Featured post

நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

 நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குறிப்பாக காயத்ரியின் ஒத்துழைப்பு சாதாரணமல்ல. அவரை தவிர வேறு யாராவது நட...

Wednesday 24 July 2024

நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

 நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குறிப்பாக காயத்ரியின் ஒத்துழைப்பு சாதாரணமல்ல. அவரை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் நிச்சயம் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு நின்று போயிருக்கும், அந்த அளவுக்கு கடினமான் நிலப்பரப்பு அது, அதில் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நடித்துக் கொடுத்தார். நல்ல குழு அமைந்தாலே நமக்கு பெரிய நம்பிக்கை வரும், அப்படி ஒரு நம்பிக்கையை படத்தில் பணியாற்றைய அனைவரும் கொடுத்தார்கள்.  பாலசரவணன் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இருந்தே நண்பர். ஏதோ வந்தோம், நடித்தோம் என்று அவர் இருக்க மாட்டார். ஒரு கதாபாத்திரம் என்று சொன்னால் அதன் வசனம் உள்ளிட்ட அனைத்தையும் முன் கூட்டியே வங்கிக்கொண்டு, அந்த கதாபாத்திரத்தை எப்படி இன்னும் சிறப்பாக செய்யலாம், என்று யோசிக்க தொடங்கி விடுவார். அவரை காமெடி வேடத்தில் காட்டாமல் வித்தியாசமான வேடத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அதை அவர் விலங்கு தொடரில் செய்துவிட்டார். அதன் பிறகு இந்த படத்தில் செய்திருக்கிறார்.







படம் முடிந்துவிட்டது, அதன் பிறகு அந்த படத்தின் மீது ஒரு ஒளி விழ வேண்டும் அல்லவா அது தான் வெரூஸ் நிறுவனம், முஜீப்,  சஞ்சய், ராஜராஜன், டனிஸ் ஆகியோருக்கு நன்றி. முஜீப் சார் வந்த பிறகு தான் இந்த படம் பெரிய அளவில் உருவானது. நான் பல வருடங்களாக உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் அனைவருக்கும் உங்களது ஆதரவை பலருக்கு கொடுத்து வருகிறீர்கள், எங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்று கேட்டுக்கொள்கிறேன். ‘பேச்சி’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது, திரையரங்குகளில் சென்று பாருங்கள் நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன்.பி பேசுகையில், “’பேச்சி’

 படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன்.பி பேசுகையில், “’பேச்சி’ என்னுடைய முதல் படம். நண்பர்களால் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படம். முதல் நன்றி நான் கோகுலுக்கு தான் சொல்ல வேண்டும். நாங்கள் விளம்பர படங்கள் எடுக்கும் போது சேலம் சென்றால், அப்படியே ஏற்காடு சென்று வருவோம். அப்படி ஒரு பயணத்தின் போது, நாம் ஒரு படம் பண்ணலாம் என்று சாதாரணமாக பேசியது தான் இந்த பிரஸ் மீட்டில் வந்து நின்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு என் நண்பர் வசந்த் ஒரு பக்க கதையாக எழுதியதை தான் நான் ஒரு குறும்படமாக எடுத்தேன், இப்போது அது தான் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. வசந்தும் நானும் சேர்ந்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறோம்.







ஊடக நண்பர்கள் எங்களைப் போல் பலரை பார்த்திருப்பீர்கள், அவர்களுடைய பேச்சுக்களை கேட்டிருப்பீர்கள், அவர்கள் சொன்னது போல் நாங்களும் பல கஷ்ட்டங்களை கடந்து தான் இந்த படத்தை முடித்திருக்கிறோம். எனவே, இப்போது அதைப்பற்றி பேசப்போவதில்லை. ஒரு படம் தனக்கு தேவையானதை தானாகவே எடுத்துக்கொள்ளும் என்று சொல்வதைப் போல், இன்று பேச்சி படம் வெரூஸ் என்ற புதிய நிறுவனத்தை திரையுலகிற்கு அழைத்து வந்திருக்கிறது. அவர்கள் மூலம் படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. வெரூஸின் முஜிப் சார் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தொழில்நுட்ப குழிவினர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவாளர் பார்த்தியின் உழைப்பு மிகப்பெரியது. படத்தின் டிரைலரை பார்த்த போதே அதைப் பற்றி பலர் பேசுகிறார்கள். அதேபோல் என்னுடைய படத்தொகுப்பாளர் அஸ்வின் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.


திகில் படம் என்பது ஒரே ஃபார்மெட்டில் தான் இருக்கும். எங்களது படத்தை நாங்கள் அப்படி...இப்படி...என்று சொல்லவில்லை. அதேபோல் நாங்கள் இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம், படத்தின் எந்த ஒரு காட்சியிலும் ரசிகர்கள் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். படம் நிச்சயம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். படத்தின் ஒலிவடிவமைப்பு, ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். இரண்டு மணி நேரம் உங்களை புதிய உலகத்திற்கு படம் அழைத்து செல்லும் என்பது உறுதி. பத்திரிகையாளர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், நன்றி.” என்றார்.


மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகனும், வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான சஞ்சய் சங்கர் பேசுகையில், “என் அப்பா எப்போதும் பத்திரிகையாளர்களிடம் மிக நெருக்கமாக இருப்பார், அவருக்கும் பத்திரிகையாளர்கள் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள். அதுபோல் எங்கள் வெரூஸ் மற்றும் வெயிலோன் நிறுவனத்திற்கும், ‘பேச்சி’ படத்திற்கும் நீங்க சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான், முஜீப், ராஜராஜன்,  தனிஷ்டன் நான்கு பேரும் சிறுவயது முதலே நண்பர்கள், நாங்கள் தான் ஒன்றாக சேர்ந்து வெரூஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். வெரூஸ் என்றால் இத்தாலியில் பிரண்ட்ஸிப் என்று அர்த்தம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். அதன்படி, ‘பேச்சி’ திரைப்படத்தை பார்த்த முஜீப் எங்களை தொடர்புக்கொண்டு படத்தை பார்க்க சொன்னார், நாங்கள் படத்தை பார்த்தோம், படத்தில் நிறைய ட்விஸ்ட்கள் இருக்கின்றன. அதேபோல், திகில் காட்சிகளும், ஒலி வடிவமைப்பும் மிரட்டலாக இருந்தது. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அதனால் தான் இந்த படத்தின் மூலம் நாங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற நல்ல திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.” என்றார்.


வெரூஸ் நிறுவனத்தின் முஜீப் பேசுகையில், “இந்த படம் நண்பர்களுக்காக நண்பர்கள் தயாரித்தது என்று சொன்னார்கள், வெரூஸ் நிறுவனமும் நண்பர்கள் இணைந்து தொடங்கியது தான். எங்கள் நிறுவனம் மூலம் பொழுதுபோக்குத்துறையில் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதன்படி, இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, படத்தை பார்த்த உடன் நான் இந்த படத்தின் தயாரிப்பாளராக முடிவு செய்துவிட்டேன். கோகுல் பினாய் உடனான முதல் சந்திப்பிலேயே அவருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துவிட்டேன். இந்த படம் மட்டும் இன்றி மேலும் ஒரு படத்தை நாங்கள் முடித்து வைத்திருக்கிறோம், அந்த படம் பற்றி விரைவில் அறிவிப்போம். மேலும் பல படங்களை தொடர்ந்து தயாரிக்க உள்ளோம். படக்குழுவினர் எந்த அளவுக்கு பரபரப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து நான் பிரமித்துவிட்டேன், அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்களின் உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.” என்றார்.


