Featured post

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!  ஜெ...

Wednesday, 2 July 2025

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 




ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 


BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை”  புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. 


காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க,  நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 


பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என  அன்பின் ஐந்திணையைக் கொண்டு, அழகான ரொமாண்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. 


இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட் சன்,  கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை  V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். 


இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu

 Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu after watching Animal






It is known that Bobby Deol is playing the role of Mughal emperor Aurangzeb in Pawan Kalyan’s upcoming film Hari Hara Veera Mallu. The period drama is directed by Jyothi Krishna. Initially, Bobby Deol shot some scenes in the film. But later, after the director watched Bobby’s performance in Animal, he decided to completely re-write and redesign his character in Hari Hara Veera Mallu.


“Bobby Deol’s garu performance in Animal was spell bounding. His ability to convey emotions through expressions alone, despite the character's lack of dialogues was something we all were blown away. I decided to change the arc of his character in our film too, and give a complete makeover,” said Jyothi Krishna. His desire to improve the character's arc and better fit the role’s strength was the key to bring emotional depth in Bobby Deol’s performance. The revised role amplifies certain aspects of the character's personality and infuse more riveting and compelling performance.


The director made major adjustments to the character's personality, backstory, motivation, and physical portrayal. Jyothi Krisna felt that Aurangzeb’s character needs a more compelling arc to do justice to Bobby Deol’s new-found stardom and live up to his expectations. “When I narrated the revised script, Bobby garu was very excited. He is an actor who always likes to explore different possibilities and present a newer version of himself to the audiences. In Hari Hara Veera Mallu, Bobby Deol looks more intense. His powerful screen presence, elegance and the way he expresses a lot with his eyes speaks volumes. Working with him has been a great experience,” shared the director.

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய

 • ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!






• ‘அனிமல்’ தாக்கம்: ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை புதுப்பித்த ஜோதி கிருஷ்ணா!


• ‘அனிமல்’ படத்தில் பாபி டேயோலின் நடிப்பு, ஹரி ஹர வீரமல்லு இயக்குநரின் கதாபாத்திர மறுஉருவாக்கத்தை தூண்டியது!


• ஹரி ஹர வீரமல்லுவில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மீண்டும் கவனித்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!


பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும்

தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார்.


படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார்.


“பாபி டேயோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரி ஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் வழித்தோணியை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்,” என்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.


இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஔவரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி டேயோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.


“புதிய கதாபாத்திர வடிவத்தை நான் அவரிடம் சொன்னபோது, பாபி டேயோல் அவர்கள் மிகுந்த உற்சாகத்தைத் தெரிவித்தார். அவருக்கு, சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். ஹரி ஹர வீரமல்லு படத்தில் அவர் மிகுந்த தீவிரம் கொண்ட தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது பார்வையின் மூலம் தான் சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது,” என்கிறார் இயக்குநர்.


இவ்வாறு புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி டேயோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை

 *"மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை எதிர்பார்க்கிறார்கள்!" - சையாரா படத்தின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மூவரும் ஒன்றாக இணைந்தது குறித்து மோஹித் சூரி.*




அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து  'தும் ஹி ஹோ' பாடலும் அடங்கும்.மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் இசைக்காக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை மோஹித் விரும்புகிறார். 


மோஹித் கூறுகையில், “நட்சத்திரங்கள் இணையும்போது, ​​ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு நான் நட்சத்திரங்களை பாராட்டுகிறேன்.ஏனென்றால் நம் நாட்டின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக்கூடிய இந்த இரண்டு இசை கலைஞர்களுடன் எனது சிறந்த இசையை உருவாக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.”


மிதூனுடன் 2 தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் அவரது அற்புதமான இசைப் பயணத்தைப் பற்றி மோஹித் கூறுகையில், “மிதூனும், நானும் 2005ம் ஆண்டில் ஜெஹர் & கல்யுக் திரைப்படத்தில் இசையமைத்ததிலிருந்து எங்கள் பயணம் தொடர்கிறது. மிதூனை அறிந்து, அவருடன் இசையை உருவாக்கி, அவரது புத்திசாலித்தனமான மனதைப் பாராட்டி 20 ஆண்டுகள் ஆகிறது.  2005ம் ஆண்டில் இருந்து, மிதூனும் நானும் மர்டர் 2, ஆஷிகி 2, ஏக் வில்லன், ஹமாரி அதுரி கஹானி, ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட், மலாங், இப்போது சையாரா .எங்கள் படைப்புகளைப் பார்ப்பதில் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக நாங்கள் ஒன்றாக உருவாக்கிய காதல் பாடல்கள்” .


“எனவே, மிதூனும் நானும் இணையும் போதெல்லாம், ஒரு சிறந்த பாடலை வழங்க எங்களிடமிருந்து பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும்.மேலும் அந்த அழுத்தத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு தான் புதிதாக ஒன்றை உருவாக்க எங்களை தூண்டுகிறது.பேசப்பட வேண்டிய மக்களால் விரும்பப்படும் ஒரு பெரிய பாடலை வழங்க எங்களை தூண்டுகிறது.”


இந்திய சினிமாவில் சிறந்த பாடகராகக் கருதப்படும் அரிஜித் சிங்குடனான அவரது ஒத்துழைப்பைப் பற்றி மோஹித் கூறுகையில் , “அரிஜித் சிங் இந்த வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்க அற்புதமான நினைவுகளைத் தந்த ஒரு பாடகர். ஆஷிகி 2 இன் தும் ஹி ஹோ, சாஹுன் மைன் யா நா, ஹம் மர் ஜாயேங்கே போன்ற பாடல்களிலிருந்து ஏக் வில்லனில் ஹம்டார்ட் வரை, ஹமாரி அதுரி கஹானி டைட்டில் டிராக் , ஹாஃப் கேர்ள்ஃபிரண்டில் ஃபிர் பி தும்கோ சாஹுங்கா , மலாங்கில் சல் கர் சாலன் வரை அரிஜித் பாடிய பாடல்கள் மட்டுமல்ல, அவை என் இதயத்தின் துண்டுகள்”.


நாங்கள் மூவரும் ஒன்றாக இணையும்போது மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள் என்றும், சையாராவில் அந்த அழுத்தத்தை அவர் அனுபவிக்கிறார் என்றும் மோஹித் கூறுகிறார். 


 "இயற்கையாகவே, மிதூனும் அரிஜித்தும் நானும் ஒன்றாக இணையும்போது, ​​மக்கள் மறக்க முடியாத ஒரு பாடலைக் தருவோம் என எதிர்பார்கின்றனர்  என்பதை நாங்கள் அறிவோம், அந்த எதிர்பார்ப்பை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மூவரும் மீண்டும்  சையாரா படத்தில் இடம்பெற்ற துன் பாடலுக்காக இணைகிறோம்.இது எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்த பாடல். பிரபஞ்சம் எப்படியோ எங்கள் மூவரையும் ஒவ்வொரு முறையும் ஒன்றிணைத்து மிகவும் எளிமையான மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சிபூர்வமான பாடலை உருவாக்குகிறது, "


துன் பாடலைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், "துன் என்பது காதல் வாழ்க்கையில் போராட்டத்தைக் கொண்டாடும் ஒரு பாடல், மேலும் உண்மையான போராட்டம் யாருக்கும் அனைத்து தடைகளையும் கடக்க உந்துதலை வழங்கும்.  துன் என்பது ஒருபோதும் கைவிடாத உணர்வு ,எல்லோரும் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்."


மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் படமான சையாரா , காலத்தால் அழியாத காதல் கதைகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது.


