Featured post

KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai

 *KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai* 
KRIA Law, a full-service intellectual property and commercial law fir...

Saturday, 18 April 2026

KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai

 *KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*





KRIA Law, a full-service intellectual property and commercial law firm, hosted a half-day event themed ‘IP and Sports: Ready, Set, Innovate’ at Victoria Public Hall, Chennai, marking the World Intellectual Property Organisation’s (WIPO) World IP Day 2026. The event brought together over 250 participants, including corporates, legal professionals, sportspersons, and entrepreneurs, to discuss the growing role of intellectual property in the sports ecosystem, with a focus on athlete rights, endorsements, and monetisation models.


Notable speakers included G. Rajaraman, Somdev Devvarman, Sudha Shah, Dr. Subhrajit Chanda, Siddharth Raman, Vasanth Bharadwaj, and Vishal Jaison.


“The intersection of intellectual property and sports is opening up new avenues for athletes to protect and monetize their personal brands. Structured models such as royalty-based frameworks can ensure sustained value for stakeholders,” said Somdev Devvarman, Former Indian Tennis Player.


“In today’s evolving sports ecosystem, intellectual property plays a critical role, from media rights to athlete branding,” said Siddharth Raman, Sportz Interactive.


“At KRIA, we believe that the intersection of intellectual property and sports presents a significant opportunity to create structured and sustainable value,” said a spokesperson from KRIA Law.


The event also featured the announcement of winners of the KRIA’tive Innovation Awards 2026, which received over 460 applications, along with the felicitation of winners of the IPASI Pickleball Tournament.


KRIA Law organized the event in collaboration with WIPO, INTA, and iTNT Hub, highlighting the importance of continued dialogue and innovation in the intersection of IP and sports.


KRIA is a full-service IP and commercial law firm with offices in Chennai and Delhi, offering end-to-end services across a global network spanning 130+ countries.

What began as “All this anger was once love”… now makes you say - THAT’S A ROAR

What began as “All this anger was once love”… now makes you say - THAT’S A ROAR



Actor Vijay Deverakonda teams up with director Shouryuv for a project that signals scale, ambition and a bold step toward global cinema. Not as you’ve known him but as you’ve never imagined him.


The announcement poster shows Vijay Deverakonda walking forward holding four dogs on metal leashes. Behind him 6/7 men walk with him.


This is the Dream Collective, a powerful team of global creative and technical talent.


Each one is carefully chosen.

Each one is important.

Each one is strong.


This poster is not just about the film announcement


It is about creating something that can only happen when all of them come together.


The team has also unveiled a theme song titled That’s A Roar.


This theme song is about staying strong no matter what life throws at you. It shows how a person can face pain, struggles, and failures but still choose to get up and keep going. It says you don’t need fame or recognition to be powerful . Real strength comes from not giving up. Every small step you take even when it’s hard, is your true “roar.”  



This project exists in a parallel mythological universe - A world that feels ancient yet is entirely imagined.


Familiar yet radically original.


It draws from the soul of mythology but refuses to be bound by it.


A complete banger that sets the benchmark and raises expectations sky high. With bigger global names joining the team, VD and Shouryuv are all set to go global and everything about this project looks absolutely killer.


At the forefront is Vijay Deverakonda is one of Indian cinema’s most dynamic and evolving stars. Known for consistently choosing diverse and challenging subjects, Vijay continues to push boundaries with every project.


With this film, he appears to be stepping into a space that is both emotionally intense and visually grand marking another massive evolution in his journey.


Director Shouryuv who made a lasting impression and won the hearts of Telugu audiences with Hi Nanna now scales up his vision with a story that promises both depth and magnitude. This film is in complete contrast to his earlier work reflecting his ambition to tell stories that go beyond borders


Backed by Vyra. This yet to be titled project brings together an exceptional lineup of creators from across the world. It’s a rare convergence where every department is powered by internationally acclaimed talent.


What truly sets this project apart is its world class technical team:


Alejandro Martinez (Director of Photography) - known for his work on global productions like House of the Dragon and Fallout brings an international visual grammar to the film.


Suresh Selvarajan (Production Designer) - The creative force behind the grand visual worlds of Animal, Om Shanti Om and beyond.


Eric Durst (VFX Supervisor) the man behind films like Gods of Egypt, Batman Forever, Snowpiercer and more.


Hesham Abdul Wahab (Music Director) - one of India’s most soulful and versatile composers.  


Praveen Antony (Editor) - known for shaping gripping narratives.


Sachin Lovalekar (Costume Designer) - with a renowned range of films to his credit.


The announcement poster itself speaks volumes Vijay Deverakonda & Shouryuv are leading a formation flanked by a pack and a team that resembles warriors of their craft.


With talent assembled from across industries and geographies, this project stands as a bold attempt to create cinema that resonates on a global scale.


Cast & Crew


Starring - Vijay Deverakonda

Director - Shouryuv

Director of Photography - Alejandro Martinez

Production Designer - Suresh Selvarajan

VFX Supervisor - Eric Durst

Music Director - Hesham Abdul Wahab

Editor - Praveen Antony

Costume Designer - Sachin Lovalekar  

PRO - Sathish, S2 Media

விஜய் தேவரகொண்டா - இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

 *விஜய் தேவரகொண்டா -  இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு* 



'இந்தக் கோபம் எல்லாம் ஒரு காலத்தில் அன்பாக இருந்தது' என்று தொடங்கிய ஒன்று... இப்போது உங்களை சொல்ல வைக்கிறது - அதுதான் கர்ஜனை. 


நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குநர் சௌர்யுவ்  இயக்கும் #VDxSHOURYUV படத்தில் நடிக்கிறார். அது பிரம்மாண்டத்தையும், இலட்சியத்தையும் உலகளாவிய சினிமாவை நோக்கிய ஒரு துணிச்சலான வீறு நடையையும் குறிக்கிறது. நீங்கள் அவரை அறிந்த விதத்தில் அல்ல... மாறாக நீங்கள் கற்பனை செய்திராத விதத்தில்... 


அந்த அறிவிப்பு போஸ்டரில் ...விஜய் தேவரகொண்டா உலோக பட்டைகளால் நான்கு நாய்களை பிடித்தபடி முன்னோக்கி நடந்து செல்வது காட்சிப்பபடுத்தப்பட்டுள்ளது. 

அவருக்குப் பின்னால் ஆறு அல்லது ஏழு பேர் அவருடன் நடந்து செல்கின்றனர். 


இதுதான் ட்ரீம் கலெக்டிவ். உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களின் சக்தி வாய்ந்த குழு...

ஒவ்வொருவரும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ...

ஒவ்வொருவரும் முக்கியமானவர் ‌.. ஒவ்வொருவரும் வலிமையானவர்... இந்த போஸ்டர் திரைப்பட அறிவிப்பை பற்றியது மட்டுமல்ல.. அவர்கள் அனைவரும் ஒன்றிணையும் போது மட்டுமே சாத்தியமாகும் ஒன்றை உருவாக்குவதை பற்றியது. இந்தக் குழு 'தட்ஸ் எ ரோவர் 'என்ற தலைப்பில் இப்படத்திற்கான ஒரு தீம் பாடலையும் வெளியிட்டுள்ளது.


வாழ்க்கை உங்கள் மீது எதை எறிந்தாலும்... மன உறுதியுடன் இருப்பதை பற்றியது. இந்த தீம் பாடல். ... ஒருவர் எப்படி வலி, போராட்டங்கள் மற்றும் தோல்விகளை எதிர்கொண்டாலும் ...மீண்டும் எழுந்து தொடர்ந்து முன்னேற முடியும் என்பதை இது உணர்த்துகிறது. சக்தி வாய்ந்தவராக இருக்க... உங்களுக்கு புகழும், அங்கீகாரமும் , தேவையில்லை .என்றும் இது கூறுகிறது. கைவிடாமல் இருப்பதிலிருந்து தான் உண்மையான வலிமை வருகிறது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முயற்சியும் அது கடினமானதாக இருந்தாலும் அது தான் உங்கள் உண்மையான கர்ஜனை ஆகும். 


இந்த படம் ஒரு இணையான - புராண பிரபஞ்சத்தில் உள்ளது. பழமையானதாக தோன்றும். ஆனால் முற்றிலும் கற்பனையான ஒரு உலகம்... பரிட்சயமானது. ஆனால் முற்றிலும் தனித்துவமானது இது. புராணங்களின் ஆன்மாவிலிருந்து உத்வேகம் பெறுகிறது. ஆனால் அவற்றால் கட்டுப்பட மறுக்கிறது. 


