Featured post

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது

 *‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !* வடசென்னையின் துள்ளலான முகத...

Sunday, 22 March 2026

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது

 *‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !*



வடசென்னையின் துள்ளலான முகத்தை இசையில் கொண்டுவந்த ‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்!


பெரம்பூரின் மனிதர்கள், மகிழ்ச்சி, மாஸ் லோக்கல் உணர்வுகளை கொண்டாடும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வெளியீடு!


மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.


இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான  இசையில்,  ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள  ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது. 


'ஜமா'  திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார். 


மேலும், சூப் பாயின்   மனநிலையையும், இளமையான கொண்டாட்டத்தையும், மிக ரசிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் பாடல், லோக்கல் பீட், வண்ணமயமான நடனங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிப்பீட் பட்டனை தட்ட வைக்கிறது.


இப்படியாக ஜாலி வைப்ஸ் தரும் ‘அன்பே டயானா’ பாடல் ரொமாண்டிக் பேமிலி என்டர்டெய்னராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத் தன்மையையும் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து தரும் என்ற எண்ணத்தை கொண்டுவருகிறது.  

இத்திரைப்படத்தில் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட  பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


Link :  

https://www.youtube.com/watch?v=2Sz1o1NqKL4

Friday, 20 March 2026

சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது

 சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இப்படத்தின் இயக்குநர் சிவானி செந்தில். இவர் இதற்கு முன்பு “கார்கில்” மற்றும் “டேக் டைவர்சன்” ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






இத்திரைப்படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் கூறுகையில்,

“கில்லர் டேவிட்” எனும் மாபெரும் டான், தனது கௌரவத்தை நிலைநாட்டுவதற்காக 100-வது கொலையை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் முயற்சிகளை முழு நீள நகைச்சுவை கதையாக இத்திரைப்படம் சொல்லும் என தெரிவித்தார்.


இக்கதையின் நாயகனாக டைகர் சக்ரவர்த்தி நடிக்கிறார்.

மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும்.

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்

 அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன் தயாரிப்பாளர் G.K. M. தமிழ்குமரன் நம்பிக்கை!!










சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை " ரூம் பாய் " இசை வெளியீட்டு விழாவில்  தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேச்சு!!


30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது, 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர்கள்  யாரும் வருவது இல்லை  தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார்  கதிரேசன் ஆதங்கம்!!


இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக  கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன் " ரூம் பாய் " படத்தின் இயக்குனர் ஜெகன் ராயன் நெகிழ்ச்சி !!!



தயாரிப்பாளர் சங்கம் விரைவில் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ் சினிமாவை சீர்படுத்தும் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேச்சு!!


‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! 


ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”


அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். 


ஏலகிரியில் உள்ள ஸ்டார்  ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான்  கதை. ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 


ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,

“இந்த விழாவிற்கு வரும் போது மனதில்,  நல்ல உணர்வுகள் எல்லாம் கலந்து என் மனசில் ஓடிக்கொண்டே இருந்தது.  தயாரிப்பாளருக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது.


அவர்கள் என்னிடம் வந்து படத்தைப் பற்றி பேசும்போது நான் கேட்டேன் – ‘இந்த படத்துக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அவர்கள் ‘கோடிகளில் நிறைய செலவு செய்திருக்கிறோம்’ என்று சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன் – ‘இன்றைய காலக்கட்டத்தில் நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள். ஆனால் அந்த அளவுக்கு படத்தில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்’ என்றேன்.


பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இது இருக்கும் என்று முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெளிவாக தெரிகிறது. நிகில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் மிகச்சிறப்பாக செய்துள்ளார்.  இப்படம் அனைவருக்கும் பெரிய வெற்றியை தர வாழ்த்துக்கள். 



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  தமிழ் குமரன் பேசியதாவது..,


“இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன, “குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்,”


புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 


இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது  படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. 



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..


அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வணக்கம். “ரூம்பாய்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டும் என்று கூறிய போது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார் உடனே ஒப்புக் கொண்டு அதை வெளியிட்டார். ஒருவர் செய்யக்கூடிய உதவியை நாம் அவர்களை ஊக்குவித்து, பாராட்டி மகிழ்ந்தால்தான் அடுத்ததாக பத்து பேரும் அதுபோன்ற உதவிகளை செய்ய முன்வருவார்கள். அந்த நாகரிகமான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் ஒரு சினிமா படத்திற்கு ஒரு செலிபிரிட்டி இப்படியாக ஆதரவு அளித்தால், அந்த படம் பல கோடி மக்களிடம் சென்று சேரும். அதற்கும் மேலாக, அந்த படத்திற்கு ஒரு பெரிய கவனமும் கிடைக்கும்.


இதற்கு ஒரு உதாரணம் சொன்னால், “தாய்கிழவி” படத்தை வேறு எந்த தயாரிப்பாளர் எடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மார்க்கெட்டிங் கிடைத்திருக்காது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக இருந்து தயாரித்ததோடு, அந்த படத்தில் ஒரு பாடலும் பாடினார். அந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் முழுமையாக பாடுபட்டார். அதனால்தான் அந்த “தாய்கிழவி” படம் பெரிய அளவில் எளிதாக மக்களிடம் சென்றது.


அதேபோல், “ரூம்பாய்” என்ற இந்த தலைப்பை வெளியில் அறியச் செய்ய உதவிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.“ரூம் பாய் ” என்ற தலைப்பைப் பார்த்தாலே அனைவருக்கும் தொடர்புடையதாக இருக்கும். ஒரு ஹோட்டலில் தங்கும் போது பல விதமான மனிதர்கள் வருவார்கள். அந்த ஹோட்டலில் நடக்கும் பல கதைகள் இருக்கும். அந்த பல கதைகளையும் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இந்த படத்தில் “ரூபாய்” என்ற பாத்திரம் இருக்கும்.


இதில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் சூரிய கலா சந்திர மூர்த்தியின் மகன் தான் கதாநாயகன் நடித்துள்ளார்,அவருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இது அவருடைய முதல் படம். அவருக்கு வாழ்த்துக்கள்.


ஒரு தயாரிப்பாளர் படம் செய்யும் போது, 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். ஆனால் கதையை அவர் தேர்வு செய்வதில்லை. ஆனால் படம் தோல்வியானால் அவர் தான் தெருவில் நிற்கிறார். ஆனால் இதே ஆந்திராவில் ஒட்டுமொத்த நடிகர்களும் தயாரிபாளரை காப்பாற்றுகிறார்கள். தமிழ் நாட்டில் அந்த நிலைமை சுத்தமாக இல்லை. சூப்பர்ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளருக்கு உதவுவதில்லை. ஆந்திராவில் வந்து நிற்கிறார். இங்கு 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது. 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர் வருவது இல்லை. இங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. எல்லா தயாரிப்பாளர்களும் உங்கள் கமபெனியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யுங்கள் தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் நிற்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்  ராதா கிருஷ்ணன் பேசியதாவது.., 


‘ரூம் பாய்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் முதலாவது நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். 


இன்றைக்கு திரை உலகம் எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மிகப் பெரிய சவால்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் நிலவுகின்றன. அந்த சூழ்நிலையிலிருந்து தமிழ் திரையுலகத்தை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இங்கே மேடையில் இருக்கிற திரையுலக ஜாம்பவான்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உள்ளது.

பல சவால்களை தாண்டி தமிழ் திரையுலகம் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று காலையிலேயே டிஸ்ட்ரிப்யூட்டர்கள், எக்ஸிப்யூட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து மிக முக்கியமான ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தோம்.” அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இனிமேல் எந்த ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞராக இருந்தாலும், அட்வான்ஸ் வாங்கினால் அந்த தயாரிப்பாளருக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். தயாரிப்பாளர்கள் வலுவாக இருந்தால் ஒற்றுமையாக இருந்தால், சினிமா சிறக்கும் என எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மிக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ் சினிமாவை சீர்படுத்தும். ரூம் பாய் படம் பெரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.


‘ரூம் பாய்’  படத்தின்  இயக்குநர் ஜெகன் ராயன் பேசியதாவது.., 


“நிறைய பேச மாட்டேன்… திரைப்படத்தில்தான் பேசுவேன்.  “இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது” இந்த இசை வெளியீட்டு விழாவை தனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், “என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்”. 


அவரின் ஆதரவில்  இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து  2004 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் மாநில விருதை பெற்றேன்.


“சினிமா ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர். மூழ்கிப் போகிறவர்கள் பலர். இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது”.  பல வருட போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன், ஆனால் அவர் அதற்கு பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார்.“எனக்கு தோல்வி வந்து ரொம்ப பழசு. நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும்” என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார், அதனால் தான் என்னால்  இந்த திரைப்படத்தை சிறப்பாக  உருவாக்க முடிந்தது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.  குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாரதி, கவிஞர் சூரியமூர்த்தி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. “இந்த படம் எங்களுக்கு அனைவருக்கும் ஒரு பெரிய பயணம். நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” அனைவருக்கும் நன்றி.



Room boy Audio & Trailer Launch photos Downloads Link -  

https://sendgb.com/cAWi0QzUewd

கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்

 *கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!*






‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. 



இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது.


தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள், இந்த விருதை திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வழங்கினார்.


இன்று 'பான்-இந்தியா சினிமா' (Pan-India Cinema) கொண்டாடப்படும் வேளையில், பல மொழிகளில் கமல் ஹாசன் அவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த சாதனைகளே அதற்கு உண்மையான அடித்தளமாக உள்ளது. அவரது புதுமையான கதைக்களன்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் என கமல்ஹாசன் இந்திய சினிமாவைத் தொடர்ந்து செதுக்கி வருவதையும் இந்த விருது கௌரவித்தது.

கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்

 *கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!*






‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. 



இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது.


தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள், இந்த விருதை திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வழங்கினார்.


இன்று 'பான்-இந்தியா சினிமா' (Pan-India Cinema) கொண்டாடப்படும் வேளையில், பல மொழிகளில் கமல் ஹாசன் அவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த சாதனைகளே அதற்கு உண்மையான அடித்தளமாக உள்ளது. அவரது புதுமையான கதைக்களன்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் என கமல்ஹாசன் இந்திய சினிமாவைத் தொடர்ந்து செதுக்கி வருவதையும் இந்த விருது கௌரவித்தது.

Netflix Celebrates the Global Success of Made In Korea with the Team

 *Netflix Celebrates the Global Success of Made In Korea with the Teamp*





Made In Korea has taken the global stage by storm, holding the No.1 position on Netflix’s Global Top 10 Non-English Movies. Notably, it is the only South Indian film to achieve this feat across both licensed and Netflix original films.


To mark this milestone, a special celebration brought together cast members Priyanka Mohan and Rishikanth, along with director Ra.Karthik and producer Sreenidhi Sagar (Rise East Entertainment), who joined Monika Shergill, Vice-President - Content, Netflix India, and the Netflix team.


With its graceful performances, striking visuals, and the heartfelt journey of Shenba from Tamil Nadu to Seoul, Made In Korea has deeply resonated with audiences. All smiles, the team celebrated the moment, posing with signature Korean heart gestures.

நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்

 *நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!*





நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய டாப் 10 படங்களில் ‘மேட் இன் கொரியா’ படம் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும்.


இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் நடிகர்கள் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், இயக்குநர் கார்த்திக் மற்றும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் குழுவினரும் இணைந்து கொண்டாடினர்.


நடிகர்களின் திறமையான நடிப்பு, கண்ணைக்கவரும் காட்சிகள், தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை மனதை நெகிழ வைக்கும் செண்பாவின் பயணம் ஆகியவை ‘மேட் இன் கொரியா’ படத்தை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்றுள்ளது. இந்த வெற்றியை படக்குழு மகிழ்ச்சியுடன் கொண்டாடியதுடன் சிக்னேச்சர் கொரியன் ஹார்ட் சிம்பலுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பு கேம் பிளே பட ஃபர்ஸ் லுக் வெளியானது !!*

 *இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!*




*‘இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பு கேம் பிளே பட ஃபர்ஸ் லுக் வெளியானது !!*


காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “திரைக்கதைதான் ஹீரோ” எனும் நோக்கில்  தனது முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை வடிவத்தை  மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.


பைனான்ஸியல் க்ரைமை மையமாகக் கொண்ட இப்படம், நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட சஸ்பென்ஸ் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்ததிலிருந்து மாறுபட்ட களம் மற்றும் கதை அமைப்புடன், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


“Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கண்ணாடி சிதறல்களாக உடைந்த தெறிக்க, கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் பல்வேறு உணர்வுகளுடன் காட்சியளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.


நடிகர்கள் கிஷோர் மற்றும் ‘HeartBeat’ சீரிஸ் புகழ் சாருகேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷான் மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர்  விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுரேஷ் பாலா கவனித்துள்ளார். படத்தொகுப்பை புவன் சீனிவாசன் மேற்கொண்டு வருகிறார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவுடன் இப்படம் தரமான படைப்பாக உருவாகி வருகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Director Karthik Subbaraj Unveils the First Look of ‘Game Play’ !!

 Director Karthik Subbaraj Unveils the First Look of ‘Game Play’ !!




Incredible Productions’ next intense venture ‘Game Play’ first look revealed !!


Following the success of Kaalidas (2019), Incredible Productions is back with its next venture, a suspense thriller titled Game Play. The film’s first look has been unveiled by leading director Karthik Subbaraj, creating strong buzz and raising expectations among fans.


Sivanesan S, who is known for directing the popular television show Naalaiya Iyakkunar (Seasons 1–4), is making his directorial debut with this film. With the concept, “Script is the Real Hero,” he has attempted a unique narrative style in his very first project.


Centered around financial crime, Game Play is shaping up as a suspense investigative thriller packed with unpredictable twists at every turn. With a fresh story premise and a distinctive treatment, the film promises a new cinematic experience for Tamil audiences.


The first look, released with the tagline “Exit is an Illusion,” features a striking shattered-glass design, presenting the main characters with a blend of intense emotions. This unique poster has already received a positive response and has further heightened curiosity about the film.


Actors Kishore and Charukesh of HeartBeat fame play the lead roles, while Shali Nivekas, Vinod Kishan, and Charlee appear in pivotal roles.


The film’s music is composed by Vishal Chandrasekar, with cinematography handled by Suresh Bala and editing by Bhuvan Srinivasan. With an experienced technical team on board, the film is shaping up to be a quality production.


The shooting of the film has already been completed, and post-production work is currently progressing at a brisk pace. Official announcements regarding the teaser, trailer, and audio launch are expected to be released soon.