Featured post

Thaai Kelavi Movie Review, Thaai Kelavi Review

Thaai Kelavi Movie Review, Thaai Kelavi Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thaai kilavi  ன்ற படத்தோட   review அ தான் பாக்க போறோம். இந்த படத்...

Thursday, 26 February 2026

Thaai Kelavi Movie Review, Thaai Kelavi Review

Thaai Kelavi Movie Review, Thaai Kelavi Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thaai kilavi  ன்ற படத்தோட   review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Radhika Sarathkumar Singam Puli, Arul Doss, Bala Saravanan, Munishkanth, Ilavarasu, George Maryan, Muthukumar, Raichal Rabecca னு பலர் நடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது Sivakumar Murugesan . Sivakarthikeyan and Sudhan Sundaram தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. இந்த படம் நாளைக்கு தான் release ஆகுது.  சென்னை ல இருக்கிற Tagore Film Center  ல இந்த படத்தோட special screening அ selected guests க்கு மட்டும் போட்டு காமிச்சிருந்தாங்க. அதுல ஒருத்தர் தான் கமல் ஹாசன். இந்த படத்தோட முதல் review யும் அவரு தான் குடுத்திருக்காரு. ராதிகா ஓட performance யும் இந்த படத்தோட கதையையும் பாராட்டி அவரோட social media பக்கத்துல post அ போட்டு இருந்தாரு. அதுமட்டுமில்ல director அப்புறம் producer ஆயும் பாராட்டி இருக்காரு.  சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



மதுரை ல இருக்கற உசிலம்பட்டி ல தான் இந்த படத்தோட கதை நடக்குது. ராதிகா சரத்குமார் தான் பவுன்தாய் ன்ற character  ல நடிச்சிருக்காங்க. இவங்க வட்டி குடுக்கற தொழில் அ தான் பண்ணிட்டு இருக்காங்க. இவங்க வீட்டை விட்டு வெளில வந்தாலே எல்லாரும் அரண்டு போய்டுவாங்க. என்ன தான் இவங்க வட்டி குடுத்தாலும் சரியா வட்டி பணத்தை வசூலிக்க correct ஆனா time க்கு வந்துருவாங்க. அதுனால தான்  ஊர் ல இவங்கள பாத்து பயந்து போய் இருப்பாங்க. இவங்க எப்போ தான் இறந்துபோவாங்க நும் ஊர் மக்கள் காத்துகிட்டு இருப்பாங்க. இவங்க சாகனும் னு அந்த ஊர் ல இருக்கறவங்க எல்லாரும் கடுவுள் கிட்ட வேண்டிக்கறாங்க. திடுருனு ஒரு நாள் ஜுரத்துல படுத்துடுறாங்க. இவங்க இந்த நிலைமை ல இருக்கும்போது திடுருனு ஒரு நகை வியாபாரி பவுன்தாய் ஓட காலை  தொட்டுட்டு போறாரு. இவங்களோட  பசங்க யாரு னு விசாரிக்கும்போது அந்த நகை வியாபாரி ஒடனே உங்க அம்மா 160 பவுன்  நகை பண்ணிருக்காங்க னு சொல்லுறாரு. இதுவரைக்கும் அம்மாகிட்ட பேசாத பசங்களும் இந்த நகைக்காக பேச ஆரம்பிக்குறாங்க. இவங்க மட்டும் கிடையாது இந்த பசங்களோட மனைவிகளும் தான். இப்போ இந்த நகையோட நிலைமை என்ன ? பவுன்தாய் ஓட நிலைமை என்னன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

படத்தோட technical  aspects  னு பாக்கும்போது director  இந்த கதையை கொண்டு போன விதத்துக்கு அவருக்கு கைதட்டல் குடுக்கலாம். ஒரு பாட்டியை main  character  அ வச்சு ஒரு interesting  ஆனா கதையை குடுத்திருக்காரு. அதுமட்டும் இல்ல மதுரை ஓட பாணி ல நக்கலும் நையாண்டி க்கும் இந்த படத்துல பஞ்சம் இல்ல. இன்னொன்னு குஷி படத்துல vijay யும் jyothikka ஆவும் விளக்கு அனைய கூடாது ரெண்டு பேரும் ஓடி வந்து அந்த விளக்கை பாத்துப்பாங்க. அந்த scene அ இந்த படத்துல கொஞ்சம் differnent அ காமிச்சிருக்காரு. இந்த scene கண்டிப்பா audience க்கு பிடிக்கும்.   vilnivas  k  prasanna  ஓட music  and  bgm  ரெண்டுமே பக்கவா இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. sanlokesh ஓட editing crisp ஆவும் sharp ஆவும் குடுத்திருக்காரு. vivek vijayakumar ஓட cinematography யும் இந்த படத்துக்கு பலம் தான். 

இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது radhika sarathkumar ஓட நடிப்பை பத்தி சொல்லியே ஆகணும். இவங்க இந்த character க்காக 4 மணிநேரம் makeup க்காக செலவு பண்ணிருக்காங்க. அந்த hardwork இந்த படம் பாக்கும்போது audience க்கு நல்லாவே தெரியும். இவங்களோட body language , dialogue delivery எல்லாமே தரமா இருந்தது. இன்னும் சொல்ல போன அந்த character ஆவே வாழ்ந்துருக்காங்க  னு தான் சொல்லணும். singampuli பவுன்தாய்  ஓட ஒரு பையன இருப்பாரு. இவரு அடிக்கற லூட்டி எல்லாம் audience அ சிரிக்க வைக்கிற அளவுக்கு இருக்கு. இவரு தீவிர kamalhasan ஓட ரசிக்கன இருப்பாரு. கமல் songs க்காக இவரு சண்டை போடுறது எல்லாமே ரசிக்கிற விதமா இருக்கும். மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காரு.    

மொத்தத்துல ஒரு நல்ல jolly ஆனா entertaining ஆனா  கதைக்களம் தான் இது . சோ மறக்காம இந்த படத்தை உங்க family ஓட theatre ல போய் பாக்குறது miss பண்ணிடாதீங்க. .

Aazhi Movie Review

Aazhi Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aazhi படத்தோட   review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல R. Sarathkumar · Indrajith Jagajith · Devika Satheesh · Vaiyapuri · Sreejith Ravi · Birla Bose னு பலர் நடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது madhav ramadasan . இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு.  sajith  krishna  தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



moorthy அ நடிச்சிருக்க sarathkumar nagarcoil ல boat mechanic அ இருக்காரு. இவரு weapons அ கடத்துற தொழில் ளையும் இருக்காரு. இவருக்கு கோவமும் அதிகமாவே  வரும். இவரை avoid பண்ணுறது தான் எல்லாருக்கும் நல்லது அந்த மாதிரி terror ஆனா character அ இருப்பாரு. இவரோட பொண்ணு தான் mukila வா நடிச்சிருக்க devika satheesh. இவங்க arul அ நடிச்சிருக்க indhrajith sukumaran அ love பண்ணிட்டு இருப்பாங்க. இவரு ஒரு poor class family அ சேந்தவரு. இவங்க ரெண்டு பேரும் சேந்து இருக்கற video வை பாக்குறாரு moorthy. இதை பத்தி தன்னோட பொண்ணு கிட்ட கேட்கவே மாட்டாரு. திடுருனு ஒரு நாள் arul அ கடத்தி அவரோட boat ல வச்சுடுறாரு. இதுக்கு அப்புறம் நடக்கற கதை தான் ரொம்ப thrilling ஆவும் suspense ஆவும் போகுது. 

படத்துல நெறய dialogues இல்லனாலும் characters பண்ணுற actions ஏ கதையை ரொம்ப  clear அ சொல்லிடுது. இதுல வர characters ஓட expressions, bodylanguage, அவங்க எடுக்கற violence னு எல்லாமே இந்த படத்துல strong ஆவும் அமைச்சிருக்கு. sarathkumar தான் இந்த படத்தோட பலம் னு சொல்லுலாம். இவரோட moorthy character ரொம்ப அமைதி ஆவும் அதே சமயம் பயங்கரமாவும் இருக்காரு. enjoyment க்காக லாம் இவரு மத்தவங்கள கொலை பண்ணவோ அடிக்கவோ மாட்டாரு. இருந்தாலும் இவரோட behaviour disturbing ஆவும் intense ஆவும் இருக்கு. இந்த படத்தோட கதை ரொம்ப சிம்பிள் தான். ஒரு boat ல இருக்கற ரெண்டு பேர் , இவங்க என்ன பண்ணுறாங்க. moorthy அவரோட கோவத்தை control பண்ணுவார் இல்லையா ன்றது  தான். arul அ நடிச்சிருக்க indrajith ஓட performance யும் நல்ல இருந்தது. இருந்தாலும் இவரோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். 

