Featured post

சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

 *"சிறை"  திரைப்பட  முன் வெளியீட்டு விழா !!* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் ...

Tuesday, 23 December 2025

சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

 *"சிறை"  திரைப்பட  முன் வெளியீட்டு விழா !!*










செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”


வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில்,  பட  வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். 


இந்நிகழ்வில்..


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,


முதலில் திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் அவரிடம் இரண்டு வருடங்களாக பேச வில்லை, ஆனால் நான் அழைத்தவுடன் எனக்காக நான் இல்லாமல் விழா நடக்குமா எனக் கேட்டு வந்தார். எஸ் ஏ சி சாரை  சுப்பிரமணி அண்ணன் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது அவரது குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன். கலைப்புலி தாணு, அம்மா சிவா, சுரேஷ் காமாட்சி என அனைவருக்கும் நன்றி.


சிறை ஒரு நிறைவான அனுபவம். முதன் முதலில் கதை கேட்ட போது, இயக்குநர் தமிழ் ஒரு ஒன் லைன் இருக்கிறது என்றார். அவர் சொல்லி முடித்தவுடன் இதில் என் பையனை நடிக்க வைக்கலாமா ? எனக்கேட்டேன், அவர் யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இல்லை எனக்கு வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும் என் பையன் இந்த மாதிரி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்றேன். பின் அவர் இயக்க முடியாத சூழலில் யாரை இயக்குநராக்கலாம் என்றபோது, சுரேஷை பரிந்துரைத்தார். வெற்றிமாறன் சாரிடம் கேட்டோம் தாராளமாகச் செய்யுங்கள் என வாழ்த்தினார். அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என்ற போது, தமிழ் விக்ரம் பிரபு மட்டும் தான் இதற்குப் பொருத்தமானவர் என்றார். எடிட்டிங் பணிகளுக்கு பிலோமின் ராஜ் தான் வேண்டும் என்றேன், அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். மியூசிக் முதற்கொண்டு பிலோமின் மேற்பார்வையில் விட்டுவிட்டேன், இப்படத்தைத் தூக்கி நிறுத்தியது பிலோமின் தான். மாதேஷ் கேமரா அருமையாக செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியில் தெரிய ஒரே காரணம் விஜய் சார் தான். அவர் படம் மாஸ்டர் லியோ தான் எங்களுக்கு அடையாளம் அதை மறக்கவே மாட்டேன். இந்தப்படத்தை நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பீர்கள் எனத் தெரியும் அனைவருக்கும் நன்றி.


இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது..,

 

இந்த புராஜக்டில் இருப்பது எனக்கு பெருமை. பிலோமின் தான் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தார். இயக்குநர் சுரேஷிடம் நான் இல்லாவிட்டாலும் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனச் சொன்னேன். அவ்வளவு அருமையான கதை. இந்தப்படத்திற்கு உயிர் தந்தது நடிகர்கள் தான். விக்ரம் பிரபு, அனந்தா அக்‌ஷய் குமார் எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த என் இசைக் கலைஞர்களுக்கு என் நன்றிகள், முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு என் நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.


நடிகை ஆனந்தா பேசியதாவது..,

 

சிறை என் முதல் படம், எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. நான் விக்ரம் பிரபு சார் ஜோடியாக நடித்துள்ளேன். எனக்கு வாய்ப்பு தந்த லலித் குமார் சார், சுரேஷ் சார் எல்லோருக்கும் நன்றி. நான் திரைக்குடும்பம் இல்லை. நான் ஆசையில் தான் இந்தப்பட ஆடிஷன் சென்றேன். தமிழ் சார் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு என் நன்றி. ஒரு கனவு நனவானது போல இருக்கிறது அனைவருக்கும் நன்றி.


நடிகை அனிஷ்மா பேசியதாவது..,



இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த சுரேஷ் சாருக்கு, லலித் சாருக்கு நன்றி. விக்ரம் பிரபு சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அக்‌ஷய் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். இப்போது நல்ல நண்பராகி விட்டார். இருவருக்கும் மதுரை சென்றது ஒரு ஸ்கூல் போன மாதிரி இருந்தது. சூரி சார் தான் எங்களை வழிநடத்தினார். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.


இயக்குநர் தமிழ் பேசியதாவது..,

 

நன்றி சொல்லத்தான் இந்த மேடைக்கு வந்துள்ளேன். பிலோமின் தான் லலித் சாரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் ஆனால் அவர் வெற்றிமாறன் படம் மாதிரி வேண்டும் என்றார். ஒரு ஒன்லைன் இருக்கிறது என்று உண்மை சம்பவமாகத் தான் இந்தக் கதை பற்றிச் சொன்னேன். இந்தக்கதையை நாம் செய்வோம் என்றார். அதன் பிறகு சுரேஷ் சார் வந்தார் வெற்றிமாறன் உதவியாளர் என்றால் ஓகே என்று லலித் சார் சொன்னார்.  நம் எழுதிய கதையை நாமே பார்த்து அழ வைப்பது மிகப்பெரிய விசயம், அதை சுரேஷ் சார் செய்துள்ளார். நாம் போய் கதை சொன்னால் கதை கேட்க ஒருத்தர் இருக்கிறார் என விக்ரம் பிரபு  சாரிடம் போனேன், அவரும் கதை கேட்டு செய்கிறேன் என்றேன். இந்தக்கதை உண்மை சம்பவம். உண்மையானவர்களைப் பார்த்த ஒரே ஆள் நான் தான், ஆனால் அவர்கள் முகம் மறைந்து இப்போது  அக்‌ஷய், அனிஷா முகம் தான் ஞாபகத்தில் வருகிறது. இதில் எல்லோரும் அவ்வளவு உழைத்தார்கள். பிலோமின்,  மாதேஷ் எல்லோரும் எங்களுடைய குடும்ப டீம்.  என்னை வடிவமைத்தவர் வெற்றிமாறன் சார் தான். விசாரணை ஷீட்டிங்கில் ஏதாவது கதை வைத்திருக்கிறாயா? என்றார். நான் டபுள் ஹீரோ கதை சொன்னேன். உன் பலமே போலீஸ் தான் அதில் உனக்குத் தெரிந்ததை வைத்துக் கதை எழுது என்றார். அப்படி உருவானது தான் டாணாக்காரன், இப்போது சிறை. நான் செய்திருந்தால் கூட இப்படி எடுத்திருக்க மாட்டேன். நான் வெற்றி சார் மாதிரி லாஜிக் பார்ப்பேன் ஆனால் சுரேஷ் மேஜிக்கை செய்து அசத்திவிட்டார். சுரேஷ் சார் என்னை விடச் சிறப்பாகச் செய்து ஜெயித்தது எனக்கு சந்தோசம். படம் ஜெயித்தால் இன்னும் சந்தோசம் நன்றி.


நடிகர் அக்‌ஷய் குமார் பேசியதாவது..,

 

எக்ஸாம் ஹாலுக்கு போனது போல் எல்லாம் மறந்து விட்டது. முதலில் பிலோமின் சாருக்கு நன்றி. அவர் மகனுக்குக் கூட இவ்வளவு செய்திருக்க மாட்டார். மாதேஷ் சாரும் அவர் டீமும் அவ்வளவு எனர்ஜியாக உழைப்பார்கள் அவர்களுக்கு நன்றி. ஜஸ்டின் சார் உங்கள் இசையில் நடித்தது மகிழ்ச்சி. சுரேஷ் சார், தமிழ் சார்,  எந்த நம்பிக்கையில் என்னை நடிக்க வைத்தீர்கள் எனத் தெரியவில்லை, நீங்கள் இது கஷ்டமாக இருக்கும் எனச் சொன்னீர்கள், ஆனால் எல்லாவற்றையும் சொல்லித் தந்தீர்கள் நன்றி. விக்ரம் பிரபு சார் என் முதல் ஷாட்டே உங்களுடன் தான். எனக்கு நிறைய நடிக்க கற்றுத் தந்தீர்கள். நன்றி. சூரி சார் என்னையும், அனிஷாவையும் வீட்டு வேலை செய், சமை என்றெல்லாம் சொன்னார் எதுக்குடா எனத் தோன்றியது, ஆனால் நடிக்கும் போது தான் புரிந்தது. நன்றி. அனிஷா எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கும் தமிழில் அறிமுக படம். வாழ்த்துக்கள். இறுதியாக அப்பா, கண்டிப்பான புரடியூசர். அவர் கண்டிப்பாக இருந்தது எனக்கு உதவியாக இருந்தது. என அம்மா மற்றும் குடும்பத்திற்கு நன்றி. கஷ்டமாக இருந்தாலும் எனக்குப் பிடித்துச் செய்தேன் எல்லோரும் உதவி செய்தார்கள் நன்றி.


இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,

 

சிறை உண்மைக்கதை, உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். தமிழ் என்னிடம் சொல்லும்போது அப்படித்தான் சொன்னார். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே செய்து கொள்ளும் என்பார்கள் இப்படத்திலும் அது தான் நடந்தது. லலித் சார் வெற்றிமாறன் அஸிஸ்டெண்ட் என்றால் ஓகே என்றார், அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஐஸ்டின் எத்தனை சண்டை போட்டாலும் அவர் மிகச்சிறப்பான இசையைத் தருவார். பிலோமின் மிகப்பெரிய உதவியாக இருந்தார். நடிகர்களை கையாள்வது எனக்குக் கஷ்டம் சூரி அதைப்பார்த்துக்கொண்டார்.  மாதேஷ் முதல் அனைத்து கலைஞர்களும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். நடிகர்கள் எல்லோரது பெயரையும் சொல்வது கஷ்டம். எல்லோரும் குறிப்பிட்டு காலகட்டத்தில் முடிக்க பெரும் ஒத்துழைப்பு தந்தனர். விக்ரம் பிரபு சார் கிடைத்தது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். இக்கதாபாத்திரத்திற்காக உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்‌ஷய் கதைக்குள் வந்து, இக்கதாப்பாத்திரத்திற்காக மிக கடினமாக உழைத்தார். உடலை குறைத்து, தாடி மீசை வளர்த்தி, அந்த கதாபாத்திரமாக மாறினார். ஒரு இன்னொசன்ஸ் முகம் தேவைப்பட்டது அனிஷ்மாவிடம் அது இருந்தது, நன்றாக நடித்துள்ளார். அனந்தாவும் அவர் பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார். நான் வீட்டிலிருந்ததை விட வெற்றிமாறன் சாருடன் இருந்தது தான் அதிகம். ரஞ்சித் அண்ணன் தான் என்னை வெற்றிமாறனிடம் அனுப்பினார். அவருக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இந்த படத்திற்குள் ஒரு பொறுப்பு இருக்கிறது அதைச் சரியாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். அந்த பார்வையை எனக்குத் தந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி.  ரொம்ப முக்கியமான படம், நெருக்கமான படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,


தம்பி வெற்றிமாறன் பட்டறையில் தீட்டப்பட்ட இரு திறமைகள் சுரேஷ், தமிழ். இருவரும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் பார்த்தேன் மிக அற்புதமாக உள்ளது. விக்ரம் பிரபு காவலராகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் தந்தையிடம் பெருமையாகச் சொன்னேன். இப்படத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி  விளம்பரம் செய்து வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.


தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசியதாவது..,

 

இந்த வருடம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் தயாரிப்பாளராக ஆக ஆசைப்பட்டதில்லை, இயக்குநராக ஆசைப்பட்டு ஏதோ ஒரு வழியில் தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். என்னை மிக  மரியாதையாக நடத்திய லலித் சாருக்கு என் நன்றி. அக்‌ஷய் சில வருடங்கள் முன் துக்ளக் தர்பார் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார். அவர் மீண்டும் நடிப்பார் என நினைக்கவில்லை. இந்தப்படம் பார்த்துவிட்டேன், சமீபத்தில் ஒரு படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் 2 மணி நேரம் பேசியது இந்தப்படம் தான். லலித் சார் ஆரம்ப காலத்தில் பால் போட்டுக்கொண்டிருந்தார்,  அவர் சொந்த உழைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை பெரிய தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் மிக கண்டிப்பான தெளிவான தயாரிப்பாளர். அவர் ஒரு விசயத்தில் இறங்கினால் கண்டிப்பாக அதை முழுமையான படைப்பாக முடித்துக் கொண்டு வரும் தெளிவு இருந்தால் தான் செய்வார். இந்த வருடத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் என்றால் அது சிறை தான். உங்களுக்கு முழுமையாக முக்கியமான கருத்தை வலுவாக சொல்லி, உங்களைத் திருப்தி படுத்தும் படமாக இருக்கும். யாருமே இதை முதல் இயக்குநரின் படமென சொல்ல முடியாது.  சுரேஷ் அற்புதமாக இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு சாரில் ஆரம்பித்து, ஒவ்வொருவரும் அத்தனை சிறப்பாக நடித்துள்ளனர். முதல் ஃப்ரேமிலேயே இந்தப்படம் உங்களைக் கவர்ந்து விடும். இஸ்லாமிய பெயரை மையப்படுத்தி கடைசியாக வந்த படம் மாநாடு தான், ஆனால் இந்தப்படம் அதைத்தாண்டி ஒரு முக்கிய அம்சத்தைப் பேசும் படமாக வந்துள்ளது. வசூலிலும் இப்படம் ஜெயிக்கும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது..,


சிறை படம் பார்க்கும் வாய்ப்பு லலித் சார் மூலம் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. தமிழை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்து, இந்த கதையை இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ளார் என பெருமையாக இருந்தது. சுரேஷ் எனக்குப் பிடித்த படைப்பாளிகளின் லிஸ்டில் வந்துவிட்டார். விக்ரம் பிரபுவை மிகவும் பிடித்துவிட்டது. அன்னை இல்லம் இனி பிஸியாகிவிடும். வெங்கட்பிரபு  My name is Khan, I am not a terrorist என சொன்ன

ஒன்லைன் தான் மாநாடு படம் செய்யக்காரணமாக இருந்தது. அதைப்போல வலுவான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில் முஸ்லீம் இனத்தவரை கொடுமையாகவே காட்டி வருகிறோம். அதைப்பற்றி அழுத்தமாக இப்படம் பேசுகிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகராக அக்‌ஷய் கிடைத்துள்ளார். இளம் நடிகர்கள் தமிழில் இல்லை அந்தக்குறையை அக்‌ஷய் போக்கவேண்டும். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.


தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது..,

 

இப்படம்  பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், நீங்கள் யார் அஸிஸ்டெண்ட் எனக் கேட்டேன், வெற்றிமாறன் என்றார். உண்மையில் வெற்றிமாறனுக்கு பெருமை சேர்த்துள்ளார். என் பார்வையில் முழுக்க முழுக்க இது இயக்குநரின் படம். சுரேஷ் உழைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். அக்‌ஷய் அடுத்தடுத்து இது போல காதல் படங்கள் செய்ய வேண்டும். விக்ரம் பிரபு பார்த்துப் பிரமிப்பாக இருந்தது. போலீஸாக கம்பீரமாக வாழ்ந்திருக்கிறார். படம் மிக இயல்பாக பிரம்மாதமாக இருந்தது. தயாரிப்பாளர் லலித் மரியாதைக்குரிய நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். சிறை தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்.


இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

 

லலித் எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவு அன்பானவர். கொரோனா காலத்தில் சினிமா மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தது. எல்லோருக்கும் வேலை இல்லை. நான் தாணு சாருக்கு தான் பேசினேன், அவர் 100 முட்டை அரிசி அனுப்புகிறேன் அடுத்து ஒருவருக்கு, போன் செய் என்றார். லலித் சாருக்கு போன் செய்தவுடன் நேரில் வந்து 10 லட்ச ரூபாய் உதவி அளித்தார். அத்தனை அன்பானவர். தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது ஆனால் தயாரிப்பாளர்கள் தான் நன்றாக இல்லை. லலித் சார் மாதிரி எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். சிறை படம் பார்த்தேன். முதல் மூன்று நிமிடங்களில் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது. விக்ரம் பிரபு தமிழில் முக்கியமான ஹீரோவாக வந்துவிடுவார். படம் பார்த்தவுடன் வெற்றிமாறன் படம் போல் இருக்கிறது என்று தோன்றியது. அவர் உதவியாளர் என்றவுடன் மகிழ்ச்சி. வெற்றிமாறனைத் தாண்டி மனித உணர்வுகளைச் சின்ன சின்ன விசயங்களைப் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். தமிழின் முக்கியமான இயக்குநராக வந்துவிடுவார். அக்‌ஷய் எப்படி இப்படி ஒரு ரோல் செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. மிக அற்புதமாக நடித்துள்ளார். முஸ்லீம் பெயரை இந்திய ஒருமைப்பாட்டை அழகாகப் பேசும் படைப்பாக இந்தப்படம் இருக்கிறது. இந்தப்படத்தை யாரும் விளம்பரப் படுத்த தேவையில்லை கண்டிப்பாக வெற்றி பெறும், படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.


இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது…,

 

ஶ்ரீதர் சார் என் மானசீக குரு அதற்குப் பிறகு கவித்துவமான இயக்குநர் பாலுமகேந்திரா, அதற்குப்பிறகு எனக்குப் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திரா சாயல் இல்லாமல் இவர் படம் அதிரடியாக இருக்கும், அவரிடம் 15 வருடம் ஒருத்தர் இருந்துள்ளார் எனில் அவரின் சாயல் இருப்பது ஆச்சரியம் இல்லை. கதையின் கதாப்பாத்திரதை நாம் உருவாக்குகிறோம், அதில் யார் நடித்தாலும் சரியாக இருக்க வேண்டும். அது வெற்றிமாறனிடம் இருக்கும். அவரிடமிருந்து வந்து அருமையான படைப்பை சுரேஷ் தந்துள்ளார். அக்‌ஷய் உங்களுக்கு முதல் படத்தில் நல்ல டீம் கிடைத்துள்ளது. நல்ல ரோல் கிடைத்துள்ளது, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, அதைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர் லலித் எதற்கு செலவு செய்ய வேண்டுமோ அதற்குச் சரியாக செலவு செய்வார். உலகம் முழுக்க தெரியக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். எனக்குக் கல்யாணம் செய்து வைத்தது சிவாஜி சார், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு முதல் படம் நன்றாக அமைந்தது அவருக்கு சமீபமாக நல்ல டீம் கிடைக்கவில்லை என வருத்தம் இருந்தது. இந்தப்படத்தில் கிடைத்தது எனக்கு சந்தோசம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


திருப்பூர் சுப்பிரமணியன் பேசியதாவது..,

 

ஒரு விழாவில் கதாநாயகனாக நடித்தவரை பற்றி ஆஹா ஓஹோ எனப் பேசுவதை விட, எப்போது இயக்குநரின் திறமையைப் பற்றிப் பேசுகிறார்களோ? அது தான் வெற்றிப்படம். இயக்குநரின் திறமையைப் பேசினால் அது வெற்றிப்படமாக இருக்கும். தமிழ் சினிமாவின் வெற்றிகள் குறைந்ததற்குக் காரணம் நடிகர்களின் தலையீடு தான். அவர்கள் தலையிடாமல் இருந்தால் தமிழ் சினிமா இன்னும் பெரிய வெற்றியைத் தரும். லலித் போன் செய்து வாழ்த்த அழைத்தார். படம் பார்த்தேன், நடிகர்கள் எல்லோரும் படத்தின் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளனர். இயக்குநர் அற்புதமாக இயக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். அக்‌ஷய் புதுமுகம் போல தெரியவில்லை அதற்குக் காரணம் இயக்குநர் தான். நல்ல கருத்துள்ள படத்தைத் தந்துள்ளார், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.


நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது..,


சிறை மிகவும் முக்கியமான படம். அக்‌ஷய்க்கு இது பிள்ளையார் சுழி அவருக்கு வாழ்த்துக்கள். நல்லவேளை விசாரணை மாதிரி படம் கிடைக்கவில்லை. நீ மாட்டு சாணி தானே அள்ளினாய், நான் யானை சாணி அள்ளினேன். எல்லாமே அனுபவம் தான். டாணாக்காரன் படம் வெயிலில் உழன்று நடித்த போது, ஜிப்ரானிடம் போன் செய்து எப்படியெல்லாம் மியூசிக் செய்யப் போகிறீர்கள் எனப் பேசினேன். ஆனால் அந்தப்படம் கோவிடால் திரையரங்குக்கு வரவில்லை. இப்போது அதே டாணாக்காரன் டீமுடன் மீண்டும் இப்படம் கிடைத்தது சந்தோசம். உங்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்கு லலித் சாருக்கு நன்றி. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குத் தமிழ் சாருக்கு நன்றி. மாதேஷ் உங்கள் டீமுடன் வேலை பார்த்தது சந்தோசம். அனிஷ்மா, அனந்தா நீங்கள் கொஞ்ச நேரம் வந்தாலும் அட்டகாசமாக நடித்திருக்கிறீர்கள். நான் நடிக்கும் போது, சில காட்சிகளில் எப்படி இசை வரும் என நினைத்தேன். ஜஸ்டின் அற்புதமாகச் செய்துள்ளார். பிலோமின் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து இப்படத்தைச் செய்துள்ளார். நன்றி. சூரிக்கு நன்றி. இன்று இங்கு வந்து படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் பெருமைப்படுகிற டீம் அவர்களுடன் இருப்பது சந்தோசம்.  எல்லோருக்கும் நன்றி.


இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது..,

 

மிக சந்தோசமான மேடை இது. எங்க காலேஜில் இருந்து,  உதவி இயக்குநராக என்னுடன் வந்தவர்களில் ஒருத்தர் சுரேஷ். அவர் வெற்றிமாறனிடம் வேலை பார்ப்பது தெரியும். அவர் சிறை படம் செய்கிறார் என்றவுடன் ஆவலாக இருந்தேன். லலித் சார் பையன் நடித்தது எல்லாம் தெரியாது. படம் பார்த்தேன் அது தந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் முக்கியம். ஒரு கலைஞனாக ஆர்ட்டுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். சுரேஷ் கலைக்கு நேர்மையாக மிக முக்கியமான படத்தைத் தந்துள்ளார். வெற்றி சாரிடம் வேலை பார்த்து அவரிடம் கற்றுக்கொண்டு படம் செய்தாலும், இந்தப்படம் எனக்கு ஆச்சரியம் தந்தது. அந்த மனிதர்களுடன் வாழ்க்கைக்குள் நெருங்கி கூட்டிப்போனது. ஒரு வாழ்க்கையாக அதன் இயல்பைப் பேசியதை முக்கியமாகப் பார்க்கிறேன். எனக்கே கதாநாயகி எப்படியாவது கதாநாயகனுடன் சேர்ந்துவிட வேண்டுமென பதட்டம் வந்துவிட்டது. அட்டகாசமான மேக்கிங் இருந்தது. எடிட்டிங் ரிதமுடன் இருந்தது. ஜஸ்டின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. கலை இயக்குநர் எங்கள் காலேஜ் செட் தான். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். மாதேஷ் ஊரை காட்டிய விதம் அருமை, இந்தப்படத்தில் நெருங்கி பார்க்க முடிந்தது. மிகவும் பிடித்தது. அக்‌ஷய் நன்றாகச் செய்துள்ளார். விக்ரம் பிரபு  இப்படத்தில்  மிகவும் எதார்த்தமாகப்  புதிதாக  நடித்திருந்தார், அவருக்கு வாழ்த்துக்கள். அனிஷ்மா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். தமிழுடைய திரைக்கதை மிக நன்றாக இருந்தது. காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா ? என ஆச்சரியமாக இருந்தது. உண்மைக்கதை எனும் போது ஒத்துக்கொள்ளத் தான்    சுரேஷ் மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன், இப்படத்தை நம்பி எடுத்த லலித் சாருக்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

