Featured post

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee

 டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங...

Thursday, 3 July 2025

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee

 டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங்கள்

 






அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில் உருவான 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், மிடில் கிளாஸ்  குடும்ப வாழ்க்கையை இரசிக்க வைக்கும் கதையாக நம் முன் கொண்டு வருகிறது.

 

அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் ஒருவரைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஒரு சவால் வருகிறது. மிகக் குறைந்த வருமானத்துடன் குடும்பத்தை நடத்தும் கண்ணனும், ('காளி' வெங்கட்) அவரது மனைவி கமலமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்ற போராடும் வாழ்க்கை காட்சிகள்  மிகவும் இயல்பானவையும் நம்மை நெகிழ வைக்கும் வகையிலும் சித்தரிக்கப்படுகின்றன.

 

முதன்மை அம்சங்களாக  குடும்ப உறுப்புகளுக்கிடையேயான ஈகோ,சிக்கல்கள், பொருளாதாரத் தட்டுப்பாடுகள்,

தந்தை-மகள் இடையிலான சண்டைகள்,

உறவுகளுக்கிடையேயான மனக்கசப்புகள் இவை அனைத்தும், ஜோதி ராமையாவின் பார்வையிலும் கதாநாயகனின் குரலிலும் கூறப்படுவதால், ஒரு ‘கதைக்குள் கதை’ வடிவில் நம்மை இணைத்துக் கொள்கின்றன.

 

சிறப்பம்சங்கள் நடிகர்களின் உண்மைத்தன்மை நிறைந்த நடிப்பு

இயல்பு வாழ்வின் நெருக்கங்களை அழகாக சித்தரித்த கதைக்களம்,

இறுதிக்காட்சியின் நெகிழ்ச்சியான பளிச்சிடல்,இயக்குனர் கார்த்திகேயனின் உணர்வோட்டம் நிறைந்த கதை சொல்லல் சரியான அளவில் நம்மை கதையோடு ஒன்றை வைக்கின்றன.

 

பல இயக்குநர்களும், விமர்சகர்களும் பாராட்டிய இந்த திரைப்படம் தற்போது டெண்ட்கொட்டா OTTயில் வெளியாகி இருக்கிறது.மேலும், மலேசிய தமிழர்கள்  இயக்கிய கன்னிரா? திரைப்படம் இந்த வாரம் வெளியிடப்பட்டு இருக்கிறது

 

டெண்ட்கொட்டா — குறைந்த சந்தா தொகையில் 4K மற்றும் Dolby Atmos தரத்துடன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கான சிறப்பான legally streaming சேவை!

 

🎬 இந்த வாரம், உங்களின் குடும்பத்துடன் இணைந்து

‘Madras Matinee’-யை டெண்ட்கொட்டாவில் ஸ்ட்ரீம் செய்ய மறவாதீர்கள்!

Middle-Class Magic: Madras Matinee Now Streaming on Tentkotta

 Middle-Class Magic: Madras Matinee Now Streaming on Tentkotta!

 






Madras Matinee, directed by debutant Karthikeyan Mani, brings the everyday struggles of a middle-class family to the screen with heart and humor. Centered on Jyothi Ramaiah (played by Sathyaraj), a writer of detective novels, the story challenges him to pen a tale about an ordinary man. What follows is a heartwarming and relatable narrative of Kannan (Kaali Venkat) and his wife Kamalam as they navigate life’s financial hurdles while dreaming of a better future for their children.

 

Told through a unique ‘story within a story’ format, the film captures family tensions, generational clashes, and emotional highs with authenticity. The heartfelt performances, realistic screenplay, and touching climax make Madras Matinee a standout.

 

Celebrated by critics and filmmakers alike, Madras Matinee is now streaming exclusively on Tentkotta. Don’t miss this slice-of-life gem — best enjoyed with family! Also, the Malaysian Tamil-directed film Kannira? has been released.

 

Stream now on Tentkotta — your home for quality Tamil cinema in 4K & Dolby Atmos.

Paranthu Po Movie Review

 Paranthu Po Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம பறந்து போ   படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது director ram . இந்த படம் நாளைக்கு release ஆக போது. இந்த படத்துல  Shiva ,  Mithul Ryan  Grace Antony, Anjali, Vijay Yesudas, Aju Varghese னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இந்த வருஷம் feb 4 ஆம் தேதி நடந்த  International Film Festival Rotterdam  ல premiere show வா போட்டுஇருந்தாங்க.  director ram ஓட படங்களுக்கு எப்பவுமே ஒரு emotional background இருக்கும் அந்த emotional sequences எல்லாமே நம்ம ஆழ்மனச வருடற விதமா இருக்கும் னே சொல்லலாம். 2019 ல வெளியான mamooty ஓட peranbu படத்துக்கு அப்புறமா 9 வருஷம் கழிச்சு இந்த படத்தை இயக்கி இருக்காரு. 

எப்பவுமே ரொம்ப emotional அ கதைக்களத்தை எடுக்கறவரு இந்த தடவ கொஞ்சம் வித்யாசமா கதையை இயக்கி இருக்காரு னு தான் சொல்லணும். எமோஷன் ஓட சேந்து கொஞ்சம் comedy யும் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்காரு. வாழக்கை க்கு தேவையான விஷயங்களை light அ எடுத்து சொல்லி அதுகூட music யும் comedy யம் சேந்து குடுத்திருக்க விதம் கண்டிப்பா audience க்கு ரொம்பவே பிடிக்கும். 

Paranthu Po Movie Review: https://www.youtube.com/watch?v=Ki3bCTti8Hg

இந்த படத்தோட கதை என்னனு பாத்தோம்னா, anbu அ நடிச்சிருக்க mithul 8 வயசு பையன். ரொம்ப பிடிவாத குணமும் சுட்டித்தனமும் கொண்ட ஒரு பையன இருக்கான். இவனோட parents தான் gokul அ நடிச்சிருக்க shiva அப்புறம் glory அ நடிச்சிருக்க grace antony . தன்னோட பையன்க்காக எல்லாமே best அ தான் குடுக்கணும் னு கஷ்ட படுற parents அ இருக்காங்க. ஒரு சாதாரண middle class family ல என்னனா கஷ்டங்கள் இருக்குமோ அதெல்லாமே இருக்கு. emi கட்டுறது, பையனுக்கு எல்லா வசதியும் செஞ்சு குடுக்கறதுக்காக நாள் full அ கஷ்டப்படுறது, அதோட தினசரி இவங்க சந்திக்கிற சின்ன சின்ன பிரச்சனைகள் னு ஒரு சாதாரண குடும்பமா தான் வாழ்ந்துட்டு வராங்க. அப்போ தான்  city ல இருக்கற pressure ல இருந்து தப்பிக்கணும் ஒரு rest வேணும் ண்றதுக்காக ஒரு road trip க்கு போறாங்க. அப்படி போற வழில நெறய ஆட்கள், வேற வேற சூழ்நிலைகளை சந்திக்கறாங்க. இதுனால அப்பாவும் பையனும் உலகத்தை வேற கண்ணோட்டத்துல பாக்க ஆரம்பிக்குறாங்க. இந்த moments எல்லாமே soul touching அ உருவாக்கி இருக்காரு director ram. வீட்ல என்ன miss ன்றாங்க ன்றதா ரெண்டு  பேரும்  கத்துக்கறாங்க. 



குடும்பத்துக்குள்ள இருக்கற connection , understanding எவ்ளோ முக்கியம் , இந்த வேகமான உலகத்துல குடும்பத்தை சார்ந்து இருக்கற என்னனா விஷயங்களை இழக்கிறோம் ன்றதா தான் இந்த படத்துல தெளிவா சொல்லிருக்காங்க னே சொல்லலாம். அன்போட simple அ வாழுறது தான் உண்மையான சந்தோசமான வாழக்கை னு சொல்ல வராரு. உதாரணத்துக்கு ஒரு சின்ன எடத்துல இல்ல இயற்கையோட குடும்பத்துல இருக்கற எல்லாரும் ஒண்ணா சேந்து இருக்கிறதே பெரிய சந்தோஷம் தான் னு சொல்லலாம். என்ன தான் பிரச்சனை வந்தாலும் எப்பவும் positive  அ சூரியகாந்தி பூ போல bright அ இருக்கணும் னு சொல்லறாங்க. அது மட்டும் இல்ல படத்துல அந்த பையன் சின்ன சின்ன விஷயங்களை கத்துப்பான், அதுவே ஒரு பெரிய achievement தான. இந்த மாதிரி சின்ன சின்ன moments தான் soulful அ இருக்குனு சொல்லலாம். 


ram ஓட direction ல வெளி வந்திருக்க இந்த படத்துல shiva வ வேற ஒரு role ல பாக்குறோம் னே சொல்லலாம். ஒரு அப்பாவா பாசம் காமிக்கிறது, குடும்பத்தை பாத்துகிறது அதோட தப்பு பண்ண அதுல இருந்து காத்துக்கிறது னு ஒரு super ஆனா performance  அ குடுத்திருக்காரு. mithul rayan சுட்டித்தனமாவும், அதே சமயம் கஷ்டமான கேள்விகளை கேக்குறது னு ஒரு இயல்பான நடிப்பை வெளி படுத்திருக்காரு. grace antony ஓட நடிப்பும் பிரமாதமா இருந்தது. இவங்கள தவிர்த்து படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors ஆனா anjali , aju varghese , vijay yesudas , shiva க்கு அப்பாவா நடிச்சிருக்க balaji sakthivel  னு இவங்களோட நடிப்பும் இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. 


படம் பாக்கும் போது இதுல comedy இருக்கமா னு சந்தேகம் வரும் ஆனா நம்ம அறியாமலே சிரிக்க வைக்கிற மாதிரியான comedy scenes நெறய இருக்குனு சொல்லலாம். ஒரு சின்ன குழந்தைக்கும் புரிரா மாதிரி தான் இந்த உலகத்துல நடக்கற இயல்பான விஷயங்களை சொல்லிருக்காரு director . எதிர்க்காலத்துக்காக ஓட போய் நிகழ்காலத்துல நடக்கற விஷயங்களை விட்டுராதீங்க, மறந்துராதீங்க ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்து னே சொல்லலாம். மொத்தத்துல இந்த படத்துல இருந்து சொல்ல வர்ரது ஒரே ஒரு விஷயம் தான் சின்ன சின்ன விஷயங்களை இருந்தாலும் சந்தோசமா வாழக்கை யை நடத்துங்க ன்றது தான். 


