Featured post

சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில்

 *Puththam Puthu Neram Movie Audio Launch*                                                              சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face...

Friday, 5 December 2025

சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில்

 *Puththam Puthu Neram Movie Audio Launch*





















                                                             சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் "புத்தம் புது நேரம்". கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வினில் இயக்குனர் சந்திரகுமார் பேசும்போது, "35 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். பிளாக் & ஒயிட் சினிமாவில் இருந்து கலர், தற்போது டிஜிட்டல் சினிமா வரை வந்து நிற்பது மகிழ்ச்சி. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கிளப் ஹவுஸில் பேசும்போது சினிமா பற்றி நிறைய பேசினோம்.  ஆன்லைனில் பலருக்கு இலவசமாக சினிமா பற்றி கிளாஸ் எடுத்தேன். அப்போது எங்களுக்கு ஒர்க் ஷாப் வைத்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள். ஆனால் ஒர்க் ஷாப் நடத்துவதை விட 15, 20 நாட்களில் ஒரு சினிமாவாக எடுப்போம் என பேசினோம். அப்படி ஒரு படத்தையும் எடுத்தோம், ஆனால் அதை திரையரங்கில் ரிலீஸ் செய்யவில்லை. அதனால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒரு படம் எடுக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட படம் தான் இந்த புத்தம் புது நேரம். இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் என யாரும் இல்லை, எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இந்த படத்தின் மூலம் லட்சங்கள், கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இந்த படத்துக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.


இசையமைப்பாளர் கே.பரஞ்சோதி பேசும்போது, "பாலக்காடு அருகில் உள்ள கொல்லங்கோட்டில் சந்திரகுமார் சார் குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல பழக்கம். அங்குள்ள கோவிலில் நான் பாடுவதை சார் கேட்டிருக்கிறார். அப்போதே என்னை நன்றாக வருவார் என சொன்னார். இசைஞானி இளையராஜா சார் என் மானசீக குரு. அவர் சொன்ன விஷயங்களை நான் இசையமைக்கும்போது இன்றும் பின்பற்றுகிறேன். சந்திரகுமார் சார் நன்றாக ட்யூன்ஸ் கேட்டு வாங்குவார். 1988ல் அவர் படத்துக்கு இசையமைத்தபோது என் இசையை கேட்டு விட்டு படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார் துபாயில் இருந்து எனக்கு ஒரு கீபோர்ட் வாங்கி அன்பளிப்பாக தந்தார். இப்போது என்னுடைய 70வது வயதில் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறேன். என் பிறந்த நாளன்று இந்த இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குனர் சந்திரகுமார் சார். அவருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி" என்றார்.


படத்தொகுப்பாளர் கே.ராஜகோபால் பேசும்போது, "புத்தம் புது நேரம் படத்துக்கு முன்பு சந்திரகுமார் சாருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் எங்களுக்கெல்லாம் குருவாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.


ஸ்கிரிப்ட் ரைட்டர் மற்றும் இணை இயக்குனர் டோனி தாமஸ் பேசும்போது, "சந்திரகுமார் சாரை நான் சந்தித்து 2 வருடம் ஆகிறது. புத்தம் புது நேரம் படத்தை கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம். ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம்" என்றார். 


பாடலாசிரியர் கொங்கு கவி பாலு பேசும்போது, "என் பெயர் பாலசுப்ரமணியம். இந்த படத்தின் தலைப்பு பாடல் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது தான் என்முடய முதல் சினிமா பாடல். இதற்கு முன்பு நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன், 4 புத்தகங்களும் எழுதியிருக்கிறேன்" என்றார்.


நாயகி சுபஸ்ரீ பேசும்போது, "இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்ஃபாதர். இந்த புத்தம் புது நேரம் படம் வெற்றி பெற வேண்டும், ரசிகர்கள் ஆதரவு தேவை" என்றார்.


