Featured post

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

 உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு! நல்ல படங்களுக்கு வாய...

Sunday, 19 October 2025

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

 உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!







நல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!


படங்களில் இரண்டே ரகம்தான். கதாநாயகன் படங்கள், கதைப் படங்கள்: தயாரிப்பாளர் பேச்சு!


உடன் இருக்கும் நண்பர்கள் வாழ்த்த மாட்டார்கள்: நடிகர் சித்து ஆதங்கம்!


பிக் பாஸில் வந்து விட்டால்  சினிமா வாய்ப்பு வந்துவிடாது:  தர்ஷிகா பேச்சு!


கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இது

விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது.


இப்படத்தில்  

சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


பாலாஜி எழுதி  இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'டி3' படத்தை இயக்கியவர்.


இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பேசும்போது,


"ஒரு படத்திற்கு விஷூவல் முக்கியமானது. எனவே இயக்குநர் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடித் தேடிச்சென்று  படப்பிடிப்பு நடத்தினார் .ஜீப் கூட போக முடியாத பகுதிகளில் இவ்வளவு சாதனங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். 

நல்ல விஷூவலுக்காக அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அதனால்தான் 

இப்படி அனைத்தையும் சிரமப்பட்டு எடுத்துக் கொண்டு போய் படபிடிப்பு நடத்தினோம். இதற்காக பத்து உதவி இயக்குநர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

படப்பிடிப்புக்கு முந்திய முன் தயாரிப்பும் சிறப்பாக இருந்தது " என்றார்.


படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம் பேசும் போது,


"இந்தத் திரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் . 'டி 3' படக் குழுவே இதிலும் இணைந்துள்ளது"

என்றார் .


இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,


" இயக்குநர்  பாலாஜி அவரது முதல் படம் 'டி3' மூலம்  பழக்கம். அவர் சொன்ன ஒரு வரிக்கதை பிடித்தது . முழு ஸ்கிரிப்ட் கேட்டேன் தர முடியாது என்றார் .எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டுகிறேன் அதையெல்லாம், பார்த்து பின்னணி இசையமையுங்கள் என்றார். அப்படிப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருந்தன. அதற்கேற்றபடி பின்னணி  இசையமைத்தோம். எப்போது இயக்குநர் என்னைப் பார்க்க வந்தாலும் உதவி இயக்குநர் குழுவோடு தான் வருவார்.

இந்தப் படத்திற்குப் பெரிய நட்சத்திரங்களுக்கான படம் போல் ஊடகங்கள்  ஆதரவு தர வேண்டும்" என்றார்.


நடிகர் ஜெயக்குமார் பேசும்போது, 


"இந்தப் படத்தில் பாலாஜி உடன் பணியாற்றியது முதல் ஏதோ ஒரு குடும்ப பந்தம் போல் ஏற்பட்டு விட்டது .அவர் எவ்வளவு பிரச்சினைகளைச் சமாளித்துக் கடந்து வந்திருக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 நேரில் பார்த்தபோது அவரது பிரச்சினைகளை உணர்ந்து கொண்டேன்.அவர் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. எல்லா ஆணின் வெற்றிக்குப் பிறகும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். இவரின் மனைவி இவருக்குப் பக்கபலமாக இருக்கிறார். இப்படி எல்லாருக்கும் மனைவி அமைந்தால் அவர்கள் எங்கேயோ சென்று விடுவார்கள்.இயக்குநர் பாலாஜியை  எனது தம்பியாக நான் பார்க்கிறேன் "என்றார்.


நாயகி தர்ஷிகா பேசும்போது,


"இது என் ஒரு கனவின் முதல் மேடை. இங்கே உள்ள ஒவ்வொருவரது கனவாகவும் இந்தப் படம் இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரி  அனைவரும் உழைத்தார்கள்.


பிக் பாஸில் வந்து விட்டால் மட்டுமே வாய்ப்பு  கிடைத்துவிடாது.சினிமாவில் தாகத்தோடு வருபவர்கள் கண்டிப்பாக அந்த இடத்தை அடையலாம்.பிக் பாஸில் இருந்து வந்து விட்டோம் படம் பண்ண போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு பிளாட்பார்ம், இது ஒரு பிளாட்பார்ம் அவ்வளவுதான் . நம்பிக்கையோடு இந்தத் தளத்திற்கு வந்திருக்கிறேன்.வெற்றி பெறுவேன் என்று நினைக்கிறேன்.


என்னைப் பொறுத்தவரை வாய்ப்பு கதவை தட்டாது, நாம் தேடிப் போனால் தான் வரும் என்று நான்  நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்.படத்தில் நடித்தவர்கள் அனைவரும் திறமைசாலிகள். அவர்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சித்து எதார்த்தமான மனிதர். நான் இதில் உமையாள் என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நல்ல தமிழ்ப் பெயர் .அந்தப் பெயரை எனக்குப் பிடிக்கும். அனைவரும் இந்த படத்திற்காக உழைத்தார்கள். அனைவரது கனவும் இதில் இருக்கிறது.படம் வெற்றி பெறும்  என்று நம்புகிறேன்" என்றார்.


நிர்வாகத் தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,


"இந்தப் படத்திற்காக வேறொரு கதாநாயகனை வைத்து எடுத்தோம் 60 முதல்  70% முடித்து விட்டோம்.அவர் கொடுத்த  பிரச்சினைகள் தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி எடுத்தோம். ஒரு கட்டத்தில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே  கைவிட்டு விட்டோம்.என்ன காரணம்? ஒரு நடிகர் டூப் போட்டு நடிக்க வரலாம், 'டோப்' போட்டு வந்து நடிக்கக் கூடாது.

அதனால் அதை கைவிட்டு விட்டோம். ஒரு பிரசவம் ஆகிற போது கருக்கலைந்தது மாதிரியான ஒரு வலி மிகுந்த அனுபவம். இதனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் மனச்சோர்வடைந்து விட்டார்கள்.


மீண்டும் அதை எடுக்கிற போது முதலில் எடுத்த செலவுகளும்  பட்ஜெட்டில் சேர்ந்து கொள்ளும் .எனவே செலவுத்தொகை இரட்டிப்பாகும் .அதை நாங்கள் ஈடு கட்டுவதற்காக அனைவரும் பல நாட்கள் உடலை வருத்திக்கொண்டு உழைத்தோம்.  இரண்டு கால் ஷீட் இரண்டரை கால் ஷீட் என்றும் 48 மணி நேரம் கூட தொடர்ந்து பணியாற்றியும் படப்பிடிப்பு நடத்தினோம் . இப்படி இழப்புகளை உழைப்பின் மூலம் ஈடு கட்டினோம்.

நான் சாமி கும்பிடுவேன் என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கும்.உண்மையிலே இருக்கிறதா இல்லையா?ஆனால் இந்தப் படத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து கடவுள் இருக்கிறார் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.


கதாநாயகன் வராத போது அவர் இல்லாத காட்சிகளை நாங்கள் காட்டுப் பகுதியில் எடுத்தோம் . காட்சிப்படி ஒரு வர் சாமி ஆட வேண்டும். அவர் இயக்குநர் கட் சொன்ன பிறகும் ஆடினார் ஆடினார், ஒரு மணி நேரம் ஆடிக்கொண்டே இருந்தார். அவருக்கு உண்மையிலேயே சாமி வந்துவிட்டது.இது மேக்கிங் வீடியோவில் இருக்கிறது.


மூன்று மாதம் இடைவெளி வந்தது . அந்த வீடியோவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகுதான் சித்து இந்தப் படத்தில் இணைந்தார் .ஆனால் அவர் குரலைக் கேட்டபோது எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. பிறகு தான் தெரிந்தது அந்த மேக்கிங் வீடியோவில் கடைசி 30 வினாடிகளில் அவரது குரல் இருந்தது. அந்த சாமியாடும் வீடியோ எடுத்த போது யாரோ சித்து பேசுவதை மொபைல் போனில் ஒலிக்க விட்டிருந்தார்கள். இதன்படி அந்த நடிகருக்குப் பிறகு சித்து  தான்  தொடர்வார் என்கிற குறிப்பு அந்த மேக்கிங் வீடியோவில் இருந்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது.


அப்போதுதான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை வந்தது.இது ஒரு ஆன்மீக அனுபவம்.


 நான் இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் பெரிய கதாநாயகர் இருந்தால் அந்த படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும். தியேட்டர்கள் நிறைய  கிடைக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றை இங்கே பரிசீலனை செய்து கவனத்தில் கொள்ள வேண்டும். ரீ ரிலீஸ் செய்யப்படும் மறு வெளியீட்டுப் படங்களுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று டிக்கெட் போடுவது போல் எங்களை போல நல்ல கதையுள்ள கொண்ட கன்டென்ட் பேஸ்டு  படங்களுக்கு முதல் ஷோவுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று போட்டால் வருகிறவர்களின் மவுத் டாக் மூலம் படம் பற்றி மக்களிடம் சென்றடையும்.இல்லாவிட்டால் முதல் ஷோவுக்கு 50 பேர் 100 பேர் தான் வருவார்கள் .ஆனால் 50 ரூபாய் 100 ரூபாய் 75 ரூபாய் என்று டிக்கெட் போட்டால் 200 பேருக்கு மேல் வருவார்கள். வாய் இருந்தால் தானே,வாய் வழியாக பேசப்படும். எனவே அப்படி கட்டணத்தைக் குறைத்து அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்.


நிறைய படங்கள் வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதனால் என்ன பயன்?வாராவாரம் வருகிற ஆறு - ஏழு படங்களில் எத்தனை உருப்படியாக உள்ளன? நிறைய உப்புமா படங்கள் வருவதால் தான் சினிமாவில் பிரச்சனையே வருகிறது நீங்கள் படத்தின் தரத்தைப் பார்த்து வடிகட்டி இந்த  வாய்ப்பைக் கொடுக்கலாம். முதல் 100 டிக்கெட் 50 ரூபாய் 75 ரூபாய் என்றாவது நீங்கள் கொடுக்கலாம்.


ஒரு காலத்தில் சிவாஜி எம்ஜிஆர் படங்கள், பிறகு ரஜினி கமல் படங்கள், விஜய் அஜித் படங்கள் என்று இரண்டு வகையான படங்களுக்கு தான் வரவேற்பு இருந்தது. அவை ஹீரோ கண்டன்ட் உள்ள படங்கள் என்று சொல்லலாம். இப்போது இரண்டு வகையான படங்கள் மட்டுமே வருகின்றன. ஒன்று ஹீரோ கண்டன்ட் படங்கள், அடுத்தது ஸ்டோரி கண்டன்ட் படங்கள். அதாவது கதாநாயகன் உள்ள படங்கள் ,கதையுள்ள படங்கள்.இந்த இரண்டு வகை மட்டுமே இப்போது உள்ளன.


 இப்படிக் கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட படமாக தான் இந்தப் படம் வந்திருக்கிறது'' என்றார்.


சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் பேசும்போது,


"நான் டீசர் பார்த்தேன் நன்றாக உள்ளது.

 இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அமைதியாக இருப்பார்,பேசமாட்டார் என்று சொன்னார்கள்.  ஆனால் தனது படம் பேசட்டும் என்று இருக்கிறார். அவரது படம் பேசும். 

