Featured post

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்

 ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம் 12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், ...

Thursday, 5 March 2026

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்

 ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்









12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். அவரது 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் தெரிவித்ததால் காயத்ரி ரெமாவை மணக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா, ஒரு குழந்தை போதும், அதற்கு மேல் குழந்தை வேண்டாம், என்ற முடிவுக்கு வர, பால்ராஜ் மட்டும் 6 குழந்தை ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.


இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கும் சுவேதா ஸ்ரீக்கும், பால்ராஜுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாற, கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூன்று பேருடைய வாழ்க்கையும் என்னவாகிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.


எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் பால்ராஜ், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவராக இருப்பதோடு, அளவான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். மனைவியை கட்டி அணைக்க முயற்சிக்கும் போது, அவர் தள்ளிவிடும் காட்சிகளில் தன் ஏக்கம் மற்றும் ஏமாற்றத்தை சரியான முறையில் வெளிக்காட்டியிருப்பவர், மற்றொரு பெண்ணின் நட்பு கிடைத்த உடன் தன்னுள் ஏற்படும் மனமாற்றம் மற்றும் அவருடனான காதல் லீலைகள் என்று மனுஷன் படம் பார்ப்பவர்களுக்கு பொறாமை ஏற்படும் விதத்தில் வலம் வருகிறார்.


நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் 6 குழந்தைகள் என்ற கணவரின் பேராசையை நிராகரிக்கும் காட்சிகளில், பெண்களின் மனதையும், அவர்களது வலியையும் பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.


மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீ, பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதமாக பயணித்திருக்கிறார். பார்த்ததும் கவனம் ஈர்க்கும் முகம், அப்பாவித்தனமான பேச்சு என்றாலும், அடப்பாவி...என்று சொல்லும் அளவிலான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீ-க்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம், என்று சொல்லும் அளவுக்கு அம்மணி வலம் வந்திருக்கிறார்.


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரவி மரியா, தன் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருப்பதோடு, பல இடங்களில் தனது வில்லத்தனம் மூலம் மிரட்டுவதோடு, சிரிக்கவும் வைக்கிறார்.


அம்பானி சங்கர், பசங்க சிவகுமார் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


உதயன் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், காட்சிகள் தரமாக படமாக்கப்பட்டிருக்கிறது.


விஜய் பிரபு இசையில் பாடல்கள், வசனங்கள் போல் ஒலித்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.


கே.சங்கரின் படத்தொகுப்பு இயக்குநர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லவில்லை என்றாலும், கதையில் இருக்கும் கள்ளக்காதல் விவகாரத்தை சுவாரஸ்யமாக சொல்லி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறது.


எழுதி இயக்கியிருக்கும் பால்ராஜ், தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை கதைக்கருவாக எடுத்துக் கொண்டு அதை கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்திருக்கிறார். கதையில் கள்ளக்காதல் விவகாரம் முக்கிய பங்கு வகித்தாலும், அதை நேர்மையாகவும், திரைக்கதைக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய விதத்திலும் கையாண்டிருப்பவர், மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார்.


மதுவுக்கு அடிமையானவர்களால் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும், புரிதல் இல்லாத தம்பதியினரால் குடும்பம் எப்படி திசை மாறி பயணிக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பால்ராஜ், அதை சிலபல குறைகளோடு சொன்னாலும், சுவாரஸ்யமாக சொல்லி படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’

 *மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*








*லாக்கப் மரணங்களை பற்றி பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.*


*பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது ; லாக்கப் மரணங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’*


சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.


ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாக கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ படம் உருவாகியுள்ளது...


ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைச்சாமி ஏஎம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பாலு இயக்கியுள்ளார்


பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, ராஜா மலைச்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வட இந்தியாவை சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்..


இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ட்ராக் மியூசிக் நிறுவனம் சமீபத்தில் இதன் பாடல்களை வெளியிட்டது. இதன் டீசர் கடந்த பிப்ரவரி-27லிலும் டிரைலர் மார்ச்-2லும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் மார்ச்-13ஆம் தேதி ‘போலீஸ் ஃபேமிலி’ தமிழகமெங்கும் திரையராங்குகளில் வெளியாக இருக்கிறது..


‘போலீஸ் ஃபேமிலி’ படம் குறித்து தயாரிப்பாளரும் கதையின் நாயகனுமான மலைச்சாமி ராஜா கூறும்போது, “சாத்தான்குளம் மற்றும் சமீபத்தில் சிவகங்கை போன்ற இடங்களில் நடந்த லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இது ஒருபக்கம் காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் இன்னொரு பக்கம் இந்த லாக்கப் மரணங்கள் எத்தனை குடும்பங்களை பழி வாங்குகிறது என்பதையும், மன்னிக்கும் மனம் கொண்ட ஒருவரால் அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும் உணர்வுப்பூர்வமான கதை அம்சத்துடன் சொல்லி இருக்கிறோம்.


