Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’

 Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project Bhogi Shockingly M...

Wednesday, 25 February 2026

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’

 Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project Bhogi Shockingly Massy Rugged First Look Unveiled, Theatrical Release On August 28, 2026



Charming star Sharwa is leveling up in a big way, joining forces for the first time with action maverick Sampath Nandi for a massive pan-India period action drama titled Bhogi. Mounted on an epic scale by KK Radhamohan under Sri Sathya Sai Arts and presented by Lakshmi Radhamohan, the film is shaping up to be one of the most ambitious ventures in Sharwa’s career. The makers unveiled the intense first-look poster today.


Bhogi first look showcases Sharwa in his most rugged, ferocious, and intense transformation yet. The poster captures a gritty close-up that instantly announces a fierce mass avatar. His thick, unkempt beard, dense mustache, and wild curly hair give him a raw, battle-hardened presence- nothing polished, nothing restrained.


Sharwa sits behind a massive rustic machete-like weapon wrapped in cloth, hinting at brutal confrontations and a world driven by violence. The dark, smoky backdrop- filled with drifting embers and sparks, heightens the intensity and perfectly aligns with the film’s fiery tagline- “A Blood Fest.”


Sharwa has undergone a radical transformation for Bhogi, embracing a bold new look that perfectly embodies the intensity of his character. This isn’t just a makeover, but a complete reinvention, showcasing a side of the actor that was never seen before. Every element in the frame signals one thing- Sharwa is stepping into full beast mode.


Director Sampath Nandi has crafted a powerful period backdrop set along the North Telangana–Maharashtra border in the late 1960s.


The team is currently filming major action sequences in Hyderabad on a massive set. This schedule features two large-scale action episodes choreographed by renowned stunt master Dilip Subbarayan.


The film stars Anupama Parameswaran and Dimple Hayathi as the leading ladies, along with several popular actors in pivotal roles.


The film brings together a strong technical team. Kiran Kumar Manne leads the production design, Kishore Kumar Arokia handles the cinematography, and blockbuster composer Bheems Ceciroleo is in charge of the music.


The makers have also confirmed a grand pan-India release on August 28, hitting screens on the auspicious occasion of Raksha Bandhan, in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi simultaneously.


Cast: Charming Star Sharwa, Anupama Parameswaran, Dimple Hayathi


Technical Crew:

Writer, Director: Sampath Nandi

Producer: KK Radhamohan

Banner: Sri Sathya Sai Arts

Presents: Lakshmi Radhamohan

Music: Bheems Ceciroleo

DOP: Kishore Kumar Arokia

Art Director: Kiran Kumar Manne

Stunts: Dilip Subbarayan

PRO: Sathish Kumar, S2 Media

சார்மிங் ஸ்டார்' ஷர்வா நடிக்கும் 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 *'சார்மிங் ஸ்டார்' ஷர்வா நடிக்கும் 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*



*'சார்மிங் ஸ்டார்' ஷர்வா - பிளாக் பஸ்டர் இயக்குநர் சம்பத் நந்தி - கே. கே. ராதா மோகன் - ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் - கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது*


'சார்மிங் ஸ்டார்' ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் 'போகி' எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன் தயாரிக்கிறார். மேலும் இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். 


இதில் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் இந்த போஸ்டர் கடுமையான மற்றும் நெருக்கடியான காட்சியை பிரதிபலிக்கிறது. அத்துடன் வெகுஜன மக்களை கவரும் அவதாரமாகவும் தோன்றுகிறது. அவரது அடர்த்தியான ஒழுங்கற்ற தாடி, மீசை, சுருள் முடி.. ஆகியவை அவருக்குள் ஒரு தீவிரமான போர்க்குணம் இருப்பதை காட்சிப்படுத்துகிறது. இந்தத் தோற்றம் எதுவும் மெருகூட்டப்படவில்லை... எதுவும் கட்டுப்படுத்தப்படவில்லை.. என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. 


ஷர்வா துணியால் சுற்றப்பட்ட ஒரு பெரிய பழமையான கத்தி போன்ற ஆயுதத்தின் பின்னால் அமர்ந்திருப்பது- கொடூரமான மோதல்களையும் வன்முறையால் இயக்கப்படும் உலகத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மிதக்கும் தீப்பொறிகள் மற்றும் தீப்பொறிகளால் நிரப்பப்பட்ட இருண்ட புகை பிடித்த பின்னணி... காட்சியின் தீவிரத்தை அதிகரிக்கிறது. அத்துடன் இணைக்கப்பட்டுள்ள 'ரத்தங்களுடனான விழா' எனும் டேக் லைன் மிகச் சரியாக பொருந்துகிறது. 


