Featured post

When love travelled through letters and lived on cassettes

 *When love travelled through letters and lived on cassettes* _Habeebi to Premiere on 25th September on Sony LIV_ Before messages to loved o...

Wednesday, 27 November 2024

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும். ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே

 *ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும்.  ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!*






முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான 'சூர்யா 45' படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. 


அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார்.  அனைவரும் ரசிக்கும்படியான,  காமெடி கலந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னராக, இப்படம் உருவாகவுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.


இன்றைய பூஜைக்குப் பிறகு, ஆர்ஜே பாலாஜி கோயம்புத்தூரில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்தவுள்ளார். இப்படப்பிடிப்பில்,  சூர்யா மற்றும் பிற முன்னணி நடிகர்கள் இடம்பெறும் முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.


இப்பிரம்மாண்ட திரைப்படத்தை,  தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Dream Warrior Pictures ‘Suriya 45’ begins with Poojai

 Dream Warrior Pictures ‘Suriya 45’ begins with Poojai






The formal poojai event of Suriya's next mega-entertainer 'Suriya 45' happened today at Arulmigu Maasani Amman Temple in Anaimalai. 


Dream Warrior Pictures, the producers behind meaningful blockbusters such as Aruvi, Theeran Adhigaaram Ondru, Kaithi, Sulthan, and Oke Oka Jeevitham, is bankrolling this biggie.


Multifaceted RJ Balaji is helming the yet-untitled film, which will be a big scale action entertainer, with ample doses of humour. He has envisioned a grand film with an ensemble of A-lister actors and technicians. The details of the same will be announced soon. 


After the formal poojai, RJ Balaji will move on to the first schedule in Coimbatore, where he will be shooting pivotal scenes featuring Suriya and other lead actors.


Producers SR Prakash Babu and SR Prabu who are behind the grand spectacle, are planning to release the film in the second half of 2025.

Kaafi Milti Julti Hai Na Yeh Kahani” - Shah Rukh Khan draws parallels to

 *“Kaafi Milti Julti Hai Na Yeh Kahani” - Shah Rukh Khan draws parallels to Mufasa’s journey in a new video from Mufasa: The Lion King*






The king is back to roar, and Shah Rukh Khan ensures audiences get a glimpse into his own journey as well! This year’s biggest and most anticipated family entertainer, Mufasa: The Lion King, has captivated fans with its stellar voice cast in Hindi, Telugu and Tamil. Delving into the inspiring journey of Mufasa’s rise as the king of the jungle, Shah Rukh Khan, who is voicing for Mufasa in the Hindi version, shares a special glimpse of his profound connection with this iconic character.


In the newly released video, Shah Rukh Khan narrates the story of Mufasa, a tale of hardship, perseverance, and triumph, echoing his own inspiring journey to becoming one of India’s most beloved superstars. Just as Mufasa rose above challenges to claim his rightful place as a leader, Shah Rukh Khan’s hard work and determination has cemented his legacy as the true Badshah of Indian cinema.


Get ready to experience the rise of the legendary king, brought to life through the iconic voice of Shah Rukh Khan along with your entire family!


*About the Film:*

“Mufasa: The Lion King” enlists Rafiki to relay the legend of the unlikely rise of the beloved king of the Pride Lands, introducing an orphaned cub called Mufasa, a sympathetic lion named Taka—the heir to a royal bloodline—and their expansive journey alongside an extraordinary group of misfits. The all-new feature film is directed by Barry Jenkins.


*Disney’s Mufasa: The Lion King will be releasing in Indian cinemas on 20th December 2024, in English, Hindi, Tamil and Telugu*

காஃபி மில்தி ஜூல்தி ஹை நா எஹ் கஹானி” - முஃபாசாவின் தி லயன் கிங் –ஒரு

 *“காஃபி மில்தி ஜூல்தி ஹை நா எஹ் கஹானி” - முஃபாசாவின் தி லயன் கிங் –ஒரு புதிய வீடியோவில் முஃபாசா:வின் பயணத்திற்கு இணையான ஒன்றை ஷாருக்கான் வெளிப்படுத்துகிறார்*






