Featured post

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும்

 *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*  A&P குரூப்ஸ் நிறுவனத்த...

Saturday, 14 June 2025

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும்

 *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* 








A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன்,  சீதா,  ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர். 


ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது . இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


பாடலாசிரியர் கார்த்திக் நேதா பேசுகையில், '' அஃகேனம் என்ற தமிழ் தலைப்பிற்காக மிக்க மகிழ்ச்சி. இதற்கான காரணத்தை இயக்குநர் விவரிப்பார். 


இயக்குநர் உதய் என் வீட்டிற்கு வந்து பாடல்களுக்கான சூழல்களை விவரித்தார். இந்த திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வை பேசக்கூடியது. 


இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை -ராக் இசை - இந்திய நாட்டார் இசை - இந்திய செவ்வியல் இசை - என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி. 


இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினை பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.  


அருண் பாண்டியன் ஐயாவை முதன்முறையாக சந்திக்கும்போது சற்று பதட்டத்துடன் தான் இருந்தேன். அவருடன் தொடர்ந்து பழகும் போது தான் அவர்' பலாப்பழம் 'என தெரிந்து கொண்டேன். பழகிய பிறகு இனிக்க இனிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த திரைப்படத்தில் நிறைய பேர் புது முகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இது அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு.  இன்றைக்குள்ள காலகட்டத்தில் வியாபாரத்திற்கு யார் பயன்படுவார்களோ அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிதாக ஒரு குழுவினரை அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும். 


அறிமுக இசையமைப்பாளர் பரத் வீரராகவனிடமிருந்து இப்படி ஒரு ஓசையை நான் எதிர்பார்க்கவில்லை.  சாலச் சிறந்த பணியை செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.


அறிமுக இயக்குநர் உதய்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சக பயணியாக ..சக கலைஞனாக.. இணைந்து பயணிப்போம். நேர்மையுடனும், அறத்துடனும் பயணம் செய்யுங்கள் '' என்றார். 


பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், '' தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நன்றி. நானும் பாடலாசிரியர் கார்த்திக் நேதாவும் ஒரே மேடையில் இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். பாடலாசிரியர். பாடலுக்குள்  நவீன கவிதைகளை உள்ளே வைப்பதில் சாமர்த்தியசாலி. அவர் எழுதி அண்மையில் ஹிட்டான 'அஞ்சு வண்ண பூவே..' பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் மேலும் ஏ ஆர் ரகுமானுக்கு எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன். 


இந்த விழாவின் நாயகன் பரத் வீரராகவனுக்கு வாழ்த்துக்கள். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசைக்காக ஏ ஆர் ஆர் என்ற பிராண்ட் புகழ்பெற்றது போல்.. எதிர்காலத்தில் பி ஆர் எனும் பிராண்டும் புகழ் பெற வேண்டும். அதற்கும் வாழ்த்துக்கள்.


இயக்குநர் உதய்-  நேர்த்தியாக கதை சொல்வதில் கெட்டிக்காரர். இவரும், இசையமைப்பாளரும் எதிரிகளை வலிக்காமல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள். பாடல் வரிகளை பெறுவதில் சில திருத்தங்களை நாசுக்காக சுட்டிக் காட்டுவார்கள். பரத் நன்றாக வர வேண்டும் என உதய் பாடுபடுகிறார். இவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த அருண் பாண்டியனுக்கு பெரிய மனசு.‌ நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு துணிவு வேண்டும். பேரன்பு இருக்க வேண்டும்.‌ 


அவரை சந்தித்தபோது உங்களின் படத்தில் நான் பங்கு பெற வேண்டும் . இது மட்டும் தான் என்னுடைய விருப்பம் என்றேன். ஏனெனில் அவரை நான் அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறேன். 'இணைந்த கைகள் ' படத்தை இப்போதும் பார்ப்பேன். எப்போதும் பார்ப்பேன். 


'மூங்கில் கோட்டை' என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்காக சின்ன வயதில் ஏங்கிருக்கிறேன். 


'ஊமை விழிகள்' படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும் , திரில்லும் அதில் இருக்கிறது.  அதிலும் படம் வெளியான பிறகு சத்யம் தியேட்டரில் கூட்டம் கூடி இருந்ததை நீங்கள் மகிழ்ச்சியுடன் சொன்னபோது உங்களின் சந்தோஷத்தை கண்களால் ரசித்து உணர்ந்தேன். 


இந்தப் படத்தில் கீர்த்தி நடித்திருந்த காட்சிகளை பார்த்து தான் 'வாழ்க்கை போராட்டமே 'எனும் பாடலை எழுதினேன்.  அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இங்குதான் அவர்கள் அப்பா - பொண்ணு என்று இருக்கிறார்கள். இந்த படத்தில் வேறு இரு கதை மாந்தர்களாக இருப்பார்கள் . கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.‌ 


சின்ன படங்கள் வெற்றி பெறும்போது பெரிய படங்களாகிறது.  இதற்கு 'குடும்பஸ்தன்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்'' என்றார். 

 

இவ்விழாவில் இசையமைப்பாளர் பரத் வீரராகவன் பேசுகையில், '' இது என்னுடைய முதல் படம். எனக்கு இசையை கற்பித்த குருமார்களுக்கு வணக்கம். 


இயக்குநருடன் முதன்முதலாக அருண்பாண்டியன் சாரை சந்தித்தோம். அவர் முதலில் எதையும் பேசவில்லை. இந்தப் படத்திற்கான இசையமைப்புக்கு உரிய பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். அவர் அதனை கேட்டுவிட்டு, இதற்குள் செய்து விடுவாயா? என கேட்டார்.  நான் ஆமாம் என்று பதிலளித்தேன். ஆனால் உண்மையில் நான் சொன்ன பட்ஜெட்டை விட மும்மடங்கு அதிகமானது. ஆனால் அதனை செய்து கொடுத்தார். இந்த மனசு யாருக்கு வரும்? . இவர் கொடுத்த ஆதரவினால் தான் என்னால் பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. இங்கு மேடையில் இருக்கும் பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் மற்றும் கார்த்திக் நேதா ஆகியோர் ஐநூறு பாடலுக்கு மேல் எழுதிய அனுபவம் கொண்டவர்கள்.  இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இயக்குநர் உதய் .கே  நண்பர் மட்டுமல்ல மிகுந்த திறமைசாலி. இந்த படத்தின் பின்னணி இசைக்காக காட்சிகளை பார்த்த போது.. அதில் இந்திராவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரமாதம். அருண் பாண்டியனை இந்த படத்தில் பார்ப்பது போல் வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். நன்றாக ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து நடனமாடி இருக்கிறார். 


நாங்கள் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்து படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. பாடல்களையும், படத்தையும் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து விட்டு ஆதரவு தாருங்கள்'' என்றார். 


இயக்குநர் உதய்.கே பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும் அல்லது இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும்.. பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும் . இதற்கு என் அம்மா தான் காரணம்.  


அம்மாவிற்கு அடுத்ததாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார்.  இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அவர் நினைத்தால் ஒரு போன் காலில் யாரை வேண்டுமானாலும் அழைத்து பணியாற்ற சொல்லலாம். ஆனால் என்னையும், என் குழுவினரையும் நம்பி இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். இதை நாங்கள் மிகப்பெரிய விசயமாக பார்க்கிறோம். இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வாழ்க்கை முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.  அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். 


நான் குறும்படத்தை இயக்கி விட்டு நேரடியாக படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக  நினைக்கிறேன்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய  குடும்பத்தார்களை விட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம். அவரும் நாங்களும் இணைந்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக தரமான படமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். 


கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்த கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது. நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் அந்த இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ... அந்த இந்திராவாகத்தான் இந்த படத்தில் அவர்  வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும். 


இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும்,  நடிகைகளுக்கும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ 


அருண் பாண்டியனின் வழிகாட்டலால்தான் இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டிற்குள் தரமாக உருவாக்க முடிந்தது.  


இசையமைப்பாளர் பரத் - ஒளிப்பதிவாளர் விக்கி- எடிட்டர் தேவத்யன்- இவர்கள் அனைவரும் என்னுடன் நண்பர்களாக பயணித்தவர்கள். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களின் பணி-  படம் வெளியான பிறகு பேசப்படும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். 


நான் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் ரசிகன். அவர் என் படத்தில் பணி புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவரை ரசிப்பேன். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போது அவர் எனக்காக 'மெல்லாலியே மெல்லாலியே' என்று புதிய வார்த்தையை வழங்கினார். அந்தப் பாடல் அழகானது மற்றும் ஆழமானது அவருக்கும் நன்றி. 


அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி.  இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் இந்த டைட்டில் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தார்.  ஒரு சமயத்தில் இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்.. நாம் தெரியப்படுத்துவோம் என எங்களுக்கு ஊக்கமளித்தார்.  இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன். 


ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு இந்த படம் ஏற்றதாக இருக்கும். ஒரு புது குழுவாக எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து ஒரு படத்தை வழங்குகிறோம். ஜூலை நான்காம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில், '' நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார்.‌ அதற்கு முன் அவர் இயக்கிய 'யாக்கை திரி' எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம்... அதன் தொழில்நுட்ப தரம்...  சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். 


அதன் பிறகு மீண்டும் என்னை சந்தித்து அந்த குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவினர் அனைவரும் படத்திலும் பணியாற்றுவார்கள் என அவருடைய வேண்டுகோளை உறுதியாக சொன்னார்.‌ அவரது இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌ புது குழுவினருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் இருக்கும் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது.‌ அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக..

 ஒரு நடிகராக....  இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும். 


