Featured post

The World of Vada Chennai Expands: Vetri Maaran – Silambarasan TR – V Creations’ Much-Anticipated Arasan Begins Shoot in Kovilpatti

 *The World of Vada Chennai Expands: Vetri Maaran – Silambarasan TR – V Creations’ Much-Anticipated Arasan Begins Shoot in Kovilpatti* The h...

Thursday, 11 December 2025

The World of Vada Chennai Expands: Vetri Maaran – Silambarasan TR – V Creations’ Much-Anticipated Arasan Begins Shoot in Kovilpatti

 *The World of Vada Chennai Expands: Vetri Maaran – Silambarasan TR – V Creations’ Much-Anticipated Arasan Begins Shoot in Kovilpatti*




The highly awaited project Arasan, emerging from the gritty and celebrated universe of Vada Chennai, has officially gone on floors. Directed by the acclaimed filmmaker Vetri Maaran, the film stars Silambarasan TR in the lead and is produced by V Creations Kalaippuli S Thanu.


The shoot commenced in Kovilpatti during the first week of December and will continue till the end of the month. The team is currently filming crucial sequences set against the raw, rooted backdrop that the director is known for. Following the Viduthalai franchise, Makkal Selvan Vijay Sethupathi will once again be joining hands with Director Vetri Maaran and is expected to join the shoot shortly. 


Marking a major milestone, Arasan brings together Rockstar Anirudh, Silambarasan TR, and Vetri Maaran for the very first time. The Arasan Promo, released on the composer’s birthday in October, garnered overwhelming response and ignited massive excitement among fans and audience, much before the cameras started rolling.


Arasan promises to be a powerful addition to the Vada Chennai world, bringing together an exceptional team to deliver a gripping cinematic experience. 


Further announcements regarding the film’s cast and additional surprises will be revealed soon.


*Technical Crew:*

Writted and directed by: Vetri Maaran

Production House: V Creations

Producer: Kalaippuli S Thanu

DOP: R. Velraj

Editor: R. Ramar

Production Designer: Jacki

Stunt Director: Peter Hein

Sound & Atmos Mix: T. Udaykumar

Sound Design: Prathap K

VFX Head: R. Hariharasuthan

Colorist: Glen Castinho

DI: Infinity Media

Make-up: Ranjith Ambady

Costume Designers: Poorthi & Vipin

Costumes: R. Muruganantham

Stills: Mu. Baskar Prasanth

Publicity Designs: Sasi & Sasi

Production Executive: AP Pal Pandi

PRO: Riaz K Ahmed, Paras Riyaz,  Sathish Kumar

கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன் படப்பிடிப்பு

 *கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன் படப்பிடிப்பு!*




வடசென்னை உலகம் பெரிதாகிறது: வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர் – கலைப்புலி s தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'அரசன்' படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது


வடசென்னை என்னும் வெற்றி படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அனைவராலும் பாராட்டப்படும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் டிஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.


டிசம்பர் முதல் வாரத்தில் கோவில்பட்டியில் தொடங்கிய அரசன் படத்தின்  படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடரும். வெற்றிமாறனின் பாணியில் அரசன் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளை குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். விடுதலை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றுகிறார். விரைவில் அரசன் படப்பிடிப்பில் இணைவார் . 


ஒரு முக்கிய மைல்கல்லாக, 'அரசன்' படம் ராக்ஸ்டார் அனிருத், சிலம்பரசன் டிஆர் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது .  அக்டோபர் மாதம் அனிருத் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட அரசன் ப்ரோமோ, படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மற்றும் மகத்தான வரவேற்பை பெற்றது.


வடசென்னை உலகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கூடுதலாக 'அரசன்' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்க ஒரு சிறப்பான குழுவை ஒன்றிணைக்கிறது. படத்தின் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.