நடிகர் பாலசரவணன் பேசுகையில், “வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் கோகுல் பினாய், விக்னேஷ், விஜய் கந்தசாமி இவர்கள் எல்லாம் என்னுடைய நண்பர்கள், இவங்க மூன்று பேருக்கும் நன்றி. வெரூஸ் நிருவத்தைச் சேர்ந்த சஞ்சய் சங்கர், முஜீப் சார் ஆகியோருக்கும் நன்றி. இயக்குநர் ராமச்சந்திரன் சார் பைக் டிராவல் ஆர்வலர், அவரைப் போன்றவர்களால் தான் இதுபோன்ற இடங்களை கண்டுபிடிக்க முடியும். இந்த இடங்களுக்கு சாதாரண வாகனங்களில் பயணிக்க முடியாது. இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும், அதன் பிறகு இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக எங்களுடன் வனத்துறை காவலர்கள் வருவார்கள், அவர்களுக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது, என்றார்கள். அப்படி ஒரு இடத்தை கண்டுபிடித்து இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் எங்களை அங்கே அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். இப்படி ஒரு கடினமான நிலப்பரப்பில் படப்பிடிப்பு நடத்தியதற்கு எங்கள் தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட படத்தை எடுப்பதற்கு இரண்டு படங்கள் எடுத்து விடலாம், அந்த அளவுக்கு இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார்கள். அந்த இடங்களில் நாம் இறங்கிவிட்டோம் என்றால், அது பிக் பாஸ் வீடு தான். எந்த ஒரு தொடர்பும் இருக்காது. அப்படி ஒரு இடத்திலும், எங்களுக்கு உணவு சரியான நேரத்தில் வந்துவிடும். வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றால் சில சமயங்களில் உணவு வருவதில் சில சிக்கல்கள் ஏற்படும். ஆனால், இப்படி ஒரு இடத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் எங்களுக்கு அனைத்தையும் சரியான நேரத்தில் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.


இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, நான்கு நண்பர்களில் ஒரு வேடமாக இருக்கும் என்று நினைத்தேன். அதே சமயம், படத்தில் இருந்த வேற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதை அவரிடம் கேட்கலாமா என்று யோசித்த போது, அவரே நீங்க மாரி வேடத்தில் தான் நடிக்கிறீங்க, என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு சந்தோஷமாகிவிட்டது. நான் காமெடி வேடம் மட்டும் இன்றி அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறேன். என் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாரி கதாபாத்திரம் இருக்கும். மற்றவர்கள் சொன்னது போல், இந்த படம் இதுவரை பார்க்காத படம், என்று சொல்லவில்லை. இன்று ஆடியன்ஸ் ரொம்ப திறமையானவர்களாக இருக்கிறார்கள், உலகத்திரைப்படங்கள் பார்க்கிறார்கள், அதனால் அப்படி இப்படி என்று சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது. ஆனால், ‘பேச்சி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இது முழுக்க முழுக்க திகில் சஸ்பென்ஸ் படம். இப்படிப்பட்ட படங்கள் வருவதில்லை என்று ஏங்கும், ரசிகர்களுக்கு இந்த படம் செம படமாக இருக்கும். இன்று டிரைலர் பார்த்து பலர் பாராட்டுகிறார்கள், நல்ல நல்ல கமெண்ட் வருகிறது. அதுபோல் படமும் நிச்சயம் ரசிகர்களிடம் பாராட்டு பெறும். இப்படி ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கே இருக்கும், அப்படி ஒரு படத்தில் நடித்தது மகிழ்ச்சி நன்றி.” என்றார்.


நடிகர் தேவ் பேசுகையில், “நான் இங்கே நிற்பதற்கு காரணம் கோகுல் பினாய் மற்றும் ராமச்சந்திரன் சார் தான், அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறேன், இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.  பார்த்திபன் சொன்னது போல் நண்பர்களுக்காக நண்பர்கள் பண்ண படம். பாலசரவணன் சொன்னது போல், இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மிக கடுமையான நிலப்பரப்பில் உருவாகியிருக்கும் படம். என்னதான் கஷ்ட்டமாக இருந்தாலும் தயாரிப்பு தரப்பு எங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தார்கள், அதற்காக வெயிலோன் மற்றும் வெரூஸ் நிறுவனங்களுக்கு நன்றி. திகில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும். ஆகஸ்ட் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது, படத்தை திரையரங்குகளில் பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.” என்றார்.


தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில், “தயாரிப்பாளராக எனக்கு இது முதல் மேடை. ஒளிப்பதிவாளராக பண்ணையாரும் பத்மினியும் தான் எனது முதல் படம். நான் இங்கு நிற்பதற்கு என் பெற்றோர்கள் தான் காரணம். நான் சினிமாவுக்கு போகப் போகிறேன், மூன்று ஆண்டுகள் படித்துவிட்டு, பிறகு கேமராமேனாக பணியாற்ற செல்லப் போகிறேன், என்று சொன்ன போது என் பெற்றோர் என்னை அனுப்பி வைத்தார்கள். இப்போது படம் தயாரிக்கப் போகிறேன், என்று சொன்ன போதும் எனக்கு சப்போர்ட் பண்ணார்கள், அவர்களுக்கு நன்றி. அதேபோல், எனது சகோதரி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி. என் சகோதரி தான் இந்த படம் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட முதலீடு கொடுத்தார். அதேபோல், என் குருநாதன் மனோஜ் பரமஹம்சாவுக்கு நன்றி. இன்று நான் தயாரிப்பது என அனைத்தும் அவரிடம் இருந்து வந்தது தான். நான் முதல் படம் முடித்துவிட்டு இரண்டாம் படம் பணியாற்ற இரண்டு வருடங்கள் சும்ம இருந்த போது, எனக்கு பொருளாதார ரீதியாக உதவியது ராமச்சந்திரன் அண்ணாவின் விளம்பர படங்கள் தான், அதற்கு அவருக்கு நன்றி. அதேபோல் வெயிலோன் நிறுவனத்தை தொடங்கும் போது என் நண்பர்கள் என்னுடன் இணைந்துக்கொண்டார்கள். அது தான் இப்போது தயாரிப்பு நிறுவனமானது. இதன் மூலம் ராம் அண்ணா மூலம் படம் எடுக்க முடிவான போது, வேறு கதையை படமாக்கலாம் என்று இருந்தோம். ஆனால், அவருக்கு திகில் கதை நன்றாக வருவதால் அதையே படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து, அவருடைய பேச்சி குறும்படத்தை தயாரிக்க முடிவு செய்தோம்.

பேச்சி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ’வெரூஸ்

 ’பேச்சி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ’வெரூஸ் புரொடக்‌ஷன்’ (Verus Productions) நிறுவனம்






தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் படமாக ‘பேச்சி’ அமையும்! - பிரபலங்கள் பாராட்டு


‘மைனா’, ‘பீட்சா’ படங்கள் வரிசையில் ‘பேச்சி’ இடம் பிடிக்கும்! - படக்குழு நம்பிக்கை


‘பேச்சி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக புதுமையான திரை அனுபவத்தை கொடுக்கும் - இயக்குநர் ராமச்சந்திரன் 


அனைத்துவிதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் - ‘பேச்சி’ பட விழாவில் நடிகர் பாலசரவணன் பேச்சு


வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.


பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி இன்று (ஜூலை 23) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், மூத்த பத்திரிகையாளர்கள் தேவி மணி மற்றும் மக்கள் குரல் ராம்ஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.


நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “’பேச்சி’ உருவான விதமே ஒரு அனுபவமாக இருந்தது. படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் விளம்பர பட இயக்குநர், அவருடன் நான் பல விளம்பர படங்களில் பணியாற்றியுள்ளேன். அப்படி நாங்கள் பணியாற்றிவிட்டு ஏற்காடுக்கு செல்வோம், அங்கு தான் இந்த கரு உருவானது. பிறகு இதை படிபடியாக டெவலப் செய்து திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தோம். இந்த படம் உருவாக முக்கியமான நபர் கோகுல் பினாய். ஒளிப்பதிவாளராக பல படங்கள் செய்திருக்கும் அவர், நண்பர்களுக்காக இந்த படத்தை பண்ணார். பல பேர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வேறு ஒரு துறையில் முதலீடு செய்து நல்லபடியாக வாழ்கிறார்கள். ஆனால், கோகுல் பினாய் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த சமயத்தில் அவருக்கு மட்டும் இன்றி அவரது குடும்பத்தாருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தான் தொடங்கினோம். பிறகு படத்தின் பட்ஜெட் அதிகமானது. படத்திற்கு தேவைப்பட்டதால் அதை நாங்கள் செய்தோம். எனக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அது அனைத்தையும், பட்ஜெட் பார்க்காமல் செய்து கொடுத்தார்கள், அதனால் தான் படத்தின் அவுட்புட் மிக சிறப்பாக வந்திருக்கிறது.  இந்த படத்தின் நிலப்பரப்பு மிக கடினமானது, இதில் எதையும் எளிதில் செய்ய முடியாது. அதனால் அனைவரும் மிகவும் கஷ்ட்டப்பட்டு தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். எனவே, இந்த படத்திற்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.


படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் பேசுகையில், “இந்த படம் எனது நெருங்கிய நண்பர் ராம் மூலமாக கிடைத்தது. இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த கோகுல் பினாய்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது, திரையரங்கிற்கு சென்று பாருங்கள், நன்றி.” என்றார்.


நடிகர் முரளி ராம் பேசுகையில், “இத்தனை கேமராக்கள் எங்கள் நிகழ்ச்சியை கவரேஜ் செய்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு படம் பெஞ்ச் மார்க் படமாக அமையும். அதாவது, ‘மைனா’, ‘பீட்சா’ என இப்படி வெற்றி பெற்ற படங்களை திரும்ப பார்த்தோம் என்றால் அந்த படங்கள் அனைத்தும் நண்பர்கள் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தான் இருக்கும். அந்த வரிசையில் ‘பேச்சி’ படமும் இடம் பிடிக்கும்.  இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய மனதோடு பணியாற்றினார்கள், ஒவ்வொருவரும் தங்களது சொந்த படம் போல வேலை பார்த்தார்கள். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என்பதற்காக நானே கேட்டு தான் சேர்ந்துக் கொண்டேன். நான் இரண்டு நாட்கள் பணியாற்றினேன். இயக்குநர் ராமச்சந்திரன் சார், வங்கியில் நல்ல பதவியில் இருந்தார், ஆனால் சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு, சினிமாத்துறைக்கு வந்திருக்கிறார். அதேபோல், அவரது குடும்பத்தாரும் அவரது ஆசையை புரிந்துக்கொண்டு அவரை இந்த துறைக்கு அனுப்பி வைத்தார்கள். நிறைய விளம்பர படங்களை செய்தார். இப்போது படம் பண்ண வந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர், கோகுல் பினாய் என அனைவருமே அவரிடம் இருந்து வந்தவர்கள், அவரது தம்பிகள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல், அனைத்து தம்பிகளும் சேர்ந்து அண்ணனுக்காக இந்த படம் பண்ணியிருக்கிறார்கள். அவர்களது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். படத்தை வெளியிடும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.


நடிகர் ஜனா பேசுகையில், “’பேச்சி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் வித்தியாசமான ஒரு திகில் திரைப்படமாக இருக்கும். திரையரங்குகளில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும், நிச்சயம் ரசிகர்கள் படத்தை எஞ்சாய் பண்ணுவார்கள், நன்றி.” என்றார்.

Shivanna's 131st Movie Ready to Set Sail

 *Shivanna's 131st Movie Ready to Set Sail… Team Meets the Hat-trick Star*




*Good news for Shivanna’s fans as the star steps into his 131st film*


A new update has come for Karunada Chakravarthy Shivanna’s fans as the star is set to begin his 131st film. Recently, the production team left his fans excited by releasing the introduction teaser on Shivanna's birthday. Now, the team is ready to start making the film. The muhurat (auspicious start) of Shivanna's 131st movie will happen soon.


*Shivanna to Start Shooting for His 131st Film*


The team is ready to dive into the shooting arena for hat-trick hero Shivaraj Kumar's 131st movie, and the entire team met Shivanna today.


Director Karthik Adwaith, producers N.S. Reddy and Sudheer, cinematographer A.J. Shetty, and editor Deepu S. Kumar visited the Hat-trick Star at his Nagawara residence and posed for photos.


Karthik Adwaith is making his entry into Sandalwood through this film, which is his second movie as a director. This is an action thriller where Shivanna will be seen in a different look and a unique role. V.M. Prasanna of 'Ghost' fame and Jayakrishna of 'Seetharamam' fame are contributing to the film as writers. With music by Sam C.S. of 'Vikram Vedha', 'RDX', and 'Kaithi' fame, A.J. Shetty will handle the cinematography. Editing will be done by Deepu S. Kumar, and art direction will be by Ravi Santhehaklu. The movie is produced under Bhuvaneshwari Productions by S.N. Reddy and Sudheer P., with Ramana Reddy supporting as executive producer.

சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது

 *சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு*




*சிவண்ணாவின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்*

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின்  131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது.



*சிவண்ணாவின்  131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது*


ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று  சிவண்ணாவைச் சந்தித்தது.



இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். 



இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமாகிறார், இது அவருக்கு இயக்குநராக இரண்டாவது படமாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில், சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மோஸ்ட் புகழ், V.M.பிரசன்னாவும், 'சீதாராமம்' புகழ் ஜெயகிருஷ்ணாவும் இப்படத்திற்கு எழுத்தாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 'விக்ரம் வேதா', 'ஆர்டிஎக்ஸ்', 'கைதி' புகழ் சாம் C.S. இசையமைக்க, A.J. ஷெட்டி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தொகுப்பை தீபு S. குமார் செய்ய, கலை இயக்கத்தினை ரவி சந்தேஹக்லு செய்கிறார். இப்படத்தை புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் S.N. ரெட்டி மற்றும் சுதீர் P. தயாரிகின்றனர்.  ரமணா ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

கலர்ஸ் ஆஃப் கோலிவுட்', எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி

 *'கலர்ஸ் ஆஃப் கோலிவுட்', எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு*




சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ - BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது.


'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன அவரும் அவரது கல்லூரி குழுவினரும் ஐந்தாவது செமஸ்டர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர்.


ஆவணப்படம் பற்றி பரோ சலில் கூறுகையில், "வெள்ளை சருமத்தின் மீதான விருப்பம் இந்தியர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது, தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடனான உரையாடல் மூலம், எங்கள் ஆவணப்படம் இதை ஆய்வு செய்கிறது. குறிப்பாக தமிழ் நடிகைகள் குறித்து இது பேசுகிறது," என்றார். 


எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் இயக்கம் மற்றும் திரைக்கதை பிரிவில் BVA பட்டப்படிப்பை பரோ சலீல் படித்து வருகிறார். பெங்களூரைச் சேர்ந்தவரான இவர், விளம்பரத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளார்.


ஆவணப்படத்திற்காக பின்வரும் நபர்களை அவர் நேர்காணல் செய்துள்ளார்:

கே. ஹரிஹரன் (தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்), நரேஷ் நில் (விளம்பரத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்), மியா மெல்சர் (சர்வதேச விருது பெற்ற நடிகை), கவிதா இம்மானுவேல் (மக்கள் தொடர்பாளர், DISB கேம்பெய்ன்), மணிசங்கர் நாராயணன்

(திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட விரிவுரையாளர்), நிலா வர்மன் (உள்ளடக்க படைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர்), ரோகினி மணி (கலைஞர்), ஹ்ருஷிகா (மாணவர், ஜேஎன்யு), மற்றும் ருத்ரேஷ் மணி ஆதிராஜ் (திரைப்பட மாணவர், FTIT).


'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி,' படத்தின் ஒளிப்பதிவை அக்ஷய் பரூனோன் கையாள, ஆடியோகிராஃபிக்கு சுப்பிரமணிய பாரதி பொறுப்பேற்றுள்ளார். எடிட்டிங் - கோபிகிருஷ்ணன் எம், டிஐ - அருண் ராஜ் எச், போஸ்டர் டிசைனிங் - தக்ஷின் எம்.


பரோ சலில் இயக்கியுள்ள 'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' கேரளாவின் 16வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் (IDSFFK) போட்டி தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளை சேர்ந்த 22 ஆவணப்படங்களில் ஒன்றாகும்.


***

Colours of Kollywood', a Documentary by the students of MGR Government Film Institute

 *‘Colours of Kollywood', a Documentary by the students of MGR Government Film Institute selected for 16th International Documentary and Short Film Festival of Kerala*




A film by Fourth year Bachelor of Visual Arts (BVA) students of Tamil Nadu Government MGR Film and Television Institute (Adyar Film Institute), Chennai has made it to the Official Selection of the 16th International Documentary and Short Film Festival of Kerala (IDSFFK) under the Short Documentary Competition Category.


Titled 'Colours of Kollywood - A Melanin Deficiency', the film is directed by 20-year-old Paro Salil. She and her team members in BVA have made the Documentary as their fifth semester project. 


Talking about the Documentary, Paro Salil said, “Favouritism towards lighter skin tones is embedded in the Indian psyche and Tamil cinema is no exception. Through conversations with industry professionals, artistes, social activists and the common people, this documentary examines the history and practice of differential treatment based on skin colour, especially regarding actresses in Tamil cinema."


Paro Salil is pursuing her BVA degree in Direction and Screenplay Writing. She hails from Bangalore. She has worked as an Assistant Director in the Advertisement Industry. 


She has interviewed the following personalities for the Documentary: 

K. Hariharan (National Award-winning Film Director), Naresh Nil (Ad Film Producer and Photographer), Mia Maelzer (International Award Winning Actor), Kavitha Emmanuel (Spokesperson, DISB Campaign), Manishankar Narayanan (Filmmaker and Film Lecturer), Nila Varman (Content Creator and Filmmaker), Rohini Mani (Artiste), Hrushika (Student, JNU), and Rudreshmaniadiraj (Film Student, FTIT). 


'Colours of Kollywood - A Melanin Deficiency' has Cinematography by Akshay Paroonon, Audiography by Subramaniya Bharathi, Editing by Gopikrishnan M, DI by Arun Raj H and poster design by Dhakshin M. 


'Colours of Kollywood - A Melanin Deficiency' directed by Paro Salil is among the 22 short documentary films in various Indian and foreign languages that have been selected for Short Documentary Competition Section at the 16th International Documentary and Short Film Festival of Kerala (IDSFFK).

Tuesday 23 July 2024

Bellamkonda Sai Sreenivas,Mahesh Chandu, Shiven Ramakrishna,

 Bellamkonda Sai Sreenivas,Mahesh Chandu, Shiven Ramakrishna,

Ludheer Byreddy Moonshine Pictures Pan India Film #BSS12 Announced*



Remembering Legend Kodi Ramakrishna Garu on his 75th birth anniversary, Action-Hulk Bellamkonda Sai Sreenivas’ 12th movie was announced officially. This one tentatively titled #BSS12 is a prestigious movie for Bellamkonda Sai Srinivas who completes 10 years in the industry. #BSS12 is being mounted on a massive scale with a big budget and top-notch technical values. Debutant Ludheer Byreddy is directing the movie, while Mahesh Chandu is producing it on Moonshine Pictures. Shiven Ramakrishna presents the movie which is the most expensive film for Bellamkonda Sai Sreenivas.


Billed to be an occult thriller centered around a 400-year-old temple, the movie will present Bellamkonda Sai Sreenivas in a never-seen-before avatar. The announcement poster sees the protagonist standing in front of the ancient temple. The poster is full of divine vibes with sunrays falling on the temple. Bellamkonda Sai Sreenivas is seen staring at the temple and he holds a gun. The poster is very impressive and it makes a great impact.


Ludheer Byreddy prepared an intriguing and powerful script laced with all the commercial ingredients. The film’s second schedule commences tomorrow.


The movie has a very talented team of technicians looking after different crafts. Shivendra cranks the camera, while Leon James provides the music. Karthika Srinivas R is the editor and Srinagendra Tangala is the art director.


Cast: Bellamkonda Sai Sreenivas


Technical Crew:

Writer, Director: Ludheer Byreddy

Producer: Mahesh Chandu

Co - Producer : Sai Shashank

Banner: Moonshine Pictures

Presents: Shiven Ramakrishna

DOP: Shivendra

Music: Leon James

Editor: Karthika Srinivas R

Art: Srinagendra Tangala

Publicity Designer: Ananth Kancherla

PRO: Yuvraaj

Marketing: Walls and Trends

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ்


*பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!*



லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன்     மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.  மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில்  மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும்  இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார்.


400 ஆண்டுகள் பழமையான கோவிலை மையமாக கொண்டு  ஒரு அமானுஷ்ய த்ரில்லராக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் காணலாம். கோவிலில் சூரியக் கதிர்கள் விழும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்த இந்த அறிவிப்பு போஸ்டரில் கதாநாயகன் பழமையான கோவிலின் முன் நிற்பதைப் பார்க்கலாம். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கோவிலை வெறித்துப் பார்த்தபடி, துப்பாக்கியுடன் நிற்கிறார். போஸ்டர் சுவாரஸ்யமாக இருப்பதுடன் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகும் உள்ளது.


லுதீர் பைரெட்டி கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, ஒரு அசத்தலான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நாளை தொடங்குகிறது.


இத்திரைப்படத்தில் மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீநாகேந்திரன் தங்கலா கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.