அப்பா 'ஊமை விழிகள்', 'இணைந்த கைகள்: ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன். 


நான் இந்த படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து - போர்-  இழப்பு - என ஏராளமான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.


இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும்.  இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில்.. எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன். 


இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம்.  இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.‌ அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம். 


இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது.  இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன்.


படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான். 


இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும்.  நடிகையாகி நடிக்க வராவிட்டால்.. நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்.'' என்றார். 


நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், '' இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏன் யாரையும் அழைக்கவில்லை என்றால் .. அவர்கள் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றி மிகையாக பேசி விடுவார்களோ ..! என்பதற்காக தான் யாரையும் அழைக்கவில்லை. 


நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது. இதனால் தான் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் இல்லாமல் என் நண்பர்களான கருணா மூர்த்தி மற்றும் பி ஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.  


இந்த படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்ப கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்த குழுவினருடன் கதையைக் கேட்டேன். கதையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் இந்த கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்கு சம்மதமா?  எனக் கேட்டேன். அவர்களும் சரியென சம்மதித்தார்கள்.


அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா ?அவர்களின் திறமை என்ன? எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வர சொன்னால் அவர்கள் தங்களின் திறமையை காண்பிப்பார்கள் என்றார் அந்த தருணத்தில் இசையமைப்பாளர் -ஒளிப்பதிவாளர் - படத்தொகுப்பாளர் -என அனைவரும் வந்திருந்தனர்.‌ அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் என தீர்மானித்தேன். 


முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின்  ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். '' என்றார்.

Guts Movie Review

Guts Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம guts படத்தோட review அ தான் பாக்க போறோம். rangaraj தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்துல rangaraj , delhiganesh , shruthi narayanan , saidheena , birla bose னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் 13 june அன்னிக்கு release ஆயிருக்கு. இந்த படம் ஒரு social thriller னே சொல்லலாம். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். படத்தோட opening scene ல பாத்தீங்கன்னா rangaraj ரொம்ப urgent அ தன்னோட pregnant ஆனா wife அ hospital ல admit பண்ணுறாரு. திடீருனு இவரை யாரோ வந்து தாக்குறாங்க இதுனால இவருக்கு பலத்த காயம் ஏற்படுது அதோட இவரோட wife யும் இந்த trauma னால இறந்து போய்டுறாரு. இவங்களுக்கு ஒரு பையன் இருப்பான். சின்ன வயசுலயே தன்னோட parents அ கொடூரமா இழந்தனால தப்ப தட்டி கேடுக்குற police அ மாறனும் னு முடிவு பண்ணுறாரு. அதே மாதிரி police ஆவும் மாறிடுறாரு, இதுக்கு அப்புறம் தான் தன்னோட parents ஓட மரணத்துக்கு பின்னாடி ஒளிஞ்சு இருக்கற மர்மத்தை கண்டுபிடிக்குறாரு. கதை போக போக நம்ம சமூகத்துல நடக்கற பல பிரச்சனைகளை எடுத்து சொல்லிருக்காங்க. 

rangaraj ஒரு director ஆவும் actor ஆவும் நல்ல பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். flashback மூலமா காமிச்சிருக்க emotional sequences அ இருக்கட்டும் அதோட reality ல நடக்கற விஷயங்களை காமிக்க்ர விதமா இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. shruthi narayanan ஓட நடிப்பும் ரொம்ப எதார்த்தமா இருந்தது. delhi ganesh அவரோட role குட்டிய இருந்தாலும் படத்துல ஒரு பெரிய impact அ குடுத்திருக்காரு  னு தான் சொல்லணும். supporting actors அ நடிச்ச Sai Deena, Nancy, Aranthangi Nisha, அப்புறம்  Birla Bose யும் அவங்க character  அ புரிஞ்சுகிட்டு அருமையா நடிச்சிருக்காங்க. 


இந்த படத்தோட technical side னு பாக்கும் போது rangaraj ஓட direction அ பத்தி சொல்லியே ஆகணும். audience க்கு பிடிச்ச மாதிரி ஒரு கதையை குடுக்கணும் றதயும் தாண்டி மக்களை யோசிக்க வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்கு னு தான் சொல்லி ஆகணும். audience அவங்க வாழ்க்கையோட relate பண்ணிக்கற மாதிரியான நெறய moments அ படத்துல குடுத்திருக்காங்க. சுற்றுசூழலுக்கு ஏற்படுற ஆபத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படுற அநீதி, னு எல்லாமே சொல்லிருக்காங்க. manoj தான் இந்த படத்துக்கு cinematography பண்ணிருக்காரு. படத்துல வர locations , characters , அவங்களோட emotions னு எல்லாமே ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. Jose Franklin ஓட music and bgm இது ரெண்டுமே இந்த படத்தோட கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது.  


personal அ நடந்த ஒரு விஷயம் கடைசில எப்படி social level ல பெருசா மாறுது ன்றது தான் இந்த படத்தோட கரு னு சொல்லலாம். ஒரு பக்கம் characters ஓட emotions இன்னொரு பக்கம் social awareness னு ரெண்டு side யுமே super அ balance பண்ண விதம் நல்ல இருந்தது. ஒரு நல்ல கதைக்களம் தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Padai Thalaivan Movie Review

 Padai Thalaivan Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம படைத்தலைவன் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். u anbu இயக்கி இருக்கற இந்த படத்துல Shanmuga Pandian யும்  Yamini Chander யும் lead role ல நடிச்சிருக்காங்க. இவங்களோட  Kasthuri Raja, Munishkanth, M.S. Bhaskar, Karudan Ram, Rishi Rithvik, A. Venkatesh, Yugi Sethu, Sreejith Ravi, Aruldoss னு பலர் நடிச்சிருக்காங்க. 



இந்த படத்தோட கதையை பாத்தீங்கன்னா odisha ல இருக்கற ஒரு கிராமத்தை காமிக்கறாங்க. அங்க வனதேவதையா கும்புடற ஒரு மக்கள் கூட்டம் இருக்கும். இவங்க எல்லாரையும் மிரட்டி தன்னோட கட்டுக்குள்ள வச்சிருக்காரு thilagan அ நடிச்சிருக்க garudan ram . இப்போ அப்பிடியே பொள்ளாச்சி ல இருக்கற sethumadai யா காமிக்கறாங்க. அங்க தான் velu வ நடிச்சிருக்க  shanmuga pandiyan ஒரு யானைக்குட்டி வழக்குறாரு. இவரோட அப்பா kasthuriraja  மண்பாண்டங்களை செய்யறவரு. அப்புறம் velu க்கு ஒரு தங்கச்சி யும் இருக்கும்.   ஒரு கட்டத்துக்கு மேல வேலு  இந்த யானையை தன்னோட பையன மாதிரி பாவிக்க ஆரம்பிச்சுடுவாரு. நெறய கடன் இருக்கறதுனால இந்த யானையை அங்க அங்க வாடகைக்கு விட்டு அதுல வர பணத்தை வைச்சு தான் இவரு கடனை அடைக்குறாரு. ஆனா திடுறுனு forest  officers இவரோட யானையை கூட்டிட்டு போயிடுறாங்க. ஆனா இந்த யானை forest officers ஓட கட்டுப்பாட்டுல இருந்து காணாம போயிடுது. இதை கண்டுபிடிக்கறதுக்காக வேலு வராரு. அப்போ தான்  அந்த மக்கள் ஓட நிலைமையை பாக்குறாரு. இந்த மக்களை காப்பதுனரா? தன்னோட யானையை கண்டுபிடிச்சாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


sanmuga pandiyan ஓட நடிப்பு ரொம்ப அழகா இருந்தது. அது மட்டுமில்லாம அவரோட dialogue delivery , body language னு எல்லாமே super அ இருந்தது. யானை க்கும் இவருக்கும் இருக்கற அந்த பந்தத்தை ரொம்ப அழகா இந்த படத்துல explore பண்ணிருக்காங்க. யாமினி chandar ஓட நடிப்பும் ரொம்ப natural அ இருந்தது. இந்த படத்துல villain அ வர garudan ram ஒரு மிரட்டலான நடிப்பை குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். மத்த supporting actors ஓட நடிப்பும் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. AI அ use பண்ணி captain vijayakanth யும் கொண்டு வந்திருக்காங்க. அந்த scenes எல்லாமே பாக்குறதுக்கு அவ்ளோ தத்ரூபமா இருந்தது. 


s r sathishkumar ஓட cinematography super அ இருந்தது. யானைகள் வர scenes அ இருக்கட்டும் அப்புறம் அடர்ந்த காட்டுக்குள்ள நடக்கற சண்டை scenes அ  இருக்கட்டும் இது எல்லாமே super அ இருந்தது. ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச கதையை இருந்தாலும் அதா எடுத்துட்டு வந்த விதம் நல்ல இருந்தது. இந்த படத்தை miss பண்ணாம பாருங்க. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ? பரபரக்கும் திருப்பங்களுடன்

 *மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ? பரபரக்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின்  சின்ன மருமகள் நெடுந்தொடர் !!*








 *தமிழ்செல்வி தன் கனவை வெல்ல 1 லட்சம் திரட்டுவாளா ?  –  விஜய் டிவி "சின்ன மருமகள்" தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!*


*அதிர வைக்கும் சம்பவங்கள், பரபரக்கும் திருப்பங்களுடன், "சின்ன மருமகள்" நெடுந்தொடர், உங்கள் விஜய் டிவியில் !!* 


தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த  தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் "சின்ன மருமகள்".  பெண் ரசிகர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 


பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த வாரம், வீட்டை விட்டு வெளியே வந்து,  கணவனையும் தகப்பனையும் உதறி, தன் கனவைச் சாதிக்க தமிழ்செல்வி மேற்கொண்ட பயணம்,  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 


இந்த நிலையில் இந்த வார தொடரில், தமிழ்செல்வி மருத்துவராகும் தன் கனவை நிறைவேற்ற, அவளுக்குத் தேவைப்படும் 1 லட்சம் ரூபாயைத் திரட்ட, மொய் விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். அவளின் திட்டத்தை உடைக்க சாவித்திரி, கிடா விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். சாவித்திரியை எதிர்த்து தமிழ்செல்வி ஜெயிப்பாளா? தன் கனவைச் சாதிக்க 1 லட்சம் அவளால் திரட்ட முடியுமோ? என பரபரப்பு திருப்பங்களுடன்,  இந்த தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 


தமிழ்செல்வி தற்போது ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக மாறியுள்ளார். தமிழக மக்கள் அவளை தங்கள் வீட்டுப் பெண்ணாகப் பார்க்கிறார்கள்.  அவளது கனவு ஜெயிக்குமா ? என ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள். 


தமிழசெல்வியின் இந்த பரபரப்பான பயணத்தைத் தெரிந்து கொள்ள,  இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் 9.30 மணிக்கும் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.


Promo Link 

https://youtu.be/4IaU1YnDl6s?si=bDoyRhCAtpSvV55T

Friday, 13 June 2025

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ

 *மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு*






அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார்.


நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது.


மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பொறுப்பேற்க ஊக்குவிப்பதும் தான் இந்த CSR பிரச்சாரத்தின் நோக்கமாகும்.


ஹைதராபாத், ஜூன் 11, 2025: சுகாதார துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள FUJIFILM இந்தியா, அப்போலோ மருத்துவமனை அறக்கட்டளையின் CSR பிரிவின் துணைத் தலைவர் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா முன்னிலையில் , ''முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்'' ( Find It Early, Fight It Early) எனும் அதன் சமீபத்திய CSR பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி மார்பக புற்றுநோய் மற்றும் அதன் ஆரம்ப கால நோய் பாதிப்பினைக்கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் நடைபெறாத அல்லது எதிர்மறையான-  நியாயமற்ற நம்பிக்கைகளை கொண்டிருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் 23 நகரங்களில் செயல்படுத்தப்படும். கட்டமைக்கப்பட்ட சமூக ஈடுபாடு - சுகாதார இடர் மதிப்பீடுகள் மற்றும் உணர்திறன் முயற்சிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இந்த பிரச்சாரம், இதற்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற களக் கல்வியாளர்களால் வழிநடத்தப்படும். அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை ( ATNF) செயல்படுத்தும் இந்த திட்டம், அதிக அளவில் தகவல்களை அறிந்த மற்றும் சுகாதார விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான FUJIFILM இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.


மார்பக புற்றுநோய் இந்திய பெண்களிடையே மிகவும் பரவலாக காணப்படும் புற்று நோய்களில் ஒன்றாகும். ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் படி, பெண்களிடையே கண்டறியப்பட்ட அனைத்து வகையான புற்று நோய்களிலும் இது தோராயமாக 14 சதவீதம் ஆகும். மேலும் 29 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் உருவாகும் அபாயமும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது பற்றிய அறியாமை , விழிப்புணர்வு இன்மை,  சரியான நேரத்தில் நோயை கண்டறிவதற்கான வசதிகள் எளிதில் கிடைக்காதது மற்றும் பராமரிப்பு கிடைக்காததால்.. பெரும்பாலான வழக்குகள்.. நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.‌ 'முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்'' என்பது சமூகத்தில் நம்பகமான, கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வழங்குவதன் மூலம், இந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் - விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமர்வுகள் மூலமும் மரியாதையுடன் கூடிய திறந்த நிலையிலான உரையாடல்களை நிகழ்த்தி எளிதாக்குவதன் மூலம் .. இந்த முயற்சி பெண்கள் தங்களின் உடல் நலம் குறித்து மிகவும் விழிப்புணர்வுடனும் முன் முயற்சியுடனும் செயல்பட ஊக்குவிக்கிறது. ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அறிந்து கொள்வது மற்றும் கண்டறிவது, சுய பரிசோதனைக்கான நுட்பங்களை புரிந்து கொள்வது மற்றும் சரியான தருணத்தில் முழுமையான மருத்துவ ஆலோசனையை பெறுவது உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும்.‌


இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா பேசுகையில், ''சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாங்கள் நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், அது குறித்த விழிப்புணர்வு , கல்வி,  எளிதில் அணுகும் முறை ஆகியவற்றை வழங்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. மார்பக புற்றுநோய் தொடர்ந்து உயிர்களை கொன்று வருகிறது. ஏனெனில் பல பெண்களுக்கு இத்தகைய நோய் பாதிப்பை கண்டறிந்து முன்கூட்டியே செயல்படுவதற்கு தேவையான தகவல்களும், வசதிகளும் இல்லை. FUJIFILM இந்தியாவின் இந்த CSR முயற்சி அந்த யதார்த்தத்தை பற்றிய ஆழமான புரிதலை பிரதிபலிக்கிறது. மிகவும் முக்கியமான இடங்களில் அர்த்தமுள்ள நடவடிக்கை மேற்கொள்வதற்கும் , தாமதமாகிவிடும் முன் விழிப்புணர்வு தேவைப்படும் பெண்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கும் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டில் எங்களது ஆதரவு அடித்தளமாக உள்ளது என்றார்.


இது தொடர்பாக FUJIFILM இந்தியாவின் நிர்வாக இயக்குநரான திரு கோஜி வாடா தொடர்ந்து பேசுகையில், '' எங்களின் FUJIFILM இந்தியா, ' நம் உலகிற்கு மேலும் அதிகளவிலான புன்னகைகளை வழங்குதல்' ( Giving Our World More Smiles)  என்ற எங்கள் குழுவின் நோக்கத்தை உள்ளடக்கிய புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.‌ பல்வேறு ஆலோசனைகள், தனித்துவமான திறன்கள் மற்றும் அசாதாரணமான மக்களுடன் கலந்து கொள்வதன் மூலம் உலகிற்கு மகிழ்ச்சியையும் , புன்னகையும் தரும் தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். 'முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல் ' எனும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு CSR பிரச்சாரத்தின் மூலம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்துவதையும், இதனால் இறக்கும் பல உயிர்களை காக்கும் வகையில் ஆரம்ப கால நோயறிதலை மேம்படுத்துவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்'' என்றார்.


FUJIFILM இந்தியா தனது CSR முயற்சிகள் மூலம் பூர்த்தி செய்யப்படாத மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், ஆரம்பகால நோய் கண்டறிதலை ஊக்குவிப்பதன் மூலமும், கல்வி மூலமும்,  தடுப்பு மற்றும் பராமரிப்பை செயல்படுத்துவதன் மூலமும், சுகாதார பராமரிப்பை கூடுதலாக உள்ளடக்கியதாகவும் , எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுகிறது. 'முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்' என்ற FUJIFILM குழுமத்தின் நிலையான மதிப்பு 2030 ஆம் ஆண்டிற்கான திட்டத்துடன் ஒத்துப் போகிறது. இது குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற மக்களுக்கு சுகாதார சமத்துவம் மற்றும் ஆதரவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த முயற்சி தேவைப்படும் இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் 'நம் உலகிற்கு அதிக புன்னகையை வழங்குதல்' என்ற எங்கள் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. தொலைதூரம் உள்ள நகரமாக இருந்தாலும் அல்லது அடர்த்தியான நகர் புறமாக இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், அதனை பாதுகாத்துக் கொள்ளவும், தனது ஒட்டு மொத்த நல்வாழ்விற்கான பொறுப்பினை ஏற்கவும், அதற்கான வாய்ப்பினை பெற தகுதியானவர் என FUJIFILM இந்தியா நம்புகிறது.

Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign

 *Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.*






The campaign will be conducted in 23 cities across the nation, with Apollo Telemedicine Networking Foundation serving as the implementation agency.


The purpose of this CSR campaign is to raise awareness about breast cancer and encourage women to take charge of their health.


Hyderabad, June 11th, 2025: FUJIFILM India, a leader in healthcare technology, has launched its latest CSR campaign, ‘Find It Early, Fight It Early’, in the presence of Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals Foundation. This initiative is focused on generating awareness about breast cancer and the importance of early detection, particularly in underserved regions where discussions around women's health are often stigmatized.


This awareness campaign will be implemented across 23 cities, aiming to reach over 1 lakh women through structured community engagement, health risk assessments, and sensitization efforts led by trained field educators. The program, implemented by Apollo Telemedicine Networking Foundation (ATNF), reflects FUJIFILM India’s commitment to building a more informed and health-aware society.


Breast cancer is one of the most prevalent forms of cancer among Indian women. According to the National Cancer Registry Program by ICMR, it accounts for approximately 14% of all cancers diagnosed among women, with 1 in 29 women at risk of developing the disease in her lifetime. Unfortunately, most cases are detected at advanced stages due to stigma, limited awareness, and lack of access to timely care. ‘Find It Early, Fight It Early’ is designed to address these challenges by providing reliable, culturally sensitive information at the community level. By facilitating respectful, open conversations through on-ground workshops and awareness sessions, the initiative encourages women to become more proactive about their health—recognizing early symptoms, understanding self-examination techniques, and seeking timely medical consultation.


*Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, said,*


> “As healthcare leaders, we have a responsibility not only to treat illness but to anticipate it through awareness, education, and access. Breast cancer continues to claim lives because too many women lack the information and resources needed to act early. This CSR initiative by FUJIFILM India reflects a deeper understanding of that reality. Our support is grounded in a shared commitment to take meaningful action where it matters most and ensure that awareness reaches the women who need it before it's too late.”