இந்த படத்துல குடுத்திருக்க climax யும் கதைக்கு ஏத்த மாதிரி strong அ இருந்தது.  characters க்கு நடுவுல இருக்கற emotions அ இருக்கட்டும், tension அ இருக்கட்டும் அது எல்லாமே deep அ explore பண்ணிருக்காரு director. anand nair ஓட cinematography இந்த  intense ஆனா கதை க்கு super அ camera work பண்ணிருக்காரு. william francis ஓட  bgm அப்புறம் songs ரெண்டுமே இந்த கதைக்கு அழகா set ஆயிருக்கு. ஒரு பக்காவான கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

Fourth Floor Movie Review

Fourth Floor Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம fourth floor  ன்ற படத்தோட   review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Aari Arjunan, Deepshika, Pavithra, Subramaniya Shiva, Aditya Kathir & Thalaivasal Vijayனு பலர் நடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது R. Sundara Pandi . இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு.  mano creations  தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


இது ஒரு interesting ஆனா pshycological thriller  கதை. aari arjuna live in relationship ல இருப்பாரு. ஏதோ ஒரு காரணத்துக்காக இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு போயிடுறாங்க. lover யும் அவங்க பொன்னும் apartment ல இருக்கற fourthfloor  ல தான் ஒரு வீடு வாங்கிருப்பாங்க. அந்த நேரத்துல தான் கொலைகளும் நடக்குது. அப்போ தான் திடுருனு அவரோட  lover  யும் குழந்தையும் காணாம போயிடுறாங்க. அவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்க investigate பண்ண ஆரம்பிக்குறாரு. அப்படி பண்ணும்போது real estate பண்ணுற ஒரு scam அ கண்டுபிடிக்குறாரு.  அது murder வரைக்கும் போகுது. அதுமட்டுமில்ல இதுல realestate  business பண்ணுறவங்க போக foreign  investors யும் சம்பந்த பட்டிருக்காங்க. இவங்கள police  தான் protect பண்ணுறாங்க. அது என்ன மர்மம். aari arjuna அவரோட family அ கண்டு பிடிச்சிடுவாரா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது aari arjuna ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு தரமான படத்துல நடிச்சிருக்காரு னு சொல்லலாம். ஒரு நல்ல comeback குடுத்திருக்காரு. இவரோட bodylanguage , dialogue delivery , body language எல்லாமே நல்ல இருந்தது. deepshika  ஓட performance யும் decent அ இருந்தது. subramanya shiva ஓட portions யும் நல்ல இருந்தது. 

ஒரு suspenseful ஆனா thrilling கதைக்களம் தான் இது சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

Thadayam Movie Review

Thadayam Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thadayam ன்ற webseries ஓட  review அ தான் பாக்க போறோம். இந்த series ல  Samuthirakani, Shivada, Raj Tirandas, Munnar Ramesh, Sundharpandyan, Prem, Kotravai, Vishakan, Pulipandi னு பலர் நடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது Navinkumar Palanivel .  இவரு தான் இந்த series ஓட கதையையும் எழுதிருக்காரு. சோ வாங்க இப்போ இந்த series ஓட  கதைக்குள்ள போலாம். 

இந்த series ஒரு உண்மையான சம்பவத்தை தழுவி தான் எடுத்திருக்காங்க. இந்த கதை 1995 ல இருந்து 1999 ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. adhiyamaan  அ நடிச்சிருக்க சமுத்திரக்கனி ஒரு sincere ஆனா police ஆனா அவரை எல்லாருமே  தப்பா தான் புரிஞ்சுக்கறாங்க. இவரு வேலை ல ரொம்ப கண்ணும் கருத்துமா இருப்பாரு அதே மாதிரி நெறய cases அ solve யும் பண்ணிருக்காரு. இருந்தாலும் இவருக்கு proper ஆனா recoginition அ குடுத்திருக்க மாட்டாங்க. இவரு investigate பண்ணுற methods எல்லாமே different அ இருக்கும் அதுனால இவரு கூட வேலை செய்யுற எல்லாருமே இவரை criticise தான் பண்ணிட்டு இருப்பாங்க. 

இவரோட life இப்படி போயிடு இருக்கும்போது தான் lakshmi யா நடிச்சிருக்க sshivada department ல புதுசா join பண்ணுறாங்க. இந்த நேரத்துல தான் தொடர்ந்து பல கொலைகள் நடந்துட்டு இருக்கு. investigation பண்ணும்போது அதியமான் க்கு நெறய clues கிடைக்குது. ஆனா higher officials இதை accept பண்ணிக்க மாற்றங்க. ஆரம்பத்துல lakshmi க்கும் இவரோட behaviour பிடிக்காது அதுக்கு அப்புறம் போக போக  இவரை நம்ப ஆரம்பிச்சுடுறாங்க. அதோட இவரோட instincts யும் மதிக்க ஆரம்பிக்குறாங்க. 

கொலைகள் நடந்துட்டு இருக்கும்போது இந்த கொலைகளை பண்ணுறது psychopath னு நினைப்பாங்க. இருந்தாலும் adhiyamaan வேற ஒரு opinion அ வைக்குறாரு. இந்த கொலைகளை பண்ணுறது தனி ஆளு கிடையது னு சொல்லுறாரு. இந்த கொலை பண்ணுறவங்க தமிழ்நாட்டை சேந்தவங்க கிடையாது andhra pradesh அ சேந்தவங்கள இருக்கலாம் னு சொல்லுறாரு. இதுக்கு காரணம் இந்த மாதிரி கொலைகள் tamilnadu andhra border ல இருக்கற areas ல நடந்திருக்கும். இந்த clue அ main அ வச்சு lakshmi யும் adhiyamaan யும் tirupathi station க்கு போய் விசாரிக்குறாங்க. அப்போ தான் இவங்களுக்கு shocking அ இன்னொரு விஷயம் தெரிய வருது. அது என்னனா இதே pattern ல மொத்தமா 72 கொலைகள் நடந்திருக்கும். 

இதை இன்னும் deep அ investigate பண்ணும் போது எல்லா கொலைகளையும் நெறய விஷயங்கள் ஒத்துப்போகும். killer க்கு பணம் மேலயோ இல்ல பொருள் மேலயோ ஆசை இருக்காது. அதே மாதிரி எல்லா crime scene ளையும் வீடு சுவத்துல ஒரு question mark யும் வரைஞ்சு வைச்சிருப்பாங்க. இந்த கொலைகளுக்கு சரியான  ஆதாரங்கள் கிடைக்காதனால தான் pending ல போட்டு வச்சிருப்பாங்க. இப்போ andhra police யும் tamilnadu police யும் சேந்து வேலை செய்ய ஆரம்பிக்குறாங்க. அப்போ தான் இந்த question mark க்கு பின்னாடி இருக்கற அர்த்தம் என்னது, எந்த காரணத்துக்காக 72 கொலைகள் நடந்திருக்கு ன்றதா investigate பண்ண ஆரம்பிக்குறாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த series ஓட மீதி கதையை இருக்கு. 

இதுல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது samuthirakani ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. இவரோட bodylanguage அப்புறம் dialogue delivery எல்லாமே பக்காவா இருந்தது. sshivada ஓட performance யும் நல்ல இருந்தது. ஆரம்பத்துல இவங்க அதியமான் மேல சந்தேகம் படுறது அப்புறம் அவரோட சேந்து investigate பண்ணுற transformaation எல்லாம் super அ இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு அவங்க best performance அ குடுத்திருக்காங்க. 

series ஓட technical aspects னு பாக்கும்போது camerawork நல்ல இருந்தது. கதை 1995 ல நடக்கறதுனால அதுக்கு ஏத்த மாதிரி colour palette , tone , angle எல்லாமே perfect அ குடுத்திருந்தாங்க. series ல வர bgm யும் அட்டகாசமா இருந்தது. director audience க்கு ஏத்த மாதிரி thrilling ஆனா கதைக்களத்தை தான் குடுத்திருக்காரு. ஆரம்பத்துல இருந்து ending வரைக்கும் அந்த tension யும் suspence யும் கொஞ்சம் கூட குறையல. 

ஒரு intense ஆனா thrilling ஆனா webseries தான் இது. zee 5 ல மறுபடியும் ஒரு super ஆனா series அ கொண்டு வந்திருக்காங்க. must watch னு தான் சொல்லுவான். so miss பண்ணாம போய் பாருங்க.

Little Wings Movie Review

Little Wings Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்மlittle wings ன்ற ஒரு shortmovie  ஓட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Manimegalai, Nitharsana C. Kalidoss & Madurai Ramjiநடிச்சிருக்காங்க.  இதை இயக்கி இருக்கிறது Naveen Mu .  இவரு தான் இந்த படத்தோட  கதையையும் எழுதிருக்காரு.  இந்த short film நெறய global film festival ல பாராட்டி பேசிருக்காங்க.  சோ வாங்க இப்போ இந்த படத்தோட   கதைக்குள்ள போலாம். 




ஒரு couple அ focus பண்ணி தான் கதை நகருது. இதுல husband ரொம்ப நோய்வாய் பட்டுருக்காரு. wife தான் சம்பாதிச்சு family அ பாத்துக்குறாங்க. work யும் பாத்துகிட்டு வீட்டையும் பாத்துக்குறாங்க. முடிஞ்சளவுக்கு ரெண்டு side ளையும் hardwork போடுறாங்க. இருந்தாலும் இவங்களோட husband எல்லாத்துலயும் குறை தான்  சொல்லிட்டு இருக்காரு. எப்பப்பாத்தாலும் non veg food தான் wife கிட்ட கேட்குறாரு. அவங்க வழக்கற கோழியை கொன்னு chicken வைக்க சொல்லுவாரு ஆனா அந்த கோழி ஆழ தான் இவங்களுக்கு வருமானம் வருது னு சொல்லி அதா கொள்ளை மாட்டேன் னு சொல்லிடுறாங்க. ஒரு நாள் இவங்க இல்லாத நேரமா பாத்து அந்த கோழியை வெட்ட போறாரு அப்போ ஒரு விஷயம் நடக்குது. அது என்னன்றது தான் மீதி கதையை இருக்கு. 

life ஓட reality அ எடுத்து சொல்லுற மாதிரியான ஒரு கதைக்களம். படத்துல நடிச்சிருக்க lead pair நல்ல நடிச்சிருக்காங்க.  Saravanamuthu Soundarapandi & Meenakshi Soman ஓட camera work இந்த கதைக்கு அழகா set ஆயிருக்கு. santhosh Dayanidhi  ஓட music  and bgm நல்ல இருந்தது. அப்புறம் philomin  raj ஓட editing யும் crisp and  short அ இருந்தது. 
மொத்தத்துல ஒரு நல்ல   கதைக்களம் தான் இது . சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

A Landmark Moment for Tamil Nadu Trade as Yash’s Toxic: A Fairy Tale for Grown Ups Locks Massive Deal*

 *A Landmark Moment for Tamil Nadu Trade as Yash’s Toxic: A Fairy Tale for Grown Ups Locks Massive Deal*



The Tamil Nadu distribution of Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups has been locked at a staggering ₹63 crore advance on a commission basis, marking one of the most significant deals in the territory in recent years. The scale of this acquisition underlines the massive expectations surrounding the film and positions it among the biggest upcoming releases in the state.


The rollout across Tamil Nadu will be executed through a powerful multi-distributor strategy to ensure maximum reach and territorial strength. Chennai City will be handled by Think Studios under Swarup Reddy, while the Chengalpet area will be distributed by White Nights, led by Trident Ravi. The Coimbatore, North and South Arcot, Tirunelveli, and Kanyakumari territories will be overseen by S Picture Srinivasan. Meanwhile, the key circuits of Madurai & Ramnad, Trichy & Thanjavur, and Salem will be managed by 5 Star Senthil. This structured territorial distribution model is designed to secure strong showcasing across both single screens and multiplex chains statewide.


Collectively expressing their excitement about the collaboration, the Tamil Nadu distribution partners said, “Toxic: A Fairy Tale for Grown-Ups is easily one of the most anticipated Indian films in recent times, and the love it already has in Tamil Nadu is incredible. The way audiences here have embraced Yash over the years is truly special. We are thrilled to come on board as distribution partners for a film of this scale and ambition. It’s not just a big release for us — it’s an exciting moment to be associated with one of the most awaited films in Indian cinema today”


Trade experts attribute the scale of this deal to the phenomenal success of K.G.F: Chapter 2 and the widespread popularity and acceptance of Yash in Tamil Nadu. Over the years, Tamil audiences have showered immense love on the star, celebrating his commanding screen presence and distinctive aura, and embracing him as one of their own — a rare cross-border connect that continues to translate into strong theatrical confidence.