கிங் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கிவிட்டது அத்துடன் சேர்த்து பார்வையாளர்களுக்கு தனது சொந்த பயணத்தின் ஒரு பார்வையை வழங்குவதையும் ஷாருக்கான் உறுதி செய்திருக்கிறார்! இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்குக்குத் திரைப்படம், முஃபாசா: தி லயன் கிங், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் அதன் ஒளிரும் நட்சத்திரக் குரல் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திழுத்துள்ளது . இதன் இந்தி பதிப்பில் முஃபாசாவுக்கு குரல் கொடுக்கும் ஷாருக்கான், வனங்களின் ராஜாவாக வெற்றிகரமாக வளர்ச்சி காணும் முஃபாஸாவின் மன எழுச்சியூட்டும் பயணத்தோடு ஒன்றிணைந்து ஆழ்ந்து சென்று இந்த மிகச்சிறந்த அடையயாளச் சின்னமாக விளங்கும் கதாபாத்திரத்துடனான தனது உள்ளார்ந்த பிணைப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.


புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், இந்தியாவின் மிகவும் அதிகளவில் அன்பு காட்டப்பட்ட சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக மாறுவதற்கான தனது சொந்த மன எழுச்சிமிக்க பயணத்தை எதிரொலிக்கும் முஃபாஸாவின், கஷ்டங்கள் நிறைந்த கடுமையான வாழ்க்கைப் பயணத்தில் , தளரா முயற்சியை வெளிப்படுத்தும் வெற்றிக்கதையை கதையை ஷாருக் கான் விவரிக்கிறார். தனக்கே உரிய தலைமையிடத்தை அடைய அதற்கெதிரான சவால்களை முஃபாசா வெற்றிகரமாக எதிர்கொண்டு உயர்ந்தது போலவே அதற்கிணையாக ஷாருக்கானின் கடின உழைப்பும் உறுதிப்பாடும் இந்திய சினிமாவின் உண்மையான பாட்ஷாவாக அவரை உயர்ச்செய்து, அவரது பாரம்பரியத்தை உறுதியாக நிலைநாட்டச் செய்தது. .


அடையாளச் சின்னமாக விளங்கும் ஷாருக்கானின் குரல்வளத்தால் இந்த பழம்பெரும் புகழ் பெற்ற வன ராஜா உயிர்பெற்றெழுந்து மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கும் அற்புதமான காட்சியை உங்கள் குடும்பத்தில் அனைவரோடும் இணைந்து கண்டு மகிழத் தயாராக இருங்கள்!

 


"முஃபாசா: தி லயன் கிங்" சிங்கக் குடுபங்களின் அன்பான ராஜாவின் வியப்பூட்டும் வளர்ச்சியின் பழம்புகழ் பெற்ற கதையை வெளியிடுவதற்காக ரஃபிகியை இணைத்துக் கொண்டு முஃபாசா என்ற தன்னந்தனியாக விடப்பட்ட சிங்கக் குட்டியை அறிமுகப்படுத்துகிறது, பரிவு காட்டும் டக்கா என்ற சிங்கம் - அரச குடும்ப வாரிசு - மற்றும் ஒன்றோடொன்று தொடர்பற்ற ஒரு விதிவிலக்கான குழுவோடு இணைந்த அவர்களின் விரிவான ஒரு நீண்ட நெடிய பயணத்தைக் காட்சிப்படுத்துகிறது இந்த புதிய. முற்றிலும் புதுமையான திரைப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.


*Disney's Mufasa: The Lion King திரைப்படம் 2024 டிசம்பர் 20 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுகிறது.*

சிலம்பரசன் டி. ஆர் - யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட்

 *சிலம்பரசன் டி. ஆர் - யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்*



*நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*


*'மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜாவின் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* 


தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 


அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் திரையில் லவ் மேஜிக் நிகழ்த்தும் இளம் காதலர்களான ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் ஆகியோரின் இளமை துள்ளலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 


ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே 'மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183வது இசை ஆல்பம் 'ஸ்வீட் ஹார்ட்' என்பதால்.. இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு,

 *குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு,  டிசம்பர் 21, 2024 அன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது*

