Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Thursday, 24 October 2019

ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம்



ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக  சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்‌ஷன்” படத்திற்காக பாடினார்!

டிரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்தரன் மிகப்பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தின் ஒரு பாடல் சிங்கிள் டிராக்காக வெளியானது. ஹிப் ஹாப் இசையில் சாதனா சர்கம் முதல்முறையாக பாடியுள்ள இப்பாடலை வெளியான சிலமணி நேரங்களிலேயே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.


விஷால், தமன்னா நடிப்பில் இப்பாடலின் காதல் காட்சிகள் முழுவதும் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

“இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன..
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன..

எனும் பா .விஜய்-யின்  வரிகள் இளைஞர்ளை கவர்ந்து you tube ஹிட்டாகி வருகிறது. இளைஞர்கள் பிரத்யேகமாக நடனம் அமைத்து இணையதள யூடியூப்பில் வெளியிட்டுவருகிறார்கள்.


நவம்பர் 15ல் இப்படத்தின் இசையை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீஸர் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

முதல் முறையாக  முழு ஆக்‌ஷன் பாணியில் சுந்தர் சி இப்படத்தை இயக்கியுள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் R.ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
விஷால், தமன்னா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கபீர் துன்சிங், யோகிபாபு, சாரா, ஆகான்ஷா பூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை - ஹிப் ஹாப் தமிழா

ஒளிப்பதிவு - டட்லீ

எடிட்டிங் -  N B ஶ்ரீகாந்த்

ஸ்டண்ட் - அன்பறிவ்.
Song lyric:

நீ சிரிச்சாலும் பாடல் வரிகள்

நீ சிரிச்சாலும்...
என்ன மொறச்சாலும்...
தினம் நெனச்சாலும்...
சுட்டு எரிச்சாலும்...
நெஞ்சில் இனிச்சாலும்...
இல்ல வலிச்சாலும்...
கையில் அணைச்சாலும்...
மண்ணில் பொதச்சாலும்...

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

நீ சிரிச்சாலும்...
என்ன மொறச்சாலும்...
தினம் நெனச்சாலும்...
சுட்டு எரிச்சாலும்...

புதைத்து வைத்த காதலை
பூக்களுக்குள் தேடவா...
கூட வந்த ஆசையை...
கூந்தலுக்குள் சூடவா...

நெஞ்சிருக்கும் வரைக்குமே
உன் நினைவு இருக்குமே
காற்றிலா வெளியிலே காத்து கிடக்கிறேன் நான்
நீ மௌனமாகவே நடந்து போகிறாய்
காயம் செய்து கொண்டே...
உன்னில் காதல் இல்லை தோழி போலவே
என்னை மாற்றி கொண்டேன்...

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன
இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

தினம் உன்னை நினச்சே...
இரு கண்ண முழிச்சேன்
உன்ன ஒட்டி அணைச்சே...
கனவுல கட்டி புடிச்சேன்

உன் கண்ணு முழியில் என்ன கண்டு புடிச்சேன்
உன்ன மட்டும் நெனச்சே தெனம் செத்து பொழச்சேன்

கை வீசும் காதலே
என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ
இங்கு பாலை வெளியில் கொல்கிறாயோ

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

நீ சிரிச்சாலும்...
என்ன மொறச்சாலும்...
தினம் நெனச்சாலும்...
சுட்டு எரிச்சாலும்...
நெஞ்சில் இனிச்சாலும்...
இல்ல வலிச்சாலும்...
கையில் அணைச்சாலும்...
மண்ணில் பொதச்சாலும்...

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி    

No comments:

Post a Comment