எனது இயக்குநர் செல்வராகவன் கூறுவார், படத்தில் எவ்வளவு உழைப்பு காட்டுகிறோமோ அது பலனாகத் திரும்ப வரும் என்பார் .அப்படி இந்த படத்திற்காக அனைவரும் உழைத்துள்ளார்கள். அதற்குரிய பலன் கிடைக்கும் எனக்கு தனுஷ் எவ்வளவு பிடிக்கு மோ அவ்வளவு சித்துவைப் பிடிக்கும். அப்படிப்பட்ட திறமை கொண்ட இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.படக்குழுவினருக்கு  வாழ்த்துக்கள்" என்றார்.


இயக்குநர் பாலாஜி பேசும்போது,


"இது ஒரு உணர்ச்சிகரமான மேடை .ஒரு முடிவிலிருந்து மீண்டும் நாங்கள் வந்திருக்கிறோம். முடிவு என்கிற நிலையில் இருந்து மீண்டும் வந்து இங்கே நிற்கிறோம். இதற்காகப் பலரும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த ஆதரவுகளின் பலம்தான் என்னை நடத்தி வந்து இருக்கிறது.


நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் சினிமாவை அனுமதிக்காத குடும்பத்திலிருந்து இங்கே வந்தவன்.இங்கே வந்த பிறகுதான் சினிமாவில் உள்ள பிரச்சினைகள் தெரிந்தன.


யாருமே இப்படி ஒரு முடிவிலிருந்து துடைத்தெறியப்பட்டதிலிருந்து மீண்டு எழுந்து வர மாட்டார்கள். நாங்கள் மறுபடியும் தொடங்கி இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். உடன் நின்று உழைத்த மனிதர்களின் ஆதரவும் ஊக்கமும்  தட்டிக் கொடுக்கும் நம்பிக்கையும்தான்   எங்களை  இவ்வளவு தூரம் இப்படிக் கொண்டு வந்து நிறுத்திருக்கிறது. முதல் ஹீரோ செய்த பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் சித்து ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இப்படி நடிக்க ஒப்புக்கொள்வது சிரமம். ஆனால் சித்து சமரசம் செய்து நடிக்க வந்தார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். தர்ஷிகாவுக்கும் நல்ல படமாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்துள்ள ஜெயக்குமார் சாரை பல இரவுகள் நான் கொடுமைப்படுத்தி இருக்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சார்.

படத்தில் ஆங்கிலத் தலைப்பு வைத்தது பற்றி கேட்கிறார்கள். எனக்குச் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் அப்படி வைத்தேன் .பொருத்தமாக இருக்கிறது.அந்த மலைக் கிராமத்தில்  ஒவ்வொரு ஏழு  ஆண்டுக்குப் பிறகு வருகிற ஜூன் மாதத்தில் ஆண்கள் எல்லாம் இறந்து போவார்கள் என்பது நம்பிக்கை. இதை அடிப்படையாக வைத்துத்தான் டார்க் அந்தத் தலைப்பை வைத்தோம்.


எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்த என் தேவதை  செந்தில்குமாரிக்கு என் நன்றி" என்றார் .


படத்தின் நாயகன் சித்து பேசும்போது,


" எனது வாழ்க்கையை தொடங்கி வைத்து எனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த இயக்குநர் மித்ரன் ஜவஹர் சார் இங்கே வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றி. அவர் அறிமுகத்தால் தான் இந்த வண்டி இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது. என்னுடைய குடும்பமாக அவர் இருக்கிறார். எப்போதும் அமைதியாக இருப்பவர்.எப்படிப்பட்ட விஷயத்தையும் அவர் எளிதாகக் கையாள்வார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும்.இது அனைவருக்கும் தேவை. நான் எதுவாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து மனதில் போட்டு குழப்பிக் கொள்வேன்.நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.


எனது மனைவி  ஷ்ரேயா எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்.அவர் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.


பொதுவாக இன்ஸ்டாகிராம் பார்த்து நான் பதற்றம் அடைவேன் .இன்ஸ்டாகிராமில் எதுவுமே நேர்நிலையாக வருவதில்லை .அங்கு அது நடந்தது, இங்கே இது நடந்தது என்று எதிர்மறையாகவே வருகின்றன. பார்க்கவே பயமாக இருக்கும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு பயங்கரமான ஒரு கெட்ட நேரம் என்று தோன்றியது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை பல பிரச்சினைகள் என்று இருந்தன.மிகவும் மன அழுத்தத்திலிருந்து  கொண்டிருந்தேன்.அடுத்த கட்டம் என்ன என்று புரியாமல் இருந்தேன், நிறைய யோசித்தேன். நமக்கு நேரம் சரியில்லையோ, ஒரு ராசி சரியில்லையோ என்று யூட்யூபில் பார்க்கும்போது மேலும் மன அழுத்தம் அதிகமானது. தலைப்புகளைப் பார்க்கும் போதே மோசமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொன்றும் நம்மை பயமுறுத்துவது போலவே இருக்கும்.வயது வரம்பைக் கடந்து நடக்கப் போகிறது, வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது,இந்தத் தேதியில் இது நடந்தே தீரும் என்று எல்லாம் பயமுறுத்தினார்கள். இது வேலைக்காகாது என்று அதைப் பார்ப்பதை விட்டு விட்டேன். 


அப்போதெல்லாம் நான்வருத்தமாக மன அழுத்தத்தில் இருந்தாலும் அதை கூல் கூல் என்று கூறி தணிப்பது என் மனைவி ஷ்ரேயா தான். 