நாயகன் பரத்வாஜ் பேசும்போது, "சந்திரகுமார் சார் எங்கள் எல்லாருக்கும் அப்பா போன்றவர். எங்களது ஷூட்டிங் சினிமா செட் போலவே இருக்காது, குடும்பத்தினர் ஒன்றாக சுற்றுலா சென்றது போல தான் இருக்கும். விவசாயிகளின் முக்கியத்துவத்தை பற்றி இந்தப் படம் பேசுகிறது. என்னை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி" என்றார்.


நாயகன் சதீஷ்குமார் பேசும்போது, "சந்திரகுமார் சாருடன் என்னுடைய இரண்டாவது படம். சார் எல்லோருக்கும் தந்தை போன்றவர். ஆனாலும் அவர் என்னிடம் ஒரு நண்பன் போல தோளில் கைபோட்டு பழகுவார். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி" என்றார்.


நடிகர் ராஜ்குமார் பேசும்போது, "அடிப்படையில் நான் ஒரு வழக்கறிஞர். இந்த படத்தில் நடிக்கும்போது இது ஒரு குடும்ப கெட் டுகெதர் போலவே இருந்தது. எல்லோரும் ஒற்றுமையாக இந்த படத்தில் பணிபுரிந்தோம். உங்கள் அனைவரது ஆதரவும் எங்களுக்கு தேவை" என்றார்.


நடிகர் செந்தில் பேசும்போது, "புத்தம் புது நேரம் ஒரு படம் எனபதை விட குடும்பம் என்று தான் சொல்லணும். இந்த படத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை எடுத்து செய்தோம். இந்த குடும்பம் 2026-ல் ஐந்து திரைப்படங்களை எடுக்கப் போகிறோம் என்பதை சக்தி பீடம் சார்பில் பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்" என்றார். 


நடிகை ரசியா பேசும்போது, "என் வாழ்க்கையில் இப்படி ஒரு மனிதரை சந்தித்ததில்லை. ஒரு அப்பாவாக, குருவாக, வழிகாட்டியாக இருந்துள்ளார். நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். இந்த அளவுக்கு நான் நடிக்க காரணம் சார் தான். இந்த குழுவுடன் இன்னும் பல படங்களில் பணிபுரிய ஆசை" என்றார்.


பாடகி மாதங்கி அஜித்குமார் பேசும்போது, " இந்த படத்தில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பெருமை. நான் இதுவரை 25 பாடல்களை பாடியிருக்கிறேன். கே.ஜே.யேசுதாஸ், மது பாலகிருஷ்ணன் போன்ற லெஜண்ட்ஸ் உடன் பாடியிருக்கிறேன். இந்த படத்தில் வத்தலகுண்டு, கன்னி மாங்கா என இரண்டு பாடல்களை பாடியிருக்கிறேன். வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் பரஞ்சோதி சாருக்கும், இயக்குனர் சந்திரகுமார் சாருக்கும் நன்றி" என்றார்.

Thursday, 4 December 2025

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception

 *Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception*



Angammal, scheduled for its release this Friday (December 5), With the early press and preview shows completed, Angammal has already begun its journey with heartfelt appreciation from critics and audiences alike. The overwhelmingly positive response has resulted in the film expanding its theatrical footprint,  now releasing in 90 plus screens. The producers of Angammal share their thoughts on this proud milestone and the film’s emotional resonance.


Producer Kaarthekeyen S says, “We believed in Angammal from day one,  a film that speaks softly yet stays with you long after. Watching the audience embrace its honesty has been deeply fulfilling. The entire team, especially Geetha Kailasam and Saran Sakthi, has delivered performances that standout for their sincerity and emotional depth. The growing demand from theatres only confirms what we always felt, stories rooted in truth always find their way to the audience. My heartiest thanks to Director Vipin for such an amazing piece of work.” 


Producer Firoz Rahim says, “This film celebrates motherhood, dignity, and the quiet heroism of ordinary women,  themes that are rarely told with such purity. The crew worked with extraordinary passion, whether it was capturing sync-sound in challenging live environments or shaping visually arresting frames. Each preview show has reinforced our pride, Angammal is a film that touches hearts, provokes thought, and encourages conversations. We are grateful for this beautiful reception. With the entire team being a lovely support, I take this opportunity to the entire villagers, who were so supportive during the entire filming. Without their support and presence, Angammal would not have achieved its life.” 