நடிகர்கள்: பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து , இயக்கம் : லுதீர் பைரெட்டி

தயாரிப்பாளர்: மகேஷ் சந்து 

இணை தயாரிப்பாளர்: சாய் ஷஷாங்க் 

பேனர்: மூன்ஷைன் பிக்சர்ஸ் 

வழங்குபவர்: சிவன் ராமகிருஷ்ணா 

ஒளிப்பதிவு : சிவேந்திரா 

இசை: லியோன் ஜேம்ஸ் 

எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் 

கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா 

விளம்பர வடிவமைப்பாளர்: அனந்த் கஞ்சர்லா மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் - வால்ஸ் & டிரெண்ட்ஸ்



*

Director Susi Ganeshan Launches Brand New Motion Poster for 'Ghuspaithiya'

Director Susi Ganeshan Launches Brand New Motion Poster for 'Ghuspaithiya' Starring Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi; Movie Releases on 9th August*

*Susi Ganeshan Reveals Exciting Motion Poster for 'Ghuspaithiya' Featuring Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi; To be Release on 9th August*


The makers of the highly anticipated film 'Ghuspaithiya' have launched a brand new motion poster featuring the names of Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi. The motion poster showcases a fleet of ships, among which a sudden appearance of a black ship wearing headphones and a police cap catches the eye. The poster gives the impression that a hidden Ghuspaithiya is lurking among the fleet, signaling a sense of caution to the audience. This unique and intriguing concept has created a buzz among fans, who are eagerly waiting to discover which of these stars is the real 'Ghuspaithiya'.

The makers shared the motion poster on their social media platforms, sparking excitement and anticipation. They captioned the post with a mysterious message, *"caption to be added,"* further adding to the suspense.

Directed by Susi Ganeshan, 'Ghuspaithiya' is produced by M. Ramesh Reddy, Jyotika Shenoy, and Manjari Susi Ganeshan. The film's cinematography is helmed by Sethu Sriram, with music directed by Akshay Menon and Saurabh Singh. The film promises to be a thrilling experience, blending suspense, action, and stellar performances by the lead cast.

Talking about recent incident, actress Urvashi Rautela's bathroom video was leaked, and the next day, her phone call with her manager was tapped, which went viral on the internet. Later, fans started linking the video to the film and posting it on social media.

'Ghuspaithiya' is set to release  in theaters on August 9th. Fans and moviegoers are eagerly waiting to unravel the mystery and witness the thrilling journey on the big screen.




Monday 22 July 2024

57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத்

 *57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன் வழங்குகிறார்!*



மண்சார்ந்த கதைகளை அர்ப்பணிப்போடு முழு இதயத்தோடும் படமாக்கும்போது அது எல்லைகளைத் தாண்டி பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். அதுபோன்ற ஒர் படமான ‘பராரி’யை (ஆங்கிலத்தில் 'தி மைக்ரண்ட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது) இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்துள்ளார். 57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கல விருதைப் பெற்று பாராட்டுகள் வாங்கியுள்ளது. 


இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ‘பராரி’ படக்குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ’ஜோக்கர்’, ‘குக்கூ’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜு முருகனிடம் உதவியாளராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். 


இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.முத்துக்கனி (மேக்கப்), எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலிக்கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு), ஏ.ஆர். சுகுமாறன் பிஎஃப்ஏ (கலை), சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்), ஸ்ரீதர் (ஒளிப்பதிவு) மற்றும் சுரேஷ் சந்திரா & அப்துல் ஏ நாசர் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

Filmmaker Raju Murugan presents ’Parari’ wins Best Foreign Film Bronze

 Filmmaker Raju Murugan presents 

’Parari’ wins Best Foreign Film Bronze Winner at 57th World Fest Houston Remi Award 2024 

Films with Originality and Films that are made with the heart and soul of dedicated team will engross the souls beyond boundaries. Filmmaker Raju Murugan's upcoming production ‘Parari’ (Titled ‘THE MIGRANT’ in English). The film has now garnered organic success by getting honored with ‘Best Foreign Film Bronze Winner at the 57th World Fest Houston Remi Award 2024. 


The entire team of ‘Parari’ is very much elated about this prestigious honour, which has instilled a lease of great hopes that the film will be received well with the theatrical release as well. The film is directed by Ezhil Periyavedi, a former assistant to Raju Murugan. Filmmaker Raju Murugan, who is illustrious for making some of the best movies in Tamil film industry including Joker, and Cuckoo is producing this film.



The film stars Hari Sankar of ‘Thozhar Venkatesan’ fame as the protagonist and newcomer Sangeetha Kalyan as the female lead character.  Sean Roldan, the creator of several elegant melodies is composing music for this film. Uma Devi is writing lyrics for the songs.  G. Muthukani (Makeup), S. Azhagiya Koothan and Suren.G (Sound Design), Suren.G (Sound Mixing), Fire Karthi (Stunt), Abinaya Karthik (Choreography), A.R. Sukumaran BFA (Art), Sam RDX (Editor), Sridhar (DOP) and Suresh Chandra & Abdul A Nassar  (PRO) are the others in the technical crew. 


The makers of ‘Parari’ will be soon announcing the film’s worldwide release date.

தனது பிறந்தநாளை முதியோர் இல்ல

 *தனது பிறந்தநாளை முதியோர் இல்ல உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் சாக்ஷி அகர்வால்!* 



காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகிரா மற்றும் பல வெற்றிகரமான படங்களில் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகை சாக்ஷி அகர்வால் சனிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 


ஒரு தனிமை விரும்பியாக அறியப்பட்ட அவர், தனக்கான சிறப்பான நாளை ஓர் முதியோர் இல்லத்தின் உறுப்பினர்களுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் செலவிட்டார். அவர் சில சுவையான உணவுகளை தயாரித்து அவர்களுக்கு பரிமாறினார். பின்னர், அவர் வயதானவர்களுடன் சில விளையாட்டுகளை விளையாடி,  ஆடிப்பாடி மகிழ்ந்து இதயத்தை வருடும் தருணங்களை பகிர்ந்து கொண்டார்.


இந்த சிறப்பான நிகழ்வை தனது சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். நெட்டிசன்கள் 

தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் ஆதரவையும் சாக்ஷிக்கு அளித்தனர்.


சாக்ஷி அகர்வால், மலையாளத்தில் தான் அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பையும், முறையே கன்னடம் மற்றும் தமிழில் இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார்.

Sunday 21 July 2024

Experience A Touch Of Mass Madness, SJ Suryah’s Special

 Experience A Touch Of Mass Madness, SJ Suryah’s Special Birthday Glimpse- Not A Teaser From Natural Star Nani, Priyanka Mohan, Vivek Athreya, DVV Entertainment’s Pan India Film Saripodhaa Sanivaaram Unveiled*



The promotions of Saripodhaa Sanivaaram are in full swing. From posters to glimpses to songs, every update from the movie has constantly increased prospects. Today, the makers of this Natural Star Nani dropped a new video called- Not A Teaser, on the special occasion of SJ Suryah’s birthday.


The video kicks off on an intriguing note with a voiceover saying- whenever a shadowy evil grows stronger, there is some equally or more powerful arises to stop it. SJ Suryah is introduced as a ruthless cop who shows his supremacy on the powerless people. Then comes our Lord Krishna (Nani) from this story, along with his Satyabhama (Priyanka Mohan) to take on the Ravanasura (SJ Suryah).


From take-off to the end, the video is totally gripping. It indeed promises an epic battle between two powerful people. SJ Surah looked extremely frightening, while Nani is terrific with his strong screen presence. The two have lit the screens with their remarkable and power-packed performances.


Vivek Athreya is a genius who has his own style in narrating stories. Likewise, the narrative style is impressive in Not A Teaser video. Murali G’s cinematography is outstanding as the visuals are spectacular, whereas Jakes Bejoy complements the visuals with his intense score. The production values of DVV Entertainment are top-notch.


It’s Not A Teaser, but the video offers a touch of mass madness. We can’t hold our excitement to witness the real game that starts in theatres on August 29th.


This Pan India adrenaline-filled action-adventure has editing by Karthika Srinivas. The film will be released in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages.


Cast: Nani, Priyanka Arul Mohan, SJ Suryah, Sai Kumar


Technical Crew:

Writer and Director: Vivek Athreya

Producers: DVV Danayya, Kalyan Dasari

Banner: DVV Entertainments

Music: Jakes Bejoy

DOP: Murali G

Editor: Karthika Srinivas

Fights: Ram-Lakshman

PRO: Yuvraaj

Marketing: Walls And Trends

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின்

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து,  SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக,  அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !!*



நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம்,   “சூர்யா’ஸ் சாட்டர்டே”   படத்திலிருந்து,  SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !!


நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை  கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர்   வெளியிட்டுள்ளனர்.


வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி  வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அல்லது அதைவிட சக்தி வாய்ந்த நல்ல சக்தி உண்டாகும் எனும் ஒரு புதிரான குறிப்புடன் இந்த  வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவில் SJ சூர்யா ஒரு அதிரடியான காவலராக அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் அதிகாரமற்ற மக்கள் மீது தனது மேலாதிக்கத்தைக் காட்டுகிறார். இந்த கதையில் நமது பகவான் கிருஷ்ணர் (நானி), தனது சத்யபாமாவுடன் (பிரியங்கா மோகன்), ராவணாசுரனை (SJ சூர்யா) எதிர்கொள்கிறார்.


ஆரம்பம் முதல் இறுதி வரை,  பரபர பதட்டத்துடன், வீடியோ ரசிகர்களை முழுவதுமாக கவர்ந்திழுக்கிறது. இது உண்மையில் இரண்டு சக்திவாய்ந்த நபர்களுக்கு இடையிலான போரை காட்டுகிறது. SJ சூர்யா மிரட்டலாக பயமுறுத்தும் அதே நேரத்தில், நானி தனது வலுவான திரைப் ஆளுமையால் பிரமாதப்படுத்துகிறார். இருவரும் தங்கள் ஆற்றல்மிகு நடிப்பால் தீப்பிடிக்க வைக்கிறார்கள். 


விவேக் ஆத்ரேயாவின் தனித்துவமான கதை சொல்லல் நம்மை அசத்துகிறது.  நாட் எ டீஸர் எனும் இந்த வீடியோ சொல்லும் கதை மிக சுவாரஸ்யமாக உள்ளது. முரளி ஜியின் ஒளிப்பதிவு கண்களை கொள்ளை கொள்கிறது, அதேசமயம் ஜேக்ஸ் பெஜாய் தனது அழுத்தமான இசைக்கோர்வையில் காட்சிகளை அழகுபடுத்துகிறார். DVV என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பு பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்துள்ளது.


நாட் எ டீஸர் எனும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ,  வெகுஜன மக்களை ஈர்க்கும் மாஸ் தன்மையுடன் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் உண்மையான ஆடுபுலி ஆட்டத்தை காண, ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். 


இந்த பான் இந்தியா ஆக்சன் அதிரடி-சாகச திரைப்படத்திற்கு கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.


நடிகர்கள்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே. சூர்யா, சாய் குமார்


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து- இயக்கம் : விவேக் ஆத்ரேயா தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி 

பேனர்: டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் 

இசை: ஜேக்ஸ் பிஜாய் 

ஒளிப்பதிவு : முரளி ஜி 

எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ் 

சண்டைப்பயிற்சி : ராம்-லக்ஷ்மன் 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்

https://youtu.be/jVEE7mvg8Sc

*

Actor Sakshi Agarwal celebrates her birthday with members of an old age home

 *Actor Sakshi Agarwal celebrates her birthday with members of an old age home.*













Actor Sakshi Agarwal who has made a mark for herself in Kollywood by being a part of successful films like Kaala, Viswasam, Aranmanai 3, Teddy, Bagheera and others, celebrated her birthday on Saturday. 


Known for being a private person, she spent her special day in the most meaningful way with members of an old age home. She prepared some delicious food and served them. Later, she engaged in some heartwarming moments with elderly people, played games and danced their hearts out. 


The gorgeous actor took to her social media to share this special ocassion. Netizens showed their support and congratulated Sakshi for the same.


On the work front, Sakshi Agarwal just wrapped up shoot for her Malayalam debut and two other films in Kannada and Tamil respectively.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் இசை வெளியீடு

 *கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் இசை வெளியீடு*






இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.‌


:தி ஃபேமிலி மேன்', ' ஃபார்ஸி' ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி  யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார். 


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


இவ்விழாவில் இயக்குநர் சுமன் குமார் பேசுகையில், '' ரகு தாத்தா என்ற படத்தை இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை.‌ என்னுடைய நண்பர்கள் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது..‌ 'உறவினர் ஒருவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவாறே அவருடைய பதவி உயர்வுக்காக இந்தி தேர்வு ஒன்றினை எழுதினார்' என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு என்னை கவர்ந்தது. மேலும் இப்படத்திற்கான கருவாகவும் உருவானது. ஆனால் இது திரைப்படமாக உருவானதற்கு என்னுடைய எழுத்துப் பணியில் உதவியாளர்களாக இருக்கும் ஆனந்த், மனோஜ்... ஆகியோர்களின் கடின உழைப்புதான் காரணம் இவர்களுடன் ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- இசையமைப்பாளர் - ஆடை வடிவமைப்பாளர் -ஒலி வடிவமைப்பாளர்-  ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்தான் சாத்தியமானது.‌ 


இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அற்புதமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.  


இந்த திரைப்படத்தின் கற்பனைத் திறன் மிகு இயக்குநரான விஜய் சுப்பிரமணியம்-  தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.‌ அப்போது தயாரிப்பாளரிடம், 'ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தப் பெண் ஆணின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால்.. அவனுக்கு இந்தி தெரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாள்' என மிக சுருக்கமாக ஒரு கதையை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த கதையை இயக்கவில்லை.‌ ஆனால் வேறொரு கதையை எழுதி, இயக்கியிருக்கிறேன்.‌ 


இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரும் நானும் ஒரு வகையில் 'லூசு'. இந்த இரண்டு லூசும் சேர்ந்து பணியாற்றினால் என்ன மாதிரியான படைப்பு வரும் என்று கேள்வி எழும். அதற்கு விடை அளிக்கும் வகையில் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் நன்றாகவே இருக்கிறது. 


இந்த திரைப்படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை தான் நகைச்சுவையாக பேசுகிறது.'' என்றார். 


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ''  இயக்குநர் சுமன் குமார் கொரோனா தொற்று காலகட்டத்தில் அவருடைய 'தி ஃபேமிலி மேன்'  இணைய தொடருக்கு என்னுடைய இசையில் வெளியான பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக பேசத் தொடங்கினார்.  அந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் வரை சென்றது. அவர் சொன்னது சரிதான். இரண்டு லூசுகள் சந்தித்தால் எப்படி இருக்கும்..? இயக்குநர் சுமன் பயங்கரமான லூசு. அவருடைய பேச்சு ஜாலியாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 


இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை முதன் முதலில் பின்னணி இசை இல்லாமல் பார்க்கும் போது.. ஒரு கே. பாக்யராஜ் படத்தை பார்த்தது போல் இருந்தது. ஒரு தீவிரமான அரசியலை அவர் நகைச்சுவையாகவும், மென்மையாகவும் காட்சிப்படுத்தி இருப்பார். 