எல்லாரையும் போலவே நல்ல படம் நல்ல பாத்திரம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஒரு நாள் என்னை இயக்குநர் பாலாஜி தொலைபேசியில் அழைத்தார். சந்திக்க வேண்டும் என்றார்.அப்பொழுது எனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று நினைத்தேன்.நான் 'டி3 'படம் பார்த்ததில்லை. இருந்தாலும் தொழில் நுப்ப ரீதியாக ட்ரெய்லர் டீசர் எல்லாம் நன்றாக இருந்தன. பிறகு நானே அழைத்தேன் போய்ச் சந்தித்தேன், கதை கூறினார் நன்றாக இருந்தது.போலீஸ் வேடம் என்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. புதிதாகவும் இருக்கும் சவாலாகவும் இருக்கும் என்று தோன்றியது. அவர் நல்ல திறமைசாலி. அவர் திறமைக்கு பெரிய இடத்துக்கு செல்வார் .யாரையும் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள்.அவர் அப்படிப்பட்ட நேர்த்தியான வேலைக்காரர்.


இந்தப் படத்தில் அவர் எடுத்திருக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது எந்தக் குறையும் சொல்ல முடியாது. எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து எடுத்திருந்தாலும் அதைப் போட்டு பார்க்கும் போது இன்னும் நன்றாக  செய்திருக்கலாம் என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால் அவர் எடுத்து இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் ஒரு திருத்தம் கூட சொல்ல முடியாது. திருத்தத்துக்கு வேலை இருக்காது. அவ்வளவு சரியாக செய்வார். நள்ளிரவு இரண்டு மணிக்குப்  படப்பிடிப்பு நடக்கும். இருந்தாலும் அவர் அசராமல் இருப்பார்.



வேலை பார்க்காமலே உடல் வலி இருக்கும் அளவிற்கு நாங்கள் படப்பிடிப்பு இடத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.அதற்குப் பிறகு போய் படப்பிடிப்பு நடத்தினோம். படக்குழுவினர் அத்தனை பேரும் அவ்வளவு உழைத்தார்கள்.


இன்ஸ்டாகிராமைப் பார்த்து நமது நண்பர்களைப் பற்றி அறிய முடிந்தது .இன்ஸ்டாகிராமில் நாம் சிரமத்தில் இருக்கும் போது ஆறுதலாகசொல்வார்கள் என்று போஸ்ட் போடும்போது ஆறுதலாக கமெண்ட்ஸ்கள் வரும்.ஆனால் சற்று முன்னேறி நல்ல விஷயத்திற்காக வாழ்த்துக்கள் எதிர்பார்த்து போடும்போது வராது.

முகம் தெரியாதவர்கள் கூட ஆதரவு தந்து வாழ்த்தியிருந்தார்கள். ஆனால் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்த மனதில்லை. அப்போது 'டாடா' படத்தில் வரும் கவின் பேசும் வசனம் தான் என் நினைவுக்கு வந்தது. 'நாம் நல்லா இருக்கலாம் . ஆனா உங்களைவிட நான் நல்லா இருந்திடக் கூடாது' என்று தான் நினைப்பார்கள்.அப்படி பல நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டேன். இந்தப்படம் நன்றாக வந்து இருக்கிறது அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் "என்றார்.


நடிகர் சித்துவின் மனைவி  ஷ்ரேயா பேசும்போது,


 "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .சித்துவின் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இதுவரை அவரது கடின உழைப்பால் தான் வந்திருக்கிறார்.எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

AZORTE EXPANDS SOUTHWARD WITH ITS 2nd FASHION

 AZORTE EXPANDS SOUTHWARD WITH ITS 2nd FASHION

 NEOSTORE AT PHOENIX MARKETCITY CHENNAI

Marked by a Glamorous Launch with *Actress Krithi Shetty*

 Following the success of its Mumbai launch, Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai. Spanning an impressive 15,211 sq. ft., this new destination continued AZORTE’s vision of redefining fashion retail through technology, inclusivity, and contemporary style.

 

To mark the grand opening, actor and youth icon Krithi Shetty inaugurated the AZORTE store and interacted with fans and shoppers, celebrating the city’s dynamic and fashion-forward spirit.

 

AZORTE is India’s only fashion neostore, designed to blend global trends. The store showcases an extensive curation across women’s wear, men’s wear, kids, and accessories, while embracing the brand’s core philosophy - “Your Safe Space” - a welcoming environment that encourages individuality and self-expression.

 

The Chennai store features several next-gen retail innovations, including:

Smart Trial Rooms with contextual styling recommendations

Interactive Digital Screens displaying the brand’s endless aisle offerings

RFID & QR Code Technology for seamless inventory management and product discovery

Self Check-In and Check-Out counters offering an agile, frictionless shopping experience

Krithi Shetty, known for her effortless style and vibrant personality, inaugurated the store on October 18, interacted with fans, explored the collection, and celebrated AZORTE’s arrival in Chennai.


With the opening of its Phoenix Marketcity stores in Mumbai and Chennai, AZORTE now operates 43 stores across India, continuing its mission to deliver immersive, tech-driven, and fashion-forward retail experiences across major metros.

 

Commenting on the milestone, Dhaval Doshi, Head of Marketing, AZORTE, said, “Chennai’s vibrant energy and evolving fashion landscape made it the perfect city for AZORTE’s next chapter. This store was designed to give customers more than just products; it was an experience that blended fashion, technology, and individuality seamlessly.”

 

About AZORTE 

AZORTE redefines high-street fashion by blending contemporary Indian and international trends, giving Gen Z the freedom to express their unique style. From statement-making pieces to reinvented classics, AZORTE ensures that fashion remains an extension of one's evolving identity.

About Phoenix Marketcity, Chennai:

A premier destination for a luxury lifestyle, it provides guests with a variety of opulent options. Phoenix continues to be "The" destination for the most affluent and sophisticated residents of the city as well as expats thanks to its truly international appearance and feel, elegantly decorated interiors, and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it's a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment, and leisure options.

