Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Saturday, 5 July 2025

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது*




தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் 'மாரீசன்'  திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். 


இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா,  சித்தாரா, பி. எல். தேனப்பன்,  லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் புரொடியுசராக பணியாற்றியுள்ளது. 


இப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான டீசரில் இருவரும் அற்புதமாக நடித்திருப்பதாலும் .. படத்திற்கு ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி

 *ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!*


சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி  .ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். கூலி படத்தின் முதல் சிங்கிள் Chikitu ஏற்கனவே இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், தற்போது ஒரு மிகப் பெரிய சாதனையை புரிந்து, தமிழ் சினிமாவின் வரலாற்றில் வெளிநாட்டு சந்தையில் அதிகபட்ச விற்பனையான படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதாவது, இதுவரை வெளிநாடுகளில் எந்த தமிழ் திரைப்படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு, ‘கூலி’ திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது . இது ரஜினியின் உலகளாவிய பிரபலத்தையும், லோகேஷின் மாஸ் இயக்கமும், சன் பிக்சர்ஸின் ப்ரொடக்‌ஷன் வெல்யூவும் சேர்ந்து உருவாக்கிய மாபெரும் வரவேற்பைக் காட்டுகிறது.

சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ்பெற்ற நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்தப் படத்தின் உலகளாவிய விநியோகத்தை ஆதரிக்கிறது. உலகெங்கிலும் 130க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்திய சினிமாவை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சென்றதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படத்தை 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும் அவர்களின் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாகும்.

கூலி படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதன்படி, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோகத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் உலகம் முழுவதும் அதிகமான நாடுகளில் வெளியாக உள்ளது. கூலி என்பது வெறும் ஒரு படம் மட்டுமல்ல ஒரு சகாப்தமாக உருவாகி வருகிறது.

- இது ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகும் இந்திய சினிமா ரசிகர்களுக்கான உலகளாவிய கொண்டாட்டமாக இருக்க போகிறது .

A Promising New Face in Tamil Cinema: Meenakshi Dinesh Makes Her Mark with Love Marriage

 *A Promising New Face in Tamil Cinema: Meenakshi Dinesh Makes Her Mark with Love Marriage*





After leaving a strong impression with her performances in Malayalam cinema, actress Meenakshi Dinesh has now forayed into Tamil films with the recently released romantic drama Love Marriage, directed by Shanmuga Priyan and starring Vikram Prabhu in the lead. The film has opened to positive reviews, and Meenakshi’s portrayal has been a standout, winning over both critics and cinephiles.


Known for her impactful roles in Malayalam films such as 18+ and the emotionally intense Iratta, Meenakshi brings the same depth and charm to her role in Love Marriage. Audiences have lauded her for her expressive performance and effortless screen presence, hailing her as a fresh and promising addition to Tamil cinema.


Speaking about her journey, Meenakshi said, “I’m thrilled with the warm reception I’ve received from the Tamil audience. The role in Love Marriage was a wonderful opportunity to explore a new space, and I’m grateful to the team for believing in me.”


With an increasing interest in exploring diverse and challenging roles, Meenakshi is determined to chart her own path in the film industry. She is especially drawn to characters that allow her to break stereotypes and experiment with layered storytelling.


A passionate cinema lover, Meenakshi revealed that she has long admired Tamil actor Suriya for his versatility and intensity. “It would be a dream come true to work with Suriya sir someday,” she shared. “There’s so much to learn from someone like him, who constantly reinvents himself with every film.”


As she continues to grow her body of work across South Indian languages, Meenakshi Dinesh’s clarity of vision and strong performances are fast earning her a loyal fan base. If Love Marriage is any indication, the young actress is poised for a bright and exciting journey in Tamil cinema.

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய

 *தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய நடிகை மீனாட்சி தினேஷ்!*





மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையை பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். லவ் மேரேஜ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் படத்தில் மீனாட்சியின் கதாபாத்திரம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் அனைவரது கவனத்தை. பெற்றுள்ளது.


