Featured post

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்

 *தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!* புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தே...

Saturday, 15 November 2025

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்

 *தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!*






புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. 


டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இருவரும் இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தருவதற்கு பெயர் பெற்றவர்கள். ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘ஜோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது விஷன் சினிமா ஹவுஸ். தரமான கதை மற்றும்  சிறந்த நடிப்பிற்காக பாராட்டப்பட்ட அந்தப் படம் திரையரங்குகளில் 52 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன் மற்றும் யோகி பாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை தயாரித்து பார்வையாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்தது இந்நிறுவனம். 


தற்போது விஷன் சினிமா ஹவுஸ் மீண்டும் நடிகர் ஏகனுடன் இணையும் ’புரொடக்‌ஷன் நம்பர் 3’ படத்தை அறிவித்துள்ளது. ‘ஆஹா கல்யாணம்’ பட புகழ் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கும் இந்தப் படம் எளிமையான பூஜையுடன் தொடங்கியது. புதிய திறமையாளர்களுடன் பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்தப் படம். 


‘ஜோ’, ‘கோழிப்பண்னை செல்லதுரை’ ஆகிய படங்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் பிரபலமான நடிகர் ஏகன் இந்தப் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்கள், ஆழமான நடிப்பு ஆகியவற்றிற்காக பெயர் பெற்ற ஏகன் தமிழ் சினிமாவின் அடுத்தத் தலைமுறை நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். 



‘கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி’ தெலுங்கு படம் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பான் இந்திய ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி இந்தப் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். ‘புரூஸ் லீ பிஜி’ படத்தில் அறிமுகமாகி, மலையாளத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் படமான ‘மின்னல் முரளி’, ‘தீப்பொறி பென்னி’ மற்றும் ’சேஷம் மைக்கேல் ஃபாத்திமா’ படங்களில் சிறப்பாக நடித்த ஃபெமினா ஜார்ஜ் இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். 


தரமான கதைகளை தயாரிப்பது மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் தனது நிலைப்பாட்டை முன்னெடுத்து செல்லும் வகையில், விஷன் சினிமா ஹவுஸ் அர்ப்பணிப்புடன் தனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.

Actor Aegan teams up with Telugu and Malayalam Industry’s promising sensational heroines

 *





Actor Aegan teams up with Telugu and Malayalam Industry’s promising sensational heroines* 


Vision Cinema House, headed by producer Dr.  Arulanandhu and Mathewo Arulanandhu, proudly announces its third Tamil feature film, marking yet another significant step in the company’s mission to champion fresh talent and meaningful storytelling. Over the past few years, Vision Cinema House has emerged as one of the most promising creative forces in Tamil cinema, consistently backing films that stand out for their authenticity, emotional depth, and commitment to nurturing new voices.


Dr. Arulanandhu &  Mathewo Arulanandhu, distinguished entrepreneurs known for their dedication to creating opportunities for young talents in different arenas of his entrepreneurship, the production house made a remarkable entry into Tamil cinema with the critically acclaimed and commercially successful drama “Joe,” starring Rio Raj and Malavika Manoj. The film enjoyed a successful 52-day theatrical run and earned appreciation for its poignant narrative and powerful performances. This success was followed by “Kozhi Pannai Chella Durai,” directed by National Award–winning filmmaker Seenu Ramasamy and featuring actor Aegan and Yogi Babu in lead roles, further solidifying the banner’s growing reputation for producing content-rich, artistically resonant cinema.


Building on this creative momentum, Vision Cinema House is now set to collaborate once again with actor Aegan for its newly announced Production No. 3. The project was officially launched following a traditional script pooja ceremony and will be directed by Yuvaraj Chinnasamy, known for his work in “Aha Kalyanam.” With a clear focus on storytelling that resonates with audiences, the new film brings together an ensemble of emerging talents poised to create a compelling cinematic experience.


Actor Aegan, who has steadily risen in prominence with notable performances in theatre, “Joe,” “Kozhi Pannai Chella Durai,” and the Jio Hotstar series “Kaana Kaanum Kaalangal,” leads the cast. Recognized for his intensity, versatility, and grounded performances, Aegan continues to position himself as one of the most promising faces of the next generation of Tamil cinema.


Actress Sridevi, who turns the Pan-Indian spotlights upon her with a promising performance in the Telugu film “Court: State vs A Nobody’ is playing one of the female lead roles. Significantly, actress Femina George, best known for her memorable debut as the spirited “Bruce Lee Biji” in the Malayalam blockbuster “Minnal Murali” followed by her notable performances in “Theeppori Benny” and “Sesham Mike-il Fathima” is performing another female lead character. 


With its third production now underway, Vision Cinema House continues to strengthen its commitment to cultivating meaningful stories and empowering young artists and filmmakers. The production house remains dedicated to delivering films that combine emotional resonance with strong cinematic craft, further reinforcing its place as an influential and forward-looking force in the Tamil film industry. Additional details regarding the cast and technical crew will be announced in the coming weeks as Production No. 3 begins its creative journey.

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த 'ஆண்பாவம் பொல்லாதது' படக்குழு

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த 'ஆண்பாவம் பொல்லாதது' படக்குழு*








டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 


தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும் எம். எஸ். கே. ஆனந்த் ஆகியோரின் இணை தயாரிப்பில் பிளாக் ஷீப் ஃபைண்ட்ஸ் ( Black Sheep Finds) நிறுவனத்தின் படைப்பு பங்களிப்புடன் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமாக அமைந்த ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் நடிகர் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் பேசுகையில், 


'' நேற்றைய நினைவுகள் இனிமையாக 

இன்றைய நினைவுகள் அனுபவங்களாக நாளைய கனவுகள் நிஜமாக நாங்கள் வித்திட்ட இந்த விதைக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தின் வெற்றி நிறைய விசயங்களை பார்க்க வைத்திருக்கிறது. நான் பார்க்காத பல விசயங்களை இந்தப் படத்தின் மூலம் பார்த்தேன். ஒரு படத்தை உருவாக்கினாலும்... அந்தப் படத்தை நாம் பலமுறை பார்த்தாலும்... இந்த இடத்தில் திரையரங்கத்தில் ரசிகர்கள் சிரிப்பார்களா..! என்ற தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த தயக்கத்தை உடைத்து கவலைப்படாமல் தூங்கச் சொல்லுங்கள் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எங்களுக்கு முதலில் சொன்ன பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் முதல் நன்றி. பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு நிறைய பேர் சமூக வலைதளங்களில் எழுத்தாகவும், வீடியோவாகவும் படத்தைப் பற்றி எழுதினீர்கள். அதன் பிறகு மக்கள் இதனை ஏற்றுக்கொண்டு திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடையச் செய்திருக்கிறார்கள். இதுதான் இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணம். 


ஆண்களின் அக வாழ்க்கையை பற்றி பேச வேண்டும். இதற்கு முன் இதைப் பற்றி பேசிய படங்கள் குறைவு. இன்றைய சமூகத்திற்கு அது அவசியம் தேவைப்படுவதால்.. இதைப் பற்றிய முதல் விதையை பிளாக் ஷீப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் தான் எங்களிடம் சொன்னார்.‌ அதன் பிறகு இதனை வலைத்தொடராக உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அதன் பிறகு இதற்கான கதையை எழுதுவதற்காக கதாசிரியர் சிவக்குமார் முருகேசனிடம் கொடுத்தோம். அவர் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பிறகு அதை வாசிக்கும் போது இதை திரைப்படமாக உருவாக்கலாம் என திட்டமிட்டோம்.  அதனைத் தொடர்ந்து இந்த கதை இயக்குநர் கலையரசன் தங்கவேலிடம் செல்கிறது. பிறகு ரியோ ராஜிடம் செல்கிறது. பிறகு டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு செல்கிறது. அங்கு இது இறுதி வடிவம் பெறுகிறது. இவர்கள் அனைவரும் வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது. அதன் பிறகு இதில் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இணைந்தனர். 


இந்தப் படத்தில் எனக்கும் நடிப்பதற்கு  வாய்ப்பளித்தனர். எனக்கான திரை பகிர்வினை வழங்கிய ரியோ ராஜுக்கும் நன்றி.‌ இந்தப் படத்தின் மூலம் என்னை நடிகராக அனைவருக்கும் அறிமுகப்படுத்திய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 


இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் பிளாக் ஷீப் நிறுவனத்திலிருந்து ஏராளமான கலைஞர்கள் உருவாகி திரையுலகில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து நாங்கள் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ' படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே நடிகர் ரியோ ராஜை நான் ஸ்டார் என்று தான் குறிப்பிடுவேன். அவர்தான் நான் ஒரு நடிகர் என்று சொல்வார். இந்த படத்தின் மூலம் ஸ்டாராகி இருக்கிறார்.‌ இதற்கு ஆண்பாவம் பொல்லாதது அழுத்தமான காரணமாகி இருக்கிறது. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்'' என்றார். 


இயக்குநர் கலையரசன் தங்கவேல் பேசுகையில், 


''கதாசிரியர் சிவக்குமார் முருகேசனுடன் இப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன். அவருடைய எழுத்தை நான் படமாக்கினேன். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தை பார்த்து விமர்சனம் செய்த விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள், டிஜிட்டல் திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


எனக்கு இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது பற்றி மூன்று நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 


இந்தப் படத்தில் எங்கும் விலங்குகள் தொடர்பான காட்சிகள் இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆடு கத்தும் காட்சி இடம் பிடித்திருக்கும். ஆடு கத்தும் குரல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் இதற்கான பணிகள் அதிகம். செலவும் அதிகம். இருந்தாலும் என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து விலங்குகள் நல வாரியத்திடம் முறையாக அனுமதி பெற்று அந்த காட்சிக்கு ஆதரவளித்தார்கள்.


பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பித்த பிறகு ஒரு சிறிய மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த தருணத்தில் இந்தப்படம் கியூப் எனும் திரையிடும் தொழில்நுட்பம் மூலம் தமிழகம் முழுவதும் 180 திரையரங்குகளுக்கும் சென்று விட்டது. இதற்குப் பிறகு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் .. ஒரு பிரதிக்கு குறைந்தபட்சம் 15,000 செலவாகும். நான் இது தொடர்பாக கேட்டபோது என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நெருக்கடியான தருணத்திலும் எனக்கு ஆதரவளித்து திருத்தத்தை மேற்கொண்டார்கள்.


என் சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் சிறிய நகரம் என்றால் அது ஒட்டன்சத்திரம் தான். அங்கு இந்தப் படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்து எங்கள் ஊர் திரையரங்கில் இந்தப் படம் வெளியானது. 


தயாரிப்பாளர்கள் சினிமாவை வணிகமாக கருதாமல்.. நேசத்திற்குரிய படைப்பாக கருதியதால் தான் இது நடைபெற்றது. 


ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்காக சம்மதம் தெரிவித்தவுடன் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. 


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இதுவரை தொடர்ந்து ஆதரவு தரும் ஊடகங்களுக்கு நன்றி. பத்திரிகையாளர் காட்சி திரையிட்ட பிறகு உங்களின் பாராட்டும், வாழ்த்தும் எங்களை உற்சாகமாக்கியது. அன்று இரவு நாங்கள் உறங்கவே இல்லை.  மகிழ்ச்சியில் திளைத்தோம். இத்திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நீங்கள் கொடுத்த முதல் பாராட்டு தான் காரணம். உங்களுடைய பாராட்டுகள் தான் தமிழக முழுவதும் பரவி இப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டது. படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து கொண்டாடி வரும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார். 



நடிகை மாளவிகா மனோஜ் பேசுகையில், 


''ஜோ படத்திற்குப் பிறகு நான் தமிழில் நடிக்கவில்லை. என்னிடம் பலரும் ஏன் அதற்குப் பிறகு தமிழில் நடிக்கவில்லை? என கேட்டார்கள். அதற்கு பதில் தான் இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன்.  இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய சிறந்த சக நடிகராக ரியோ ராஜை பார்க்கிறேன்.‌ படத்திற்கு பேராதரவு அளித்த தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. ஜோ படத்திற்கும் சித்து குமார் தான் இசை. இந்தப் படத்திற்கும் அவர்தான் இசை. என்னுடைய கலைப் பயணத்தில் எனக்காக சிறந்த இசையை வழங்கியவர் அவர். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 



தயாரிப்பாளர்கள் வெடிகாரன்பட்டி எஸ். சக்திவேல் மற்றும் விஜயன் பேசுகையில், 


'' எங்கள் நிறுவனத்தில் இருந்து தயாரித்து வெளியான அனைத்து படங்களுக்கும் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படத்திற்காக உழைத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். அவர்களுக்குள் ஒரு இணைப்பு இருந்தது.‌ அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து வளர்ந்தவர்கள் போல் தான் எங்களுக்கு தோன்றியது. இது போன்றதொரு குழுவினை நாங்கள் இதுவரை கண்டதில்லை. குழுவாக தொடரும் வரை இவர்கள் வெற்றி கூட்டணியாக வலம் வருவார்கள். 


படத்தை தயாரித்து சம்பாதிப்பது என்பது வேறு. சில படங்கள் எதிர்மறையான அல்லது கலவையான விமர்சனங்களை எதிர் கொண்டாலும் எங்களுடைய முதலீடு கிடைத்து விடுகிறது. ஆனால் அந்தப் படத்தை பற்றி எங்களால் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் ஆண்பாவம் பொல்லாதது எனும் இந்த திரைப்படத்தை பொறுத்தவரை என்னை சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் நல்லதொரு படத்தை தயாரித்திருக்கிறீர்கள் என வாழ்த்தும்போது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் படம் ஒரு வணிக ரீதியான வெற்றியை விட எங்களுக்கு மரியாதையை சம்பாதித்துக் கொடுத்த படம் என்று குறிப்பிடலாம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 


இந்தப் படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் எங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக எங்களிடமும் சொன்னார்கள். இதை கேட்கும்போது பெருமையாக இருந்தது. இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய பிளாக் ஷீப் குழுவிற்கும் நன்றி. தொடர்ந்து இவர்களுடன் பயணிக்கவும் விரும்புகிறோம். 


இந்தப் படத்தை வெளியிடுவதில் பங்களிப்பு செய்த ஏஜிஎஸ் சினிமாஸ்- ஏபி இன்டர்நேஷனல் மற்றும் உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி. 


வெளிநாடுகளில் ஒரு வாரம் கழித்து இப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் குறிப்பிடப்படும் கணவன்- மனைவி பிரச்சினை இங்கு மட்டுமல்ல நாடு கடந்து உலகம் முழுவதும் உள்ளது. அவர்களுக்கும் நாங்கள் ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறோம் என்பதில் சந்தோஷமாக இருந்தது. இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார். 



நாயகன் ரியோ ராஜ் பேசுகையில்,


 '' பத்திரிகையாளர்களுக்கு என் மனதின் அடியாழத்திலிருந்து மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் சில படங்களில் நடித்திருக்கிறேன் அதற்கும் என என்னை பாராட்டி இருக்கிறீர்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு பிறகு அனைவரும் ஒருமித்த குரலில் பாராட்டை தெரிவித்தீர்கள். இதிலிருந்து எம்மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சம் உள்ள படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தால் கலவையான விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன். ஊடகங்களின் பாராட்டும், ரசிகர்களின் பாராட்டுகளும் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறோம். 


இந்தப் படம் ஆண்களுக்கானது என்று தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆண்களுக்கு என்ன தேவை? என்பதை சொல்வதற்கு தான் நாங்கள் முயற்சி செய்தோம். ஒரு குடும்பத்தில் குடும்பஸ்தனாக இருக்கும் ஆண்களுக்கு என்ன தேவை என்றால் ... ஒரு ஃபர்பெக்ட்டான பார்ட்னர் தேவை என்பதைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்ல முயற்சித்தோம். எல்லா குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் உள்ள கணவனும் மனைவியும் தங்களை ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு, உச்சகட்ட காட்சியில் வக்கீல் நாராயணன் சொல்வது போல் 50 :50 என்பது கிடையவே கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என நினைத்தோம். இது நிறைய பேருக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. குடும்பத்தில் ஒரு சமயத்தில் கணவன் எழுபது என்றால் மனைவி முப்பதாகவும் ...சில தருணங்களில் மனைவி எழுபது என்றால்... கணவன் முப்பதாகவும் இருப்பது தான் யதார்த்தமான நடைமுறை.  இதுதான் 50 :50 என்பதை ஏராளமானவர்களுக்கு புரிய வைத்தது இந்த திரைப்படம்.  இதை நேரில் ரசிகர்கள் எங்களுடன் கலந்துரையாடும் போது தெரிவித்த போது மகிழ்ச்சியாக இருந்தது. 


ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டும் போது படம் நன்றாக இருந்தது என்பதை கடந்து நான் இந்த படத்தை என் மனைவியுடன் பார்த்தேன். இருவரும் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். திரையில் எங்களைப் பார்ப்பது போல் இருந்தது என பாராட்டினார்கள்.‌ இதுவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதை தெரிந்து கொண்டு திரையரங்கத்திற்கு வந்து இப்படத்தினை கொண்டாடிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் திரையரங்கத்திற்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


ஒவ்வொரு படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் ரசிகர்களின் எதிர்வினையை காண்பதற்காக திரையரங்கத்திற்கு செல்வதுண்டு. அதேபோல் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு திரையரங்கத்திற்கு செல்லும் போது அங்கு அழகான - அப்பாவித்தனமான- மகிழ்ச்சியான- ஏராளமான முகங்களை காண முடிந்தது. நாங்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவது ஜாலியாக இருப்பதற்காகவும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் வருகிறோம் என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கு செல்லும் போதும் எங்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதற்காக இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்த படத்தின் மூலமாக ஆர் ஜே விக்னேஷ் காந்தை ரசிகர்கள் அனைவரும் நடிகராக அதிலும் சிறந்த குணசித்திர நடிகராக ஏற்றுக் கொண்டதை தான் நான் அளவற்ற மகிழ்ச்சியாக கருதுகிறேன்.‌ அவர் வழக்கமான காமெடியை தவிர்த்து இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக ஜெயித்திருக்கிறார். தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடைய ஆசையும் அதுவாகத்தான் இருந்தது. அவர் ஒரு சிறந்த நடிகர். அதனை இந்தப் படத்தில் நிரூபித்திருந்தார். அதற்காக அவரையும் வாழ்த்துகிறேன்'' என்றார்.

மாஸ்க் பட டைட்டில் என்னுடையது, என்னை முழுதாக ஏமாற்றி விட்டார்கள் - குமுறும் இயக்குநர் மாரிஸா !!

 மாஸ்க் பட டைட்டில் என்னுடையது, என்னை முழுதாக ஏமாற்றி விட்டார்கள் - குமுறும்  இயக்குநர் மாரிஸா !! 


Z Fims சார்பில்,   C புதுகை  மாரிஸா எழுதி  இயக்கி தயாரிக்க, பிளாக்பாண்டி, செண்ட் ராயான், வடிவுக்கரசி, ஷகீலா, ஆகியோர் நடிப்பில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் “மாஸ்க்”.  


2017 பதிவு செய்து தயாரித்த தனது படத்தின்   டைட்டிலை தனக்கு தெரிவிக்காமல், தற்போது வெற்றிமாறன் வழங்கும் படத்திற்கு கொடுத்துவிட்டதாக இயக்குநர் மாரிஸா குற்றம் சாட்டியுள்ளார். 


இது குறித்து இயக்குநர் மாரிஸா கூறுகையில்.., 

2017 ஆம் ஆண்டு எங்கள் படத்தை துவக்கிய போது, ஜாக்குவார் தங்கம் தலைவராக இருக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாஸ்க் எனும் டைட்டிலை முறையாக பதிவு செய்தோம்.  படம் துவங்க காலதாமதமானதால், பட டைட்டிலுக்கான புதுப்பித்தல் தொகையையும் செலுத்தி வந்தோம். 


கொரோனா காலகட்டத்தில் எதுவும் இயங்காததால் அந்த நேரத்தில் பணம் கட்டவில்லை. கொரானா முடிந்த பிறகு புதுப்பித்தலுக்கான மொத்த தொகையையும் செலுத்த சென்றோம். அப்போது ஜாக்குவார் தங்கம் படத்தை முடித்து விட்டு வாருங்கள் டைட்டில் உங்களுக்கு தான் என்று உறுதி கூறினார். 

