Featured post

Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam

 Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam, Launching on May 15* From creative producers Push...

Sunday, 15 December 2019

3 கொலை? திகிலில்காதல் ஜோடி | புதுமுகங்களின் "லோகா"

3 கொலை? திகிலில்காதல் ஜோடி | புதுமுகங்களின் "லோகா"


" 35 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்தவனுக்கு 20 வயது டீன் ஏஜ் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. புது மனைவியை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்கு வருகிறான் அவன். தேன் நிலவை கொண்டாட வந்தவன் ஊரில் அடுத்தடுத்து பிரபல தொழில் அதிபர்கள் மர்மமான கொலை செய்யபடுகின்றனர். கொலை செய்தவனை கண்டு பிடிக்க வந்த துப்பறியும் போலீஸ்காரனுக்கு இந்த கொலைகளில் புதுமண ஜோடி ஈடுபட்டிருக்கலாம் என்ற துப்பு கிடைக்கிறது. ஏன்?எதற்கு? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட காவல்துறைக்கு பல அமானுஷ்யமான திகில்லான நிகழ்வுககளை பார்க்கின்றனர்? அதன் பரபரப்பான பல சம்பவங்கள் திரில்லாக இருக்கிறது. அதன் நடந்தது என்ன? கொலைகளை செய்தது யார் என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வருகிறது. அது என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை தாங்கி விரைவில் வர இருக்கும் படம் தான் ஜெ.பி.எஸ்.சினிமேக்ஸ் தயாரிக்கும் " லோகா" படத்தின் கதை என்றார் இப்படத்தின் கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்யும் டி. எஸ். திவாகர்.

































இதில் யோகேந்திரா, அக்ஷதா இருவருடன் கேரளத்தை சேர்ந்த விஷ்மயா விஸ்வநாதன், கிரேன் மனோகர், விஷ்ணு, நந்தினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

டிசைனர் ஸ்ரீதரின் மகன் ஸ்ரீ ஆகாஷ் ஸ்ரீதர் இப்படம் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். திருச்செல்வம் படத்தொகுப்பையும், உதயசங்கர் ஒளிப்பதிவையும், டைகர் குரு சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும், டாக்டர் .ராஜேந்திரன் - மோகன் ஜி நாயர் இருவரும் இணைத்தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.

விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னனி நட்சத்திரங்கள் உட்பட ஏறக்குறைய நூறு படங்களுக்கு மேல் கேரளாவில் ரிலீஸ் செய்த பிரபல வினியோகஸ்தரான எஸ். ஜெயபால் தமது ஜெ.பி.எஸ்.சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் "லோகா"வை தயாரிக்கிறார்.

கேரளா, கோவை, சென்னை உட்பட பல இடங்களில் வளர்ந்துள்ள " லோகா" படத்தை இயக்கியுள்ள டி .எஸ். திவாகர் இதற்கு முன் ஐந்து படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment