Featured post

நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

 நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குறிப்பாக காயத்ரியின் ஒத்துழைப்பு சாதாரணமல்ல. அவரை தவிர வேறு யாராவது நட...

Friday 31 May 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்,

 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்,  நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!



டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை,  விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.  வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன்  உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.



சஸ்பென்ஸ் மற்றும்  எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில்,  சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.


MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில்  நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ்  நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தைத் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது,  இந்த பரபரப்பான சீரிஸை  விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளியுங்கள். 



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Tasting the Tension: Home cooks rely on senses

 Tasting the Tension: Home cooks rely on senses to recreate Chef Koushik’s masterpiece on MasterChef India Tamil!



As MasterChef India Tamil inches closer to its grand finale, the challenges are not just getting tougher; the home cooks are becoming more resilient. This semi-final week promises to be a rollercoaster of excitement, especially with the latest Pressure Test set by none other than MasterChef India Tamil’s esteemed judge, Chef Koushik Shankar.

In this intense Pressure Test, the home cooks faced the daunting task of replicating Chef Koushik's signature dish, ‘Mad Chef on a Plate’. But there was a twist: unlike usual pressure tests where contestants are provided with a recipe, this time they had to rely solely on their senses of taste and sight. No recipes were given, pushing the contestants to recreate the dish's flavors and presentation purely from memory and intuition.

This challenge put the skills of the semi-finalists Sangeetha Swaminathan, Praveen Kumar, Vani Sundar, Pavithra Nalin, Akash Muralidharan, Sudheer Padinchara, and Arthi to the ultimate test. It emphasized the importance of sensory expertise in cooking, celebrating intuition and experience in the kitchen.

Who will rise to the occasion and who will crack under pressure? Stay tuned to witness these grueling challenges as MasterChef India Tamil heads towards its thrilling finale to find out who will emerge as the ultimate winner.

Catch all the action, Monday to Friday at 1 PM, exclusively on Sony LIV!

பதற்றத்தை சுவைத்த ஹோம் குக்ஸ்:

 பதற்றத்தை சுவைத்த ஹோம் குக்ஸ்:  மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியில் செஃப் கௌசிக்கின் இணையற்ற உணவுத்தயாரிப்பை மறுஉருவாக்கம் செய்யும் முனைப்பில் ஹோம் குக்ஸ்!



மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சி அதன் மாபெரும் இறுதி நிகழ்வை நோக்கி மிக நெருக்கமாக நகர்ந்து வரும் நிலையில், எதிர்கொள்கின்ற சவால்கள் வெறுமனே கடுமையானதாக மட்டும் மாறவில்லை; முழு மூச்சுடன் இப்போட்டியில் பங்கேற்கும் ஹோம் குக்ஸ், திறனை வளர்த்துக் கொள்பவர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர்.  இந்த அரையிறுதிப் போட்டி வாரமானது, பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நிகழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் மதிப்பிற்குரிய நடுவர் செஃப் கௌசிக் சங்கர் தீர்மானித்திருக்கின்ற பிரஷர் டெஸ்ட் இந்த வாரம் நடைபெற்றதால், ஆர்வமும், பரபரப்பும் உச்சத்தை தொட்டதில் வியப்பில்லை.  

இந்த கடுமையான பிரஷர் டெஸ்ட்டில், செஃப் கௌசிக் அவர்களின் முத்திரை பதித்த சமையல் தயாரிப்பான “மேட் செஃப் ஆன் ய பிளேட்” என்பதனை அதேபோல மறுஉருவாக்கம் செய்யும் மிகக் கடுமையான சவாலை ஹோம் குக்குகள் எதிர்கொண்டனர்.  ஆனால், இதில் ஒரு திருப்பம் இருந்தது.  இதுவரை நடைபெற்ற வழக்கமான பிரஷர் டெஸ்ட்களில் போட்டியாளர்களுக்கு ஒரு ரெசிபி தரப்படும்.  ஆனால், இந்தவார நிகழ்வின்போது அவர்களது பார்வை மற்றும் சுவை உணர்வுத்திறன்களை மட்டுமே அவர்கள் முற்றிலும் சார்ந்திருக்க வேண்டியது.  அந்த உணவை எப்படி தயாரிப்பது என்ற குறிப்போ, ரெசிபியோ தரப்படவில்லை.  இதனால் தங்களது உள்ளுணர்வு மற்றும் நினைவுத்திறனை மட்டும் சார்ந்து அந்த உணவின் சுவையையும், தோற்றத்தையும், செஃப் தயாரித்ததைப்போலவே போட்டியாளர்களும் மறுஉருவாக்கம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  

அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற சங்கீதா சுவாமிநாதன், பிரவீன் குமார், வாணி சுந்தர், பவித்ரா நளின், ஆகாஷ் முரளிதரன், சுதீர் பதிஞ்சாரா மற்றும் ஆர்த்தி ஆகிய போட்டியாளர்களின் திறன்களுக்கான மிகச்சரியான பரிசோதனையாக இந்த சவால் இருந்தது.  சமையலில் நமது உணர்திறன் உறுப்புகளது செயல்திறனின் நிபுணத்துவம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தையும் மற்றும் சமையலறையில் நாம் பெறுகின்ற அனுபவத்தையும் இந்த பவர் டெஸ்ட் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியிருக்கிறது.  

இந்த பவர் டெஸ்ட் போட்டியில் சவால்களை வெற்றிகரமாக சமாளித்து, ஜெயிக்கப்போவது யார் ? சவால் தரும் அழுத்தத்தில் துவண்டு சரியப்போவது யார், இந்த பரபரப்பான போட்டித் தொடரில் இறுதி வெற்றியாளராக வெற்றிக்கனியை பறிக்கப்போகும் நபர் யார் என்பதை கண்டறியும் இறுதிப்போட்டி நிகழ்வை நோக்கி மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியாளர்களின் திறனையும், சவாலை சமாளிக்கும் ஆற்றலையும் காண தவறாமல் சோனி லைவ்  சேனலை டியூன் செய்யுங்கள். 

சோனி லைவ் சேனலில், திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் உற்சாகத்திலும், பரபரப்பிலும் நீங்களும் பங்கு பெறுங்கள்.

Thursday 30 May 2024

இலங்கை, கொழும்புவில் இம்மாதம்

 இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்




வெற்றி பெற்ற வீரர்கள் விவரம்


M Shenbagamoothy 


100mts - 2nd place

200mts- 3rd place

Mixed Relay - 1st


Suresh Kasinathan 


100- 3rd

200- 3rd

Mixed Relay - 1st


Jesu Esther Rani 


100- 3rd

200- 3rd

Long jump 3rd 

Mixed Relay 1st


R Pramila 


100- 2nd place 

Long jump - 2nd place 

Mixed Relay - 1st

Wednesday 29 May 2024

ராட்சசன்’ சரவணன் நாயகனாக நடிக்கும் "குற்றப்பின்னணி"

 ‘ராட்சசன்’ சரவணன் நாயகனாக நடிக்கும் "குற்றப்பின்னணி"






பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்  தயாரிக்கும் 6-வது படம் ‘குற்றப்பின்னணி’


‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டராக மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவு  சங்கர் செல்வராஜ், இசை  ஜித், பாடல்கள்  என்.பி.இஸ்மாயில், படத்தொகுப்பு  நாகராஜ்.டி, சண்டைப் பயிற்சி ஆக்ஷன் நூர், வசனம் ரா.ராமமூர்த்தி, தயாரிப்பு ஆயிஷா  அகமல், கதை திரைக்கதை இயக்கம் என்.பி.இஸ்மாயில்.


‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை  இயக்கிய என்.பி. இஸ்மாயில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.


தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும் பார்த்தும் திகைக்கக் கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை களத்தில், பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே இந்த ‘குற்றப்பின்னணி’ படம்.


குற்றப்பின்னணிக்கு பின்னணி இசை பக்கபலமாக உள்ளது. படத்தில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளது.


