Featured post

Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic

 Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic #NBK111 Launched Majestically* God of th...

Wednesday, 26 November 2025

Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic

 Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic #NBK111 Launched Majestically*












God of the Masses, Nandamuri Balakrishna, riding high on an unstoppable streak of blockbusters, is gearing up to shake the box office once again as he teams up with mass director Gopichand Malineni for their next explosive spectacle, #NBK111. After rewriting box-office history with Veera Simha Reddy, this powerhouse combo is returning with an even bigger and grander historical epic. Produced by Venkata Satish Kilaru under the prestigious Vriddhi Cinemas banner, currently making waves with the massive pan-India venture Peddi, this new project is set to be mounted on an epic scale.


The stunning Nayanthara has stepped into play the leading lady opposite Balakrishna. With this, Balakrishna and Nayanthara reunite for the fourth time, following their memorable collaborations in Simha, Jai Simha, and Sri Rama Rajyam.


The project has been launched majestically today with a grand pooja ceremony in Hyderabad. The script was formally handed over to the makers by Andhra Pradesh Ministers Anagani Satya Prasad and Gottipati Ravi Kumar. Director B Gopal who once delivered several blockbusters with Balakrishna sounded the clapboard, while NBK’s daughter Tejaswini switched on the camera. The first shot was directed collectively by Boyapati Sreenu, Bobby, and Buchi Babu. The event was attended by star directors, producers, and several other distinguished guests, all of whom added even more sparkle to the occasion.


The battlefield rises to salute its mightiest king, as this historical roar is set to shake the very foundations of history and script a new chapter. Director Gopichand Malineni, known for his unmatchable mass elevation and high-voltage storytelling, now ventures into the world of historical drama for the first time. He is shaping a colossal tale designed to showcase Nandamuri Balakrishna in an avatar- fans have never witnessed before. The special poster unveils Balakrishna as a formidable king, gripping a sword and an anchor with commanding presence. He sports large beard, long hair, and powerful stance.


With its majestic period setting, the film promises a powerful mix of raw emotion, rousing action, and visual splendour- crafted on a scale that screams nothing but epic.


Details regarding the remaining cast and technical crew are set to be unveiled soon.


Cast: Nandamuri Balakrishna, Nayanthara


Technical Crew:

Writer, Director: Gopichand Malineni

Producer: Venkata Satish Kilaru

Banner: Vriddhi Cinemas

PRO: Yuvraaj

நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி

 *நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் இணையும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது !!*












காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்.  ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது.


இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.


அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார்.  சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும். 


ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து,  இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.


ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் திரைக்கதை நகலை தயாரிப்பாளர்களிடம் வழங்கினர். பாலகிருஷ்ணாவுடன் பல வெற்றி படங்களை இணைந்து வழங்கிய இயக்குநர் B. கோபால் க்ளாப் அடிக்க, பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்தார். முதல் ஷாட்டை போயபாடி ஶ்ரீனு, பாபி, புச்சி பாபு ஆகியோர் இணைந்து இயக்கினர். பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு  சேர்த்தனர்.


மகத்தான மன்னனின் எழுச்சியை போர்க்களமே வணங்கும் தருணம் இது. வரலாற்றை குலுக்கும் இந்த கர்ஜனை புதிய அத்தியாயத்தை எழுத வருகிறது.


மாஸ் எலிவேஷன் மற்றும் அதிரடி கதைக் கட்டமைப்பில் பிரசித்தமான கோபிசந்த் மலினேனி, முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்குகிறார். நந்தமூரி பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் இதுவரை காணாத ஒரு புதிய, ஆச்சரியமான அவதாரத்தில் காட்சிப்படுத்தும் விதமாக,  இந்தக் கதை உருவாகிறது.


சிறப்பு போஸ்டரில், நீண்ட முடி, பூரண தாடி, வாள் மற்றும் நங்கூரத்தைத் தாங்கி, அரச கம்பீரத்துடன் நிற்கும் அதிபதியாக பாலகிருஷ்ணா மிளிருகிறார்.


வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்து,  பிரம்மாண்ட காட்சிகளுடன் ஒரு எபிக் அனுபவத்தை, வழங்கப் போகிறது இந்த படம்.



படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.


நடிகர்கள்:

நந்தமூரி பாலகிருஷ்ணா

நயன்தாரா


தொழில்நுட்ப கலைஞர்கள்:


எழுத்து, இயக்கம்:கோபிசந்த் மலினேனி

தயாரிப்பு: வெங்கட சதீஷ் கிலாரு

வழங்குபவர்: விருத்தி சினிமாஸ்

மக்கள் தொடர்பு - யுவராஜ்






சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு

 *சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!*



ஒவ்வொரு சில வருடங்களுக்கும் உலகளவில் ஒரு திரைப்படம் அதன் வெளியீட்டு தேதியை மட்டும் குறிக்காமல் திரைப்பட உருவாக்கத்திலும் புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தமுறை புதிய மாற்றத்தை காண டிசம்பர் 19 ஆம் தேதி தயாராகுங்கள். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வெளியாவது உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்விற்கான கவுண்ட்டவுன் போல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஒரு புதிய படத்துடன் வரும்போதெல்லாம் பிரம்மாண்டமான கதை சொல்லல், புதிய தொழில்நுட்பம் என சினிமா மொழியையே மாற்றி அமைக்கிறார். 


