Featured post

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம்

 *கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது!* கீர்த்தி சுர...

Wednesday, 5 November 2025

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம்

 *கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது!*



கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள தோட்டம் - தி டிமேன் ரிவீல்ட் படத்தின் டைட்டில் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மலையாள திரைப்படமான தோட்டம் படத்தின் தலைப்பு இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் விறுவிறுப்பான அறிவிப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ரிஷி சிவகுமார் எழுதி இயக்கும் தோட்டம் திரைப்படம், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆக்சன் நடிகர் ஆண்டனி வர்கீஸ் (Pepe) ஆகியோரின் முதல் பிரம்மாண்டமான ஆன்-ஸ்கிரீன் கூட்டணியை உருவாக்குகிறது. அதிரடி, ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த திரைப்படம், கீர்த்தி சுரேஷை இதுவரை கண்டிராத அவதாரத்தில் காட்டுகிறது, இது மலையாள சினிமாவிற்கு அவரது பிரம்மாண்டமான மறுபிரவேசத்தை குறிக்கிறது.


ஆக்சன் படத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில், The Shadow Strays, The Raid franchise, Headshot, The Night Comes for Us, and The Big 4 போன்ற படங்களில் சிறந்த பணிகளுக்காக பாராட்டப்பட்ட, முகமது இர்ஃபான் தலைமையிலான சர்வதேச அளவில் புகழ்பெற்ற வி ஆக்ஷன் டிசைன் குழுவின் அற்புதமான ஸ்டண்ட் கோரியோகிராஃபியை தோட்டம் படம் கொண்டுள்ளது. இந்த கூட்டணி இந்திய சினிமாவில் ஒரு முதல் மைல்கல் ஆகும்.


இப்படத்திற்கு அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங், மற்றும் அனிமல் போன்ற படங்களில் தனது சிறந்த இசைக்காக அறியப்பட்ட தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். ராஜா ராணி, தெறி, கத்தி மற்றும் சர்தார் 1 & 2 ஆகிய படங்களில் பணியாற்றிய ஜார்ஜ் C வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவை கையாளுகிறார். லோகா: அத்தியாயம் 1 மற்றும் தேசிய விருது பெற்ற 2018 திரைப்படத்தின் எடிட்டரான சாமன் சாக்கோ, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.


தயாரிப்பு வடிவமைப்பை 2018 மற்றும் எம்புரான் படங்களில் பணியாற்றிய தேசிய விருது வென்ற மோகன்தாஸ் வழிநடத்துகிறார். அதே நேரத்தில் காந்தாரா 2, மஞ்சும்மெல் பாய்ஸ் மற்றும் ARM போன்ற பிரமாண்ட படத்தில் பணியாற்றியவரும், பிரம்மயுகம் படத்துக்காக சமீபத்தில் மாநில விருது பெற்ற ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனை துறையை வழிநடத்துகிறார்.


ஆடை வடிவமைப்பை பிரவீன் வர்மா (ARM, குருப்) செய்துள்ளார், மேலும் அனிமல், விக்ரம் மற்றும் கூலி படங்களின் பின்னணியில் உள்ள தேசிய விருது பெற்ற குழுவான சின்க் சினிமா ஒலி வடிவமைப்பை மேற்கொள்கிறது. ஒலி கலவையை மற்றொரு தேசிய விருது வென்ற எம்.ஆர். ராஜகிருஷ்ணன் நிர்வகிக்கிறார், அவர் அனிமல் மற்றும் காந்தாரா 1 & 2 ஆகியவற்றில் தனது பணிகளுக்காக பாராட்டப்பட்டவர்.


எழுத்தாளரும் இயக்குனருமான ரிஷி சிவகுமார், திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தையும் அதிகம் நம்புகிறார். பெரிய திரையில் சிறந்த படம் பார்க்கும் அனுபவத்தை கொடுப்பதில் உறுதியுடன் இருக்கிறார்.


தோட்டம் படத்தை ஃபர்ஸ்ட் பேஜ் எண்டர்டெயின்மெண்ட், AVA புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்கா எண்டர்டெயினர்ஸ் பேனர்களின் கீழ் மோனு பழேதத், AV அனூப், நாவல் விந்தியன் மற்றும் சிம்மி ராஜீவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த கூட்டுத் தயாரிப்பு, இயக்குனரின் லட்சியமிக்க படைப்பு பயணத்திற்கான அவர்களின் பரந்த பார்வையையும், அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது. கலை சிறப்பை வேரூன்றிய ஒரு பார்வையாக, தோட்டம் ஒரு திரைப்படத்தை மட்டுமல்ல, உணர்ச்சி, அதிரடி மற்றும் இந்திய சினிமாவில் கதை சொல்லலின் ஆன்மாவை கொண்டாடும் ஒரு சினிமா கைவினைத்திறனின் காட்சியாகவும் உறுதியளிக்கிறது.

Keerthy Suresh - Antony Varghese starrer Thottam - The Demesne title video out now

 *Keerthy Suresh - Antony Varghese starrer Thottam - The Demesne title video out now: A Landmark Collaboration in Indian Cinema*



The much-awaited title reveal of the Malayalam feature film Thottam premiered on YouTube today, marking one of the most exciting announcements in contemporary Indian cinema.


