unveils Kayadu Lohar’s vintage avatar in its latest poster*



Pallichattambi is the upcoming film directed by Dijo Jose Antony with Tovino Thomas in the lead role. Kayadu Lohar plays the female lead in the movie. The character poster of the actress has now been released. In the poster shared on social media, Kayadu appears in a vintage look. However, the makers have not yet revealed the name of her character in the film.


Kayadu, who entered the film industry through the Kannada movie Mugilpete, made her Malayalam debut with Pathonpatham Noottandu, where her performance received attention. Later, the Tamil film Dragon, released last year, became a major breakthrough in her career.


Pallichattambi marks Kayadu’s third Malayalam film. She is also playing the female lead in I Am Game starring Dulquer Salmaan. The shooting of these films is currently in progress. Kayadu is also acting as a heroine in several Tamil and Telugu projects.


Meanwhile, Pallichattambi is slated for release on April 9. Reports suggest that the film, produced under the banner of Worldwide Films, C Qube Bros Entertainments will be a full-on mass action entertainer. The motion poster, title poster, and videos shared by Tovino showing him training in martial arts all hint strongly in that direction.


The film is produced by Noufal and Brijeesh under the banner of Worldwide Films, along with Chanukya, Chaitanya, and Charan under the banner of C Qube Bros Entertainments.

 Megha Shyam and Thanseer serve as co-producers.The screenplay is written by S. Suresh Babu. Pallichattambi tells a story set in Kerala during the 1950s–60s. Along with Tovino and Kayadu, several prominent actors including Vijayaraghavan are part of the cast.

பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ் (vintage)தோற்றம் வெளியானது

 *பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ்  (vintage)தோற்றம் வெளியானது*



இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ்  கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ்  தோற்றத்தில் காட்சியளிக்கிறார். 


இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

கன்னட திரைப்படமான 'முகில்பேட் ' ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'டிராகன்' எனும் தமிழ் திரைப்படம் - அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 


பள்ளிச்சட்டம்பி - கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ எம் கேம்' படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. கயாடு லோஹர் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 


இதற்கிடையில் பள்ளிச்சட்டம்பி திரைப்படம்-  ஏப்ரல் மாதம் 9 தேதி வெளியாகிறது. வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் ( Worldwide Films) மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் ( C Qube Bros Entertainment) ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம்  ஒரு முழுமையான மாஸான ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோஷன் போஸ்டர் - டைட்டில் போஸ்டர் மற்றும் டொவினோ தாமஸ் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெறும் வீடியோக்கள்.. ஆகிய அனைத்தும் வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன.


இப்படத்தை வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh ), இவர்களுடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சானுக்யா - சைதன்யா-  மற்றும் சரண் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஷியாம் மற்றும் தன்சீர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். பள்ளிச்சட்டம்பி எனும் இந்த திரைப்படம் 1950-60 காலகட்டத்தில் கேரளாவில் நடக்கும் ஒரு கதையை சொல்கிறது. டொவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹர்ருடன் விஜயராகவன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா !

“சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா !










STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம்,  வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி  திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. 


மறுவெளியீட்டை ஒட்டி படக்குழு மற்றும் திரை பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 


இந்நிகழ்வினில்… 


விநியோகஸ்தர்  எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது.., 

ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி. 


ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது.., 

இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்தை விஜய் சாரும் அஜித் சாரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளது. யுவன் இசையில் இப்படத்தில் ஐந்து பாடல்களுமே பிளாக்பஸ்டர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு பெரிய லாபம் தந்த படம். இப்படத்தை எல்மா பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்குவது பெருமை. ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும். 


இயக்குநர் சரவணன் பேசியதாவது.., 

”சிம்புவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிம்புவுக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாம் ஒரு மாஸ் சீனை எழுதுவோம், அதை சிம்பு நடிப்பில் திரையரங்கில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. சிம்பு என் குடும்பம் மாதிரி, அவருக்கு கொடுத்த வெற்றி நான் எனக்கே தந்துகொண்ட வெற்றி. அப்போது போலவே இப்போதும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவார்கள். இந்நேரத்தில் இப்படத்தில் நடித்த சினேகா, பிரபு உட்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்  இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தார்கள். படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுவார்கள் நன்றி.” 