அதே தருணத்தில் தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த ஜானர் என்றால்... அது டிராமா தான்.‌ மணிரத்னம் சார்- கேபி சார்-  என பெரிய இயக்குநர்கள் அனைவரும் கதையை மையமாக வைத்து, தங்களது எண்ணத்தை திரைக்கதையாக்கி இருப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  திணிப்புகளில் பலவகையான திணிப்பு இருக்கிறது.‌ குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திணிப்புகள் இருக்கிறது. 


யார் மீதும் எதனையும் திணிக்க கூடாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.‌ அடிப்படையாக நான் நேசிக்கும் விசயம் இப்படத்தில் இருப்பதால் இசையமைக்க கொண்டேன். 


உண்மையை சொல்லப்போனால்... இயக்குநர் சுமனுடன் பாடல்களை உருவாக்குவது எனக்கு எளிதாக இருந்தது. அவருக்கு இசை மீது நிறைய காதல் இருக்கிறது. அவர் கிட்டார் எனும் இசைக்கருவியை வாசிக்கும் கலைஞரும் கூட. அவருக்கு இசை பற்றிய தெளிவான புரிதல் இருந்ததாலும் ... படத்தின் கதை பீரியட் கால கட்டத்தை சேர்ந்தது என்பதாலும்.. புது வகையான ஒலிகளை பயன்படுத்தும் சுதந்திரத்தை கொடுத்தார். 


ஒரு கருத்தை சொன்னால் அது சீரியஸ் என்று அர்த்தம் அல்ல.‌ ஒரு கருத்தை மென்மையாகவும், நகைச்சுவையாகவும் சொல்ல முடியும்.‌ ஒரு கருத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் செல்வது என்பது அழகானது. அதே தருணத்தில் கிண்டலும், நையாண்டியும் நம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் இவை அனைத்தும் இருக்கிறது. 


இந்தப் படத்தில் ராக் மியூசிக் இருக்கிறது. கானா மியூசிக் இருக்கிறது.‌  இந்த கால ரசிகர்களுக்கு பிரீயட்டிக்கான படத்தை தருவதால்.. அந்த காலகட்டத்தில் பயன்படுத்தாத புதிய புதிய இசைக்கருவிகளை பயன்படுத்தலாம். அதற்கான சுதந்திரம் எனக்கு இந்த படத்தில் கிடைத்தது. இதற்காக நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் நுட்பமான அரசியல் படம் வெளியான பிறகு அது தொடர்பான விவாதத்தை எழுப்பும் என்பது என்னுடைய நம்பிக்கை.  


இந்த திரைப்படம் பத்து.. பதினைந்து.. ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், நல்லதொரு படைப்பை வழங்கி இருக்கிறோம் என்ற திருப்தியை ஏற்படுத்தும்.  


ஐந்து பாடல்கள் இருக்கிறது. நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன்.‌ இயக்குநர் சுமன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். வசனகர்த்தா மனோஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.‌ நான் ஒரு பாடலை பாடியிருக்கிறேன்.‌ வித்தியாசமான குரலை பயன்படுத்தி இருக்கிறேன்.


இந்த திரைப்படத்தில் கிட்டார் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது. இதற்காக என்னுடைய நண்பர் விக்ரம்-  கிட்டார் வாசித்திருக்கிறார். 


ஊடகத்திற்கு எப்போதுமே ஒரு சக்தி உண்டு.  நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு அதனை பாராட்டி வெற்றி பெறச் செய்வது. ரகு தாத்தா படத்திலும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ''  சந்தோஷமான தருணம் இது. ரகு தாத்தா ஆடியோ லாஞ்ச் இல்ல .. ரகு தாத்தா இசை வெளியீட்டு விழா.‌ 


இயக்குநர் சுமன் - அறிமுகமான நண்பர் விஜய்யுடன் வருகை தந்து, சந்தித்து கதையை சொன்னார். அவர் கதையை சொல்லிவிட்டு சிரித்து விடுவார்.‌ அதன் பிறகு என்னை பார்ப்பார். அதற்குப் பிறகுதான் நாங்கள் சிரிப்போம். அவர் என்னை பார்க்கும் போது..'காமெடி சொன்னால் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்களே..' என தயக்கத்துடனே எங்களைப் பார்ப்பார். அதன் பிறகு தான் நாங்கள் சிரிப்போம்.‌ அதன் பிறகு தான் அவரிடம் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நடிக்கிறேன் என சம்மதம் சொன்னேன். அவரிடம் உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் 'ரகு தாத்தா'வில் நடிக்கிறேன் என்று சொன்னேன். 


அதே சமயம் எனக்குள் இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்களை திரையரங்கத்திற்குள் இழுத்து வர முடியும்? என்ற தயக்கம் இருந்தது. அதனை இயக்குநரும், விஜயும் நம்பிக்கை அளித்து தயக்கத்தை உடைத்தனர். அவர்கள் கொடுத்த துணிச்சலுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன் எனும்போது இன்னும் பெருமிதம் கூடுகிறது.‌ இதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


நான் நீண்ட நாள்களாக எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் ஆல்பம் 'ரகு தாத்தா'. அனைவரும் இப்படத்தின் பாடல்களை கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஷான் குறிப்பிட்டது போல் இந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இது போன்றதொரு ஆல்பத்தை வழங்கியதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அருகே வா..' என்ற பாடல்  என்னுடைய ஃபேவரைட். 


ஒளிப்பதிவாளர் யாமினியுடன் ஏற்கனவே 'சாணி காயிதம்' எனும் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அது வேறு ஜானர். இந்தப் படத்தில் வண்ணமயமாக அழகாக காட்சி படுத்தியிருக்கிறார்.  அவருடைய பணி நேர்த்தியாக இருந்தது.‌ அதிலும் பெண்  ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. 


இந்த திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த எம். எஸ். பாஸ்கர்-  படபிடிப்பு தளத்தில் என்னை 'பொம்மை பொம்மை..' என்று தான் அழைப்பார்.‌ படத்தில் வசனம் பேசும்போது அவருடைய டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும். படத்தில் தாத்தா- பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. அதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாதது. மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ரகு தாத்தா - ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது.‌ எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஆனால் அது பிரச்சாரமாக இருக்காது. இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும்.  


பொதுவாகவே திணிப்பை பற்றி பேசியிருக்கிறோம். அதில் கதையை தொடர்பு படுத்தும் வகையில் இந்தியை ஒரு உதாரணமாக சொல்லி இருக்கிறோம். 


இந்த படம் எந்த ஒரு அரசியலையோ எதிர்மறையான விசயங்களையோ சொல்லவில்லை.  இது ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம்.  படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தருபவர்கள் படத்தை பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பலாம்.  '' என்றார்.

The audio of Raghu Thatha, a film produced by

 *The audio of Raghu Thatha, a film produced by one of India’s top production houses, Hombale Films, was released with great fanfare on Saturday in Chennai.*






Featuring National Award-winning actress Keerthy Suresh in the lead, Raghu Thatha marks the directorial debut of Suman Kumar, who is best known for having written the scripts of immensely popular web series such as The Family Man and Farzi.


Apart from Keerthy Suresh, who plays the protagonist in the film, Raghu Thatha will also feature Suresh, M S Bhaskar, Ravindra Vijay, Devadarshini, Rajeev Ravindranathan, Jayakumar, Anandsami, Rajesh Balachandiran, Ismath Banu, KS. Mippu, Mukesh, Janaki, Aadhira Pandilakshmi and Chu Khoy Sheng in pivotal roles.


The film, which has cinematography by Yamini Yagnamurthy and music by Sean Roldan, is a  comedy drama that has been produced by producer Vijay Kiragandur on behalf of Hombale Films.  


