Featured post

பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

 *‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான  ஃபர்ஸ்ட் சிங்கிள்  !* இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும...

Monday, 3 August 2026

பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

 *‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான  ஃபர்ஸ்ட் சிங்கிள்  !*



இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 21 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது


யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால், வெங்கயோ குரல்களில் உருவாகியுள்ள இந்த பாடல், இளமையும் உற்சாகமும் கலந்த காதல் பாடலாக அமைந்துள்ளது. துள்ளலான இசை, கவர்ச்சிகரமான காட்சியமைப்பு மற்றும் நாயகன்-நாயகியின் இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மாடர்ன் கல்யாணத்தின் அனைத்து  ‘அட்ராசிட்டி’ (Atrocity) விசயங்களையும் நகைச்சுவை ததும்ப காட்சிப்படுத்தியிருக்கும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியால், கணவரே மனைவியின் வீட்டிற்குச் சென்று வாழும் புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் உறவுகளின் உணர்வுகளை வித்தியாசமான கோணத்தில் சொல்லவுள்ளது.


இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை தனது இசையின் மூலம் மேலும் அழகாக வெளிப்படுத்தும் வகையில் பாடல்களும் பின்னணி இசையும் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


முதல் சிங்கிள் ‘அட் ராசிட்டி’ வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தொடங்கும் எதிர்பாராத திருப்பங்களையும், கலகலப்பான குடும்ப தருணங்களையும் சுவாரஸ்யமாக சொல்ல வரும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.


https://www.youtube.com/watch?v=3joIUDlLRgk

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி'

 *பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.*












பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும்  விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 


சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி பேசுகையில்,


'' இந்த இணைய தொடர் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாக பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூஸ், 'ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியை பற்றிய கதையை சொன்னவுடன் எங்களுக்கு பிடித்தது. அதிலும் அந்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன்.. அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலும் இந்த இணைய தொடரில் ஏராளமான புது இளம் திறமைசாலிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் வீடியோவின் ஆதரவு எப்போதும் போல் மிகச் சிறப்பானதாக இருந்தது. இந்தத் தொடரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவரும். 


வதந்தி சீசன் 1 கதையை இயக்குநர் ஆண்ட்ரஸ் எழுதிக் கொண்டிருக்கும்போதே... சீசன் 2 விற்கான ஐடியாவை அவர் வைத்திருந்தார். சீசன் 1 - ஒரு கதையாக இருக்க வேண்டும்... ஒரு க்ரைம் இருக்க வேண்டும். ஒரு ஊரில் நடந்திட வேண்டும்.  சீசன் 2 - வேறொரு க்ரைம். அதனை மதுரை பின்னணியில் சொல்லலாம் என சொன்னார். இதுதான் எங்களுக்கு முதல் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.  இயக்குநர் ஆண்ட்ரூஸ் மதுரையை சேர்ந்தவர் அல்ல. இருந்தாலும் அந்த கதைக்களத்தை பற்றி நன்றாக நன்றாக தெரிந்து கொள்வதற்காக பல மாதங்கள் மதுரையில் தங்கி மக்களுடன் கலந்து வாழ்ந்தார். அவர்களுடைய நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்குப் பிறகு திரைக்கதையை இறுதி செய்தார். இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதை திரையில் அவர் சின்ன சின்ன விசயங்கள் மூலம் விவரித்திருக்கிறார். அப்போதுதான் பார்வையாளர்களால் மூஸா ராசா எனும் கதாபாத்திரத்துடன் எளிதாக பயணிக்க முடியும்.


மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தை எழுதி முடித்துவிட்டு, இதற்காக சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னதும் எனக்கும் கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது. நாங்கள் இருவரும் சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம் ' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வெகுவாக கொண்டாடினோம். அது முதல் சசிக்குமாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. 


மதுரை பின்னணி - சசிகுமார் நடிக்கிறார் - ஆனால் ஒரு அருவாள் இல்லை.... கத்தியில்லை... ரத்தம் இல்லை... என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் சசிகுமாரிடம் நீங்கள் சில நிமிடங்கள் பேசினாலே... அவர் மூஸா ராசா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பது தெரியவரும். அவ்வளவு அன்பானவர். அடக்கமானவர். அதிர்ந்தும் பேசாதவர். 


வதந்தி சீசன் 2 படத்தின் பணிகளை தொடங்கிய தருணத்திலிருந்து ஒவ்வொரு விசயமும் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தது. கதையாகட்டும்... கதாபாத்திரங்கள் ஆகட்டும்... இசையாகட்டும்... ஒவ்வொரு விசயமும் எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. 


வதந்தி சீசன் 1 க்கு பிறகு ,சீசன் 2 விற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸ் திரைக்கதையை எழுத நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். சீசன் 2 விற்காக அவர் எழுதி நிறைவு செய்த மூன்றாவது கதை தான் இது. அதனால் தான் வதந்தி சீசன் 1 வெளியாகி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு சீசன் 2 வெளியாக உள்ளது. 


இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், '' வதந்தி சீசன் 1 - ஒரு ஆர்கானிக் சக்சஸ். அதற்குப் பிறகு வதந்தி சீசன் 2 வை அறிமுகப்படுத்தும்போது.. இதற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. 


யாரும் பார்க்காத தருணத்தில் கல்லை தூக்குவது பெருமை அல்ல. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கல்லை தூக்குவது தான் சவாலானது. எதிர்பார்ப்புகள் இல்லாத தருணத்தில் வதந்தி சீசன் 1 இயக்கியதை விட... அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் இந்தத் தருணத்தில் இதன் சீசன் 2 வை இயக்கி வெற்றியடைய செய்வதில் தான் எனக்கான சவால் இருக்கிறது என நினைக்கிறேன்.  


இந்த கதையை எழுதி அமேசான் பிரைம் வீடியோவிற்கு சமர்ப்பிப்பதற்கு முன் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி அவர்களிடம் சமர்ப்பித்தேன்.‌ அவர்கள் தான் இன்னும் ஏதாவது புதுமையாக சேர். சேர்த்துக்கொள். சேர்த்துக் கொண்டே இரு... என ஊக்கமளித்துக் கொண்டே இருந்தார்கள். திரைக்கதையை நிறைவு செய்த பின் அவர்களின் கஷ்டம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நான் இதனை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அவர்கள் தான் அனைத்து விசயங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்தனர். இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்குவதற்காக படமாக்கப்படும் படப்பிடிப்பு நாட்களில்... மூன்று திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த வேண்டியது இருந்தது. இதற்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் இதில் இணைந்து பாடுபட்ட அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர். 


பார்வையாளர்கள் இந்தத் தொடரை பார்க்கும்போது அனைவரும் வதந்தி சீசன் 2 தொடரின் கதை களத்திற்குள் பயணித்து விடுவீர். ஆனால் அந்த உலகத்தை உருவாக்குவதற்காக தொடர்ந்து 43 நாட்கள் மதுரை- காரைக்குடி- ராமநாதபுரம்- திருச்சி- ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தினோம். அனைவரும் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்தனர். அனைவருக்கும் இந்த வதந்தி சீசன் 2 நன்றாக வரும் என நம்பிக்கை வைத்தனர். இதற்காகவும் அனைவருக்கும் நன்றி. 


வதந்தி சீசன் 1 மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக எஸ் ஜே சூர்யாவிற்கு நன்றி. சீசன் 1ல் எஸ் ஜே சூர்யா- அந்த கதாபாத்திரத்தை கையாண்ட விதம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.  


வதந்தி சீசன் 2 விற்காக சசிகுமாரை அணுகி கதை சொல்லும் போது நான் முழு கதையையும் எழுதி நிறைவு செய்யவில்லை. அவரை மதுரையில் சந்தித்து கதையை சொன்னதும் அவர் எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு முழு திரைக்கதையை எழுதி நிறைவு செய்துவிட்டு வாருங்கள் என்றார். அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன் அவருக்காக மீண்டும் ஒரு முறை மூஸா ராசா கதாபாத்திரத்தை சிறப்பாக எழுத தொடங்கினேன். இதுவே வதந்தி சீசன் 1க்கும் சீசன் இரண்டுக்குமான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்துவிட்டது.


இசையமைப்பாளர் சிமோனை பற்றி குறிப்பிட வேண்டும். வதந்தி சீசன் 1க்கான இசை வேறு. சீசன் 2 விற்கான இசை வேறு. அவரும் ஒரு வகையில் கதை சொல்லி தான். நான் கண்ணை மூடிக்கொண்டு இந்த தொடரின் எபிசோட்டை பார்க்கும்போது... இசையே கதையை சொல்லும். அந்த அளவிற்கு அவர் கலை நுட்பம் கொண்டவர். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார். 


நடிகர் சசிகுமார் பேசுகையில், ''


 வதந்தி 2 கதையை இயக்குநர் மதுரையில்  என்னை சந்தித்து சொன்னார். டைட்டிலை கேட்டவுடன் நான் தான் மணி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்று நினைத்திருந்தேன். மதுரை என்பதால் மணி- குட்டி புலி- என ரௌடியாகத்தான் யோசிப்பார்கள். நானும் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். யாரும் என்னை போலீசாக நடிக்க வைக்க வேண்டும் என யோசிக்கவில்லை. இயக்குநரிடம் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப கேட்டேன். நான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? அல்லது போலீஸ் மூஸி ராசா கேரக்டரில் நடிக்கிறனா? என்று கேட்டேன். அவர் தான் நீங்கள் போலீசாக மூஸா ராசா கேரக்டரில் நடிக்கிறீர்கள் என்றார். மதுரை பின்னணியில் என்னை ரவுடியாக இல்லாமல் போலீசாக நினைத்து கதையை எழுதியதால் அந்த கதையை முழுவதுமாக கேட்டேன். இந்தக் கேரக்டர் இவ்வளவு சிறப்பாக மெருகேறி இருக்கிறது என்றால்... அதற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸின் கடும் உழைப்புதான் காரணம். 


போலீஸ் என்றவுடன் அந்த ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் அப்படி எல்லாம் நடிக்க கூடாது. இயல்பாக இருக்க வேண்டும் என்றார்.  அந்தக் கதாபாத்திரம்-  மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் சொன்ன கதையும் எனக்கு பிடித்திருந்தது. ஒரு நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடும் கதை. போலீஸ் பாயிண்ட் ஆஃப் வ்யூவில் தான் வதந்தி சீசன் 2 வின் கதை நகரும். 


இதுவரை வெளியான இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜானரிலான கதைகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற பரபரப்பு தான் இருக்கும். ஆனால் இந்த தொடரில் பாவம் ஹீரோ ..‌! போலீஸ் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடித்து, இவனை விடுவித்து விட வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும். 


அதைவிட வதந்தி சீசன் 1 எஸ் ஜே சூர்யா நடித்து பெரிய ஹிட்டான தொடர். அதற்கும் இந்தத் தொடருக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் இந்தத் தொடரும் புதுமையாக இருக்கும். இந்த இணைய தொடர் வெளியான பிறகு நான் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என நினைக்கிறேன். 


இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின் போது ஏதேனும் ஒரு இடத்தில் லேசாக சிரித்தாலும்... மூஸா ராசா கேரக்டர் சிரிக்காது என இயக்குநர் சொல்லிக் கொண்டே இருப்பார்.  படப்பிடிப்பு தொடங்கி இரண்டு நாள் வரை சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு அது பழகிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இயக்குநர் என்ன சொன்னாரோ..! அதை மட்டும் தான் செய்தேன்'' என்றார்.


நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், '' 


ட்ரீம் ப்ரொடியூசர் மற்றும் ட்ரீம் டைரக்டர் உடன் இருக்கும்போது எங்களுக்கெல்லாம் நடிப்பு தானாகவே வரும்.‌ எல்லாமே பேப்பரில் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ...! அதை செய்தால் மட்டும் போதும். 


புஷ்கர்- காயத்ரி அவர்களுடைய தயாரிப்பு என்றால்.. அதில் பணியாற்றும் அனைவருக்கும் சந்தோஷம் தான். அனைவரையும் அவர்கள் அரவணைத்து அக்கறை காட்டி அன்பு செலுத்துவார்கள்.‌


என்னைப் பொறுத்தவரை இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்தியாவிலேயே மிகச்சிறந்த ரைட்டர். இவருடைய எழுத்தையும், ஸ்கிரிப்டையும் வாசிக்க வாசிக்க குஷியாகி விடுவேன். ஆனால் இந்த தொடரின் எட்டாவது எபிசோடின் ஸ்கிரிப்ட்டை மட்டும் அனுப்பவில்லை. நான் ஆர்வமுடன் காத்திருந்தும்... நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள் தான் அதற்கான ஸ்க்ரிப்டை அனுப்புவார்.


வதந்தி சீசன் 1  ஐ விட இந்த சீசன் 2 விற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை இந்தத் தொடர் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்'' என்றார்.


நடிகர் யஷ்வந்த் பேசுகையில், 


''என்னைப் போன்ற புது முகங்களை கூட தயாரிப்பாளர்கள் புஷ்கர் -காயத்ரி மதிப்பு அளித்து பல விசயங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர். அவர்களுடைய குழுவில் உள்ள அனைவரும் எனக்கு சிறந்த முறையில் வழிகாட்டினர். அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் ஆண்ட்ரூஸ் வதந்தி மூலம் எனக்கு வாய்ப்பு மட்டும் தரவில்லை...! வாழ்க்கையையே கொடுத்திருக்கிறார். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் பெரிது. ஒரு புது முகத்திற்கு இவ்வளவு பெரிய கதாபாத்திரமும், அதற்கான சுதந்திரமும் கொடுப்பார்களா..! என எனக்குத் தெரியவில்லை. கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை அபர்ணா தாஸ் பேசுகையில், 


'' 'டாடா' படத்திற்குப் பிறகு தமிழில் நல்லதொரு கதையில் நடிக்க வேண்டும் என காத்திருந்தேன்.‌ இந்தத் தருணத்தில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இதுவரை ஏற்று நடித்ததில் இந்த 'சுமையா' கதாபாத்திரம்தான் சற்று வித்தியாசமான சுவாரசியமான இனிமையான கதாபாத்திரம். படப்பிடிப்பு அனுபவம் அனைத்தும் மறக்க இயலாது.‌


'கண்கள் இரண்டால்..' என்ற பாட்டில் சசிகுமாரின் தலையாட்டலுக்கு எங்கள் கேரளா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருத்தி. அப்போதிருந்தே சசிக்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு இதில் நிறைவேறி இருக்கிறது. இதற்காக அவருக்கும் நன்றி.  ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று இந்த வதந்தி சீசன் 2 வெளியாகிறது. முதல் சீசனை விட இந்த இரண்டாவது சீசனுக்கு நீங்கள் அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்'' என்றார். 


நடிகை அனகா மருதோரா பேசுகையில், '' 


இந்தத் தொடரில் லீலாவதி எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்த கதாபாத்திரத்தை பற்றி விவரித்து என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். அதன் பிறகு தான் இந்த தொடரில் என்னுடைய பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். தயாரிப்பாளர்கள் புஷ்கர் -காயத்ரி அவர்களுடன் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் அலுவலகம் எங்களுடைய இரண்டாவது குடும்பம் போல் இருக்கும். 


'கருடன்' படத்திற்குப் பிறகு நான் சசிகுமார் சார் உடன் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியை அளித்தது'' என்றார். 


இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் பேசுகையில், 


''  வதந்தி சீசன் 1 வதந்தி சீசன் 2 இதற்கு இசையமைக்கும் போது என்னுடைய பார்வையில் அதன் கீழே இருக்கும் ஒரு டேக்லைன் தான் கவனத்தில் இருந்தது. சீசன் 1ல் ஃபேபிள் ஆப் வெலோனி என இருக்கும். சீசன் 2வில் மிஸ்டரி ஆஃப் மணி என இருக்கும் இதைத்தான் நான் வதந்தியாக பார்த்தேன். 


சீசன் 1 வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதற்கான இசை வேறானதாக இருக்கும். சீசன் 2 வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதனால் இதற்கான இசையும் வேறானதாகவே இருக்கும். 


வதந்தி சீசன் 1-  சீசன் 2 என இரண்டிலும் மனிதர்களுக்கான எமோஷன் கூடுதலாக இருக்கும். அதற்கான இசையைத்தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். இது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். 


வதந்தி சீசன் 1ல் பாடல்கள் கிடையாது. ஆனால் வதந்தி சீசன் 2 வில் இரண்டு பாடல்கள் இருக்கிறது. இதுவே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் காரணமாக இருக்கும். இதன் மூலம் மணி ரோமியோ என்ற பாடலாசிரியரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்'' என்றார். 


இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 'வதந்தி சீசன் 2 : தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் தமிழில் வெளியாகிறது. அத்துடன் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் , ஆங்கிலம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்டைட்டிலுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னை மாநகரில் ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை நடத்தியது

 *முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னை மாநகரில் ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை நடத்தியது!*




*அகமது மாலிக் வடையார் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார்!*


*சென்னை, ஆகஸ்ட் 1:* 2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை மாநகரில் இன்று தனது ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வில் தேசிய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் தென்னிந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, அகமது மாலிக் வடையார் அவர்கள் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் புதிய கட்டம் தொடங்கியுள்ளது.


இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் மார்கதர்ஷக் டாக்டர் இந்திரேஷ் குமார் ஜி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 


சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசின் தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவன ஆணையத்தின் செயல் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஷாஹித் அக்தர், ஹிமாலயா பரிவார் தேசிய துணைத் தலைவர் விஜய் சங்கர் மிஸ்ரா, மாநிலங்களவை உறுப்பினர் மிதிலேஷ் குமார் கதேரியா, புகழ்பெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஜீத் தாலிகோட்டி, முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தென்னிந்திய பொறுப்பாளருமான எலியாஸ் அகமது மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அகமது மாலிக் வடையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதுடன், வட இந்தியாவின் பல பகுதிகளில் தனது வலுவான செயல்பாடுகளை நிறுவியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றியவர்கள குறிப்பிட்டனர். தற்போது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் அமைப்பின் பணிகளை மேலும் விரிவுபடுத்தி, அதன் நோக்கங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.


அமைப்பின் செயல்பாடுகள் தஅலீம் (கல்வி), தரக்கி (முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி), மற்றும் தஹ்ஸீப் (நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் நாகரிகம்) என்ற மூன்று அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன என்று அவர்கள் விளக்கினர். கல்வியே நல்ல மனிதநேயத்திற்கும் பொறுப்புணர்விற்கும் அடித்தளம் என்றும், முன்னேற்றமும் உயர்ந்த பண்பாடும் சமூக ஒற்றுமை மற்றும் வலிமையான சமுதாயத்தை உருவாக்கும் என்றும் வலியுறுத்தினர்.


சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதிகமான மக்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் பேசியவர்கள் வலியுறுத்தினர்.


மேலும், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாடல் மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான குடிமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.


புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட அகமது மாலிக் வடையார், தம்மை தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்த தேசிய தலைமையினருக்கு நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் அமைப்பின் அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்தி, அதன் செயல்பாடுகள் மற்றும் சமூக நல முயற்சிகளை முஸ்லிம் சமூகத்தினரிடம் கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபடுவதாக அவர் உறுதியளித்தார்.