இந்தப் படத்தில் அஹான் பாண்டே கதாநாயகனாக அறிமுகமாகிறார் கதாநாயகியாக அனீத் பத்தாவை (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கொள்ளை கொண்டவர்) என்பவர் நடித்துள்ளார். 


நம் காலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இளம் காதல் படமாக சையாரா படம் உள்ளது . இதுவரை இந்த இசை ஆல்பத்தில் இருந்து நான்கு பாடல்களான சையாரா , ஜூபின் நௌடியாலின் பர்பாத், விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ & சச்செட்-பரம்பராவின் ஹம்சஃபர் ஆகியவை இந்திய இசை அட்டவணையில் அலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 


சையாரா பட பாடல்களைத் தவிர,  இந்த படத்தின் தலைப்பான சையாராவும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 

சாயாரா படத்தை யாஷ் ராஜ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார், இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Yash Raj Films release the next song from Saiyaara, Dhun, that reunites the dream musical trio of Arijit Singh, Mithoon & Mohit Suri

 *Yash Raj Films release the next song from Saiyaara, Dhun, that reunites the dream musical trio of Arijit Singh, Mithoon & Mohit Suri!*




The blockbuster musical trio of Arijit Singh, Mithoon and Mohit Suri, who have created some of the biggest historic chartbusters in the Hindi film industry including Tum Hi Ho from Aashiqui 2, 

are back for Saiyaara’s next song Dhun which has been released today by Yash Raj Films! 


Watch the song here : 

https://youtu.be/cUmUOb7j3dc?si=0nyJyZ4Xd0yx3xQi


Mohit shares a spectacular musical journey with Mithoon spanning for over 2 decades now. They started their collaboration in 2005 when they did Zeher & Kalyug. Since 20 years, Mithoon & Mohit have worked on the biggest film music albums of our times like Murder 2, Aashiqui 2, Ek Villain, Hamari Adhuri Kahaani, Half Girlfriend, Malang and now Saiyaara.


Before coming together in Saiyaara, Arijit Singh, regarded as an all-time best singer that India has ever produced, has collaborated with Mohit Suri on several soulful hits like Tum Hi Ho, Chahun Main Ya Naa, Hum Mar Jayenge, etc from Aashiqui 2, to Humdard in Ek Villain, to Hamari Adhuri Kahani title track, to Phir Bhi Tumko Chaahunga in Half Girlfriend, to Chal Ghar Chalen in Malang.


The much-anticipated romantic film, Saiyaara, brings together Yash Raj Films and Mohit Suri, both known for creating timeless love stories, for the first time! Saiyaara has so far garnered unanimous praise for delivering an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills. 


The film launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine. 


Saiyaara is buzzing these days as the most anticipated young romantic film of our times. It has delivered the best album of the year with all songs from Saiyaara, Jubin Nautiyal’s Barbaad, Vishal Mishra’s Tum Ho Toh, Sachet-Parampara’s Humsafar and now Dhun have captured audience attention and are making waves on the musical charts of India! 


YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.


Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”*













*SJ Suryah Directorial-Starrer “Killer”*



*Shooting Starts with Ritual Pooja Ceremony*


It’s time for the ardent fans to celebrate this moment! After a long wait and hiatus, S.J. Suryah is making his directorial comeback through his ambitious dream project “Killer”, which had its shooting commenced with a ritual pooja ceremony.


S.J. Suryah, proving his unparalleled caliber as an extraordinary actor on the Indian level, kept his fans on a prolonged wait to witness his directorial excellence. With the official confirmation arriving from S.J.Suryah himself, the cinephiles are overjoyed now.


The director-actor embarked on his directorial journey with Ajith Kumar’s ‘Vaali’, and stole the entire South Indian spotlights. His second outing ‘Kushi’, grabbed the attention of entire Indian industry. He was among the earliest to break linguistic barriers in Indian cinema, long before the term ‘Pan-India’ became a trend.