Written and directed by Rishi Sivakumar, Thottam brings together an unprecedented on-screen collaboration between National Award-winning actress Keerthy Suresh and action star Antony Varghese (Pepe). This high-octane blend of action, adventure, and drama showcases Keerthy Suresh in a never-before-seen avatar, marking her grand return to Malayalam cinema.


Breaking new ground in action filmmaking, Thottam features groundbreaking stunt choreography by the internationally acclaimed V Action Design Team led by Muhammad Irfan, celebrated for their dynamic work on The Shadow Strays, The Raid franchise, Headshot, The Night Comes for Us, and The Big 4. This collaboration marks a first-of-its-kind milestone in Indian cinema.


The film's musical score is composed by National Award-winner Harshavardhan

Rameshwar, known for his powerful soundtracks in Arjun Reddy, Kabir Singh, and Animal.


Cinematography is handled by George C.Williams ISC, the visionary behind Raja Rani, Theri, Kaththi, and Sardar 1 & 2. 


Chaman Chakko, editor of Lokah: Chapter 1 and the National Award-winning film 2018, leads the editing team.


Production design is helmed by Mohandas, National Award winner for 2018 and Empuraan, while Ronex Xavier, recent State Award recipient for Bramayugam, heads the makeup department, bringing his expertise from Kantara 2, Manjummel Boys and ARM.


Costume design is by Praveen Verma (ARM, Kurup), and sound design is supervised by Sync Cinema, the National Award-winning team behind Animal, Vikram, and Coolie. The sound mix is managed by M.R.Rajakrishnan, another National Award winner, celebrated for his work on Animal and Kantara 1 & 2.


Writer and Director Rishi Sivakumar emphasises his belief in the theatrical experience and is committed to delivering a cinematic journey designed for the big screen.


Thottam is produced by Monu Pazhedath, A.V. Anoop, Novel Vindhyan, and Simmy Rajeevan, under the banners of First Page Entertainment, AVA Productions, and Maargaa Entertainers.


This collaborative production unites their shared vision and commitment to the director's ambitious creative journey. A vision rooted in artistic excellence, Thottam promises not just a film, but a spectacle of emotion, action, and cinematic craftsmanship that celebrates the spirit of Indian storytelling.

ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படம் வரும்

 *ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படம் வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!*



 *'தீயவர் குலை நடுங்க' திரைப்படம், உலகமெங்கும் வரும் நவம்பர் 21  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!*


ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படம் வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  


'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால்  இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும்  எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சமீபத்தில்  வெளியான டீசர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.


'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து  நடித்துள்ளனர்.


ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்,

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.


விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும். நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள  இப்படம்  தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

டைரக்டர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் “Value 5” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் குறும்பட விழா !!

 டைரக்டர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில்  “Value 5” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் குறும்பட விழா !!









தமிழ்த் திரையுலக உதவி இயக்குநர்கள் பங்கேற்பில் திரு. சக்தி தலைமையில் இயங்கி வரும் டைர்கடர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில்  மாபெரும் குறும்பட விருது விழா, நவம்பர் 1 ஆம் தேதி சென்னை வடபழனி பரணி ஸ்டூடியோவில் கோலாகலமாக  நடைபெற்றது. 


பங்கேற்பாளர்களின் கதை சொல்லும் திறமையை ஐந்து நிமிடத்திற்குள் காட்சிப்படுத்தி அவர்களை வேல்யூ செய்ய திரைப்படங்கள் இயக்கிய வெள்ளித்திரை இயக்குநர்கள் பார்த்து அரங்கிலேயே நேரடி தேர்வு செய்து விருது பெறும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக விழா அமைப்பினர் அமைத்திருந்தினர்.


மற்ற குறும்பட விழாக்களை விட இதன் சிறப்பம்சம் என்னவெனில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய பணம் வாங்குவதற்கு முன்,படங்கள் காட்டப்பட தேர்வு செய்தாலேயொழிய பணம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதேசமயம் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட படங்கள் அனைத்தைமே திரையில் திரையிடப்படும் என வித்தியாசமான முறையில் விதிமுறைகள் அமைத்திருந்தனர்.


இந்த குறும்பட விழாவில்,மொத்தமாக 35 குறும்படங்கள் திரையிடப்பட்டன.13 வயது முதல் 74 வயது வரையிலான படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.


திரையுலக பிரபலங்கள் நான்கு தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் சேரன், தேசிய விருது இயக்குநர் பிரம்மா, இயக்குநர் நந்தா பெரியசாமி, இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் SS குமரன்,இயக்குநர் இ. வி.கணேஷ்பாபு, இயக்குநர் மகா கந்தன், இயக்குநர் ஹாரூன், நடிகர்கள் சம்பத் ராம், விஜய் விஷ்வா, மைக்கேல் தங்கதுரை,ஶ்ரீராம் கார்த்திக், அசோக் பாலகிருஷ்ணன், விஜித் மற்றும் தயாரிப்பாளர் கேப்டன் எம். பி ஆனந்த் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



சரியாக மூன்று மணிக்கு ஆரம்பித்த விழாவில் நடுவர்கள் முன்னிலையில் 35 குறும்படங்களும் திரையிடப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களும்,சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த எடிட்டர், சிறந்த இசையமைப்பாளர் என டெக்னீஷியன்களுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்களும், சிறந்த மூன்று படங்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் என அனைவருக்கும் ஒரு அங்கீகாரத்தை அளித்து பிரமிக்க வைத்திருந்தனர். இதில் 

13 வயது சிறுவனின் குறும்படமும், 74 வயது முதியவரின் குறும்படமும் திரையிடப்பட்டது விழாவின் முக்கிய அம்சமாக அனைவராலும் பாராட்டப்பட,அவர்களை  ஊக்கவிக்கும் விதமாக இருவருக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 


Directors Club Charitable Trust என்பது உதவி இயக்குநர் சக்தி என்பவரால் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, சென்னையில் இயங்கும் ஒரு சமூக மற்றும் திரைப்பட பயிற்சி அமைப்பாகும்.இது முழுக்க முழுக்க வாட்ஸப்பில் இயங்கிக் கொண்டு சினிமா இன்டஸ்டரியில் தொழில் முறை உதவி இயக்குநர்கள் இல்லாமல், அதேசமயம் பெரிதாக தொடர்புகள் இல்லாத,ஆர்வமுள்ள உதவி இயக்குநர்கள் என அனைவரையும் சேர்த்து திரைப்படத் துறையில் இயக்குநராகவோ, நடிகராகவோ, டெக்னீஷியன்களாகவோ அவரவர் வாழ்க்கையை மாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு 24 வகையான திரைப்படக் கலைகளில் பயிற்சி வழங்குவதுடன், அந்தந்த தொழில் சார்ந்த நிபுணர்களை குரூப்பிற்கு அழைத்து வந்து அவர்களின் படம் சார்ந்த கேள்விகளை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்து வருகிறது.இதில் அபிராமி,சுந்தர் சி, ஏ. ஆர். முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் சிவன்,தயாரிப்பாளர்கள்

தனஞ்செயன், எஸ். ஆர். பிரபு, கலைப்புலி எஸ். தாணு,நெல்சன், சிவ கார்த்திகேயன், மணிரத்னம், ராஜமெளலி என கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு அனுபவங்கள் மட்டுமல்லாமல் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளனர்.


இந்த அமைப்பின் மூலம் அதன் முந்தைய ஆண்டு விழாக்களில் நிறைய திறமையாளர்களை அவரவர் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அவர்களை மேடையேற்றி பல்வேறு துறைகளில் நுழையும் அற்புத வாய்ப்பை ஏற்படுத்தி ஒன்பது வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கும் அமைப்பின் .  இந்த “Value5 short film festival” என்கிற குறும்பட விழா பல புதிய படைப்பாளர்களுக்கு தளமளித்து பல நல்ல திறமையாளர்களை பொதுத்தளத்திற்கும் அடையாளம் காண வைக்கும் முயற்சி இது.

“Aaryan” Film Thanksgiving Meet!!

 “Aaryan” Film Thanksgiving Meet!!


Under the banner of Vishnu Vishal Studios, the investigative thriller “Aaryan”, presented by Shubhra & Aryan Ramesh and directed by Praveen K, featuring leading actor Vishnu Vishal and acclaimed director Selvaraghavan, was released worldwide in theatres on October 31st.










The film has received tremendous critical acclaim and an overwhelming response from audiences, emerging as a grand success.

To express their gratitude, the cast and crew of the film met with members of the press and media, thanking them for their continued support and encouragement.


Editor San Lokesh said:


“Thank you to everyone for the love, appreciation, and positive reviews for Aaryan. Truly grateful to all.”



Music Director Ghibran said:


“In today’s time, taking a film to the audience is a big challenge. I sincerely thank all the media friends who helped Aaryan reach people. We tried something new with the music—something that could either be praised or criticized—and I’m thankful that everyone appreciated the experiment. Thanks to Praveen for supporting this creative risk. Vishnu’s dedication is truly inspiring; he’s always available whenever needed. My best wishes to him for his deep passion for cinema. Thank you all.”



Actress Maanasa Choudhary said:


“A big thank you to all the media friends for your immense love. The role of Anitha is a very important milestone in my career. I thank director Praveen sir for giving me this opportunity, and acting alongside Vishnu sir was a wonderful experience. Grateful to everyone.”



Actress Shraddha Srinath said:


“We had high hopes and confidence in Aaryan, but we never expected this level of appreciation. This proves once again that a good story always wins. Despite facing several hurdles over the past three years, we’ve brought to life the film we dreamt of. Praveen has showcased his talent brilliantly in his very first film. Vishnu showed immense patience and belief throughout the process. I thank him, the entire Aaryan team, and our audience for this success.”



Director Praveen K said:


“Heartfelt thanks to everyone who watched Aaryan in theatres and to all the media friends for your support. Special thanks to Vishnu for his trust and collaboration, and to all the artists and technicians who contributed to the film.”



Director-Actor Selvaraghavan said:


“Thank you to all the media friends who continue to support good films. From my debut film Thulluvadho Ilamai till today, your encouragement has been unwavering. I truly appreciate Vishnu and Praveen for their kindness, dedication, and artistic vision.”



Actor Producer Vishnu Vishal said:


“Aaryan is a very special film for me—it’s named after my son. It marks the third consecutive hit from Vishnu Vishal Studios, which is rare in Tamil cinema. My son watched the film and hugged me afterward; that’s the greatest award I could receive. 


Though we initially planned for a 2023 release, delays allowed us to perfect the film. Praveen has delivered a refreshingly new and bold film. We had many internal debates about the climax, and the audience feedback has been valuable. Now, with a new alternate climax, the film is running successfully in theatres.



My recent films have performed well both in theatres and on OTT platforms, and Aaryan too is receiving a great response. It’s the biggest opening of my career. San Lokesh’s editing was crucial to the film’s pace. Ghibran sir joined us later but delivered fantastic work, even reworking the score for the new climax.



Thanks to Maanasa Choudhary for her cooperation. Shraddha is one of my favourite co-stars—she’s unique, thoughtful, and we often discuss cinema together. Working with Selvaraghavan sir was a huge honour. His performance was mesmerizing—he went far beyond what I imagined.



My apologies to Praveen for keeping him waiting so long, and best wishes for your next film. Gatta Kusthi 2 is on the way, followed by a film with my brother and another with director Arunraja Kamaraj. I’ll continue making films you all will love. Thank you everyone!”



After the massive success of Ratsasan, Vishnu Vishal once again dons the role of a police officer in Aaryan, while Selvaraghavan plays a pivotal role. The film also stars Shraddha Srinath, Maanasa Choudhary, Sai Ronak, Tarak Ponnappa, Mala Parvathi, Avinash, and Abhishek Joseph George in supporting roles.

With an engaging screenplay and gripping investigative action, the film is directed by Praveen K. Notably, Manu Anand, director of F.I.R., has worked as the co-writer.

With a new alternate climax, Aaryan continues to run successfully in theatres with strong audience support.




Technical Crew:



Producer: Vishnu Vishal (Vishnu Vishal Studios)


Writer & Director: Praveen K


Public Relations: Sathish (AIM)

ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா

 *“ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா 










விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,  இன்வஸ்டிகேடிவ் திரில்லராக,  கடந்த  அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்யன்”. 


விமர்சகர்கள் பாராட்டில் மற்றும்  ரசிகர்களின் பெரும் வரவேற்பில், இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 


இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, படத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.


இந்நிகழ்வினில் 


எடிட்டர் சான் லோகேஷ்  பேசியதாவது..,  

ஆர்யன் படத்திற்குத் தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது.., 

ஒரு திரைப்படத்தை  மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போதைய நிலையில் மிகவும் முக்கியம். ஆர்யன் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்குப் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தில் மியூசிக்கில் ஒரு புதுவிதமான முயற்சி செய்தோம். ஒன்று பாராட்டுவார்கள், இல்லை திட்டுவார்கள் என நினைத்தோம். அனைவரும் புதிய முயற்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டினீர்கள் நன்றி. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பிரவீனுக்கு நன்றி. விஷ்ணுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. எப்போது கூப்பிட்டாலும் தயாராகவே இருப்பார். சினிமாவை நேசிக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி. 


நடிகை மானசா சௌத்திரி பேசியதாவது.., 

மிகப்பெரிய அன்பைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனிதா என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ரோல்,  இந்த வாய்ப்பைத் தந்த பிரவீன் சாருக்கு நன்றி. விஷ்ணு சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் அவருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது.., 

இப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. இந்த அளவு பாராட்டுக்கள்  எதிர்பார்க்கவில்லை. நல்ல கதை ஜெயிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். எல்லாவற்றையும் இணைத்த இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த மூன்று வருடத்தில் பல தடைகள் வந்தாலும்,  நாங்கள் நினைத்த திரைப்படத்தை கொண்டுவர முடிந்தது. பிரவீன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்துவிட்டார். விஷ்ணு மிகப் பொறுமையாக இருந்து இப்படத்தை உருவாக்கினார். ஆர்யன் படத்திற்கும், டயானா பாத்திரத்திற்காகவும், விஷ்ணுவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.  


இயக்குநர் பிரவீன் பேசியதாவது.., 

இப்படத்தைத் திரையரங்கில் சென்று பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக்கும் உடன் இருந்ததற்கும் விஷ்ணுவிற்கு நன்றி. படத்தின் நடிகர்கள் தொழில் நுட்ப  கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. 


நடிகர், இயக்குநர் செல்வராகவன் பேசியதாவது..,

நல்ல படம் எடு, நாங்கள் கொண்டு போய் சேர்க்கிறோம் என செயல்பட்டு வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. யாருமே கண்டுகொள்ளாத துள்ளுவதோ இளமை எனும் முதல் படத்திலிருந்து என்னைத் தூக்கிப்பிடித்து,  இப்போது வரை ஆதரவளித்து வருகிறீர்கள், அதற்கு நன்றி. விஷ்ணு மற்றும் பிரவீன் அவர்களின் பரந்த மனதிற்கும் அன்பிற்கும் நன்றி. 


நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது .., 

ஆர்யன் எனக்கும் மிகவும் ஸ்பெஷலான படம். என்னுடைய மகனின் பெயரில் எடுத்த படம். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸில் எடுத்த மூன்றாவது தொடர் வெற்றிப்படம் . இது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. என் மகனும் படம் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். படம் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்தார், அது எனக்கு மிகப்பெரிய விருது. 2023 ரிலீஸ் தேதி வைத்துவிட்டு இந்தப்படம் ஆரம்பித்தோம், ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. ஆனால் இந்த இடைவெளியில் முழு உழைப்பைத் தந்து, இயக்குநர் பிரவீன் மிகப்புதுமையான படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தைப் பற்றி சில மாறுபட்ட கருத்துகளும் வந்தது, என்ன கிளைமாக்ஸ் வைப்பது என எங்களுக்குள் நிறைய விவாதங்கள் நடந்தது. அது பற்றிய விமர்சனங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. இனி படம் பார்ப்பவர்கள் புது க்ளைமாக்ஸை பார்ப்பார்கள், அது தான் பிரவீன் வைத்திருந்த கிளைமாக்ஸ். என் படங்கள் திரையரங்கத்தைத் தாண்டி ஓடிடியில் நல்ல வெற்றி பெறுகிறது. இது படத்திற்குப் படம் மாறுபடும். ஆர்யன் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும். தியேட்டரிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான். இந்தப்படத்தில் எடிட்டிங் மிக முக்கியம் அதை சான் லோகேஷ்  சிறப்பாக செய்தார். ஜிப்ரான் சார் கடைசியில் தான் வந்தார், இப்போது மாற்றிய க்ளைமாக்ஸுக்கு  கூட மீண்டும் சிறப்பாக வேலை செய்து தந்தார்.  மானசா சௌத்திரி தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. நான் வேலை பார்த்ததில் என்னுடைய ஃபேவரைட் நடிகை  ஷ்ரத்தா. மிக வித்தியாசமானவர். நிறைய சினிமா பற்றிப் பேசுவோம் அவருக்கு நன்றி. செல்வா சார்  இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. சைக்கோவிற்கு இருக்கும் வரைமுறைகளை தன் நடிப்பால் உழைத்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விட 2000 மடங்கு சிறப்பான உழைப்பத் தந்துள்ளார். இயக்க்குநர்பிரவீனை  இவ்வளவு காலம் காக்க வைத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த படம் விரைவாகச் செய்ய வாழ்த்துக்கள். கட்டா குஸ்தி 2 விரைவில் வருகிறது. என் தம்பியுடன் ஒரு படம் செய்யவுள்ளேன், இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த மாதிரி படங்கள் செய்வேன். அனைவருக்கும் நன்றி. 


நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன்  மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர். 


புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லரான   இப்படத்தை இயக்குநர்  பிரவீன் K இயக்கியுள்ளார்.  விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.


புதிய கிளைமாக்ஸுடன் ரசிகர்களின் வரவேற்பில் ஆர்யன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 


தொழில்நுட்ப குழு விபரம்  

தயாரிப்பு - விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்) 

எழுத்து  இயக்கம் -  பிரவீன் K 

மக்கள் தொடர்பு  - சதீஷ் (AIM)

டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் 'தி டிரெய்னர்' -

 டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் 'தி டிரெய்னர்' - 'காவலன்' செயலியால் ஈர்க்கப்பட்ட அதிரடி த்ரில்லர்!




திரைப்பட ஆர்வலர்களிடையே த்ரில்லர் படங்களுக்கான வரவேற்பு எப்போதும் குறைவதில்லை. இந்த த்ரில்லர் படங்களுக்கு விறுவிறுப்பான திரைக்கதையும் திறமையான நடிகர்களின் நடிப்பும் அதிக ஆர்வம் சேர்க்கிறது. அந்த வகையில், டிரான்ஸ்இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் பேனரின் கீழ் நீலா தயாரிப்பில் பி. வேல்மாணிக்கம் இயக்கத்தில் ஹீரோவாக ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடித்த 'தி டிரெய்னர்' திரைப்படம் த்ரில்லர் அக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. 

பிரின்ஸ் சால்வின் இளம்வயது  ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்


படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் வெளிவரும் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 


படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நாய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் 'லீ' என்ற நாயும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. காவல்துறை அதிகாரியாக நடிகர் ஷ்யாம் நடித்திருக்கிறார். 


பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு காவல் துறை உருவாக்கிய ‘காவலன்’ செயலியிலிருந்து உத்வேகம் பெற்று சமூகப் பொறுப்புள்ள படமாக இது உருவாகியுள்ளது. 


அக்குபஞ்சர் மருத்துவராக ஜூனியர் எம் . ஜி. ஆர் வில்லன் கதாபாத்திரதில் நடித்து இடுக்கிறார், அவரின் செல்வாக்கின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு மர்ம கும்பலைச் சுற்றி கதை சுழல்கிறது. வியர்வையின் மூலம் மக்களை அடையாளம் காணும் தனித்துவமான சக்தியைப் பெற்ற ஸ்ரீகாந்த், ஒரு அனாதை இல்லத்தை கவனித்துக்கொள்கிறார். போலீஸ் அதிகாரி ஷாம் தலைமையிலான விசாரணையில் அவர் சிக்கிக் கொள்கிறார். ஷாம்  அவரை குற்றவாளி என்று தவறாக நினைக்கிறார். தான் நேசிக்கும் பெண்ணை மர்ம கும்பல் குறிவைக்கும்போது,  ஸ்ரீகாந்த் உண்மையை அம்பலப்படுத்தவும், தனது அனாதை இல்லத்தைப் பாதுகாக்கவும், தனது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கவும் போராடுகிறார். கதைக்கு வலுவான மற்றும் உணர்ச்சிபூர்வமான கிளைமாக்ஸ் இருக்கும். 


படத்தில் எட்டு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது. ஸ்ரீகாந்த், ஷாம் இருவரும் போட்டிபோட்டு ஆக்ஷன் கட்சிகளில் மிரட்டிருக்கிறார்கள் அருள்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்திருக்க, கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார்.  நிரஞ்சன் ஆண்டனி படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக படத்தின் தயாரிப்பு பணிகளை பிரபாகரன் சிறப்பாக செரப்பாக செய்துருக்கிறார் , அஞ்சனா க்ருத்தி, புஜிதா பொன்னாட  இருவரும் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்கள், வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே.ஆர்.எம்.ராஜ் மோகன் , பிரியங்கா ராய், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் சமூக பொறுப்புள்ள படமாக உருவாகியுள்ள இந்தக் கதை அர்த்தப்பூர்வமாகவும் பார்வையாளர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட்டகாவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

TRANSINDIA MEDIA & ENTERTAINMENT (P) LTD Proudly presents*

 *TRANSINDIA MEDIA & ENTERTAINMENT (P) LTD Proudly presents*

 



The Trainer - An Action Thriller Inspired by the ‘Kaavalan’ App Initiative


The taste for thrillers never fade among the film enthusiasts, and it’s one big absolute genre, where a strong plot and gripping screenplay adds more intrigue. Especially, when it comes with a well-established performers, the appealing factors get beyond the usual paradigms.  Srikanth-Shaam starrer “The trainer”, produced by Neela under the banner TransIndia Media & Entertainment Pvt Ltd and directed by P. Velmanikkam becomes the latest one to join the league. 


The makers are delighted to announce that the film’s shooting is successfully completed soon going to release 


The film stars Srikanth in a compelling role as a dog trainer, with a trained dog named ‘Lee’ playing a significant part throughout the narrative. Actor Shaam will be seen essaying the role of a cop. Drawing inspiration from the ‘Kaavalan’ App developed by the Tamil Nadu Police Department for the safety and empowerment of women, the film blends social relevance with gripping action.


The story revolves around a mysterious gang involved in criminal activities under the influence of an acupuncture doctor. The hero, gifted with a unique power to identify people through their sweat, takes care of an orphanage and becomes entangled in the investigation led by a police officer who mistakes him for the culprit. As the gang targets the woman he loves, the hero embarks on an intense mission to expose the truth, protect his orphanage, and prove his innocence, culminating in a powerful and emotional climax.


The film features eight high-octane action sequences, stunning visuals captured by cinematographer Arunmozhi Cholan, music by Karthik Raja, and crisp editing by Niranjan Antony. The cast includes Sham, Pujitha Ponnda, Anjana Kirthi, Junior MGR, Vagai Chandrasekar, and Sai Dheena in pivotal roles.


With its mix of action, emotion, and a socially conscious theme, the film promises to engage audiences with both entertainment and meaning.

Monday, 3 November 2025

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna










The launch of the Tamil film “Miller” in Jaffna witnessed a defining literary moment, as acclaimed Sri Lankan Tamil poet and lyricist Pottuvil Asmin recited a special tribute poem in the presence of celebrated Tamil poet Kaviperarasu Vairamuthu.


The event, hosted at Valampuri Hotel, Jaffna, was organized by IBC Chairman and prominent entrepreneur Mr. Baskaran Kandiah, who is producing the film.


The ceremony was attended by several leading figures from the South Indian film fraternity, including

Director Pandiraj,

“Maharaja” director Nithilan,

Actor Ranjith,

Actor-director Singampuli, and

Producer P. L. Thenappan,

who extended their wishes to the team.


Prominent personalities from Sri Lanka’s Tamil arts, media, and cinema communities were also present, making the occasion a significant cultural gathering.


A highlight of the evening was Pottuvil Asmin’s emotional tribute titled “Vairamuthu – My Mother,” which received overwhelming applause from the audience. The poem celebrated the literary legacy and personal inspiration Vairamuthu has been to Asmin.


Reflecting on the moment, Pottuvil Asmin said:


“Seeing Kaviperarasu Vairamuthu in person is a dream for many. Reciting a poem in his presence is a blessing I cherish deeply.

His autobiography ‘Ithuvaarai Naan’ shaped my early literary journey. Later, when he wrote a message for my poetry collection ‘Paambugal Kulikkum Nathi’ in 2013, it became a milestone in my life.

My poem ‘Thirukkuvalai Sooriyan’ being included in his anthology ‘Kalaignar 100 – Kavithaigal 100’, honouring Kalaignar Karunanidhi’s centenary, remains a profound honour.

To stand before the poet I admire most and offer my tribute — this is the pinnacle of my literary life. It is a dream moment not only for poets in Sri Lanka, but also for many young Tamil poets across the world.”


Asmin expressed sincere gratitude to Mr. Baskaran Kandiah for organizing the event and facilitating “a rare and meaningful artistic encounter.”

யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா:

 யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா: 

கவிதையால் கர்ஜித்த பொத்துவில் அஸ்மின்; கண்டு ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து.










யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மில்லர்” திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார்.


IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான திரு. பாஸ்கரன் கந்தையா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் தொடக்க நிகழ்வு, அண்மையில் யாழ் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களான இயக்குநர் பாண்டிராஜ், “மஹாராஜா” இயக்குநர் நித்திலன், நடிகர் ரஞ்சித், நடிகர் & இயக்குநர் சிங்கம்புலி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன்

ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


இலங்கைத் தமிழ் திரைப்படத் துறை, ஊடகத் துறை மற்றும் கலையுலகின் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் தனது கவிதையை ஆற்றிய பொத்துவில் அஸ்மின், “வைரமுத்து என் தாய்” என்ற மகுடத்தில்  கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பித்த வாழ்த்துக் கவிதை, பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.