ஒரு feel  good  movie  னு தான் சொல்லவே. சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and  friends  ஓட சேந்து theatre  ல போய் பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

Phoenix Veezhan Movie Review

 Phoenix Veezhan Movie Review: https://www.youtube.com/watch?v=7ckkJip9Un8


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pheonix  படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இது ஒரு sports  action drama . இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது anl arasu . vijay sethupathi ஓட மகனான surya vijay சேதுபதி தான் இந்த படத்துல lead role ல நடிச்சிருக்காரு. இவரோட சேந்து Varalaxmi Sarathkumar , Devadarshini , J. Vignesh , Abi Nakshatra, Varsha , Sampath Raj, Muthukumar, Dileepan, Ajay Ghosh, Harish Uthaman, Munnar Ramesh, Naveen, Rishi, Nandha Saravanan, Aadukalam Murugadoss, , Sreejith Ravi, Aadukalam Naren னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. 

Phoenix Movie Video Review: 

இந்த படம் நாளைக்கு release  ஆக போது. anal arasu ஒரு stunt chereographer . இவரு fight master அ tamil , telugu, malayalam , hindi னு பல படங்கள் ல work பண்ணிருக்காரு. இப்போ இவரு ஒரு director அ இந்த படத்துல அறிமுகம் ஆகுறாரு. அது மட்டுமில்ல surya ஒரு actor அ நடிக்கிற முதல் படமும் இது தான். இந்த படம் நாளைக்கு release  ஆக போது.


சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். இந்த படத்தோட கதை north  சென்னை ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. படத்தோட starting  லேயே MLA  வா இருக்கற sampath  raj  அ கொடூரமான முறைல கொன்னுடுறாங்க. இந்த கொலைக்கு காரணம் surya  vijaysethupathi தான் னு இவரை arrest  பண்ணி juvenile home ல அடைச்சு வைக்கிறாங்க. surya அங்க போன ஒடனே நெறய கஷ்டங்களை சந்திக்குறாரு அது மட்டும் கிடையாது mla ஓட ஆட்களும் surya வை பழி வாங்குறதுக்காக காத்துகிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் தன்னை கொல்லவந்தவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறது இன்னொரு பக்கம் trauma ல இருந்து வெளில வருதுன்னு  ரொம்பவே கஷ்டப்படுறாரு surya. surya எதுக்காக இந்த mla வை கொல்லனும்? இதுக்கான காரணம் என்ன? இவரை சுத்தி நடக்கற பிரச்சனை ல இருந்து surya தப்பிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


surya வா நடிச்சிருக்க surya vijaysethupathi ஒரு raw ஆனா performance அ வெளி படுத்தி இருக்காரு. இவரோட screen presence , body language, dialogue delivery னு எல்லாமே  அட்டகாசமா  இருந்தது. varalakshmi  sarathkumar ஒரு வில்லத்தனமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க. மத்த supporting  actors  ஆனா abhinaya , devadharshini , vignesh எல்லாரோட நடிப்பும் நல்ல இருந்தது. அதுமட்டுமில்லாம ஒரு emotional  ஆனா impact அ இவங்க படத்துக்கு குடுத்திருக்காங்க னே சொல்லலாம். 


anal arasu ஒரு stunt chereographer ண்றதுனால action scenes எல்லாம் அவ்ளோ interesting அ இருக்கிற மாதிரி படத்துல வச்சிருக்காரு. படத்தோட first  half ஏ energetic அ போகுது னு சொல்லலாம். அப்புறம் அப்படியே second half ல வர flashback அப்புறம் நடக்கற action sequences னு எல்லாமே super அ இருந்தது. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ gripping அ கதையை கொண்டு போயிருக்காங்க. என்ன தான் இந்த revenge எடுக்கற theme பழைய கதையை இருந்தாலும் அதா கொண்டு வந்த விதம் ரொம்ப different ஆவும் engaging ஆவும் இருந்தது னு தான் சொல்லணும். படத்தோட technical aspect னு பாக்கும் போது எல்லாமே இந்த படத்துக்கு plus அ தான் அமைச்சிருக்குனு சொல்லணும். editing work ரொம்ப sharp அ clear அ குடுத்திருக்காங்க, தேவையில்லாத scenes னு நம்ம எதுவுமே சொல்ல முடியாது ரொம்ப fast அ கொண்டு போயிருக்காங்க. அப்புறம் cinematography யும் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்குனு சொல்லலாம். அப்புறம் இந்த படத்துல வர bgm  அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. முக்கியமா action sequences க்கு வர bgm எல்லாமே அட்டகாசமா இருந்தது னு தான் சொல்லணும். 


எப்படி pheonix பறவை எதனை தடவை அழிஞ்சு போனாலும் திரும்பவும் உயிரோட வருதோ அதே மாதிரி தான் இந்த படத்துல நடிச்சிருக்க surya எவ்ளோ கஷ்டங்கள் வந்தாலும் ஒரு pheonix பறவையை போல எதிர்த்து நிக்குறாரு.  மொத்தத்துல ஒரு emotional ஆனா, revenge drama தான் இந்த pheonix திரைப்படம். கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and  friends  ஓட சேந்து theatre  ல போய் பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

3BHK Movie Review

3BHK Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம 3 bhk படத்தோட review அ தான் பாக்க போறோம். ஸ்ரீகணேஷ் தான் இந்த படத்தோட கதையை எழுதி direct யும் பண்ணிருக்காரு. aravindh sachidanatham அவர்களுடைய சிறுகதை ஆனா 3bhk வீடு ன்ற கதையை base பண்ணி தான் இ


ந்த படம் எடுத்துருக்காங்க . Siddharth, R. Sarathkumar, Devayani, Yogi Babu , Meetha Raghunath , chaitra j achar , subbu panchu , vivek prasanna னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இது ஒரு family drama னு சொல்லலாம் அப்புறம் இந்த படம் நாளைக்கு release ஆக போது. இந்த படம் siddharth க்கு 40 ஆவுது படம் அதுமட்டும்கிடையாது, 20 வருஷம் கழிச்சு மறுபடியும் sarathkumar and devayani ஒண்ணா நடிச்சிருக்காங்க. chaitra j achar க்கு இது தான் முதல் தமிழ் படம் இவங்க கன்னட ல படம் பண்ணிருக்காங்க. 

