Featured post

மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சில  திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த...

Wednesday, 27 April 2022

Veet launches its new campaign with

Veet launches its new campaign with Katrina Kaif

Veet’s campaign #TheBetterWayToWax is catering to the needs of the multifaceted woman of today

Veet®, the world leader in depilatory products, launched its new campaign with brand ambassador Katrina Kaif today. The campaign focuses on equipping and catering to the needs of the modern, multifaceted, young women of today with Veet’s Cold Wax Strips.

Directed by popular filmmaker Punit Malhotra, the campaign ‘The Better Way to Wax’ speaks to women seeking quick and effective hair removal solutions during peak summer months. Veet Cold Wax Strips have quickly become popular with women due to the ease of use and great results at home. Cold waxing offers better results than the more common hot sugar waxing, minus the discomfort, mess, and loss of time that is important for women who are on the go and looking for a quick fix for hair removal, without compromising on results.



Speaking about the campaign, Mr. Dilen Gandhi, Regional Marketing Director, South Asia – Health & Nutrition, Reckitt, said, “We understand that the multifaceted woman of today is looking to make her life simpler with innovative, easy to use solutions without compromising results. We are excited to launch our new campaign #TheBetterWayToWax with Katrina Kaif. She resonates and inspires women who know what they want in life and achieve same with confidence and style. This campaign is our way to celebrate women who don’t compromise and want the best in everything that they do. Veet Cold Wax Strips are the perfect solution offering a convenient and effective way to remove hair with great results.”

 

Commenting on the launch, Actress and Entrepreneur, Katrina Kaif said, “Veet is an iconic brand that resonates with women like me who are juggling numerous responsibilities and are looking for a convenient yet effective solution to their grooming needs. My longstanding journey with Veet makes our association even more special, I'm looking forward to the latest campaign #TheBetterWayToWax and hoping the audience likes it too."

 

Punit Malhotra, Director, Writer and Ad Filmmaker said, “I am delighted to partner with Veet, a brand that celebrates self-expression and provides innovative solutions to both men and women in their hair-removal journey. With #TheBetterWayToWax, we brought out Katrina’s fun authentic self and tried to show the viewers how she manages different roles in her very busy everyday life. I have personally loved directing the ad and being a part of this journey with Veet.”

 

Bobby Pawar, Chairman and Chief Creative Officer, Havas Group India added, “The campaign is built on the insight that today’s women are not only playing many roles, they are also excelling in them. Their lives are as experience-rich as they are time-poor and Veet is the perfect wellness partner to give them the excellence they live by, while also seamlessly fitting into their busy lives.”

 

Actress, entrepreneur, and fitness enthusiast Katrina Kaif perfectly embodies qualities of a modern woman. Her journey from a celebrity to an entrepreneur is a powerful representation that ensures that she is the perfect fit for Veet.

 

#TheBetterWayToWax is a 360-degree marketing campaign across digital and television that aims to establish Veet Cold Wax Strips as an easy-to-use product that delivers effective and efficient results at home such as up to 28-days of smoothness & removal of shortest of hair due it its cool gel wax technology.

 

The Veet Cold Wax Strips are available in retail stores across India and e-commerce websites at a starting price of INR 99.

Monday, 25 April 2022

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

 இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி.  

"மாநாடு" படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவர்கள் இருவரது கூட்டணியில் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

And, its a wrap!! Kudos to team #ProductionNo7

#NivinPauly #Ram - #Yuvan

#DirectorRam @NivinOfficial
@sureshkamatchi @thisisysr @sooriofficial @yoursanjali @eka_dop
@UmeshJKumar @silvastunt @praveen4joe @Malik211287
@johnmediamanagr #VHouseProductions

இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்..



இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. ..

சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் தத்ரூபமாக மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென ஒருநாள் விசிட் அடித்த இயக்குநர் மிஸ்கினே, இந்த செட்டை பார்த்து வியந்துபோய் உமேஷின்.கலைநயத்தை பாராட்டி சென்றார்.

ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்றுள்ளது, விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்பட் உள்ளன.
 
தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி

இயக்கம் ; ராம்

இசை ; யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு ; ஏகாம்பரம்

கலை ; உமேஷ் ஜே குமார்

மக்கள் தொடர்பு ;  A. ஜான்






ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் "மாஸ்க்"!

 ஹரிப்பிரியா நடிக்கும்  த்ரில்லர் படம் "மாஸ்க்"!


ஆதிராஜன் தயாரித்து இயக்கும் "மாஸ்க்"!!


 சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் 'அருவா சண்ட' , இளையராஜா இசையில் 'நினைவெல்லாம் நீயடா', படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் "மாஸ்க்". 
















சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார்  புனித் ராஜ்குமாரின் மைத்துனரும் சிறுவயதிலேயே தேசிய விருது பெற்றவருமான விஜய ராகவேந்திரா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

 தற்போது சசிகுமாருடன் "காமன் மேன்" படத்தில் நாயகியாக நடித்து வருபவரும், தெலுங்கு கன்னட திரையுலகின் முன்னணி நடிகையுமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

மாஸ்க்கில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் வேறுவிதமான ஹரிப்ரியாவைப் பார்க்கலாம்.

தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபலமான மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடியிருக்கிறார்.

மற்றும் ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ராஜேஷ் கே நாராயன் இப்படத்திற்கு  ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'சிலந்தி' மற்றும் சில தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த எம் கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

குறிப்பாக, பின்னணி இசையில் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியுள்ளார் எனலாம்.

இந்தியா முழுவதும் வசூலை வாரிக் குவித்த "கே ஜி எஃப்" படத்தின்  எடிட்டர் ஸ்ரீகாந்த் கவுடா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

ஐ. ராதிகா, கலைக்குமார் நடனக் காட்சிகளை அமைக்க, மாஸ் மாதா சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

மோகன்லாலின் "மரைக்காயர்" உட்பட ஏராளமான படங்களுக்கு  ஒலிக்கலவை செய்த எம் ஆர் ராஜா கிருஷ்ணன் இப்படத்தின் மிக்சிங் பணிகளைக் கவனிக்கிறார்.

பாடல்களை சினேகன்,  ஆதிராஜன் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

"மாஸ்க்" படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டபோது,   "சென்னை பெங்களூர் கோயம்புத்தூர் மதுரை போன்ற இடங்களில் ஒரே மாதிரியாக மர்மமான முறையில் இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.

அது கொலையா?!தற்கொலையா?! இல்லை அமானுஷ்ய சக்தியின் ஆட்டமா? என்று முடிவு செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது.

தீவிரமாக விசாரிக்கும்போது அதன் பின்னணியில் இருக்கும் காரணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

 பெண்களுக்கு தரப்படும் அதீத சுதந்திரம் அவர்களை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி விடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத கோணத்தில் நிறைவுறும்..

இப்படத்தில் ஆறு டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.


படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசூர், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.    

த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக உருவாகியிருக்கிறது "மாஸ்க்" என்றார் ஆதிராஜன்.

Actress Haripriya’s edge-of-seat thriller ‘Mask’

 Actress Haripriya’s edge-of-seat thriller ‘Mask’  Aadhiraajan’s production and directorial venture titled ‘Mask’

Filmmaker Aadhiraajan, whose directorial ventures like Silandhi, Ranathanthra (Kannada) have gained him groovy reception followed by decent expectations for his forthcoming movies ‘Aruva Sanda’ and ‘Ninaivellam Neeyada’ that features a musical score by Isaignani Ilaiyaraaja gears up for his next directorial titled ‘Mask’. Apart from writing and directing, Aadhiraajan is producing this movie as well.

Actor Vijaya Raghavendra, the brother-in-law of Late Kannada Superstar Puneeth Rajkumar, who had won the National award for his stellar performance in his childhood phase itself, is playing the lead role. 
















Haripriya, one of the leading actresses in the Kannada and Telugu industry, who is currently performing the female lead character in Sasikumar’s upcoming film ‘Common Man’ is playing the heroine’s character.