Producer & Cinematographer Anjoy Samuel says, “For us, cinema becomes meaningful when emotion and craft travel together, and Angammal stands strongly on that foundation. Every actor delivered their performance with utmost dedication, making the visual storytelling truly alive. To see theatres increasing shows based on early reactions is a reward for the entire crew’s hard work. We are delighted that audiences are connecting with the authenticity we strived to achieve.”


Stone Bench Films presents Angammal, in association with Njoy Films & Firo Movie Station. The film is screenplay and direction by Vipin Radhakrishnan, adapted from a story by Perumal Murugan, featuring Geetha Kailasam, Saran Sakthi, Barani, Mulyarasi, Tendrel Raghunathan, and Vinodhananth, with cinematography by Anjoy Samuel and music & original background score by Mohammed Maqbool Mansoor. It is produced by Kaarthekeyen S, Firoz Rahim, and Anjoy Samuel, and co-produced by Shamsudeen Khalid and Anu Abraham.

அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல

 *‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல திரையரங்குகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!*



இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். 


தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி”.


தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம் கூறுகையில், “இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை” என்றார்.


தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் கூறுகையில், “உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ திரைப்படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார். 


நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ’அங்கம்மாள்’ திரைப்படத்தை வழங்குகிறது. 


*நடிகர்கள்:* நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,

மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,

தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,

இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,

ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,

இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்

Saara Movie Review

 Saara Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  sara  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது chellakutty. அதோட இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதி இருக்காரு. இந்த படத்துல sakshi agarwal, roboshankar, yogibabu, thangadurai, mirattal selva, ambika  னு பலர் நடிச்சிருக்காங்க.   சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 






sara வா நடிச்சிருக்க sakshi agarwal ஒரு construction company ல வேலை பாத்துட்டு இருக்காங்க. இதே company ல தான் இவங்களோட lover ஆனா vijay vishwa யும் வேலை பாத்துட்டு இருப்பாரு. இவங்க ரெண்டு பேரும் 6 years அ லவ் பண்ணிருப்பாங்க. இப்போ ரெண்டு வீடு parents ஓட சம்பந்தபடி நிச்சயமும் ஆயிடும். ஆனா தொடர்ந்து இவங்களோட இந்த relation ல பிரச்சனைகள் தான் வந்துட்டு இருக்கும். ஒரு பக்கம் company related அ mirattal selva ஓட sara க்கு பிரச்சனை வந்துட்டு இருக்கும். இன்னொரு பக்கம் படத்தோட second half ல வர chella வா நடிச்சிருக்க chellakutty ல வர பிரச்சனை. இந்த படத்தோட director தான் chella வா நடிச்சிருக்காரு. இவரோட அம்மா தான் ambika , chella வும் sara வும் நல்ல friends ஆயிடுறாங்க. chella வும் இந்த construction company ல ஒரு சின்ன வேலைய தான் பாப்பாரு அதோட படிச்சிருக்கவும் மாட்டாரு. இப்போ ஒரு வருஷம் கழிச்சு sara promote ஆயிருப்பாங்க. இப்போ திடுருனு ambika ஒரு accident க்கு அப்புறம் sara வை சந்திச்சு chella வை நீ தான் கல்யாணம் பண்ணிக்கணும் னு சொல்லுறாங்க. இப்போ sara தன்னோட lover ஆனா vijay vishwa வை கல்யாணம் பண்ணிப்பாங்களா? இல்ல chella வைய ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vijay vishwa lover அ நல்ல  perform பண்ணிருக்காரு. villain அ வர mirattal selva வும் எல்லாரையும் பயமுறுத்திடு போயிருக்காரு. chellakutty யும் ஒரு பக்கம் director அ இன்னொரு பக்கம் actor அ நல்ல perform பண்ணிருக்காரு. yogibabu , roboshankar , thangadurai இவங்களோட comedy யும் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. ambika நடிச்சிருக்க emotional scenes யும் நல்ல இருந்தது. படத்தோட technical aspects னு பாக்கும் போது karthik raja ஓட songs and bgm படத்துக்கு நல்ல set யிருந்தது. 