*அமெரிக்காவில் கேம் சேஞ்சர் பட விழா!!*



பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.  இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 


இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டம், தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவிற்கு ஒரு வரலாற்றுத் தருணமாகும். அமெரிக்காவின் டல்லாஸை தளமாகக் கொண்ட ராஜேஷ் கல்லேபள்ளி, ஒரு தொழில்முனைவோர் மற்றும் சமூகத் தலைவராக குறிப்பிடத்தக்க பாரம்பரியத்தை உருவாக்கிய ஒரு முன்மாதிரியான நபர். தகவல் தொழில்நுட்ப ஆலோசனை, உணவகச் சங்கிலிகள், ரியல் எஸ்டேட், திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு துறைகளைக் கொண்ட ராஜேஷ் கல்லேபள்ளி, இம்மாதிரி நிகழ்வை மிகப் பெரிய அளவில் நடத்துவதில் சிறந்தவர்.


ராம் சரண் மீதான அபிமானத்தால்  ராஜேஷ் கல்லேபள்ளி இந்த மிகப்பெரிய பணியை மேற்கொண்டுள்ளார், இது திரைத்துறை  எங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து ராஜேஷ் கூறுகையில்.., "இந்தியப் படமொன்றுக்கு அமெரிக்காவில் முதன்முறையாக இந்த அளவிலான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பினை வழங்கிய ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும்  ஷிரிஷ் ஆகியோருக்கு நன்றி. இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.


முன்னதாக வெளியான போஸ்டர்கள், 'ஜருகண்டி ஜருகண்டி' மற்றும் 'ரா மச்சா ரா' பாடல்கள் மற்றும் டீசர் அட்டகாசமான வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்ற ஷங்கர் இயக்கத்தில்  பிரம்மாண்டமான புதுமையான சினிமா அனுபவத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். எஸ்.எஸ்.தமனின் இசை, சாய் மாதவ் புர்ராவின் வசனங்கள் மற்றும் நட்சத்திரத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், படம் மிக அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும். படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி  காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்!

Tuesday, 26 November 2024

நான் விரும்பியது போல் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ மூலம் விஜய் சாருக்கு விருது

 நான் விரும்பியது போல் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ மூலம் விஜய் சாருக்கு விருது வழங்குவேன் - தயாரிப்பாளர் ஜான் அமலன் அறிவிப்பு








நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு போனாலும் நான் என்றுமே விஜய் சாரின் ரசிகன் தான்! - ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ உரிமையாளர் நெகிழ்ச்சி


3 வது ’இந்தியன் விருதுகள் 2024’ (INDIAN AWARDS 2024) - டிசம்பர் 21,22 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது


3 வது ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியுடன் நடைபெறும்  ‘Mr Miss & Mrs தமிழகம்’ அழகிப் போட்டி


சினிமாத் துறையில் கால் பதிக்கும் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’-ன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம்!


கோலிவுட்டின் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures)! - பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகமானது



வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார்.


ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர் தான் திரு.ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும், என்பதை கனவாக கொண்டிருந்தவர், ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள் ‘ (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்.


இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் ’ (INDIAN AWARDS) நிகழ்ச்சியின் 3 வது சீசன் வரும் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக, சென்னை, சேத்துபட்டில் உள்ள ‘லேடி ஆண்டாள்’ அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமாத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 60 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.


மேலும், இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகரும், அரசியல் தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், சினிமாத்துறையில் கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.டைமண்ட் பாபு அவர்களின் 40 வது திரையுலக வாழ்க்கையும் கொண்டாடப்படுகிறது.


விருதுகள் வழங்குவது மட்டும் இன்றி இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்க இருக்கும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், இத்தகைய பணியை தமிழக அரசு வழிகாட்டுதல்படி செய்கிறது.


‘இந்தியன் விருதுகள் 2024 ’ (INDIAN AWARDS 2024) நடைபெறும் அதே மேடையில், இந்திய அளவில் மிக முக்கியமான அழகுப் போட்டியான ’Mr Miss & Mrs தமிழகம் 2024 - சீசன் 4’ நடைபெற உள்ளது.


