Featured post

Think Indie’s ‘Pavazha Malli’ Indie Song Launched in Chennai: Sai Abhyankkar and Kayadu Lohar dazzle

 *Think Indie’s ‘Pavazha Malli’ Indie Song Launched in Chennai: Sai Abhyankkar and Kayadu Lohar dazzle* The much-awaited independent song Pa...

Friday, 6 March 2026

Think Indie’s ‘Pavazha Malli’ Indie Song Launched in Chennai: Sai Abhyankkar and Kayadu Lohar dazzle

 *Think Indie’s ‘Pavazha Malli’ Indie Song Launched in Chennai: Sai Abhyankkar and Kayadu Lohar dazzle*






The much-awaited independent song Pavazha Malli, produced by Think Music, and composed by young music sensation Sai Abhyankkar, was officially launched at a special event held in Chennai last evening. The track, sung by Sai Abhyankkar and Shruthi Haasan, marks yet another vibrant addition to the growing independent music scene and has already begun drawing attention for its unique musical flavour and visuals.


Speaking at the launch, Sai Abhyankkar expressed heartfelt gratitude to the people who have played an important role in shaping his journey. He said, “I would like to thank Santhosh anna and Magesh anna for giving me this platform and for being strong pillars in shaping my career. Their support means a lot to me. Above everything else, I am deeply grateful to the fans who have consistently showered me with so much love and encouragement.”


Sharing updates about his upcoming projects, Sai Abhyankkar revealed that several exciting works are currently underway. “Karuppu is gearing up for a worldwide release in April. The preparatory work for Dhanush sir’s D55 is currently in progress, and I am also composing music for the Allu Arjun–Atlee project. When Atlee anna first met me, I played him one of my single compositions, and he immediately asked if I would like to compose music for his next film. The confidence he placed in me is something I will always remain grateful for,” he said.


When asked about stepping into acting, the composer clarified that his primary focus will remain music. “Everyone gathered here today has come for my music, and that means everything to me. I want to continue working hard and focus on delivering the best music I possibly can,” he stated.


Addressing his consistent success and the challenges that come along with it, Sai Abhyankkar emphasised the importance of dedication and perseverance. “Today there are many platforms that allow artists to showcase their potential. At the same time, it also means we have to work even harder. I thank my parents for being a constant source of inspiration, my mentors for guiding me, and all the music streaming platforms for their support.”


Speaking about his collaboration with Think Music for Pavazha Malli, he shared an interesting moment from the song’s creation. “I played just 45 seconds of the scratch composition, and Magesh immediately locked it as our fifth collaboration. I would also like to thank director Thejo Bharathwaj for bringing this song to life beautifully. Niketh Bommi has been a strong pillar in shaping the visuals. Director Keerthiswaran was the first filmmaker to step into my studio and has always given me complete creative freedom. I also thank choreographer Sheriff Master and the entire team who worked together to make this song look wonderful,” he said.


With its refreshing musical style and strong visual presentation, Pavazha Malli stands as another promising addition to the independent music space, highlighting Sai Abhyankkar’s evolving creative journey.

ஸ்கிராட்ச் இசை தான் 'பவழ மல்லி' சான்ஸ் வாங்கிக்‌ கொடுத்தது - சாய் அபயங்கர்

 *ஸ்கிராட்ச் இசை தான் 'பவழ மல்லி' சான்ஸ் வாங்கிக்‌ கொடுத்தது - சாய் அபயங்கர்*






*தொடர்ச்சியாக அன்பு, ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு நன்றி - சாய் அபயங்கர்*


*திங்க் இண்டீ - யின் 'பவழ மல்லி' பாடல் வெளியீடு...*


திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து வரும் இன்டிபென்டென்ட் இசை உலகத்திற்கு மற்றொரு உயிரோட்டமான சேர்க்கையாக அமைந்துள்ளது. அதன் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகிறது.


வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சாய் அபயங்கர், “எனக்கு இந்த தளத்தை வழங்கிய சந்தோஷ் அண்ணா மற்றும் மகேஷ் அண்ணாவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் எனது தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் வலுவான தூண்களாக இருந்துள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.


