Featured post

G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai

 _*G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’*_ G.V. Prakash Kumar’s...

Monday, 15 June 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம்

 *அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!*





இந்தியா, ஜூன் 15, 2026: மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர், தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து முதல் வெளியீடாக ’அரவிந்த்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், திரைப்பட இசையைத் தாண்டி பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை வழியே தனித்துவமான கதைகளைச் சொல்லும் புதிய முயற்சியை அனிருத் மேற்கொண்டிருப்பதையும் காட்டுகிறது. 


2012 ஆம் ஆண்டு வைரலான ’வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் அனிருத் நாடு முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ’ஜெயிலர்’, ’கூலி’, ’விக்ரம்’, ’லியோ’ மற்றும் ’தேவரா: பார்ட் 1’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரசிகர்களும் திரையுலகினரும் அவருடைய இசை திறமைக்கு ‘ராக்ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்து கொண்டாடினர். வேகமாக மாறிவரும் இன்றைய டிஜிட்டல் இசை சூழலில் நிலைத்திருக்கப் போராடும் ஒரு சுயாதீனக் கலைஞரின் சவால்களை ‘அரவிந்த்’ படைப்பின் மூலம் அனிருத் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.


இப்பாடலின் நாயகனான அரவிந்த் இசையமைப்பாளர் அனிருத்தின் மற்றொரு வடிவம். பல சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் தனது வாழ்வையே இசைக்காக அர்ப்பணித்த ஒரு தீவிர இசைக்கலைஞர் அரவிந்த். இன்றைய சூழலில் இசை வெளியிடுவது முன்பைவிட எளிதாகி விட்டது. ஆனாலும் ஒரு சுயாதீனக் கலைஞராக நீண்ட காலம் நிலைத்திருப்பது, குறிப்பாகத் தென்னிந்திய இசைச் சூழலில் இன்றும் மிகப்பெரும் சவாலாகவே உள்ளது. இருப்பினும், தனது இசை அதற்கான சரியான ரசிகர்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கை அரவிந்துக்கு வலுவாக உள்ளது. 


இந்தப் பாடல் குறித்து அனிருத் பகிர்ந்து கொண்டதாவது, “ஏதோவொரு விதத்தில் நம் அனைவரையும் பிரதிபலிக்கும் ஒருவன் தான் அரவிந்த். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘அரவிந்த்’ இருக்கிறார். ஆனால் இந்தப் பாடல், தனது திறமையை உலகுக்கு நிரூபித்து வாய்ப்புக்காக ஏங்கும் ஒரு சுயாதீன இசைக் கலைஞரைப் பற்றி பேசுகிறது. இணையத்தில் எண்ணற்ற உள்ளடக்கங்கள் நிரம்பியுள்ள இந்தக் காலத்தில், ஒரு தனித்துவமான கலைஞர் வெற்றி பெற முயற்சிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை மற்றும் நையாண்டியுடன் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார். 


இந்தப் பாடல் அனிருத்தின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. தனது சொந்த அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பாதையை இதில் பிரதிபலித்துள்ள அவர், இதே போன்ற பயணத்தில் இருக்கும் பல கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் இந்தப் பாடல் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும் என நம்புகிறார். அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம், வரும் மாதங்களில் பல்வேறு வகையான சுயாதீன இசைத் திட்டங்கள் மற்றும் புதிய கருத்தாக்க இசைப் படைப்புகளை உருவாக்கி வெளியிட அனிருத் திட்டமிட்டுள்ளார்.

No comments:

Post a Comment