Featured post

Angammal Movie Review

Angammal Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  angammal  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vipin Radhak...

Thursday, 4 December 2025

Angammal Movie Review

Angammal Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  angammal  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vipin Radhakrishnan. இந்த படத்துல  Geetha Kailasam  Saran Shakthi, Thendral Raghunathan  Bharani. னு பலர் நடிச்சிருக்காங்க.  இந்த படம்  New York Indian Film Festival ல best film ன்ற விருதை வாங்கிச்சு. அப்புறம் Indian Film Festival of Melbourne ல Best Actor (Female) க்கும் Best Indie Film ன்ற catagory க்கும் விருது வாங்கிச்சு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்துல ஓரூ ஸ்பெஷல் ஆனா விஷயத்தை use பண்ணிருக்காங்க. உச்சிமலை காத்து னு ஒன்னு வரும். இவங்க ஊர்  ல இருக்கற மலை ல இருந்து 25 வருஷத்துக்கு ஒருதடவை தான் வரும். இந்த காத்து ல uchchaani ன்ற ஒரு பூ வோட மனமும் வரும். இந்த மாதிரி ஒரு மனம் வந்தேளே எதோ ஒரு ஆபத்து வர போது ன்றது அந்த ஊர் மக்கள் ஓட நம்பிக்கை. இதே தான் ரொம்ப உறுதியா நம்பிட்டு இருக்காங்க angammal அ நடிச்சிருக்க geetha kailasam. இவங்களோட life ரொம்ப கஷ்டமானதா தான் இருக்கும். படத்தோட ஆரம்பத்துலயே இவங்களோட பேத்தி ஆனா manju வை scotter ல வச்சு கூட்டிட்டு போவாங்க. அவங்களோட பேத்தி க்கு இந்த uchchaani பூவோட tatoo வை குத்துறதுக்கு தான் போவாங்க. இந்த பூவோட tatoo வை angammal ஓட இறந்து போன அம்மாவும் போட்ட்ருப்பாங்க. ஆனா இந்த tatoo போட manju வோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க. இதுனால angammal க்கும் அவங்களோட மருமகளுக்கும்  ரொம்ப சண்டை வரும். இதுல இருந்து angammal ஓட family குள்ள என்னமாதிரியான சண்டைகள் வரும் ன்றது ரொம்ப தெளிவா director காமிச்சிருப்பாரு. 


படம் போக போக தான் angammal ஓட character நமக்கு முழுசா தெரியும். இவங்க ஒரு tough ஆனா character அ இருப்பாங்க. இவங்களுக்கு blouse போடுற பழக்கம் கிடையாது, எப்பயும் பீடி பிடிச்சிட்டு இருப்பாங்க, கோவம் டக்குனு வந்திரும் அதுனால நெறய கெட்ட வார்த்தைகள் அ பேசுவாங்க. காலம் போற வேகத்தோட இவங்களால ஒத்து போக முடியாது. சுத்தி நடக்கற changes அ இவங்கனால புரிஞ்சுக்க முடியாது. அதுனால தன்னோட identity, அவங்களோட family, அந்த ஊர் எல்லாமே அவங்க கைய விட்டு போற மாதிரி ஒரு feeling ல இருப்பாங்க. இந்த காரணத்துனால அவங்க எப்பவுமே வயல்வெளி ளையும் இன்னொரு ஒரு lady ஓட தான் நேரத்தை spend பண்ணுவாங்க. angammal க்கு pavalam ன்ற ரெண்டாவுது பையன் இருப்பான். இவன் city க்கு போய் படிச்சு ஒரு doctor அ ஆயிருப்பான். அங்க ஒரு பெரிய பணக்கார  பொண்ண kalyanam பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை வரும். இது தான் angammal னால accept பண்ணிக்க முடியாது. இந்த பொண்ணோட family இவங்கள பாக்க ஊர்க்கு வராங்க னு சொல்லி angammal ஓட மூத்த பையனும் அவரோட மனைவியும் இவங்கள blouse அ போட்டுக்க சொல்லுவாங்க. எதுக்கும் கோபப்படாம கெட்ட வார்த்தை பேசாம ஒழுங்கா நடந்துக்க சொல்லுவாங்க. இது தான் அவங்களோட இடத்துல இருந்து அவங்கள தள்ளி விடுற மாதிரி பயந்து போறாங்க. 


இதுல இருந்து angammal க்கு அவங்களோட குடும்பத்துல இருக்கற power மறைஞ்சு போகுதா ? இல்ல அவங்களோட சுதந்திரம் பறிபோகுத? ன்ற கேள்வி கண்டிப்பா படத்தை பாக்குற audience க்கு தோணும். உண்மையா சொல்ல போன ரெண்டுமே நடக்கும் தான். அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்களோட identity யா விட்டு குடுக்காம family ஓட close அ இருக்கணும் னு நினைப்பாங்க. இவங்களோட ஒரு friend க்கும் இதே நிலைமை தான் நடக்கும். angammal க்கு தன்னோட பையன் கல்யாணம் பண்ணிக்கிறது சந்தோசமா தான் இருக்கும் இருந்தாலும் relationship change ஆகுறத தான் இவங்கனால ஏத்துக்க முடியாது. இவங்க எப்பவுமே pavalam கிட்ட நீ மாறிட்ட , முன்னாடி மாதிரி நீ இல்ல னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. அவங்களோட expectation என்னனா இந்த கல்யாணத்த பத்தி ஏன் முன்னாடியே இவங்ககிட்ட சொல்லல ன்ற வேதனை தான் இருக்கும். என்னதான் இவங்களோட பசங்க அவங்களுக்கு னு ஒரு life அ தேர்ந்துஎடுத்து போனாலும் ஒரு அம்மாவா அந்த changes அ இவங்கனள ஏத்துக்க முடியாது. 


இன்னொரு scene ல பாத்தீங்கன்னா pavalam ஓட நடவடிக்கை சரி இல்லனு தன்னோட மூத்த பையன் sudalai யா நடிச்சிருக்க bharani கிட்ட complaint பண்ணுவாங்க. ஆனா sudalai குடிச்சிகிட்டு nadaswaram வாசிச்சிகிட்டு ஒண்ணுமே பண்ணாம இருப்பாரு. இதை பத்தி angammal எந்த கேள்வியும் கேட்கமாட்டாங்க. என்னதான் மத்தவங்க இவங்கள ignore பண்ணுறாங்க னு இவங்க நினைச்சாலும் இவங்களும் sudalai விஷயத்துல அதுதான் பண்ணுறாங்க. இந்த படத்துல individuality யையும் social rules அ follow பண்ணாததை பத்தி யும் சொல்லுறாங்க. அதாவுது blouse போடுறது social expectation அ இருக்கலாம், ஆனா blouse போடாம இருக்கிறது தான் அவங்களோட comfort . rules ஆயிரம் இருந்தாலும் ஒருத்தவங்களோட மனுசு என்ன சொல்லுதோ அதா தான் எல்லாரும் கேட்பாங்க. இந்த விஷயம் தான் படத்துல ரொம்ப நேர்த்தியை சொல்லிருப்பாங்க. 


அந்த ஊர் ல அவங்க குத்தி இருக்கற அந்த பூவோட tatoo வும் அவங்க blouse போடாம இருக்கறதும் தான் அவங்களோட identity. இதை மாத்த சொல்லும்போது இவங்களுக்கு வர பயம் meaningful  அ தான் இருக்கும். இந்த மாதிரி ஒரு individual  ஓட மனுசுக்குள்ள நடக்கற போராட்டங்களை ரொம்ப நேர்த்தியா எடுத்து சொல்லிருக்காரு director . director ஓட vision  அ பக்காவா camera  ல பதிவு பண்ணிருக்காரு Cinematographer Anjoy Samuel . sound  team  ல இருக்கற composer Mohammed Maqbool Mansoor, sound designer Lenin Valappad, அப்புறம்  sound mixer PK Krishnanunni இவங்களோட work  யும் இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். 


Perumal Murugan’ ஓட  சிறுகதை  Kodithuni யா base பண்ணி இந்த படத்தோட கதையை எடுத்துருக்காங்க. angammal  ஓட life ல நடக்கற பல விஷயங்களை audience அழ relate பண்ணிக்க முடியும். இந்த படத்தை பாத்துட்டு வரும் போது கண்டிப்பா இதோட தாக்கம் ஆலமனுசுல பதியும் ன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. 


இது ஒரு நல்ல கதைக்களம் தான். சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

Nagabandham Climax: Unbelievable Spending

 Nagabandham Climax: Unbelievable Spending*




Abhishek Nama’s pan-India epic Nagabandham is presently progressing with its high-stakes climax shoot underway at Ramanaidu Studios. The team is currently filming what is said to be one of the most ambitious finale sequences ever attempted in a mythological action drama.


Starring young hero Virat Karrna and produced by Kishore Annapureddy and Nishitha Nagireddy, an unbelievable spending of 20 crore has been poured into the climax alone, making it one of the costliest action blocks planned for a pan-India release.


Nagabandham is a dream project for Abhishek Nama who penned a powerful script, and he is extra cautious about filming the climax episode. Central to this grand finale is a gigantic, symbolically rich set featuring a monumental sacred door, constructed by Production Designer Ashok Kumar, capturing the grandeur of ancient temple architecture. To enhance the scale with high-voltage action, the makers have roped in renowned Thai stunt master Kecha Khamphakdee.


Media representatives who visited the sets yesterday were left awe-struck, both by the grand set design and the sheer brilliance of the climax sequence being filmed.


The film’s promotions will start soon, as the production works are nearing completion.


Cast: Virat Karrna, Nabha Natesh, Iswarya Menon, Jagapathi Bab, Jayaprakash, Murali Sharma, B.S. Avinash, and others


Technical Crew:


Story, Screenplay & Director: Abhishek Nama

Producers: Kishore Annapureddy, Nishitha Nagireddy

Director Of Photography: Soundar Rajan S

Music: Abhe, Junaid Kumar

Production Designer: Ashok Kumar

Editor: RC  Pranav

CEO: Vasu Potini

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!

 *நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!*




அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது.


இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.


அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத்துக்கு அவர் எழுதிய சக்திவாய்ந்த திரைக்கதை பெரும் வரவேற்பு பெறும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த மாபெரும் கிளைமேக்ஸ் காட்சியின் மையப் பகுதியாக, புராதன கோவில் கலை வடிவத்தை, பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட மகத்தான புனித வாசல் அமைப்பு இடம் பெற்றுள்ளது. இதை ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.


மேலும், ஆக்சன் காட்சிகளின் தரத்தையும் வலிமையையும் உயர்த்துவதற்காக தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.


நேற்று படப்பிடிப்பு தளத்தைப் பார்வையிட்ட ஊடகப்பிரமுகர்கள், அங்கு காணப்பட்ட செட் அமைப்பு மற்றும் படமாகி கொண்டிருந்த கிளைமேக்ஸ் காட்சியின் பிரம்மாண்டத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.


“நாகபந்தம்” படத்தில் நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். 


“நாகபந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. 


இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.


நடிப்பு:

விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்


தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, இயக்கம் – அபிஷேக் நாமா

தயாரிப்பாளர்கள் – கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி

ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் S

இசை – அபே, ஜுனைத் குமார்

ஆர்ட் டைரக்டர் – அசோக் குமார்

எடிட்டிங் – R.C. பிரணவ்

CEO – வாசு பொடினி


*Nagabandham Climax: Unbelievable Spending*


Abhishek Nama’s pan-India epic Nagabandham is presently progressing with its high-stakes climax shoot underway at Ramanaidu Studios. The team is currently filming what is said to be one of the most ambitious finale sequences ever attempted in a mythological action drama.


Starring young hero Virat Karrna and produced by Kishore Annapureddy and Nishitha Nagireddy, an unbelievable spending of 20 crore has been poured into the climax alone, making it one of the costliest action blocks planned for a pan-India release.


Nagabandham is a dream project for Abhishek Nama who penned a powerful script, and he is extra cautious about filming the climax episode. Central to this grand finale is a gigantic, symbolically rich set featuring a monumental sacred door, constructed by Production Designer Ashok Kumar, capturing the grandeur of ancient temple architecture. To enhance the scale with high-voltage action, the makers have roped in renowned Thai stunt master Kecha Khamphakdee.


Media representatives who visited the sets yesterday were left awe-struck, both by the grand set design and the sheer brilliance of the climax sequence being filmed.


The film’s promotions will start soon, as the production works are nearing completion.


Cast: Virat Karrna, Nabha Natesh, Iswarya Menon, Jagapathi Bab, Jayaprakash, Murali Sharma, B.S. Avinash, and others


Technical Crew:


Story, Screenplay & Director: Abhishek Nama

Producers: Kishore Annapureddy, Nishitha Nagireddy

Director Of Photography: Soundar Rajan S

Music: Abhe, Junaid Kumar

Production Designer: Ashok Kumar

Editor: RC  Pranav

CEO: Vasu Potini

Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring Indie Song “Varum Vetri”

 *Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring Indie Song “Varum Vetri”*





*Pan-Indian Icon Kichcha Sudeep’s vocals emblazon the Track* 


For over twenty-five years, actor Shaam has remained a compelling presence in Tamil cinema, admired for his versatility and enduring screen charisma.


 Now, he steps into an exciting new creative chapter, not only as an actor,  but also directing and producing a musical album titled Varum Vetri, crafted under the banner of SIR Studios.


With this project, Shaam embraces the role of filmmaker with the same conviction that earned him acclaim as an actor. Joining him on screen is actress Neera, whose vibrant presence complements the album’s mood of aspiration and upliftment. The album’s sonic landscape has been composed by Amrish, renowned for his dynamic musical range, while celebrated choreographer Sridhar Master embellishes the song with appealing dance steps. 


Adding a striking highlight to the production, the vocals are rendered by none other than Kiccha Sudeep, one of Kannada cinema’s most widely admired stars. His involvement not only adds star power but introduces a unique cross-industry collaboration, pointing toward a musical experience designed to reflects and connects beyond regional boundaries.


The prestigious T-Series label will be presenting the album worldwide, further elevating its reach in the global music market.


Technically, the album reflects a team driven by craft:


Cinematography: K. A. Sakthivel

Editing: Lawrence Kishore

Lyrics: Jagan

Art Direction: V. R. Rajavel

Stunt Coordination: Monster Mukesh

Costume Styling: Neera

Makeup: Veerasekar

Advertising Design: Dinesh Ashok

Public Relations: A. John


Varum Vetri aims to be more than a musical release,  it is a statement of confidence, a celebration of new beginnings, and a promise that victory awaits those who dare to reinvent themselves. Emboldened by talent across the Southern film industries, Shaam’s directorial debut looks ready to walk confidently into the spotlight.

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’

 *நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’*





*‘வரும் வெற்றி’ இசை ஆல்பம் மூலம் இயக்குநராக மாறிய நடிகர் ஷாம்*


தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.


SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.


கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.


பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.


*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்* 


இயக்கம் ; ஷாம்


ஒளிப்பதிவு ; K.A.சக்திவேல் 


இசை ; அம்ரீஷ் 


படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர் 


நடனம் ; ஸ்ரீதர் 


பாடல் ; ஜெகன்


கலை ; வி.ஆர் ராஜவேல் 


ஸ்டன்ட் ; மான்ஸ்டர் முகேஷ் 


ஆடை வடிவமைப்பு ; நிரா 


ஒப்பனை ; வீரசேகர் 


விளம்பர வடிவமைப்பு ; தினேஷ் அசோக் 


மக்கள் தொடர்பு ; A. ஜான்

Terminator actor Arnold Schwarzenegger reunites with director James Cameron at star-studded Avatar: Fire and Ash premiere in LA

 Terminator actor Arnold Schwarzenegger reunites with director James Cameron at star-studded Avatar: Fire and Ash premiere in LA



Arnold Schwarzenegger extended his support to his long-term friend James Cameron has he attended the Avatar: Fire and Ash premiere in Los Angeles. The two share decades of history, dating all the way back to their groundbreaking work on The Terminator franchise, an era that cemented both of them as legends in action cinema. 


The premiere itself pulsed with massive excitement, as Avatar: Fire and Ash stands as one of the year's most anticipated releases. Fans, industry insiders, and global media filled the venue with nonstop buzz, eager to see the next evolution of Cameron’s landmark sci-fi universe. With its cutting-edge visuals, expanded worldbuilding, and huge expectations, the film already carries enormous momentum, and Schwarzenegger’s appearance added an extra layer of star power to an already electrifying night. 


The film received phenomenal early responses globally as critics appreciated it for its breathtaking visuals, thrilling new characters, scale, heart and sheer cinematic ambition. Avatar: Fire and Ash releases in Indian theatres in 19th December in English, Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில்

 *லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில் 'டெர்மினேட்டர்' நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்!*



லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டதன் மூலம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். 'தி டெர்மினேட்டர்' திரைப்படம்  முதல் அவர்களின் அடுத்தடுத்த பல படைப்புகள் இருவரையும் சினிமாவில் ஜாம்பவான்களாக மாற்றியது. 


இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியர் உற்சாகத்துடன் தொடங்கியது. கேமரூனின் அறிவியல் புனைகதை பிரபஞ்சத்தின் அடுத்த பரிணாமத்தைக் காண ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அதன் அதிநவீன காட்சிகள், விரிவாக்கப்பட்ட உலகம் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கரின் தோற்றம் அந்த இரவை மேலும் ஒளிர செய்தது. 


பிரம்மாண்டமான காட்சியமைப்புகள்,  சிலிர்ப்பூட்டும் புதிய கதாபாத்திரங்கள் மற்றும்  அற்புதமான சினிமா அனுபவத்திற்காக படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பாராட்டினர். 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு

 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "  படத்திற்காக புத்த  மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு ! 














99 அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "  


மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் 

எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படத்திற்கு

" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "

 என்று வித்தியாசமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் சபரி, 

ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். 

கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். 


இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.


இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா

ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.

பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்.

தயாரிப்பு நிறுவனம் - மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.

கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.


படம் பற்றித் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி  கூறும்போது,



"படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு 

" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " 

என்று பெயர் வைத்துள்ளோம்.


அந்தக் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது.எதனால் அப்படி நடக்கிறது?அதன் பின்னணியில் இருப்பது என்ன?  என்பதை சபரியும், ரக்சிதாவும், ஸ்வேதாவும், எம்.எஸ்.மூர்த்தியுடன் சேர்ந்து கண்டுபிடிக்க  முயல்கிறார்கள்.அவர்களின் விரும்பியபடி  மர்மங்களைக் கண்டுபிடித்து அந்தக் குடியிருப்பு வாசிகளைக் காப்பாற்றினார்களா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.


இப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத புத்த பிக்குகளின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் - சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளோம்.


மற்றும் படத்தில் AI-CG -  காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக  நடைபெற உள்ளது" என்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான எம்.எஸ்.மூர்த்தி.

Wednesday, 3 December 2025

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 *காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்”  தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*



தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.


தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.


இந்நிகழ்வினில்..,


நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது..,


ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், ஆனால் இறைவன் காத்திரு கடவுள் உடன் நடிக்கலாம் என சொன்னார். அது இப்போது நடந்துள்ளது. இப்படத்தில் ஒரு துறவியாக நடித்துள்ளேன். எனக்கு இயக்குநர் போயபாடி சீனு ஒரு அற்புதமான ரோல் தந்துள்ளார். தமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு. மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இவர் கொண்டாடப்படுவார். பாலைய்யா ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சக்தி, அவர் மாதிரி இப்போது எந்த ஒரு நடிகரும் இயங்க முடியாது. மைனஸ் 10 டிகிரியில் வெறும் உடலுடன் எந்த சீஜியும் இல்லாமல், ஜார்ஜியாவில் நடித்தார். இப்படம் எனக்கு மிகச்சிறந்த அனுபவம். 300 படங்கள் நடித்துள்ளேன், நான் அகண்டா படமும் செய்துள்ளேன் Both are not same. இப்படம் மொழி தாண்டிய ஒரு பான் இந்திய திரைப்படம், நம் இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் படைப்பு. நீங்கள் படம் பார்த்து கொண்டாடுவீர்கள், அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். நம் ஆன்மீக உணர்வை யார் வந்து, என்ன சொன்னாலும் அழிக்க முடியாது. இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படம் எனக்கு மிகப்பெரும் பெருமை. அனைவருக்கும் நன்றி.


நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,


அகண்டா 2 குழுவை சென்னைக்கு வரவேற்கிறேன். ஹைதராபாத் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை, சென்னையில் விழா நடக்கிறது என்றவுடன் நான் ஷீட்டிங்கில் இருந்து சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அகண்டா 2 படத்தில் நான் எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. என்னை தேர்ந்தெடுத்து, நடிக்க வைத்த போயபாடி ஶ்ரீனு சாருக்கு நன்றி. அந்தப்படத்தில் நடித்தது சிவனின் அருள், எனக்குள் வந்த மாதிரி இருந்தது. எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தனர். நான் 2,3 காட்சிகள் நடித்தாலும், இப்படத்தில் முழுமையாக வருவது போல் செய்துள்ளார். சிவன் இப்படி தான் இருப்பார் என பாலைய்யா சாரை காட்டி என் பேரக்குழந்தைகளுக்கு சொல்வேன். வெட்ட வெளியில் செருப்பு கூட இல்லாமல் அவர் உழைத்த உழைப்பை நேரில் பார்த்து பிரமித்தேன். தமன் எல்லோரையும் அதிர வைக்கும் படி ஒரு அற்புதமான இசையை தந்துள்ளார். கமர்ஷியல் தாண்டி தெய்வீகத்தை தர போயபட்டி ஶ்ரீனுவால் தான் முடியும். தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினி சாரையும், தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலைய்யா சாரையும் இணைத்து படம் செய்யுங்கள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி. அகண்டா 3 யும் கண்டிப்பாக செய்யுங்கள் நன்றி.


இணை தயாரிப்பாளர் : கோடி பருச்சுரி


பத்திரிக்கை ஊடக நண்பர்களின் அன்புக்கு நன்றி. இது உண்மையாகவே ஒரு பான் இந்திய படம். நம் எல்லோரும் கொண்டாடக்கூடிய வகையில் இருக்கும். இயக்குநர் போயபாடி ஶ்ரீனுவுக்கும், பாலைய்யா சாருக்கும் என் நன்றிகள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி.


போயபாடி ஶ்ரீனு பேசியதாவது..,


அனைவருக்கும் வணக்கம், என் 3 படங்கள் கேமராமேனாக வின்சன் சார் செய்தார். அவர் மூலம் தமிழ் தெரிந்தாலும், அதிகம் பேசத் தெரியாது. அகண்டா தெலுங்கு மொழிக்கான படமல்ல அதே போல தான், அகண்டா 2, இது இந்துகள் மற்றும் இந்தியாவின் ஆன்மாவை, ஆன்மிகத்தை கொண்டாடும் படம். தெலுங்கு, தமிழ், என எல்லோருக்குமான படம். பாரதம் முழுக்க உள்ள அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள். தேகம், தேசம், தெய்வம் என எல்லாவற்றிக்குமான படம். ஆனால் அதை கமர்ஷியலாக தந்துள்ளோம் அனைவருக்கும் நன்றி.


நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியதாவது..,


என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உள்ளது. நான் இங்கு தான் பிறந்தேன். அகண்டா 2 விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். என் உயிருக்கு இணையான தமிழ் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள். சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி. என் அப்பா என் டி ஆரின் வாழ்க்கையெல்லாம் இங்கு தான் நடந்தது. மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜியுடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது. என் அப்பா என் டி ஆர் தமிழ் நாட்டின் மீது மிகுந்த அன்போடு இருந்தார். அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா? என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப்படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல்லை, இது இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு. நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப்படம். சனாதான தர்மத்தை சக்தியை இந்தப்படத்தில் காட்டியுள்ளோம். தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பா தான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார், நான் ரொம்ப அதிர்ஷடசாலி. நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்கு காத்திருக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது அனைவரும் படம் பாருங்கள். கொண்டாடுங்கள் நன்றி.


தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள்.


இப்படத்தில் ஆதிப் பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின்  உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.


படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே  — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும்  உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய  அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும்,  A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.


*அகண்டா 2 - தாண்டவம்  திரைப்படம் வரும்  டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.*


*நடிப்பு :*


நந்தமூரி பாலகிருஷ்ணா

சம்யுக்தா

ஆதிப் பினிசெட்டி

ஹர்ஷாலி மால்ஹோத்ரா


*தொழில்நுட்பக் குழு :*


எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு

தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா

பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்

வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி

இசை : S. தமன்

ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி

கலை : A.S. பிரகாஷ்

எடிட்டிங் : தம்மிராஜு

சண்டை அமைப்பு : ராம் - லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்

 *இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!*




செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம்  மாயபிம்பம்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.


2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்.


🔗https://youtu.be/1DR3_njj8Q4?si=6L0kPWhNc8NZmU6P

TRIDENT ARTS & EYWA Entertainment Present a Unique Romantic Comedy film “Ram in Leela”

 TRIDENT ARTS & EYWA Entertainment Present a Unique Romantic Comedy  film “Ram in Leela” Starring Rio & Vartika






Producers R. Ravindran of Trident Arts and Sudharsan of EYWA Entertainment have collaborated to produce an exciting new romantic comedy “Ram in Leela” helmed by Director Ramachandran Kannan. Starring Rio and Vartika in the lead roles, the film promises to captivate audiences with a highly entertaining and distinctive narrative. The film’s launch took place in Chennai that witnessed the presence of Makkal Selvan Vijay Sethupathi, who graced the occasion and conveyed his wishes for great success to entire team. 


Alongside the lead pair, the screen will be shared by popular entertainers including Ma Ka Pa Anand, Chethan, Munishkanth, Malavika Avinash, Deepa Venkat, Nayana Elza and Stunt Master Super Subbarayan in pivotal roles. The combination of these actors guarantees a perfect mix of humor and drama.



Crew Details 


Director: Ramachandran Kannan

Producers: R. Ravindran (Trident Arts) & Sudharsan (EYWA Entertainment)

Music: Ankit Menon

Cinematography: Mallikarju 

Creative Producer : Sanjay Vijayraghavan

PRO - Sathish Kumar ( S2 Media)

டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான

 *டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ' ராம் in லீலா' வில் இணையும் ரியோ - வர்திகா ஜோடி* 






டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு' 'ராம் in லீலா' என பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவிற்கு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து  தெரிவித்தனர்.


இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் 'ராம் in லீலா ' எனும் திரைப்படத்தில் ரியோ , வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். சஞ்ஜெய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படம் - சமகால பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் படைப்பாக உருவாகிறது. 


தொழில்நுட்பக் குழு : 


இயக்கம் : ராமச்சந்திரன் கண்ணன் 

தயாரிப்பாளர்கள் : ஆர் ரவீந்திரன் & சுதர்சன் 

தயாரிப்பு நிறுவனம் : டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா எண்டர்டெயின்மென்ட் 

ஒளிப்பதிவு : மல்லிகார்ஜுன் 

இசை : அங்கித் மேனன் 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : சஞ்ஜெய் விஜய்ராகவன்

மக்கள் தொடர்பு - சதீஷ் குமார் (S2 மீடியா)




ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’*

 *ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’* 






வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’.


 இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார்.


வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தினை கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது.


இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் இப்படத்தினை படமாக்கி உள்ளனர். 


இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவோ கதை சொல்லப்பட்டிருக்கும். 


ஆனால் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட அம்சமாக ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் பெட்டின் பார்வையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது..


படத்தைப் பற்றி மேலும் இயக்குநர் எஸ்.மணிபாரதி கூறுகையில், 


“இப்படத்தின் தயாரிப்பாளர் விஜயகுமார், கதாநாயகன் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள். 


இப்படத்தினைப் பார்த்தவுடன் வெளியிட முன்வந்த ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் கே..கந்தசாமி மற்றும் கே.கணேசன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 


புத்தாண்டின் தொடக்கத்திலேயே வர உள்ளதால் அனைவருக்கும் இப்படம் புத்தாண்டு கொண்டாட்டமாகவும் இருக்கும். ஊட்டியின் கடுங்குளிரில் நள்ளிரவில் படமாக்கப்ப்பட்ட காதல் காட்சிகள் அனைத்தும் இப்படத்தின் உன்னதங்கள்” என்கிறார்.  


இதன் தொழில்நுட்பக் கலைஞர்களாக கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுத, ஜே.பி எடிட்டிங் செய்ய, பழனிவேல் கலை இயக்கம் செய்ய, இவர்களோடு ஏ.வி பழனிசாமி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி உள்ளார்..

Srikanth and Srushti Dange starrer Atmospheric Thriller “The Bed” gearing up for January 2026 Release

 *Srikanth and Srushti Dange starrer Atmospheric Thriller “The Bed” gearing up for January 2026 Release* 

 





*Time to witness Tamil Industry Tamil pushing Narrative Boundaries This January with New-Fangled Thriller*


The Bed, written and directed by S. Manibharathi after his notable films Vettu Vettu and Parivarthanai, is gearing up for a grand theatrical release across Tamil Nadu this January. 


The film, bankrolled by  V. Vijayakumar under the Srinidhi Productions banner gets a Midas-touch with the release by newly launched ambitious Anjaneya Productions of Coimbatore, the film features Srikanth in the lead role alongside Srushti Dange as the female lead, with John Vijay, Black Pandi, Pappu, and Devi Priya portraying impactful supporting characters.


The film, a new-fangled genre made with the intention of offering a never-before cinematic experience, is shot amidst the awe-inspiring natural grandeur of the Nilgiris, deep forest trails drenched in mist and expansive tea estates breathing tranquillity. The Bed promises an entirely refreshing cinematic sensibility. Rather than narrating events through a conventional human protagonist, the screenplay adopts a boldly imaginative viewpoint: the story unfolds through the silent gaze of a “BED”,  placed inside a secluded cottage in Ooty, a witness to the private storms and secret longings of the lives it supports.


Shedding lights on ‘Bed’, and sharing his experience of shaping this film, Director S. Manibharathi says, “Producer Vijayakumar and our lead actor Srikanth are truly the greatest blessings this film has given me. The moment Anjaneya Productions’ K. Kandasamy and K. Ganesan watched the film, they immediately came forward to release it, for that I remain deeply grateful. Releasing right at the dawn of a New Year, The Bed will arrive as a celebration for audiences. We shot romantic sequences in the midnight frost of Ooty, it was brutally challenging for its climatic conditions, yet the results have become some of the film’s most cherished moments.


What excites me most is the originality of our narrative. Rather than a human telling the story, the screenplay unfolds through the gaze of a bed inside a cottage, a silent witness to human joy, sorrow, love, and secrets. This bed has seen everything that the world refuses to notice. That perspective, I believe, will stay with the audience long after the film ends.”


The film’s technical excellence is amplified by the artistry of cinematographer K. Gokul, music composer Taj Noor, lyricist Yugabharathi, editor J. P., and art director Palanivel, with A. V. Palanisamy serving as production executive. Together, this team has fashioned a work that blends innovation, atmosphere, and emotional resonance into a compelling theatrical experience.


The Bed is poised to invite audiences into a world where even the quietest objects have stories to tell, and the walls of a cottage carry the weight of unsaid truths.

Tuesday, 2 December 2025

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*

 *ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100  மில்லியன் பார்வை  நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*  



இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 


பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம்  உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர்  தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன்  தயாரித்துள்ளார்.


இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்


உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.

ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.

அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில்  அவரை இழுத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி நம்மை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது. 


தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு,  ஒரு  வித்தியாசமான திரில்லர் சீரிஸாக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும்  புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும்  பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. 


ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான, மண் சார்ந்த சிறப்பான படைப்புகளை, பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான சட்டமும் நீதியும் சீரிஸ், மாமன் திரைப்படம்,  மக்களின் பேராதாரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.


தற்போது ரேகை சிரீஸும், பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மாறுபட்ட திரில்லர் அனுபவத்தை தரும் “ரேகை” சீரிஸை, ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*

 *ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100  மில்லியன் பார்வை  நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*  



இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 


பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம்  உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர்  தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன்  தயாரித்துள்ளார்.


இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்


உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.

ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.

அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில்  அவரை இழுத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி நம்மை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது. 


தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு,  ஒரு  வித்தியாசமான திரில்லர் சீரிஸாக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும்  புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும்  பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. 


ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான, மண் சார்ந்த சிறப்பான படைப்புகளை, பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான சட்டமும் நீதியும் சீரிஸ், மாமன் திரைப்படம்,  மக்களின் பேராதாரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.


தற்போது ரேகை சிரீஸும், பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மாறுபட்ட திரில்லர் அனுபவத்தை தரும் “ரேகை” சீரிஸை, ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.

கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant)

 *கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல்  (Cochlear Implant) சிகிச்சைக்கான  சிறந்த மையமாக காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை மேம்படுகிறது*





பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும் தொடர்பு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அத்தகைய மாற்றத்தைச் சாத்தியமாக்குகிறது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. நவீன மருத்துவ முன்னேற்றத்தாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பான நிபுணத்துவத்தாலும், காதுக்குள், உட்செவியில் நுண்கருவி பொருத்தப்பட்டு, பல காலங்களாகப் போராடி வந்த செவிப்புலன் இழப்பில் இருந்து மீட்டு, நம்பிக்கையையும் ஒலியையும் அளிக்கிறது காவேரி மருத்துவமனை.


*அதிநவீன தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கும் நிபுணத்துவப் பராமரிப்பு*

மூன்று சிக்கலான உட்செவி உட்பொருத்தல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. இந்த அறுவை சிகிச்சைகள், ஆழ்ந்த காது கேளாமை கொண்ட ஒரு வளர்ந்த நபரிடமிருந்து இரண்டு குழந்தைகள் வரை நீள்கிறது. அக்குழந்தைகளில் ஒருவர் டவுன் சிண்ட்ரோத்துடனும், இன்னொரு குழந்தை, மொண்டினி உருமாற்றம் எனும் மிகவும் அரிய பிறவி உட்செவி  குறைப்பாட்டுடனும் பாதிக்கப்பட்டவர். ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு மருத்துவ சாதனையை மட்டுமல்ல, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வாழ்க்கையை மாற்றும் அற்புத தருணத்தையும் குறிக்கிறது.


*மேம்பட்ட ENT பராமரிப்பில் தலைமைத்துவம்*

ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் உட்செவி  உட்பொருத்தல் திட்டத்திற்கு, காது, தொண்டை (ENT) துறையின் தலைவரான மருத்துவர் ஆனந்த் ராஜு தலைமை தாங்குகிறார். 600க்கும் மேற்பட்ட வெற்றிகரமான உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சைகள் மற்றும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க மருத்துவர் ஆனந்தின் நிபுணத்துவம், மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்குக் கூட மிக உயர்ந்த தரமான பராமரிப்பைப் பெற்றுத் தருவதை உறுதி செய்கிறது. மயக்க மருந்து நிபுணர்கள், செவிப்புலன் மருத்துவர்கள் (Audiologists) மற்றும் இயல்புமீட்பு சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட குழு அவருக்கு உறுதுணையாக ஒன்றிணைந்து  நோயாளிக்கான மிகச் சிறந்த சிகிச்சையைச் சாத்தியமாக்குகின்றனர்.


*தனிப்பயனாக்கப்பட்ட, நோயாளியை-மையப்படுத்திய அணுகுமுறை*

“எந்த இரண்டு நோயாளிகளும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை" என்கிறார் மருத்துவர் ஆனந்த் ராஜு. மேலும், "எங்கள் அணுகுமுறை தனிப்பயனாக்கப்பட்ட, நுணுக்கமான, மற்றும் பல துறைகளை ஒருங்கிணைத்து, அரிதான அல்லது சவாலான காது பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பான  சிகிச்சையை உத்திரவாதம் அளிக்கிறது" என்றார். இந்தத் 

தத்துவத்தின் அடிப்படையிலான அணுகுமுறை, மருத்துவமனையின் சமீபத்திய வெற்றிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது:


● சிக்கலான காது நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணி, வெற்றிகரமான உட்செவு உட்பொருத்துதல் அறுவை சிகிச்சையின் பலனாக,  பல வருட நிசப்தத்தில் இருந்து மீண்டு, ஒலி பெற்று, உலகத்துடனான தனது தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டார்.


● டவுன்’ஸ் நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட, பிறவியிலேயே காது கேளாத ஒரு சிறுவன், அவனது உட்பொருத்துதல் சிகிச்சைக்குப் பிறகு கேட்கும் திறனைப் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்.


● தண்டுவட வளைவும், அரிதான உட்செவி உடற்கூறியல் கொண்ட ஆறு வயது சிறுமிக்கு, உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மற்ற மருத்துவமனைகள் அவளை மறுத்த போதிலும், அவளுடைய வெற்றிகரமான அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவர் ஆனந்த் ராஜுவின் நிபுணத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.


*நிசப்தத்தில் இருந்து ஒலிக்கு: எல்லா வயதினர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துதல்*

காது கேளாமை என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். பிறவியிலேயே காது கேளாமை அல்லது மூளை காய்ச்சல், நாள்பட்ட காது தொற்றுகளுடன் பிறந்த குழந்தைகள் முதல் மனச்சோர்வு மற்றும் தனிமை போன்ற உளவியல் மற்றும் சமூக தாக்கங்களைச் சமாளிக்கும் வயதானவர்கள் வரை என இது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது.  காவேரி மருத்துவமனை, தவறான புரிதல்களைக் கலைவதோடு மட்டுமல்லாமல், விரிவான தீர்வுகளை வழங்கவும் உறுதியாக உள்ளது. காது கேளாமையால் ஒருவரின் வாழ்க்கை நிசப்தத்தாலோ, தனிமையாலோ சூழ்ந்து விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறது காவேரி மருத்துவமனை. 


*விரிவான பராமரிப்பும், வாழ்நாள் முழுமைக்கு ஆதரவும்*

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் உட்செவி உட்பொருத்துதல் சிகிச்சை உண்மையிலேயே மிக விரிவானது. மருத்துவ கணிப்பைப் பெறுவது, அறுவை சிகிச்சை, கருவியைச் செயல்படுத்தல், சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பை ஆகியவற்றை நோயாளிகள் பெறுகிறார்கள். ஆரம்பகால நோயறிதல், குறிப்பாக குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்தல், அவர்களது சிறப்பான பேச்சிற்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அச்சாணியாக அமைகிறது. 


*அனைவருக்குமான நம்பிக்கையும் குணமாகுதலும்*

காவேரி மருத்துவமனையின் செய்தி மிகத் தெளிவானது: சரியான நோயறிதலாலும், மேம்பட்ட சிகிச்சையாலும், எண்ணற்ற மக்கள் கேட்கும் திறனைப் பெற்று மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடிக்க இயலும். அதிநவீன தொழில்நுட்பத்தையும், அக்கறையான பராமரிப்பையும் ஒன்றிணைப்பதன் மூலம், எண்ணற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கேட்கும் திறனை மீட்டெடுப்பதில் புதிய தரத்தைத் தென் சென்னையில் அமைத்து வருகிறது காவேரி  மருத்துவமனை.


நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் எவரேனும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை நிசப்தத்தில் ஒலிக்கும், தனிமையிலிருந்து மீட்டுப் பிறருடன் இணைப்பதற்கும் உதவ ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தயாராக உள்ளது.

A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear Implants

 A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear Implants 






Imagine a world where silence is all you know, and then, suddenly, sound bursts into your life, connecting you to loved ones and the world around you. At Kauvery Hospital, Radial Road, Chennai, this transformation is now a reality for more people than ever, thanks to the hospital’s emergence as a Centre of Excellence for Cochlear Implants. With state-of-the-art technology and dedicated medical expertise, Kauvery Hospital is bringing hope and sound to individuals of all ages battling hearing loss. 

Cutting-Edge Technology Meets Expert Care 

Kauvery Hospital, Radial Road, has reached a significant milestone by successfully performing three complex cochlear implant surgeries. These cases ranged from an adult with profound hearing loss to two children—one with Down syndrome and another with a rare congenital inner-ear condition known as Mondini malformation. Each surgery represents not just a medical achievement but a life-changing moment for the patients and their families. 

Leadership in Advanced ENT Care 

The cochlear implant programme at Kauvery Hospital, Radial Road, is led by Dr Anand Raju, Head of the ENT Department. With over 600 successful cochlear implant surgeries to his name and more than 25 years of experience, Dr Anand’s expertise ensures that even the most challenging and complex cases receive the highest standard of care. He is supported by a multidisciplinary team including anaesthesia specialists, audiologists, and rehabilitation therapists—all working together for optimal patient outcomes. 

Personalised, Patient-Centred Approach 

“No two patients are the same,” says Dr Anand Raju. “Our approach is individualised, meticulous, and multidisciplinary—ensuring safe outcomes, even in rare or challenging ear conditions.” This philosophy was demonstrated in the hospital’s recent successes: 

● An elderly woman with a history of complex ear disease underwent successful cochlear implant surgery, regaining her connection to the world of sound after years of silence. ● A young boy with Down’s syndrome, deaf from birth, experienced the joy of hearing after his implant was activated. 

● A six-year-old girl with scoliosis and a rare inner ear anatomy received a cochlear implant, despite being turned away by other hospitals—her surgery was a testament to the hospital’s commitment and Dr Anand Raju’s expertise. 

From Silence to Sound: Changing Lives at Every Age 

Hearing loss is often a neglected health issue, yet it affects people of all ages—from children born with congenital hearing loss or acquired brain fever and chronic ear infections to elderly individuals dealing with psychological and social impacts such as depression and isolation. Kauvery Hospital is determined to challenge misconceptions and offer comprehensive solutions, believing that hearing loss should not mean a life of silence or loneliness.

Comprehensive Care, Lifelong Support 

At Kauvery Hospital, Radial Road, the cochlear implant programme is truly comprehensive. Patients receive evaluation, surgery, device activation, therapy, and long-term follow-up. The hospital emphasises the importance of early intervention for improving speech and developmental outcomes, particularly in children. 

Hope and Healing for All 

The message from Kauvery Hospital is clear: with the right evaluation and advanced treatment, countless people can rediscover the joy of sound. By bringing together cutting-edge technology and compassionate care, the hospital is changing lives and setting a new standard for hearing restoration in South Chennai.