சென்னைக்கு அருகிலுள்ள செங்கல் சூளையில் பிரம்மாண்டமாக சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.


என்.பி‌.இஸ்மாயில் இயக்கத்தில், ஆயிஷா அகமல் தயாரித்துள்ள குற்றப்பின்னணி படம் மே மாதம் 31'ம் தேதி திரைக்கு வருகிறது!


அண்ணாமலையார் சினி ஆர்ட்ஸ் அருணை டி.ராஜாராம் சுமதி தமிழகமெங்கும் திரையிடுகிறார்கள்.

மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா

 *’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!*














இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது நடக்காமல் போனது. அவரது மறைவுக்குப் பின் ஏஐ தொழில்நுட்பத்திலாவது அவரைக் கொண்டு வருகிறோம் என அவரது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டோம். அந்த அளவுக்கு விஜயகாந்த் சார் படத்தில் வரவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அதில் சில பிரச்சினைகள் இருந்ததால் அவரைப் போன்ற லெஜெண்ட் சத்யராஜ் சாரிடம் அந்த கதாபாத்திரத்திற்காக கேட்டோம். உடனே ஒத்துக் கொண்டார். விஜய் ஆண்டனி சார் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மேகா ஆகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். மூன்று வருடங்கள் உழைத்து விஜய் மில்டன் நல்ல படத்தைக் கொடுத்துள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுங்கள்”.


இயக்குநர் விஜய் மில்டன், “தனஞ்செயன் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும்தான் இந்தப் படம் தொடங்க முக்கிய காரணம். விஜய் ஆண்டனி சாரை ஹீரோவாக நான் தான் அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது. நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். ’மழை பிடிக்காத மனிதன்’ வெறும் ஆக்‌ஷன் படம் மட்டும் கிடையாது. அது பொயட்டிக் ஆக்‌ஷன் ஜானர். இந்த வார்த்தையை தனஞ்செயன் சார்தான் சொன்னார். என்னுடைய எல்லாப் படங்களிலும் கெட்டவன் சாகக் கூடாது. கெட்ட விஷயம்தான் சாக வேண்டும் என்று சொல்வேன். அது இந்தப் படத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். அந்தமான், டையூ என லொகேஷனை போராடி எங்களுக்கு தனஞ்செயன் சார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சார் போன்ற திறமையான நடிகரைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அசத்தினார். சரத்குமார் சாரிடம் நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கும். ‘சூர்யவம்சம்’ காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். கதை கேட்டதும் உடனே ஓகே சொல்லி விட்டார். விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், என்னுடைய தொழில்நுட்பக் குழு என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்”.


இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, “அருமையான படம் செய்துள்ளோம். இயக்குநர், தயாரிப்பாளர், விஜய் ஆண்டனி சார், சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


நடிகை மேகா ஆகாஷ், “எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் லொகேஷன் புதுசாக இருந்தது. நடிப்பதற்கு போகும்போதே பாசிட்டிவாக மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது பெரிய கற்றல் அனுபவம். விஜய் மில்டன் சார் மற்றும் குழுவினருக்கு நன்றி”.


நடிகர் சத்யராஜ், “எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான்  வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம். இதற்காக விஜய் ஆண்டனி, தனஞ்செயன், விஜய் மில்டன் மூவருக்கும் நன்றி. நல்லவேளை நான் முடியில்லாமல் பிறந்தேன். இதனால்தான் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. கட்டப்பா கிடைத்ததும் அப்படித்தான். சில மைனஸ்தான் பிளஸ். கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏனெனில், அவரை நான் டிஸ்டர்ப் செய்வதில்லை. எல்லோரையும் போல, ‘என் படம் வெற்றி பெற வேண்டும், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என்று கெடுபிடி போட மாட்டேன். மற்றப் படங்களைப் போல அல்லாமல், நிஜமாகவே இந்தப் படம் நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பதுபோல, எனக்கு இருக்கும் நக்கல் திரையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு வில்லத்தனம் கலந்து வந்தால் இனி கொள்கையை தளர்த்தி வில்லனாக நடிக்கலாம் என்று நினைக்கிறேன். என் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட பி. வாசு, பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் என எல்லா இயக்குநர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்” என்றார். 


நடிகர் விஜய் ஆண்டனி, “பல மேடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், எல்லாருமே இந்த மேடையில் எல்லோரும் பேசியிருப்பது கவிதை போல மனதில் இருந்து வந்திருக்கிறது. கொரோனா உள்ளிட்டப் பல விஷயங்களைத் தாண்டி விஜய் மில்டன் இந்தப் படத்தை கஷ்டப்பட்டு செய்திருக்கிறார். அவருடைய உழைப்பிற்காக இந்தப் படம் பெரிய வெற்றிப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலருடனும் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. சத்யராஜ் சாருக்கும் எனக்கும் நல்ல கனெக்‌ஷன் உள்ளது. மேகா ஆகாஷூக்கு நல்ல குரல் வளம் உள்ளது. டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அவர் முயற்சி செய்யலாம். படக்குழுவினர் எல்லோரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு பெரிய வெற்றிப் படமாக இது அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”.

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி

 *துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது!*



துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது, அவர் ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கதையான 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் வசீகரிக்க வருகிறார்.


படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 


'தோளி பிரேமா', 'சார்/வாத்தி' போன்ற பிளாக்பஸ்டர் படங்களை எழுதி, இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.  ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வழங்குகிறது. 


1980களின் பிற்பகுதி மற்றும் 1990களின் முற்பகுதியிலும் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு எளிய வங்கி காசாளரான லக்கி பாஸ்கரின் சுவாரஸ்யமான மற்றும் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தை இந்தப் படம் விவரிக்கிறது. துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. மேலும் இது தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில்

 *Non Violence Movie 

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும்  திரைப்படம்  "நான் வயலன்ஸ்"  விரைவில் திரையில் !! 




AK PICTURES நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில்,  மெட்ரோ படப்புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில்  நடிக்கும் திரைப்படத்திற்கு  "நான் வயலன்ஸ்"  என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. 


90 களின் மதுரை மாநகரைச் சுற்றி,  இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மதுரையின் சிறைக்குள் நடக்கும், பெரும்பாலான சம்பவங்களை மையமாக வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர்  ஆனந்த கிருஷ்ணன். மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்  இயக்கத்தில்  இப்படமும் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.  


90களின் காலகட்டத்தில்  நடக்கும் கதை என்பதால்,  அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டுவரப் படக்குழு  பெரும் உழைப்பைக் கொட்டியுள்ளது. அந்தகாலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், இடமென ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டு, திரையில் கொண்டுவந்துள்ளது படக்குழு. இக்கால தலைமுறைக்கு ஒரு புதுமையான திரை அனுபவமாக இப்படம் இருக்கும். 


நடிகர் மெட்ரோ ஷிரிஷ் , பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அதிதி பாலன், கருட ராம், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.


தொழில்நுட்ப குழு 


எழுத்து, இயக்கம் - ஆனந்த கிருஷ்ணன்

இசை -  யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவாளர் -  N S உதயகுமார்

எடிட்டர் - ஸ்ரீகாந்த் N B

தயாரிப்பாளர் - லேகா ( AK PICTURES )

மக்கள் தொடர்பு - சதீஷ் குமார்


*Filmmaker Ananda Krishnan’s Directorial* 

*Metro Shirish-Bobby Simha-Yogi Babu starrer ‘Non-Violence’ Releasing Soon!* 




The film "Non Violence" is a fresh venture bankrolled by AK PICTURES Lekha, with renowned director Ananda Krishnan of ‘Metro’ fame helming it. The film, starring Metro Shirish, Bobby Simha, and Yogi Babu in prominent roles, this project promises to captivate audiences with its unique storyline. 


The film's narrative unfolds in the city of Madurai during the 90s. Director Ananda Krishnan has crafted a captivating screenplay that primarily revolves around the events occurring within Madurai prison during that era. There is great anticipation for director Ananda Krishnan to achieve a hat-trick of successes with this film, following the consecutive triumphs of 'Metro' and 'Kodiyil Oruvan’. 


