Featured post

“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’

 *“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’* Actor Karunaas, who has succes...

Sunday, 13 September 2026

“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’

 *“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’*






Actor Karunaas, who has successfully completed 25 years in the Tamil film industry, continues to explore diverse characters across different genres. After establishing himself through a wide range of memorable performances, the actor now takes on a challenging and emotionally driven role in Enna Vilai, written and directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor. Karunaas plays Thavasimuthu, a coin redeemer who retrieves coins offered by devotees into the sea near Rameswaram. With the film gearing up for its theatrical release on September 17, the actor shares his experience of being part of a story rooted in an unusual livelihood and a larger struggle for dignity and survival.


Speaking about his role in Enna Vilai, Karunaas says, “Thavasimuthu is a character that demanded a completely different approach from me. He is a man whose life and livelihood are closely connected to the sea, and the circumstances he faces gradually take him into a much larger struggle. What made the character special for me was the emotional journey he goes through. Enna Vilai deals with a very unique premise, but beneath that is a deeply human story about survival, dignity and the right to live with self-respect. I was very happy to take up a role that gave me the opportunity to explore these emotions as an actor.”


He adds, “Sajeev Pazhoor has written the story with great clarity and has brought a strong social relevance to the narrative without compromising on its emotional core. His understanding of the characters and the world they belong to made the experience very interesting for me. Working alongside Nimisha Sajayan and the rest of the cast was also a wonderful experience. I believe Enna Vilai will connect with audiences because it speaks about an ordinary man and an extraordinary situation in a very compelling manner.”


Set against a socially relevant backdrop, Enna Vilai revolves around a man who retrieves coins offered by devotees into the sea near Rameswaram, with his struggle for dignity and survival eventually leading to a significant legal battle.


The film features Karunaas, Nimisha Sajayan, Vijayalakshmi Veeramani, Saasha, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalitesand others.


Written and directed by Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The technical crew comprises Sam C.S. (Music), Alby Antony (Cinematography) and Sreejith Sarang (Editing). Enna Vilai is gearing up for its worldwide theatrical release on September 17, 2026.

நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”...‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!

 *“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”...‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!*






தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் சவால் நிறைந்த, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுக்கும் நாணய மீட்பாளரான தவசிமுத்து கதாபாத்திரத்தில் இந்த படத்தில் கருணாஸ் நடித்துள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வித்தியாசமான வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட கதையையும், கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டத்தையும் பற்றி பேசுகிறது. 


இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார், “தவசிமுத்து கதாபாத்திரம் என்னிடம் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தது. அவரது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படிப்படியாக அவரை மிகப்பெரிய போராட்டத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தை எனக்குச் சிறப்பானதாக மாற்றியது, அவர் கடந்து செல்லும் உணர்வுப்பூர்வமான பயணம்தான். ‘என்ன விலை’ திரைப்படத்தின் கருவாக வாழ்வாதாரம், கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை பேசுகிறது. ஒரு நடிகராக இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி”


மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “சஜீவ் பழூர் மிகவும் தெளிவான பார்வையுடன் இந்தக் கதையை எழுதியுள்ளார். உணர்வுப்பூர்வமான மைய கதையை சமரசம் செய்யாமல், வலுவான சமூக கருத்தையும் இதில் பேசியுள்ளார். கதாபாத்திரங்கள் மற்றும் அவை சார்ந்த உலகத்தைப் பற்றிய அவரது புரிதல், இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தை எனக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றியது. நிமிஷா சஜயன் மற்றும் படத்தின் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் அசாதாரணமான சூழ்நிலையை மிகவும் அழுத்தமாகப் பேசுவதால், ‘என்ன விலை’ திரைப்படத்தை நிச்சயம் ரசிகர்கள் தங்களுடன் பொருத்தி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார். 


சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.


இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார்.


சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

DHIK. DHIK..DHIK…' டீசர் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது, தற்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது..

DHIK. DHIK..DHIK…' டீசர் 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது, தற்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது..








JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் திரைப்படம் 'Dhik.Dhik..Dhik…' படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது..


டீசர் வெளியீட்டுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் டீசரை வெளியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் படத்தின் மீதான கவனம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது.


தற்போது 'Dhik. Dhik.. Dhik…' டீசர் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் டீசரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். டீசருக்கு கிடைத்த டிஜிட்டல் வரவேற்பும், திரையரங்குகளில் நடைபெறும் திரையிடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


 ஒரே இரவில் நடக்கும் கதை, பரபரப்பான சூழல் மற்றும் த்ரில்லர்  கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது..


JSK Satish Kumar தயாரிப்பில், JSK Film Corporation சார்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் Srinivasan Sivajirao இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் Raghu Rajagopal உடன் இணைந்து படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.


சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முழுக் கதையும் ஒரே இரவில் நடக்கின்றது.


 சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்புடன், குடும்ப உணர்வுகளையும் இணைத்து, இன்றைய காலகட்டத்துடன் தேவையான சமூக கருத்தையும் படம் பேசுகின்றது.


படத்தில் Pavel Navageethan, JSK Satish Kumar, Chandini Tamilarasan, Sandra Amy மற்றும் Bijesh Nagesh ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.


‘Thanga Meengal’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘Kuttram Kadithal’ உள்ளிட்ட தரமான, வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்துள்ள JSK Film Corporation, 'Dhik.Dhik..Dhik…' படத்தின் மூலமும் தனது தனித்துவமான கதைகளை தொடர்ந்து வழங்குகின்றது.



‘Fire’ படத்தைத் தொடர்ந்து, JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Kuttram Kadithal 2’ திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படம் தற்போது திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் வருகிறது.


படத்தின் ஒளிப்பதிவை Raghu Rajagopal, இசையை DK, படத்தொகுப்பை Prem B, கலை இயக்கத்தை SS Susee Devaraj ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.


24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகள், முன்னணி திரையுலக பிரபலங்களின் ஆதரவு மற்றும் தற்போது திரையரங்குகளில் டீசர் திரையிடப்பட்டு வருவது என 'Dhik. Dhik.. Dhik…'படத்தின் புரமோஷன் பயணம் சிறப்பான தொடக்கத்தைப் பெற்று இருக்கின்றது.


இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை JSK Film Corporation விரைவில் வெளியிடும்..

DHIK. DHIK.. DHIK…’ TEASER CROSSES 2 MILLION VIEWS IN JUST 24 HOURS; NOW PLAYING ACROSS THEATRES

‘DHIK. DHIK.. DHIK…’ TEASER CROSSES 2 MILLION VIEWS IN JUST 24 HOURS; NOW PLAYING ACROSS THEATRES








JSK Film Corporation’s upcoming Tamil thriller Dhik. Dhik.. Dhik… has made an impressive impact with its teaser, crossing 2 million views within just 24 hours of its release.


Adding further momentum to the teaser launch, prominent names from the Tamil film industry — Vijay Sethupathi, Venkat Prabhu, G.V. Prakash Kumar and Arya — extended their support by launching and sharing the teaser, giving the film strong visibility among audiences and cinema enthusiasts.


Taking the campaign further, the Dhik. Dhik.. Dhik… teaser is now being screened across theatres, giving moviegoers an opportunity to experience the film’s gripping world on the big screen. The extensive theatrical showcasing, coupled with the teaser’s strong digital response, has further amplified the buzz surrounding the film.


The encouraging response has heightened curiosity around Dhik. Dhik.. Dhik…, particularly for its intriguing one-night premise, tense atmosphere and thriller-driven narrative.


Produced by JSK Satish Kumar under the banner of JSK Film Corporation, the film marks the directorial debut of Srinivasan Sivajirao, who has co-written the film along with Raghu Rajagopal.


Set against the backdrop of Chennai, Dhik. Dhik.. Dhik… unfolds entirely over the course of a single night. The film combines suspense and tension with an emotional family narrative while carrying a socially relevant message that connects with contemporary times.


The film features Pavel Navageethan, JSK Satish Kumar, Chandini Tamilarasan, Sandra Amy and Bijesh Nagesh in prominent roles.


JSK Film Corporation, known for backing acclaimed and content-driven films including the National Award-winning Thanga Meengal and Kuttram Kadithal, continues its commitment to distinctive storytelling with Dhik. Dhik.. Dhik….


Following Fire, the production house is also gearing up for the theatrical release of Kuttram Kadithal 2, which is currently on its film festival journey.


On the technical front, Raghu Rajagopal handles the cinematography, DK composes the music, Prem B takes charge of editing, while SS Susee Devaraj serves as the art director.


With the teaser crossing the 2-million-view milestone in just 24 hours, receiving support from leading personalities from the film industry, and now being showcased across theatres, Dhik. Dhik.. Dhik… has begun its promotional journey on a highly encouraging note.


Further updates about the film will be announced by JSK Film Corporation shortly.

தி டார்க் ஹெவன்' திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

 'தி டார்க் ஹெவன்' திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!









ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவம்: 'தி டார்க் ஹெவன்' பட நாயகன் பிக் பாஸ் புகழ் சித்து பேச்சு


ஒரே மாதிரியான படங்களே வருகின்றன: நடிகை ரித்விகா ஆதங்கம்! 


'தி டார்க் ஹெவன்' திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!


நல்லதை கேட்டுக்கொள்கிறேன்; கேட்டதை மாற்றிக் கொள்கிறேன்: 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி பேச்சு!


நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.

அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.


கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.


செப்டம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.


அறிமுக விழாவில் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,


"நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். க்ரைம் திரில்லர் படத்திற்கு இசையமைத்தது இதுதான் முதல் முறை. இயக்குநர் பாலாஜி முதலில் அப்படிச் சொன்ன இந்தக்கதை எனக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்ன ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமானது. அதேபோல படத்தை எடுத்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்.

படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணி .ஒரு பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்க்க வேண்டும் ஆதரிக்க வேண்டும் "என்றார்.


ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே பேசும்போது,


" நான் இயக்குநர் பாலாஜியுடன் ஏற்கெனவே ’டி3 ’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இது அவருடன் பணியாற்றும் இரண்டாவது படம் .வழக்கமாக மலைப் பிரதேசங்களில் அழகான இடங்களில் படிப்பு நடத்துவது என்பது வேறு. மர்மமும் திகிலும் நிறைந்த ஒரு கதைக்கு அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது வேறு. கிரைம் திரில்லர் படங்களுக்கு இயற்கை அழகோடு மர்மமும் திகிலும் நிறைந்து காணப்படும் இடங்களாக இருக்க வேண்டும். அப்படி அழகும் மர்மமும் இணைந்த இடங்களைத் தேடி தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் படப்பிடிப்பு நடத்தினார். நாங்களும் அப்படிக் காடு,மலை என்று சிரமப்பட்டு சென்று படமாக்கினோம்.வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் நீண்ட தூரம் படப்பிடிப்புக் கருவிகளைச் சுமந்து கொண்டு சென்று படப்பிடிப்பு நடத்தினோம்.அந்த சிரமங்கள் எல்லாம் காட்சிகளைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்டும் போது இப்போது தெரிவதில்லை" என்றார்.


படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் புகழ் தர்ஷிகா பேசும்போது,


" ’தி டார்க் ஹெவன்’ எனது முதல் படம். பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அனைவரும் விரும்பிப் பார்க்கும் படங்களாக இருக்கக்கூடியவை த்ரில்லர் படங்கள்தான்.அப்படி ஒரு படமாக இந்த ’தி டார்க் ஹெவன்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக உள்ளன. நடித்திருக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்கில் சென்று இந்தப் படத்தை பார்த்து ஆதரியுங்கள்.உங்களது நேர்மையான விமர்சனங்களைக் கூறுங்கள் "என்றார்.


நடிகை ரித்விகா பேசும்போது,


"பெரிய படங்களின் வெளியீடுகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது செப்டம்பர் 18 அன்று உறுதியாக திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய த்ரில்லர் படங்கள் வருகின்றன. போலீஸ்காரர், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என்று எல்லாம் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும். ஆனால் இது கண்டிப்பாக அப்படி இருக்காது. வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும்.


ஏற்கெனவே எடுத்த படத்தை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் படம் எடுப்பது என்பது இரட்டை உழைப்பைப் போட வேண்டிய நிலை.கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அப்படி இந்தப் படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் இருமடங்கு உழைத்து இருக்கிறார்கள். சவாலான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சென்று காத்திருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப ரீதியாகவும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள்.

நாங்கள் நடிப்புக் கலைஞர்கள் ஒருமுறை நடித்தால் அவர்கள் இரண்டு மடங்கு உழைத்தார்கள்.இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.


படங்கள் திரையரங்குப் படங்கள், ஓடிடி படங்கள் என்று இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகின்றன. எல்லாப் படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.திரையரங்குக்கு வந்த பிறகு ஓடிடியில் வந்தால் மட்டும் அப்போது பார்க்கலாம் .அதுவரை திரையரங்கில் பார்ப்பது தான் நல்ல அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.’தி டார்க் ஹெவன்’ கண்டிப்பாக நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும். நம்பி வரலாம். ஏமாற்றாது" என்றார்.


படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,


"ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே வைத்து விட்டு பிறகு ஆரம்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கி முடித்து இன்று நான் உங்கள் முன் நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. அப்படி மூன்று பேருக்கு நான் நன்றி கூற வேண்டும்.ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் எடுக்கும் போது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சரண் ,கோபால் சார், மற்றும் எனது படக்குழுவினர்.இந்த மூவரும் இல்லை என்றால் இந்தப் படம் எடுத்து இருக்கவே முடியாது.அவர்களுக்கு நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்துவிட்டு மீண்டும் அதே படத்தை மறுபடியும் எடுப்பது என்பது மன ரீதியாக மிகவும் அழுத்தம் தரக்கூடிய தொந்தரவு தரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும்.அப்படி இருந்த எனது நெருக்கடியான சூழலில் சித்து சார் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் நினைக்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.கடந்த காலத்தைப் பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லை.அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று வரை சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அது ஒரு பெரிய காரணம்.அதற்கு அவருக்கு மிகவும் நன்றி.


அதேபோல இரண்டாவது முறை ஆரம்பித்தபோது பழையதைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் யாருமே பேசவில்லை; கேட்கவில்லை .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் தான் அனைவரது கவனமும் இருந்தது .அதற்கு அனைவருக்கும் நன்றி.அப்படியே படத்தை முடிக்கவும் செய்தோம்.துணை நிற்பவர்கள் சரியாக இருந்தால் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் சரியாக அமையும் என்பதற்கு இந்தப் படமே ஒரு சாட்சி. அவர்களே எனது பாடம்.அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் பெரிய அளவில் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு சென்றோம்.


இந்த படத்திற்காக அனைவரும் சிரமப்பட்டோம். சிரமங்களில் நான் பெரிதாக நினைப்பது என்னவென்றால் தூக்கம் இல்லாமல் உழைப்பது என்பதைத்தான்.மூன்று மணி நேரம் கூடத் தூங்க முடியாமல் சில நேரம் உழைத்து இருக்கிறோம். அப்போது தூக்கம் இல்லாத அந்த உடல் ரீதியான பிரச்சினை எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தத் தொந்தரவிலிருந்து மீள்வது பெரும் போராட்டமாக இருந்தது.