3வது ஆண்டாக ‘இந்தியன் விருதுகள் 2024 ’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக ’Mr Miss & Mrs தமிழகம்’ அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், வட இந்தியாவில் இத்தகைய அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த நிலையை, தனது இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிருவனம் மூலம் மாற்றியிருக்கும் திரு.ஜான் அமலன், அவர்கள் கோவாவில் சொகுசு கப்பலில் இந்த அழகுப் போட்டியை இரண்டு முறை நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


விருது விழா, அழகுப் போட்டிகள் ஆகியவற்றை தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் வித்தியாசமாக நிகழ்த்தி மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையின் கவனம் ஈர்த்த திரு.ஜான் அமலன், அவர்கள் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால்பதிக்கிறார். இதற்காக ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பவர், இந்நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார்.


பெண் சிங்கம் மற்றும் ஆண் சிங்கம் என்ற அர்த்தம் கொண்ட ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனத்தின் அறிமுக விழா இன்று (நவம்பர் 25) சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.


’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.


விருதுக்குரியவர்களை தேர்வு செய்வதற்காக சினிமா, தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பற்றிய மக்கள் கருத்து, அவர்கள் பற்றி சமூக வலைதளப்பங்களில் வெளியாகும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் உள்ளிட்டவைகளை வைத்து இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.


விருது நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி வரும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனர் திரு.ஜான் அமலன், சினிமாத்துறையில் தயாரிப்பாளராக கால்பதிப்பது பற்றி கூறுகையில், “நான் கல்லூரி படிக்கும் போதே, சினிமா பிரபலங்கள் மற்றும் பிறத்துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அவர்களை மிகப்பெரிய அளவில் கெளரவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு என் கையால் விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தீவிர விஜய் ரசிகர் என்பதால் இதை என் லட்சியமாக கூட வைத்திருந்தேன். கல்லூரி முடித்த பிறகு என் ஆசை என்னை தொடர்ந்ததால், இத்துறையை என் எதிர்காலமாக எடுத்துக்கொண்டேன். அதன்படி, ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள்’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி வருவதோடு, அழகுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வட இந்தியாவில் அழகுப் போட்டியை நடத்த முடியும் என்பதை முதலில் நிகழ்த்திக் காட்டியது நான் தான்.


விருது விழா மற்றும் அழகுப் போட்டி ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் இப்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால் பதிக்கிறேன். ’லையோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறேன். திறமை மிகு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதேபோல், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் குறைந்த முதலீட்டில், தரமான மற்றும் வித்தியாசமான படைப்பாகவும் இருக்கும்.


நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கான கதை தேர்வில் தற்போது ஈடுபட்டுள்ளோம். எங்கள் முதல் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் ஜாலியாக பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, அனைத்து வயதினரையும் தொடர்பு படுத்தும் ஒரு திரைப்படமாகவும் இருக்கும். அப்படம் பற்றிய மற்ற தகவல்கள் இந்தியன் விருதுகள் 2024 நிகழ்ச்சி மேடையில் அறிவிக்கப்படும்.” என்றார்.


நடிகர் விஜய்க்கு விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள், ஆனால் அவர் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டாரா..?


விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றாலும், நான் அவரது ரசிகன் தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் நடிகராக இருக்கும் போது அவருக்கு விருது வழங்க வேண்டும், என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை தான் என்னை இந்த துறையில் பயணிக்க வைத்திருக்கிறது. அதேபோல், அவர் சினிமாவில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவராக  அவருக்கு நான் விருது வழங்குவேன், என்று நம்புகிறேன். அதற்கான உயரத்தை அடைய நானும், என் நிறுவனமும் கடுமையாக உழைப்போம்.” என்றார்.

Just as I wished, I will definitely honour Vijay sir through ‘Indian Media Works’” - Producer John Amalan

 “Just as I wished, I will definitely honour Vijay sir through ‘Indian Media Works’” - Producer John Amalan








“I will be a hardcore Vijay fan forever even after he leaves film industry and enters politics” - Producer John Amalan


New Category of Special Honours “Captain Vijayakanth Award” to be included from 3rd Indian Awards 2024  


3rd Indian Awards 2024 to take place on December 21 & 22


Mr Miss & Mrs Thamizhagam to take place along with 3rd Indian Awards 2024


LIONA & LEO Pictures - Launch of New Production House in Kollywood!