மற்றவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, ஜேம்ஸ் கேமரூன் அதைக் கண்டுபிடித்தார். ’தி டெர்மினேட்டர்’ மற்றும் ’ஏலியன்ஸி’ன் ஆரம்ப நாட்களிலிருந்தே, ஜேம்ஸ் கேமரூனுக்கு அறிவியலில் அதீத ஆர்வம் இருந்தது. புதிய உலகங்களை கற்பனை செய்வதில் அவர் திருப்தியடையவில்லை, அவற்றை உருவாக்கும் இயந்திரங்களை அவர் விரும்பினார். இந்த உந்துதல் ’டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே’ திரைப்படத்தில் மிகவும் பிரபலமானது. T-1000 ஒரு வில்லன் மட்டுமல்ல, உலகின் முதல் நம்பத்தகுந்த ஃபோட்டோரியல் திரவ-உலோக சிஜிஐ கதாபாத்திரம். நவீன டிஜிட்டல்-எஃபெக்ட்ஸ் சகாப்தத்திற்கு அடித்தளம் அமைத்த ஒரு புதிய சாதனை. அப்போது சோதனை ரீதியாக இருந்தது. பின்னர், கேமரூனின் முயற்சிக்குப் பிறகு பிளாக்பஸ்டர் சினிமாவின் அடிப்படை இலக்கணமாக மாறியது. 


தொழில்நுட்பம் இல்லாதபோது அதை உருவாக்கும் இந்த உள்ளுணர்வு அவரது அடையாளமாக மாறியது. இது ‘அவதார்’ திரைப்பட பிரபஞ்சத்திலும் தெளிவாக பிரதிபலித்தது. ஜேம்ஸ் கேமரூன் பண்டோராவை வடிவமைக்கத் தொடங்கியபோது, தனக்குத் தேவையான கருவிகள் இல்லை என்பதை உணர்ந்தார். எனவே பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மற்றும் கேமரா நிபுணர்களுடன் கூட்டு சேர்ந்து அவற்றை அடித்தளத்திலிருந்து உருவாக்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் திரைப்பட உருவாக்கத்தை மாற்றியமைத்த தொழில்நுட்பங்கள் தோன்றின. முதலாவது, முன்பு பயன்படுத்தப்பட்ட கரடுமுரடான, ஜெர்க்கி பதிப்பாக அல்லாமல் டிஜிட்டல் கதாபாத்திரங்கள் உணர்ச்சி ரீதியாக மனிதனாக உணரும் அளவுக்கு நுண்ணிய வெளிப்பாடுகளை மிகவும் நம்பகத்தன்மையுடன் துல்லியமான, ஆழமாக மறுகற்பனை செய்தது. நடிகர்கள் தலையில் பொருத்தப்பட்ட கேமராக்களை அணிந்திருந்தனர். அவை உணர்ச்சியின் ஒவ்வொரு மாற்றத்தையும் படம்பிடித்தன. திரையில் பார்வையாளர்கள் அனிமேஷனைப் பார்க்காமல் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் யதார்த்தமாக மொழிபெயர்க்கப்பட்ட மனித செயல்திறனை கண்டு களித்தனர். 


ஆனால் கேமரூன் அதோடு நிற்கவில்லை. உண்மையாக இல்லாத ஒரு உலகத்திற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட சினிமா சார்ந்த கருவிகள் அவருக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவர் மெய்நிகர் கேமராவை (Virtual Camera) கண்டுபிடித்தார். இது ஒரு உண்மையான செட்டில், ஒரு கேமராவை வைத்திருப்பது போல் ஒரு சிஜி சூழலுக்குள் நடக்க அனுமதிக்கும் சாதனம். இது புதிய திரைப்படத் தயாரிப்பு மொழியை உருவாக்கியது. ஒரு இயக்குநர் ரெண்டர் செய்யப்பட்ட காட்சிகளைக் காண பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அவர் அவற்றை உடனடியாக பார்க்க முடியும். அதன் பிறகு அவர் சிமுல்-கேமை (Simul-Cam) உருவாக்கினார். நேரடி-செயல் புகைப்படத்தை மானிட்டரில் உள்ள மெய்நிகர் சூழல்களுடன் இணைத்தார். அத்தகைய தொழில்நுட்பத்தை யாரும் பயன்படுத்தாத நேரத்தில், ஜேம்ஸ் கேமரூன் சாதாரணமாக இதை உருவாக்கிக் காட்டினார்.