மொத்தத்துல  ஒரு நல்ல கதைக்களம் தான் இது . சோ miss பண்ணாம இந்த படத்தை  பாருங்க.

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40

 *இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது*








வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைமுக நோக்கங்கள், கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் என கதை முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருக்கும். 40 நிமிட குறும்படமாக இருந்த இந்த கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்திற்கு பின்பு திரைப்படமானது. 


குறும்படமாக இருந்த கதையை முழு திரைக்கதையாக மாற்ற தேவையான ஒழுக்கம், நேர்மை மற்றும் உழைப்பு என அனைத்தையும் படக்குழு வழங்கியது. இயக்குநர் மிதுனின் தந்தை கதைக்கு தேவையான பட்ஜெட் வழங்கி ஆதரவு கொடுக்க கதையின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மிதுன் கதை மீது முழு கவனம் செலுத்தினார். ’ஸ்டீபன்’ கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை கோமதி சங்கர் அட்டகாசமாக திரையில் பிரதிபலித்துள்ளார்.


படம் குறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் ஸ்டீபன் கதாபாத்திரத்தை முதலில் கற்பனை செய்ததற்கும் அப்பால் கதை வளர்ந்தது. சிறிய குறும்படமாக ஆரம்பித்த இந்தக் கதை பலகட்ட ஆய்வு, சிந்தனை மற்றும் தைரியத்திற்கு பிறகு முழு திரைக்கதையானது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ‘ஸ்டீபன்’ என அனைவருக்கும் பரிச்சயமான பெயரைத் தேர்வு செய்தோம். இந்தப் படம் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அவரது சேமிப்பில் இருந்து இந்தப் படத்திற்கு நிதி கொடுத்தார். அந்தப் பொறுப்போடு சேர்த்து இயக்கம், எழுத்து, தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு என பல பணிகளை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ‘ஸ்டீபன்’ படத்தைப் பார்க்க ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார். 



நடிகர் மற்றும் இணை எழுத்தாளரான கோமதி சங்கர் கூறுகையில், “’ஸ்டீபன்’ கதையை எழுதுவதில் நானும் பங்களித்திருப்பதால் அந்தக் கதபாத்திரத்துடன் என்னால் ஆழமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. நாங்கள் உருவாக்கிய இந்தக் கதை உலகம் பரபரப்பானதாகவும் அமைதியற்றதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் இருந்தது. அதனால், ஒரு நடிகனாக இந்தக் கதையில் நடித்திருப்பது எனக்கு சவாலான விஷயம்தான். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நேர்மையுடன் எடுத்திருக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ‘ஸ்டீபன்’ திருப்தியான உணர்வை தரும்” என்றார். 


உளவியல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘ஸ்டீபன்’ யார் என்பதற்கு பதிலாக ஏன் என்று உங்களை யோசிக்க வைக்கும். 


டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.

Fueled by heart, craft, and a father’s savings — ‘Stephen’ rises from a 40-minute

 *Fueled by heart, craft, and a father’s savings — ‘Stephen’ rises from a 40-minute

short to a global psychological thriller, premiering Dec 5th on Netflix* 








In a twist from the usual crime playbook, Stephen starts where most thrillers end: the killer confesses. Premiering on Netflix on December 5th, Stephen is a simmering

psychological thriller written and directed by debut filmmaker Mithun Balaji. Starring Gomathi

Shankar, with Michael Thangadurai and Smruthi Venkat in key roles, the film explores hidden motives, murder, and unresolved trauma with a pace full of twists. Originally a 40-minute short film, it evolved into a feature after over one-and-a-half years of writing and research, shaped by their obsession with documentaries and real psychological cases.


As the narrative grew, so did the scale of its ambition. What began as a modest idea evolved into a feature project defined by discipline, restraint, and emotional honesty. Backed by a budget provided by Mithun’s father, Mithun had the space to steer the film entirely as its writer, director, and

producer. Gomathi’s performance carries the rawness of someone who helped build the character

from the ground up, giving Stephen its unsettling emotional core.

Speaking of the film, director, Mithun Balaji said, “Stephen grew far beyond what we first

imagined. A small short film slowly became a story that demanded more thought, more research, and more courage. 


We chose a name that feels familiar across cultures because the film speaks to

universal emotions. My father stepped in and funded this film from his savings so we could chase this dream which meant I had to step into every role the film demanded - directing, writing, producing, and editing. For our entire team to see it premiere on Netflix on December 5 feels like the

moment this entire journey was meant for.

Adding to that actor and co-writer, Gomathi Shankar, said, “Being part of Stephen right from the writing table gave me a deeper connection to the character than I’ve ever had before. The world we were creating was fragile, unsettling, and emotional, and stepping into it as an actor was both

demanding and rewarding. We didn’t have extravagant resources, so every scene relied on sincerity

and collaboration. Knowing that this film, which began so modestly, is now arriving on Netflix for audiences everywhere feels truly fulfilling.”

As Stephen arrives on Netflix on December 5- a small story that grew into a tense, atmospheric thriller. Instead of chasing shadows, Stephen invites you to sit with the uncomfortable truth that the

“why” is often far more haunting than the “who”.

WATCH STEPHEN EXCLUSIVELY ON NETFLIX FROM DEC 5TH

சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா

 *'சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா* 








*யோகிபாபு - விஜய் விஷ்வா -  சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் 'சாரா*


நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி  இயக்கியுள்ளார்.


இப்படத்தில் சாக்ஷி அகர்வால்,  தங்கதுரை,  அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.


இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சாரா’ படத்தின் டிரெய்லரை திரையிட்டு குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். இத்துடன், அங்கு நடிகர் நெப்போலியனின் பிறந்தநாளை உணவு வழங்கி கொண்டாடினர்.


அத்துடன், சமீபத்தில் மரணமடைந்த மறைந்த நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.


மேலும்,  விஜய் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள அவரது அடுத்த திரைப்படமான “பிரம முகூர்த்தம்”  விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை

 செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை...







அஷ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்...



கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி  கிராமத்தைச் சார்ந்த அஷ்வினி என்ற இளம் இயக்குனரின் இரண்டாம் குறும்படம் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை..


யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் *கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை*


யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு 


இயக்குனர் திரு.சமுத்திரக்கனி மற்றும் நடிகர் திரு.சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து  இக்குறும்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்..


இக்குறும்படத்தை பற்றி இயக்குனர் அஷ்வினி மற்றும் மணிவண்ணன் கூறியதாவது:


நாங்கள் இந்த குறும்படத்தை எடுக்க  முக்கிய காரணம்

யாரும் கெட்ட வார்த்தையை உறவுகளுக்கு இடையே பேசக்கூடாது என்பது தான்..


இதில்  முக்கிய கதாபாத்திரத்தில் தா.முருகானந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பவித்ரா, அட்ரஸ் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர் ‌‌


இப்படத்திற்கு ஒளிப்பதிவு  ஜேசன் வில்லியம்ஸ்,

இசை அருணகிரி படத்தொகுப்பு ஷான் லோகேஷ்  கலை இயக்குனர் என்.கே ராகுல் 



இப்படம் முழுக்க முழுக்க  ஒரே நாள் சென்னை  வளசரவாக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்டது..

Angammal Movie Review

Angammal Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  angammal  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vipin Radhakrishnan. இந்த படத்துல  Geetha Kailasam  Saran Shakthi, Thendral Raghunathan  Bharani. னு பலர் நடிச்சிருக்காங்க.  இந்த படம்  New York Indian Film Festival ல best film ன்ற விருதை வாங்கிச்சு. அப்புறம் Indian Film Festival of Melbourne ல Best Actor (Female) க்கும் Best Indie Film ன்ற catagory க்கும் விருது வாங்கிச்சு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்துல ஓரூ ஸ்பெஷல் ஆனா விஷயத்தை use பண்ணிருக்காங்க. உச்சிமலை காத்து னு ஒன்னு வரும். இவங்க ஊர்  ல இருக்கற மலை ல இருந்து 25 வருஷத்துக்கு ஒருதடவை தான் வரும். இந்த காத்து ல uchchaani ன்ற ஒரு பூ வோட மனமும் வரும். இந்த மாதிரி ஒரு மனம் வந்தேளே எதோ ஒரு ஆபத்து வர போது ன்றது அந்த ஊர் மக்கள் ஓட நம்பிக்கை. இதே தான் ரொம்ப உறுதியா நம்பிட்டு இருக்காங்க angammal அ நடிச்சிருக்க geetha kailasam. இவங்களோட life ரொம்ப கஷ்டமானதா தான் இருக்கும். படத்தோட ஆரம்பத்துலயே இவங்களோட பேத்தி ஆனா manju வை scotter ல வச்சு கூட்டிட்டு போவாங்க. அவங்களோட பேத்தி க்கு இந்த uchchaani பூவோட tatoo வை குத்துறதுக்கு தான் போவாங்க. இந்த பூவோட tatoo வை angammal ஓட இறந்து போன அம்மாவும் போட்ட்ருப்பாங்க. ஆனா இந்த tatoo போட manju வோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க. இதுனால angammal க்கும் அவங்களோட மருமகளுக்கும்  ரொம்ப சண்டை வரும். இதுல இருந்து angammal ஓட family குள்ள என்னமாதிரியான சண்டைகள் வரும் ன்றது ரொம்ப தெளிவா director காமிச்சிருப்பாரு. 


படம் போக போக தான் angammal ஓட character நமக்கு முழுசா தெரியும். இவங்க ஒரு tough ஆனா character அ இருப்பாங்க. இவங்களுக்கு blouse போடுற பழக்கம் கிடையாது, எப்பயும் பீடி பிடிச்சிட்டு இருப்பாங்க, கோவம் டக்குனு வந்திரும் அதுனால நெறய கெட்ட வார்த்தைகள் அ பேசுவாங்க. காலம் போற வேகத்தோட இவங்களால ஒத்து போக முடியாது. சுத்தி நடக்கற changes அ இவங்கனால புரிஞ்சுக்க முடியாது. அதுனால தன்னோட identity, அவங்களோட family, அந்த ஊர் எல்லாமே அவங்க கைய விட்டு போற மாதிரி ஒரு feeling ல இருப்பாங்க. இந்த காரணத்துனால அவங்க எப்பவுமே வயல்வெளி ளையும் இன்னொரு ஒரு lady ஓட தான் நேரத்தை spend பண்ணுவாங்க. angammal க்கு pavalam ன்ற ரெண்டாவுது பையன் இருப்பான். இவன் city க்கு போய் படிச்சு ஒரு doctor அ ஆயிருப்பான். அங்க ஒரு பெரிய பணக்கார  பொண்ண kalyanam பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை வரும். இது தான் angammal னால accept பண்ணிக்க முடியாது. இந்த பொண்ணோட family இவங்கள பாக்க ஊர்க்கு வராங்க னு சொல்லி angammal ஓட மூத்த பையனும் அவரோட மனைவியும் இவங்கள blouse அ போட்டுக்க சொல்லுவாங்க. எதுக்கும் கோபப்படாம கெட்ட வார்த்தை பேசாம ஒழுங்கா நடந்துக்க சொல்லுவாங்க. இது தான் அவங்களோட இடத்துல இருந்து அவங்கள தள்ளி விடுற மாதிரி பயந்து போறாங்க. 


