Featured post

Theeyavar Kulai Nadunga

Theeyavar Kulai Nadunga Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம theeyavar kulai nadunga படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக...

Friday, 21 November 2025

Theeyavar Kulai Nadunga

Theeyavar Kulai Nadunga Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம theeyavar kulai nadunga படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dinesh Lakshmanan.   இதுல  Arjun, Aishwarya Rajesh, Anikha, Praveen Raj  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



படத்தோட ஆரம்புதலையே ஒரு மர்மமான கொலை நடக்குது. writer jebanesan அ நடிச்சிருக்க logu npks அ ராத்திரி நேரத்துல ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு road ல வச்சு யாரோ கொலை பண்ணிடுறாங்க. கொலை பண்ணவன் தலை ல இருந்து கால் வரைக்கும் நல்ல cover பண்ணிருப்பா. அவன் helmet sunglass அப்புறம் black colour dress னு எல்லாத்தயும் போட்டு complete அ தன்னை cover பண்ணிருக்கான்.  இது ஒரு serial killer பண்ண வேலைய? jebanesan எதுக்காக அவரோட பொண்ணு கிட்ட அழுதுகிட்டு phone ல பேசுனாரு? இந்த கொலை எதுக்காக நடந்தது னு பல கேள்விகள் police department க்கு வருது.  


இப்போ அடுத்ததா inspector magudapathy  அ நடிச்சிருக்க arjun அ காமிக்கறாங்க. இவரு ஒரு tough ஆனா police officer . இவரை introduce பண்ணும்போதே hidden evidence ன்ற book படிச்சிட்டு இருப்பாரு அதுல இருந்து இவரோட பார்வை எவ்ளோ துல்லியமா இருக்கும் னு நம்ம புரிஞ்சுக்கலாம். இவரோட area ல இந்த கொலை நடந்த னால இந்த case  இவருகிட்ட வருது. இது ஒரு straightforward investigation அ இல்லாம நெறய thrilling ஆனா layers அ வச்சு ரொம்ப interesting அ இந்த கதையை கொண்டு போயிருக்காங்க. இந்த case அ investigate பண்ணும்போது தான் இன்னொரு interesting ஆனா lead கிடைக்குது. அது writer அ வேலை செய்யற jebanesan க்கும் construction company அ வச்சு நடத்துற ஒரு பெரிய பணக்காரர் ஆனா varadharajan அ நடிச்சிருக்க ramkumar ஓட ஒரு link இருக்கு. 


இப்போ பக்கம் ரெண்டு close friends அ காமிக்கறாங்க. அவங்க தான் adhi அப்புறம் rahul. adhi ஓட வேலை என்னனா snoring problem இருக்கற patients அ treat பண்ணுவான் அதுமட்டுமில்ல sleep therapy யும் practise பண்ணுவான். இவன் எங்க போனாலும் rahul யும் போவான். இப்போ அடுத்ததா meera வா நடிச்சிருக்க aishwarya rajesh அ காமிக்கறாங்க. adhi இவங்கள love பண்ணுவான். meera autism இருக்கற குழந்தைங்க படிக்கற school ல teacher அ வேலை பாப்பாங்க. இவங்களோட role  அ ரொம்ப complex  அ இருக்கும். அதே சமயம் jebanesan யும் ரொம்ப நல்லவரும் கிடையாது . இவங்க எல்லாருமே எப்படி connect  ஆகுறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல வர கதை ஒரு உண்மையான சம்பவந்த base பண்ணி தான் எடுத்துருக்காங்க. ஊழல், குற்றம், morality  னு நெறய விஷயங்களை எடுத்து சொல்லுற விதமா இந்த படம் அமைச்சிருக்கு. இந்த படத்துல ஒரு சில இடங்கள் ரொம்ப slow போன மாதிரி ஒரு feel அ குடுக்குது. உதாரணத்துக்கு adhi அப்புறம் meera ஓட love track ரொம்ப boring அ இருக்கும். இதெல்லாம் கொஞ்சம் avoid பன்னிருந்த இந்த படம் இன்னும் நல்ல இருந்திருக்கும். 


performances னு பாக்கும்போது arjun அப்புறம் aishwarya rajes ஓட நடிப்பும் super அ இருந்தது. arjun investigate பண்ணுற விதமா இருக்கட்டும் aishwarya rajesh ஓட emotions அ வெளிக்காட்டுறத இருக்கட்டும் எல்லாம் perfect  அ இருந்தது. ஒரு சில sexual  violence scenes லாம் ரொம்ப அதிகமா காமிச்சிருப்பாங்க. இந்த கொஞ்சம் sensitive அ handle  பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். 


கதைக்களம், டிரெக்ஷன் னு எல்லாமே அட்டகாசமா இருக்கற படம் தான் இது. so உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Middle Class Family Movie Review

Middle Class Family Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம middle class படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Kishore Muthuramalingam .   இதுல  munishkanth, vijayalakshmi, radharavi , kaalivenkat , kureshi  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

இந்த படத்தோட கதையை ரொம்ப simple அ சொல்லனும்னா ஒரு சாதாரண middle class family இருக்காங்க. திடுருனு அவங்களுக்கு நெறய பணம்  கிடைக்குது, ஆனா அது தொலைஞ்சு போயிடுது. இதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் னு plan பண்ணுறாங்க. இது ஒரு பழக்கப்பட்ட கதையை இருந்தாலும் ரொம்ப realistic அ logical அ கதையை கொண்டு போன விதம் தான் super னு சொல்லணும். முக்கியமா munishkanth ஓட எதார்த்தமான நடிப்பு இந்த படத்துக்கு இன்னொரு அழகு. ஒரு பக்காவான family entertaining படமா தான் இது அமைச்சிருக்கு. இந்த படத்தோட கதையை இப்போ detailed அ பாக்கலாம். marx ன்ற character ல  munishkanth நடிச்சிருக்காரு. இவரோட அப்பா தான் இந்த பேரா வச்சிருப்பாரு அதுக்கு காரணம் அவருக்கு அரசியல் மேல இருக்கற பிரியம் தான். இவரோட life ரொம்ப கஷ்டத்துல தான் போகுது. அப்போ தான் இவரோட அப்பா விட்டுட்டு போன ஒரு பழைய land document கிடைக்குது. இவரோட அப்பா rajasthan ல வசிக்கிற ஒரு businessman க்கு help பண்ணிருப்பாரு. அதுக்கு நன்றிக்கடனா அந்த businessman யும் ஒரு கோடி ரூபாய் க்கு blank cheque அ குடுத்துருப்பாரு. ஏற்கனவே குடும்ப கஷ்டத்துல வாழுற marx க்கு இந்த cheque கிடச்சஓடனே ரொம்ப சந்தோச படுறாரு. ஆனா திடுருனு எப்படியோ  இந்த cheque அ தொலைச்சுடுறாரு. இதுக்கு அப்புறம் இவங்க இந்த cheque ஓட தேடுதல் வேட்டை தொடுறது அதோட நெறய comedy scenes யும் வச்சுருக்காங்க. marx ஓட மனைவி ஒரு பக்கம் அப்புறம் இவரோட ரெண்டு comedy ஆனா friends யும் சேந்து இந்த cheque அ தேடுறதுக்கு help பண்ணுறாங்க. இதெல்லாமே ரொம்ப comedy அ கொண்டு போயிருப்பாங்க. இதுக்கு அப்புறம் இவங்களுக்கு இந்த cheque கிடைச்சுதா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performances னு பாக்கும்போது munishkanth தான் இந்த படத்தோட பலமே. இவரோட இந்த middle class character அ ரொம்ப நேர்த்தியா genuine அ நடிச்சிருக்கறது தான் super அ இருந்தது. அதுமட்டுமில்ல audience அ performance மூலமா இவரு பக்கம் இழுத்துருக்காரு. அடுத்தது இவருக்கு wife அ வர vijayalakshmi . எப்பவுமே husband க்கு தொல்லை குடுக்கற wife அ ivangaloda acting யும் super அ இருந்தத்த்து. radharavi ஓட entry படத்துல ரொம்ப late அ இருந்தாலும் ஒரு strong ஆனா presence அ தான் குடுத்திருக்காரு. அப்புறம் kaalivenkat  and kureshi ஓட performance யும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது editing அப்புறம் screenplay எல்லாம் இந்த படத்துக்கு பக்கவா குடுத்திருக்காங்க. cinematography யும் ரொம்ப realistic ஆவும் natural ஆவும் இருந்தது. இந்த படத்துல songs லாம் கிடையாது ஆனா bgm எல்லாம் பக்கவா குடுத்திருந்தாங்க. 


மொத்தத்துல munishkanth ஓட அட்டகாசமான performance , super ஆனா கதைக்களம், ரசிக்க வைக்கிற விதமான comedy scenes னு இருக்கற படம் தான் இந்த middle class . so miss பண்ணாம உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாத்துட்டு வாங்க.

