Featured post

Leader Movie Review

Leader Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம leader படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல legend saravana தான் hero வா ந...

Friday, 3 April 2026

Leader Movie Review

Leader Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம leader படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல legend saravana தான் hero வா நடிச்சிருக்காரு   இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Durai Senthilkumar . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்தோட கதை தூத்துக்குடி ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. இங்க தான் legend saravana ஒரு garage ல car mechanic  வேலை பாத்துட்டு வராரு.  தூத்துக்குடி துறைமுகத்துல நடக்கற illegal activity னால மக்களுக்கு ஏதோ ஒரு பெரிய ஆபத்து வர போகிறது னு police சந்தேக படுறாங்க. இந்த illegal activity அ expose பன்னுறதே  legend saravana  தான். இதை அவரு எப்படி பண்ணாரு, எதுக்காக பண்ணாரு, இந்த விஷயத்துக்கு இவரோட வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு. 

legend saravana வை பக்கவா hero மாதிரி இந்த படத்துல கொண்டு வந்திருக்காரு. நெறய mass ஆனா moments லாம் வச்சு ஒரு நல்ல commercial படத்தை கொண்டு வந்திருக்காரு director . படத்துல வர characters க்கும் நல்ல detailing குடுத்திருக்காரு. மக்களுக்கு பிடிக்கிற மாதிரி oneline punch dialogues , action sequences , emotional scenes னு எல்லாமே நல்ல குடுத்திருக்காரு. படத்துல நெறய twist and turns அ குடுத்து கதையை இன்னும் interesting அ கொண்டு போயிருக்காங்க. interval block scene ல வர vfx, slowmotion walk னு எல்லாமே  audience க்கு goosebumps குடுக்கற மாதிரி அமைச்சிருக்கு. 

இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது legend saravana ஓட acting அ பத்தி சொல்லியே ஆகணும். இதுக்கு முன்னாடி இவரு நடிச்ச படத்தை விட இதுல நல்ல நடிச்சிருக்காரு. இவரோட body language , dialogue delivery , action scenes னு எல்லாமே perfect அ பண்ணிருந்தாரு. andrea அப்புறம் shaam ஓட நடிப்பும் நல்ல இருந்தது. payal rajput ஓட character க்கு இன்னும் importance குடுத்து இருந்தா நல்ல இருந்திருக்கும். sandhosh pradap ஓட நடிப்பும் எதார்த்தமா இருந்தது. மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு perfect அ நடிச்சிருக்காங்க. 

இந்த படத்தோட technical team அ பத்தி பாக்கும்போது camera work super அ இருக்கு. vfx scenes அ இருக்கட்டும், சின்ன சின்ன AI animation shots அ இருக்கட்டும் எல்லாமே நல்ல குடுத்திருக்காங்க. pradeep e raghav ஓட editing பக்காவா இருக்கு. audience ஓட கவனம் எங்கயும் சிதறாத மாதிரி கதையை குடுத்திருக்காரு. ghibran ஓட songs அப்புறம் bgm இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருக்கு. அதுமட்டும் இல்ல ஒரு முருகர் பாட்ட rehash பண்ணிருக்காங்க. இந்த song தான் இந்த படத்துல highlight அ அமைச்சிருக்கு. action scenes எல்லாமே பாக்க stylish ஆவும் அட்டகாசமாவும் execute பண்ணிருந்தாங்க. இதுக்கு stuntmasters க்கு பெரிய கைதட்டலே குடுக்கலாம். 

விறுவிறுப்பான கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி

 *விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி*



சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம்.


தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி - பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது.


வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்ல — அது பெருமை, பொறுமை மற்றும் அவரது அடையாளத்தின் உருவகமாக திகழ்கிறது. பலமும் பாரம்பரியமும் சோதிக்கப்படும் அரங்குகளில், பாண்டிமுனி எதிர்பார்ப்புகளை முறியடித்து, மரியாதையை வென்று, உடைக்க முடியாத மனவலிமையின் சின்னமாக மாறுகிறது. இது வெற்றிகளைப் பற்றிய கதை மட்டுமல்ல — ஒற்றுமை, நம்பிக்கை, மனிதன் மற்றும் காளை இடையேயான உறவைப் பற்றிய கதை.


தமிழ்நாட்டின் கிராமப்புறத்தின் உணர்ச்சிகரமான பின்னணியில் அமைந்துள்ள ‘வடம்’, மஞ்சு விரட்டின் பாரம்பரியத்தையும், பரபரப்பையும் இதுவரை இல்லாத அளவில் பதிவு செய்கிறது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்உலகில், ஒவ்வொரு சவாலும் உணர்ச்சிபூர்வமானது, ஒவ்வொரு வெற்றியும் பாரம்பரியத்தின் பாரத்தை சுமக்கிறது. பாண்டிமுனி மற்றும் வெற்றியின் பயணம், வெறுமனே பார்வையாளர்கள் பார்ப்பதற்காக மட்டும் அல்ல அது ஒரு அனுபவத்தை கொடுக்கும் ஓர் உண்மையான அண்டர்டாக் கதையாக விரிகிறது.


விமல், நட்ராஜ் சுப்பிரமணியம் (நட்டி), பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் கேந்திரன் இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைப்பில், உணர்ச்சி, உற்சாகம் மற்றும் கலாச்சார ஆழம் இணைந்துள்ளன.


விமல் கூறுகையில்:

"இந்தப் படத்தில் காளையுடன், குறிப்பாக பாண்டிமுனியுடன் பணியாற்றியது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காலப்போக்கில் உண்மையான ஒரு பந்தம் உருவானது — அது நடிப்பு அல்ல, வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானது."


இயக்குனர் கேந்திரன் கூறுகையில்:

"‘வடம்’ உருவாக்கத்தின் நோக்கம், நமது கலாச்சாரத்தின் வேர்களை உண்மையாகச் சொல்லி, அதன் உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகும். நடிகர்களையும் காளையையும் அந்த அளவிற்கு தயார்ப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே இந்தப் படத்தின் தனித்தன்மை."


நட்டி கூறுகையில்:

"‘வடம்’ எனக்கு மிகவும் நெருக்கமான படம். இது நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்போது சன் NXT மூலம் இதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சியான விஷயம்."


டி. இமான் கூறுகையில்:

"இந்தப் படத்தின் இயல்புத்தன்மை, இசைக்கும் ஒலிக்கும் ஒரு புதிய அணுகுமுறையை தேவைப்படுத்தியது. மஞ்சு விரட்டு என்பது பார்க்கப்படுவது மட்டும் அல்ல — அது உணரப்பட வேண்டியது. அந்த ஆற்றல், குழப்பம் மற்றும் புயலுக்கு முன் நிலவும் அமைதியை இசையில் பதிவு செய்வது சவாலாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது."


‘வடம்’ படத்தின் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையை அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அது கலாச்சாரத்தை நமக்கு அதன் வாழ்வியலோடு இயல்பாகக் காட்டுகிறது.  பாண்டிமுனியின் உயர்வும், அதைச் சுற்றியுள்ள மனித உணர்ச்சிகளும், மஞ்சு விரட்டின் பாரம்பரியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மரியாதையாக இந்தப் படம் திகழ்கிறது.


‘வடம்’ தற்போது சன் NXT-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது... காணுங்கள், எங்கேயும்... எப்போதும்...


சன் NXT பற்றி:


சன் NXT, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு விருப்பமான முன்னணி OTT தளமாக திகழ்கிறது. 4000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 44-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், 7-க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கங்கள் ஆகியவற்றுடன், உயர்தர தென்னிந்திய பொழுதுபோக்கை வழங்குகிறது.


திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரலை ஒளிபரப்புகள் மற்றும் விரைவான வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது.

Thursday, 2 April 2026

Carmeni Selvam Movie Review

 Carmeni Selvam  Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம carmeni selvam  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Samuthirakani, Lakshmipriyaa, Gautham Menon, Abhinaya னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது ram chakri .  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த உலகத்துல இருக்கற எல்லாரும் வேலைக்கு போறதே சம்பளத்துக்காக தான். அந்த சம்பள பணத்தை வச்சு தான் வாழக்கை க்கு தேவையான, ஆசைப்படுற எல்லா விஷ்யத்யும் நிறைவேத்திக்க முடியும். என்னதான் வருஷத்துக்கு நெறய பண்டிகை வந்தாலும் மாசாமாசம் வர சம்பள நாள் கண்டிப்பா கொண்டாட்டமா தான் இருக்கும். இந்த பணத்தை நம்ம செலவு பண்ணுற விதம் னு ஒன்னு இருக்கு. ஒரு விஷயத்துக்கு செலவு பண்ணும்போது அது அவசியமா னு யோசிக்கிறது ரொம்ப முக்கியம். இந்த மாதிரி financial choices அ பத்தி பேச வைக்கிற படம் தான் இந்த carmeni selvam . carmeni க்கு அர்த்தம் 

