Featured post

Irandu Vaanam”– Vishnu Vishal & Ramkumar Reunite Under Sathyajothi Films

 “Irandu Vaanam”– Vishnu Vishal & Ramkumar Reunite Under Sathyajothi Films The skies align once again as actor Vishnu Vishal and filmmak...

Thursday, 9 April 2026

Irandu Vaanam”– Vishnu Vishal & Ramkumar Reunite Under Sathyajothi Films

 “Irandu Vaanam”– Vishnu Vishal & Ramkumar Reunite Under Sathyajothi Films


The skies align once again as actor Vishnu Vishal and filmmaker Ramkumar—two distinct creative forces, two different “skies”—come together for Irandu Vaanam, set for a grand summer release.


Having previously delivered the critically acclaimed and universally celebrated blockbuster Movies Mundasupatti and Ratsasan, the duo returns with renewed energy and an even more ambitious vision. Their reunion has already created immense anticipation among audiences and the industry alike.


Backing this prestigious project is the legendary production house Sathyajothi Films, known for delivering several landmark films. Mounted on a whopping budget, the film promises top-tier production quality, scale, and cinematic excellence.


Featuring Vishnu Vishal in the lead alongside the talented Mamitha Baiju, Irandu Vaanam brings together a strong on-screen pairing that is expected to strike an emotional chord with audiences.


Helmed by Ramkumar, the film’s music is composed by Dhibu Ninan Thomas, with stunning visuals captured by cinematographer Dinesh K. Babu. The film is edited by San Lokesh, while the visual world is crafted by art director Gopi Anand.


Produced by T. G. Thyagarajan, Sendhil Thyagarajan, and Arjun Thyagarajan, the film benefits from a legacy of excellence and a commitment to delivering high-quality cinema.


The technical finesse is further elevated by costume designer A. Keerthi Vasan, action choreography by Vicky, and visually striking effects handled by Harihara Suthan.


Even ahead of its release, Irandu Vaanam has become one of the most talked-about projects in the industry, with overwhelmingly positive buzz praising its concept, execution, and the powerful collaboration at its core.


Adding to the magic, the film’s announcement came on a blazing April summer day, unexpectedly accompanied by a refreshing spell of rain—almost as if nature itself celebrated this iconic reunion.


With a proven blockbuster combination, a reputed banner, and a powerful ensemble both on and off screen, Irandu Vaanam is gearing up to become one of the biggest cinematic spectacles of the year.


Two skies. One vision. Backed by legacy, driven by passion—Irandu Vaanam arriving in theatres this summer.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

 *சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!*



விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகிலனர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.


இரண்டு வானங்கள்,  ஒரே பார்வை, பேரார்வத்தோடு இயங்கும் உலகம் என இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகிறது ‘இரண்டு வானம்’.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


தயாரிப்பு: டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன்,

இயக்கம்: ராம்குமார்,

இசை: திபு நினன் தாமஸ்,

ஒளிப்பதிவு: தினேஷ் கே. பாபு,

படத்தொகுப்பு: சான் லோகேஷ்,

கலை இயக்கம்: கோபி ஆனந்த்,

ஆடை வடிவமைப்பாளர்: ஏ. கீர்த்தி வாசன்,

ஆக்ஷன்: விக்கி,

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: ஹரிஹர சுதன்.

Raaka” – The Title Unveiled on Allu Arjun’s Birthday, Introducing Atlee’s Grand Fantasy-

 Raaka” – The Title Unveiled on Allu Arjun’s Birthday, Introducing Atlee’s Grand Fantasy-Action Entertainer for a Global Audience*



In a landmark moment for one of the most anticipated cinematic collaborations, the makers of AA22 x A6 have officially unveiled the title of the film  “Raaka” today at 11 AM, marking Icon Star Allu Arjun’s birthday with a powerful announcement.


Accompanying the title reveal is a striking title poster that offers a glimpse into the film’s world — dark, intense, and creature-like in its visual tonality. The imagery sets the stage for a larger-than-life narrative, hinting at a universe that is both formidable and deeply intriguing.


Positioned as a grand fantasy-action entertainer, “Raaka” is envisioned as a global cinematic spectacle, designed to resonate with audiences across markets. Backed by Sun Pictures and mounted on a massive scale, the film aims to blend scale, storytelling, and cutting-edge cinematic craft for an international audience.


Allu Arjun is set to be seen in a never-seen-before avatar, marking a significant departure from his previous roles and showcasing him in a powerful, transformative light. Known for presenting his actors in a completely new dimension, filmmaker Atlee once again raises the bar — crafting what promises to be a defining role in the actor’s career.


