Featured post

மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சில  திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த...

Showing posts with label Buttler Balu movie. Show all posts
Showing posts with label Buttler Balu movie. Show all posts

Wednesday, 30 October 2019

நவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது பட்லர் பாலு



நவம்பர்  ம் தேதி வெளியாக உள்ளது “ பட்லர் பாலு 
தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது  "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார்.  மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையள் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த  பட்லர்பாலு  படம் அமையும் என்கிறார்கள். இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற 
சமையல் வேலைக்காக சென்ற  திருமண மண்டபத்தில்  மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி  விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது.போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார்  என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் படி கலகல காமெடி கலந்த திரைக்கதையாக  “ பட்லர் பாலு “ படத்தை உருவாக்கி இருக்கிறார்
இயக்குநர்  சுதிர்.M.L
அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் அந்த அளவிற்கு காமெடி கலாட்டாவாக இருக்கும். படத்தை முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் நவம்பர்  8ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.


ஒளிப்பதிவு  - பால் லிவிங்க்ஸ்டன்
இசை  - கணேஷ் ராகவேந்திரா
வசனம்  - S.P.ராஜ்குமார்
தயாரிப்பு  -  தோழா சினி கிரியேஷன் கிருத்திகா.

Saturday, 5 October 2019

யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்


நடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது  பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை  இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும்  மறுத்துள்ளார் யோகிபாபு. மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது,


"தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக  எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள்  மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி" என்றார்