Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Tuesday, 20 January 2026

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success





Megastar Chiranjeevi once again proved why he shares an unbreakable bond with Telugu audiences, as he poured his heart out in a deeply emotional message following the roaring success of Mana Shankara Vara Prasad Garu, which collected 300 Cr worldwide gross. It’s a fastest for a Telugu movie to reach the mark. The movie also breached the $3 million mark in North America, emerging as the biggest earner for both Chiranjeevi and director Anil Ravipudi. After a strong Day 8, MSG showed even greater strength on Day 9, backed by huge bookings. Having already shattered several records, the film is now on the brink of breaking many more.


At a time when the film is creating waves at box-office and energizing the festive season, Chiranjeevi chose to spotlight not the numbers, but the people behind the success- his fans, distributors, and the hardworking team.


In his heartfelt note, the Megastar reflected on the journey that brought MSG to this moment and reiterated that every milestone in his career has been shaped by the affection of generations of movie lovers. His message resonated widely among fans, who have been celebrating the film as much as they celebrate his enduring legacy.


Megastar Chiranjeevi’s message reads: "Looking at the humongous success of our MSG, my heart is filled with gratitude. I have always said that I am a product of your love, and today, you have proven it yet again.


This record belongs to the Telugu audience, beloved Distributors and my dear Mega Fans who have stood by me for decades. Your whistles in the theater are the energy that keeps me going. Records come and go, but the love you shower upon me stays forever.


This blockbuster success is a tribute to the hard work of our Anil Ravipudi, Producers-Sahu and Sushmita along with the entire team and the unwavering faith you have in me. Let’s continue the celebration Love you all! ❤️"


With this message, Chiranjeevi not only thanked everyone responsible for the film’s historic run but also reminded the industry of the collective spirit behind every blockbuster. His words reinforce a simple truth- while records may be broken, the love between Chiru and his fans remains eternal.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'மான சங்கர வர பிரசாத் 'திரைப்படத்தின் பிரம்மாண்ட

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'மான சங்கர வர பிரசாத் 'திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி*





உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மான சங்கர வர பிரசாத் ' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி தனது இதய பூர்வமான -ஆழமான - உணர்ச்சி பூர்வமான- செய்தியை வெளியிட்டிருப்பதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஒரு தெலுங்குத் திரைப்படம் இந்த இலக்கை அடைவது இதுவே அதிவேகமான சாதனையாகும். இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் மூன்று மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லையும் கடந்து, சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாகவுப் உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி எட்டாவது நாளில்  வலிமையான வசூலை பதிவு செய்த MSG-  பெரும் முன் பதிவுகளின் ஆதரவுடன் ஒன்பதாவது நாளில் கூடுதல் வலிமையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ள இந்த திரைப்படம்.. தற்போது மேலும் பல புதிய சாதனைகளை படைக்கும் நிலையில் உள்ளது. 


இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி பண்டிகை காலத்திற்கான புத்துணர்ச்சியை அளித்து வரும் இந்த நேரத்தில் சிரஞ்சீவி வசூலித்த தொகையைப் பற்றி பேசாமல் இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள தன்னுடைய ரசிகர்கள் - விநியோகஸ்தர்கள் மற்றும் கடினமாக உழைத்த படக் குழுவினரை பற்றி பேசி இருக்கிறார். 


அவர் வெளியிட்டிருக்கும் தன்னுடைய மனமார்ந்த குறிப்பில், 'மெகா ஸ்டார் எம் எஸ் ஜி - இந்த நிலையை அடைந்த பயணத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு மைல் கல்லும் தலைமுறை தலைமுறையாக வரும் திரைப்பட ரசிகர்களின் பாசத்தால் வடிவமைக்கப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். அவரது இந்த செய்தி ரசிகர்களிடையே பரவலாக எதிரொலித்தது. அவர்கள் அவரது நீடித்த பாரம்பரியத்தை கொண்டாடுவது போலவே இந்தத் திரைப்படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.‌


'மெகா ஸ்டார் 'சிரஞ்சீவியின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது...


''நமது எம் எஸ் ஜி யின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை பார்க்கும் போது என் இதயம் நன்றியுணர்வால் நிரம்புகிறது. நான் எப்போதும் உங்கள் அன்பின் விளை பொருள் என்று கூறி வருகிறேன். இன்று நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். 


