தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வானம் கலைத் திருவிழா என்னும் பெயரில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது.🎉📚💙
‘வேர்ச்சொல் - தலித் இலக்கியக் கூடுகை’ மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா ஏப்ரல் 18 & 19 தேதிகளில் சென்னையில் முழுநாள் நிகழ்வாக நடக்க இருக்கிறது. இலக்கியம், சமூக அரசியல், சினிமா எனப் பல்வேறு அமர்வுகளில் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், விமர்சகர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பல தரப்பினர் கலந்துகொள்கிறார்கள்.🖍🌸🎉📚
கவிஞர் என்.டி. ராஜ்குமார் அவர்களுக்கு ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ வழங்கப்படுகிறது. இது தவிர அவர் குறித்த நூல் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு, புத்தகக் கண்காட்சி போன்றவையும் இடம்பெறுகின்றன.✨✨🎉🎉
அறிவுப்பூர்வமான, மகிழ்வான, கொண்டாட்டமான இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.❤️❤️
உங்கள் வருகை இந்நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.✨✨✨
இடம்: முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலை அரங்கம்,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.
ஏப்ரல் 18 & 19 (இரண்டு நாட்கள்)
நேரம்: காலை 9 முதல் மாலை 7 வரை.
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!
No comments:
Post a Comment