With a ₹63 crore advance deal and a robust territorial network in place, Toxic: A Fairy Tale for Grown-Ups is set to be one of the biggest releases in Tamil Nadu, primed for a monumental opening across the state.


Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown Ups has been simultaneously shot in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages. Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a worldwide theatrical release on 19 March 2026. The film also stars Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria in pivotal roles.

யாஷின் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின்

 *யாஷின் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார்  கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது*



'ராக்கிங் ஸ்டார்' யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. 


அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு-  சக்தி வாய்ந்த பல விநியோகஸ்தர்களுடனான உத்தி மூலம் செயல்படுத்தப்படும்.


அந்த வகையில் சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். அதனைத் தொடர்ந்து மதுரை- ராமநாதபுரம்- திருச்சி- தஞ்சாவூர் -சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார். இது போன்று கட்டமைக்கப்பட்ட பிராந்திய விநியோக முறை- மாநிலம் முழுவதும் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிஃபிளக்ஸ் ஸ்கிரீன்ஸ் ஆகிய இரண்டிலும் வலுவான திரையிடலை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த ஒத்துழைப்பு குறித்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு விநியோகஸ்தர்கள்,


'' டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்'  ( Toxic: A Fairy Tale for Grown Ups) சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய அளவிலான படங்களில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் ஏற்கனவே யாஷ் மீது இருக்கும் அன்பும் , ஆதரவும் சிறப்பானது. இங்குள்ள பார்வையாளர்கள் யாஷை ஏற்றுக்கொண்ட விதம் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இந்த அளவிலான லட்சியம் கொண்ட ஒரு படத்திற்கான விநியோகத்தில் நாங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களுக்கு ஒரு பெரிய வெளியீடு மட்டுமல்ல.. இன்று இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றுடன் இணைந்திருப்பதும் உற்சாகமான ஒன்றாகும் '' என்றனர்.


'கே ஜி எஃப் :பார்ட் 2 ' படத்தின் அற்புதமான வெற்றி மற்றும் தமிழ்நாட்டில் யாஷ் மீதான பரவலான புகழ் மற்றும் வரவேற்பு ஆகியவையே இந்த ஒப்பந்தத்தின் அளவிற்கான காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ் பார்வையாளர்கள் யாஷ் மீது மிகுந்த அன்பைப் பொழிந்து.. அவரது திரை ஆதிக்கத்தையும், தனித்துவமான புகழையும் கொண்டாடி, அவரை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எல்லையைத் தாண்டிய அரிய பிணைப்பு. அதனால் இந்த ஒப்பந்தம் வலுவான நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.


63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் மற்றும் வலுவான பிராந்திய நெட்வொர்க்குடன் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic :A Fairy Tale for Grown Ups) தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் மாநிலம்  முழுவதும் பிரம்மாண்டமான மற்றும் விரிவான வெளியீட்டிற்கும் தயாராக உள்ளது.


யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ' டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grown Ups) திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே தருணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் இதன் டப்பிங் பதிப்புகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. கே வி என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations) தயாரித்த 'டாக்ஸிக்' திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி , ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.‌


*A Landmark Moment for Tamil Nadu Trade as Yash’s Toxic: A Fairy Tale for Grown Ups Locks Massive Deal*


The Tamil Nadu distribution of Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups has been locked at a staggering ₹63 crore advance on a commission basis, marking one of the most significant deals in the territory in recent years. The scale of this acquisition underlines the massive expectations surrounding the film and positions it among the biggest upcoming releases in the state.


The rollout across Tamil Nadu will be executed through a powerful multi-distributor strategy to ensure maximum reach and territorial strength. Chennai City will be handled by Think Studios under Swarup Reddy, while the Chengalpet area will be distributed by White Nights, led by Trident Ravi. The Coimbatore, North and South Arcot, Tirunelveli, and Kanyakumari territories will be overseen by S Picture Srinivasan. Meanwhile, the key circuits of Madurai & Ramnad, Trichy & Thanjavur, and Salem will be managed by 5 Star Senthil. This structured territorial distribution model is designed to secure strong showcasing across both single screens and multiplex chains statewide.


