Featured post

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல்

 *ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”  திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!*  பாயல் கபாடியாவின் இயக்கத்தில், க...

Thursday 17 September 2020

தாய் - உயிர்

தாய் -
உயிர்
காற்றில்
கலப்பதற்குள் .,
மகனும்
ஆன்மா
விடுதலையடைவது
துயரத்திற்கே
துயரம் தரும் ..


ராணி -
ஆசிரியராக
ராமகிருஷ்ணன் அண்ணாச்சி
அறிமுகமானாலும் .,
அய்யாவழி அன்பராக
குடும்பத்தின்
உறுப்பினராகி விட்டார்.,,

இளமையின்
மரணம்..
மரணத்திற்கே
மரணம் வரவேண்டும்..

கடவுளே -
மலரும் ேபாதே
உதிரலாமா..
வாழும் போதே
வீழலாமா.,


கண்ணீர்
வந்தால்
கரங்களாக
துடைப்பார்..
தளர்ச்சியென்றால்
தோளாக தாங்குவார்..


குற்றம்
காணத் தொடங்கினால்
அன்பு செய்ய
நேரமிருக்காதென்பார் -தெரசா ..

ராமகிருஷ்ணன்
பிறர்த்தியார்
குறைகளையும்
பிறைநிலா
அழகாக்குபவர்..

ஜீவன்
தந்த - சிவனிடம்
ஜீவனாய்
அடைக்கலமாகி விட்டார்..

இவரால் -
எழுத்தாளராக
பத்திரிக்கையில்
பத்திரமாக
பதிவானர்களின்
பேனா _ மை
என்றென்றும்
நன்றி செலுத்தும்..


பத்திரிக்கையாளர்களின்
செல்லமான
ராம்கியின்
அய்யாவழி
அறிஞர்கள்
மாநாட்டு கனவை..
நாங்கள் -
நனவாக்கி
அவரது
ஆத்மாக்கு
இளைப்பாருதலை
தருவோம் .,

மார்வாடியாலும்
அடகு பிடிக்க முடியாதது :
அவரது
மின்காந்த புன்னகை.,

ராணியின்
இதழ்களில்
ராமகிருஷ்ணனின்
வாசனை
வசியம் செய்யும்..


தூரத்திலிருந்தாலும்
நிலவின்
வெளிச்சம்
பூமிக்கு தானே..



நாஞ்சில் .பி.சி.அன்பழகன்

No comments:

Post a Comment