இப்படத்தின் படப்பிடிப்பை நான்கு விதமான இடங்களில் வெவ்வேறு விதமான தட்பவெப்ப நிலையில் நடத்தினோம். கடல் பகுதியிலும் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதியிலும் மதுரை போன்ற சமநிலை பரப்பிலும் என வெவ்வேறு விதமான பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.


இதில் கடல் பகுதியில் படப்பிடிப்பு நடக்கும்போது கடலின் சீற்றத்தையும் நாங்கள் எதிர்கொண்டு சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம். அதேபோல கொடைக்கானலிடம் கடும் குளிர், பனிப்பொழிவு, மேகமூட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டு இதுவரை கேமரா செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்று பல சவால்களுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்” என்று கூறினார்.


தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் 


இசை ; ஜெயா கே.தாஸ் 


ஒளிப்பதிவு ; ஜெயக்குமார் 


படத்தொகுப்பு ; எம்.எஸ் செல்வா 


சண்டைக்காட்சிகள் ; டிராகன் ஜிரோஷ் 


பாடல்கள் ; கே.மகாமுனி, சோ.பா மணி, வசந்த் 


ஒப்பனை ; வினோத் 


மக்கள் தொடர்பு ; A..ஜான்

நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் ’மேட் இன் கொரியா’

 *நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் ’மேட் இன் கொரியா’ குழுவினர் எம்சிசி கல்லூரி மாணவர்களுடன் கொரியன்  வார்த்தை விளையாட்டை (Korean Word Game) கலகலப்பாக விளையாடினர்!*












இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் இன்று சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.


படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கொரிய மொழி வார்த்தை விளையாட்டு மற்றும் ’திஸ் ஆர் தட்’ (This or That) போன்ற ஃபன் விளையாட்டுகள் விளையாடி மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர். 


ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது.

Priyanka Mohan and the Team of Netflix’s Made In Korea Bring Korean Word Game Fun to MCC Students

 *Priyanka Mohan and the Team of Netflix’s Made In Korea Bring Korean Word Game Fun to MCC Students*












The team of Netflix’s upcoming Tamil film Made In Korea- actor Priyanka Mohan, director Ra.Karthik and producer Sreenidhi Sagar- visited Madras Christian College in Chennai today to unveil the film’s trailer.


The event turned into a lively interaction with students as the team shared anecdotes from the shoot and engaged in fun activities, including a Korean word game and “this or that” choices, sparking laughter and enthusiastic participation across campus.


Made In Korea, starring Priyanka Mohan, directed by Ra.Karthik and produced by Sreenidhi Sagar of Rise East Entertainment, premieres March 12 only on Netflix!

ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!

 *ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!* 





ZEE5-ல்  பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது ! 


இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும்


ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான **‘பூக்கி’**படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும்.


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.


‘பூக்கி’ திரைப்படம், பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், நகைச்சுவையுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.


படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் எடிட்டரான விஜய் ஆண்டனி கூறுகையில்,

“‘பூக்கி’ வெளிப்படையாக ஒரு எளிய கதையாக தோன்றினாலும், இன்றைய உறவுகளில் உள்ள உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இயக்குநர் கணேஷ் சந்திரா இந்த படத்திற்கு புதிய உற்சாகத்தையும் உண்மையான உணர்வுகளையும் கொண்டு வந்துள்ளார். நகைச்சுவையும் உணர்ச்சியும் ஒன்றாக கலந்து, அனைவரும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இந்த படம் உருவாகியுள்ளது” என்றார்.


நடிகை லட்சுமி மஞ்சு கூறுகையில்,

“‘பூக்கி’ படத்தில் ஒரு அழகான எளிமை இருக்கிறது. காதல் ஜோடிகள் அனுபவிக்கும் சங்கடம், மென்மை மற்றும் எதிர்பாராத தருணங்களை இந்த படம் அழகாக பதிவு செய்கிறது. இந்த படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் ZEE5 பார்வையாளர்கள் இந்த படத்தின் உணர்வுகளை நிச்சயம் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.


‘பூக்கி’ திரைப்படத்தை மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் காண தவறாதீர்கள்! 🎬

Wednesday, 4 March 2026

ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது

 *ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar)  புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!*












ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், இதன் ஒளிபரப்புத் திட்டமிடப்பட்டுள்ளது.


பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார்.


‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார  திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் (Chef) ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஒருபுறம் அவரது லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டிற்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலே இந்த சீரிஸின் மையக்கரு.


கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய வில்லனாகவும் ‘தலைவாசல்’ விஜய் நடித்துள்ளார். சமையலறையின் பரபரப்பான சூழலைத் தனது மிரட்டலான நடிப்பால் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


காமெடி, டிராமா, லட்சியம் மற்றும் ஒரு சொகுசு விடுதியின் பின்னணியில் நடக்கும் கலாட்டாக்கள் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குத் சீரிஸாக ‘ரிசார்ட்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரிசார்ட் சீரிஸ் வரும்  மார்ச் 13 முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்களாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.  


 (JioHotstar)ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

JioHotstar இந்தியாவின் முன்னணி பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். பல மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய ஹிட் திரைப்படங்கள், அசல் தொடர்கள், நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் விரிவான தளமாக இது திகழ்கிறது. உலகத் தரமான கதைகளை ஒவ்வொரு திரைக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன், புதுமை, உள்ளடக்கச் சேர்க்கை மற்றும் சிறப்பான கதைகள் மூலம் டிஜிட்டல் பொழுதுபோக்கை புதிய தளத்திற்கு எடுத்துச் வருகிறது.


🔗 https://youtu.be/rlLjLSD3e70?si=BHBMhk0V-subITXl

Owing to Rising Tension in the Middle East, release of Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-ups rescheduled to 4th June, 2026

 Owing to Rising Tension in the Middle East, release of Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-ups rescheduled to 4th June, 2026*



*Release of Yash-Starrer Toxic Shifted to June 4 Due to Middle East Tensions*


*Yash’s Toxic: A Fairy Tale for Grown-Ups Postponed to June 4, 2026 Amid Middle East Instability*


KVN Productions and Monster Mind Creations today announced a strategic rescheduling of the global theatrical release for the highly anticipated action-drama, Toxic: A Fairy Tale for Grown-ups. Originally slated for a worldwide premiere on March 19, 2026, the film’s release is being moved to 4th June, 2026, due to the ongoing volatile escalation and regional instability in the Middle East.


As advised by one of their major distribution partner Phars Films, the decision to reschedule the release was made in response to escalating tensions and the resulting disruptions to cinema operations across the Gulf region, a key market for the film’s multi-language global rollout. The producers have been closely monitoring the rapidly evolving regional developments with the utmost caution. This announcement comes at a time when the makers were gearing up for a grand trailer launch for 8th March in Bangalore, with media from across the country. The makers had already mapped out the film’s final promotional schedule ahead of its earlier release date of 19th March 2026.


Even though the film’s first single, ‘Tabaahi,’ was ready for its scheduled debut on 2nd March, the makers chose to hold the music video and momentarily pause the promotional rollout which was locked and to be activated within a day or two.


An official statement from KVN Productions and Monster Mind Creations Stated -


Toxic: A Fairy Tale for Grown-ups is a film we conceptualized with the vision to create cinema for a global audience. Filmed in Kannada and English, it is built with the conviction to connect with viewers both at home and across the world.


After years of dedicated labour, we were excited to share our film with you all on the 19th of March. However, the current uncertainty, especially in the Middle East, has created a situation that impacts our goal to reach and connect with the widest possible audience.


Therefore, in the interest of our partners and our audience, we have made the difficult but carefully considered decision to reschedule our release.We thank you for your understanding and patience and look forward to your continued love and support.


Toxic: A Fairy Tale for Grown-ups will now be released in cinemas across the globe in English and Indian languages on 4th June 2026.


See you at the movies.



Toxic stars Yash, Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria in pivotal roles. Written by Yash and directed by Geetu Mohandas, the film has been shot simultaneously in Kannada and English, with dubbed versions in Hindi, Tamil, Telugu, and Malayalam — reinforcing its global ambition. Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is slated for release on 4th June, 2026.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக ராக்கிங் ஸ்டார் யாஷ்

 *மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  (Toxic: A Fairy Tale for Grown-ups) திரை


ப்படம்  வெளியீட்டு தேதி ஜூன் 4,2026க்கு மாற்றப்பட்டது.*


*மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்*


*மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  திரைப்படம் வெளியீட்டு தேதி 4 ஜூன் 2026க்கு ஒத்திவைப்பு*


கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான Phars Films வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்‌ஃப் நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், மார்ச் 8ஆம் தேதி பெங்களூரில் நாடு முழுவதிலிருந்தும் ஊடகங்களை அழைத்து ஒரு பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். மேலும் 2026 மார்ச் 19 வெளியீட்டை முன்னிட்டு இறுதி கட்ட புரமோஷன் திட்டங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தன.


படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2 அன்று வெளியிட தயாராக இருந்தபோதிலும், தயாரிப்பாளர்கள் அந்த மியூசிக் வீடியோவை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி, இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் தொடங்கவிருந்த புரமோஷன் நடவடிக்கைகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.


கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பிறகு, இந்த படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம்.


உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம்.”


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'   திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் சந்திப்போம்.


டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் எழுதியுள்ள இந்த படத்தை, கீது மோகன்தாஸ்  இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள, இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations தயாரிக்கும் இந்த படம் 2026 ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது



*

Vasool Mannan Movie Review

Vasool Mannan Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வசூல் மன்னன் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Arumugam Mathappan. இந்த படத்துல Sridevaa Krishnan, Niveda R. Nair, Saravana Subbaiya, Vela ராமமூர்த்தி, Saravana Sakthi.னு பலர் நடிச்சிருக்காங்க. srideva ஏற்கனவே சிறகடிக்க  ஆசை ன்ற serial ல நடிச்சு famous ஆனவரு. இந்த படம் மூலமா சினிமா ல actor அ அறிமுகம் ஆகுறாரு.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

இந்த படத்துல நெறய கதைகள் ஒண்ணா சேருது அதெல்லாம் பாக்கலாம். முதலாவுது, saravanan அ நடிச்சிருக்க Sridevaa Krishnan ஊர் முழுக்க கடன் வாங்கி வச்சிருக்காரு. கடனை திருப்பி குடுக்காம அவங்கள ஏமாத்திட்டு இருக்காரு. இந்த காரணத்துனால அந்த ஊர் மக்கள் எல்லாரும் இவரை அல்வா சரவணன் னு சொல்லி கூப்பிடுவாங்க. இவரு மட்டும் தனியா இல்ல இவருகூட இவரு மாமா  saravana sakthi யும் சேந்து ஊர் ல லூட்டி அடிக்கிறாங்க. ரெண்டாவுது, பல business அ பண்ணிட்டு இருக்கற velaramamoorthy. இவரோட பொண்ணு தான் nivetha. இவங்களுக்கு police ஆகணும் னு ரொம்ப ஆசை. அதுனால எப்பவுமே police uniform போட்டுட்டு ஊரை சுத்திட்டு இருப்பாங்க.  மூணாவுது, saravana subbaiya வை காமிக்கறாங்க. இவரு ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர். ஒருத்தரோட murder அ பத்தி மக்களுக்கு தெரியப்படுத்துனும் ண்றதுக்காக clues அ கண்டுபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரு. 


ஒரு கட்டத்துக்கு மேல நிவேதாவும் sreedeva வும் சந்திக்கறாங்க. இந்த பொன்னையும் ஏமாத்திடுறாரு, அப்போ தான் nivetha க்கு sreedeva ஓட உண்மையான முகம் என்னனு தெரிய வருது. police ஆனதுக்கு அப்புறம் முதல் encounter நீதான் னு சபதம் எடுக்கறாங்க nivetha. இந்த மூணு கதைகளும் எப்படி சந்திக்குது  இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sreedeva ஓட acting natural அ இருந்தது. serial ல நடிச்ச அனுபவம் cinema ல கைகுடுத்திருக்கு னு தான் சொல்லணும். இவரு கடன் குடுத்தவங்கள ஏமாத்துறது, அவங்க பக்கத்துல வரக்கூடாது ண்றதுக்காக police கிட்ட பந்தோபஸ்து கேட்குறது னு இவரு அடிக்கற looty நல்ல இருந்தது. saravana sakthi ஓட comedy scenes எல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. முக்கியமா பாதுகாப்புக்கு வர police கிட்ட இருக்கற  gun அ எடுத்து இவரு பண்ணுற அட்டகாசம் எல்லாம் audience அ சிரிக்க வைக்குது. nivetha ஓட performance யும் நல்ல இருந்தது. எப்பவும்போல வில்லத்தனத்தால மிரட்டிட்டு போயிருக்காரு velaramamoorthy. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது barani ஓட bgm அப்புறம் songs எல்லாம் இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. என்னதான்  இது ஒரு சின்ன budget படமா இருந்தாலும் cinematography தான் இந்த படத்துக்கு highlight அ அமைச்சிருக்கு. ஒரு சின்ன கதையா இருந்தாலும் மக்களுக்கு interesting அ இருக்கற மாதிரி கொண்டு போயிருக்காரு director.    


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல பாக்க miss  பண்ணிடாதீங்க.