மேலும், அமைப்பின் செயல்பாடுகள் மாநிலம், மாவட்டம் மற்றும் பிற நிர்வாக நிலைகளில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.


ஜன்சபை நிகழ்ச்சி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதிமொழியுடன் நிறைவடைந்தது. கல்வி, சமூக நலம், ஆக்கப்பூர்வ உரையாடல் மற்றும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் நிகழ்வில் உறுதி எடுக்கப்பட்டது.

Muslim Rashtriya Manch Holds Jan Sabha & South India Meet in Chennai; Ahmed Malik Wadayar Assumes Charge as Tamil Nadu Chief Convener

 *Muslim Rashtriya Manch Holds Jan Sabha & South India Meet in Chennai; Ahmed Malik Wadayar Assumes Charge as Tamil Nadu Chief Convener*




Muslim Rashtriya Manch (MRM), a national organisation working with the Muslim community since 2002, organised its Jan Sabha and South India Meet in Chennai on Saturday. The event brought together national office-bearers, distinguished guests, community representatives and members from across South India to discuss the organisation's activities, future roadmap and initiatives aimed at expanding its presence in the region.


The gathering also marked the installation of Mr. Ahmed Malik Wadayar as the Chief Convener and In-Charge of Tamil Nadu, signifying a new phase in the organisation's efforts to strengthen its outreach across the state.


The programme was attended by Dr. Indresh Kumar Ji, Margadarshak of Muslim Rashtriya Manch, as the Chief Guest. The Guests of Honour included Prof. Dr. Shahid Akhter, Officiating Chairman, NCMEI, Government of India; Shri Vijay Shankar Mishra, National Vice President, Himalaya Pariwar; Shri Mithilesh Kumar Katheriya, Member of Parliament (Rajya Sabha); Dr. Majid Talikoti, renowned oncology surgeon; Mr. Ilyas Ahmed, National Convener and South India In-Charge of Muslim Rashtriya Manch; and Mr. Ahmed Malik Wadayar, Programme Convener.


Addressing the gathering, the speakers highlighted that Muslim Rashtriya Manch has been functioning for over 24 years and has established its presence across several parts of North India. They said the organisation is now focused on strengthening its activities across Tamil Nadu and South India, with the objective of increasing awareness about its initiatives and encouraging wider community participation.


The speakers explained that the organisation's activities are guided by three fundamental principles—Ta'leem (Education), Taraqqi (Progress and Upliftment), and Tahzeeb (Good Conduct, Values and Civility). They emphasised that education forms the foundation for responsible behaviour, while progress and strong moral values contribute towards building an empowered and harmonious society.


The gathering also focused on creating awareness about various welfare initiatives available through the Minority Welfare Department and other government programmes. The speakers encouraged greater awareness of such schemes so that members of the community can benefit from the opportunities available to them.


During the discussions, the speakers stated that the organisation has consistently engaged with issues concerning the Muslim community through dialogue and public outreach. They reiterated their commitment to promoting social harmony, national integration and constructive engagement while encouraging citizens to strengthen their shared national identity.

Accepting his new responsibility, Ahmed Malik Wadayar expressed his gratitude to the national leadership for entrusting him with the role of Tamil Nadu Chief Convener. He said the organisation would work towards expanding its activities across the state by strengthening its grassroots network and promoting its initiatives among the Muslim community.


The speakers further noted that the organisation functions through a structured leadership framework comprising conveners and co-conveners at different levels to coordinate its activities across various regions.


The Jan Sabha concluded with a renewed commitment to expanding the organisation's presence across Tamil Nadu and South India while continuing its focus on education, community welfare, constructive dialogue and national unity.

திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா

 *திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா! 

பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை.* 



*ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலர் கலந்து கொள்ளும் 

ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்!*


மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்கிற நிகழ்ச்சியை வருகிற 16 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடத்த உள்ளனர். 


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்த உள்ளது. 