Atlee, celebrated for creating expansive, larger-than-life cinematic worlds, brings his distinct vision to “Raaka”, building a universe that seamlessly blends fantasy, action, and emotion. The scale and ambition of the film reflect a storytelling approach that is rooted in Indian cinema while aiming to connect with a global audience.


Director Atlee says “Raaka isn’t just a film… it’s a part of me I’ve carried for years. For 18 years, I held on to one idea, never letting it fade. It tested me, shaped me, and stayed with me through everything. And honestly… this is just the beginning.”


Sun Pictures says "Raaka is a collaboration born of the highest ambitions in Indian cinema. Sun Pictures is privileged to bring together the singular storytelling of Atlee and the iconic stature of Allu Arjun in a project built for the world. We believe this will not only redefine the scale of what we create, but also affirm Indian cinema's rightful place in global entertainment."


This film marks a landmark collaboration between Sun Pictures, Icon Star Allu Arjun, and blockbuster filmmaker Atlee — bringing together three of Indian cinema’s most influential creative forces for a project designed for the international stage.


With the title now revealed, “Raaka” sets the tone for a cinematic spectacle that promises to be bold, immersive, and truly path-breaking on a global scale.

ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

 *“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!*



*அட்லீயின் உலகளாவிய ஃபாண்டஸி-ஆக்ஷன் திரைப்பட அறிவிப்பு !!*


இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.


 அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.


இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.


“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இயக்குநர் அட்லீ கூறியதாவது..,

“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”


சன் பிக்சர்ஸ் Sun Pictures நிறுவனம்  கூறியதாவது..,

“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”


இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.


“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.


*“

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)

 *பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*









தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  


ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில்,


படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்


எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,  


இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்  சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என  எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.


இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.


இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ


மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.


இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.


ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி


ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.


இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.


ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை


பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.


கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,


இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.


குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம்.



ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.


விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும்


எழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர்  எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.


இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும்


என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.


இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்


கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.


இயக்குநர் ராம் பேசியதாவது..,  


நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.


விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள்


சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.


தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை


பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.


அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.


இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும்


விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.


எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல்.


இப்போது நாம் யாரையும் பற்றி


தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,


பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.


தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.


நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,  


இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.


இந்த படத்தின் கதையை நான் 2012,


2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011-12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.


முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான


காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.


அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள்


சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.


கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.



இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.


விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு


அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.


நடிகை கௌரி கிஷன்   பேசியதாவது..,  


முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும்


ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.


“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு


செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.


ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று


எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.


கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.


பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த


கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.


எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.


மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.


எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த


நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.



இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,  


ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.


இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக


நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.


தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.



விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.


விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர்


தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.


இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால்


நான் வராமல் இருக்க முடியாது.


விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.


இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன்.


சர்வதேச அளவுக்கு போவார்.


பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.


எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு


முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.


அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும்


திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.



நடிகை மாளவிகா பேசியதாவது..,  


 என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான்


மிகவும் நன்றியுடன் இருப்பேன்


இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.


பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள்


மிகவும் பெரியவை.


இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.



நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,  


நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.


இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக


கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது.

பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!




நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,  


நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.


அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene-ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.


அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம்.


இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.


அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.



அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.


ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.


முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம்


பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.


எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று.


அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம்


கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.


அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு


முக்கியமான பங்கு இருக்கிறது.

இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.


சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.


அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே


தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.


மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.



இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.


என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம்


என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.




நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,  


பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர்


இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன்.


இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.


விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய


கற்றுக்கொண்டேன்.


எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.


விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.


“தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத்


அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.


ஏப்ரல் 10 ரிலீஸ் என்று


சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.


பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க


ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.


கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.


எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று


கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.



இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,  


இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த


நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.


நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று


தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல்


10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.


இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை,


என் மனதில் வைத்திருந்த விஷயம்.


இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு-வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம்.


கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.


இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.


பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை


சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், என்னுக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.



அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை


செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.


அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது


சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.


பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன்


— மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று,  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட


நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.


தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான


ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.


ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த


திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.


ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும்


ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

ஏப்ரல்-17ல் திரையரங்குகளில் வெளியாகிறது 'மிஸ்டர் எக்ஸ்

 *ஏப்ரல்-17ல் திரையரங்குகளில் வெளியாகிறது 'மிஸ்டர் எக்ஸ்'*

90

சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. 


ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..


எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.


கனா, நெஞ்சுக்கு நீதி படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான் தூத்துக்குடி குலுமணாலி மும்பை பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜான் படமாக்கப்பட்டுள்ளன.


பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். .




நடிகர் ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் 'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

 *நடிகர் ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் 'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு*






*அரசியல் அதிர்வை ஏற்படுத்தும் ரவி மரியாவின் 'மக்கள் தலைவா' பட போஸ்டர் (For Sale)*


தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் 'மக்கள் தலைவா' திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


'பழகிய நாட்கள்', ' மூன்றாம் மனிதன் ' என சமூக வலைதள உலகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கும் படைப்பாளியான ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மக்கள் தலைவா'. இதில் ரவி மரியா,  அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன், கவிதாலயா சரவணன்,அக்னி S வருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை எஸ் எம் பிரதாப் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை துர்காஸ் மேற்கொண்டிருக்கிறார். கற்பனையான கதையுடன் நிகழ்கால அரசியலை காமெடியாக சொல்லும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கவிதாலயா சரவணன் மற்றும் ஆர். சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்திற்காக மக்கள் வாக்கு செலுத்துவதற்கு தயாராக இருக்கும் இந்த நிலையில் அவர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சர்ச்சைக்குரிய.. ஆனால் அர்த்தமுள்ள டைட்டில் போஸ்டரை வெளியிடுகிறோம்.  ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான 'பழகிய நாட்கள்' மற்றும் 'மூன்றாம் மனிதன்' ஆகிய படைப்புகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி பேராதரவை பெற்றது. அந்த வகையில் 'மக்கள் தலைவா' திரைப்படமும் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தும். மேலும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் பிரபலமான நடிகர் ரவி மரியா இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.   

கற்பனைக் கதையோடு

 சமகால அரசியலை நகைச்சுவையுடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும்'' என்றார். 


தமிழகம் முழுவதும் தேர்தல் ஜுரம் அனலாக தகித்துக் கொண்டிருக்கும் நிலையில்.. தமிழகத்தின் வரைபடமும், அதன் மீது 'மக்கள் தலைவா' என்ற  டைட்டிலும், ஃபார் சேல் ( FOR SALE) என்ற டேக் லைனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Wednesday, 8 April 2026

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது

 *பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*





ஹிப்ஹாப் தமிழா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகல துறைகளிலும் கால் பதித்து வெளிவந்த திரைப்படம் “மீசைய முறுக்கு”. சுந்தர்.சி தயாரித்திருந்த இப்படம் 2017-இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , 'ஆடுகளம்' நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார்.‌ கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ்  ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருத்துள்ளனர்.


படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் டீசர்- ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தில் இடம்பெற்ற 'ஆரா பத்துக்கு பத்து' எனும் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்க, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.


தற்போது, இப்படத்தின் இரண்டாவது பாடல் “பப்பாளி பழமே” புதன் கிழமை மாலை வெளியானது. கானா வினோத், கானா தரணி, ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு, நடனம் பாபா பாஸ்கர். கானா ஸ்டைலில் வெளியாகி இருக்கும் இப்பாடல் இணைய தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again

 *Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 





Meesaya Murukku, which marked Hiphop Tamizha’s foray into multiple facets of filmmaking including story, screenplay, dialogues, and direction was produced by Director Sundar C and released in 2017 to great commercial success. Building on the legacy of the first installment, Meesaya Murukku 2 is currently in the making, with Hiphop Tamizha once again helming the project as writer-director.


The film stars Hiphop Tamizha Adhi alongside Ketika Sharma, Chaithra J Achar, Yogi Babu, Karunaas, Harshad Khan, Naren, Nassar, Ramya Ranganathan, and Sha Ra, among others. Cinematography is handled by Balaji Subramanyam, while Fenny Oliver is the Editor. The music is composed by Hiphop Tamizha.


Positioned as a commercial entertainer, the film is jointly produced by A. C. S. Arun Kumar and Khushbu Sundar under the banners of Benz Media Private Limited and Avni Movies respectively. 


With the film currently in its final stages of production, the title teaser and first look have already received a phenomenal response. Additionally, the previously released track Aura 10/10 trended internationally within a short span, further amplifying expectations around the film.


Now, the second single Pappaali Pazhamey was unveiled on Wednesday evening. Sung by Gaana Vinoth, Gaana Dharani, and Hiphop Tamizha, the track features choreography by Baba Baskar. Rendered in a vibrant gaana style, the song is already gaining traction and trending across digital platforms.