Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Thursday, 17 September 2020

தாய் - உயிர்

தாய் -
உயிர்
காற்றில்
கலப்பதற்குள் .,
மகனும்
ஆன்மா
விடுதலையடைவது
துயரத்திற்கே
துயரம் தரும் ..


ராணி -
ஆசிரியராக
ராமகிருஷ்ணன் அண்ணாச்சி
அறிமுகமானாலும் .,
அய்யாவழி அன்பராக
குடும்பத்தின்
உறுப்பினராகி விட்டார்.,,

இளமையின்
மரணம்..
மரணத்திற்கே
மரணம் வரவேண்டும்..

கடவுளே -
மலரும் ேபாதே
உதிரலாமா..
வாழும் போதே
வீழலாமா.,


கண்ணீர்
வந்தால்
கரங்களாக
துடைப்பார்..
தளர்ச்சியென்றால்
தோளாக தாங்குவார்..


குற்றம்
காணத் தொடங்கினால்
அன்பு செய்ய
நேரமிருக்காதென்பார் -தெரசா ..

ராமகிருஷ்ணன்
பிறர்த்தியார்
குறைகளையும்
பிறைநிலா
அழகாக்குபவர்..

ஜீவன்
தந்த - சிவனிடம்
ஜீவனாய்
அடைக்கலமாகி விட்டார்..

இவரால் -
எழுத்தாளராக
பத்திரிக்கையில்
பத்திரமாக
பதிவானர்களின்
பேனா _ மை
என்றென்றும்
நன்றி செலுத்தும்..


பத்திரிக்கையாளர்களின்
செல்லமான
ராம்கியின்
அய்யாவழி
அறிஞர்கள்
மாநாட்டு கனவை..
நாங்கள் -
நனவாக்கி
அவரது
ஆத்மாக்கு
இளைப்பாருதலை
தருவோம் .,

மார்வாடியாலும்
அடகு பிடிக்க முடியாதது :
அவரது
மின்காந்த புன்னகை.,

ராணியின்
இதழ்களில்
ராமகிருஷ்ணனின்
வாசனை
வசியம் செய்யும்..


தூரத்திலிருந்தாலும்
நிலவின்
வெளிச்சம்
பூமிக்கு தானே..



நாஞ்சில் .பி.சி.அன்பழகன்

No comments:

Post a Comment