கடவுள் விஷ்ணு, செல்வம் ன்ற வார்த்தைக்கு அர்த்தம் பணவரவு னு சொல்லலாம். பணத்தோட dark side யையும் சொல்லுற விதமா இந்த படம் இருக்கும் னு சமுத்திரக்கனி ஒரு interview ல சொல்லிருக்காரு. 


selvam அ நடிச்சிருக்க சமுத்திரக்கனி driver அ வேலை பாத்துட்டு இருக்காரு, shanthi யா  நடிச்சிருக்க lakshmipriya ஒரு street food கடைய நடத்திட்டு இருக்காங்க. இவங்க lower middle class family யா சேந்தவங்க. இதுல இருந்து வர பணத்தை வச்சு தான் குடும்பத்தை நடத்துறாங்க. இருந்தாலும் இவங்களோட situation ரொம்ப கஷ்டமா தான்  இருக்கும். shanthi குடும்பத்துக்கு பணம் வேணும் னு நெறய பேசிக்கிட்டே இருப்பாங்க. இதெல்லாத்தயும் கேட்டுகிட்டு இருக்கற செல்வம் ஒரு கட்டத்துக்கு மேல பேராசை படுற ஒரு ஆளா மாறிடுறாரு. படத்தோட ஆரம்பத்துல வர பணம் போதும் ன்ற மனநிலைமை ல இருக்கற selvam அ காமிப்பாங்க. இப்போ பிரச்சனையே இவங்க வாழுற வாழக்கை அ பத்தி குறை சொல்லுற இந்த society தான். இவரோட தங்கச்சி பொண்ணு வயசுக்கு வந்திருப்பாங்க. அந்த பொண்ணுக்கு தாய்மாமன் ன்ற முறை ல சீர் செய்யணும். இருக்கற பணத்தை வச்சு அவரோட வசதிக்கு ஏத்த மாதிரி சீர்க்கு ஏற்பாடு பண்ணுறாரு செல்வம். இதெல்லாம் பத்தாது இன்னும் பெருசா பண்ணனும் னு shanthi நினைக்கறாங்க. அதுனால அவங்களோட தாலி chain அ வித்து இன்னும் பெருசா சீர்க்கு ready பண்ணுறாங்க. இதெல்லாம் அந்த function  க்கு கொண்டு வந்தாலும், relations எல்லாரும் இவங்க ரெண்டு பேரையும் இளக்காரமா தான் பாக்குறாங்க. 


இதுல இருந்து தான் selvam க்கு பணம் மேல பேராசை வருது. இவங்களோட பையனும் வளந்துதுக்கு அப்புறம் எனக்காக நீங்க என்ன வச்சிருக்கீங்க னு கேட்ட என்ன சொல்லுறது னு ரெண்டு பேரும் யோசிக்க ஆரம்பிக்குறாங்க. அதுல இருந்து தான் சொத்தை சேக்கணும் னு இவங்களோட பாதையும் மாறுது. இந்த மாதிரி பணத்தை சேக்கறது, சொத்தை சேக்கணும் ன்ற என்னத்துக்கு அடித்தளம் போடுறதே society தான் ன்றதை ரொம்ப தெளிவா இந்த படத்துல சொல்லிருக்காங்க. EMI ன்ற விஷயம் இப்போ சர்வசாதாரணமா போச்சு, இது இப்போ ரொம்ப முக்கியமா ன்ற கேள்வி இந்த படத்தை பாக்கும்போது தோணும். சீக்கிரமா பணத்தை சம்பாதிக்கலாம் னு சொல்லுற முக்காவாசி விஷயங்கள் தப்பா தான் முடியும். selvam  , owner ஓட car அ taxi மாதிரி மாத்தி ஓட்ட ஆரம்பிக்குறாரு. owner car ல இருக்கற white number plate அ yellow colour ல மாத்துறாரு. இதை பாத்த selvam ஓட பையன்,  எதுக்காக numberplate அ மாத்துனீங்க னு கேட்கற , அதுக்கு அவரும் வெள்ளையா இருந்த சம்பாதிக்க முடியாது னு சொல்லுறாங்க பா னு பதில் சொல்லுறாரு. இதுல இருந்தே இவரோட situation அ புரிஞ்சுக்கலாம்.   