Mask Movie Review

Mask Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mask படத்தோட review எ தான் பாக்க போறோம். விக்ரமன் தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Kavin ,  Andrea Jeremiah  ,Ruhani Sharma , Charle  ,Ramesh Thilak  ,Kalloori Vino ,Archana Chandhoke .Redin Kingsley .Pavan 

Aadukalam Naren ,Subramaniam Shiva ,Rohith டென்னிஸ்,  Venkat , Magalakshmi னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


velu வா நடிச்சிருக்க kavin ஒரு detective அ இருக்காரு. இவரு ரொம்ப intelligent ஆனா selfish ஆனா person . இவரை பொறுத்த வரைக்கும் பணம் தான் எல்லாம். அதுனால இவருகிட்ட வர clients எல்லாரையும் ஏமாத்தி பணத்தை வாங்குறாரு .  இவரோட personal life னு பாக்கும் போது இவரோட marriage already மோசமான நிலமைல தான் இருக்கும் அதோட இவரோட குழந்தையும் அதிகமா பாதுக்கமாட்டாரு இருந்தாலும் பணத்தைக்காக எல்லா வேலைகளையும் பண்ணுறாரு. இப்போ தான் rathi யா நடிச்சிருக்க ruhani sharma வை சந்திக்குறாரு. இவங்களோட relationship romantic அ மாறுது. இருந்தாலும் அது ரொம்ப straightforward அ இருக்காது. ஏன்னா rathi க்கும் marriage ஆயிருக்கும். இவங்களுக்கு இதுக்கு மேல இந்த marriage ல இருக்க முடியாது ன்ற point ல தான் velu வை சந்திக்கறாங்க. rathi அப்புறம் velu வோட relationship ரொம்ப complicated அ இருக்கும். இப்போ bhoomi யா நடிச்சிருக்க andrea வை காமிக்கறாங்க. இவங்க ஒரு powerful ஆனா social activist . இவங்க abuse பண்ணப்பட்ட women அ encourage பண்ணி அவங்க ஒரு புது life அ lead பண்ணுற அளவுக்கு help பண்ணுறாங்க. ஆனா இதுக்கு பின்னாடி இவங்களுக்கு இன்னொரு முகமும் இருக்கு. bhoomi politics ல நடக்கற ஒரு சில backwork க்கு  இந்த பொண்ணுங்கள தான் use பண்ணுறாங்க. அதுமட்டும் இல்ல இந்த பாதிக்கப்பட்ட பெண்களோட personal விஷயங்களை record பண்ணி வச்சு இவங்க சொன்ன வேலைய செய்யலைன்னா blackmail பண்ணுறாங்க. அப்போ தான் bhavan ன்ற ஒரு அரசியல்வாதி அவனோட area ல பணத்தை distribute பண்ணுறதுக்காக bhoomi கிட்ட 440 கோடியா குடுக்கறாங்க. இவளோ பெரிய amount அ அவளோட supermarket ல தான் ஒளிச்சு வைக்கிற. இப்போ இந்த பணத்தை திருடுறதுக்காக m r radha mask போட்டு  ஒரு gang வருது. இதுல எப்படியோ velu மாட்டிக்கற. அதுமட்டுமில்ல இந்த mask radhi ஓட husband bag ல கிடைக்கும். இப்போ இந்த பணத்தை யாரு திருடின ? velu இந்த பிரச்சனைல இருந்து தப்பிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


performances னு பாக்கும் போது kavin ஓட acting அட்டகாசமா இருந்தது. ரொம்ப selfish அ cunning அ manipulative அ செமயா perform பண்ணிருக்காரு. andrea ஒரு powerful ஆனா character அ நடிச்சிருக்காங்க. இவங்களோட ரெண்டு side அதாவுது ஒரு பக்கம் activist ஆவும் இன்னொரு பக்கம் mastermind அ இருக்கிறது தான் இந்த படத்தோட highlight ஆனா விஷயம். ruhani யும் எதார்த்தமா நடிச்சிருக்காங்க. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப நேர்த்தியை நடிச்சிருக்காங்க. 


இந்த படத்தோட techincal aspect அ பாக்கும் போது cinematography super அ இருந்தது. visuals அ இருக்கட்டும், அந்த mask போட்ட கும்பல் பணத்தை கொள்ளையடிக்கற scenes ல இருக்கற tension னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. gv prakash ஓட music and bgm யும் இந்த கதைக்கு super அ set யிருந்தது. climax scene தான் இன்னும் வேற level ல இருந்தது அதுமட்டுமில்ல இதுக்கு வந்த bgm யும் mass அ இருந்தது. இந்த படத்தோட editing யும் பக்கவா பண்ணிருக்காங்க. director vikraman இயக்குற முதல் படம் இது தான். இந்த உலகத்துல எல்லாருமே அவளோட சுயலாபத்துக்காக தான் வாழுறாங்க இதுல யாரும் நல்லவர்களும் கிடையாது கெட்டவர்களும் கிடையாது ன்ற விஷயத்தை ரொம்ப அழகா கதையை கொண்டு வந்தது தான் இந்த படத்தோட மிக பெரிய strenght னு சொல்லணும். 

ஒரு தரமான interesting ஆனா படம் தான் இது. சோ miss பண்ணாம theatre ல போயி பாருங்க.




Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக

 *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!*



Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது.  


இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.


டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.


முழுக்க முழுக்க நவீன இக் கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு, தலைமுறையின் புழக்கத்தில் இருக்கும் “வித் லவ் ( With Love )”  தலைப்பு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  டீசர் தற்போது இணையம் முழுக்க பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்



LINK : 

https://www.youtube.com/watch?v=gNrYsSN0V9A

Yellow Movie Review

Yellow Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yellow படத்தோட review அ தான் பாக்க போறோம். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poornima Ravi, Vaibhav Murugesan, Sai Prasanna, Leela Samson, Vinodhini Vaidhyanadhan, Prabu Soloman, Namita Krishnamoorthy, Vigneshwar, Loki, Ajay னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் 21st nov அன்னிக்கு release ஆயிருக்கு.   சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


aadhirai யா நடிச்சிருக்க poornima ravi அவங்களோட higher studies யும் நல்ல salary இருக்கற job யும் விடணும் னு நினைக்கிறாங்க. இதுக்கு காரணம் இவங்களோட அப்பாவா நடிச்சிருக்க delhi ganesh க்கு சில health issues இருக்கிறது தான். இந்த பிரச்சனை போயிடு இருக்கும் போது இவங்களோட lover santhosh அ நடிச்சிருக்க sai prasanna ஓட சில கருத்து வேறுபாடு ஆலா breakup ஆயிடுது.  ஒரு பக்கம் ஒரே மாதிரி போயிடு இருக்கற bank job இன்னொரு பக்கம் family  ஓட responsibility னு சோந்து போயிருக்கிற aadhirai , திடுருனு ஒரு நாள் கேரளா க்கு trip பிளான் பண்ணி போறாங்க. அங்க போய் அவங்களோட school  friends அப்புறம் relatives அ பாத்து கொஞ்ச நாள் நல்ல jolly அ நாட்களை spend பண்ணனும் னு நினைக்கிறாங்க. அப்படி போகும் போது தான் jenny  அ நடிச்சிருக்க namitha krishnamoorthy அப்புறம் sai யா நடிச்சிருக்க vaibhav murugesan னு ரெண்டு பேரா சந்திக்கறாங்க aadhirai . இந்த journey ல இவங்களோட life ல என்னனலாம் சந்திக்க போறாங்க? kerala க்கு போறதுக்கான காரணம் நிறைவேறிச்ச இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


actors ஓட performance னு பாக்கும் போது poornima ravi ஓட acting super அ இருந்தது. இவங்க youtube channel ல ரொம்ப famous அதுமட்டும் இல்லை சில படங்கள் ல சின்ன சின்ன character ளையும் நடிச்சிருக்காங்க. ஒரு lead role அ  இது தான் இவங்களுக்கு முதல் படம். இதுல இவங்களோட bodylanguage அ இருக்கட்டும், emotions அ காமிக்க்ர விதமா இருக்கட்டும் dialogues அ இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. heroine ஓட journey ல friend அ வர vaibhav murugesan ஓட acting யும் ரொம்ப genuine அ இருந்தது. நெறய audience க்கு இவரோட sai character ரொம்பவே பிடிக்கும். படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors heroine ஓட journey அங்க அங்க வந்துட்டு போனாலும் கதைக்கு importance அ தர characters அ தான் இருக்காங்க. 


இந்த படத்தோட technical team னு பாக்கும்போது, cinematography அ பத்தி சொல்லியே ஆகணும். heroine ஓட journey அ காமிச்சா விதமா இருக்கட்டும், heroine travel பண்ணுற இடங்கள் அதாவுது kerala, goa னு இது எல்லாமே ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு abi adhvik. cliffy chris ஓட songs இந்த படத்துக்கு ரொம்ப அருமையா set யிருந்தது. anadh kasinath ஓட bgm இந்த படத்தை இன்னொரு level க்கு எடுத்துட்டு போகுது னு தான் சொல்லணும். ஒரு ரெண்டு பேரோட journey , அவங்களோட self discovery அப்புறம் personal growth க்கான தேடல் இதெல்லாமே ரொம்ப interesting அ இருக்கற மாதிரி edit பண்ணிருக்கற ஸ்ரீ வத்சன் ஓட editing யும்  அருமை தான். கதையை எழுதி இயக்கி இருக்கற ஹரி mahadevan யும் நெறய விஷயங்களா audience ஆழ connect பண்ணிக்கற மாதிரி நெறய gentle ஆனா moments குடுத்து ஒரு soulfull ஆனா படத்தை தான் குடுத்திருக்காரு. 


மொத்தத்துல நம்மோட மனச வருடுற மாதிரியான படம் தான் இந்த yellow. சோ மறக்காம இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள்

 *தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களில் பொருந்திப் போவார்கள்?*





‘ஜூடோபியா’ திரைப்படம் தமிழில் உருவாகும்போது உணர்வுப்பூர்வமான, ஸ்டைலிஷான அதிரடி சாகசங்களுடன் அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். ’ஜூடோபியா’ திரைப்படத்தின் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திலும் எந்தெந்த தமிழ் சினிமா நடிகர்கள் பொருந்திப் போவார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். 


*ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா:*

ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நிலையான உறுதிப்பாடு மற்றும் கருணை ஆகியவற்றை மிகச்சரியாக தன் நடிப்பில் பிரதிபலிப்பதில் திறமையானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா கதைப்படி ஜூடி தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்பட்டாலும், ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காணும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த ஒரு எளிய பெண். புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் வலிமையான உணர்வுகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. ஜூடியாக அவரது வெர்ஷன் மிகவும் தீவிரமானதாகவும், நம்பிக்கையுடன் தனது கனவு நோக்கி பயணிக்கும் யதார்த்தமான பெண்ணை தனது நடிப்பில் சிறப்பாக கொண்டு வருவார். நீதி மற்றும் சமூக மாற்றத்தினை எதிர்நோக்கும் சக்திவாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் பயணமாக ஜூடி கதாபாத்திரத்தை நயன்தாரா மாற்றுவார்.


*நிக் வைல்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்:*

இயல்பான நகைச்சுவை, வசீகரம், ஆண்களுக்கே உரித்தான குறும்பு என நிக் வைல்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகச்சரியாக பொருந்திப் போவார். மென்மையான பேச்சு, புத்திசாலித்தனம், தனது காயங்களை மனதிற்குள் மறைத்தல் போன்றவை நிக் கதாபாத்திரத்தின் தன்மை. இவற்றோடு நகைச்சுவை, உள்ளூர் பேச்சுவழக்கு மற்றும் உணர்ச்சிகரமான பல தருணங்களை தனது நடிப்பில் சிவகார்த்திகேயன் நிச்சயம் கொண்டு வருவார். விளையாட்டுத்தனமாகவும் பல உணர்வுகளையும் கொண்ட ஜூடி மற்றும் நிக் கூட்டணிக்கு நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் சரியாகப் பொருந்திப் போவார்கள். 



*கேரி டி'ஸ்னேக் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா:*

ஜூடி மற்றும் நிக் ஆகியோரால் துரத்தப்படும் கேரி ஒரு விரியன் பாம்பு என்பதால் இந்த கதாபாத்திரத்தில்  நடிகர் எஸ்.ஜே. சூர்யா மிகச்சரியாகப் பொருந்திப் போவார். உணர்வுகளை வெளிப்படுத்தும் எஸ்.ஜே. சூர்யாவின் குரல், வசீகரம் ஆகியவை கேரியின் ஆளுமைக்கு சரியாக பொருந்துகின்றன. தமிழ் வெர்ஷனில் கேரி வேகமாகப் பேசும் மற்றும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் விரக்தியில் மட்டுமே குற்றங்களைச் செய்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வரை அவர் நோக்கங்கள் தெளிவற்றதாகவும் இருக்கும். எஸ்.ஜே. சூர்யா நகைச்சுவையான, உணர்ச்சிவசப்பட்ட, சற்று குழப்பமான மற்றும் அனுதாபமுள்ள ஒரு கதாபாத்திரத்தை திரையில் சித்தரிக்க முடியும். இது தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்புபடியாகவும் இருக்கும். ஜூடி மற்றும் நிக்குடனான துரத்தலுடன் கேரியின் பயணம் தமிழ் சினிமா பாணியில் ஆடம்பரமாகவும், சஸ்பென்ஸாகவும், ஸ்டைலாக இருக்கும்.


*கெஸல் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா:*

கெஸல்லின் கவர்ச்சி, நளினம் மற்றும் இசை ஒளிக்கு நடிகை ஆண்ட்ரியா சரியாக பொருந்துகிறார். அவரது நம்பிக்கை, நவீன பிம்பம் மற்றும் பாடும் திறமை ஆகியவை கெஸல் கதாபாத்திரத்தின் கலை நுணுக்கத்தைப் பெறுவதோடு, ’ஜூடோபியா’ படத்தின் பாப்-ஸ்டார் அழகைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆண்ட்ரியாவின் கெஸல் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், மோதல்கள் நிறைந்த ’ஜூடோபியா’வில் ஒற்றுமையை ஊக்குவிக்க தனது குரலைப் பயன்படுத்தும் நபராகவும் இருப்பார். அவரது உலகளாவிய பாடல்களில் தமிழ் இசையையும் இணைக்க முடியும். 


*சீஃப் போகோ கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ்:*

சீஃப் போகோ கதாபாத்திரத்திற்கு கட்டளையிடும் குரல், அதிகாரபூர்வமான நடத்தை, உறுதியான ஆனால் இறுதியில் நியாயமான தலைவராக நடிக்கும் திறன் தேவை. இந்த அனைத்து குணங்களையும் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பாக திரையில் பிரதிபலிப்பார். போகோவின் அவரது வெர்ஷன் கண்டிப்பான, புத்திசாலித்தனமான காவல்துறை அதிகாரியாக இருக்கும். ஆரம்பத்தில் சிறியவளான ஜூடியை நிராகரித்தவர் பின்னர் படிப்படியாக அவளுடைய திறனை அங்கீகரிக்கிறார். தீவிரமான, பல உணர்வுகளுடன் மிகவும் வலுவான போகாவை திரையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதிபலிப்பார். கதை அடுத்தடுத்து நகரும்போது, அவர் காவல்துறையின் சக்திவாய்ந்த அடித்தளமாக மாறுகிறார். இட்ரிஸ் எல்பாவின் அசல் தன்மையை கொண்டு வருவதுடன் தமிழ் சினிமாவுக்கும் ஏற்றபடி இந்தக் கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் திறமையுடன் கையாள்வார்.

*If Zootopia Were Made in Kollywood, Here’s Who Would Play the Characters

 *If Zootopia Were Made in Kollywood, Here’s Who Would Play the Characters*





A Kollywood-style Zootopia would bring emotional intensity, stylish chase sequences, and character-driven storytelling. With Tamil actors embodying new animal personalities, the film’s dynamic shifts—especially with Gary, now reimagined as a pit viper trying to help his family. Here’s how each main character fits into the Tamil cinema landscape.


Judy Hopps – Played by Nayanthara

Nayanthara embodies the perfect blend of fierce determination and composed grace needed for Judy Hopps. In a Kollywood retelling, Judy would become a small-town Tamil Nadu girl who dreams of becoming a police officer despite being constantly underestimated. Nayanthara has proven her ability to carry roles where intelligence, courage, and emotional strength intersect. Her version of Judy would be more intense, grounded in realistic struggle but still driven by hope. She would bring a mature resilience, turning Judy’s fight against bias into a powerful and inspiring journey rooted deeply in Tamil cinema’s themes of justice and societal change.


Nick Wilde – Played by Siva Karthikeyan

Siva Karthikeyan fits Nick Wilde naturally because of his effortless comedic timing and charming, boyish mischief. His Nick would be a smooth-talking, street-smart Chennai con artist who hides his emotional wounds behind wit. Kollywood would lean into his humor, adding local comedic flavour, slang, and charismatic swagger. But SK also shines in emotional scenes, allowing Nick’s vulnerability to surface beautifully at key points. His chemistry with Nayanthara would turn Judy and Nick’s partnership into something both playful and emotionally layered.


Gary De'Snake – Played by SJ Suryah

Since Gary is a pit viper trying to protect his family while being pursued by Judy and Nick, SJ Suryah becomes the ideal Kollywood equivalent. His expressive voice, slightly eccentric charm, and ability to portray morally grey characters fits Gary’s personality perfectly. In the Tamil version, Gary becomes a fast-talking, slippery, unpredictable snake whose motives remain ambiguous until he reveals he’s only committing crimes out of desperation to save his family. SJ Suryah can portray a character who is funny, emotional, slightly chaotic, and sympathetic — giving Gary a dramatic complexity that Kollywood audiences love. His chase sequences with Judy and Nick would be visually flamboyant, suspenseful, and stylishly over-the-top in true Tamil cinema fashion.


Gazelle – Played by Andrea Jeremiah

Andrea Jeremiah perfectly suits the glamour, grace, and musical aura of Gazelle. Her natural confidence, modern image, and strong singing talent allow the character to retain the pop-star beauty of the original while gaining a Kollywood-style artistic edge. Andrea’s Gazelle would not just be a performer but a symbolic figure who uses her voice to promote unity in a conflict-ridden Zootopia. Her songs could incorporate Tamil musical influences while still feeling global. She would elevate Gazelle into an elegant, inspiring sensation in Tamil cinema.


Chief Bogo – Played by Prakash Raj

Chief Bogo needs a commanding voice, an authoritative demeanor, and the ability to play a firm yet ultimately fair leader — all qualities Prakash Raj excels at. His version of Bogo becomes a strict, no-nonsense police chief who initially dismisses Judy due to her small size but gradually recognises her potential. With his trademark intensity, Prakash Raj would create a Bogo who is intimidating yet layered, allowing moments of vulnerability and respect to shine through as the story progresses. He becomes the powerful foundation of the police force, mirroring Idris Elba’s original gravitas but with a uniquely Tamil dramatic sharpness.

I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein

 *”I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein*





_Tere Ishk Mein will release in cinemas on 28th November in Hindi, Tamil and Telugu._


As the AR Rahman album from Tere Ishk Mein continues to trend and the trailer garners massive applause, the buzz around the film is at an all-time peak. Fans can’t stop talking about the crackling chemistry between Dhanush and Kriti, with their new pairing becoming a major highlight ahead of release. Riding on this wave of excitement, Kriti opened up about her dynamic working experience with Dhanush, revealing the strong creative bond that shaped many of the film’s unforgettable moments.


*Speaking about her experience working with Dhanush, Kriti shares*, “I think Dhanush is an incredible actor, I have always been an admirer of his talent and his craft. I feel he has a very strong hold on his craft. He’s very nuanced; he also directed a lot of films, and comes from a lot of experience and understanding of scenes and how it will translate on the screen. He really brings out a lot of layers in his character and I was very excited to work with him. I knew I’m going to have an actor who I can really feed off from… that is exactly what happened. And we had not met before, and even Shankar and Mukti in the film at a point had not met before, so that worked out!”


*Adding further about their on-screen dynamic and the process of creating powerful performances, she continues*, “We have some really intense scenes, a lot of really long scenes that can, you know, translate when both of us feed off each other. He’s really collaborative as an actor and really helpful. I think together we have created some magical moments and felt it when the scene happened. Both of us would look at each other and we were like, ‘That was a good scene!’ I have really enjoyed working with him and I hope we do a lot more work in the future.”


As audiences eagerly await for Shankar and Mukti’s  passionate chemistry and hard-hitting dialogues, Tere Ishk Mein is poised to be one of the most compelling releases of the year. 


Gulshan Kumar, T-Series, and Colour Yellow present 'Tere Ishk Mein', produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi and Tamil on 28th November 2025.

தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்

 *தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்!*

 




"நாங்கள் இருவரும் இணைந்து சில மாயாஜால தருணங்களை உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன்” என ‘தேரே இஷ்க் மே’ படத்தில் தனுஷுடன் பணியாற்றியது குறித்து க்ரிதி சனோன் நெகிழ்ச்சி. ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் நவம்பர் 28 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.


‘தேரே இஷ்க் மே’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த, பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில், அதன் டிரெய்லரும் பெரும் வரவேற்பை பெற்றதாலும், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன்க்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பற்றி ரசிகர்கள் பேசுவதை நிறுத்தவில்லை; இந்த புதிய ஜோடி, படம் வெளியாவதற்கு முன்பே ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது. இந்த உற்சாக அலையில் பயணிக்கும் க்ரிதி சனோன், தனுஷுடனான தனது துடிப்பான நடிப்பு அனுபவத்தை பற்றி மனம் திறந்துள்ளார்; இது படத்தின் பல மறக்க முடியாத தருணங்களை வடிவமைத்த வலுவான படைப்பு பிணைப்பை வெளிப்படுத்துகிறது.


தனுஷுடன் பணியாற்றிய தனது அனுபவத்தை பற்றி பேசிய க்ரிதி சனோன், “நான் தனுஷை ஒரு நம்ப முடியாத நடிகர் என்று நினைக்கிறேன்; நான் எப்போதும் அவரது திறமை மற்றும் நடிப்பிற்கு ரசிகையாக இருந்திருக்கிறேன். அவர் தனது நடிப்பில் மிகவும் வலுவான பிடிப்பை கொண்டிருப்பதாக உணர்கிறேன். அவர் மிகவும் நுணுக்கமானவர்; அவர் பல படங்களையும் இயக்கியுள்ளார், மேலும் காட்சிகள் மற்றும் அது திரையில் எப்படி வெளிப்படும் என்பது பற்றிய மிகுந்த அனுபவத்துடனும் புரிதலுடனும் வருகிறார். அவர் தனது கதாபாத்திரத்தில் பல அடுக்குகளை வெளிக்கொண்டு வருகிறார், அவருடன் பணியாற்ற நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய ஒரு நடிகருடன் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு தெரியும்... அதுதான் நடந்தது. நாங்கள் இதற்கு முன்பு சந்தித்ததில்லை, படத்தில் வரும் சங்கர் மற்றும் முக்தி கூட ஒரு கட்டத்தில் சந்தித்ததில்லை, அதனால் அது சரியாக அமைந்தது!” என்று பகிர்ந்து கொண்டார்.


மேலும், அவர்களது ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை உருவாக்கும் செயல்முறை பற்றி தொடர்ந்து, அவர் கூறுகையில், “எங்களிடம் சில மிகவும் தீவிரமான காட்சிகள் உள்ளன, மிக நீண்ட காட்சிகள், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படும்போது அவை வெளிப்படக்கூடும். அவர் ஒரு நடிகராக மிகவும் ஒத்துழைப்புடன் இருக்கிறார் மற்றும் மிகவும் உதவியாக இருக்கிறார். நாம் இருவரும் இணைந்து சில மாயாஜால தருணங்களை உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன், அந்த காட்சி நடந்த போது அதை உணர்ந்தோம். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து, ‘அது ஒரு நல்ல காட்சி!’ என்று சொல்லிக்கொள்வோம். அவருடன் பணியாற்றுவதை நான் மிகவும் ரசித்தேன், எதிர்காலத்தில் நாங்கள் இன்னும் நிறைய பணியாற்ற வேண்டும் என்று நம்புகிறேன்,” என்றார்.


ஷங்கர் மற்றும் முக்தியின் உணர்ச்சிப்பூர்வமான கெமிஸ்ட்ரி மற்றும் அழுத்தமான வசனங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ‘தேரே இஷ்க் மே’ இந்த ஆண்டின் மிகவும் ஈர்க்கக்கூடிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது.


குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Thursday, 20 November 2025

டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா

 ’டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா

















சினிமா உலகம் வாழ்வது சிறு பட தயாரிப்பாளர்களால் தான் - ’டிரம்ப் கார்டு’, ‘சேரநாட்டு யானைதந்தம்’ பட அறிவிப்பு நிகழ்வில் நடிகர் பிளாக் பாண்டி பேச்சு


ஒரு படம் இயக்குவது என்பது மிகப்பெரிய கஷ்ட்டம் - ‘சேரநாட்டு யானைதந்தம்’ இயக்குநர் பூலோகம் ரவி உருக்கம்


அமெரிக்க அதிபர் சொல்வது சரி என்று சொல்வது தான் ‘டிரம்ப் கார்டு’ - இயக்குநர் ஜியோ ராஜகோபால்


பெற்றோர்களுக்கு உறுதுணையாக இல்லாதவர்கள் பிள்ளைகளே இல்லை - ’டிரம்ப் கார்டு’, ‘சேரநாட்டு யானைதந்தம்’ பட அறிமுக விழாவில் இயக்குநர் பேரரசு ஆதங்கம்




லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’. 


வெளிநாட்டில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வெளிநாட்டுக்கு படிக்க செல்ல விரும்புகிறவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களையும் மையமாக வைத்து உருவாகும் ‘டிரம்ப் கார்டு’ படத்தை ஜியோ ராஜகோபால் இயக்குகிறார். காதல் கதையாக உருவாகும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தை பூலோகம் ரவி இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்கிறார்.


‘டிரம்ப் கார்டு’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிலாக் பாண்டி நடிக்கிறார். இவருடன் ஜி.எம்.குமார், இ.வி.கணேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


இப்படங்களின் அறிமுக விழா நவம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.


நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபு பேசுகையில், “ஒரே தயாரிப்பாளரின், ஒரே நிறுவனத்தின் இரண்டு திரைப்படங்களின் அறிமுக விழா இது. லத்திகா புரொடக்‌ஷன்ஸ் சசிகுமார் பாலா தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள்,  ஒன்று ’டிரம்ப் கார்டு’. இதை ஜோ ராஜகோபால் இயக்குகிறார். மற்றொரு படம் பூலோகம் ரவி இயக்கும்  ’சேரநாட்டு யானைதந்தம்’. இந்த இரண்டு இயக்குநர்களும் மிகப்பெரிய ஆளுமைகள்.  இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவுக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களான இயக்குநர் பேரரசு சார், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோருக்கு நன்றி.


’டிரம்ப் கார்டு’ திரைப்படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதன்மை கதாபாத்திரத்தில் பாண்டி நடித்திருக்கிறார். நிறை இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்கள், அந்த ஆசையால் பெரிய நடைமுறை சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்கள் கூட வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டு, அதற்கான சரியான வழி தெரியாமல் தடுமாறுவதும், பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதையும் ‘டிரம்ப் கார்டு’ சொல்கிறது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை நேர்மையாக கொடுக்கப்படுகிறதா ?, அவர்களுக்கு ஊதியம் சரியாக கொடுக்கப்படுகிறதா ? என்பதையும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு படமாகவும் இந்த படம் இருக்கும்.


‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட பல பெரிய தமிழ்ப் படங்கள் மற்றும் இந்திய படங்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை வெளிநாட்டில் செய்து கொடுத்திருப்பவர் ராஜகோபால் சார். அவருக்கு தெரியாத பிரபலங்களே இல்லை. அடுத்தடுத்த நிகழ்வில், அந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள். 


’சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பூலோகம் ரவி, இயக்குநர் செந்தமிழனிடம் பணியாற்றியவர். ஷங்கர் சாரிடம் பணியாற்றிய செந்தமிழனிடம் பல வருடங்களாக பயணித்து பல அனுபவங்களை பெற்றிருக்கிறார். சசிகுமார் பாலா வெளிநாட்டில் இருந்து வந்து தயாரிக்கிறார். அவருக்கு சினிமா பற்றி சில சந்தேகங்கள், பயம் இருக்கிறது, அதை போக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. அவர்கள் ஒரு படத்தை தொடங்கும் போது அதை சரியான முறையில் முழுமையாக முடித்து திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே சில தவறான மனிதர்களால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அந்த சூழலில் இருந்து அவரை மீட்டு அவர் நினைத்தது போல் படத்தை முடிக்க நாம் ஒத்துழைக்க வேண்டும்.


ஒரு படம் தயாரித்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும், அல்லது போட்ட முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. தயாரிக்கும் படங்கள் சரியான முறையில் முடிவடைந்து திரைக்கு வந்தாலே போதும், என்று தான் நினைக்கிறார்கள். அது நடக்க நாம் ஒத்துழைக்க வேண்டும்.  


இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய கூடிய பார்த்திபன், மூத்த கலைஞர், அசோக் குமாரிடம் பணியாற்றியவர். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக இவர்கள் தயாரிக்கும் படத்தை பார்த்திபன் இயக்குகிறார். அதற்கு  ’தேங்காய் சீனிவாசன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி பட்மாக உருவாக உள்ளது. 


குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த பி.ஆர்.ஓ கார்த்திக்குக்கு படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். 


தயாரிப்பாளர் விஜயமுரளி பேசுகையில், “ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் எடுக்கிறார்கள், இதை உங்கள் படம் போல் நினைத்து ஊடகத்தினர் சவாலாக எடுத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதில் பெரிய நடிகர், நடிகைகள் இல்லை. பெரிய படங்களை பொறுத்தவரை ஒரு புகைப்படத்தை வைத்தே விளம்பரம் செய்யலாம். ஆனால், இதுபோன்ற படங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது பெரிய சவால், அதை ஊடகத்தினர் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். தலைப்பு மிக சிறப்பாக இருக்கிறது. தினமும் செய்தியாக வரும் தலைப்பு. இந்த இயக்குநருக்கு வாழ்த்துகள், பெரிய வெற்றியடைய வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.


இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பேசுகையில், “படக்குழுவினருக்கு வணக்கம், எங்கு சென்றாலும் நான் தமிழை மறக்க மாட்டேன் என்பது போல், தன்  தாய்மொழிக்காகவும், தாய்நாட்டுக்காகவும் வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் சசிக்கு என் வாழ்த்துகள். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாரிப்பது கூடுதல் சிறப்பு. இரண்டு படங்களின் இயக்குநர்களும் சிறப்பானவர்கள். தலைப்பும் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இதன் போஸ்டரை பார்க்கும் போதே படத்தில் ஏதோ விசயம் இருப்பது தெரிய வருகிறது. இதில் ஏதோ உலக அரசியல் பேசுகிறார்கள் என்பது புரிகிறது. அரசியல் படம் பண்ணும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நான் ஒரு படம் இயக்கி விட்டு இன்னமும், நீதிமன்றம், வழக்கு என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன். அதிலும் உலக அரசியலைப் பற்றி பேசும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.


சேரநாட்டு யானைதந்தம் இயக்குநர் பூலோகம் ரவி சிறப்பாக பண்ணியிருப்பார், அவரை எனக்கு நன்றாக தெரியும். இந்த இரண்டு படங்களும் சிறப்பாக வர வேண்டும், அதே போல் படத்தை வெளியிடும் போது சரியான நேரத்தில் வெளியிட வேண்டும், அது தான் இப்போது மிக முக்கியமானதாக இருக்கிறது. இரண்டு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.


இயக்குநர் பேரரசு பேசுகையில், “தயாரிப்பாளர் சசி அவர்கள் இன்று இரண்டு படங்களை அறிவித்துள்ளார். இன்று ஒரு படம் அறிவிப்பதே சவலாக இருக்கிறது. இது அவரது நம்பிக்கை, சினிமா மீதான காதல். இரண்டு படங்களின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. ஒன்று டிரம்ப் கார்டு, டிரம்ப் நம்மை வம்புக்கு இழுத்தது போல், அவரை நாம் வம்புக்கு இழுக்கிறோமா என்று படம் வெளியாகும் போது தான் தெரியும். மற்றொன்று சேரநாட்டு யானைதந்தம். இந்த தலைப்பே யோசிக்க வேண்டியது. இது முழுக்க முழுக்க காதல் கதை. இது சேர நாடு, டிரம்ப் கார்டு அயல் நாடு, இரண்டு நாடுகளை வைத்து எழுதியிருக்கிறார்கள்.


டிரம்ப் கார்டு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தேவைப்படுகிற விசயம், முன்பெல்லாம் இங்கு படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவது போதையாக இருந்தது, இப்போது வெளிநாட்டில் படிப்பதே போதையாகிவிட்டது. இது நல்லதா ஆபத்தானதா என்று யோசித்தால், இது ஆபத்து தான். உங்களுக்கு உலகளவில் அனைத்து நாடுகளிலும், விரும்புகிற ஆட்கள் இந்தியர்கள், அவர்கள் அறிவாளிகள். ஏழு எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்பு இந்தியாவில் படித்தவர்களை தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு அழைப்பார்கள். இன்று படிக்க செல்கிறார்கள், அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்று இயக்குநர் படத்தில் விரிவாக சொல்லியிருப்பார், என்று நினைக்கிறேன்.


ஒரு காலத்தில் துபாய்க்கு வேலைக்காக இந்தியர்களை தான் அதிகமாக அழைத்தார்கள். அங்கு அனைத்து வேலைகளுக்கும் நம் ஆட்கள் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது இந்தியர்களை துரத்துகிறார்கள், காரணம் அவர்களுக்கான வேலைகள் முடிந்து விட்டது. இனி இந்தியவர்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். சாலைகள் போடுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்தியர்கள், அத்தகைய பணிகள் முடிந்த உடன், விரட்டப்படுகிறார்கள்.  அமெரிக்காவிலும் தற்போது அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா - அப்பா என்று குடும்பத்துடன் வாழ்வது தான் வாழ்க்கை. வெளிநாட்டில் இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் தங்களை ஒரு அனாதையாக நினைக்கிறார்கள்.


குழந்தைகளை பிளே ஸ்கூலில் சேர்க்கிறார்கள், எந்த வயதில், அப்பா - அம்மா அரவணைப்பு இருக்க வேண்டுமோ அந்த வயதில் அவர்களை பிளே ஸ்கூலில் சேர்க்கிறார்கள். அதேபோல், எந்த வயதில் பிள்ளைகள் அப்பா - அம்மாவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமோ அந்த வயதில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறோம். பெற்றோருக்கு உறுதுணையாக இல்லாதவர்கள் பிள்ளைகளே இல்லை.


’சேரநாட்டு யானைதந்தம், வித்தியாசமான காதல் கதையாக இருக்கும். கதை பற்றி இயக்குநர் விரிவாக சொல்லவில்லை. ஆனால், கதையில் ஏதோ விசயம் இருக்கும் என்பது தெரிகிறது.  பூலோகம் ரவி நல்ல விசயம் வைத்திருப்பார் என்று தெரிகிறது. இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.


தயாரிப்பாளர் சசிகுமார் பாலா பேசுகையில், “குறுகிய காலத்தில் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ கார்த்திக் அவர்களுக்கு நன்றி. நான் கனடாவில் இருந்து வந்திருப்பதாக சொல்கிறார்கள், நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன், இலங்கை மலையக தமிழன். கனடா சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். இதற்கு முன்பு நான் ஒரு படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமானேன், அப்படத்தின் இயக்குநர் சுதாகரன் அண்னாவுக்கு நன்றி. அதன் மூலமாக ராஜகோபால் சார் அறிமுகம் கிடைத்து பிறகு பூலோகம் ரவியின் அறிமுகம் கிடைத்து, அவர்களிடம் கதை கேட்டு, வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இந்த இரண்டு படங்களை ஆரம்பித்திருக்கிறோம்.  இந்த இரண்டு படங்களும் மக்களுக்கான கமர்ஷியல் படங்களாக மட்டும் இன்றி, ஒரு விழிப்புணர்வு படங்களாக இருக்கும், நன்றி.” என்றார்.  


இயக்குநர் ஜியோ ராஜகோபால் பேசுகையில், “பெருமைக்காகவோ, பெயருக்காகவோ இங்கு நான் வரவில்லை, ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும், இயக்குநர் பேரரசு போல் ஒரு இயக்குநராக வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து படிக்க செல்லும் மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் செலவில் செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான பண தேவைக்காக அங்கு வேலை செய்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் காய்ககறி உள்ளிட்ட கடைகளை நடத்தும், நமது மக்களில் சிலர் அவர்களை அடிமைப்போல் நடத்துகிறார்கள். படிக்க வரும் போது நேர் வழியாக வர வேண்டும், டிரம்ப் கார்டு என்பது அது தான். டிரம்ப் என்ன சொல்கிறார், நேர் வழியாக வாருங்கள், கல்லத்தனமாக வந்தால் நீங்ட்கள் உங்கள் வாழ்க்கையை இழக்க  நேரிம், என்கிறார். அதை தான் டிரம்ப் கார்டு படமும் சொல்கிறது. அதேபோல், மொழி, ஜாதி கடந்து மக்கள் வாழும் நாடு கனடா, அங்கு அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகீறது. அதுபோல் உலகத்தின் அனைத்து நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். வல்லரசாக வேண்டும் என்ற பேரரசுவின் ஆசைப்படி, இந்தியா கல்வி மற்றும் செல்வத்தில் திளைத்து மேல் நாடுகள் போல் வளர்ந்து, மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே படிப்பை முடித்து, இந்த நாட்டுக்குள்ளேயே பணிகளை செய்து, ஆற்றலை வழங்க வவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை, நன்றி” என்றார்.


இயக்குநர் பூலோகம் ரவி பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த சசி சார் மற்றும் ராஜகோபால் சாருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மா பெயர் பூலோகம் அதனால் நான் பூலோகம் ரவி என்று பெயர் வைத்திருக்கிறேன். நான் பூலோகம் படத்தில் பணியாற்றவில்லை. அந்த படம் வெளியான பிறகு  அதன் இயக்குநர் நான் தான் என்று நினைத்தார்கள், அது நான் இல்லை, என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பல நாள் ஆசை திருநாளாச்சு...., அதற்கு காரணம் ராஜகோபால் சார், சசி சார் தான், அவர்கள் தான் என் கடவுள்கள், என்று கூறி தயாரிப்பாளர் காலி விழுந்தார்.


தொடர்ந்து பேசியவர், “எவ்வளவு வலி, கஷ்ட்டங்கள் இருந்தது, ஒரு படம் பண்ணுவது மிகவும் கஷ்ட்டம், அது எனக்கு கிடைத்தது இவர்களால் தான். வெளிநாட்டில் இருந்து வரும் தயாரிப்பாளர்கள் பலர், பத்து படங்கள் தயாரிப்போம், என்று அறிவிப்பார்கள். ஆனால், ஒன்று, இரண்டு படங்களோடு சென்று விடுவார்கள். ஆனால், சசி சார்,  தொடர்ந்து பல படங்களை தயாரிப்பார், பத்து படங்களுக்கு மேலாக படங்கள் தயாரிப்பார், என்று நான் சொல்கிறேன். காரணம், ‘சேரநாட்டு யானைதந்தம்’ மிகப்பெரிய ஹிட்டாகும். அதில் அவர் பணம் சம்பாதிப்பார், அதன் மூலம் அவர் அடுத்த படம் பண்ணுவார், என்னைப் போல் பல இயக்குநர்களை உருவாக்குவார். நன்றி.” என்றார்.


நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், “டிரம்ப் கார்டு படத்தில் நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஜியோ ராஜகோபால் சார், சசி சாருக்கு நன்றி. எங்கள் படக்குழுவினருக்கு நன்றி, உங்களுடன் பயணிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. உதவும் மனிதம் என்ற என்னுடைய அறக்கட்டளை சார்பில் இலங்கையை சேர்ந்த நான்கு மாணவிகளை, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறோம். இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் படிக்க வைத்திருக்கிறோம். சசி சாரும், ராஜகோபால் சாரும் இலங்கை தான். மலையகம் மக்கள் அங்கு மிகவும் கஷ்ட்டத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் அங்கு அடிமைகளாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவங்க பிள்ளைகள் படிப்புக்காக ஏங்குகிறார்கள். என்னிடம் பல பேர் கேட்டார்கள், இங்கே செய்யாமல் ஏன் இலங்கைக்கு செய்கிறாய், என்று. எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதனால் செய்கிறேன். இங்கு தான் செய்ய வேண்டும் அல்ல, கஷ்ட்டப்படுகிறவர்கள் எங்கிருந்தாலும் செய்யலாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்த அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சேர்மன் தேவானந்த் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 20 சீட் கொடுத்தார், இந்த முறை நான்கு தான் கிடைத்தது. அடுத்த முறை 20 சீட் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். கல்விக்கு நிகர் எதுவும் இல்லை. படிப்பு தான் ஒரு மனிதன் உயர்வுக்கு முதல்படி. நான் பத்தாம் வகுப்பு பெயிலானவன், அதனால் என் தங்கையை பொறியியல் படிக்க வைத்தேன். படிப்பு இல்லை என்றால் வாழ்க்கையில் பிடிப்பில் இல்லாமல், ஒருவித தோல்வி பயத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே கல்வி தொடர்பான எந்த விசயமாக இருந்தாலும் எனக்கு ஒரு ஏக்கம், ஆதங்கம் இருந்துக்கொண்டே இருக்கும். சமூகத்தில் இருந்து எடுக்கிறோம், சம்பாதிக்கிறோம், எனவே சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைப்பது உண்டு.


இன்று எங்களை போன்ற கலைஞர்களை வாழ வைப்பது சிறு படங்கள் தான், சினிமா உலகம் வாழ்வது சிறு பட தயாரிப்பாளர்களால் தான். நான் விஜய் அண்ணாவோ அல்லது அஜித் சாரோ கிடையாது. ஒரு படம் ஓடவில்லை என்றால் அனைவருக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. ஒவ்வொரு படைப்புக்காகவும் நாம் உணர்வுப்பூர்வமாக உழைத்திருப்போம், ஆனால் அது சரியாக போகவில்லை என்றால் அதற்கு நாம் பொறுப்பல்ல, சூழல் தான் பொறுப்பு. இங்கு குறைகள் நிறைய இருக்கு, ஆனால் அதை நிறையாக பார்க்க வேண்டும். இன்று இங்கு மைக் இல்லை, சரியான அரங்கம் இல்லை என்பது உண்மை தான், ஆனால் குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது ஒரு பெரிய விசயம் தானே, அதை செய்த பி.ஆர்.ஓ கார்த்திக் சாருக்கு நன்றி. இந்த உலகத்தில் குறை இல்லாமல் எதுவும் இல்லை, பிளஸ் மைனஸ் இருக்க தான் செய்யும், நாம் தான் அனைத்தையும் பாசிட்டிவாக பார்க்க வேண்டும்.


டிரம்ப் கார்டு தலைப்பை பார்த்த உடன் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அமெரிக்கா போனால் எதாவது பிரச்சனை வருமா ? என்று யோசித்தேன். ஆனால், அப்படி இல்லாமல் டிரம்ப் சொல்வது சரியானது, என்று சொல்வது தான் இந்த படம். இதில் நான் ஒரு மாணவனாக நடிக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த எனது உறவுகளுக்கு நன்றி. ஒரு படம் உருவாக வேண்டும், அதை சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உழைக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது அறிமுக நிகழ்ச்சி தான். அடுத்தடுத்த நிகழ்வில் படம் பற்றிய பல விசயங்களை சொல்வோம். நன்றி.” என்றார்.


ஒளிப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் பேசுகையில், “இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறேன். இரண்டும் வெவ்வேறு வண்ணங்கள். ஒரு படம் வெளிநாடு, மற்றொரு படம் கிராமம், இரண்டுமே வித்தியாசமாக இருக்கும். இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டு, படம் இயக்குவது என்பது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, எனக்கு கிடைத்திறுக்கிறது. அதற்கு சசி சாருக்கும், ராஜகோபால் சாருக்கும் நன்றி. எனது முதல் படம் காமெடி படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதன்படி தான் முதல் படத்தை இயக்க இருக்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன், இயக்குநர்களுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களும், நான் இயக்கும் படமும் என்று மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.


படத்தொகுப்பாளர் கணேஷ் குமார்.டி பேசுகையில், “இரண்டு படங்களுக்கும் படத்தொகுப்பாளராக என்னை தேர்வு செய்த, ராஜகோபால் சார் மற்றும் சசி சாருக்கு நன்றி. இந்த படத்தின் காட்சிகளை பார்த்த போதே படம் எப்படி வரப்போகிறது என்று  எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. முழுமையாக படத்தொகுப்பு செய்துவிட்டு, படம் எப்படி வந்திருக்கிறது, என்று அடுத்த சந்திப்பில் சொல்கிறேன். நன்றி.” என்றார்.


தலைப்பு மூலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு படங்களின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மேலும் பல தகவல்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’

 *திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!*







*மும்பை, நவம்பர் 20, 2025:* உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்'. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை 'ஸ்டீபன்' தர இருக்கிறது. 


தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் 'ஸ்டீபன்' இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர் பெற்றவர்களும் ஒரே தளத்தில் பார்வையாளர்களுக்கு தரமான கதைகளை கொடுப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு நெட்ஃபிலிக்ஸ் தளமாகும். 


நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் மாறுபட்ட கதைக்களங்களை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த கதைகளில் 'ஸ்டீபன்' படமும் ஒன்று. பல திருப்பங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர்தான் 'ஸ்டீபன்'. கதை தொடங்கியதில் இருந்து கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்களை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி மற்றும் கோமதி சங்கர் திறமைகளை எடுத்து சொல்லும் கதையாகவும் இது இருக்கும்.  தரமான கதைகளை பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நிலைப்பாட்டிற்கு இந்தக் கதை இன்னும் வலு சேர்க்கும்" என்றார். 


அறிமுக இயக்குநர் மிதுன் பகிர்ந்து கொண்டதாவது, “அமைதியான கால்குலேட்டட் சீரியல் கில்லர் பற்றிய கதைதான் 'ஸ்டீபன்'. அமைதியற்ற பல தனிப்பட்ட ரகசியங்களை தன்னுள் சுமந்து செல்கிறார். கோமதி சங்கர் தீவிரமாக, உண்மைக்கு நெருக்கமாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநராக நிறைய விஷயங்கள் இதில் கற்றுக்கொண்டேன். இந்த கதையை மிகுந்த கவனத்துடனும் நேர்மையுடனும் முயற்சித்திருக்கிறோம். இந்த கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. எங்கள் கதையை 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிலிக்ஸில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அவர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.  


தான் பார்க்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த உலகிற்குள் 'ஸ்டீபன்' பார்வையாளர்களையும் அழைக்கிறார். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸில் 'ஸ்டீபன்' ப்ரீமியர் ஆகிறது. 


*நடிகர்கள்:* கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட்


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்குநர்: மிதுன்,

தயாரிப்பாளர்கள்: ஜெயகுமார் & மோகன்,

எழுத்தாளர்கள்: மிதுன், கோமதி சங்கர்,

தயாரிப்பு நிறுவனம்: ஜேஎம் புரொடக்சன் ஹவுஸ்


*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*


நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

Netflix Presents ‘Stephen’, A Psychological Manipulation Where The Motive Is As Murky As The Murder

 Netflix Presents ‘Stephen’, A Psychological Manipulation Where The Motive Is As Murky As The Murder







Mumbai, Nov 20, 2025: What happens when your mind starts filling in the blanks — and gets it wrong? Premiering December 5, Netflix’s Tamil psychological thriller Stephen unfolds within walls that have seen too much and revealed too little. Directed and written by first-time filmmaker Mithun Balaji and starring Gomathi Shankar in a compelling performance, Stephen explores malicious motives, murder, and unsolved trauma through a whirlwind of plot twists and tension.


With its haunting score and simmering emotions, the film marks the arrival of a distinct new voice in Netflix’s Tamil slate, reinforcing our continued commitment to championing fresh perspectives and bold storytelling. It’s one of many examples of how emerging creators and established names can thrive side by side on the same platform. 


Monika Shergill, Vice-President, Content, Netflix India, shares, “Stephen is an exciting addition to our growing and diverse lineup of southern-language films and series. A twisted psychological thriller, Stephen follows a poised killer whose long-buried secrets unravel piece by piece, keeping audiences guessing until the very last frame. It marks an impressive directorial debut by Mithun Balaji and serves as a compelling showcase for rising talent Gomathi Shankar. As a story, it introduces an authentic new voice in suspense and underscores our passion for character-driven, rooted storytelling."


Speaking about his directorial debut, Mithun says, “Stephen is about a calm, calculated serial killer, who carries secrets which are unsettlingly personal. Gomathi Shankar plays the title role with a quiet intensity, making the character feel both reel and real. As a first-time filmmaker, this film means a lot to me. We tried to approach the subject with utmost care and honesty. I'm grateful to Netflix for giving us the opportunity and space to tell stories in such a distinct genre. The fact that our film will be available for the world to see across over 190 countries feels unreal, and I hope people enjoy this humble attempt at the craft.”


Rooted in emotion and laced with suspense, Stephen invites audiences to step into a world where nothing — and no one — is quite what they seem.


Stephen premieres December 5, only on Netflix.


CREDITS

Director : Mithun 

Cast : Gomathi Shankar, Michael Thangadurai, Smruthi Venkat

Producers : Jayakumar & Mohan

Writers : Mithun, Gomathi Shankar

Production Company: JM Production House



ABOUT NETFLIX:

Netflix is one of the world's leading entertainment services, with over 300 million paid memberships in over 190 countries enjoying TV series, films and games across a wide variety of genres and languages. Members can play, pause and resume watching as much as they want, anytime, anywhere, and can change their plans at any time.

Sarvam Maya" New Poster Unveiled; Biggest Christmas 2025 Release Confirmed!

 *"Sarvam Maya" New Poster Unveiled; Biggest Christmas 2025 Release Confirmed!*



"Sarvam Maya" have officially locked its release date, bringing joy to fans. The film, directed by Akhil Sathyan and starring Nivin Pauly, is set to hit theatres worldwide on December 25, 2025, as a grand Christmas release.


A new poster was released today with the date announcement, offering a glimpse into the film's world. The poster prominently features the stellar cast, including lead actor Nivin Pauly, Aju Varghese, and in a special highlight, the legendary actor Janardhanan.


The poster strongly hints that "Sarvam Maya" will be a full-fledged family entertainer, packed with humour and heart. The quirky expressions of the trio promise a laugh riot that will appeal to audiences of all ages This film features Nivin Pauly in his fan-favourite genre of comedy-dramas, where he has consistently delivered memorable performances


 The film is expected to be the perfect holiday treat, filled with moments of clean comedy and celebration. Helmed by Akhil Sathyan son of veteran director Sathyan Anthikad and produced by Firefly Films, "Sarvam Maya" is gearing up to be one of the biggest festive releases of 2025.

சர்வம் மாயா” புதிய போஸ்டர் வெளியானது !! கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு

 *“சர்வம் மாயா” புதிய போஸ்டர் வெளியானது !!  கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு !*



நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின்  வெளியீட்டு தேதி  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான  உலகை  அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.


“சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார் என்பதையும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது.


அட்டகாசமான காமெடியுடன், கொண்டாட்ட உணர்வை பதிவு செய்யும் இந்த படம், இந்த ஆண்டின் சிறந்த விடுமுறை கொண்டாட்ட படமாக இருக்கும். மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகனான அகில் சத்யன் இயக்கத்தில், ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “சர்வம் மாயா”, 2025-ன் மிகப்பெரிய பண்டிகை வெளியீடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.

தயாரிப்பாளர் முரளி பேசியதாவது..,

தயாரிப்பாளர் முரளி பேசியதாவது.., 

சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் என் அக்கா, அண்ணா, அவர்களால் இங்கு வரமுடியவில்லை, எங்கள் படத்தை வாழ்த்த வந்தவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் தேவா அவர்களுடன் பணிபுரிந்தது பெருமை. எங்களுக்கு என்ன தேவை என பார்த்துப் பார்த்து செய்து தந்தார். லியோ அருமையாக நடித்துள்ளார். விஜய் சுகுமாரிடம் பொறுமையும் அமைதியும் நிறைய உள்ளது. இணை தயாரிப்பாளர் நக்கீரன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எங்களுடைய மூன்று வருட கனவு, டிச்மபர் 12 படம் வருகிறது. எல்லோரும் திரையரங்கில் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.













இசையமைப்பாளர் தேவா பேசியதாவது.., 

இந்த விழா ஆரம்பத்திலேயே களைகட்டி விட்டது. எழில் குழுவினர் கலக்கிவிட்டனர். முனுசாமி ஐயா அசத்திவிட்டார். விஜய் சுகுமாருக்கு இது முதல் படம் போலவே இல்லை, அட்டகாசமாக எடுத்துள்ளார். எல்லா கலைஞர்களும் அத்தனை அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். முரளி எனக்கு என்ன வேண்டுமோ அனைத்தையும் செய்து தந்தார். சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள். லியோ முதல் படத்தில் அழகாக நடித்துள்ளார். லியோனி மகன் என்பது மகிழ்ச்சி. நாயகிக்கும் எனது வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியா அரசு என்னைக் கௌரவப்படுத்தியது. நான் அங்கு சென்று 25 பேருக்குப் பறை இசை சொல்லித்தந்தேன் அதற்காகத்தான் அந்த மரியாதை செய்தார்கள். இப்படி ஒரு படத்திற்கு இசையமைத்தது எனக்குப் பெருமை. பறை இசைக்கு ஆந்தம் செய்துள்ளேன் அந்த ஆந்தமாக எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும். நன்றி.


தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது..., 

மாண்புமிகு பறை இந்த தலைப்பே ரொம்ப அருமையான தலைப்பு. பறை இசைக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படத்தினுடைய தயாரிப்பாளர் சுபா அப்புறம் அவங்க சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள் இயக்குநர் இங்கும் பரபரப்பாகவே இருக்கிறார். படத்தை மிக அற்புதமாகவே உருவாக்கியுள்ளார். பாட்டுக்கு ஆடி இந்த விழாவைத் துவங்கி வைத்த எழில் குழுவுக்கு வாழ்த்துக்கள்,  ஒரு கலைஞர் கூட்டத்தில் இருக்க அவ்வளவு பேரையும் தன் பக்கம் கவர்ந்து தனக்காகக் கைதட்ட வச்ச ஒரு அற்புதமான ஒரு வாத்தியார் முனுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீகாந்த் தேவா ஒரு அருமையான இசையமைப்பாளர், தேசிய விருது வாங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி மிக அழகாகத் தமிழில் பேசி, பறை கலையின் அருமையைப் புரியவைத்தார். இசையமைப்பாளர் தேவா  அவர் தான் இப்படத்தின் பெரும் பலம். கர்நாடக சங்கீதத்திலும் மிகப்பெரிய வல்லமை உள்ளவர், இன்று  அவர் கர்நாடக சங்கீதத்துக்கு இணையாக படத்திற்கு இசையமைத்துள்ளார்,  இப்படம்   மிகப்பெரிய சங்கராபரணம் மாதிரி வெற்றி அடைய வேண்டும் வாழ்த்துக்கள்.  இந்த படத்துக்கு அவர்தான் உண்மையிலேயே ஹீரோ,  அதனால் அவருடைய பாட்டை பற்றி ஒரு தனி பட்டிமன்றம் போடலாம் என்று ஆசைப்படுகிறேன். படத்தில் டைட்டிலில் தன் பெயரைப்  போடுவதையே தனி ஸ்டைலாக்கி நம்மை ரசிக்க வைத்தவர் திரு பாக்யராஜ், ஒரு மாபெரும் திரைக்கதை மன்னன்  இந்த படத்துக்கு வாழ்த்து சொல்லியது பெரிய சந்தோஷம். சமூக நீதிக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய  நான் மிகவும் நேசிக்கக் கூடிய என் அருமை சகோதரர் எழுச்சி தமிழர் தொல் திருமா அவர்கள்,  இந்த இசை வெளியீட்டுக்கு வருகை தந்தது,  எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. இந்த மாண்புமிகு பறை என்ற படம் டிசம்பர் 12 ஆம் தேதி  ரிலீஸ் ஆகிற்து. சூப்பர் ஸ்டாரோட ரசிகன் எங்க ஐயா தேனிசை தென்றல் தேவா என்று சொன்னார்கள். நான் அதை மாற்றிச் சொல்கிறேன். சூப்பர் ஸ்டாரோட ரசிகன் ஐயா இல்லை. தேவாவோட ரசிகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  சிங்கப்பூர் அதிபர், தேவாதி தேவா அப்படிங்கிற  நிகழ்ச்சிக்கு  வருகை தந்து,  தஞ்சாவூர் மண்ணை எடுத்து என்கிற பாட்டை,  நான் சாகும்போது இந்த பாட்டை போட்டுட்டுதான் நான் என்னுடைய உடலை அடக்கம் செய்யனும்னு சொன்னார் என்றால், தேவா அவர்கள்  இந்த உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்களைச் சம்பாதித்து உள்ளார்.  இந்த படத்தில் என் மகனை விட,  அவர்தான் இந்த படத்தினுடைய கதாநாயகன். இப்படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது.., 

மாண்புமிகு பறை இசை வெளியீட்டு விழா என்பதை விட மாண்புமிகு பறை தமிழர் பண்பாட்டுக் கூடல் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு இனத்தின் பண்பாடு குறித்து

மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆற்றிய உரை நம்மை ஆழச் சிந்திக்க வைத்தது, சிலிர் பூட்டியது, இனி பேசுவதற்கு எதுவும் இல்லை நன்றி சொல்லி முடிக்கலாம் என்கிற அளவுக்கு, அண்ணன் லியோனி அவர்களின் பேச்சும், நம்முடைய தேனிசை தென்றல் அவர்களின் இசையுடன் கூடிய ஒரு இசையுரையும் இளம் இயக்குநர்களுக்கு நல்ல வழிகாட்டுதலைத் தந்து ஆணவக் கொலைக்கு எதிராக இப்படியும் சிந்திக்கலாம் திரைக்கதை அமைக்கலாம் என்று இங்கேயே ஒரு திரைக்கதை அமைக்கிற உரையை ஆற்றி அமர்ந்திருக்கிற அண்ணன் கே. பாக்ய ராஜ் அவர்களின் உரை, எல்லாவற்றையும் விடத் தம்பி சிவா அவர்களின் உரை, நம்முடைய கதாநாயகி அவர்களின் உரை எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம்மை ஆட்டி வைத்தது, வியப்புக்குள்ளாக்கியது. பறை குறித்து நம்முடைய தமிழர் பண்பாடு எவ்வாறு இருந்தது நாகரிகம் அடைந்தது என்ற உரையாக இது அமைந்தது ஒவ்வொருவரும் ஆற்றிய உரைகள் பறை என்பது இன்றைக்கு ஒரு இழிவான சொல்லாக மாறி இருக்கிறது. அதனால் அந்த கருவியும் இழிவாகப் பார்க்கப்படுகிற சூழல் அமைந்துவிட்டது. அந்த கருவியால் ஒரு இனம் இழிவாகக் கருதப்படுகிறதா? அல்லது ஒரு இனத்தால் ஒரு சமூகத்தால் அந்த கருவி குறைத்து மதிப்பிடப்படுகிறதா ? என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் இது ஆதி சிவன் அடித்த பறை என்று கவிஞர் சினேகன் அவர்களின் வரிகளில் அண்ணன் தேனிசை தென்றல் அவர்கள் அமைத்திருக்கிற இந்த பாடல் நம் கவனத்தை ஈர்த்தது.  மாண்புமிகு என்கிற பெருமைக்குரியது என்கிற வகையிலே இந்த திரைப்படத்திற்குப் பெயர் சூட்டி இருப்பது ஒரு துணிச்சலான செயல். போற்றுதலுக்குரிய செயல்.இயக்குநரின் துணிச்சலைக் கதை எழுதியவர்களின் துணிச்சலை நான் மனமாற பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் பறை என்பது ஒரு பொதுவான சொல் அனைத்து இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் மூலம் அதிலிருந்துதான் இசைக்கருவிகளின் வடிவங்கள் மாறி மாறி வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன.இந்த சமூகத்தின் மூலச்சமகம் தான் பறை என்கிற பெயரில் அழைக்கப்படுகிற சமூகம் இது ஒரு சமூக ஆய்வாளரின் கருத்து. ஒரு குலத்திலிருந்துதான் எல்லா குலமும் என்கிற போது தமிழ் சமூகத்தில் அந்த மூல சமூகம் ஆதி குளம் பறையர் குளம்தான் என்று அந்த வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள்.


பறை அடித்ததனால் பறையன் என்று பலரும் கருதுகிறார்கள் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை இன்றைக்கு நீங்கள் ஒரு கிராமத்திற்குப் போனால் பறையர் குடியிருப்புக்குப் போனால் 200 குடும்பங்கள் 300 குடும்பங்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பறை அடிப்பதில்லை, அவர்களுக்குப் பறை பற்றி தொடர்பும் இருப்பதில்லை அந்த கிராமத்தில் சிலர்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் பறையடிக்கிற ஒரு வழக்கத்தை வைத்திருப்பார்கள். எல்லா மக்களும் விவசாயத்தைச் செய்யக்கூடியவர்கள்தான். அவர்களுக்கு ஏரோட்ட தெரியும். நடவு நடத் தெரியும். அருப்புறுக்க தெரியும், தால் அடிக்க தெரியும். விவசாய பெருங்குடி மக்கள்தான். அந்த விவசாய பெருங்குடி மக்களை ஒட்டுமொத்தமாகப் பறையர் என்ற பெயரில் அழைத்து இழிவுபடுத்தி இருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் இது குறித்து பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள் அதற்கு ஒரே காரணம்தான் இது மூலச் சமூகம் ஆதிச் சமூகம் அதிலிருந்து தோன்றுகிற ஒவ்வொரு புதிய சமூகமும் அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி அந்நியப்படுத்தி பிரிவுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக அந்த ஆதிசமூகத்தை இழிவுபடுத்துவதை ஒரு பண்பாடாக இங்கே வளர்த்திருக்கிறார்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களை விட மேலானவர்கள் என்று சொல்லுகிற அந்த நிலை வளர்ந்திருக்கிறது இது சமூக ஆய்வாளர்களின் கருத்து. பறை என்பதிலிருந்து பறையன் என்கிற ஒரு சமூகம் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் பயன்படுத்துவதனாலேயே அது இழிவான கருவி இழிவான பொருள் என்று பார்க்கிற ஒரு உளவியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் மாற்ற வேண்டும் பொது உளவியலில் இந்த இழுக்கு இருக்கிறது அதைத் துடைத்தெறிய வேண்டும் என்று தான் பெரியார் கனவு கண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்டார் அதைத்தான் நாம் பேசுகிறோம். அந்த அரசியல் புரிதல் இருப்பதனால் தான் விஜய சுகுமாரன் இந்த படத்திற்கு மாண்புமிகு பறை என்று பெயர் சூட்டி இருக்கிறார்.


மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுவது போல் மாண்புமிகு பறை என்று சொல்லுகிற அந்த துணிச்சல் அது ஒரு அரசியல் புரிதலிலிருந்து மட்டும்தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு படத்தில் தம்பி சிவா போன்றவர்கள் இன்றைக்கு நடித்திருக்கிறார்கள் என்றால் அண்ணன் லியோனி அவர்களிடம் அவர் கற்றுக்கொண்ட அரசியலும் தான் அதற்கு அடிப்படை.  இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்து நடத்திய யுத்தத்தின் எச்சங்கள், பதிவுகள் நாம இன்றைக்கு புதுசா பேசவில்லை.  இதை ஐயன் திருவள்ளுவனே இந்த சாதி அமைப்பு கூடாது என்ற ஆதங்கத்தை  வெளிப்படுத்தி இருக்கிறார். இது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கு நாம் மைய நீரோட்டத்தில் இணைக்கிற முயற்சி தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. திரைப்படங்களில் இன்றைக்குப் புதிதாக இது வரவில்லை திரைப்படங்களில் நீண்ட காலமாகவே இதற்கு எதிரான படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன. பழைய படங்களில் நிறையப் பாடல்கள் கூட இருக்கின்றன. அந்த பாடல்களை எல்லாம் இப்போது எடுத்து சமூக ஊடகங்களில் தோழர்கள் பரப்புகிறார்கள். ஆகவே இது ஒரு நீண்ட இடிய போராட்டம், அந்த போராட்டத்திலே திரைக்கலை ஆளுமைகள் தங்களையும் இணைத்துக் கொள்வது, அதற்காக தம்முடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவது, இதுபோன்ற படைப்புகளைக் கொண்டு வருவது, இதன் மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் சுகுமாரன் அவர்களை நெஞ்சார பாராட்டுகிறேன். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிற தம்பி சிவா அவர்கள் மிக அற்புதமாக உரையாற்றினார். அவருடைய உரையில் நல்ல ஒரு தெளிவு இருந்தது. அந்த தெளிவு அரசியல் புரிதலாக ஒரு நீண்ட கால அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளதாக நான் புரிந்து கொள்கிறேன். இதுபோன்ற கலைஞர்கள் தான் திரைத்துறையைக் கையில் எடுக்க வேண்டும் பயன்படுத்த வேண்டும்.


இந்த திரைத்துறையை நாங்கள் முற்போக்கு சிந்தனை களமாகப் பயன்படுத்துவோம் என்கிற அந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்த திரைப்படத்தில் நாம் முழுமையாகப் பார்த்தால் தான் என்ன கதை கருப்பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த தலைப்பே நம்மை வியக்க வைக்கிறது. ஆழமா ஆள சிந்திக்க வைக்கிறது. அந்த வகையிலே இது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வைப்பதற்குத் தமிழ் சமூகம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே சொல்லி, எனக்கு இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் லியோனி அவர்களுக்கும் இயக்குநர் விஜய் சுகுமாரன் தம்பி சிவா போன்றவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்


எல்லா இசையும் ஒன்று தான், ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை, அந்தப் பறை இசையின் பின்னணியை, வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக “மாண்புமிகு பறை” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் உருவாகியுள்ளார். 


இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார், காயத்ரி ரெமா நாயகியாக  நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.    


இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக  இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு அருமையான இசையை வழங்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.                          


தொழில் நுட்ப குழு 

கதை, திரைக்கதை: சுபா &சுரேஷ் ராம்         

இயக்கம் :எஸ்.விஜய் சுகுமார்

ஒளிப்பதிவாளர் :ரா. கொளஞ்சி குமார்

படத்தொகுப்பு :சி. எஸ். பிரேம் குமார்

இசை :தேனிசை தென்றல் தேவா

நடன இயக்குனர் :ஜானி

பாடல்கள் :சினேகன்         

கலை :விஜய் ஐயப்பன் 

தயாரிப்பு :சியா புரடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர் :சுபா -சுரேஷ் ராம்

இணை தயாரிப்பு:ஜெ. எப். நக்கீரன் &கவிதா

நிர்வாக தயாரிப்பாளர் : த.முரளி

மக்கள் தொடர்பு - AIM  சதீஷ்.