Featured post

Delhi High Court fines Rakshit Shetty ₹5 lakh for unauthorised use of songs in Bachelor Party film

 Delhi High Court fines Rakshit Shetty ₹5 lakh for unauthorised use of songs in Bachelor Party film The Court stopped short of sending Shett...

Thursday, 2 April 2026

Delhi High Court fines Rakshit Shetty ₹5 lakh for unauthorised use of songs in Bachelor Party film

 Delhi High Court fines Rakshit Shetty ₹5 lakh for unauthorised use of songs in Bachelor Party film

The Court stopped short of sending Shetty to jail, instead asking him and Paramvah Studios to pay ₹5 lakh to purge contempt of its orders.



The Delhi High Court recently ordered Paramvah Studios, the production house spearheaded by Kannada actor-director Rakshit Shetty, to pay a total of ₹25 lakh for the unauthorised use of two songs in his Kannada film Bachelor Party. [MRT Music v. Paramvah Studios]


Justice Tejas Karia held the studio liable for copyright infringement and willful disobedience of court directions, rejecting the filmmakers' defence that the musical usage was too "minimal" to require a license.


"In any event, the use of the Original Works in the Impugned Film was not minimal as the song “Omme Ninnanu” was incorporated for substantial 31 seconds whereas the song “Nyaya Ellide” was used for 7 seconds. As per Section 14(d)(i)(A) of the Copyright Act, even a single photograph of any image forming part of the film is an exclusive right given to the copyright owner and, therefore, the Defendants could not have used even a single frame for even a second from the audio-visual of the song “Nyaya Ellide” without permission of the Plaintiff," the Court held.


The Court stopped short of sending Shetty to jail, instead asking him and Paramvah Studios to pay ₹5 lakh to purge contempt of its orders.


"However, upon consideration of the Affidavit dated 31.10.2025 submitted by Defendant Nos. 1 and 2 expressing regret for their actions, the Court is inclined to exercise leniency. Rather than imposing simple imprisonment on Defendant No. 2 for contempt of the Order dated 12.08.2024, Defendant Nos. 1 and 2 are directed to remit an exemplary cost of ₹5,00,000/- to the Plaintiff within two weeks to purge the contempt committed."


MRT Music, a music label, claimed ownership over the two songs, including their sound recordings and underlying literary and musical works, on the basis of an assignment deed executed in 2020.


The company alleged that the songs were used in Bachelor Party without obtaining a licence. One of the songs was played on a television in a scene, while the other was sung in a classroom sequence to support the narrative. The film was released theatrically in January 2024 and later made available on OTT platforms.


On August 12, 2024, the Court passed an interim order directing the defendants to deposit ₹20 lakh within four weeks and take down infringing content. However, they did not comply within the stipulated period and continued to exploit the works, leading MRT Music to initiate contempt proceedings.


The defendants subsequently deposited the amount during the course of the proceedings, but the delay in compliance formed the basis of the contempt action.


The Court rejected the lapse argument under Section 19(4), noting that MRT had continued to exploit the works, including on digital platforms. Since there was no evidence of non-use, the rights had not reverted and continued to subsist on the date of the suit.

Shetty and Paramvah Studios argued the use was "de minimis" (minimal), noting that "Nyaya Ellide" appeared for only 7 seconds and "Omme Ninnanu" for 31 seconds. However, the Court looked beyond the stopwatch to the creative intent behind the clips.


It shot down the argument that these uses were "incidental" or "irrelevant". Instead, the judge found that the songs were carefully selected to drive the movie's narrative.


The Court noted that the title "Nyaya Ellide" translates to "Where is the justice?". Choosing this specific song to play while the protagonist was suffering was deemed a deliberate creative decision to highlight his plight.


"This clearly shows that the use of Original Works was not merely incidental or irrelevant but was actually a conscious creative call taken to further the plot of the Impugned Film."


The Court concluded that because the songs were used for commercial gain and to match the script, they did not qualify for the "de minimis" exception.


The total financial mandate consists of two separate directions:

1) The Court directed the Registry to release the ₹20 lakh previously deposited by Shetty and Paramvah Studios to MRT Music.

2) The Court imposed an additional ₹5 lakh penalty because the filmmakers failed to meet the original 2024 deposit deadline.


MRT Music was represented by Senior Advocate Swathi Sukumar with Advocates Asavari Jain, Geetanjali Visvanathan, Shivansh Tiwari from Ira law and Advocates Ritik Raghuvanshi, Shrudula Murthy, Rishika Aggarwal.


Paramvah Studios and others were represented by Senior Advocate J Sai Deepak with Advocates Meenakshi Ogra, Samrat S Kang and Vishnu Gambhir.

பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய

 *‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!*


சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.





கன்னட நடிகர், இயக்குநர் ரக்‌ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது 'பேச்சிலர் பார்ட்டி' என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக பரம்வா ஸ்டுடியோஸிற்கும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். 


"'ஓம்மே நின்னானு' பாடல் 31 வினாடிகளுக்கும், 'நியாயா எல்லிடே' பாடல் 7 வினாடிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவான நீளம் கிடையாது.  ஏனெனில்  பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 14(d)(i)(A)-ன் படி, திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அசல் புகைப்படம் கூட உரிமையாளருக்கு வழங்கப்படும் பிரத்யேக உரிமையாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி 'நியாயா எல்லிடே' பாடலின் ஒலி-ஒளிக் காட்சியிலிருந்து ஒரு நொடி கூட பயன்படுத்த முடியாது" என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், கோர்ட் உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


”இருப்பினும், பிரதிவாதிகள் 1 மற்றும் 2 ஆகியோர் தங்கள் செயல்களுக்காக வருத்தம் தெரிவித்து சமர்ப்பித்த 31.10.2025 தேதியிட்ட பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.12.08.2024 தேதியிட்ட உத்தரவை அவமதித்ததற்காக பிரதிவாதி எண் 2-க்கு சிறைத் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்த அவமதிப்பில் இருந்து விடுவிக்கவும் இரண்டு வாரங்களுக்குள் ரூ. 5,00,000 முன்மாதிரி செலவுத் தொகையை வாதிக்குச் செலுத்துமாறு உத்தரவிடப்படுகிறது”.


கடந்த 2020-ல் நிறைவேற்றப்பட்ட உரிமை மாற்றப் பத்திரத்தின் அடிப்படையில் அந்த இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளுக்கு எம்.ஆர்.டி மியூசிக் இசை நிறுவனம் உரிமை கோரியது. ’பேச்சிலர் பார்டி’ திரைப்படத்தில் உரிமம் பெறாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியது. ஒரு காட்சியில் ஒரு பாடல் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது, மற்றொன்று கதைக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு வகுப்பறைக் காட்சியில் பாடப்பட்டது. இப்படம் ஜனவரி 2024 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, பின்னர் ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டது.


ஆகஸ்ட் 12, 2024 அன்று பிரதிவாதிகள் நான்கு வாரங்களுக்குள் ரூ. 20 லட்சத்தைச் செலுத்தவும், உரிமம் பெறாமல் பயன்படுத்தியுள்ள பாடல்களை அகற்றவும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து பாடல்களை பயன்படுத்தியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் பிரதிவாதிகள் அபராதத் தொகையை செலுத்தினாலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.


டிஜிட்டல் தளங்கள் உட்பட பல தளங்களிலும் எம்.ஆர்.டி அந்தப் படைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், பிரிவு 19(4)-ன் கீழ் உரிமை இழப்பு வாதத்தை நிராகரித்தது. பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், வழக்குத் தொடரப்பட்ட தேதியில் இருந்து அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.


’நியாய எல்லிடே’ வெறும் 7 வினாடிகளுக்கும், ’ஓம்மே நின்னானு’ 31 வினாடிகளுக்கும் மட்டுமே இருப்பதைக் குறிப்பிட்டு ’மிக குறைவான நேரமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ என ரக்‌ஷித் ஷெட்டியும் பரம்வா ஸ்டுடியோஸும் வாதிட்டனர். இருப்பினும், நீதிமன்றம் அந்தக் காணொளிகளுக்குப் பின்னால் உள்ள படைப்பு நோக்கத்தை ஆராய்ந்தது. 