பிலிம்சேம்பர் வளாகத்தில் அமைந்துள்ள மீட்டிங் ஹாலில் மேற்கண்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த தகவலை தெரிவித்தனர். 


தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில்:-


தமிழ் திரைப்படத் துறையில் விடிவெள்ளியாக தோன்றி நூற்றுக்கணக்கான இயக்குநர்களையும், நடிகர், நடிகைகளையும், தயாரிப்பாளர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் உருவாக்கிய சாதனையாளர் இயக்குநர் பாரதிராஜா. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை உயர்த்திப் பிடித்த உன்னதமான படைப்பாளி பாரதிராஜா. திரைக்கதைக்கு இந்திய அளவில் புகழ் சேர்த்தவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்.  தமிழ் திரைப்பட துறையை இந்திய அளவில், உலக அளவில் உயர்த்திய உன்னதமான கலைஞர்கள். 


இந்த இரண்டு கலைஞர்களின் நினைவை போற்றும் விதமாக 'ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்' என்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்த உள்ளோம்.  


தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சி அடைவதற்கு அவர்கள் இருவரின் பங்கு என்னவாக இருந்தது என்கிற ஒரு அடையாளத்தை உணர்த்தும் நிகழ்வாக இந்த உற்சவவிழா இருக்கும். 


பாரதிராஜா அவர்கள் உயிரோடு இருந்த போது அவருக்கு ஒரு பிரம்மாண்ட விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, அவரிடம் தெரிவித்து இருந்தோம். அதற்கு  "ஆலமர வேருக்கு விழுதுகள் எடுக்கும் விழா" என்று பெயர் வைத்திருந்தோம்.   அவரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள், அவர் வழியில் உதவியாளராக இருந்து இயக்குநராக உயர்ந்தவர்கள் எல்லோரும் இணைந்து அந்த விழா நடத்த முடிவு செய்திருந்தோம். 


திடீர் என்று பாரதிராஜாவுக்குஉடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் ,  அது நடைபெறாமல் போனது. அவர் மறைவதற்கு முன்பு இயக்குநர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து வைத்தார். அப்போது, கொடைக்கானலுக்கு போகிற வழியில் நான் ஒரு இடம் வாங்கி இருக்கிறேன். அங்கு ஒரு மண்டபம் கட்டப் போகிறேன். அதில் என்னுடைய படங்கள், படப் பாடல்கள் எல்லாம் வைக்க வேண்டும்.  அங்கு தான் நான் இருப்பேன்.  நீங்க எல்லாம் அங்கு வந்து எனக்கு உதவி செய்யணும்.  அது ஐயப்பன் கோவிலுக்கு செல்கிற வழி என்று சொன்னார். மேலும் அந்த இடத்தில் தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தார்.  அதை அவரால் பண்ண முடியவில்லை. 


அந்த இடத்தில் ஒரு மணிமண்டபம் அவருக்கு கட்டலாம் என்று நான், சித்ரா லட்சுமணன், பாக்யராஜ் சார், ராதிகா மேடம் எல்லோரும் உட்கார்ந்து பேசினோம். அவருக்கான ஒரு விழாவை நடத்துவது முடிவு செய்தோம்.  ஒரு வாரத்திற்குள்ளேயே பாக்யராஜ் இறந்தது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதை எப்படி பண்றது பண்ண முடியாமல் போயிட்டு . பார்த்திபன் அவர்கள் வந்து பாக்கியராஜ் சார் பாரதிராஜா இரண்டு பேருக்குமே சேர்த்து விழா நடத்தலாம். இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக எல்லோரும் சேர்ந்து பண்ணலாம் என்று கூறினார்.


அதனால், தமிழ் திரைப்படத்துறை ஒன்றிணைக்கும் முயற்சி செய்தோம். இது மாதிரி செய்யலாமா என்று கலந்துரையாடினோம்.  அது இப்போது சரியான ஒரு திட்டமிடலுடன் ஒரு நல்ல நிகழ்ச்சியாக, நினைவஞ்சலி மாதிரி இல்லாமல் ஒரு அடையாளமாக, படைப்பாளிகளுக்கும் ஒரு அடையாளமாக நிகழ்ச்சியா இருக்கணும்னு முடிவு செய்தோம். 


இந்த நிகழ்ச்சியை ஆகஸ்ட் 16ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அந்த நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை செய்வதற்கு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதுபோல ராஜ்மோகன் அவர்களுக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம். ரஜினி சார், கமல் சார் கலந்து கொள்வதாக கூறியிருக்கிறார்கள். எல்லா நடிகர்களும் கலந்து கொள்வார்கள். அதுபோல் இயக்குனர் சங்கத்திலிருந்து எல்லா இயக்குனர்களும் கலந்து கொள்வார்கள். 


மற்ற மாநிலங்களில் இருந்து நடிகர் வெங்கடேஷ், கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா அழைப்பு விடுத்திருக்கிறோம். மத்திய மந்திரி அழைப்பு விடுத்திருக்கிறோம். கேரளாவில் இருந்து சுரேஷ்கோபி வருவதாக கூறியிருக்கிறார். மம்முட்டி, மோகன்லால் அழைப்பு விடுத்திருக்கிறோம். கர்நாடகத்திலிருந்தும் கேட்டு இருக்கிறோம். எல்லாருமே ஒரு பாசிட்டிவ் வருவதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மிக சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கும்.  


இந்த நிகழ்ச்சி எப்படி வடிவமைப்பது என்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல், இந்த இரண்டு பேருடைய வாழ்க்கையை பத்து நிமிடத்தில் ஒரு குறும்படமாக சிறப்பான ஒரு ஆவண படமாக ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். அதுபோல் அந்த மணிமண்டபத்தில் இரண்டு பேருக்குமான சிலை வைக்க இருக்கிறோம். அது மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு வேலைகள் நடந்து வருகிறது.  இந்த நிகழ்ச்சி ஒரு வியாபாரமாக மாறும்போது அதில் வருகின்ற தொகையை பாக்யராஜ் சார், பாரதிராஜா சார் மணிமண்டப முன்வைப்புத் தொகையாக, அவர்கள் குடும்பத்தார்கள் பேசியிருக்கிறோம் 


பாக்யராஜுக்கு கோபிசெட்டிபாளையம் பகுதியிலும், பாரதிராஜாவுக்கு அவருடைய சொந்த இடத்திலும் மணிமண்டபம் கட்டுகிறோம். நிகழ்ச்சி மட்டும் ஓரிடத்தில் மட்டுமே நடக்கும். இதில் வருகின்ற வருவாயை அறக்கட்டளையாக இரண்டு நிகழ்வுக்கும் பயன்படுத்துவோம். அவர்கள் மணிபண்டமும் கட்டுவதற்கான ஆரம்ப செலவாக வைத்துக் கொள்ள சொல்வோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கட்டணம் இல்லை. சினிமாவில் ராஜா மாதிரி இருந்தார்கள். கோபுரமாக உயர்ந்து நின்றார்கள். அதனால், இந்த விழாவுக்கு பெயர் ராஜா கோபுரங்களுடன் நினைவு உற்சவம். இரங்கல் கூட்டம் கிடையாது. நினைவு உற்சவம்.  இரண்டு பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நினைவாக உற்சாகமாக தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக அதை செய்ய இருக்கிறோம். 


அவர்களுக்கு கொடுக்கின்ற அடையாளம் அடுத்த நூற்றாண்டை தாண்டியும் இருக்க வேண்டும். அது போல் செய்ய முடிவு செய்து இருக்கிறோம். 


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி.கே.தமிழ்குமரன், செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கமலக்கண்ணன்,   இணைச்செயலாளர் சுஜாதா விஜயகுமார், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர் ரவிமரியா, இசையமைப்பாளர் தினா, இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார்,  ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர்கள் எம்.கபார், ஹரி முரளி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.