அசோர்ட் தனது 2வது ஃபேஷன் கடையுடன் தெற்கு நோக்கி விரிவடைகிறது

 அசோர்ட் தனது 2வது ஃபேஷன் கடையுடன் தெற்கு நோக்கி விரிவடைகிறது

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நியோஸ்டோர்

*நடிகை கிருத்தி ஷெட்டியின் கவர்ச்சிகரமான அறிமுகத்தால் தனித்துவம் பெற்றுள்ளது* 

சென்னை, 18 அக்டோபர் 2025: மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடெய்லின் பிரீமியம் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டான அசோர்ட், சென்னையின் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அதன் புத்தம் புதிய கடையைத் திறப்பதன் மூலம் தெற்கில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. 15,211 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆல்-நியூ ஸ்டோர், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்  கொண்ட சமகால பாணி மூலம் ஃபேஷன் சில்லறை விற்பனையை மேம்படுத்தும் அசோர்ட் இன் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக இருக்கும். 



பிரமாண்டமான திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், நடிகையும் இளைஞர்களின் ஐகானுமான கிருத்தி ஷெட்டி அசோர்ட் கடையைத் திறந்து வைத்து, ரசிகர்கள் மற்றும் நுகர்வோர்களுடன் உரையாடி, நகரத்தின் டைனமிக் மற்றும் ஃபேஷன்-ஃபார்வாட் ஸ்பிரிட்டைக் கொண்டாடினார்.



அசோர்ட் என்பது இந்தியாவின் ஒரே ஃபேஷன் நியோஸ்டோர் ஆகும், இது குளோபல் டிரெண்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோர் பெண்களுக்கான ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் பரந்த அளவிளான க்யூரேஷன்களின் தொகுப்பைக் காட்டுகிறது, அதே நேரத்தில் இது "யுவர் ஸேஃப் பிளேஸ்" என்ற பிராண்டின் முக்கிய தத்துவத்தை உள்ளடக்கியிருப்பதுடன்.  தனித்துவத்தையும் சுய வெளிப்பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு வரவேற்கத்தக்க சூழலை உருவாக்குகிறது.



சென்னை ஸ்டோரில் பலவகைப்பட்ட நெக்ஸ்ட்-ஜென் புத்தம் புதிய சில்லறை விற்பனைகள் உள்ளன, அவற்றுடன்:

● சூழல் சார்ந்த ஸ்டைலிங் பரிந்துரைகளுடன் கூடிய ஸ்மார்ட் ட்ரையல் ரூம்கள்.

● நடைபாதைகளில் பிராண்டின் எண்ட்லஸ் ஆஃபர்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான ஊடாடும் டிஜிட்டல் திரைகள்.

● தடையற்ற சரக்கு மேலாண்மை மற்றும் தயாரிப்பு பொருட்களை கண்டறிவதற்கான RFID & QR குறியீடு தொழில்நுட்பம்.

● உற்சாகமூட்டும், நெருக்கடி இல்லாத ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் சுய செக்-இன் மற்றும் செக்-அவுட் கவுண்டர்கள்.



தனது எளிமையான பாணி மற்றும் துடிப்பான ஆளுமைக்கு பெயர் பெற்ற கிருத்தி ஷெட்டி, அக்டோபர் 18 அன்று கடையைத் திறந்து வைத்து ரசிகர்களுடன் உரையாடினார், கலக்ஷன்களைப் பார்வையிட்டார், சென்னையில் அசோர்ட் அறிமுகப்படுத்தப்பட்டதை கொண்டாடினார்.



மும்பை மற்றும் சென்னையில் தனது பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி கடைகளைத் திறப்பதன் மூலம் அசோர்ட் இப்போது இந்தியா முழுவதும் 43 கடைகளை இயக்குகிறது, முக்கிய பெருநகரங்களில் அதிவேக, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் ஃபேஷன்-ஃபார்வர்டு சில்லறை விற்பனை அனுபவங்களை வழங்குவதற்கான அதன் இலக்கைத் தொடர்கிறது.


தங்களது மைல்கல் குறித்து அசோர்ட் சந்தைப்படுத்தல் தலைவர் தவால் தோஷி கூறுகையில், "சென்னையின் கிளர்ச்சிட்டும் வகையிலான உற்சாகம் மற்றும் வளர்ந்து வரும் ஃபேஷன் லேண்ட்ஸ்கேப் அசோர்டின் அடுத்த அத்தியாயத்திற்கு ஏற்ற நகரமாக அமைந்தது. இந்த கடை வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளைத் தவிர அதிக அளவிலான பிற தயாரிப்புகளையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஃபேஷன், தொழில்நுட்பத்துடன் எல்லையற்ற தனித்துவத்துடன் கூடிய ஒரு அனுபவமாக இருக்கும்."

Rishab Shetty’s Spiritual Journey from Dakshina Kashi to Kashi*

Rishab Shetty’s Spiritual Journey from Dakshina Kashi to Kashi*


Following the phenomenal success of Kantara Chapter 1, the film’s writer, director, and lead actor Rishab Shetty embarked on a spiritual journey to express his gratitude and seek divine blessings.


The journey began in Mysuru, where he offered prayers to Goddess Chamundeshwari at the sacred Chamundi Hills. He then visited the revered Nanjanagudu Shrikanteshwara Temple, often known as Dakshina Kashi, to perform puja and se



ek blessings for peace, prosperity, and continued strength.

Carrying forward this spiritual path, Rishab Shetty travelled to Kashi (Varanasi) one of the holiest cities in India  where he attended the divine Ganga Aarti and had darshan at the Kashi Vishwanath Temple.