வாதத்தில் பயன்படுத்தப்பட்ட ’தற்செயலானவை’ அல்லது ’தொடர்பற்றவை’ என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மாறாக, திரைப்படத்தின் கதையை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பாடல்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். ’நியாயா எல்லிடே’ என்ற தலைப்புக்கு ’நீதி எங்கே?’ என்று பொருள் என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கதாநாயகன் துன்பப்படும்போது இந்தப் பாடலை ஒலிக்கச் செய்தது, அவனது அவலநிலையை எடுத்துக்காட்டுவதற்கான திட்டமிட்ட படைப்பு என்பதை இது தெளிவாகக் காட்டுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. 


பாடல்கள் வணிக ஆதாயத்திற்காகவும், கதைக்கு ஏற்றவாறும் பயன்படுத்தப்பட்டதால், அவை 'டி மினிமிஸ்' விதிவிலக்கிற்குத் தகுதி பெறவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.


மொத்த நிதி உத்தரவு இரண்டு தனித்தனி வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது:


1) ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸ் முன்பு எம்.ஆர்.டி மியூசிக்கிடம் டெபாசிட் செய்திருந்த ரூ. 20 லட்சத்தை விடுவிக்குமாறு ரெஜிஸ்ட்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


2) திரைப்படத் தயாரிப்பாளர்கள் 2024ஆம் ஆண்டு டெபாசிட் காலக்கெடுவைத் தவறவிட்டதால், நீதிமன்றம் கூடுதலாக ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது.


எம்ஆர்டி மியூசிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்வாதி சுகுமார், வழக்கறிஞர்கள் அசவாரி ஜெயின், கீதாஞ்சலி விஸ்வநாதன், ஐரா லா-வை சேர்ந்த சிவன்ஷ் திவாரி மற்றும் வழக்கறிஞர்கள் ரித்திக் ரகுவன்ஷி, ஷ்ருதுலா மூர்த்தி, ரிஷிகா அகர்வால் ஆகியோர் ஆஜராகினர். பரம்வா ஸ்டுடியோஸ் மற்றும் பலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜே சாய் தீபக் மற்றும் வழக்கறிஞர்கள் மீனாட்சி ஓக்ரா, சாம்ராட் எஸ் காங் மற்றும் விஷ்ணு கம்பீர் ஆகியோர் ஆஜராகினர்.

கே ஜி எஃப்'- 'மார்கோ'- 'டாக்ஸிக்' படங்களுக்கு பிறகு மீண்டும் இசையில் புயலை கிளப்பும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்.

 *'கே ஜி எஃப்'- 'மார்கோ'- 'டாக்ஸிக்' படங்களுக்கு பிறகு மீண்டும் இசையில் புயலை கிளப்பும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். அவருடைய இசையில் கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ' காட்டாளன் 'விரைவில் வெளியாகிறது*



'கே ஜி எஃப்', 'மார்கோ', மற்றும் 'டாக்ஸிக்' போன்ற படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'காட்டாளன்' படத்திற்கு இசையமைக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் பி. அஜனீஸ் லோகநாத் இசையமைப்பார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்... தற்போது ரவி பஸ்ரூர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.


பான் இந்திய வெளியீடாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள திரை உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். பான் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற 'மார்கோ' படத்திற்குப் பிறகு கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது.


'கே ஜி எஃப் 1', 'கே ஜி எஃப் 2', 'சலார் ', 'மார்கோ' மற்றும் 'டாக்ஸிக்' போன்ற படங்களில் தனது அதிரடியான பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் புகழ்பெற்ற ரவி பஸ்ரூர் மலையாள திரை உலகிற்கு இப்படத்தின் மூலம் மீண்டும் திரும்புகிறார். இது ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று உறுதி அளிக்கிறது . பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளும் தனித்துவமான இசை பாணியும் இணைந்து திரையரங்குகளை மின்சாரம் பாய்ந்தது போன்ற உற்சாகமிக்க தருணங்களாக மாற்றும் என்று 'காட்டாளன்' திரைப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரவி பஸ்ரூர் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பல மடங்கு உயர்த்தி உள்ளது.


சர்வதேச தரத்திலான காட்சி அமைப்புகள் -சண்டை காட்சிகள் மற்றும் இசையுடன் கூடிய ஒரு முழுமையான மாஸ் ஆக்சன் திரில்லர் படமாக 'காட்டாளன்' வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் திரைக்கதையை ஜோபி வர்கீஸ் - பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை உன்னி ஆர் எழுதியுள்ளார்.


இதற்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாள திரை உலகில் இதுவரை இல்லாத வகையில் மிக தீவிரமான சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறும் என்பதை அந்த டீசர் உணர்த்துகிறது.


இப்படத்தின் மூலமாக நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக மலையாள திரை உலகில் அறிமுகமாகிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துஹான் சிங், ராஜ் திரண்டாசு , பாலிவுட் நடிகர் பார்த் திவாரி மற்றும் ஜெகதீஷ், சித்திக் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாடகரான ஹனான்சா- ராப்பர் பேபி ஜீன் மற்றும் ஹிப்ஸ்டர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் ' Ong-Bak' பட வரிசை மூலம் உலக அளவில் புகழ்பெற்ற சண்டை பயிற்சியாளர் கெச்சா காம்பாக்டீ மற்றும் அவரது குழுவினர் தலைமையில் தாய்லாந்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் Ong-Bak பட வரிசையில் நடித்து பிரபலமான பாங்க் - Pong எனும் யானையும் இப்படத்தில் இடம் பிடித்துள்ளது.


படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பாகவே இப்படம் மலையாள திரை உலகின் வெளியீட்டிற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்துள்ளது என்றும், இத்துறையின் மிகப்பெரிய வெளிநாட்டு விநியோக ஒப்பந்தங்களில் ஒன்றை பெற்றுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் இசை உரிமைகளை டி சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. டிஜிட்டல் மற்றும் செயற்கைக்கோள் விநியோக கூட்டாளியாக சிமேரூ (Shemaroo ) நிறுவனம் இணைந்துள்ளது . இப்படத்தின் பிரம்மாண்டமான வெளிநாட்டு வெளியீட்டு பணிகளை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


காட்டாளன் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Wednesday, 1 April 2026

மீண்டும் இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா கூட்டணி !!

 *மீண்டும் இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்,  இசைஞானி இளையராஜா கூட்டணி !!*




*இசைஞானி இளையராஜா இசையில், வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்கும் “லெனின் பாண்டியன்” !!*


தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்து “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அற்புதமான ஒரு சிறு வீடியோ மூலம் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


ஒரு காரில்,  சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா இருவரும் தங்களின் அற்புதமான படங்களின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே பயணிக்கும் அழகான அனிமேசன் வீடியோ இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மூன்றாம் பிறை (1982), தங்க மகன் (1983), காக்கி சட்டை (1985), பகல் நிலவு (1985), காதல் பரிசு (1987), கிழக்கு வாசல் (1990), பணக்காரன் (1990), இதயம் (1991) ஆனஸ்ட் ராஜ் (1994) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி பல கல்ட் கிலாசிக் படங்களை வழங்கி, ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி, பழைய அற்புத நினைவுகளை மீட்டெடுப்பதோடு, புதிய தலைமுறைக்கும் ஒரு வலுவான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்போது, அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதால் “லெனின் பாண்டியன்” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D. D. பாலச்சந்திரன் இயக்கத்தில், நம் கிராமத்து மண்ணின் வாழ்வியல் மற்றும் சமூக உண்மைகளை பேசும் ஒரு அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.


இத்திரைப்படத்தில், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். காவல்துறையில் பணியாற்றும் இளைஞனாக அவர் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், கங்கை அமரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க,  திரையுலகில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை ரோஜா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான  இவர்களின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கிராமத்து பின்னணியில், சமூகத்தில் நிகழும் அவலங்களை நேர்மையாக வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் D.D பாலச்சந்திரன். இது ஒரு கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்ட, உணர்ச்சி பூர்வமான மற்றும் வலுவான கதையாக உருவாகியுள்ளது.


இந்த படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் இப்படத்தை வழங்குகிறார்.


இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது. வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். மொத்தத்தில், பழைய வெற்றி கூட்டணி,  புதிய தலைமுறை கதை,  சமூக பின்னணி என இந்த மூன்றின் இணைப்பாக “லெனின் பாண்டியன்” படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தொழில்நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு நிறுவனம் - சத்யஜோதி பிலிம்ஸ்

தயாரிப்பு - T.G.தியாகராஜன்

எழுத்து இயக்கம் - D.D பாலச்சந்திரன்

ஒளிப்பதிவு - A. Mஎட்வின் சகாய்

எடிட்டிங்க்  -  நாகூரான் இராமச்சந்திரன் 

ஸ்டண்ட் - தளபதி தினேஷ்

கலை இயக்கம் - அதூரி ஜெய்குமார்

மக்கள் தொடர்பு - AIM சதீஷ்

ஹே ப்ரூஸ்” – உலகம் முழுவதும் கவனம் பெற்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ

 பிரஸ் நோட்


“ஹே ப்ரூஸ்” – உலகம் முழுவதும் கவனம் பெற்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ








கிரவுட் எண்டர்டெயின்மெண்ட்  தயாரிப்பில்  “ஹே ப்ரூஸ்” என்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ கடந்த மார்ச் 27 அன்று வெளியிடப்பட்டது. கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டிஆர்கே கிரண் மற்றும் இந்திரா ராஜேந்திரன் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் ஆகும்.


இந்த மியூசிக் வீடியோவை ஆர்ட் டைரக்டர் டிஆர்கே கிரண் இயக்கியுள்ளார்.


இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா , நடன இயக்குனர் / நடிகர் சாண்டி மற்றும் இயக்குனர்  விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியீட்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.


இந்த மியூசிக் வீடியோவில் குரேஷி, தாய்மண்னே சந்தோஷ், VJ கல்யாணி, பூவி மற்றும் பர்வீன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு இந்த பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பையும் தாக்கத்தையும் அளித்துள்ளது.


இந்த மியூசிக் வீடியோவின் ஒளிப்பதிவு / எடிட்டிங் பிரணவ் காந்த் மேற்கொண்டுள்ளார். மேலும், இந்த பாடலுக்கான நடன இயக்கத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் கவனித்துள்ளார்.


இந்த பாடலின் இசையை அச்சு ராஜாமணி அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை வழங்கிய அவர், இந்த மியூசிக் வீடியோ மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.


இந்த பாடல் யூடியூபில் வெளியாகி, குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


“ஹே ப்ரூஸ்” — புதிய தலைமுறை தமிழ் இசையில் வித்தியாசமான முயற்சியாக உருவெடுத்து, உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது.

[4/1, 9:29 AM] Production Manager Rekha: https://youtu.be/yeV6ln5cWeA?si=YiiupzWzmpHStGog

Tuesday, 31 March 2026

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!

 *பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!* 



நான் சோமிதரன், 'நீளிரா' திரைப்படத்தின் இயக்குநர். ஒரு பத்திரிகையாளராக உங்களுடன் இருந்து, பாலு மகேந்திரா அவர்களின் உதவியாளராக பணியாற்றி, ஆவணப் படங்களை இயக்கி இன்று இப்படத்தை இயக்கியுள்ளேன். அதுவும், என் கனவான என் மக்களின் கதையை படமாக எடுத்துள்ளேன். 


தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையை, ஆனால் சொல்ல வேண்டிய கதையை உங்கள் முன் படைத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ஈழ மக்களின் வாழ்க்கையை தமிழ் சினிமாவில் காட்ட வேண்டும் என்பது எனது கனவு மட்டுமல்ல, எத்தனையோ ஈழ மக்களின் கனவு, பாலு மகேந்திரா போன்ற பெரும் கலைஞர்களின் கனவு. 


இப்படத்தின் மீதான உங்கள் விமர்சனங்களை படிக்கவும், காணவும், உங்கள் கருத்துகளை கேட்கவும் ஆவலாக உள்ளேன். உங்கள் விமர்சனம் தான் இப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும். 