இந்த சாதனை தெலுங்கு ரசிகர்களுக்கும், அன்பான விநியோகஸ்தர்களுக்கும், பல தசாப்தங்களாக எனக்கு துணையாக நிற்கும் எனது அன்பான மெகா ரசிகர்களுக்கும் சொந்தமானது. திரையரங்குகளில் நீங்கள் எழுப்பும் ஆரவாரமே என்னை முன்னோக்கி செல்ல வைக்கும் ஆற்றல். சாதனைகள் வரும். போகும். ஆனால் நீங்கள் என் மீது பொழியும் அன்பு ...என்றென்றும் நிலைத்திருக்கும்.‌


இந்த பிளாக் பஸ்டர் வெற்றி நமது அனில் ரவி புடி - தயாரிப்பாளர்களான சாஹூ மற்றும் சுஷ்மிதா ஆகியோருடனான முழு படக் குழுவினரின் கடின உழைப்பிற்கும், என் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு காணிக்கையாகும். இந்த கொண்டாட்டத்தை தொடர்வோம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்''. 


இந்த செய்தியின் மூலம் சிரஞ்சீவி திரைப்படத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல்.. ஒவ்வொரு பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின்னாலும் உள்ள கூட்டு உணர்வை இந்த துறைக்கு நினைவூட்டி இருக்கிறார். அவரது வார்த்தைகள் ஒரு எளிய உண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால் சிரஞ்சீவிக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு நித்யமானது.




இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியர்

 *இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியர்*



இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். 


இயக்குநர் - தயாரிப்பாளர் அட்லீ - திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ அப்பாவாகி இருக்கிறார். 


இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், '' எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்'' என பதிவிட்டு, பிரத்யேக புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 


இந்த புகைப்படம்-  அட்லீயின் விவரிக்க முடியாத தந்தையின் பாசத்தையும், நேசத்தையும் , புன்னகையுடன் வெளிப்படுவதுடன், தந்தையாக அவரின் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் பிரியா அட்லீ - மீர் இடையேயான பிரிக்க முடியாத பந்தமும்  இந்த புகைப்படத்தில் இணைந்திருப்பதால்.. உறவின் உன்னதத்தை ஆராதிக்கும் அனைவரும்,  இதனை வரவேற்று தங்களது வாழ்த்துகளைப்  பகிர்ந்து வருகின்றனர்.  


இதனிடையே திருமதி பிரியா அட்லீ & இயக்குநர் அட்லீ உரிமையாளராக இருக்கும் 'பெங்களூரூ ஜவான்'ஸ்' எனும் பிக்கிள்பால் அணி. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்கும் 'வேர்ல்ட் பிக்ளிபால் லீக் ' போட்டி சீசன் 2 வில் விளையாடுகிறது என்பதும் தற்போது 'ஐகான் ஸ்டார் ' அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் #AA22XA6 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை

 *“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!*






பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, வரலாற்றுப் படமான ‘திரௌபதி 2’ மூலம் இதுவரை காணாத வீரத் தோற்றத்தில் ரசிகர்களை திரையில் சந்திக்க உள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ’திரெளபதி 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அனுபவங்களை ரிச்சர்ட் ரிஷி பகிர்ந்து கொண்டார். 


“’திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம். இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ சினிமா என்பதைத் தாண்டி வரலாற்றின் மறுபிறப்பாக உள்ளது. ’திரௌபதி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றுவது, நம்பிக்கையுள்ள தளபதியுடன் மீண்டும் போர்க்களம் சென்ற அனுபவம் போல இருந்தது” என்றார். 


மேலும் பகிர்ந்து கொண்டதாவது, “இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்‌ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்தது ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. ‘திரௌபதி 2’ வரலாற்று திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு வரலாற்றுப் பயணம். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து அம்சங்களுடனும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். 


இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக் குழு:*

இசை: ஜிப்ரான்,

ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர், 

கலை இயக்குநர்: எஸ். கமல், 

சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ், 

படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

Draupathi 2 isn't just a routine period film! It’s our ancestors' war cry reborn" - Richard Rishi

 *”Draupathi 2 isn't just a routine period film! It’s our ancestors' war cry reborn" - Richard Rishi*






Actor Richard Rishi, being in the industry for more than a decade, has been experimenting with challenging scripts and roles. From kick-starting his career as a romantic hero, and later switching over to promising characters, the actor has incessantly proved his caliber as a good performer. Now the actor is all set to witness his breakthrough with a never-before appearance as a warrior in Historic movie ‘Draupathi 2’. With the film all set to release on January 15 for the festive occasion of Pongal, the actor shares his thoughts on the film. 