ஷர்வா 'போகி' படத்திற்காக ஒரு தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் ஒரு துணிச்சலான தோற்றத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது சாதாரணமான மாற்றம் அல்ல... முழுமையான மீள் கண்டுபிடிப்பு. இதற்கு முன் பார்த்திராத நடிகரின் மற்றொரு பக்கத்தையும் இது காட்டுகிறது. அத்துடன் போஸ்டரில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அம்சமும் ஒரு விசயத்தை குறிக்கிறது. அது ஷர்வா முழுமையாக ஒரு மிருகத்தனமான முயற்சியில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை குறிக்கிறது. 


இயக்குநர் சம்பத் நந்தி- 1960களின் பிற்பகுதியில் வடக்கு தெலுங்கானா - மகாராஷ்டிரா எல்லையில் அமைக்கப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க காலகட்ட பின்னணியை வடிவமைத்துள்ளார். 


இந்தக் குழு தற்போது ஹைதராபாத்தில் மிகப்பெரிய அரங்கில் அதிரடி ஆக்சன் காட்சிகளை படமாக்கி வருகிறது. இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இரண்டு பெரிய அளவிலான அதிரடி அத்தியாயங்களை படமாக்குகிறார். 


இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் முன்னணி நடிகைகளாக நடிக்கிறார்கள். மேலும் பல பிரபல நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 


இந்த திரைப்படத்தில் வலிமைமிக்க தொழில்நுட்ப குழுவினர் ஒன்றிணைந்துள்ளனர். கிரண் குமார் மன்னே கலை இயக்குநராகவும், கிஷோர் குமார் ஆரோக்கியா ஒளிப்பதிவாளராகவும், பிளாக் பஸ்டர் இசைமைப்பாளரான பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். 


ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது. 


நடிகர்கள் : 'சார்மிங் ஸ்டார்' ஷர்வா , அனுபமா பரமேஸ்வரன், டிம்பிள் ஹயாதி மற்றும் பலர். 


தொழில்நுட்பக் குழு : 

எழுத்து & இயக்கம் : சம்பத் நந்தி 

தயாரிப்பாளர்: கே. கே. ராதாமோகன் 

தயாரிப்பு நிறுவனம்:  ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் 

வழங்குபவர்கள் : லட்சுமி ராதா மோகன் 

இசை : பீம்ஸ் செசிரோலியோ 

ஒளிப்பதிவு : கிஷோர் குமார் ஆரோக்யா 

கலை இயக்குநர் : கிரண்குமார் மன்னே 

சண்டை பயிற்சி : திலீப் சுப்பராயன் 

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா)



நடிகர் கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'மென்டல் மனதில் ' (Mental Manadhil) படத்தின் 'உயிரே உயிரே' (Uyire Uyire )ஃபர்ஸ்ட் சிங்கிள்*

 *நடிகர் கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'மென்டல் மனதில் ' (Mental Manadhil) படத்தின் 'உயிரே உயிரே' (Uyire Uyire )ஃபர்ஸ்ட் சிங்கிள்*



*செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட 'மென்டல் மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்*


தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மென்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே உயிரே' முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் 'மென்டல் மனதில்' திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் - மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.


இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் 'உயிரே உயிரே' முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல், இயக்குநர் செல்வராகவன் வரிகளில், ஜி வி. பிரகாஷ் இசையில்,பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் வரிகள் - வசீகர குரல் - இசை கோர்வை - என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் உள்ளதாலும் , காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதாலும், இசை ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. 


'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் - ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணி- 'மென்டல் மனதில்' படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது



LINK : 

https://www.youtube.com/watch?v=qPaPA3AQ4JI

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார்

 *‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார் !!*



*ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட   'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் !!*


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  'அன்பே டயானா' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். 


யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.


தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.


‘ஜமா’ படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன், இப்படத்தில் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன், இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில், ரத்தக் கறைகள் படிந்த உடையுடன் மணமகன் கோலத்தில் நிற்கும் பாரி இளவழகன், அதற்கு நேரெதிராக வெள்ளை உடையில் கையில் மலர்க்கொத்து ஏந்தி புன்னகையுடன் மணகமகள்  கோலத்தில் நிற்கும் ரம்யா ரங்கநாதன்,  என இருவரும் கல்யாண கோலத்தில் இருக்க, அவர்களைச்  சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் காட்டும் பலவிதமான முக பாவனைகள், பறக்கும் பல பொருட்கள் என எல்லாம் இணைந்து, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினர் என்பதை உறுதி செய்கின்றன.


படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கையாள்கிறார்.


சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், சம்மர் வெளியீட்டுக்காக தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 வெகு சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பை குறுகிய காலத்திலேயே முழுமையாக முடித்து அசத்திய படக்குழு, தற்போது டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tuesday, 24 February 2026

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது

 *தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!*




ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ இரண்டு கலாச்சாராங்களை ஒன்றிணைக்கிறது. 


மும்பை, 24 பிப்ரவரி 2026: குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகள், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தருணங்கள் அல்லது வீட்டைத் தாண்டிய தொலைதூர உலகங்களில் என எதிர்பாராத இடத்தில் இருந்துதான் கனவுகள் தொடங்குகின்றன. செண்பாவுக்கும் இது விதிவிலக்கல்ல! தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையை தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. அந்த கனவு நனவாகும் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் ‘மேட் இன் கொரியா’ நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது. 


ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ செண்பா என்கிற செண்பகத்தின் கதையை சொல்கிறது. கொரிய கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான இந்தப் பயணமே ‘மேட் இன் கொரியா’.


படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்ல தூண்டியது. மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.


நெட்ஃபிலிக்ஸ் இந்தியா கண்டெண்ட்டின் வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்தியாவில் நெட்ஃபிலிக்ஸை மேலும் வலுப்படும் இந்த சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதைகளை உலகளவில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும். ரா. கார்த்திக் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’ புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நெட்ஃபிலிக்ஸ் பெருமை கொள்கிறது” என்றார்.


செண்பாவின் உணர்வுப்பூர்வமான பயணத்தை தனது திறமையான நடிப்பில் பிரியங்கா மோகன் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை-ஜின் மற்றும் நோ ஹோ-ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தனது கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறுகையில், “கொரியாவைப் பற்றி செண்பாவின் கனவுகள் வியப்பும் ஆர்வமும் நிறைந்தது. இந்தக் கதையை முதலில் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸூடன் இணைந்திருப்பது இந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது”.


கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது. 


நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது. 


*நடிகர்கள்:* பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின்


*தொழில்நுட்பக்குழு விவரம்:* 


எழுத்து, இயக்கம்: ரா.கார்த்திக்,

தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர்,

தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்


*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*


நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்

 *ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!*





நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக தயாரித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு படத்துடன் வந்திருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.


இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும். 


‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 


படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது” என்றார்.


ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், “மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள்.    படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.


இப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ’வல்லோனே’ பாடல் மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா  அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பாடவைத்தது பாராட்டை பெற்றது.

Romeo Pictures Raahul to Release Meera Kathiravan’s ‘Habeebi’ Across Worldwide

 *Romeo Pictures Raahul to Release Meera Kathiravan’s ‘Habeebi’ Across Worldwide*





Romeo Pictures Raahul, known for backing both blockbuster entertainers and compelling content-driven cinema, now lends his distinctive touch to yet another notable project. The reputed producer-distributor will be releasing the Tamil film ‘Habeebi’ across Worldwide.


Directed by critically acclaimed filmmaker Meera Kathiravan, Habeebi is positioned as a heartfelt narrative that portrays the life, culture, and emotional landscape of Tamil Muslims with authenticity and sensitivity. True to the meaning of its title:  “My Beloved” -  the film is described as a story rooted in love, human connection, and lived experiences.


Meera Kathiravan, celebrated for his socially resonant works such as Aval Peyar Tamilarasi and Vizhitthiru, brings a deeply personal vision to Habeebi. The film features a cast of fresh faces, with Kasturi Raja appearing in a pivotal role. Music is composed by Sam C.S., adding further depth to the film’s emotional fabric.


Speaking about the film and great news about Romeo Picture’s Midas-Touch, director Meera Kathiravan says, “ Habeebi is not merely a film, but an emotional reflection of a world I have closely observed and lived within. It is a story told with gratitude, honesty, and love. In a time where misunderstandings often shape narratives, I wanted to present life as it is, human, warm, and deeply rooted in affection. I feel so delighted that Romeo Pictures Raahul has shown a great interest in this film. His presence is going to add a beautiful Golden-touch, and am glad that the film is going to reach beyond our team’s imagination.” 


Romeo Pictures Raahul says, “Cinema has the power to transcend boundaries and bring audiences closer to lived realities. Habibi is a film driven by sincerity, emotion, and meaningful storytelling. We are delighted to bring this beautiful and important work to audiences across Worldwide . Few films carry a deeply personal reflection while also leaving a lasting impact: for me, Habeebi is one such film, and I firmly believe audiences will embrace it. We are planning a comprehensive marketing strategy to ensure the film receives a strong and fitting release. Announcements regarding the trailer, audio launch, and theatrical release date will be made soon.”


It’s worth mentioning that the film had stolen the spotlights for one of its promising pre-release highlight of  the recreation of the iconic voice of Nagore E.M. Hanifa through artificial intelligence. The song “Vallone”, rendered in the legendary singer’s recreated voice with lyrics by Yugabharathi, stands as both a technological and cultural tribute.

From Tamil Nadu to Seoul: Netflix’s ‘Made In Korea’ Arrives March 12

 *From Tamil Nadu to Seoul: Netflix’s ‘Made In Korea’ Arrives March 12*

 



Produced by Rise East Entertainment and helmed by Ra.Karthik, Made In Korea brings together Priyanka Mohan and South Korean actor Park Hye-Jin in a cross-cultural cinematic collaboration 

 

Dreams often begin in the most unexpected places — in a childhood story, while idling away in a classroom, or in worlds far beyond home. For Shenba, it was no different. In the midst of her everyday routine in a small town in Tamil Nadu, she held on to a simple, wholehearted dream: one day, she would travel to South Korea. Join Shenba as she travels from Tamil Nadu to South Korea on an unforgettable, life-changing journey in Made in Korea, premiering March 12 only on Netflix.


Produced by Rise East Entertainment, written and directed by Ra.Karthik, Made in Korea follows Shenbagam, or Shenba, whose childhood fascination with Korean culture inspires her to experience it for herself. When she unexpectedly finds herself in Seoul, reality proves far more challenging than she imagined, setting her on a heartfelt path of resilience, self-discovery, and new connection.


Sharing his inspiration behind the film, Ra.Karthik said, “I am quite fascinated with the deep cultural connections and historical similarities between Korean and Tamil heritage. This curiosity inspired me to tell a story that felt personal and full of hope. Made In Korea is a slice-of-life film crafted with warmth, celebrating this unique cultural bond, and I’m thankful to Netflix for championing stories that transcend languages and bring global cultures closer together.”


Monika Shergill, Vice-President - Content, Netflix India, shares, “As we deepen our commitment to the South and continue building a distinctive slate of films and series, we remain focused on stories that are deeply rooted in local culture yet resonate far beyond borders. Made in Korea beautifully brings that vision to life. At its heart is a young girl from a small village in Tamil Nadu whose fascination with Korea shapes her dreams - a deeply human story of aspiration, identity and belonging. Created by director and writer Ra.Karthik and producer Sreenidhi Sagar, and led by Priyanka Mohan alongside acclaimed South Korean actor of Squid Game fame, Park Hye-Jin, the film celebrates a heartfelt cultural bridge between India and Korea. It is intimate, endearing and globally resonant - exactly the kind of cross-cultural storytelling Netflix is proud to champion.”


Leading the film is Priyanka Mohan, who brings Shenba’s emotional journey to life with sincerity and vulnerability. The film also features South Korean actors Park Hye-jin and No Ho-jin in pivotal roles, adding authenticity to its cross-cultural world.


Speaking about the role, Priyanka Mohan shared, “Shenba’s dream of Korea comes from a place of wonder and curiosity. I felt deeply connected to Shenba’s story from the first narration, and being part of this Netflix film makes the journey even more special.”


