Featured post

திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!*

 *‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!* இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ...

Wednesday, 21 January 2026

திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!*

 *‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!*








இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு தங்கள் நடிப்பை வலுவாக வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தங்கள் கதாபாத்திரங்களான திரௌபதி, ஆயிஷா, கோதை ஆகியவற்றின் அனுபவங்களை நாயகிகள் பகிர்ந்துள்ளனர். 


திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ படத்தில் திரௌபதியாக நடித்தது என் சினிமா கரியரில் மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரம் தீவிரமான உணர்வுகளையும், எதையும் தாங்கும் உறுதியையும் அதே சமயம் நளினத்தையும் ஒருங்கே கொண்டது. அந்த ஆழமான உணர்ச்சிகளையும் வலிமையையும் வெளிப்படுத்துவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ஜி சாருக்கு மனமார்ந்த நன்றி. எப்போதும் ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கும், ஒவ்வொரு காட்சியிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலருடன் இந்தப் படத்தில் பணியாற்றியது மனதுக்கு நிறைவான அனுபவமாக இருந்தது” என்றார். 


ஆயிஷா கதாபாத்திரத்தில் நடித்த தேவியானி ஷர்மா பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ திரைப்படத்தில் ஆயிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது எனக்கு பெருமையான விஷயம். அறிவும் அமைதியும் மன உறுதியும் கொண்டவள் ஆயிஷா. இயக்குநர் மோகன் ஜி இதை சரியாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நன்றி. ஜிப்ரான் சாரின் மனதை தொடும் இசை, கதையை பிரம்மாண்டமாக திரையில் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம். உடன் பணிபுரிந்த அனைவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார். 



கோதை கதாபாத்திரத்தில் நடித்த திவி வைத்யன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் கோதை கதாபாத்திரம் உறுதியான உண்மையான உணர்ச்சிகளை பிரதிபலிப்பாள். அதை முழுமையாக நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நம்புகிறேன். பல திறமையான கலைஞர்களுடன் இந்தப் படத்தில் நான் அறிமுகமாவது மகிழ்ச்சி. என்னை நம்பி இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் மோகன் ஜி அவர்களுக்கும், தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் எனக்கு வழிகாட்டியாக இருந்த ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. கோதையின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்த ஆக்‌ஷன் சந்தோஷ் சாருக்கும் நன்றி” என்றார். 


இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக் குழு:*


இசை: ஜிப்ரான்,

ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர், 

கலை இயக்குநர்: எஸ். கமல், 

சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ், 

படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

Rakshana Induchoodan as Draupathi reflects: "Portraying Draupathi in Draupathi 2

 *Draupathi 2 Leading Ladies Unveil Their Powerful Roles!*








Actresses Rakshana Induchoodan, Deviyani Sharma, and Divi Vaidhyan bring extraordinary depth to Draupathi 2's female characters, each portraying women of remarkable strength and emotion in Mohan G's historical epic. As the film prepares for its worldwide release on January 23, these talented actresses share their exhilarating experiences embodying Draupathi, Ayesha, and Kodhai.Rakshana Induchoodan as Draupathi reflects: "Portraying Draupathi in Draupathi 2 has been a career-defining journey. This character embodies grace under fire: her emotional depth and unyielding strength challenged me profoundly. My heartfelt gratitude to director Mohan G for this opportunity, producer Sola Shakkaravarthi for relentless support, and Richard Rishi sir whose commanding presence elevated every scene. Working with Natty Natraj, and the entire cast felt like family.”



Deviyani Sharma as Ayesha shares: "Stepping into Tamil cinema with Draupathi 2 as Ayesha, a woman of intelligence and quiet resilience, feels like destiny. My character as Ayesha's journey reflects inner strength and emotional clarity, perfectly suited for Mohan G's vision. I'm deeply thankful to the entire team, especially Ghibran sir for his soul-stirring music that amplified my performance, Philip K Sundar sir's breathtaking visuals, and my co-stars who made every day inspiring.”