In today’s contemporary world, individuals often embark on their journeys to achieve various accomplishments in life. One person has dedicated their life to recognising and celebrating those who have succeeded through hard work, making it their mission to highlight these individuals in the public eye.


Indeed, in a world where individuals contemplate their future, Mr John Amalan has been reflecting on the importance of identifying and honouring achievers, alongside considering the welfare of others. He envisions a society that acknowledges individuals who have excelled not only in the film industry but also across various fields such as business, sports, politics, and medicine. To realise this dream, he established the organization INDIAN MEDIA WORKS, actively presenting awards under the banner of INDIAN AWARDS to honour those who have made significant contributions in diverse sectors.


The third season of the INDIAN AWARD, which takes place biennially, is scheduled for December 21 and 22, 2024. The event will be held at the 'Lady Aandal' auditorium in Chetpet, Chennai. Awards will be presented in 60 categories, recognising excellence in the film industry, including Best Actor, Best Actress, Best Director, Best Cinematographer, and Best Music Composer. Additionally, awards will be conferred in 30 categories across various fields such as politics, business, sports, medicine, education, military, and law enforcement.


Furthermore, in memory of the late actor and political leader Mr Vijayakanth, an award will be presented in his honour under the name 'Captain Vijayakanth' to those who have excelled in the film industry. Similarly, the 40-year career of Mr. Diamond Babu, who has served as a public relations officer in the film industry for the past four decades, will also be celebrated.


The Indian Media Works organization, which provides financial assistance to the families of military personnel who have served in the Indian Army and lost their lives, as well as to underprivileged children, conducts this work under the guidance of the Tamil Nadu government, in addition to awarding honours.


The prestigious Mr, Miss & Mrs Tamil Nadu 2024 - Season 4 beauty pageant will take place on the same stage and occasion of the INDIAN AWARDS 2024.



The company INDIAN MEDIA WORKS has successfully organised the 'Indian Awards 2024' event for the third consecutive year. Over the past three years, it has also been conducting the 'Mr, Miss & Mrs Tamil Nadu' beauty pageant with great success. Notably, Mr. John Amalan has transformed the perception that a South Indian company could not successfully host such beauty contests in North India through his organization. It is worth mentioning that he has held this beauty pageant twice on a luxury ship in Goa, drawing attention from across India.


Mr. John Amalan has distinguished himself in the media and entertainment industry by uniquely organising award ceremonies and beauty pageants through his visionary approach. He is now making his mark as a producer in the film industry. Significantly, he has established a production company named 'Liona & Leo Pictures,' through which he aims to produce a variety of high-quality and innovative films.


The launch event of this new production house ‘LIONA & LEO PICTURES’ symbolising the names of Lion and Lioness, happened today (November 25) at Prasad Lab, Saligramam in Chennai. The official announcement on the production house’s maiden venture will be officially revealed during the grand event of Indian Awards 2024, scheduled on December 21 & 22.  


A selection committee consisting of five individuals from various fields such as cinema, industry, and politics has been established to choose the award recipients. The final list of nominees is determined based on public opinion, as well as critiques and comments that emerge on social media regarding the candidates.


The founder of 'Indian Media Works', Mr. John Amalan, who has been successfully organising entertainment events including award ceremonies, shared his thoughts on entering the film industry as a producer. He stated, "While I was still in college, I envisioned the need to honor film personalities and achievers from various fields with awards. My aspiration was to establish a company that would recognise them on a grand scale. I particularly wished to present an award to actor Vijay, as I have been a devoted fan of his. This ambition became a personal goal for me. After completing my college education, my passion led me to pursue this industry as my future. Consequently, I founded 'Indian Media Works' to realise this vision.


 I am now stepping into the film industry as a producer, in addition to my previous roles in award ceremonies and beauty pageants. I will be producing films under the banner of 'LIONA & LEO Pictures.' Our aim is to provide opportunities to talented directors, actors, actresses, and technical artists from all backgrounds. Furthermore, the films we produce will be characterised by top-notch quality and uniqueness, all while maintaining a low investment.