தொழில்நுட்பக் குழு:

எழுத்து இயக்கம் : வெற்றிமாறன்

தயாரிப்பு நிறுவனம்: கலைப்புலி S தாணுவின் V கிரியேஷன்ஸ்

தயாரிப்பாளர்: கலைப்புலி S தாணு  

ஒளிப்பதிவாளர்: R வேல்ராஜ்

படத்தொகுப்பாளர்: R ராமர்

கலை இயக்குனர்: ஜாக்கி

சண்டை பயிற்சி: பீட்டர் ஹெய்ன்

ஒலி & அட்மாஸ் மிக்ஸ்: T உதயகுமார்

ஒலி வடிவமைப்பு: பிரதாப் கே

VFX: R ஹரிஹரசுதன்

கலரிஸ்ட்: க்ளென் காஸ்டின்ஹோ

DI: இன்ஃபினிட்டி மீடியா

ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி

உடை வடிவமைப்பாளர்கள்: பூர்த்தி & விபின்

உடைகள்: ஆர். முருகானந்தம்

ஸ்டில்ஸ்: மு. பாஸ்கர் பிரசாந்த்

விளம்பர வடிவமைப்பு: சசி & ஷாஷி

தயாரிப்பு மேற்பார்வை AP பால் பாண்டி 

PRO: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா

 *சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா*










அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. 


மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா.


இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்னாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு 'தி கேரம் குயின்' என பெயரிட்டு இன்று பிரமாண்டமாக பூஜையுடன் பட தொடக்க விழா நடை பெற்றது. இப்படத்தில் காஜிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கின்றார்


விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயின் காஜிமா தன் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார்.


கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் காளி வெங்கட் பேசியது: அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தின் கதைமிக சுவாரஸ்யமானது. முழு கதையும் மிகுந்த எமோஷனலானது. படம் பார்க்கிற ஒவ்வொரும் கண்டிப்பாக கண்ணீர் விடுவார்கள். அத்தனை அழுத்தமான கதை. படம் வெளியான பிறகு நிறைய பேசுகிறேன்.


தயாரிப்பாளர் நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் நாகேஷ் பாட்டில் பேசியது:

நான் பெல்லாரி மாவட்டம். சில தொழில்கள் செய்து வருகிறேன். எனக்கு தமிழில் ஒரு படம் தயாரிக்க ஆசை இருந்தது.  காஜிமா கதை என்னிடம் சொன்னார்கள் அந்த வலியும் வெற்றியும் என்னை பாதித்து, நானே அந்த கதையை எடுத்து இப்போது தயாரிப்பாளர் ஆகி விட்டேன். தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசை படுகிறேன் என்றார். 


இயக்குனர் முரளி பேசும் போது: நான் ஏற்கனவே படங்கள் இயக்கி இருந்த போதும் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒரு நல்ல உண்மை சம்பவத்தை படமாக எடுக்க தயாரிப்பாளரிடம் போன போது உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து படம் தயாரிக்க ஒப்புக் கொண்டார். அதே போல காஜிமா குடும்பத்தாரும் கதையை திரைக்கதையை உருவக்க முழு ஆதரவு தந்தார்கள். இப்போது மேடையில் பேசும் போது காஜிமா அப்பா பேச முடியாமல் கண் கலங்கினார். உண்மை தான் படம் பார்க்கும் ஒவ்வொரும் கண்கலங்கும் விதமாக படம் இருக்கும். படம் வெளியான பிறகு நான் பேசுகிறேன்.


உண்மையான கேரம் குயின் ஆன காஜிமா பேசும் போது: நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். இதற்கு என் அப்பாவும் குடும்பத்தாரும் தான் காரணம். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்த பணத்தை கொண்டு என்னை விளையாட அழைத்து செல்வார்.  இன்றைக்கு இந்த வெற்றியின் மூலம் கஷ்டம் தீர்ந்து அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். எல்லா பெண்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் திறமையை ஊக்குவித்தால் எல்லாராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடரவேண்டும். 


நடிகையும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையுமான கோமல் சர்மா பேசியது: கேரம் குயின் கதையை கேட்டபோது அப்படியோ என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. காரணம் நான் ஸ்குவாஷ் விளையாட்டில் பெற்ற பல அனுபவங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும். அந்தவகையில் இந்த கேரம் குயின் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். 


சிறப்பு அழைப்பாளரான தயாரிப்பாளர் எஸ்.கே.பிக்சர்ஸ் சம்பத், ஷீலா இளங்கோவன், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் எழுத்தாளர்  சௌரப் எம். பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நவீனகால குழந்தைகளுக்கான புதிய பாதையை வடிவமைக்கும் வகையில்

 *நவீனகால குழந்தைகளுக்கான புதிய பாதையை வடிவமைக்கும் வகையில் சென்னையின் முதல் 100% ரெசிடென்ஷியல் கேம்பிரிட்ஜ் பள்ளி ‘சேஜ்ஹில்’!*






நவீனகால கல்வி முறையில் துணிச்சலான புதிய பார்வையை வழங்கும் வகையில் சென்னை புறநகரில் முதன்முறையாக ரெசிடென்ஷியல் பள்ளியாக உருவாகியுள்ளது ’சேஜ்ஹில்’. சமகால குடும்ப வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பெற்றோர் ஒத்துழைப்புடன் கூடிய பள்ளியாகவும் இது இருக்கும். நகர வாழ்க்கையில் தொழில்- குடும்பம் என்ற இரட்டை குதிரையில் பெற்றோர்கள் சவாரி செய்து வர குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான நடைமுறை சிக்கல்களை சமநிலைப்படுத்த இருவருக்குமான இடமாகவும் ‘சேஜ்ஹில்’ இருக்கும். 


சர்வதேச கல்விமுறை, புதுமையாக்கம், கலாச்சார ஆய்வு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றை இணைக்கும் அணுகுமுறையை ‘சேஜ்ஹில்’ கொண்டுள்ளது. மாணவர்களை தேர்வுகளுக்கு மட்டுமே தயார்படுத்தாமல் வாழ்க்கை, அறிவுதிறன், படைப்புத் திறமை, எதிர்கால உலகத்திற்கு ஏற்றாற்போல நேரடி கள அனுபவங்களையும் கொடுத்து அவர்களை ‘சேஜ்ஹில்’ தயார்படுத்துகிறது. 


சென்னையின் கல்வி வடிவமைப்பில் இருந்து ‘சேஜ்ஹில்’லை தனித்துவமாக்குவது அதன் ‘Co-Parenting Value Delivery Engagement Model’. அதாவது, பள்ளியை விட்டு குழந்தை தள்ளி இருக்கும்போதும் பெற்றோரை குழந்தைகளின் வளர்ச்சியுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி புகைப்படங்கள், வாராந்திர காட்சிப்படுத்தல்கள், மாதந்தோறும் ஆக்டிவிட்டீஸ், பிரதிபலிப்புகள் மற்றும் காலாண்டு கொண்டாட்டங்கள் மூலம் பெற்றோர் அந்த சமயத்தில் இல்லாவிட்டாலும் இந்த நிகழ்வுகள் மூலம் அதை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இந்த அமைப்பு ஒரு கூடுதல் அம்சமாக சேர்க்கப்படாமல், பள்ளியின் அடிப்படை விஷயங்களில் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கல்விக்கு அடிப்படையான நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது. 

முழுமையான ரெசிடென்ஷியல் பள்ளியாக மட்டுமல்லாமல், அதற்கும் அப்பாற்பட்ட வீடு- பள்ளி சூழலை ‘சேஜ்ஹில்’ வழங்குகிறது. அங்கு குழந்தைகள் சுதந்திரம், அக்கறை, நம்பிக்கை, மற்றும் பொறுப்பையும் கற்றுக்கொள்கிறார்கள். பயிற்சி பெற்ற வழிகாட்டிகளால் வழிநடத்தப்படும் இந்தப் பள்ளியில் மாணவர்கள் உறவுகள், படைப்பாற்றல் மற்றும் நேர்மறையான சூழலில் வளர்கிறார்கள். 


நீலகேசவ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையால் ஆதரிக்கப்பட்டு, ஸ்ரீமதி நீலம்மாள் மற்றும் ஸ்ரீ கேசவலு நாயுடு ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் ’சேஜ்ஹில்’ கல்வி, குணநலன் மற்றும் சேவை ஆகியவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. குடும்பங்களுக்கும் நவீன பெற்றோர்களுக்கும் எப்போதும் இல்லாத அளவுக்கு பள்ளிகளின் இணக்கம் தேவைப்படும் இந்தக் காலக்கட்டத்தில் வளரும் குழந்தைகளின் ஆர்வத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும் ஒரு பள்ளியாக இது செயல்படும். ஒவ்வொரு குழந்தையும் தெளிவு, சமநிலை மற்றும் தைரியத்துடன் வளரும் ரெசிடென்ஷியல் பள்ளிதான் ‘சேஜ்ஹில்’.

