விண்வெளி நாயகனின் பிறந்தநாள் பரிசாக முக்தா பி லிம்ஸ் தயாரித்து மணிரத்னம் இயக்கிய *நாயகன்*
நவம்பர் 6 உலகமெங்கும் வெளிவர உள்ளது
மணிரத்னம் இயக்கிய நாயகன்' (21/10/1987)வெளிவந்து இன்றோடு 38 வருடங்கள் ஆகின்றன.
திரு.முக்தா சீனிவாசன் & திரு.முக்தா ராமசாமி அவர்களது முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில்
மணிரத்தினம் இயக்க, இசை இளையராஜா( 400 வது படம் )
1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது
மூன்று தேசிய விருதுகளை வென்றது...
வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி *நாயகன்*கதை எழுதப்பட்டிருந்தது.
இளைஞனான வேலுவும் வயதான வேலு நாயக்கரும் திரையில் உயிர் பெற்றிருந்தார்கள்..
" நாளைக்கு கணக்கு பரிட்சை சீக்கிரமா விட்டுடுவீங்களா " என்று கேட்கும் இடம் வலி மிகுந்த வசனம்..நடிகை சரண்யாவுக்கு இது முதல் படம்.
நீங்க நல்லவரா கெட்டவரா என்னும் கேள்விக்கு, முதிர்ந்த வேலு நாயக்கரால் "*தெரியலயேப்பா*"என்று என்று ஒற்றை பதிலை கூறிய மணிரத்தினத்தின் *நாயகன்* திரைப்படம் மறுபடியும் உங்கள் பார்வைக்கு..
மகனாக 'நிழல்கள்' ரவி, மகளாக கார்த்திகா, மருமகனாக,போலீஸ் அதிகாரியாக நாசர் மற்றும் வீ. கே. ராமசாமி, டெல்லி கணேஷ், ஜனகராஜ், குயிலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்
கதை, திரைக்கதை, இயக்கம் - மணிரத்தினம்
இசை இளையராஜா
வசனம் - பாலகுமாரன்
ஒளிப்பதிவு - பிசி ஸ்ரீராம்
எடிட்டர் - B. லெனின் V. T.விஜயன்
கலை - தோட்டா தரணி..
ஸ்டண்ட்- சூப்பர் சுப்புராயன்
நடனம் - சுந்தரம் மாஸ்டர்
மக்கள் தொடர்பாளர்கள் - சினிநியூஸ் செல்வம், வி.பி.மணி
மறு வெளியீடு மக்கள் தொடர்பாளர்கள் - டைமண்ட் பாபு, சாவித்ரி.
No comments:
Post a Comment