18+ மற்றும் இரட்டா போன்ற வித்யாசமான, தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் மீனாட்சி தினேஷ். அதே போல தமிழில் லவ் மேரேஜ் படத்திலும் தனது அழுத்தமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பின் மூலம் அதே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். 


ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மீனாட்சி தினேஷின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ஸ்க்ரீன் பிரசன்சை பாராட்டியுள்ளனர். மேலும் மீனாட்சி தினேஷை தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மற்றும் நம்பிக்கைக்குரிய நடிகை என பாராட்டியுள்ளனர்.

தனது பயணத்தைப் பற்றி மீனாட்சி தினேஷ் பேசுகையில், “தமிழ் ரசிகர்களிடம் இருந்து எனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லவ் மேரேஜ் படத்தில் நடித்தது ஒரு புதிய பரிமாணத்தை ஆராய ஒரு சிறப்பான வாய்ப்பாக எனக்கு அமைந்தது, மேலும் என்னை தேர்வு செய்ததற்காக பட குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.”


பல்வேறுபட்ட மற்றும் சவாலான வேடங்களில் நடிப்பதில் அதிகரித்து வரும் ஆர்வத்துடன், மீனாட்சி தினேஷ் திரைப்படத் துறையில் தனது சொந்த பாதையை வகுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளார். ஸ்டீரியோடைப்களை உடைத்து, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் கொண்ட மீனாட்சி தினேஷ், நடிகர் சூர்யாவின் தனித்துவமான நடிப்பிற்கு ரசிகை என்றும், நீண்ட நாட்களாக அவரை பின்தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். “சூர்யா சாருடன் பணிபுரிவது எனது கனவு, ஒருநாள் அந்த கனவு நனவாகும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் மீனாட்சி தினேஷ். “ஒவ்வொரு படத்திலும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்றும் கூறியுள்ளார்.


தென்னிந்திய மொழிகளில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அசத்தி வரும் மீனாட்சி தினேஷின் தெளிவான சினிமா பார்வை மற்றும் வலுவான நடிப்பு அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை விரைவாகப் பெற்றுத் தருகிறது. லவ் மேரேஜ் படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி உள்ள மீனாட்சி தினேஷ் வரும் காலத்திலும் தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்.

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!*

 *ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!*

















புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்‌ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதிப்பைத் தெரிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும்  பணியாற்றிய இயக்குனர் லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது.


இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்” என தனது உற்சாகத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.


AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பல முக்கியப் படங்களில் தயாரிப்பு பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட டி. சரவணகுமார், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக செயல்படுகிறார்.


புரொடக்‌ஷன் நம்பர் 1 படத்தின் தொழில்நுட்பக் குழுவில் உள்ள முக்கியமான தொழில்நுட்ப நிபுணர்கள்:

🎶 சந்தோஷ் நாராயணன் – இசையமைப்பாளர்

🎥 சந்தீப் கே. விஜய் – ஒளிப்பதிவாளர்

🛠 முத்துராஜ் – கலை இயக்குநர்

🔊 ரசூல் பூக்குட்டி – ஒலி வடிவமைப்பாளர் (ஆஸ்கார் விருது பெற்றவர்)

💥 சுப்ரீம் சுந்தர் – ஃபைட் மாஸ்டர்


இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, படத்திற்கான வீரர் அறிமுகம், படத்தின் பெயர் கூட அறிவிக்கப்படுவதற்கு முன்பே நடந்தது! அனைவரும் எதிர்பார்த்த அந்த நடிகர் — இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது திரையுலக அறிமுகம் இந்த படத்தின் மூலம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்வில் பேசிய ரெய்னா, தனது தோழரான எம்.எஸ். தோனியும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, “அவர் தான் அதுக்கு பதிலளிக்க வேண்டும!” எனச் சிரித்தபடி பதிலளித்தார்.


இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்த திரை பிரபலங்கள்:

எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், நடிகர் சதீஷ், இயக்குநர் விஜய் மில்டன், இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் பக்யராஜ் கண்ணன்

“இத்தனை திறமைமிக்க அணி மற்றும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் போன்ற உறுதியான ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் என் இயக்குநர் பயணத்தைத் தொடங்குவது ஒரு கனவு நனவாகும் தருணம்,” என இயக்குநர் லோகன் உருக்கமாக தெரிவித்தார். “சந்தோஷ் நாராயணனும், ரசூல் பூக்குட்டியும் போன்ற உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களுடன் வேலை செய்வது சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்றார்.


புரொடக்‌ஷன் நம்பர் 1 குறித்த மேலும் தகவல்களும், ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் இயக்கவிருக்கும் எதிர்காலப் படைப்புகள் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளன.


🔗 https://youtu.be/pw6qzGAnlSk?si=jyMAQWxjILLfDJI1

Dream Knight Stories' Grand Launch: Indian Cricketer Suresh Raina Makes a Surprise

 *Dream Knight Stories' Grand Launch: Indian Cricketer Suresh Raina Makes a Surprise Debut in Tamil Cinema!*

















Dream Knight Stories, a brand-new production house, made a dazzling entry into the world of cinema with the grand launch of its debut venture, *“Production No. 1”*, directed by *Logan*, known for his work in *Maan Karate*, *Remo*, and *Gethu*. The event witnessed an overwhelming turnout of industry stalwarts and celebrities, making it a night to remember.


Adding star power to the event, Indian cricketer and Chennai Super Kings powerhouse *Shivam Dube* lit the ceremonial lamp, marking the auspicious beginning of the production house. Engaging in witty banter with the anchor, Dube shared his excitement about the launch and extended his heartfelt wishes to the director and producer, expressing how thrilled he was to be a part of this milestone moment.


*D. Saravanakumar*, the producer of *Production No. 1*, brings with him years of experience from AGS Entertainment, where he served as Production Executive across all major projects.


The launch event also unveiled the stellar technical crew behind the film:


*Santhosh Narayanan*– Music Composer

*Sandeep K. Vijay*– Director of Photography

*Muthuraj*– Production Designer

*Resul Pookutty*– Sound Designer (Academy Award Winner)

*Supreme Sundar* – Action Choreographer


The event saw the presence and heartfelt felicitations from several leading names in Tamil cinema, including **Director Mohan Raja**, **Editor Mohan**, **Producer P. L. Thenappan**, **Actor Sathish**, **Director Vijay Milton**, **Director Thirukumaran**, and **Director Bakyaraj Kannan**.


In a **first-of-its-kind moment in Indian cinema history**, the event featured a **star reveal even before the film’s official announcement**. The surprise? None other than cricketing legend **Suresh Raina** making his **acting debut** in *Production No. 1*! When asked about former teammate **MS Dhoni** possibly joining the cast, Raina flashed a smile and replied, *“He should answer that one!”*, leaving fans and media abuzz with speculation.


Director **Logan** said, “It’s a dream to begin my debut as a filmmaker with such a talented team and the backing of Dream Knight Stories. With names like Santhosh Narayanan and Resul Pookutty on board, we are setting out to create something truly special.”


More updates on *Production No. 1* and Dream Knight Stories’ upcoming ventures will be officially announced in the coming weeks.


🔗 https://youtu.be/pw6qzGAnlSk?si=jyMAQWxjILLfDJI1

வரலாற்று பின்னணியில் உருவாகும் ‘நீலி’ என்கிற அமானுஷ்ய படத்தில் கதாநயகனாக

 *வரலாற்று பின்னணியில் உருவாகும் ‘நீலி’ என்கிற அமானுஷ்ய படத்தில் கதாநயகனாக நடிக்கும் நட்டி*




*நடிகர் நட்டி நடிப்பில் வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக தயாராகும் ‘நீலி’*


உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘நீலி’. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ()எ) நட்ராஜ் சுப்ரமணியம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார்.


