Featured post

G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai

 _*G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’*_ G.V. Prakash Kumar’s...

Wednesday, 2 September 2026

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜை வியக்க வைத்த ஸ்கிரிப்ட் ; செப்-18ல் வெளியாகும் 'பீப்' பட ரகசியங்கள் என்ன ?

 *திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜை வியக்க வைத்த ஸ்கிரிப்ட் ; செப்-18ல் வெளியாகும் 'பீப்' பட ரகசியங்கள் என்ன ?* 




*'பீப்' பட இயக்குநருக்கு பேனா பரிசளித்த திரைப்பட ஜாம்பவான் கே.பாக்யராஜ் ;  அப்படி என்ன கதை ?* 


*‘ராட்சசன்' இல்ல... ஆனா 'த்ரிஷ்யம்' ; புதிய கிரைம் டிராமா ‘பீப்’ குறித்து இயக்குநர் சண்முக சுந்தர்* 



‘கட்டு' (Bind) என்கிற குறும்படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற இல.சண்முக சுந்தர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பீப்’..


இப்படத்தில் ராகவ் ரங்கநாதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.


துப்பாக்கிகள் மற்றும் இரத்தம் சிந்தும் காட்சிகள் இல்லாத ஒரு கிரைம் டிராமாவாக, சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது.. 


எளிய பின்னணியில் இருந்து வரும், புகைப்படங்களை அல்லது காட்சிகளைத் துல்லியமாக உள்வாங்கும் திறன் கொண்ட ஒரு திறமையான இளைஞன், இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் பள்ளிக்குச் செல்கிறான். அவனது நோக்கம் தனக்குப் பிடித்தமான நாயகியைச் சந்திப்பது மட்டுமே. ஆனால் எதிர்பாராதவிதமாக வாழ்க்கையை மாற்றும் ஒரு நிகழ்வு நடக்கிறது. அவனது ஆறு நண்பர்கள் கொண்ட குழு அதிலிருந்து அவனை எப்படி மீட்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.


*படம் குறித்து, இயக்குநர் .இல.சண்முக சுந்தர் மேலும் கூறும்போது,* 


“இது இரத்தம் தெறிக்கும் வன்முறை, சண்டைகள் அல்லது துப்பாக்கி காட்சிகள் நிறைந்த படம் அல்ல. 


படத்தின் ஒவ்வொரு நொடியும் ஒரு குற்றச் சம்பவம் நடப்பது போலவோ அல்லது சீரியல் கில்லர்கள் மக்களைக் கொல்வது போலவோ இது இருக்காது. 


கொலையும் நடக்கும், ஆனால் கதை அதன் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் தேடல்களுடன் சுவாரஸ்யமாக நகரும். 


எனக்கு துப்பாக்கிகள், கத்திகள் மீது எந்த எதிர்ப்பும் இல்லை; ஆனால் இந்தப் படத்திற்கு அவை தேவையில்லை என்று நினைத்தேன். இது 'ராட்சசன்' போன்ற படம் அல்ல, மாறாக 'த்ரிஷ்யம்' மற்றும் 'தொடக்கம்' போன்ற ஜானரைச் சேர்ந்தது" என்று கூறியுள்ளார்.


மறைந்த இயக்குநர், திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இப்படத்தின் கதைசொல்லியாக குரல் கொடுத்துள்ளார் என்பது ஹைலைட்டான ஒன்று.. ஆரம்பத்தில் அவர் இந்தப் படத்தில் பணியாற்றத் தயங்கினாலும், படத்தின் கதையைப் படித்தவுடன் அவருக்குப் பிடித்திருந்ததால் இயக்குநர் இல.சண்முக சுந்தரை உடனடியாக அழைத்து,  ஒரு பேனாவை பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு படத்தின் கதை அந்த திரைக்கதை மன்னனை ஈர்த்துள்ளது.


சமீபத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர்கள் பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ரம்யா, பிரீத்தா ராகவ் ஆகியோர் பீப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். 


தற்போதுவரை யூட்யூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் இதைப் பார்த்து இரசித்துள்ளனர். ஒரு அறிமுக இயக்குநரின் புதிய படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  


வரும் செப்-18ஆம் தேதி ‘பீப்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.


*தொழில்நுட்பக்  கலைஞர்கள் விவரம்* 


இயக்கம் ; இல.சண்முக சுந்தர்

இசை ; பிரசாந்த் விஹாரி 

ஒளிப்பதிவு ; பிரதீப் பத்மகுமார் 

படத்தொகுப்பு ; அபிஷேக் மற்றும் விக்னேஷ் 

ஆக்சன் காட்சிகள் ; ராம்குமார்

மக்கள் தொடர்பு ;

A. ஜான்

No comments:

Post a Comment