She will be exhibiting her prowess in performances, and turning the spotlight with a newfangled glamorous appeal in this movie. Apart from these brilliant actors, the others in the star cast include4 Aishwarya, Vishal Hegde, and many others.

Cinematography Rajesh K Narayanan, who owns a fabulous array of successful movies for his visual magic is cranking the camera.

Music director M Karthik, who has composed music for ‘Silandhi’ and many Telugu movies is collaborating with director Aadhiraajan again. It is worth mentioning that he has created unique magic with his background score in this movie.

 Editor Srikanth Gowda of India’s biggest blockbuster ‘KGF’ fame is handling editing for this movie.   
 
I. Radhika and Kalai Kumar (Choreography) and Mass Matha (Stunt) are the other technicians involved in this project.

 M.R. Raja Krishnan, who has done sound mixing for many epical movies including Mohanlal’s ‘Maraikkayar’, is handling sound mixing for this movie as well.

The lyrics are penned by Sneghan and Aadhiraajan.

Currently, the postproduction work is happening in full swing.

Shedding lights on ‘Mask’, director Aadhiraajan says, “Women across Chennai, Bangalore, Coimbatore, and Madurai are mysteriously murdered in the same pattern. The police department is perplexed to bring a conclusion whether it’s murder, suicide, or something involving supernatural elements. As the investigation intensifies, the mystery gets unraveled with a shocking revelation. The screenplay is intensely set around the theme of women getting into trouble with the privilege of extreme freedom. The film’s climax ends at an unpredictable angle.

Six digital cameras have been used to shoot this movie.

The movie has been shot across Chennai, Bangalore, Mysore, and Goa.

The film will be a wholesome treat for the diehard fans of thriller movie genres.”

Director VJ Gopinath’s phenomenal surprise of writing

 Director VJ Gopinath’s phenomenal surprise of writing “Jiiva-2” script in 2 days
“Maanaadu” producer’s intense involvement in shaping ‘Jiivi-2’ with finest output
“Vishnu Vishal is one of the main reasons for the materialization of Jiivi-2” – Director VJ Gopinath











Witnessing grand success with Venkat Prabhu-Silambarasan TR duo’s blockbuster ‘Maanaadu’, producer Suresh Kamatchi of V House Production is currently involved in the production of a myriad projects including Ram’s directorial starring Nivin Pauly and Anjali in the lead characters.

Besides, he is producing yet another project titled ‘Jiivi-2’ that has completed the entire work in silent manner.

Jiivi starring Vetri and Karunakaran in the lead characters got released in 2019, and won the critical acclaims and appreciations of critics, audiences and film fraternity.

The film’s sequel titled ‘JIIVI-2’ directed by VJ Gopinath is getting materialized.

The story premise of Jiivi is based on the Triangle Theory that involves the connection between a series of events that happened in someone’s life repeating again for another person in a different place. The protagonist realizing this situation, and attempting to stop the chain of events formed the crux of Jiivi.

“By the end of movie, the protagonist’s friend asks whether the triangle theory has ended or will continue to exist. This is where the story of Jiivi-2 commences.

Did the Triangle theory start having its impact on Protagonist again?

If that’s situation, what are the problems he is going to face?

Does the protagonist use his intelligence to find solution to all these upheavals? We have tried presenting all these moments together in Jiivi-2,” says director VJ Gopinath.

Babu Tamizh had written the story and dialogues for Jiivi-1.
 
But director VJ Gopinath has penned the story for Jiivi-2.

 
Director VJ Gopinath shares the interesting facts that contributed towards the materialization of Jiivi-2.

He says, “Soon after the success of Jiivi, I was supposed to work with Vishnu Vishal, and had even got an approval for the story. However, the heavy impact of pandemic phase turned everything upside down for a past couple of years. With his couple of projects pending and rescheduled, he requested me to do a quickie project. So that both of us can kick-start our project soon once we are done with the current works.

This is when Big Print Pictures IB Karthikeyan suggested me to give a try with the sequel to Jiivi. However, we had created the first part without any single thought about the sequel.

When I shared my thoughts about the sequel to writer Babu Tamizh, he conveyed that it’s not possible to conceive the plot. However producer Karthikeyan kept motivating me that it’s possible. I took 15 days of time, but eventually completed the story in a couple of days.”

 During that time, IB Karthikeyan got busy with the production works of his recent release ‘Clap’. When the buzz spread that VJ Gopinath has created a unique and interesting story for Jiivi-2, it got the Midas-touch of ‘Maanaadu’ producer Suresh Kamatchi.

Vetri, Karunakaran, Aswini Chandrashekar, Rama, Rohini, Mime Gopi, ‘Aruvi’ fame Thirunavukarasu, who played the titular roles in first part are reprising their characters in this second part as well.

 It’s same with the technical crew as Praveen Kumar (DOP), K.S. Sundaramoorthy (Music), and Praveen K.L. (Editing) are collaborating again for this movie.

 While the shooting of this film is already completed, the postproduction work is happening in full swing.

Star-Cast

Vetri, Karunakaran, Aswini Chandrashekar, Rama, Rohini, Mime Gopi, ‘Aruvi’ fame Thirunavukarasu and others.

Technical Crew:

Production: V House Production – Suresh Kamatchi
Co-Production: Vetrikumaran, Naganathan Sethupathi
Written and Directed by V.J. Gopinath
Music: K.S. Sundaramoorthy  
Cinematography: Praveen Kumar
Editing: Praveen K.L. Stunts: Sudhesh
PRO: A John

இரண்டே நாளில் ஜீவி-2 படத்திற்கான கதையை எழுதிய

 இரண்டே நாளில் ஜீவி-2 படத்திற்கான கதையை எழுதிய இயக்குநர் VJ கோபிநாத்

ஜீவி-2 படத் தயாரிப்பில் மும்முரம் காட்டிவரும் மாநாடு படத் தயாரிப்பாளர்

ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் ; இயக்குநர் VJ கோபிநாத்











வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது.

அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது.

கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..

இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.

ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது..

எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்துகொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார்.

 அவரால் அது முடிந்ததா என்பது தான் முதல் பாகத்தின் கதை..

இந்த தொடர்பியல் விதி அத்துடன் முடிந்து விட்டதா, இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில் தான் இந்த  இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.

மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா..? அதன்மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின,?

அதையெல்லாம் நாயகன் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்து அதை சரி செய்தாரா? என்பதை ஜீவி2-வில்  சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குநர் VJ கோபிநாத்.

ஜீவி முதல் பாகத்தின் கதையையும் வசனத்தையும் கதாசிரியர் பாபு தமிழ் எழுதியிருந்தார்..

ஆனால் இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் VJ கோபிநாத்தே எழுதியுள்ளார்.

இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகக் காரணமான சுவராஸ்யமான சூழல் குறித்து கோபிநாத் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்..

"ஜீவி" படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்காக ஒரு கதை எழுதி அவரிடம் ஒப்புதலும் வாங்கி இருந்தேன்.. ஆனால் கடந்த இரண்டு வருட காலத்தில் கொரோனா தாக்கம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.

 ஏற்கனவே தான்  நடித்து வந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தாமதமாக, அதற்குள் சின்னதாக ஒரு படம் பண்ணிவிட்டு வந்து விடுங்களேன் எனக் கேட்டுக்கொண்டார் விஷ்ணு விஷால்.

அப்போது தான் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் என்னிடம், நீங்கள் ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்குங்கள் எனக் கூறினார்..

ஆனால் இரண்டாம் பாகத்திற்கான எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் முதல் பாகத்தை உருவாக்கி இருந்தோம்..

 கதாசிரியர் பாபு தமிழிடம் இந்த இரண்டாம் பாக ஐடியா பற்றி சொன்னபோது, நிச்சயமாக இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பே இல்லை..

அதிலும் உடனடியாக கதை உருவாக்குவதற்கான சாத்தியமும் இல்லை எனக் கூறிவிட்டார்.. ஆனால் தயாரிப்பாளர் கார்த்திகேயன் விடாப்பிடியாக என்னை உற்சாகப்படுத்தவே, அவரிடம் 15 நாட்கள் அவகாசம் கேட்டு, ஆனால் இரண்டே நாட்களில் இந்தப்படத்தின் கதையை எழுதி முடித்தேன் என்கிறார் ..கோபிநாத்.

அந்த சமயத்தில் இவரை உற்சாகப்படுத்திய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சமீபத்தில் வெளியான கிளாப் படத்தை தயாரிப்பதில் பிஸியாக இருந்தார்,

மேலும் இயக்குநர் VJ கோபிநாத் ஜீவி-2 படத்திற்கான கதையை சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார் என செய்திகள் பரவ ஆரம்பிக்கவே., எதிர்பாராதவிதமாக "மாநாடு" படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கைகளுக்கு இந்த படம் சென்றது.

முதல் பாகத்தில் நடித்த வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு என அனைவருமே இந்தப்படத்திலும் தொடர்கிறார்கள்.

அதேபோல ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல் என அதே வெற்றி தொழில்நுட்பக் கூட்டணி தான் இந்தப்படத்திலும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகர்கள் ; வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகினி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு மற்றும் பலர்

தொழில்நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன் – சுரேஷ் காமாட்சி

இணை தயாரிப்பு: வெற்றிகுமரன் , நாகநாதன் சேதுபதி.

எழுத்து இயக்கம் ;
V J.கோபிநாத்

இசை ; கே.எஸ்.சுந்தரமூர்த்தி

ஒளிப்பதிவாளர் ; பிரவீண் குமார்

படத்தொகுப்பு  ; பிரவீண் கே.எல்

சண்டைப் பயிற்சியாளர் ; சுதேஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

கெட்டது தெரிஞ்ச நல்லவனா இரு

 கெட்டது தெரிஞ்ச நல்லவனா இரு ; பதறவைக்கும் பட்டாம்பூச்சி டீசர்

சைக்கோ த்ரில்லர் படங்களுக்கென ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.. காரணம் படம் முழுவதும் நாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் நீயா நானா என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர வைத்திருக்கும். அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி, ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் அப்படி ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்கு நூறு சதவீதம் தரும் விதமாக உருவாகியுள்ளது.

Teaser of an investigative thriller  #Pattampoochi is here
https://youtu.be/IjpwJZzyYyk

#PattampoochiFromMay13
#SundarC

#BadriNarayanan @khushsundar @Actor_Jai @HoneyRoseOffl #ImmanAnnachi @FennyOliver @navneethsundar @vonimusic @RIAZtheboss @CtcMediaboy

அடுத்தடுத்து வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் இவற்றுடன் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டீசரும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதற்குமுன் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட படமாகவும் இது இருக்கும் என்றும் தெரிகிறது.

1980களில் நடக்கும் இந்த சைக்கோ திரில்லர் கதையில் சுந்தர்.சி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, முதன்முறையாக சைக்கோ வில்லனாக ஜெய் நடித்துள்ளார். எட்டு வருட இடைவெளிக்கு பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ளார். நடிகை ஹனி ரோஸ் தற்போது வெளியாகியுள்ள டீசரும் இந்த மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்தியே உருவாகியுள்ளது.

இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை பென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.

நடிகர்கள் - சுந்தர்.சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து - இயக்கம் – பத்ரி

தயாரிப்பு  - அவனி டெலி மீடியா -. குஷ்பூ சுந்தர்

ஒளிப்பதிவு - கிருஷ்ணசுவாமி

இசை -நவநீத் சுந்தர்,

எடிட்டிங் - பென்னிஆலிவர் ,

சண்டைப்பயிற்சி - ராஜசேகர்,

திரைக்கதை - நரு. நாராயணன், மகா கீர்த்தி

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத் https://youtu.be/IjpwJZzyYyk