Featured post

A LEGEND RETURNS TO THE SILVER SCREEN

 *A LEGEND RETURNS TO THE SILVER SCREEN* *M.S. Subbulakshmi Amma’s Extraordinary Life to be Immortalised in Cinema* Some voices are heard. S...

Tuesday, 15 September 2026

ஒரு சகாப்தம் மீண்டும் திரைக்கு வருகிறது

 *ஒரு சகாப்தம் மீண்டும் திரைக்கு வருகிறது 





*எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் சாதனை வாழ்க்கை திரைப்படமாகிறது !*


சில குரல்கள் அவ்வப்போது கேட்கப்படும். சில குரல்கள் நினைவில் நிலைத்திருக்கும். ஆனால், ஒரு நாட்டின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வெகு சிலவே. அத்தகைய மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா.


மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து அவரது இசை பயணித்தது. கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் உணர்வையும் விதைத்த அவரது குரல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் அழியாத அங்கமாக மாறியது. அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது இசை, வீடுகள், கோயில்கள், இசை அரங்குகள் என தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில், அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடைபெறும் இந்த அறிவிப்பு, இந்திய பாரம்பரிய இசை வரலாற்றுடன் ஆழமாக தொடர்புடைய இந்த இடத்தை மேலும் சிறப்பிக்கிறது.


பல ஆண்டுகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி


இத்தகைய மிகப்பெரிய ஆளுமையின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்வது சாதாரணமான முயற்சி அல்ல. அவரது வாழ்க்கையை உண்மைத் தன்மையுடனும் உரிய மரியாதையுடனும் சொல்ல, தேவையான உரிமைகள், அனுமதிகள், இலக்கிய ஆதாரங்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்புகள் என பல்வேறு பணிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அந்த நீண்ட பயணம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கை இனி சினிமா எனும் மொழியின் வழியாக உலகம் முழுவதும் சென்றடைய இருக்கிறது.


இரு தலைமுறைகளை இணைக்கும் இசைப் பாலம்


இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் காலத்தால் அழியாத இசை மரபை இன்றைய தலைமுறையுடன் இணைக்கும் முயற்சி அமைந்துள்ளது.


இன்றைய தலைமுறையின் முன்னணி இசை ஆளுமைகளில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இளைஞர்களை உடனடியாக ஈர்க்கும் வகையிலும், அதே நேரத்தில் உணர்வுபூர்வமான மற்றும் கலாச்சாரத் தொடர்பை தக்கவைக்கும் வகையிலும் இசையை உருவாக்கும் அனிருத்தின் பங்களிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை உலகத்தையும் புதிய தலைமுறையையும் இணைக்கும் முக்கிய பாலமாக அமையும்.


எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா


இந்த பிரம்மாண்டமான பயணத்தின் மையக் கதாபாத்திரமாக ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


புதிய தலைமுறையின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவுக்கு, இசையையும் சினிமாவையும் தாண்டி இந்திய மக்களின் மனங்களில் இடம்பெற்ற ஒரு மாபெரும் ஆளுமையை திரையில் பிரதிபலிக்கும் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


அவரது நடிப்பின் மூலம், உலகம் அறிந்த அந்த புகழ்பெற்ற குரலுக்குப் பின்னால் இருந்த பெண்ணை — அவரது உணர்வுகள், ஆசைகள், போராட்டங்கள், மனவலிமை மற்றும் ஆன்மிகப் பயணம் ஆகியவற்றை புதிய தலைமுறைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


மகத்தான வாழ்க்கையை சொல்லும் நட்சத்திரக் கூட்டணி


எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் சாதனை வாழ்க்கையையும் மரபையும் அனைத்து தலைமுறை ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக அறியப்படும் கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார்.


இது வெறுமனே ஒரு பாடகியின் வாழ்க்கைக் கதை அல்ல.


இசையை பக்தியாகவும், பக்தியை உணர்வாகவும், அந்த உணர்வை தலைமுறைகளை கடந்து வாழும் மரபாகவும் மாற்றிய ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை.


எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளில் தொடங்கும் புதிய அத்தியாயம்


அவரது 110-வது பிறந்தநாளில் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்படுவது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.


இன்றும் உலகம் முழுவதும் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் இசை மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அவரது அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை வருங்கால தலைமுறைகளுக்காகப் பதிவு செய்து வழங்கும் பொறுப்பை சினிமா ஏற்றுக்கொள்கிறது.


ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய இசை அரங்குகளை நிரப்பிய அந்தக் குரல், இப்போது வெள்ளித்திரையிலும் புதிய தலைமுறையினரை சென்றடைய இருக்கிறது.


எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதை இனி ஒரு நினைவாக மட்டும் இருக்காது. அது ஒரு திரைப்பட மரபாக மாறுகிறது.


எம்.எஸ். –  அழிக்க முடியாத வரலாறு திரையில் வருகிறது

No comments:

Post a Comment