reality ல நடக்கற நெறய விஷயங்களை இந்த படத்துல சொல்லிருப்பாங்க. உதாரணத்தக்கு, குடும்பத்துக்காக வெளிநாட்டு ல போய் சம்பாதிக்கிறது, சொத்து சேக்கணும் ண்றதுக்காக குடும்பத்தை விட்டு பல வருஷங்களா வேற எடத்துல வேலை பாக்குறது னு அவங்களோட கஷ்டம் னு எல்லாத்தயும் இதுல director காமிச்சிருக்காரு. இப்போ இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது samuthirakani ஓட acting எப்பவும் போல super அ இருந்தது. lakshmipriya ஓட நடிப்பு எதார்த்தமாவும் simple ஆவும் இருந்தது. abhinaya அப்புறம் கெளதம் vasudev menon ஓட நடிப்பும் நல்ல இருந்தது. இருந்தாலும் இவங்க characters க்கு இன்னும் importance குடுத்து இருந்த இன்னுமே நல்ல இருந்திருக்கும். Shanthi and Selvam க்கு பையனா நடிச்சிருக்க கொழந்தை நட்சித்திரம் Karan Chakaravarthi ஓட நடிப்பும் நல்ல இருந்தது. 


society ஓட expectations அ என்னிக்குமே பூர்த்தி பண்ண முடியாது, அப்படி பூர்த்தி  பண்ண நினச்சா வாழக்கை ல இருக்கற அமைதி போய்டும் ன்ற message தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க. ஒரு interesting ஆனா கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

திருமதி சசிகலா நாகராஜன் அவர்களுக்கு உலகளாவிய வணிக முன்னணித்திறனுக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

 *திருமதி சசிகலா நாகராஜன் அவர்களுக்கு உலகளாவிய வணிக முன்னணித்திறனுக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது*







18 குழும நிறுவனங்களின் நிறுவனர் திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், உலகளாவிய வணிக முன்னணித்திறனில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்த மதிப்புமிக்க விருது 2026 மார்ச் 31 அன்று சென்னை, இந்தியாவில் வழங்கப்பட்டது.


தூரநோக்கு கொண்ட தொழில்முனைவோர் மற்றும் திறமையான தலைவராக விளங்கும் திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், பல துறைகளில் புதுமை, வணிக வளர்ச்சி மற்றும் துரிதமான தலைமைத்துவ முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 18 குழும நிறுவனங்களை வழிநடத்துவதன் மூலம், வணிக மேம்பாடு, நிறுவன வளர்ச்சி மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.


இந்த கௌரவம், அவருடைய அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கான அங்கீகாரமாகும். அவருடைய சாதனைகள், உலகம் முழுவதும் உள்ள எதிர்கால தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.


இந்த விழாவில் பேசிய திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், இந்த கௌரவத்திற்காக தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்ததுடன், உலகளாவிய வணிகத் துறையில் புதுமை மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றுவேன் என்று உறுதியளித்தார்.


இந்த கௌரவ டாக்டர் பட்டம், அவருடைய சிறப்பான பயணத்திற்கும் வணிக உலகிற்கு செய்த நிலையான பங்களிப்பிற்கும் ஒரு சான்றாகும்.


திருமதி சசிகலா நாகராஜன் பற்றி :

திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், 18 குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உலகளாவிய வணிகத் திட்டமிடல் மற்றும் தொழில்முனைவுத் துறையில் அறியப்பட்ட தலைவராவார். பல துறைகளை உள்ளடக்கிய அவரது பணிகள், அவருடைய பார்வை மற்றும் சிறப்பிற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.