இதுல இருந்து angammal க்கு அவங்களோட குடும்பத்துல இருக்கற power மறைஞ்சு போகுதா ? இல்ல அவங்களோட சுதந்திரம் பறிபோகுத? ன்ற கேள்வி கண்டிப்பா படத்தை பாக்குற audience க்கு தோணும். உண்மையா சொல்ல போன ரெண்டுமே நடக்கும் தான். அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்களோட identity யா விட்டு குடுக்காம family ஓட close அ இருக்கணும் னு நினைப்பாங்க. இவங்களோட ஒரு friend க்கும் இதே நிலைமை தான் நடக்கும். angammal க்கு தன்னோட பையன் கல்யாணம் பண்ணிக்கிறது சந்தோசமா தான் இருக்கும் இருந்தாலும் relationship change ஆகுறத தான் இவங்கனால ஏத்துக்க முடியாது. இவங்க எப்பவுமே pavalam கிட்ட நீ மாறிட்ட , முன்னாடி மாதிரி நீ இல்ல னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. அவங்களோட expectation என்னனா இந்த கல்யாணத்த பத்தி ஏன் முன்னாடியே இவங்ககிட்ட சொல்லல ன்ற வேதனை தான் இருக்கும். என்னதான் இவங்களோட பசங்க அவங்களுக்கு னு ஒரு life அ தேர்ந்துஎடுத்து போனாலும் ஒரு அம்மாவா அந்த changes அ இவங்கனள ஏத்துக்க முடியாது. 


இன்னொரு scene ல பாத்தீங்கன்னா pavalam ஓட நடவடிக்கை சரி இல்லனு தன்னோட மூத்த பையன் sudalai யா நடிச்சிருக்க bharani கிட்ட complaint பண்ணுவாங்க. ஆனா sudalai குடிச்சிகிட்டு nadaswaram வாசிச்சிகிட்டு ஒண்ணுமே பண்ணாம இருப்பாரு. இதை பத்தி angammal எந்த கேள்வியும் கேட்கமாட்டாங்க. என்னதான் மத்தவங்க இவங்கள ignore பண்ணுறாங்க னு இவங்க நினைச்சாலும் இவங்களும் sudalai விஷயத்துல அதுதான் பண்ணுறாங்க. இந்த படத்துல individuality யையும் social rules அ follow பண்ணாததை பத்தி யும் சொல்லுறாங்க. அதாவுது blouse போடுறது social expectation அ இருக்கலாம், ஆனா blouse போடாம இருக்கிறது தான் அவங்களோட comfort . rules ஆயிரம் இருந்தாலும் ஒருத்தவங்களோட மனுசு என்ன சொல்லுதோ அதா தான் எல்லாரும் கேட்பாங்க. இந்த விஷயம் தான் படத்துல ரொம்ப நேர்த்தியை சொல்லிருப்பாங்க. 


அந்த ஊர் ல அவங்க குத்தி இருக்கற அந்த பூவோட tatoo வும் அவங்க blouse போடாம இருக்கறதும் தான் அவங்களோட identity. இதை மாத்த சொல்லும்போது இவங்களுக்கு வர பயம் meaningful  அ தான் இருக்கும். இந்த மாதிரி ஒரு individual  ஓட மனுசுக்குள்ள நடக்கற போராட்டங்களை ரொம்ப நேர்த்தியா எடுத்து சொல்லிருக்காரு director . director ஓட vision  அ பக்காவா camera  ல பதிவு பண்ணிருக்காரு Cinematographer Anjoy Samuel . sound  team  ல இருக்கற composer Mohammed Maqbool Mansoor, sound designer Lenin Valappad, அப்புறம்  sound mixer PK Krishnanunni இவங்களோட work  யும் இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். 


Perumal Murugan’ ஓட  சிறுகதை  Kodithuni யா base பண்ணி இந்த படத்தோட கதையை எடுத்துருக்காங்க. angammal  ஓட life ல நடக்கற பல விஷயங்களை audience அழ relate பண்ணிக்க முடியும். இந்த படத்தை பாத்துட்டு வரும் போது கண்டிப்பா இதோட தாக்கம் ஆலமனுசுல பதியும் ன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. 


இது ஒரு நல்ல கதைக்களம் தான். சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.