எல்லாவற்றுக்கும் மேலாக, என்மீது தொடர்ச்சியாக அன்பு மற்றும் ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த நன்றி,” என்று அவர் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “கருப்பு திரைப்படம் உலகளவில் ஏப்ரல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தனுஷ் சாரின் D55 படத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜூன்–அட்லீ திரைப்படத்திற்கும் நான் இசையமைக்கிறேன். அட்லீ அண்ணா என்னை முதலில் சந்தித்தபோது, எனது ஒரு தனிப்பாடல் இசையை இசைத்துக் காட்டினேன்; உடனடியாக அவர் தனது அடுத்த படத்திற்கு இசையமைக்க விருப்பமா என்று கேட்டார். அவர் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்,” என்று அவர் கூறினார்.


நடிப்பில் கால்பதிக்கும் வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது, “இன்று இங்கு கூடியிருக்கும் அனைவரும் எனது இசைக்காகவே வந்துள்ளனர்; அது எனக்கு எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துகிறது. நான் தொடர்ந்து கடின உழைப்பை செலுத்தி, சிறந்த இசையை வழங்குவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.


தனது தொடர்ச்சியான வெற்றி மற்றும் அதனுடன் வரும் சவால்கள் குறித்து பேசிய சாய் அபயங்கர், “இன்று கலைஞர்கள் தங்கள் திறனை காட்ட பல தளங்கள் உள்ளன. அதே சமயம், நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். எனது பெற்றோருக்கு தொடர்ச்சியான உத்வேகமாக இருந்ததற்கு நன்றி; எனது வழிகாட்டிகளுக்கு வழிகாட்டியதற்கு நன்றி; அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் அவர்களின் ஆதரவுக்கு நன்றி.”


‘பவழ மல்லி’ பாடலுக்காக திங்க் மியூசிக் உடனான கூட்டணி குறித்து பேசிய அவர், “நான் 45 வினாடிகள் மட்டுமே ஸ்கிராட்ச் இசையை இசைத்துக் காட்டினேன்; உடனடியாக மகேஷ் அதை எங்கள் ஐந்தாவது ஒத்துழைப்பாக பூட்டினார். இந்த பாடலை அழகாக உயிர்ப்பித்த இயக்குநர் தேஜோ பரத்வாஜுக்கு நன்றி. நிகேத் பொம்மி காட்சி வடிவமைப்பில் வலுவான தூணாக இருந்தார். இயக்குநர் கீர்த்திஸ்வரன் எனது ஸ்டுடியோவிற்கு முதலில் வந்த இயக்குநராக இருந்து, எப்போதும் முழு உருவாக்க சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.

நடன இயக்குநர் ஷெரிஃப் மாஸ்டர் மற்றும் இந்த பாடலை அற்புதமாக்கிய முழு குழுவுக்கும் நன்றி,” என்று அவர் கூறினார்.

99/66-Movie Review

 99/66-Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம 99/66 படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது MS Murthy. . இந்த படத்துல Rachitha Mahalakshmi, Swetha, Sabari, Rohind, Bhavan Krishna, Singam Puli, Mullai, Kothandam, KR Vijaya, PL Thenappan, MS Murthy னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



ratchitha வும் sabari யும் husband and wife . இவங்க ரெண்டு பேரும் ஒரு apartment ல இருக்கற 66 வது number இருக்கற வீட்டை வாங்கி அதுல  தங்குறாங்க. இதே apartment ல இருக்கற 99 வது number வீட்ல தான் swetha இருப்பாங்க. swetha வும் ratchitha வும்  நல்ல close friends ஆயிடுறாங்க. இதுனால அடிக்கடி ரெண்டு பேரும் சந்திச்சு பேச ஆரம்பிக்குறாங்க. இந்த apartment ஓட தலைவர் பதவி ல இருக்காரு MS murthy. இவரு night நேரத்துல யாருக்கும் தெரியாம apartment அ விட்டு வெளில போக பாக்குறாரு ஆனா ஒரு ஆந்தை இவரை வெளில விடாம தடுக்குது. இந்த மாதிரி தினமும் நடக்குது. 