Mrs. Sasikala Nagarajan Honored with Honorary Doctorate for Global Business Leadership

 *Mrs. Sasikala Nagarajan Honored with Honorary Doctorate for Global Business Leadership*







Mrs. Sasikala Nagarajan, Founder of 18 Group of Companies, has been conferred with an Honorary Doctorate in recognition of her outstanding contributions to Global Business Leadership. The prestigious honor was awarded on March 31, 2026, in Chennai, India.


A visionary entrepreneur and dynamic leader, Mrs. Sasikala Nagarajan has played a pivotal role in driving innovation, business growth, and strategic leadership across multiple industries. Through her leadership of the 18 Group of Companies, she has demonstrated excellence in business development, organizational growth, and global expansion.


This recognition celebrates her dedication, resilience, and commitment to empowering businesses and creating impactful change in the corporate landscape. Her achievements continue to inspire aspiring entrepreneurs and business leaders worldwide.


Speaking on the occasion, Mrs. Sasikala Nagarajan expressed her gratitude for the honor and reaffirmed her commitment to fostering innovation and leadership in the global business community.


This honorary doctorate stands as a testament to her remarkable journey and enduring contributions to the world of business.


About Mrs. Sasikala Nagarajan :

Mrs. Sasikala Nagarajan is the Founder of 18 Group of Companies and a recognized leader in global business strategy and entrepreneurship. Her work spans multiple sectors, reflecting her vision and commitment to excellence…

Kaalidas 2 Tamil Movie Review

Kaalidas 2  Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kaalidas part 2 படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Bharath Niwas, Ajay Karthi, Sangeetha Madhavan, Bhavani Sre & Abarnathy னு பலர் நடிச்சிருக்காங்க. பூவே உனக்காக படத்துல நடிச்ச sangeetha வும் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. ரொம்ப வருஷம் கழிச்சு tamil cinema ல comback குடுத்திருக்காங்க.  இந்த படத்தை இயக்கி இருக்கிறது Sri Senthil



Yuvraaj & Team. 2019 ல வந்த இந்த படத்தோட first part மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. அதா தொடர்ந்து இந்த படத்தோட 2 part april 3 அன்னிக்கு release பண்ண போறாங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


kaalidas அ நடிச்சிருக்க bharath sincere ஆனா police officer . ஒரு case எவ்ளோ complicated அ இருந்தாலும் சரி அதா ஒடனே solve பண்ண கூடிய திறமை இவருகிட்ட இருக்கு. அதுனால நெறய challenging ஆனா cases இவருகிட்ட தான் வருது. newyear night நடக்கற celebration அப்போ ஒரு பெரிய apartment complex அ காமிக்கறாங்க. அந்த apartment ல கிட்ட தட்ட 800 வீடுகள் கிட்ட இருக்கு. இந்த எடத்துல தான் திடுருனு ஒரு கொழந்தை காணாம போயிடுது. இந்த கொழந்தை missing case kaalidas கிட்ட தான் வருது. சோ இவரும் இதை பத்தி investigate பண்ண ஆரம்பிக்குறாரு. இந்த case சரியா நடக்குதா இல்லையா னு check பண்ணுறதுக்காக bhavani sree வராங்க. ஆரம்பத்துல இவர்களுக்கும் kaalidas க்கும் நெறய மோதல் ஏற்படுத்து. ஆனா கதை போக போக இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து case அ handle பண்ணுறாங்க. இந்த investigation சம்பந்தமா அந்த கொழந்தை ஓட parents ஆனா aparnathi அப்புறம் anath nag கிட்ட காளிதாஸ் விசாரிக்க ஆரம்பிக்குறாரு. அதுமட்டும் இல்ல அந்த block ல இருக்கற எல்லாரையும் விசாரிக்குறாரு. 


இதே மாதிரி ஒரு related case ல காணாம போன ஒரு குழந்தைய கண்டுபிடிச்சிடுவாங்க. இதுனால இந்த investigation team க்கு ஒரு நம்பிக்கை வரும். இவங்களோட சந்தேகமே அதே apartment complex ல தங்கி இருக்கற ajay karthik தான். அந்த சந்தேகத்தால police இவரை arrest பண்ணிடுறாங்க. அப்போ தான் ajay karthik க்கு lawyer அ ஆஜார் ஆகுறாரு prakash raj. court ல இந்த case அ police ஒழுங்கா investigate பண்ணல , ajay karthick நிரபராதி னு வாதுடுறாரு. கடைசில ajay karthick நிரபராதி தான் சொல்லி, court இவரை release பண்ணிடுறாங்க. திடுருனு அந்த apartment  complex ல இன்னொரு சம்பவம் நடக்குது இதுனால investigation இன்னும் complicated அ மாறிடுது. 


இந்த investigation ல நெறய twist and turns இருக்கு, அதுனால கண்டிப்பா audience க்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தோட கதையை உண்மையான சம்பவத்தை தழுவி தான் எடுத்துருக்காங்க.  இந்த படத்தோட director sri senthil audience அ கதை மூலமா அவரு பக்கம் இழுத்துருக்காரு னு தான் சொல்லணும். suresh bala ஓட cinematography யும் கதைக்கு ஏத்த மாதிரி engaging அ இருந்தது. visuals யும் நல்ல இருந்தது. sam cs ஓட music அப்புறம் bgm ரெண்டுமே இந்த thrilling கதைக்கு perfect அ பொருந்தி இருந்தது. poovan sreenivasan ஓட editing யும் பக்காவா இருந்தது. police ல இருக்கற procedure , admin வேலை, police க்கு நடுவுல நடக்கற politics னு ரொம்ப தத்ரூபமா , realistic அ எடுத்துருக்காரு director . அதுனால audience ஆள இந்த கதையோட connect ஆகிக்க முடியும். 


ஒரு நல்ல interesting ஆனா climax ஓட இருக்கற பக்காவான thrilling கதை தான். சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் " ரூம் பாய் " ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

 இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ்  திரில்லர் " ரூம் பாய் " ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.







ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாகும் சஸ்பென்ஸ் - திரில்லர் படம் " ரூம் பாய் " 


சென்னை அண்ணா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற " ரூம் பாய் " படக்குழுவினர்.


ACM சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படம் " ரூம் பாய் " 


C.நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 


காமெடிக்கு இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், youtube புகழ் காத்து கருப்பு கலை, இன்ஸ்டா புகழ் கற்பகம் மற்றும் கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர்,கேரளா பெஹமின் உட்பட பலர் நடித்துள்ளனர்.


இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.


சி.பாரதி ராஜன் Dft இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடலாசிரியர் சூரியமூர்த்தி வரிகளுக்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். 

படத்தொகுப்பை D.V. மீனாட்சி சுந்தர் செய்திருக்கிறார். 

நடனம் - தினா

ஸ்டண்ட் - கார்த்திக் வர்மன் 

விளம்பர வடிவமைப்பு S.B.ராஜா

உடைகள்-  வளையாபதி 

மக்கள் தொடர்பு -  புவன் செல்வராஜ்

தயாரிப்பு மேலாளர் - முத்துக்குமார்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்-  A.சக்தி.

தயாரிப்பு மேற்பார்வை - R.முரளி.


தயாரிப்பு - சூரியகலா சந்திரமூர்த்தி


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.


இவர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 

2002 ஆம் ஆண்டு "தாத்தா "  என்ற குறும்படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவிற்கான  தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் 50க்கும் மேற்பட்ட ஆவணம்,கார்ப்பரேட் மற்றும் விளம்பர படங்களை இயக்கியவர்.


படம் பற்றிய இயக்குனர் ஜெகன் ராயன் பகிர்ந்தவை..


இது ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கி இருக்கிறோம்.


படப்பிடிப்பு இயற்கை எழில் கொஞ்சும் திருப்பத்தூர், ஏலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 


பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 


இறுதி கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இம்மாதம் ( ஏப்ரல் ) 17ஆம் தேதி  திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறோம்  என்றார் இயக்குனர் ஜெகன் ராயன்.


படம் இம்மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார, பண்பாட்டு  விழாவில் கலந்துகொண்டு " ரூம் பாய் " படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அது அவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Yaan Foundation வழங்கும் “அகரவா மகரவா ” ஆன்மிக ஆல்பம் பாடல் வெளியானது!!

 Yaan Foundation வழங்கும் “அகரவா மகரவா ” ஆன்மிக ஆல்பம் பாடல் வெளியானது!!


