Featured post

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர்

 தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் - ன்  கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!!  மாஸ்டர் ராகவா லாரன...

Thursday 20 August 2020

வானுதிர்த்த கதிராக

வானுதிர்த்த கதிராக
நெல்லூரில்
வந்துதிர்த்த இசையே!
குழல் இனிதா?
யாழ் இனிதா? என்றால்
நின் குரலே
இனிதென்பேன்.



முக்கனி சாறெடுத்து
கொம்புத் தேனில்
முகிழ்த்தெடுத்த
அருஞ்சுவைக்கு
மேலானது
நின் குரலே
சுவையென்பேன்.

அங்கிங்கெனாதபடி
எங்கும்
நின் குரல் கேட்க
எட்டுத் திக்கும்
எதிரொலிக்க
எழுந்து வா! பாலு
விரைந்து வா!
இன்னிசை
பண்ணிசை
நல்லிசை
அழைக்கிறது
எழுந்து வா!

பாலு
விரைந்து வா!
தேனிசைத் தென்றலும்
ஏழிசை சுரங்களும்
நின் வரவுக்காக
காத்திருக்க
எழுந்து வா!

பாலு
விரைந்து வா!
ஆம்..
பாரதிராஜா வேண்டியபடி
அகிலம்
ஆண்டவனை
பிரார்த்திக்க
நீ..வருவாய்!
திருவாய் மலர்வாய்!..
--கலைப்புலி S.தாணு

No comments:

Post a Comment