பணத்துக்காக ratchitha வை கொலை பண்ணனும் sabari நெறய முயற்சி பண்ணுறாரு. ஆனா இந்த எல்லா plan ல இருந்தும் எப்படியோ ratchitha தப்பிச்சிகிட்டே இருக்காங்க. ஒரு நாள் night திடுருனு sabari , swetha வை கொலை பண்ண போறாரு னு புரிஞ்சுகிட்டு இதை எப்படியாது தடுக்கணும் னு முடிவு பண்ணுறாங்க. அதுனால apartment ல இருக்கற மத்த families அ swetha வை காப்பாத்த help க்கு கூப்பிடுறாங்க. அப்போ தான் ratchitha க்கு ஒரு உண்மை தெரிய வருது அது என்னனா swetha ஏற்கனவே இறந்து போயிருப்பாங்க. அது மட்டுமில்ல 99 நம்பர் வீட்ல யாருமே கிடையாது னு தெரியவருது. அப்போ இவளோ நாளா swetha எப்படி ratchitha கண்ணுக்கு தெரிஞ்சாங்க? M S murthy எதுக்காக night நேரத்துல யாருக்கும் தெரியாம apartment அ விட்டு வெளில போகணும் னு நினைக்குறாரு? அவரோட இந்த முயற்சியை எதுக்காக ஆந்தை தடுக்குது? ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் பதிலா இருக்கு. 


பேய் படங்களுக்கு ஏத்த மாதிரி எல்லா thrilling ஆனா moments யும் இந்த படத்துல இருக்கு. ஒரு apartment குள்ள நடக்கற இந்த கதைக்கு நெறய twist and turns குடுத்து interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது ratchitha ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. முக்கியமா இவங்க உடம்புக்குள்ள ஆவி புகுந்து ஆக்ரோஷமா இருக்கற மாதிரி நடிச்ச portions எல்லாம் நல்ல இருந்தது. swetha புத்த மதத்தை follow பண்ணுறவங்களா நடிச்சிருக்காங்க. அதுனால யாருக்கும் எந்த தீங்கும் நடக்க கூடாது, எல்லார்கிட்டயும் அன்பா நடந்துக்கணும் னு நல்ல பொண்ணா நடிச்சிருக்காங்க. sabari அப்புறம் rohith க்கு இது முதல் படமா இருந்தாலும் இவங்களோட acting எதார்த்தமா இருந்தது. என்னதான் வெளில பாக்கும்போது இவங்க நல்லவங்களா தெரிஞ்சாலும் மறைமுகமா வில்லத்தனத்தை காமிச்சு audience யா மிரட்டிருக்காங்க னு தான் சொல்லணும். சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி இவங்களோட comedy scenes யும் ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematographer sevilo raja இந்த முழு படத்தையும் apartment ல வச்சு எடுத்திருக்காரு. என்னதான் ஒரே இடமா இருந்தாலும் camera angle மூலமா difference காமிச்சு கதையை இன்னும் strong பண்ணிருக்காரு. jayamurugan ஓட art direction அப்புறம் meenachi sundharam ஓட editing ரெண்டுமே இந்த  கதைக்கு கச்சிதமா பொருந்தி இருக்கு. கதை, திரைக்கதை, வசனம், songs , music direction , production  னு எல்லா பரிணாமத்துலயும் பக்காவா பண்ணிருக்காரு M S murthy.  apartment க்கு புதுசா குடி வரவங்களுக்கு நடக்குற அம்னோஷியம் தமிழ் சினிமா ல யதார்த்தமானது தான் இருந்தாலும் பெண்களுக்கு எதிரா நடக்கிற குற்றம், அந்த மாதிரி குற்றம் பண்ணுறவங்களுக்கு கிடைக்கவேண்டிய தண்டனை னு ஒரு social message  யும் சொல்லிருக்காரு. 


ஒரு பக்காவான திகில் படம் தான் இது. சோ miss  பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

Thursday, 5 March 2026

Anomie Movie Review

Anomie Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anomie the equation of death படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Riyas Marath. இந்த படத்துல Rahman.,Vishnu Agasthya.,Bhavana Menon.,Binu Pappu.,Shebin Benson, Arjun Lal.

னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



zara philip அ நடிச்சிருக்க bhavana ஒரு forensic expert . இவங்களுக்கு ஒரு brother இருப்பாரு. அவரு psychological அ ரொம்ப disturbed ஆனா person . இவரு திடீருனு ஒரு நாள் காணாம போய்டுறாரு. தன்னோட brother அ கண்டுபிடிக்க zara investigate பண்ண ஆரம்பிக்குறாங்க. அப்படி பண்ணும்போது தான் ஒரு pattern அ கண்டுபிடிக்கறாங்க. ஒரு சில இறந்து போன victims ஓட mental condition ஒரே மாதிரி தான் இருக்கும். அதோட அவங்களோட மரணமும் வெளில accident மாதிரி தெரிஞ்சாலும் deep அ பாக்கும்போது யாரோ இதுக்கு பின்னாடி இருக்காங்க னு புரிஞ்சுக்கறாங்க zara . இப்போ இன்னொரு பக்கம் officer jibran அ நடிச்சிருக்க  rahman அ காமிக்கறாங்க. இவருக்கு ஒரு case அ handle பண்ணும்போது ஒரு காயம் ஏற்பட்டிருக்கும். இந்த case அ solve பண்ண தான் நமக்கு நிம்மதி கிடைக்கும் னு நம்புறாரு. இப்படி இவங்க ரெண்டு பேரும் தனி தனியா பண்ணுற investigation ஒரு point ல வந்து சந்திக்கறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half அ பாக்கும்போது ஒரு பக்கம் investigation இன்னொரு பக்கம் forensic னு ரெண்டு aspects யும் நல்ல use பண்ணிருக்காங்க. zara பண்ணுற procedure எல்லாமே interesting அ இருந்தது, இதெல்லாம் பாக்கும் போது அடுத்து என்ன நடக்கும் ன்ற ஆர்வம் audience க்கு கண்டிப்பா வரும். ஒரு thriller படத்துக்கு தேவையான எல்லா twist and turns யும் இந்த படத்துல குடுத்திருக்காங்க. zara நடத்துற investigation க்கு அப்புறம் ghibran நடத்துற investigation க்கு மாறுற transition யும் நல்ல இருந்தது. இந்த கதைல வர villain character அ நல்ல design பண்ணிருக்காங்க. இவன் இந்த உலகத்தை பாக்குற விதமே ரொம்ப different அ இருக்கும். அதுமட்டுமில்ல villain அ intelligent ஆவும் காமிச்சிருக்காங்க. அதுனால கதை இன்னும் ஸ்வாரஸ்யமா நகருது னு சொல்லலாம். 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது bhavana ஒரு forensic expert அ செமயா நடிச்சிருந்தாங்க. rahman ஓட நடிப்பும் நல்ல இருந்தது. ஒரு police officer அ இவரு நடத்துற investigation, இந்த case ல இவரு காமிக்க்ர ஆர்வம் னு எல்லாமே நல்ல இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காங்க. 


படத்தோட technical aspect அ பாக்கும்போது sujith sarang ஓட cinematography இந்த thriller கதைக்கு நல்ல set ஆயிருக்கு. harshavardhan rameshwar ஓட bgm and songs ரெண்டுமே இந்த கதையை ஒரு step மேல எடுத்துட்டு போகுது னு தான் சொல்லணும். 


ஒரு பக்காவான thriller கதை தான் இந்த படம். சோ இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

Musthafa Musthafa Movie Review

 Musthafa Musthafa  Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  musthafa musthafa படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறதுPraveen Saravanan. இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதிருக்காரு. இந்த படத்துல Sathish , Suresh Ravi , Monica Chinnakotla, Maanasa Choudhary, Karunakaran, Pugazh, Pavel Navageethan, Aishwarya Dutta, VJ Parvathy, VJ Maheswari, Chanakyan,  Java Sundaresan  னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