3BHK Movie Video Review: https://www.youtube.com/watch?v=VWKR8E4Z-JM

என்னதான் இந்த படம் நாளைக்கு release அகா போறத இருந்தாலும் நேத்து இந்த படத்தை சினி actors க்கும் movie influencers க்கும் போட்டு காமிச்சாங்க. அதுல நடிகர் simbu அவரோட X தள பக்கத்துல ஒரு நல்ல emotional ஆனா படம் நும் sarathkumar அப்புறம்  siddharth ஓட நடிப்பு நல்ல இருந்தது னு comment பண்ணிருந்தாரு. இன்னும் பலர் இந்த படத்தை வெகுவா பாராட்டி இருந்தாங்க. படத்தோட title அ பாத்த அப்பவே புரிஞ்சுருக்கும், ஒரு வீட்டை base பண்ணி தான் கதை நகர்து. விலைவாசி எல்லாம் ஏறிப்போயிடுச்சு, இந்த மாதிரி சூழல் ல ஒரு சொந்த வீடு வாங்குறது ன்றது எவ்ளோ கஷடம் நும் பல பேருக்கு தெரியும் அதுவும் ஒரு middle class family னா சொல்லவே வேண்டாம். ஒரு சிலர்க்கு சொந்த வீடு வாங்கணும் ன்றது கனவா இருக்கும்,  ஒரு சிலர்க்கு மரியாதையோட இருக்கணும்ன்றதுக்க்காக இருக்கும். இந்த மாதிரி ஒரு ஓடத்துல எத்தனை பேர் அவங்களுக்குனு ஒரு சொந்த வீட்டை வாங்கிருக்காங்க ன்றது ஒரு பெரிய கேள்விக்குறி தான். 


சோ இந்த படத்தோட கதைல பாத்தீங்கன்னா ஒரு middle class குடும்பம் நெறைய கஷ்டத்தை சந்திக்கறாங்க, அவங்களோட ஒரே கனவு சொந்தமா ஒரு 3bhk வீட்டை வாங்குறது தான். vasudhevan அ நடிச்சிருக்க sarathkumar , shanthi யா நடிச்சிருக்க devayani husband and wife அ இருக்காங்க. இவங்களுக்கு prabhu வா நடிச்சிருக்க siddharth யும் aarthy யா நடிச்சிருக்க meetha raghunath னு ரெண்டு பெரிய பசங்க இருக்காங்க. இவங்க ஒரு சின்ன middle class family யை சேர்ந்தவங்க தான். vasudevan தான் வேலைக்கு போய் தன்னோட குடும்பத்தை பாத்துக்குறாரு. இவங்க  வாடகை வீட்ல தான் தங்கி இருப்பாங்க,  ஆனா அடிக்கடி வீட மாத்திட்டே இருப்பாங்க. vasudevan யும் சொந்தமா வீடு வாங்குறதுக்காக காசு சேத்து வச்சுட்டு இருப்பாரு அவரை பொறுத்த வரைக்கும் சொந்தமா வீடு இருந்தாதான் மரியாதை இருக்கும் ன்றது அவரோட எண்ணம். 


எப்பலாம் இவங்க  வீடு வாங்கணும் ன்ற  கனவை அடையும் போது திடுருனு எதாவுது  ஒரு தேவையை சந்திக்கறாங்க. கடைசில வீடு வாங்குறது முக்கியமா இல்ல அந்த தேவையை solve பண்ணறது முக்கியமா னு வரும் போது இந்த தேவையை  solve பண்ணறது தான் முக்கியம் ன்ற situation க்கு தள்ள படுறாங்க. தன்னோட பையன் பையன் படிப்புக்கு செலவு பண்ணுறாரு vasudevan. அப்போ தான் தன்னோட பையனும் நம்மோட கனவுக்கு உறுதுணையா இருப்பான் ன்ற எண்ணத்தோட இருக்காரு. ஆனா prabhu க்கும் இவரோட அப்பா மாதிரியே வேற ஒரு சில பிரச்சனைகளை face பண்ணிட்டு இருப்பாரு. கடைசில இந்த குடும்பம் ஒரு வீட்டை வாங்குனாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஓவுவுறு வாட்டியும் ஏதாவுது பிரச்சனைகள் வரும்போது அதையும் எதிர்த்து நின்னு விடாம ஓடிக்கிட்டே இருக்கிறது தான் middle class family ஓட mentality ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. வாழ்க்கையே ஒரு race மாதிரி தான், நம்ம தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கணும், இந்த மாதிரி போகும் போது ஓவுவுருத்துரும் என்னனா கஷ்டங்களை சந்திக்கறாங்க ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்து னு சொல்லலாம். நம்ம ஒரு லட்சியம் அடையும்போது தான் நெறய விஷயங்கள சந்திப்போம் உதரணத்துக்கு திடுருனு medical செலவு வர்ரது, education fees கட்டுறது இல்லனா family emergency னு நம்ம சொல்லிட்டே போகலாம். இந்த மாதிரி நெறய moments இந்த படத்துல director குடுத்துருக்காரு. அதுனால படத்தை பாக்குற audience  க்கு இதெல்லாத்தயுமே relate பண்ணிக்க முடியும். 


ஆனா எல்லா middle class family யும் இவங்க குடும்பம் மாதிரி இருக்கும் னு தான் தெரியல. vasudevan எந்த ஒரு முக்கியமான விஷயத்தை decide பண்ணனும் னாலும் முதல அவரோட குடும்பத்துக்கிட்ட தான் கேட்பாரு. எல்லாத்தயும் இவரோட மனைவி கிட்டயும் பசங்க கிட்டயும் சொல்லுவாரு. பசங்கள உதாசீன படுத்தாம அவங்க  ஒரு விஷயம் சொன்ன அதா consider பண்ணிக்குறாரு. இந்த மாதிரி விஷயங்கள் தான் இன்னும் இந்த படத்துக்கு அழகா சேக்குது னு சொல்லலாம். real estate ல நடக்கற விஷயங்கள் ல இருந்து society ஓட pressure வரைக்கும் இதுல explore பண்ணிருக்காங்க. ஒரு குடும்பத்துல எடுக்கற எல்லா முடிவுகளும் நன்மை ல போய் முடியும் னு கட்டாயம் கிடையாது அதுக்காக ஒருத்தர் மேல தப்பு சொல்ல்றதுனாலயும் ஒன்னும் ஆகப்போறதில, அதுனால பண்ண தப்பு ல இருந்து கத்துக்கிட்டு மறுபடியும் புதுசா ஆரம்பிக்குறதுல தான் வாழக்கை இருக்கும்னும் இதுல வயசு லாம் முக்கியம் கிடையாது நும் எடுத்து சொல்லிருக்காங்க. 


siddharth ஓட performance super அ இருந்தது. ஒரு நல்ல எதார்த்தமான நடிப்பு. கிட்டத்தட்ட chitha படம் போலவே இந்த படத்துலயும் இவருக்கு மக்கள் கிட்ட இருந்து ஒரு  நல்ல வரவேற்பு இருக்கும் னே சொல்லலாம். sarathkumar அ பத்தி சொல்லவே வேண்டாம், ஒரு குடும்ப தலைவர , தன்னோட குடும்பத்துக்காக ஓடி உழைக்குறது, பசங்களுக்கு உறுதுணையா நிக்குறது னு ஒரு பக்க middle class family man ஆவே நடிச்சிருக்காரு. meetha raghunath ஓட நடிப்பால எல்லாரையும் அவங்க பக்கம் ஈர்க்குறாங்க னு தான் சொல்லணும். அவ்ளோ அழகா நடிச்சிருக்காங்க. கடைசியா தேவயானி இவங்களோட நடிப்பு ரொம்ப natural அ இருந்தது. இவங்கள தவிர்த்து supporting actors அ நடிச்சிருக்க chaitra , yogi babu, subbu panchu , vivek prasanna னு இவங்களோட நடிப்பும் சிறப்ப இருந்தது. 


amrit ramnath தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. songs and bgm எல்லாமே இந்த படத்துக்கு ஏத்த மாதிரி soulful அ இருந்தது னு தான் சொல்லணும். Dinesh B Krishnan and JIthin ஓட cinematography ஒரு சாதாரண middle class family ஓட கஷ்டங்களை வலிகளை audience ஓட கண் முன்னாடி நிறுத்திட்டாங்க னு தான் சொல்லணும். மொத்தத்துல actors ஓட strong ஆனா performance , realistic ஆனா கதைக்களம் ஒரு good feel movie தான் இந்த 3 bhk  திரைப்படம். கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and  friends  ஓட சேந்து theatre  ல போய் பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

சத்யராஜ் - காளி வெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்னி' ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு*

 *சத்யராஜ் - காளி வெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்னி' ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு*



மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'


திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களுக்கு டிஜிட்டல் தளங்களிலும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஜூலை நான்காம் தேதியன்று அமேசான் பிரைம் (இந்தியா), சன் நெக்ஸ்ட்,சிம்பிள் சவுத் ( வேர்ல்ட் வைட்) மற்றும் டென்ட் கொட்டா ஆகிய முன்னணி டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. 


நடுத்தர மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாகவும் , யதார்த்தமாகவும் விவரித்திருக்கும் 'மெட்ராஸ் மேட்னி ' திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடத்திலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி

 *”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!*






ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. 


நடிகை கிரேஸ் ஆண்டனி, "ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.


*நடிகர்கள்:* சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக் குழு:* 


எழுத்து, இயக்கம்: ராம்,

ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,

படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,

இசை: சந்தோஷ் தயாநிதி,

பாடல் வரிகள்: மதன் கார்க்கி,

தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,

சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,

காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,

நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,

ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,

ஆடியோகிராஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்,

கலரிஸ்ட்: ராஜசேகரன்,

விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,

ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,

ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,

விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி,

தயாரிப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்,

தயாரிப்பாளர்கள் : ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்,

உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர்

Wednesday, 2 July 2025

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 




ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 


BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை”  புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. 


காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க,  நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 


பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என  அன்பின் ஐந்திணையைக் கொண்டு, அழகான ரொமாண்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. 


இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட் சன்,  கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை  V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். 


இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu

 Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu after watching Animal






It is known that Bobby Deol is playing the role of Mughal emperor Aurangzeb in Pawan Kalyan’s upcoming film Hari Hara Veera Mallu. The period drama is directed by Jyothi Krishna. Initially, Bobby Deol shot some scenes in the film. But later, after the director watched Bobby’s performance in Animal, he decided to completely re-write and redesign his character in Hari Hara Veera Mallu.


“Bobby Deol’s garu performance in Animal was spell bounding. His ability to convey emotions through expressions alone, despite the character's lack of dialogues was something we all were blown away. I decided to change the arc of his character in our film too, and give a complete makeover,” said Jyothi Krishna. His desire to improve the character's arc and better fit the role’s strength was the key to bring emotional depth in Bobby Deol’s performance. The revised role amplifies certain aspects of the character's personality and infuse more riveting and compelling performance.


The director made major adjustments to the character's personality, backstory, motivation, and physical portrayal. Jyothi Krisna felt that Aurangzeb’s character needs a more compelling arc to do justice to Bobby Deol’s new-found stardom and live up to his expectations. “When I narrated the revised script, Bobby garu was very excited. He is an actor who always likes to explore different possibilities and present a newer version of himself to the audiences. In Hari Hara Veera Mallu, Bobby Deol looks more intense. His powerful screen presence, elegance and the way he expresses a lot with his eyes speaks volumes. Working with him has been a great experience,” shared the director.

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய

 • ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!






• ‘அனிமல்’ தாக்கம்: ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை புதுப்பித்த ஜோதி கிருஷ்ணா!


• ‘அனிமல்’ படத்தில் பாபி டேயோலின் நடிப்பு, ஹரி ஹர வீரமல்லு இயக்குநரின் கதாபாத்திர மறுஉருவாக்கத்தை தூண்டியது!


• ஹரி ஹர வீரமல்லுவில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மீண்டும் கவனித்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!


பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும்

தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார்.


படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார்.


“பாபி டேயோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரி ஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் வழித்தோணியை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்,” என்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.


இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஔவரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி டேயோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.


“புதிய கதாபாத்திர வடிவத்தை நான் அவரிடம் சொன்னபோது, பாபி டேயோல் அவர்கள் மிகுந்த உற்சாகத்தைத் தெரிவித்தார். அவருக்கு, சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். ஹரி ஹர வீரமல்லு படத்தில் அவர் மிகுந்த தீவிரம் கொண்ட தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது பார்வையின் மூலம் தான் சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது,” என்கிறார் இயக்குநர்.


இவ்வாறு புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி டேயோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை

 *"மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை எதிர்பார்க்கிறார்கள்!" - சையாரா படத்தின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மூவரும் ஒன்றாக இணைந்தது குறித்து மோஹித் சூரி.*




அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து  'தும் ஹி ஹோ' பாடலும் அடங்கும்.மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் இசைக்காக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை மோஹித் விரும்புகிறார். 


மோஹித் கூறுகையில், “நட்சத்திரங்கள் இணையும்போது, ​​ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு நான் நட்சத்திரங்களை பாராட்டுகிறேன்.ஏனென்றால் நம் நாட்டின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக்கூடிய இந்த இரண்டு இசை கலைஞர்களுடன் எனது சிறந்த இசையை உருவாக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.”


மிதூனுடன் 2 தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் அவரது அற்புதமான இசைப் பயணத்தைப் பற்றி மோஹித் கூறுகையில், “மிதூனும், நானும் 2005ம் ஆண்டில் ஜெஹர் & கல்யுக் திரைப்படத்தில் இசையமைத்ததிலிருந்து எங்கள் பயணம் தொடர்கிறது. மிதூனை அறிந்து, அவருடன் இசையை உருவாக்கி, அவரது புத்திசாலித்தனமான மனதைப் பாராட்டி 20 ஆண்டுகள் ஆகிறது.  2005ம் ஆண்டில் இருந்து, மிதூனும் நானும் மர்டர் 2, ஆஷிகி 2, ஏக் வில்லன், ஹமாரி அதுரி கஹானி, ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட், மலாங், இப்போது சையாரா .எங்கள் படைப்புகளைப் பார்ப்பதில் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக நாங்கள் ஒன்றாக உருவாக்கிய காதல் பாடல்கள்” .


“எனவே, மிதூனும் நானும் இணையும் போதெல்லாம், ஒரு சிறந்த பாடலை வழங்க எங்களிடமிருந்து பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும்.மேலும் அந்த அழுத்தத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு தான் புதிதாக ஒன்றை உருவாக்க எங்களை தூண்டுகிறது.பேசப்பட வேண்டிய மக்களால் விரும்பப்படும் ஒரு பெரிய பாடலை வழங்க எங்களை தூண்டுகிறது.”


இந்திய சினிமாவில் சிறந்த பாடகராகக் கருதப்படும் அரிஜித் சிங்குடனான அவரது ஒத்துழைப்பைப் பற்றி மோஹித் கூறுகையில் , “அரிஜித் சிங் இந்த வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்க அற்புதமான நினைவுகளைத் தந்த ஒரு பாடகர். ஆஷிகி 2 இன் தும் ஹி ஹோ, சாஹுன் மைன் யா நா, ஹம் மர் ஜாயேங்கே போன்ற பாடல்களிலிருந்து ஏக் வில்லனில் ஹம்டார்ட் வரை, ஹமாரி அதுரி கஹானி டைட்டில் டிராக் , ஹாஃப் கேர்ள்ஃபிரண்டில் ஃபிர் பி தும்கோ சாஹுங்கா , மலாங்கில் சல் கர் சாலன் வரை அரிஜித் பாடிய பாடல்கள் மட்டுமல்ல, அவை என் இதயத்தின் துண்டுகள்”.