2400 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வரலாற்று பின்னணியில் இந்த நீலி திரைப்படம் உருவாகிறது. அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. 

 

படம் குறித்து இயக்குநர் எம்எஸ்எஸ் கூறும்போது, 


“நீலி சம்பந்தமான நிறைய வரலாற்று விஷயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனுடன் கொஞ்சம் கற்பனை நிகழ்வுகளையும் கலந்து இந்த கதையை உருவாக்கியுள்ளோம். 


இந்த படத்தின் வித்தியாசமான கதையை கேட்டதுமே பிடித்துப்போய் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார் நடிகர் நட்டி. இரண்டு முக்கிய நாயகிகள் நடிக்கிறார்கள். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

Friday, 4 July 2025

திருக்குறள்” திரைப்படத்தில் “ தளபதி பரிதி” வேடத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் நடிகர் குணா பாபு !*

 *“திருக்குறள்” திரைப்படத்தில் “ தளபதி பரிதி”  வேடத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் நடிகர் குணா பாபு !*








*குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்க்கும் நடிகர் குணா பாபு !*


தமிழ்த் திரையுலகில் 2017 ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர்  நடிகர் குணா பாபு, சமீபத்தில் வெளியான “திருக்குறள்” திரைப்படத்தில் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீரமும் காதலும் நிறைந்த “தளபதி பரிதி” கதாபாத்திரத்தில் அவரது தனித்துவமான நடிப்பு, பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.


இளம் நடிகரான குணா பாபு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு தையல்காரரின் மகனாக வளர்ந்தார். ஒரு தனியார் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றிய குணா பாபு, சினிமா மீதான ஆர்வத்தால், தனது பணியைத் துறந்து, தியேட்டர் மற்றும் சினிமா நடிப்புப் பயிற்சியில் சான்றிதழ் பெற்றபின், திரையுலகில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் திரையுலகில் நிலைத்து நிற்கும் வகையில், 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து,  தனது திறமையைப் நிரூபித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான  H.வினோத், P.S. மித்ரன், மகிழ்த்திருமேனி, கிருத்திகா, மதுமிதா, பிருந்தா, C.S. அமுதன், லோகேஷ் கனகராஜ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜீத்து ஜோசப் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து, தீரன், காளி, இரும்புத்திரை, தமிழ் படம் 2, தடம், ஹீரோ, கே.டி (அ) கருப்பு துரை, தக்ஸ், லால் சலாம், விக்ரம், வேட்டையன், பாயும் ஒளி நீ எனக்கு, மற்றும் திருக்குறள் உட்பட பல ப்ளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றியுள்ளார். 


சின்ன சின்ன பாத்திரங்கள் முதல் குணச்சித்திர பாத்திரங்கள் வரை, தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களில் தனது முழு அர்ப்பணிப்பைத் தந்து, தனித்துவமான நடிப்புத் திறமையால், திரை ரசிகர்களிடமும், பார்வையாளர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறார். அவரது திறமையின் பலனாக திருக்குறள் படத்தில் "தளபதி பரிதி" பாத்திரம் அமைந்துள்ளது. திருக்குறள் படத்தில் அவரது தோற்றமும், நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பல புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. சவாலான கதாபாத்திரங்கலை ஏற்று நடப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.


நடிகர் குணா பாபு அடுத்ததாக முன்னணி இயக்குநர்கள் இயக்க, முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும், ரிவால்வர் ரீட்டா, மாரீசன், கேங், தடை அடி உடை, மிராஜ் (மலையாளம்) உடப்ட பல படங்களில் நடித்து வருகிறார்.


எளிய பின்னணியிலிருந்து வந்து, திரையுலக  சவால்களை மீறி, தனது திறமை மற்றும் முயற்சியால் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள குணா பாபு, தனது எதிர்காலப் படங்கள் மூலம் இன்னும் பல உயரங்களைத் தொட தயாராக இருக்கிறார்.

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு

 *ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு*











அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 


இவ்விழாவில் நடிகர் முருகானந்தம் பேசுகையில், '' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், அதற்கு காரணமாக திகழ்ந்த ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


நீண்ட நாட்கள் கழித்து நான் நடித்த இந்த திரைப்படத்தை குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படி என்னுடைய உறவினர்களிடம் சொன்னேன். அவர்களும் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக நல்லதொரு படத்தில் நடித்திருக்கிறீர்கள் என பாராட்டினார்கள். இதற்கு காரணமாக இருந்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த திரைப்படத்தில் மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் ஐயா செய்திருந்த மேஜிக் என்னை பிரமிக்க வைத்தது. 


இந்தப் படத்தில் அருள் தாஸும், நானும் நடித்திருக்கும் காட்சிகளுக்கு ரசிகர்களின் வரவேற்பினை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். 


இந்தத் திரைப்படத்தில் விக்ரம் பிரபு மொட்டை மாடியில் இருந்து ஒரு வசனம் பேசுவார். 'கடைசியில் இரண்டு பக்கமும் பாதிக்கப்பட்டது நான்தான்..' என்று பேசும்போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆக்ஷனும், மென்மையும் கலந்த அவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினர். 


பெரிய படம் ஓடும்... சின்ன படம் ஓடாது... என்ற கருத்து வேறுபாடுகள் இருக்கும் தருணத்தில் நல்ல படம் ஓடும் என்று நிரூபித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.'' என்றார். 


பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், '' அண்மையில் இப்படக்குழுவினருடன் மதுரைக்கு பயணித்த போது தான் நடிகர் அருள்தாஸின் நெருக்கமான நட்பு கிடைத்தது. அற்புதமான மனிதர். அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை பார்த்து அவரைப் பற்றி தவறாக நினைத்து இருந்தேன். அவருடன் பழகும் போது தான் அவருடைய மற்றொரு முகம் தெரிந்தது. 


இயக்குநர் சண்முக பிரியன் தன்மையான ஆத்மார்த்தமான படைப்பாளி. இந்தப் படத்தின் மூலம் ஷான் ரோல்டன் என்ற கலைஞன் அவருக்கு நண்பனாக கிடைத்திருக்கிறார். திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தபோது ஷான் ரோல்டனை பற்றி இயக்குநர் விவரித்த தருணங்கள் மறக்க முடியாதவை.  


இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் இணைந்து இந்த ஆண்டு விகடன் விருதினை பெற்றதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இன்னும் அவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். 


விக்ரம் பிரபு உடன் நான் பணியாற்றும் மூன்றாவது படம் இது. இந்த படத்தில் அவர் மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார். உங்களுடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என  ஆசைப்படுகிறேன். விக்ரம் பிரபு உடன் இணைந்து பணியாற்றுவதை என் தந்தையார் உயிருடன் இருந்திருந்தால் மனதார பாராட்டிருப்பார். தற்போது அவருடைய ஆத்மா என்னை பாராட்டும் என நம்புகிறேன்.  


இந்தப் படத்தில் நான் பணியாற்றுவதற்கு தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான் முதன்மையான காரணம். இந்தப் படத்தின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.


நடிகை மீனாட்சி தினேஷ் பேசுகையில், '' நீண்ட நாட்களாக தமிழில் நல்லதொரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். இந்தப் படத்தில் ராதா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.  இந்த கதாபாத்திரத்தை உணர்ந்து மகிழ்ச்சியுடன் நடித்தேன். படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் மறக்க முடியாததாக இருந்தது.  இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் இசை என் கதாபாத்திரத்தை மேம்படுத்துவது போல் இருந்தது. விக்ரம் பிரபு மற்றும் சுஷ்மிதா பட் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி '' என்றார். 


நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில், ''  இந்தத் திரைப்படம் வெளியான பிறகு நிறைய திரையரங்குகளுக்கு நேரில் சென்ற போது ரசிகர்களின் வரவேற்பு எங்களை சந்தோஷப்படுத்தியது. படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு குடும்பத்தினருடன் அனைவரும் சந்தோஷமாக பொழுதைக் கழித்தோம் என்று உற்சாகத்துடன் சொன்னார்கள். அத்துடன் நீங்கள் காட்டியது போல் எங்களுடைய குடும்பத்திலும் சில உறவினர்கள் இருக்கிறார்கள் என்று உரிமையுடன் குறிப்பிட்டார்கள். 


நான் நடித்திருந்த அம்பிகா கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு அளிப்பார்கள்? என்று பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்தை இயக்குநர் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். அதற்கான வரவேற்பும் நான் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருந்தது. இதற்காகவும், என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்காகவும் இந்த தருணத்தில் இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை மீனாட்சி தினேஷ் அற்புதமாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விக்ரம் பிரபுவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்த படத்தின் வெற்றிக்கு ஷான் ரோல்டனின் இசையும் ஒரு காரணம். அத்துடன் இந்த படத்தின் பாடலுக்கான வரிகளை கேட்கும்போது புரிந்து ரசித்தனர். இந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கும் , உழைத்த படக் குழுவினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார். 


தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், '' இந்தப் படத்தை வெற்றி படமாக்கிய ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் நன்றி.  


இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நண்பன் சண்முக பிரியன் முதல் முதலாக 'லவ் மேரேஜ் ' படத்தை இயக்குகிறார். அந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். இதற்காக படத்தின் பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்தார்கள். பஸ், ரயில், பஸ் ஸ்டாண்ட் என இந்த படத்தை எங்கெங்கு விளம்பரப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் விளம்பரப்படுத்தி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர்.


சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம் என்ற சூழலில் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலனின் ஆதரவு இருந்ததால் இந்த திரைப்படம் நிறைய திரையரங்குகளில் திரையிட முடிந்தது. இந்தத் திரைப்படத்தை அவர்களால் எந்த அளவிற்கு பெரிய அளவில் திரையரங்குகளில் திரையிடப்பட முடியுமோ.. அந்த அளவிற்கு வெளியிட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் இயக்குநர் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் இயக்குநர் சண்முக பிரியனுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


நண்பர் சண்முக பிரியனின் வெற்றியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அவர் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார். 


விநியோகஸ்தர் - தயாரிப்பாளர் சக்திவேலன் பேசுகையில், '' இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும், படக் குழுவினருக்கும் விநியோக நிறுவனம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பு நிறுவனத்தினர்... படக் குழுவினர்.. என அனைவரும் பட வெளியீட்டுக்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.  இவர்கள் அனைவருக்கும் சினிமா நன்றாக தெரிந்திருப்பதால்.. அவர்களுடைய திரைப்படத்தை சரியான முறையில் விளம்பரப்படுத்தி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர். 


ஒரு படம் உருவான பிறகு அந்த படம் வெளியிடும் போதும்.. வெளியீட்டிற்கு பின்னரும் அதனை விளம்பரப்படுத்துவதற்கு ஏராளமான எனர்ஜி தேவை. அதை இந்த குழுவிடம் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். 


இயக்குநர் சண்முகப்பிரியன் அவருடைய முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார் அவர் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார். அதற்கான முழுமையான முன் தயாரிப்புடன் அவர் களமிறங்கி இருக்கிறார். 


இந்தப் படத்தை வெற்றி பெற செய்ததில் ஊடகத்தினருக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. அவர்கள் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடம் சேர்ப்பித்த காரணத்தினால் தான் நாங்கள் எதிர்பார்த்த ரசிகர்களை விட கல்லூரி மாணவர்களும், குடும்பத்தினரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை வெற்றி பெறச் செய்தனர். இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  'பராசக்தி', 'பருத்தி வீரன்' 'கும்கி' போன்ற படங்களில் அறிமுகமான நடிகர்களுக்கு தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என திரையுலகினர் சொல்வார்கள்.  அந்த வகையில் கலை உலகில் மூன்றாம் தலைமுறை சார்ந்த இந்த படத்தின் நாயகனான விக்ரம் பிரபுவுக்கு இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அவருக்கும் என்னுடைய நன்றிகள்'' என்றார். 


இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், '' இந்தப் படத்தை வெற்றி படமாக்கிய ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி.  இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள்  காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும், அன்பும்.. எனக்கு குழந்தை பிறந்த போது கிடைத்த சந்தோஷத்தை விட அதிகம். 


முதல் படமாக குடும்ப படத்தை இயக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். அக்காவை கல்யாணம் செய்து கொள்வதற்காக வரும் ஒருவர் தங்கச்சியை திருமணம் செய்து கொள்கிறார். இதை கேட்கும் போது கொஞ்சம் கொச்சையாக இருக்கும். பெண்களை எப்போதும் அழகாக தான் காட்சிப்படுத்த வேண்டும் என என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக் சொல்லிக்கொண்டே இருப்பார். இந்தக் கதையில் பெண்ணை இன்னும் அழகாக காட்சிப்படுத்தலாம் என்று அவர்தான் சொன்னார்.‌ அதற்குப் பிறகுதான் இப்படத்தின் திரைக்கதை முழுமையானது. இந்த கதையை எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்ட என் ஹீரோ விக்ரம் பிரபுவிற்கு முதல் நன்றி. 

படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் கொடுத்த ஆதரவு எல்லையற்றது. அவருக்கும் என் நன்றி. 


நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான திரையரங்குகளில் வெளியிட்டதற்காக விநியோகதஸ்தர் சக்திவேலனுக்கும் நன்றி. 


படத்தின் பணிகள் நடைபெறும் போது தயாரிப்பாளரும், தொழில்நுட்பக் கலைஞர்களும், நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான ஒத்துழைப்பை வழங்கினர். படம் வெளியான பிறகு ஊடகத்தினரும், ரசிகர்களும் பேராதரவு அளித்து வருகிறார்கள். இதை பார்க்கும் போது எனக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்காக நான் இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இப்படத்திற்காக நடிகை சுஷ்மிதாவிடம் பேசும்போது படத்தின் முதல் பாதியில் நீங்கள்தான் ஹீரோயின். அதன் பிறகு படத்தினை விளம்பரப்படுத்தும் போதும் உங்களுடைய பங்களிப்பு தேவை என்று சொன்னேன். 


அதன் பிறகு மீனாட்சியிடம் பேசும்போது நீங்கள் இரண்டாம் பாதியில் இருப்பீர்கள். படத்தினை விளம்பரப்படுத்தும் போது நீங்கள் இடம் பெற மாட்டீர்கள் என்று சொன்னேன்.


முதலில் தயக்கம் காட்டினார்கள். அதன் பிறகு என் மீது நம்பிக்கை வைத்து நடித்தார்கள். அதற்காக இருவருக்கும் நன்றி. 


இந்தப் படத்தை நடிகர் பிரபு பார்த்துவிட்டு, விக்ரமை நன்றாக நடிக்க வைத்திருக்கிறாய் என்று பாராட்டினார். இது எனக்கு கிடைத்த சிறந்த பாராட்டாகவே கருதுகிறேன். 


இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் நண்பன் யுவராஜுக்கும் நன்றி '' என்றார்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' இயக்குநர் சண்முகபிரியன் எனது சிறந்த நண்பர் ஆகிவிட்டார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சற்று கூடுதலாக இந்த படத்தில் உழைத்தோம்.  வெற்றி பெறுவதற்கான எல்லா அடையாளங்களும் இயக்குநரிடத்தில் இருக்கிறது. இன்னும் அவர் பெரிய வெற்றிகளை தொடுவார்.‌ வர்த்தக ரீதியிலான திரைப்படங்களிலும் அவர் கொடிகட்டி பறப்பார் என்று சொல்லலாம்.