With its gentle exploration of cross-cultural connection, aspiration, and everyday courage, Made In Korea invites audiences into a warm, heartfelt story of growth, friendship, and finding one’s identity.


Made in Korea premieres March 12, exclusively on Netflix.


 

Title Information

DIRECTOR: Ra.Karthik

WRITER: Ra.Karthik

PRODUCER: Sreenidhi Sagar

PRODUCTION: Rise East Entertainment

KEY CAST: Priyanka Mohan, Park Hye-Jin

 

About Netflix:

Netflix is one of the world’s leading entertainment services offering TV series, films, games and live programming across a wide variety of genres and languages. Members can play, pause and resume watching as much as they want, anytime, anywhere, and can change their plans at any time.

தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

 *‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*












பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. 


நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.  27 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.


நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது, “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்து கட்டிக்காப்பவரைதான் அப்படி கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப் படத்தை தர காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.


ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.


எடிட்டர் சான் லோகேஷ், “இதுபோன்ற படம் கிடைப்பது அபூர்வம். சிறப்பாக வந்துள்ளது”.

 

கலை இயக்குநர் ராமு தங்கராஜ், “பெண்களை பற்றி அதிகமாக பேசியிருக்கும் ‘தாய் கிழவி’ மிக முக்கியமான படம். எங்களிடம் கதை சொன்னதை விட இயக்குநர் சிறப்பாகவே எடுத்திருக்கிறார். படத்தை தயாரித்திருக்கும் சுதன் மற்றும் சிவகார்த்திகேயன், திறமையாக நடித்திருக்கும் ராதிகா என அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


ஒப்பனைக் கலைஞர் வினீஷ், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”. 


பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், “’தாய் கிழவி’ படத்தில் என் மனைவியை நினைத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் நிவாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”. 


பாடலாசிரியர் ஜெகன், “ஒரு கிழவி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் சீக்கிரம் சாக வேண்டும் என்ற சூழலில் வரும் பாடல். இதுபோன்ற சூழ்நிலைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வந்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு நேரெதிராக இன்னொரு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு பாடல்களும் அருமையாக வந்திருக்கிறது”.

நடிகர் பாலசரவணன், “மகிழ்ச்சியான, எனக்கு தேவையான படம் இது. இயக்குநரை ‘என்னா மனுஷன்யா!’ என பாராட்டலாம். அந்தளவுக்கு மிகவும் பணிவானவர். இப்படி ஒரு சிறப்பான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. கதையை கேட்டு சிரித்தேன், அழுதேன். எனக்கு கிடைத்த செல்வம்தான் இந்த கதாபாத்திரம். ராதிகா மேம் நடிப்பை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தெளிவான அரசியல் பேசும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி”. 


நடிகர் அருள்தாஸ், “இயக்குநர் சிவாவிடம் இருந்து கதை கேட்டபோது அவரிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இதில் உண்டு. முழுக்க முழுக்க திருப்தியான, பெருமையான படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு ஒத்துழைத்த ஊர்மக்கள், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் இந்தப் படத்திற்காக ராதிகா மேம் தேசிய விருது பெறுவார். எல்லா வயதினருக்கும் பிடித்த படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.


நடிகர் சிங்கம்புலி, “பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்த ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய ஹிட். அதுபோலவே, பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை. தீவிர ரஜினிகாந்த் ரசிகனான நான் இந்தப் படத்தில் கமல்ஹாசன் ரசிகனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” என்றார்.


நடிகர் இளவரசு, “’தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையும் இதுபோன்ற படங்கள் எடுக்க முன்வரும். இதற்கு காலமும் சினிமாவும் துணை நிற்க வேண்டும். மிகச்சிறந்த நடிகை ராதிகா. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”.


நடிகர் முத்துக்குமார், “’கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர்தான் சிவகுமார். ரொம்பவும் வலிமையானவர். நான் பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் கிடைத்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கனா’, ‘கொட்டுக்காளி’ படங்களுக்கு பிறகு நிறைய விருதுகள் குவிக்கும் படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.  


நடிகை ரேய்ச்சல், ”’கடைசி விவசாயி’ படத்தில் இருந்தே இயக்குநர் சிவாவை தெரியும். அவரின் வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் ஒரு பெண்ணை ஹீரோவாக பார்ப்பது மகிழ்ச்சி. ராதிகா மேம் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு. அவரது மகள் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் இந்த கதாபாத்திரத்தை என்னுடன் பொருத்தி பார்த்துக் கொள்ள முடிந்தது. நன்றி”.


இயக்குநர் இரா. சரவணன், “எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றி போட்டாலும் பத்தாது. அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார். ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் ‘தாய் கிழவி’ படம்” என்றார். 


தயாரிப்பாளர் ஏஜிஎஸ் ஐஸ்வர்யா கல்பாத்தி, “இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் இது. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும். இயக்குநர் சிவா இப்படியான நல்ல படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. ராதிகா மேம் சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சிவா மற்றும் சுதன் இருவருக்கும் நன்றி. இயக்குநர் சிவா என் மனதுக்கு நெருக்கமானவர். நாங்கள் பேசுவதை விட படம் பார்த்துவிட்டு, வருகிற 27ஆம் தேதி நீங்கள் பேசுவீர்கள்” என்றார். 


இயக்குநர் அருண்ராஜா காமராஜ், “இந்தப் படத்தில் ராதிகா மேமை முதலில் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. பல காட்சிகள் உங்களை கலங்கடிக்கும். உங்களின் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கும். பெண்களை மையப்படுத்தி சொன்ன ‘கனா’ படத்தை விட 100 மடங்காக ’தாய் கிழவி’ படம் இருக்கும். சிறந்த படத்தில் நானும் பங்களித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார். 


இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “சின்ன ஊர்களில் இருந்து பெரிய கனவுகளோடு வரும் பலருக்கும் சிவா சார்தான் இன்ஸ்பிரேஷன். ரூரல் எண்டர்டெயினர் திரைப்படம் வந்து ரொம்ப நாள் ஆகிருச்சு. அதை ஸ்பேசை இயக்குநர் சிவா சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படம் பார்த்தபோது ராதிகா மேம் இன்னொரு லேடி கமல்ஹாசனாகதான் தெரிந்தார். நிச்சயம் படக்குழுவினருக்கு தேசிய விருது கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இது அமைய வாழ்த்துக்கள்”.


இயக்குநர் சிவகுமார் முருகேசன், “என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. ராதிகா மேம் முதலில் தயங்கினாலும் கதை மீது நம்பிக்கை வைத்து சின்சியராக நடித்துக் கொடுத்தார். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த என் குழுவினருக்கு நன்றி. பசியும் பட்டினியும் ஒன்று போல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும் நெல் கட்டையும் அடுத்து எனக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன். நன்றி”.


நடிகர் சூரி, “இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டிருப்போம். படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது என் அம்மா நியாபகம் வந்தது. யாருமே தவற விடக்கூடாத படம் இது. பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா. நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப் படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்க முடியாது. ஆனால், நான் தயாரிக்கிற படங்கள் இந்த சமூகத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார். அதைத்தான் எல்லா படங்களிலும் செய்து வருகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்”.


நடிகை ஸ்ரீபிரியா, “படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவை பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவை பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்கு தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம் அந்த குறையை நீக்கும் என நம்புகிறேன்”.


நடிகை ராதிகா, “எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி. உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படிதான் நான் இதை பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். 


என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று! வாய்ப்பிற்கு நன்றி”.


நடிகர் சிவகார்த்திகேயன், “’தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம். நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது. நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் வெற்றி பார்த்து பின்பு என் குடும்பம் நன்றாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் அருண்ராஜா. அவர் சொன்னதுபோல, அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ். கனவோடு திருச்சியில் இருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ’கொட்டுக்காளி’ படத்தின் வெற்றி எனக்கு நிறைவாக இருக்கிறது. ’தாய் கிழவி’ கதை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 


’தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சிவகுமாரிடம் சொன்னார். ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேம் தவிர வேறு ஆள் கிடையாது என்பதை படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ’சேயோன்’ படத்திற்கு அடுத்தும் மீண்டும் நான் சிவாவுடன் தான் படம் செய்ய இருக்கிறேன். எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேனே தவிர யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை. நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன்.      


மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி வர நான் ரெடி. ’தாய் கிழவி’ படத்தை வரும் 27ஆம் தேதி குடும்பத்தோடு சென்று திரையரங்குகளில் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.