 

இம்மேடை எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த வருடத்தில் என் உதவியாளராகள் படம் தந்து வருகிறார்கள். சுரேஷ் மாதிரி இயல்பான மிக நிதானமான ஆளைப் பார்க்க முடியாது. நான் செய்வது தவறாக இருந்தாலும், அதை சொல்லும் விதத்தில் அவர்  நேர்மை இருக்கும். மனிதர்களைக் கையாளும் திறமை அவரிடம் உண்டு. அவருக்கு லலித் சார் கார் பரிசு தருகிறார். முதல் படம் எடுக்கும் போது இருக்கும் அழுத்தம் எல்லாத்தையும் விட்டுவிட்டு , மிக இயல்பாக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன் உள்ளது அதைச் சரியாக எடுத்தால் படம் மிகப்பெரிய படமாக வரும் என்றேன். அதைத்தான் ரஞ்சித் பாராட்டினார். ஒரு விசயத்தை பிரச்சனையை அணுகுவதில்,  தீர்ப்பதில், அவருக்கு தனித்திறமை உள்ளது. ஆடுகளம் முடித்தவுடன் வந்து சேர்ந்தவர், என்னுடனே இருந்திருக்கிறார். சிறை படம் பார்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் படம் செய்தால் என்ன தப்பு இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பேன். ஆனால் படம் பார்த்த எல்லோரும் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்கள். படம்  எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிய மகிழ்ச்சி தருகிறது. தமிழுக்கு அவர்  வாழ்க்கையில் போலீஸ் நடைமுறை சார்ந்து நிறைய அனுபவங்கள் இருப்பதால் அது மிகப்பெரிய தாக்கம் கொடுக்கிறது. படத்தில் எடிட் மிக நன்றாக இருந்தது. படத்திற்கு மிக முக்கிய பலமாக மியூசிக் இருந்தது. முதல் ஐந்து நிமிடம் தான் விக்ரம் பிரபு தெரிகிறார் அதன் பிறகு கதாப்பாத்திரம் தான் தெரிகிறது. எல்லா கதாபாத்திரங்களும் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளனர். எல்லாம் ஒன்றாக இணைந்து மிக அழகான படைப்பாக வந்து, நமக்குள் அழுத்தமான கேள்வியைக் கேட்கிறது. அனிஷ்மா சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது. அக்‌ஷய் அந்த கதாபாத்திரத்திற்குள் காணாமல் போயிருக்கிறார். அவர் இயல்பாக நடித்துள்ளார். இத்தனை பேரின் உழைப்பும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. சுரேஷ் எடிட்டரின் உதவி பெரிய பலமாக இருப்பதாகச் சொன்னார், பிலோமின் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இவ்வளவு நாட்களுள் படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, அதை சுரேஷ் சாதித்துள்ளார். இப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியைத் தருவது சந்தோசம். இந்த வாய்ப்பை சுரேஷுக்கு தந்ததற்கு நன்றி. படம் வெளியாகும் முன் கார் தருவதும் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


டாணாக்காரன்  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.


நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.    நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.


 சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில்,  பட  வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.


இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஈழத்து மெல்லிசை மன்னர்" என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ்,


"ஈழத்து மெல்லிசை மன்னர்" என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ்,  தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை  புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார்.  பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள்  ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது.









இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்வில், திருச்சி சிவா (மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:


" நம் தொப்புள்கொடி உறவான ஈழத்து மண்ணிலிருந்து வந்து, இசை உலகையே தன் பக்கம் ஈர்த்த ஒரு மாமனிதரான எம்.பி. பரமேஷ் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழின் பெருமையையும், மெல்லிசையின் இனிமையையும் கட்டிக்காத்தவர். அவரது வரிகளும், குரல் வளமும் அவரது மெட்டுகளும் தொடாத இதயங்கள் இல்லை.


இன்று அவரது குடும்பம் இங்கே ஒன்றுகூடியிருப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. 


அவர், 60 வருடகாலம் கலையுலகில், அதுவும் இசைத்துறையில் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல; அது ஒரு தவம்.


எம்.பி. பரமேஷ் அவர்கள் இன்னும் நூறாண்டுகள் கடந்து தனது இசைச் சேவையைத் தொடர வேண்டும் " என்றார். 


தனது இசையால் தன் காதலி சிவமாலினியின்  மனதை களவெடுத்த கள்ளன் இந்த m.p. பரமேஷ் என்று புன்னகையுடன் சொன்னார். 


இந்த தம்பதிகளின் இசை வாரிசான மகள் பிரபாலினியின் பேச்சையும், பாடியதையும் சொல்லி பாராட்டினார், ஒவ்வொரு தாய் தந்தையினருங்கும் இப்படி ஒரு மகள் தேவை என்று பாராட்டினார். 


தொடர்ந்து இந்தித் திரைப்பட பாடல்களும் தனக்குப் பிடிக்கும் என்றார். கூட்டத்துக்கு வந்திருந்த பலர், அவரை இந்தி பாடல் பாடும்படி கூறினர்.  


அவர், "தமிழர்களான நாம் கலை என்று வந்துவிட்டால் மொழி பார்ப்பதில்லை. 

லதா மங்கேஸ்கர் உள்ளிட்ட இந்தி கலைஞர்களை நான் அங்கீகரிக்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் நமது பி.சுசீலா என்கிற அற்புத பாடகியை அவர்கள் ஏற்பதில்லை" என்றார்.


தொடர்ந்து, கொடிமலர் படத்தில், எம்.எஸ்.வி. இசையில்  .பி. சீனிவாஸ் பாடிய "மவுனமே பார்வையாய்.." என்ற பாடலை பாடி அசத்தினார் திருச்சி சிவா.



இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது:


"  'ஈழத்து மெல்லிசை மன்னர்' எம்.பி. பரமேஷ் ஐயா அவர்களின் இசைப் பயணம் ஒரு மண்ணின் இசை வரலாறு.  பொதுவாக ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் ஒரு பத்தாண்டுகள் புகழுடன் இருப்பதே பெரிய விஷயம். ஆனால், தொடர்ந்து அறுபது ஆண்டுகள் இசையோடு பயணிப்பது என்பது சாதாரணமானதல்ல. 


இன்றைய நவீன காலத்தில் இசை எவ்வளவு மாறினாலும், மெல்லிசையையும் ராகங்களையும் அடிப்படையாகக் கொண்ட இசை எப்போதும் அழிவதில்லை. அந்த இசையைக் கட்டிக்காக்கும் ஒரு தூணாகப் பரமேஷ் ஐயா விளங்குகிறார். 


இந்த முப்பெரும் விழாவை இவ்வளவு நேர்த்தியாக ஏற்பாடு செய்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாகப் பிரபாலினி பிரபாகரன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்."



இலங்கையின் மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் பேசியதாவது:

"இலங்கையின் ஒரு சிறிய கிராமத்தில், இசையின் மீது கொண்ட காதலால் எனது பயணத்தைத் தொடங்கினேன்.  காலச் சூழலால் புலம்பெயர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்குச் சென்றாலும், என் தமிழ் இசையை நான் ஒருபோதும் கைவிடவில்லை. 


இன்று  மதிப்பிற்குரிய திருச்சி சிவா அவர்கள், இயக்குனர் திரு.சீனு ராமசாமி மற்றும் இவ்வளவு திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் எனது அறுபது ஆண்டுச் சேவையைக் கௌரவிப்பது எனக்குப் பெரும் நெகிழ்ச்சியைத் தருகிறது. 