இந்நிகழ்வை குறித்து பேசும்போது பொத்துவில் அஸ்மின் தெரிவித்தாவது.


“கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காண வேண்டும் என்பது பலரின் கனவு.

ஆனால் அவர்முன் நின்று கவிதை பாடும் பாக்கியம் — நான் பெற்ற வரம் என்பேன்.


எனது சிறிய வயதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை முதன் முதலாக நான் புத்தகங்கள், ஊடகங்கள் வழியேதான் சந்தித்தேன். அவரின் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை என் வாழ்வையும் இலக்கியப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நூல். அதன் பிறகு, 2013-ல் வெளிவந்த ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்ற எனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் வழங்கிய வாழ்த்துரை எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.


கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொகுத்த  ‘கலைஞர் 100 – கவிதைகள்100 ’ நூலில் என் ‘திருக்குவளை சூரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளது.


நான் நேசித்த மாபெரும் கவிஞரின் முன்னிலையில், அவரை பற்றிய கவிதையைப் பாடும் பாக்கியம் கிடைத்தது — இது என் இலக்கிய வாழ்வின் உச்ச அங்கீகாரம். இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பல இளம் கவிஞர்கள் கூட இதுவொரு கனவு மாதிரியான வாய்ப்பு என்பதை நான் நன்றாக அறிவேன்.”


விழாவை ஏற்பாடு செய்து இந்த அரிய கலைச் சந்திப்பை உருவாக்கிய IBC நிறுவனரும் தொழில் அதிபருமான திரு. கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு என் மனம் நிறைந்ந நன்றிகள்” என அவர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்

 *அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்*



“45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க பழங்குடி சிறார்கள் அவருக்கு உதவுகிறார்கள்; அவருடைய உடையை மாற்றி மர்மமாக மறைந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா அந்த இடத்துக்குச் செல்கிறார்கள்.


இந்த பாடலுக்கான வரிகள் மற்றும் பாடல் குரல் தமிழ் கானா கலைஞர் கானா காதர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. உற்சாகமான காட்சிகளுடன் இணைந்த ஜானி மாஸ்டர் (Jaani Master) அவர்களின் மின்னல் நடன அமைப்புகள் திரையில் மயக்கும் ஆற்றலை அளிக்கின்றன. சிவராஜ்குமார், உபேந்திரா, மற்றும் ராஜ் பி ஷெட்டியின் அபாரமான திரை முன்னிலை மற்றும் உற்சாகமான ஆட்டம் பாடலை இன்னும் உயர்த்துகிறது.


இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, இன்றைய இளைய தலைமுறையுடன் ஒத்திசைவாகச் செல்லும் தனித்துவமான, அடிமைபடுத்தும் ரிதமுடன் கூடிய இசையை வழங்கியுள்ளார்.


“45 தி மூவி” படத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன, படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.


நடிப்பு: சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர்


தொழில்நுட்ப குழு:


தயாரிப்பு நிறுவனம்: சுரஜ் புரொடக்‌ஷன்ஸ்

தயாரிப்பாளர்கள்: திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி

கதை, இசை, இயக்கம்: அர்ஜுன் ஜன்யா

ஒளிப்பதிவாளர்: சத்யா ஹெக்டே

எடிட்டர்: கே. எம். பிரகாஷ்

பாடகர்: கானா காதர் 

பாடல் வரிகள்: கானா காதர் 

ஸ்டண்ட் மாஸ்டர்கள்: டாக்டர் கே. ரவி வர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃபரென்ட் டேனி, சேதன் டி’சூசா

நடன அமைப்பாளர்: ஜானை பாஷா

உரையாடல்: அனில் குமார்

பிஆர்ஓ: சதீஷ் (AIM)


Song Link 🔗 https://youtu.be/FZNHXXwL0CE

சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில்

 *சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!*



















பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்.


ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை நோக்கமாக கொண்ட அந்த அமைப்பின் 10-வது ஆண்டு துவக்க விழா 3.11.2025 அன்று மதியம் சென்னை தி நகர் சோஷியல் கிளப்பில் நடைபெற்றது.


நிகழ்வில் ஆட்டோ ஓட்டும் அனுபவமுள்ள ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்கிப் பேசிய பி டி செல்வகுமார், ''பத்திரிகையாளராக இருந்து, நடிகர் விஜய்க்கு பி ஆர் ஓ'வாக இருந்து, அவரது வளர்ச்சிக்காக 27 வருடங்கள் உழைத்து, சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன்.


பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதோடு நின்று விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு சமூக சேவைகளை முன்னெடுத்துச் செய்வதற்காக கலப்பை மக்கள் இயக்கம் தொடங்கினோம். தொடங்கியபோது இவரால் என்ன செய்துவிட முடியும் என்றெல்லாம் கேலி கிண்டல் செய்தவர்கள் உண்டு. அப்படியான பேச்சுக்களையெல்லாம் கடந்து 10-வது வருடத்திற்கு வந்துள்ளோம். 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.


எங்களுடைய உதவித் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக மலையோர, பழங்குடி கிராம மக்களுக்கு சென்று சேரும்படி பார்த்துக் கொள்கிறோம்.


கொரோனா காலகட்டத்தில் ஒரு வருடகாலம் தொடர்ச்சியாக நாங்கள் செய்த உதவிகளைப் பாராட்டி, எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் எனக்கு 'மனிதநேயச் செம்மல் விருது' தந்தார்கள்.


அதன்பிறகு, நெல்லை மாவட்ட சுற்று வட்டாரத்தில், மலைக் கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், கலையரங்குகள் கட்டிக் கொடுத்துள்ளோம். அந்த சேவையைப் பாராட்டி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் சபாநாயகர் அப்பாவு அவர்களும் எனக்கு 'சிறந்த கல்வி சேவையாளர் விருது' வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.


இதோ இப்போது 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அந்த நிகழ்வை சிறப்பாக நடத்த முடிவெடுத்து பெண்களின் உழைப்புக்கு மதிப்பளித்து ஏழை எளிய ஆட்டோ ஓட்டுநர் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்குவதென தீர்மானித்து செயல்படுத்தியிருக்கிறோம்.


நேற்று தமிழ்நாடு சி எம் தலைமையேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு சென்று வந்துள்ளேன் என்றால், அந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அது சாதரணமாக நடந்துவிட வில்லை.


சவால்கள், அவமானங்கள் என எல்லாவற்றையும் கடந்துதான், வியர்வையும் ரத்தமும் சிந்தி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். எதுவுமே சும்மா வந்து விடாது. ஒவ்வொரு செயல்பாட்டுக்கு பின்னேயும் கடுமையாக உழைத்திருக்கிறேன். பெரியளவில் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். இனியும் சவால்களைச் சந்திக்க, மக்கள் நலனுக்காக எதையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்யத் தயராக இருக்கிறேன். இந்த எங்களின் சமூக சேவை பணிகள் வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக தொடரும்.


எப்படி பெரிய பெரிய நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்களோ, அதேபோல் சாமானியர்களான எங்களைப் போன்றோரின் சமூக சேவை பணிகள் பற்றி மக்களிடம் பத்திரிகையாளர்கள் கொண்டு சேர்த்து ஆதரவளிக்க கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.


அதையடுத்து பத்திரிகையாளர்கள், 'நடிகர் விஜய்யின் கட்சியோடு கூட்டணி வைப்பீர்களா?'  என்று கேட்டபோது ''காலச் சுழல் கூடி வந்தால் இணைந்து செயல்படலாம். விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்'' என்றார்.


கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் பற்றி கேட்டதற்கு, ''விஜய் இனிவரும் நாட்களில் தனக்கான கூட்டத்தை கட்டுப்படுத்த, நெறிப்படுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கூட்டங்களுக்கு சரியான நேரத்துக்கு போவது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.


எஸ் ஐ ஆர் (Special Intensive Revision - SIR) பற்றிய கேள்விக்கு, ''தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவசர அவசரமாக மத்திய அரசு எஸ் ஐ ஆர் நடைமுறைப்படுத்துவது தவறானது'' என்றார்.


நிகழ்வின் தொடக்கத்தில் வரவேற்புரை வழங்கிய கலப்பை மக்கள் இயக்கத்தின் துணைத் தலைவர் நந்தகுமார், ''ஏழை எளிய மக்களுக்கு இயன்றதை செய்வோம்' என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் கஜா புயல் பாதிப்பின்போது 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செய்தோம். கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் உதவிகள் செய்தோம். மற்ற அரசியல் கட்சிகள் யாருக்கெல்லாம் ஓட்டுரிமை இருக்கிறதோ அவர்களுக்கு உதவிகள் செய்தார்கள். நாங்கள் இந்தியாவில் ஓட்டுரிமையில்லாத பர்மா அகதிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைச் செய்தோம். பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகள் என பலருக்கும் எங்களுடைய உதவிகள் போய்ச் சேர்ந்தது.


ஏழை எளிய மக்களுக்குத் தேவையான செவித்திறன் மேம்பாட்டுக் கருவிகள், மூக்குக் கண்ணாடிகள் வழங்குவது, மரக்கன்றுகள் வ்ழங்குவது, ஆட்டுக் குட்டிகள் வழங்குவது என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். எந்த உதவிகளாக இருந்தாலும் ஏழை எளிய மக்கள், மலைவாழ் மக்கள், பழங்குடி மக்கள் பயன் பெறுவதை நோக்கமாக கொண்டு செயலாற்றுகிறோம். எங்களின் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்களை மூன்று முறை அழைத்து அங்கீகரித்துள்ளார்.


நேற்றைய (2.11.2025) தினம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த, மத்திய அரசு நடைமுறைப்படுத்தவிருக்கிற எஸ் ஐ ஆர் (Special Intensive Revision - SIR) செயல்திட்ட எதிர்ப்புக் கூட்டத்திலும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் பி டி செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு தனது கருத்துக்களை முன் வைத்தார்.


பி டி செல்வகுமார், நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு மட்டும் துணை நின்றவர் அல்ல; விஜய் சேதுபதி நடித்த 'தென்மேற்குப் பருவக் காற்று' பட வெளியீட்டில் பிரச்சனை வந்தபோது, அதை தீர்க்க உதவி செய்து அவரது வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்'' என்றார்.


ஆட்டோக்களைப் பெற்றுக் கொண்டவர்கள் சார்பாக ஒரு பெண்மணி, கொரோனா காலத்திலிருந்து இப்போது வரை பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் தங்களுக்கு செய்து வருகிற உதவிகளைக் குறிப்பிட்டு, ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவித்ததற்காக நன்றி தெரிவித்ததோடு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.