இயக்குநர் Tராஜேந்தர் பேசியதாவது.., 

என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா. 


அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்ல.? அது போல  இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர்.  என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை.  தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.  அனைவருக்கும் நன்றி. 


லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன்,  டி.எஸ்.ரங்கராஜன் தயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர்கள் ஆதரவும் பெற்ற “சிலம்பாட்டம்”, காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி–படத் தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.


சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் “தமிழரசன்” மற்றும் “விச்சு” என்ற இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்தது  ரசிகர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில், சிலம்பக் கலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆக்‌ஷன் காட்சிகள், சிம்புவின் உடல் மொழி, டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனி அடையாளம் கொடுத்தன.


இயக்குநர் S சரவணன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிய பலமாக அமைந்தது. “சிலம்பாட்டம்” டைட்டில் பாடல் முதல் மெலடி, குத்து பாடல்கள் வரை அனைத்தும் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. சிம்புவுடன் இணைந்து சனுஷா, ஸ்நேகா ஆகியோர் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரங்கள், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது.


மாஸ் சிம்பு, ஆக்‌ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு — அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, “சிலம்பாட்டம்” ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும். 


இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது.

மக்கள் தொடர்பு - A ராஜா

நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000

 *நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000 பார்வையாளர்களையும் கவர்ந்து சாதனை படைத்துள்ளது!*



’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 


உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரித்திருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தையும் ‘புஷ்பா2’ திரைப்படத்தின்  புகழையும் காட்டுகிறது. 


கடந்த சில ஆண்டுகளில், நடிகர் அல்லு அர்ஜுன் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நடிகராக உருவெடுத்துள்ளார். அவரது திரைப்படங்கள் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிறது. இதுமட்டுமல்லாது, வெளிநாடுகளில் இந்திய நடிகர்களுக்கான புதிய சாதனைகளையும் உருவாக்கி வருகிறது.


இந்தியாவிலிருந்து ஜப்பான் வரை மாஸ் வணிகத் திரைப்படங்கள் மூலம் கொண்டாடப்படும் சில இந்திய நடிகர்களில் ஒருவராக ‘புஷ்பா2’ திரைப்படம் வாயிலாக நடிகர் அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை தாண்டியும் அவரால் ரசிகர்களுடன் இணைய முடிகிறது என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது. 


உலகளாவிய சினிமாவில் இந்திய நட்சத்திரங்கள் வருகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதில் முன்னிலையில் அல்லு அர்ஜூன் இருக்கிறார் என்பதைத்தான் ஜப்பானில் ‘புஷ்பா2’ படத்தின் வசூல் நிலவரமும் கொண்டாட்டமும் காண்பிக்கிறது என்று வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 


ஜப்பானில் ‘புஷ்பா2’ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக நடிகர் அல்லு அர்ஜூன் இந்தியாவின் பல முன்னணி இயக்குநர்களுடன் கைக்கோத்திருப்பது சர்வதேச அளவில் அவரை இன்னும் உயர்த்துவதுடன், ஒரு இந்திய நடிகருக்கான இதுவரை இல்லாத அளவிலான உலக அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

*A NIGHT OF MELODIES AND MEMORIES:*

 *A NIGHT OF MELODIES AND MEMORIES:*


The ‘Yennodu Vaa Veedu Varaikkum’ concert on the night of February 1st was not a mere musical event; it was a soulful stroll back into a quarter-century - A night of pure magic!



So much love to all the brilliant musicians, singers and technicians who orchestrated this experience. You elevated the night into something ethereal. To every artist who shared the stage: your dedication turned the concert into a celebration.


To our production team and the crew behind the scenes of the night’s success, we thank you for your tireless precision and for sharing our vision with such passion.


And most importantly, we want to thank you, the audience, for making our night so special. To see the venue filled with faces that have travelled this 25-year road with us was overwhelming. That night was a testament that cinema and music are a bridge that connects us all, regardless of time.


We were humbled, energized and taken away by your warmth and love. We love you back just the same! 


While the night of Feb 1st was a milestone, it also feels like a new beginning. We can hope to look forward to another night where we can gather, perform and celebrate the magic of storytelling and music together.


With lots of love and gratitude,

Preethi Srivijayan & Team