இந்த முப்பெரும் விழா நடப்பதற்குக் காரணமான எனது குடும்பத்தினருக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.."


பிரபாலினி பிரபாகரன் பேசியதாவது:

  

"இந்த மேடையில் இன்று எனது தந்தை அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகளாக எனக்குப் பெருமையாகவும்,  மிகுந்த நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதையும் இசைக்காகவே அர்ப்பணிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். 


அவர் எப்போதுமே தன்னைத் தற்காலத்திற்கு ஏற்ப புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அதனால்தான், இன்று இந்தப் பொற்காலத்திலும் 'நவீனப் பாடல்களை அவரால் உருவாக்க முடிந்தது.


எனது தாத்தாவுன் நினைவு மலரை மறுபதிவு செய்துருக்கிறார் எனது அப்பா. அப்பாவின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தை பாராட்ட நானும் என் சகோதர்ர்களும் சேர்ந்து இன்று இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.


இந்த விழாவிற்கு அழைத்தவுடன், மிகுந்த அன்புடன் இசைந்து வந்து, எங்களை வாழ்த்திய மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்களுக்கும், எனது அன்பிற்குரிய இயக்குநர் திரு சீனு ராமசாமி அவர்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.  


அப்பாவை எப்போதுமே ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக, இந்த நிகழ்வை உலகெங்கும் கொண்டு சேர்க்க வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்குப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அப்பா.. உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளைக் கடந்து ஒலிக்க வேண்டும். உங்களின் மகளாக இந்த விழாவை ஒருங்கிணைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!"

உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’**

 *உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது*



தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் சர்வதேச திரைப்படங்களுடன் ஒப்பிடும் வகையிலான அனிமேஷன் காட்சிகளுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படம், உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகிறது.


வண்ணமிகு, மாயாஜாலம் நிறைந்த பெரிய திரை அனுபவமாக, விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் கண்டு களிப்பதற்கான திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’**, பிரம்மாண்ட காட்சிகள், வேகமான திரைக்கதை மற்றும் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் மூலம் நம்பிக்கை, தைரியம் மற்றும் ஒற்றுமை போன்ற மதிப்புகளை கொண்டாடுகிறது. குடும்பத் திரைப்படங்கள் அரிதாக வெளியாகும் காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சரியான நேரத்தில் இப்படம் திரையரங்குகளை அலங்கரிக்கிறது.


இந்திய அனிமேஷன் துறையின் முக்கிய மைல்கல்லாக திகழவுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படத்தின் முழு அனிமேஷனும் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புகளை லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்ட கியூரியாசிட்டி இங்க் மீடியா உருவாக்கியிருந்த நிலையில், அனிமேஷன் தயாரிப்புப் பொறுப்பை பெங்களூரைச் சேர்ந்த **ஸ்டுடியோ56 அனிமேஷன்** தலைமை ஏற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த டூன்2டாங்கோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகளாவிய நிபுணர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.


**ஸ்டுடியோ56**-ஐ சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட திறமைமிக்க அனிமேஷன் கலைஞர்கள், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இப்படத்தில் பணியாற்றினர். உலகளாவிய நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு, அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பிற்கான உலகளாவிய மையமாக **இந்தியா** வளர்ந்து வரும் பயணத்தில் இவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.


இதிலும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துவது, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தஞ்சாவூரில் பிறந்து, திருச்சிராப்பள்ளியில் வளர்ந்த தொழில்முனைவோர் **ஸ்ரீராம் சந்திரசேகரன்** என்பதுதான்.


குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஊக்கத்தால் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஸ்ரீராம் 2008ஆம் ஆண்டு **Broadvision Kids & Family** நிறுவனத்தை நிறுவினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,


“கடந்த 17 ஆண்டுகளில், அனிமேஷன் துறையில் நாம் படிப்படியாக வளர்ந்துள்ளோம். உள்ளூர் விளம்பரங்களிலிருந்து தொடங்கி, இன்று உலகத் தரத்தில் அனிமேஷன் முழுநீள திரைப்படங்களை உருவாக்கும் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றாக உயர்ந்துள்ளோம். உண்மையில், தமிழ்நாடு உலகின் சிறந்த அனிமேஷன் திறமைகளை உருவாக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எங்களுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வரும் எங்கள் அனிமேஷன் இயக்குநர் ஹரிஷ், லேஅவுட் இயக்குநர் அஷ்வின், காம்போசிட்டிங் இயக்குநர் கார்த்திகேயன், அனிமேஷன் மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் பெங்களூரு, சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழர்கள்,” என்றார்.


இந்தப் படம் குறித்துப் பேசிய Broadvision நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான திருமதி கௌரி ஸ்ரீராம்,

“**‘மிஷன் சாண்டா’** இந்திய அனிமேஷன் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இருக்கும். 44-க்கும் மேற்பட்ட உலகளாவிய தயாரிப்புகள் மற்றும் பல சர்வதேச விருதுகளுடன் வெற்றி பயணம் மேற்கொண்டு வரும் Broadvision Kids & Family, இப்போது டிஸ்னி தரத்திலான கதை சொல்லும் பாணியை இந்த கிறிஸ்துமஸ் அன்று இந்தியக் குடும்பங்களுக்கு பெரிய திரையில் கொண்டு வருகிறது,” என்றார்.


அதிரடி காட்சிகள், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் ஆகியவற்றுடன், **‘மிஷன் சாண்டா’** ஒரு மகிழ்ச்சியான சினிமா விடுமுறை அனுபவத்தை வழங்குவதோடு, இந்திய அனிமேஷன் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் அமைந்துள்ளது.


---

MISSION SANTA Set to Light Up Karnataka Theatres This Christmas with a World-Class Animated Spectacle*

 *MISSION SANTA Set to Light Up Karnataka Theatres This Christmas with a World-Class Animated Spectacle



This Christmas, Karnataka audiences are in for a magical cinematic experience as MISSION SANTA, a big-ticket animated feature film, prepares for its theatrical release across leading theaters in India, simultaneously with France, Germany and many more countries.

Positioned as a true family entertainer for the Christmas season, Mission Santa blends global animation quality, emotion-driven storytelling, and joy-filled adventure, making it one of the most anticipated animated theatrical releases for Indian families this Christmas.



*A Film Made for the Big Screen – and for Families*


Mission Santa is a high-energy animated adventure that celebrates hope, courage, action, and adventure, making it a perfect treat for children, parents, and grandparents alike.

Designed specifically for family cinema viewing, the film delivers:

Rich cinematic visuals

Fast-paced adventure and humour

Emotional beats that resonate across ages

Universal themes with strong cultural relatability 


At a time when family films in theatres are rare, Mission Santa brings back the joy of watching a film together on the big screen, just in time for the Christmas holidays.




Pride of Karnataka: A Landmark for Indian Animation


Mission Santa stands out as a proud milestone for Karnataka and Indian animation. The film is made fully by Indian animators, showcasing the world-class capabilities of talent from the state and the country.

While the story, script, and character designs originate from Los Angeles, developed by Curiosity Ink Media, the entire animation work from start to finish has been executed in India by Indian Animation artists, supervised by senior Indian Animation Leads. The film is co- produced with Toon2Tango of Germany, with post-production by Mark13 in Germany and Cosmic Dino in Australia, reinforcing Karnataka’s position as a global animation powerhouse through international collaboration.

This makes Mission Santa not just an international-quality film, but a true “Pride of Karnataka” animation feature, created by Indian hands for audiences worldwide.