This journey from Dakshina Kashi to Kashi symbolizes a heartfelt expression of devotion, gratitude, and humility reflecting the same spiritual essence that Kantara Chapter 1 stands for. The Kantara team continues to remain grateful to audiences worldwide for their unwavering love and support, which has made the film a cultural and spiritual phenomenon

தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை (Dakshina Kashi to Kashi) ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்

 *தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை (Dakshina Kashi to Kashi) ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்*



காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான  வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.

ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தொடங்கியது. அங்கு அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் — “தக்‌ஷன காசி” என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று, அமைதி, வளம், மற்றும் அருள் வலிமைக்காக  பிரார்த்தனை செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இந்தியாவின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான *காசிக்கு (வாரணாசி)* பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.

தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை அவரின் இந்த ஆன்மீகப் பயணம், பக்தி, நன்றியுணர்வு மற்றும்  நம் மரபை போற்றும் வெளிப்பாடாக திகழ்கிறது — இது காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் பிரதிபலிக்கும் அதே ஆன்மீக சாரத்தையும் இந்தப்பயணம் வெளிப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் இருந்து இப்படத்தின் மீது காட்டப்படும் அன்புக்கும் ஆதரவுக்கும் காந்தாரா குழுவினர் பெரும் மகிழச்சியோடு, இந்தச் சினிமாவை ஒரு கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வாக மாற்றியதற்கு, மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறார்கள்.


சின்ன வயது தீபாவளி அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர் சி.வி.கணேசன்

 சின்ன வயது தீபாவளி அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர் சி.வி.கணேசன்

தமிழ்த்திரைப்பட  பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் சுவாரஸ்யம்








தமிழ்த்திரைப்பட  பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,வழக்கம்போல் சென்னை பிரசாத் லேப்பில் சிறப்பாக  நடந்தது. 2025ம் ஆண்டு சங்க தீபாவளி  மலர் வெளியீட்டுவிழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன்(தொழிலாளர் நலன், திறன்மேம்பாட்டுதுறை), பூச்சி.எஸ்.முருகன்( தமிழ்நாடு வீட்டுவசதிவாரியதலைவர்,  நடிகர் சங்க துணைத்தலைவர்) மற்றும் நா.இளங்கோவன் (அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ், ஆவடி), தேசியவிருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கடலோரகவிதைகள் ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார்(எஸ்.கே.பிக்சர்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். 

https://youtube.com/shorts/Hw8cFgaam54?si=4m5wx06AvWYVl3zp

https://www.youtube.com/live/EcmlyMHi1wY?si=uRFfelkYNTL3FpQE

https://youtube.com/shorts/690v_xDG1xU?si=A0VhJuEi_lkElKrN

TMJA Diwali Celebration Event Videos ☝️

விழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில்‘, முதல்வர், துணைமுதல்வர் ஆகியோருக்கு நன்றியும், வணக்கமும். அண்ணன் சகோதரர் பூச்சிமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். அவர் மீது  மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உள்ளத்தில் தனிஇடம் பெற்றுருக்கிறார். அவர் ஒரு  மாமனிதர்.அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், ஏன் நான் கூட அவர் அனுமதியுடன் அறிவாலயம் செல்ல முடியும். அவர் அனுமதியுடன்தான் கட்சி தலைவரை சந்திப்பேன்அங்கே எங்களை நன்கு உபசரிப்பார். அப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கிறார். இந்த  பத்திரிக்கை சங்கத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார். உள்ளாட்சி அமைப்புக்கு 2 முறை, 

, சட்டசபைக்கு 4 முறை,  பார்லிமென்ட்டுக்கு ஒருமுறை என மொத்தம்  ஏழு முறை தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன்., 26 வயதில் தொடங்கி, பூச்சி முருகன் அண்ணனுடன்  35 ஆண்டு  காலத்திற்கு மேலாக பணியாற்றியுள்ளேன். போட்டி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கணும். நிலவில் துணிச்சலாக, முதலில் களம் இறங்கியதால் ஆம்ஸ்ட்ராங் வரலாற்றில் இடம் பிடித்தார். வாழ்க்கையில் முன்னேற துணிச்சல், லட்சியம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். அவரே வெற்றியாளனாக மாறுகிறார்’ என்றார். மேலும் குடும்ப உறுப்பினர்களை மதிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, தனது தீபாவளி, சின்ன வயது குடும்ப அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார்.


பூச்சி.எஸ்.முருகன் பேசுகையில் ‘‘எப்போதும் சினிமா பத்திரிகையாளர் நலனுக்காக, அவர்கள் உதவிக்காக மட்டுமே தன்னை சங்க தலைவி கவிதா தொடர்பு கொண்டு பேசுவார், தன்னால் முடிந்த உதவிகளை சங்கத்துக்கு செய்வேன் என்றார். மேலும், பூச்சி முருகன் என்ற பெயர் எப்படி வந்தது. அது நாடகத்தில் நடித்ததால் வந்தது. நான் நாடக நடிகராக கலைமாமணி வாங்கி இருக்கிறேன் என்று உற்சாகமாக பேசினார். மேலும், நடிகர் சங்க துணைத்தலைவராக நடிகர்கள் குறித்து மேடையில் கவனமாக பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.  சங்க தலைவி வைத்த கோரிக்கைகளுக்கு தகுந்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்


ஆவடி அசிஸ்டென்ட் கமிஷனர் நா.இளங்கோவன்  அடுக்கு மொழியில் அழகாக பேசினார். தனது பணி அனுபவம், மேடை பேச்சு அனுபவம் குறித்து தன்னம்பிக்கையாக பேசினார். செல்போன் பாதிப்பு எப்படி இருக்கிறது என்று விவரித்தார். செல்போனை கண்டுபிடித்தது யார் தெரியுமா என்று கேட்டு அரங்கை அதிர வைத்தார். தீபாவளி குறித்து கருணை, பாசம் என பல விஷயங்களை அழுத்தமாக சொன்னார்.


நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில் ‘‘தனது சினிமா அனுபவங்களை விவரித்தார். தனது வாழ்க்கையில் பத்திரிகைகள், பத்திரியாளர்கள் தாக்கம் குறித்தும் சொன்னார். மது பழக்கம் கூடாது என்பது குறித்தும், தனது குறித்து நல்ல செய்திகளை வெளியிட்ட தினந்தந்தி முன்னாள் நிருபர் கங்காதரன் நட்பு குறித்தும் அழகாக பேசினார்.


விழாவில் கடலோர கவிதைகள் ரேகா பேசியபோது  ‘‘ சினிமாவில் நிறைய படங்களில் நல்ல கேரக்டரில் நடித்துள்ளேன். நம் நினைவுகளை திரும்பி பார்க்க வைப்பது, நாம் நடித்த படங்களின் போட்டோக்களும், அந்த படங்கள் குறித்து பத்திரிகையில் வந்த செய்திகளும் தான். இப்போது யூட்யூப் சோஷியல் மீடியா வந்துவிட்டது. ஆனாலும், ஆனந்தவிகடன், ராணி, குமுதம், தினத்தந்தி, தினமலரில் வந்த செய்திகளை, போட்டோவை மறக்க முடியுமா? அதை பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார். மேலும் புன்னகைமன்னன் பட நிகழ்வு, அந்த முத்தக்காட்சி குறித்து பல தகவல்களை சொன்னார்.  அந்த வயது விபரமில்லாத வயது ,  என் அப்பா வருத்தபடுவார்  என்று பயந்தேன் என்றார்..



விழாவில் சங்க தலைவர் எஸ்.கவிதா சினிமா பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் தேவை என்பது குறித்து விழாவில் வேண்டுகோள் விடுத்தார். மேலும், சங்க மலருக்கு விளம்பர  உதவிகள் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விழா நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் அமுதவாணன் நகைச்சுவையாக தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்பு உரை  ஆற்றினார். விழா முடிவில் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, தீபாவளி பொருட்கள், புத்தாடை அடங்கிய 8 பொருட்கள்  தீபாவளி பரிசுடன், சிறு தொகையும் வழங்கப்பட்டன..

 விழா முடிந்து, அமைச்சர் உட்பட அனைவரும் பெரு மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் சென்றனர்

Saturday, 18 October 2025

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!

 



Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament 2025, held at 

Let’s Bowl, Thoraipakkam, Chennai, Organized by the Tamil Nadu Tenpin Bowling Association (TNTBA) under the aegis of the Tenpin Bowling Federation (India).

 

In an exciting final, played on Baker format ,based on cumulative Pinfall of 2 games ,the Delhi Sharks, comprising of Dhruv Sarda , Palguna Reddy, and Sunil Sharma, defeated Strike Syndicate Chennai (Soban D, Ganesh N.T., and Gurunathan) by narrow margin of 12 pins (375–363 ).

After  Game 1 Delhi Sharks ,trailing  by 3 pins 170–173 ,made a strong comeback scoring 205 in Game 2 . Ganesh NT could not score  a strike in last frame , letting Delhi Sharks win the Title !! 

 

In Semi Final 1 

Strike Syndicate Chennai sailed past Triple Threat Chennai  (Deepak Kothari, Parthiban, Anand Raghav)

403–369. 

 

In Semi Finals 2 

Delhi Sharks overcame the challenge of Chennai Thunder Strikerz (Anand Babu, Sabeena Athica, Abhishek D) 364–357.

 

Team Triple Threat , Chennai finished overall 3rd . 

 

Team Chennai Thunder Strikerz won the Special Prize for achieving the Highest Average over 3 Blocks of 4 Games.

 

36 Teams from all over India had participated in this 4 day event .

டெல்லி ஷார்க்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது

 செய்திக்குறிப்பு :- 

டெல்லி ஷார்க்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது 




DAVe BABA VIDYALAYA தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ்டென்பின் பவுலிங் தொடர் 2025 போட்டியில், டெல்லிஷார்க்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைகைப்பற்றியது. இந்த போட்டி லெட்ஸ் பவுல், தோரைய்ப்பாக்கம், சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம்(TNTBA) இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்பின்(Tenpin Bowling Federation of India) ஆதரவுடன் ஏற்பாடுசெய்தது.


இறுதி ஆட்டம் “பேக்கர் வடிவத்தில் (Baker Format)” நடைபெற்றது, இது இரண்டு ஆட்டங்களின் மொத்தபின்ஃபால் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. டெல்லிஷார்க்ஸ் அணியின் வீரர்கள் — த்ருவ் சார்தா, பள்குனாரெட்டி மற்றும் சுனில் சர்மா — ஸ்ட்ரைக் சிண்டிகேட்சென்னை (சோபன் டி., கணேஷ் என்.டி., குருநாதன்) அணியை வெறும் 12 பின்களால் (375–363) வென்று பட்டம்வென்றனர்.


முதல் ஆட்டத்தின் முடிவில், டெல்லி ஷார்க்ஸ் அணி 3 பின்களால் (170–173) பின்தங்கியிருந்தது. ஆனால்இரண்டாவது ஆட்டத்தில் அவர்கள் 205 பின்கள் விழ்த்திதிடீர் திரும்புபாடு கண்டனர். கடைசி ஃப்ரேமில் கணேஷ்என்.டி. ஸ்ட்ரைக் அடிக்க தவறியதால், டெல்லி ஷார்க்ஸ்அணி வெற்றியை உறுதிசெய்தது!