படத்தோட title  அ படிச்சதுக்கு  அப்புறம் உங்களுக்கு ஒரு idea கிடைச்சிருக்கு. நீங்க நினைக்கற மாதிரி இது ஒரு friendship story தான். IT company ல தான் வேலை பாக்குறாங்க sathish யும் suresh ravi யும். இவங்க ரெண்டு பேரும் close friends . sathish அதே company ல வேலை பாக்குற monica வை love பண்ணுறாரு. சரியா இவங்களோட love கல்யாணத்துல வந்து நிக்குது. பேச்சுலர் party ல sathish தன்னோட lover கிட்ட குடிக்க மாட்டேன் னு சத்தியம் பண்ணிருப்பாரு. ஆனா அந்த சத்தியத்தை மீறி செமயா லூட்டி அடிச்சிருப்பாரு. இதை கேள்விப்பட்ட monica ஒடனே break up பண்ணிடுறாங்க. இருந்தாலும் sathish ரொம்ப கஷ்டப்பட்டு monica வை மறுபடியும் love பண்ண வைக்குறாரு. ஒரு வழியா reception வரைக்கும் ரெண்டு பேரும் வந்துடுறாங்க.  அப்போ தான் sathish வேற ஒரு பொண்ணுகூட தப்பான முறைல இருக்கற மாதிரியான ஒரு video viral ஆகுது. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.  


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sathish ஓட performance எப்பவும் போல நல்ல நடிச்சிருக்காரு. இவருகூட சேந்து நடிச்சிருக்க suresh ravi ஓட நடிப்பும் super அ இருந்தது. monica ஓட acting யும் decent அ இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


படத்தோட technical aspect அ பாக்கும்போது K.S.Vishnu Shri ஓட cinematography இந்த romantic comedy கதைக்கு நல்ல set ஆயிருக்கு. M.S.Jones Rupertஓட bgm and songs ரெண்டுமே இந்த கதைக்கு super அ இருந்தது. 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

O Butterfly Movie Review

 O Butterfly Tamil Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம o butterfly படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vijay Ranganathan. இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதிருக்காரு. இந்த படத்துல Nivedhithaa Sathish, Ciby Chandran, Attulm Nassar, Lakshmi Priyaa Chandramouli, Geetha Kailasam னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

marriage முடிஞ்சு சில மாசத்துலயே husband அ இழந்து நிக்குறாங்க nivedhithaa sathish. இந்த இழப்பு னால ரொம்ப மனசு ஒடைஞ்சுபோயிருப்பாங்க. இவங்க இப்படி சோகமா இருக்கறதுனால தான் இவங்கள சுத்தி இருக்கறவங்க எல்லாரும் கஷ்டப்படுறாங்க னு நினைக்கிறாங்க. இவங்க இறந்துபோய்ட்டா மத்தவங்களோட பிரச்சனை எல்லாம் solve ஆயிடும் னு நினைக்கறாங்க. ஆனா இதெல்லாம் தப்பு னு nivedhithaa க்கு புரிய வைக்கிறாங்க, இவங்களோட sister lakshmi priya. lakshmi priya கடவுள் தான் இனி எல்லாம் னு நம்பி துறவி யா  மாறிருப்பாங்க. இவங்க கிட்ட தான் nivedhithaa எல்லாமே share பண்ணுறாங்க. அப்படி share பண்ணும்போது திடீருனு தன்னோட husband இறக்குறதுக்கு காரணம் நான் தான் னு சொல்லிடுறாங்க. இதை கேட்ட lakshmi priya யும் shock ஆயிடுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையே. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது nivedhitha sathish ஒரு strong ஆனா character ல நடிச்சிருக்காங்க. இவங்களோட first lover ஏமாத்திட்டு போயிருப்பாரு இன்னொரு பக்கம் marriage முடிஞ்சா கொஞ்ச மாசத்துலயே husband யும் இழந்திருப்பாங்க. இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலை யா ரொம்ப அழகா நடிப்பு மூலமா வெளி படுத்திருக்காங்க. sibi chandran தான் nivedhitha ஓட lover அ நடிச்சிருக்காங்க. இவரோட portions யும் நல்ல இருந்தது. atul தான் nivedhitha ஓட husband யா நடிச்சிருப்பாங்க. இவரோட நடிச்ச scenes யும் super அ இருந்தது. சின்ன character அ இருந்தாலும் strong ஆனா presence அ குடுத்திருக்காரு நாசர். மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுக்கிட்டு best ஆனா performance அ வெளிப்படுத்திருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது vaisak somnath ஓட songs and bgm இந்த கதைக்கு நல்ல set யிருந்தது. vedharaman sankaran ஓட cinematography colourful ஆவும் bright ஆவும் இருந்தது. என்ன தான் படம் ஆரம்பத்துல கொஞ்சம் slow அ போனாலும் படம் முடியும் போது interesting அ தான் இருக்கும். அந்த அளவுக்கு அட்டகாசமா படத்தை edit பண்ணிருக்காரு bhuvanesh manivannan. vijay ranganathan ஓட direction அ இருக்கட்டும் writing அ இருக்கட்டும் ரெண்டுமே பக்காவா பண்ணிருக்காரு. இந்த கதை மூலமா ஒரு சில விஷயங்களை சொல்லிருக்காரு அதெல்லாம் நல்ல இருந்தது. முக்கியமா எது நடந்தாலும் அதெல்லாம் தற்செயல் தான் னு சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல ஒரு சம்பவத்துல ஒரு எடத்துல உயிர் போகுதுன்னா அதே சம்பவத்தால  தான் இன்னொரு உயிர்யும் பாதுகாப்பா இருக்கறதுக்கு காரணம் நும் சொல்லிருக்காரு. இந்த விஷயங்களை கதை மூலமா கொண்டு வர்ரது ரொம்ப கஷ்டம் இருந்தாலும் மக்களுக்கு புரிரா விதத்துல எடுத்து சொல்லிருக்காரு director . 


