Featured post

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு,

 *காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு, இசையமைப்பாளர் தமன் S,  இணையும் #BB4 அகண...

Saturday, 22 November 2025

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு,

 *காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு, இசையமைப்பாளர் தமன் S,  இணையும் #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் — சர்ஜிகல் ஸ்டிரைக் போல வெடித்தது!காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 அகண்டா 2: தாண்டவம்  டிரெய்லர் வெளியானது !!*



காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்காக நாடு முழுவதும் மிக தீவிரமான மற்றும் பரவலான புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராம் ஆசம்டா மற்றும் கோபி ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் பாடல்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்று பெங்களூரில் நடைபெற்ற விழாவில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முன்னிலையில்,  படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் டிரெய்லர்கள் வெளியிடப்பட்டது.

Link : 

https://www.youtube.com/watch?v=iN53nwj2Tds

டிரெய்லர் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் தொடங்குகிறது. இந்தியாவின் ஆன்மீக அடித்தளத்தை அழிக்க, நாட்டின் உள்ளும் வெளியும் செயல்படும் தீயசக்திகள் ஒன்று சேர்கின்றன. இவர்களின் நோக்கம் — சனாதன  ஹைந்தவ தர்மத்தை முழுமையாக அழித்து, தேசத்தை குழப்பமும் பயமும் நிறைந்த நிலைக்கு தள்ளுவது.


ஆனால் நம்பிக்கை குலையும் அந்த தருணத்தில் — தெய்வீக தீப்பொறி போல எழும் சக்தி… தான் அகண்டா!புராண வலிமையும் தேசபக்தியும் கலந்த ஒரு அதீத சக்தியாக, தீயதை சுட்டெரிக்க அகண்டா  எழுகின்றார்.


இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  இந்த முறை மிக விரிவான, எல்லைகளைத் தாண்டும் தொலைநோக்கு பார்வையில் படத்தை உருவாக்கியுள்ளார். ஆன்மீக ஆற்றலும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும், பெரும் உலகை அகண்டா 2 கட்டியெழுப்புகிறது. கும்பமேளா காட்சி டிரெய்லரின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.


நந்தமூரி பாலகிருஷ்ணாவின் கோபம் — தெய்வீகத்தின் வடிவம்.அவரது சக்தி —  நிறுத்த முடியாத புயல்.இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அகண்டா அவதாரம் திரையை  முழுமையாக ஆட்சி செய்கிறது. அவரது நடை, பார்வை, வசனங்கள்,  தெய்வீக பாதுகாவலனின் உருவத்தை நினைவூட்டுகின்றன.


ஆதி பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின்  உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது. 


படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே  — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும்  உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய  அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும்,  A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.


தேசபக்தி, ஆன்மீக வலிமை மற்றும் மாஸ் எலிவேஷன் — இந்த மூன்றையும் இணைத்து, அகண்டா 2 டிரெய்லர் உண்மையான NBK ஸ்டைல், சர்ஜிகல் ஸ்டிரைக் போல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சானதான ஹைந்தவ தர்மம் மையமாக இருப்பது, முழு இந்திய ரசிகர்களுக்கும் பெரும் ஈர்ப்பாக அமைந்துள்ளது.


*அகண்டா 2 - தாண்டவம்  திரைப்படம் வரும்  டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.*


*நடிப்பு :*


நந்தமூரி பாலகிருஷ்ணா

சம்யுக்தா

ஆதிப் பினிசெட்டி

ஹர்ஷாலி மால்ஹோத்ரா


*தொழில்நுட்பக் குழு :*


எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு

தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா

பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்

வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி

இசை : S. தமன்

ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி

கலை : A.S. பிரகாஷ்

எடிட்டிங் : தம்மிராஜு

சண்டை அமைப்பு : ராம் - லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ


*

His Rage Is Divine & His Power Is Destructive: God Of Masses Nandamuri Balakrishna

 *His Rage Is Divine & His Power Is Destructive: God Of Masses Nandamuri Balakrishna, Lucky Charm Samyuktha, Blockbuster Maker Boyapati Sreenu, S Thaman's #BB4 Akhanda 2: Thaandavam Trailer Ignites Surgical Strike*



God Of Masses Nandamuri Balakrishna and blockbuster maker Boyapati Sreenu’s most-awaited devotionally packed action extravaganza Akhanda 2: Thaandavam is gearing up for a grand release worldwide on December 5th. The team opted for aggressive and Pan India level promotional campaign. Crafted on a massive scale by Raam Achanta and Gopichand Achanta under the 14 Reels Plus banner, and presented by M Tejaswini Nandamuri, the film generated strong buzz with glimpses and songs. Today, the makers unveiled the film’s theatrical trailer in Bangalore, with Kannada Star Shiva Rajkumar gracing the occasion.


The trailer starts with a serious warning. A group of evil forces, both inside and outside India, is trying to destroy the country’s spiritual foundation. Their goal is to wipe out Sanatana Haindava Dharma and push the nation into confusion and fear. But when faith begins to shake, a powerful force rises. That force is Akhanda, appearing like a burst of divine fire, ready to fight back with strength that feels both mythical and patriotic.


Boyapati aims for a wider and bolder vision this time. Akhanda 2 stretches beyond borders, mixing national security themes with strong spiritual energy. The scale is huge, and the Kumbh Mela sequence stands out as one of the trailer’s biggest highlights.


Balakrishna’s rage feels divine and his power looks unstoppable. Though he plays two roles, it is the Akhanda avatar that dominates the screen with pure intensity. His presence, walk, and thunderous dialogues make him look like a larger-than-life protector. Aadhi Pinisetty appears as a strong and menacing villain, while Samyuktha plays the female lead. A short glimpse of Harshali Malhotra suggests an emotional layer hidden within the chaos.


Technically, the film delivers in every way. Cinematographers C. Ramprasad and Santoshh D. Detakae fill each frame with scale and grit, making the visuals feel immersive. S Thaman’s powerful background score, beating like a ritual drum, lifts the impact even higher. The production scale looks grand, supported by Tammiraju’s sharp editing and AS Prakash’s impressive production design.


With its mix of patriotic fire, spiritual strength, and mass elevation, the Akhanda 2 trailer delivers a true NBK-style surgical strike. The story clearly has Pan-India appeal, especially with its focus on Sanatana Haindava Dharma.


*The film is set to hit theatres on December 5th.*


*Cast* : God Of Masses Nandamuri Balakrishna, Samyuktha, Aadhi Pinisetty, Harshali Malhotra


*Technical Crew:*

Writer, Director: Boyapati Sreenu

Producers: Raam Achanta, Gopi Achanta

Banner: 14 Reels Plus

Presents: M Tejaswini Nandamuri

Music: Thaman S

DOP: C Ramprasad, Santoshh D Detakae

Ex-Producer: Koti Paruchuri

Art: AS Prakash

Editor: Tammiraju

Fights: Ram-Lakshman

PRO: Yuvraaj

Marketing: First Show


Link : 

https://www.youtube.com/watch?v=iN53nwj2Tds

இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

 *இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்*












*ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது*


அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.


எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி,  பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.


மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு - ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.  இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.


டிசம்பர் மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் கௌரவ் நாராயணன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா, திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''சினிமாவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. சினிமா குடும்பத்திற்கு என்னை அழைத்து வந்த 'நிர்வாகம் பொறுப்பல்ல' படக்குழுவினருக்கு நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,'' என்றார் .


பாடலாசிரியர் கருணாகரன் பேசுகையில், ''இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் , இசையமைப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றி.‌ 2004ம் ஆண்டில் வெளியான 'ஏய்' படத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்து பணியாற்றிய வேண்டிய தருணம். ஆனால் அந்த வாய்ப்பு தவறிப் போனது. அதன் பிறகு அவருடைய இசையில் இப்போது அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்றார்.


நடிகை மஞ்சு பேசுகையில், ''எல்லோரும் ஏதோ ஒரு சூழலில் மோசடிக்கு ஆளாகி இருப்போம். இதுபோன்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து உங்களின் ஆதரவை தர வேண்டும்,'' என்றார்.


நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், ''முதலில் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த நடிகர் ஆதவனுக்கு நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.


நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது.‌ எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள்.‌ நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது.


நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் கார்த்திக் மற்றும் படக் குழுவினருடன் தொடர்ந்து பழகி வருகிறேன். அற்புதமான குழு. கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.


தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி பேசுகையில், ''நான் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் வாசிப்பாளர். தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு  திரைப்படங்களை தணிக்கை சான்றிதழுக்காக பார்ப்போம். இந்த சமுதாயத்தில் புரையோடி இருக்கின்ற, அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை படக் குழுவினர் கையாண்டிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன்.


கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,000 கோடி ரூபாய் அளவிற்கு சைபர் குற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. இது தொடர்பாக தினந்தோறும் செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிறது. ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், டிரேடிங் ஸ்கேம், முதலீடு தொடர்பான மோசடி என நாள்தோறும் விதவிதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். நம் நாட்டின் பட்ஜெட்டிற்கு நிகராக மக்கள் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள். சைபர் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.


தணிக்கை குழுவை பொருத்தவரை கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது, யாரையும் அவமதிக்கக்கூடாது, அரசியல் தலைவர்களை பற்றி தவறாக பேசுவதோ சித்தரிப்பதோ கூடாது. எங்களைப் பொருத்தவரை படைப்பாளிகள் கொடுக்கும் ஒரு படம் சமூகத்தில் மக்களுக்கு படிப்பினையையும், விழிப்புணர்வையும், நல்லதொரு சிந்தனையையும் கொடுக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அப்படிப்பட்டதொரு படத்தை எடுத்ததற்காக இந்த படக் குழுவினரை மீண்டும் பாராட்டுகிறேன்,'' என்றார் .


நடிகர் இமான் அண்ணாச்சி பேசுகையில், ''புதுமுக நடிகர் மற்றும் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இது போன்ற திரைப்பட விழாக்களில் அணிவிக்கப்படும் சால்வையால் எந்த பயனும் இல்லை. இதை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்கவும் முடியவில்லை. அதனால் சால்வைக்கு பதிலாக துண்டினை (டர்க்கி டவல் -  குற்றால துண்டு ) பரிசாக அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்,'' என்றார்.


நடிகை மிருதுளா சுரேஷ் பேசுகையில், ''இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான செய்தியையும், பொழுதுபோக்கையும் கொண்ட திரைப்படம். அனைவரும் நிச்சயமாக திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி,'' என்றார்.


இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ''என் தந்தை தேவாவின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளான இன்று அவர் பாடிய ஒரு பாடலை இங்கு திரையிட்டு, அவரை கௌரவப்படுத்தியதற்காக அனைவருக்கும் என் தந்தையின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு துறையை சார்ந்தவராக இருந்தாலும் பொருத்தமான கதையை தேர்வு செய்து அதற்கு தேவையான பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு நிச்சயமாக நஷ்டத்தை தராது. லாபத்தை அள்ளித் தரும். அதற்கு என் வாழ்த்துகள்.


நானும், பாடலாசிரியர் கருணாகரனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தான் இணைந்திருக்கிறோம். அவரை பார்க்கும் போதெல்லாம் இவரைப் போல் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அவரிடமிருந்து இதை கற்றுக் கொண்டேன்," என்றார்.


இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ''முதலில் இயக்குநர் கே. பாக்யராஜுக்கு நன்றி. இந்த ஆண்டு தேசிய விருதுக்கான நடுவர் குழுவில் தென்னிந்திய பிரதிநிதியாக தமிழ்நாடு சார்பில் நான் இடம் பெற்றிருந்தேன். இந்த நடுவர் குழுவில் நான் தான் மிகவும் இளையவன். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கும் பட்டியலில் 'பார்க்கிங்' படத்துடன் வேறு சில படங்களும் போட்டியில் இருந்தன. இந்தத் தருணத்தில் கே. பாக்யராஜ் படங்களில் இடம் பிடித்திருக்கும் திரைக்கதை நுட்பங்களால் உந்தப்பட்ட நான் அவருடைய திரைக்கதை மேஜிக்கை உதாரணமாக பேசி தான் 'பார்க்கிங்' படம் தேசிய விருதுக்கு தேர்வானது. எனவே 'பார்க்கிங்' படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் கே. பாக்யராஜ் இருக்கிறார். திரைக்கதை என்றால் தமிழ் சினிமா தான் நிகரற்றது. இத்தனை ஆண்டு காலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை போன்ற சில விஷயங்களை பேசி பரிந்துரைத்தேன்.


அப்பா அம்மாவை நேசிப்பவர்கள் யாரும் தோற்க மாட்டார்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவருடைய தந்தை மீது அளவற்ற நேசம் கொண்டவர். இதற்காகவே இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருடைய தந்தையின் பரிபூரண ஆசி உண்டு என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.


எதிர்மறை எங்கும் இருக்கக் கூடாது என விரும்பும் நான் என் படத்தின் டைட்டிலில் கூட 'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு', 'இப்படை வெல்லும்' என பெயர் வைத்திருப்பேன். ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசிட்டிவிட்டி இருக்கும். அவர் இந்த படத்தில் பங்களிப்பு வழங்கியது இப்படத்திற்காக வெற்றியை குறிக்கிறது.


மோசடி குறித்து படம் இயக்குவது கடினம். ஏடிஎம் பண மோசடி குறித்து நான் முதன்முதலாக 'சிகரம் தொடு' படத்தை உருவாக்கினேன். ஒரே ஒரு விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு ஒரு நபர் 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்தான் சிகரம் தொடு படத்தை உருவாக்குவதற்கான இன்ஸ்பிரேஷன். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபரை சந்தித்து பல விஷயங்களை கேட்டு அந்த படத்தை உருவாக்கினேன். அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் இங்கு 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து அவர் அங்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டியிருந்தார்.


சம்பாதிப்பது கடினம், அதை செலவழிப்பது எளிது, அதை திருடுவது அதைவிட எளிது. ஆனால் இதற்கு மூளை அதிகமாக வேண்டும். அதனால் இந்தப் படத்திலும் மோசடிகள் பற்றி நிறைய விவரங்களை சொல்லி இருப்பார்கள். இவை மக்களுக்கு பிடித்தவையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்று கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறுகிறது,'' என்றார்.


விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா பேசுகையில், ''இந்த நிகழ்விற்கும், மேடையில் வீற்றிருக்கும் படக்குழுவினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் தொகுதி அருகில் உள்ளதாலும், என்னுடைய நண்பர்களின் அழைப்பின் காரணமாகவும் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்கள் கட்சியின் மறைந்த தலைவர் கலைஞர் ஐயா, தமிழக முதல்வர், தமிழகத்தின் துணை முதல்வர் அனைவரும் திரைத்துறையில் இருந்து தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தக் கட்சியில் இருந்து வந்தவன் என்பதால் இந்த மேடையில் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.


இயக்குநர் கே .பாக்யராஜின் காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படங்களும் ஆண்டு கணக்கில் ஓடும். ஆனால் இன்று மூன்று நாள் ஓடிய படங்களுக்கு மெகா ஹிட் என விளம்பரம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு கால சூழல் மாறி இருக்கிறது.


இன்றுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் சினிமாவில் இருக்கும் நடிகர்களை பார்த்து தான் தங்களை வழி நடத்திக் கொள்கிறார்கள். இதற்காகத்தான் படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் சிகரெட் பிடித்தால் அதற்கு கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெறுகிறது. இருந்தாலும் இன்று கருத்துள்ள படங்கள் அதிகம் வருவதில்லை.


இந்தப் படத்தில் மோசடி குறித்து பேசி இருக்கிறார்கள். இன்று அனைத்து துறையிலும் மோசடி இருக்கிறது. இதில் யார் அதிகம் ஏமாறுகிறார்கள் என்றால், படித்தவர்கள் தான் அதிகம். இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும் பேராசை தான்.


சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் என்னை தேடி வந்து பலரும் பத்து லட்சம் கட்டினோம் மோசடி செய்து விட்டார்கள் என்று புலம்புவார்கள், புகார் அளிப்பார்கள்.  நான் காவல்துறையில் புகார் அளிக்குமாறு பரிந்துரைப்பேன்.


நமக்கு எது தேவை என்பதை நன்றாக திட்டமிட்டு அளவுடன் வாழ்ந்தால் மோசடியில் சிக்க மாட்டோம். மேலும் மோசடி குறித்து அரசாங்கம் மட்டுமே பணியாற்றினால் இதை தடுக்க முடியாது. மக்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தர வேண்டும்.


தமிழக மக்கள் மிகவும் விழிப்பானவர்கள். சிறப்பானவர்கள். இந்த படத்தை பார்த்து, எதிர்காலத்தில் எந்த மோசடியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இயக்குநர்-நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசுகையில், ''எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்திற்கு பத்து பாகத்தை எடுக்கலாம். என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்த படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாக சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து சொல்லி இருக்கிறேன்.


இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த படத்தில் நாயகனாகவும் நடித்து இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். இதற்கு விதை போட்டவர் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தும் கே. பாக்யராஜ் அவர்கள் தான். ஹீரோவாகவும் நடித்து, இயக்கவும் முடியும் என்ற அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நானும் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''பொதுவாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் எல்லாப் புகழும் ரசிகப் பெருமக்களுக்கே என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் இல்லை என்றால் இங்கு யாரும் இல்லை.


சினிமாவில் ஆபத்பாந்தவன் என்ற பெயரை ஸ்ரீகாந்த் தேவாவின் தந்தையான தேவா பெற்றிருக்கிறார். நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைப்பார். சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பார். தந்தை வழியில் இன்று ஸ்ரீகாந்த் தேவாவும் பயணிக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.


மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாக பயன்படுத்தாமல் எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள். நான் 'பாக்யா' இதழில் கேள்வி பதில் எழுதும் போது இது போன்ற விஷயங்களை நிறைய வாசித்திருக்கிறேன்.


மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு. 


இந்தப் படத்தின் கதை என்ன? என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. "நான் ஏமாற்ற பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன்'' என்றார்.  அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம்.  இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.‌


உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆகவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.


***

தேரே இஷ்க் மே படத்தில் முக்தி கதாபாத்திரம்...! க்ரிதி சனோன் சொன்ன சீக்ரெட்!

 *தேரே இஷ்க் மே படத்தில் முக்தி கதாபாத்திரம்...! க்ரிதி சனோன் சொன்ன சீக்ரெட்!*





தேரே இஷ்க் மே நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.


தேரே இஷ்க் மே படத்தின் தயாரிப்பாளர்கள் டிரெய்லரை வெளியிட்ட உடனே, இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. AR ரஹ்மானின் இசை ரசிகர்கள் மனதில் எதிரொலித்தது. சில நிமிடங்களில், அது காலவரிசைகளை ஒளிர செய்தது, உரையாடல்கள், ரசிகர் கோட்பாடுகள் மற்றும் படத்தின் உண்மையான மற்றும் பரபரப்பான காதல் கதையைச் சுற்றியுள்ள உற்சாக அலையை தூண்டியது. ஆனந்த் L ராய் தலைமையில், பூஷன் குமார் ஆதரவுடன், இந்த டிரெய்லர் தளங்களில் 90.24 மில்லியன் பார்வைகளை பெற்றது. இது ரசிகர்கள் ஏற்கனவே இந்த உலகம், அதன் கதாபாத்திரங்கள் மற்றும் அது வெளிப்படும் உணர்ச்சிகளுடன் எவ்வளவு ஆழமாக இணைந்திருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது.


ரசிகர்களின் ஆதரவு அதிகரித்தவுடன், க்ரிதி சனோன் தனது கதாபாத்திரமான முக்தியின் உலகம் பற்றி பேசியுள்ளார். இது குறித்த தனது கருத்தை பகிர்ந்து கொண்ட நடிகை, “முத்கியின் கதாபாத்திரம் மிகவும் மாறுபட்ட வரைபடத்தை கொண்டுள்ளது, அவள் எதிலிருந்து தொடங்குகிறாள், இறுதியில் அவள் என்னவாகிறாள், அவளுடைய தேர்வுகள், அவளுடைய முடிவுகள்.. அவள் என்ன செய்கிறாள் என்பதில் நிறைய அடுக்குகள் உள்ளன. சில நேரங்களில் நிறைய சொல்லப்படுவதில்லை, நிறைய நியாயப்படுத்தல்கள், அவள் ஏன் அப்படி செய்கிறாள் என்பதற்கான பல விஷயங்கள், வார்த்தைகளில் சொல்லப்படுவதில்லை. சில நேரங்களில் உங்களுக்கு உதவ எந்த உரையாடலும் இல்லை, அது உங்கள் பார்வையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அது புதிய ஒன்று, நான் அதை மிகவும் ரசித்தேன்.”


முக்தியை உயிர்ப்பிக்கும் போது தான் தாங்கிய எடையை பிரதிபலிக்கும் உணர்ச்சிபூர்வமான நேர்மையுடன் வெளிப்படுத்திய க்ரிதி, படத்தின் மிகவும் தீவிரமான காட்சிகளை படமாக்குவதில் மன மற்றும் உடல் சோர்வை பற்றியும் பேசினார். "நிறைய தீவிரமான காட்சிகள் உள்ளன, முன் கிளைமாக்ஸ் மற்றும் க்ளைமாக்ஸ், அவை மிக நீளமானவை. அது மிகவும் சோர்வாக இருந்தது, நாங்கள் அதை சுமார் 5-6 நாட்கள் படமாக்கினோம். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அந்த காட்சிகள் மிகவும் சோர்வாக இருந்தன. படப்பிடிப்பில் இருந்த அனைவரிடமும் அந்த குறைந்த ஆற்றலை உணர முடிந்தது, மேலும் என் குழுவினருடனான எனது வேனிட்டியிலும் கூட அதை உணர முடிந்தது. சில சமயங்களில் நான் வீட்டிற்கு திரும்பியபோது அது என்னுடன் இருந்தது, நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அந்த காட்சி உணர்ச்சிகளின் உச்சம் மற்றும் படத்தின் மிகவும் தீவிரமான பகுதி, அது என்னை மிகவும் கீழே இழுத்தது."


க்ரிதி சனோனின் பிரதிபலிப்புகள் தேரே இஷ்க் மே-ல் உள்ள தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன, இது முக்தியை உருவகப்படுத்த தேவையான உள் பலவீனம் மற்றும் வலிமையை பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. AR ரஹ்மானின் இசை ஏற்கனவே இதயங்களை வென்றுள்ளது மற்றும் டிரெய்லர் தொடர்ந்து வலுவாக பிடித்து கொண்டிருப்பதால், அவரது நடிப்பு படத்தின் தனித்துவமான கூறுகளில் ஒன்றாக உருவாகிறது, நேர்மை, பாதிப்பு மற்றும் திரை மறைந்த பிறகும் நீண்ட காலம் நீடிக்கும் ஆழத்தை உறுதியளிக்கிறது.


குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Kriti Sanon Reflects on the Emotional Weight and Complexity of Playing Mukti in Tere Ishk Mein

 *Kriti Sanon Reflects on the Emotional Weight and Complexity of Playing Mukti in Tere Ishk Mein*





_Tere Ishk Mein will release in cinemas on 28th November in Hindi, Tamil and Telugu._


The makers of the movie Tere Ishk Mein dropped the trailer of the film, and the reaction was instant within moments of its release. The A. R. Rahman's musical didn’t just release; it resonated. Within minutes, it lit up timelines, sparking conversations, fan theories, and a wave of excitement around the film’s raw and stirring love story. Helmed by Aanand L Rai, and backed by Bhushan Kumar, the trailer raced to 90.24 million views across platforms, a number that reflects just how deeply audiences are already connecting with this world, its characters and the emotions it promises to unfold.


As the chatter grew, Kriti Sanon opened up about stepping into the layered and demanding world of her character Mukti. *Sharing her honest take on the same, the actress said,* “Mutki’s character has a very diverse graph, what she starts from, what she ends up becoming, her choices, her decisions.. there are a lot of layers to what she is doing. A lot is sometimes not said, a lot of justification, a lot of things why she is doing what she is, not said in words. There is no dialogue at times to help you and it just has to be translated in your eyes. That was something new and I really enjoyed it.”


Expressing with an emotional honesty that reflected the weight she held while bringing Mukti to life, Kriti also spoke about the mental and physical exhaustion of shooting the most intense scenes of the film. *She added,* “There are a lot of really intense scenes, the pre climax and the climax, which are very very long. That was very draining and we shot it for about 5-6 days. Both physically and emotionally those scenes were extremely draining. I could feel that low energy in everyone around on set and could even feel it in my vanity with my team. At times when I went back home it stayed with me, I felt extremely drained. That scene is the peak of emotions and probably the most intense bit of the film, and it pulled me down the most.”


Kriti’s reflections reveal the intensity poured into Tere Ishk Mein, offering a glimpse into the inner fragility and strength required to embody Mukti. With Rahman’s music already winning hearts and the trailer continuing to hold strong, her performance is shaping up to be one of the standout elements of the film, promising honesty, vulnerability, and a depth that lingers long after the screen fades.


Gulshan Kumar, T-Series, and Colour Yellow present Tere Ishk Mein, produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi and Tamil on 28th November 2025.

Friday, 21 November 2025

Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath & Saanve Megghana

 *Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath &  Saanve Megghana*




Shanthi Talkies, led by the enterprising producer Arun Viswa, announces its newest venture, Production No. 4, featuring Finally Bhaarath and  Saanve Megghana in the lead, directed by debutant Hariharasuthan Azhagiri. Over the years, the banner has steadily carved a distinguished space in the industry by creating and encouraging original ideas and consistently offering a launchpad for emerging creative talent. 


This philosophy has been reflected across its recent successes, including noteworthy movies - Sivakarthikeyan’s Maaveeran and Siddharth’s 3BHK that clicked at the box office while earning strong critical appreciation. The production house recently made headlines with its announcement of Production No. 3 featuring Chiyaan Vikram under the direction of a promising debutant - Bodi Rajkumar. Continuing this momentum, Shanthi Talkies now embarks on its next collaboration with rising talents Bhaarath and a new director guiding the project.


“Our guiding belief has always been to cultivate fresh ideas and back new voices,” says producer Arun Viswa. “Finally Bhaarath has built a warm and relatable connection among teen and family audiences, becoming a familiar presence in countless homes. We are delighted to join hands with him for this project. Likewise,  Saanve Megghana delivered a remarkable performance in Kudumbasthan, earning both acclaim and affection. We are excited to bring her onboard as well. We at Shanthi Talkies have consistently found joy in encouraging young and fresh minds. We are elated to introduce Hariharasuthan Azhagiri as the director with Production No.4. The film will have more familiar and promising actors. As of now, we have roped in Bala Saravanan to play a pivotal role. The details about the others in the cast and crew will be revealed soon.”


As Shanthi Talkies continues to deliver films rooted in strong storytelling, Production No. 4 reinforces the banner’s vision of presenting content-driven cinema with the potential to succeed across both critical and commercial fronts. With a promising line-up ahead, the production house affirms its commitment to shaping meaningful, engaging, and enduring cinematic experiences.

சாந்தி டாக்கீஸ் வழங்கும் ஃபைனலி பாரத், ஷான்வி மேக்னா நடிக்கும் ’புரொடக்‌ஷன் நம்பர். 4’!

 *சாந்தி டாக்கீஸ் வழங்கும் ஃபைனலி பாரத், ஷான்வி மேக்னா நடிக்கும் ’புரொடக்‌ஷன் நம்பர். 4’!*




தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படமான ’புரொடக்‌ஷன் நம்பர். 4’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல வருடங்களாக புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவித்து படங்கள் தயாரித்து வரும் இந்நிறுவனம் தமிழ் சினிமா துறையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது. 


அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய படங்களான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘3 BHK’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’புரொடக்‌ஷன் நம்பர்.3’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாரத் மற்றும் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது சாந்தி டாக்கீஸ் நிறுவனம்.  


படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா பகிர்ந்து கொண்டதாவது, “புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், ஃபைனலி பாரத் டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகு பரிச்சியமான நபர். இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. அதுபோலவே, ‘குடும்பஸ்தன்’ படம் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ‘புரொடக்‌ஷன் நம்பர். 4’ படம் மூலம் ஹரிஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். பால சரவணன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்தான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்” என்றார். 


சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களைப் போலவே, ‘புரொடக்‌ஷன் நம்பர்.4’ திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து பல நம்பிக்கைக்குரிய படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தரமான நல்ல சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் படங்களைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

Amaran produced by Raajkamal Films international & Turmeric Media selected as

AMARAN, PRODUCED BY RAAJKAMAL FILMS INTERNATIONAL & TURMERIC MEDIA, SELECTED AS OPENING FILM OF THE INDIAN PANORAMA AT IFFI 2025

Amaran, the widely acclaimed film produced by RaajKamal Films International and Turmeric Media, has been officially selected as the Opening Feature Film in the Indian Panorama section at the 56th International Film Festival of India (IFFI) in Goa.







This prestigious selection marks a proud milestone for the entire Amaran team, as the film inaugurates the Indian Panorama showcase - one of the most celebrated platforms for India’s finest cinematic achievements.


Adding to this distinction, Amaran has also been nominated for the Golden Peacock Award under the International Competition category. It is one of the few Indian films to earn a place in this globally recognised segment, underscoring its artistic excellence and international appeal.


Representing the film at IFFI 2025 will be Producers Kamal Haasan and R. Mahendran, Director Rajkumar Periasamy, and lead actors Sivakarthikeyan and Sai Pallavi. The team will travel to Goa to participate in the festival’s screening ceremony on 21st November 2025.


Inspired by the extraordinary real-life story of Major Mukund Varadarajan, Ashoka Chakra, Amaran has moved audiences across the country with its powerful portrayal of courage, sacrifice, and unwavering patriotism. The film honours Major Varadarajan’s supreme service to the nation and brings his legacy to the forefront through a deeply human and cinematic narrative.


The selection of Amaran as the Opening Film at IFFI 2025 stands as a testament to its creative vision, technical brilliance, and emotional resonance. It is a celebration not only of the film’s craft but also of the valour of the Indian Armed Forces and the enduring spirit of Indian storytelling.


With this recognition at one of India’s grandest cinematic stages, Amaran continues its inspiring journey, both as a work of cinema and as a tribute to a national hero.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் & டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவான "அமரன்" IFFI 2025

 ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் & டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவான "அமரன்" IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு 







ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட "அமரன்" திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


இந்த மதிப்புமிக்க தேர்வு, "அமரன்" பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில்  இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது.


இதுமட்டுமின்றி, "அமரன்" திரைப்படம் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிரிவில் இடம்பெறும் சில இந்திய திரைப்படங்களில் ஒன்றாக "அமரன்" இருப்பது, அதன் கலை சிறப்பு மற்றும் சர்வதேச ஈர்ப்பை பிரதிபலிக்கிறது.


IFFI 2025-இல் "அமரன்" திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். படக்குழு, நவம்பர் 21, 2025 அன்று நடைபெறும் விழாவின் திரையிடல் நிகழ்வில் பங்கேற்க கோவாவுக்கு பயணிக்கின்றனர்.


மேஜர் முகுந்த் வரதராஜன் (அசோக சக்ரா), அவர்களின் அசாதாரண உண்மைக்கதையால் ஈர்க்கப்பட்ட

"அமரன்" நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை தேசபக்தி, தியாகம் மற்றும் அசைக்க முடியாத தைரியத்தை காட்சிப்படுத்தியத்தின் மூலம் நெகிழச் செய்துள்ளது. இந்தத் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசத்திற்கான உயர்ந்த சேவையை போற்றுகிறது மற்றும் அவரது பாரம்பரியத்தை ஆழமான  மற்றும் மிகச் சிறந்த சினிமா கதையாக்கத்தின் மூலம் முன்னிலைப்படுத்துகிறது.


IFFI 2025-இன் தொடக்கத் திரைப்படமாக "அமரன்" தேர்வு செய்யப்பட்டது, அதன் படைப்பு திறன், தொழில்நுட்ப சிறப்பு மற்றும் உணர்ச்சி ஒத்திசைவுக்கு சாட்சியாக நிற்கிறது. இது திரைப்படத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் இந்திய கதைசொல்லலின் நீடித்த கொண்டாட்டம் ஆகும். 


இந்தியாவின் மிகப்பெரிய சினிமா அங்கீகாரத்துடன், "அமரன்" தனது ஊக்கமளிக்கும் பயணத்தை ஒரு தலை சிறந்த சினிமா படைப்பாகவும், தேசிய வீரருக்கு அஞ்சலியாகவும் தொடர்கிறது.

Sisu 2 : Road to Revenge

 Sisu 2 : Road to Revenge

Sisu : Road to Revenge 

வெளியீடு -November 21st 2025 

நிறுவனம் -Sony Pictures 

2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிறைவிருக்கலாம். இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில






வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்!

தப்பித்து விடுகிறார்! 

இனி , இரண்டாம் பாகம் பற்றி ...


கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக , அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும் பொழுது , அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி! 

அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர்! 

அவர்கள் அனைவரையும் அவரால் சமாளித்து வெல்ல முடிந்ததா என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்!

2002 இல் வெளிவந்த Sisu திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது!

இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மிக பெரிய அளவில் பேசப்பட்டன!

திரைப்பட துறையை சார்ந்த Stunt Masters பலரும் இப்படத்தை பெரியளவில் கொண்டாடினர்!

இந்த இரண்டாம் பாகத்தில், சண்டை காட்சிகள் , முதல் பாகத்தை விட அசத்தலாக உள்ளது என்றால் மிகையில்லை !

Jelmari Helander படத்தை, எழுதி இயக்கியுள்ளார் .

2022 இல் வெளிவந்த படத்தையும் எழுதி இயக்கியவரும் இவரே!

Jorma Tommila (கதாநாயகன்), Stephen Lang, Richard Brake ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.

Mika Orasmaa – ஒளிப்பதிவாளர்

Theeyavar Kulai Nadunga

Theeyavar Kulai Nadunga Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம theeyavar kulai nadunga படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dinesh Lakshmanan.   இதுல  Arjun, Aishwarya Rajesh, Anikha, Praveen Raj  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



படத்தோட ஆரம்புதலையே ஒரு மர்மமான கொலை நடக்குது. writer jebanesan அ நடிச்சிருக்க logu npks அ ராத்திரி நேரத்துல ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு road ல வச்சு யாரோ கொலை பண்ணிடுறாங்க. கொலை பண்ணவன் தலை ல இருந்து கால் வரைக்கும் நல்ல cover பண்ணிருப்பா. அவன் helmet sunglass அப்புறம் black colour dress னு எல்லாத்தயும் போட்டு complete அ தன்னை cover பண்ணிருக்கான்.  இது ஒரு serial killer பண்ண வேலைய? jebanesan எதுக்காக அவரோட பொண்ணு கிட்ட அழுதுகிட்டு phone ல பேசுனாரு? இந்த கொலை எதுக்காக நடந்தது னு பல கேள்விகள் police department க்கு வருது.  


இப்போ அடுத்ததா inspector magudapathy  அ நடிச்சிருக்க arjun அ காமிக்கறாங்க. இவரு ஒரு tough ஆனா police officer . இவரை introduce பண்ணும்போதே hidden evidence ன்ற book படிச்சிட்டு இருப்பாரு அதுல இருந்து இவரோட பார்வை எவ்ளோ துல்லியமா இருக்கும் னு நம்ம புரிஞ்சுக்கலாம். இவரோட area ல இந்த கொலை நடந்த னால இந்த case  இவருகிட்ட வருது. இது ஒரு straightforward investigation அ இல்லாம நெறய thrilling ஆனா layers அ வச்சு ரொம்ப interesting அ இந்த கதையை கொண்டு போயிருக்காங்க. இந்த case அ investigate பண்ணும்போது தான் இன்னொரு interesting ஆனா lead கிடைக்குது. அது writer அ வேலை செய்யற jebanesan க்கும் construction company அ வச்சு நடத்துற ஒரு பெரிய பணக்காரர் ஆனா varadharajan அ நடிச்சிருக்க ramkumar ஓட ஒரு link இருக்கு. 


இப்போ பக்கம் ரெண்டு close friends அ காமிக்கறாங்க. அவங்க தான் adhi அப்புறம் rahul. adhi ஓட வேலை என்னனா snoring problem இருக்கற patients அ treat பண்ணுவான் அதுமட்டுமில்ல sleep therapy யும் practise பண்ணுவான். இவன் எங்க போனாலும் rahul யும் போவான். இப்போ அடுத்ததா meera வா நடிச்சிருக்க aishwarya rajesh அ காமிக்கறாங்க. adhi இவங்கள love பண்ணுவான். meera autism இருக்கற குழந்தைங்க படிக்கற school ல teacher அ வேலை பாப்பாங்க. இவங்களோட role  அ ரொம்ப complex  அ இருக்கும். அதே சமயம் jebanesan யும் ரொம்ப நல்லவரும் கிடையாது . இவங்க எல்லாருமே எப்படி connect  ஆகுறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல வர கதை ஒரு உண்மையான சம்பவந்த base பண்ணி தான் எடுத்துருக்காங்க. ஊழல், குற்றம், morality  னு நெறய விஷயங்களை எடுத்து சொல்லுற விதமா இந்த படம் அமைச்சிருக்கு. இந்த படத்துல ஒரு சில இடங்கள் ரொம்ப slow போன மாதிரி ஒரு feel அ குடுக்குது. உதாரணத்துக்கு adhi அப்புறம் meera ஓட love track ரொம்ப boring அ இருக்கும். இதெல்லாம் கொஞ்சம் avoid பன்னிருந்த இந்த படம் இன்னும் நல்ல இருந்திருக்கும். 


performances னு பாக்கும்போது arjun அப்புறம் aishwarya rajes ஓட நடிப்பும் super அ இருந்தது. arjun investigate பண்ணுற விதமா இருக்கட்டும் aishwarya rajesh ஓட emotions அ வெளிக்காட்டுறத இருக்கட்டும் எல்லாம் perfect  அ இருந்தது. ஒரு சில sexual  violence scenes லாம் ரொம்ப அதிகமா காமிச்சிருப்பாங்க. இந்த கொஞ்சம் sensitive அ handle  பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். 


கதைக்களம், டிரெக்ஷன் னு எல்லாமே அட்டகாசமா இருக்கற படம் தான் இது. so உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Middle Class Family Movie Review

Middle Class Family Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம middle class படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Kishore Muthuramalingam .   இதுல  munishkanth, vijayalakshmi, radharavi , kaalivenkat , kureshi  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

இந்த படத்தோட கதையை ரொம்ப simple அ சொல்லனும்னா ஒரு சாதாரண middle class family இருக்காங்க. திடுருனு அவங்களுக்கு நெறய பணம்  கிடைக்குது, ஆனா அது தொலைஞ்சு போயிடுது. இதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் னு plan பண்ணுறாங்க. இது ஒரு பழக்கப்பட்ட கதையை இருந்தாலும் ரொம்ப realistic அ logical அ கதையை கொண்டு போன விதம் தான் super னு சொல்லணும். முக்கியமா munishkanth ஓட எதார்த்தமான நடிப்பு இந்த படத்துக்கு இன்னொரு அழகு. ஒரு பக்காவான family entertaining படமா தான் இது அமைச்சிருக்கு. இந்த படத்தோட கதையை இப்போ detailed அ பாக்கலாம். marx ன்ற character ல  munishkanth நடிச்சிருக்காரு. இவரோட அப்பா தான் இந்த பேரா வச்சிருப்பாரு அதுக்கு காரணம் அவருக்கு அரசியல் மேல இருக்கற பிரியம் தான். இவரோட life ரொம்ப கஷ்டத்துல தான் போகுது. அப்போ தான் இவரோட அப்பா விட்டுட்டு போன ஒரு பழைய land document கிடைக்குது. இவரோட அப்பா rajasthan ல வசிக்கிற ஒரு businessman க்கு help பண்ணிருப்பாரு. அதுக்கு நன்றிக்கடனா அந்த businessman யும் ஒரு கோடி ரூபாய் க்கு blank cheque அ குடுத்துருப்பாரு. ஏற்கனவே குடும்ப கஷ்டத்துல வாழுற marx க்கு இந்த cheque கிடச்சஓடனே ரொம்ப சந்தோச படுறாரு. ஆனா திடுருனு எப்படியோ  இந்த cheque அ தொலைச்சுடுறாரு. இதுக்கு அப்புறம் இவங்க இந்த cheque ஓட தேடுதல் வேட்டை தொடுறது அதோட நெறய comedy scenes யும் வச்சுருக்காங்க. marx ஓட மனைவி ஒரு பக்கம் அப்புறம் இவரோட ரெண்டு comedy ஆனா friends யும் சேந்து இந்த cheque அ தேடுறதுக்கு help பண்ணுறாங்க. இதெல்லாமே ரொம்ப comedy அ கொண்டு போயிருப்பாங்க. இதுக்கு அப்புறம் இவங்களுக்கு இந்த cheque கிடைச்சுதா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performances னு பாக்கும்போது munishkanth தான் இந்த படத்தோட பலமே. இவரோட இந்த middle class character அ ரொம்ப நேர்த்தியா genuine அ நடிச்சிருக்கறது தான் super அ இருந்தது. அதுமட்டுமில்ல audience அ performance மூலமா இவரு பக்கம் இழுத்துருக்காரு. அடுத்தது இவருக்கு wife அ வர vijayalakshmi . எப்பவுமே husband க்கு தொல்லை குடுக்கற wife அ ivangaloda acting யும் super அ இருந்தத்த்து. radharavi ஓட entry படத்துல ரொம்ப late அ இருந்தாலும் ஒரு strong ஆனா presence அ தான் குடுத்திருக்காரு. அப்புறம் kaalivenkat  and kureshi ஓட performance யும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது editing அப்புறம் screenplay எல்லாம் இந்த படத்துக்கு பக்கவா குடுத்திருக்காங்க. cinematography யும் ரொம்ப realistic ஆவும் natural ஆவும் இருந்தது. இந்த படத்துல songs லாம் கிடையாது ஆனா bgm எல்லாம் பக்கவா குடுத்திருந்தாங்க. 


மொத்தத்துல munishkanth ஓட அட்டகாசமான performance , super ஆனா கதைக்களம், ரசிக்க வைக்கிற விதமான comedy scenes னு இருக்கற படம் தான் இந்த middle class . so miss பண்ணாம உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாத்துட்டு வாங்க.

Mask Movie Review

Mask Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mask படத்தோட review எ தான் பாக்க போறோம். விக்ரமன் தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Kavin ,  Andrea Jeremiah  ,Ruhani Sharma , Charle  ,Ramesh Thilak  ,Kalloori Vino ,Archana Chandhoke .Redin Kingsley .Pavan 

Aadukalam Naren ,Subramaniam Shiva ,Rohith டென்னிஸ்,  Venkat , Magalakshmi னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


velu வா நடிச்சிருக்க kavin ஒரு detective அ இருக்காரு. இவரு ரொம்ப intelligent ஆனா selfish ஆனா person . இவரை பொறுத்த வரைக்கும் பணம் தான் எல்லாம். அதுனால இவருகிட்ட வர clients எல்லாரையும் ஏமாத்தி பணத்தை வாங்குறாரு .  இவரோட personal life னு பாக்கும் போது இவரோட marriage already மோசமான நிலமைல தான் இருக்கும் அதோட இவரோட குழந்தையும் அதிகமா பாதுக்கமாட்டாரு இருந்தாலும் பணத்தைக்காக எல்லா வேலைகளையும் பண்ணுறாரு. இப்போ தான் rathi யா நடிச்சிருக்க ruhani sharma வை சந்திக்குறாரு. இவங்களோட relationship romantic அ மாறுது. இருந்தாலும் அது ரொம்ப straightforward அ இருக்காது. ஏன்னா rathi க்கும் marriage ஆயிருக்கும். இவங்களுக்கு இதுக்கு மேல இந்த marriage ல இருக்க முடியாது ன்ற point ல தான் velu வை சந்திக்கறாங்க. rathi அப்புறம் velu வோட relationship ரொம்ப complicated அ இருக்கும். இப்போ bhoomi யா நடிச்சிருக்க andrea வை காமிக்கறாங்க. இவங்க ஒரு powerful ஆனா social activist . இவங்க abuse பண்ணப்பட்ட women அ encourage பண்ணி அவங்க ஒரு புது life அ lead பண்ணுற அளவுக்கு help பண்ணுறாங்க. ஆனா இதுக்கு பின்னாடி இவங்களுக்கு இன்னொரு முகமும் இருக்கு. bhoomi politics ல நடக்கற ஒரு சில backwork க்கு  இந்த பொண்ணுங்கள தான் use பண்ணுறாங்க. அதுமட்டும் இல்ல இந்த பாதிக்கப்பட்ட பெண்களோட personal விஷயங்களை record பண்ணி வச்சு இவங்க சொன்ன வேலைய செய்யலைன்னா blackmail பண்ணுறாங்க. அப்போ தான் bhavan ன்ற ஒரு அரசியல்வாதி அவனோட area ல பணத்தை distribute பண்ணுறதுக்காக bhoomi கிட்ட 440 கோடியா குடுக்கறாங்க. இவளோ பெரிய amount அ அவளோட supermarket ல தான் ஒளிச்சு வைக்கிற. இப்போ இந்த பணத்தை திருடுறதுக்காக m r radha mask போட்டு  ஒரு gang வருது. இதுல எப்படியோ velu மாட்டிக்கற. அதுமட்டுமில்ல இந்த mask radhi ஓட husband bag ல கிடைக்கும். இப்போ இந்த பணத்தை யாரு திருடின ? velu இந்த பிரச்சனைல இருந்து தப்பிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


performances னு பாக்கும் போது kavin ஓட acting அட்டகாசமா இருந்தது. ரொம்ப selfish அ cunning அ manipulative அ செமயா perform பண்ணிருக்காரு. andrea ஒரு powerful ஆனா character அ நடிச்சிருக்காங்க. இவங்களோட ரெண்டு side அதாவுது ஒரு பக்கம் activist ஆவும் இன்னொரு பக்கம் mastermind அ இருக்கிறது தான் இந்த படத்தோட highlight ஆனா விஷயம். ruhani யும் எதார்த்தமா நடிச்சிருக்காங்க. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப நேர்த்தியை நடிச்சிருக்காங்க. 


இந்த படத்தோட techincal aspect அ பாக்கும் போது cinematography super அ இருந்தது. visuals அ இருக்கட்டும், அந்த mask போட்ட கும்பல் பணத்தை கொள்ளையடிக்கற scenes ல இருக்கற tension னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. gv prakash ஓட music and bgm யும் இந்த கதைக்கு super அ set யிருந்தது. climax scene தான் இன்னும் வேற level ல இருந்தது அதுமட்டுமில்ல இதுக்கு வந்த bgm யும் mass அ இருந்தது. இந்த படத்தோட editing யும் பக்கவா பண்ணிருக்காங்க. director vikraman இயக்குற முதல் படம் இது தான். இந்த உலகத்துல எல்லாருமே அவளோட சுயலாபத்துக்காக தான் வாழுறாங்க இதுல யாரும் நல்லவர்களும் கிடையாது கெட்டவர்களும் கிடையாது ன்ற விஷயத்தை ரொம்ப அழகா கதையை கொண்டு வந்தது தான் இந்த படத்தோட மிக பெரிய strenght னு சொல்லணும். 

ஒரு தரமான interesting ஆனா படம் தான் இது. சோ miss பண்ணாம theatre ல போயி பாருங்க.




Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக

 *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!*



Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது.  


இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.


டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.


முழுக்க முழுக்க நவீன இக் கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு, தலைமுறையின் புழக்கத்தில் இருக்கும் “வித் லவ் ( With Love )”  தலைப்பு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  டீசர் தற்போது இணையம் முழுக்க பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்



LINK : 

https://www.youtube.com/watch?v=gNrYsSN0V9A

Yellow Movie Review

Yellow Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yellow படத்தோட review அ தான் பாக்க போறோம். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poornima Ravi, Vaibhav Murugesan, Sai Prasanna, Leela Samson, Vinodhini Vaidhyanadhan, Prabu Soloman, Namita Krishnamoorthy, Vigneshwar, Loki, Ajay னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் 21st nov அன்னிக்கு release ஆயிருக்கு.   சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


aadhirai யா நடிச்சிருக்க poornima ravi அவங்களோட higher studies யும் நல்ல salary இருக்கற job யும் விடணும் னு நினைக்கிறாங்க. இதுக்கு காரணம் இவங்களோட அப்பாவா நடிச்சிருக்க delhi ganesh க்கு சில health issues இருக்கிறது தான். இந்த பிரச்சனை போயிடு இருக்கும் போது இவங்களோட lover santhosh அ நடிச்சிருக்க sai prasanna ஓட சில கருத்து வேறுபாடு ஆலா breakup ஆயிடுது.  ஒரு பக்கம் ஒரே மாதிரி போயிடு இருக்கற bank job இன்னொரு பக்கம் family  ஓட responsibility னு சோந்து போயிருக்கிற aadhirai , திடுருனு ஒரு நாள் கேரளா க்கு trip பிளான் பண்ணி போறாங்க. அங்க போய் அவங்களோட school  friends அப்புறம் relatives அ பாத்து கொஞ்ச நாள் நல்ல jolly அ நாட்களை spend பண்ணனும் னு நினைக்கிறாங்க. அப்படி போகும் போது தான் jenny  அ நடிச்சிருக்க namitha krishnamoorthy அப்புறம் sai யா நடிச்சிருக்க vaibhav murugesan னு ரெண்டு பேரா சந்திக்கறாங்க aadhirai . இந்த journey ல இவங்களோட life ல என்னனலாம் சந்திக்க போறாங்க? kerala க்கு போறதுக்கான காரணம் நிறைவேறிச்ச இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


actors ஓட performance னு பாக்கும் போது poornima ravi ஓட acting super அ இருந்தது. இவங்க youtube channel ல ரொம்ப famous அதுமட்டும் இல்லை சில படங்கள் ல சின்ன சின்ன character ளையும் நடிச்சிருக்காங்க. ஒரு lead role அ  இது தான் இவங்களுக்கு முதல் படம். இதுல இவங்களோட bodylanguage அ இருக்கட்டும், emotions அ காமிக்க்ர விதமா இருக்கட்டும் dialogues அ இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. heroine ஓட journey ல friend அ வர vaibhav murugesan ஓட acting யும் ரொம்ப genuine அ இருந்தது. நெறய audience க்கு இவரோட sai character ரொம்பவே பிடிக்கும். படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors heroine ஓட journey அங்க அங்க வந்துட்டு போனாலும் கதைக்கு importance அ தர characters அ தான் இருக்காங்க. 


இந்த படத்தோட technical team னு பாக்கும்போது, cinematography அ பத்தி சொல்லியே ஆகணும். heroine ஓட journey அ காமிச்சா விதமா இருக்கட்டும், heroine travel பண்ணுற இடங்கள் அதாவுது kerala, goa னு இது எல்லாமே ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு abi adhvik. cliffy chris ஓட songs இந்த படத்துக்கு ரொம்ப அருமையா set யிருந்தது. anadh kasinath ஓட bgm இந்த படத்தை இன்னொரு level க்கு எடுத்துட்டு போகுது னு தான் சொல்லணும். ஒரு ரெண்டு பேரோட journey , அவங்களோட self discovery அப்புறம் personal growth க்கான தேடல் இதெல்லாமே ரொம்ப interesting அ இருக்கற மாதிரி edit பண்ணிருக்கற ஸ்ரீ வத்சன் ஓட editing யும்  அருமை தான். கதையை எழுதி இயக்கி இருக்கற ஹரி mahadevan யும் நெறய விஷயங்களா audience ஆழ connect பண்ணிக்கற மாதிரி நெறய gentle ஆனா moments குடுத்து ஒரு soulfull ஆனா படத்தை தான் குடுத்திருக்காரு. 


மொத்தத்துல நம்மோட மனச வருடுற மாதிரியான படம் தான் இந்த yellow. சோ மறக்காம இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள்

 *தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களில் பொருந்திப் போவார்கள்?*





‘ஜூடோபியா’ திரைப்படம் தமிழில் உருவாகும்போது உணர்வுப்பூர்வமான, ஸ்டைலிஷான அதிரடி சாகசங்களுடன் அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். ’ஜூடோபியா’ திரைப்படத்தின் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திலும் எந்தெந்த தமிழ் சினிமா நடிகர்கள் பொருந்திப் போவார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். 


*ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா:*

ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நிலையான உறுதிப்பாடு மற்றும் கருணை ஆகியவற்றை மிகச்சரியாக தன் நடிப்பில் பிரதிபலிப்பதில் திறமையானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா கதைப்படி ஜூடி தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்பட்டாலும், ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காணும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த ஒரு எளிய பெண். புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் வலிமையான உணர்வுகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. ஜூடியாக அவரது வெர்ஷன் மிகவும் தீவிரமானதாகவும், நம்பிக்கையுடன் தனது கனவு நோக்கி பயணிக்கும் யதார்த்தமான பெண்ணை தனது நடிப்பில் சிறப்பாக கொண்டு வருவார். நீதி மற்றும் சமூக மாற்றத்தினை எதிர்நோக்கும் சக்திவாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் பயணமாக ஜூடி கதாபாத்திரத்தை நயன்தாரா மாற்றுவார்.


*நிக் வைல்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்:*

இயல்பான நகைச்சுவை, வசீகரம், ஆண்களுக்கே உரித்தான குறும்பு என நிக் வைல்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகச்சரியாக பொருந்திப் போவார். மென்மையான பேச்சு, புத்திசாலித்தனம், தனது காயங்களை மனதிற்குள் மறைத்தல் போன்றவை நிக் கதாபாத்திரத்தின் தன்மை. இவற்றோடு நகைச்சுவை, உள்ளூர் பேச்சுவழக்கு மற்றும் உணர்ச்சிகரமான பல தருணங்களை தனது நடிப்பில் சிவகார்த்திகேயன் நிச்சயம் கொண்டு வருவார். விளையாட்டுத்தனமாகவும் பல உணர்வுகளையும் கொண்ட ஜூடி மற்றும் நிக் கூட்டணிக்கு நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் சரியாகப் பொருந்திப் போவார்கள். 



*கேரி டி'ஸ்னேக் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா:*

ஜூடி மற்றும் நிக் ஆகியோரால் துரத்தப்படும் கேரி ஒரு விரியன் பாம்பு என்பதால் இந்த கதாபாத்திரத்தில்  நடிகர் எஸ்.ஜே. சூர்யா மிகச்சரியாகப் பொருந்திப் போவார். உணர்வுகளை வெளிப்படுத்தும் எஸ்.ஜே. சூர்யாவின் குரல், வசீகரம் ஆகியவை கேரியின் ஆளுமைக்கு சரியாக பொருந்துகின்றன. தமிழ் வெர்ஷனில் கேரி வேகமாகப் பேசும் மற்றும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் விரக்தியில் மட்டுமே குற்றங்களைச் செய்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வரை அவர் நோக்கங்கள் தெளிவற்றதாகவும் இருக்கும். எஸ்.ஜே. சூர்யா நகைச்சுவையான, உணர்ச்சிவசப்பட்ட, சற்று குழப்பமான மற்றும் அனுதாபமுள்ள ஒரு கதாபாத்திரத்தை திரையில் சித்தரிக்க முடியும். இது தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்புபடியாகவும் இருக்கும். ஜூடி மற்றும் நிக்குடனான துரத்தலுடன் கேரியின் பயணம் தமிழ் சினிமா பாணியில் ஆடம்பரமாகவும், சஸ்பென்ஸாகவும், ஸ்டைலாக இருக்கும்.


*கெஸல் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா:*

கெஸல்லின் கவர்ச்சி, நளினம் மற்றும் இசை ஒளிக்கு நடிகை ஆண்ட்ரியா சரியாக பொருந்துகிறார். அவரது நம்பிக்கை, நவீன பிம்பம் மற்றும் பாடும் திறமை ஆகியவை கெஸல் கதாபாத்திரத்தின் கலை நுணுக்கத்தைப் பெறுவதோடு, ’ஜூடோபியா’ படத்தின் பாப்-ஸ்டார் அழகைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆண்ட்ரியாவின் கெஸல் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், மோதல்கள் நிறைந்த ’ஜூடோபியா’வில் ஒற்றுமையை ஊக்குவிக்க தனது குரலைப் பயன்படுத்தும் நபராகவும் இருப்பார். அவரது உலகளாவிய பாடல்களில் தமிழ் இசையையும் இணைக்க முடியும். 


*சீஃப் போகோ கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ்:*

சீஃப் போகோ கதாபாத்திரத்திற்கு கட்டளையிடும் குரல், அதிகாரபூர்வமான நடத்தை, உறுதியான ஆனால் இறுதியில் நியாயமான தலைவராக நடிக்கும் திறன் தேவை. இந்த அனைத்து குணங்களையும் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பாக திரையில் பிரதிபலிப்பார். போகோவின் அவரது வெர்ஷன் கண்டிப்பான, புத்திசாலித்தனமான காவல்துறை அதிகாரியாக இருக்கும். ஆரம்பத்தில் சிறியவளான ஜூடியை நிராகரித்தவர் பின்னர் படிப்படியாக அவளுடைய திறனை அங்கீகரிக்கிறார். தீவிரமான, பல உணர்வுகளுடன் மிகவும் வலுவான போகாவை திரையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதிபலிப்பார். கதை அடுத்தடுத்து நகரும்போது, அவர் காவல்துறையின் சக்திவாய்ந்த அடித்தளமாக மாறுகிறார். இட்ரிஸ் எல்பாவின் அசல் தன்மையை கொண்டு வருவதுடன் தமிழ் சினிமாவுக்கும் ஏற்றபடி இந்தக் கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் திறமையுடன் கையாள்வார்.

*If Zootopia Were Made in Kollywood, Here’s Who Would Play the Characters

 *If Zootopia Were Made in Kollywood, Here’s Who Would Play the Characters*





A Kollywood-style Zootopia would bring emotional intensity, stylish chase sequences, and character-driven storytelling. With Tamil actors embodying new animal personalities, the film’s dynamic shifts—especially with Gary, now reimagined as a pit viper trying to help his family. Here’s how each main character fits into the Tamil cinema landscape.


Judy Hopps – Played by Nayanthara

Nayanthara embodies the perfect blend of fierce determination and composed grace needed for Judy Hopps. In a Kollywood retelling, Judy would become a small-town Tamil Nadu girl who dreams of becoming a police officer despite being constantly underestimated. Nayanthara has proven her ability to carry roles where intelligence, courage, and emotional strength intersect. Her version of Judy would be more intense, grounded in realistic struggle but still driven by hope. She would bring a mature resilience, turning Judy’s fight against bias into a powerful and inspiring journey rooted deeply in Tamil cinema’s themes of justice and societal change.


Nick Wilde – Played by Siva Karthikeyan

Siva Karthikeyan fits Nick Wilde naturally because of his effortless comedic timing and charming, boyish mischief. His Nick would be a smooth-talking, street-smart Chennai con artist who hides his emotional wounds behind wit. Kollywood would lean into his humor, adding local comedic flavour, slang, and charismatic swagger. But SK also shines in emotional scenes, allowing Nick’s vulnerability to surface beautifully at key points. His chemistry with Nayanthara would turn Judy and Nick’s partnership into something both playful and emotionally layered.


Gary De'Snake – Played by SJ Suryah

Since Gary is a pit viper trying to protect his family while being pursued by Judy and Nick, SJ Suryah becomes the ideal Kollywood equivalent. His expressive voice, slightly eccentric charm, and ability to portray morally grey characters fits Gary’s personality perfectly. In the Tamil version, Gary becomes a fast-talking, slippery, unpredictable snake whose motives remain ambiguous until he reveals he’s only committing crimes out of desperation to save his family. SJ Suryah can portray a character who is funny, emotional, slightly chaotic, and sympathetic — giving Gary a dramatic complexity that Kollywood audiences love. His chase sequences with Judy and Nick would be visually flamboyant, suspenseful, and stylishly over-the-top in true Tamil cinema fashion.


Gazelle – Played by Andrea Jeremiah

Andrea Jeremiah perfectly suits the glamour, grace, and musical aura of Gazelle. Her natural confidence, modern image, and strong singing talent allow the character to retain the pop-star beauty of the original while gaining a Kollywood-style artistic edge. Andrea’s Gazelle would not just be a performer but a symbolic figure who uses her voice to promote unity in a conflict-ridden Zootopia. Her songs could incorporate Tamil musical influences while still feeling global. She would elevate Gazelle into an elegant, inspiring sensation in Tamil cinema.


Chief Bogo – Played by Prakash Raj

Chief Bogo needs a commanding voice, an authoritative demeanor, and the ability to play a firm yet ultimately fair leader — all qualities Prakash Raj excels at. His version of Bogo becomes a strict, no-nonsense police chief who initially dismisses Judy due to her small size but gradually recognises her potential. With his trademark intensity, Prakash Raj would create a Bogo who is intimidating yet layered, allowing moments of vulnerability and respect to shine through as the story progresses. He becomes the powerful foundation of the police force, mirroring Idris Elba’s original gravitas but with a uniquely Tamil dramatic sharpness.

I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein

 *”I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein*





_Tere Ishk Mein will release in cinemas on 28th November in Hindi, Tamil and Telugu._


As the AR Rahman album from Tere Ishk Mein continues to trend and the trailer garners massive applause, the buzz around the film is at an all-time peak. Fans can’t stop talking about the crackling chemistry between Dhanush and Kriti, with their new pairing becoming a major highlight ahead of release. Riding on this wave of excitement, Kriti opened up about her dynamic working experience with Dhanush, revealing the strong creative bond that shaped many of the film’s unforgettable moments.


*Speaking about her experience working with Dhanush, Kriti shares*, “I think Dhanush is an incredible actor, I have always been an admirer of his talent and his craft. I feel he has a very strong hold on his craft. He’s very nuanced; he also directed a lot of films, and comes from a lot of experience and understanding of scenes and how it will translate on the screen. He really brings out a lot of layers in his character and I was very excited to work with him. I knew I’m going to have an actor who I can really feed off from… that is exactly what happened. And we had not met before, and even Shankar and Mukti in the film at a point had not met before, so that worked out!”


*Adding further about their on-screen dynamic and the process of creating powerful performances, she continues*, “We have some really intense scenes, a lot of really long scenes that can, you know, translate when both of us feed off each other. He’s really collaborative as an actor and really helpful. I think together we have created some magical moments and felt it when the scene happened. Both of us would look at each other and we were like, ‘That was a good scene!’ I have really enjoyed working with him and I hope we do a lot more work in the future.”


As audiences eagerly await for Shankar and Mukti’s  passionate chemistry and hard-hitting dialogues, Tere Ishk Mein is poised to be one of the most compelling releases of the year. 


Gulshan Kumar, T-Series, and Colour Yellow present 'Tere Ishk Mein', produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi and Tamil on 28th November 2025.