காற்றோடு பட்டம் போல, நீலோத்தி பாடலை எழுதிய சாரதி எழுதியுள்ள சிவன் பாடல் " அகரவா மகாரவா "










இறைவன் சிவபெருமானின் பெருமை, தெய்வீக ஆற்றல் மற்றும் ஆன்மிக உணர்வுகளை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அகரவா மகரவா” என்ற புதிய ஆன்மிக ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Yaan Foundation வழங்கியுள்ள இந்த பாடல், பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனைகளை அழகாக இணைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.


இந்த பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது.  திண்டுக்கல் சிவபுர ஆதீனம்     ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருமதி.தேச மங்கையர்கரசி, முனைவர் சிவ.சதீஷ்குமார் ,பல்கலை வித்தகி திருமதி.ரேகா மணி மற்றும்  திரைப்பட இயக்குனர்கள் இயக்குனர் ரோமியோ ஜூலியட் லஷ்மன், வசந்தமணி , சுகுமார் அழகர்சாமி, s.சாம் , ராஜவேல்  ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆமீக பாடலை வெளியிட்டனர்.


இந்த பாடலை பிரபல ஆன்மிக பாடகர் கோல்ட் தேவராஜ் அவர்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன் பாடியுள்ளார். அவரது குரல், பாடலின் பக்தி உணர்வை மேலும் உயர்த்துகிறது.


பாடலின் வரிகளை, “நீலோத்தி”, “கற்றோடு பட்டம் போல” போன்ற மிக பிரபலமான சினிமா பாடல்களை எழுதிய சாரதி எழுதியுள்ளார். எளிய சொற்களிலும் ஆழமான அர்த்தங்களிலும் அமைந்துள்ள இந்த வரிகள், கேட்பவர்களின் மனதில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


இந்த பாடலுக்கு இசையை கணேஷ் ராகவேந்திரா அமைத்துள்ளார். ஆன்மிகத்தையும், இசை நயத்தையும் இணைக்கும் வகையில் இசை வடிவமைக்கப்பட்டுள்ளது.


இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் லக்ஷ்மன் இருவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய  சாவியோ  இந்த பாடலை இயக்கியுள்ளார்.


எடிட்டிங் மற்றும் AI பணிகளை கௌதம் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பாளர்களாக பிரதீப் குமார் – தீபா செயல்பட்டுள்ள நிலையில், தயாரிப்பு நிர்வாகியாக முஹம்மது பிலால் ஆகியோர் இந்த ஆல்பத்தை முன்னெடுத்து வருகின்றார்.


மொத்தத்தில், “அகரவா மகரவா” ஆன்மிக பாடல், பக்தி இசையை விரும்பும் ரசிகர்களுக்கு சிவனின் பக்தர்களுக்கும் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது. இப்பாடல்  வெளியானவுடன் சமூக வலைதளங்களில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.                                        இந்த பாடலை யான் அறக்கட்டளையின் YaanTamil என்ற youtube சேனலில் பார்த்து மகிழலாம்.  


song link  ;   https://youtu.be/fi0T5plA4II?si=WbTlGXviINTmSycl


Neelira Movie Review

 Neelira Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம neelira படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல naveen  chandra , sanath reddy, roopa koduvayur , kapila வேணு னு  நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது someetharan. இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதி இருக்காரு.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்தோட கதை ஒரே ராத்திரி ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. இந்த கதை 1988 ல north srilanka ல நடக்காது. அங்க தான் vasuki ன்ற character அ அறிமுக படுத்துறங்க. இவங்களுக்கு marriage fix ஆயிருக்கும். இந்த கல்யாணம் நடத்துறதுக்கு IPKF னு சொல்ல படுற Indian Peace Keeping Force ன்ற army கிட்ட இருந்து permission வாங்கணும். இதுல இருந்தே அந்த எடத்துல மக்களோட வாழக்கை எவ்ளோ கஷ்டமானது னு புரிஞ்சுக்க முடியும். சரியா கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி நாள் ராத்திரி IPKF army யா சேந்த 8 பேர் இந்த பொண்ணோட வீட்டுக்கு வந்துடறாங்க. இந்த எட்டு பேரும் LTTE னு சொல்ல படுற இன்னொரு group கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருப்பாங்க. (LTTE group னு படத்துல வெளிப்படையா சொல்லனாலும் srilanka history யா பத்தி தெரிஞ்சவளுக்கு இது சுலபமா புரிஞ்சுடும்.) safe அ ஒரு எடத்துல ஒளிஞ்சுக்கணும்ன்றதுக்காக தற்சயலா vasuki வீட்ல வந்து தங்கிடுறாங்க. அதுமட்டுமில்ல இந்த வீட்ல இருக்கற யாருயுமே இவங்க வெளிலயயும் விடல. இப்போ opposite group ஆனா LTTE க்கு அந்த எட்டு பேரும் இருக்கற இடம் தெரிஞ்சுடுது. இப்படி இந்த ரெண்டு group க்கும் நடுவுல vasuki யும் அவங்க family யும் மாட்டிக்கிறாங்க.  

இது ஒரு fictional story தான். இருந்தாலும் director ஓட சின்னவயசுல நடந்த உண்மை சம்பவங்களை தழுவி இந்த கதையை எடுத்திருக்காரு. இவரு srilanka ல இருக்கற jafna எடத்துல தான் வாழந்திருக்காரு. அதுக்கு அப்புறம் BBC ல work பண்ணிட்டு director balu mahindra கிட்ட direction அ கத்துக்கிட்டாரு. srilanka ல இருக்கற தமிழர்கள் ஓட கஷ்டத்தை சொல்லுற விதமா 2008 ல Burning Memories ன்ற ஒரு documentry படத்தை எடுத்து release பண்ணிருந்தாரு. இந்த documentry  ல jaffna central library எப்படி அழிஞ்சது அதுனால எத்தனை அரிய புத்தங்கள் எரிஞ்சு போச்சு றத்தை ரொம்ப தெளிவா சொல்லிருப்பாரு.  இதுல இருந்து கொஞ்சம் மாறுபட்டதா இருக்கும் இந்த neelira . என்னதான் உண்மையான போர் நடந்த விஷயங்களை பத்தி சொல்லிருந்தாலும் தினசரி நாட்கள் ல நடக்கற மக்கள் ஓட வாழக்கை பதிவுகளை தான் இந்த கதைல main அ எடுத்து காமிச்சிருப்பாங்க. 

நேரடியா நடக்கற போர் அ பத்தி சொல்லாம அங்க வாழுற மக்களோட situation அ பத்தி தான் அதிகமா சொல்லிருப்பாரு director . உதாரணத்துக்கு army ஆட்களை பாக்கும் போது நாய் கத்துறது, வீட்ல புட்டு சமைக்கிறது, நடிகர் vijaykanth மேல இருக்கற பிடிப்பு, army ல இருக்கறவங்க சப்பாத்தியை செஞ்சு வச்சுக்கிறது, வீட்டுக்கு army ல இருக்கறவங்க யாரது வந்த, பாதுகாப்பா இருக்கணும்ன்றதுக்காக பெண்கள் இன்னும் ரெண்டு மூணு துணிய மேல உடுத்திக்கிறது னு நம்ம நெறய சொல்லிட்டே போகலாம்.  என்னதான் இதுல srilanka ல நடக்கற போர் அ பத்தி நெறய பேசி இருந்தாலும் அது எதுவுமே இந்த படத்துல detailed அ காமிச்சிருக்கமாட்டாங்க. அதா மட்டும் சரி பண்ணிருந்தா இந்த படம் இன்னுமே நல்ல இருந்திருக்கும்.  

என்னதான் vasuki ஓட குடும்பம் இந்த ரெண்டு group க்கு நடுவுல மாட்டி இருந்தாலும் அவங்களோட emotions அந்தளவுக்கு audience ஓட connect ஆகல. இவங்களோட அந்த emotions இன்னும் deep அ இருந்த நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல strong ஆனா performance அ குடுத்து இருக்கிறது kapila venu தான். இவங்களோட body language , screen presence , dialogue delivery னு எல்லாமே perfect அ இருந்தது. இந்த படத்துக்கு ஏத்த மாதிரி music யும் bgm யும் அமைச்சிருந்தது.  இந்த படத்துல வந்த action sequences யும் அட்டகாசமா இருந்தது. cinematography யும் இந்த கதைக்கு கச்சிதமா பொருந்தி இருந்தது. நெறய close up shots யும் எடுத்துருக்காங்க . 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.