சர்வதேச அளவிலான தர நிலைகளை நிர்ணயித்து எதிர்பார்ப்புகளை வானுயர உயர்த்தும் ஒரு முழுமையான வெற்றிப் பாடல். பெரிய உலகளாவிய பெயர்கள் குழுவில் இணைவதால் விஜய் தேவரகொண்டாவும் உலக அளவில் செல்வதற்கு தயாராக உள்ளனர் . மேலும் இந்த படத்தை பற்றிய அனைத்தும் முற்றிலும் அசத்தலாக தெரிகிறது. 


முன்னணியில் இருக்கும் விஜய் தேவரகொண்டா- இந்திய சினிமாவில் மிகவும் ஆற்றல் மிக்க மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர்... தொடர்ந்து மாறுபட்ட மற்றும் சவாலான கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற விஜய் ஒவ்வொரு படைப்பிலும் தனது எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறார். 


இந்த படத்தின் மூலம் உணர்வுபூர்வமாக தீவிரமான மற்றும் காட்சி அளவில் பிரமாண்டமான ஒரு தளத்திற்குள் அவர் அடி எடுத்து வைப்பது போல் தெரிகிறது. இது அவரது பயணத்தில் மற்றொரு மாபெரும் பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. 


Hi Nanna'' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து அவர்களின் இதயங்களை வென்ற இயக்குநர் சௌர்யுவ் தற்போது ஆழமும் பிரம்மாண்டமும் நிறைந்த ஒரு கதையின் மூலம் தனது கலை பார்வையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்.  வைரா (Vyra)  நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாகும் இந்த திரைப்படம் அவரது முந்தைய படைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எல்லைகளைக் கடந்து நிற்கும் கதைகளை சொல்ல வேண்டும் என்ற அவரது லட்சியத்தை பிரதிபலிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மிகச்சிறந்த படைப்பாளிகளின் ஒரு அரிய சங்கமமாக அமைகிறது. ஒவ்வொரு துறையிலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களால் வழிநடத்தப்படும் ஒரு அபூர்வ கூட்டணியாகவும் இது திகழ்கிறது. 


இப்படத்தை உண்மையிலேயே தனித்துவம் ஆக்கி காட்டுவது அதன் சர்வதேச தரம் வாய்ந்த தொழில்நுட்ப குழுவே ஆகும். Alejandro Martinez (ஒளிப்பதிவாளர்) ஹவுஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் ஃபால் அவுட் 

போன்ற உலளாவிய படைப்புகளுக்காக அறியப்படுபவர். இவர் இந்த படத்திற்கு ஒரு சர்வதேச ரீதியிலான காட்சி மொழியை கொண்டு வருகிறார். 


சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு வடிவமைப்பாளர், 'அனிமல்', 'ஓம் சாந்தி ஓம்' மற்றும் பல படங்களின் பிரம்மாண்டமான காட்சி உலகங்களை உருவாக்கிய படைப்பாற்றல் மிக்க கலைஞர். 


Eric Durst ( VFX மேற்பார்வையாளர்) - 'காட்ஸ் ஆஃப் எகிப்து', 'பேட்மேன் பார் எவர் 'ஸ்னோபிர்சர் ( Snowpiercer) போன்ற படங்களின் பின்னணியில் செயல்பட்டவர். 

ஹேஷாம் அப்துல் வஹாப் (இசை அமைப்பாளர்)  இந்தியாவின் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட இசையமைப்பாளர்களில் ஒருவர். 


பிரவீன் ஆண்டனி (படத் தொகுப்பாளர்)- விறுவிறுப்பான கதை கலங்களை செதுக்குவதில் வல்லவர். 


சச்சின் லோவாலேக்கர் (ஆடை வடிவமைப்பாளர்) தனது வரவில் புகழ்பெற்ற பல படைப்புகளை கொண்டவர்.


இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரே பல விசயங்களை உணர்த்துகிறது. விஜய் தேவரகொண்டாவும்  சௌர்யுவ்வும் ஒரு அணியை முன் நின்று வழிநடத்துகின்றனர். அந்த அணியினர் தங்கள் துறையில் வல்லமை மிக்க போர் வீரர்களை போல் காட்சியளிக்கிறார்கள். 


பல்வேறு திரை துறைகள் மற்றும் புவியியல் எல்லைகளில் இருந்து திரட்டப்பட்ட திறமையாளர்களுடன் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் துணிச்சலான முயற்சியாக இந்த படம் உயர்ந்து நிற்கிறது. 


நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா 


தொழில்நுட்ப குழு :


எழுத்து& இயக்கம் ; சௌர்யுவ் 

ஒளிப்பதிவு - அலெக்சாண்டர் மார்ட்டினஸ் 

தயாரிப்பு வடிவமைப்பு : சுரேஷ் செல்வராஜன் 

வி எஃப் எக்ஸ் மேற்பார்வை : எரிக் டர்ஸ்ட் 

இசை :ஹேஷாம் அப்துல் வகாப் 

படத்தொகுப்பு : பிரவீண் ஆண்டனி 

ஆடை வடிவமைப்பு:  சச்சின் லோவாலேக்கர் 

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா)

பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

 *’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*



















‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது,

"படத்தின் தலைப்பு 'பிரேக்ஃபாஸ்ட்' என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு  எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது" என தெரிவித்தார்.


நடிகை அமிதா, "காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்".


நடிகர் க்ருத்கிக் மோகன், "ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது.

எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும், என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும்". 


டிஸ்ட்ரிபியூட்டர் குகன், "இந்த படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இந்த படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். 'ஜனநாயகன்' திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடு செய்ய முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி அந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்" என்றார். 


இயக்குநர் வசந்த பாலன், "20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. 

இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்" என்றார். 


நடிகை ரோஸ்மின் பேசியதாவது, "என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.  இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!" என தெரிவித்தார்.


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன். 

எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்".


கதாநாயகன் ராணவ், "ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும்  பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்" என்றார். 


இயக்குநர் காந்தி கிருஷ்ணன், "இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார். 


கவிப்பேரரசு வைரமுத்து, "நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன்.

காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. 

காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,  இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட  ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து  தந்தையையோ, தந்தையை வைத்து  தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை  புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.


இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.  

திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.  காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது.  பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்" என்றார்.


நடிகர் ரியோ, "எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி.

'பிரேக்ஃபாஸ்ட்' திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது. எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும். 

இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்" எனக் கூறினார்.


நடிகர் பரத், "இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் 'செல்லமே' திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி".


நடிகர் மைம் கோபி, "திரைப்படத்தின் கதாநாயகன் ராணவ் மிகவும் எளிமையான மனிதர். மேலும், அனைவரையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் அணுகக் கூடிய நபர். அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயமாக இந்த சினிமா துறையில் கிடைக்கும். 'ப்ரேக்ஃபாஸ்ட்' எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது. எனவே தான் அவற்றை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். அதே போன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம், தவிர்க்க கூடாத திரைப்படம்" என தெரிவித்தார்.


இயக்குநர் காந்தி கிருஷ்ணா, "இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் தர வேண்டும்" என்றார். 


தயாரிப்பாளர் வரதராஜன், "இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்" என்றார்.

It’s Official: SLB's Love & War, Starring Ranbir Kapoor, Vicky Kaushal and Alia Bhatt, Arrives January 21, 2027

 It’s Official: SLB's Love & War, Starring Ranbir Kapoor, Vicky Kaushal and Alia Bhatt, Arrives January 21, 2027*



*Sanjay Leela Bhansali’s Love & War Sets January 21, 2027 Release; A Grand Love Saga in Hindi, Tamil and Telugu*


*India’s Biggest Romantic Spectacle, Sanjay Leela Bhansali’s Love & War Sets Its Date: January 21, 2027*


The biggest announcement of the year is finally here. Sanjay Leela Bhansali’s Love & War is set to anchor India’s Republic Day weekend, releasing worldwide on Thursday, January 21, 2027.


One of the most anticipated romantic dramas, the film brings together Ranbir Kapoor, Vicky Kaushal and Alia Bhatt in a powerful, high-stakes emotional saga.


Carrying the signature Bhansali stamp of immersive storytelling and visually rich cinematic world, the film is expected to deliver both scale and emotional depth for audiences worldwide.


Mounted on a grand scale, Love & War marks Sanjay Leela Bhansali’s most ambitious romantic drama yet. With its sweeping narrative and emotional intensity, it stands as India’s grandest love saga and one of the biggest romantic spectacles in Indian cinema.


Love & War will release in Hindi, Tamil and Telugu.

https://www.instagram.com/p/DXOa43wCBeW/?igsh=MTFieDRjamRmczBtZA==

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”,

 *ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”,  2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*



*சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 ஜனவரி 21 வெளியீடு !! ; இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்ட காதல் காவியம்!*


*இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியம்  “லவ் & வார்”.  2027 ஜனவரி 21 வெளியீடு !!*


இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும்  2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது.


மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர்.  வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது.


பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வார்”, சஞ்சய் லீலா பன்சாலியின் மிகபெரும் கனவுப்படைப்பாக உருவாகி வரும்,  பிரம்மாண்டமான  காதல் படைப்பாகும்.  கதை அமைப்பும், தீவிரமான உணர்வுகளும், இதை இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியங்களில் ஒன்றாகவும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காதல் காட்சி அனுபவங்களில் ஒன்றாகவும் நிலைநிறுத்துகிறது.


“லவ் & வார்” படம், தமிழ் ,இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவெங்கும் பிரம்மாண்டமாக வரும் 2027 ஜனவரி 21  அன்று வெளியாகவுள்ளது.

https://www.instagram.com/p/DXOa43wCBeW/?igsh=MTFieDRjamRmczBtZA==

Friday, 17 April 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம்

 *சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!*



*சீயான் விக்ரம் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படம் ஸ்டைலீஷ் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது !!*


*சீயான் 63 ஸ்டைலீஷ் புரோமோ வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !*


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.  


இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இப்போதே ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை  பெருமளவில்  உயர்த்தியுள்ளது.


தனித்துவமான கதைக்களம்  மற்றும்  ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்  ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல்  சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய  “இருமுகன்”  படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி  10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்க, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.


தனித்துவமான பின்னணி இசைக்காக புகழ்பெற்ற சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவரின் இசை இந்த படத்தின் மாஸ் மற்றும் எமோஷனல் அம்சங்களை மேலும் உயர்த்தும்.


அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் R. D. ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றுகிறார்.  வசனங்களை ஷான் கருப்புசாமி எழுதுகிறார்.  தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன்,

படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக  பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களின் தொழில்நுட்ப பங்களிப்பு படத்தின் காட்சியமைப்பை உலகத் தரத்தில் கொண்டு செல்லும்.


“சீயான் 63” படம், சீயான் விக்ரமின் திரை வாழ்க்கையில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் பெயர் பெற்ற அவர், இந்த படத்திலும் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என நம்பப்படுகிறது.


மொத்தத்தில், வெற்றிகரமான கூட்டணி, திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் பெரிய அளவிலான தயாரிப்புடன் உருவாகும் இந்த “சீயான் 63” பட அறிவிப்பு,  அவரது பிறந்தநாளில்  ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


நடிகர் :


 சீயான் விக்ரம்


தொழில்நுட்பக் குழு


எழுத்து & இயக்கம் : ஆனந்த் சங்கர்

தயாரிப்பு நிறுவனம் : சத்ய ஜோதி பிலிம்ஸ்

வழங்குபவர் : TG.தியாகராஜன்

தயாரிப்பாளர்கள் : செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்

இணை தயாரிப்பு : G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : R.D. ராஜசேகர்  ISC

தயாரிப்பு வடிவமைப்பு : ராஜீவன்

வசனம் : ஷான் கருப்புசாமி

படத்தொகுப்பு : ரேமண்ட் டெரிக் கிராஸ்டா

கலை இயக்கம் : சூர்யா ராஜீவன்

ஆடை வடிவமைப்பு : பூர்ணிமா ராமசாமி


Link   :  

https://www.youtube.com/watch?v=VL34SYoMS_g

Mr X Movie Review

Mr X Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mr x படத்தோட review வை தான் பாக்க போறோம்.   இந்த படத்துல  ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர்னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது  மனு ஆனந்த்.   சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம். 

india ஓட் top raw agent அ இருக்காரு mr x அ நடிச்சிருக்க sarath குமார். nuclear weapon அ தயாரிக்க தேவையான ஒரு பொருளை இமயமலை ல மறைச்சு வச்ருக்காங்க, அதா பத்திரமா பாதுகாக்கவும் செய்றாங்க.  இந்த பொருளை கடத்த russia திட்டம் போடுது. இவங்கள தடுத்து நிறுத்த mr x  கலம் இறங்குறாரு. ஆனா mr x ஓட முயற்சி தோல்வி ல போய் முடியுது. russia ல இருந்து வந்தவங்க mr x யும் அவரோட வந்த மத்த agents யும் arrest பண்ணி moscow க்கு கூட்டிட்டு போயிடுறாங்க. இந்த பொருளை pakistan க்கு விக்க போறோம் னு raw ஓட head ஆனா manju warrier க்கு information வருது. இத தடுத்து நிறுத்த அமரன் அ நடிச்சிருக்க கெளதம் கார்த்திக் அப்புறம் கெளதம் அ நடிச்சிருக்க ஆர்யா வை  ரா agency அனுப்புறாங்க. g 20 மாநாடு நடக்கற நேரத்துல தான் ரகசியமா இந்த operation நடக்குது. இந்த ஆபரேஷன் ல இவங்க ஜெயிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

படத்துல making,  screenplay னு எல்லாமே தரமா இருந்தது. ஒரு சில கேரக்டர்ஸ் க்கு குடுத்த flashback portions எல்லாம் detailed அ குடுத்திருக்காங்க. உதாரனத்துக்கு கௌதம் கார்த்திக் ஓட flashback portion சூப்பர்  அ இருந்தது. 