The film, given that the narrative takes place in the 1990s, the production crew has dedicated significant resources to authentically recreate that era on screen. Every detail, from the props and wardrobe to the filming locations, has been meticulously curated to transport viewers back in time. This film promises to offer a fresh cinematic experience for contemporary audiences.


The star-cast includes Metro Shirish, Bobby Simha, & Yogi Babu in the titular characters with Aditi Balan, Garuda Ram, Aditya Kathir and many others in the pivotal characters.  



The shooting of the film is nearing its final stage. Soon the details about the teaser and trailer of the film will be announced officially. The film is releasing in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi languages.



*Technical Crew*


Written &  directed by Ananda Krishnan

Music - Yuvan Shankar Raja

Cinematography - N S Udayakumar

Editor - Srikanth N B

Producer - Lekha (AK PICTURES)

Public Relations - Sathish Kumar

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’

 *சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து,  பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!*






இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.


சமீபத்தில்  மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய,  படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.


இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு,  பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.  


பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில்,  இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.


கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தை பார்வையிட்ட மக்கள்,  பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.


அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார்,  வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.


முன்னதாக புஜ்ஜியை அறிமுகப்படுத்தி வெளியான வீடியோ.

https://youtu.be/Nzf4KPv8R9M?si=eH9SDadUKXiillez

Tuesday 28 May 2024

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

 காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது







ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"


ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை


'காதலிக்க நேரமில்லை' முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது

Kadhalikka Neramillai Shooting wrapped up!

 Kadhalikka Neramillai Shooting wrapped up!







Red Giant Movies presents ‘Kadhalikka Neramillai’ is directed by Kiruthiga Udhayanidhi, features Jayam Ravi and Nithya Menen in the lead roles with musical score by AR Rahman.


While Jayam Ravi and Nithya Menen are playing the titular roles, the others in the star-cast include Yogi Babu, Lal, Vinay Ray, Lakshmi Ramakrishnan, Singer Mano, TJ Banu, John Kokken, Vinothini and many others.


Gavemic Ary is handling cinematography, Lawrence Kishore is overseeing editing works for this film. This film is co-produced by M. Shenbaga Moorthy & R Arjun Durai.  


With the first look of ‘Kadhalikka Neramillai’ garnered phenomenal response, the makers are now delighted to announce that the film’s shooting is wrapped up.


The official announcement on the film’s audio, teaser, trailer and worldwide theatrical release will be revealed soon.

Monday 27 May 2024

ஐஃபா உற்சவம் 2024 - பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின்

 *ஐஃபா உற்சவம் 2024 - பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின் ‘விருதுகளுக்கான பரிந்துரைகள்’ தற்போது வரவேற்கப்படுகின்றன.* 




சகிப்புத்தன்மை மற்றும் மனித சகவாழ்வுத்துறைக்கான ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் மேதகு.ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அவர்களின் கௌரவ ஆதரவின் கீழ்,

ஐஃபா உற்சவம்-2024-ஆனது,சினிமா துறையில் செய்த சாதனைகளின் மூலம் சிறந்து விளங்குபவர்களையும்,

அதே சமயம் நம் நாட்டின் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் மிகச்சிறந்த திறமையாளர்கள்,

கதைசொல்லல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களையும் அங்கீகரிக்கவும் கௌரவிக்கவும் தயாராக உள்ளது.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபா உற்சவம்-2024, கடல்சார் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மிகச் சிறந்த அனுபவங்களை தரும் இடங்களை உருவாக்குவதில் வல்லவர்களான அபுதாபி மற்றும் மிரலின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து நடத்தப்படுகிறது.


ஐஃபா உற்சவம்-2024, வரும் செப்டம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் அபுதாபியின் உள்ள யாஸ் தீவில் அமைந்துள்ள எதிஹாட் அரங்கில், ஒப்பிடமுடியாத கொண்டாட்டத்தை அனுபவிக்கும் விதமாக தென்னிந்திய திரைத்துறை யின் சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் பல்வேறு தொகுப்பாளர்கள்  மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளின் அணிவகுப்பாக நடைபெறுகிறது.