நாங்கள் மூவரும் ஒன்றாக இணையும்போது மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள் என்றும், சையாராவில் அந்த அழுத்தத்தை அவர் அனுபவிக்கிறார் என்றும் மோஹித் கூறுகிறார். 


 "இயற்கையாகவே, மிதூனும் அரிஜித்தும் நானும் ஒன்றாக இணையும்போது, ​​மக்கள் மறக்க முடியாத ஒரு பாடலைக் தருவோம் என எதிர்பார்கின்றனர்  என்பதை நாங்கள் அறிவோம், அந்த எதிர்பார்ப்பை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மூவரும் மீண்டும்  சையாரா படத்தில் இடம்பெற்ற துன் பாடலுக்காக இணைகிறோம்.இது எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்த பாடல். பிரபஞ்சம் எப்படியோ எங்கள் மூவரையும் ஒவ்வொரு முறையும் ஒன்றிணைத்து மிகவும் எளிமையான மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சிபூர்வமான பாடலை உருவாக்குகிறது, "


துன் பாடலைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், "துன் என்பது காதல் வாழ்க்கையில் போராட்டத்தைக் கொண்டாடும் ஒரு பாடல், மேலும் உண்மையான போராட்டம் யாருக்கும் அனைத்து தடைகளையும் கடக்க உந்துதலை வழங்கும்.  துன் என்பது ஒருபோதும் கைவிடாத உணர்வு ,எல்லோரும் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்."


மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் படமான சையாரா , காலத்தால் அழியாத காதல் கதைகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது.


இந்தப் படத்தில் அஹான் பாண்டே கதாநாயகனாக அறிமுகமாகிறார் கதாநாயகியாக அனீத் பத்தாவை (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கொள்ளை கொண்டவர்) என்பவர் நடித்துள்ளார். 


நம் காலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இளம் காதல் படமாக சையாரா படம் உள்ளது . இதுவரை இந்த இசை ஆல்பத்தில் இருந்து நான்கு பாடல்களான சையாரா , ஜூபின் நௌடியாலின் பர்பாத், விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ & சச்செட்-பரம்பராவின் ஹம்சஃபர் ஆகியவை இந்திய இசை அட்டவணையில் அலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 


சையாரா பட பாடல்களைத் தவிர,  இந்த படத்தின் தலைப்பான சையாராவும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 

சாயாரா படத்தை யாஷ் ராஜ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார், இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Yash Raj Films release the next song from Saiyaara, Dhun, that reunites the dream musical trio of Arijit Singh, Mithoon & Mohit Suri

 *Yash Raj Films release the next song from Saiyaara, Dhun, that reunites the dream musical trio of Arijit Singh, Mithoon & Mohit Suri!*




The blockbuster musical trio of Arijit Singh, Mithoon and Mohit Suri, who have created some of the biggest historic chartbusters in the Hindi film industry including Tum Hi Ho from Aashiqui 2, 

are back for Saiyaara’s next song Dhun which has been released today by Yash Raj Films! 


Watch the song here : 

https://youtu.be/cUmUOb7j3dc?si=0nyJyZ4Xd0yx3xQi


Mohit shares a spectacular musical journey with Mithoon spanning for over 2 decades now. They started their collaboration in 2005 when they did Zeher & Kalyug. Since 20 years, Mithoon & Mohit have worked on the biggest film music albums of our times like Murder 2, Aashiqui 2, Ek Villain, Hamari Adhuri Kahaani, Half Girlfriend, Malang and now Saiyaara.


Before coming together in Saiyaara, Arijit Singh, regarded as an all-time best singer that India has ever produced, has collaborated with Mohit Suri on several soulful hits like Tum Hi Ho, Chahun Main Ya Naa, Hum Mar Jayenge, etc from Aashiqui 2, to Humdard in Ek Villain, to Hamari Adhuri Kahani title track, to Phir Bhi Tumko Chaahunga in Half Girlfriend, to Chal Ghar Chalen in Malang.


The much-anticipated romantic film, Saiyaara, brings together Yash Raj Films and Mohit Suri, both known for creating timeless love stories, for the first time! Saiyaara has so far garnered unanimous praise for delivering an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills. 


The film launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine. 


Saiyaara is buzzing these days as the most anticipated young romantic film of our times. It has delivered the best album of the year with all songs from Saiyaara, Jubin Nautiyal’s Barbaad, Vishal Mishra’s Tum Ho Toh, Sachet-Parampara’s Humsafar and now Dhun have captured audience attention and are making waves on the musical charts of India! 


YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.


Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”*













*SJ Suryah Directorial-Starrer “Killer”*



*Shooting Starts with Ritual Pooja Ceremony*


It’s time for the ardent fans to celebrate this moment! After a long wait and hiatus, S.J. Suryah is making his directorial comeback through his ambitious dream project “Killer”, which had its shooting commenced with a ritual pooja ceremony.


S.J. Suryah, proving his unparalleled caliber as an extraordinary actor on the Indian level, kept his fans on a prolonged wait to witness his directorial excellence. With the official confirmation arriving from S.J.Suryah himself, the cinephiles are overjoyed now.


The director-actor embarked on his directorial journey with Ajith Kumar’s ‘Vaali’, and stole the entire South Indian spotlights. His second outing ‘Kushi’, grabbed the attention of entire Indian industry. He was among the earliest to break linguistic barriers in Indian cinema, long before the term ‘Pan-India’ became a trend.


After a couple of blockbuster directorial projects, he made his debut as an actor through the film ‘New’, which enthralled the entire industry. He continued to exhibit his acting prowess in different scripts and diversified characters.


He has now been fondly ennobled as ‘Nadippu Arakkan’ by the fans of several regional industries, but what kept them so curious was his directorial comeback. Now his announcement with “Killer” – an edge-seated action thriller has quenched their prolonged wait.


He returns with the same fiery energy that marked his earlier works, promising an out-and-out commercial entertainer packed with love, drama, and high-octane action sequences. Famous Indian actress Preethi Asrani is playing another lead role. 


Speaking about his comeback, S.J..Suryah shares, "To reach my dream position of 'MGR of India' (only in the artistic world), right from my childhood, I have been highly ambitious, always dreaming of this goal and consistently fighting for and working towards it. Now, I have stepped into the arena with utmost sincerity like a debut director & a debut actor, seeking everyone's love & blessings for this new project.". ‘Killer’ is my dream project. I’ve been writing it for the past few years, and it’s a film that’s going to bring joy to people, just like Kushi did.


I feel proud to be collaborating with one of South India’s biggest production houses, Sree Gokulam Movies, headed by Gokulam Gopalan Sir, is producing this film jointly with Angel Studios to create a Pan-Indian grandeur.”


The film’s shooting commenced on June 27 with a ritual pooja ceremony.


The film is being made in five languages, with shooting planned to take place across various locations in India. Additionally, a few key sequences will be filmed in Mexico, adding to the film’s international scale.


Details regarding the cast, lead actors, and the technical crew will be officially announced in the coming days.



மீண்டும் இயக்குநராக* *களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா .* *“கில்லர்” படத்தை இயக்கி நடிக்கிறார்

 *மீண்டும் இயக்குநராக* *களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா .*  *“கில்லர்” படத்தை இயக்கி நடிக்கிறார்!* 

*எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் “கில்லர்” !* 

*பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!* 












நீண்ட நாள் காத்திருப்பு ரசிகர்களை ‘குஷி’ படுத்தியுள்ளது.  எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும், அவரது கனவுப்படமான  “கில்லர்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. 


நடிகராக இந்தியளவில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக எப்போது படம் தருவார் என ரசிகர்கள்  பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், “கில்லர்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. 


அஜித்தின் ‘வாலி’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக கால் பதித்த எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். இரண்டாவது படமான விஜய் நடித்த ‘குஷி’ பட வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. பான் இந்தியா என்ற சொல் அறிமுகமாகும் முன்னரே

இந்தியா முழுக்க பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது. 


இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, “நியூ” படத்தில் நடிகராகவும் களமிறங்கி திரையுலகை  வியப்பில் ஆழ்த்தினார், எஸ் ஜே சூர்யா. தொடர்ந்து பல விதமான பாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவந்திழுத்தார். இந்திய திரையுலகமே கொண்டாடும் முன்னணி நட்சத்திர நடிகராக ஆளுமை கொண்டுள்ளார். 


‘நடிப்பு அரக்கன்’  எஸ்.ஜே.சூர்யா என்று  பல மொழி ரசிகர்கள்  அவரை கொண்டாடி வருகின்ற போதும், அவர் எப்போது படம் இயக்குவார் என்ற கேள்வி அவரது தீவிர ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது அவர் “கில்லர்” என்ற அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


‘நியூ’ படத்தை இயக்கிய அதே எனர்ஜியோடு திரும்பி வந்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. எண்டர்டெயின்மெண்ட்..கமர்சியல்.. லவ்.. டிராமா.. விறுப்பான ஆக்சன் காட்சி  என்று டிரீம் புராஜக்டாக   தயாராகிறது.  

 

இந்திய பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை  பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக  நடிக்கிறார். 


படம் குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா குறிப்பிடும் போது, 


என்னுடைய கனவு இடமான ‘இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர்’ (கலைத்துறையில் மட்டும்) என்ற இடத்தை அடைவதற்கு,  

முதல் பட இயக்குநர் போல, முதல் பட நடிகன் போல  மிக சிரத்தையோடு, உங்கள் துணையோடு களமிறங்கி இருக்கிறேன். 


“கில்லர்” எனது கனவுப்படம். சில வருடங்களாகவே எழுதி வந்தேன். இது மக்களை ‘குஷி’ படுத்த போற படம்.  

இப் படத்தை தென்னிந்தியாவின் மிக பெரிய பட நிறுவனமான ஶ்ரீ கோகுலம் மூவிஸ்  கோகுலம் கோபாலன் அவர்களோடு இணைந்து, ஏஞ்சல் ஸ்டூடியோஸ்  பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக உருவாக்குவதில் பெருமைக் கொள்கிறேன்.. என்றார்.  


இதன் படப்பிடிப்பு  ஜீன் 27ம் தேதி பூஜையுடன் இனிதே துவங்கியது. 


ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும், மேலும் சில முக்கியமான காட்சிகள் மெக்ஸிகோ நாட்டிலும் மடமாக்கப் படுகிறது.


இப்படத்தின் நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் அடுததுத்து வெளியாகும்.