Featured post

Rajkumar Theatres Pvt. Ltd. secures interim injunction from Madras High Court in 'Drishyam 3' Telugu rights Dispute

 *Rajkumar Theatres Pvt. Ltd. secures interim injunction from Madras High Court in 'Drishyam 3' Telugu rights Dispute* *Madras High ...

Tuesday, 15 March 2022

30 ஆண்டுகளுக்கு மேலாக கலை மற்றும் இசை துறையில் சாதனைகள்

 30 ஆண்டுகளுக்கு மேலாக கலை மற்றும் இசை துறையில் சாதனைகள் பல புரிந்துள்ள  திருமதி சவி கால்ராவிற்கு  இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத் தலைவர் ஜான் அமலன் பரிந்துரையில்  ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


 சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கலை மற்றும் இசை துறையில் சாதனை புரிந்த சவி கால்ராவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பல்கலைக் கழகம், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் தொலைதூர பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்விச் சேவையில் பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம், தற்போது உலகளவில் வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் தத்தம் துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளவர்களுக்கு, புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக  கலை மற்றும் இசை துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ள திருமதி சவி கால்ராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்திய மீடியா ஒர்க்ஸ்(IMW) நிறுவனத்தின் தலைவர் ஜான் அமலனின் பரிந்துரையின் பேரில், திருமதி சவி கால்ராவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 கலை மற்றும் இசை துறைக்கான டாக்டர் பட்டம் பெற்ற சவி கால்ரா கடந்த 30 ஆண்டுகளாக செய்த சாதனைகள்:

 •ஆண்டு 1989 ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட சிறந்த கலைஞராக விருது பெற்றார்

 • ஆண்டு 1988 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றது.

  •ஆண்டு 1998 ஒரு குறைபாடற்ற அழகியாக வழங்கப்பட்டது.

 மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வைக் கொண்டுவரும் ஒரு நல்ல நோக்கத்திற்காக 2015 ஆம் ஆண்டு மாரத்தானில் பங்கேற்றது.  மேலும் "இந்தியா டர்ன்ஸ் பிங்க் அமைப்பின்" தூதராக கௌரவிக்கப்பட்டார்.

 •ஆண்டு 2016 மார்ச் நான் ஆண்டின் சிறந்த கலைஞராக கௌரவிக்கப்பட்டார்

 ஆண்டு 2017 - நவம்பர் 18 வரை நான் ஒரு ஓவியப் போட்டிக்கு (குழந்தைகளுக்கான கலாட்டா) நீதிபதியாக அழைக்கப்பட்டார்

 •ஆண்டு 2018 - பிப்ரவரி 3 ஆம் தேதி நான் "மெட்ராஸ் ராணி" ஜூரியாக அழைக்கப்பட்டார்

 •ஆண்டு 2018 - மார்ச் 8 ஆம் தேதி ஜேசிஎஸ் & ஸ்கைலைன் மூலம் "படைப்புப் பன்முக ஆளுமை" என்ற பொருளின் பெண்ணாக எனக்கு விருது வழங்கப்பட்டது.























No comments:

Post a Comment