பிரமாண்டமான தொடக்க நாளில்  தமிழ் மற்றும் மலையாள திரைத்துறைகளுக்கான விருதுகள் வழங்குதலும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அடுத்த நாள் தெலுங்கு மற்றும் கன்னட திரைத்துறைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும்.


இரண்டு நாள் ஐஃபா உற்சவம் கண்கவர் நிகழ்ச்சிகள் முதல் இதயப்பூர்வமான நினைவுகூர்தல்கள் வரையிலான தென்னிந்திய சினிமாவின் சிறப்பை பறைசாற்றும் விதத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டாட்டமாக அமையும்.


பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின் ‘விருதுகளுக்கான பரிந்துரைகள்’ தற்போது வரவேற்கப்படுகின்றன.


தமிழ்,தெலுங்கு, மலையாளம்,விருதுப் பரிந்துரைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 4-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.


உலகளவில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற தென்னிந்திய சினிமாவின் எழுச்சி மறுக்க முடியாத வகையில் ஈர்ப்பை ஏற்படுத்தி, தமிழ், தெலுங்கு, 

மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வசூல் சாதனையை விரைவாக அடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு 

சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.


இதுவரை இல்லாத வகையிலான தென்னிந்திய சினிமாவின் மறக்க முடியாத கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்! அபுதாபியின் குறிப்பிடத்தக்க நகரமான யாஸ் தீவில் நடைபெறும் 

ஐஃபா உற்சவத்திற்கான உலகளாவிய சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகள் பொது மக்களுக்காக

விற்பனையில் உள்ளன.


https://www.etihadarena.ae/en/event-booking/iifa-utsavam 


and


https://abudhabi.platinumlist.net/event-tickets/91813/iifa-utsavam-2024-at-etihad-arena-abu-dhabi


ஐஃபா உற்சவம்-2024 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தளங்களை பின்தொடரவும்:


 *Website* https://www.iifa.com/iifa-utsavam-2024


 *Instagram* https://www.instagram.com/iifautsavam?igsh=MW9jeDN0Y3ZpMjR6dw==

 

 *Facebook* https://www.facebook.com/share/NtzrjV3Gxt6GU6eD/?mibextid=LQQJ4d


 *YouTube* https://youtube.com/@IIFAUtsavam?si=4F8c1VXjZgIe6ld

KVN Production's கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் ( 'KD: The Devil's Warfield' )

 “KVN Production's கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் (  'KD: The Devil's Warfield' )  திரைப்படம்,  டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !!





இப்படத்தின்  ஆடியோ உரிமை ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது


KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்"  திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.


இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு,  ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான  திரை அனுபவமாக இருக்கும்.


"கேடி - தி டெவில்" 1970களில்  இருந்த  பெங்களூர் நகரின்  தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலந்த கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இப்படம்  இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.


KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்"  படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Sunday 26 May 2024

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் " குற்றம் புதிது "

 வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் " குற்றம் புதிது " 














அறிமுக நாயகன் தருண் - அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் " குற்றம் புதிது " 


GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில்  DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம் " குற்றம் புதிது " 


அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார்.

செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.


ரஜித்,கிரிஷ் பாடல் வரி எழுத,

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார் ,கமலக்கண்ணன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.  STORYBOARD சந்திரன், நடன இயக்குனர் வரதா,COSTUME DESIGNER கெசியா,COSTUMER சம்பத், MAKEUP ARTIST “AIRPORT” RAJA,   பாடகர்கள் அனந்து,ரஜித்,STILL PHOTOGRAPHY S. SAKTHIPRIYAN,PUBLICITY DESIGNER DINESH KUMAR, இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன்,தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார்.

மேலும் இப்படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA  நிறுவனம் ஏற்றுள்ளது.


இவர்களின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும்

இந்த படம்  “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.


இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது.


இமாதம்  23-ம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பு ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.