Featured post

இந்திய திரைத்துறையின் பிரம்மாண்ட ‘இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி

 *இந்திய திரைத்துறையின் பிரம்மாண்ட ‘இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி (INCA) விருதுகள் 2026’ அதிகாரப்பூர்வ அறிக்கை!* 12 இந்திய திரைத்துறையை சார...

Wednesday, 18 February 2026

இந்திய திரைத்துறையின் பிரம்மாண்ட ‘இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி

 *இந்திய திரைத்துறையின் பிரம்மாண்ட ‘இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி (INCA) விருதுகள் 2026’ அதிகாரப்பூர்வ அறிக்கை!*






12 இந்திய திரைத்துறையை சார்ந்த நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் இதர திறமையாளர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி தனது ’INCA விருதுகள் 2026’ விழாவை மும்பையில் வரும் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.


இந்த விழாவிற்கு இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் (Producers Guild of India) தலைமை ஆதரவாளராக இணைந்துள்ளதன் மூலம் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க அகாடமி தளமாக INCA திகழ்கிறது.


கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான திரைப்படங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. 


மேலும் விவரங்களுக்கு www.inca.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 1, 2026.

Official Announcement of the Grand “Indian National Cinema Academy (INCA) Awards 2026

 *Official Announcement of the Grand “Indian National Cinema Academy (INCA) Awards 2026”*






The Indian National Cinema Academy is set to host the prestigious INCA Awards 2026 in Mumbai on April 15 and 16, bringing together actors, technicians, and talented professionals from 12 Indian film industries onto a single grand platform.


With the Producers Guild of India serving as the Chief Supporting Partner, INCA stands as a credible and respected academy platform in the Indian film industry.


Applications are now open for films released across India in the year 2025.


For more details, visit: www.inca.in

Last date for submission: March 1, 2026.

Jockey' produced by PK7 Studios and directed by Dr. Pragabhal successfully enters 4th week

 *'Jockey' produced by PK7 Studios and directed by Dr. Pragabhal successfully enters 4th week*



*Audience and media praise 'Jockey', first film to revolve around the traditional cultural sport of goat fight (keda sandai) that takes place in Madurai*


Following the success and critical acclaim of 'Muddy', the first film in India based on the challenging mud racing sport conducted in rainforests, director Dr. Pragabhal's next film titled 'Jockey' hit the screens on January 23.


Produced and presented by PK7 Studios, 'Jockey' is set in Madurai and the first movie to revolve around the traditional cultural sport of goat fighting (keda sandai), capturing the essence of the land and the character of its people. Audience, press, media and critics have heaped laurels on the film. 


‘Jockey’ has entered its fourth week of release and is continuing its successful theatrical run. Speaking about this, director Dr. Pragabal said, "In today’s times, a film crossing some days itself is a very big achievement. 'Jockey' has been running successfully and people from various sections are continuously appreciating it. My heartfelt thanks to Tamil audiences who always support quality cinema, as well as journalists, press, and media professionals.”


Yuvan Krishna and Ridhaan Krishnas, who starred in director Dr. Pragabhal's maiden movie 'Muddy', play key roles, while Ammu Abhirami plays the female lead. Several popular actors have played important characters.


The film features music by Sakthi Balaji, cinematography by Udhayakumar, and editing by Srikanth. R.P. Bala worked as the Creative Producer. Production Controller: S. Sivakumar, Art Director: C. Udhayakumar, Audiography: M.R. Rajakrishnan, Stunt Choreography: Jackie Prabhu, Costumes: Joshua Maxwell J, Makeup: Pandiyarajan, Colorist: Ranga.


'Jockey', produced by PK7 Studios and directed by Dr. Pragabhal, starring Yuvan Krishna, Ridhaan Krishnas, and Ammu Abhirami in lead roles, is successfully running for four weeks.


***

4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

 “4த் ஃப்ளோர்”  திரைப்பட இசை வெளியீட்டு விழா !! 













MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான  திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம்  “4த் ஃப்ளோர்”.  


இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்.., 


தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது.., 

எல்லாருக்கும் வணக்கம். எங்களின்  4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது.  நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம்.   இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை  கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம். அந்த விஷயத்தில் இந்த படம் நல்லபடியாக வந்திருக்கிறது. ஒத்துழைத்த ஆதி, இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி.  அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


தயாரிப்பாளர் தனஞ்செயன்  பேசியதாவது.., 

4த் ஃப்ளோர் டிரெய்லரைப்  பார்த்தேன். நன்றாக இருக்கிறது. ராஜா சார், நீங்கள் திருப்பூரிலிருந்து வந்து இவ்வளவு பேஷனோட ஒரு படம் எடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அடையணும். ஆரி 10 வருடமாக நல்ல படங்கள் செய்து வருகிறார். அவர் பெரிய வெற்றி பெற வேண்டும்.  இன்றைக்கு தமிழ் சினிமாவில் நிறைய புது புது, திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். எல்லாருமே சரியான வழிகாட்டுதலோடு, குறைந்த பட்ஜெட்டிலேயே அவங்க படங்களை எடுக்க உதவி செய்தால், இன்னும் நிறைய நல்ல படைப்பாளிகள், தமிழ் சினிமாவுக்குள் வர முடியும். இந்த படத்தின் டிரெய்லரிலேயே நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள்.  அனிமேஷன், திரில்லர், கனவுகள்… ஒரு மனிதனுடைய கனவிலிருந்து வர்ற விஷயங்கள் எப்படி நிஜமாக மாறுது, அதிலிருந்து என்னென்ன சம்பவங்கள் நடக்குது, அந்த சம்பவங்கள் உண்மையாகும்போது, ஹீரோ சந்திக்கிற பிரச்சனைகள் என்ன?,   இதை எல்லாம் டிரெய்லரிலேயே அழகாக சொல்லியிருக்கிறார்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 


இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது.., 

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் என் நீண்டகால நண்பர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து அவருடைய வேலை என்னை எப்போதும் பிரமிக்க வைத்திருக்கிறது. அமைதியாக, நேர்த்தியாக, மிகப் பெரிய அழுத்தத்தை ஹேண்டில் செய்து ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வருவது சுலபமல்ல. அந்த வகையில் இந்த படக்குழு பாராட்டுக்குரியது. இது ஒரு டிஃப்ரெண்டான ஜானரில் வந்திருக்கும் படம்.  நிச்சயமாக பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளருக்கும்,  என் ஊரான பழனியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஹீரோ ஆரிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.



இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது.., 

நடிகர் ஆரியை ஆரம்ப கட்டத்திலிருந்து பார்த்து வருகிறேன். அவர் கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆரி திரையில் தோன்றும் ஒவ்வொரு நிமிடமும்

அந்த ஃப்ரேமுக்கு, ஒரு தனி உயிர் கிடைக்கிறது. அந்த அழகு வெளிப்புற அலங்காரம் அல்ல; உள்ளுக்குள் இருக்கும் உண்மை, அமைதி, சென்சிபிலிட்டி.

எதையும் மிகைப்படுத்தாமல், இயல்பாகவே கவர்கிறவர் அவர். நடிகனாக மட்டுமல்ல, மனிதராகவும் மதிக்கத் தக்கவர். அவருடன் வேலை செய்வது ஒரு நிம்மதியான அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் அவர்  தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறார்.

அதுதான் இந்த படத்தின் மிகப் பெரிய பலம்.

நடிகர்களும்  டெக்னிக்கல் டீமும்

ஒரே மனதோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள்.  சினிமா என்பது தனி மனித சாதனை அல்ல

என்று நிரூபிக்கும் ஒரு முயற்சி.

இந்த படம் அனைவருக்கும் அடுத்த கட்டப் பயணமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.


நடிகர் பரத் பேசியதாவது.., 

ஆரியும் நானும்  பல வருடங்களாக இந்த இன்டஸ்ட்ரியில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வருடம் முன்னாடி தான் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம்.

எனக்கு தனிப்பட்ட முறையில், க்ரைம் திரில்லர் என்ற ஜானர் எப்போதுமே பிடிக்கும்.

என்னுடைய  திரைப்பயணத்தில் தெரியாமலேயே,  கடைசி ஏழு படங்களும் திரில்லர் படங்களாகவே அமைந்திருக்கிறது.

அந்த ஜானருக்கு ஒரு உத்தரவாதம்  எப்போதும் இருக்கும். அதாவது, சரியான திரைக்கதையும், நல்ல  விளம்பரமும் இருந்தால் அந்த படம் நிச்சயமாக ஓடும். அந்த எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. குறிப்பாக, டைட்டில் டிசைன் கூட ரொம்ப அழகாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்.


இயக்குநர் சேரன் பேசியதாவது.., 

திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும்.

“திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.  இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.


இந்த படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். அந்த டைட்டிலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா  அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.


இந்த படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி  என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும். வாழ்த்துக்கள். 



நடிகர் பிரஜின் பேசியதாவது.., 

இது ராஜா சார் தயாரித்த நான்காவது திரைப்படம். ராஜா சாரை நான் முதலில் சந்தித்தது, “இந்த படம் நான் செய்வதாக விவாதிக்காகத்தான். ஆனால் அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் எவ்வளவு நேர்மையான, தெளிவான தயாரிப்பாளர் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு கதைக்கு என்ன தேவையோ, அதை முழுமையாக செய்து தரக்கூடியவர் ராஜா சார். நல்ல தயாரிப்பாளர்.


இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மணன் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்.

கேமராவில் அவர் செய்த வேலை மிகவும் அருமை. அதுமட்டுமல்ல, அவர் ஒரு நல்ல நண்பரும் கூட. அவருக்கு வாழ்த்துக்கள். 


இன்று நான் இங்கே வந்திருப்பதற்கான இன்னொரு முக்கியமான காரணம் என் நண்பர்… என் மச்சான்… ஆரி.

நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் Mr. Chennai Finalists ஆக எங்கள் பயணத்தை ஆரம்பித்தவர்கள். அந்த நேரத்திலிருந்து இன்று வரை, ஆரியின் பயணம் எப்போதுமே உழைப்பின் அடையாளமாகத்தான் இருக்கிறது.

அவன் மிகக் கடினமாக உழைக்கும் மனிதன்.

ஒரு நல்ல நடிகன். அதற்கும் மேலாக, ஒரு நல்ல நண்பன்… ஒரு நல்ல மனிதன். எந்த விதமான ஈகோவும் இல்லாமல்,

யார் எப்போது என்ன உதவி கேட்டாலும்

“பண்ணிடலாம்” என்று முன்னால் வந்து நிற்பவன். இந்த படம் நல்லபடியாக ஓட வேண்டும் என்று என் மனதார நான் வேண்டிக்கொள்கிறேன். இந்த படக்குழுவின் உழைப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.  




இசையமைப்பாளர் தரண்குமார் பேசியதாவது.., 

இன்று என்ன பேச வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வரவில்லை. ஆனால் மேடையில் நின்றபோது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது – இந்த படத்திற்கு உயிர் கொடுத்தவர் தயாரிப்பாளர் ராஜா சார் என்பதுதான். ராஜா சார் ஒரு குழந்தை மனசு கொண்டவர். இந்த படத்தின் மூலமாகத்தான் நான் அவரை நெருக்கமாக அறிந்தேன். ஆனால் அவருக்குள் இருக்கும் தீவிரமும், இந்த படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற வெறியும் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த விழாவுக்கும், இந்த ரிலீஸுக்கும் நான் வந்ததற்கான ஒரே காரணம் அவர்தான்.