 

அரையிறுதி 1:
ஸ்ட்ரைக் சிண்டிகேட் சென்னை, டிரிபிள் த்ரெட் சென்னை(தீபக் கோத்தாரி, பார்த்திபன், ஆனந்த் ராகவ்) அணியை403–369 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.


அரையிறுதி 2:
டெல்லி ஷார்க்ஸ் அணி, சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ்(ஆனந்த் பாபு, சபீனா அதிகா, அபிஷேக் டி.) அணியை 364–357 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டிரிபிள் த்ரெட் சென்னை அணி மொத்தமாக மூன்றாம்இடத்தை பெற்றது.

இந்த நான்கு நாள் போட்டியில் இந்தியாவின் பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.

சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4 ஆட்டங்களைக்கொண்ட 3 பிளாக்குகளில் அதிக சராசரியை பெற்றதற்காகசிறப்பு பரிசை வென்றது.

Friday, 17 October 2025

Dude Movie Review

Dude Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradeep Ranganathan , Mamitha Baiju ,  Neha Shetty, R. Sarathkumar, Hridhu Haroon Rohini Aishwarya Sharma,  Dravid Selvamனு பல பேர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு release ஆகியிருக்கு .keerthiswaran இயக்குற முதல் படம் இது தான். இவரு sudha kongura வோட assistant director அ work பண்ணிட்டு இருந்தாரு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



agan அ நடிச்சிருக்க pradeep அவரோட ex girlfriend ஓட wedding ல போய் பிரச்சனை பண்ணுறாரு. breakup க்கான காரணத்தை கேட்டு தான் பிரச்சனை பண்ணுவாரு. ஆனா ஒரு பொண்ணு no னு சொல்லறத்துக்கு எந்த ஒரு justification யும் தேவையில்லை னு புரிஞ்சுகிட்டு கடைசில அங்க இருந்து கிளம்பி வந்துடுறாரு. அதுக்கு அப்புறம் தான் இவரோட life ஏ ஆரம்பிக்குது னு சொல்லலாம். இப்போ kural அ நடிச்சிருக்க mamita baiju வை காமிக்கறாங்க. இவங்க ரெண்டு பேரும் cousins தான். சின்ன வயசுல இருந்தே ஒண்ணா தான் வளந்துருப்பாங்க. kural ஓட அப்பாவா இருக்காரு adhiyamaan azhagappan அ நடிச்சிருக்க sarathkumar . இவரு ஒரு powerful ஆனா minister அ இருப்பாரு. இவரு agan க்கு மாமா . agan யும் kural யும் சேந்து ஒரு event management company அ சேந்து நடத்துவாங்க. kural க்கு agan அ ரொம்ப பிடிச்சிபோகவே propose பண்ணுறாங்க. ஆனா agan இந்த proposal அ reject பண்ணிடுறாரு. அதுனால kural higher studies க்காக வெளிநாட்டுக்கு போயிடுறாங்க. ஆனா இதுக்கு அப்புறம் தான் agan kural அ ரொம்ப miss பண்ண ஆரம்பிக்குறாரு. agan தன்னோட love அ பத்தி athiyamaan கிட்ட சொல்லுறாரு. இதை கேட்டு சந்தோசப்பட்ட adhiyaman பெரிய level ல இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணுறதுக்காக எல்லாத்தயும் arrange பண்ணுறாரு. அப்போ தான் kural ஏற்கனவே வேற ஒரு caste அ சேந்த ஒரு பையன love பண்ணுறேன்னு சொல்லுறாங்க. அப்போ தான் adhiyamaan ஜாதி வெறி பிடிச்சவரும் னு இதுனால தன்னோட தங்கச்சியும் கொலை பண்ணிருக்காரு னு தெரிய வருது. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது  தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


pradeep ranganathan ஓட acting super அ இருந்தது. love today , dragon னு தொடர்ந்து hit படங்களை குடுத்த pradeep க்கு இந்த படமும் hit னு தான் சொல்லணும். இவரோட comedy counter அ இருக்கட்டும் , emotional scenes அ இருக்கட்டும் எல்லாமே excellent அ இருந்தது. படத்தோட first half ல romance , comedy , sad portions னு எல்லாமே குடுத்திருந்தாங்க. நெறய situations அ கண்டிப்பா audience ஆழ நல்ல relate பண்ணிக்க முடியும். second half ல நெறய twist ஓட எடுத்துட்டு போயிருக்காங்க. முக்கியமா சரத்குமார் ஓட acting தான் அட்டகாசமா இருந்தது. ஒரு சில sensitive ஆனா விஷயங்களை ரொம்ப bold அ படத்துல எடுத்துட்டு வந்திருக்காங்க னே சொல்லலாம். caste divisions , honour killing , ஆண் ஆதிக்கம் னு நெறய விஷயங்களை கொண்டு வந்திருக்காங்க. இதை base பண்ணி use பண்ண dialouges ரொம்ப powerful அ இருந்தது னே சொல்லலாம். 


இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது சாய் abhyankar . இவரோட songs and bgm எல்லாம் நல்ல set யிருந்தது. இந்த படத்துக்கு மிக பெரிய plus point ஏ cinematography தான். action scenes அ இருக்கட்டும் song cherography க்கு எல்லாம் camera work super அ இருந்தது. visuals யும் பக்கவா இருந்தது. editing யும் crisp and sharp அ பண்ணிருக்காங்க . 


pradeep ஓட acting , comedy sequences , action scene னு எல்லாமே அட்டகாசமா இருக்கிறது  தான் இந்த dude . சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.