Featured post

When love travelled through letters and lived on cassettes

 *When love travelled through letters and lived on cassettes* _Habeebi to Premiere on 25th September on Sony LIV_ Before messages to loved o...

Friday, 22 May 2026

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின்

 *சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவப்படுத்தும் பிரமாண்ட நிகழ்ச்சி நடிகர் சஞ்சீவ் மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.*














சென்னை ராயப்பேட்டையில் உள்ள,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில்,  சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட்  மாணவர்கள் காய்கறி மற்றும் பழங்களில் திரு. ச. ஜோசப் விஜய்யின் உருவங்களை சிற்பமாக செதுக்கி அசத்தியுள்ளனர்.


 இந்நிகழ்ச்சி சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவன தலைவர் திரு. பூமிநாதன் மற்றும் முதலமைச்சரின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை கெளரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  அவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைப்படம் முதல் ஜனநாயகன் திரைப்படம் வரையிலான 69 சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.


 இந்த சிற்பங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 10 நாட்களாக கடின உழைப்பில் உருவாக்கி உள்ளனர். இந்த சிற்பங்களைப் பார்வையிட்டு ரசித்த, நடிகர் சஞ்சீவ் இவற்றை உருவாக்கிய மாணவர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் பல்வேறு முயற்சிகள் மூலம்  மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்து கல்விச்சேவை வழங்கிவரும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு. பூமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார். 


 சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் திரு. பூமிநாதன் உரையாற்றுகையில்,  ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஏவியேஷன் துறையில் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி, சர்வதேச அளவில் பெருநிறுவனங்களில் மாணவர்களை கொண்டு சேர்ப்பதில் தங்கள் நிறுவனம் சமரசம் இன்றி செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இது போன்று மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி கவனம் பெறச் செய்யும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார். 


இந்த நிகழ்ச்சி முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை பெருமைப் படுத்தியதோடு, சென்னைஸ் அமிர்தா மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தியது.

No comments:

Post a Comment