இதன் விளைவாக, ’அவதார்’ திரைப்படம் கடந்த 2009-ல் திரைப்படம் வெளியானது. இது உலக சினிமாவில் கதையாக மட்டுமல்லாது, அதன் பின்னணியில் உள்ள இயந்திரங்களாலும் புரட்சியை ஏற்படுத்தியது. ஜேம்ஸ் கேமரூனின் புதிய ஃபியூஷன் 3D கேமரா ரிக்குகள் ஸ்டீரியோஸ்கோபிக் திரைப்படத் தயாரிப்பிற்கான தரத்தை அமைத்தன. ஒரு கதையை ஆழம், பிரகாசம், வண்ணத் துல்லியம் மற்றும் ஈடுபாட்டுடன் பார்வையாளர்கள் உணர்ந்த விதம் முற்றிலும் மாறியது. 3டி ஒரே இரவில் வந்து போகவில்லை, அது சினிமாவின் எதிர்காலமாக மாறியது.


இருப்பினும், ஜேம்ஸ் கேமரூன் சினிமா துறை மீது மட்டும் அக்கறை கொள்ளவில்லை. அவர் நாம் வாழும் புவி மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். டைட்டானிக்கிற்காக, கப்பல் விபத்துக்குள்ளான பகுதிகளைப் படம்பிடித்து அதிநவீன ஆழ்கடல் கேமரா அமைப்புகளுக்கு முன்னோடியாக அவர் உதவினார். கடல் மீதான அவரது ஈர்ப்பு இறுதியில் டீப்சீ சேலஞ்சரை உருவாக்க வழிவகுத்தது. 2012 ஆம் ஆண்டில் பூமியின் மிக ஆழமான பகுதிகளில் ஒன்றான மரியானா அகழியில் கேமரூன் தனியாக இறங்கினார். இது உலகளாவிய கடல் ஆராய்ச்சியை முன்னோக்கி நகர்த்திய தரவு, படங்கள் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவுகளில் பங்களித்தது.


‘அவதார்’ திரைப்படம் சினிமா மேக்கிங்கை மறுவடிவமைப்பு செய்திருந்தால், ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் மற்றொரு எல்லையை உடைத்தது. அதாவது, நீருக்கடியிலான படப்பிடிப்பு. இதற்கு முன்பு யாரும் அதைச் செய்ததில்லை. நீரின் தன்மையும், ஒளி சிதறல்களும் படப்பிடிப்பை கணிக்க முடியாதபடி சிதறடிக்கும். மேலும் மோஷன் கேப்சர் கேமராக்கள் அளவுத்திருத்தத்தை இழக்கின்றன. கேமரூனும் அவரது குழுவும் பல ஆண்டுகளாக புதிய அமைப்புகள், புதிய ஒளியியல் மற்றும் நீருக்கடியில் இயக்கத்தை டிகோட் செய்ய புதிய இயந்திர கற்றல் கருவிகளை வடிவமைக்கச் செலவிட்டனர். இதன் விளைவாக யதார்த்தம் மற்றும் தத்ரூபமான உணர்வுகளுடன் நீருக்கடியில் நகரும் உலகின் முதல் டிஜிட்டல் கதாபாத்திரம் கிடைத்தது. நடிகர்கள் பல மாதங்களாக பயிற்சி பெற்றனர். மேலும் கேட் வின்ஸ்லெட் ஏழு நிமிடங்களுக்கும் மேலாக மூச்சைப் பிடித்துக் கொள்வதில் தேர்ச்சி பெற்றார்.


’அவதார்’ படத்தின் சீக்வலுக்காக ஏஐ-யால் இயக்கப்படும் ஃபேசியல் ரீடார்கெட்டிங்கை கேமரூன் முன்னெடுத்தார். இதனால் டிஜிட்டல் நவி கதாபாத்திரங்கள் சிக்கலான மனித உணர்வுகளை முகத்தில் கொண்டு வந்தது. சினிமா கதை சொல்லலில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் தெளிவு, ஆழம் ஆகியவற்றையும் நவீன தொழில்நுட்பத்துடன் அவர் செம்மைப்படுத்தினார். இந்த புதுமைகளால் ஜேம்ஸ் கேமரூன் எதிர்காலத்திலிருந்து கடன் வாங்குவதில்லை, அவர் அதை உருவாக்குகிறார்.


அதனால்தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்தத் திரைப்படம் வெறும் சீக்வல் மட்டுமல்ல சினிமாவில் தொழில்நுட்பத்தில் அடுத்தக்கட்ட நகர்வு எனலாம். படத்தின் கதைக்காக மட்டுமல்லாது மற்றொரு தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காகவும், உலகம் இதுவரை கண்டிராத ஒன்றுக்காகவும், விரைவில் வழக்கமான ஒன்றாகவும் மாற இருப்பதற்காகவும் ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஜேம்ஸ் கேமரூன் சினிமாவை மாற்றியமைத்த, அறிவியல் ஆய்வை மாற்றியமைத்த மற்றும் மனித கற்பனையை விரிவுபடுத்திய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். 


‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் மூலம், அவர் அதை மீண்டும் செய்யத் தயாராகி இருக்கிறார்.

Building Innovation and Spectacle: Here is how Cinema's Maestro James Cameron Redefined Movie-Making

 Building Innovation and Spectacle: Here is how Cinema's Maestro James Cameron Redefined Movie-Making



Every few years, global cinema witnesses a moment that doesn’t just mark a release date, it marks a shift in the evolution of filmmaking. 19th December promises exactly that. As James Cameron’s Avatar: Fire and Ash prepares to open worldwide, the anticipation feels less like the build-up to a movie and more like the countdown to a global technological event. For decades, whenever James Cameron arrives with a new film, the world braces itself because he never simply tells a story. He changes the tools, the techniques, and the very language of the medium itself.


And that is the remarkable truth about James Cameron: while others use technology, James Cameron invents it.


From the early days of The Terminator and Aliens, filmmakers knew James Cameron had a distinct relationship with science. He wasn’t content with imagining new worlds; he wanted the machinery to build them. This impulse crystallised most famously in Terminator 2: Judgment Day. The T-1000 wasn’t just a villain, it was the world’s first convincing photoreal liquid-metal CGI character, a groundbreaking achievement that laid the foundation for the modern digital-effects era. What then was experimental became, under Cameron’s overarching vision, the baseline grammar of blockbuster cinema.


This instinct to create technology when it doesn’t exist became his signature. And nowhere is that more evident than in the universe of Avatar.


When James Cameron began shaping Pandora, he realised the tools he required simply weren’t present. So he partnered with engineers, scientists, software designers, and camera specialists to construct them from the ground up. Out of this period emerged technologies that transformed filmmaking forever. The first was performance capture reimagined not the rough, jerky version used earlier, but a precise, deeply layered system capable of reading micro-expressions so authentically that digital characters felt emotionally human. Actors wore head-mounted cameras that captured every twitch, every flicker, every shift in emotion. What audiences experienced on screen wasn’t animation, it was human performance translated into a new digital reality.


But Cameron did not stop there. Traditional directing tools weren’t enough for a world that didn’t physically exist, so he invented the Virtual Camera, a device that allowed him to walk inside a CG environment as though holding a real camera on a real set. It created a new filmmaking language, one where a director didn’t have to wait months to see rendered shots; he could compose them instantly, in real time. Soon after, he developed the Simul-Cam, merging live-action photography with virtual environments on the monitor itself. At a time when no one had used such technology, James Cameron casually rebuilt the playbook.


The outcome was Avatar (2009), a film that revolutionised global cinema not just because of its story but because of the machinery behind it. James Cameron’s new Fusion 3D camera rigs set a standard for stereoscopic filmmaking that remains unmatched. The way audiences perceived depth, brightness, colour accuracy, and immersion fundamentally shifted. Overnight, 3D was no longer a gimmick; it became the future.


Yet James Cameron’s legacy stretches far beyond cinema screens. His pursuit of realism extends to the deepest corners of the planet. For Titanic, he helped pioneer state-of-the-art deep-ocean camera systems, capturing areas of the shipwreck never seen before. His fascination with the ocean eventually led to the creation of the Deepsea Challenger, an ultra-light, one-man submersible engineered to withstand unimaginable pressure. In 2012, Cameron descended alone into the Mariana Trench, one of the deepest points on Earth contributing data, imagery, and technological insights that pushed forward global oceanic research.


If Avatar reshaped filmmaking, Avatar: The Way of Water broke another frontier: underwater performance capture. No one had ever done it. The physics of water make capture markers unreadable, light scatters unpredictably, and motion capture cameras lose calibration. Cameron and his team spent years engineering new systems, new optics, and new machine-learning tools to decode underwater movement. The result was a world-first digital character moving underwater with fluidity, realism, and emotional coherence. Actors trained for months, and Kate Winslet famously mastered breath-holding for over seven minutes, proving Cameron’s rule: the craft evolves only when the technology rises to meet it.


For the Avatar sequels, Cameron also pushed advances in AI-driven facial retargeting, allowing digital Na’vi characters to mirror complex human expressions without loss. He refined high-frame-rate storytelling, using it selectively within sequences for clarity, depth, and heightened immersion without compromising cinematic warmth.


Across these innovations lies one truth: James Cameron does not borrow from the future; he builds it.


And that is why the world’s eyes are locked on 19th December. Avatar: Fire and Ash is not just another instalment in a beloved saga it is the next chapter in a legacy of invention. Every time Cameron steps forward, cinema takes a leap with him. The expectation is not only for a breathtaking story, but for yet another technological breakthrough, something the world has never seen, and will soon consider the new normal.


James Cameron has introduced technologies that changed cinema, transformed scientific exploration, and expanded human imagination.


With Avatar: Fire and Ash, he is preparing to do it once more.

IFFI 2025: Aakkaatti Bags the ‘Best Film Recognition Award’

 IFFI 2025: Aakkaatti Bags the ‘Best Film Recognition Award’








The Tamil feature film Aakkaatti has been honoured with the “Best Film Recognition Award” under the WAVES Film Bazaar section at the 56th International Film Festival of India (IFFI) in Goa.

Director Jai Laxmii, Co-producer Sunil Kumar, Sound Designer Hari Prasad, and Casting Director Sugumar Shanmugam attended the ceremony and received the award in person.


Set in rural South Tamil Nadu, Aakkaatti delves into the cultural tradition of Thaaymaman Seer Varisai (the maternal uncle’s ceremonial responsibilities). The film sensitively portrays how such customs shape emotional and social pressures, revealing the fragile human emotions that unfold within these age-old practices.


Director Jai Laxmii, making her feature debut with Aakkaatti, previously participated in Nalaya Iyakkunar – Season 6, where she was recognised as a finalist for her adapted short-film screenplay.


The film stars Antony, known for his powerful performance in Merkku Thodarchi Malai, alongside Mullaiyarasi in a prominent lead role.


Technical Crew


S. E. Esakki Raja – Cinematographer


Ram Kumar – Editor


Deepan Chakravarthy – Music Composer


Manoj Kumar – Art Director


Bala Jeeva Rathinam – Sync Sound


Sugumar Shanmugam – Casting Director


Sekar Murugan – CG Director


Chandran – Titles & Storyboard


Prem B – Trailer & Promotional Editor


Rathan – Colorist


Pebbles Studio – Hari Prasad M.A. – Sound Design



Adding further depth to the film, celebrated lyricist Karthik Netha has penned two songs for Aakkaatti.


The film has already been submitted to several international film festivals, and the production team has announced that the first-look poster will be released soon, along with more exciting updates.

ஆக்காட்டி – IFFI 2025 இல் ‘சிறந்த திரைப்பட அடையாள விருது’ வென்ற தமிழ் படம்

 *சர்வதேச திரைப்பட விழாவில் ஆக்காட்டி தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்*








*ஆக்காட்டி – IFFI 2025 இல் ‘சிறந்த திரைப்பட அடையாள விருது’ வென்ற தமிழ் படம்*


56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில்  WAVES Film Bazaar பிரிவின் கீழ் "சிறந்த திரைப்பட அடையாள விருதை  ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது." படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.


தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.


ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் முல்லையரசி , சிறுவனாக சுபாஷ் ஆகியோர் கதையின் மாந்தர்களாக நடித்து உள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் S E எசக்கி ராஜா ஒளிப்பதிவாளர், ராம் குமார் எடிட்டர், தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் மனோஜ் குமார்,நேரடி ஒலி வடிவமைப்பாளர் பாலா ஜீவ ரத்தினம்,சுகுமார் சண்முகம் காஸ்டிங் இயக்குநராகவும், சேகர் முருகன் CG கலை இயக்குநராகவும், டைட்டீல் ஸ்டோரிபோர்ட சந்திரன், டிரெய்லர் &புரமோஷன் எடிட்டிங் பிரேம் B,கலரிஸ்ட் ரத்தன் மற்றும் படத்தின் ஒலி வடிவமைப்பை பெப்பிள்ஸ் ஸ்டூடியோ  ஹரி பிரசாத் M.A மேற்கொண்டுள்ளார்.


ஆக்காட்டி திரைப்படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிஞர் கார்த்திக் நேத்தா இரு பாடல்களை எழுதியுள்ளார். 


மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்ப பட்டிருக்கும் ஆக்காட்டி திரைப்படம், விரைவில் நற்செய்தியுடன் முதல் பார்வையை வெளியிடும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.



உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!

 *உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!*







*மும்பை, 26 நவம்பர், 2025:* நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அந்தவகையில்,  குற்ற உணர்வு மற்றும் அப்பாவித்தனம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஸ்டீபன் கேள்வி கேட்கத் துணிகிறார். வெளியாக இருக்கும் தமிழ் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டது. ஒரு மனிதன் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதில்  இருந்து டிரைய்லர் தொடங்குகிறது. நீங்கள் எதை யூகிக்கிறீர்களோ நிச்சயம் அது கதையில் பிரதிபலிக்காது. கதையின் தீவிரத்தை இசை மேலும் அதிகமாக்கும். 


அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்டீபன்' கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸின்  துணிச்சலான, மாறுபட்ட இந்திய கதைகள் பட்டியலில் இந்தப் படமும் இணைகிறது. 


முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி கோமதி ஷங்கர் பகிர்ந்து கொண்டதாவது, "என்னுடைய முதல் படம் இதைவிட சிறப்பானதாக அமைய முடியாது! ஸ்டீபன் வழக்கமான கதாநாயகன் கிடையாது. பல அடுக்குகள் கொண்ட, கணிக்க முடியாத, உங்களை யோசிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது சவாலானதாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. படத்தின் கதையை இணைந்து எழுதியிருப்பதால் அந்த கதாபாத்திரமாக மாறுவது இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தது. இந்த கடினமான கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த இயக்குநர் மிதுனுக்கும் உலகப் பார்வையாளர்கள் மத்தியில் என்னுடைய திறமையை காட்டுவதற்கு களம் அமைத்து கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கும் நன்றி. என்னுடைய பயணம் நெட்ஃபிலிக்ஸின் 'ஸ்டீபன்' படத்துடன் தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். 


இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, "'ஸ்டீபன்' ஒரு அமைதியான படம். ஆனால், அது குற்றவுணர்ச்சி, நினைவுகள் என பல விஷயங்களை உங்களிடம் பேசும். இந்த கதையை சொல்வது எனக்கு மிகவும் பர்சனல் ஆனால் ரிஸ்க் நிறைந்தது. இதுவே, இந்தக் கதையை சொல்ல என்னைத் தூண்டியது. இந்தக் கதையை நாங்கள் எப்படி கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோமோ அதற்கேற்றவாறு கோமதி தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான என்னை நம்பி வாய்ப்பு கொடுத்து இந்த த்ரில்லர் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க உதவிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி" என்றார். 


குற்ற உணர்வுக்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான இடைவெளி மங்கலாகி, நினைவுகள் மிகவும் மோசமான ஒன்றாகத் திரும்பும்போது கதை எப்படி பயணிக்கிறது என்பதுதான் 'ஸ்டீபன்'.  படத்தில் உள்ள அனைத்தையும் கேள்வி கேட்கத் தயாராகுங்கள்! டிசம்பர் 5 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்குநர் : மிதுன்,

நடிகர்கள் : கோமதி ஷங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்ம்ருதி வெங்கட்,

தயாரிப்பாளர்கள் : ஜெயக்குமார் & மோகன்,

எழுத்தாளர்கள் : மிதுன், கோமதி சங்கர்,

தயாரிப்பு நிறுவனம்: ஜேஎம் புரொடக்‌ஷன் ஹவுஸ்

A Confession Starts It All — Netflix Unveils Trailer for New Tamil Psychological Thriller Movie ‘Stephen

 A Confession Starts It All — Netflix Unveils Trailer for New Tamil Psychological Thriller Movie ‘Stephen’







In a world where reality is often stranger than fiction, Stephen dares to question everything you think you know about guilt and innocence. Netflix unveiled the trailer today for the upcoming Tamil psychological thriller, beginning with a man who walks into a police station and confesses to murder — only for the story to spiral into something far more unsettling. In this gripping tale, nothing is what it seems, and the suspenseful score intensifies the film’s mounting sense of unease. 


Directed by debutant Mithun Balaji and introducing Gomathi Shankar in his first leading role, Stephen is a tense, character-driven thriller exploring guilt, morality, and the blurred lines between right and wrong. The film adds to the robust slate of bold, diverse Indian stories and genres Netflix has released this year. 


Talking about stepping into his first lead role, Gomathi Shankar says, “This is my very first film, and it can't  get better than this! Stephen isn’t your usual lead - he’s layered, unpredictable, and always keeps you guessing. Stepping into his world was exciting, challenging, and satisfying. Co-Writing the film made it a tad bit easier to adapt. I owe a lot to my director, Mithun for trusting me with such a complex role and guiding me through it and Netflix for offering a global stage for us to showcase our talent. I’m so glad my journey begins with a film and character like Stephen, streaming on a global platform like Netflix.”


Director Mithun Balaji added,“Stephen is a quiet film, but it says a lot — about guilt, memory, and everything that lingers in between. Telling this story felt both personal and risky, and that’s what made it exciting. Gomathi brought such an honest energy to the role, which really helped shape the world we were trying to build. I’m grateful to Netflix for trusting a first-time filmmaker and helping us create this thriller for audiences across the world.”


As the lines between guilt and innocence blur, and memories twist into something more sinister, the film evolves beyond being a whodunnit into a why-dunnit. Prepare to question everything in Stephen, streaming on December 5, only on Netflix.


CREDITS

Director : Mithun 

Cast : Gomathi Shankar, Michael Thangadurai, Smruthi Venkat

Producers : Jayakumar & Mohan

Writers : Mithun, Gomathi Shankar

Production Company: JM Production House

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !!

 கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !! 







Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில்,  நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்.., 


நடிகர், ரேடியோ ஜாக்கி, பிளேடு சங்கர் பேசியதாவது..,  

இது நமது படம், என் நண்பன் படம், கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட் மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக்கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார், ஆனால் அவருக்கு தேவையானதைச் சரியாக எடுத்துக்கொள்வார். இப்படத்தில் நான் கீர்த்தி சுரேஷின் அக்கா கணவராக நடித்துள்ளேன். அவர் சாதாரணமாக இந்த ஸ்டேஜுக்கு வரவில்லை. ஒரு காட்சிக்கு இப்படி பண்ணலாமா ?, அப்படி பண்ணலாமா?, என உழைத்துக்கொண்டே இருப்பார். ராதிகா மேடமிடம் ஒரு காட்சியில் செம்மையாக அடி வாங்கியிருக்கிறேன். இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


நடிகர் அகஸ்டின் பேசியதாவது..,

மேடையில் இருப்பது இது தான் முதல் முறை. The Route நிறுவனத்தின்  ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios  சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. இந்தப்படம் செம்ம ஜாலியாக எடுத்தார்கள், நானும் செண்ட்ராயன் அண்ணாவும் நடிக்கும் போது, டைரக்டர் பயங்கர டென்ஷனாக இருப்பார். ஆனால் போகப் போக ஈஸியாகிவிட்டார். கீர்த்தி மேடம் எல்லோரையும் சரிசமமாகப் பார்ப்பார், அது எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து ஒரு நல்ல படத்தைத் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் சஞ்சீவ் பேசியதாவது..,

எல்லோருக்கும் நன்றி. இந்தப்படத்தில் டேனி என ஒரு சுவாரஸ்யமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன். கீர்த்தி சுரேஷ் ரொம்ப ஜாலியாக எங்களுடன் வேலை பார்த்தார். இப்படம் The Route நிறுவனத்தின்  ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios  சுதன் சுந்தரம் இருவருக்கும் நல்ல வெற்றியைத் தரும். அனைவருக்கும் நன்றி. 


நடிகர் கதிரவன் பேசியதாவது.., 

இந்த படத்தின் ஒன் லைனை சந்துரு சார் சொன்ன போதே, இந்தக்கதை எப்படிச் செய்தாலும் வெற்றி பெறும் எனச் சொன்னேன். அவருடன் நான் நிறைய வேலைபார்த்துள்ளேன். இப்படத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம், கீர்த்தி மேடம், சந்துரு அனைவருக்கும் நன்றி. நான் என் திரை வாழ்க்கையில் நிறைய பேரைப் பார்த்துள்ளேன், ஆனால் கீர்த்தி மேடம் நிறைய ஸ்பேஸ் தந்தார். இந்தப்படம் ஒரு ரோலர்கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும். அனைவருக்கும் நன்றி. 


நடிகை அக்‌ஷிதா அஜித் பேசியதாவது.., 

ரிவால்வர் ரீட்டா என் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்ஸ்டோன். இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்கள்  ஜகதீஷ் பழனிச்சாமி, சுதன் சுந்தரம், இயக்குநர் சந்துரு சார் அனைவருக்கும் நன்றி. கீர்த்தி மேடம் மிகவும் ஃபர்ண்ட்லியாக, இயல்பாக பழகினார். என்னுடன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது..,

ரிவால்வர் ரீட்டா ஒரு பிரம்மாண்டமான படம், மிக அழகாகப் படத்தை இயக்குநர் எடுத்துள்ளார். நவம்பர் 28 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள். படத்தில் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்தார்கள். கீர்த்தி மேடம் மிக இயல்பாக பழகினார். இந்தப்படத்தில் சூப்பராக கார் ஓட்டியுள்ளார். அந்த காட்சிகள் சூப்பராக வந்துள்ளது. எனக்கு தா குமார் என ஒரு கதாப்பாத்திரம்,  படம் சூப்பராக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல ரோல் தந்த இயக்குநருக்கு நன்றி. 


இயக்குநர் JK சந்துரு பேசியதாவது..,

The Route ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி.  ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை நம்பி, பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கீர்த்தி மேடமுக்கு நன்றி. கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது, ஆனால் அவர் எனக்குக் கதை பிடித்துள்ளது எனச் சொன்னார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார். திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்ட கால நண்பர் சூப்பராக செய்துள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்த படத்தில் பேசப்படும். செய்து தந்தார். கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார், அவருக்கு நன்றி. ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய ரோல் சூப்பராக இருக்கும். சுனில் சார், அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள்  எல்லோருமே   நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு ஜாலியாக  பார்க்கலாம். அனைவருக்கும் நன்றி. 


நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது.., 

ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார். அவர் முதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. The Route நிறுவனத்தின்  ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios  சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. அவர்கள் தான் இந்த புராஜக்டை டிசைன் செய்தார்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் உடன் முன்பே வேலை பார்த்துள்ளேன், அவர் இப்படத்தை அழகாக ஷீட் செய்துள்ளார். ஷான் நல்ல இசை தந்துள்ளார், அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கலை இயக்குநர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி. ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன், அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன் , அவருடன் நடித்த   காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். என் உடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். கதிர் சார், செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம், எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசியுங்கள் நன்றி. 


சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இப்படம் The Route நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும் அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. 


நடிகை  கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார்,  சூப்பர் சுப்பராயன், சுனில்,  அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன்,

அகஸ்டின், பிளேடு சங்கர்,  ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 


இத்திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக  The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 28  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


தொழில் நுட்ப குழு 


இயக்கம் - JK சந்துரு 

ஒளிப்பதிவாளர் -  தினேஷ் கிருஷ்ணன் B 

எடிட்டிங் -  பிரவீன் KL 

கலை இயக்கம் - MKT 

ஸ்டண்ட் - திலீப் சுப்பராயன் 

நிர்வாக தயாரிப்பாளர் - வீர சங்கர் 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் - ஐஸ்வர்யா சுரேஷ்

தயாரிப்பாளர்கள் - சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி 

தயாரிப்பு நிறுவனம் -  The Route & Passion Studios

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு

 துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " 


துப்பறிவாளர் சிவகுமார் நாயர் தயாரித்து இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " 


சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன் (Silvar Thuch India Productions )

என்ற பட நிறுவனம் சார்பில் துப்பறிவாளரும் பிரபல நாவல் ஆசிரியருமான சிவகுமார் நாயர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு " தீர்ப்பு " என்று பெயர் வைத்துள்ளார்.


இந்த படத்திற்கு மோகன்ராம் இசையமைக்க, பாடல்களை அகஸ்டின் எழுதுகிறார். லோகநாதன் சீனிவாசன் ஒளிபதிவை மேற்கொள்ள, ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்கிறார்.

கலை இயக்குனர் T. K. தினேஷ்

விளம்பர வடிவமைப்பு - அகிலன்


பல விருதுகளைப் பெற்ற பிரபல எடிட்டரும், எழுத்தாளருமான பீம்சிங் லெனின் அவர்களின் மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இணை எடிட்டிங் - K.மாருதி


நடிகர்,நடிகைகள்,தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.


படம் பற்றி இயக்குனர் சிவகுமார் நாயர் கூறியதாவது..


இந்தப் படத்தை முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் கலந்த க்ரைம் திரில்லராக உருவாக்க இருக்கிறோம்.


இயக்குனர் சிவகுமார் நாயர் எழுத்தாளர் மற்றும்  துப்பறியும் சேவை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கிரைம் திரில்லர் படம்  நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


சென்னை மற்றும் அட்டப்பாடி, ஊட்டி கொடைக்கானல் போன்ற  இடங்களில் படப்பிடிப்பு

நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சிவகுமார் நாயர்.

Cinema Tour Entertainment மற்றும் B Square Entertainment இணைந்து தயாரிக்கும்

 Cinema Tour Entertainment  மற்றும் B Square Entertainment இணைந்து தயாரிக்கும்

Production no:1 இத்திரப்படத்தை தயாரிப்பாளர் சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன் & ஆனந்த் என்ற இரு இயக்குனர்கள் இணைந்து இயக்குகின்றனர்.


















இப்படத்தினை பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் Clap அடித்து துவங்கி வைத்தார்.


இத்திரைப்படம்

இரண்டு கதாநாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது.

இப்படத்தில்

சந்தோஷ் பிரதாப் மற்றும்

'அப்புச்சி கிராமம்' படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் படத்தின் தயாரிப்பளாரான சூர்யாதேவியும் நடிக்கவுள்ளார். இன்னொருவர் விரைவில் தேர்வு செய்யபடவுள்ளார்.

மேலும் ஜெயபிரகாஷ் , வினோதினி, விஜய் டிவி புகழ் தீபா, சாய் தீனா, கல்லூரி வினோத்,  ஆதித்யா டீவி கதிர், மதன், நான் மகான் அல்ல படத்தில் நடித்த மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.


தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவாளர் ஸ்ரீவேனுவாசன்

இசையமைப்பாளர் : சாம்சன்

படத்தொகுப்பு :

பிரேம் குமார்

ஸ்டண்ட் : டிராகன் சிங் லீ

ஆர்ட் : விக்கி

மேனேஜர் : RK

எக்ஸ்கியூட்டிவ் ப்ரொடியூசர் : சாய் சரவணாஜி

மக்கள் தொடர்பு :

இரா.குமரேசன்


இத்திரைப்படம் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு மற்றும் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது. இப்படம் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.