Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Monday, 20 October 2025

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*



Sunday, Oct 19, Mumbai: Blockbuster filmmaker Atlee, known for record-breaking films like Jawan, Bigil and Mersal, makes an explosive advertising debut with the biggest ad campaign ever, Ching’s Desi Chinese’s dhamaakedaar film Agent Ching Attacks.


Featuring the Ching’s mascot, the sensational Ranveer Singh, who is now joined by superstars Sreeleela and Bobby Deol, this larger-than-life film brings signature Atlee style, never-before-seen visual effects, and thrilling action. A phenomenal crew has united to create a spectacle that’s all set to set the internet on fire!


Director Atlee said, “For me, love is the secret ingredient. Ching’s wanted something India won’t just watch, but love, and that’s why I said yes to my first ever ad. Ranveer’s madness, Bobby sir’s magic, and Sreeleela’s freshness, we’ve cooked this with a lot of heart. Now it’s for the audience to taste.”


The new Ching’s Desi Chinese ad has truly erased the line between advertisement and cinema. It’s an 8-minute goosebump-worthy experience packed with drama, comedy, action, music, and masala.



The ad raises the glamour quotient with Sreeleela and the heat with Lord Bobby! After blockbuster comebacks in Animal and The Ba*ds of Bollywood, Bobby Deol brings his signature swag to the Ching’s universe once again.


Deepika Bhan, President, Tata Consumer Products, added, “At Ching’s, we’ve always believed every meal should be a blockbuster, bold, flavourful, and irresistibly masaaledar. With Ranveer Ching back in action, the excitement is at an all-time high. Five films in, his energy still blows the roof off. This is our biggest, boldest celebration of Desi Chinese yet, bursting with spice, drama, and pure entertainment. This one is guaranteed to aag lagaa de!”


The film also features an outstanding soundtrack with the iconic anthem ‘My Name is Ranveer Ching’ composed by Shankar-Ehsaan-Loy, vocals by Arijit Singh, and lyrics by the legendary Gulzar Sahab, now reversioned by Sai Abhyankkar and already hitting airwaves everywhere.


In the truest sense, Ching’s Desi Chinese’s Agent Ching Attacks is set to #AagLagaaDe.


Tata Consumer Products Limited brings together the Tata Group’s key food and beverage interests under one umbrella. Its diverse portfolio includes tea, coffee, water, salt, pulses, spices, ready-to-eat meals, and snacks. Leading brands include Tata Tea, Tetley, Tata Coffee Grand, Himalayan, Tata Salt, Tata Sampann, Tata Soulfull, Ching’s Secret, and Smith & Jones. With a reach of over 275 million households and an annual turnover of around ₹17,618 crore, the company has a strong presence across India and international markets.

முதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்”

 *முதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங்  கூட்டணியில்,  ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” இப்போது உலகளவில் ஸ்ட்ரீமிங்காகிறது!*



ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த  ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார்.


இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில்  பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை,  ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும்  அளவுக்கு உருவாக்கியுள்ளது!



இது குறித்து இயக்குநர் அட்லீ கூறுகையில்..,


“அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம்.  சிங்ஸ்  இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை,  இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள்.  அதனால்தான் நான் என் முதல் விளம்பரத்துக்கு ஒப்புக்கொண்டேன். ரன்வீரின் அசரவைக்கும் துறுதுறுப்பு, பாபி சார் மாயம், ஸ்ரீலீலாவின் ஃப்ரெஷ்னெஸ் — இதையெல்லாம் நாங்கள் மிகச்சிறப்பாக  ஒன்று சேர்த்தோம். இனி அதை  பார்வையாளர்கள் ரசிக்கட்டும்.”


புதிய சிங்ஸ் தேசி சைனீஸ் விளம்பரம் விளம்பரத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலான எல்லையை முற்றிலும் அழித்துவிட்டது. இது ஒரு 8 நிமிட கதை வடிவிலான அனுபவமாக, டிராமா, நகைச்சுவை, ஆக்ஷன், இசை, மசாலா என அனைத்தையும் ஒருங்கே வழங்குகிறது.


இந்த விளம்பரம் ஸ்ரீலீலாவின் கவர்ச்சியாலும், “லார்ட்” பாபி தியோல் அவர்களின் அதிரடியிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது அனிமல் மற்றும் தி பா**டட்ஸ்  ஆஃப் பாலிவுட் போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளில் அசரவைத்த   பாபி தியோல் மீண்டும் சிங்ஸ் மூலம் தனது ஸ்வாக் ஸ்டைலில் கலக்குகிறார்.


தீபிகா பான், தலைவர் – டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், கூறியதாவது..,


“சிங்ஸில் ஒவ்வொரு உணவும் ஒரு ப்ளாக்பஸ்டர் போல இருக்க வேண்டும் — மிக உறுதியானதாகவும், சுவைமிக்கதாகவும், மறக்க முடியாததாகவும்  இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ரன்வீர் சிங் மீண்டும் ஆக்ஷனில் களமிறங்கியிருப்பதால் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது. ஐந்து படங்களுப்பின், அவரின் எனர்ஜி இன்னும் உச்சத்தில் இருக்கிறது. இது எங்கள் மிகப்பெரிய, மிகுந்த உற்சாகமான தேசி சைனீஸ் கொண்டாட்டம், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பைப் பெறும்!”


இந்தப் படத்தில் ஷங்கர்–எசான்–லாய் இசையமைப்பில் உருவான புகழ்பெற்ற “மை நேம் இஸ் ரன்வீர் ஜிங்” என்ற ஆந்தம் இடம்பெற்றுள்ளது. அர்ஜித் சிங் குரலில், குல்சார் சாஹப் எழுதிய பாடல் இப்போது சாய் அப்யங்கர் மூலம் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டு, தற்போது எங்கெங்கும் ஒலிபரப்பாகி வருகிறது.


சிங்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் சிங் அட்டாக்ஸ்” படம் நிச்சயமாக #AagLagaaDe என்கிற ஹாஷ்டேக்குக்கு ஏற்ப ஒரு தீப்பற்றி எரியும் அனுபவத்தை தருகிறது.


டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம், டாடா குழுமத்தின் முக்கிய உணவு மற்றும் பானத் துறைகளின் பிராண்டுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது. அதன் பரந்த வரிசையில் டீ, காஃபி, நீர், உப்பு, பருப்பு, மசாலா, ரெடி-டூ-ஈட் உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை அடங்கும். டாடா டீ, டெட்லி, டாடா காஃபி கிராண்ட், ஹிமாலயன், டாடா சால்ட், டாடா சம்பன்ன், டாடா சோல்ஃபுல், சிங்ஸ் சீக்ரெட், ஸ்மித் & ஜோன்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளை உடைய இந்நிறுவனம், வருடாந்திர ரூ.17,618 கோடி வருவாயுடன், 275,  மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்றடைகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் உலகளவிலும் மிகப்பெரிய அளவில் கோலோச்சி வருகிறது.


*ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*


Sunday, Oct 19, Mumbai: Blockbuster filmmaker Atlee, known for record-breaking films like Jawan, Bigil and Mersal, makes an explosive advertising debut with the biggest ad campaign ever, Ching’s Desi Chinese’s dhamaakedaar film Agent Ching Attacks.


Featuring the Ching’s mascot, the sensational Ranveer Singh, who is now joined by superstars Sreeleela and Bobby Deol, this larger-than-life film brings signature Atlee style, never-before-seen visual effects, and thrilling action. A phenomenal crew has united to create a spectacle that’s all set to set the internet on fire!


Director Atlee said, “For me, love is the secret ingredient. Ching’s wanted something India won’t just watch, but love, and that’s why I said yes to my first ever ad. Ranveer’s madness, Bobby sir’s magic, and Sreeleela’s freshness, we’ve cooked this with a lot of heart. Now it’s for the audience to taste.”


The new Ching’s Desi Chinese ad has truly erased the line between advertisement and cinema. It’s an 8-minute goosebump-worthy experience packed with drama, comedy, action, music, and masala.



The ad raises the glamour quotient with Sreeleela and the heat with Lord Bobby! After blockbuster comebacks in Animal and The Ba*ds of Bollywood, Bobby Deol brings his signature swag to the Ching’s universe once again.


Deepika Bhan, President, Tata Consumer Products, added, “At Ching’s, we’ve always believed every meal should be a blockbuster, bold, flavourful, and irresistibly masaaledar. With Ranveer Ching back in action, the excitement is at an all-time high. Five films in, his energy still blows the roof off. This is our biggest, boldest celebration of Desi Chinese yet, bursting with spice, drama, and pure entertainment. This one is guaranteed to aag lagaa de!”


The film also features an outstanding soundtrack with the iconic anthem ‘My Name is Ranveer Ching’ composed by Shankar-Ehsaan-Loy, vocals by Arijit Singh, and lyrics by the legendary Gulzar Sahab, now reversioned by Sai Abhyankkar and already hitting airwaves everywhere.


In the truest sense, Ching’s Desi Chinese’s Agent Ching Attacks is set to #AagLagaaDe.


Tata Consumer Products Limited brings together the Tata Group’s key food and beverage interests under one umbrella. Its diverse portfolio includes tea, coffee, water, salt, pulses, spices, ready-to-eat meals, and snacks. Leading brands include Tata Tea, Tetley, Tata Coffee Grand, Himalayan, Tata Salt, Tata Sampann, Tata Soulfull, Ching’s Secret, and Smith & Jones. With a reach of over 275 million households and an annual turnover of around ₹17,618 crore, the company has a strong presence across India and international markets.

Sunday, 19 October 2025

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .



திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படமாக FMF production No 1 வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 


இவரது முதல் படம் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இறுதித்திக்கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது . 


Big boss பிரபலம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் , 4 முக்கிய கதாபாத்திரங்களில் Ak.Vinoth  பரிதாபங்கள் ராகுல் ,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இப்படத்தில் முதல் முறையாக 6 புதிய கதாநாயகிகளை அறிமுகம் செய்ய உள்ளனர் . 

நட்பின் சிறப்பையும் காதலின் சிறப்பையும் பேசும் எனவும் ஒரு Genz தலைமுறைக்கு ஏற்ற கலகலப்பனா படமாக இருக்கும் எனவும் இயக்குனர் NL Sri தெரிவித்துள்ளார் . ஒளிப்பதிவு.

நரேந்திர குமார் இவரும் திரைப்பட கல்லூரி மாணவர் ஆவார்.இசையாமைப்பாளர் தரன் குமார் உட்பட மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரு இண்டஸ்ட்ரி hit அடிக்க முழு மூச்சுடன் களமிறங்கி இருக்கிறது Friend Magic Films . 


சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட சித்தப்பு promo இணையத்தில் viral ஆனது குறிப்பிடத்தக்கது . இந்த promo வில் படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் ஆசிரியாக super star & Thalapathy ஆகியோர்க்கு பாடல்கள் எழுதியுள்ள 2k kids களுக்கு favorite ஆனா வெற்றிப்பாடலாசிரியர் திரு ku karthik பணிபுரிகிறார் என காமெடியான promo மூலம் அறிவித்தது . மேலும் விரைவில் அந்த big boss session-8 பிரபலம் யார் என அறிவிக்கப் போவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது .

தீபாவளி பண்டிகை ரிலீஸாக நேரடியாக டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘டியர் ஜீவா

 *தீபாவளி பண்டிகை ரிலீஸாக நேரடியாக டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘டியர் ஜீவா’*





*விஜய் டிவி புகழ் டிஎஸ்கே கதாநாயகனாக நடித்திருக்கும் ‘டியர் ஜீவா’ ; டென்ட்  கொட்டாய் ஓடிடி தளத்தில் ரிலீஸ்*


*அருண்ராஜா காமராஜின் சீடர் இயக்கியுள்ள ‘டியர் ஜீவா’ ; டென்ட்  கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியீடு*



தி காம்ரேட் பிலிம்ஸ் சார்பில் J சகாய சதீஷ்  மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டியர் ஜீவா’. பிரகாஷ் வி பாஸ்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 


லப்பர் பந்து, பாம் என சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் டிவி புகழ் டிஎஸ்கே (TSK) இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 


கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பேரனும் மோகன் நடித்த ‘ஹரா’ படத்திற்கு இசையமைத்தவருமான ரஷாசாந்த் அர்வின் இசையமைக்க, அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ராஜா ஆறுமுகம் கவனித்துள்ளார்.


இந்த படம் டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகியுள்ளது. 


இயக்குநர் பிரகாஷ் வி.பாஸ்கர் அருண்ராஜா காமராஜிடம் துணை இயக்குநராக கனா படம் முதல் லேபிள் வெப் சீரிஸ் வரை பணியாற்றியுள்ளார்.. 


‘மை எக்ஸ்ட்ரார்டினரி லவ் ஸ்டோரி’ என்கிற வெப் சீரிஸையும் இயக்கியுள்ளார். மேலும் 100 க்கும் மேற்பட்ட சுயாதீன பாடல்களை எழுதியுள்ளதுடன் நான்கு குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.


 அது மட்டுமல்ல தனது படைப்புகளுக்காக 14 சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

.

‘டியர் ஜீவா’ திரைப்படம் உருவான விதம் குறித்தும் இந்தப் படத்தின் நேரடி ஒடிடி வெளியீடு குறித்தும் இயக்குநர் பிரகாஷ் வி.பாஸ்கர் கூறும்போது,


“இந்த படம் ஒரு உணர்ச்சி மிகுந்த காதல் கதை. குடும்பத்துடன் அமர்ந்து அனைவரும் பார்க்கும் விதமான ஒரு ரொமான்டிக் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத்தான் எங்களுக்கு விருப்பம். ஆனால் நாங்கள் இதில் குறைந்த அளவே முதலீடு செய்திருப்பதால் நிறைய பேரிடம் சென்று சேருவதற்காக நேரடியாக டென்ட் கொட்டகை ஓடிடி தளத்தில் இந்தப்படத்தை  தீபாவளி வெளியீடாக ஒளிபரப்பு செய்துள்ளோம்.


படத்தின் நாயகன் டிஎஸ்கேவும் நானும் 15 வருட நண்பர்கள். நான் இயக்கிய எல்லா குறும்படங்களிலும் டிஎஸ்கே தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த கதைக்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற ஒரு கதாபாத்திரத்திற்கு டிஎஸ்கே தான் தேவைப்பட்டார். 


ஏற்கனவே என்னுடைய குறும்படங்களில் அவர் நடித்திருந்ததாலும் அவரை பர்சனலாகவே எனக்கு நன்றாகத் தெரியும் என்பதாலும் இந்த கதைக்கு அவர் மிகச்சரியாக பொருந்துவார் என நம்பினேன்.


அவர் ஒரு மிமிக்ரி கலைஞர், நல்ல டான்சர்.. இதையெல்லாம் தாண்டி மனித உணர்வுகளை மிகச்சரியாக பிரதிபலிப்பவர் என்பதை நான் கவனித்து இருக்கிறேன். அதனால் இந்தக் கதையை அவர் சிறப்பாக பண்ண முடியும் என்று அவருக்காகவே பண்ணப்பட்ட கதை தான் இது.


இந்த படத்தின் படப்பிடிப்பை வெறும் 15 நாட்களில் நடத்தி முடித்தோம். மொத்த படப்பிடிப்பும் திருச்சியில் நடைபெற்றது.. 


படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள தீப்ஷிகா அடிப்படையில் ஒரு டாக்டர். இதுதான் அவருக்கு முதல் படம்.


அருண்ராஜா காமராஜூடன் இணைந்து கனா போன்ற பெரிய படங்களில் பணியாற்றிய போது அந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அந்த அனுபவம் இந்த படத்தில் எனக்கு ரொம்பவே கை கொடுத்தது. அதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி விரைவாக நடத்தி முடிக்க முடிந்தது.


இந்த தீபாவளிக்கு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள டீசல் திரைப்படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமியிடம் தான் முதன் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.. தற்போது அவரது படமும் எனது படமும் ஒரே சமயத்தில் வெளியாவது மகிழ்ச்சி.  


‘டியர் ஜீவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லையே என்கிற வருத்தம் ஒரு இயக்குநராக எனக்குள் இருந்தாலும் கூட, நேரடியாக ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதில் எனக்கும் படக்குழுவினருக்கும் சந்தோசம் தான்” என்று கூறினார்..



*நடிகர்கள்*


டி.எஸ்.கே (TSK), தீப்ஷிகா, மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார்


*தொழிநுட்பக் கலைஞர்கள்*


கதை, பாடல் மற்றும் இயக்கம் ; பிரகாஷ் வி பாஸ்கர் 


தயாரிப்பாளர் ; சகாய சதீஷ் J & சையது ஓமர் முக்தார் 


இசை ‘ ரஷாந்த்  அர்வின் 


ஒளிப்பதிவு ; அரவிந்த் செல்வராஜ் & சஞ்சீவ் கண்ணா 


படத்தொகுப்பு ; ராஜா ஆறுமுகம் 


கலை இயக்கம் ; AR மோகன் 


நடனம் ; பிரசன்னா 


CG & VFX ; விஜய்சேகர் - கண்ணன் 


விளம்பர வடிவமைப்பு ; ஜீவா 


மக்கள் தொடர்பு  ; A. ஜான்

கொகொவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

 *கொகொவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!🪔*



தீபாவளி பண்டிகையில் வானம் ஆயிரம் பட்டாசுகளாலும் வாண வேடிக்கையாலும்  ஒளிர்ந்தாலும் கொகொவுக்கு மனதில் ஒரே ஒரு ஆசைதான். அது எந்தவிதமான பட்டாசு சத்தமும் இல்லாமல், பயமில்லாமல் கிகியை பாதுகாப்பது!


உலகமே பட்டாசு சத்தத்தால் அதிரும்போது அவர்கள் இருவருக்கும் நீங்கள் தரும் மிகச்சிறந்த பரிசு அவர்களை பாதுகாப்பதுதான். இந்த தீபாவளியை சற்றே வித்தியாசமாக கொண்டாடுவோமே!


உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு அமைதியான பாதுகாப்பான இடம் ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தந்து உங்கள் அன்பை காண்பியுங்கள். ஏனெனில், செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் மட்டும்தான் உலகம்!


எங்கள் சிறிய குடும்பத்திலிருந்து உங்கள் குடும்பத்திற்கு, அன்பு நிறைந்த தீப ஒளி நாள் வாழ்த்துக்கள்! 


கிகி & கொகொவின் தீபாவளி வாழ்த்துக்கள் 🐾


உங்கள் கொண்டாட்டங்கள் பிரகாசமாகவும், உங்கள் அன்பு நிறைந்தவர்களை பாதுகாப்பாகவும் வைத்திருங்கள். அதுதான் உண்மையான கொண்டாட்டம்.

Koko’s Diwali Wish 🪔

 Koko’s Diwali Wish 🪔


This Diwali, while the sky lights up with a thousand sparkles, Koko has only one wish in her heart…

To keep Kiki safe.



No crackers. No loud noises. No fear.

Just the warmth of being together, close and protected.

Because the best gift u can guve them is ,Your promise to keep them safe when the world gets too loud.

This Diwali, let’s celebrate differently.

Keep your pets close

Create a safe, quiet space for them

Stay by their side when they need you most

Show them that love means protection

Because to them, you aren’t just their human.

You are their whole world.

From our little family to yours,

Wishing you a Diwali filled with light, love, and the gentle comfort of having your loved ones near.

Happy Diwali from Kiki & Koko 🐾

May your celebrations be bright, and may your furry friends feel nothing but safe and loved.

Keep them close. Keep them safe. 

That’s the real celebration.

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

 உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!







நல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!


படங்களில் இரண்டே ரகம்தான். கதாநாயகன் படங்கள், கதைப் படங்கள்: தயாரிப்பாளர் பேச்சு!


உடன் இருக்கும் நண்பர்கள் வாழ்த்த மாட்டார்கள்: நடிகர் சித்து ஆதங்கம்!


பிக் பாஸில் வந்து விட்டால்  சினிமா வாய்ப்பு வந்துவிடாது:  தர்ஷிகா பேச்சு!


கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இது

விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது.


இப்படத்தில்  

சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


பாலாஜி எழுதி  இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'டி3' படத்தை இயக்கியவர்.


இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பேசும்போது,


"ஒரு படத்திற்கு விஷூவல் முக்கியமானது. எனவே இயக்குநர் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடித் தேடிச்சென்று  படப்பிடிப்பு நடத்தினார் .ஜீப் கூட போக முடியாத பகுதிகளில் இவ்வளவு சாதனங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். 

நல்ல விஷூவலுக்காக அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அதனால்தான் 

இப்படி அனைத்தையும் சிரமப்பட்டு எடுத்துக் கொண்டு போய் படபிடிப்பு நடத்தினோம். இதற்காக பத்து உதவி இயக்குநர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

படப்பிடிப்புக்கு முந்திய முன் தயாரிப்பும் சிறப்பாக இருந்தது " என்றார்.


படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம் பேசும் போது,


"இந்தத் திரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் . 'டி 3' படக் குழுவே இதிலும் இணைந்துள்ளது"

என்றார் .


இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,


" இயக்குநர்  பாலாஜி அவரது முதல் படம் 'டி3' மூலம்  பழக்கம். அவர் சொன்ன ஒரு வரிக்கதை பிடித்தது . முழு ஸ்கிரிப்ட் கேட்டேன் தர முடியாது என்றார் .எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டுகிறேன் அதையெல்லாம், பார்த்து பின்னணி இசையமையுங்கள் என்றார். அப்படிப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருந்தன. அதற்கேற்றபடி பின்னணி  இசையமைத்தோம். எப்போது இயக்குநர் என்னைப் பார்க்க வந்தாலும் உதவி இயக்குநர் குழுவோடு தான் வருவார்.

இந்தப் படத்திற்குப் பெரிய நட்சத்திரங்களுக்கான படம் போல் ஊடகங்கள்  ஆதரவு தர வேண்டும்" என்றார்.


நடிகர் ஜெயக்குமார் பேசும்போது, 


"இந்தப் படத்தில் பாலாஜி உடன் பணியாற்றியது முதல் ஏதோ ஒரு குடும்ப பந்தம் போல் ஏற்பட்டு விட்டது .அவர் எவ்வளவு பிரச்சினைகளைச் சமாளித்துக் கடந்து வந்திருக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 நேரில் பார்த்தபோது அவரது பிரச்சினைகளை உணர்ந்து கொண்டேன்.அவர் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. எல்லா ஆணின் வெற்றிக்குப் பிறகும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். இவரின் மனைவி இவருக்குப் பக்கபலமாக இருக்கிறார். இப்படி எல்லாருக்கும் மனைவி அமைந்தால் அவர்கள் எங்கேயோ சென்று விடுவார்கள்.இயக்குநர் பாலாஜியை  எனது தம்பியாக நான் பார்க்கிறேன் "என்றார்.


நாயகி தர்ஷிகா பேசும்போது,


"இது என் ஒரு கனவின் முதல் மேடை. இங்கே உள்ள ஒவ்வொருவரது கனவாகவும் இந்தப் படம் இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரி  அனைவரும் உழைத்தார்கள்.


பிக் பாஸில் வந்து விட்டால் மட்டுமே வாய்ப்பு  கிடைத்துவிடாது.சினிமாவில் தாகத்தோடு வருபவர்கள் கண்டிப்பாக அந்த இடத்தை அடையலாம்.பிக் பாஸில் இருந்து வந்து விட்டோம் படம் பண்ண போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு பிளாட்பார்ம், இது ஒரு பிளாட்பார்ம் அவ்வளவுதான் . நம்பிக்கையோடு இந்தத் தளத்திற்கு வந்திருக்கிறேன்.வெற்றி பெறுவேன் என்று நினைக்கிறேன்.


என்னைப் பொறுத்தவரை வாய்ப்பு கதவை தட்டாது, நாம் தேடிப் போனால் தான் வரும் என்று நான்  நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்.படத்தில் நடித்தவர்கள் அனைவரும் திறமைசாலிகள். அவர்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சித்து எதார்த்தமான மனிதர். நான் இதில் உமையாள் என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நல்ல தமிழ்ப் பெயர் .அந்தப் பெயரை எனக்குப் பிடிக்கும். அனைவரும் இந்த படத்திற்காக உழைத்தார்கள். அனைவரது கனவும் இதில் இருக்கிறது.படம் வெற்றி பெறும்  என்று நம்புகிறேன்" என்றார்.


நிர்வாகத் தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,


"இந்தப் படத்திற்காக வேறொரு கதாநாயகனை வைத்து எடுத்தோம் 60 முதல்  70% முடித்து விட்டோம்.அவர் கொடுத்த  பிரச்சினைகள் தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி எடுத்தோம். ஒரு கட்டத்தில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே  கைவிட்டு விட்டோம்.என்ன காரணம்? ஒரு நடிகர் டூப் போட்டு நடிக்க வரலாம், 'டோப்' போட்டு வந்து நடிக்கக் கூடாது.

அதனால் அதை கைவிட்டு விட்டோம். ஒரு பிரசவம் ஆகிற போது கருக்கலைந்தது மாதிரியான ஒரு வலி மிகுந்த அனுபவம். இதனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் மனச்சோர்வடைந்து விட்டார்கள்.


மீண்டும் அதை எடுக்கிற போது முதலில் எடுத்த செலவுகளும்  பட்ஜெட்டில் சேர்ந்து கொள்ளும் .எனவே செலவுத்தொகை இரட்டிப்பாகும் .அதை நாங்கள் ஈடு கட்டுவதற்காக அனைவரும் பல நாட்கள் உடலை வருத்திக்கொண்டு உழைத்தோம்.  இரண்டு கால் ஷீட் இரண்டரை கால் ஷீட் என்றும் 48 மணி நேரம் கூட தொடர்ந்து பணியாற்றியும் படப்பிடிப்பு நடத்தினோம் . இப்படி இழப்புகளை உழைப்பின் மூலம் ஈடு கட்டினோம்.

நான் சாமி கும்பிடுவேன் என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கும்.உண்மையிலே இருக்கிறதா இல்லையா?ஆனால் இந்தப் படத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து கடவுள் இருக்கிறார் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.


கதாநாயகன் வராத போது அவர் இல்லாத காட்சிகளை நாங்கள் காட்டுப் பகுதியில் எடுத்தோம் . காட்சிப்படி ஒரு வர் சாமி ஆட வேண்டும். அவர் இயக்குநர் கட் சொன்ன பிறகும் ஆடினார் ஆடினார், ஒரு மணி நேரம் ஆடிக்கொண்டே இருந்தார். அவருக்கு உண்மையிலேயே சாமி வந்துவிட்டது.இது மேக்கிங் வீடியோவில் இருக்கிறது.


மூன்று மாதம் இடைவெளி வந்தது . அந்த வீடியோவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகுதான் சித்து இந்தப் படத்தில் இணைந்தார் .ஆனால் அவர் குரலைக் கேட்டபோது எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. பிறகு தான் தெரிந்தது அந்த மேக்கிங் வீடியோவில் கடைசி 30 வினாடிகளில் அவரது குரல் இருந்தது. அந்த சாமியாடும் வீடியோ எடுத்த போது யாரோ சித்து பேசுவதை மொபைல் போனில் ஒலிக்க விட்டிருந்தார்கள். இதன்படி அந்த நடிகருக்குப் பிறகு சித்து  தான்  தொடர்வார் என்கிற குறிப்பு அந்த மேக்கிங் வீடியோவில் இருந்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது.


அப்போதுதான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை வந்தது.இது ஒரு ஆன்மீக அனுபவம்.


 நான் இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் பெரிய கதாநாயகர் இருந்தால் அந்த படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும். தியேட்டர்கள் நிறைய  கிடைக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றை இங்கே பரிசீலனை செய்து கவனத்தில் கொள்ள வேண்டும். ரீ ரிலீஸ் செய்யப்படும் மறு வெளியீட்டுப் படங்களுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று டிக்கெட் போடுவது போல் எங்களை போல நல்ல கதையுள்ள கொண்ட கன்டென்ட் பேஸ்டு  படங்களுக்கு முதல் ஷோவுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று போட்டால் வருகிறவர்களின் மவுத் டாக் மூலம் படம் பற்றி மக்களிடம் சென்றடையும்.இல்லாவிட்டால் முதல் ஷோவுக்கு 50 பேர் 100 பேர் தான் வருவார்கள் .ஆனால் 50 ரூபாய் 100 ரூபாய் 75 ரூபாய் என்று டிக்கெட் போட்டால் 200 பேருக்கு மேல் வருவார்கள். வாய் இருந்தால் தானே,வாய் வழியாக பேசப்படும். எனவே அப்படி கட்டணத்தைக் குறைத்து அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்.


நிறைய படங்கள் வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதனால் என்ன பயன்?வாராவாரம் வருகிற ஆறு - ஏழு படங்களில் எத்தனை உருப்படியாக உள்ளன? நிறைய உப்புமா படங்கள் வருவதால் தான் சினிமாவில் பிரச்சனையே வருகிறது நீங்கள் படத்தின் தரத்தைப் பார்த்து வடிகட்டி இந்த  வாய்ப்பைக் கொடுக்கலாம். முதல் 100 டிக்கெட் 50 ரூபாய் 75 ரூபாய் என்றாவது நீங்கள் கொடுக்கலாம்.


ஒரு காலத்தில் சிவாஜி எம்ஜிஆர் படங்கள், பிறகு ரஜினி கமல் படங்கள், விஜய் அஜித் படங்கள் என்று இரண்டு வகையான படங்களுக்கு தான் வரவேற்பு இருந்தது. அவை ஹீரோ கண்டன்ட் உள்ள படங்கள் என்று சொல்லலாம். இப்போது இரண்டு வகையான படங்கள் மட்டுமே வருகின்றன. ஒன்று ஹீரோ கண்டன்ட் படங்கள், அடுத்தது ஸ்டோரி கண்டன்ட் படங்கள். அதாவது கதாநாயகன் உள்ள படங்கள் ,கதையுள்ள படங்கள்.இந்த இரண்டு வகை மட்டுமே இப்போது உள்ளன.


 இப்படிக் கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட படமாக தான் இந்தப் படம் வந்திருக்கிறது'' என்றார்.


சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் பேசும்போது,


"நான் டீசர் பார்த்தேன் நன்றாக உள்ளது.

 இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அமைதியாக இருப்பார்,பேசமாட்டார் என்று சொன்னார்கள்.  ஆனால் தனது படம் பேசட்டும் என்று இருக்கிறார். அவரது படம் பேசும். 

எனது இயக்குநர் செல்வராகவன் கூறுவார், படத்தில் எவ்வளவு உழைப்பு காட்டுகிறோமோ அது பலனாகத் திரும்ப வரும் என்பார் .அப்படி இந்த படத்திற்காக அனைவரும் உழைத்துள்ளார்கள். அதற்குரிய பலன் கிடைக்கும் எனக்கு தனுஷ் எவ்வளவு பிடிக்கு மோ அவ்வளவு சித்துவைப் பிடிக்கும். அப்படிப்பட்ட திறமை கொண்ட இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.படக்குழுவினருக்கு  வாழ்த்துக்கள்" என்றார்.


இயக்குநர் பாலாஜி பேசும்போது,


"இது ஒரு உணர்ச்சிகரமான மேடை .ஒரு முடிவிலிருந்து மீண்டும் நாங்கள் வந்திருக்கிறோம். முடிவு என்கிற நிலையில் இருந்து மீண்டும் வந்து இங்கே நிற்கிறோம். இதற்காகப் பலரும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த ஆதரவுகளின் பலம்தான் என்னை நடத்தி வந்து இருக்கிறது.


நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் சினிமாவை அனுமதிக்காத குடும்பத்திலிருந்து இங்கே வந்தவன்.இங்கே வந்த பிறகுதான் சினிமாவில் உள்ள பிரச்சினைகள் தெரிந்தன.


யாருமே இப்படி ஒரு முடிவிலிருந்து துடைத்தெறியப்பட்டதிலிருந்து மீண்டு எழுந்து வர மாட்டார்கள். நாங்கள் மறுபடியும் தொடங்கி இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். உடன் நின்று உழைத்த மனிதர்களின் ஆதரவும் ஊக்கமும்  தட்டிக் கொடுக்கும் நம்பிக்கையும்தான்   எங்களை  இவ்வளவு தூரம் இப்படிக் கொண்டு வந்து நிறுத்திருக்கிறது. முதல் ஹீரோ செய்த பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் சித்து ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இப்படி நடிக்க ஒப்புக்கொள்வது சிரமம். ஆனால் சித்து சமரசம் செய்து நடிக்க வந்தார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். தர்ஷிகாவுக்கும் நல்ல படமாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்துள்ள ஜெயக்குமார் சாரை பல இரவுகள் நான் கொடுமைப்படுத்தி இருக்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சார்.

படத்தில் ஆங்கிலத் தலைப்பு வைத்தது பற்றி கேட்கிறார்கள். எனக்குச் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் அப்படி வைத்தேன் .பொருத்தமாக இருக்கிறது.அந்த மலைக் கிராமத்தில்  ஒவ்வொரு ஏழு  ஆண்டுக்குப் பிறகு வருகிற ஜூன் மாதத்தில் ஆண்கள் எல்லாம் இறந்து போவார்கள் என்பது நம்பிக்கை. இதை அடிப்படையாக வைத்துத்தான் டார்க் அந்தத் தலைப்பை வைத்தோம்.


எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்த என் தேவதை  செந்தில்குமாரிக்கு என் நன்றி" என்றார் .


படத்தின் நாயகன் சித்து பேசும்போது,


" எனது வாழ்க்கையை தொடங்கி வைத்து எனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த இயக்குநர் மித்ரன் ஜவஹர் சார் இங்கே வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றி. அவர் அறிமுகத்தால் தான் இந்த வண்டி இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது. என்னுடைய குடும்பமாக அவர் இருக்கிறார். எப்போதும் அமைதியாக இருப்பவர்.எப்படிப்பட்ட விஷயத்தையும் அவர் எளிதாகக் கையாள்வார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும்.இது அனைவருக்கும் தேவை. நான் எதுவாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து மனதில் போட்டு குழப்பிக் கொள்வேன்.நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.


எனது மனைவி  ஷ்ரேயா எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்.அவர் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.


பொதுவாக இன்ஸ்டாகிராம் பார்த்து நான் பதற்றம் அடைவேன் .இன்ஸ்டாகிராமில் எதுவுமே நேர்நிலையாக வருவதில்லை .அங்கு அது நடந்தது, இங்கே இது நடந்தது என்று எதிர்மறையாகவே வருகின்றன. பார்க்கவே பயமாக இருக்கும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு பயங்கரமான ஒரு கெட்ட நேரம் என்று தோன்றியது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை பல பிரச்சினைகள் என்று இருந்தன.மிகவும் மன அழுத்தத்திலிருந்து  கொண்டிருந்தேன்.அடுத்த கட்டம் என்ன என்று புரியாமல் இருந்தேன், நிறைய யோசித்தேன். நமக்கு நேரம் சரியில்லையோ, ஒரு ராசி சரியில்லையோ என்று யூட்யூபில் பார்க்கும்போது மேலும் மன அழுத்தம் அதிகமானது. தலைப்புகளைப் பார்க்கும் போதே மோசமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொன்றும் நம்மை பயமுறுத்துவது போலவே இருக்கும்.வயது வரம்பைக் கடந்து நடக்கப் போகிறது, வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது,இந்தத் தேதியில் இது நடந்தே தீரும் என்று எல்லாம் பயமுறுத்தினார்கள். இது வேலைக்காகாது என்று அதைப் பார்ப்பதை விட்டு விட்டேன். 


அப்போதெல்லாம் நான்வருத்தமாக மன அழுத்தத்தில் இருந்தாலும் அதை கூல் கூல் என்று கூறி தணிப்பது என் மனைவி ஷ்ரேயா தான். 


எல்லாரையும் போலவே நல்ல படம் நல்ல பாத்திரம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஒரு நாள் என்னை இயக்குநர் பாலாஜி தொலைபேசியில் அழைத்தார். சந்திக்க வேண்டும் என்றார்.அப்பொழுது எனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று நினைத்தேன்.நான் 'டி3 'படம் பார்த்ததில்லை. இருந்தாலும் தொழில் நுப்ப ரீதியாக ட்ரெய்லர் டீசர் எல்லாம் நன்றாக இருந்தன. பிறகு நானே அழைத்தேன் போய்ச் சந்தித்தேன், கதை கூறினார் நன்றாக இருந்தது.போலீஸ் வேடம் என்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. புதிதாகவும் இருக்கும் சவாலாகவும் இருக்கும் என்று தோன்றியது. அவர் நல்ல திறமைசாலி. அவர் திறமைக்கு பெரிய இடத்துக்கு செல்வார் .யாரையும் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள்.அவர் அப்படிப்பட்ட நேர்த்தியான வேலைக்காரர்.


இந்தப் படத்தில் அவர் எடுத்திருக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது எந்தக் குறையும் சொல்ல முடியாது. எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து எடுத்திருந்தாலும் அதைப் போட்டு பார்க்கும் போது இன்னும் நன்றாக  செய்திருக்கலாம் என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால் அவர் எடுத்து இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் ஒரு திருத்தம் கூட சொல்ல முடியாது. திருத்தத்துக்கு வேலை இருக்காது. அவ்வளவு சரியாக செய்வார். நள்ளிரவு இரண்டு மணிக்குப்  படப்பிடிப்பு நடக்கும். இருந்தாலும் அவர் அசராமல் இருப்பார்.



வேலை பார்க்காமலே உடல் வலி இருக்கும் அளவிற்கு நாங்கள் படப்பிடிப்பு இடத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.அதற்குப் பிறகு போய் படப்பிடிப்பு நடத்தினோம். படக்குழுவினர் அத்தனை பேரும் அவ்வளவு உழைத்தார்கள்.


இன்ஸ்டாகிராமைப் பார்த்து நமது நண்பர்களைப் பற்றி அறிய முடிந்தது .இன்ஸ்டாகிராமில் நாம் சிரமத்தில் இருக்கும் போது ஆறுதலாகசொல்வார்கள் என்று போஸ்ட் போடும்போது ஆறுதலாக கமெண்ட்ஸ்கள் வரும்.ஆனால் சற்று முன்னேறி நல்ல விஷயத்திற்காக வாழ்த்துக்கள் எதிர்பார்த்து போடும்போது வராது.

முகம் தெரியாதவர்கள் கூட ஆதரவு தந்து வாழ்த்தியிருந்தார்கள். ஆனால் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்த மனதில்லை. அப்போது 'டாடா' படத்தில் வரும் கவின் பேசும் வசனம் தான் என் நினைவுக்கு வந்தது. 'நாம் நல்லா இருக்கலாம் . ஆனா உங்களைவிட நான் நல்லா இருந்திடக் கூடாது' என்று தான் நினைப்பார்கள்.அப்படி பல நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டேன். இந்தப்படம் நன்றாக வந்து இருக்கிறது அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் "என்றார்.


நடிகர் சித்துவின் மனைவி  ஷ்ரேயா பேசும்போது,


 "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .சித்துவின் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இதுவரை அவரது கடின உழைப்பால் தான் வந்திருக்கிறார்.எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

AZORTE EXPANDS SOUTHWARD WITH ITS 2nd FASHION

 AZORTE EXPANDS SOUTHWARD WITH ITS 2nd FASHION

 NEOSTORE AT PHOENIX MARKETCITY CHENNAI

Marked by a Glamorous Launch with *Actress Krithi Shetty*

 Following the success of its Mumbai launch, Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai. Spanning an impressive 15,211 sq. ft., this new destination continued AZORTE’s vision of redefining fashion retail through technology, inclusivity, and contemporary style.

 

To mark the grand opening, actor and youth icon Krithi Shetty inaugurated the AZORTE store and interacted with fans and shoppers, celebrating the city’s dynamic and fashion-forward spirit.

 

AZORTE is India’s only fashion neostore, designed to blend global trends. The store showcases an extensive curation across women’s wear, men’s wear, kids, and accessories, while embracing the brand’s core philosophy - “Your Safe Space” - a welcoming environment that encourages individuality and self-expression.

 

The Chennai store features several next-gen retail innovations, including:

Smart Trial Rooms with contextual styling recommendations

Interactive Digital Screens displaying the brand’s endless aisle offerings

RFID & QR Code Technology for seamless inventory management and product discovery

Self Check-In and Check-Out counters offering an agile, frictionless shopping experience

Krithi Shetty, known for her effortless style and vibrant personality, inaugurated the store on October 18, interacted with fans, explored the collection, and celebrated AZORTE’s arrival in Chennai.


With the opening of its Phoenix Marketcity stores in Mumbai and Chennai, AZORTE now operates 43 stores across India, continuing its mission to deliver immersive, tech-driven, and fashion-forward retail experiences across major metros.

 

Commenting on the milestone, Dhaval Doshi, Head of Marketing, AZORTE, said, “Chennai’s vibrant energy and evolving fashion landscape made it the perfect city for AZORTE’s next chapter. This store was designed to give customers more than just products; it was an experience that blended fashion, technology, and individuality seamlessly.”

 

About AZORTE 

AZORTE redefines high-street fashion by blending contemporary Indian and international trends, giving Gen Z the freedom to express their unique style. From statement-making pieces to reinvented classics, AZORTE ensures that fashion remains an extension of one's evolving identity.

About Phoenix Marketcity, Chennai:

A premier destination for a luxury lifestyle, it provides guests with a variety of opulent options. Phoenix continues to be "The" destination for the most affluent and sophisticated residents of the city as well as expats thanks to its truly international appearance and feel, elegantly decorated interiors, and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it's a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment, and leisure options.

அசோர்ட் தனது 2வது ஃபேஷன் கடையுடன் தெற்கு நோக்கி விரிவடைகிறது

 அசோர்ட் தனது 2வது ஃபேஷன் கடையுடன் தெற்கு நோக்கி விரிவடைகிறது

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நியோஸ்டோர்

*நடிகை கிருத்தி ஷெட்டியின் கவர்ச்சிகரமான அறிமுகத்தால் தனித்துவம் பெற்றுள்ளது* 

சென்னை, 18 அக்டோபர் 2025: மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடெய்லின் பிரீமியம் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டான அசோர்ட், சென்னையின் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அதன் புத்தம் புதிய கடையைத் திறப்பதன் மூலம் தெற்கில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. 15,211 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆல்-நியூ ஸ்டோர், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்  கொண்ட சமகால பாணி மூலம் ஃபேஷன் சில்லறை விற்பனையை மேம்படுத்தும் அசோர்ட் இன் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக இருக்கும். 



பிரமாண்டமான திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், நடிகையும் இளைஞர்களின் ஐகானுமான கிருத்தி ஷெட்டி அசோர்ட் கடையைத் திறந்து வைத்து, ரசிகர்கள் மற்றும் நுகர்வோர்களுடன் உரையாடி, நகரத்தின் டைனமிக் மற்றும் ஃபேஷன்-ஃபார்வாட் ஸ்பிரிட்டைக் கொண்டாடினார்.



அசோர்ட் என்பது இந்தியாவின் ஒரே ஃபேஷன் நியோஸ்டோர் ஆகும், இது குளோபல் டிரெண்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோர் பெண்களுக்கான ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் பரந்த அளவிளான க்யூரேஷன்களின் தொகுப்பைக் காட்டுகிறது, அதே நேரத்தில் இது "யுவர் ஸேஃப் பிளேஸ்" என்ற பிராண்டின் முக்கிய தத்துவத்தை உள்ளடக்கியிருப்பதுடன்.  தனித்துவத்தையும் சுய வெளிப்பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு வரவேற்கத்தக்க சூழலை உருவாக்குகிறது.



சென்னை ஸ்டோரில் பலவகைப்பட்ட நெக்ஸ்ட்-ஜென் புத்தம் புதிய சில்லறை விற்பனைகள் உள்ளன, அவற்றுடன்:

● சூழல் சார்ந்த ஸ்டைலிங் பரிந்துரைகளுடன் கூடிய ஸ்மார்ட் ட்ரையல் ரூம்கள்.

● நடைபாதைகளில் பிராண்டின் எண்ட்லஸ் ஆஃபர்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான ஊடாடும் டிஜிட்டல் திரைகள்.

● தடையற்ற சரக்கு மேலாண்மை மற்றும் தயாரிப்பு பொருட்களை கண்டறிவதற்கான RFID & QR குறியீடு தொழில்நுட்பம்.

● உற்சாகமூட்டும், நெருக்கடி இல்லாத ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் சுய செக்-இன் மற்றும் செக்-அவுட் கவுண்டர்கள்.



தனது எளிமையான பாணி மற்றும் துடிப்பான ஆளுமைக்கு பெயர் பெற்ற கிருத்தி ஷெட்டி, அக்டோபர் 18 அன்று கடையைத் திறந்து வைத்து ரசிகர்களுடன் உரையாடினார், கலக்ஷன்களைப் பார்வையிட்டார், சென்னையில் அசோர்ட் அறிமுகப்படுத்தப்பட்டதை கொண்டாடினார்.



மும்பை மற்றும் சென்னையில் தனது பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி கடைகளைத் திறப்பதன் மூலம் அசோர்ட் இப்போது இந்தியா முழுவதும் 43 கடைகளை இயக்குகிறது, முக்கிய பெருநகரங்களில் அதிவேக, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் ஃபேஷன்-ஃபார்வர்டு சில்லறை விற்பனை அனுபவங்களை வழங்குவதற்கான அதன் இலக்கைத் தொடர்கிறது.


தங்களது மைல்கல் குறித்து அசோர்ட் சந்தைப்படுத்தல் தலைவர் தவால் தோஷி கூறுகையில், "சென்னையின் கிளர்ச்சிட்டும் வகையிலான உற்சாகம் மற்றும் வளர்ந்து வரும் ஃபேஷன் லேண்ட்ஸ்கேப் அசோர்டின் அடுத்த அத்தியாயத்திற்கு ஏற்ற நகரமாக அமைந்தது. இந்த கடை வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளைத் தவிர அதிக அளவிலான பிற தயாரிப்புகளையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஃபேஷன், தொழில்நுட்பத்துடன் எல்லையற்ற தனித்துவத்துடன் கூடிய ஒரு அனுபவமாக இருக்கும்."