Featured post

மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை

 “மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்! சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அற...

Saturday, 8 November 2025

மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை

 “மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!



சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.


அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது. நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை “மாண்புமிகு பறை” திரைப்படத்திற்கே சொந்தமானது.


சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது ஒரு சாதாரண கதை அல்ல — பறை என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக்கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது.

“இது பறைக்கு இன்னொரு பிறப்பு; முடிவல்ல, ஆரம்பம்…” பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்துவருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து — குறிப்பாக பிரான்ஸிலிருந்து — தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது.


பறை என்பது இசை மட்டுமல்ல — அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் “மாண்புமிகு பறை.”


தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை: சுபா & சுரேஷ் ராம்

இயக்கம்: எஸ். விஜய் சுகுமார்

ஒளிப்பதிவு: ரா. கொளஞ்சி குமார்

படத்தொகுப்பு: சி. எஸ். பிரேம் குமார்

இசை: தேனிசை தென்றல் தேவா

நடன இயக்கம்: ஜானி

பாடல்கள்: சினேகன்

கலை: விஜய் ஐயப்பன்

தயாரிப்பு நிறுவனம்: சியா புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர்கள்: சுபா – சுரேஷ் ராம்

இணை தயாரிப்பு: ஜெ. எப். நக்கீரன் & கவிதா

நிர்வாக தயாரிப்பாளர்: த. முரளி

மக்கள் தொடர்பு: AIM சதீஷ், சிவா

Cristina Kathirvelan Movie Review

Cristina Kathirvelan Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம chrisitna kathirvelan படத்தோட review அ தான் பாக்க போறோம். கௌஷிக், பிரதிபா, அருள் சங்கர், சிங்கம் புலி, சில்மிஷம் சிவா, கஞ்சா கருப்பு, அலெக்ஸ் பாண்டியன் னு பலர் நடிச்சிருக்க இந்த படத்தை இயக்கி இருக்கிறது அலெக்ஸ் பாண்டியன். சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போலாம். 

kathirvelan அ நடிச்சிருக்க koushik கோவில் ல நடக்கற திருவிழாக்கு போறாரு. அப்போ ஒரு பிரச்சனையா ல இருந்து இவரை chrisitina வா நடிச்சிருக்க pradeepa காப்பாத்துறாங்க. இதுல இருந்து kathirvelan chrisitina வா love பண்ண ஆரம்பிச்சுடுறாரு. இவங்க ரெண்டு பேரும் ஒரே college ல தான் படிக்கறாங்க. kathirvelan தன்னோட காதலை christina கிட்ட சொல்லலாம்,  ஆனா சொல்லாம அப்படியே மனுசுக்குள்ளயே வச்சுக்குறாரு. ஆனா கொஞ்ச நாள் லேயே chrisitina க்கு வேற ஒருத்தரோட திருமணம் முடிச்சிடுத்து, இதுனால ரொம்ப சோகமா ஆயிடுறாரு. இப்போ தான் இங்க ஒரு twist வைக்கிறாங்க. அது என்னனா திடுருனு kathirvelan யும் christina வும் register marriage பண்ணிக்கிட்டா மாதிரி ஒரு document கைக்கு வருது. இதை கேள்விப்பட்ட இவங்க ரெண்டு பேருமே செம shock ஆயிடுறாங்க. இவங்க மட்டும் இல்ல இவங்களோட குடும்பம் மும்  தான். இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட title அ பார்த்தேளா கண்டிப்பா religion problem இருக்கும் னு guess பண்ணிருப்பாங்க. அதுவும் இருக்கும் ஆனா இதுவே main ஆனா விஷயமா இருக்காது. இந்த main characters ஓட journey அ பத்தி தான் detailed அ சொல்லிருப்பாங்க.  

இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும் போது, koushik ஓட acting ரொம்ப emotional அ இருந்தது. அதுவும் prathibha மேல one side love ல இருக்கறதும், friend அ இருக்க chance கிடைச்சும் love அ சொல்ல முடியாத நிலமைல இருக்கறதும், கடைசில இவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு னு தெரிஞ்ச பிறகு சோகமா இருக்கிறது னு ரொம்ப எதார்த்தமாவும் emotional ஆவும் perform பண்ணிருக்காரு. prathiba ஓட acting யும் ரொம்ப genuine அ இருந்தது. இவங்களோட body language, dialogue delivery னு எல்லாமே பக்காவா இருந்தது.  


இந்த படத்தோட techincal aspects னு பாக்கும் போது n r raghunanthan தான் music compose பண்ணிருக்காரு. 90 's period ல songs எப்படி melody அ இருக்குமோ அதே மாதிரி தான் இந்த படங்கள் ல வரும் songs யும் இருக்கும். bgm யும் super அ இருந்தது. prahad munusamy  ஓட cinematography யும் அழகா இருந்தது. 


ஒரு good feel movie தான் இது. சோ கண்டிப்பா miss பண்ணாம பாருங்க.

வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை

 *“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை* 


*“சட்டத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?” ; வள்ளுவன் பட இயக்குநர் ஆவேசம்*  


*“சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார்” ; வள்ளுவன் பட ஹீரோவுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் புகழாராம்* 


*”சினிமாவில் பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள்” ; வள்ளுவன் பட விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டம்*


*”கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்” ; இயக்குநர் பேரரசு ஆவேசம்* 


*”100 பேரரசுகளுக்கு சமம்” ; வள்ளுவன் பட இயக்குநருக்கு பேரரசு புகழாரம்*


*“திருக்குறளுக்கே திரைக்கதை எழுதியுள்ளார்”  ; வள்ளுவன் பட இயக்குநரை பாராட்டிய இயக்குநர் ராதா பாரதி*


ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.


மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார்.


விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வில்


*இயக்குநர் சங்கர் சாரதி பேசும்போது*,


"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்” 

என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன்.


 அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை  இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். 


இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?  இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன்.  


"இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை. 


இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்று பேசினார்.


*இணை தயாரிப்பாளர் பாலச்சந்தர் பேசும்போது,*


இந்த படத்தை ஆரம்பிக்கும்போது இது முடியுமா? என்று யோசித்தோம். ஆனால் இப்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப்  பார்க்கும்போது பாதி ஜெயித்து விட்டோம் என நினைக்கிறேன். இந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களை எடுப்போம். தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். முதலில் கன்னடத்தில் தான் படம் எடுக்க நினைத்தோம். ஆனால் இங்கே தமிழில் செல்வமணி சார் போன்ற ஜாம்பவான்கள் முன்னால் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் இங்கே படம் எடுத்தோம்” என்று பேசினார்.


*இசையமைப்பாளர் அஸ்வத் பேசும்போது,*


“படத்தின் நாயகன் சேத்தன் சீனு மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தயாரிப்பாளர்கள் திறமையான நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். அந்தவகையில் இந்த படத்தில் நிறைய பாடகர்கள், கவிஞர்கள் என புதியவர்கள் பலரை அறிமுகப்படுத்த முடிந்தது” என்று பேசினார்.


*நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது,*


“இயக்குநர் சங்கர் சாரதி இந்த படத்தை பல சிரமங்களுக்கு இடையே பார்த்து பார்த்து உருவாக்கினார். இன்று இந்த டிரைலரை பார்க்கும்போது அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு கிடைத்தது போல இருக்கிறது. கதாநாயகி எங்கள் தமிழ்நாட்டு ஐஸ்வர்யா ராய் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்களைப் பொருத்தவரை, படம் எப்படி வேண்டுமானாலும் எடுங்கள்.. வந்தவர்கள் யாருக்கும் சாப்பாட்டில் குறை வைத்து விடாதீர்கள் என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். சம்பளம் சரியான நேரத்தில் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்து மிஸ் ஆனது. இவர்களின் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.


*தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,*


“இந்த படத்திற்கு வள்ளுவன் என தலைப்பு வைத்து அவரது குறளை மையமாக வைத்து படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் சங்கர் சாரதி.. அதேசமயம் கெட்டது செய்தவனுக்கு நல்லது செய் என்று எழுதிய வள்ளுவன் பெயரை வைத்து கொலைகாரன் படம் எடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத படங்களில் ஆங்கில டைட்டில் தான் இருக்கிறது. இது தமிழ்நாடா என்கிற கேள்வியே வந்து விட்டது. இந்த சமயத்தில் இப்படி வள்ளுவன் என தலைப்பு வைத்திருப்பதால் இயக்குநர் சங்கர் சாரதியை பாராட்டுகிறேன். பணம் இருந்தால் நீதியையே இப்போது விலைக்கு வாங்கி விடலாம். நீதிபதிகள் பலர் இப்போது பாதிபதிகளாகி விட்டார்கள்” இன்று பேசினார்.


*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*


தவறு செய்தவர்களை கண்டித்து திருத்த வேண்டும் என்கிற கருத்தைச் சொல்ல வள்ளுவரை உதாரணமாக இயக்குநர் சங்கர் சாரதி எடுத்துக் கொண்டுள்ளார். இதனாலேயே இவர் சென்சாரில் தப்பித்து விட்டார். அந்த வகையில் எங்கள் இயக்குநர் சங்கத்திலிருந்து வள்ளுவன் என்கிற டைட்டிலுடன் அவர் கையில் எழுத்தாணிக்கு பதிலாக கத்தியை கொடுத்து ஒருவர் துணிச்சலாக படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் இயக்கிய டெக்னிக் நன்றாக இருந்தது. கதாநாயகன் சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார். அவர் நன்றாக வரவேண்டும்” என்று பேசினார்


*நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,*


“இந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் சாரதி என்னை அழைத்தபோது முதலில் வர மறுத்துவிட்டேன். அவர் சரியாக 2023 அக்டோபர் 25ஆம் தேதி என்னை அழைத்தார். அன்று கேப்டனின் பிறந்த நாள். மீண்டும் என்னை வற்புறுத்தி அழைத்ததால் கேப்டனிடம் சென்று அனுமதி பெற்று, ஆசி பெற்று மதியத்திற்கு மேல் படப்பிடிப்பில் சென்று கலந்து கொண்டேன். அந்த வகையில் என் வாழ்க்கையில் இந்த படம் மறக்கவே முடியாது. சினிமாவில் நான் இருப்பதே கடவுள் கொடுத்த கொடுப்பினை. இப்போதுள்ள இயக்குநர்கள் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு வந்து சினிமா வாய்ப்பை பெற்றுக்கொண்டு சினிமா கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. தயவு செய்து அந்த கலாச்சாரத்தை மாற்றாதீர்கள்” என்று பேசினார்


*நடிகர் பரத் பேசும்போது,*


“சினிமாவில் நாம் இருப்பதே ஒரு பெரிய வரம் தான். அப்படிப்பட்ட சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் நாமாகவே பிடித்து முன்னேறுவது என்பது எவ்வளவு சிரமம் என்று அப்படி வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல வலுவான அரசியல் கலந்த ஒரு கருத்து இந்த படத்தின் டைட்டில் துவங்கும்போதே ஆரம்பிக்கிறது. கதையை இயக்குநர் என்னிடம் சொன்னாலும் அந்த சமயத்தில் என்னுடைய வேறு சில கமிட்மென்ட்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நடிகர் சேத்தன் சீனு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கிறார். அவருக்கு தமிழில் இது மிகப்பெரிய பிரேக்காக அமையும். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா என்னுடன் காளிதாஸ், காளிதாஸ் 2, மிரல் என மூன்று படங்களில் வேலை பார்த்தவர்” என்று கூறினார்.


*நடிகர் கராத்தே ராஜா பேசும்போது,*


“இந்த வள்ளுவன் படத்தில் எனக்கு ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சங்கர் சாரதி. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பல கிராமங்களில், சிறிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திங்கள், செவ்வாய் போன்ற கிழமைகளில் காலை, மதிய காட்சிகள் படம் பார்க்க செல்லும் போது வெறும் ஐந்து பேர், பத்து பேர் மட்டும் இருப்பதை பார்க்கும்போது மனம் பதறும். பல இடங்களில் திரையரங்குகளை எடுத்துவிட்டு மண்டபம், மால் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று இருந்தேன்.. அவ்வளவு பெரிய சுற்றுலா தளம்.. ஆனால் அவ்வளவு பெரிய ஊரில் ஒரு தியேட்டர் கூட இல்லை. அதேபோல பொதுமக்களிடம் ஏன் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என நான் பேசியபோது பலரும் நாங்களே வெளியில் இருந்து தின்பண்டம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் அதிக கட்டணத்தில் தின்பண்டங்களை விற்பது ஒரு பக்கம் விற்றுக் கொள்ளட்டும். ஆனால் வெளியில் இருந்து இப்படி கொண்டு வருபவர்களையும் அனுமதிக்கட்டும். அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்து அதை களைய முயற்சி எடுத்தால் அந்த ஜனங்களும் திரையரங்கிற்கு சென்று நமது படத்தை பார்ப்பார்கள். அப்படி வெளியிலிருந்து தின்பண்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் திரையரங்குகளில் விற்கும் பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வழி வகுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தாலும் எனக்கு சந்தோசம்” என்று பேசினார்.


*நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,*


இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது பல கஷ்டங்களுக்கு இடையே தான் நடைபெற்றது. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் எங்களைப் போன்ற நடிகர்களாகட்டும் அவரவர் தரப்பில் சில கஷ்டங்கள் இருந்தன. அப்படி கஷ்டங்களுக்கு இடையே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. வெளிப்படையாக சொன்னால் இந்த படம் இப்படி இந்த அளவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை. தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தான் அப்படி அவர்கள் வெளிப்படுத்தினார்கள். யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நடிகர்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறார்கள் என இங்கே சிலர் பேசினார்கள். எல்லோருக்கும் அப்படி அல்ல.. கொரோனா காலகட்டத்தில் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் நடத்தி வந்த ஹோட்டலில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தேன். என் காது படவே சில பேர் அதை விமர்சித்து பேசுவார்கள். அதனால் பொத்தாம் பொதுவாக நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. நான் இங்கே இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதில் கூட சிக்கல் இருக்கிறது. அதையும் நான் எதிர்கொண்டு செய்துதான் வருகிறேன்” என்று பேசினார்.


*நடிகர் பிரேம்குமார் பேசும்போது,*


“படத்தின் இயக்குநர் என்னிடம் இந்த கதையை சொல்ல வந்தபோது இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர்.. இந்த படத்திற்கு வள்ளுவன் என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்று சொன்னபோதே நான் இதில் நடிக்க ஓகே சொல்லி விட்டேன். இந்த படத்தில் ஒரு அழுத்தமான செய்தி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு தாக்கம் இருக்கும். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் எவ்வாறு தவறு செய்கிறார்கள், அதை எப்படி தட்டிக் கேட்பது என அதற்கான தீர்வுகளும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.


*நாயகி ஆஸ்னா சவேரி பேசும்போது,*


“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம். வள்ளுவன் படத்தில் எமோஷன், ஃப்ரண்ட்ஷிப், சஸ்பென்ஸ், திரில்லர், நிறைய டுவிஸ்ட் என எல்லாமே இருக்கிறது. நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயம் ஒர்த் ஆக இந்த படம் இருக்கும்” என்று பேசினார்.


*இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,*


“படத்தின் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைத்தபோது அதைப்  பார்த்ததும் இது ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கிறதே என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கே இந்த படம் குறித்து ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது இல்லையா ? அதனால் இந்த படத்தை பற்றி மீடியா புரமோஷன்களில் பேசும்போது, இது எந்த மாதிரியான படம் என்பதை தெளிவாக ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் அந்த தரப்பு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தேடி வருவார்கள். இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள் தான். 


கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள். 


ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும்.. எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும்.. ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல.. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத்  தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள். 


இன்றைய சூழலில் வெட்கம், மானம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்னதைப்போல இன்னா செய்தவருக்கு இனியவை செய்ய முடியாது. திருப்பி இன்னா தான் செய்ய முடியும். மற்ற பல நாடுகளுக்குச்  செல்லும்போது எல்லா பொது மக்களையும் ராஜா போல நடத்துவார்கள். குற்றவாளிகளை கிரிமினல்களாக நடத்துவார்கள். ஆனால் இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது. 


நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள்   என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.


சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது ? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது பிளாக் மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது” என்று பேசினார்


*இயக்குநர் ராதா பாரதி பேசும்போது,*


“இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடித்துள்ள இந்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக நீங்கள் பார்க்கும் போது, ரொம்பவே பெருமைப்படுவீர்கள். குறிப்பாக கதாநாயகியைப் பார்த்து பயப்படுவீர்கள். இயக்குநர் சங்கர் சாரதி என்னுடைய சீடன் தான். யாருக்கும் தெரியாத விஷயம், அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். தேவாரம், திருப்புகழ், திருப்பாவை எல்லாம் தெளிவாகப் பாடக்கூடியவர். என் தந்தை அவரை ஆழ்வார் என்று தான் அழைப்பார். அவ்வளவு பக்திமான். அதேசமயம்  என்னிடம் சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்கள் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். பரிமேலழகர், கலைஞர் போன்றவர்கள் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்கள்.


 இயக்குநர் சங்கர் சாரதி திருக்குறளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்” என்று பேசினார்.


*நடிகை கோமல் சர்மா பேசும்போது*,


“2000 வருடத்திற்கு முன்பு உலகமே இருளில் சூழ்ந்து இருந்தபோது 1330 குறள்கள் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் வள்ளுவர். நமது குழந்தைகள் மாதத்திற்கு 10 குறள்களாவது படித்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாக மட்டுமல்ல, உயர்வான தலைவர்களாகவும் மாறுவார்கள். திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல.. அது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. தினசரி பள்ளிகளில் பிரார்த்தனை நேரத்தின் போது ஒரு திருக்குறளையும் சேர்த்துக் கொள்ளலாம். திருக்குறள் உலகத்திற்கு எப்போதுமே ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இளைஞர்கள் திருக்குறளை மனதில் சுமந்தால் அவர்களுக்கு பேராசையோ,  கெட்ட எண்ணமோ மனதில் தோன்றாது. சமூகத்தின் தலையெழுத்தையே அவர்களால் மாற்ற முடியும்” என்று பேசினார்.


