Featured post

JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event   Chennai, 5 December 202...

Friday, 5 December 2025

JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 



Chennai, 5 December 2025 – The JioStar leadership team, led by Krishnan Kutty, Head Entertainment Business, South Cluster, JioStar, and Balachandran R, Executive Vice President – Tamil, JioStar, along with R. Mahendran, CEO – Turmeric Media, called on the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. M.K. Stalin, today to brief him on their upcoming flagship event, JioHotstar South Unbound.

 

During the meeting, the team outlined the vision, ambition and cultural significance of the event. They also shared key elements from the Letter of Engagement, reaffirming JioStar’s commitment to supporting talent development, collaborating with leading film and media institutes in Tamil Nadu, and investing in capacity-building initiatives to strengthen the state’s creative ecosystem and empower emerging storytellers.

 

JioHotstar South Unbound, to be held in Chennai on 9th December 2025, will be a landmark celebration of Southern cinema and creativity. The event will bring together leading filmmakers, creators, and talent from across the South and will feature a showcase of JioHotstar’s upcoming South content slate, spotlighting and celebrating the depth, richness and influence of Southern storytelling.

 

The event will be inaugurated by the Hon’ble Deputy Chief Minister of Tamil Nadu, Thiru. Udhayanidhi Stalin, alongside Hon’ble Member of Parliament Padma Bhushan Thiru. Kamal Haasan, who will grace the evening as a distinguished guest.

 

With the participation of top celebrities, creators, and industry leaders from all Southern markets, JioHotstar South Unbound aims to spotlight the region’s artistic impact and reaffirm JioStar’s commitment to nurturing, championing and elevating the Southern entertainment landscape.

JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர்

 *JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு,  JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!*




JioStar Head Entertainment Business, South Cluster, கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil பாலச்சந்திரன் R, மற்றும் CEO – Turmeric Media  R. மகேந்திரன் ஆகியோர்,  இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர்.


இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம்,  தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும் ஆதரவை குழுவினர் உறுதிப்படுத்தினர்.


டிசம்பர் 9, 2025 அன்று சென்னை நகரில் நடைபெறும் JioHotstar South Unbound  நிகழ்வு,  தென்னிந்திய சினிமா மற்றும் படைப்புத் திறனைக் கொண்டாடும் முக்கிய விழாவாகும். தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். JioHotstar இன், புதிய தென் மாநில படைப்புகள், கதைகள்,  இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.


இந்த விழாவை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பாராட்டுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷண் திரு. கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.


தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி படைப்பாளர்கள் பங்கேற்கும் இந்த விழா, தென்னிந்திய கலை மற்றும் கதைக்கூறும் மரபின் தாக்கத்தை உலகுக்கு முன்னிறுத்தும் முக்கிய தருணமாக இருக்கும். மேலும், தென்னிந்திய பொழுதுபோக்கு உலகை உயர்த்த, வளர்க்க, பலப்படுத்த JioStar மேற்கொள்ளும் தொடர்ந்த பங்களிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகிறது.

Grab the best seats for the Event Film of the Year as advance IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY

 *Grab the best seats for the Event Film of the Year as advance IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY*




_Special IMAX ticket-booking counters are activated at key theatres for the biggest cinematic event of the year, releasing on 19th December!_


James Cameron's biggest cinematic event, Avatar: Fire and Ash is set to hit Indian theatres on 19th December in six Indian languages. Amid the rising global buzz, advance IMAX bookings for the film are now officially open across India, giving fans a first chance to secure their seats for one of the year’s most anticipated cinematic events. With PVR INOX leading the IMAX footprint in the country, special IMAX ticket-booking counters have been activated at theatres nationwide to offer audiences a smooth and convenient booking experience.


Supporting the rollout, cinemas including PVR INOX have introduced on-ground Avatar-themed branding along with digital integrations across apps, websites and marketing channels. Fans can now book their IMAX tickets through cinema apps, websites, or directly at theatre counters as anticipation builds for the film’s arrival.


The third chapter in the Avatar saga introduces Varang, the matriarch of the Fire Clan, expanding Pandora’s cultural and emotional landscape.


_Avatar: Fire and Ash releases on 19th December in English, Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada._

அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள்

 *‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது! உங்கள் டிக்கெட்டை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!* 




இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன. 


இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக கொண்டாடப்படும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் இருக்கைகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐமேக்ஸில் முன்னணியில் இருக்கும் PVR INOX நிறுவனம் திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களை திறந்துள்ளது. 


PVR INOX உள்ளிட்ட திரையரங்குகள் செயலிகள், வலைதளங்கள் மற்றும் மார்க்கெட்டிங் சேனல்களில் டிஜிட்டல் ஒருங்கிணைப்புகளுடன் அவதார்-தீம் பிராண்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளன. எனவே, ரசிகர்கள் தற்போது சினிமா செயலிகள், வலைதளங்கள் அல்லது நேரடியாக திரையரங்க கவுண்டர்களிலோ தங்களது ஐமேக்ஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.


‘அவதார்’ திரைப்படத்தின் மூன்றாவது அத்தியாயம் பண்டோரா உலகின் கலாச்சார மற்றும் உணர்ச்சி நிலப்பரப்பை விரிவுபடுத்தும் ஃபயர் குலத்தின் தலைவரான வராங்கை அறிமுகப்படுத்துகிறது.


‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்

 *ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!*



தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன் உருவாக்கிய வலுவான இணைப்பை வெளிப்படுத்துகிறது.


மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கும் இசையை பரிசாக அளித்த லெஜண்டரி இசையமைப்பாளர் AR ரஹ்மானின் இசை, ஹிமான்ஷு சர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய மனதை வருடும் எழுத்து, ஆனந்த் L ராய் கொண்டு சென்ற மென்மையான இயக்கம், பூஷண் குமார் அளித்த வலுவான தயாரிப்பு ஆதரவு ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் மனதில் இந்த படத்தை ஆழமான உணர்ச்சி மட்டத்தில் தொட்டிருக்கிறது. நடிகர்களின் தீவிரமான நடிப்பும், அடுக்கடுக்கான உணர்ச்சி தரப்பட்ட கதை சொல்லலும் வலுவான வாய் வழி பாராட்டையும் மறுபார்வைகளையும் உருவாக்கியுள்ளது.


புதிய படங்களிடமிருந்து போட்டி இருந்தாலும், ‘தேரே இஷ்க் மே’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல முக்கிய பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள், அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தின் காரணமாக, அடுத்த வாரத்திலும் படத்தின் வசூல் நிலைத்திருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர்கள் இன்னமும் திரைக்கு பெருமளவில் திரண்டுகொண்டிருப்பது, படத்தின் நீடித்த வேகத்துக்கு சான்றாக பார்க்கப்படுகிறது.


‘தேரே இஷ்க் மே’ தற்போது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.


குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது.

*A Love You Can’t Escape, ‘Tere Ishk Mein’ earns Rs 118.76 Crore GBOC worldwide gross in One Week

 *A Love You Can’t Escape, ‘Tere Ishk Mein’ earns Rs 118.76 Crore GBOC worldwide gross in One Week*



‘Tere Ishk Mein’, starring Dhanush and Kriti Sanon, has earned Rs 118.76 crore GBOC mark at the worldwide gross within just one week, marking a major milestone for the film. The achievement highlights the strong audience connect the story has built across markets.


Elevated by the timeless music of the legendary A.R. Rahman, heartfelt writing by Himanshu Sharma and Neeraj Yadav, the sensitive direction of Aanand L Rai and backed by Bhushan Kumar, the film has struck a deep emotional chord with viewers worldwide. The powerful performances and layered storytelling have driven strong word-of-mouth and repeat viewings.


Despite fresh competition, ‘Tere Ishk Mein’ is set to dominate across cinemas, backed by growing buzz and packed shows in key regions. Audiences are still turning up in large numbers, and the sustained momentum points to another steady week at the box office.


‘Tere Ishk Mein’ is currently playing in cinemas worldwide.


Gulshan Kumar, T-Series, and Colour Yellow present 'Tere Ishk Mein', produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil.

தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ’ஹைக்கூ’

 *தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ’ஹைக்கூ’ படத்தின் மனதை வருடும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட விஷன் சினிமா ஹவுஸ்!*




நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தலைமையிலான விஷன் சினிமா ஹவுஸ். முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வரும் விஷன் சினிமா ஹவுஸ் சமீபத்தில் தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படத்தை அறிவித்தது. இன்று (டிசம்பர் 5, 2025) தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் ’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


படத்தின் கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் தெலுங்குத் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நடிகை ஸ்ரீ தேவி அப்பல்லா மற்றும் மோலிவுட்டின் சென்சேஷனல் நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர், இளவயது காதல் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. யாரும் இல்லாத கேலரியில் வண்ணமயமான நாற்காலிகளில் படத்தின் காதல் ஜோடி அமர்ந்திருக்க அவர்களின் கெமிஸ்ட்ரியை தெரிவிக்கும் வகையில், மேலே இருக்கும் ஹார்ட்டின் ’ஹைக்கூ’ படத்தின் ஃபீல்-குட் கதைக்கருவை அழகாக பிரதிபலிக்கிறது. 


இளமை துடிப்புடன் கூடிய கதைகளை திரையில் கொண்டு வருவதற்கு பெயர் பெற்ற யுவராஜ் சின்னசாமி ’ஹைக்கூ’ திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து ஹரிஹரன் ராம் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் அதிர்ச்சி அருண் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் புல்கான் இசையமைத்துள்ள இந்த படம் நிச்சயம் மெல்லிசை அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கும்.


‘ஜோ’ மற்றும் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு விஷன் சினிமா ஹவுஸ் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கதைகள் கேட்டு வருகிறது. முதல் காதல், நட்பு மற்றும் சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் படமாக ‘ஹைக்கூ’ வர இருக்கிறது. 


’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு புதிய திறமையாளர்கள் மற்றும் இளம் நடிகர்களை ஊக்குவிக்கும் விஷன் சினிமா ஹவுஸின் தயாரிப்பாளர் டாக்டர். அருளானந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்துள்ளது. டீசர், கிளிம்ப்ஸ் மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி உட்பட படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும். 


இந்தப் படத்திற்கு ஏகன் அருளானந்து எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன் இணைத் தயாரிப்பாளராகவும் உள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் பேனரில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து ‘ஹைக்கூ’ படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Vision Cinema House Unveils Heart-Warming First Look of HAIKU on Producer Dr. Arulanandhu’s Birthday

 *Vision Cinema House Unveils Heart-Warming First Look of HAIKU on Producer Dr. Arulanandhu’s Birthday*




Vision Cinema House, headed by producers Dr. Arulanandhu & Mathewo Arulanandhu,  the rapidly rising production banner known for backing authentic and emotionally rich cinema had recently announced its third production venture. Marking the special occasion of producer Dr. Arulanandhu’s Birthday (December 5, 2025), the team has unveiled the film’s First Look along with title HAIKU, a trilingual film made in Tamil, Telugu and Malayalam. 


Starring Aegan, Telugu industry’s promising actress Sri Devi Apalla  and Mollywood’s sensational actress Femina George in the lead roles, the First Look introduces a refreshing slice-of-life romantic drama set against the innocence of young love and the hopes of student life. The poster shows the lead pair seated in an empty gallery of colourful chairs, radiating a gentle spark of chemistry, while a heart-shaped sky trail symbolises the soft, poetic essence the title hints at. Falling Soon, a playful line placed at the center, teases a feel-good emotional journey ahead.


Haiku is written & directed by Yuvaraj Chinnasamy, who brings a unique narrative voice with rooted storytelling and youthful vibrancy. He shares the credits of screenwriting along with Hariharan Ram. The film features a strong cast including Adhirchi Arun alongside many others in pivotal characters. With music composed by Vijai Bulganin, the film embraces a breezy, melodic sensibility to complement its emotional core.


After delivering acclaimed titles like Joe and Kozhi Pannai Chella Durai, Vision Cinema House continues to build its slate with stories driven by fresh talents and inspiring ideas. With Haiku, the production house looks forward to presenting a fun, heartfelt film that celebrates the purity of first love, friendship and self-discovery.


Marking the unveiling, the team expressed heartfelt wishes to producer Dr. Arulanandhu, whose commitment to nurturing emerging artists and empowering young storytelling voices remains at the heart of Vision Cinema House.


More updates including teaser, cast glimpses and release plans will be announced soon as Haiku progresses on its exciting journey to theatres.


The film is executive produced by Aegan Arulanandhu, co-produced by Srinivas Niranjan. Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu are producing ‘Haiku’ for the banner of Vision Cinema House.

Saavee Movie Review

Saavee Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சாவு வீடு அதாவுது saa vee படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது ஆண்டன் அஜித்.  இதுல உதய் தீப், ஆதேஷ்பாலா, ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம், சேஷாத்ரி, ஷியாம் ஜீவா, பவனா னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



ஒரு வீட்ல ஒருத்தர் இறந்து போய்டுறாரு. வீடு துக்க வீட மாறிபோய்டுது. ஆனா இதுல இருந்து ஒரு புது பிரச்சனை வருது. இறந்துபோனவருக்கு ஒரு பொண்ணு இருக்கும். அந்த பொண்ணோட lover யும் இந்த வீட்டுக்கு வந்திருப்பான். night time ஆயிடனாள இந்த body அ பாத்துக்க பா னு சொல்லி அந்த வீட்ல இருக்கறவங்க எல்லாருமே தூங்கிடுறாங்க. இந்த பையனும் பத்திரமா பாத்துக்கறான். ஒருகட்டத்துக்குமேல இவனும் தூங்கிடுறான் திடுருனு பாத்த அந்த body காணாம போயிடுது. ஒரு வேலை யாராவது கடத்திட்டு போயிருப்பங்களோ னு நினச்சு police அவங்களோட விசாரணையை ஆரம்பிக்குறாங்க. இதுக்கு அப்புறம் என்னாச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