 

*A Bold Vision - Global Stories, Indian Animation*


While India has thousands of Animation Institutes of Animators, there is a big Industry secret - Indians are second class citizens in the world of global animation. Lets explain! While Indian studios have long been serving Disney, Dreamworks, Technicolor and other global studios as “back- end” artists, they rarely get the same stakes as the teams working in Los Angeles or Paris for the work. Their Indian subsidiaries got paid a fixed budget as work for hire, with revenues rarely linked to the success or failure of the film. Its like working as a construction worker in building the Taj Mahal - while you can feel the pride of being a part of the Taj, it never really belongs to you.

These subsidiaries did not also have creative say in how the film should look. Indian artists were used, and many times thrown, albeit sadly, like in the case of Technicolor’s shutdown which abruptly threw 2000 Indian artists out of jobs without their salaries and dues paid. While the American and French artists working for the same company were safe, Indian artists were left on the streets. Thus, Indian artists have long held a second class citizenship in the world of Animated Film making - good as workers, not as leaders. While the older generation of Animation artists were accepting of such lopsided realities, the new generation of Animation Leaders and Artists do not want to work as second class talent. They know they have it in them, and want to showcase themselves to the world. Broadvision India, and its animated subsidiary Studio56, boldly embody such new generation of Indian Animation - proud in their heritage, deep in their talent, and not afraid to take risks. With its Animation Production arm Studio56, Broadvision is directly taking the risk as a Producer in global animated films, working end to end from conception to final release in theaters, while also assembling the skillsets needed for such global releases.

While Mission Santa is an international-scale production, it carries deep Indian creative roots, reflecting the growing maturity and confidence of India’s animation ecosystem. Over 150 high- level animation artists of Studio56 Animation — one of the top global theatrical animation production houses, proudly from Karnataka, India — worked on Mission Santa for 20 months from Bengaluru, collaborating directly with equal international partners on a daily basis. This rare synergy highlights Karnataka’s growing stature as a global hub for premium animation filmmaking. Mission Santa’s core team includes several Kannadiga talents, including Animation Director Mr. Harish Krishnamurthy, Layout Director Mr. Ashwin Narayanan, Compositing Director Mr. C Karthikeyan, and long-term Bangalorians Production Head Mr. Roshan Ingole, FX Director Mr. Manraj Singh, Lighting Director Mr. Kunal Deep, and Head of Overall Look Mr. Akhil Magotra.

Speaking about the film’s significance, Ms. Gauri Sriram, Producer & Managing Director of Broadvision India, said:

“This movie is a landmark in the history of Indian animation and is the pride of Karnataka. Broadvision has been a highly successful global animation producer from India with over 44 productions and 8 international awards, and Mission Santa brings Disney-level storytelling this Christmas to Indian families who need a good time out with their kids.”

This balance makes Mission Santa especially appealing to Karnataka audiences, who have long embraced global stories told with heart and craftsmanship.

Christmas Theatrical Release Across Karnataka


Releasing this Christmas across leading theatres in India, Mission Santa will enjoy a wide theatrical release across Karnataka, including:

 

Bengaluru

Mysuru

Mangaluru

Hubballi–Dharwad

Udupi

Tumakuru and other key centres 


The film will be released in English in leading theatres, positioning it as a premium theatrical animation experience for Indian family audiences.



A Step Forward for Animated Cinema in India

With Mission Santa, the makers reinforce a strong belief that animation belongs on the big screen, especially during festive seasons meant for families.


The film represents:

Confidence in theatrical animation

Trust in Indian family audiences

A commitment to elevating children’s and family cinema in India



About Mission Santa:


Mission Santa is a Christmas theatrical animated feature film that combines action, humour, heart, and spectacle in a story crafted for parents and their children alike. Built on international storytelling standards and powered by Indian animation talent, the film promises a joyful, cinematic holiday experience for families across India.

Monday, 22 December 2025

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே” முதல் சிங்கிள் பாடல்!!

 *ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே”  முதல் சிங்கிள் பாடல்!!*



Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படமான  வித் லவ் ( With Love ) படத்திலிருந்து முதல் சிங்கிளான  “ஐயோ காதலே” ரொமான்ஸ் மெலடி பாடல்  வெளியாகியுள்ளது.


முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்பாடலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். 


பள்ளி நாட்களின் இனிய நினைவுகளை ஞாபகப்படுத்தும், ஒரு ஜாலியான, மனதுக்கு நெருக்கமான உணர்வை தரும் இப்பாடல், கேட்டவுடன் அந்த இசைக்குள் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள மனதை மயக்கும் இந்த அற்புதமான மெலடி பாடலை, மோகன் ராஜன் எழுதியுள்ளார். விஜய்நரேன் பாடியுள்ளார். 


முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )”  படத்தில்,  டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.   “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.


Link - https://youtu.be/5yJW-_3-Fko

HONOURABLE KARNATAKA DEPUTY CHIEF MINISTER SHRI D. K. SHIVAKUMAR LAUNCHES SONG FROM MOHANLAL-STARRER VRUSSHABHA IN BENGALURU

 HONOURABLE KARNATAKA DEPUTY CHIEF MINISTER SHRI D. K. SHIVAKUMAR LAUNCHES SONG FROM MOHANLAL-STARRER VRUSSHABHA IN BENGALURU*




A grand launch marked by emotion and celebration took place in Bengaluru as the song from the much-awaited pan-Indian film Vrusshabha was officially unveiled by the Honourable Karnataka Deputy Chief Minister Shri D. K. Shivakumar. His presence added immense prestige and warmth to the occasion.


Vrusshabha stars Padma Shri and Padma Bhushan awardee Shri Mohanlal in the lead role and is one of the most anticipated pan-Indian releases. The newly launched song, featuring Samarjit Lankesh and Nayan Sarika, is a soulful romantic track that beautifully captures youthful emotion and love, striking a chord with audiences from the very first note.


The launch event witnessed a memorable moment when Shri D. K. Shivakumar shared his heartfelt thoughts about the film and its journey. Speaking about the title, he explained that “Vrusshabha” means Bull, symbolising strength, resilience, and positive energy. Referring to the bull tattoo on his arm, he shared that he had prayed to God for the film to receive strength and success, expressing a personal and emotional connection to the symbolism of the title.


The Honourable Deputy Chief Minister stated that Vrusshabha, slated for a worldwide theatrical release in December 2025, carries strong positive energy. On behalf of the people of Karnataka, he extended his best wishes to the entire team, expressing hope that the producers recover their investment, earn profits, and continue to create more meaningful cinema.


He further expressed confidence that Mohanlal’s Vrusshabha will achieve great success and added that 2026 will be a successful year for young actor Samarjit Lankesh, blessing the emerging talent for a bright and promising future. Appreciating the filmmakers’ vision, Shri D. K. Shivakumar commended the effort to showcase Kannada talent on a pan-Indian platform, extending his warm wishes to the young artistes, producers, and the entire Vrusshabha team. The song launch marks an important milestone in the promotional journey of Vrusshabha, setting the tone for a film that promises scale, emotion, and powerful storytelling.


Vrusshbaha JI directed by Nanada Kishore, Starring Mohanlal, Samarjit Lankesh, Ragini Dwivedi, Nayan Sarika, Ajay, Neha Saxena, Garuda Ram, Vinay Verma, Ali, Ayyappa P. Sharma, and Kishore, Vrusshabha boasts of music by Sam C.S., sound design by Resul Pookutty, dialogues by SRK, Janardhan Maharshi, and Karthik, Director of Photography Antony Samson and powerful action choreography by  Peter Hein, Stunt Silva, Ganesh Kumar and Nikhil.

 

Presented by Balaji Telefilms and Connekkt Media in association with Abishek S. Vyas Studios, the film is produced by Shobha Kapoor, Ektaa R. Kapoor, C.K. Padma Kumar, Varun Mathur, Saurabh Mishra, Abishek S. Vyas, Praveer Singh, Vishal Gurnani, and Juhi Parekh Mehta. Co-produced by Vimal Lahoti

 

Vrusshabha promises to be an epic cinematic journey blending emotion, grandeur, and action, celebrating the unbreakable bond between a father and son. Shot simultaneously in Malayalam and Telugu, with releases in Kannada and Hindi, Vrusshabha is set to be one of the biggest cinematic events of 2025. Worldwide Release: December 25, 2025

 https://youtu.be/NhaBm6cs1-s

மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா ’ படத்தின் பாடலை, கர்நாடக துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார் பெங்களூருவில் வெளியிட்டா

 *மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா ’ படத்தின் பாடலை, கர்நாடக துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார் பெங்களூருவில் வெளியிட்டார் 




பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விருஷபா ’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பெங்களூருவில் வெகு கோலாகலமாக  நடைபெற்றது. இந்நிகழ்வில் கர்நாடக மாநிலத்தின் மதிப்பிற்குரிய துணை முதல்வர் திரு.D.K.சிவகுமார் கலந்துகொண்டு, பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவரது பங்கேற்பு விழாவுக்கு தனித்துவமான பெருமையும் மரியாதையும் சேர்த்தது.


பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற நடிகர் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘விருஷபா ’ திரைப்படம், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாகும். சமர்ஜித் லங்கேஷ் மற்றும் நயன் சாரிகா நடித்துள்ள இந்தப் புதிய பாடல், இளமையும், காதல்,உணர்வுகளும் நிறைந்த மென்மையான ரொமான்டிக் பாடல்.  இப்பாடல் வெளியான கணத்திலிருந்தே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.


பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார், படத்தின் தலைப்பின் அர்த்தத்தை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். ‘விருஷபா ’ என்றால் ‘காளை’ என்றும், அது வலிமை, உறுதி மற்றும் நேர்மறை சக்தியை குறிக்கிறது என்றும் அவர் கூறினார். தனது கையில் உள்ள காளை டாட்டூவை குறிப்பிட்டு, இப்படம் வலிமையுடனும், வெற்றியுடனும் அமைய கடவுளிடம் பிரார்த்தித்ததாக பகிர்ந்து கொண்டார்.


2025 டிசம்பரில் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுக்குத் தயாராகும் ‘விருஷபா ’ படம், மிகுந்த நேர்மறை ஆற்றலைக் கொண்டதாக அவர் தெரிவித்தார். கர்நாடக மக்களின் சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், தயாரிப்பாளர்கள் முதலீட்டை மீட்டெடுத்து லாபம் ஈட்டி, மேலும் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.


மேலும், மோகன்லாலின் ‘விருஷபா ’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், இளம் நடிகர் சமர்ஜித் லங்கேஷ்க்கு 2026 வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்றும் வாழ்த்தினார். கன்னட திறமைகளை பான்-இந்திய அளவில் கொண்டு செல்லும் படக்குழுவின் முயற்சியைப் பாராட்டிய அவர், இளம் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு ‘விருஷபா ’ குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தப் பாடல் வெளியீடு, ‘விருஷபா ’ படத்தின் விளம்பரப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.


நந்த கிஷோர் ( Nanada Kishore ) இயக்கியுள்ள ‘விருஷபா ’ படத்தில் மோகன்லால், சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சாரிகா, அஜய், நேஹா சக்ஷேனா(Neha Saxena) கருடா ராம், வினய் வர்மா, அலி, அய்யப்பா P.ஷர்மா மற்றும் கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவில்  இசை – சாம் CS, ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, வசனங்கள் – எஸ்.ஆர்.கே., ஜனார்தன் மகரிஷி, கார்த்திக், ஒளிப்பதிவு – ஆன்டனி சாம்சன், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, கணேஷ் குமார், நிகில் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


கனெக்ட் மீடியா ( Connekkt Media )மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் (Balaji Telefilms Ltd), அபிஷேக் S வியாஸ் ஸ்டுடியோஸ் (Abishek S Vyas Studios)  நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்மகுமார், வருண் மாதுர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S. வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி, ஜூஹி பாரேக் மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர். இணை தயாரிப்பு – விமல் லஹோதி.( Vimal Lahoti)


தந்தை-மகன் உறவின் ஆழமான பிணைப்பைக் கொண்டாடும் வகையில், உணர்ச்சி, பிரம்மாண்டம் மற்றும் அதிரடி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு காவியமான திரைப்பயணமாக ‘விருஷபா ’ உருவாகியுள்ளது. மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.இப்படம் உலகம் முழுக்க வரும் நவம்பர் 6, 2025 வெளியாகிறது.



45 – திரைப்பட முன் வெளியீட்டு விழா

 *45 – திரைப்பட முன் வெளியீட்டு விழா!!*
















Suraj Production சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “45”.


கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படத்தின் தமிழ்ப்பதிப்பு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. AGS Entertainment நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.


இந்நிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் தமிழின் முன்னணி நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


இவ்விழாவில்…


தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி பேசியதாவது…


படத்தின் டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிவாண்ணா, ராஜ் B. ஷெட்டி சூப்பராக நடித்துள்ளனர், உபேந்திரா கலக்கியுள்ளார். அர்ஜுன் ஜான்யா இப்படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளார். படத்தைப் பற்றி என்னைவிட அவர்கள் தான் சொல்ல வேண்டும். இங்கு படத்தை வாழ்த்த வந்துள்ள விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.


நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…


சிவாண்ணா அவர்களின் ரசிகன் நான். அவர் மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர்; ஆனால் அதை வெளியில் எங்கும் காட்டிக்கொள்ள மாட்டார். அவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அவருக்கு கேன்சர் வந்தது. இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எல்லோரும் உடைந்து விடுவோம், குடும்பத்தோடு இருக்க ஆசைப்படுவோம். ஆனால் சிவாண்ணா தயாரிப்பாளரை அழைத்து, இன்னும் மீதமுள்ள ஷூட்டிங்கை முடித்து விடுங்கள், டப்பிங் எடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பிற்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்.

உபேந்திரா அவர்களுடன் ஒரு படத்தில் வேலை செய்துள்ளேன். அவர் இயக்கத்திற்கு நான் ரசிகன். ராஜ் B. ஷெட்டியின் சமீபத்திய படங்கள் அற்புதமாக இருக்கின்றன. அவர் தமிழில் படம் செய்ய வேண்டும். 20 வருடம் இசையமைப்பாளராக இருந்த அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். டிரெய்லர் பார்த்தேன், அட்டகாசமாக இருந்தது. நிறைய CG இருந்தது. தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.


இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா பேசியதாவது…


ஒரு இசையமைப்பாளராக இருந்து இயக்குநராக ஆனால் என்ன ஆகும் என புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி இங்கு வந்து வாழ்த்தியதற்கு என் நன்றி. டாக்டர் சிவராஜ்குமார் அண்ணா சொன்னதால் தான் நான் இன்று இப்படத்தை இயக்கினேன். நான் இயக்குநராக காரணம் அவர் தான். அவருக்கு என் நன்றி. இயக்குநர் சக்கரவர்த்தி உபேந்திரா அவர்களின் ரசிகன் நான். அவர் என்னை நம்பி கதை கேட்டு, இதில் ஒரு பாத்திரத்தில் அற்புதமாக நடித்துத் தந்தார்.

ராஜ் B. ஷெட்டி கர்நாடகாவின் பெருமை. அவர் இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி முழுமையாக நம்பி இப்படத்தைத் தாங்கியுள்ளார். அவருக்கு என் நன்றிகள். நான் ஒரு ரசிகனாகத்தான் இந்த மூன்று பேரையும் இயக்கியிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். நன்றி.


நடிகர் வின்செண்ட் அசோகன் பேசியதாவது…


என் நீண்டகால நெருங்கிய நண்பன் சிவராஜ்குமார். அவருக்காகத்தான் நான் இந்த விழாவிற்கு வந்துள்ளேன். அவர் ரசிகன் நான். அவருடன் படம் நடித்துள்ளேன். ஒரு நண்பரை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் சிவராஜ்குமார் தான். என் அப்பா இறந்த போது அவர் படம் நடித்து பெரிய ஹீரோ; ஆனால் எனக்காக ஓடோடி வந்தார். அவர் மனதுக்கு நன்றி.


உபேந்திரா அவர்களின் படங்களுக்கு நான் ரசிகன். அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


நடிகர் ராஜ் B. ஷெட்டி பேசியதாவது…


தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி. தமிழ் மக்கள் கலாச்சாரத்தில் சினிமா கலந்துள்ளது. அவர்கள் சினிமாவை கொண்டாடுகிறார்கள். சிவாண்ணாவை ஜெயிலர் படத்திலும், உபேந்திராவை கூலி படத்திலும் கொண்டாடினார்கள். நல்ல சினிமா இங்கு கொண்டாடப்படும். தமிழ் சினிமா கர்நாடகாவிலும் கொண்டாடப்படுகிறது.

அர்ஜுன் ஜான்யா மூன்று வருடம் இப்படத்திற்காக உழைத்துள்ளார். நானும் இயக்குநர்தான்; ஆனால் அவர் உழைப்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன். தயாரிப்பாளர் இப்படத்தைத் தோள்மீது தாங்கியுள்ளார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.


நடிகர் உபேந்திரா பேசியதாவது…

நான் சிவாண்ணா பேச்சைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். விஜய் ஆண்டனி இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. அவருடன் நான் வேலை பார்த்துள்ளேன்; அவருடைய வளர்ச்சி எனக்குப் பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் அர்ஜுன் ஜான்யா இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். தயாரிப்பாளர் இப்படத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்.

ராஜ் B. ஷெட்டி அற்புதமாக நடித்துள்ளார். சிவாண்ணா எனக்கு ஓம் படம் மூலம் பிரேக் தந்தவர். இதில் கலக்கியுள்ளார். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.


நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது…


நான் விஜய் ஆண்டனி ரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் ரீமேக் வாய்ப்பு எனக்கு வந்தது; ஆனால் அதை மிஸ் செய்து விட்டேன். மீண்டும் அவரின் வேறு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன்.

வின்செண்ட் சின்ன வயதிலிருந்து என் நண்பர்; அவர் என் சகோதரர் போலத்தான். ரமேஷ் ரெட்டிக்கு என் நன்றி. அறிமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்துள்ளார். நான் தான் முதலில் கதை கேட்டேன்; என்னை நம்பி பெரிய செலவு செய்துள்ளார்.

அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டர்களையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகியுள்ளார்; விரைவில் நடிகராக ஆகிவிடுவார்.

உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை; அவர் தான் எனக்கு பிரேக் தந்தார். அவர் அட்டகாசமான கலைஞன். ராஜ் B. ஷெட்டி சமீபமாக கலக்கி வருகிறார். அவர் நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர். எங்கள் மூன்று பேரின் கெமிஸ்ட்ரி படத்தில் அட்டகாசமாக வந்துள்ளது. இது ஒரு தனி உலகம்; படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.


ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணக் காத்திருக்கும் ‘45’ திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு 01-01-2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. AGS Entertainment நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.


தொழில்நுட்பக் குழு


கதை, இசை, இயக்கம் : அர்ஜுன் ஜான்யா

தயாரிப்பு : ஸ்ரீமதி உமா ரமேஷ் ரெட்டி, M. ரமேஷ் ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் : Suraj Production

ஒளிப்பதிவு : சத்யா ஹெக்டே

எடிட்டிங் : K. M. பிரகாஷ்

சண்டை இயக்கம் : டாக்டர் K. ரவிவர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்ரென்ட் டேனி, சேதன் டி’சௌசா

நடன இயக்கம் : சின்னி பிரகாஷ், B. தனஞ்சய்

வசனங்கள் : அனில் குமார்

தயாரிப்பு மேலாளர் : ரவிசங்கர்

தயாரிப்பு பொறுப்பாளர் : சுரேஷ் சிவண்ணா

கலை இயக்கம் : மோகன் பண்டித்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

‘45’ – Pre-Release Event

 *‘45’ – Pre-Release Event*

Produced by Suraj Production under the banner of producer Ramesh Reddy, the grand multi-starrer film "45" features Dr. Shivarajkumar, Upendra, and Raj B. Shetty in lead roles. The film is written, directed, and musically composed by Arjun Janya and has been made on a grand scale.
















‘45’ is a mega-budget film made in Kannada, Tamil, Telugu, Malayalam, and Hindi. The Tamil version of the film is scheduled to release worldwide on January 1, 2026, with AGS Entertainment releasing the film across Tamil Nadu.



As part of the promotions for the Tamil version, a grand pre-release press meet was held in Chennai in the presence of media representatives. Leading Tamil actor Vijay Antony attended the event as a special guest and extended his best wishes to the team.


Speeches from the Event



Producer Ramesh Reddy


He expressed confidence that the audience would enjoy the trailer, praising the performances of Shivarajkumar and Raj B. Shetty, calling Upendra’s presence electrifying, and appreciating Arjun Janya’s exceptional direction. He thanked Vijay Antony for attending and wished for the film’s success.



Vijay Antony


Vijay Antony shared his admiration for Shivarajkumar’s humility and dedication. He recalled hearing about Shivarajkumar’s determination to complete shooting and dubbing despite facing serious health challenges, calling it an act of immense commitment and integrity. He also praised Upendra as a filmmaker, appreciated Raj B. Shetty’s recent work, and applauded Arjun Janya’s transition from composer to director, noting the film’s impressive CGI and production scale.



Director & Composer Arjun Janya


Arjun Janya thanked Vijay Antony for understanding the journey of a composer turning director. He credited Shivarajkumar for motivating him to direct the film and expressed gratitude to Upendra for trusting him with the story and delivering a powerful performance. He described Raj B. Shetty as the pride of Karnataka and thanked producer Ramesh Reddy for standing firmly behind the project.


Actor Vincent Ashokan


Vincent Ashokan spoke emotionally about his long friendship with Shivarajkumar, recalling the actor’s support during personal hardship. He praised Upendra’s films and Arjun Janya’s direction and wished the film massive success.



Raj B. Shetty


Thanking Tamil audiences for their love, Raj B. Shetty spoke about how cinema is deeply embedded in Tamil culture. He praised the appreciation Tamil audiences have shown to Kannada actors and films, acknowledged Arjun Janya’s three years of hard work, and credited the producer for shouldering the film responsibly.



Upendra


Upendra thanked Vijay Antony for attending and spoke warmly about his growth. He highlighted Arjun Janya’s relentless effort and the producer’s attention to detail. He credited Shivarajkumar for giving him a major break earlier in his career and praised Raj B. Shetty’s performance.



Dr. Shivarajkumar


Shivarajkumar expressed admiration for Vijay Antony’s versatility and shared that he regretted missing the remake opportunity of Pichaikkaran. He thanked producer Ramesh Reddy for trusting a debut director with such a big project and praised Arjun Janya’s passion, noting how he enacted every character while narrating the script. He spoke highly of Upendra as an extraordinary artist and Raj B. Shetty as a talented actor, director, and writer. He concluded by saying the chemistry between the three leads works brilliantly and that the film unfolds as a unique cinematic world.


Release Information


The Tamil version of ‘45’ will release in theatres on 01-01-2026 across Tamil Nadu through AGS Entertainment.


Technical Crew



Story, Music, Director: Arjun Janya

Producer: Smt Uma Ramesh Reddy, M Ramesh Reddy

Production House: Suraj Production 

Cinematographer: Satya Hegde

Editor: K M Prakash

Stunts: Dr K Ravivarma, Jolly Bastian, Different Dany, Chetan D’souza

Choreographer: Chinni Prakash, B Dhananjay

Dialogues: Anil Kumar

Production Manager: Ravishankar

Production Incharge: Suresh Shivanna

Art Director: Mohan Pandith

PRO - Sathish (AIM)