*நாயகன் சேத்தன் சீனு பேசும்போது,*


“கடந்த 15 வருடங்களாக திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்காக போராடி வருகிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே இடத்தில் தான் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், நாயகன் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அரங்கமே நிறைந்து இருந்தது. அதன் பிறகு நான் சிவப்பு மனிதன் சக்சஸ் மீட்டை இங்கேதான் கொண்டாடினோம். தற்போது கே.டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருங்காலி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அண்ணா வீட்டிலிருந்து, தல அஜித் வீடு வரை எத்தனை கம்பெனிகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள். தமிழுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று சொன்னபோது, எனக்கு மனதுக்குள் பயம் வந்தது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் எல்லோரும் வெள்ளை நிறம் தான். இங்கே கலர் என்பது ஒரு பிரச்சனை இல்லை. திறமையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.


நான் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பே இந்த படத்தின் கதையை சங்கர் சாரதி என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதுமே ஷங்கருக்கு எப்படி ஜென்டில்மேன் படம் ஒரு பிராண்ட் நேம் ஆகியதோ அதேபோல இந்த வள்ளுவன் திரைப்படம் இந்த சங்கர் சாரதிக்கு ஒரு பிராண்ட் ஆகும் என்று  கூறினேன். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அந்த வகையில் யூனிவர்ஸ் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உயிரைக் கொடுத்து நடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். என்னால் உள்ளே நுழைய முடியாத ஒரு ட்ரம்முக்குள் என்னை அமர வைத்து அதற்குள் புகையையும் போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட உயிர் போய்விட்டது என்று தான் நினைத்தேன். சிக்மகளூர் தாண்டி ஒரு பாடல் காட்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது நானும் கதாநாயகி ஆஸ்னா சவேரியும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்தது அது புலிகள் அதிகம் உலாவும் இடம் என்று. அப்போதும் உயிர் தப்பித்து வந்தோம். ஒரு சின்ன படமாக ஆரம்பித்து இதை பெரிய படமாக கொடுத்திருக்கிறார்கள்.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்று பேசினார்.


*தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,*


“நான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஆன சமயத்தில் தான் இதே போன்று பீட்சா படத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லோருமே பெரிய ஆட்களாக மாறிவிட்டார்கள். அதேபோலத்தான் இந்த வள்ளுவன் திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் அதேபோன்று பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.


*வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார் பேசும்போது,*


“நான் இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான். அதேபோல நான் வெளிநாட்டில் இருந்தாலும் கூட  படத்தின் வேலைகள் தடைபடாமல் இங்கிருந்து என்னுடைய நண்பரான பாஸ்கரன் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.


*இயக்குநர் பேரரசு பேசும்போது,*


“வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மீகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம்.. கொலை, கற்பழிப்பு.. வள்ளுவன் என டைட்டில் வைத்ததற்கே உங்களை பாராட்டவேண்டும்.. ஏனென்றால் இப்போது இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாறும்போது வேறு எதில் மாற்றம் வருகிறதோ இல்லையா பேருந்து கலர்கள் தான் உடனடியாக மாற்றப்படும். முந்தைய தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் சுருக்கப்படும். வள்ளுவரை மட்டும்தான் விட்டு வைத்திருந்தார்கள். ஒரு ஆட்சி வந்ததும் அவர் நெற்றியில் இருந்த பட்டையை முதலில் அழித்தது. இன்னொரு ஆட்சி வந்ததும் அவருக்கு காவி கலர் வேட்டியை உடுத்தியது. அரசியல் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. திருவள்ளுவர் இப்போது வந்தால் இயக்குநர்  கத்தியைக் கொடுக்கத்  தேவையில்லை. அவரே துப்பாக்கியைத் தூக்கி விடுவார்.. நாடு அப்படி இருக்கிறது. என்னிடம் பதவி இருக்கிறது, பணம் இருக்கிறது, என்னிடம் சட்ட நுணுக்கம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்தால் சட்டத்தையே விலைக்கு வாங்கலாம்.. ஏன் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என இந்த காலகட்டத்தில் இந்த வசனத்தை சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்..


நான் சிவகாசி படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நடித்ததற்காக விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் கூட வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி ஒரு வக்கீலை நான் குறைவாக காட்டியதற்காக எங்கள் மூன்று பேர் மீது வழக்கு போட்டார்கள் என்றால் இப்போது இயக்குநர் சங்கர் சார்பில் இந்த படத்தில் ஒரு வக்கீல் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என்று சொல்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் 100 பேரரசுக்கு சமம். ஒரு இயக்குநருக்கு மக்கள் மீது அக்கறை, நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.. நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, ஜாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்.. பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மீகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

பகல்கனவு திரைப்படம் திரைவிமர்சனம் இயக்குநர் பைசல்ராஜ் இயக்கத்தில்

பகல்கனவு  திரைப்படம் திரைவிமர்சனம் 

இயக்குநர் பைசல்ராஜ் இயக்கத்தில்




பைசல்ராஜ், ஆதிரா சந்தோஷ், கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பகல் கனவு. 

கதை

கைடு திருமலையை தேடி வரும் யூ டியூப்பர் பைசல் ராஜ், ஷகிலாவின் ஆட்களால் தாக்கப்படுகிறார்.அதை பார்த்த கூல்சுரேஷ் அவர்களிடம் இருந்து பைசல்ராஜை காப்பாற்றுகிறார்.உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்று கேட்க.,பைசல்ராஜ் தன் நண்பன் கராத்தே ராஜன்,காதலி அதிரா சந்தோஷ் உதவியுடன் யூ டியூப் சேனல் நடத்துகிறேன் என்று சொல்கிறார்.அந்த சேனலுக்கு வித்தியாசமான இடங்களை தேடி வரும் பைசல் ராஜ்,கராத்தே ராஜனுக்கும்  ஷகிலா கள்ளச்சாராயம் காய்சுவது தெரிய வருகிறது. கராத்தே ராஜன் அந்த சாராயத்தை குடித்ததால் பாதிப்படைகிறார். இதனால் கோபமான பைசல் ராஜ், ஷகிலா பற்றி போலீஸில் சொல்கிறார். போலீஸ் ஷகிலாவையும் அவள் ஆட்களையும் கைது செய்கிறது. பைசல் ராஜ் தனது கண்டெண்ட் வைரலாக மந்திரவாதி உதவியுடன் அதிராவிற்கு பேய் பிடித்ததை ஓட்டியதாக ஒரு பதிவு போடுகிறார். அதை பார்த்த போட்டி யூ டியூப்பர்   அந்த பதிவு பொய் என்று அவரும் பொய்யாக மறுப்பு தெரிவித்து பதிவு போடுகிறார். இதனால் பாதிப்படைந்த பைசல் ராஜ் பேய் வீடு பற்றி கண்டெண்ட் போட முடிவு செய்கிறார்.அதற்கு தனியாக இருக்கும் வீட்டை தேடி கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் காவலாளியை கரெக்ட் செய்து அதிரா சந்தோஷை பேயாக நடிக்க வைத்து கன்டெண்ட் போடுகிறார். அதை பார்த்த வீட்டு உரிமையாளர் அது பொய் என்று பேட்டி கொடுக்கிறார். இது அதிரா சந்தோஷின் குடும்பத்திற்கு தெரிய வர  , அவளை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்கின்றனர். கராத்தே ராஜனும் தனது லீவு முடிந்து விட்டது நானும் வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்று சொல்கிறார்.  பைசல் ராஜ்  ,உண்மையாகவே பேய் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று கூல் சுரேஷிடம் சொல்கிறார். அதற்கு கூல் சுரேஷ் பேய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக சொல்கிறார்.   இருவரும் பேய் இருக்கும் இடத்திற்கு சென்றார்களா...? பேய் பார்த்தார்களா என்பதே மீதி கதை.


கதாநாயகனாக பைசல்ராஜ் சிறப்பாக நடித்துள்ளார். அதிரா சந்தோஷ், கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் என இதில்  நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

ஜாய் ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சுரேஷ் நந்தனின் பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது.   பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது


இயக்குநர் பைசல்ராஜ்

யூ டியூப்பர்களின் பித்தலாட்டங்களை சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.

Friday, 7 November 2025

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி

 *நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!*




BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார்.


அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


டேட்டா பிரைவசி, சைபர் தடயவியல் உள்ளிட்ட மென்பொருள் துறையில் உலகளவில் பெயர் பெற்ற திரு. பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார்.


முன்னதாக, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடித்த “டிமாண்டி காலனி 2” ஹாரர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அடுத்து, இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில், வைபவ் மற்றும் அதுல்யா நடித்த “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்த இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் திரு. பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் அவர்களின் திரை வாழ்க்கையில் பிரம்மாண்டமான படைப்பாக “ரெட்ட தல” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.

இப்படம் 2025 டிசம்பர் 18ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.



தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்


தயாரிப்பு: BTG Universal

தயாரிப்பாளர்: பாபி பாலச்சந்திரன்

இயக்கம்: கிரிஷ் திருக்குமரன்

இசை: சாம் C.S.

ஒளிப்பதிவு: டிஜோ டாமி

எடிட்டிங்: ஆண்டனி

ஸ்டண்ட்: P.C. ஸ்டண்ட்ஸ்

கலை இயக்கம்: அருண்சங்கர் துரை

உடை வடிவமைப்பு: கிருத்திகா சேகர்

நடன அமைப்பு: சுரேன் R., பாபி ஆன்டனி

பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, சாம் C.S., விவேகா

VFX மேற்பார்வை: H. மோனேஷ்

நிர்வாக தயாரிப்பாளர்: மணிகண்டன்

தயாரிப்பு மேற்பார்வை: S.R. லோகநாதன்

DI: ஸ்ரீஜித் சாரங்க்

ஒலி வடிவமைப்பு: T. உதயகுமார் (Sound Vibe)

பப்ளிசிட்டி டிசைனிங்: பிரதூல் N.T.

பப்ளிசிட்டி போட்டோகிராஃபர்: வெங்கட் ராம்

ஸ்டில்ஸ்: மணியன்

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

Predator Badlands Movie Review

 Predator Badlands Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம predator badlands படத்தோட review அ தான் பாக்க போறோம். இது predator series ஓட 7 part னு சொல்லலாம். இன்னிக்கு தான் இந்த படம் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தை பத்தி பாக்கலாம். predator படத்துக்கு fanbase அதிகம் னு தான் சொல்லணும். ஏன்னா ஓவுவுறு படத்லயும் aliens க்கும் மனுஷங்களுக்கும் நடுவுல நடக்கற சண்டையை ரொம்ப interesting அ காமிச்சிருப்பாங்க. கதையும் ரொம்ப விறுவிறுப்பா போகும். ஆனா இந்த படம் கொஞ்சம் வித்யாசமா இருக்கு னு தான் சொல்லணும். எப்பவுமே violence அதிகமாவும் sci fi theme யும் இருக்கற predator series ல இந்த படத்துல மட்டும் alien கொஞ்சம் soft nature அ இருக்காரு. இந்த சின்ன predator alien பேர் தான் dek . இந்த dek ஓட emotional journey அப்புறம் self acceptance அ சொல்லற விதமா இருக்கு னு சொல்லலாம். பழைய predator படத்தோட fans க்கு இது ரொம்ப வித்யாசமா இருக்கும். இருந்தாலும் modern storytelling க்கு ஏத்த மாதிரி கதை சொல்லிருக்கிறதுனால நெறய பேர்க்கு பிடிக்கவும் chance இருக்கு. இன்னும் சொல்ல போன கொஞ்சம் family friendly அ இருக்கற மாதிரி இந்த story அ ready பண்ணிருக்காங்க. 


2004 ல வெளி வந்த alien vs predator ல இந்த predators அ கொஞ்சம் பாவமா காமிச்சிருப்பாங்க ஆனா இந்த படம் அதையும் தாண்டி ஒரு படி முன்னாடி போயிருக்குனு தான் சொல்லணும். maybe இது disney pictures க்கு கீழ படம் வரதுனால violence அ இல்லாம predator ஓட coming of age படம் மாதிரி எடுத்திருக்காங்க போல. இதுக்கு முன்னாடி வந்த part ஆனா prey ல intense ஆனா violence இருந்தாலும் ஒரு emotional depth இருக்கும் ஆனா இதுல ரொம்ப soft அ கதையை எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். இப்போ இந்த படத்தோட கதை என்னனா dek ன்ற predator alien revenge காகவும் அதோட self discovery காகவும் தன்னோட வீட்டை விட்டு ஓடி போயிடுது. இப்படி வரும்போது தான் synthetic cyborg thia வா  நடிச்சிருக்க elle fanning ஓட friend ஆகுது. இவங்க ரெண்டு பேரும் friend ஆகுற இடத்தோட பேர் தான் death planet . இந்த dek எதுக்காக இந்த இடத்துக்கு வந்திருக்கும்னா அதோட கூட்டத்துல தலைசிறந்த warrior னு பேர் எடுக்கணும்ன்றதுக்காக  kallisk ன்ற ஒரு மிருகத்தை  கொலை பண்ணத்தான் வந்திருக்கும். இப்போ இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா weyland yutani  ன்ற ஒரு private company யும் இதை தேடி தான் வந்திருப்பாங்க. இந்த company ஓட நோக்கமே aliens அ research பண்ணுறது தான். அவங்களோட சுயலாபத்துக்காக தான் இந்த மாதிரி alien  related விஷயங்களை பண்ணுவாங்க. 1979 ல வெளி வந்த alien படத்துல  இந்த company  அ பத்தி detailed அ காமிச்சிருப்பாங்க. இப்போ இந்த company தான் இந்த படத்துல வருது. இவங்க ரெண்டு பேரும் மோதிக்கிறது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


predator series லேயே இது தான் முதல் படம் இந்த alien predator hero வா இருக்கிறது. ஆனா hero வா இதை கொண்டு வந்து அந்த mystery look எல்லாம் தூக்கிட்டாங்க. predators எப்பவுமே ரொம்ப sharp அ இருக்கும் அதோட குடுத்த வேலைய பக்காவா முடிச்சிடும். ஆனா இந்த dek அ பாத்தீங்கன்னா அந்த மிருகத்தை தேடி போறது எல்லாம் ok வா தான் இருக்கும். ஆனா அதோட சோக கதையை சொல்லி பொலம்புறது தான் கஷ்டமா இருக்கும். என்ன தான் இதுக்கு soft nature அ குடுத்திருந்தாலும் கொஞ்சம் பழைய predators ஓட characters அ குடுத்துருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். மத்தபடி கதையை ரொம்ப interesting அ தான் கொண்டு போயிருக்காங்க. இந்த predator இருக்கற world அ இருக்கட்டும் visuals அ இருக்கட்டும் ரெண்டுமே அதிரடியா இருந்தது. dan trachtenberg இந்த உலகத்தை create பண்ணிருக்காரு அதோட ஒரு சில creatures யும் உருவாக்கி இருக்காரு இதெல்லாமே அந்த dek கிட்ட சண்டை போட்டு தோத்து போய்டும். CGI shots எல்லாமே அட்டகாசமா குடுத்திருத்தங்க. action scenes யும் mass அ இருந்தது. அதோட ella fanning ஓட comedy யும் இந்த படத்துல super அ workout ஆயிருக்கு. 


மொத்தத்துல ஒரு நல்ல interesting ஆனா ஸ்டோரி தான். சோ மிஸ் பண்ணாம theatre ல போய் பாருங்க.

எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”

 *எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத  மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !*



பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு,  பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”.


நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில்,  உருவாகும்  மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது.


இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் “Globe Trotter” எனும் உலகில் “கும்பா”வாக மாறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இதுவரை நாம் பார்த்ததற்கு மாறாக, கொடூரமான, இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் திறமை கொண்ட வில்லனாக தோன்றுகிறார். போஸ்டரில் அவர் ஒரு ஹைடெக் வீல் சேரில் அமர்ந்தபடி காணப்படுகிறார் – கதாப்பாத்திர போஸ்டர் லுக் புதிய நியூ ஏஜ்  வில்லனாக அவரை அறிமுகப்படுத்துகிறது.


“Globe Trotter” என்பது ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுவின் கூட்டணியில் உருவாகும், மிகப்புதுமையான ஒரு சாகச உலகம் ஆகும். இந்த இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர், தற்போது அந்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ராஜமௌலி ஏற்கனவே இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் பதித்துள்ளார், இப்போது தென்னிந்திய முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவுடன் இணையும் இந்தக் கூட்டணி, அடுத்த பெரிய நிகழ்வாக மாறியுள்ளது. மேலும் தற்போதைய நிகழ்வு படத்தின் புரமோசன்  பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.


இந்த கதாப்பாத்திர போஸ்டர் ராஜமௌலி எப்போதும் எதிலும் தனிச்சிறப்பு கொண்டவர்.  இந்த போஸ்டர் அவரது தனித்துவமான முத்திரையுடன் வெளியாகியுள்ளது. தற்போது அதைக் காட்டிலும் அதிகமான ஹைப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற, ஆஸ்கர் வென்ற RRRக்கு பிறகு வெளியாகும் இந்தப் படம் குறித்து, எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது. Globe Trotter லாஞ்ச் நிகழ்ச்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வாக இருக்கப் போகிறது. அது நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அந்த நாளுக்கான தயாரிப்புகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் ஏற்கனவே அந்த உற்சாகத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.


முன்னதாக ராஜமௌலி தனது X (Twitter) பக்கத்தில் கதாப்பாத்திரங்களின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார், தற்போது அது வெளியானதும் இணையம் முழுவதும் தீயாக பரவி பாராட்டுக்களை பெற்று வருகிறது. பிரித்விராஜின் அந்த தீவிரமான மற்றும் மிரட்டும் வகையிலான தோற்றம், ராஜமௌலியின் அடுத்த உலக அளவிலான சாகச கற்பனைக்குப் மிகப் பொருத்தமானதாக வெளிப்படுகிறது.


இந்த கும்பா  கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் #GlobeTrotter நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்துள்ளது. அந்த நிகழ்ச்சி நவம்பர் 15 அன்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.


முன்னதாக ராஜமௌலி தனது பதிவில்..,


“மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன் கிளைமேக்ஸ் ஷூட் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் #GlobeTrotter நிகழ்வுக்கான தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எப்போதும் செய்யாத அளவுக்கு ஒன்றை முயற்சி செய்கிறோம். நவம்பர் 15 அன்று அதை நீங்கள் அனுபவிப்பதை காண ஆவலுடன்  காத்திருக்கிறேன் .”


இயக்குநர்  தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் கிளைமேக்ஸ் காட்சி மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள் பங்கேற்க மிகப்பெரிய அளவில் எடுக்கப்படுகிறது, மேலும் GlobeTrotter  நிகழ்வுக்கான தயாரிப்புகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு குழுவின் தகவல்படி, இது ராஜமௌலி திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான, மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.


பிரித்விராஜ் சுகுமாரனின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு இந்த வார “அனவுன்ஸ்மெண்ட் வீக்” ( Announcement week) உடைய தொடக்கமாகும், இதில் ராஜமௌலி கூறியபடி, நவம்பர் 15 நிகழ்வுக்கு முன் பல அப்டேட்களும் சர்ப்ரைஸ்களும் வெளியாகவுள்ளன.


இந்தப் படத்தின் புரோமோஷன் அப்டேட்கள் பல கட்டங்களாக வெளியிடப்படவுள்ளது, முதலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அதன் பிறகு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறும் “மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில்” முடிவடையும் என்று உள் வட்டாரங்கள் கூறுகின்றன.

SS Rajamouli and Mahesh Babu’s Next Unveils Prithviraj Sukumaran’s First Look as KUMBHA

 *SS Rajamouli and Mahesh Babu’s Next Unveils Prithviraj Sukumaran’s First Look as KUMBHA Ahead of the Grand #GlobeTrotter Event*



This is the biggest upcoming Indian project starring Mahesh Babu, Priyanka Chopra and directed by SS Rajamouli after the phenomenal global domination with the Baahubali franchise and RRR.


The wait is finally over! Director, the visionary SS Rajamouli has unveiled the first-look poster of Prithviraj Sukumaran from his upcoming mega project, and it’s everything fans hoped for, intense, powerful, and cinematic.


The very first asset from India’s most anticipated film has been revealed. The first look of Malayalam industry superstar Prithviraj Sukumaran as KUMBHA from the world of Globe Trotter is finally here. In the film, Prithviraj transforms into KUMBHA, a sinister, ruthless, and commanding antagonist unlike anything we have seen before. The poster shows him in a high-tech wheelchair, introducing him as a new-age villain.


Globe Trotter is SS Rajamouli and Mahesh Babu’s most ambitious world-building venture yet. Fans have been waiting for years to see these two come together, and the excitement is at its peak. Rajamouli has already put Indian cinema on the global map, and now his collaboration with South superstar Mahesh Babu is the next big thing to watch out for. This marks the beginning of the promotional journey.


The poster carries SS Rajamouli’s signature touch. He is always in a league of his own, and this one has pushed the hype to the next level. Coming right after the globally acclaimed and Oscar-winning RRR, expectations are sky-high. The Globe Trotter launch event is set to be the biggest event ever in Indian cinema. It’s happening on November 15 at Ramoji Film City, Hyderabad. Everyone can already feel the momentum, the kind of reveals planned for that day are going to be on another level.


Earlier today, Rajamouli had taken to X to announce that the poster would drop soon, and now, the reveal is here, setting the internet abuzz. The striking first look presents Prithviraj in a rugged and commanding avatar, radiating a quiet strength that perfectly aligns with Rajamouli’s vision for his next global-scale adventure.


The reveal comes just days before the film’s much-awaited #GlobeTrotter event, scheduled for November 15 at Ramoji Film City, Hyderabad.


In his earlier post, Rajamouli wrote,


“Amidst the climax shoot on set with all three, there’s a lot more prep happening around the #GlobeTrotter event, as we’re trying something far beyond what we’ve done before. Can’t wait for you all to experience it on Nov 15th (sic).”


The filmmaker revealed that the team is currently filming the climax sequence, featuring all three leads together, adding that preparations are in full swing for the upcoming event. Sources close to the production describe the ongoing shoot as one of the most elaborate sequences ever mounted in a Rajamouli film.


The unveiling of Prithviraj’s look marks the beginning of the announcement week, which, according to Rajamouli, will feature “multiple updates and surprises” leading up to the November 15 event. The film’s promotions are set to roll out in phases, starting with the first-look posters and culminating in what insiders are calling a “massive, experiential showcase” at Ramoji Film City.

The Girl Friend Movie Review

The Girl Friend Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the girlfriend படத்தோட review அ தான் பாக்க போறோம். Rashmika Mandanna, Dheekshith Shetty, Rao Ramesh, Anu Emmanuel, Rohini னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது rahul ravindran . இப்போ இருக்கற period ல நம்ம face பண்ணிட்டு இருக்கற gender politics அ பத்தி பேச கூடிய படமா இது இருக்குனு சொல்லலாம். bhooma வா நடிச்சிருக்க rashmika mandana ஒரு MA டிகிரி படிக்கற student அ இருக்காங்க. இவங்க vikram அ நடிச்சிருக்க dheekshith shetty அ love பண்ண ஆரம்பிக்கறாங்க. மேல் ஓட்டமா பாக்கும் போது love story மாதிரி தெரியலாம் ஆனா ஒரு பொண்ணோட self discovery journey அ பத்தி சொல்லற விதமா இந்த படம் அமைச்சிருக்கு. இந்த male dominated society அவளுக்கான இடத்தை கண்டுபிடிக்கறதுக்கான ஒரு போராட்டம் னே சொல்லலாம். 

இந்த படத்தோட கதையே booma ஓட perspective ல தான் இருக்கும். ஆனா இவங்களோட இந்த story ல இவங்க main character கிடையாது. இன்னும் சொல்ல போன இவங்க main character அ காமிச்சாலும் இவங்களே சொந்தமா முடிவு எடுக்கறதுக்கான உரிமை இவங்களுக்கு கிடையாது. ஆண் ஆதிக்கம் எப்படி பெண்களை ஒதுக்கி வைக்குது ன்றத்துக்கு நல்ல உதாரணம் இந்த படம் னு சொல்லலாம். இவளோட life ல இருக்கற ஓவுவுறு ஆணும் தான் இவ எப்படி அவளோட life அ lead பண்ணனும் னு சொல்லுவாங்க. ஒரு பக்கம் vikram marriage பண்ணதுக்கு அப்புறம் இவ எப்படி இருக்கணும் னு சொல்லுவான். இன்னொரு பக்கம் இவளோட அப்பா rao ramesh booma college ல இருக்கணுமா இல்லையா னு முடிவு எடுக்கறதே அவரை தான் இருக்கும். இது எல்லாத்தயும் ரொம்ப அமைதியா எடுத்துட்டு போற booma. durga வா நடிச்சிருக்க anu emmanuvel யும் நெறய விஷயங்களை booma கிட்ட சொல்லற. ஆனா இதெல்லாத்தயும் கேட்டும் booma பெருசா react பண்ணிக்காம அமைதியா தான் இருப்ப.


இவளோட life அ இவ control க்கு எடுத்துட்டு வர கொஞ்சம் time எடுக்கும். booma ஓட இந்த transformation அ ஒரு process மாதிரி காமிச்சிருப்பாங்க. இதுவே ரொம்ப genuine அ இருந்தது. இதுல booma நெறய இடங்கள் ல silent அ இருக்கிறேதே ஒரு plus point  தான் இந்த கதைக்கு. என்னதான் ஆண் ஆதிக்கம் ன்ற ஒரு விஷயம் அந்த காலத்துல தான் உண்டு இப்போ கிடையாது னு சொன்னாலும், இன்னும் நெறய இடங்கள் ல அது ஒளிஞ்சு இருக்கு ன்றது தான் உண்மை ன்றதா ரொம்ப அழகா காமிச்சிருக்காங்க. இந்த படத்துல ஒரு plus point ஏ social message அ சொல்லறோம் ன்ற பேர்ல ரொம்ப emotional அ கதையை கொண்டு போகாதது தான். ஆனா அதுக்காக  sentimental  scenes லாம் கிடையாது னு சொல்ல முடியாது இருக்கு ஆனா ரொம்ப சோகமா எடுத்துட்டு போயிருக்க மாட்டாங்க. நெறய எடத்துல சின்ன சின்ன விஷயங்களுக்கு லாம் detail குடுத்திருக்க விதம் அழகா இருந்தது. அதாவுது அவளோட room அ விட்டு வெளில வரும் போது shawl அ எடுத்து போட்டுகிறதா இருக்கட்டும் இல்லனா போற வழில திடுருனு யாராவுது அவளோட வழிய தடுக்கறதா  இருக்கட்டும் இதெல்லாமே ரொம்ப depth அ குடுத்திருக்காங்க. அதே மாதிரி toxic relationship ல இருக்கிறதா பத்தியும் காமிச்சிருப்பாங்க. vikram ஒரு toxic character அ portray பண்ணிருப்பாங்க. இந்த character அ நல்ல நடிச்சிருக்கரு deekshith shetty. 


அதுக்கு அப்புறம் இவங்க இந்த relationship ல இருந்து வெளில வரதும் அதோட peaceful அ இவங்க life அ lead பண்ணுற moments நல்ல இருக்கும். bhooma வவும் சரி durga வும் சரி வேற எந்த baggage யும் இல்லாம life அ lead பண்ணுவாங்க. relationship நாளே ஒரு சில பிரச்சனைகள் இருக்கும். அதெல்லாம் ரொம்ப detailed அ காமிச்சிருக்க மாட்டாங்க. உதாரணத்துக்கு vikram க்கு perfect அ bhooma set ஆகலாம் ஆனா bhooma க்கு vikram சரியான partner அ இருப்பானா ன்றது தான் கேள்வியே. இந்த மாதிரி நெறயா விஷயங்களை நம்மள யோசிக்க வைக்குது னு சொல்லலாம். ஒரு  சில எடத்துல தனக்கு தான் vikram வேணும் ண்றதுக்காக durga selfish அ தெரிஞ்சாலும் கடைசில அவங்க bhooma க்கு தான் support அ இருப்பாங்க. இதுவே ரொம்ப gentle அ இருந்தது பாக்குறதுக்கு. ஒரு maturity ஓட இந்த படத்தோட கதையை முடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். 


bhooma ஒரு challenging ஆனா character. rashmika இந்த character ல super அ perform பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். இவங்களோட life ல நடக்கற பல விஷயங்கள் audience ஆலா கண்டிப்பா relate பண்ணிக்க முடியும். இவங்க தான் இந்த படத்துக்கு uyir னு கூட சொல்லலாம். அந்தளவுக்கு amazing அ நடிச்சிருக்காங்க. krishna vasanth ஓட cinematography super அ இருந்தது. அதுவும் characters ரொம்ப suffocating அ feel பண்ணுற scenes லாம் ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. prashanth r vigari ஓட songs and bgm இந்த படத்துக்கு கூடுதல்   பலம் னே சொல்லலாம். 


கடைசில எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அவங்களுக்கான space எடுத்துகிறது தான் இந்த படத்தோட climax அ இருக்கு. ஒரு genuine ஆனா good feel movie னு தான் இதை சொல்லுவேன். சோ கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணாம theatre ல போய் பாருங்க.