Mr. Koji Wada, Managing Director, FUJIFILM India, added,

> “At FUJIFILM India, we are committed to delivering innovative products and solutions that embody our Group purpose of ‘Giving Our World More Smiles.’ By blending diverse ideas, unique capabilities, and extraordinary people, we aim to create solutions that bring joy and smiles to the world. With the ‘Find It Early, Fight It Early’ breast cancer awareness CSR campaign, we aim to extend the reach of breast cancer awareness and are committed to advancing early diagnosis so that many lives can be saved.”

Through its CSR efforts, FUJIFILM India continues to make healthcare more inclusive and accessible by addressing unmet medical needs, promoting early disease detection, and enabling preventive care through education. ‘Find It Early, Fight It Early’ aligns with the FUJIFILM Group’s Sustainable Value 2030 Plan, which prioritizes health equity and support for underrepresented populations. The initiative reflects the company’s group purpose of ‘Giving Our World More Smiles’ by creating impact where it is needed most. Whether in a remote town or a dense urban neighborhood, FUJIFILM India believes every woman deserves the opportunity to know her health, protect it, and take charge of her overall well-being.

கேன்ஸ் திரைப்பட விழாவில் " டிராக்டர் " திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

 கேன்ஸ் திரைப்பட விழாவில்                  " டிராக்டர் " திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.





பிரான்சில் உள்ள ஃப்ரைடே என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில், ரமேஷ் யந்த்ரா இயக்கத்தில் உருவான டிராக்டர் திரைப்படம் முதன் முதலாக பிரேசிலில் 48வது Mostra São Paulo சர்வதேச திரைப்பட விழாவில் World Premier ஆக திரையிட பட்டது.


அத்துடன் டிராக்டர் திரைப்படம் இந்த வருடம் டொமினிக்கன் நாட்டில் உள்ள Santo Domingo திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நான்கு திரைப்படங்களில் டிராக்டர் திரைப்படம் ஒன்றாகும்.


தற்பொழுது  டிராக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் உள்ள பாரத் அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மூன்று முறை தேசிய விருது பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் டாக்டர்.பிஜு வெளியிட்டுள்ளார். டிராக்டர் ட்ரைலர் வெளீட்டில் டாக்டர்.பிஜு மற்றும் தயாரிப்பாளர் ஜெயந்தன்.


டிராக்டர் திரைப்படம் நமது விவசாயிகளின் படிப்பறிவு இல்லாத நிலையை பயன்படுத்தியும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சொல்லி தனியார்  கம்பெனிகள்  செய்துவரும் ஏமாற்று வேலைகளையும்  மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.


விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


தயாரிப்பு: ஜெயந்தன் 

இயக்கம்: ரமேஷ் யந்த்ரா.

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்.

புன்னகை சொன்ன கதை - ஒற்றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்

 *புன்னகை சொன்ன கதை - ஒற்றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்*





சோஷியல் டிராமா வகைமையைச் சேர்ந்த, “புன்னகை சொன்ன கதை” குறும்படத்தை D RAM Films தயாரித்துள்ளது. வடக்கே இருந்து எழும் குரலால் வசீகரிக்கப்பட்டு அடிப்படைவாதியாகும் ஒரு கலாச்சாரக் காவலரின் முயற்சியைத் தங்கள் ஒற்றுமையால் முறியடிக்கின்றனர் கிராம மக்கள். மாய யதார்த்த (Magical Realism)  கூறுகளைக் கொண்டுள்ள இக்குறும்படம், அன்பை முதன்மை அறமென்றும், மக்களின் ஒற்றுமையே சமூக அரணிற்கான வாய்ப்பென்றும் ஒரு வலுவான கருத்தை முன் வைக்கிறது. பாடலாசிரியரும் வசனகர்த்தாவும் நடிகருமான M. ஜெகன் கவிராஜ், இக்குறும்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகியுள்ளார். 


குறும்படத்தைப் பற்றி இயக்குநர் தினேஷ் ராம் கூறுகையில், "சில சமயம், முன்னால் செல்லும் காரின் பின்புற கண்ணாடியின் வழியாக ஒரு  குழந்தை கையை ஆட்டி நம்மைப் பார்த்துக் குதூகலமாகச் சிரிக்கும். அந்த மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்ளும். அன்றைய நாள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டது போலிருக்கும். இப்படி ஆசிர்வாதங்களை வழங்கிக் கொண்டிருந்த காரின் பின்புற கண்ணாடிகளில், சமீப காலமாகக் கோபமான ஆஞ்சநேயரின் படம் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. பின்னால் வருபவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்கும் அவர், அந்த நாள் முழுவதையுமே ஒரு அவஸ்தைக்குள் தள்ளி விடுகிறார். பக்த ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர், சாந்த ஆஞ்சநேயர், பவ்விய ஆஞ்சநேயரைப் போன்ற சாத்வீக ஆஞ்சநேயர்கள் அளித்த ஆசுவாசமும், காரிய சித்திக்கான நம்பிக்கையையும், இந்தக் கோப ஆஞ்சநேயர் அளிக்காமல் மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்தி வருகிறார். சென்னையில் பரவலாகத் தொடங்கிய இந்த அவஸ்தை, தற்போது சின்னஞ்சிறு உட்புற கிராமங்களுக்குச் சென்றாலும் அதிகளவில் துரத்துகிறது. 'சிரிச்ச மாதிரியான அனுமாரை ஏன் ஒட்ட மாட்டேங்கிறாங்க?' என்ற கேள்வி தான், 'புன்னகை சொன்ன கதை' எனும் குறும்படத்திற்கான ஆரம்ப விதை. அக்கேள்விக்கான விடை, போகன் சங்கரின் 'ராமன், எத்தனை ராமனடி!' எனும் கட்டுரையில் கிடைத்தது. நமது ராமரும், அவர்களது ராமரும் ஒன்றல்ல என்ற தெளிவை நாம் இழக்கும்பட்சத்தில், புன்னகையை இழந்த கோபக்கார ஆஞ்சநேயரின் பால் வசீகரிக்கப்படுகிறோம். நமது கண்களில் அடிக்கடி படும் சின்னங்கள் (Symbols), நமது ஆழ்மனதில் மாற்றங்களை (Subconcious influence) ஏற்படுத்த வல்லவை என்கிறது உளவியல். வார்த்தைகளை விட வீரியமிக்கது இத்தகைய புகைப்படங்கள். இவை, நாம் அறியாமலே நமது சுபாவத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும். நம்மை மாற்ற ஒரு முகமோ, ஒரு சின்னமோ, ஒரு குரலோ கூடப் போதுமானதாக இருக்கும். அப்படி மாறாமல், நமது பன்முக அடையாளங்களை இறுகப் பற்றி, நாம் நாமாக இருக்கவேண்டும் என்ற ஐடியாவைக் குறும்படமாக்கிப் பார்க்கும் ஆவல் எழுந்தது.


ஐடியா நன்றாக இருந்தாலும் கூட, அடுத்த கட்ட நகர்வை எடுக்கச் சின்ன தயக்கம் இருந்தது. இயக்கத்தின் அரிச்சுவடியும் தெரியாது. அதனால் என்னையும் இழுத்துக் கொண்டு போய் கரை சேர வல்ல ஜெகன் கவிராஜை அணுகினேன். 'அய்யா உண்டு. ஊரையே ஒன்று கூட்டி தேர் இழுப்பேன். உங்க ஒருவரை இழுக்கிறதா கஷ்டம்?' என முதல் ஆளாக இணைந்து, தேரின் வடம் பிடித்திழுத்துத் தொடங்கி வைத்தார். என் சுமையைக் குறைக்கும் விதமாகத் தேரை இழுக்கும் வேலையைப் படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவாளர் தனசேகர் நாராயணன் எடுத்துக் கொண்டார். அவருக்கு உற்ற துணையாக நின்று, விளாங்காடு எனும் கிராமத்தில் படப்பிடிப்பு நடக்க உதவிய, மறைந்த இணை இயக்குநரான எழுத்தாளர் DJ டேனியல் அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன். அவரின்றி இப்படமில்லை. மாஸ்டர், மஞ்ஞும்மள் பாய்ஸ் முதலிய படங்களில் நடித்த சிவமுருகன்.G பறையிசைக் கலைஞராக மிகச் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். வில்லனின் பிரதான கையாளாகத் திறம்பட நடித்த தமிழ்மாறன், கொதிக்கும் நல்ல வெயிலில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சுபலட்சுமி, தன் அழகான புன்னகையால் குறும்படத்துக்கு அழகை ஏற்படுத்தியிருக்கும் சிறுமி யுக்தா ஆகியோருக்கு நன்றி. சார்பட்டா பரம்பரை, சித்தா முதலிய படங்களில் நடித்துள்ள ராதா G. நற்பவியின் யதார்த்த நடிப்பாலும், குறும்படத்தின் முடிவைத் தனது கணீர் குரலால் உயர்த்தியுள்ள மூத்த நடிகரான K.S.பழனி அவரது அனுபவத்தாலும், உத்தேசித்த இடத்திற்குத் தேரைக் கொண்டு போய் நிறுத்த முடிந்தது. ராம் கதிர்வேலுவின் பின்னணி இசையும், கோவையைச் சேர்ந்த விக்ரமனின் சவுண்ட் டிசைனும் இணைய, கூட்டு முயற்சியின் பலனைப் புன்னகை சொன்ன கதை பெற்றது. தற்போது, சினிமா காலண்டர் எனும் யூ-ட்யூப் சேனலில் குறும்படம் வெளியாகியுள்ளது. பார்வையாளர்களின் மேலான கருத்துகளுக்காக எங்கள் படக்குழு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார்.


புன்னகை சொன்ன கதை குறும்படத்தை சினிமா காலண்டர் யூ-ட்யூப் சேனலில் காணலாம்.


புன்னகை சொன்ன கதை - https://youtu.be/bSnHFjZxAVk 


போகன் சங்கரின் ‘ராமன், எத்தனை ராமனடி?’ - http://bit.ly/3TmCr5u

டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், ZEE5 ப்ரீமியருக்கு முன்னதாகவே, ரசிகர்களிடம்

 “டிடி நெக்ஸ்ட் லெவல்”  படம்,  ZEE5 ப்ரீமியருக்கு முன்னதாகவே,  ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது ! 



~ டிடி நெக்ஸ்ட் லெவல் படம், டிஜிட்டலில் வெளியாவதற்கு முன்னதாகவே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ~


ZEE5 தளத்தில் அடுத்து வெளியாகவுள்ள ஹாரர்-காமெடி திரைப்படமான டெவில்ஸ் டபுள் : நெக்ஸ்ட் லெவல் படம்,  அதிகாரப்பூர்வ டிஜிட்டல் வெளியீட்டுக்கு முன்னதாகவே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  டிஜிட்டல் வெளியீடு குறித்தான டிரெய்லரும்,  புரமோ விடியோக்களும், சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வித்தியாசமான களத்தில், ஹ்யூமர் மற்றும் அதிரடி சினிமா அனுபவத்தின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்த டிஜிட்டல் வெளியீட்டில்  டிடி நெக்ஸ்ட் லெவல் படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும்.  ZEE5 தளத்தில் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தை கண்டுகளிக்கலாம் !


https://www.instagram.com/reel/DKwNbY2SS6P/?igsh=MXRxYWJ0ZWNkZTg3OQ%3D%3D


இறந்துபோன  திரைப்பட இயக்குநர்  ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட  திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி தப்பி வெளியில் வருகிறான்?  என்பது தான் இப்படத்தின் கதை.  வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அதிரடி பயணத்திற்கு தயாராகுங்கள். 


ZEE5-தளத்தில்  ஜூன் 13 முதல் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பார்த்து ரசியுங்கள்

பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

 பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!













ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ'ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.


ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் இந்த கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்துவிட்டது. இந்த படத்தை தயாரிக்க நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அப்பா- மகன் எமோஷன் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.


எடிட்டர் வி.எஸ். மதி, “எனக்கு முதல் படத்தை கொடுத்த இயக்குநர் ராமுக்கும், இயக்குநர் மாரி செல்வராஜூக்கும் நன்றி. என் முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.


இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “வாய்ப்பு தந்த ராம் சாருக்கு நன்றி. ஒரு படத்தையும் இசையையும் எப்படி பார்க்க வேண்டும் என்பதை ராம் சாரிடம் கற்றுக் கொண்டேன். மதன் கார்க்கி சாருக்கும் நன்றி”.


பாடலாசிரியர் மதன் கார்க்கி, “ராமுடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. ‘பறந்து போ’ படத்தில் வேறு ஒரு ராம் சாரைப் பார்த்தேன். இந்தப் படத்திற்கு மொத்தம் 25 பாடல்கள் எழுதினேன். அதில் 19 பாடல்கள் படத்தில் அமைந்துள்ளது. நடிகர் சித்தார்த்தும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அண்ணன், மனைவி, மகன் என மூன்று உலகங்களுக்குள் நடக்கும் இணைப்பு- போராட்டம்தான் இந்தக் கதை. மெல்லிய சிரிப்பு இந்தப் படம் முழுக்க இருக்கும். என்னுடைய 1000 ஆவது பாடல் இந்தப் படத்தில் எழுதியிருக்கிறேன். நன்றி”.


மாஸ்டர் மிதுன், “இந்த வாய்ப்பு கொடுத்த ராம் அங்கிளுக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.


நடிகை கிரேஸ் ஆண்டனி, “இந்தக் கதாபாத்திரமே எனக்கு வித்தியாசமாக இருந்தது.  சிவா சாருடன் நகைச்சுவை செய்தது புதுசாக இருந்தது. அவர் நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தார். ராம் சாருக்கு நன்றி”.


நடிகர் மிர்ச்சி சிவா, “ராம் சாருடன் படம் என்றம் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது. ’நானே இதுவரை செய்யாத படம் இது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’ என்று ஸ்கிரிப்ட் கொடுத்தார். உடனே ஒத்துக் கொண்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநராக மட்டுமில்லாமல் எல்லா வேலைகளும் அவர் எடுத்துப் போட்டு செய்தார். அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்” என்றார்.


திங்க் மியூசிக் சந்தோஷ், “ராம் சாரிடம் இருந்துதான் முதல் அழைப்பு வந்தது. கிட்டத்தட்ட 20 பாடல்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. படம் ஃபன்னாக இருக்கிறது. குடும்பத்துடன் நீங்கள் நிச்சயம் இந்தப் படம் பார்க்கலாம். மதன் கார்க்கியுடைய 1000ஆவது பாடல் இதில் அமைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.


நடிகர் சித்தார்த், ”ராம் மிகச்சிறந்த படைப்பாளி. அவரது படைப்புகளில் உண்மையும் நேர்மையும் இருக்கு. அவரது படைப்புகளில் எனது பங்களிப்பு எதாவது ஒரு வகையில் இருக்கும் என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நான் பாடியிருக்கும் பாட்டு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ். ரொம்ப ஜாலியான, அழகான படம் இது. ராம் சின்ன பசங்களிடம் நன்றாக வேலை வாங்குவார். மிதுனும் நன்றாக நடித்திருக்கிறார். சிவா முன்பிருந்தே எனக்கு பழக்கம். சிவாவுக்கு ஒரு நடிகராக இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கு. கிரேஸூடைய நடிப்பு சென்சேஷனலாக இருந்தது. ராம்-சிவா- கிரேஸ் மூன்று பேருடைய கூட்டணி நன்றாக வந்திருக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜூலை 4 எங்களுக்கு முக்கியமான நாள். நான் நடித்திருக்கும் ‘3 BHK’ மற்றும் ‘பறந்து போ’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது மகிழ்ச்சி. குடும்பங்களுடன் நீங்கள் வந்து பார்க்கலாம். நன்றி”.


தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “ஸ்பெஷலான, எமோஷனலான மேடை இது. நான் தயாரிப்பாளர் என்று சொல்வதை விட ராம் சாரின் அசிஸ்டெண்ட் என்று சொல்வதுதான் பெருமை. நீங்கள் இயக்குநர் ஆவதை விட தயாரிப்பாளர்தான் ஆவீர்கள் என்று நினைக்கிறேன் என்று பத்து வருடங்களுக்கு முன்பே ராம் சார் சொன்னார். மிர்ச்சி சிவாவுக்கும் இது ஸ்பெஷலான படம். படம் வெளியாகும்போது நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை”.


தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, “படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “’வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் உண்டு. அதைத்தெரிந்து கொள்ள நீங்கள் பயணம் செய்ய வேண்டும்’ என ஜெயமோகனின் ஒரு வரி உண்டு. அதை ராம் சாரின் படங்களில் பார்க்கலாம். மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் பார்க்கும்படியான படம் இது. படம் சிறப்பாக வந்துள்ளது. நன்றி!”.


தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “என் திரைப்பயணத்தில் மாரி செல்வராஜ், ராமுடன் பணியாற்றிய நாட்கள் மிக மகிழ்ச்சியான நாட்கள் என்பேன். ‘பேரன்பு’ பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் நான் தூங்காமல் இருந்தேன். எனக்கு மிகப்பிடித்த படம் இது. ‘பறந்து போ’ எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். இந்தப் படத்தில் சிவா மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். கிரேஸ், சந்தோஷ் தயாநிதி, மதன் கார்க்கி எனப் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.


நடிகை வேணி, " ராம் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். செட்டில் பல நாட்கள் ஜாலியாக இருக்கும். எல்லோரும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். நன்றி".


இயக்குநர் மீரா கதிரவன், "இந்தப் படம் பார்த்ததும் என் குழந்தைகளையும் பயணம் அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல, எல்லா பெற்றோருக்கும் இந்தப் படம் பார்த்ததும் அந்த எண்ணம் தோன்றும். வீட்டுக்குள் அடைந்திருப்பது பெரும் சாபம். அதுவும் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு குழந்தைகளின் உளவியல் சிதைந்து போயிருக்கிறது. குழந்தைகளுக்காக தான் நாம் வாழ்க்கையில் ஓடுகிறோம். ஆனால், குழந்தைகளை அவர்களின் உலகத்துடன் வைத்துக் கொள்கிறோமா என்பது கேள்விதான். இது அனைவரையும் மாற்றும் படமாக இருக்கும். நிச்சயம் பாருங்கள்".


ஜியோ ஹாட் ஸ்டார், கண்டெண்ட் ஹெட் பிரதீப் மில்ராய், " ராம் மிகவும் சென்சிபிளான இயக்குநர். அவருக்கு பெரிய பெரிய சண்டை காட்சிகள் தேவையில்லை. மனிதர்கள் மட்டும் அவரது கதைக்கு போதும். நடிகர்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்" என்றார்.