depression , ஒரு முடிவை சரியா எடுக்க முடியாம வர  தடுமாற்றம், ஒரு பொண்ணோட மனக்கஷ்டம் னு எல்லாமே detailed  அ சொல்லுற கதைக்களம் தான் இது. ஒரு emotional  ஆனா story தான் இது. சோ miss  பண்ணாம இந்த படத்தை பாருங்க.

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்

 ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்









12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். அவரது 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் தெரிவித்ததால் காயத்ரி ரெமாவை மணக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா, ஒரு குழந்தை போதும், அதற்கு மேல் குழந்தை வேண்டாம், என்ற முடிவுக்கு வர, பால்ராஜ் மட்டும் 6 குழந்தை ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.


இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கும் சுவேதா ஸ்ரீக்கும், பால்ராஜுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாற, கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூன்று பேருடைய வாழ்க்கையும் என்னவாகிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.


எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் பால்ராஜ், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவராக இருப்பதோடு, அளவான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். மனைவியை கட்டி அணைக்க முயற்சிக்கும் போது, அவர் தள்ளிவிடும் காட்சிகளில் தன் ஏக்கம் மற்றும் ஏமாற்றத்தை சரியான முறையில் வெளிக்காட்டியிருப்பவர், மற்றொரு பெண்ணின் நட்பு கிடைத்த உடன் தன்னுள் ஏற்படும் மனமாற்றம் மற்றும் அவருடனான காதல் லீலைகள் என்று மனுஷன் படம் பார்ப்பவர்களுக்கு பொறாமை ஏற்படும் விதத்தில் வலம் வருகிறார்.


நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் 6 குழந்தைகள் என்ற கணவரின் பேராசையை நிராகரிக்கும் காட்சிகளில், பெண்களின் மனதையும், அவர்களது வலியையும் பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.


மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீ, பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதமாக பயணித்திருக்கிறார். பார்த்ததும் கவனம் ஈர்க்கும் முகம், அப்பாவித்தனமான பேச்சு என்றாலும், அடப்பாவி...என்று சொல்லும் அளவிலான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீ-க்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம், என்று சொல்லும் அளவுக்கு அம்மணி வலம் வந்திருக்கிறார்.


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரவி மரியா, தன் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருப்பதோடு, பல இடங்களில் தனது வில்லத்தனம் மூலம் மிரட்டுவதோடு, சிரிக்கவும் வைக்கிறார்.


அம்பானி சங்கர், பசங்க சிவகுமார் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


உதயன் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், காட்சிகள் தரமாக படமாக்கப்பட்டிருக்கிறது.


விஜய் பிரபு இசையில் பாடல்கள், வசனங்கள் போல் ஒலித்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.


கே.சங்கரின் படத்தொகுப்பு இயக்குநர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லவில்லை என்றாலும், கதையில் இருக்கும் கள்ளக்காதல் விவகாரத்தை சுவாரஸ்யமாக சொல்லி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறது.