After a couple of blockbuster directorial projects, he made his debut as an actor through the film ‘New’, which enthralled the entire industry. He continued to exhibit his acting prowess in different scripts and diversified characters.


He has now been fondly ennobled as ‘Nadippu Arakkan’ by the fans of several regional industries, but what kept them so curious was his directorial comeback. Now his announcement with “Killer” – an edge-seated action thriller has quenched their prolonged wait.


He returns with the same fiery energy that marked his earlier works, promising an out-and-out commercial entertainer packed with love, drama, and high-octane action sequences. Famous Indian actress Preethi Asrani is playing another lead role. 


Speaking about his comeback, S.J..Suryah shares, "To reach my dream position of 'MGR of India' (only in the artistic world), right from my childhood, I have been highly ambitious, always dreaming of this goal and consistently fighting for and working towards it. Now, I have stepped into the arena with utmost sincerity like a debut director & a debut actor, seeking everyone's love & blessings for this new project.". ‘Killer’ is my dream project. I’ve been writing it for the past few years, and it’s a film that’s going to bring joy to people, just like Kushi did.


I feel proud to be collaborating with one of South India’s biggest production houses, Sree Gokulam Movies, headed by Gokulam Gopalan Sir, is producing this film jointly with Angel Studios to create a Pan-Indian grandeur.”


The film’s shooting commenced on June 27 with a ritual pooja ceremony.


The film is being made in five languages, with shooting planned to take place across various locations in India. Additionally, a few key sequences will be filmed in Mexico, adding to the film’s international scale.


Details regarding the cast, lead actors, and the technical crew will be officially announced in the coming days.



மீண்டும் இயக்குநராக* *களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா .* *“கில்லர்” படத்தை இயக்கி நடிக்கிறார்

 *மீண்டும் இயக்குநராக* *களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா .*  *“கில்லர்” படத்தை இயக்கி நடிக்கிறார்!* 

*எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் “கில்லர்” !* 

*பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!* 












நீண்ட நாள் காத்திருப்பு ரசிகர்களை ‘குஷி’ படுத்தியுள்ளது.  எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும், அவரது கனவுப்படமான  “கில்லர்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. 


நடிகராக இந்தியளவில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக எப்போது படம் தருவார் என ரசிகர்கள்  பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், “கில்லர்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. 


அஜித்தின் ‘வாலி’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக கால் பதித்த எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். இரண்டாவது படமான விஜய் நடித்த ‘குஷி’ பட வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. பான் இந்தியா என்ற சொல் அறிமுகமாகும் முன்னரே

இந்தியா முழுக்க பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது. 


இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, “நியூ” படத்தில் நடிகராகவும் களமிறங்கி திரையுலகை  வியப்பில் ஆழ்த்தினார், எஸ் ஜே சூர்யா. தொடர்ந்து பல விதமான பாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவந்திழுத்தார். இந்திய திரையுலகமே கொண்டாடும் முன்னணி நட்சத்திர நடிகராக ஆளுமை கொண்டுள்ளார். 


‘நடிப்பு அரக்கன்’  எஸ்.ஜே.சூர்யா என்று  பல மொழி ரசிகர்கள்  அவரை கொண்டாடி வருகின்ற போதும், அவர் எப்போது படம் இயக்குவார் என்ற கேள்வி அவரது தீவிர ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது அவர் “கில்லர்” என்ற அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


‘நியூ’ படத்தை இயக்கிய அதே எனர்ஜியோடு திரும்பி வந்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. எண்டர்டெயின்மெண்ட்..கமர்சியல்.. லவ்.. டிராமா.. விறுப்பான ஆக்சன் காட்சி  என்று டிரீம் புராஜக்டாக   தயாராகிறது.  

 

இந்திய பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை  பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக  நடிக்கிறார். 


