Featured post

விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும், அதைப் பெறாதவர்கள் அல்லது தங்களுக்குப் பிடித்தவர்கள் பட்டியலில்

விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும், அதைப் பெறாதவர்கள் அல்லது தங்களுக்குப் பிடித்தவர்கள் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவர்கள்தான் அதி...

Monday, 2 February 2026

விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும், அதைப் பெறாதவர்கள் அல்லது தங்களுக்குப் பிடித்தவர்கள் பட்டியலில்

விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும், அதைப் பெறாதவர்கள் அல்லது தங்களுக்குப் பிடித்தவர்கள் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவர்கள்தான் அதிகம் விமர்சிப்பார்கள். இது புதிதல்ல.



இந்த முறை தமிழக அரசின் சினிமா விருதுகள் தேர்வு நேர்மையானது என்று நான் நம்புகிறேன். இந்த விருதுகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு, நான் இயக்கிய 'சேசிங்' படத்திற்கு சிறந்த சண்டைக் காட்சிகள் பிரிவில் விருது கிடைத்திருக்கிறது. இந்தப் படம் YouTube-இல் இருக்கிறது. பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள் - இந்த விருது தகுதியானதா இல்லையா என்று!

இயக்குநர் - வீரக்குமார் 

#TNGovtFilmAwards #Chasing

SureshSugu - DharmaDurai Pro

He Is Pregnant” – A New-Fangled Web Series Set to Enthrall Audiences

 *“He Is Pregnant” – A New-Fangled Web Series Set to Enthrall Audiences*






*Vijay TV fame TSK plays a content-driven protagonist in the upcoming web series He Is Pregnant*


Movie Scroll SD. Somu presents He Is Pregnant, a web series directed by Shankar Nagadevan, featuring Vijay TV fame TSK in the lead role.


Ranjana essays the female lead, while Deepa Shankar will be seen in a pivotal role. The supporting cast includes Chandru, Vasanth, Cyril, Velu, and Pavi, among others, playing prominent characters. Vishnumani Vadivu handles the cinematography, and Vasanth Tharun is the music composer. Director Shankar Nagadevan is also overseeing the editing works of the series.


The teaser of the web series, unveiled recently, has garnered a phenomenal response from audiences.


Director Shankar Nagadevan’s directorial craftsmanship stems from his experience in short filmmaking. His short film Aval Peyar Item was officially selected for screening at various international film festivals and also gained massive viewership on YouTube. He now embarks on a new journey with the web series titled He Is Pregnant.


Shedding light on the series, director Shankar Nagadevan says, “Men usually do not experience or truly understand the excruciating physical and mental pain of pregnancy and childbirth. So, what happens when a man gets pregnant is the core idea of this web series. I got this idea after encountering an incident at a friend’s home. The series deals with God designing a man’s life and fate with a wrong plan, which ignites chaotic moments in his life.


After completing the script, we approached Vijay TV fame Pugazh, and he was impressed. We have portrayed the pregnancy portions with seriousness, while the rest of the series is treated humorously.


There are many societal and political influences surrounding pregnancy, and we wanted to build a story around them. However, the series does not mock or mimic women, nor does it objectify them.


Initially, we planned to make this a two-hour full-length feature film, but later shaped it into a five-episode web series.”


The first episode of He Is Pregnant will stream on the Movie Scroll YouTube channel from February 14, 2026, marking the special occasion of Valentine’s Day, followed by weekly releases of subsequent episodes.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்

 *வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்*






*விஜய் டிவி புகழ் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்*


(Movie Scroll)  மூவி ஸ்க்ரோல் சார்பில்  SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.


ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார்.


சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது..


இயக்குநர் சங்கர் நாகதேவன் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் இயக்கிய ‘அவள் பெயர் ஐட்டம்; என்கிற குறும்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. 

யூ ட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப் தொடரை இயக்கியுள்ளார்.


இந்த வெப்சீரிஸ் குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “கர்ப்பம் தரித்தல் மற்றும் அதன் வலி குறித்து ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்கிற விதமாக இந்த கதை உருவாகியுள்ளது. நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பார்த்தபோது தோன்றிய யோசனையில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். கடவுள் ஒரு ஆணை படைக்கும்போது அவன் தலையெழுத்தை தப்பாக எழுதிவிட்டான் என்கிற கோணத்தில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறோம்.


இந்தக் கதையை உருவாக்கிவிட்டு விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கேவிடம் சொன்னோம்.. அவருக்கும்  கதை பிடித்திருந்தது.. கதையை காமெடியாக உருவாக்காமல் கொஞ்சம் சீரியஸாக உருவாக்கினோம்.. கர்ப்பம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே சீரியஸாக இருக்குமே தவிர மற்றபடி இது முழுக்க முழுக்க நகைச்சுவை கதை தான் 


கர்ப்பமாவதைச் சுற்றி ஒரு அரசியல் இருக்கிறது. அதை வைத்து படம் பண்ணலாம் என்கிற முயற்சி தான். இது. மற்றபடி பெண்களை கிண்டலடித்து தவறாக சித்தரிப்பது அல்லது கர்ப்பமாவதை வைத்து காமெடி செய்வது போன்று இல்லாமல் விஷயங்களை சீரியசாகவே பேசி இருக்கிறோம்..


இரண்டு மணி நேர படமாக உருவாக்கலாம் என நினைத்து சில காரணங்களால் இதை ஐந்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஆக உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்.. 


மூவி ஸ்க்ரோல் (Movie Scroll) யூடியூப் தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் பிப்ரவரி-14 காதலர் தினத்தன்று இதன் முதல் எபிசோடை வெளியிடத்  திட்டமிட்டு இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வாராவாரம் ஒரு எபிசோட் வெளியாக இருக்கிறது.

சென்னையில் ஜென் இஷின்ரியு கராத்தே வரலாற்றுச் சாதனை நிகழ்வு

 *“சென்னையில் ஜென் இஷின்ரியு கராத்தே வரலாற்றுச் சாதனை நிகழ்வு”*







சென்னை, பிப்ரவரி 1, 2026, புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் கேரிபாலாவின் வழிகாட்டுதலின் கீழ் சென்செய்ஸ் எஸ். ரோஷன், பி. பிரணவ், பி. பத்மநாபன் தீரஜ் ஆகியோரால் மெய் சிலிர்க்கும் கராத்தே சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வு ஒழுக்கமான கலையான, கராத்தே மற்றும் குருவின் மீதான மிகுந்த  மரியாதை, நன்றியுணர்வு மற்றும் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் நோக்கதுடன் மறைந்த மாபெரும் குருவான ஷிஹான் ஹுசைனி - ஹு (இந்திய இஷின்ரியு கராத்தேயின் தந்தை) அவர்களின் நினைவாக மற்றும் அவரை பெருமை படுத்தும் விதமாக நடத்தப்பட்டது.


எங்கள் ஜென் இஷின்ரியு கராத்தே மாணவர்கள் - 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சென்செய் பி. பத்மநாபன் தீரஜின் மார்பின் மீது 101 பாராங்கற்கள் உடைக்கப்பட்டன., சென்செய்ஸ் பி. பிரணவ் மற்றும் எஸ். ரோஷன் ஆகியோர் தலா 101  தொகுப்பு ( sets) நெருப்பு ஓடுகளை உடைத்து சாதனை படைத்துள்ளனர்.


சென்னை, மயிலாப்பூரில் உள்ள மான்ட்ஃபோர்ட் அரங்கில் நடைபெற்ற இந்த சாதனை, ஹன்ஷி கேரிபாலா என பிரபலமாக அறியப்படும் புகழ்பெற்ற மாஸ்டர் டி. பாலமுருகனின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை நிகழ்வில் நீதிபதி திருமதி வி. செல்லம்மாள், பி.ஏ.பி.எல்., எல்.எல்.எம் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


இந்த நிகழ்வு தற்காப்புக் கலைகளின் உண்மையான கொண்டாட்டமாக அமைந்தது, எதிர்காலத் தலைவர்களையும் சமூகத்தையும் வயதைத் தாண்டிப் பார்க்கவும், அவர்களின் திறனை ஏற்றுக்கொள்ளவும் தூண்டியது.


1999-ல் ஜென் இஷின்ரியு கராத்தேயை நிறுவி, 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த மாஸ்டர் கேரிபாலாவின் மாணவர்கள், மாநில & தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளனர்.

டார்க் ஜெயின்ட்" திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு நேற்று பரணி ஸ்டுடியோவில்

 "டார்க் ஜெயின்ட்" திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு நேற்று பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், இயக்குனர் பாக்யராஜ், லிவிங்ஸ்டன், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா, அயலி மதன், விஜய் டிவி அமுதவாணன், ஆதர்ஷ், ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.










இத்திரைப்படத்தை இயக்குனர் KS கிஷன் இயக்குகிறார். விக்னேஷ் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு சங்கீத் மணிகோபால் கவனிக்கிறார். 


இப்படத்தினை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் எனும்  பேனரில்

தயாரிக்கிறார்.


இப்படத்தின் முதல்கட்ட  படப்பிடிப்பு கோபிசெட்டி பாளையத்திலும், சென்னையிலும் முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளது. இது ஒரு வித்யாசமான ஹாரர் திரில்லர் படமாக உருவாகி உள்ளது.


படப்பிடிப்பு நிறைவடைந்ததும் முதல் பார்வை, இசை வெளியீடு, அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் படம் வெளியீடு என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு

 *தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!*









*பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ – ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ!!*


திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ டிரோன் நிகழ்ச்சி!!


தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன்,  அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.


Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பலமுனைகளில் பல புதுமையான விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாகவே சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ நடைபெற்றது.


தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய அளவில், திரைப்பட விளம்பரத்திற்காக ட்ரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. வானில் மின்னும் எழுத்துகளாக ‘With Love’ தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது.


இந்த தனித்துவமான நிகழ்வில், ‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த ட்ரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.


 அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை  இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.


 “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Sathyaraj-Manivannan's 'Amaidhipadai' to re-release in 4K technology with Dolby sound amidst the bustling political climate of Tamil Nadu

 *Sathyaraj-Manivannan's 'Amaidhipadai' to re-release in 4K technology with Dolby sound amidst the bustling political climate of Tamil Nadu*



*Sparrow Cinemas' Karthick Venkatesan is releasing 'Amaidhipadai' in over 500 theatres across Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Kerala and Karnataka*


Sparrow Cinemas' Karthick Venkatesan, who achieved great success by re-releasing Thalapathy Vijay's 'Mersal' on his birthday and Puratchi Kalaignar Vijayakanth's 'Captain Prabhakaran' on his birth anniversary using state-of-the-art technology, is now re-releasing the super hit film 'Amaidhipadai', a successful collaboration between Puratchi Thamizhan Sathyaraj and Manivannan.


With the political arena heating up in Tamil Nadu ahead of the Assembly elections, 'Amaidhipadai', a film released 32 years ago but still relevant to contemporary politics, will be re-released very soon in 4K technology with Dolby sound under the Sparrow Cinemas banner by Karthick Venkatesan.


Since the story is relevant to other parts of India as well, Karthick Venkatesan plans to release 'Amaidhipadai' on a grand scale in over 500 theatres across five states: Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Kerala, and Karnataka. 


Speaking about this, he said, "Just as 'Baasha' and 'Padayappa' are landmark films for Superstar Rajinikanth, 'Ghilli' for Thalapathy Vijay, and 'Mankatha' for Ajith Kumar, 'Amaidhipadai' is a similar milestone film for Puratchi Tamizhan Sathyaraj. This film, directed by the politically astute Manivannan, is relevant for all times. 'Amaidhipadai' was made in such a way that even the Gen Z will enjoy watching it. The scenes and dialogues in it perfectly match today's political events. Therefore, we are happy to release this film with state-of-the-art 4K technology and Dolby sound, just like the new films being made now." 


'Amaidhipadai', which features Sathyaraj, Manivannan, Sujatha, Kasthuri, and Ranjitha in lead roles, had music composed by Maestro Ilaiyaraaja. 'Amaidhipadai', which was released during Pongal in 1994 and became a grand success, will soon be re-released by Karthick Venkatesh of Sparrow Cinemas.


***

பரப்பரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் 4கே தொழில்நுட்பத்தில்

*பரப்பரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகிறது சத்யராஜ்‍-மணிவண்ணனின் 'அமைதிப்படை'*



*ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் 'அமைதிப்படை' படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்*


தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும், புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும் அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றி கண்ட ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன், புரட்சி தமிழன் சத்யராஜ்‍-மணிவண்ணன் வெற்றிக் கூட்டணியின் சூப்பர் ஹிட் 'அமைதிப்படை' படத்தை மீண்டும் வெளியிடுகிறார். 


சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இக்கால அரசியலுக்கும் பொருந்தும் வகையில் 32 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான 'அமைதிப்படை' திரைப்படத்தை 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் ஸ்பேரோ சினிமாஸ் பேனரில் கார்த்திக் வெங்கடேசன் வெகு விரைவில் வெளியிடவுள்ளார்.


இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இக்கதை பொருந்தும் என்பதால் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமைதிப்படை' படத்தை கார்த்திக் வெங்கடேசன் பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.


இது குறித்து பேசிய அவர், "சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி 'பாட்ஷா' மற்றும் 'படையப்பா' படங்களோ, தளபதி விஜய்க்கு எப்படி 'கில்லி'யோ, அஜித் குமாருக்கு எப்படி 'மங்காத்தா' திரைப்படமோ, ‍புரட்சி தமிழன் சத்யராஜுக்கு 'அமைதிப்படை' அப்படி ஒரு மைல்கல் படம். அரசியல் ஞானியான மணிவண்ணன் இயக்கியுள்ள இப்படம் எக்காலத்துக்கும் பொருந்தும். ஜென் ஜி (Gen Z) தலைமுறையினரும் ரசித்து பார்க்கும் வகையில் 'அமைதிப்படை' அமைந்துள்ளது. அதில் வரும் காட்சிகளும் வசனங்களும் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும் அப்படியே ஒத்துப்போகும் வகையில் உள்ளன‌. எனவே இப்படத்தை இப்போது எடுக்கப்படும் புது படங்கள் போன்று அதிநவீன 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சி," என்றார்.


சத்யராஜ், மணிவண்ணன், சுஜாதா, கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'அமைதிப்படை' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். கடந்த 1994ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற 'அமைதிப்படை' வெகு விரைவில் ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசனால் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. 


**** 


*Sathyaraj-Manivannan's 'Amaidhipadai' to re-release in 4K technology with Dolby sound amidst the bustling political climate of Tamil Nadu*


*Sparrow Cinemas' Karthick Venkatesan is releasing 'Amaidhipadai' in over 500 theatres across Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Kerala and Karnataka*


Sparrow Cinemas' Karthick Venkatesan, who achieved great success by re-releasing Thalapathy Vijay's 'Mersal' on his birthday and Puratchi Kalaignar Vijayakanth's 'Captain Prabhakaran' on his birth anniversary using state-of-the-art technology, is now re-releasing the super hit film 'Amaidhipadai', a successful collaboration between Puratchi Thamizhan Sathyaraj and Manivannan.


With the political arena heating up in Tamil Nadu ahead of the Assembly elections, 'Amaidhipadai', a film released 32 years ago but still relevant to contemporary politics, will be re-released very soon in 4K technology with Dolby sound under the Sparrow Cinemas banner by Karthick Venkatesan.


Since the story is relevant to other parts of India as well, Karthick Venkatesan plans to release 'Amaidhipadai' on a grand scale in over 500 theatres across five states: Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Kerala, and Karnataka. 


Speaking about this, he said, "Just as 'Baasha' and 'Padayappa' are landmark films for Superstar Rajinikanth, 'Ghilli' for Thalapathy Vijay, and 'Mankatha' for Ajith Kumar, 'Amaidhipadai' is a similar milestone film for Puratchi Tamizhan Sathyaraj. This film, directed by the politically astute Manivannan, is relevant for all times. 'Amaidhipadai' was made in such a way that even the Gen Z will enjoy watching it. The scenes and dialogues in it perfectly match today's political events. Therefore, we are happy to release this film with state-of-the-art 4K technology and Dolby sound, just like the new films being made now." 


'Amaidhipadai', which features Sathyaraj, Manivannan, Sujatha, Kasthuri, and Ranjitha in lead roles, had music composed by Maestro Ilaiyaraaja. 'Amaidhipadai', which was released during Pongal in 1994 and became a grand success, will soon be re-released by Karthick Venkatesh of Sparrow Cinemas.


***

Sunday, 1 February 2026

வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

 *வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*



Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது 



இந்நிகழ்வினில்.., 


உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது..,  


இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


எடிட்டர் சுரேஷ் பேசியதாவது..,


வித் லவ் படத்தில் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது மதன், வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. படம் அருமையாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி


ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா பேசியதாவது…,  


இப்படத்தின் கதையை மிக அழகாக ஸொன மதனுக்கு நன்றி. கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை. திரையிலும் மிக அழகாக வந்துள்ளது. தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மகேஷ் இருவருக்கும் நன்றிகள். அபிஷந்த், அனஸ்வரா, மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி. படத்தை எடுக்கும் போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


நடிகர் ஹரீஷ் பேசியதாவது…,  


எனக்கு மதன் ரொம்ப நாளா தெரியும். அபிஷந்தும் நானும் முன்னாடியே ஒன்றாக வேலை செய்துள்ளோம்.  மதன் எனக்கு கால் பண்ணி இந்த கதை சொல்லிட்டு, *“அபிஷந்த் இதில் நடிக்கிறார்”*னு சொன்னதுமே…எனக்கு சொல்ல வார்த்தையே கிடைக்கல. ரொம்ப சந்தோஷமா இருந்தது. மதன் எனக்கு கொடுத்த ரோல் உண்மையிலேயே சூப்பராக  இருந்தது. இந்த படத்தில் நான் நடித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படக்குழுவிற்கும், மதனுக்கு, மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேம் – எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க எங்களுக்கு கொடுத்த சப்போர்ட்  எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. அனைவருக்கும் நன்றி. 



நடிகர் சச்சின் பேசியதாவது..


ஹரி சொன்ன மாதிரி, இந்த படம் ஒரு குடும்ப படம்  மாதிரி தான். ஷூட்டிங்க்கு போற மாதிரி இல்லாம, தினமும் காலைல சுற்றுலாவுக்கு போற மாதிரி ஃபீல் இருந்தது. மதன் உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே வேலை செய்வார்.மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேடம்  எல்லா சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய ஆதரவாக இருந்ததற்கு நன்றி.  ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் கொண்டாடியதை,  திரையரங்கில் நீங்களும் கொண்டாடுவீர்கள் எண நம்புகிறேன். என் உடன் நடித்த நடிகர்கள், பிரியா உட்பட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.  இந்த படத்தை பார்க்கும்போது ஒரு பாஸிடிவ் எனர்ஜி  உங்களுக்கும் வந்து சேரும். நன்றி



நடிகை காவ்யா பேசியதாவது..,


இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள், மிக முக்கியமான தருணம். இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி.  இந்த வாய்ப்பை வழங்கிய மதன், தயாரிப்பாளர்கள் மகேஷ் அண்ணா,  சௌந்தர்யா மேடம் ஆகியோருக்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த அபிஷந்த், அனஸ்வரா, சச்சின், ஹரிஅனைவருக்கும் என் நன்றிகள். கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.



பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது


மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சௌந்தர்யா மேடம் பாடல் எல்லாம் நன்றாக வந்துள்ளது என சொன்னார்கள். நன்றி. அபி முதன் முதலில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்கதை சொன்ன போதே வியந்தேன் அவர் சீக்கிரமே ஹீரோவாக மாறுவார் என நினைத்தேன் ஆனல் அடுத்த படத்திலேயே ஆகிவிட்டார். மதனை டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவர் ரசனையும் என் ரசனையும் ஒன்றாக இருக்கும். இப்படத்தில் உமா தேவி ஒரு பாடல் எழுதியுள்ளார் அதுவும் நன்றாக வந்திருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் எனக்கு ஷான் ரோல்டன் இசையில் அற்புதமான பாடல்கள் அமைந்துள்ளது அவருடன் மீண்டும் மீண்டும் வேலை பார்க்க ஆசைப்படுகிறேன். அனஸ்வரா படம் பார்க்கும் எல்லோரும் எனக்கும் இப்படி பெண் கிடைத்தாள் எப்படி இருக்கும் என நினைப்பார்கள். அற்புதமாக நடித்திருக்கிறீர்கள். இப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி. 



இயக்குநர் தேசிங் பெரியசாமி  பேசியதாவது..,  


சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அப்போது இவர் இப்படியொரு திறமையான, முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை”  இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார். சௌந்தர்யா மேடம் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டுமென, ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்”. இயக்குநர் மதன் அவர்களின் முதல் படம்  போலவே தெரியவில்லை. மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அபிஷந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார். அனஸ்வரா ராஜன்  மிக அருமையாக நடித்துள்ளார் . ஷான் ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 



இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,  


வித் லவ் ஒரு பக்காவன ஹிட் திரைப்படம். அபிஷந்த் அனஸ்வரா ஜோடி, மிகவும் க்யூட்டாக இருக்கிறது. காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தப் படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது..,


படம் பார்த்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது. சௌந்தர்யா மேடம் பெரிய ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்த புது டீமை நம்பி தயாரித்துள்ளார்.   தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் என்னிடம் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் அவரிடம், “படம் அருமையாக இருக்கிறது; பணம் மழையாகப் பொழியப் போகிறது” என்று சொன்னேன். அதை கேட்ட உடனே தயாரிப்பாளர் கனவு காண ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் மதன் மிகவும் நம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலான படமாக இது இருக்கும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள். 



தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,


ஒரு உண்மையான சினிமா ரசிகனுக்கு, படம் மூலம் கிடைக்கும் பணத்தை விட, ஒரு நல்ல படத்தை பார்த்த பிறகு மனதில் உருவாகும் திருப்திதான் பெரியது. அந்த படத்தை பார்த்து, அதை மனதில் அசைபோட்டு யோசிக்கும் ஒரு நிறைவு கிடைக்கும். அந்த உணர்வை நான் சிறை படத்தை பார்த்த பிறகு அனுபவித்தேன். அதே உணர்வு வித் லவ் படத்தை பார்த்த பிறகும் மீண்டும் கிடைத்தது. தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். மகேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறும்போதுதான், மேலும் மேலும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே, இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். தயாரிப்பாளர் சௌந்தர்யா மேடமுக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 


நடிகர் மணிகண்டன் பேசியதாவது..,


நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்ன சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங்—எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டை கெடுக்காமல் மிக அழகாக இணைந்திருந்தது இந்தப் படத்தோட பெரிய பலம். அபிஷந்த் நடிப்பு , அனஸ்வராவின் நடிப்பு, ஜாஃபர் பண்ணிய கேரக்டர், அனிஷா ரோல்—எல்லாமே ரொம்ப பிரமாதம். குறிப்பா ஒரு சீன், இரண்டு நாள் கழிச்சும் மனசை விட்டு போக வில்லை. இயக்குநர் மதன், மோகன் ராஜ் ஐயா, ஷான் ஐயா, புரொட்யூசர்ஸ்—எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிகள் தொடர்ந்து வரட்டும் வரணும். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.



இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,


இந்தப் படத்தில் பணியாற்றிய ஒருவராகச் சொல்கிறேன், இந்த படம் பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் நெருக்கமானது. டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் கதையை முதலில் அபிஷன் சொல்ல வந்த போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தார். ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும், அவர் ஒரு புதிய ஆளாக மாறிவிட்டார். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார். கண்டிப்பாக ஒரு நடிகராக அவர் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார். ஒரு பெண் கதாபாத்திரத்திற்காக நான் விசில் அடிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அனஸ்வராவின் நடிப்பு என்னை அவரின் ரசிகனாக மாற்றிவிட்டது. எனக்கு ரொம்-காம் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இவ்வளவு ஆழமான விஷயத்தை பேசிக்கொண்டே, அதே நேரத்தில் லேசான, ரசிக்கத்தக்க எண்டர்டெய்னராக உருவான ஒரு ரோம்-காம் படமாக இப்படம்  இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் மிக அருமையாக வந்துள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், ரஜினி சார்க்கு மகளாக  இருப்பது அத்தனை எளிதல்ல. அவருக்கு எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு உண்மையான நண்பர் அவர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.


இயக்குநர் மதன் பேசியதாவது..,


இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற முழு உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி  படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார். நான் அவரிடம் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி   படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. .ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், ‘முதலில் மதனுக்கு  ஓகேவா  கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


நடிகை அனஸ்வரா ராஜன் பேசியதாவது..,  


“என் முழு குழுவிற்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மதன் என்னிடம் கதை சொல்ல வரும் போது, ஒரு காட்சியை படமாக்கி காட்டினார் அது எனக்கு மிகவும் பிடித்தது உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். காவ்யா உங்களை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மனதார காதலிப்பார்கள்.இந்த குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது. இந்த சினிமா துறையும், இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கக் காரணமாக இருந்தது இந்த அனுபவம் தான். சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரிய அக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.


மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர். அதே சமயம், அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர், எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. மோனிஷா, சத்யா  இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம், திரைக்கு வெளியே  நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்பு தான். மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. வித் லவ் பிப்ரவரி 6 ஆம் தேதி வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 



தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் பேசியதாவது..,  


“8 மாதங்களுக்கு பிறகு மீடியாவை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதை பிப்ரவரி 6-ஆம் தேதி மக்களிடம் கொண்டு செல்கிறோம். மக்கள் இந்தப் படத்தை ஆதரித்து, பாதுகாப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அபிஷந்த் எதிர்காலத்தில் ஒரு மிகப் பெரிய இயக்குநராக உருவெடுப்பார். அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். அவர் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். சௌந்தர்யா அக்காவின் பெயருக்கு பக்கத்தில் என் பெயர் வருவதையே நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நினைக்கிறேன். வித் லவ் படத்திற்கு முன் நீங்கள் பார்த்த சௌந்தர்யா அக்கா, இந்தப் படத்திற்கு பிறகு நீங்கள் பார்க்கும் சௌந்தர்யா அக்காவிலிருந்து வேறுபட்டவராக இருப்பார்” என்றார்.


அபிஷந்திற்குள் இருந்த ஒரு insecurity-யை மாற்றியதற்காக ரஜினிகாந்த் சாருக்கு என் நன்றிகள்.இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குநர்களுக்கும், இயக்கத்தில் வாய்ப்புகள் கிடைக்கும்படி நாம் ஏதாவது செய்ய வேண்டும்” என்று சௌந்தர்யா அக்காவிடம் கேட்டுக் கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



சௌந்தர்யா ரஜினிகாந்த்  பேசியதாவது..,  


நான் உண்மையிலேயே மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். கோவா படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளர் என்ற பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதற்கும் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.சிபி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. #Thalaivar173 ஒரு மிகப் பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. அந்தப் படம் டெட்லியாக இருக்கும். மதன் எதிர்காலத்தில் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுப்பார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். அபிஷந்த் உள்ளே ஒரு இயக்குநர் இருந்தாலும், இந்த படம் 100 சதவீதம் மதனின் படம் தான். மதன் மிக இனிமையானவர், அந்தக் கணத்தில் வாழத் தெரிந்தவர்.  படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



நடிகர் அபிஷந்த் ஜீவிந்த் பேசியதாவது.., 


“என் முதல் நன்றிகள் அனைத்தும் ரஜினிகாந்த் சாருக்கே. நான் நடிப்பை தொடரலாமா என்ற பல சந்தேகங்கள் எனக்குள் இருந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர், ‘நீ நடி கண்ணா’ என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தையிலேயே என் எல்லா இன்செக்யூரிட்டிகளும் உடைந்துவிட்டது. அன்றே — என்ன நடந்தாலும் இந்தப் படத்தை நான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் படத்தின் வெற்றியை முழுவதுமாக சூப்பர் ஸ்டாருக்கே அர்ப்பணிக்கிறேன்.இயக்குநர் மதனுக்கு  நன்றி , டூரிஸ்ட்ஃபேமிலி பட ஷீட்டிங் போதே என்னை நடிக்கக் கேட்டார்,  “இந்தப் படத்தை நான் செய்ததற்காக எப்போதும் பெருமைப்படுவேன். டூரிஸ்ட்ஃபேமிலி படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது. ஆனால் இந்த படம் வெளியான பிறகு, மதனுக்கு அதைவிட இரட்டிப்பு மரியாதை கிடைக்கும். மகேஷ் அண்ணா ஒரு தயாரிப்பாளர் அல்ல எனக்கு எப்போதும் என் அண்ணன் தான். சௌந்தர்யா மேடம் டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் போதே என்னை ஒரு ஸ்டார் என வாழ்த்தினார் அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஷான் எனக்காக வந்தார் அவருக்கு  நன்றி. அனஸ்வரா பெயர் தான் முதலில் வர வேண்டும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் நடித்த மற்ற அனைவருமே சூப்பராக நடித்துள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி. 



முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )”  படத்தில்,  டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.   “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.



இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.