Divi Vaidhyan, who plays the character of Kodhai says, ”Kodhai in Draupathi 2 represents fiery determination and emotional authenticity, qualities I poured my heart into bringing alive. This role marks my grand Tamil cinema entry alongside such legends. Tremendous thanks to director Mohan G for trusting me, producer Sola Shakkaravarthi for this opportunity. I express my gratitude for my co-star Richard Rishi sir for his guidance. My deepest thanks to Action Sandhosh sir for choreographing sequences that showcase Kodhai's warrior spirit.”



Draupathi 2, directed by Mohan G and produced by Sola Shakkaravarthi under Netaji Productions, features Richard Rishi, Rakshana Induchoodan, Natty Natraj, Vela Ramamoorthy alongside Malavika Induchoodan, Deviyani Sharma, and Divi Vaidhyan. With A Ghibran's evocative musical score, Philip K Sundar's breathtaking cinematography, S Kamal's art direction, Action Sandhosh's gripping choreography, and Devaraj's editing, the film arrives worldwide on January 23.

நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில்

 நடிகை பவானி ஸ்ரீ,  தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர்.















அவரது பயணத்தில் புதிய மற்றும் உற்சாகமான கட்டமாக,  ஹாட்ஸ்பாட் 2 மூலம் light hearted சினிமாவுக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், இந்த வாரம் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தின் preview காட்சிகளும் மற்றும் பத்திரிகையாளர் காட்சிக்கான திரையிடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது புத்துணர்ச்சியான திரைத் தோற்றமும் சிறப்பான நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.


தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட பவானி ஸ்ரீ கூறும் பொழுது,


“தீவிரமான மற்றும் சீரியஸ் ஆன படங்களில் நடித்த பிறகு, ஹாட்ஸ்பாட் 2 எனக்கு ஒரு இனிய மாற்றமாக இருந்தது. இது வேடிக்கையான light hearted படமாக, Gen Z தலைமுறையின் நவீன உறவுகளை சிறு ஃபேண்டசி கலந்த அணுகுமுறையுடன் ஆராய்கிறது. இதுவே கதையை மிகவும் புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்புகளை நான் நீண்ட காலமாக ரசித்து வருகிறேன் — திட்டம் இரண்டு, பிளான் B முதல்..

துணிச்சலான மற்றும் வித்தியாசமான கதையாக்கத்தால் தனித்துவமாகத் திகழ்ந்த ஹாட்ஸ்பாட் முதல் பாகம் வரை... 


 ஹாட்ஸ்பாட் 2-வில் நடிக்க அவர் அழைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அஷ்வினுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மிகவும் திருப்திகரமாக இருந்தது. உலகளாவிய வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இனிமேலும் புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.”


ஹாட்ஸ்பாட் 2 மூலம், அர்த்தமுள்ள சினிமாவுக்கான தனது அர்ப்பணிப்பை பவானி ஸ்ரீ மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, நடிகையாக தனது பலதிறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால், இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.

Actress Bhavani Sre continues to carve a distinctive space for herself in Tamil cinema with a series of thoughtfully chosen and performance-driven projects.

 Actress Bhavani Sre continues to carve a distinctive space for herself in Tamil cinema with a series of thoughtfully chosen and performance-driven projects. Widely appreciated for her compelling portrayal in Viduthalai, Bhavani Sre has consistently demonstrated her ability to immerse herself in intense, layered characters, earning both critical acclaim and audience admiration.















Marking an exciting new phase in her journey, Bhavani Sre makes her first foray into light-hearted cinema with Hotspot 2, a contemporary love story, which is set for a worldwide theatrical release this week. Early previews and press screenings have already garnered encouraging responses, with many praising her refreshing screen presence and standout performance in the film.

Sharing her excitement, Bhavani Sre says,

“After being part of intense, series-driven films, Hotspot 2 came as a delightful change for me. It is quirky, fun, and light-hearted, exploring Gen Z’s modern relationships with a touch of fantasy, which makes the narrative truly refreshing. I have long admired director Vignesh Karthik’s work—from Thittam Irandu to Plan B and especially the first part of Hotspot, which stood out for its bold and out-of-the-box storytelling. When he invited me to be a part of Hotspot 2, I was absolutely thrilled. Working alongside Ashwin was equally rewarding, and I’m eagerly looking forward to the worldwide release. I hope to continue embracing more innovative and diverse stories in the future.”


With Hotspot 2, Bhavani Sre once again reaffirms her commitment to meaningful cinema while showcasing her versatility as an actor, making the film one of the much-anticipated releases of the week.

ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு

 ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு



இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  தனது அடுத்த படைப்பான “தடயம்”  படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம், வாழ்க்கை–மரணம், நேரம், மனித உறவுகள் போன்ற ஆழமான கருத்துகளை எளிய முறையில்,  தாக்கம் கொண்ட திரைக்கதையில் சொல்லி, ZEE5-யின் முக்கியமான தமிழ் படைப்புகளில் ஒன்றாக மாறியது.


அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, “தடயம்” திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் ஆவலைத் தூண்டுகிறது. 


 தமிழ் ரசிகர்கள் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள். சமுத்திரகனி நடிப்பில் “தடயம்” – விரைவில் ZEE5-ல் மட்டும்.

மெமரி பிளஸ் & மெமரி விட்டா மறு வெளியீடு மற்றும் நிவரன் 90 மூலிகை மாத்திரைகள் 2026 இல் அறிமுகம்

 *மெமரி பிளஸ் & மெமரி விட்டா மறு வெளியீடு மற்றும் நிவரன் 90 மூலிகை மாத்திரைகள் 2026 இல் அறிமுகம்*







ஆயுர்வேத அறிவியல் தலைமையிலான மனம் மற்றும் உடலுக்கு நல்வாழ்வு



இந்தியாவின் நம்பகமான ஆயுர்வேத நல்வாழ்வு நிறுவனமான *சின்னி நம்பி எண்டர்பிரைசஸ்*, ஜனவரி 2026 ல் அதன் புகழ்பெற்ற அறிவாற்றல் சுகாதார பிராண்டுகளான மெமரி பிளஸ் மற்றும் மெமரி விட்டாவை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க போர்ட்ஃபோலியோ விரிவாக்கத்தை அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து நிவரன் 90 மூலிகை இருமல் மாத்திரைகளை அறிமுகப்படுத்தி, மூளை ஆரோக்கியத்திலிருந்து  தொண்டை பராமரிப்பு வரை தினசரி அதன் பாரம்பரியத்தை பாது காக்கிறது.


மெமரி பிளஸ் & மெமரி வீட்டா, - ஆயுர்வேத மூளை ஆரோக்கியத்தில் ஒரு புதிய அத்தியாயம்


இந்தியாவின் முன்னோடி மூலிகை நினைவாற்றலை அதிகரிக்கும் துணை மருந்தான *மெமரி பிளஸ்*, அதன் துணை பிராண்டான *மெமரி விட்டா* வுடன் இணைந்து, மாணவர்கள், பணிபுரியும் வல்லுநர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என தலைமுறை தலைமுறையாக மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட சூத்திரங்கள், நவீன வடிவங்கள் கொண்டு சமகால பேக்கேஜிங் மூலம் ஜனவரி 2026 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.


1996 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு மறைந்த பிரதமர் *பி.வி. நரசிம்ம ராவ்* அவர்களால் திறந்து வைக்கப்பட்ட *மெமரி பிளஸ்*, பாதுகாப்பு மற்றும் மருத்துவ தரவுகளால் ஆதரிக்கப்படும் ஒரு முன்னோடி பிராமி அடிப்படையிலான சூத்திரத்தை கொண்டு தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது. பல ஆண்டுகளாக, மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CDRI) மற்றும் நைட்ரிக் ஆக்சைடு (NO) உயிரியலைப் படிக்கும் உலகளாவிய ஆராய்ச்சியாளர்களின் சரிபார்ப்புகள் மூலம் இந்த பிராண்ட் ஒரு வலுவான அறிவியல் அடித்தளத்தை உருவாக்கியது, இது ஆயுர்வேத தாவரவியல், பெருமூளை சுழற்சி மற்றும் அறிவாற்றல் சமிக்ஞை ஆகியவற்றுக்கு இடையே ஒரு தனித்துவமான தொடர்பை நிறுவியது.