body காணாம போனதுல இருந்து இறந்துபோனவரோட family ல இருக்கறவங்க எல்லாரையுமே hero வன udhay theepan மேல தான் சந்தேகம் வருது. அதுமட்டுமில்ல இவரோட lover க்கும் இவர்மேல தான் சந்தேகம் வரும். அந்த body அ நான் திருடலை னு  இவரு நிரூபிக்கற scenes எல்லாமே ரொம்ப comedy அ இருக்கும். heroine kavitha suresh யும் நடிப்பும் எதார்த்தமா இருந்தது. இந்த body missing case அ எடுத்து நடத்துற police adesh bala ரொம்ப speed அ investigate பண்ணுவாரு. இவரோட நடிப்பும் நல்ல இருக்கும். படத்துல நடிச்ச மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ தான் குடுத்திருக்காங்க. 


 ஒரு நல்ல கதைக்களம் தான் இது . சோ miss பண்ணாம இந்த  படத்தை பாருங்க.

Nirvaagam Porupalla Movie Review

Nirvaagam Porupalla Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  nirvagam பொறுப்பல்ல   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது S Kaarthieswaran. இதுல S Kaarthieswaran ,Sreenithi ,ஆதவன், Livingston ,Black pandi ,Mrithula Suresh ,Akalya venkatesan னு பலர் நடிச்சிருக்காங்க. keerthieswaran பேய் இருக்க bayamen ன்ற படத்தை இயக்கி இருக்காரு. இந்த படம் உண்மையான சம்பவங்களை base பண்ணி தான் இருக்கும் னு director சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல மக்களை ஏமாத்தி பணம் பறிக்கிறது க்குன்னு ஒரு சிலர் இருக்காங்க. இதை தான் கொஞ்சம் comedy அ எடுத்துட்டு போயிருக்காங்க. அதுமட்டுமில்ல உண்மையாவே பணத்தை இழந்த ஒரு சிலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க நும் director ஒரு பேட்டி ல share பண்ணிருக்கரு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



kaarthieswaran தான் இந்த படத்துல hero வா நடிச்சிருக்காரு. இவரு மக்களை ஏமாத்தி எப்படியோ  5 கோடியா சம்பாதிச்சிடுறாரு. இதை எப்படியாவுது வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போய் தப்பிக்கணும் ண்றதுக்காக plan பண்ணிட்டு இருக்காரு. அப்போ தான் இவரு சரியா police ஆனா sreenithi கிட்ட மாட்டிக்குறாரு. இந்த பிரச்சனை ல இருந்து தப்பிச்சு பணத்தோட escape ஆனாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட  மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல ஒரு சராசரியான மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுறாங்க ன்றதா ரொம்ப தெளிவா director காமிச்சிருப்பாரு. என்னதான் government agencies மக்கள்கிட்ட ஏமாறக்கூடாது னு awareness குடுத்தாலும் நூதன முறைல மக்கள்கிட்ட இருந்து ஒரு கும்பல் எப்படி கொள்ள அடிக்குது ன்றது தான் இந்த படத்தோட core idea வா இருக்கு. அதுமட்டுமில்ல இந்த மாதிரி மோசடில எப்படி மாட்டிக்காம இருக்கணும் றதயும் சொல்லிருக்காரு. இந்த படத்துல என்ன மெசேஜ் அ சொல்ல வந்தங்களோ அதா ரொம்ப கட்சிதாமா வெளி படுத்திருக்காரு director . 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது kaarthieswaran ஓட நடிப்பு ரொம்ப நேர்த்தியை இருந்தது. அப்பாவியா முகத்தை வச்சுக்கிட்டு மக்களை ஏமாத்துறதுல கில்லாடிய இருக்காரு. அதுமட்டுமில்ல நெறய getup அ போட்டு தான் மக்களை ஏமாத்துறாரு. police inspector அ நடிச்சிருக்க sreenithi யும் police க்கு ஏத்த மாதிரி கம்பீரமா நடிச்சிருக்காங்க. hero இந்த மோசடி வேலைய பண்ணுறதுக்கு ஒரு team அ வச்சிருப்பாரு. அவங்க தான் ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் . இவங்க எல்லாருமே அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு ஒரு best ஆனா performance அ தான் குடுத்திருக்காங்க. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது என்.எஸ்.ராஜேஷ், ஓட cinematography colourful ஆவும் bright ஆவும் இருந்தது. ஸ்ரீகாந்த் தேவா வோட songs and bgm decent அ இருந்தது. சஜின்.சி ஓட editing யும் sharp அ இருந்தது. 


ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த நிர்வாகம் பொறுப்பல்ல. சோ miss பண்ணாம இந்த  படத்தை பாருங்க.

சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில்

 *Puththam Puthu Neram Movie Audio Launch*





















                                                             சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் "புத்தம் புது நேரம்". கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வினில் இயக்குனர் சந்திரகுமார் பேசும்போது, "35 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். பிளாக் & ஒயிட் சினிமாவில் இருந்து கலர், தற்போது டிஜிட்டல் சினிமா வரை வந்து நிற்பது மகிழ்ச்சி. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கிளப் ஹவுஸில் பேசும்போது சினிமா பற்றி நிறைய பேசினோம்.  ஆன்லைனில் பலருக்கு இலவசமாக சினிமா பற்றி கிளாஸ் எடுத்தேன். அப்போது எங்களுக்கு ஒர்க் ஷாப் வைத்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள். ஆனால் ஒர்க் ஷாப் நடத்துவதை விட 15, 20 நாட்களில் ஒரு சினிமாவாக எடுப்போம் என பேசினோம். அப்படி ஒரு படத்தையும் எடுத்தோம், ஆனால் அதை திரையரங்கில் ரிலீஸ் செய்யவில்லை. அதனால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒரு படம் எடுக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட படம் தான் இந்த புத்தம் புது நேரம். இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் என யாரும் இல்லை, எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இந்த படத்தின் மூலம் லட்சங்கள், கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இந்த படத்துக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.


இசையமைப்பாளர் கே.பரஞ்சோதி பேசும்போது, "பாலக்காடு அருகில் உள்ள கொல்லங்கோட்டில் சந்திரகுமார் சார் குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல பழக்கம். அங்குள்ள கோவிலில் நான் பாடுவதை சார் கேட்டிருக்கிறார். அப்போதே என்னை நன்றாக வருவார் என சொன்னார். இசைஞானி இளையராஜா சார் என் மானசீக குரு. அவர் சொன்ன விஷயங்களை நான் இசையமைக்கும்போது இன்றும் பின்பற்றுகிறேன். சந்திரகுமார் சார் நன்றாக ட்யூன்ஸ் கேட்டு வாங்குவார். 1988ல் அவர் படத்துக்கு இசையமைத்தபோது என் இசையை கேட்டு விட்டு படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார் துபாயில் இருந்து எனக்கு ஒரு கீபோர்ட் வாங்கி அன்பளிப்பாக தந்தார். இப்போது என்னுடைய 70வது வயதில் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறேன். என் பிறந்த நாளன்று இந்த இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குனர் சந்திரகுமார் சார். அவருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி" என்றார்.


படத்தொகுப்பாளர் கே.ராஜகோபால் பேசும்போது, "புத்தம் புது நேரம் படத்துக்கு முன்பு சந்திரகுமார் சாருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் எங்களுக்கெல்லாம் குருவாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.


ஸ்கிரிப்ட் ரைட்டர் மற்றும் இணை இயக்குனர் டோனி தாமஸ் பேசும்போது, "சந்திரகுமார் சாரை நான் சந்தித்து 2 வருடம் ஆகிறது. புத்தம் புது நேரம் படத்தை கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம். ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம்" என்றார். 


பாடலாசிரியர் கொங்கு கவி பாலு பேசும்போது, "என் பெயர் பாலசுப்ரமணியம். இந்த படத்தின் தலைப்பு பாடல் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது தான் என்முடய முதல் சினிமா பாடல். இதற்கு முன்பு நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன், 4 புத்தகங்களும் எழுதியிருக்கிறேன்" என்றார்.


நாயகி சுபஸ்ரீ பேசும்போது, "இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்ஃபாதர். இந்த புத்தம் புது நேரம் படம் வெற்றி பெற வேண்டும், ரசிகர்கள் ஆதரவு தேவை" என்றார்.


நாயகன் பரத்வாஜ் பேசும்போது, "சந்திரகுமார் சார் எங்கள் எல்லாருக்கும் அப்பா போன்றவர். எங்களது ஷூட்டிங் சினிமா செட் போலவே இருக்காது, குடும்பத்தினர் ஒன்றாக சுற்றுலா சென்றது போல தான் இருக்கும். விவசாயிகளின் முக்கியத்துவத்தை பற்றி இந்தப் படம் பேசுகிறது. என்னை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி" என்றார்.


நாயகன் சதீஷ்குமார் பேசும்போது, "சந்திரகுமார் சாருடன் என்னுடைய இரண்டாவது படம். சார் எல்லோருக்கும் தந்தை போன்றவர். ஆனாலும் அவர் என்னிடம் ஒரு நண்பன் போல தோளில் கைபோட்டு பழகுவார். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி" என்றார்.


நடிகர் ராஜ்குமார் பேசும்போது, "அடிப்படையில் நான் ஒரு வழக்கறிஞர். இந்த படத்தில் நடிக்கும்போது இது ஒரு குடும்ப கெட் டுகெதர் போலவே இருந்தது. எல்லோரும் ஒற்றுமையாக இந்த படத்தில் பணிபுரிந்தோம். உங்கள் அனைவரது ஆதரவும் எங்களுக்கு தேவை" என்றார்.


நடிகர் செந்தில் பேசும்போது, "புத்தம் புது நேரம் ஒரு படம் எனபதை விட குடும்பம் என்று தான் சொல்லணும். இந்த படத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை எடுத்து செய்தோம். இந்த குடும்பம் 2026-ல் ஐந்து திரைப்படங்களை எடுக்கப் போகிறோம் என்பதை சக்தி பீடம் சார்பில் பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்" என்றார். 


நடிகை ரசியா பேசும்போது, "என் வாழ்க்கையில் இப்படி ஒரு மனிதரை சந்தித்ததில்லை. ஒரு அப்பாவாக, குருவாக, வழிகாட்டியாக இருந்துள்ளார். நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். இந்த அளவுக்கு நான் நடிக்க காரணம் சார் தான். இந்த குழுவுடன் இன்னும் பல படங்களில் பணிபுரிய ஆசை" என்றார்.


பாடகி மாதங்கி அஜித்குமார் பேசும்போது, " இந்த படத்தில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பெருமை. நான் இதுவரை 25 பாடல்களை பாடியிருக்கிறேன். கே.ஜே.யேசுதாஸ், மது பாலகிருஷ்ணன் போன்ற லெஜண்ட்ஸ் உடன் பாடியிருக்கிறேன். இந்த படத்தில் வத்தலகுண்டு, கன்னி மாங்கா என இரண்டு பாடல்களை பாடியிருக்கிறேன். வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் பரஞ்சோதி சாருக்கும், இயக்குனர் சந்திரகுமார் சாருக்கும் நன்றி" என்றார்.

Thursday, 4 December 2025

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception

 *Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception*



Angammal, scheduled for its release this Friday (December 5), With the early press and preview shows completed, Angammal has already begun its journey with heartfelt appreciation from critics and audiences alike. The overwhelmingly positive response has resulted in the film expanding its theatrical footprint,  now releasing in 90 plus screens. The producers of Angammal share their thoughts on this proud milestone and the film’s emotional resonance.


Producer Kaarthekeyen S says, “We believed in Angammal from day one,  a film that speaks softly yet stays with you long after. Watching the audience embrace its honesty has been deeply fulfilling. The entire team, especially Geetha Kailasam and Saran Sakthi, has delivered performances that standout for their sincerity and emotional depth. The growing demand from theatres only confirms what we always felt, stories rooted in truth always find their way to the audience. My heartiest thanks to Director Vipin for such an amazing piece of work.” 


Producer Firoz Rahim says, “This film celebrates motherhood, dignity, and the quiet heroism of ordinary women,  themes that are rarely told with such purity. The crew worked with extraordinary passion, whether it was capturing sync-sound in challenging live environments or shaping visually arresting frames. Each preview show has reinforced our pride, Angammal is a film that touches hearts, provokes thought, and encourages conversations. We are grateful for this beautiful reception. With the entire team being a lovely support, I take this opportunity to the entire villagers, who were so supportive during the entire filming. Without their support and presence, Angammal would not have achieved its life.” 


Producer & Cinematographer Anjoy Samuel says, “For us, cinema becomes meaningful when emotion and craft travel together, and Angammal stands strongly on that foundation. Every actor delivered their performance with utmost dedication, making the visual storytelling truly alive. To see theatres increasing shows based on early reactions is a reward for the entire crew’s hard work. We are delighted that audiences are connecting with the authenticity we strived to achieve.”


Stone Bench Films presents Angammal, in association with Njoy Films & Firo Movie Station. The film is screenplay and direction by Vipin Radhakrishnan, adapted from a story by Perumal Murugan, featuring Geetha Kailasam, Saran Sakthi, Barani, Mulyarasi, Tendrel Raghunathan, and Vinodhananth, with cinematography by Anjoy Samuel and music & original background score by Mohammed Maqbool Mansoor. It is produced by Kaarthekeyen S, Firoz Rahim, and Anjoy Samuel, and co-produced by Shamsudeen Khalid and Anu Abraham.

அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல

 *‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல திரையரங்குகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!*



இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். 


தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி”.


தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம் கூறுகையில், “இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை” என்றார்.


தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் கூறுகையில், “உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ திரைப்படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார். 


நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ’அங்கம்மாள்’ திரைப்படத்தை வழங்குகிறது. 


*நடிகர்கள்:* நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,

மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,

தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,

இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,

ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,

இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்

Saara Movie Review

 Saara Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  sara  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது chellakutty. அதோட இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதி இருக்காரு. இந்த படத்துல sakshi agarwal, roboshankar, yogibabu, thangadurai, mirattal selva, ambika  னு பலர் நடிச்சிருக்காங்க.   சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 




sara வா நடிச்சிருக்க sakshi agarwal ஒரு construction company ல வேலை பாத்துட்டு இருக்காங்க. இதே company ல தான் இவங்களோட lover ஆனா vijay vishwa யும் வேலை பாத்துட்டு இருப்பாரு. இவங்க ரெண்டு பேரும் 6 years அ லவ் பண்ணிருப்பாங்க. இப்போ ரெண்டு வீடு parents ஓட சம்பந்தபடி நிச்சயமும் ஆயிடும். ஆனா தொடர்ந்து இவங்களோட இந்த relation ல பிரச்சனைகள் தான் வந்துட்டு இருக்கும். ஒரு பக்கம் company related அ mirattal selva ஓட sara க்கு பிரச்சனை வந்துட்டு இருக்கும். இன்னொரு பக்கம் படத்தோட second half ல வர chella வா நடிச்சிருக்க chellakutty ல வர பிரச்சனை. இந்த படத்தோட director தான் chella வா நடிச்சிருக்காரு. இவரோட அம்மா தான் ambika , chella வும் sara வும் நல்ல friends ஆயிடுறாங்க. chella வும் இந்த construction company ல ஒரு சின்ன வேலைய தான் பாப்பாரு அதோட படிச்சிருக்கவும் மாட்டாரு. இப்போ ஒரு வருஷம் கழிச்சு sara promote ஆயிருப்பாங்க. இப்போ திடுருனு ambika ஒரு accident க்கு அப்புறம் sara வை சந்திச்சு chella வை நீ தான் கல்யாணம் பண்ணிக்கணும் னு சொல்லுறாங்க. இப்போ sara தன்னோட lover ஆனா vijay vishwa வை கல்யாணம் பண்ணிப்பாங்களா? இல்ல chella வைய ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vijay vishwa lover அ நல்ல  perform பண்ணிருக்காரு. villain அ வர mirattal selva வும் எல்லாரையும் பயமுறுத்திடு போயிருக்காரு. chellakutty யும் ஒரு பக்கம் director அ இன்னொரு பக்கம் actor அ நல்ல perform பண்ணிருக்காரு. yogibabu , roboshankar , thangadurai இவங்களோட comedy யும் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. ambika நடிச்சிருக்க emotional scenes யும் நல்ல இருந்தது. படத்தோட technical aspects னு பாக்கும் போது karthik raja ஓட songs and bgm படத்துக்கு நல்ல set யிருந்தது. 


மொத்தத்துல  ஒரு நல்ல கதைக்களம் தான் இது . சோ miss பண்ணாம இந்த படத்தை  பாருங்க.

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40

 *இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது*








வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைமுக நோக்கங்கள், கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் என கதை முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருக்கும். 40 நிமிட குறும்படமாக இருந்த இந்த கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்திற்கு பின்பு திரைப்படமானது. 


குறும்படமாக இருந்த கதையை முழு திரைக்கதையாக மாற்ற தேவையான ஒழுக்கம், நேர்மை மற்றும் உழைப்பு என அனைத்தையும் படக்குழு வழங்கியது. இயக்குநர் மிதுனின் தந்தை கதைக்கு தேவையான பட்ஜெட் வழங்கி ஆதரவு கொடுக்க கதையின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மிதுன் கதை மீது முழு கவனம் செலுத்தினார். ’ஸ்டீபன்’ கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை கோமதி சங்கர் அட்டகாசமாக திரையில் பிரதிபலித்துள்ளார்.


படம் குறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் ஸ்டீபன் கதாபாத்திரத்தை முதலில் கற்பனை செய்ததற்கும் அப்பால் கதை வளர்ந்தது. சிறிய குறும்படமாக ஆரம்பித்த இந்தக் கதை பலகட்ட ஆய்வு, சிந்தனை மற்றும் தைரியத்திற்கு பிறகு முழு திரைக்கதையானது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ‘ஸ்டீபன்’ என அனைவருக்கும் பரிச்சயமான பெயரைத் தேர்வு செய்தோம். இந்தப் படம் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அவரது சேமிப்பில் இருந்து இந்தப் படத்திற்கு நிதி கொடுத்தார். அந்தப் பொறுப்போடு சேர்த்து இயக்கம், எழுத்து, தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு என பல பணிகளை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ‘ஸ்டீபன்’ படத்தைப் பார்க்க ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார். 



நடிகர் மற்றும் இணை எழுத்தாளரான கோமதி சங்கர் கூறுகையில், “’ஸ்டீபன்’ கதையை எழுதுவதில் நானும் பங்களித்திருப்பதால் அந்தக் கதபாத்திரத்துடன் என்னால் ஆழமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. நாங்கள் உருவாக்கிய இந்தக் கதை உலகம் பரபரப்பானதாகவும் அமைதியற்றதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் இருந்தது. அதனால், ஒரு நடிகனாக இந்தக் கதையில் நடித்திருப்பது எனக்கு சவாலான விஷயம்தான். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நேர்மையுடன் எடுத்திருக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ‘ஸ்டீபன்’ திருப்தியான உணர்வை தரும்” என்றார். 


உளவியல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘ஸ்டீபன்’ யார் என்பதற்கு பதிலாக ஏன் என்று உங்களை யோசிக்க வைக்கும். 


டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.

Fueled by heart, craft, and a father’s savings — ‘Stephen’ rises from a 40-minute

 *Fueled by heart, craft, and a father’s savings — ‘Stephen’ rises from a 40-minute

short to a global psychological thriller, premiering Dec 5th on Netflix* 








In a twist from the usual crime playbook, Stephen starts where most thrillers end: the killer confesses. Premiering on Netflix on December 5th, Stephen is a simmering

psychological thriller written and directed by debut filmmaker Mithun Balaji. Starring Gomathi

Shankar, with Michael Thangadurai and Smruthi Venkat in key roles, the film explores hidden motives, murder, and unresolved trauma with a pace full of twists. Originally a 40-minute short film, it evolved into a feature after over one-and-a-half years of writing and research, shaped by their obsession with documentaries and real psychological cases.


As the narrative grew, so did the scale of its ambition. What began as a modest idea evolved into a feature project defined by discipline, restraint, and emotional honesty. Backed by a budget provided by Mithun’s father, Mithun had the space to steer the film entirely as its writer, director, and

producer. Gomathi’s performance carries the rawness of someone who helped build the character

from the ground up, giving Stephen its unsettling emotional core.

Speaking of the film, director, Mithun Balaji said, “Stephen grew far beyond what we first

imagined. A small short film slowly became a story that demanded more thought, more research, and more courage. 


We chose a name that feels familiar across cultures because the film speaks to

universal emotions. My father stepped in and funded this film from his savings so we could chase this dream which meant I had to step into every role the film demanded - directing, writing, producing, and editing. For our entire team to see it premiere on Netflix on December 5 feels like the

moment this entire journey was meant for.

Adding to that actor and co-writer, Gomathi Shankar, said, “Being part of Stephen right from the writing table gave me a deeper connection to the character than I’ve ever had before. The world we were creating was fragile, unsettling, and emotional, and stepping into it as an actor was both

demanding and rewarding. We didn’t have extravagant resources, so every scene relied on sincerity

and collaboration. Knowing that this film, which began so modestly, is now arriving on Netflix for audiences everywhere feels truly fulfilling.”

As Stephen arrives on Netflix on December 5- a small story that grew into a tense, atmospheric thriller. Instead of chasing shadows, Stephen invites you to sit with the uncomfortable truth that the

“why” is often far more haunting than the “who”.

WATCH STEPHEN EXCLUSIVELY ON NETFLIX FROM DEC 5TH

சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா

 *'சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா* 








*யோகிபாபு - விஜய் விஷ்வா -  சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் 'சாரா*


நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி  இயக்கியுள்ளார்.


இப்படத்தில் சாக்ஷி அகர்வால்,  தங்கதுரை,  அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.


இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சாரா’ படத்தின் டிரெய்லரை திரையிட்டு குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். இத்துடன், அங்கு நடிகர் நெப்போலியனின் பிறந்தநாளை உணவு வழங்கி கொண்டாடினர்.


அத்துடன், சமீபத்தில் மரணமடைந்த மறைந்த நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.


மேலும்,  விஜய் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள அவரது அடுத்த திரைப்படமான “பிரம முகூர்த்தம்”  விரைவில் திரைக்கு வர இருக்கிறது.