இயக்குநர் மாரி செல்வராஜ், "'பறந்து போ' படம் எனக்கு மிகவும் பிடித்தது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று போய் பார்க்க முடியாதது எனக்கு வருத்தம். காமெடி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை பலமுறை பார்த்து நினைவில் வைத்து பேசி மகிழ்ந்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கையை மாற்றிய தருணம் ஈழப்பிரச்சினை தான். அதில் இருந்துதான் படத்திலும் தீவிரமாக பேச ஆரம்பித்தோம். இல்லை என்றால் நான் 'களவாணி' போன்ற கமர்ஷியல் கிராமத்துப் படங்களைக் கொடுத்திருப்போம். சின்ன வயதில் நான் வாழாத வாழ்க்கையை இந்த படம் சொல்லி இருக்கிறது. தான் உருவாக்கும் கதாபாத்திரங்களில் பொய் இருக்கக் கூடாது என்று நினைப்பவர் ராம். இந்தப் படம் எங்கள் குடும்பத்தின் திருவிழா. 'வாழை' படத்தைக் கொண்டாடியது போலவே ரசிகர்கள் நிச்சயம் 'பறந்து போ' படத்தையும் கொண்டாடுவார்கள்" என்றார்.


இயக்குநர் மிஷ்கின், " இயக்குநர் ராம் இந்த கதை சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு நாளைக்கு படவிழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்து ஐந்து முதல் ஆறு ஃபோன் கால்கள் வருகிறது. இது போன்ற விழாவுக்கு என்னை அழைத்தால் இனிமேல் அதற்கான தொகையாக குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் கொடுத்து விடுங்கள். சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது. இப்போது அதிக போட்டி இருக்கிறது. ராம் படங்களை பார்க்கும் பொழுது எப்போதுமே அதிசயம் போல தான் இருக்கும். 'பறந்து போ' படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். அழகான படம்" என்றார்.


இயக்குநர் ராம், " எல்லோரையும் போல நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் நான். முதலில் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்திற்கும் 20 பாடல்கள் தேவைப்பட்டதால் யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் தான் சந்தோஷ் உள்ளே வந்தார். ஜியோ ஹாட்ஸ்டார் எனக்கு வேலை செய்வதற்கு மிகவும் இலகுவான இடம். பிரதீப்பை பார்த்தாலே தனி எனர்ஜி வரும். சிவா,கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்திருக்கின்றனர் இந்த செட்டில் தான் நாம் ரிலாக்ஸாக இருந்தேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை முதலில் பார்த்து வாழ்த்து சொன்னார். அவர் படம் பார்த்து வாழ்த்தியதுடன் உலக அளவில் வெளியிடுவது எங்களின் பெரும் பலம். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.



Thursday, 12 June 2025

கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு

 'கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு!






பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான திரைப்படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் தான் 'கரிகாடன்'.


 ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக

'கரிகாடன் ' உருவாகியுள்ளது.

இப்படத்தில் 

காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை  ரித்தி,

மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி,

  கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய் சந்தூர், சந்திரபிரபா,கரிசுப்பு,

கிரி,பாலராஜாவாடி,

மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ்.

 இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி,

 ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ், கலை ரவி, கவுடல்லி சாஷி, நடனம் ராம்கிரண்.


ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர்: தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார்.

 இணைத் தயாரிப்பு: ரவிக்குமார் எஸ்.ஆர்.


இசையையும் சிலிர்ப்பையும் இணைக்கும் 'கரிகாடன்' படத்தின் சாகச மற்றும் அதிரடிப் பயணத்தைத் திரையரங்கில் விரைவில் காணலாம்.

அதிரடி ஆக்சன் காட்சிகள். அசத்த வைக்கும் இசை என்று திரை மாயாஜாலத்தை உணர வைக்கும் ஒரு படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது.


கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞரான கடா நட்ராஜ், தனது கனவைப் பெரிய திரையில் நனவாக்க வந்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள காடா நடராஜ் கவனமாக திட்டமிடப்பட்டு   படப்பிடிப்பை முடித்தார்.


ரித்தி என்டர்டெயின்மென்ட் ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கும் அவரது மனைவி தீப்தி தாமோதர், சகோதரர் ரவிக்குமார் எஸ்.ஆர். மற்றும் நண்பர் திவாகர் பி.எம். ஆகியோர் அவரது திரை உலகக் கனவை நிறைவேற்றத் துணைபுரிந்துள்ளனர்.


 கரிகாடனின் பின்னணியில் ஏராளமான திறமைக் கரங்கள் இணைந்து கைகோர்த்துள்ளன.


சிறந்த இயக்குநரான கில்லி வெங்கடேஷ், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் தனது நிபுணத்துவத்துடன் 'கரிகாடன'னை உருவாக்கியுள்ளார்.  ரியாலிட்டி டிவியில் பின்னணி மற்றும் 'ஹுலிபேட்டை' படத்தில் எதிர்மறை வேடம் உட்பட குறிப்பிடத்தக்க வேடங்களுடன், கில்லி வெங்கடேஷ் படத்திற்கு வீரியம் சேர்த்துள்ளார். அதிஷய் ஜெயின் மற்றும் ஷஷாங்க் சேஷகிரி இசையை வடிவமைத்துள்ளனர், ஷஷாங்க் பின்னணி இசையமைக்கிறார். ஜீவன் கவுடாவின் ஒளிப்பதிவு சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா மற்றும் சக்கராயபட்னாவின் அழகைப் படம்பிடித்திருக்கிறது. தீபக் சி.எஸ்.ஸின் எடிட்டிங் படத்தை சங்கிலித் தொடராக இணைத்துள்ளது.


 'கரிகாடன்' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்தை ரசிக்கத் தயாராக இருக்கும்படி படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Wednesday, 11 June 2025

அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

 *அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*







ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்' டி என் ஏ' ( DNA)  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ' டி என் ஏ' ( DNA)  திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 


அதர்வா - நெல்சன் வெங்கடேசன் கூட்டணியில் உருவாகி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் கே. பாபு, ஹேமந்த் ஆகியோருடன் கவிஞர் வெண்ணிலாவின் வாரிசுகளும், மத்திய தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தமிழக அளவில் சாதனை படைத்த கவின்மொழி மற்றும் நிலா பாரதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பேசுகையில், '' வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. இந்த பாடலில் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர், பாடகர், பாடகிக்கும், இசைக்கலைஞர்களுக்கும் நன்றி.‌ பாடகராக என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. ஏ ஆர் ரகுமான் சார் தான் என்னுடைய  மானசீக குரு. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்தப் பாடலை கேட்டுவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


அறிமுக இசையமைப்பாளர் சத்ய பிரகாஷ் பேசுகையில், '' சந்தோசமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலுக்கு இசை அமைத்திருக்கிறேன். இந்தப் பாடல் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. கே.எஸ் சித்ராம்மா இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் இந்த படத்தின் மிக முக்கியமான சூழலில் இடம் பிடித்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் இது என்னுடைய பயணத்தின் தொடக்கம் தான். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


அறிமுக இசையமைப்பாளர் பிரவீண் சைவி பேசுகையில், '' 14 வருடமாக சென்னையில் இருக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதற்கு நானும் சாட்சி. இதுவரைக்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. அற்புதமான அனுபவம்.‌ இந்தப் படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். '' என்றார். 


அறிமுக இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் பேசுகையில், ' இசையமைப்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது போன்றதொரு வாய்ப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். அறிமுக இசையமைப்பாளர்களுடனும், ஜிப்ரான் போன்றவர்களுடனும் மேடையை பகிர்ந்து கொண்ட தருணம் தான் எனக்கு கிடைத்த கௌரவம் என நினைக்கிறேன்'' என்றார். 


பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, '' பெரு மகிழ்ச்சியில் இருக்கிறேன்.‌ பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்புத் தம்பி மாரி செல்வராஜை இந்த மேடையில் பார்க்கிறேன். 


இந்த மேடையில் வியப்பாகவும், சிலிர்ப்பாகவும் சொல்ல நினைப்பது இயக்குநர் நெல்சனை பற்றி தான். அவரிடம் தொடர் இலக்கிய வாசிப்பு இருக்கிறது. சமகாலத்தில் சமூகத்தின் அசைவுகளை அவதானித்து, அதில் தன்னுடைய பார்வையை பதிவு செய்வதில் தீவிரமானவர். அத்துடன் உலக திரைப்படங்களையும் தீவிரமாக பார்க்கக் கூடியவர். இத்தகைய அனுபவங்களில் ஊறி வெளியாகும் படைப்புதான் இது. 


அவருடன் பாடல் எழுதும் போது பாடலுக்காக அவர் விவரிக்கும் சூழல் வாழ்க்கைக்கான கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்குள் இருக்கும். மனித உணர்வுகளை நுட்பமாக சொல்லக்கூடிய வகையில் தான் அவர் சூழலை விவரிப்பார். என்னை போல் எழுதக்கூடியவர்களுக்கு இது எளிதானது. இதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


 இந்த படத்தில் பணியாற்றிய ஏனைய பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளராக அறிமுகமாகும் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த உலகம் நமக்கு எதை கொடுத்தாலும் நாம் அதற்கு திருப்பி தர வேண்டியது அன்பை மட்டும் தான். இதைத்தான் இந்த படமும் பேசுகிறது'' என்றார். 


பாடலாசிரியர் முத்தமிழ் பேசுகையில், '' 1980களில் வெளியான 'கண்ணில் தெரியும் கதைகள்' என்ற படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அனைவரும் இசை துறையில் சாதித்த ஜாம்பவான்கள். தற்போது பாடல்கள் மலிந்து வரும் தருணத்தில் ஐந்து இசையமைப்பாளர்களை ஒரு படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இயக்குநரும், தயாரிப்பாளரும் எடுத்த முடிவிற்கு பாராட்டுகிறேன். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் இசை துறையில் ஜாம்பவான்களாக மாற வேண்டும் என வாழ்த்துகிறேன். 


இந்த டி என் ஏ திரைப்படம் - ரசிகர்களின் டிஎன்ஏவுக்குள் சென்று உற்சாகத்தை உண்டாக்கட்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார். 


நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், '' இது ஒரு நல்ல படம். அதர்வாவின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும். 


பத்து வருடங்களுக்கு முன் இதே மேடையில் தான் இயக்குநர் நெல்சன் இயக்கிய 'ஒரு நாள் கூத்து' படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. அவர் தொடர்ந்து நிறைய படங்களை இயக்க வேண்டும் ஏனெனில் அவர் ஒரு நேர்மையான இயக்குநர். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு இப்போது தான் இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்திருக்கிறார்.  பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அழைத்து வாய்ப்பளிப்பார். இந்தத் திரைப்படம் ஜூன் இருபதாம் தேதியன்று வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வழங்குங்கள்'' என்றார். 


பாடலாசிரியர் உமாதேவி பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன்.  ஐந்து திறமையான இளம் இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநருக்கு நன்றியையும் , வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


நெல்சன் இயக்கத்தில் வெளியான பர்கானா எனும் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருந்தேன். 


இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இடம் பிடித்திருக்கும் பெண் கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவர்களாக எனக்குத் தெரிந்தார்கள். கவனிப்பாரற்று இருக்கும் பெண்களை தன்னுடைய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இடம்பெறச் செய்திருப்பார். 


'டி என் ஏ' வில் உள்ள திவ்யா கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொலைத்த அனுபவங்களை நினைவுபடுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கிறது. 


அற்புதமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 


நடிகை மானசா சௌத்ரி பேசுகையில், '' டி என் ஏ எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். நான் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் இது . இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய வேடமாக இருந்தாலும் அழுத்தமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என நம்புகிறேன் அதர்வாவுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.'' என்றார். 


இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில், '' எனக்கு அடையாளம் கொடுத்த தயாரிப்பாளருக்கு வணக்கம். ஒவ்வொரு படமும் மக்களிடம் சரியாக  சென்றடைய வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பார். சினிமாவை மிகவும் நேசிப்பவர்.‌ எந்த படத்தைப் பற்றியும் அவரிடத்தில் ஒரு சரியான ஜட்ஜ்மெண்ட் இருக்கும். இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 


இயக்குநர் நெல்சன் அவருடைய எல்லா படங்களையும் நேர்த்தியாக சொல்லி இருப்பார். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில், '' என் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் படம்.  இது என்னுடைய விழாவாக தான் பார்க்கிறேன்.  


ரமேஷ் திலக் குறிப்பிட்டது போல் நெல்சன் வெற்றி பெற்றால் ஏராளமானவர்களுக்கு ஒரு தலைமுறைக்கான வாசல் திறந்து விட்டது போல் இருக்கும். மிக சாதாரண நிலையில் இருந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருப்பவர். 


சில நபர்கள் தான் ஏற்ற இறக்கங்களை கடந்து வாழ்க்கையில்  சீரான ஒரு நிலையை பராமரிப்பார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் நெல்சன். 


இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நிச்சயமாக சொல்கிறேன்... நெல்சன் இயக்கிய படங்களில் வெகுஜன ஆதரவும், வியாபார ரீதியான பெரிய வெற்றியையும் பெறக்கூடிய முதன்மையான படமாக இது இருக்கும்.‌ இது சம்பிரதாயமான வார்த்தை இல்லை.  நிச்சயம் இது நடக்கும். 


அதர்வாவிற்கும் இந்த படம் நிச்சயமாக நல்ல படமாக இருக்கும். அற்புதமாக நடித்திருக்கிறார்.‌ 

நிமிஷா இந்தியாவில் இருக்கக்கூடிய நல்ல நடிகைகளில் ஒருவர்.  மொழிகளைக் கடந்து ஏற்கனவே நம்மிடம் வந்திருப்பவர். இந்தப் படத்தில் ஸ்பெஷலாக நடித்திருக்கிறார். 

இந்தப் படம் மக்கள் கொண்டாடும் படமாக இருக்கும். 


தயாரிப்பாளர் அம்பேத்குமார்- தயாரிப்பாளர் என்பதை கடந்து என்னுடைய நண்பர். நல்ல மனிதர் . நான் எப்போதும் ஆச்சரியமாக பார்க்கும் மனிதர். காலையில் 6:00 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி வந்தவாசிக்கு 9 மணிக்கு சென்று விடுவார், பிறகு அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு கிளம்பி, 9 மணிக்கு சென்னைக்கு வந்து விடுவார்.‌ தொடர்ந்து உழைக்கும் அபாரமான உழைப்பாளி. இந்த உழைப்புதான் அவரை அரசியல் -சினிமா- தொழில் துறை - என அனைத்து துறைகளிலும் வெற்றியாளராக மாற்றி இருக்கிறது.‌ 


சினிமா மீது தீரா காதல் கொண்டவர். ஒரு காபி குடிப்பதற்குள் ஒரு கதையை சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர். அவர் இயக்குவதற்கு அவரிடமே நிறைய கதைகள் உள்ளது. அவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு நிறைய நல்ல படங்கள் கிடைக்கும்.‌ அந்த வகையில் டி என் ஏ படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும். வெற்றி விழாவில் சந்திப்போம்'' என்றார். 


இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், '' இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தின் பின்னணி இசைக்காக இயக்குநர் நெல்சன் என்னை தொடர்பு கொண்ட போது அவரிடம் நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் என்று சொன்னேன். அவருடைய படங்களில் கதை சொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் இயக்கிய மூன்று படங்களை விட இந்த டி என் ஏ சிறந்தது என்று சொல்வேன். 


அவருடைய பேச்சை  நான் மிகவும் ரசிப்பேன். அவரால் பொலிட்டிக்கல் என்டர்டெய்னர் படத்தை இயக்க முடியும். அந்த அளவிற்கு அவரிடம் அரசியலைப் பற்றிய அறிவு இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. '' என்றார். 


நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், '' டி என் ஏ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம்.  என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. திவ்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறிது சவாலானதாக இருந்தது. 


அதர்வா திறமையான சக நடிகர். ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு திரையில் மாயஜாலம் செய்திருக்கிறார். 


படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படம் ஜூன் இருபதாம் தேதி அன்று வெளியாகிறது . அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் . 


சிறப்பு விருந்தினர் கவின் மொழி பேசுகையில், '' அனைவருக்கும் வணக்கம் . எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமாரின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கிறேன். பொதுவாக இது போன்ற இசை வெளியீட்டு விழாவில் திரை உலக பிரபலங்களை தான் விருந்தினர்களாக அழைப்பார்கள். முதன்முறையாக எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


நாங்கள் சினிமாவை திரையில் தான் கண்டு ரசித்து இருக்கிறோம். அதை கடந்து இத்தனை நபர்கள் கடுமையாக  உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள் என்பதனை பார்க்கும்போது பெரிய மேஜிக்காக இருக்கிறது. 

ஒரு தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருப்பது போல் தான் இருக்கிறது.‌ இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை நன்றாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெறுவதற்கும் , படக் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ''என்றார்.


சிறப்பு விருந்தினர் நிலா பாரதி பேசுகையில், '' இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியதற்காக தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு நன்றி.


அவர் அழைப்பு விடுத்த போது இந்த விழாவிற்கு செல்வது தொடர்புடையதாக இருக்குமா? என யோசித்தேன்.‌ நாள் இங்கு வந்த பிறகு ஒவ்வொருவரையும் சந்தித்த பிறகும் அவர்களுடைய பேச்சை கேட்ட பிறகும் நெருக்கமானதாக இருக்கிறது. 


ஆனந்த விகடனில் வெளியான' வட்டியும் முதலும்', 'மறக்கவே நினைக்கிறேன்' போன்ற தொடர்களை வாசித்திருக்கிறேன். அதை எழுதிய ராஜு முருகனை இங்கு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ மாரி செல்வராஜ், பாலாஜி சக்திவேல், நெல்சன் ஆகியோரை சந்திக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.‌ 


அண்மையில் 'டப்பா கார்ட்டல் ' எனும் வெப்சீரிஸை பார்த்தேன். அதில் நிமிஷா சஜயன் அற்புதமாக நடித்திருந்தார்கள். அவர்களை இங்கு நேரில் பார்க்கிறேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


'சூப்பர் சிங்கர்ஸ்' நிகழ்ச்சிகள் பார்த்து ரசித்தவர்களை இங்கு இசையமைப்பாளராக பார்க்கிறேன். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக பெருமிதம் அடைகிறேன். டி என் ஏ திரைப்படம் வெற்றி பெறுவதற்கும், படக் குழுவினருக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.‌


இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், '' இந்தப் படத்தை நேற்று இரவு தான் என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம்.‌ திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  அதற்கு என் உதவியாளர் மிகவும் எனர்ஜியாக இருப்பார்கள். துருதுருவென்று ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்கள் என்று விளக்கினார். நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே படம் பார்க்கிறேன். ஆனால் நான் இங்கு மேடையில் வந்த பிறகு அவருடைய நடவடிக்கையை கவனித்தேன்.  அவருடைய நடவடிக்கையை பார்த்து தான் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார்களோ..! என நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் உற்சாகமாக இருக்கிறார்.  


இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இயக்குநர் நெல்சனை மிகவும் பிடிக்கும் ஏனெனில் ஒரு நாள் கூத்து படத்தை பார்த்தேன். 


பொதுவாக சினிமாவை நாம் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது. யார் என்ன சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாக நம்முடைய கற்பனைக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து அந்த கதைகளை திரையில் கொண்டு வருவது..