 


2026 அவதாரத்தில், மெமரி பிளஸ் சைவ காப்ஸ்யூல்கள் மேம்படுத்தப்பட்ட பிராமி சூத்திரம் மற்றும் நன்மை சார்ந்த பேக்கேஜிங்கைக் கொண்டுள்ளன, இது மேம்பட்ட தூக்க தரம் மற்றும் மீட்பு, மேம்பட்ட நைட்ரிக் ஆக்சைடு அளவுகள், கூர்மையான நினைவகம் மற்றும் கவனம் செலுத்துதல் மற்றும் குறைக்கப்பட்ட மன அழுத்தம் மற்றும் மூளை மூடுபனி போன்ற முக்கிய நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. காப்ஸ்யூல்கள் பின்வரும் மொழிகளில் கிடைக்கும்:

• ₹579 (முன்னர் ₹900) அறிமுக MRP இல் 60-காப்ஸ்யூல் பேக்

299 (முன்னர் ₹450) அறிமுக MRP இல் 30-காப்ஸ்யூல் சோதனை பேக்

இளைய நுகர்வோருக்காக, மெமரி விட்டா 100% தூய கோகோவுடன் தயாரிக்கப்பட்டு, ஆயுஷ் விதிமுறைகளுக்கு இணங்கவும், பிராண்டின் தனியுரிம பேகோசைடுகள் A & B வளாகத்தால் செறிவூட்டப்பட்ட ஒரு சிறந்த சுவையான சாக்லேட் பானமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தினசரி ஆய்வு மற்றும் செயல்திறன் கூட்டாளராக நிலைநிறுத்தப்பட்ட மெமரி விட்டா, மாணவர்கள் அனுபவிக்கும் வடிவத்தில் நினைவகம், கவனம் மற்றும் மன அழுத்த மேலாண்மையை ஆதரிக்கிறது. வரம்பில் பின்வருவன அடங்கும்:

• 500 கிராம் ஜாடி - MRP ₹339

• 500 கிராம் பை - MRP ₹329

• 10 கிராம் ஒற்றை-பரிமாறல் பை - MRP ₹5

கூடுதலாக, ஒவ்வொரு 500 கிராம் ஜாடி அல்லது பை பேக்கிலும் இலவச ஸ்மார்ட் கியூப் வழங்கப்படுகிறது.

இரண்டு பிராண்டுகளும் மூன்று முக்கிய தூண்களில் தங்கியுள்ளன:

1. இயற்கை ஆயுர்வேத செயலில் உள்ள பொருட்கள் (பிராமி/பகோபா)

2. நைட்ரிக் ஆக்சைடு மற்றும் பெருமூளை சுழற்சியுடன் தொடர்புடைய அறிவியல் சார்ந்த வழிமுறைகள்

3. நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கும் அணுகக்கூடிய அன்றாட வடிவங்கள்.

மெமரி பிளஸ் மற்றும் மெமரி விட்டா ஆகியவை பழக்கவழக்கங்களை உருவாக்காதவை மற்றும் நோய் சிகிச்சை உரிமைகோரல்களை உருவாக்காமல் - நினைவகம், கவனம், மன ஆற்றல் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு உள்ளிட்ட அறிவாற்றல் நல்வாழ்வை ஆதரிக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

நிவாரண் 90 மூலிகை மாத்திரைகள்: ஆயுர்வேத தினசரி தொண்டை நிவாரணம்

அறிவாற்றல் நல்வாழ்வு மறுதொடக்கத்தைத் தொடர்ந்து, ஹவுஸ் ஆஃப் நிவாரன் 90, நிவாரன் 90 மூலிகை இருமல் மாத்திரைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொண்டைப் பராமரிப்புக்குள் விரிவடைகிறது, இது வேகமாக வளர்ந்து வரும் வகைக்குள் ஒரு மூலோபாய நுழைவைக் குறிக்கிறது.


சின்னி நம்பி எண்டர்பிரைசஸின் முதன்மை பிராண்டான நிவாரண் 90, 1990 இல் நிறுவப்பட்டது, அதன் பின்னர் ஆயுர்வேத இருமல் மருந்து சந்தையில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும் ஆழமான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்த பிராண்டின் முக்கிய தயாரிப்பு - நிவரன் 90 மூலிகை இருமல் மருந்து - அதன் மறைந்த நிறுவனர் டாக்டர் ராஜ்குமாரால், 

மளிகைக் கடைகள், மற்றும் பல்பொருள் அங்காடிகள் வழியாக விநியோகிக்கப்படும் மலிவு, சாக்கெட் அடிப்படையிலான வடிவங்கள் மூலம் சாமானிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

அதன் போர்ட்ஃபோலியோ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, நிவாரண் 90 இப்போது ஆயுர்வேத தொண்டை பராமரிப்புப் பிரிவில் நுழைகிறது, இந்தப் பிரிவு ₹756 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் 2024 மற்றும் 2033 க்கு இடையில் தோராயமாக 12% CAGR இல் வளர்ந்து வருகிறது. மூலிகை லோசன்ஜ்கள் ஆயுர்வேத இருமல் சிரப்களுக்கு இயற்கையான, நிரப்பு நீட்டிப்பாக நிலைநிறுத்தப்படுகின்றன, குறிப்பாக மருந்தகம் மற்றும் மருத்துவ சில்லறை விற்பனை சேனல்களில்.

நிவாரன் 90 மூலிகை இருமல் மாத்திரைகள் பின்வரும் இடங்களில் அறிமுகப்படுத்தப்படும்:

• 10 மாத்திரைகள் கொண்ட கொப்புளப் பொதிகள்

• 12 கொப்புளப் பட்டைகள் கொண்ட டிஸ்பென்சர் அலகுகள்

இந்த மாத்திரைகள் இரண்டு பிரபலமான சுவைகளில் கிடைக்கும்:

• இஞ்சி

• எலுமிச்சை தேன்

மலிவு விலை, வசதி மற்றும் பரந்த மருந்தக விற்பனைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த லோசன்ஜ்கள், நிவாரன் 90 இன் சில்லறை விற்பனை இருப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டை வலிக்கு தினசரி ஆயுர்வேத நிவாரணத்தை வழங்குகின்றன.




நிறுவனத்தின் பெயர் - சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் LLP,

பிராண்ட் இணையதளம் - www.memoryplus.co.in

CEO - அர்ஜுன் சின்னி நம்பி

பிராண்ட் ஹெட் - நவீன் ஸ்ரீனிவாசன் (மெமரிபிளஸ் / மெமரி விட்டா)

பிராண்ட் தலைவர் - கே விக்ரம் தாமஸ் ஜோசப் (நிவாரன்90)

சந்தைப்படுத்தல் குழு – செந்தூர்வாசன்

Tuesday, 20 January 2026

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success





Megastar Chiranjeevi once again proved why he shares an unbreakable bond with Telugu audiences, as he poured his heart out in a deeply emotional message following the roaring success of Mana Shankara Vara Prasad Garu, which collected 300 Cr worldwide gross. It’s a fastest for a Telugu movie to reach the mark. The movie also breached the $3 million mark in North America, emerging as the biggest earner for both Chiranjeevi and director Anil Ravipudi. After a strong Day 8, MSG showed even greater strength on Day 9, backed by huge bookings. Having already shattered several records, the film is now on the brink of breaking many more.


At a time when the film is creating waves at box-office and energizing the festive season, Chiranjeevi chose to spotlight not the numbers, but the people behind the success- his fans, distributors, and the hardworking team.


In his heartfelt note, the Megastar reflected on the journey that brought MSG to this moment and reiterated that every milestone in his career has been shaped by the affection of generations of movie lovers. His message resonated widely among fans, who have been celebrating the film as much as they celebrate his enduring legacy.


Megastar Chiranjeevi’s message reads: "Looking at the humongous success of our MSG, my heart is filled with gratitude. I have always said that I am a product of your love, and today, you have proven it yet again.


This record belongs to the Telugu audience, beloved Distributors and my dear Mega Fans who have stood by me for decades. Your whistles in the theater are the energy that keeps me going. Records come and go, but the love you shower upon me stays forever.


This blockbuster success is a tribute to the hard work of our Anil Ravipudi, Producers-Sahu and Sushmita along with the entire team and the unwavering faith you have in me. Let’s continue the celebration Love you all! ❤️"


With this message, Chiranjeevi not only thanked everyone responsible for the film’s historic run but also reminded the industry of the collective spirit behind every blockbuster. His words reinforce a simple truth- while records may be broken, the love between Chiru and his fans remains eternal.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'மான சங்கர வர பிரசாத் 'திரைப்படத்தின் பிரம்மாண்ட

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'மான சங்கர வர பிரசாத் 'திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி*





உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மான சங்கர வர பிரசாத் ' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி தனது இதய பூர்வமான -ஆழமான - உணர்ச்சி பூர்வமான- செய்தியை வெளியிட்டிருப்பதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஒரு தெலுங்குத் திரைப்படம் இந்த இலக்கை அடைவது இதுவே அதிவேகமான சாதனையாகும். இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் மூன்று மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லையும் கடந்து, சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாகவுப் உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி எட்டாவது நாளில்  வலிமையான வசூலை பதிவு செய்த MSG-  பெரும் முன் பதிவுகளின் ஆதரவுடன் ஒன்பதாவது நாளில் கூடுதல் வலிமையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ள இந்த திரைப்படம்.. தற்போது மேலும் பல புதிய சாதனைகளை படைக்கும் நிலையில் உள்ளது. 


இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி பண்டிகை காலத்திற்கான புத்துணர்ச்சியை அளித்து வரும் இந்த நேரத்தில் சிரஞ்சீவி வசூலித்த தொகையைப் பற்றி பேசாமல் இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள தன்னுடைய ரசிகர்கள் - விநியோகஸ்தர்கள் மற்றும் கடினமாக உழைத்த படக் குழுவினரை பற்றி பேசி இருக்கிறார். 


அவர் வெளியிட்டிருக்கும் தன்னுடைய மனமார்ந்த குறிப்பில், 'மெகா ஸ்டார் எம் எஸ் ஜி - இந்த நிலையை அடைந்த பயணத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு மைல் கல்லும் தலைமுறை தலைமுறையாக வரும் திரைப்பட ரசிகர்களின் பாசத்தால் வடிவமைக்கப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். அவரது இந்த செய்தி ரசிகர்களிடையே பரவலாக எதிரொலித்தது. அவர்கள் அவரது நீடித்த பாரம்பரியத்தை கொண்டாடுவது போலவே இந்தத் திரைப்படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.‌


'மெகா ஸ்டார் 'சிரஞ்சீவியின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது...


''நமது எம் எஸ் ஜி யின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை பார்க்கும் போது என் இதயம் நன்றியுணர்வால் நிரம்புகிறது. நான் எப்போதும் உங்கள் அன்பின் விளை பொருள் என்று கூறி வருகிறேன். இன்று நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். 


இந்த சாதனை தெலுங்கு ரசிகர்களுக்கும், அன்பான விநியோகஸ்தர்களுக்கும், பல தசாப்தங்களாக எனக்கு துணையாக நிற்கும் எனது அன்பான மெகா ரசிகர்களுக்கும் சொந்தமானது. திரையரங்குகளில் நீங்கள் எழுப்பும் ஆரவாரமே என்னை முன்னோக்கி செல்ல வைக்கும் ஆற்றல். சாதனைகள் வரும். போகும். ஆனால் நீங்கள் என் மீது பொழியும் அன்பு ...என்றென்றும் நிலைத்திருக்கும்.‌


இந்த பிளாக் பஸ்டர் வெற்றி நமது அனில் ரவி புடி - தயாரிப்பாளர்களான சாஹூ மற்றும் சுஷ்மிதா ஆகியோருடனான முழு படக் குழுவினரின் கடின உழைப்பிற்கும், என் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு காணிக்கையாகும். இந்த கொண்டாட்டத்தை தொடர்வோம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்''. 


இந்த செய்தியின் மூலம் சிரஞ்சீவி திரைப்படத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல்.. ஒவ்வொரு பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின்னாலும் உள்ள கூட்டு உணர்வை இந்த துறைக்கு நினைவூட்டி இருக்கிறார். அவரது வார்த்தைகள் ஒரு எளிய உண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால் சிரஞ்சீவிக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு நித்யமானது.