"Embodying King Veera Simha Kadavarayan in Draupathi 2 has been a career-defining transformation. This isn't merely acting, it's breathing life into Tamil Nadu's blood-soaked legacy of bravery and sacrifice. Mohan G's vision for Draupathi 2 transcends cinema, it’s a resurrection of history. Working with him again after the original Draupathi feels like returning to battle alongside a trusted commander. A Ghibran's score stirs the soul of emperors, Philip K Sundar's frames capture royal majesty, and Action Sandhosh choreographs battles worthy of legend. Sharing screen space with Rakshana Induchoodan, Natty Natraj, and Vela Ramamoorthy elevates every scene. Draupathi 2 isn't just a movie, but re visiting the buried past of our ancestors' war cry reborn. From Netaji Productions, this is Tamil cinema's boldest historical epic, destined to echo through generations. The film has been crafted with ingredients that will keep audience engaged from beginning till end. “ 


Draupathi 2, directed by Mohan G and produced by Sola Shakkaravarthi under Netaji Productions, features Richard Rishi alongside Rakshana Induchoodan, Natty Natraj, Vela Ramamoorthy, and a stellar ensemble. With A Ghibran's evocative musical score, Philip K Sundar's breathtaking cinematography, and the technical mastery of S Kamal (art), Action Sandhosh, and editor Devaraj, the film promises an electrifying cinematic experience.

G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on

 *G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on January 22! A Divine Rendition That Captivated Prime Minister Narendra Modi*




Thiruvasagam, one of Tamil literature's most exalted spiritual masterpieces, comes alive in music through acclaimed composer G.V. Prakash Kumar. The first song from this timeless work—composed and rendered by him—will premiere on January 22 via his official YouTube channel. A poignant preview recently enthralled audiences, including the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi, during Pongal celebrations in New Delhi.


The event's spiritual aura, steeped in Tamil cultural richness, soared with Thiruvasagam's celestial echoes. Prime Minister Modi’s rapt attention elevated the moment, as G.V. Prakash Kumar’s soul-stirring vocals and innovative composition revived the text’s devotional fervor in a fresh, contemporary idiom.


Celebrated for fusing tradition with modern flair, G.V. Prakash has forged a singular path across film scores, indie projects, and global stages. This Thiruvasagam endeavor breathes new life into Tamil devotional music, inviting a worldwide audience to its profound depths.


Long envisioning a full musical album of Thiruvasagam, he now materialises this dream step by step, selecting verses, reimagining them for today’s ears while safeguarding their sacred essence. His approach bridges generations, making ancient wisdom emotionally resonant and accessible.


This inaugural track, already blessed with acclaim from the nation’s highest office, drops January 22 on G.V. Prakash Kumar’s YouTube channel, sparking eager anticipation among spiritual music lovers and the global Tamil diaspora.

ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல்,

 *ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல், ஜனவரி 22ல் வெளியாகிறது !!*




*பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!*


தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.


பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம்,  தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.


நவீன இசையில்  பாரம்பரியத்தின் அம்சத்தை இணைப்பதில் தேர்ச்சி பெற்றவர் ஜி.வி. பிரகாஷ். திரைப்பட இசை, தனிப்பாடல்கள், சர்வதேச மேடைகள் என பல தளங்களில் தனது தனித்த குரலை பதித்துள்ள அவர், திருவாசக முயற்சியின் மூலம் தமிழ் ஆன்மிக இசைக்கு புதிய அடையாளம் அளிக்க முனைந்துள்ளார்.


திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.


இந்த முயற்சியின் தொடக்கமாக, மோடி முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல் வரும் ஜனவரி 22 அன்று ஜி.வி. பிரகாஷ் தனது YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.



சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

 *சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்' படத்தின் டிரெய்லர்  வெளியீடு*



தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது.


முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ' மை லார்ட் ' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களை கவனத்தை‌ ஈர்த்திருக்கிறது.  அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிப்பதால் இந்த முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 


தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் -  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக 'மை லார்ட்' படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்...  டிரெய்லர் இடம் பிடித்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.


Link -

https://www.youtube.com/watch?v=KR05JMlq8K8

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை' படக்குழு!

 பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை'  படக்குழு!



'லாரா' திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு 'அறுவடை'  திரைப்படம்.


இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு - கே .கே . விக்னேஷ். பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.


கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் 'அறுவடை' படத்தின்  சார்பில்  கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை  முடித்துள்ளனர்.


அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி 'அறுவடை' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 


'' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை,  மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம்.  விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் " என்றார்.