We are currently engaged in the selection of a story for our maiden production. Our first movie will not only be an entertaining piece suitable for audiences of all ages, from children to adults, but it will also serve as a film that connects with viewers across different age groups. We will making other announcements pertaining to this project during the Indian Awards 2024 event.”


When asked about his desire to honour actor Vijay, who is now bidding adieu to the film industry due to his embarkation of political journey, producer Mr. John Amalan sums up adding, “Actor Vijay sir may have entered politics, but my admiration for him remains unchanged. I had always wished to see him receive awards during his acting career, and that aspiration has motivated my journey in this field. Similarly, even if he is not currently in the film industry, I believe that in the future, I will have the opportunity to present him with an award as an outstanding political leader. Both my organization and I will work diligently to help him reach that level of achievement.”

Silent audio launch

*Silent audio launch

“சைலண்ட்”  பட இசை  வெளியீடு !!




















திரை விமர்சனம்   முறையாகப் பேசி  முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி !! 


திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் - “சைலண்ட்”  பட இசை  வெளியீடு !! 


 சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான் - இயக்குநர் சீனு ராமசாமி !!


SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின்  இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்…


நாயகன்  முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது…

ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. திரு நங்கைகள் பற்றி நிறையச் சர்ச்சைகள் இருக்கிறது அதைத் தெளிவாக்குவது போல் இந்தப்படம் இருக்கும். திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும். எனக்கும் நண்பியாக திருநங்கை  நமீதா இங்கு இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


திருநங்கை நமீதா பேசியதாவது…

எனக்கு வாய்ப்பு தந்த சமயமுரளி சார், இயக்குநர் கணேஷா இருவருக்கும் நன்றி. திருநங்கைகள் வாழ்க்கையை எடுத்துக்கூறும் கதை என்று சொன்னார்கள். அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். இந்தப்படத்தின் பாடலில் நடித்தது மகிழ்ச்சி. பாடல் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர் சமய முரளி பேசியதாவது…

முதல் மேடை மிக மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் காலத்தில், மியூசிக் ட்ரூப்பில் சேர்த்துக்கொள்வார்களா? என ஏங்கியிருக்கிறேன். ஆனால் இன்று இசையமைப்பாளராக இங்கு மேடையில் நிற்கிறேன். எனக்கு வாய்ப்பு  தந்த கணேஷா பாண்டிக்கு நன்றி. அவர் தான் ஊக்கம் தந்தார். என் மனைவிக்கு, என் அப்பாவுக்குத் தான் முதன் முதலில் பாடல் எழுதினேன். என் அம்மாவுக்காகப் பாடல் எழுதியதில்லை. இந்தப்படத்தில் கணேஷா பாண்டி ஒரு சிச்சுவேசன் சொன்ன போது, தாய் தான் கடவுளை விட ஒரு படி மேல் எனப் பாடல் எழுதியுள்ளேன். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் ஆனால் ராகம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இசையமைத்துள்ளேன் இயக்குநர் நன்றாக இருப்பதாக பாராட்டினார். ஆண்டவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் கணேஷா பாண்டி பேசியதாவது… 

சைலண்ட் என் முதல் குழந்தை. இந்த தலைப்புக்கும் எனக்கும் நிறையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கும். ராம் பிரகாஷ் சார் இந்த வாய்ப்பிற்கு நன்றி சார். பத்திரிக்கையாளர்கள் இந்த சைலண்ட் படத்திற்கு ஆதரவு தந்து தூக்கி விட வேண்டும். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என் பெற்றோர் இன்று உயிருடன் இல்லை. உங்கள் அனைவரையும் என் பெற்றோராக நினைத்து வணங்குகிறேன் நன்றி. 


இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது.. 

உண்மையில் இது ஆச்சரியமான மேடை. ஒரு நியூஸை இரண்டு பி ஆர் ஓவிற்கு அனுப்பினால்,  அது பத்திரிக்கையில் வராது ஆனால், இந்த மேடையில், அனைத்து பி ஆர் ஓக்களும் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. ஹேமானந்த் அழைப்பின் பேரில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.  சைலண்ட் என ஒரு ஆங்கில படம் பார்த்தேன், அந்த மாதிரி படமாக இருக்குமென நினைத்து வந்தேன். ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய விசயத்தைப் பேசுகிறது. திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள். நானும் என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன். இவர்கள் அதே போல் மிகவும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். நான் சிறு வயதிலிருந்தே விமர்சனம் பார்த்து படம் பார்க்க மாட்டேன் யார் சொல்லும் விமர்சனத்தையும் கேட்க மாட்டேன். பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் படிப்பேன், தியேட்டரில் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம்  படிப்பேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை சிறு முதலீட்டு படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான். ரிவ்யூ இல்லாததால் சின்ன படங்கள் வருவதே தெரியவில்லை. மக்கள் கருத்தை வாங்கி ஒளிபரப்ப மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.  தொடர்ந்து சிறு படங்களுக்கு ஆதரவு தாருங்கள். இப்படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இயக்குநர் கணேஷ் K பாபு  பேசியதாவது.. 

இப்படத்தை ரிலீஸ் செய்யும் ராஜா சேதுபதி என் நண்பர், அவர் சினிமாவை மிகவும் நேசிப்பவர். அவர் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் கண்டிப்பாக நல்ல படமாகத்தான் இருக்கும். இயக்குநர் கணேஷா பாண்டி மிக நன்றாக இயக்கியிருக்கிறார்.  மிக நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட் கேட்டேன் நம்ப முடியவில்லை. சின்ன பட்ஜெட்ட்டில் மிக நன்றாக எடுத்துள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி. 


தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  பேசியதாவது 

இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். அருமையான படம்.  இப்படத்திற்கு இசையமைத்துள்ள சமயமுரளி எனக்கு நண்பர். அவர் ஒரு அரசு அதிகாரி. ஆனால் சினிமா இசை ஆர்வத்தில் தொடர்ந்து முயன்று, இசையமைப்பாளராக மாறியுள்ளார். வாழ்த்துக்கள். இயக்குநர் கணேஷா பாண்டி மிக  நன்றாக இயக்கியுள்ளார். அதை விட நன்றாக நடித்துள்ளார். இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிக மிகக் கடினம். அதை நன்றாகச் செய்துள்ளார். இப்போது சினிமாவில் விமர்சனம் வரக்கூடாது எனச்  சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். இன்றைய காலகட்டத்தில் முதல் ஷோவில் கூட்டம்  வரவில்லை எனும் போது அடுத்த ஷோ காலியாகி விடுகிறது. இந்த நிலையில் விமர்சனங்கள் வர வேண்டும், வர வில்லையெனில் அந்தப்படம் வருவதே தெரிவதில்லை. இந்த விசயத்தில் திரைத்துறையினர்  முறையாகப் பேசி  முடிவெடுக்க வேண்டும். 


உடலால் ஆணாகவும் உடை நடவடிக்கையில் பெண்ணாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்ட  ஒருவன் இருக்கும் படத்தில், தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம்  ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை பரபரப்பாக சொல்லும் திரைப்படம் தான் சைலன்ட். 


இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார். 


மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையராக பனியாற்றி வரும் திரு T சமய முரளி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 



“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. 


SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.


*தொழில்நுட்ப வல்லுநர்கள்  விபரம்* 


இயக்குநர்:  கணேஷா பாண்டி 

தயாரிப்பாளர்: S.ராம் பிரகாஷ் 

இசையமைப்பாளர்: T சமய முரளி 

பின்னணி இசை :  ரவி K

பாடல் இசை : T சமய முரளி 

பாடல் : T சமய முரளி 

பாடியவர் : T சமய முரளி, K S  சித்ரா, பிரியங்கா, ஶ்ரீனிஷா ஜெயசீலன், நித்ய ஶ்ரீ, கானா ஃபிரான்ஸிஸ்

ஒளிப்பதிவாளர்: சேயோன் முத்து

படத் தொகுப்பாளர்: சரண் சண்முகம்

மக்கள் தொடர்பு - ஹேமானந்த்