ஆர்யா அப்புறம் anaga ஓட chemistry நல்ல இருந்தது. இவங்களோட scenes எல்லாம் பாக்க cute அ ரசிக்கற விதமா அமைச்சிருந்தது.  sarathkumar ஓட acting அ பத்தி சொல்லவே வேண்டாம். raw agent அ இவரு சூர்யவம்சம், sooryan படத்துல இருக்கற getup போட்டுட்டு வரும்போது theatre ல விசில்  சத்தம் பரந்தது னு சொல்லலாம். மஞ்சு warrier ஓட action scenes   எல்லாம் super  அ workout ஆயிருந்தது. கெளதம் கார்த்திக் body fit அ, பாக்க handsome அ இருந்தாரு. திமிரான சிரிப்போட புத்திசாலியான வில்லன் அ எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். 


thibu ninan thomas ஓட music and bgm ரெண்டுமே கலக்கலா இருந்தது. director யும் இந்த கதைக்கு உண்மையா நடந்த விஷயங்களா கொண்டு வந்திருக்காரு. அதுனால படம் பாக்க interesting ஆவும் exciting ஆவும் இருந்தது. spy thriller க்கு ஏத்த மாதிரி stunt sequence அ குடுத்திருக்காங்க. அதே மாதிரி படத்துல  ஏகப்பட்ட twists அண்ட் turns அ கொடுத்திருக்காங்க. 


ஒரு entertaining ஆனா திரைக்கதை தான் இது. சோ மறக்காம உங்க family and friend ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்க miss பண்ணிடாதீங்க.

Room Boy Movie Review

Room Boy Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம room boy  இந்த படத்துல  Nikhil, Harsha, Imaan Annachi, Birla Bose, Kaathukkaruppu Kalai, Kavitha, Karpagam  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது  S.Jagan Royan   சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம். 

sanjay ஒரு popular.  ஆனா hotel ல வேலை செய்றாரு . இந்த hotel young couples க்கு பிடிச்ச இடமா அமைச்சிருக்கு. என்னதான் இது  வெளில பாக்க அழகா இருந்தாலும் மறைமுகமா இந்த hotel ல சில தப்புகள் நடக்குது. management ல இருக்கற ஆட்கள் சரி கிடையாது, அதே சமயம் room boys அ வேலை செய்றவங்கள ரொம்ப மோசமா நடத்துறாங்க. இங்க sanjay  யும் room boy அ தான் வேலை செய்றாரு ஆனா இவருக்கு பின்னாடி ஒரு மர்மம் ஒளிஞ்சுகிட்டு இருக்கு. அது என்னது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ரெண்டு பெரிய family அ காமிக்கறாங்க, இவங்கள mystery மூலமா connect பண்ணுறாங்க. அதெல்லாம் பாக்கும் போது நல்ல இருந்தது. அது மட்டுமில்ல நெறய twists அண்ட் turns அ குடுத்திருக்காங்க. 


ஜெகன் reyan director அ அருமையான thrilling  கதையை குடுத்திருக்காரு. இந்த படத்துல முக்காவாசி புது முகங்கள் தான் இருந்தாலும் எல்லா artist யும்  best அ நடிக்க வச்ருக்காரு. Velan Sahadevan’ ஓட bgm அப்புறம் songs எல்லாமே இந்த கதைக்கு நல்ல செட் ஆயிருந்தது. Bharathi Rajan’ ஓட cinematography தான் இந்த படத்துக்கு highlight அ அமைச்சிருக்கு. முக்கியமா yelagiri ஓட அழகை அப்படியே 

audience ஓட கண்முன்னடி கொண்டு வந்துட்டாரு னு தான் சொல்லணும். 


actors ஓட strong performance,  பக்காவான technical team,  அருமையான கதை களம் கொண்டது தான் இந்த திரைப்படம். சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.