Featured post

தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல்

 *தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல்* *துரந்தர் பழிவாங்கல் - டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!* நீண்ட  நாட்களாக நீடித்த ஊகங்கள்...

Saturday, 7 March 2026

தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல்

 *தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல்*

*துரந்தர் பழிவாங்கல் - டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!*




நீண்ட  நாட்களாக நீடித்த ஊகங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் ரசிகர்களின் தீவிர ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரன்வீர் சிங் நடிக்கும் துரந்தர் பழிவாங்கல் படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன. நாளை காலை 11.01 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது!


இந்த படத்தில் ரன்வீர் சிங் ஜஸ்கிரத் சிங் ரங்கி மற்றும் ஹம்ஸா என இரட்டை கதாபாத்திரங்களில் மீண்டும் தோன்றுகிறார். முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் கதாபாத்திரங்களுக்கிடையேயான மோதல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


துரந்தர் படத்தின் முதல் பாகம் இந்தியாவில் மட்டுமின்றி வட அமெரிக்கா, கனடா, யுகே மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளிலும் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை புரட்டிப்போட்டது. இப்போது துரந்தர் பழிவாங்கல் படமும் அதே உச்சத்தை தாண்டும் என்று வர்த்தக வட்டாரங்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றன.


ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், B62 ஸ்டுடியோஸ் நிர்மாணமாக வெளியாகும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் திரையரங்குகளில்  வெளியாக உள்ளது. ஆதித்ய தார் எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ள இந்த ஆக்சன் திரில்லர் படத்தை, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் இணைந்து தயாரிக்கின்றனர்.


குடி பட்வா, உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகைகளையொட்டி, மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்களை பரவசப்படுத்த தயாராக இருக்கிறது!

HONSLA - EENDHAN - BADLA

 *HONSLA - EENDHAN - BADLA*




*DHURANDHAR THE REVENGE  TRAILER OUT TOMORROW AT 11:01AM*


After weeks of speculation and mounting fan frenzy, *Jio Studios* and *B62 Studios* have announced the trailer release date of *Ranveer Singh's Dhurandhar The Revenge!* The spy-action entertainer’s striking poster confirms the much awaited moment - *the trailer drops tomorrow at 11:01AM*.


In the story of unknown men, the conflict feels more personal this time with Ranveer Singh returning in his dual avatars as _Jaskirat Singh Rangi_ and _Hamza Ali Mazari_, raising the stakes of this gripping spy-action saga.


The first instalment shattered box office records across India and internationally, particularly in North America, Canada, the UK and Australia. Trade and exhibitors are already betting big on _Dhurandhar The Revenge_, with strong international advance trends signalling yet another massive global run.


Jio Studios presents a B62 Studios production, an _Aditya Dhar Film - Dhurandhar The Revenge_, will release in five languages - Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada. 

The high-octane spy-action thriller, written, directed and produced by Aditya Dhar and produced by Jyoti Deshpande and Lokesh Dhar, arrives in theatres worldwide on 19 March 2026, on the occasion of Gudi Padwa and Ugadi, and ahead of Eid.


*The story of unknown men unfolds in cinemas globally on 19 March 2026.*

JIO STUDIOS & B62 STUDIOS UNVEIL THE TRAILER OF DHURANDHAR THE REVENGE

 *JIO STUDIOS & B62 STUDIOS UNVEIL THE TRAILER OF DHURANDHAR THE REVENGE WITH RANVEER SINGH HEADLINING ADITYA DHAR’S SPY-ACTION THRILLER INSTALMENT*




_Scale. Tension. Deadly…And You Are Still Not Ready For This_.


The most awaited trailer of the most awaited event of the year, Dhurandhar The Revenge is finally here and it makes an explosive statement. After Dhurandhar emerged as a box-office juggernaut and the biggest Hindi film of all time, the instalment is set to arrive, mounted on an even grander canvas, raising the stakes and intensity to an entirely new level. 


The trailer showcases a formidable Ranveer Singh as Jaskirat Singh Rangi, returning with ferocious intensity in dual avatars — Jaskirat and Hamza. The narrative deepens with powerful character arcs, featuring R. Madhavan as the strategic mastermind Ajay Sanyal, Arjun Rampal in his chilling turn as ISI Major Iqbal, and Sanjay Dutt delivering raw, commanding force as SP Chaudhary Aslam. With high-octane action, razor-sharp dialogues, and moments designed to ignite theatre-wide whistles, the trailer sets the tone for a revenge saga mounted at an unprecedented scale.  


“Honsla. Eendhan. Badla.” hints at the epic revenge driving the sequel forward.


Presented by Jio Studios and produced by B62 Studios, Dhurandhar The Revenge will release in five languages — Hindi, Telugu, Tamil, Kannada and Malayalam. The high-octane spy-action spectacle is written, directed, and produced by Aditya Dhar, and produced by Jyoti Deshpande and Lokesh Dhar. Releasing worldwide on 19 March 2026, with the festive celebrations of Gudi Padwa and Ugadi, and ahead of Eid, the Aditya Dhar film is poised to storm cinemas across the globe.


The story of unknown men unfolds in cinemas worldwide on 19 March 2026.


https://youtu.be/NHk7scrb_9I?si=eDRSqYdaC9oHgJYZ

காத்திருப்பு முடிந்தது

 *காத்திருப்பு முடிந்தது!*


*ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் வழங்கும் ஆதித்யா தரின் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் துரந்தர் பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் களமிறங்குகிறார் - டிரெய்லர் வெளியானது!*



பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை.


இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது.


ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண்ட் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் தங்களது பவர்ஃபுல்லான நடிப்பால் மிரட்டியுள்ளனர். தியேட்டர்களில் விசில் பறக்க வைக்கும் மாஸ் காட்சிகள், அதிரடி ஆக்‌ஷன் மற்றும் கூர்மையான வசனங்களுடன், இதுவரை காணாத பிரம்மாண்டமான ஒரு பழிவாங்கும் படமாக இது உருவாகியுள்ளது என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.


தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல் என்ற வசனங்கள் இந்த இரண்டாம் பாகம் எந்த அளவிலான பழிவாங்கும் கதையாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறது.


ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஆதித்யா தார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை-ஆக்‌ஷன் திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பட்வா, உகாதி பண்டிகைகளை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமிக்க ஆதித்யா தாரின் இந்த பிரம்மாண்ட படைப்பு தயாராகி வருகிறது.


அடையாளம் தெரியாத மனிதர்களின் இந்த அதிரடி வேட்டை, 2026 மார்ச் 19 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தொடங்குகிறது.

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் "மரகதமலை " ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது!!

 பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் "மரகதமலை " ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது!!









































அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளது "மரகதமலை "


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும்        " மரகதமலை " படம் பிடிக்கும் இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை!!


ஏப்ரல் 3ஆம் தேதி குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது         " மரகதமலை " திரைப்படம் 


தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது " மரகதமலை " 


அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.


இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.


மரகதமலை 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை.

ஒரு ஜமீனிடம் இருக்கும் புதையலை ஒரு கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அவர்களிடத்தில் இருந்து புதையலை காப்பாற்றுவதற்கான ஜமீன் தன் மனைவி, பிள்ளையை காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது அனைவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ?, ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா? என்பதை தான் சாகசங்கள் நிறைந்த மாயாஜால கதையாக சொல்லியிருக்கிறேன்.


தடா வனப்பகுதியில் சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குதிரையை மட்டும் ஒரிஜினலாக பயன்படுத்தி விட்டு, மற்ற விலங்குகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஆனால், அது கிராபிக்ஸ் போல் தெரியாதவாறு காட்சிகள் தரமாக வந்திருக்கிறது. அதேபோல், படத்தில் டிராகனையும் உருவாக்கியிருக்கிறோம், தமிழ் சினிமாவில் டிராகனை இதுவரை யாரும் படத்தில்  பயன்படுத்தியதில்லை, நாங்கள் தான் முதல் முறையாக செய்திருக்கிறோம். இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும்.


சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அனைத்து அம்சங்கள் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு படமாக "மரகதமலை " இருக்கும். படத்தை முடித்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் S.லதா.


எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.


இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

தமிழ் சினிமா தற்போது பல சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள்

 தமிழ் சினிமா தற்போது பல சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள்

மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு !!!

















சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும் மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் R.V .உதயகுமார் பேச்சு !!!


படத்தை ஓடிடி, டிஜிட்டலில்  விற்பது சவாலாக உள்ளது மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தோஷ் பிரதாப் பேச்சு !!!


கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள  “மரகதமலை” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!


அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.


விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்.., 


இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது.., 


பத்திரிக்கை நண்பர்களுக்கும் இங்கு கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள். இயக்குநர் லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். தனது கனவை விட்டுவிடாமல் “மரகதமலை” என்ற கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.


இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்கிடையில் தைரியமாக இந்த முயற்சியை எடுத்த லதா மேடத்திற்கு பாராட்டுகள். சம்மர் ஹாலிடே முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக உள்ள “மரகதமலை” திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். நடிகர் சந்தோஷ்  மற்றும் முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள். நன்றி. 


நடிகர் ஜெகன் பேசியதாவது..,


என்னுடைய குருமார்கள், தலைவர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்..


இந்த படத்தில் நிறைய அன்பும் உண்மையான ஆர்வமும் இருக்கிறது. சந்தோஷ் இந்த படத்தின் ஹீரோ. அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும் தம்பி ராமையா போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்த அனுபவமும் மிகவும் சிறப்பானது.  குழந்தைகள் கூட இதில் நடித்திருக்கிறார்கள்.சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் இந்த படம் குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.


தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராஜா பேசியதாவது.., 


இங்கு கலந்து கொண்டுள்ள திரைத்துறை ஜாம்பவான்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து புதிய பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


“மரகதமலை” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு பெண்மணி என்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்தபோது அதில் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருப்பது தெரிகிறது. இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. திரைத்துறை தற்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி போன்ற உரிமைகள் கூட எளிதாக கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. பல திரைப்படங்கள் தயாராக இருந்தும் வெளியீடு இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இத்தகைய சூழலில் சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு ஊடகங்களும் திரைத்துறையும் ஆதரவு அளிக்க வேண்டும்.


இந்த படம் முன்கூட்டியே சென்சார் செய்யப்பட்டு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்மணி இத்தனை முயற்சியுடன் இந்த படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. “மரகதமலை” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல வருவாய் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். 


நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,


இன்றைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது மிகவும் கடினமாகியுள்ளது. பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. ஓடிடி, டிஜிட்டல் போன்ற விஷயங்களும் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை விரைவில் நல்லதிற்கு மாற வேண்டும் என்று நம்புகிறேன்.


நான் ஒரு நடிகராக பெரிய படங்களோடு சேர்த்து சிறிய படங்களிலும் நடிப்பதற்குக் காரணம், புதிய இயக்குநர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எனக்கும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்கள் இருந்தார்கள். அதுபோல் நானும் ஒரு விதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


“மரகதமலை” போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன. அதனால் இந்த படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கண்ணன், இயக்குநர் லதா மேடம், படக்குழு மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. 


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., 


இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. ஹீரோவும் ஹீரோயினும் நல்ல கெமிஸ்ட்ரியுடன் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களை கடந்து இந்த படத்த உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.


குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள “மரகதமலை” திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். இங்கு  இவர்கள் கஷ்டபட்டு படமெடுத்துள்ளார்கள், அவர்களை அனைவரும் வாழ்த்துவோம்.  நன்றி. 



இயக்குநர் S.லதா பேசியதாவது…, 


இங்கு கலந்து கொண்டுள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். “மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.


தடா  ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.


மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆதரவளித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. 



தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., 


மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது  மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் லதாவுக்கு வாழ்த்துக்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்தையும் லதா அவர்கள் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது, சிறப்பான முயற்சி.


இந்த படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ஆர். கண்ணன் அவர்கள் இந்த படத்தை நிறைவு செய்ய முக்கிய ஆதரவாக இருந்தார், முழு படக்குழுவும் ஒருங்கிணைந்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. 


தமிழ் சினிமா தற்போது சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.  சிறந்த கதையுடன் படங்களை உருவாக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் நல்ல படம் வந்து ஜெயித்துக் கொண்டு தான் இருக்கிறது. “மரகதமலை” திரைப்படம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.


எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.


இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.