இந்த சமயத்தில் ஒரு வேண்டுகோளையும் உங்களிடம் வைக்கிறேன். 'நீளிரா' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி உங்கள் விமர்சனங்களில் குறிப்பிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த கல்யாண காட்சி தான் படத்தின் மிக முக்கியமான பகுதி என்பதால் அதை பற்றி முன்னரே அறிந்து கொள்ளாமல் திரையரங்கில் ரசிகர்கள் காண வேண்டும் என்று நான் விரும்புவதால் இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன். உங்கள் சகோதரனாக,  ஈழ மண்ணின் கலைஞனாக இந்த படத்தை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன். 



நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு

 *நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு*








வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா - சைதன்யா- சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.


தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,


''திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா - சைதன்யா - சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,


''இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.


தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,


''இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.


நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,


''இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.


நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,


''இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.


நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.


இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.


எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. '' என்றார்.

Visual Majesty Unleashed: Jayasurya-Prabhu Deva-Anushka Shetty’s ’ ‘Kathanar’ Trailer Delivers a Dazzling Spectacle

 *Visual Majesty Unleashed:  Jayasurya-Prabhu Deva-Anushka Shetty’s ’ ‘Kathanar’ Trailer Delivers a Dazzling Spectacle*



Producer Gokulam Gopalan’s Sree Gokulam Movies, acclaimed as one of India’s most amazing trailblazers, continues its legacy of fresh storytelling, technical grandeur, and visual splendour. The banner returns with a cinematic feast: Kathanar, starring Jayasurya, Anushka Shetty, and Prabhu Deva alongside an ensemble of industry titans, now igniting sky-high expectations with its recently launched theatrical trailer.


Clocking 2 minutes 49 seconds, the trailer unleashes a cascade of breathtaking moments: stunning visuals, a soaring musical score, crystalline sound design, and the magnetic screen presence of its leads, heralding a fresh fusion of fantasy in an ancient backdrop.


Director Rojin Thomas, whose heartfelt Home won hearts, crafts here an indelible theatrical odyssey. Co-writing the screenplay with R. Ramanand, he promises audiences an epic for the ages. With principal photography wrapped, the post-production team races toward a worldwide 2026 release in up to 15 languages.


Kathanar’s trailer has instantly captivated critics, trade experts, and fans, a rare exemplar of pre-release brilliance.


The stellar cast features Sanoop Santhosh, Sandy, Devika, Nitish Bharadwaj, Vineeth, Harish Uthaman, Srikant Murali, and Kulpreet Yadav in pivotal roles. Shot extensively with cutting-edge virtual production, the film boasts Neil D’Cunha’s cinematography, Rahul Subrahmanian’s evocative score, Rojin Thomas’ editing and VFX supervision, Rajeevan’s production design, and action by Jungjin Park and Kalai Kingson. V. C. Praveen and Baiju Gopalan serve as co-producers, with Krishnamoorthy as executive producer.

நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி

 *நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது!*



புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால பின்னணியில், புதிய ஃபேன்டஸி உலகை இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இந்த படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார். ஆர். ரமானந்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள அவர், ரசிகர்களுக்கு காலத்தைக் கடந்து செல்லும் ஒரு காவிய அனுபவமாக இந்த படம் இருக்கும் என்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 15 மொழிகளில் இந்தப் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


‘கத்தனார்’ டிரெய்லர் வெளியான உடனேயே விமர்சகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே ஒரு படத்தின் டிரெய்லர் இத்தகைய வரவேற்பு பெற்றிருப்பது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


*நடிகர்கள்:* சனூப் சந்தோஷ், சாண்டி, தேவிகா, நிதீஷ் பரத்வாஜ், வினீத், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் குல்ப்ரீத் யாதவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


ஒளிப்பதிவு: நீல் டி’குன்ஹா,

இசை: ராகுல் சுப்ரமணியன்,

எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: இயக்குநர் ரோஜின் தாமஸ், 

கலை இயக்கம்: ராஜீவன்,

ஆக்‌ஷன்: ஜங்ஜின் பார்க் மற்றும் கலை கிங்சன், 

இணைத் தயாரிப்பாளர்கள்: வி.சி. பிரவீன் மற்றும் பைஜு கோபாலன், 

நிர்வாகத் தயாரிப்பாளர்: கிருஷ்ணமூர்த்தி