படம் குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா குறிப்பிடும் போது, 


என்னுடைய கனவு இடமான ‘இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர்’ (கலைத்துறையில் மட்டும்) என்ற இடத்தை அடைவதற்கு,  

முதல் பட இயக்குநர் போல, முதல் பட நடிகன் போல  மிக சிரத்தையோடு, உங்கள் துணையோடு களமிறங்கி இருக்கிறேன். 


“கில்லர்” எனது கனவுப்படம். சில வருடங்களாகவே எழுதி வந்தேன். இது மக்களை ‘குஷி’ படுத்த போற படம்.  

இப் படத்தை தென்னிந்தியாவின் மிக பெரிய பட நிறுவனமான ஶ்ரீ கோகுலம் மூவிஸ்  கோகுலம் கோபாலன் அவர்களோடு இணைந்து, ஏஞ்சல் ஸ்டூடியோஸ்  பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக உருவாக்குவதில் பெருமைக் கொள்கிறேன்.. என்றார்.  


இதன் படப்பிடிப்பு  ஜீன் 27ம் தேதி பூஜையுடன் இனிதே துவங்கியது. 


ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும், மேலும் சில முக்கியமான காட்சிகள் மெக்ஸிகோ நாட்டிலும் மடமாக்கப் படுகிறது.


இப்படத்தின் நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் அடுததுத்து வெளியாகும்.



Monday, 30 June 2025

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India Project*



Dashing director Puri Jagannadh is all set to join hands with the versatile actor Vijay Sethupathi for a highly anticipated Pan-India film. With pre-production now complete, the film is gearing up to go on floors soon. The makers have begun unveiling the stellar cast, introducing key actors one by one, building anticipation around the project.


In what is being touted as their most ambitious venture yet, the film is being produced by Puri Jagannadh under the banner of Puri Connects with Charmme Kaur as the presenter, in collaboration with JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. This association with JB Motion Pictures further signals the grand scale and vision behind the film.


Director Puri Jagannadh is reportedly leaving no stone unturned, meticulously crafting every detail of the film. From scripting to casting, he is making thoughtful, impactful choices to ensure the film resonates with audiences nationwide.


The film features Samyuktha as the female lead opposite Vijay Sethupathi, while Tabu and Vijay Kumar take on significant roles.


This Pan-India entertainer will be released in five languages, Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi, aiming to captivate audiences across the country.


Stay tuned for more exciting updates from the team as they continue to reveal more details.


*Cast*: Vijay Sethupathi, Samyuktha, Tabu, Vijay Kumar


*Technical Crew:*


Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, JB Narayan Rao Kondrolla

Presents: Charmme Kaur

Banner: Puri Connects, JB Motion Pictures

CEO: Vish

PRO: Yuvraaj 

Marketing: Haashtag Media

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும்

 *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது !!*



பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளனர், முக்கிய நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, படத்தை சுற்றிய ரசிகர்களின்  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.  


மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ்  நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார், மேலும் JB மோஷன் பிக்சர்ஸின் ஜேபி நாராயண் ராவ் கோண்ட்ரோலா  இணைந்து வழங்கிறார். JB மோஷன் பிக்சர்ஸுடனான இந்தக் கூட்டணி, படத்தின் தொலைநோக்குப் பார்வையிலான முயற்சியையும், பிரம்மாண்டத்தையும் மேலும் அதிகப்படுத்தும்.


இயக்குநர் பூரி ஜெகநாத், படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார். திரைக்கதை எழுதுவதிலிருந்து நடிகர் தேர்வு வரை, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை ரசிக்கும் வகையில், இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செதுக்கி வருகிறார்.


இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், தபு மற்றும் விஜய் குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.


இந்திய முழுவதுமுள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான படைப்பாக  உருவாகும், இந்த பான் இந்தியஎண்டர்டெயினர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இப்படாம்  மற்ற தகவல்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 


*நடிகர்கள்* 


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார். 


*தொழில்நுட்பக் குழு*


எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் 

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் 

CEO : விசு 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா