Featured post

Aari Arjunan starrer 4th Floor Set for February Release

 *Aari Arjunan starrer 4th Floor Set for February Release"* Aari Arjunan's 4th Floor, right from its time of announcement has been ...

Saturday, 24 January 2026

Aari Arjunan starrer 4th Floor Set for February Release

 *Aari Arjunan starrer 4th Floor Set for February Release"*









Aari Arjunan's 4th Floor, right from its time of announcement has been creating huge waves of expectations. 



Produced by A. Raja under Mano Creation, and directed by L.R. Sundarapandi, the thrilling film "4th Floor" features Aari Arjunan in the lead role. This unique thriller, set in an extraordinary milieu, is slated for release in late February across cinemas. The story unfolds amid electrifying events in a residential building in central Chennai.


Director L.R. Sundarapandi has crafted a screenplay brimming with anticipation, astonishing twists, and an unprecedented thriller experience. As a psychological thriller, the film authentically explores the intricate connection between dreams and reality.


The shooting  has been completed in Chennai and its surrounding areas.Aari Arjunan plays the protagonist, with Deepshika as the female lead. They are joined by Pavithra, director Subramania Siva, Thalivasal Vijay, and Adithya Kathir in key roles.


Music composer Dharan of Poda Podi fame scores the soundtrack, while cinematography is handled by  J. Lakshman, who cranked camera for movies like  Poda Podi, Vennila Kabadi Kuzhu. 


 Art direction is by Suresh Kalleri, known for Aneedhi, Jail, and Mathagam web series.


Post-production is progressing rapidly, and the team is planning to release the music and trailer shortly.

 

4th Floor arrives in theatres by the end of February.


*Technical Crew*


Director: L.R. Sundarapandi

Producer: A. Raja

Executive Producer: Surya Prakash P

Cinematography: J. Lakshman

Music Composer: Dharan Kumar

Lyricist: Ku. Karthik

Editor: Ram Sudarshan

Art: Suresh Kalleri

Choreography: Abu Salz

Stunts: Danger Mani

PRO: A. Raja

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது !!

 ஆரி அர்ஜுனன் நடிக்கும்  “ஃபோர்த் ஃப்ளோர்”  திரைப்படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது !! 










MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள  “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில்,  இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R  சுந்தரபாண்டி. சைக்காலஜிகள் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது. 


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்,  தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 


“போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி” வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.



இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, விரைவில்  இசை மற்றும் டிரெய்லரை  வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறன்றனர். செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாத இறுதியில் திரைக்கு வருகிறது. 


தொழில் நுட்ப குழு விபரம் 

இயக்குநர்: L R சுந்தரபாண்டி 

தயாரிப்பாளர்: A.ராஜா 

நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P

ஒளிப்பதிவு : J லக்ஷ்மன் 

இசையமைப்பாளர்: தரண் குமார்

பாடலாசிரியர் : கு கார்த்திக்

எடிட்டர்: ராம் சுதர்ஷன்

கலை: சுரேஷ் கல்லேரி 

நடனம் : அபு சால்ஸ்

ஸ்டண்ட்: டேஞ்சர் மணி 

மக்கள் தொடர்பு : A ராஜா


https://we.tl/t-8eDh3gHcI4

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால்

 கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.










திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது.


நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு அப்பாவு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் எஸ் வி சேகர், நடிகை தேவயானி, படத் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பி டி செல்வகுமாருக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள்.


நிகழ்வில் அப்பாவு அவர்கள் பேசியபோது, ''என்னுடைய உறவினர் தம்பி பி டி செல்வகுமார் கலையுலகில் கண்ணியத்துடனும், நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் பயணிக்கிறார். அதற்காக பாராட்டுகிறேன். பி டி செல்வகுமார் கடந்த பல வருடங்களாக கன்னியாகுமரி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடத்துகிறார். 3006 பெண்கள், 3006 பானைகளில் பிரமாண்டமாக சமத்துவ பொங்கல் வைப்பார்கள். பிரமாண்டமாக நடக்கும் அந்த நிகழ்வுக்கு நான் போய் வந்ததுண்டு.


அதேபோல, காமராஜரைப் போல கல்விப் பணியிலும் அவரது ஈடுபாடு அதிகம். கன்னியாகுமரியில் வெள்ளாளன்விளை, பொட்டல்விளை, மணக்குடி, இலந்தையடிவிளை, கோவளம் என்று பல ஊர்களில் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், நிரந்தர கலையரங்கங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். மயிலாடி என்று ஒரு ஊர் உண்டு. அங்குள்ள பள்ளியில் ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் மெக்காலே பிரபு மூலம் மெக்காலே கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளியில்கூட பி டி செல்வகுமார் கட்டடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே அதையெல்லாம் செய்ய முடியும். சமூகத் தொண்டோடு, அரசியலில் திமுகவின் அறிவாலயத்தை நாடி வந்திருக்கிறார். அவர் காலம் முழுக்க சுய மரியாதையுடன் நடத்தப்பட்டு மக்கள் தொண்டாற்றுவார். அவரது மக்கள் பணி தொடர வாழ்த்துகள்'' என்றார்.


இயக்குநர் கே பாக்யராஜ் பேசியபோது, ''பி டி செல்வகுமாருக்கு இரண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று இத்தனை காலம் பத்திரிகைத்துறை, சினிமா துறையில் நல்லவிதமாக சேவை செய்திருக்கிறார்; நல்ல பெயரெடுத்திருக்கிறார். அதற்காக முதல் வாழ்த்து. அரசியலில் அடியெடுத்து வைத்ததற்காக இரண்டாவது வாழ்த்து. இரண்டு நாள் முன் என்னை பார்க்க வந்தார். எனக்கு சிறிய மோதிரத்தை போட்டு விட்டார். அத்தோடு சிறிய விழா இருக்கு. வரணும்னு கேட்டுக்கிட்டார். இங்கு வந்து பார்த்தால் பெரிய அரசியல் விழாவாக இருக்கிறது.


உதவி செய்வதற்கு பொருளாதாரம்தான் இருக்கணும்னு அவசியமில்லை. மனசு இருந்தா போதும். அந்த மனசு பி டி செல்வகுமாருக்கு இருக்கு. அவர் செய்த கல்விப் பணிகள் பத்தியெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். அவரோட தொண்டு தொடர வாழ்த்துகள்!'' என்றார்.


இயக்குநர் பி டி செல்வகுமாரை ''30 வருசத்துக்கு மேலா தெரியும். பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்னு பல அவதாரங்கள் எடுத்திருக்கார். நாட்டாமை படத்துல நடிச்சிருக்கார். அதனாலேயோ என்னவோ அவரே நாட்டாமையா மாறி பஞ்சாயத்து செய்து ரிலீஸ் பண்ண முடியாம பிரச்சனைகள்ல சிக்கியிருந்த ஏகப்பட்ட படங்களை ரிலீஸ் பண்ண உதவி பண்ணிருக்காரு. அவரோட கலப்பை மக்கள் இயக்கத்தோட பணிகள் பத்தி எனக்கு தெரியும். அவரு சினிமாவுல தளபதி விஜய்கூட இருந்தாரு. அரசியல்ல தளபதி ஸ்டாலின் அவர்களோட இருக்காரு. சினிமாவுல, சமூக சேவைகள்ல சாதிச்சது மாதிரி அரசியல்லயும் அவர் பெரியளவுல சாதிக்கணும்னு வாழ்த்தறேன்'' என்றார்.


நடிகர் எஸ் வி சேகர் பேசியபோது, ''பி டி செல்வகுமார் நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்கிறார். நல்ல விஷயங்களை செய்கிறவர்கள் நல்லபடியாக அரோக்கியமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். நல்ல விஷயம் செய்றேன்னு கிளம்புறவங்கள்ல சிலர் ஏழாயிரம் ரூபா தையல் மெஷின் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு 40ஆயிரம் ரூபாய்க்கு போஸ்டரெல்லாம் அடிச்சு நிகழ்ச்சி நடத்துவாங்க. ஆனா, பி டி செல்வகுமார்கிட்டே 40 ஆயிரம் இருந்தா அந்த மொத்த பணத்துக்கும் உதவி பண்ணலாம்னு நினைப்பார். அப்படிப்பட்டவர் நல்லபடியா இருக்கணும், சேவை தொடரணும்னு வாழ்த்துகிறேன்'' என்றார்.


பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பேசியபோது, 'ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் செத்தாருள் வைக்கப் படும்' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி, பி டி செல்வகுமாரின் சமூகப் பணிகளைப் பாராட்டி, அப்படியான பணிகளை அவரது மனைவியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் செய்திருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி அவரையும் பாராட்டி வாழ்த்தினார்.


''பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்றில்லாமல் நம்மால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு, காமராஜர் வழியில் கல்விக்கு உதவி செய்ய வேண்டுமென நினைத்தே என்னை சமூக சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டேன். கஷ்டபட்டுத்தான் எதையுமே செய்கிறேன். சரியான உழைப்புக்கு பலன் கிடைக்காமல் போகாது என நம்புகிறேன்'' என தனது துவக்கவுரையில் குறிப்பிட்ட பி டி செல்வகுமார் தனது பத்திரிகை பணியின் ஆரம்பகாலம், திரையுலப் பணியில் கிடைத்த அனுபவம் என பலவற்றை சுருக்கமாக விவரித்தார். நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கும் தனக்குமான பழக்கம், நெருக்கத்தை எடுத்துச் சொல்லி வரவேற்று, வந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - நகுல் நடிக்கும் " காதல் கதை சொல்லவா "

 ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி -  நகுல் நடிக்கும் " காதல் கதை சொல்லவா " பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. 




























































முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் "காதல் கதை சொல்லவா"


பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் " காதல் கதை சொல்லவா " 


பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின்  மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் " காதல் கதை சொல்லவா"


 இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.


ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளார்.


வசனம் - கண்மணி ராஜா

ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

M. ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இருவரும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

கண்மணி ராஜா, முத்தமிழ், கவிதாரவி, K. பார்த்திபன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

C. பிரசன்னா, சுஜித், பிரவின்.G மூவரும் நடனம் அமைத்துள்ளனர்.

எடிட்டிங் - ஜீவன்

கலை இயக்கம் - சிவா யாதவ்

ஸ்டண்ட் - T. ரமேஷ்

தயாரிப்பு நிறுவனம்- பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பாளர் - ஆகாஷ் அமையா  ஜெயின்.


கதை எழுதி திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் - சனில் 


மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.


படம் பற்றி இயக்குனர் பகிர்ந்தவை...


மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் வருகிறார்.


“காதல் கதை சொல்ல வா” – மனித உணர்வுகள், நம்பிக்கை, காதல், தியாகம், மற்றும் மனிதநேயத்தின் வலிமையை சொல்கின்ற  மனதை நெகிழ வைக்கும் படமாக இருக்கும்.


படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாககிறது.