Featured post

விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு

 *விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!* *ரீல் குட் பிலிம்ஸின் 'எலக்சன்' மே 17 ஆம் தேதி வெளியாக...

Thursday 13 August 2020

கடந்த இரு வாரங்களில்

கடந்த இரு வாரங்களில்  ஆறு மரணச்செய்தி..
அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள்..அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு..


 ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்குமுறை அழைத்தும் பயனளிக்காமல் நேரமின்மையால் கையாலாகமால் சித்தப்பாஉயிரை பறிகொடுத்து கண்ணீரோடு நின்றவன் என்ற முறையிலும் வலிகளுடன் இந்த பதிவு...





இந்த பதிவு

பாரதபிரதமர்
உயர்திரு. #நரேந்திரமோடிஜீ அவர்கள்

இந்திய குடியரசுத்தலைவர்.
#ராம்நாத்கோவிந்த்
 அவர்கள்

தமிழக முதல்வர் உயர்திரு . #எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

தமிழக சுகாதாரதுறை அமைச்சர்

உயர்திரு.#விஜயபாஸ்கர் அவர்கள்

தமிழகஅரசு தலைமைசெயலர் உயர்திரு.சண்முகம்

சுகாதாரதுறை செயலர்
திரு .ராதா கிருஷ்ணன் அவர்கள்

 மற்றும்  சம்பந்தப்பட்ட சுகாதர துறை  உயரதிகாரிகள்

முக்கியமாக

 அனைத்து மீடியா பத்திரிக்கை செய்தி ஔிபரப்பு நிறுவனங்களுக்கும்
 அனைவருக்கமானது...

       நமது இந்தியாவில்  அவசர மருத்துவ தேவைக்கு  அரசு   ஆம்புலன்ஸ  உள்ளது...
"108 "என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும்..

உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவதுவிபத்து எனில்.அந்த எண்ணிற்கு  போன் செய்து அவர்கள் வரும்வரை காத்திருந்து  காயம்பட்டவரை மருத்துவமனை அழைத்து சென்று இருக்கிறேன்.

    இந்த பதிவு பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில்  எழுதுகிறேன்..தவிர யாரையும் எந்த துறையும் குறை கூறுவதற்காக அல்ல...

Medicalஅவசர தேவை என்றவுடன் #108 நம்பருக்கு போன் செய்தவுடன்  நம்மைதொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ கால் சென்டரில்  நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவது

 எந்த மாவட்டம்...எந்த தாலுகா...என்ன தெரு என்பதைதெளிவாக  கேட்கிறார்கள்...இ்ன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது...

 எனது மனதில் தோன்றிய எண்ணம்...

 அவசர தேவை என்றால் மட்டுமே நாம்ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா...

 இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம்இருக்கிறது

.எனவே  எந்த எண்ணில் இருந்து அவசர மருததுவ தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது  மொபைல் எண்ணை வைத்து  மற்றும் அல்லது லேண்ட் போனாக இருந்தால்  ஜி.பி.எஸ் வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை  துல்லியமாக ஏன் அந்த பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு  வண்டியில் உள்ள ஜி பி எஸ் கருவி மூலம் தெரிவிக்ககூடாது?

 இதன்மூலம் நேரம் வினாடிகளில் வீணடிக்கப்படுவது தவிர்க்கபடலாம் அல்லவா.?

 உயிருக்கு போராடுபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் இன்றியமையாதது.. உடன் இருப்பவர்களின் மனநிலையும் பதட்டத்தில் அல்லவா இருக்கும்...

   ஏனெனில் கண்முண்ணே ஒர உயிர் போரடிகொண்டிருக்கம் போது தாலுகா.. வட்டம்   பகுதி என  விலாவரியாக அனைவராலும்  தெளிவாக கூறமுடியாது....அல்லவா...

 தயவுசெய்து இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்....
அல்லது

இந்த முறை சாதாரண கால் டாக்ஸி மற்றும் உணவு டெலிவரிக்கு  மட்டும் சாத்தியம் எனில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கு இதே நிச்சயம் சாத்தியமே...

மேலும்

கோவிட் நோய்க்காக ஆரோக்கிய சேது ஆப் அறிமுகபடுத்தியது போல அவசர தேவையான ஆம்புலன்ஸ் போலிீஸ் தீயணைப்பு போன்றவற்வைகளுக்கு தனிச்செயலியை அனைத்து மொபைல் கட்டாய  செயலியாக அறிமுகபடுத்தலாமே..

இது எனது எண்ணம் மட்டுமே... இதை செயலாக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யலாமே..?

 மனவலிகளுடன்

அபிசரவணன்...

No comments:

Post a Comment