 


முன்னதாக இயக்குநர் ஆதிராஜன்  மாஸ்க் என்ற டைட்டிலில் படத்தை துவக்க அப்போது து ஜாக்குவார் தங்கத்திடம் முறையிட்டேன். டைட்டில் உங்களுடையது தான் யாருக்கும் NOC தரவில்லை என்று உறுதி அளித்தார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் படம் உருவாக்கப்படுவதாக தகவல் வந்த போதே உடனே மீண்டும் முறையிட்டேன். ஆனால் அப்போதும் டைட்டில் உங்களுடையது தான் யாருக்கும் NOC தரவில்லை என்று உறுதி அளித்தார். 



தற்போது வெளியீட்டுத் தேதி குறிப்பிட்டு போஸ்டர் வந்த பிறகு அவரிடம் முறையிட்ட போது, எந்த பதிலும் இல்லை. அவரை நேரில் சந்தித்து கேட்ட போது.., 

நான் மாஸ்க் குழுவினரிடம் பேசி உனக்கு இழப்பீடு வாங்கி தருகிறேன் என்றார். பின் நான்கு நாட்கள் அலைய விட்ட பிறகு, மீண்டும் அவரிடம் கேட்ட போது, 

இப்ப யார் வேண்டுமானாலும், எந்த டைட்டில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், அதை ஒன்றும் செய்ய முடியாது என்று பதிலளித்தார். 


2017 லிலிருந்து  மாஸ்க் படத்தை உயிரைக் கொடுத்து  உருவாக்கி வரும்   எனக்கு 

இந்த பதில் எனக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. 


தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் கடிதம் இல்லாமல் எந்த படமும் சென்சார் செய்ய முடியாது என்ற நிலையில், எப்படி அவர்கள் டைட்டில் வைக்க முடியும். நான் ஜனநாயகன் டைட்டில் வைக்க முடியுமா ? அதை நான் சென்சார் செய்தால், இவர்கள் ஒப்புதல் தருவார்களா?  


நான் மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு மேனேஜர் எனக்கு தெரியாமல்  டைட்டில் தந்துவிட்டார்கள். இது எப்படி நடந்தது. இது குற்றம் தானே. 


இந்த விவகாரத்தில் மாஸ்க் படக்குழுவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, வெற்றிமாறன், ஆண்ட்ரியா, சொக்கலிங்கம் என  மாஸ்க் பட தயாரிப்பாளர்கள் யாருக்குமே இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியாது. அவர்களை குற்றம் சொல்ல முடியாது.  


இதற்கான பதில் வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம், பெப்சி திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மூன்றிலும் கடிதம் அனுப்பியும்,  நேரில் முறையிட்டும், யாரிடமிருந்தும் முறையான  எந்த பதிலும் இல்லை நடவடிக்கையும் இல்லை. 


இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார் அவர்களை சந்தித்து கேட்டேன், அவர் என்னை ஒரு இயக்குநராக மதித்து எந்த பதிலும் தரவில்லை. அவருமே 

சென்சார் முடிந்துவிட்டது, இனி யாரும் ஒன்றும் செய்ய முடியாது. என்று கூறினார்.  


தமிழ் திரையுலகில் அனைத்து இடங்களில் முறையிட்டும்,  எந்த ஒரு தீர்வும் இல்லை. 


என் படம் முழுமையாக முடிந்து விட்டது. சென்சாருக்கு தயாராகிவிட்டது. 

நான் பத்திரிக்கை ஊடகங்களை தான் நம்புகிறேன். என்னை ஏமாற்றிய தயாரிப்பாளர் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும். எனக்கான நியாயம் பெற்றுத்தரப்பட வேண்டும். முதலில் மாஸ்க் டைட்டில் வைத்த எனக்கு அந்த டைட்டிலை பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Kumki 2 Movie Review

Kumki 2 Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kumki 2 nd part படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணிருக்கறது prabhu solomon . இந்த படத்துல arjun das , shrita rao , mathiyazhagan , hareesh paredi , suzane george , srinath , nadackal unnikrishanan , thiruselvam னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.



சின்ன வயசு bhoomi யா நடிச்சிருக்க மதியழகனுக்கு ஒரு குட்டி யானை கிடைக்கும். இந்த குட்டி யானையோட பேரு nila . இவங்க ரெண்டு பேரும் ரொம்ப close அ இருக்காங்க. நல்ல best friends யும் ஆயிடுறாங்க. இப்போ பல வருஷங்கள் ஓடி போயிடுது. இப்போ bhoomi யும் வளந்து college க்கு படிக்க போயிடுவான். இவனோட அம்மா susan க்கு குடிப்பழக்கம் இருக்கும். இவங்களுக்கு தன்னோட பையன்க்கு குட்டி யானை கிடைச்சிருக்கு னு தெரிய வரவும் ரொம்ப சந்தோசமா ஏத்துக்குறாங்க. இதுக்கு காரணம் இந்த குட்டி பெருசா வளந்ததுக்கு அப்புறம் பெரிய லாபத்துக்கு வித்தடனும் னு plan பண்ணி நல்லவங்க மாதிரி நடிக்கிறாங்க. இப்போ bhoomi யும் college க்கு போன பின்ன இந்த யானையை நல்ல விலைக்கு ஒரு யானைப்பாகனுக்கு வித்துடுறாங்க suzane . விவசாய எடத்துல தொம்சம் பண்ணுற யானையை விரட்டுறதுக்கு தான் இந்த யானையை அந்த பாகன் யும் வாங்கிருப்பான். யானையை அம்மா வித்துட்டாங்க னு தெறிய வரவும் bhoomi  யும் அவனோட friend khalis அ நடிச்சிருக்க andrews யும் nila வை தேடி போறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல இவங்க nila வையும் கண்டு பிடிச்சிடுறாங்க. இவங்க மூணு பேரும் அங்க இருந்து தப்பிச்சிடுறாங்க, ஆனா இவங்கள பிடிக்கறதுக்காக chiefminister க்கு கீழ வேலைபாத்துட்டு இருக்கற paari யா நடிச்சிருக்க arjun das தொறத்திட்டு வாரான். இதுக்கு காரணம் இந்த யானையை ஒரு நல்ல நாள் ல பலி குடுக்கணும் னு chiefminister plan பண்ணி வச்சுருப்பாரு. இப்போ இந்த paari கிட்ட இருந்து இவங்க மூணு பேரும் தப்பிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல இருக்கற எல்லா scenes யும் பக்கவா connect ஆகி ஒரு அழகான கதையை குடுத்திருக்காங்க. படத்துல வர ஓவுவுறு characters க்கும் நல்ல detailing அ குடுத்திருக்காங்க. ஒரு பக்கம் bhoomi ஓட friend khalis ஓட காமெடி,  இன்னொரு பக்கம் இந்த காட்டுக்குள்ள anali ன்ற sound engineer வருவாங்க. அவங்களுக்கு assitant அ ஒருத்தன் வருவான். அவனோட comedy இன்னொரு பக்கம் னு இந்த படத்துல balanced ஆனா comedy scenes அ வச்சுருக்காங்க. அதுமட்டுமில்ல யானைகளை பாதுகாக்குறது எவ்ளோ முக்கியம் னு இந்த படத்துல சொல்லிருக்காங்க. படத்தோட ஆரம்பத்துல யானை க்கும் ஹீரோ க்கும் நடுவுல இருக்கற அந்த நட்பா காமிச்சா விதம் எல்லாமே super அ இருந்தது.   


ஒரு சில எடத்துல logic இல்லாத மாதிரி இருக்கும். அதாவுது இந்த யானை குட்டி ல இருந்து வளர வரைக்கும் எந்த ஒரு officers யும் வந்து check பண்ண மாட்டாங்க. அதோட இந்த யானைக்கான license யும் bhoomi எடுத்துருக்கமாட்டான். இதெல்லாம் கொஞ்சம் correct  பண்ணி இருந்தாங்க னா இந்த படம் இன்னுமே நல்ல இருந்திருக்கும். அதே மாதிரி ஒரு சில எடத்துல serious  அ animals  ஓட abuse  அ பத்தி பேசிட்டு இருக்கும்போது திடுருனு comedy scenes எல்லாம் வரும். இதை avoid பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். 


இந்த படத்துல நெறய real ஆனா elephants அ use பண்ணிருக்காங்க. நெறய scenes அ இதுக்காகவே thailand ல தான் shoot பண்ணிருக்காங்க. sukumar ஓட cinematography யும் super  அ இருந்தது. யானைகளை காமிக்க்ர விதமா இருக்கட்டும் இல்லனா காட்டோட அழகை காமிக்க்ர விதமா இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. nivas prasanna ஓட music and bgm இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம்.

Venkat Prabhu, Raju Murugan & D. Imman Unveil the First Look of Mustafa Mustafa

 *Venkat Prabhu, Raju Murugan & D. Imman Unveil the First Look of Mustafa Mustafa*



Feel-good cinema has long enjoyed a cherished place among audiences across generations, with its warmth and relatability earning unwavering affection. Continuing this tradition, Mustafa Mustafa,  a heartwarming new film in the feel-good genre,  is poised to delight viewers.


Directed by Praveen Saravanan and produced by Pradeep Mahadevan of The Mapogos Company, the film features a vibrant ensemble cast. Tamil cinema’s most humorous and relatable artistes — Sathish, Suresh Ravi, Monica Chinnakotla, Maanasa Choudhary, Karunakaran, Pugazh, Aishwarya Dutta, and Pavel Navageethan,  come together to infuse the narrative with charm, wit, and spontaneity.


The film’s much-awaited first look was unveiled by acclaimed filmmakers Venkat Prabhu and Raju Murugan, along with celebrated music director D. Imman.


Speaking about the project, director Praveen Saravanan says, “Mustafa Mustafa isn’t a heavy film. It’s a slice-of-life Fri-Com (Friendship Comedy) that explores how a simple lie can spiral into absurd chaos. The story dives into the drama that unfolds when ordinary people panic and scramble to fix things, only to make them funnier and messier. My heartiest thanks to Venkat Prabhu sir, Raju Murugan sir, and D Imman sir for their kind gesture of showing support for our humble project by unveiling the film’s first look.” 


Shot entirely in Chennai over 35 days, the film captures the city’s natural cadence,  its humour, bustle, and heartbeat. The music, composed by MS Jones Rupert, features four enchanting tracks that echo the emotional fabric of the story.


The soundtrack is further elevated by soulful and vibrant vocal performances from GV Prakash, Vaisagh, Antony Dassan, Deepthi Suresh, and Gana Bala.


Cinematographer VishnuShri frames the film’s visual world with authenticity and vibrancy, while editor Dinesh Ponnuraj sculpts the narrative with deft rhythm, clarity, and emotional precision.


Produced under The Mapogos Company banner, Mustafa Mustafa brings together a spirited young creative team dedicated to crafting a modern, entertaining, and deeply relatable Tamil comedy.


*Star-Cast:*


Sathish


Suresh Ravi


Monica Chinnakotla


Maanasa Choudhary


Karunakaran


Pugazh


Pavel Navageethan


Aishwarya Dutta


VJ. Maheswari Chanakyan


VJ. Parvathy


Livingston


Java Sundaresan


Supergood Subramani


Deepz


Uma Padmanabhan


Rathna (Sun News)


Vinoth Munna


Rail Ravi

Roshan


Vibitha Thekkepat


Sangeetha Raju


Mahima


Madhuri Watts


Mrithula Suresh



*Technical Crew:*


Banner – The Mapogos Company


Writer & Director – Praveen Saravanan


Producer – Pradeep Mahadevan


Music Director – M.S. Jones Rupert


Director of Photography – K.S. Vishnu Shri


Editor – Dinesh Ponraj


Art Director – S. Madan Kumar


Choreographer – Azar


VFX – Selvadhasan (Raymax Studios)


Story – Shammeer Sultan


Costume Designer – Preethi Singh (Au Linen)


Chief Co-director – E. Dhamudharan


Co-director – S. Suriya Prakash


Costumer – K.K. Dhanraj


Stills – Anbhu


Makeup – Mani Seeralan


Lyrics – Naveen Bharathi


Sound Mix – Ramji Soma


Dubbing – Leo Dhas (Sounds Right)


SFX – Shanmugam, S. Nishok


Colorist – G. Balaji


Publicity Stills – Benu Nantha


Publicity Designer – Poster Kaaran


Production Executive – Vijayakumar Shanmugam


Production Controller – V.K. Srijith


Executive Producer – B.S. Vinodh Chelliah


Creative Producer – Praveen Saravanan


PRO – Suresh Chandra - Abdul Nassar 


Audio On – Saregama

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்

 *இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!*



தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்.  


மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.


அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 


படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகிர்ந்து கொண்டதாவது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முஸ்தபா முஸ்தபா’. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய போராடும்போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும். எங்கள் படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குநர்கள் வெங்கட் பிரபு சார், ராஜு முருகன் சார் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.


சென்னையில் 35 நாட்களில் முழுவதுமாக படமாக்கப்பட்ட இந்த கதை சென்னை நகரத்தின் இயல்பு, அதன் நகைச்சுவை, பரபரப்பு மற்றும் இதயத் துடிப்பைப் படம்பிடித்து காட்டுகிறது. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்த இந்தப் படத்தில், கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களை பிரதிபலிக்கும் நான்கு பாடல்களைக் கொண்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், வைஷாக், ஆண்டனி தாசன், தீப்தி சுரேஷ் மற்றும் கானா பாலா ஆகியோர் தங்கள் குரல்களால் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர். 


தி மாபோகோஸ் கம்பெனி பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் நவீனத்துவம், பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவையுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள இளம் திறமையாளர்களைக் கொண்ட படம். 


*நடிகர்கள்:*

சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, வி.ஜே. மகேஸ்வரி, சாணக்கியன், வி.ஜே. பார்வதி, லிவிங்ஸ்டன், ஜாவா சுந்தரேசன், சூப்பர் சுப்ரமணி, தீப்ஸ், உமா பத்மநாபன், ரத்னா (சன் நியூஸ்), வினோத் முன்னா, ரயில் ரவி, ரோஷன், விபிதா தெக்கேபட், சங்கீதா ராஜு, மஹிமா, மாதுரி வாட்ஸ், மிருதுளா சுரேஷ்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:* 


பேனர் - தி மாபோகோஸ் கம்பெனி,

எழுத்து, இயக்கம் - பிரவீன் சரவணன்,

தயாரிப்பாளர் - பிரதீப் மகாதேவன்,

இசையமைப்பாளர் - எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்,

ஒளிப்பதிவாளர் - கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ,

எடிட்டர் - தினேஷ் பொன்ராஜ்,

கலை இயக்குநர் - எஸ். மதன் குமார்,

நடன இயக்குநர் – அசார்,

விஎஃப்எக்ஸ் - செல்வதாசன் (ரேமேக்ஸ் ஸ்டுடியோஸ்),

கதை - ஷம்மீர் சுல்தான்,

ஆடை வடிவமைப்பாளர் - ப்ரீத்தி சிங் (Au லினன்),

தலைமை இணை இயக்குநர் - இ. தாமுதரன்,

இணை இயக்குநர் – எஸ்.சூரிய பிரகாஷ்,

காஸ்ட்யூமர் - கே.கே. தன்ராஜ்,

படங்கள்– அன்பு,

ஒப்பனை - மணி சீராளன்,

பாடல் வரிகள் - நவீன் பாரதி,

ஒலிக்கலவை - ராம்ஜி சோமா,

டப்பிங் - லியோ தாஸ் (சவுண்ட்ஸ் ரைட்ஸ்),

எஸ்எஃப்எக்ஸ் – சண்முகம், எஸ். நிஷோக்,

கலரிஸ்ட் - ஜி. பாலாஜி,

பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் – பெனு நந்தா,

விளம்பர வடிவமைப்பாளர் - போஸ்டர் காரன்,

தயாரிப்பு நிர்வாகி - விஜயகுமார் சண்முகம்,

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் - வி.கே. ஸ்ரீஜித்,

நிர்வாக தயாரிப்பாளர் - பி.எஸ். வினோத் செல்லையா,

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - பிரவீன் சரவணன்,

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர், 

ஆடியோ ஆன் – சரிகம.

