Featured post

JANA NAYAGAN – PIRACY CONTENT LEAK

JANA NAYAGAN – PIRACY CONTENT LEAK We at Tamil Film Active Producers Association (TFAPA) is deeply anguished and disturbed with the online l...

Saturday, 13 May 2023

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க வளர்ச்சி சமூக (SADC) நாடுகளுக்கு

 *இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க வளர்ச்சி சமூக (SADC)  நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்துவதற்கான கூட்டம் சென்னை அக்கார்டு மெட்ரோபோலிட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.* 



இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிஃப் இக்பால், இந்திய ஆப்பிரிக்க தொழிற்சங்க சபையின் ஆணையர் ஷாகுல் ஹமீத், இந்தியாவிற்கான மலாவி குடியசின் தூதர் லியோனார்ட் மென்கசி, லெசோதோ அரசின் தூதர் தபாங் லிபஸ் கொலுமோ, மியான்மாருக்கான தமிழ்நாடு தூதரக அதிகாரி ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


இந்தியா மலாவி உறவு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என மலாவி தூதகர் மென்கசி குறிப்பிட்டார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1964-ம் ஆண்டு மலாவியின் சுதந்திர தின விழாவில் பங்கேற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். மலாவியின்  தலைவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பெற்றதாக குறிப்பிட்ட மென்கசி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் வேட்புமனுவை மலாவி குடியரசு ஆதரிப்பதாக தெரிவித்தார்.  இந்திய அரசாங்கம் மலாவிக்கு 163 மில்லியன் டாலர்கள் கடன் வழங்கியுள்ளதாகவும், இது மலாவியில் பெட்ரோலியம், சர்க்கரை பதப்படுத்துதல் போன்ற துறைகளில் உதவுகிறது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் இந்தியவில் இருந்து மலாவியில் தொழில்புரிந்தால் அங்கிருந்து அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மலாவி மக்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார். 


இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிப் இக்பால் கூறுகையில், வணிக கலாச்சார கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது, சந்திப்பின் நோக்கம் நிறைவேறியது.. இருதரப்பு வர்த்தக வாய்ப்புகளுக்கு அதிக வாய்ப்புள்ள நாடான லெசோதோவுக்கு இந்தியாவில் அதிக ஆர்வம் உள்ளது. MSME, பார்மா மற்றும் உற்பத்தித் துறையில். இது வணிக கூட்டாளர்களை அடையாளம் காணவும், ஒத்துழைப்புகள், கூட்டணிகள், தொழில்துறை அலகுகளை நிறுவுதல், இந்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துதல் மற்றும் பிற தொடர்புடைய வணிக நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரச்சினைகளை எடுத்துச் செல்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.


 இந்தியா லெசோதோ இடையே இருதரப்பு உறவுகள் புதிய உச்சத்தை எட்டுவதே இதன் குறிக்கோள். ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய ஒருங்கிணைந்த பகுதிகளை அடையாளம் காண்பதன் மூலம் உறவை ஆழப்படுத்துதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்", மேலும் உயர் ஆணையர் ஜூலை மாதம் இந்தியப் பிரதிநிதிகளையும் அழைக்கிறார்.

No comments:

Post a Comment