 

சின்ன படங்கள் ஜெயிக்கணும் என்று நாம் எல்லாரும் பேசிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் அது நடக்கணும்னா, இப்படிப்பட்ட நேர்மையான முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். நான் செய்த பல படங்களின் இசை என் ஸ்டூடியோவுக்குள்ளேயே தங்கிப் போயிருக்கிறது. அந்த உழைப்பு வெளியே வந்து ஜெயிக்கணும்னா, இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும்.


ஆரி ப்ரோவுடன் ரொம்ப நாளாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று அது நிறைவேறியிருக்கிறது. அவர் ஒரு நடிகன் மட்டும் இல்ல; ஒரு சகோதரன் மாதிரி. மிக நேர்மையான, பொறுமையான, சின்சியரான மனிதர்.


இயக்குனர், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் உட்பட முழு டெக்னிக்கல் டீமும் மிக அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். ஸ்கிரீன்ப்ளேவும், இசையும் சரியான இடத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த படம் ஜெயிக்கணும். ஜெயிக்கும்.

அதுதான் என் முழு நம்பிக்கை. நன்றி. 



இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது.., 

 ‘4த் ஃப்ளோர்’ என்ற டைட்டிலே மிக அட்டகாசமாக இருக்கிறது. ஒரு படத்திற்கு முதல் டிக்கெட் என்பது அதன் டைட்டிலும், அதன் விளம்பர முகமும் தான். ஒரு மனிதன் திரையரங்குக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது அந்த முதல் பார்வையே. அதை இப்படம் உருவாக்கியுள்ளது. 

ஆரியை பல வருடங்களாக எனக்குத் தெரியும் பிக்பாஸில் ஜெயித்த போது அதன் புகழை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தியவர். மிகச்சிறந்த மனிதர். அவரது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். 


செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் பேசியதாவது.., 

எனக்கு முதன்முதலில் சினிமாவை  உணர வைத்தவர் என்றால், அது ராஜா சார் தான். சென்னை வந்த போது,  ஆரம்பித்த நட்பு, அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை. அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இந்தப் பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.

இந்த படம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது. அதற்காக நாங்கள் முழு நம்பிக்கையோடு, கவனமாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு வெற்றியாக இந்த படம் மாற,

உங்கள் அனைவரின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு தேவை. அந்த ஆதரவை தொடர்ந்தும் கொடுங்கள். நன்றி.”



இயக்குநர் L R சுந்தரபாண்டி பேசியதாவது.., 

இது எனக்கு மூன்றாவது படம்.

தயாரிப்பாளர் ராஜா சார். அவரை அண்ணன் என்று சொல்லவா, நண்பர் என்று சொல்லவா எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – இந்த படத்தின் மூலம் ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது.


இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்க முடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும்.

“இது என்ன ஜானர்?” என்று கேட்டால்,

ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம்.


கதையை முதலில் கேட்டவுடனே

ஆரி  சார் இந்த படத்தில் இணைந்தார்.

இந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே வந்த முதல் நபர் அவர்தான்.

அதுமட்டுமல்ல, சின்னதாக ஆரம்பித்த இந்த படத்தை பெரிய அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்தையும்

அவர்தான் கொடுத்தார்.

இது தயாரிப்பாளர்–டெக்னீஷியன் உறவாக இல்லாமல், நண்பர்கள் சேர்ந்து செய்த ஒரு படமாக வந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், பாடல்கள், எமோஷன்

எல்லாம் கலந்து வந்த ஒரு முயற்சி.

அது உங்களுக்கெல்லாம் ஒரு திருப்தியான அனுபவத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது உங்கள் கைகளில்தான் உள்ளது. மீடியா நண்பர்கள் அனைவரும் இந்த படத்திற்கு உங்கள் முழு ஆதரவை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.



நடிகர் ஆரி பேசியதாவது.., 

இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும்  நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.


சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி.


பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 


ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும்,  அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி.  இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக  உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு  என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது.  நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி. 


இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.  தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார்.  தணிக்கை செய்யப்பட்ட  இந்தபடம் யூ/ஏ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


 “போடா போடி” படப்புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி”, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.


செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும்  27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


தொழில் நுட்ப குழு விபரம் 

இயக்குநர்: L R சுந்தரபாண்டி 

தயாரிப்பாளர்: A.ராஜா 

நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P

ஒளிப்பதிவு : J லக்ஷ்மன் 

இசையமைப்பாளர்: தரண் குமார்

பாடலாசிரியர் : கு கார்த்திக்

எடிட்டர்: ராம் சுதர்ஷன்

கலை: சுரேஷ் கல்லேரி 

நடனம் : அபு சால்ஸ்

ஸ்டண்ட்: டேஞ்சர் மணி 

மக்கள் தொடர்பு : A ராஜா

Achyuta Avataaram First Look வெளியீடு

 Achyuta Avataaram First Look வெளியீடு


*சைபர் த்ரில்லர் திரைப்படமான அச்சுத அவதாரம் - ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.* 







இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார். 

இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும்;

 மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது.

புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிறார்.


 

அச்சுத அவதாரம் 

படத் தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் பல சவால்களை சந்தித்த பிறகு, தன் மனதில் இருந்த கதையை எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அழகாக படத்தில் சொல்லியிருக்கிறார்.


உலகளாவிய சைபர் மோசடிகளின் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்ட இந்த கதை .

 இதன் தனித்துவம் என்னவென்றால், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய, பாரம்பரிய கிராமத்தை பின்னணியாகக் கொண்டது. உயர் தொழில்நுட்ப குற்ற உலகத்தையும், ஆழமான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணர்ச்சிகளையும் இணைக்கும் கதை இது.

இந்தப் படம் ஒரு கலாச்சார சங்கம முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.


 முக்கிய நடிகர்கள் மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்கள் —

மாளவிகா நந்தன், அவினாஷ், சீமா ,

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்


 தொழில்நுட்பக் குழுவில் பெரும்பாலானோர் கேரளாவிற்கு வெளியே இருந்து வருகிறார்கள்; மலையாளம் அவர்களின் முதல் மொழி அல்ல.


படம் பற்றி இயக்குனர் கூறியது.. அந்த பகுதியின் கலாச்சாரத்தை நகலெடுக்க முயலவில்லை. குழுவினர் பல மாதங்கள் காசரகோடில் தங்கி, அங்குள்ள வாழ்க்கையை கவனித்து, கேட்டறிந்து, அந்த இடமே கதையை வடிவமைக்க அனுமதித்தனர். 

மொழி சவால்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்; கதைதான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

இந்தப் படம் hyperlink-முறை கதை சொல்லல் முறையில் உருவாகிறது.

 காட்சியமைப்பில் தனித்துவம் காணப்படுகிறது. இயக்குநர் Punith, விருது பெற்ற ஒளிப்பதிவாளர் Anand Meenakshi உடன் இணைந்து, இடத்துக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும், பெரிய திரையில் வித்தியாசமான அனுபவமாகவும் உருவாக்க முயன்றுள்ளனர்.


2026 மே மாதத்தில் மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகிறது. நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் இந்த முயற்சி, இந்த கோடையில் தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



•தயாரிப்பு: Rayra Ventures (Ramesha C, Rudramurthy, Rakesh R)

கதை & இயக்கம்: Punith

நடிகர்கள் : Malavika Nandan, Avinash, Seema G. Nair

ஒளிப்பதிவு: Anand Meenakshi

இசை: Prasanna Kumar M S

எடிட்டிங்: Pavan Poovaiah

கலை இயக்கம்: Nagaraju & Naveen

பாடல்வரிகள்: Hareesh Mohanan

VFX & டிசைன்: Ident Labs

டிஜிட்டல் மார்க்கெட்டிங்: White Paper

Tuesday, 17 February 2026

Star studded ‘Nambikkai Global Launch’ attended by R. Sarathkumar, Seeman, Radhika Sarathkumar, Nassar and much more

 *Star studded ‘Nambikkai Global Launch’ attended by R. Sarathkumar, Seeman, Radhika Sarathkumar, Nassar and much more!*














The Malaysia-based media platform Nambikkai, which has built a strong identity over the past 27 years, grandly launched its new Indian branch in Chennai. The inaugural event was attended by leaders from various political parties, film personalities, media representatives and several distinguished guests.