Collectively expressing their excitement about the collaboration, the Tamil Nadu distribution partners said, “Toxic: A Fairy Tale for Grown-Ups is easily one of the most anticipated Indian films in recent times, and the love it already has in Tamil Nadu is incredible. The way audiences here have embraced Yash over the years is truly special. We are thrilled to come on board as distribution partners for a film of this scale and ambition. It’s not just a big release for us — it’s an exciting moment to be associated with one of the most awaited films in Indian cinema today”


Trade experts attribute the scale of this deal to the phenomenal success of K.G.F: Chapter 2 and the widespread popularity and acceptance of Yash in Tamil Nadu. Over the years, Tamil audiences have showered immense love on the star, celebrating his commanding screen presence and distinctive aura, and embracing him as one of their own — a rare cross-border connect that continues to translate into strong theatrical confidence.


With a ₹63 crore advance deal and a robust territorial network in place, Toxic: A Fairy Tale for Grown-Ups is set to be one of the biggest releases in Tamil Nadu, primed for a monumental opening across the state.


Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown Ups has been simultaneously shot in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages. Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a worldwide theatrical release on 19 March 2026. The film also stars Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria in pivotal roles.

முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின்

 *முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது!!*



மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது.


டிரெய்லரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு காதல்கள் இருப்பதாகக் கூறி, இரண்டு நாயகர்கள் அவளைச் சுற்றி வருகிறார்கள். கலகலப்பான நகைச்சுவையும், மனம் முழுவதையும் நெகிழ வைக்கும் அழகிய காதலோடும், இப்படம் ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் என்பதை டிரெய்லர் அழுத்தமாக உணர்த்துகிறது. இந்த டிரெய்லர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.


இத்திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், காதலும் உணர்ச்சியும்,கலந்த இசை,ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த் கவனித்துள்ளார். சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் மேற்கொண்டுள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


வரும் மார்ச் 6 அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் (ரோமியோ பிக்சர்ஸ்) Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது



LINK : 

https://www.youtube.com/watch?v=vzu95IcA32g

நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு / நடிகர் சிவகுமார் நினைவு அஞ்சலி

 *நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு / நடிகர் சிவகுமார் நினைவு அஞ்சலி*





1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் ஐயா ஆர். நல்லகண்ணு.


பள்ளி மாணவனாக விளங்கியபோதே ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற தேசியத் தலைவர்கள் பேசிய பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் உரைகளைக் கேட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தானும் ஒரு உணர்வாளராக உருவெடுத்தார்.


பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த கம்யூனிஸ நூல்களைப் படித்த அச்சிந்தனைக்கு ஆட்பட்டார்.


திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்து முடித்து பட்ட வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பொதுவாழ்வில் மூழ்கி படிப்பைப் பாதியில் விட்டு விட்டார்.


1945 இல் மதுரையில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் ஜீவா ஆற்றிய உரை கேட்டு ஊக்கம் பெற்றார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.


ஆதிக்கங்களுக்கு எதிராகவும், ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகவும் இளம் வயதிலேயே போராட்டக்களம் இறங்கினார்.


சுதந்திரத்திற்குப் பின்னர் கட்சி தடை செய்யப்பட்டதால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்.


1949 இல் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பல துன்ப துயரங்களுக்கு ஆளானார்.


இளைஞர் நல்லகண்ணுவின் அடர்த்தியான மீசை மீது சிகரெட்டின் நெருப்புக்கங்கை வைத்து கொடுமைப்படுத்தினான் போலீஸ் இன்ஸ்பெக்டர்.


சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ஏழாண்டுகள் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார்.


1958 இல் அவரது கட்சித் தோழரின் மகளாகிய ரஞ்சிதம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.



நீண்ட காலம் விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக விளங்கிய ஐயா நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக ஒன்பது ஆண்டுகள் செயலாற்றினார்.


தியாகம், அர்ப்பணிப்பு, எளிமை, நேர்மை, ஆகிய நற்பண்புகளின் இலக்கணமாகத் திகழும் அரசியல் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் எம்மைப் போன்றவர்களுக்கு பெருமகிழ்வைத் தந்தது.


பொதுவாழ்வின் குறியீடாக விளங்கிய நூற்றாண்டு நாயகர் ஐயா நல்லகண்ணு. தான் மறைந்த பின்பு தன் உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு தானமாக வழங்கியதன் மூலம் உயிரையும், உடலையும் உழைக்கும் வர்க்கத்திற்கே ஈந்த மாமனிதர் ஆகிறார். அவர் மறைவு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாதது. அவரை வணங்குவோம்.