அதிலிருந்து மீள்வதற்கு நாங்கள்  நீண்ட நாள்கள் மிகவும் சிரமப்பட்டோம்.எனது படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா என அனைவருமே நன்றாக நடித்தார்கள் .அதுமட்டுமல்லாமல் அவர்களோடு அனுபவமுள்ள பெரிய நட்சத்திரங்களும் நடித்து இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி சார் , நிழல்கள் ரவி சார் , ஜெயக்குமார் சார் போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பில் இருந்ததால் இன்று வர முடியவில்லை.


மிகவும் முக்கியமான விஷயம் இது ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படம் என்பதுதான்.டீஸர்,டிரெய்லர் எல்லாம் பார்த்து விட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் இருவருக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். அது படைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல. எங்களது மனஸ்தாபங்கள் எல்லாம் பேக் அப் சொல்வதற்குள் காணாமல் போய்விடும்.

அவர் நல்ல திறமைசாலி .அவர் பெரிய இடத்துக்கு வருவார். எனது இதயத்தில் இருந்து இதை நான் கூறுகிறேன். இந்தப் படத்தில் ரித்விகா வருவதற்கு முன்பு இந்த படத்தின் தரம் வேறு மாதிரி இருந்தது. வந்த பிறகு அது வேறு மாதிரியான உயரத்துக்குச் சென்றது. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் நான்கு பாத்திரங்களைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறேன் . பாரி,உமையாள், கனி இன்னொரு பாத்திரம் என இந்த நான்கையும் பிரதானமாக வைத்து நான் உருவாக்கி இருக்கிறேன். ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் இந்தப் படத்திற்குப் பிறகு பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரிடம் இதைக் கேட்பார்கள்.இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிலைக்கு இன்று வந்து இருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். அனைவருக்கும் மிக்க நன்றி. செப்டம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகிறது. நல்லதொரு திரையரங்க அனுபவமாக நிச்சயமாக இந்தப் படம் இருக்கும் .படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம். நன்றி'' என்றார்.


கதை நாயகன் சித்து பேசும்போது,


"இதே சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா கம்பெனி அலுவலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.இதே பிரசாத் லேபில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கிறேன். நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் .அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது.எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி ’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும் .எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது .அதுவும் காவல் துறை சம்பந்தப்பட்ட திரில்லர் கதை என்று அமைந்திருப்பது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும் .நான் கதாநாயகனாக நடிக்கும்போது அதுவும் த்ரில்லர் படத்தில் நடிப்பது பல பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் .அப்படிப்பட்ட படம் முதல் படமாக வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது நான் கண்டிப்பாக நான் செய்கிறேன் என்றேன். அவர் அப்பொழுது சொன்னார், இது முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கதை என்றெல்லாம் சொன்னார். நான் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தை எப்படி மேலே கொண்டு செல்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது .ஒரு முடிந்து போன முடிவைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு வந்திருக்கும் வாய்ப்பை எப்படி நான் பயன்படுத்திக் கொண்டு மேலே முன்னேற வேண்டும் என்பதில் தான் என் கவனமும் இருந்தது. எனவே முடிவைப் பற்றி நான் பேசவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.


அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள்.அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது.படக் குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள்.இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது. 


வருகிற 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ஆதரியுங்கள்"என்றார்.

Saturday, 12 September 2026

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

 *இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!*





*பத்து வருடங்களுக்கு பிறகு TIFF விழாவில் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றது!*


ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. படம் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டினர்.


டொராண்டோ: கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான ‘டோரதி’, 2026 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும், சர்வதேச அளவில் பாராட்டுப் பெற்ற படங்களும் இடம்பெறும் பிரபலமான ‘சென்டர்பீஸ்’ பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை, தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றுள்ளது. இதன் மூலம், சமகாலத் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் படைப்பு சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டபோது இப்படத்திற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தனர்.


டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற இப்படத்தின் முதல் காட்சியில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயினும் நிகழ்வில் பங்கேற்றனர்.


இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் நெருக்கமாக அறிந்த ஒரு இடத்திலிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் உருவான கதைதான் ‘டோரதி’. ஆனால், இப்படம் எழுப்பும் நட்பு, பாரபட்சம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த கேள்விகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கும் பொருந்தும். TIFF திரைப்பட விழாவில் இப்படம் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படுவது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை அப்படியே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை இது கொடுத்துள்ளது. மேலும், இளையராஜா சாரின் இசை இந்தப் பயணத்துக்குத் துணையாக இருப்பது இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது”.


ஜியோ ஸ்டுடியோஸ் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே பகிர்ந்து கொண்டதாவது, “’டோரதி’ திரைப்படத்தில் பேசப்படும் கதைக்களமும் அதன் வலிமையான உணர்வுகளும் மொழி தடைகளை கடந்து உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் தகுதி உடையது. நட்பு, அடையாளம் மற்றும் மனித கண்ணியம் குறித்த கதையை கார்த்திக் உருவாக்கியுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மூலம் இந்த கதையைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். TIFF திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுவது தமிழ் சினிமாவிற்கும் முக்கியமான தருணம்” என்றார்.


சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, “TIFF திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்பட்டது சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் பயணத்தில் முக்கியமான தருணம். மனிதநேயத்தை மையமாகக் கொண்ட கதைதான் ‘டோரதி’. இந்தப் படத்தில் திறமையானவர்களை கார்த்திக் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஒன்றிணைத்துள்ளது. வலிமையான இந்தியக் கதை எங்கு வேண்டுமானாலும் பார்வையாளர்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கையே எங்களை இணைத்துள்ளது. ‘டோரதி’ தனது சர்வதேசப் பயணத்தை டொராண்டோவில் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.


‘டோரதி’ திரைப்படத்திற்கான அசல் பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜா உருவாக்கியுள்ளார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அதன் இசை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய இரண்டு பாடல்களும் யூடியூபில் தலா 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. மேலும், இவ்விரு பாடல்களும் யூடியூப் இந்தியாவின் டாப் 5 டிரெண்டிங் இசை வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, இந்த இரண்டு பாடல்களும் ‘டோரதி’ படத்தின் இசை அடையாளத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.


‘டோரதி’ திரைப்படத்தின் 18 பாடல்கள் மற்றும் இசைக்கோர்வைகள் அடங்கிய முழுமையான இசைத்தொகுப்பும் சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘டோரதி கான்சர்ட்’ நிகழ்ச்சியில், இசைக்கலைஞர்கள் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து ‘டோரதி’ திரைப்படத்தின் இசையை நேரடியாக இசைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், இளையராஜாவின் இசை திரையிலிருந்து நேரடி இசை நிகழ்ச்சி அரங்கிற்கும் பயணித்தது.


குணீத் மோங்கா கபூர், TIFF திரைப்பட விழாவுடனான தனது 15 ஆண்டுகளுக்கும் மேலான உறவை தொடர்ந்து வருகிறார். அவர் தயாரித்த TIFF திரைப்பட விழாவில் இடம்பெற்ற சில முக்கியமான படங்கள் இதோ, ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ (2010), ‘பெட்லர்ஸ்’ (2012), ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் – பாகம் 1 மற்றும் பாகம் 2’ (2012), ‘தி லஞ்ச்பாக்ஸ்’ (2013), ‘மான்சூன் ஷூட்அவுட்’ (2014), ‘கில்’ (2023), ‘யெல்லோ பஸ்’ (2023) மற்றும் இப்போது ‘டோரதி’ (2026). ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம், TIFF திரைப்பட விழாவுடனான குணீத் மோங்கா கபூரின் நீண்டகால உறவு, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடனான புதிய கூட்டணியுடன் இணைகிறது. இதன் மூலம், சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் சர்வதேசத் திரைப்பட விழாப் பயணம் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து விரிவடைகிறது.


கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம், தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இப்படத்தை வழங்குகின்றன.

Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade

 Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade





Presented by Jio Studios and produced by Sikhya Entertainment, the Tamil feature film received a standing ovation at its World Premiere


TORONTO — Karthik Subbaraj’s Tamil-language feature Dorothy has made its world premiere at the Toronto International Film Festival (TIFF) 2026, screening in the prestigious Centrepiece section alongside world premieres and acclaimed international features. Presented by Jio Studios and produced by Sikhya Entertainment in association with Dhammam Films, the film marks the first Indian Tamil feature to premiere at TIFF in the past decade, bringing one of contemporary Tamil cinema’s distinctive voices to the global stage. The film received a standing ovation at its World Premiere, marking an especially warm and memorable beginning to its international journey.


The premiere took place at Toronto’s Scotiabank Theatre, with Subbaraj joined by lead actors Keerthy Suresh, Sananth and Rishikanth, alongside producers Guneet Monga Kapoor, Achin Jain. 


Karthik Subbaraj, Writer-Director, said: “Dorothy is a story that comes from a place and culture I know intimately, but its questions around friendship, prejudice and human connection are universal. To have its world premiere at TIFF is incredibly special. It gives the film an opportunity to reach audiences across the world while staying true to the story I wanted to tell. And to have Ilaiyaraaja sir’s music accompany that journey makes it even more special.”


Jyoti Deshpande, President, Jio Studios, said: “Cinema has the ability to cross languages when the emotion at its centre is universal. Dorothy is a powerful example of that. Karthik has crafted a story about friendship, identity and human dignity that can resonate far beyond its language. At Jio Studios, we are proud to bring this deeply human story to audiences, and its premiere at TIFF is a significant moment for the film and a proud one for Tamil cinema.” 


Guneet Monga Kapoor and Achin Jain, Producers, Sikhya Entertainment, said: “TIFF has been an important part of Sikhya’s journey, and bringing Dorothy here feels particularly special. At its heart, Dorothy is a deeply human story about identity, belonging and the courage to find your way back to yourself. Working with Karthik and Jio Studios has brought together different strengths and perspectives, with the shared belief that a strong Indian story can find an audience anywhere. We’re thrilled to see Dorothy begin its international journey in Toronto.”


Dorothy is also an Ilaiyaraaja musical, with the legendary composer creating the film’s original score and songs. The soundtrack has become a significant part of the film’s pre-release conversation: “Kalyana Virundhu” and “Muthumani” have each crossed 10 million views on YouTube and both have featured among the Top 5 trending music videos on YouTube India. The two songs have helped establish the film’s musical identity well ahead of its theatrical release.


The film’s 18-track OST was also presented as a live musical experience in Chennai, with musicians performing the Dorothy score continuously for around 40 minutes. The Dorothy Concert, held at Image Auditorium, was met with a strong audience response, extending Ilaiyaraaja’s music for the film from the screen into a live concert setting.

Dorothy marks Guneet Monga Kapoor extending a relationship with the festival that spans more than 15 years. Some of her TIFF credits include That Girl in Yellow Boots (2010), Peddlers (2012), Gangs of Wasseypur – Part 1 and Part 2 (2012), The Lunchbox (2013), Monsoon Shootout (2014), Kill (2023), Yellow Bus (2023) and now Dorothy (2026). With Dorothy, Monga Kapoor brings her longstanding TIFF association together with Karthik Subbaraj and Jio Studios, extending Sikhya Entertainment’s international festival journey into Tamil cinema.


Written and directed by Karthik Subbaraj, Dorothy stars Sananth, Rishikanth and Keerthy Suresh in pivotal roles. The film will release worldwide in cinemas on September 25, 2026.

Produced by Jyoti Deshpande, Guneet Monga Kapoor and Achin Jain in association with Dhammam Films, Dorothy is backed by Jio Studios and Sikhya Entertainment.

The Paradise Has A Beautiful Mother-Son Emotion, We Made This Film Wholeheartedly & Did Everything Required For It: Nani

 The Paradise Has A Beautiful Mother-Son Emotion, We Made This Film Wholeheartedly & Did Everything Required For It: Nani

 



Natural Star Nani’s much-awaited action extravaganza will be hitting the screens on September 24th. The team interacted with the media today, to clarify that they are working rigorously to release the movie on time, and there will be no further delay.

 

Sudhakar Cherukuri said, “There are all kinds of rumours doing the rounds about The Paradise. The movie is arriving on September 24th. We are very happy with the way things have shaped up.”

 

Srikanth Odela said, “The Paradise may have been delayed a little, but every update from the film has created a blast. The glimpse, teaser and songs have all received a superb response. There is a lot of excitement and curiosity among audiences about what The Paradise is all about. This is a revolutionary emotional film. It is a story about a mother and son, and also about a marginalized community. Kaloji has a line that goes, ‘We own our birth, we own our death, but our entire life belongs to the nation.’ This is the story of people who fought for their country, but when they realised they had no place in that very country, they fought back without knowing what else to do. That is the story of The Paradise.

 

Personally, I feel a film like this is better experienced without a trailer. I think the theatrical experience will be completely different that way. The film’s final cut is 2 hours and 49 minutes long.”

 

Nani said, “We are finally arriving on September 24th. We have missed the release date twice, and naturally, we had several fears. But every update from the film has received an overwhelming response. In a way, that has increased our responsibility and tension. We have developed a strong belief that this film has a destiny of its own, as if something has already been written for it.

 

Once the September 24th release date was locked, the entire team started working 24/7. Even we don’t know what we are going to do over the next 10 days. But I can say one thing: when you come to theatres with good expectations, we are going to make every effort to give you a solid adrenaline rush and a great high. We are presenting Srikanth’s vision on a grand scale. There won’t be a trailer for The Paradise. The team is working extremely hard to bring the film to theatres on time. Due to time constraints, we decided not to release a trailer.

 

Srikanth has a very strong ear for music. He knows exactly which singer is required for a particular song and what the song needs. He records a voice and sends it to Anirudh. Even I cannot imagine how it is going to sound when it finally plays in theatres. In this social media era, we tend to put boundaries on everything. Srikanth doesn’t care about any of that. He is a mad guy who believes that whatever he wants to do is the right thing, and he doesn’t worry about what others think. That is a great quality. The Paradise took more time than we initially anticipated. There were many reasons for that. We succeeded in delivering everything we wanted to say through the film, but we fell a little short when it came to time management.

 

One day, Srikanth came to me and said he was unable to manage his time properly. He even told me, ‘You know Rajamouli, right? I’ll join him as an assistant director and learn how to manage things.’ The fact that he recognised his weakness and was willing to learn made me feel extremely proud of him. You need a stubborn person to make a film like The Paradise. Otherwise, a film like this would never get made. If stubbornness has a good purpose behind it, there is nothing wrong with it.

 

Making the Telangana setting authentic was the biggest challenge in both Dasara and The Paradise. Srikanth and his team took great care in every aspect. More than the dances, executing the complicated action sequences with the dreadlocks was extremely challenging.

