Featured post

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர்! 'மெட்ரோ' சத்யா நாயகனாக நடிக்கும் 'ராபர...

Saturday 27 April 2024

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர்!

'மெட்ரோ' சத்யா நாயகனாக நடிக்கும் 'ராபர்'





சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.


இப்படத்தின் கதை என்ன?


பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று  ஆசைப்படுகிறான்.


ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது .நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.'உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே' என்றார் புத்தர்.'நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களைப் பாதிக்கின்றன' என்கிறது தம்மபதம்.


நாயகனின்  ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம்.அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான்.


நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே  'ராபர்'படத்தின் கதை.


இப்படத்தின் கதை, திரைக்கதையை 'மெட்ரோ' , 'கோடியில் ஒருவன்' படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

 'ராபர்' படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இவர் ஊடகத்துறையில் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறவர்.இவர் ஏற்கெனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.

'எண்ணம் போல் வாழ்க்கை' என்ற ஆல்பத்தையும் உருவாக்கி உள்ளார். அதை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது வலை தளத்தில்  வெளியிட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் ஜனகராஜை பிரதான பாத்திரம் ஏற்க வைத்து 'தாத்தா' என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார் .அந்தப் படம் ஷார்ட் ப்ளிக்ஸ் சேனலில் விரைவில் வெளியாக உள்ளது.


தயாரிப்பாளர் கவிதா 'ராபர்' படம் பற்றிப் பேசும்போது,


"உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும்.


'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.

இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன்.

நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் ,சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.


இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

மே மாதத்தின் இறுதியில்  ராபரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம்.அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிறார்.


இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.

 இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு  என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.


படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.


அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ் ,மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல் வரிகளை

அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.


இவ்வாறு ஆர்வமுள்ள திறமைக் கரங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு எஸ். எம். பாண்டி இயக்கி உள்ளார்.


கோடை விருந்தாக இப்படம் மே மாதம் இறுதியில் வெளியாகும் வகையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


ROBBER - CAST AND CREW DETAILS :-

STARRING - SATHYA | DANI POPE | DEEPA SHANKAR | JAYAPRAKASH | 

SENDRAYAN | NISHANTH | RAJA RANI PANDIYAN

DIRECTOR - SM PANDI

STORY - ANANDA KRISHNAN

SCREENPLAY & DIALOGUE - ANANDA KRISHNAN | SM PANDI

MUSIC - JOHAN SHEVANESH

CINEMATOGRAPHER - NS UTHAYA KUMAR

EDITOR - SRIKANTH NB

ART - PPS VIJAY SARAVANAN MFA

STUNT - C MAHESH

Pro..Thirai nidhi selvam

PRODUCER - 

KAVITHA S (IMPRESS FILMS) 

ANANDA KRISHNAN (METRO PRODUCTIONS)

Friday 26 April 2024

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!*



ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான 'பில்லா' படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம்  செய்திருந்தார். 'பில்லா' படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக இது உள்ளது. இப்போது, 'பில்லா' ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ​​​​


ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.


ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி 'பில்லா' படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். "இந்தத் திரைப்படம் வெற்றிகரமான ரீமேக்குகளில் ஒன்றாக சினிமாத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. 'பில்லா' திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு அஜித் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்த ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைந்தது. மே 1, 2024 அஜித்குமார் சாரின் பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படத்தை மீண்டும் வெளியிட ஏடிஎம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றனர். 


விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'பில்லா' பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது. அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். நீரவ் ஷாவின் கண்கவர் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பவர் பேக் இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கின.

Actor Ajith Kumar’s Blockbuster Hit ‘Billa’ to Re-Release on

 *Actor Ajith Kumar’s Blockbuster Hit ‘Billa’ to Re-Release on May 1st, 2024* 



‘Sleek and Stylish’, ‘Thundering Screen presence of AK’, ‘Vishnuvardhan’s proficient style in recreating a masterpiece is remarkable’, and many more acclaims to the crown. Ajith Kumar’s Billa had experienced such  extolments by fans and critics during its time of release, and it still remains as the favourite of film enthusiasts beyond the years. And now, the fans have the occasion to recreate the festive celebrations as Billa is all set to revisit them again. 


Mr. Aravind Suresh Kumar & Dr. Gnana Barathi of GB Entertainment are releasing this movie across 150+ Screens through ATM Productions across Tamil Nadu on May 1st, 2024. 


Mr. Aravind Suresh Kumar & Dr. Gnana Barathi, GB Entertainment express their joy in re-launching the highly successful Tamil film 'Billa'. This movie holds a significant place in the industry as one of the earliest successful remakes. The theatrical release of 'Billa' was a grand celebration, appealing to a wide audience beyond just fans. We are thrilled to collaborate with ATM Productions to re-release this film across over 150 screens in Tamil Nadu on May 1st, 2024, coinciding with Ajith Kumar sir's birthday.


Ajith Kumar’s Billa holds a stupendous record at the box office for its stylish presentation by Vishnuvardhan. Ajith Kumar’s dual role along with the ravishing screen presence of Nayanthara, and other artistes, embellished with the spectacular visuals of Nirav Shah and a power-packed musical score by Yuvan Shankar Raja endowed an unforgettable cinematic treat for the audiences.

பின்னணி இசையே இல்லாத தமிழ் திரைப்படமான டிராக்டர் 14வது தாதா

பின்னணி இசையே இல்லாத தமிழ் திரைப்படமான டிராக்டர் 14வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.






"டிராக்டர்" திரைப்படத்தில் வழக்கமான பின்னணி இசை சேர்ப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக நடிகர்களின் வசனத்தை தளத்திலே பதிவு செய்தும் மற்றும் இயற்கையான சுற்றுப்புற ஒலியை பதிவு செய்து (Sync Sound) பயன்படுத்தி இருப்பது, வாழ்வியலின் நம்பகத்தன்மையை ஏற்படுத்த உதவியுள்ளது.


"டிராக்டர்" என்ற திரைப்படம்  வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் அர்த்தமுள்ள விவாதங்களை எழுப்பவும் மற்றும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது.


தயாரிப்பாளர் ஜெயந்தன் தனது ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) மூலமாக திரைப்படத் தயாரிப்பில் முதல் முயற்சியாக தயாரித்த படம் டிராக்டர்.

ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் இந்தியாவில் உருவாகும் அனைத்து மொழி திரைப்படங்களையும்  பிரான்சில் உள்ள திரையரங்கு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெயிலர் ஜவான் முதல் லியோ வரை அனைத்து மொழி திரைப்படங்களையும் பிரான்சில் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.


இந்த திரைப்பட குழுவினர் பெரும்பாலும் அறிமுக கலைஞர்கள்.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால்  அறியப்பெற்றவர் மற்றும் அவர் சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதுகலை மாணவர் ஆவார். இது அவரது முதல் திரைப்படம் மற்றும் அவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து வந்தவர்.


இயக்குனரைப்போலவே இந்தப் படத்தின் நாயகன் பிரபாகரன் ஜெயராமன்

 மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப் இருவரும் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் இருவரும் திரைப்படத்திற்கு புது முகங்கள். துணை கதாபாத்திரத்தில் பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி மற்றும் இயக்குனர் ராம்சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.


இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் முத்துசாமி, பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் உதவியாளர், சுதர்சன் படத்தொகுப்பாளராகவும், ஒலி வடிவமைப்பை ராஜேஷ் சசீந்திரன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை பிரபல கலை இயக்குனர் டி.முத்துராஜ் செய்துள்ளார்கள்.


இந்த டிராக்டர் திரைப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

டிராக்டர்  படத்தின் உருவாக்கத்திற்கு  பின்னால் இருக்கும் திரைப்பட குழுவின்  திறமை மற்றும் உழைப்புக்கு இது ஒரு சான்று.


இந்த அங்கீகாரம் டிராக்டர் திரைப்படத்தை   பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் மேலும் சில வெற்றிகளை தொடவும் நிச்சயமாக அதிக வாய்ப்புகளைத் ஏற்படுத்தும்.


இந்த திரைப்பட குழுவினர் சர்வதேச பிரீமியர் அந்தஸ்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவின் சந்தைப் பிரிவுக்குச் செல்லவும், மேலும்  பாரிஸில்  வாழும் தமிழர்களுக்காக  ஒரு சிறப்பு திரையிடல் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

Tractor, a Tamil movie without a background

Tractor, a Tamil movie without a background score, has been selected for the 14th Dada Saheb Phalke Film Festival. 






The decision to forgo a traditional background score in "Tractor" and instead rely on sync sound and real ambience sound adds another layer of authenticity to the film. By capturing the artist's dialogues on-site and incorporating natural ambient sounds, the filmmakers create a more immersive experience for the audience, allowing them to feel fully immersed in the world of the film.


The movie "Tractor" is more than mere cinematic entertainment to raise meaningful debates and naturally showcase the atrocities that corporate culture is doing in the lives of our farmers.


The film Tractor is produced by Jayanthan, his first venture in film production under the banner Friday Entertainment (France) 

Friday Entertainment is involved in the theatrical distribution of Indian movies. The company has released most of the films from India including Jawan, Jailer, Leo in theatres in France.