எழுதி இயக்கியிருக்கும் பால்ராஜ், தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை கதைக்கருவாக எடுத்துக் கொண்டு அதை கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்திருக்கிறார். கதையில் கள்ளக்காதல் விவகாரம் முக்கிய பங்கு வகித்தாலும், அதை நேர்மையாகவும், திரைக்கதைக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய விதத்திலும் கையாண்டிருப்பவர், மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார்.


மதுவுக்கு அடிமையானவர்களால் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும், புரிதல் இல்லாத தம்பதியினரால் குடும்பம் எப்படி திசை மாறி பயணிக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பால்ராஜ், அதை சிலபல குறைகளோடு சொன்னாலும், சுவாரஸ்யமாக சொல்லி படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’

 *மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*








*லாக்கப் மரணங்களை பற்றி பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.*


*பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது ; லாக்கப் மரணங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’*


சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.


ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாக கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ படம் உருவாகியுள்ளது...


ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைச்சாமி ஏஎம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பாலு இயக்கியுள்ளார்


பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, ராஜா மலைச்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வட இந்தியாவை சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்..


இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ட்ராக் மியூசிக் நிறுவனம் சமீபத்தில் இதன் பாடல்களை வெளியிட்டது. இதன் டீசர் கடந்த பிப்ரவரி-27லிலும் டிரைலர் மார்ச்-2லும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் மார்ச்-13ஆம் தேதி ‘போலீஸ் ஃபேமிலி’ தமிழகமெங்கும் திரையராங்குகளில் வெளியாக இருக்கிறது..


‘போலீஸ் ஃபேமிலி’ படம் குறித்து தயாரிப்பாளரும் கதையின் நாயகனுமான மலைச்சாமி ராஜா கூறும்போது, “சாத்தான்குளம் மற்றும் சமீபத்தில் சிவகங்கை போன்ற இடங்களில் நடந்த லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இது ஒருபக்கம் காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் இன்னொரு பக்கம் இந்த லாக்கப் மரணங்கள் எத்தனை குடும்பங்களை பழி வாங்குகிறது என்பதையும், மன்னிக்கும் மனம் கொண்ட ஒருவரால் அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும் உணர்வுப்பூர்வமான கதை அம்சத்துடன் சொல்லி இருக்கிறோம்.


இப்படத்தின் படப்பிடிப்பை நான்கு விதமான இடங்களில் வெவ்வேறு விதமான தட்பவெப்ப நிலையில் நடத்தினோம். கடல் பகுதியிலும் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதியிலும் மதுரை போன்ற சமநிலை பரப்பிலும் என வெவ்வேறு விதமான பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.


இதில் கடல் பகுதியில் படப்பிடிப்பு நடக்கும்போது கடலின் சீற்றத்தையும் நாங்கள் எதிர்கொண்டு சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம். அதேபோல கொடைக்கானலிடம் கடும் குளிர், பனிப்பொழிவு, மேகமூட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டு இதுவரை கேமரா செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்று பல சவால்களுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்” என்று கூறினார்.


தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் 


இசை ; ஜெயா கே.தாஸ் 


ஒளிப்பதிவு ; ஜெயக்குமார் 


படத்தொகுப்பு ; எம்.எஸ் செல்வா 


சண்டைக்காட்சிகள் ; டிராகன் ஜிரோஷ் 


பாடல்கள் ; கே.மகாமுனி, சோ.பா மணி, வசந்த் 


ஒப்பனை ; வினோத் 


மக்கள் தொடர்பு ; A..ஜான்

நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் ’மேட் இன் கொரியா’

 *நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் ’மேட் இன் கொரியா’ குழுவினர் எம்சிசி கல்லூரி மாணவர்களுடன் கொரியன்  வார்த்தை விளையாட்டை (Korean Word Game) கலகலப்பாக விளையாடினர்!*












இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் இன்று சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.


படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கொரிய மொழி வார்த்தை விளையாட்டு மற்றும் ’திஸ் ஆர் தட்’ (This or That) போன்ற ஃபன் விளையாட்டுகள் விளையாடி மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர். 


ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது.