Featured post

தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்

 *தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்* *‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள்...

Tuesday, 17 February 2026

தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்

 *தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்*



*‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள்*


திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.


Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள்  தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.


முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.


‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.


‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.


இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

Maragadha Naanayam 2 Begins with Grand Pooja! Fantasy Comedy Blockbuster Returns

 *Maragadha Naanayam 2 Begins with Grand Pooja!  Fantasy Comedy Blockbuster Returns!*








*Actor Karthi, Arya and Filmmaker Venkat Prabhu kick-start the shoot with their presence*  


Following the remarkable success of Maragadha Naanayam (2017), a fantasy comedy that carved a unique space in Tamil cinema with its magical premise and humor, the much-anticipated sequel Maragadha Naanayam 2 has officially commenced production.


Marking the auspicious occasion of Shivaratri, the film’s shooting began Yesterday (February 16, 2026) with a traditional pooja ceremony held in Chennai. Actor Karthi sounded the clapboard, actor Arya and director Venkat Prabhu ceremoniously called out “Camera Rolling, Action,” adding to the celebratory spirit of the launch. Several prominent filmmakers associated with Axess Film Factory were also present to grace the occasion.


Produced by Sudhan Sundaram, Manish Singhal, Durgaram Choudhary, Dev & KV Durai, under the banners of Passion Studios, Dangal TV, RDC Media, Axess Film Factory and Good Show, the film is directed by ARK Saravan, who earlier directed the Blockbuster ‘Maragadha Nanayam’. 


Maragadha Naanayam 2 features an ensemble cast including Aadhi, Sathyaraj, Priya Bhavani Shankar, Nikkii Galrani Pinisetty, Munishkanth, Anandaraj, Danie, Arunraja Kamaraj, and Muruganandam in pivotal roles.


The technical team comprises Dhibu Ninan Thomas (Music), PV Shankar (Cinematography), NK Rahul (Art), Thirumalai Rajan R (Editing), Rajesh Kannan (Dialogues), and PC Stunts (Action).


With expectations soaring since its announcement, Maragadha Naanayam 2 promises bigger laughs, grander magic, and an even more thrilling cinematic experience. The film’s shooting will progress continuously and more interesting updates on the project will be revealed soon. 



*Star-cast* 


Aadhi 

Sathyaraj

Priya Bhavani Shankar

Nikkii Galrani Pinisetty

Munishkanth

Anandaraj

Danie

Arunraja Kamaraj 

Muruganandam



*Technical Crew*


Director- ARK SARAVAN

Music Director- DHIBU NINAN THOMAS

DOP - PV SHANKAR

Art Director- NK RAHUL

Editor-THIRUMALAI RAJAN R

Dialogue – RAJESH KANNAN

Stunts- PC STUNTS

Production Executive - SS SRIDHAR

Costume Designer – A. KEERTHIVASAN

Choreography – RAGHU THAPA

Executive Producer - MOHAN P

Production Manager - S PRABHAKAR

Sound design - SYNC CINEMA

Sound mixing - UDHAYKUMAR

VFX - RESOL FX

VFX Supervisor – KIRAN RAGHAVAN

Marketing & Promotion - DEC

PRO - Suresh Chandra-Abdul S Nassar 

Publicity design – VIYAKI

Legal Advisor - MV BHASKAR

காமெடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம்

 *காமெடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது!*








*நடிகர்கள் கார்த்தி, ஆர்யா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் படப்பிடிப்பு துவக்கம்!*


கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.


சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்‌ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். 


’மரகத நாணயம்2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்யமான திரையனுபவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 


*நடிகர்கள்:* இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்கம் – ஏஆர்கே சரவன் ,

இசை – திபு நினன் தாமஸ்,

ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,

கலை இயக்கம் – என்.கே. ராகுல்,

படத்தொகுப்பு – திருமலை ராஜன் ஆர்,

வசனம் – ராஜேஷ் கண்ணன்,

சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,

தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,

உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,

நடன அமைப்பு – ரகு தாபா,

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் பி,

தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,

ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,

ஒலி கலவை – உதயகுமார்,

விஎஃப்எக்ஸ் – ரெசோல் FX,

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,

மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC,

மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,

பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,

சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.

கிகி & கொகொ' படத்தயாரிப்பாளர்களின் 'கலர் பென்சில்' ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!

 *'கிகி & கொகொ' படத்தயாரிப்பாளர்களின் 'கலர் பென்சில்' ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!*





குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’.


குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. 


கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த நிகழ்வில் பேசியதாவது, ”குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்த காலத்தில் அதை திணித்து வருகிறார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்பதே பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது. அதை மாற்றும் விதமாகதான் ‘Joy of Y’ என்பதை கலர் பென்சிலில் உருவாக்கியுள்ளோம். இதனால், குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக இருக்கும். அதைத்தான் நாங்கள் உத்திரவாதம் தருகிறோமே தவிர இங்கு படிப்பதால் குழந்தைகள் ஐஐடி போய்விடுவார்கள், நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்பது கிடையாது” என்றார். 


கலர் பென்சில் தலைமை செயல் அதிகாரி, மீனா சப்ரியா பேசியதாவது, “கோடைகால சிறப்பு வகுப்புகளும் இங்கு நிறைய தொடங்க இருக்கிறோம். ஜப்பான் மொழி, ஆரிகாமி போன்றவற்றை குழந்தைகளை எண்டர்டெயின் செய்யும் விதமாக டிப்ளமோ கிளாஸஸ் எடுக்க இருக்கிறோம். இங்கு கட்டணம் எதுவும் கிடையாது. கிட்டத்தட்ட ரூ. 400 மதிப்பிலான புத்தகத்தை வாங்கி நீங்கள் அதில் பயிற்சி பெறலாம். இந்தியாவில் முதன் முறையாக 34-க்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் ஒரு டிரெயினிங் மாடல் இங்கு இருக்கிறது. குழந்தைகளின் படிப்பிற்கென்று பொருட்கள் விற்பனையாகும் இந்தியாவின் முதல் ஸ்டோர் இதுதான். 3300 சதுர அடியில் அமைந்திருக்கிறது. அடுத்த வருடம் ஐந்து ஸ்டோர் இந்தியாவில் தொடங்க இருக்கிறோம். கற்றலும் குழந்தைகளின் மகிழ்ச்சியுமே ‘கலர் பென்சிலி’ன் நோக்கம்” என்றார். 


நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு பேசியதாவது, “இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. நான் உள்ளே வரும்போதே நிறைய குழந்தைகள் குதூகலமாக இந்த ஸ்டோரில் இருந்ததை பார்க்க முடிந்தது. இது தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார். 


கலர் பென்சில் பிராண்ட் அம்பாசிடர், மைக்செட் ஸ்ரீராம் பேசியதாவது, “சென்னையில் மிகப்பெரிய முயற்சியாக ‘கலர் பென்சில்’ தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துக்கள்! அறிவும் மொழியும் குழந்தைகள் சிறப்பாக வளர முக்கியமான விஷயங்கள். அதை அனுபவத்தின் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்வது சிறப்பான விஷயம். என்னை கலர் பென்சிலின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததற்கு நன்றி” என்றார்.

தி.மு.கவில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் பாராட்டு...

 தி.மு.கவில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் பாராட்டு...




நடிகர் விஜய் உதவியாளர் செல்வத்திற்கு ரூபாய் 50,000 வழங்கி பி.டி செல்வகுமார் உதவி


சினிமாவில் நடிகர் விஜய் யின் மேலாளராகவும் பல படங்களை வெளியிட்டு அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அவருக்கு  மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்காக திரையுலகத்தை சார்ந்த அனைவரும் பாராட்டி வருகின்றனர் 


முரளி ராம நாராயணன் (தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ) பேசியதாவது


தேனாண்டாள் பிலிம்ஸ் க்கும் எனது தந்தை ராம நாராயணனுக்கும் மிகவும் வேண்டியவர் பல படங்கள் வெளிவர கடினமாக உழைத்தவர்  பி.டி செல்வகுமார். இவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல பொறுமையாக அன்பினால் எதையும் சாதிக்க கூடியவர். அவரை ஃபாலோ பண்ணு என்று விஜய்யிடம் கூறி யி ருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். விஜயின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணம் என்று எனது தந்தையும் கருமாரி கந்தசாமியும் சொல்லுவார்கள்.. பல பிரச்சினைக்குரிய படங்களை இலகுவாக பேசி முடிப்பார்.. இவருக்கு  தி.மு.கவில் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து மனமார பாராட்டுகிறேன்.


தமிழ்குமரன் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் சங்கத் துணைத் தலைவரும் லைக்கா நிறுவனத்தின் சி.இ.ஓ-மான தமிழ் குமரன் பேசும் போது 


பி.டி செல்வகுமார் சாருடன் 15 ஆண்டுகால நட்பு எனக்கு உண்டு.. பெரிய வியூக வகுப்பாளர் விஜய் போன்ற ஒரு நடிகரை உச்சத்துக்கு கொண்டுவர போராடியவர் பொறுமையும் பணிவும் தான் அவரது பலம்.. நான் தயாரித்த என்றென்றும் புன்னகை படத்திற்கு ஜீவா கால்ஷீட் தந்து பல உதவிகளை செய்தவர் அவர் அசாத்திய திறமை சாதுர்யமும்  பல படங்கள் வெளிவர உதவியது... அவர் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் அரசு பள்ளிகளுக்கு 25 கலையரங்கங்கள் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.. இன்று அவருக்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் பொறுப்பு தி.மு.க வழங்கியுள்ளது இன்னும் அவருடைய உழைப்புக்கும் நேர்மைக்கும் பல பதவிகள் வரவேண்டும் 


சோழா பொன்னுரங்கம் - தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் சுறுசுறுப்பானவர் எந்த வேலையாக இருந்தாலும் முடியும் என்பர் அவரது பயணத்தில் எதுவும் நடக்க முடியாது என்று இல்லை பலருடைய வெற்றிக்கு ஏணியாக இருந்தவர் 


நடிகர் உதயா - 


பிடி செல்வகுமார் நல்ல பண்பாளர் சினிமாவில் பல பிரச்சினைகளை ஊதி பெரிதாக்கி விடுவார்கள் ஆனால் அத்தனையும் பொசுக்கி சாதிப்பவர் அவர் விஜய் மட்டுமல்ல பல திரைப்படங்கள் வெளிவர உதவியவர் இரும்புத்திரை திரைப்படம் வெளிவர போராடி வெளிக்கொண்டு வந்ததை நான் அறிவேன் அவருக்கு தி.மு.க வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்தது சரியானதே இன்னும் பல அவரது சாதனைகள் தொடரனும் 

 

விஜய் உதவியாளர் செல்வத்திற்கு ரூபாய் 50,000 உதவி செய்த பீ.டி செல்வகுமார் 

 

செல்வம் பேசியதாவது - விஜய்க்கு டீ, ஜூஸ் சாப்பாடு கொடுத்து குடை பிடித்து உதவியாளராக இருந்தவர் செல்வம் இவர் தற்போது வேலை இழந்து ஆபரேஷன் செய்யப்பட்டு அவஸ்தைப்படுகிறார்.. அவரிடம் உதவிக்கு போராடிய போது தான் பி.டி செல்வகுமார் ஐம்பதாயிரம் வழங்கி உதவி புரிந்தார்...அதை அவரது மனைவி மகள் பெற்று கொண்டனர்.. இது காலத்தால் செய்த உதவி விஜய் அவர்கள் என்னை கைவிட்டு விட்டார் ஆனால் பிடி செல்வகுமார் உதவியுள்ளார் ஏற்கனவே நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இறந்தபோது உதவினார் தாடி பாலாஜிக்கு உதவினார் வறுமையால் வாடும் பல நடிகர்களுக்கும் உதவியுள்ளார்...இன்று எனக்கும் உதவி மட்டும் இல்லாமல் படத்தில் வேலை பார்க்க வேலையும் வாங்கி தந்துள்ளார் மனித நேயம் சாகவில்லை பி.டி செல்வகுமார் ரூபத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறது எனக்கு அவர்தான் கடவுளாக தெரிகிறார் என்று கூறி முடித்தார்..

அன்பான தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள்,மற்றும்

 அன்பான தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள்,மற்றும் 





திரையுலக சொந்தங்களுக்கு நம்மில் ஒருவரான தயாரிப்பாளர், இயக்குனர்,பல படங்களை   வெளியிட்ட பி.டி செல்வகுமாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி வழங்கியுள்ளதை யொட்டி,    


அவரை பாராட்டி கெளரவிக்கும் விழா இன்று நடைபெற்றது... இவ் விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்   முரளி ராமநாராயணன், துணை தலைவர் தமிழ் குமரன், விடியல் ராஜு, ராஜா, முருகன், சி வி குமார், விஷ்னு ஹாசன் நடிகர், ஏ எல் உதயா, நடிகர் விஜித், எம். எஸ். முருகராஜ், ஆகியோர் பி. டி. செல்வகுமார் அவர்களை பாராட்டி பேசினர்


நிகழ்வில் 10 ஏழைப் பெண்களுக்கு தொழில் செய்ய நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,

 நடிகர் விஜய்யின் உதவியாளர் செல்வம் என்பவருக்கு 50000 நிதி உதவியும் படங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறார். அதோடு 

தமிழக அரசின் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்ற தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது...

Monday, 16 February 2026

THE JOURNEY RETURNS WITH A LEGACY

 THE JOURNEY RETURNS WITH A LEGACY


RAAJKAMAL FILMS INTERNATIONAL

KAMAL HAASAN




PRESENTS

SIVAKARTHIKEYAN

"SEYON"

DIRECTED BY SIVAKUMAR MURUGESAN

MUSIC BY SANTHOSH NARAYANAN

PRODUCED BY KAMAL HAASAN - R. MAHENDRAN

RaajKamal Films International and Turmeric Media, proudly announces "SEYON", starring Sivakarthikeyan in a power-packed and dynamic new role, directed by Sivakumar Murugesan. Positioned as a grand rural commercial entertainer, "SEYON" is set to be the biggest family spectacle of 2026, blending rooted emotions, mass appeal, and wholesome entertainment for audiences across generations.


Marking a significant reunion, Sivakarthikeyan join hands once again with RaajKamal Films International after the blockbuster success of Amaran, a film that garnered both critical acclaim and commercial triumph. This renewed collaboration further strengthens a creative partnership that continues to push boundaries.


Produced by Kamal Haasan and R. Mahendran, the film brings together powerful storytelling and a compelling cinematic vision. Director Sivakumar Murugesan, stepping into his second directorial venture after the much-awaited soon to be released  - Thaai Kizhavi.


Adding to the excitement, this project marks the first-ever collaboration between RaajKamal Films International, Sivakarthikeyan, and acclaimed composer Santhosh Narayanan. With his distinctive musical style and chart-defining soundtracks, expectations are soaring high for what promises to be a powerful and memorable album.


Backed by the legacy of RaajKamal Films International and the contemporary vision of Turmeric Media, "SEYON" is poised to be one of the most anticipated and celebrated releases of 2026.


Further updates on the cast, crew, and release plans will be announced soon.

வெற்றிப் பயணம் தொடர்கிறது…

வெற்றிப் பயணம் தொடர்கிறது… 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல்

கமல்ஹாசன்

வழங்கும்

சிவகார்த்திகேயனின்

"சேயோன்" 


இயக்கம்: சிவகுமார் முருகேசன்


இசை: சந்தோஷ் நாராயணன்


தயாரிப்பு: கமல்ஹாசன் - ஆர். மகேந்திரன





ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் "சேயோன்".


துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது. 


நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான ‘கமர்ஷியல் எண்டர்டெயினராக’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக "சேயோன்" அமையும்.


அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து புதிய உயரங்களை எட்டும் என்பதில் ஐயமில்லை.



கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் சேயோன், வலிமையான கதைக்களத்தையும் ஈர்க்கக்கூடிய திரைக்காட்சிகளையும் ஒன்றிணைக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் ‘தாய்க்கிழவி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிவகுமார் முருகேசனின் இரண்டாவது படம் இது. 


முதன்முறையாக ராஜ்கமலுடனும், சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது இத்திரைப்படத்தின் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் டர்மரிக் மீடியாவின் நவீனத்துவப் பாய்ச்சல் ஆகியவற்றுடன் உருவாகும் "சேயோன்" 2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழும்.


இப்படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியாகும் தேதி குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.


Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு

 *Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.*







மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது.


ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர்.


Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது.


ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. நடனக் கலைஞர்களைத் தாண்டி, இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் “Yethu” பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர்.


ஆப்பிரிக்காவின் பிரபலமான “Hypers Kids Africa” என்ற குழந்தைகள் இசைக்குழு “Yethu” பாடலுக்கு நடன ரீமேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வைரல் அலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான் அவர்களே அந்த வீடியோவில் “Thank you for the love. You guys are terrific” என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த குழந்தைகள் குழு, “Happy to see your comment. We love you too” என்று தெரிவித்துள்ளது. இந்த தருணம் ரசிகர்கள் மற்றும்  இப்பாடலுக்கு மேலும் reels தயாரிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, இப்பாடல் கலாச்சாரம் தாண்டி எல்லோராலும் கொண்டாடப்படுகிறது என்பதை  உறுதிப்படுத்திருக்கிறது


“Yethu” பாடலில் நடனப்புயல் பிரபுதேவா மிகவும் கடினமான நடன அசைவுகளை எளிதாக ஆடி அசத்திய விதத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

 A R Rahman அவர்களின் துள்ளலான இசையுடன் கூடிய பிரபுதேவாவின் அதிரடி நடனம், பாடலின் ஒளிப்பதிவு அமைப்பு — இவை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இப்பாடல்  உலகமெங்கும் வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது.


இப்பாடலின் மீது ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ‘Yethu’ ஒரு உலகளாவிய நடன கீதமாக மாறி வருகிறது. தாளம், ஒற்றுமை மற்றும் எல்லைகளை தாண்டிய படைப்பாற்றலை கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறியுள்ளது “Yethu” பாடல்.