The entire cast and crew of Raghu Thatha, which has been scheduled for release on August 15, took part in the audio launch function of the film which took place at a star hotel on Saturday with great fanfare.


Speaking at the audio launch event, director Suman Kumar said, “Honestly, I never thought that I would direct a film called Raghu Thatha. I have a friend from Kanyakumari named Kingsley. We were once chilling at the home of Anand Krishnamoorthy, who is the sound designer of this film. Kingsley suddenly said, ‘My grandad pulled my dad’s leg saying he took a Hindi exam in the bank for the sake of getting a promotion. He said, ‘My dad had shouted slogans against the imposition of Hindi but had learnt Hindi for the sake of promotions’.  That was when it struck me that this was a great film idea. This was almost 14 years back and here we are. It would not have been possible without my writing team – Anand, Manoj and Naveen – and my technical team – DoP Yamini Yagnamurthy, Editor T S Suresh, Sound designer Anand Krishnamoorthy and costume designer Poornima.  It is a strong team. I decided that if at all I did this movie, I would do it with only this team, except for a couple of people.


“A lot of people can say a lot of things about this film but I am very proud of one thing about this film – casting. Wonderful actors came together and did such a fantastic job led by Keerthy Suresh, M S Baskar sir, Devadarshini ma’am and my good friend Ravinder Vijay. “


The director went on to say, “How this film happened is creative producer Vijay Subramaniam took me to Hombale’s office where I met the producer. There, he asked me if I had a line to narrate to the producer. I told only one line. I said, ‘There is a boy who is in love with a girl but for him to get her, he needs to learn Hindi.’ The producer was impressed and wanted to do a film on that line. We haven’t done that. We have done something else and you will see.”


Talking about the man of the moment, music director Sean Roldan, director Suman Kumar said, “Both Sean Roldan and I are crazy. When two crazy people work together, you will get to know soon what kind of output you will get.  Thank you for being crazy Sean in this world of mediocrity.”           


The director, who even answered a few questions from the media after his speech, explained that the film was not about opposing Hindi but about resisting the imposition of a language. In fact, the film, he said, dealt with certain impositions on women.


Music director Sean Roldan, who spoke on the occasion, said that director Suman Kumar got in touch with him during the pandemic to discuss the possibility of using his songs for the web series, The Family Man.  “However, that conversation went on for about seven hours. What he said was right. That meeting was just like how it would be when two crazy people meet. Director Suman is one crazy person. The one thing I like most about Suman is that generally, writers are very serious people. I too was expecting Suman to be a serious person. But he spoke like a local person. I liked that about him and I find it really charming about him.” Sean Roldan disclosed.


The music director also said that Keerthy Suresh had come up with a memorable performance in the film. “When I watched this film for the first time without the background score, it was like watching a K Baghyaraj film. That is because his films have a political point to make but they are made in a light-hearted, comical way. At the same time, the kind of Tamil films I love the most are dramas. Be it Mani Ratnam sir, K Balachander sir, Mahendran sir… Be it anybody whom we consider big directors. All of them would have kept the story as the core and would have ridden on an idea.  I liked the idea of this film. Impositions are of many kinds. There are certain impositions on women, in particular. This is a film about impositions. I am someone who personally believes that nobody should impose anything on anybody. So, this film had something that I fundamentally believed in.”


Sean Roldan said that he found working with Suman very easy as the director was a guitarist himself and someone who loved music. Roldan said that as the director had a clear understanding of music and also because the film was a period film, he got the opportunity to try out new sounds.


Stating that one did not have to be serious to make a point, the music director pointed out that they had tried to put across certain points in a sarcastic manner in this film.


The music director, who said that the film had a variety of music in it including Rock music and Gaana music, said that the film was such that even when watched 15 years later, it would give the impression that they had given a good film.  


Stating that the film had a total of five songs, out of which he had penned the lyrics of two and the director had penned the lyrics of one, Sean Roldan said that the musical instrument guitar had been used as a character in the film and that his friend Vikram had played the guitar.


Actress Keerthy Suresh, who spoke on the occasion, said that the event was a happy occasion. “This (film) began with Suman and Vijay reaching out to me. When Suman narrated the script, he would narrate and laugh. Then, he would look doubtfully at us. Only then will I break into laughter. It was only after the narration that I told him that I liked the story, the subject and his approach. However, I also pointed out some inhibitions I had on whether I could pull off such a role. Suman and Vijay were very strong about that. It was the courage they offered me that made me do this. Thank you Suman for having me in Raghu Thatha. “


“Thanks to Vijay Kiragandur sir, Karthik Gowda and Hombale films,” Keerthy Suresh said and added that this was an album that she was waiting to listen for a long time.


She said, “As Sean said, every song in this film will be of a different genre. One will be a reggae, one will be a rock, one will be a gaana song. It is a gem from you. Thank you Sean Roldan. The song that Sean sang, Arugae Va, is a favourite of mine.”


Keerthy also spoke about the cinematographer of the film, Yamini, saying, “I have already worked on Saani Kaayidham with Yamini.  That was a completely different kind of film. This is entirely different and she has brought a different colour and different tone for this film. It is always nice to have a woman in the team. We have a lot of women in the team. That by itself was a very empowering and happy thing, especially such a film.”


The actress also mentioned all her co-actors and thanked them. Speaking about M S Baskar, Keerthy said that M S Baskar sir would address her as ‘Bommai’. Stating that he was very sweet, she praised his timing and spontaneity sense.


Talking about the film, Keerthy Suresh said, “This film is about the imposition on women. It is about all kinds of impositions. We are attempting to deliver a message but this is not going to be preachy. You will understand while you watch the film.”

Saturday 20 July 2024

இயக்குநர் பாலா மீது தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை

 *இயக்குநர் பாலா மீது தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம்*


இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் கடந்த 2003ல் வெளியானது. இந்தப் படத்தை எவர்கிரீன் நிறுவனம் சார்பில் வி ஏ துரை தயாரித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததுடன் நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. ஆனால் இந்த படம் தயாரித்ததில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, இயக்குநர் பாலா தனக்கு 25 லட்ச ரூபாய் தர வேண்டும் என நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் விஏ துரை பல வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். 


இந்தநிலையில் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் அவர் மரணம் அடைந்தார்.


கடந்த வருடம் முதல் இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்து வேகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 இந்த வழக்கை தயாரிப்பாளர் விஏ துரை தொடுப்பதற்கு முன்பே பல சமயங்களில் இயக்குநர் பாலா அவருக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார். ஆனாலும் தயாரிப்பாளர் விஏ துரை அவற்றை கருத்தில் கொள்ளாமல் ஏன் இப்படி ஒரு வழக்கை பாலா மீது தொடர்ந்தார் என்பது ஆச்சரியம் தான்.


அதுமட்டுமல்ல தற்போது இயக்குநர் பாலா, நடிகர் அருண்விஜய் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்திற்கு, அந்த தலைப்பை பயன்படுத்தக் கூடாது என எஸ்.சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து பாலாவிற்கு வணங்கான் தலைப்பை பயன்படுத்திக் கொள்ள தடை இல்லை என அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.


இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் வி ஏ துரை தொடர்ந்த வழக்கிலும் இயக்குநர் பாலாவின் பக்கம் உள்ள நியாயத்தை பறைசாற்றும் விதமாக மீண்டும் ஒரு நியாய தீர்ப்பு கிடைத்துள்ளது இயக்குநர் பாலா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது