Featured post

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception

 *Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception* Angammal, scheduled for its release ...

Thursday, 4 December 2025

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception

 *Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception*



Angammal, scheduled for its release this Friday (December 5), With the early press and preview shows completed, Angammal has already begun its journey with heartfelt appreciation from critics and audiences alike. The overwhelmingly positive response has resulted in the film expanding its theatrical footprint,  now releasing in 90 plus screens. The producers of Angammal share their thoughts on this proud milestone and the film’s emotional resonance.


Producer Kaarthekeyen S says, “We believed in Angammal from day one,  a film that speaks softly yet stays with you long after. Watching the audience embrace its honesty has been deeply fulfilling. The entire team, especially Geetha Kailasam and Saran Sakthi, has delivered performances that standout for their sincerity and emotional depth. The growing demand from theatres only confirms what we always felt, stories rooted in truth always find their way to the audience. My heartiest thanks to Director Vipin for such an amazing piece of work.” 


Producer Firoz Rahim says, “This film celebrates motherhood, dignity, and the quiet heroism of ordinary women,  themes that are rarely told with such purity. The crew worked with extraordinary passion, whether it was capturing sync-sound in challenging live environments or shaping visually arresting frames. Each preview show has reinforced our pride, Angammal is a film that touches hearts, provokes thought, and encourages conversations. We are grateful for this beautiful reception. With the entire team being a lovely support, I take this opportunity to the entire villagers, who were so supportive during the entire filming. Without their support and presence, Angammal would not have achieved its life.” 


Producer & Cinematographer Anjoy Samuel says, “For us, cinema becomes meaningful when emotion and craft travel together, and Angammal stands strongly on that foundation. Every actor delivered their performance with utmost dedication, making the visual storytelling truly alive. To see theatres increasing shows based on early reactions is a reward for the entire crew’s hard work. We are delighted that audiences are connecting with the authenticity we strived to achieve.”


Stone Bench Films presents Angammal, in association with Njoy Films & Firo Movie Station. The film is screenplay and direction by Vipin Radhakrishnan, adapted from a story by Perumal Murugan, featuring Geetha Kailasam, Saran Sakthi, Barani, Mulyarasi, Tendrel Raghunathan, and Vinodhananth, with cinematography by Anjoy Samuel and music & original background score by Mohammed Maqbool Mansoor. It is produced by Kaarthekeyen S, Firoz Rahim, and Anjoy Samuel, and co-produced by Shamsudeen Khalid and Anu Abraham.

அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல

 *‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல திரையரங்குகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!*



இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். 


தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி”.


தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம் கூறுகையில், “இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை” என்றார்.


தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் கூறுகையில், “உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ திரைப்படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார். 


நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ’அங்கம்மாள்’ திரைப்படத்தை வழங்குகிறது. 


*நடிகர்கள்:* நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,

மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,

தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,

இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,

ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,

இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்

Saara Movie Review

 Saara Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  sara  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது chellakutty. அதோட இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதி இருக்காரு. இந்த படத்துல sakshi agarwal, roboshankar, yogibabu, thangadurai, mirattal selva, ambika  னு பலர் நடிச்சிருக்காங்க.   சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 






sara வா நடிச்சிருக்க sakshi agarwal ஒரு construction company ல வேலை பாத்துட்டு இருக்காங்க. இதே company ல தான் இவங்களோட lover ஆனா vijay vishwa யும் வேலை பாத்துட்டு இருப்பாரு. இவங்க ரெண்டு பேரும் 6 years அ லவ் பண்ணிருப்பாங்க. இப்போ ரெண்டு வீடு parents ஓட சம்பந்தபடி நிச்சயமும் ஆயிடும். ஆனா தொடர்ந்து இவங்களோட இந்த relation ல பிரச்சனைகள் தான் வந்துட்டு இருக்கும். ஒரு பக்கம் company related அ mirattal selva ஓட sara க்கு பிரச்சனை வந்துட்டு இருக்கும். இன்னொரு பக்கம் படத்தோட second half ல வர chella வா நடிச்சிருக்க chellakutty ல வர பிரச்சனை. இந்த படத்தோட director தான் chella வா நடிச்சிருக்காரு. இவரோட அம்மா தான் ambika , chella வும் sara வும் நல்ல friends ஆயிடுறாங்க. chella வும் இந்த construction company ல ஒரு சின்ன வேலைய தான் பாப்பாரு அதோட படிச்சிருக்கவும் மாட்டாரு. இப்போ ஒரு வருஷம் கழிச்சு sara promote ஆயிருப்பாங்க. இப்போ திடுருனு ambika ஒரு accident க்கு அப்புறம் sara வை சந்திச்சு chella வை நீ தான் கல்யாணம் பண்ணிக்கணும் னு சொல்லுறாங்க. இப்போ sara தன்னோட lover ஆனா vijay vishwa வை கல்யாணம் பண்ணிப்பாங்களா? இல்ல chella வைய ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vijay vishwa lover அ நல்ல  perform பண்ணிருக்காரு. villain அ வர mirattal selva வும் எல்லாரையும் பயமுறுத்திடு போயிருக்காரு. chellakutty யும் ஒரு பக்கம் director அ இன்னொரு பக்கம் actor அ நல்ல perform பண்ணிருக்காரு. yogibabu , roboshankar , thangadurai இவங்களோட comedy யும் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. ambika நடிச்சிருக்க emotional scenes யும் நல்ல இருந்தது. படத்தோட technical aspects னு பாக்கும் போது karthik raja ஓட songs and bgm படத்துக்கு நல்ல set யிருந்தது. 


மொத்தத்துல  ஒரு நல்ல கதைக்களம் தான் இது . சோ miss பண்ணாம இந்த படத்தை  பாருங்க.

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40

 *இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது*








வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைமுக நோக்கங்கள், கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் என கதை முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருக்கும். 40 நிமிட குறும்படமாக இருந்த இந்த கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்திற்கு பின்பு திரைப்படமானது. 


குறும்படமாக இருந்த கதையை முழு திரைக்கதையாக மாற்ற தேவையான ஒழுக்கம், நேர்மை மற்றும் உழைப்பு என அனைத்தையும் படக்குழு வழங்கியது. இயக்குநர் மிதுனின் தந்தை கதைக்கு தேவையான பட்ஜெட் வழங்கி ஆதரவு கொடுக்க கதையின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மிதுன் கதை மீது முழு கவனம் செலுத்தினார். ’ஸ்டீபன்’ கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை கோமதி சங்கர் அட்டகாசமாக திரையில் பிரதிபலித்துள்ளார்.


படம் குறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் ஸ்டீபன் கதாபாத்திரத்தை முதலில் கற்பனை செய்ததற்கும் அப்பால் கதை வளர்ந்தது. சிறிய குறும்படமாக ஆரம்பித்த இந்தக் கதை பலகட்ட ஆய்வு, சிந்தனை மற்றும் தைரியத்திற்கு பிறகு முழு திரைக்கதையானது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ‘ஸ்டீபன்’ என அனைவருக்கும் பரிச்சயமான பெயரைத் தேர்வு செய்தோம். இந்தப் படம் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அவரது சேமிப்பில் இருந்து இந்தப் படத்திற்கு நிதி கொடுத்தார். அந்தப் பொறுப்போடு சேர்த்து இயக்கம், எழுத்து, தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு என பல பணிகளை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ‘ஸ்டீபன்’ படத்தைப் பார்க்க ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார். 



நடிகர் மற்றும் இணை எழுத்தாளரான கோமதி சங்கர் கூறுகையில், “’ஸ்டீபன்’ கதையை எழுதுவதில் நானும் பங்களித்திருப்பதால் அந்தக் கதபாத்திரத்துடன் என்னால் ஆழமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. நாங்கள் உருவாக்கிய இந்தக் கதை உலகம் பரபரப்பானதாகவும் அமைதியற்றதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் இருந்தது. அதனால், ஒரு நடிகனாக இந்தக் கதையில் நடித்திருப்பது எனக்கு சவாலான விஷயம்தான். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நேர்மையுடன் எடுத்திருக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ‘ஸ்டீபன்’ திருப்தியான உணர்வை தரும்” என்றார். 


உளவியல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘ஸ்டீபன்’ யார் என்பதற்கு பதிலாக ஏன் என்று உங்களை யோசிக்க வைக்கும். 


டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.

Fueled by heart, craft, and a father’s savings — ‘Stephen’ rises from a 40-minute

 *Fueled by heart, craft, and a father’s savings — ‘Stephen’ rises from a 40-minute

short to a global psychological thriller, premiering Dec 5th on Netflix* 








In a twist from the usual crime playbook, Stephen starts where most thrillers end: the killer confesses. Premiering on Netflix on December 5th, Stephen is a simmering

psychological thriller written and directed by debut filmmaker Mithun Balaji. Starring Gomathi

Shankar, with Michael Thangadurai and Smruthi Venkat in key roles, the film explores hidden motives, murder, and unresolved trauma with a pace full of twists. Originally a 40-minute short film, it evolved into a feature after over one-and-a-half years of writing and research, shaped by their obsession with documentaries and real psychological cases.


As the narrative grew, so did the scale of its ambition. What began as a modest idea evolved into a feature project defined by discipline, restraint, and emotional honesty. Backed by a budget provided by Mithun’s father, Mithun had the space to steer the film entirely as its writer, director, and

producer. Gomathi’s performance carries the rawness of someone who helped build the character

from the ground up, giving Stephen its unsettling emotional core.

Speaking of the film, director, Mithun Balaji said, “Stephen grew far beyond what we first

imagined. A small short film slowly became a story that demanded more thought, more research, and more courage. 


We chose a name that feels familiar across cultures because the film speaks to

universal emotions. My father stepped in and funded this film from his savings so we could chase this dream which meant I had to step into every role the film demanded - directing, writing, producing, and editing. For our entire team to see it premiere on Netflix on December 5 feels like the

moment this entire journey was meant for.

Adding to that actor and co-writer, Gomathi Shankar, said, “Being part of Stephen right from the writing table gave me a deeper connection to the character than I’ve ever had before. The world we were creating was fragile, unsettling, and emotional, and stepping into it as an actor was both

demanding and rewarding. We didn’t have extravagant resources, so every scene relied on sincerity

and collaboration. Knowing that this film, which began so modestly, is now arriving on Netflix for audiences everywhere feels truly fulfilling.”

As Stephen arrives on Netflix on December 5- a small story that grew into a tense, atmospheric thriller. Instead of chasing shadows, Stephen invites you to sit with the uncomfortable truth that the

“why” is often far more haunting than the “who”.

WATCH STEPHEN EXCLUSIVELY ON NETFLIX FROM DEC 5TH

சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா

 *'சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா* 








*யோகிபாபு - விஜய் விஷ்வா -  சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் 'சாரா*


நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி  இயக்கியுள்ளார்.


இப்படத்தில் சாக்ஷி அகர்வால்,  தங்கதுரை,  அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.


இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சாரா’ படத்தின் டிரெய்லரை திரையிட்டு குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். இத்துடன், அங்கு நடிகர் நெப்போலியனின் பிறந்தநாளை உணவு வழங்கி கொண்டாடினர்.


அத்துடன், சமீபத்தில் மரணமடைந்த மறைந்த நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.


மேலும்,  விஜய் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள அவரது அடுத்த திரைப்படமான “பிரம முகூர்த்தம்”  விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை

 செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை...







அஷ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்...



கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி  கிராமத்தைச் சார்ந்த அஷ்வினி என்ற இளம் இயக்குனரின் இரண்டாம் குறும்படம் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை..


யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் *கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை*


யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு 


இயக்குனர் திரு.சமுத்திரக்கனி மற்றும் நடிகர் திரு.சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து  இக்குறும்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்..


இக்குறும்படத்தை பற்றி இயக்குனர் அஷ்வினி மற்றும் மணிவண்ணன் கூறியதாவது:


நாங்கள் இந்த குறும்படத்தை எடுக்க  முக்கிய காரணம்

யாரும் கெட்ட வார்த்தையை உறவுகளுக்கு இடையே பேசக்கூடாது என்பது தான்..


இதில்  முக்கிய கதாபாத்திரத்தில் தா.முருகானந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பவித்ரா, அட்ரஸ் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர் ‌‌


இப்படத்திற்கு ஒளிப்பதிவு  ஜேசன் வில்லியம்ஸ்,

இசை அருணகிரி படத்தொகுப்பு ஷான் லோகேஷ்  கலை இயக்குனர் என்.கே ராகுல் 



இப்படம் முழுக்க முழுக்க  ஒரே நாள் சென்னை  வளசரவாக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்டது..

Angammal Movie Review

Angammal Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  angammal  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vipin Radhakrishnan. இந்த படத்துல  Geetha Kailasam  Saran Shakthi, Thendral Raghunathan  Bharani. னு பலர் நடிச்சிருக்காங்க.  இந்த படம்  New York Indian Film Festival ல best film ன்ற விருதை வாங்கிச்சு. அப்புறம் Indian Film Festival of Melbourne ல Best Actor (Female) க்கும் Best Indie Film ன்ற catagory க்கும் விருது வாங்கிச்சு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்துல ஓரூ ஸ்பெஷல் ஆனா விஷயத்தை use பண்ணிருக்காங்க. உச்சிமலை காத்து னு ஒன்னு வரும். இவங்க ஊர்  ல இருக்கற மலை ல இருந்து 25 வருஷத்துக்கு ஒருதடவை தான் வரும். இந்த காத்து ல uchchaani ன்ற ஒரு பூ வோட மனமும் வரும். இந்த மாதிரி ஒரு மனம் வந்தேளே எதோ ஒரு ஆபத்து வர போது ன்றது அந்த ஊர் மக்கள் ஓட நம்பிக்கை. இதே தான் ரொம்ப உறுதியா நம்பிட்டு இருக்காங்க angammal அ நடிச்சிருக்க geetha kailasam. இவங்களோட life ரொம்ப கஷ்டமானதா தான் இருக்கும். படத்தோட ஆரம்பத்துலயே இவங்களோட பேத்தி ஆனா manju வை scotter ல வச்சு கூட்டிட்டு போவாங்க. அவங்களோட பேத்தி க்கு இந்த uchchaani பூவோட tatoo வை குத்துறதுக்கு தான் போவாங்க. இந்த பூவோட tatoo வை angammal ஓட இறந்து போன அம்மாவும் போட்ட்ருப்பாங்க. ஆனா இந்த tatoo போட manju வோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க. இதுனால angammal க்கும் அவங்களோட மருமகளுக்கும்  ரொம்ப சண்டை வரும். இதுல இருந்து angammal ஓட family குள்ள என்னமாதிரியான சண்டைகள் வரும் ன்றது ரொம்ப தெளிவா director காமிச்சிருப்பாரு. 


படம் போக போக தான் angammal ஓட character நமக்கு முழுசா தெரியும். இவங்க ஒரு tough ஆனா character அ இருப்பாங்க. இவங்களுக்கு blouse போடுற பழக்கம் கிடையாது, எப்பயும் பீடி பிடிச்சிட்டு இருப்பாங்க, கோவம் டக்குனு வந்திரும் அதுனால நெறய கெட்ட வார்த்தைகள் அ பேசுவாங்க. காலம் போற வேகத்தோட இவங்களால ஒத்து போக முடியாது. சுத்தி நடக்கற changes அ இவங்கனால புரிஞ்சுக்க முடியாது. அதுனால தன்னோட identity, அவங்களோட family, அந்த ஊர் எல்லாமே அவங்க கைய விட்டு போற மாதிரி ஒரு feeling ல இருப்பாங்க. இந்த காரணத்துனால அவங்க எப்பவுமே வயல்வெளி ளையும் இன்னொரு ஒரு lady ஓட தான் நேரத்தை spend பண்ணுவாங்க. angammal க்கு pavalam ன்ற ரெண்டாவுது பையன் இருப்பான். இவன் city க்கு போய் படிச்சு ஒரு doctor அ ஆயிருப்பான். அங்க ஒரு பெரிய பணக்கார  பொண்ண kalyanam பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை வரும். இது தான் angammal னால accept பண்ணிக்க முடியாது. இந்த பொண்ணோட family இவங்கள பாக்க ஊர்க்கு வராங்க னு சொல்லி angammal ஓட மூத்த பையனும் அவரோட மனைவியும் இவங்கள blouse அ போட்டுக்க சொல்லுவாங்க. எதுக்கும் கோபப்படாம கெட்ட வார்த்தை பேசாம ஒழுங்கா நடந்துக்க சொல்லுவாங்க. இது தான் அவங்களோட இடத்துல இருந்து அவங்கள தள்ளி விடுற மாதிரி பயந்து போறாங்க. 


இதுல இருந்து angammal க்கு அவங்களோட குடும்பத்துல இருக்கற power மறைஞ்சு போகுதா ? இல்ல அவங்களோட சுதந்திரம் பறிபோகுத? ன்ற கேள்வி கண்டிப்பா படத்தை பாக்குற audience க்கு தோணும். உண்மையா சொல்ல போன ரெண்டுமே நடக்கும் தான். அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்களோட identity யா விட்டு குடுக்காம family ஓட close அ இருக்கணும் னு நினைப்பாங்க. இவங்களோட ஒரு friend க்கும் இதே நிலைமை தான் நடக்கும். angammal க்கு தன்னோட பையன் கல்யாணம் பண்ணிக்கிறது சந்தோசமா தான் இருக்கும் இருந்தாலும் relationship change ஆகுறத தான் இவங்கனால ஏத்துக்க முடியாது. இவங்க எப்பவுமே pavalam கிட்ட நீ மாறிட்ட , முன்னாடி மாதிரி நீ இல்ல னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. அவங்களோட expectation என்னனா இந்த கல்யாணத்த பத்தி ஏன் முன்னாடியே இவங்ககிட்ட சொல்லல ன்ற வேதனை தான் இருக்கும். என்னதான் இவங்களோட பசங்க அவங்களுக்கு னு ஒரு life அ தேர்ந்துஎடுத்து போனாலும் ஒரு அம்மாவா அந்த changes அ இவங்கனள ஏத்துக்க முடியாது. 


இன்னொரு scene ல பாத்தீங்கன்னா pavalam ஓட நடவடிக்கை சரி இல்லனு தன்னோட மூத்த பையன் sudalai யா நடிச்சிருக்க bharani கிட்ட complaint பண்ணுவாங்க. ஆனா sudalai குடிச்சிகிட்டு nadaswaram வாசிச்சிகிட்டு ஒண்ணுமே பண்ணாம இருப்பாரு. இதை பத்தி angammal எந்த கேள்வியும் கேட்கமாட்டாங்க. என்னதான் மத்தவங்க இவங்கள ignore பண்ணுறாங்க னு இவங்க நினைச்சாலும் இவங்களும் sudalai விஷயத்துல அதுதான் பண்ணுறாங்க. இந்த படத்துல individuality யையும் social rules அ follow பண்ணாததை பத்தி யும் சொல்லுறாங்க. அதாவுது blouse போடுறது social expectation அ இருக்கலாம், ஆனா blouse போடாம இருக்கிறது தான் அவங்களோட comfort . rules ஆயிரம் இருந்தாலும் ஒருத்தவங்களோட மனுசு என்ன சொல்லுதோ அதா தான் எல்லாரும் கேட்பாங்க. இந்த விஷயம் தான் படத்துல ரொம்ப நேர்த்தியை சொல்லிருப்பாங்க. 


அந்த ஊர் ல அவங்க குத்தி இருக்கற அந்த பூவோட tatoo வும் அவங்க blouse போடாம இருக்கறதும் தான் அவங்களோட identity. இதை மாத்த சொல்லும்போது இவங்களுக்கு வர பயம் meaningful  அ தான் இருக்கும். இந்த மாதிரி ஒரு individual  ஓட மனுசுக்குள்ள நடக்கற போராட்டங்களை ரொம்ப நேர்த்தியா எடுத்து சொல்லிருக்காரு director . director ஓட vision  அ பக்காவா camera  ல பதிவு பண்ணிருக்காரு Cinematographer Anjoy Samuel . sound  team  ல இருக்கற composer Mohammed Maqbool Mansoor, sound designer Lenin Valappad, அப்புறம்  sound mixer PK Krishnanunni இவங்களோட work  யும் இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். 


Perumal Murugan’ ஓட  சிறுகதை  Kodithuni யா base பண்ணி இந்த படத்தோட கதையை எடுத்துருக்காங்க. angammal  ஓட life ல நடக்கற பல விஷயங்களை audience அழ relate பண்ணிக்க முடியும். இந்த படத்தை பாத்துட்டு வரும் போது கண்டிப்பா இதோட தாக்கம் ஆலமனுசுல பதியும் ன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. 


இது ஒரு நல்ல கதைக்களம் தான். சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

Nagabandham Climax: Unbelievable Spending

 Nagabandham Climax: Unbelievable Spending*




Abhishek Nama’s pan-India epic Nagabandham is presently progressing with its high-stakes climax shoot underway at Ramanaidu Studios. The team is currently filming what is said to be one of the most ambitious finale sequences ever attempted in a mythological action drama.


Starring young hero Virat Karrna and produced by Kishore Annapureddy and Nishitha Nagireddy, an unbelievable spending of 20 crore has been poured into the climax alone, making it one of the costliest action blocks planned for a pan-India release.


Nagabandham is a dream project for Abhishek Nama who penned a powerful script, and he is extra cautious about filming the climax episode. Central to this grand finale is a gigantic, symbolically rich set featuring a monumental sacred door, constructed by Production Designer Ashok Kumar, capturing the grandeur of ancient temple architecture. To enhance the scale with high-voltage action, the makers have roped in renowned Thai stunt master Kecha Khamphakdee.


Media representatives who visited the sets yesterday were left awe-struck, both by the grand set design and the sheer brilliance of the climax sequence being filmed.


The film’s promotions will start soon, as the production works are nearing completion.


Cast: Virat Karrna, Nabha Natesh, Iswarya Menon, Jagapathi Bab, Jayaprakash, Murali Sharma, B.S. Avinash, and others


Technical Crew:


Story, Screenplay & Director: Abhishek Nama

Producers: Kishore Annapureddy, Nishitha Nagireddy

Director Of Photography: Soundar Rajan S

Music: Abhe, Junaid Kumar

Production Designer: Ashok Kumar

Editor: RC  Pranav

CEO: Vasu Potini

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!

 *நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!*




அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது.


இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.


அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத்துக்கு அவர் எழுதிய சக்திவாய்ந்த திரைக்கதை பெரும் வரவேற்பு பெறும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த மாபெரும் கிளைமேக்ஸ் காட்சியின் மையப் பகுதியாக, புராதன கோவில் கலை வடிவத்தை, பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட மகத்தான புனித வாசல் அமைப்பு இடம் பெற்றுள்ளது. இதை ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.


மேலும், ஆக்சன் காட்சிகளின் தரத்தையும் வலிமையையும் உயர்த்துவதற்காக தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.


நேற்று படப்பிடிப்பு தளத்தைப் பார்வையிட்ட ஊடகப்பிரமுகர்கள், அங்கு காணப்பட்ட செட் அமைப்பு மற்றும் படமாகி கொண்டிருந்த கிளைமேக்ஸ் காட்சியின் பிரம்மாண்டத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.


“நாகபந்தம்” படத்தில் நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். 


“நாகபந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. 


இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.


நடிப்பு:

விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்


தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, இயக்கம் – அபிஷேக் நாமா

தயாரிப்பாளர்கள் – கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி

ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் S

இசை – அபே, ஜுனைத் குமார்

ஆர்ட் டைரக்டர் – அசோக் குமார்

எடிட்டிங் – R.C. பிரணவ்

CEO – வாசு பொடினி


*Nagabandham Climax: Unbelievable Spending*


Abhishek Nama’s pan-India epic Nagabandham is presently progressing with its high-stakes climax shoot underway at Ramanaidu Studios. The team is currently filming what is said to be one of the most ambitious finale sequences ever attempted in a mythological action drama.


Starring young hero Virat Karrna and produced by Kishore Annapureddy and Nishitha Nagireddy, an unbelievable spending of 20 crore has been poured into the climax alone, making it one of the costliest action blocks planned for a pan-India release.


Nagabandham is a dream project for Abhishek Nama who penned a powerful script, and he is extra cautious about filming the climax episode. Central to this grand finale is a gigantic, symbolically rich set featuring a monumental sacred door, constructed by Production Designer Ashok Kumar, capturing the grandeur of ancient temple architecture. To enhance the scale with high-voltage action, the makers have roped in renowned Thai stunt master Kecha Khamphakdee.


Media representatives who visited the sets yesterday were left awe-struck, both by the grand set design and the sheer brilliance of the climax sequence being filmed.


The film’s promotions will start soon, as the production works are nearing completion.


Cast: Virat Karrna, Nabha Natesh, Iswarya Menon, Jagapathi Bab, Jayaprakash, Murali Sharma, B.S. Avinash, and others


Technical Crew:


Story, Screenplay & Director: Abhishek Nama

Producers: Kishore Annapureddy, Nishitha Nagireddy

Director Of Photography: Soundar Rajan S

Music: Abhe, Junaid Kumar

Production Designer: Ashok Kumar

Editor: RC  Pranav

CEO: Vasu Potini

Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring Indie Song “Varum Vetri”

 *Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring Indie Song “Varum Vetri”*





*Pan-Indian Icon Kichcha Sudeep’s vocals emblazon the Track* 


For over twenty-five years, actor Shaam has remained a compelling presence in Tamil cinema, admired for his versatility and enduring screen charisma.


 Now, he steps into an exciting new creative chapter, not only as an actor,  but also directing and producing a musical album titled Varum Vetri, crafted under the banner of SIR Studios.


With this project, Shaam embraces the role of filmmaker with the same conviction that earned him acclaim as an actor. Joining him on screen is actress Neera, whose vibrant presence complements the album’s mood of aspiration and upliftment. The album’s sonic landscape has been composed by Amrish, renowned for his dynamic musical range, while celebrated choreographer Sridhar Master embellishes the song with appealing dance steps. 


Adding a striking highlight to the production, the vocals are rendered by none other than Kiccha Sudeep, one of Kannada cinema’s most widely admired stars. His involvement not only adds star power but introduces a unique cross-industry collaboration, pointing toward a musical experience designed to reflects and connects beyond regional boundaries.


The prestigious T-Series label will be presenting the album worldwide, further elevating its reach in the global music market.


Technically, the album reflects a team driven by craft:


Cinematography: K. A. Sakthivel

Editing: Lawrence Kishore

Lyrics: Jagan

Art Direction: V. R. Rajavel

Stunt Coordination: Monster Mukesh

Costume Styling: Neera

Makeup: Veerasekar

Advertising Design: Dinesh Ashok

Public Relations: A. John


Varum Vetri aims to be more than a musical release,  it is a statement of confidence, a celebration of new beginnings, and a promise that victory awaits those who dare to reinvent themselves. Emboldened by talent across the Southern film industries, Shaam’s directorial debut looks ready to walk confidently into the spotlight.

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’

 *நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’*





*‘வரும் வெற்றி’ இசை ஆல்பம் மூலம் இயக்குநராக மாறிய நடிகர் ஷாம்*


தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.


SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.


கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.


பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.


*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்* 


இயக்கம் ; ஷாம்


ஒளிப்பதிவு ; K.A.சக்திவேல் 


இசை ; அம்ரீஷ் 


படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர் 


நடனம் ; ஸ்ரீதர் 


பாடல் ; ஜெகன்


கலை ; வி.ஆர் ராஜவேல் 


ஸ்டன்ட் ; மான்ஸ்டர் முகேஷ் 


ஆடை வடிவமைப்பு ; நிரா 


ஒப்பனை ; வீரசேகர் 


விளம்பர வடிவமைப்பு ; தினேஷ் அசோக் 


மக்கள் தொடர்பு ; A. ஜான்

Terminator actor Arnold Schwarzenegger reunites with director James Cameron at star-studded Avatar: Fire and Ash premiere in LA

 Terminator actor Arnold Schwarzenegger reunites with director James Cameron at star-studded Avatar: Fire and Ash premiere in LA



Arnold Schwarzenegger extended his support to his long-term friend James Cameron has he attended the Avatar: Fire and Ash premiere in Los Angeles. The two share decades of history, dating all the way back to their groundbreaking work on The Terminator franchise, an era that cemented both of them as legends in action cinema. 


The premiere itself pulsed with massive excitement, as Avatar: Fire and Ash stands as one of the year's most anticipated releases. Fans, industry insiders, and global media filled the venue with nonstop buzz, eager to see the next evolution of Cameron’s landmark sci-fi universe. With its cutting-edge visuals, expanded worldbuilding, and huge expectations, the film already carries enormous momentum, and Schwarzenegger’s appearance added an extra layer of star power to an already electrifying night. 


The film received phenomenal early responses globally as critics appreciated it for its breathtaking visuals, thrilling new characters, scale, heart and sheer cinematic ambition. Avatar: Fire and Ash releases in Indian theatres in 19th December in English, Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில்

 *லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில் 'டெர்மினேட்டர்' நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்!*



லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டதன் மூலம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். 'தி டெர்மினேட்டர்' திரைப்படம்  முதல் அவர்களின் அடுத்தடுத்த பல படைப்புகள் இருவரையும் சினிமாவில் ஜாம்பவான்களாக மாற்றியது. 


இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியர் உற்சாகத்துடன் தொடங்கியது. கேமரூனின் அறிவியல் புனைகதை பிரபஞ்சத்தின் அடுத்த பரிணாமத்தைக் காண ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அதன் அதிநவீன காட்சிகள், விரிவாக்கப்பட்ட உலகம் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கரின் தோற்றம் அந்த இரவை மேலும் ஒளிர செய்தது. 


பிரம்மாண்டமான காட்சியமைப்புகள்,  சிலிர்ப்பூட்டும் புதிய கதாபாத்திரங்கள் மற்றும்  அற்புதமான சினிமா அனுபவத்திற்காக படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பாராட்டினர். 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு

 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "  படத்திற்காக புத்த  மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு ! 














99 அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "  


மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் 

எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படத்திற்கு

" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "

 என்று வித்தியாசமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் சபரி, 

ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். 

கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். 


இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.


இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா

ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.

பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்.

தயாரிப்பு நிறுவனம் - மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.

கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.


படம் பற்றித் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி  கூறும்போது,



"படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு 

" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " 

என்று பெயர் வைத்துள்ளோம்.


அந்தக் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது.எதனால் அப்படி நடக்கிறது?அதன் பின்னணியில் இருப்பது என்ன?  என்பதை சபரியும், ரக்சிதாவும், ஸ்வேதாவும், எம்.எஸ்.மூர்த்தியுடன் சேர்ந்து கண்டுபிடிக்க  முயல்கிறார்கள்.அவர்களின் விரும்பியபடி  மர்மங்களைக் கண்டுபிடித்து அந்தக் குடியிருப்பு வாசிகளைக் காப்பாற்றினார்களா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.


இப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத புத்த பிக்குகளின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் - சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளோம்.


மற்றும் படத்தில் AI-CG -  காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக  நடைபெற உள்ளது" என்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான எம்.எஸ்.மூர்த்தி.