 

Along with me, Sampoo and many others from our gang suffered injuries. You will see our hardships on screen. Everyone gave their all, and you can literally see their blood on the screen.

 

Srikanth Odela’s new favourite is Mohan Babu. There were many rumours about him. But once you travel with him, you will fall in love with him. He has a very childlike heart.

 

After the teaser release, I heard the feedback. There is a scene where I scream at the top of my voice. When you watch it as part of the film’s flow, you will feel the emotion behind it. We made this film wholeheartedly and did everything that was necessary for it. The Paradise is the most tiring film of my career, both physically and mentally.

 

After watching the teaser, many people are assuming that The Paradise is an extremely violent film. But The Paradise is actually a beautiful mother-and-son story. More than the violence, you will feel the emotion behind that violence.”

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்' – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்' – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி*




*செப்டம்பர் 24-இல் பிரம்மாண்ட வெளியீடு! டிரெய்லர் இன்றி வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'*



நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி பாரடைஸ்' திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. எவ்வித தாமதமுமின்றி குறித்த தேதியில் படம் திரைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.


தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசும் போது: "'தி பாரடைஸ்' படம் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதியன்று வெளியாகிறது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.


இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பேசும் போது, "சிறிய தாமதம் ஏற்பட்டிருந்தாலும், படத்தின் கிளிம்ப்ஸ், டீசர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இது ஒரு புரட்சிகரமான தாய் - மகன் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட படம். அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும் பேசுகிறது. 'பிறப்பும் இறப்பும் நமக்கானது, ஆனால் வாழ்வு நாட்டுக்கானது' என்ற கலோஜியின் வரிகளுக்கு ஏற்ப, தங்கள் உரிமைக்காகப் போராடும் மனிதர்களின் கதையே இது. படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள். ரசிகர்கள் இந்த உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நேரடியாகத் திரையரங்கில் பெற வேண்டும் என்பதற்காக டிரெய்லர் எதுவுமின்றி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்," என்றார்.


நடிகர் நானி பேசும் போது: "இரண்டு முறை வெளியீட்டு தேதி மாறியதால் சிறு தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்கள் பொறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படம் தன் பாதையைத் தானே அமைத்துக் கொண்டது போன்ற உணர்வைத் தருகிறது. ஸ்ரீகாந்தின் பிரம்மாண்ட பார்வையைத் திரையில் கொண்டு வந்துள்ளோம். கால அவகாசம் குறைவாக இருப்பதால் டிரெய்லர் வெளியிடவில்லை. இது என் திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான, சவாலான படமாக அமைந்தது. சண்டைக் காட்சிகளின் போது எனக்கும் சக நடிகர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன; எங்கள் உழைப்பையும் ரத்தத்தையும் திரையில் காண்பீர்கள்.


டீசரைப் பார்த்துவிட்டு இது வெறும் வன்முறைப் படம் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், 'தி பாரடைஸ்' ஒரு அழகான தாய்-மகன் கதையையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அழுத்தமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டது. பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை இப்படம் நிச்சயமாக வழங்கும்," என்றார்.


அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் மோகன் பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைத்துப் பணிகளையும் முடித்து, செப்டம்பர் 24-இல் தியேட்டர்களில் அதிரடி ஆக்‌ஷன் விருந்து படைக்க படக்குழுவினர் தயாராக உள்ளனர்.


DV4 / RV7 BIG ANNOUNCEMENT: DHRUV VIKRAM AND RAMESH VARMA COME TOGETHER FOR A HIGH-INTENSITY TAMIL–TELUGU BILINGUAL ACTION FILM

 DV4 / RV7 BIG ANNOUNCEMENT: DHRUV VIKRAM AND RAMESH VARMA COME TOGETHER FOR A HIGH-INTENSITY TAMIL–TELUGU BILINGUAL ACTION FILM






PEN JAYANTILAL PRESENTS


PEN STUDIOS × SRI NEELADRI PRODUCTIONS × RV STUDIOS

Dhruv Vikram’s next release is set to be a high-intensity Tamil–Telugu bilingual action film, bringing together the dynamic actor and acclaimed filmmaker Ramesh Varma in an exciting new combination.


Presented by Pen Jayanthilal and produced by Koneru Satyanarayana & Sireesha Kurapati under the banners of Pen Studios, Sri Neeladri Productions and RV Studios, the film promises to be an intense and ambitious action entertainer.


Packed with high-octane action, emotion, drama and powerful storytelling, the film is being mounted on a large scale with a strong emphasis on character and cinematic impact.


DHRUV VIKRAM’S NEXT RELEASE


This film marks Dhruv Vikram’s next release, bringing the actor to audiences in a powerful new action avatar.


The project brings together Dhruv Vikram’s screen presence and Ramesh Varma’s distinctive filmmaking vision, creating a fresh and intense cinematic experience.


OFFICIAL ANNOUNCEMENT


The much-awaited project is now officially announced, following a traditional pooja ceremony that marked the beginning of its journey.


With pre-production progressing rapidly, the team is gearing up for an extensive shoot scheduled to commence in October.


SEPTEMBER 23 — THE BIG REVEAL


The most important date in the film’s journey is September 23 — Dhruv Vikram’s birthday.


On this special occasion, the makers will unveil the official title, complete cast and entire crew of the film.


The birthday announcement will introduce audiences to the title, characters, creative team and cinematic world of this high-intensity action saga.


PRODUCTION UNDERWAY


With the principal shoot scheduled to begin in October, the film is currently in active pre-production.


The makers are working towards creating a visually powerful and intense action experience, combining scale, emotion, drama and compelling storytelling for audiences across Tamil and Telugu.


KEY CREDITS


PEN JAYANTILAL PRESENTS


A PEN STUDIOS × SRI NEELADRI PRODUCTIONS × RV STUDIOS PRODUCTION


Produced by

KONERU SATYANARAYANA & SIREESHA KURAPATI


Starring

DHRUV VIKRAM


Directed by

RAMESH VARMA


A HIGH-INTENSITY TAMIL–TELUGU BILINGUAL ACTION FILM


THE JOURNEY BEGINS


SEPTEMBER 23 — DHRUV VIKRAM’S BIRTHDAY


TITLE • COMPLETE CAST • ENTIRE CREW


OCTOBER


THE CAMERAS ROLL


DHRUV VIKRAM × RAMESH VARMA


DV4 × RV7


ONE HERO.


ONE VISION.


ONE EXPLOSIVE ACTION SAGA.

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்






துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர்.


பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.


ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட ஆக்‌ஷன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கிடையே, துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் முழுமையான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் துருவ் விக்ரமின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது.


அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

 *‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!*



காதலின் வலியையும் காதலியின் பெருமையையும் பேசும் மனதை வருடும் மெலடி – “கல்லா நிக்கிறியே”!


முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார். பாடலை சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.


முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. காதலின் வலி, காதலியின் பெருமை, பிரிவின் ஏக்கம் என உணர்வுகளை தாங்கி நிற்கும் இப்பாடல், காதல் உலகிற்குள் கேட்பவர்களை மெல்ல இழுத்துச் செல்கிறது.


கார்த்திக் நேத்தாவின் வரிகள் காதலின் ஆழமான உணர்வுகளை அழகாகக் கடத்த, கோவிந்த் வஸந்தாவின் இசை அந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக சித் ஸ்ரீராமின் உணர்வுப்பூர்வமான குரல், பாடலின் ஒவ்வொரு வரியையும் மனதுக்குள் ஊடுருவச் செய்கிறது. காதலின் வலியை உணர்ந்தவர்களின் மனதில் இப்பாடல் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


பாடலுடன் வெளியாகியுள்ள விஷுவல்களும் கூடுதல் கவனம் ஈர்க்கின்றன. இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் இடம் பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ படத்தின் அழகான காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் உணர்வுகளோடு படத்தின் விஷுவல்களும் ஒன்றிணைவதால், “கல்லா நிக்கிறியே” பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.


பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம்  வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் "ஆகாயம் " தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்

 அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம்     "ஆகாயம் " தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.


































ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் " ஆகாயம் " படம் குறித்து இயக்குனர்

தினந்தோறும் நாகராஜ்.


டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படத்திற்கு "ஆகாயம் " என்று பெயரிட்டுள்ளனர்.


"தினந்தோறும்" திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "மின்னலே", "காக்க காக்க"  போன்ற வெற்றிப் படங்கள் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.


அவர் தற்போது "ஆகாயம்" திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.


"கன்னி மாடம்" திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார்.


மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், "மெய்யழகன்" படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, "மகாராஜா" திரைப்படத்தில் நடித்ததற்காக  தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


"சென்னை டு சிங்கப்பூர்", "காதல் கண்டிஷன்ஸ் அப்ளை" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


"நீர்ப்பறவை", "அயோத்தி" உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க,  


பாடல்களை "நூறு சாமிகள் இருந்தாலும்" என்ற பிரபலமான அம்மா பாடலை எழுதிய ஏக்நாத், மற்றும் "காற்றோடு பட்டம் போல", "நீலோத்தி" உள்ளிட்ட ஹிட் பாடல்களை எழுதிய சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.


"ஒரு நொடி", "ஜென்ம நட்சத்திரம்" ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா, இப்படத்தின் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.


சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார்.


நடன அமைப்பாளராக மணிகண்டன் பணியாற்றுகிறார்.


மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்


தயாரிப்பு மேற்பார்வை : பிரசாந்த்


தயாரிப்பு : ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் - தினந்தோறும் நாகராஜ்.


படம் பற்றி இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் பகிர்ந்தவை...


"கதையாகச் சொன்னால் 'ஆகாயம்' குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன்.  தவிர இதில் அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து வந்திருக்கின்றன.


படங்கள் அனுபவங்களைத் தந்து, வாழ்க்கைக்குள் நுழைந்து நல் உணர்வுகளைத் தர வேண்டும். அப்படி ஒரு சினிமா செய்வதுதான் நமக்கு கௌரவம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்.


 'ஆகாயம்' அப்படியான படம். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் என்றார் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.


விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.