This crew mostly debuts, The Director of this movie Ramesh Yanthra is already known for his Documentary films Gudiyam Caves, and The Father of Indian Prehistory and he was a former student of the College of Fine Arts, Chennai. This is his first Feature film and he came from the Information technology Industry.



Co-Incidently this film's male lead Prabakaran Jayaraman 

 and female lead Sweetha Pradhap also from the IT Industry and both are new faces on the screen. Another two-character role was done by Pillaiyarpatti Jayalakhsmi & Director Ramshiva.


This film cinematographer Gowtham Muthusami was the assistant of well-known Cinematographer Rajesh Yadav and Edited by Sudharson, the Sound Design was composed by Rajesh Saseendran and Production design was done by eminent Art Director T.Muthuraj.


Being listed in the official selection of the Dada Saheb Phalke Film Festival is a remarkable accomplishment. It speaks volumes about the quality and creativity of the film, especially considering the rigorous selection process and the high standards set by the festival. It's a testament to the talent and hard work of the filmmakers behind Tractor. This recognition will surely open up more opportunities for the film to reach a wider audience and gain further acclaim. 


The film crew is planning to go to the market segment of the Cannes Film Festival with an international premiere status and plans to have a special screening for Tamils ​​living in Paris.

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் ரத்னம்.. விஷாலின்

 வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் ரத்னம்.. விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.!!



வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளம்பி வருகிறது ரத்னம் திரைப்படம். 


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியாகி உள்ள திரைப்படம் ரத்னம். உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. 


6 முதல் 60 வயது வரை என அனைவரும் கொண்டாடும் வகையில் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து இடங்களிலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 


மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல்  சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது. 

அந்த வரிசையில் ரத்னம் திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைக்கும் என கூறப்படுகிறது. விஷாலின் திரைப்பயணத்தை ரத்னம் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்லும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு

 *”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!*





ES Production & Macha Swag Dance  தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ்  இசையில், எழில்வாணன் வடிவமைத்து   உருவாக்கியிருக்கும்  ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”. இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா &  ரேணுகா(சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி  & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர். 

இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர் 

*இயக்குநர், நடிகர், எழில்வாணன் EV பேசியதாவது....*

 இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு  பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம். இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்.  நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன். என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள்.எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம்... அவர் எனக்கு ஒரு மேஜிக் (Work) எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி...

இரண்டு வருடங்கள் முன்பே இதற்கான நடன அமைப்பை உருவாக்கி விட்டேன், இந்த பாடலுக்கு ரவீனா சரியாக இருப்பார் என்று அவரை அணுகினேன் அவர்  உடனடியாக பண்ணலாம் என ஒத்துக் கொண்டு செய்தார். இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது  மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

*நடிகை ரவீனா பேசியதாவது*

 எங்களை ஆதரிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஆல்பம் பாடலின் ஷூட்டிங் வெறும் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. அத்தனை திட்டமிடலுடன் நடந்து முடிந்தது. ஷூட் ரொம்ப ஜாலியாக நடந்தது. எப்போதும் உடன் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள்  நம்மை காம்போர்ட்டபிளாக வைத்துக் கொண்டால் நாம் சிறப்பாக வேலை செய்வோம், அந்த வகையில் இந்த படக்குழுவினர் என்னை மிகச்சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர்.  எழில்வாணன் மிகத் திறமைசாலி இந்த பாடலின் முழு வேலைகளையும் அவரே செய்துவிட்டார் இந்த துறையின் மீதான காதலில் அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து, இதைச் செய்து வருகிறார். சினிமாத்துறை மீது காதலுடன் இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் படைப்பில்  நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி.  இந்த டீமில் வேலை என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விரைவில் இணையத்தில் வெளியாகும்..உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  

நடிப்பு : எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா

கருத்து, பாடல் மற்றும் இயக்கம் - எழில்வாணன் EV


இசை: தீபன் மற்றும் வைபவ்


நடன அமைப்பு: மான்சி  & எழில்வாணன் EV


எடிட்டர்: கலைவாணன் (SK21 எடிட்டர்)


தயாரிப்பு - ES Production & Macha Swag Dance

Rathnam Movie Review

Rathnam Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம tamil படமான rathinam தான் பாக்க போறோம். இந்த படம் ஏப்ரல் 26 அன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கு, இந்த படத்தை டைரக்ட் பண்ணிக்கறது hari  . இந்த படத்துல Vishal as Rathnam











Priya Bhavani Shankar as Janani

Samuthirakani

Ramachandra Raju

Gautham Vasudev Menon

Yogi Babu

Murali Sharma னு எல்லாருமே முக்கியமான கதாபாத்திருத்துல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க படம் எப்படி இருக்குனு பாப்போம். 