Speaking at the event, Naam Tamilar Katchi chief coordinator Seeman said:

“Amid today’s media landscape controlled by parties or leaders, people like me look at ‘Nambikkai’ with great hope. Trust is not just a word. We hear that Nambikkai has spread its branches in countries like Singapore and Malaysia — my wish is that it spreads deep roots. In the coming election period, I believe Nambikkai will carry honest and truthful news to the people. I wholeheartedly wish that it earns the trust of Tamilians across the world.”


School Education Minister Anbil Mahesh Poyyamozhi said:

“Today is a day that sows trust. Trust can only be earned through our actions. In the social media era, we are in danger of losing authenticity. The trust we receive depends on how honestly we deliver ground realities. After Malaysia, Nambikkai has now arrived here. As Seeman said, convey things as they are. People will guide us. Media often first attracts the foolish with charm and speech, then silences the wise. Instead, boldly point out mistakes no matter who commits them. On behalf of the movement I belong to, I extend my wishes to Nambikkai along with all the dignitaries gathered here.”


Actor Sarathkumar said:

“Greetings to the Nambikkai group, which began in Malaysia and has now come to Chennai to earn everyone’s trust. My Paternal father Adithanar founded the newspaper Thanthi through immense effort. My father too worked alongside him for some time and I also spent a period in journalism. Journalism must function with the intention of speaking only the truth. Nambikkai has been operating for 27 years and plans to expand from Malaysia to Singapore, India and Dubai. I wish that it reaches many more countries and earns the trust of many more people.”


Actress Radhika Sarathkumar said:

“I’m happy to be here for the ‘Nambikkai Digital Launch' in India. You have come with a voice, a vision, and a promise — my congratulations. Media is not just about breaking news; it must act with responsibility. Justice, courage and honesty are the true ethics of journalism. Wishing you great success.”


Actor Nassar said:

“Today people are gradually losing trust in the media. Many stories are twisted just to create sensation. In our film industry, several good films disappear because of distorted reporting. I had stopped watching news channels for this reason. But Nambikkai makes me want to watch news again. Humanity runs on the hope that even if today is difficult, tomorrow will be better. We will receive clear and truthful news through Nambikkai. As Seeman said, you must grow deep roots. My best wishes.”

Actress Vani Bhojan and Micset Sriram inaugurated Kiki & Koko movie producer's experiential learning store "Color pencil"

 *Actress Vani Bhojan and Micset Sriram inaugurated Kiki & Koko movie producer's experiential learning store "Color pencil" in Chennai!*



India’s first experiential learning store for kids, Color Pencil, has been launched in Sky Hub, Chennai, Kilambakkam.


Created with the aim of making learning joyful and simple for children, the Color Pencil Kids Experiential Learning Store introduces education through experience. 


Speaking at the event, founder Narayanan said:

“Teaching children is an art. But today, education is being forced on them. Nowadays many people don’t even like children asking ‘why’. To change that, we created the ‘Joy of Y’ model at Color Pencil. This helps strengthen children’s foundational knowledge. We guarantee strong basics, not that children studying here will automatically enter IIT or score 100 out of 100.”


CEO Meena Chabbria added:

“We are launching many summer special classes here. Diploma-style classes such as Japanese language and origami will be conducted in an entertaining way for kids. There is no separate fee. By purchasing a book worth around ₹400, children can undergo training using it. For the first time in India, we have more than 34 books and a dedicated training model available here. This is India’s first store that sells learning materials exclusively for kids. The store is spread across 3,300 square feet. We plan to open five more stores across India next year. Learning and children’s happiness are the goals of Color Pencil.”


