Featured post

Where Love Meets Chaos - ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல் வெளியாகிறது 'அன்பே டயானா

 Where Love Meets Chaos - ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல் வெளியாகிறது  'அன்பே டயானா'. காதல்,சிரிப்பு, குழப்பம் என இருவேறு உலகங்களை ஒன்றி...

Sunday, 15 February 2026

நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் 'தி டார்க் ஹெவன்

 நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் 'தி டார்க் ஹெவன் '

ஏப்ரலில் 3 -ல் வருகிறது 'தி டார்க் ஹெவன் ' !


 ' தி டார்க் ஹெவன் ' டப்பிங் தொடங்கியது !







மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!


மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர்  திரைப்படமாக 'தி டார்க் ஹெவன்' உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக்   கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை  வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.


இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது,


"இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது.


இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி,  ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு  இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்

எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக 'ஜாக்கி' படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி  பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .


இதன் படப்பிடிப்பு வண்டிபெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவாலான பகுதிகளில் படமாக்கப்பட்டு

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது " இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.

No comments:

Post a Comment