இந்த கதை ஓட ஸ்டோரி என்னனு பாப்போம்.   சமுத்திரகனி ஒரு எம்எல்ஏ இவருக்கு கீழ ரத்தினம் ஒரு அடியால  இருக்காரு. இவரு மல்லிகா என்ற ஒரு பொண்ண பாக்குறாரு இவங்க நீட் எக்ஸாம் காக படிச்சிட்டு இருக்காங்க.  ஒரு நாள் mallika வ  கொலை பண்றதுக்காக கொலைகாரனுக டார்கெட் பண்ணும்போது அவங்க கிட்ட இருந்து இவங்கள காப்பாத்திடுறாரு ரத்தினம்.  சோ மல்லிகாவ காப்பாற்றுவதற்கு rathinam முன்னாடி வர்றாரு. ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா மல்லிகை ரத்னத்தோட  அம்மா மாதிரியே இந்த புள்ள இருக்கிற மாதிரி ன்ற ஒரே காரணம் தான்.  சோ மல்லிகாவும் அவங்களோட ஃபேமிலியும் லிங்கம் என்ற ஒரு ஆளு னால  நிறைய problem face  பண்றாங்க. இந்த லிங்கம் யாருன்னு பாத்தீங்கன்னா, தமிழ்நாட்டுல நெறய காலேஜ் அ கன்ஸ்ட்ரக்ட் பண்ணிட்டு இருக்குற ஒரு பெரிய பவர்ஃபுல்லான லீடர் சோ இந்த படத்தோட முழு கதையுமே வந்துட்டு ரத்னம் எப்படி அந்த பொண்ண SAFE பண்றாரு, அவங்க அம்மா வோட மறைஞ்சு போன உண்மை,  லிங்கம் ஓட ஹிஸ்டரி என்ன, அவரோட  ரியால் ஐடென்டிட்டி னு  எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சத்துக்கு  வருது.  


சிங்கம் series அ தவிர ஹரியோட நிறைய படங்களை ஆடியன்ஸ் பாத்திருப்போம்.  அவரோட படங்கள்ல ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணுவாங்க பட் ஏதோ ஒரு சில காரணத்துனால ஹீரோ வந்து அந்த லவ்வர் அ அக்சப்ட் பண்றதுக்கு ரொம்ப hesitate பண்ணுவாரு அப்புறம் கடைசில வந்து ஒன்னு சேர்ந்துருவாங்க சோ ரத்தினமும் இதே மாதிரி தான் இருக்காரு.  இந்த படத்தோட பெரிய டிஃபரென்ஸ் என்னன்னா ஹீரோ வந்து ஹீரோயின் ஓட proposal அ எல்லாம் உடனே அக்செப்ட் பண்ணி இருக்காரு ஏன் பார்த்தீங்கன்னா ஹீரோயின் வந்து விஷால் ஓட அம்மா மாதிரியே இருப்பாங்க. சோ  ஒரு பையன ஒரு பொண்ணு லவ் பண்ணும் போது என்ன எல்லாம் பண்ணுவாங்களோ அதெல்லாம் இவரும் பண்றாரு.  விஷால் அ  ஒரு ரவுடி மாதிரி காமிக்கிறாங்க சோ சொசைட்டியோட நல்லதுக்காக அவரூ  கொலை பண்றாரு அதுக்கு அப்புறம் standard ஆனா காமெடி டிராக்ஸ் வருது அண்ட் இதுல யோகி பாபு நடிச்சிருக்காரு.  இந்த story plot  வந்து பாத்தீங்கன்னா ஹீரோயினோட இன்ட்ரோடக்ஷன் அதுக்கப்புறம் ஃபைட் அதுக்கப்புறம் அந்த பொண்ண gangster கிட்ட இருந்து காப்பாத்தறது இந்த மாதிரி தான் இந்த படம் போகுது.  second half  ல  பாத்தீங்கன்னா  முரளி ஷர்மாவுக்கும் விஷாலோட அம்மாவுக்கும் ஆனா லிங்க் அ  ரிவில் பண்றாங்க சோ இப்ப என்ன ஆயிடுச்சுன்னா இந்த மொத்த game  மே  ஹீரோயினோட பிராப்ளம்ம தவிர ஹீரோ ஓட personal problem அ ஆயிடுது. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுன்னு தான் கதையே 



சோ விஷால் ஒரு நல்ல ரவுடி அ இந்த படத்துல நடிச்சிருக்காரு. அவரோட பெர்ஃபார்மன்ஸ் நல்லா suitable அ இருக்கு. ப்ரியா பவானி சங்கர் தான்  மல்லிகாவா நடிச்சிருக்காங்க அண்ட்  அவங்க தான்  விஷாலோட அம்மாவாவும் பண்ணிருக்காங்க. இந்த ரெண்டு role யுமே செமயா பண்ணி இருக்காங்கன்னு தான் சொல்லணும்.  முரளி sharma ஓட ஆக்டிங் வந்து செமையா இருக்கு அவர்கிட்ட நம்மளால எந்த ஒரு flaw 

 வும் கண்டுபிடிக்க முடியாது.   சமுத்திரகனி அ பத்தி சொல்லவே வேண்டாம் சொல்லவே வேண்டாம் அட்டகாசமா பண்ணிருக்காரு. யோகி பாபுவோட காமெடி டிராக்ஸ் எல்லாமே வந்து செமையா இருக்கு.  ஹரியோட ஃபிலிம்ல இருந்து ஆக்சன் சீன பத்தி நம்ம சொல்லவே தேவையில்லை. ஆக்ஷன் stunts எல்லாமே வந்து நல்லா பண்ணி இருக்காங்க  இந்த படத்தோட மியூசிக் அண்ட் BGM  ஓரளவு  ஓகேவா இருக்கு பட் இன்னும் நல்லா பண்ணியிருந்தால் செமையா இருக்கும் சுகமாரோட கேமரா ஒர்க் வந்து ஆக்ஷன் சீன்ஸ் அ PERFECT அ  எடுத்துருக்காரு பட் மத்ததெல்லாம் இன்னும் கூட கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும்.

Thursday 25 April 2024

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்

 இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்,  பேபி & பேபி !!




விரைவில் திரையில் அழகான ஃபேமிலி எண்டர்டெயினர் பேபி & பேபி !!



GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட,  நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. 


தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரதாப். 


இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாளை தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா செல்வகுமார் இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் திரையில் களமிறங்கியுள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார். 


இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. 


GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். T.P. சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், தயாரிப்பாளர் G.P. செல்வகுமார் இணைந்து  இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.



தொழில் நுட்ப குழு 

இயக்கம் - பிரதாப் 

இசை - D. இமான்

ஒளிப்பதிவு - T.P. சாரதி 

எடிட்டர் - K ஆனந்தலிங்ககுமார்

Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow.

 Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow










Kollywood masala entertainer Hari has highlighted about lengthy single shot in the recent press meet. Rathnam has completed all its censor formalities and has received U/A certificate, with a runtime of 156 minutes (2 hours and 36 minutes)





Rathnam will be releasing in two langues Telugu and Tamil simultaneously. 

Rathanam stars Visal in the main lead, while Priya Bhavani Shankar plays the love interest of Vishal. Samuthirakani, Yogibabu and Gautham Vasudev Menon are playing the crucial roles. 

Produced by Kaarthekeyen Santhanam under the banner of Zee Studios and Stonebench Films, Music is composed by Devi Sri Prasad. 

#Rathnam will be releasing Worldwide from Tomorrow in theatres. Rathnam promises a blockbuster experience to the entire family and friends. Watch the powerful action, drama which is sure to deliver a memorable cinematic experience for the audience. #vishal

#Rathnam #Rathnammovie #Vishal #PriyaBhavaniShankar #SinduriVishal  #DeviSriPrasad #RathnamTrailer

Puratchi Thalapathy Vishal's Irumbu Thirai has hit the screens, following the release of Thalapathy vijay's Ghilli, following this Bicycle Star Voters of TN are none other than Vishal and Vijay which has become the talk of the town now. 

Sequel of 'Thupparivaalan' an enthralling detective thriller starring Vishal in the lead role is likely to resume shoot in April 2024. Watch this space for more interesting titbits.





Wednesday 24 April 2024

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !



பெரியார் வழியில்

 பெண்களின் தீண்டாமையைப் பற்றிப்

பேசும் புதிய பாடல் ஆல்பம் 'தீட்டு'


பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார்.


மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து  ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது  உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். 


சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா?


இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் 'தீட்டு' என்கிற பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது.


 'தீட்டு' ஆல்பத்தின் பாடலைப் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் கூறியதாவது,


"நமது அறிவார்ந்த முன்னோர்கள்  இயற்கையான பெண்களின் உடலியல் மாற்றமான மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கும் விதத்தில் அவர்களது அவஸ்தையைப் புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தனிமைப் படுத்தினர்.


அதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிற்காலத்தினர் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுமையைப் புகுத்தின இதையே பெண்களுக்குக் காலங்காலமாக இழைத்து வருகின்றனர்.


இதைப் பற்றிய விழிப்புணர்வு ஆண்கள் மத்தியில் ஏற்பட வேண்டி உள்ளது. அதற்காகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம். நல்லதொரு துள்ளல் இசையில் பாடலாக்கி, 

பெண்மையைப் போற்றும் பாடலாக உருவாக்கி இருக்கிறோம்.


பாடல் விரைவில் வெளியாக உள்ளது" என்றார்.


இந்தப் பாடல் ஆல்பத்தை இயக்கி உள்ளவர் நவீன் லக்ஷ்மன்.இதில்

ஆதேஷ் பாலா,ரதி நடித்துள்ளனர்.

பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.

பாடலை வி.ஜே.பி ரகுபதி எழுதியுள்ளார்.

பாடலை கானா பாலா பாடியுள்ளார்.


இந்தப் பாடல் ஆல்பத்தை

அருண்குமார், மோனிஷா நவீன் தயாரித்துள்ளனர்.

Tuesday 23 April 2024

On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth

 *On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!*



The Visionary Prasanth Varma has become a household name across the country after the Pan India sensation Hanu-Man. The creative director is bringing us another Epic Adventure from The Prasanth Varma Cinematic Universe (PVCU). The film titled Jai Hanuman is a sequel to Hnau-Man which was announced towards the end of the prequel. The script was already locked and the movie will be crafted on a big canvas. The movie will feature a stellar cast and popular craftsmen will be part of it.


The director who started the pre-production works of the movie on the momentous day of the inauguration of the Ayodhya Ram Temple has come up with a new poster for the Hanuman Jayanthi occasion. The poster sees Lord Hanuman standing valiantly on the cliff with a mace in hand, even though the dragon that is approaching him breathing fire. Prasanth Varma is bringing Dragons to the Indian screen for the first time. The poster gives hints about the kind of experience we are going to get with top-end VFX and other technicalities.


The movie Jai Hanuman will be released on IMAX 3D. The other details of this magnum opus are awaited.


Today, the team will be celebrating 100 days event of Hanu-Man.

ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து

 *ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து  அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது!  இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம் !!*



பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற  ஹனுமான் படத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் வர்மா  அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு சாகச காவியத்தை ரசிகர்களுக்கு  கொண்டு வருகிறார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் ப்ரீக்வுலாக உருவாகவுள்ளது. , ஹனுமான் படத்தின் முடிவில் இப்படம்  அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதை  ஏற்கனவே முழுமையாக தயாராகிவிட்டது.  இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.  இப்படத்தில் முன்னணி  நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர்  மற்றும் பிரபலமான தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர்,  ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம், இப்படம் மூலம் பிரசாந்த் வர்மா முதல் முறையாக டிராகன்களை இந்திய திரைக்கு கொண்டு வருகிறார். உலகத்தரத்திலான VFX மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்துடன், ரசிகர்களுக்கு இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத அனுபவத்தை இப்படம் வழங்கும். 



ஜெய் ஹனுமான் திரைப்படம் ஐமேக்ஸ் 3டியில் வெளியாகவுள்ளது. இந்த மாபெரும் படைப்பு குறித்த மற்ற விவரங்கள்  விரைவில் வெளியாகும்.


படக்குழு இன்று, ஹனுமான் படத்தின்  100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடுகிறது.

*'சூது கவ்வும் 2' படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் 'சூரு' பாடல் வெளியீடு


*'சூது கவ்வும் 2' படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் 'சூரு' பாடல் வெளியீடு* 


*ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்*


தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சூது கவ்வும் 2' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 


இந்நிலையில் இப்படத்தில் இருந்து 'மண்டைக்கு சூரு ஏறுதே' எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  


ஏ ஆர் ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். 


பாடலைப் பற்றி பேசிய இசையமைப்பாளர் எட்வின், "திரைப்படத்தின் பின்னணியில் வரும் பாடலான இதில், இதுவரை திரையுலகில் பயன்படுத்தப்படாத 'சூரு' எனும் தமிழ் வார்த்தையை உபயோகித்துள்ளோம். சூரு என்றால் கிராமத்து வழக்கில் அதீத உற்சாகத்தில் இருப்பது என்று பொருள். மலேசியாவிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த பாடலுக்கு இது மிகவும் பொருத்தமாக இருந்ததால் இதை உபயோகப்படுத்தி உள்ளோம்," என்றார். 


பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக கூறிய இசையமைப்பாளர் எட்வின், மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டுள்ள கண்ணன் கணபதி, சிங்கப்பூரில் சாதனை படைத்துள்ள ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும் உள்ள பிரேம்ஜி அமரன் ஆகியோர் இப்பாடலுக்காக மிகச் சிறப்பான ஒத்துழைப்பு தந்துள்ளதற்கு நன்றி தெரிவித்தார். 'சூது கவ்வும் 2' திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு தனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சி வி குமாருக்கும் அவர் நன்றி கூறினார். 


'சூது கவ்வும்' வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமான 'சூது கவ்வும் 2' தயாராகி உள்ளது. 'சூது கவ்வும்' திரைப்படத்தின் முறையான இரண்டாம் பாகமாகவும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் சரிவிகிதத்தில் கலந்த பரபரப்பு திரைப்படமாகவும் 'சூது கவ்வும் 2' இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். 


'சூது கவ்வும் 2' திரைப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூது கவ்வும் 2', விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. 


***



Sooru', a sensational song from 'Soodhu Kavvum 2', released to rousing reception

 *'Sooru', a sensational song from 'Soodhu Kavvum 2', released to rousing reception*


*Composed by Edwin, an alumnus of AR Rahman's music college, the song is crooned by Kannan Kanapathy, Stephen Zechariah, Premgi Amaren*


'Soodhu Kavvum 2' produced by Thangam Cinemas' Thangaraj and Thirukumaran Entertainment's C V Kumar and directed by S J Arjun is getting ready for a grand theatrical release. Starring Mirchi Shiva, Radharavi, Karunakaran, and M S Bhaskar in key roles; 'Soodhu Kavvum 2' promises to be an interesting blend of comedy and action. 


A pulsating song 'Mandaikku Sooru Eruthey' from 'Soodhu Kavvum 2' was released on Monday evening and has attracted the attention of the fans.


Composed by Edwin Louis Viswanath, a former student of A R Rahman's music college and Trinity College London, the song has been sung by popular Malaysian artiste Kannan Kanapathy, leading Singaporean artiste Stephen Zechariah and actor-composer Premgi Amaren.


Speaking about the song, music director Edwin said, "In this song which comes in the background of the movie, we have used the Tamil word 'Sooru' which has not been used in films. Known in rural areas, Sooru means being on a high. This word is famous in Malaysia too. We have used it because it was very suitable for this song."


Composer Edwin said the song has come out very well and thanked Kannan Kanapathy who has a huge fan following in Malaysia, Stephen Zechariah a top celebrity in Singapore and Premgi Amaran who is not only an actor but also a composer for their excellent collaboration for this song. He also expressed gratitude to producer CV Kumar for giving him the opportunity to compose music for 'Soodhu Kavvum 2'. 


Producer C V Kumar's Thirukumaran Entertainment bankrolled the blockbuster 'Soodhu Kavvum' that received praise from all quarters and emerged box-office success in 2013. After 11 years, the film's sequel 'Soodhu Kavvum 2' is getting ready. The team said 'Soodhu Kavum 2' will be a proper sequel to 'Soodhu Kavvum'.


Karthik K Thillai has handled cinematography for 'Soodhu Kavvum 2'. The shooting of the film happened in various locations including Chennai. Produced by Thangam Cinemas' Thangaraj and Thirukumaran Entertainment's C V Kumar and directed by S J Arjun, 'Soodhu Kavvum 2' will soon hit the big screens. 


***

மே 4ஆம் தேதி "இயக்குநர் தினம்" கொண்டாட்டம்

 மே 4ஆம் தேதி "இயக்குநர் தினம்" கொண்டாட்டம்!!









உலகிலேயே அதிக திரைப்படங்களை இயக்கி உலக சாதனை படைத்த நமது தெலுங்குப் பெருமையான இயக்குனர் தாசரி நாராயண ராவ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில்.. மே 4ஆம் தேதியை "இயக்குனர்கள் தினமாக" அறிவித்து தெலுங்கு இயக்குநர்கள் கொண்டாட்டமாக கொண்டாடியுள்ளனர். கடந்த 5 வருடங்கள்!

தெலுங்கு இயக்குநர்கள் சங்கத்திற்கு நலநிதி வழங்குவதே முக்கிய நோக்கம் என்றும், இந்த ஆண்டு “இயக்குனர்கள் தின” விழாவை வரலாறு காணாத வகையில் நடத்த உள்ளோம் என்றும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பா.வீர சங்கர் தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் மைதானம்.

தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சாய் ராஜேஷ், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் (திரையை உயர்த்தும் நிகழ்வு) விழாவின் விவரங்களை வெளியிட்டார். மேலும், மற்றொரு துணைத் தலைவர் வசிஷ்டா, இந்த ஆண்டு வெளியான புதுமுக இயக்குனர்களின் படங்களில் இருந்து மூன்று சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த படங்களின் இயக்குனர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், நினைவு பரிசும் வழங்கி கவுரவிக்கப்படும் என தெரிவித்தார். இயக்குனர்கள் அனில் ரவிபுடி, அனுதீப், ஷிவா நிர்வாணா மற்றும் பலர் தங்கள் சக இயக்குனர் நண்பர்களுடன் இணைந்து பல கலாச்சார நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பிரபல இயக்குனர்கள் விஜயேந்திர பிரசாத், ரேலங்கி நரசிம்மராவ், என்.சங்கர், வி.என். சிறப்பு விருந்தினர்களாக ஆதித்யா, மாருதி, ஹரிஷ் சங்கர், அஜய் பூபதி, வி.சமுத்ரா, ஜி.ராம் பிரசாத், வெங்கி அட்லூரி, ராம் பீமனா, அனுதீப், ரவிபள்ளி ராம்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்!

தொடக்கத்தில் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி. சுப்பாரெட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பல பிரபலங்களை மேடைக்கு அழைத்தார்.


இக்கூட்டத்தில் இயக்குநர் தினம் மற்றும் TFDA லோகோக்கள் வெளியிடப்பட்டன. மேலும், தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமும் முறைப்படி தொடங்கப்பட்டது. தவிர, இந்த ஆண்டுக்கான "இயக்குநர் தின" நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் "புக் மை ஷோ" செயலி மூலம் விரைவில் விற்பனை செய்யப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உகாதி முதல் நிதி நெருக்கடியில் உள்ள தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி 35 லட்சம் ரூபாய் நன்கொடையாக வசூலித்துள்ளதாக தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் பா.வீர சங்கர் தெரிவித்தார். உறுப்பினர்களின் குழுக் காப்பீட்டுத் திட்டத்திற்கு குறுகிய காலத்திற்குள்.அவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு எல்லா வகையிலும் சேவை செய்ய அயராது பாடுபடுவோம் என்றும், மே 4 ஆம் தேதி தாங்கள் கொண்டாடும் "இயக்குனர்கள் தினம்" மூலம் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். அவர்களின் உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே.

பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன் பாபு, பிரபாஸ், ஸ்ரீகாந்த், நானி, விஜய் தேவரகொண்டா, ராம் பொதினேனி, கல்யாண் ராம், அல்லரி நரேஷ், வருண் தேஜ், சாய் துர்கா தேஜ், விஷ்வக் சென், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், நவதீப், வைஷ்ணவ தேஜ், என இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் தெரிவித்துள்ளார். மற்றும் பல குணச்சித்திர கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள்.

இயக்குனர் என்.சங்கர் கூறுகையில், ஐந்தாண்டுகளுக்கு முன் இந்த சங்கத்தின் தலைவராக இருந்த போது தான் இந்த இயக்குனர் தின விழாவை துவக்கி வைத்ததாகவும், தற்போதைய செயற்குழுவும் அதே போக்கை சிறப்பான முறையில் தொடர்வது பெரிய விஷயம்.

தெலுங்கு இயக்குனர்கள் சங்கத்திற்கு ஹீரோ பிரபாஸ் 35 லட்சம் ரூபாய் நன்கொடையாக அறிவித்துள்ளதாக இயக்குனர்கள் மாருதி கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர்கள் பலரும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்தனர். உலகெங்கிலும் உள்ள தெலுங்கு இயக்குனர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த 6வது இயக்குனர் தின விழாவை மிக பிரமாண்டமாக நடத்திய தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் வீரசங்கர் குழுவினரை பாராட்டினர்.


சுமார் 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற உள்ளதாகவும், தெலுங்கு சினிமாவை விரும்பும் அனைவரும் இவ்விழாவை சிறப்பிக்க வருகை தருமாறும் இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். யாருக்கு எந்த கஷ்டம் வந்தாலும் முன் வந்து உதவுபவர்கள் சினிமாக்காரர்கள். சிரஞ்சீவி காரு, மகேஷ் காரு, பிரபாஸ் காரு இப்படி பல பெரிய மனிதர்கள் முன் வந்திருக்கிறார்கள். இதுதான் வரலாற்றின் உண்மை. இது ஒரு திரைப்பட இயக்குனர் விழா. பார்வையாளர்கள் அனைவரும் வந்து எங்களை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை தோளில் சுமந்து கொண்டு இந்த சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக அறிவித்த ரக்னாஸ் நிகழ்வுகளின் தலைவர் சங்கரை பலரும் பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில், தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொருளாளர் பி.வி.ராமராவ், துணைத் தலைவர்கள் சாய் ராஜேஷ், வசிஷ்டா உள்ளிட்ட சங்கப் பண்பாட்டுக்குழு, இலக்கியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.