Special guest Vani Bhojan said:

“I’m happy to be part of this event. The moment I walked in, I could see many kids enjoying themselves in the store. I wish this continues successfully.”


Color Pencil brand ambassador Micset Sriram said:

“Congratulations on launching Color Pencil as a major initiative in Chennai. Knowledge and language are essential for a child’s development. Learning them through experience is a wonderful approach. Thank you for appointing me as Color Pencil’s brand ambassador.”

திரைத்துறை பிரபலங்கள் சரத்குமார், சீமான், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட

 *திரைத்துறை பிரபலங்கள் சரத்குமார், சீமான், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் கொண்ட ‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!*


மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் த













னி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையை இது நிச்சயம் பெறும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்” என்றார். 


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “நம்பிக்கை விதைக்கூடிய நாளாக இன்று இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் மூலம்தான் நம்பிக்கை பெற முடியும். சோஷியல் மீடியா யுகத்தில் யதார்த்த தன்மையை இழக்கும் சூழலில் உள்ளோம். அதனால், களத்தில் இருந்து உண்மைத்தன்மையுடன் செய்திகளை எந்தளவுக்கு நேர்மையாக கொடுக்கிறோம் என்பதில்தான் நம்பிக்கையை பெற முடியும். மலேசியாவை தொடர்ந்து இங்கும் ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. சீமான் அண்ணன் சொன்னதை போல உள்ளது உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் எங்களை வழிநடத்துவாரகள். தனது பேச்சு, கவர்ச்சி மூலம் முதலில் ஊடகங்கள் முட்டாள்களைத்தான் முதலில் கவரும். பின்பு, புத்திசாலிகளை வாயடைக்க வைத்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதை தைரியமாக சுட்டிக்காட்டி சொல்லுங்கள். இன்று வந்திருக்கும் அனைத்து ஆளுமைகளோடு இணைந்து நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாக ‘நம்பிக்கை’க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.


நடிகர் சரத்குமார், “மலேசியாவில் தொடங்கி இன்று சென்னை நோக்கி அனைவரின் நம்பிக்கை பெற வந்திருக்கும் ’நம்பிக்கை’ குழுமத்திற்கும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! என் பெரியப்பா ஆதித்தனார் மிகுந்த உழைப்பைக் கொடுத்து ஆரம்பித்த பத்திரிகைதான் தந்தி. அவருடன் என் அப்பாவும் சில காலம் பயணித்தார். நானும் சில காலம் பத்திரிகை உலகில் இருந்தேன். உண்மைகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பத்திரிகை இயங்க வேண்டும். 27 ஆண்டுகளாக ’நம்பிக்கை’ இயங்கி வருகிறது. மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர், இந்தியா, துபாய் செல்ல இருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளுக்கு சென்று பலரது நம்பிக்கையை இந்த ‘நம்பிக்கை’ பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார். 


நடிகை ராதிகா சரத்குமார், “’நம்பிக்கை’ டிஜிட்டல் லான்ச் இன் இந்தியா’ நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு வாக்குறுதியோடு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீடியா என்பது பிரேக்கிங் செய்திகளை தருவது மட்டுமல்லாது, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். நியாயம், துணிவு, நேர்மையான பார்வையோடு செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம். பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார். 


நடிகர் நாசர், “இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். பரபரப்பாக இருக்க வேண்டும் என்று பல செய்திகள் திரித்து கூறப்படுகிறது. குறிப்பாக, எங்கள் சினிமா துறையில் பல நல்ல படங்கள் திரித்து கூறி காணாமல் போய்விடுகிறது. இதனால் நான் செய்தி சேனல்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். ஆனால், என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கிறது இந்த ‘நம்பிக்கை’. இன்று ஒரு கஷ்டம் வந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மனிதகுலம் இயங்கி வருகிறது. தெளிவான, உண்மையான செய்திகள் ‘நம்பிக்கை’யில் நமக்கு கிடைக்கும். சீமான் அவர்கள் சொன்னது போல நீங்கள் வேர் விட வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.