Witness Most Compelling Devotional Track Of The Year- The Thaandavam From God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, S Thaman's #BB4 Akhanda 2: Thandavam Unleashed

 Witness Most Compelling Devotional Track Of The Year- The Thaandavam From God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, S Thaman's #BB4 Akhanda 2: Thandavam Unleashed*



God Of Masses Nandamuri Balakrishna and blockbuster maker Boyapati Sreenu’s most-awaited devotionally packed action extravaganza Akhanda 2: Thaandavam, mounted on a grand scale by Raam Achanta and Gopichand Achanta under the 14 Reels Plus banner, and presented by M Tejaswini Nandamuri, has music scored by S Thaman. The promo of the first single 'The Thaandavam' garnered superb response. Yesterday, the full song was unveiled during an event at PVR Mall in Juhu, Mumbai.


S Thaman, who has become synonymous with NBK’s high-voltage soundtracks, returns with another thunderous devotional banger. The song showcases Balakrishna in his most ferocious Aghora avatar yet, performing a fiery Shiva Thaandavam in a massive temple arena, surrounded by chanting Aghoras. The divine intensity in every frame pairs perfectly with Thaman’s trademark percussion-heavy score, turning the visuals into a spiritual spectacle.


Shankar Mahadevan and Kailash Kher lend their powerful voices to the track, while lyricist Kalyan Chakravarthy captures the raw, cosmic force of Lord Shiva through evocative writing. The song delivers sheer goosebumps and hints at becoming the most compelling devotional number of the year.


Akhanda 2 features Samyuktha as the leading lady, Aadhi Pinisetty in a crucial and commanding role, and Harshali Malhotra in an emotionally significant character. The film boasts top-tier technical craftsmanship, with visuals by C. Ramprasad and Santoshh D. Detakae, crisp editing by Tammiraju, and grand production design led by A. S. Prakash.


With Balakrishna’s intense presence, Boyapati’s unmatched mass presentation, and Thaman’s spine-tingling score, Akhanda 2: Thaandavam is gearing up to be a monumental cinematic and devotional experience.


The movie is gearing up for release on December 5th.


*Cast* : God Of Masses Nandamuri Balakrishna, Samyuktha, Aadhi Pinisetty, Harshali Malhotra


*Technical Crew:*


Writer, Director: Boyapati Sreenu

Producers: Raam Achanta, Gopi Achanta

Banner: 14 Reels Plus

Presents: M Tejaswini Nandamuri

Music: Thaman S

DOP: C Ramprasad, Santoshh D Detakae

Ex-Producer: Koti Paruchuri

Art: AS Prakash

Editor: Tammiraju

Fights: Ram-Lakshman

PRO: Yuvraaj

Marketing: First Show


https://www.youtube.com/watch?v=rbXmleQI144

அகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

 *அகண்டா 2: தாண்டவம் படத்தின்  முதல் சிங்கிள் பாடல் வெளியானது !*



காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு  நான்காவது முறையாக  இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன்  திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”.   இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா ,  ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.  எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.


இசையமைப்பாளர் எஸ். தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம் கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில் அரங்கில் அகோரர்களின் ஓம் உச்சரிப்புகளின் நடுவே தெய்வீகமான சிவ தாண்டவத்தை ஆடும் காட்சிகள் – தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் இணைந்து ஒரு ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தை உருவாக்குகின்றன.


கல்யாண் சக்ரவர்த்தி சிவ பெருமானின் பிரபஞ்ச ஆற்றலை வார்த்தைகளால் உயிர்ப்பிக்க, பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் அற்புதமான குரலில் பாடலை பாடியுள்ளார். பாடல் முழுவதும் சிலிர்க்க வைக்கும் தருணங்களால் நிறைந்துள்ளது, இந்த ஆண்டின் மிக வலுவான பக்திப்பாடலாக இப்பாடல் இருக்கும். 


படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.


ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர். 

https://www.youtube.com/watch?v=rbXmleQI144

பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான  இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்


இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


*நடிப்பு :*


நந்தமூரி பாலகிருஷ்ணா

சம்யுக்தா

ஆதிப் பினிசெட்டி

ஹர்ஷாலி மால்ஹோத்ரா


*தொழில்நுட்பக் குழு :*


எழுத்து, இயக்கம் :  போயபாடி ஶ்ரீனு

தயாரிப்பாளர்கள் :  ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா

பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்

வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி

இசை : S. தமன்

ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி

கலை : A.S. பிரகாஷ்

எடிட்டிங் : தம்மிராஜு

சண்டை அமைப்பு : ராம் - லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