இது போன்ற கதையை தேர்ந்தெடுத்து அதனை முதல் படமாக இயக்குவது சவாலானது. கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் இப்படத்தின் கதையை அவர் நேர்த்தியாக சொல்லியிருந்தார். திருமண விசயத்தில் உள்ள சிக்கல்களை புரிந்து கொண்டு அதனை நல்ல கதாபாத்திரத்தின் மூலமாகவும், அதற்கு பொருத்தமான நட்சத்திர முகங்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தார். 


இப்படத்தில் நடித்த நடிகர்களில் அருள்தாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காகவே பிரத்யேகமாக பின்னணி இசையமைத்தேன். அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலானதாக இருக்கும். ஒரே மாதிரியான உணர்வை சிறிய சிறிய வேறுபாட்டுடன் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். 


எனக்கும் பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் இடையேயான உறவு கலாபூர்வமானது. இந்த உறவு தொடரும்.‌ தமிழ் ரசிகர்களுக்காக கேளிக்கையான பாடல்களை மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கான பாடலையும் நாங்கள் இணைந்து வழங்குவோம் என உறுதி கூறுகிறேன். 


தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், இயக்குநர் சண்முக பிரியனுக்கும் இடையேயான நட்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன். 


விக்ரம் பிரபு இது போன்ற யதார்த்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருப்பதை பாராட்டுகிறேன். '' என்றார். 


விக்ரம் பிரபு பேசுகையில், '' இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது.  இப்படம் வெளியான பிறகு திரையரங்கத்திற்கு சென்று ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பு இப் படக்குழு மூலம் கிடைத்தது. நீண்ட நாள் கழித்து மதுரைக்கு சென்றிருந்தேன். பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய பணி நிறைவடைந்தது என்று மகிழ்ச்சியாக இருப்பேன்.  ஆனால் இந்த படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரை உள்ள திரையரங்கத்திற்கு சென்று ரசிகர்களை சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. சென்னையில் நாங்கள் குழுவாக திரையரங்கத்திற்கு சென்ற போது மிகப்பெரும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை அவர்கள் எந்த அளவிற்கு அனுபவித்து ரசித்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்கள் இந்தப் படக் குழு மீது காட்டிய அன்பிற்கும் இந்த படத்தின் மீது ஊடகத்தினர் காட்டிய அன்பிற்கும் நன்றி. 


நான் ஷான் ரோல்டனின் ரசிகன். இந்தப் படத்திற்கு அவருடைய இசை ஆன்மாவாக இருந்தது. இந்த படத்தின் மூலம் நல்லதொரு ஆல்பத்தை கொடுத்து இருக்கிறீர்கள். 


இந்தப் படத்திற்கு ஹீரோயின்ஸ் இருவரும் இரண்டு பில்லர்கள். அற்புதமாக நடித்திருந்தனர். 


இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். 


இந்தப் படத்தை பார்த்துவிட்டு அப்பா சண்டைக் காட்சிகள் நன்றாக நடித்திருக்கிறாய் என பாராட்டினார். இதுவே எனக்கு மிகப்பெரிய விசயம். இந்தத் திரைப்படத்தை திரையுலகினர் பலரும் பார்த்து ரசித்து விட்டு என்னை பாராட்டினார்கள். இந்த படத்தின் மூலம் ஏராளமானவர்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறேன். 


'இறுகப்பற்று' படத்தை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததாக இயக்குநர் சொன்னார். அதற்காக அவருக்கும் நன்றி. எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நிரூபித்த பிறகு தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில் டைப் காஸ்ட் என்ற பிரச்சனையில் சிக்கியிருக்கும் நடிகர்களில் நானும் ஒருவர். அதையெல்லாம் உடைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


எங்களுடன் இணைந்து வெளியான அனைத்து திரைப்படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஏனெனில் இது என்னுடைய துறை. சேர்ந்து ஓடினால் நன்றாக இருக்கும். '' என்றார்.