Chennai’s First 100% Residential Cambridge School

 Chennai’s First 100% Residential Cambridge School 


Shaping a New Pathway forModern ChildhoodSagehill, the first school in Chennai to offer a full residential model,is opening its doors with a bold new vision for modern education.






Sagehill, located onthe city’s outskirts, introduces an entirely new paradigm: an International CreativePathway Program combined with a Co-Parenting Value Delivery Model thatresponds directly to the realities of contemporary family life.In a city where dual-career households, long commutes, and complex routines havebecome the norm, families often struggle with balancing aspirations for theirchildren with the pressures of everyday life. 


Sagehill recognises this gap and stepsforward with a school model built as much for parents as for children.At the heart of Sagehill’s identity is the International Creative Pathway Program,an approach that blends rigorous academic structure with creative inquiry, designthinking, cultural exploration, and real-world application. 


Students engage withlearning that is interdisciplinary, hands-on, and globally aligned — preparing themnot just for exams, but for life. Knowledge, skill, and experience intersect with events,spaces, and relationships in a manner that gives children the intellectual sharpness,creative dexterity, and emotional resilience needed for the future.


What sets Sagehill apart is its Co-Parenting Value Delivery Engagement Model, afirst in Chennai’s educational landscape. The school designs a structured rhythm ofengagement that keeps parents connected to their child’s growth even while the childis away at school.


Through daily snapshots, weekly showcases, fortnightly traditions,monthly reflections, and quarterly celebrations, Sagehill replaces parental absencewith meaningful presence. This system is not an add-on; it is built into the DNA ofthe school, transforming residential education into an experience of continuity,connection, and trust.


As a full residential school, Sagehill offers a boarding experience that goes beyondsupervision. It provides a carefully crafted home-in-school environment wherechildren learn independence with support, confidence with care, and responsibilitywith empathy. Guided by trained residential mentors, students live within acommunity where relationships, routines, creativity, and wellbeing are intentionallynurtured.


Supported by the Neelakesav Education and Research Trust, inspired by the ideals ofShrimati Neelammal and Shri Kesavalu Naidu, Sagehill stands on a foundation ofeducational purpose, character formation, and compassionate service.In a time when families need partnership more than ever, Sagehill arrives as a schoolthat understands the modern parent, honours the developing child, and bridges thedistance between aspiration and reality. A residential school where learning becomeslife and where every child grows with clarity, balance, and courage.

தி.மு.க வில் இணைந்தார் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்

 *தி.மு.க வில் இணைந்தார் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்*

*224 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்: கள நிலவரம் சிறப்பாக உள்ளது

-பி.டி.செல்வகுமார்*
















சினிமாத் துறையில் ஆளுமைமாக இருந்து, நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்தே அவருடன் பயணம் செய்துள்ளேன். விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்தது தொடங்கி, இரவு பகல் பார்க்காமல் விஜய் வளர்ச்சிக்காக மட்டுமே வாழ்ந்துள்ளேன். அவரது தந்தைக்கு அடுத்த நிலையில் இருந்து பணியாற்றியவன் நான். அடுத்த கட்டங்களில் அவருடன் சேர்ந்த தவறான நட்புகளால், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட குடும்ப உறவுகளையும், என் போன்றவர்களையும் புறக்கணித்து விட்டார்.  

தவெக ஆரம்பித்ததும் உடன் இருந்து கஷ்டப்பட்டவர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என அறிவித்து விட்டு, இன்றைக்கு ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட உதவாக்கரைகளை சேர்த்துள்ளார். இந்த கூட்டத்தோடு, செங்கோட்டையனும், நாஞ்சில் சம்பத்தும் இணைந்துள்ளதை பரிதாபமான செயலாக பார்க்கிறேன். மிகக்கடினமாக காலங்களில் அவருடன் இருந்தவர்களை மதிக்காமல் செயல்பட்டு வருவது வேதனையளிக்கிறது. மக்களோடு, மக்களாக இணைந்து நடிகர் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது. நிலவு எப்படி தூரத்தில் உள்ளதோ, அதுபோல தான் விஜய்யும். நிலா 15 நாள் தெரியும். மீதி நாள்களில் மறைந்து விடும் அதுபோலத்தான் அவரும். எந்த காலத்திலும் அவரால் மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாது. 

தனித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கலப்பை மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி தென் மாவட்டங்களில் கொரோனா காலகட்டத்திலும் சரி, மழையால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் சரி, தீவிரமாக களப்பணியாற்றி வருகிறேன். இது மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கலையரங்கம், விளையாட்டு மைதானங்கள் அமைத்து கொடுத்துள்ளேன். இது மட்டுமின்றி இளைஞர்கள், பெண்களின் எதிர்காலத்துக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறேன்.

இந்த நிலையில், தமிழக மக்களின் தேவை அறிந்து செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் தலைமையில் திமுகவில் இணைகிறேன். மக்களின் தேவையறிந்து இரவு, பகல் பாராமல் மக்களுக்காக சுறு சுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் சிறந்த முதல்வர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருடன் இணைந்து துணை முதல்வர் உதயநிதியும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழகம் முழுவதும் மக்கள் பணி ஒன்றே தாரக மந்திரமாக கொண்டு திராவிட முன்னேற்றக்கழக தோழர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நானும் இந்த இயக்கத்தில் சேர்ந்து உழைக்க தயராக உள்ளேன். 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தென்மாவட்டங்களில் எனது அறப்பணி சிறப்பாக தொடரும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது என் உயிரோடும், ரத்தத்தோடும் கலந்தது. முன்பைவிட பலமடங்கு திமுகவுக்காக உழைக்க தயாராக உள்ளேன். 

2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகள் இலக்கு என்றாலும், 224 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு முதல்வரின் அர்ப்பணிப்பு காரணமாக தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக உள்ளது. திமுக தோழர்களுடன் இணைந்து எனது உண்மையான பங்களிப்பை வழங்குவேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் டி.எஸ்.பொன் செல்வி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் அனிதா, மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் கௌதம் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்தவர்களும், விஜய் ரசிகர்களும் திமுகவில் இணைந்தனர்.

எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது

 *எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!*



*45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்திய “ கிராண்ட் பாதர் “ ( GRAND FATHER) படக்குழு  !!*


குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.


 ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம்  சேர்ந்து,  ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.


நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில்,  ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.


மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி  நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ செய்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக   45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில்  முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.


ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள  இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க,  கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.


குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.


இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும்  பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் “ கிராண்ட் பாதர் “  படமும்  பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.


இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில்  அதிகாரப்பூர்வமாக வெளியாகும்..

அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ்

 *அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம்,  பூஜையுடன் இனிதே துவங்கியது!!*



முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில்,  பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும்  ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.


அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில்,  ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.


தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன்,  மற்றும் வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப்  பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.


இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.



தொழில்நுட்ப குழு


இயக்கம் - ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு - பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

ஒளிப்பதிவு - அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங் - அருள் மோசஸ்.A

இசை - ஷான் ரோல்டன்

கலை இயக்கம்- ராஜ் கமல்

உடை வடிவமைப்பு - நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட் - Action சந்தோஷ்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது

 *கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!*







சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் குறித்து ரசிகர்களிடையே தேசிய அளவில் கூட பெரும் ஆவல் நிலவி வருகிறது.


சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோரின் புதுமையான லுக்குகளை மையப்படுத்திய அறிவிப்பு போஸ்டர் — படத்தின் மர்மத்தையும் ஆர்வத்தையும் பலமடங்கு கூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய ரிலீஸிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.


முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களான டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா ஆகியோர் வடிவமைத்த அதிரடி காட்சிகள், சத்யா ஹெக்டேவின் கவர்ச்சியான ஒளிப்பதிவு, கே.எம். பிரகாஷின் துல்லியமான எடிட்டிங் ஆகியவை படத்தின் தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. அனில் குமார் எழுதிய வசனங்களும் ஜானி பாஷா அமைத்துள்ள ஆற்றல்மிக்க நடனக் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் வலிமையைக் கூட்டுகின்றன.


நடிகர்கள்

சிவ ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி மற்றும் பலர்


தொழில்நுட்ப குழு

தயாரிப்பு நிறுவனம்: சுரஜ் புரொடக்ஷன்

தயாரிப்பாளர்கள்: திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி

கதை, இசையமைப்பு & இயக்கம்: அர்ஜுன் ஜன்யா

ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே

எடிட்டர்: கே.எம். பிரகாஷ்

சண்டை பயிற்சி : டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா

நடன இயக்குனர்: ஜானி பாஷா

வசனம் : அனில் குமார்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)