Featured post

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*

 *ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம்,  மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான...

Thursday, 29 January 2026

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*

 *ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம்,  மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*



இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில்  வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு,  ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமே “சிறை” படத்தின் மையம். அதிகாரம், மனிதநேயம், மனசாட்சியின் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து நகரும் இந்த கதை, ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கிறது. நாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்‌ஷய் குமார் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.


இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.


திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ZEE நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ZEE5 இல் வெளியானதும் “சிறை” திரைப்படம் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் வலுவான விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்ததன் விளைவாக, படம் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


மண் சார்ந்த உண்மைக் கதைகளை தரமான உருவாக்கத்துடன் வழங்கும் ZEE5 தமிழ், தொடர்ந்து இப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளை தமிழ்  பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக கொண்டு வருகிறது. அந்த வரிசையில் “சிறை” திரைப்படம், தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஓடிடி சாதனைகளில் ஒன்றாக தன்னை பதிவு செய்துள்ளது. 


உணர்வுபூர்வமான, தாக்கம் மிக்க ஒரு அனுபவத்தை தேடும் ரசிகர்கள், “சிறை” திரைப்படத்தை ZEE5 தளத்தில் தவறாமல் கண்டுகளிக்கலாம்.

Mellisai Tamil Movie Review

Mellisai Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம   mellisai   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dhirav. இந்த படத்துல G.Kishore Kumar ,Subatra ,MaryanRobert ,George Maryan ,Harish Uthaman ,Dhananya Varshini ,Jaswant Manikandan னு பலர் நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். 


rajan அ நடிச்சிருக்க kishore ஒரு school ல pt teacher அ work பண்ணிட்டு இருக்காரு. இவருக்கு singing ன்றது passion ஒரு பக்கம் teacher அ இருந்தாலும் இவரோட passion யும் follow பண்ணிட்டு இருக்காரு. இவரோட wife தான் vidya வ நடிச்சிருக்க Subatra Robert , இவங்களும் அதே school ல தான் ஒரு teacher அ work பண்ணிட்டு இருப்பாங்க. இவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. இவங்க ஒரு சாதாரண middle  class family தான். ரொம்ப வசதி இல்லனாலும் இருக்கிறதா வச்சுக்கிட்டு சந்தோசமா இருக்கற ஒரு குடும்பம் தான் இவங்க. இப்போ Rajan க்கு அவரோட job எல்லாம் பிரச்சனை ஆயிடுது, அதே சமயம் இவரோட பெரிய பையன்க்கு ஒரு IT கம்பெனி ல வேலை கிடைக்குது. வேலை கிடைச்சு family க்கு support பண்ணுற பையனோட character வேற மாதிரி மாறிடுது. இதுனால இவங்க குடும்பத்துல ஒரு விரிசல் விழுது. இந்த விரிசல் சரி ஆச்சா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு middle class family க்குல  வர பிரச்சனைகள், ego , கோவம், பொறாமை , பசங்க parents கிட்ட திமிர நடந்துக்கறது னு பல விஷயங்களை இந்த படத்துல காமிச்சிருக்காங்க. kishore எப்பவும் போல ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காரு. ஒரு பக்கம் தன்னோட job ல வர பிரச்சனைகளை நினச்சு வர வருத்தம் இன்னொரு பக்கம் அவரோட பெரிய பையன்க்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு நினச்சு வர பெருமை னு ரொம்ப நேர்த்தியா நடிச்சிருக்காரு. subathra ஓட performance யும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட கதையை ஒரு flashback story மாதிரி தான் கொண்டு வந்திருக்காங்க. இதுல வர நெறய விஷயங்கள் real life ல நடக்கிறது தான் அதுனால அதா  பாக்கும்போது audience ஆழ relate பன்னிக்கமுடியும். music, visual எல்லாமே அட்டகாசமா இருந்தது. இந்த படத்தை பாக்கும்போது பசங்க வாழக்கை ல parents ஓட importance எவ்ளோ முக்கியம், emotional அ connect ஆகுறது, life ல நெறய விஷயங்கள் இருந்தாலும் நேரத்துக்கு ஏத்த மாதிரி priority குடுக்க தெரிறது னு நெறய விஷயங்களை இந்த படம் மூலமா சொல்லிருக்காங்க.  


actors ஓட strong ஆனா performance , மனச நெருடரா மாதிரியான கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

Granny Tamil Movie Review

Granny Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம granny படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vijaya Kumaaran . இந்த படத்துல Vadivukkarasi, Dhileepan, SingaPuli, Gaja Raja, Ananthu Nag, Aparna, னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு horror thriller படம்.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.

ஒரு சின்ன கிராமத்துல ஒரு கொழந்தை மர்மமான முறை ல இறந்து போயிடுறேன். இதை பத்தி விசாரிக்கறதுக்காக police இந்த case அ handle பண்ணுறாங்க. அதே சமயம் london ல வந்த ஒரு couple க்கு அவங்களோட பூர்விக சொத்து அ ஒரு வீடு இருக்கும். இங்க தங்க வருவாங்க அப்போ அந்த வீடு முன்னாடி ஒரு வயசான பாட்டி மயங்கின நிலை ல கிடைக்கறாங்க. இவங்களுக்கு இந்த couple உதவி பண்ணுறாங்க. இந்த பாட்டி தான் வடிவுக்கரசி. இந்த வீட்டோட உண்மையான owner ஏ இவங்களோட husband தான். இவங்களோட husband மாந்த்ரீகம் பண்ணி இளமையா மாறுறதுக்கான வழிய கண்டுபிடிச்சிப்பாரு. இப்போ இங்க தான் vadivukarasi யும் இந்த couple யும் இருக்காங்க. இதை பத்தி எதுவுமே தெரியாம இந்த பிரச்சனை ல இவங்க ரெண்டு பேரும் மாட்டிக்கிறாங்க. அது மட்டும் இல்ல இவங்களுக்கு ரெண்டு பசங்களும் இருப்பாங்க. அவங்களும் பெரிய ஆபத்து ல மாட்டிக்கிறாங்க. இந்த பிரச்சனை ல இருந்து இவங்க தப்பிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட மிக பெரிய பலமே கதைக்களம் தான். அவ்ளோ interesting ஆவும் thrilling ஆவும் கதையை director கொண்டு போயிருக்காரு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா tension அ build பண்ணிட்டு போற விதம் எல்லாமே super  அ இருந்தது. vadivukarasi villain character ல நடிச்சாலே மிரட்டலா தான் இருக்கும். இந்த படத்துல இவங்கள பாத்தாலே பயம் தான் வருது. அந்தளவுக்கு இவங்க character அ detailed அ convey பண்ணிருக்காங்க. ஒரு horror படத்துக்கு என்னனா தேவையோ அதெல்லாம் இந்த படத்துல குடுத்திருக்காங்க. இந்த படத்தோட  visuals எல்லாமே பக்காவா இருந்தது. இவங்க ஒரு உண்மையான வீட்ல தான் shooting எடுத்திருக்காங்க அதுனால பாக்குறதுக்கு original அ இருந்தது. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vadivukarasi ஓட performance தான் தனித்துவமா இருக்கு. இவங்களோட screen presence அவ்ளோ strong அ இருந்தது னு தான் சொல்லணும். இவங்களுக்கு makeup போட்டு இருந்த விதமும் அட்டகாசமா இருந்தது.  Ananth Nag, Dhileepan and Singampuli இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. மத்த Supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க.  


 ஒரு பக்காவான thriller  கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

Gandhi Talks Tamil Movie Review

Gandhi Talks Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gandhi talks  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது : Kishor Pandurang. இந்த படத்துல Vijay Sethupathi, Arvind Swami, Aditi Rao Hydari, Siddharth Jadhavனு பலர் நடிச்சிருக்காங்க.  இது ஒரு silent  movie . அதாவுது ஒரு dialogue கூட படத்துல இருக்காது. இந்த மாதிரி ஏற்கனவே ஒரு படம் நம்ம தமிழ் சினிமா ல வந்திருக்கு. prabhudeva நடிப்புல karthik subburaj இயக்குதுல வந்த mercury படம் தான் அது.  கிட்ட தட்ட 23 வருஷமா இந்த மாதிரி ஒரு silent film அ direct பண்ணனும் ஆசை பட்டாரு அண்ட் இந்த படமும் direct பண்ணிட்டாரு.  



இந்த படம் ஏற்கனவே 2023 ல நடந்த international film festival ல premiere பண்ணி இருந்தாங்க அதோட இந்த படத்தை பாத்த பலரும் இதை பாராட்டி இருக்காங்க. இந்த வருஷம் தான் இந்த படம் release ஆகுது. நெறய விஷயங்களை convey பண்ணுறதுக்கு dialogues  இருக்கணும்னு முக்கியம் கிடையாது. body language , facial expressions மூலமா ஆவே தெரியும். ஆனா இந்த படத்துல dialogues இல்லாம characters கஷ்டப்படுறாங்க அப்போ தான் text messages இல்லனா sign language மூலமா சொல்ல வர விஷயத்தை recieve பண்ணி கிறங்க. இருந்தாலும் ஒரு dialogue கூட இல்லாம silent movie எடுக்கறது ஒரு பெரிய difficult ஆனா task தான் இருந்தாலும் ஒரு நல்ல கதைக்களத்தை தான் குடுத்திருக்காரு director . 


mahadev அ நடிச்சிருக்க vijay sethupadhi க்கு எந்த வேலையும் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படுறாரு. எவ்ளோ முயற்சி செஞ்சாலும் இவருக்கு வேலை கிடைக்கல. ஒரு நாள் எதிர்ச்சிய boseman அ நடிச்சிருக்க arvindsamy அ meet பண்ணுறாரு. இவரு ஒரு businessman . என்னதான் இவரு பணக்காரரா இருந்தாலும் எதோ ஒரு காரணத்துக்காக இவரோட business நஷ்டத்தை நோக்கி போக ஆரம்பிக்குது. இப்படி இக்கட்டான சூழ்நிலைல சந்திக்கும்போது தான் mahadev ஓட வாழ்க்கையே தல கீழ மாறுது. இவங்க ரெண்டு பேரோட life ல என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு silent film க்கு music தான் ரொம்ப முக்கியம். இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது AR rahman . ஓவுவுறு scenes க்கும் அவ்ளோ importance குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். characters ஓட emotions அ இவரோட music தான் audience முன்னாடி கொண்டு வருது. இந்த படத்துல நெறய சின்ன சின்ன songs லாம் இருக்கு. இந்த படம் premiere க்கு வரதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி  தான் அஞ்சு songs அ compose பண்ணதா AR ரஹ்மான் இந்த film festival ல பேசி இருக்காரு. 


படம் பாக்குறதுக்கு ரொம்ப interesting ஆவும் engaging ஆவும் இருக்கு.  இந்த படத்தோட title ஏ audience க்கு ஒரு உதாரணம். காந்தியை நம்ம ரூபா நோட்டு ல பாக்குற ஒரு அடையாளமா தான் பாக்குறோமே தவிர அவரு எந்த நோக்கத்துக்காக கஷ்டப்பட்டாரு ன்ற விஷயத்தை நம்மள இந்த society ல follow பண்ண முடியல. நம்ம society ல இருக்கற contradiction அ பத்தி தான் பேசிருக்காங்க. இந்த படத்துல corruption அ பத்தி அதிகமா காமிச்சிருக்காங்க.   என்னதான் ஒற்றுமையை இந்த நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு வரணும் னு பல தலைவர்கள் சொன்னாலும், reality ல அது ரொம்ப கஷ்டம். அதுக்கு ஒரு காரணம் corruption தான். corruption ல மாட்டிக்குற சாதாரண மக்கள் கஷ்டப்படுறாங்க. அவங்களோட எல்லா உழைப்பும் வீண் ஆகுது, உடம்பளவு ளையும் மனதளவு ளையும் வேதனை படுறாங்க. அதுனால தான் ஒரு சிலர் தப்பான வழிக்கும் போயிடுறாங்க.   . ஏழை பணக்காரன் ன்றதையும் தாண்டி ஒரு சின்ன love story யையும் காமிச்சிருக்காங்க. mahadev அப்புறம் gayathri யா நடிச்சிருக்க adithi rao வ love பண்ணுவாரு. இவங்க ரெண்டு பேரோட love story யும் simple ஆவும் genuine ஆவும் தான் move ஆகும். 

இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யும் அவங்களோட best ஆனா performance அ குடுத்திருக்காங்க. படத்தோட cinematography , editing , direction , music னு எல்லா technical aspects யும் பக்க பலமா அமைச்சிருக்கு. 

     

 ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

Wednesday, 28 January 2026

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது murali krish . இவரு இயக்குற முதல் படம் இதுதான். இவரு இதுக்கு முன்னாடி M rajesh ன்ற director க்கு assitant அ வேலை பாத்துட்டு இருந்தாரு.  இந்த படத்தோட trailer அ 26 ஆம் தேதி நடிகர் jeeva வவும் director rajesh யும் reveal பண்ணாங்க.  இந்த படத்துல அட்ட கத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், சரவண சுபையா, கலையரசன் கண்ணுசாமி னு பலர் நடிச்சிருக்காங்க. lubber  pandhu க்கு அப்புறம் மறுபடியும் ஒரு கிராமத்து கதையோட வந்திருக்காரு attakathi  dinesh . இந்த படம் 30 த் அன்னிக்கு தான் release ஆகா போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.



attakathi dinesh chennai ல ஒரு water purifier company அ வச்சு நடத்திட்டு வராரு. இவருக்காக இவரோட parents ஒரு பொண்ண தேடிட்டு இருக்காங்க. இவரோட profile அ matrimony ளையும் upload பண்ணுறாங்க. அப்போ தான் இவருக்கு reshma matrimony மூலமா அறிமுகம் ஆகுறாங்க. ரெண்டு பேருக்கும் ரொம்பவே பிடிச்சி போயிடுது. இப்போ  இவரு reshma கிட்ட தான் ஒரு pulsar bike அ தான் வச்சுருக்கேன் னு சொல்லுறாரு. ஆனா உண்மைல இவருக்கிட்ட xl  தான் இருக்கும். சொன்ன பொய்யா உண்மையாக்க ஒரு பழைய கருப்பு colour  pulsar அ வாங்குறாரு. ஆனா இந்த வண்டியை வாங்குனதுல இருந்து இவருக்கு அமோனிஷ்யாம நெறய பிரச்சனைகளை சந்திக்கறாரு. அதுனால இந்த bike இதுக்கு முன்னாடி யாரு வச்சிருந்த அவங்களுக்கு என்னாச்சு ன்றதா விசாரிக்க ஆரம்பிக்குராறு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது attakathi dinesh எப்பவும் போல ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காரு. reshma ஓட acting யும் நல்ல இருந்தது. இவங்களோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும்  நல்ல இருந்திருக்கும். rahul  ஓட comedy scenes எல்லாமே ரசிக்கிற விதமா இருந்தது. முக்கியமா second half ல ஐவரும் இவரோட wife யும் ஒண்ணா bike ல போற scenes எல்லாம் audience அ சிரிக்க வைக்கிற மாதிரி இருக்கு. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ஒரு நல்ல performance  அ குடுத்திருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது inba ஓட songs அப்புறம் bgm ரெண்டுமே இந்த படத்துக்கு highlight ஆனா ஒரு விஷயம். baskar arumugam ஓட cinematography அப்புறம் sasi dhaksha ஓட editing யும் அருமையா இருந்தது. 


என்னதான் பேய் படங்கள் நம்ம தமிழ் சினிமா ல நெறய பாத்து இருந்தாலும் ஒரு bike அ வச்சு பேய் வர்ரது கொஞ்சம்  புதுசா தான் இருக்கு. ஒரு விதயசமான thriller கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

LOCKDOWN Movie Review

LOCKDOWN Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lockdown படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது A.R. Jeeva.  lyca production ல வெளி வர போற இந்த படத்துல anupama harlie, Nirosha, Priya Venkat, Livingston, Indhumathi, Rajkumar, Shamji, Lollu Sabha Maran, Vinayaga Raj, Vidhu, Sanjivie, Priya Ganesh, and Asha, னு பலர் நடிச்சிருக்காங்க. 



இந்த படம் 30 த் அன்னிக்கு தான் release ஆகா போது. இது ஒரு psychological drama movie . இந்த படத்தோட trailer வெளி ஆகி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. என்ன தான் covid lockdown அ main background அ காமிச்சாலும் ஒரு பொண்ணோட emotions , அவ மனுசுக்குள்ள நடக்கற போராட்டம், society pressure , குடும்பத்தோட கொவ்ரவத்துக்காக எடுக்கற முடிவு னு full  அ anita வா நடிச்சிருக்க anupama மேல தான் போகுது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.

  

anita வ நடிச்சிருக்க anupama  ஒரு lower  middle class குடும்பத்தை சேந்தவங்க. இவங்க college  படிச்சி முடிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கும் போய் சேந்துடறாங்க. இவங்களுக்கு pradeep னு ஒரு friend இருப்பாரு. இவரு ஒரு HR officer அ வேலை செய்வாரு. இவரு anita வை ஒரு party க்கு கூட்டிட்டு போறாரு. அந்த party ல நல்ல dance ஆடிட்டு இருக்கும்போது திடுருனு anita மயங்கி கீழ விழுந்துடறாங்க. hospital ல போய் check பண்ணும்போது இவங்க pregenant அ இருக்காங்க னு தெரியவருது. இந்த pregnancy  அ கலைக்கணும் னு try பண்ணும்போது தான் covid 19 னால lockdown ஆகிடுது. இப்போ இந்த lockdown காரணமா anita நெறய பிரச்சனைகளை சந்திக்கறாங்க. இவங்களுக்கு abortion பண்ண 30, 000 க்கு ஒரு doctor accept பண்ணி    இருப்பாங்க. ஆனா அவங்க covid  ஆழ பாதிக்கப்படுறாங்க. இப்போ anita  வேற doctor  கிட்ட போறாங்க ஆனா அதுவும் பிரச்சனையா தான் முடியுது. இப்போ இந்த problem  ல  இருந்து இவங்க வெளில வந்தாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


covid  19 ல lockdown ஓட தாக்கத்தை யாருமே மறந்திருக்க மாட்டோம். அந்த period ல வெளில போக முடியாம நெறய பேர் கஷ்டப்பட்டிருப்பாங்க. அந்த மாதிரி ஒரு background தான் இந்த கதைக்கு குடுத்திருக்காங்க. இந்த கதையை ரொம்ப emotional  அ கொண்டு போயிருக்காரு director. முக்க்கியமா படத்தோட second half அ எடுத்துட்டு போனது தான் நல்ல இருந்தது. anita வா நடிச்சிருக்க anupama, natural ஆனா performance அ வெளி படுத்திருக்காங்க. ஒரு பக்கம் society pressure இன்னொரு பக்கம் emotional stress னு எதார்த்தமான நடிப்பை அனுபமா கொண்டு வந்திருக்காங்க. இது வரைக்கும் இவங்க நடிச்ச படங்கள் ல பாக்கும்போது இந்த படத்துல தான் outstanding performance அ குடுத்திருக்காங்க. மத்த actors  ஆனா charlie , nirosha இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. supporting  actors  யும் அவங்க role  அ புரிஞ்சுகிட்டு ஒரு best ஆனா performance  அ வெளி படுத்திருக்காங்க. 


இந்த படத்தோட technical  aspects னு பாக்கும்போது எல்லாமே இந்த படத்துக்கு plus point அ இருக்குனு தான் சொல்லணும். N.R. Ranganathan and Siddharth Vipin ஓட songs அப்புறம் bgm எல்லாம் அட்டகாசமா இருந்தது. முக்கியமா படத்தோட emotional  scenes க்கு bgm கச்சிதமா இருந்தது. Shaktivel' ஓட cinematography characters ஓட emotions , situations எல்லாமே அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. முக்கியமா nightshots  எல்லாமே அட்டகாசமா இருந்தது. Sabu Joseph'ஓட  editing யும் audience ஓட கவனம் எங்கயும் சிதறாத மாதிரி கதையை குடுத்திருக்காரு. 


lyca productions எப்பவுமே பெரிய budget படங்களை தான் பண்ணிருக்கு. இது சின்ன budget படமா இருந்தாலும் ஒரு emotional ஆனா கதைக்களத்தை குடுத்திருக்காங்க. சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara;

 Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara; Presented By Geetha Arts & Swapna Cinema, Produced By Sandeep Gunnam, Ramya Gunnam, Pan-India theatrical release in summer 2026*




The versatile star Dulquer Salmaan, who is currently riding high on consecutive blockbusters and Pan-India stardom, is now gearing up with another promising drama, Aakasamlo Oka Tara. The film is directed by Pavan Sadineni, known for his inventive storytelling and distinct visual style. Presented by the prestigious Geetha Arts and Swapna Cinema, the project is produced by Sandeep Gunnam and Ramya Gunnam. Newcomer Satvika Veeravalli plays the female lead opposite Dulquer. The previously released promos have already heightened anticipation for this engaging drama.


Meanwhile, the makers have sprung a pleasant surprise. Shruti Haasan, who has become highly selective of late, has come on board for a crucial role. Extending birthday wishes, the makers have unveiled her first look. She sports an intense, unvarnished look, with glasses framing a steady, downward gaze that reflects quiet intensity. The cigarette at her lips and the drifting smoke add a gritty layer to her character, hinting at emotional depth and unspoken stories.


Shruti Haasan’s character is going to play a decisive role in the film’s narrative arc, with her entry steering the story into a new phase. Her mere appearance positions her as a force who brings sharp dimension and weight to the drama.


The film promises strong technical quality, with GV Prakash Kumar scoring the music, Sujith Sarang handling cinematography and Shwetha Sabu Cyril overseeing production design.


Currently in its final phase of production, Aakasamlo Oka Tara is slated for a Pan-India release in Telugu, Tamil, Hindi, and Malayalam in summer 2026.


Cast: Dulquer Salmaan, Satvika Veeravalli, Shruti Haasan and others


Technical Team:

Director: Pavan Sadineni

Writer: Gangaraju Gunnam

Producers: Sandeep Gunnam, Ramya Gunnam

Presented by - Geetha Arts, Swapna Cinema

Music: GV Prakash

DOP: Sujith Sarang

Production Designer: Shwetha Sabu Cyril

ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

 *“ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!*

 



துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக்க தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார்.


Geetha Arts & Swapna Cinema வழங்க,  சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது


தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும்  நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக  “ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும்  தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து,  புகழ் பெற்ற பவன் சடினேனி  ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிக்கின்றனர். புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான புரமோக்கள், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்,  இப்படத்தின் மீது  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் கண்ணாடியுடன், கீழ்நோக்கி பதிந்த தீவிரமான பார்வையுடன்,  இயல்பான தோற்றத்தில் இருக்கிறார் —அது அவரின் கதாபாத்திரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. அவரது உதட்டில் இருக்கும் சிகரெட்டும், மேலெழும் புகையும், அந்த கதாபாத்திரத்தில் உள்ள உணர்ச்சி ஆழத்தையும் சொல்லப்படாத கதைகளையும் சுட்டிக்காட்டுகிறது.


இந்த திரைப்படத்தின்  கதையோட்டத்தில் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் ,கதையின் திருப்புமுனையாக முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. அவர் இப்படத்தில் இணைந்துள்ளது, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அவரது தோற்றமே, இந்த டிராமாவுக்கு புதிய பரிமாணத்தையும் கனத்தையும் சேர்க்கும் சக்தியாக அவரை நிலைநிறுத்துகிறது.


இந்த திரைப்படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை சுஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கின்றனர்.


தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.


நடிகர்கள்: துல்கர் சல்மான்,  சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்


தொழில்நுட்ப குழு:

இயக்கம்: பவன் சடினேனி

கதை: கங்கராஜு குன்னம்

தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்

வழங்குபவர்கள்: Geetha Arts, Swapna Cinema

இசை: GV பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: சுஜித் சாரங் (Sujith Sarang)

தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்


ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து

 *“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!*




மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்ட இருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம் கிஷோர் நடிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுப்பூர்வமான மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான பல மகிழ்வான தருணங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை திரவ் எழுதி இயக்கியுள்ளார்.


பட அனுபவம் பற்றி இயக்குநர் திரவ் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பொறுப்பு, சுமைகள், கட்டுப்பாடுகள் காரணமாக இவற்றை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. இசையை உயிராக நேசித்த ஒருவன் குடும்ப பொறுப்பு காரணமாக தனது கனவுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கிறான். ஒருகாலத்தில் நம்பிக்கையுடன் ஒலித்த அவனது குரல், ஆண்டுகள் கடந்த பின்னர் சமரசங்கள், பயம் மற்றும் நிறைவேறாத ஆசைகளின் கீழ் ஒடுங்கி போகிறது. ஆனால், தோல்வியடைந்த சோர்ந்து போன தனது தந்தையை பார்க்க விரும்பாத அவனது எட்டு வயது மகள், உலகம் கொண்டாடும் ஒரு ஹீரோவாக அவனது வாழ்வை மாற்றுகிறாள். தந்தையும் மகளும் இணைந்து உணர்வுப்பூர்வமாக தொடங்கும் இந்த கதை முடியும்போது ரசிகர்களுக்குள் நம்பிக்கையை விதைக்கும்” என்றார். 


படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் எழுதிய கதாபாத்திரத்தை தனது நடிப்பு திறமையால் திரையில் மேலும் மெருகேற்றி இருக்கிறார் நடிகர் கிஷோர். பெரும்பாலும் அவரை கடினமான, வலுவான கதாபாத்திரங்களில்தான் பார்த்திருக்கிறோம். அதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கிஷோராக அவரின் மிருதுவான, அமைதியான பக்கம் இந்த படத்தில் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும். சுபத்ரா, ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி, ரவி எழுமழை உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். மனதை கவரும் பாடல்களையும் பின்னணி இசையையும் சங்கர் ரங்கராஜன் கொடுத்துள்ளார். படம் சிறப்பாக வெளிவர காரணமாக இருந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி” என்றார். 


உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘மெல்லிசை’ திரைப்படம் ஜனவரி 30, 2026 அன்று வெளியாகிறது.