மற்றொரு வாய்ப்பு என்னவென்றால் எது மக்களுக்கு பிடிக்கிறது... எது வெற்றிகரமானதாக இருக்கிறது... எது நம்மை முன்னிலைப்படுத்தும்? எது நம்மை பிரபலமானவராக உயர்த்தும் என்பது.. என எண்ணி படத்தை இயக்குவது மற்றொரு வகை. 


இதில் நெல்சன் இயக்கிய நான்கு படங்களையும் எடுத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர் கனமான கதைகளை தேர்வு செய்திருப்பார். 


ஒரு நாள் கூத்து படத்தின் கதையின் தொடக்கத்தையே மிகவும் முதிர்ச்சியாக காட்சிப்படுத்தி இருப்பார் அதை பார்த்து அப்போதே நான் வியந்து இருக்கிறேன்.‌ 


அவருடைய படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உள்ளார்ந்த வாழ்க்கை இருக்கும்.  


எங்களுடைய தலைமுறையை சார்ந்த இயக்குநர்களில் அவர் தனித்து நிற்கிறார். அவருடைய படைப்புகளில் அவருடைய சமூக பொறுப்புணர்வு தெரிகிறது. சட்டென்று பெரும்பாலான மக்களுக்கு தென்படாத கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதை திரையில் கொண்டு வருகிறார். 


இந்தப் படத்தை பார்க்கும் போது ஓடும் ஆற்றில் ஒரு இலையை தூக்கி போட்டால் அது எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் செல்வது போல்.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் இது. இது போன்ற படத்தை வழங்குபவர் தான் நெல்சன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்த படத்தை பார்த்த என்னுடைய உதவியாளர்களிடம் படம் எப்படி? என கேட்டபோது, அனைவரும் ஒரு நாவலை வாசித்த பிறகு இருக்கும் அமைதியும் , மௌனமும் தான் அவர்களின் எதிர்வினையாக இருந்தது. 


இந்தப் படத்தை பார்க்கும் போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உண்மையை நேரில் பார்ப்பது போல் இருக்கும்.‌ 


நாம் படுத்து எழுந்து சென்ற இடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும்,  பில் கட்டுவதற்காக ஒரு கவுண்டரில் நின்று கொண்டிருப்போம். அந்த கவுண்டருக்குள் ஒரு கதை இருக்கும். அது நமக்குத் தெரியாது. நாம் ஒரு டாக்ஸிக்குள் பயணித்திருப்போம். அந்த டாக்ஸிக்குள் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கும். அது நமக்கு தெரியாது. இப்படி நாம் அங்கங்கே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே சென்றிருப்போம். 


இதுபோல் நாம் படுத்து எழுந்த .. தவித்த..  இடங்களில் மனிதநேயம் கொண்ட ஒரு கதை இருக்கும். அதை பிரதிபலிக்கிற படமாகத்தான் டி என் ஏ இருக்கிறது.‌ 


நாம் நம்பிக்கையுடன் பழகும் சமூகத்தில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு விசயம் நடந்தால் எப்படி இருக்கும்? என்ற விசயமும், மனிதத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர்களும், மனிதத்தை மதிக்காதவர்களும் வாழும் இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ்வது என்பதையும், அதற்குள் நாம் எப்படி சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும்  இந்தப் படம் பேசுகிறது. 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுக இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 


நடிகர் அதர்வா பேசுகையில், ''  இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி குறிப்பாக கவின்மொழி மற்றும் நிலா பாரதி ஆகிய இருவரும் வருகை தந்தது எங்களுக்கு பெருமை.


கடந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று.‌ இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன்.  ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜ் வேறு ஏதேனும் கதை இருந்தால்.. அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


டி என் ஏ படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் சொல்வதற்கு முன் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் ஃபோனில் சொல்லிவிட்டார். ஆனால் அப்போது படத்தின் டைட்டில் என்ன? என்று கேட்கவில்லை. இயக்குநர் நெல்சன்.. அவர் இயக்கிய படங்களில் எமோஷனலை நிறுத்தி நிதானமாக சொல்லி இருப்பார். அதனால் அவர் என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை கேட்க ஆவலாக இருந்தேன்.‌ 


கதையை சொல்ல தொடங்கும் போது இந்த படத்தின் டைட்டில் டி என் ஏ என்றார்.‌ உடனே டி என் ஏ என்றால் ஜெனிடிக் தொடர்பான சயின்டிபிக் பிக்ஷன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் டி என் ஏ என்றால் திவ்யா அண்ட் ஆனந்த் என சொன்னார். 


திவ்யா கதாபாத்திரத்தில் நிமிஷா நடித்திருந்தார். ஆனந்த் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.  


ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கும். இந்த படத்தில் நடிக்கும் போது எதையும் நினைக்காமல் திறந்த மனதுடன் சென்றேன். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை மேம்படுத்தினார்கள். எனக்குத் தெரிந்து இந்த படத்தில் நானும், நிமிஷாவும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தோம்.‌ அந்த காட்சி 15 வினாடிகள் தான் இருக்கும். 15 வினாடிகளில் அந்த காட்சிக்கான உரையாடல்கள் நிறைவடைந்து இருக்கும். அதன் பிறகும் நிமிஷா நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இணையாக நானும் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இது 40 விநாடிகள் வரை நீடித்தது.‌ அதன் பிறகு அந்தக் காட்சியை நாங்கள் பார்க்கும் போது அழகாக இருந்தது. நெல்சன் அந்த காட்சியை அப்படியே படத்தில் வைத்திருக்கிறார். அது முன்னோட்டத்திலும் இடம்பிடித்து இருக்கிறது. இரண்டு பேரும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் காட்சி அது. சில படங்களில் தான் இது போன்று அமையும். 


இந்தப் படத்தின் இசை யாரென்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு நான் பண்பலை வானொலியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அதனால் ஐந்து புதிய திறமையான இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்றார். 


இந்தப் படத்தின் கதையை கேட்ட பிறகு உடனடியாக ஏனைய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். இரண்டே மாதத்தில்  படப்பிடிப்பு பணிகளை தொடங்கி விட்டோம். இதற்கு தயாரிப்பாளரும் முக்கியமான காரணம்.‌ சினிமா மீது அவருக்குள்ள காதலால் இது சாத்தியமானது. 


இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ 


கதையை அனைவரும் எளிதாக எழுதலாம். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதுவது கடினமானது. இதற்கு நிறைய யோசிக்க வேண்டும். எல்லா கதாபாத்திரத்தையும் சிறப்பாக இயக்குநர் நெல்சன் எழுதி இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்காது. 


இந்த படம் ஒரு நல்ல படம். உங்களுடைய திரை உலக பயணத்தில் சிறந்த படமாக இது இருக்கும் என்று என்னிடம் சொன்னார். இந்த வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 


பொதுவாக ஒரு படம் வெளியாகும் போது அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பயம் கலந்த பதட்டம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் எங்களுக்கு பயம் இல்லை. பதட்டமும் இல்லை .சிறிய அளவில் நம்பிக்கை இருக்கிறது . நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. 


பொதுவாக நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்.‌ நண்பர் மீது வைக்கும் நம்பிக்கை... ஒரு காதலன் காதலி மீது வைக்கும் நம்பிக்கை... இந்த படத்தை பொறுத்தவரை மனைவி என்பவர் தன் கணவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.. அந்த நம்பிக்கையினால் எந்த அளவிற்கு தங்களின் அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைத்தான் இப்படம் சொல்கிறது. அதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.‌ 


ஜூன் இருபதாம் தேதி அன்று திரையரங்குகளில் டிஎன்ஏ வெளியாகிறது. இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார். 


இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், ''  இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சிறந்த மனிதர் என்று சொல்வதை விட சிறந்த மக்கள் பிரதிநிதி என்று தான் சொல்ல வேண்டும். தினமும் சென்னையிலிருந்து அவருடைய தொகுதியான வந்தவாசிக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு அதன் பிறகு தான் சென்னை திரும்புவார்.  அவரை நான் சில முறை வந்தவாசிக்கு சென்று சந்தித்திருக்கிறேன்.‌ தொகுதியுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் பிரதிநிதியை சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 


படத்தின் கதையை நான் அவரிடம் சொன்ன பிறகு, அவர்தான் எல்லோரிடமும் சொன்னார். அந்த வகையில் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி.  


'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' என்ற படத்திற்காக ஏற்கனவே ஐந்து இசையை பாடல்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.  ஐந்து பேரிடமும் பணியாற்றும்போது ஐந்து வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. 


இந்தப் படத்திற்கு வலிமையாகவும் உறுதியாகவும் ஒரு பின்னணி இசை தேவைப்பட்டது. அதற்காக ஜிப்ரானினை தொடர்பு கொண்டோம். அவருடைய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2016 ஆம் ஆண்டில் என்னை தொடர்பு கொண்டு ஒரு நாள் கூத்து படத்தை பற்றி பாராட்டி பேசினார். அவர் ஒரு மேடையில் பேசிய பேச்சுதான் என்னை ஃபர்கானா படத்தை இயக்குவதற்கான தூண்டுதலாக அமைந்தது. மாரி செல்வராஜ் இன்று அடைந்திருக்கும் உயரம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 


இயக்குநர்கள் ராஜூ முருகன், ஹேமந்த், கணேஷ் கே. பாபு ஆகியோர்களுக்கும் நன்றி. 


அதர்வாவும், நிமிஷாவும்  இல்லையென்றால் இந்த படம் இல்லை.‌ ஏன்? என்பது இந்தப் படத்தை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். 


இது ஒரு கிரைம் ஆக்சன் டிராமா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது.


என்னுடைய முந்தைய மூன்று படங்களுக்கு மாறுபட்டதாகவும், ஒரு இயக்குநராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத படைப்பாகவும் டி என் ஏ இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். 


இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் , நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார் .