Featured post

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 *பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடி...

Wednesday, 24 December 2025

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 *பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு*







*கென் கருணாஸ் இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு*


தேசிய விருதினை வென்ற 'அசுரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.


நடிகர் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி  யாதவ், நளினி ஆகியோருடன் டிஜிட்டல் திரை பிரபலங்களான சின்ன தமிழா-  தாஜ்மோலா - கெட்டவன் மணிகண்டன்- கேரன் வின்சென்ட் - உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

 

''இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் பாரம்பரியமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடைவிடாமல் அறுபது நாட்கள் வரை நடைபெற்றது. மாணவ மாணவியர்களின் பள்ளிக்கூட வாழ்க்கையை திரையில் நேர்த்தியாக காட்சிப்படுத்துவதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தினமும் குறைந்த பட்சம் நூறு துணை நடிகர்கள் கலந்து கொண்டனர். முக்கிய காட்சிகளை படமாக்கும் போது 300 முதல் 450 துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும் படத்தின் முக்கிய பகுதியை படமாக்குவதற்காக படக் குழுவினர் கேரளாவில் உள்ள ஆலப்புழாவிற்கும் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டனர்.  


ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான பாடல் காட்சிக்கு நடன இயக்குநர் ஷோபி மாஸ்டரின் நடன அசைவில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.  


மூத்த நடிகை நளினி இப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். 


இப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே வியாபார ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. அறிமுக கதாநாயகன் - அறிமுக இயக்குநர் - அறிமுக தயாரிப்பு நிறுவனம் - எனும் இந்த கூட்டணிக்கு இது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. 


இத்திரைப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. 

அத்துடன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று வெளியாகும் '' என தெரிவித்தனர்.

Paruthi Movie Review

Paruthi Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம paruthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது குரு A.  இவரு director bharatiraja க்கு assitant அ இருந்திருக்காரு. sonia agarwal தான் main role ல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம். 



tamilnadu ல இருக்கற northern district ல இந்த படத்தோட கதையை நடக்கற மாதிரி காமிச்சிருக்கங்க. இந்த எடத்துல ஒரு சின்ன கிராமத்தை காமிக்கறாங்க. இந்த ஊர்ல இருக்கற முக்காவாசி பேர் ஜாதி வெறி பிடிச்சவங்கள தான் இருக்காங்க. இப்போ அந்த ஊர் ல இருக்கற ஒரு பாட்டி ரெண்டு சின்ன பசங்கள வளக்கறாங்க. இந்த ரெண்டு பசங்கள் ல ரெண்டாவுது பையன் அவனோட படிக்கற ஒரு பொண்ணு கூட நல்ல close அ பழகி நல்ல விளையாடிட்டு இருப்பான். இப்போ அந்த பொண்ணு பெரியஎடத்து பொண்ண இருக்கும். இருந்தாலும் இந்த பொண்ணோட அப்பாவும் அம்மாவும் ஜாதி மதம் லாம் பாக்கமாட்டாங்க. ஆனா இவங்களோட சொந்தக்காரங்க ல ஒரு சில பேர் ஜாதி வெறி பிடிச்சவங்க. இன்னொரு பக்கம் அந்த ஊர் ல ஒரு ஜோடி love பண்ணிட்டு இருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் வேற வேற ஜாதிய சேந்தவங்க அதுனால இவங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து காத்துகிட்டு  இருக்கும். இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


sonia agarwal ஓட character அ படத்தோட ஆரம்பத்துல இருந்து ரொம்ப suspense அ தான்  வச்சிருப்பாங்க. அதுக்கு அப்புறம் தான் இவங்களோட character அ reveal பண்ணுவாங்க. இவங்கள தவிர வேற எல்லாருமே இந்த படத்துல புது ஆட்கள் தான். எல்லாருமே அவங்களோட role ல புரிஞ்சுகிட்டு ஒரு நல்ல performance அ குடுத்திருக்கங்க. ranjith vasudev ஓட music and songs இந்த படத்துக்கு நல்ல பலமா அமைச்சிருக்கு. rajeshkumar ஓட cinematography கிராமத்தோட அழகா அப்படியே நம்ம  கண்முன்னாடி கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். 

   

ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ உங்க family and friends  ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

RMV The Kingmaker Documentary Review

 RMV The Kingmaker Documentary Review  

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the  kingmaker  ன்ற ஒரு documentry படத்தை பத்தி தான் பாக்க போறோம். r m veerappan  அவர்களோட life ல நடந்த பல முக்கியமான விஷயங்களை இந்த documentry ல cover பண்ணிருப்பாங்க. 



இவரு யாரு னு என்னன்றதா நம்ம இதுல detailed  அ பாக்கலாம். இவரு ஒரு senior political leader அப்புறம் satyamovies ன்ற ஒரு production company யும் வச்சுருந்தாரு. இவரு அந்த காலத்துல இருந்த periyar, arignar anna , MGR, karunanithi ஓட ரொம்ப close அ இருந்திருக்காரு. DMK ல இருந்து MGR விலகி வந்தஉடனே MGR க்கு support அ இருந்து ADMK கட்சி யா ஆரம்பிச்சாங்க. MGR அப்புறம் JAYALALITHA அவர்கள் முதல் அமைச்சரா இருந்தபோது இவரு 1977 ல இருந்து 1996 வரைக்கும் 5 தடவை minister அ இருந்தாரு. இவரு legislative assembly ளையும் member அ இருந்திருக்காரு. 


 25 படங்களுக்கு மேல இவரு produce பண்ணிருக்காரு. அதுமட்டுமில்ல  இவரு நெறய blockbuster படங்களையும் குடுத்திருக்காரு. deivathaai , kavalkaran , moondrumugam , batsha னு நெறய சொல்லிட்டே போகலாம். இப்போ இருக்கற generation க்கு இவரை பத்தி தெரியணும்ன்றதுக்காக இந்த ஒரு முயற்சி எடுத்திருக்காங்க satyamovies  ஓட head thangaraj veerapan . padam venukumar யும் அவரோட team மும் தான் இந்த documentry யா create பண்ணிருக்காங்க. RMV the kingmaker னு ஒரு tribute song யும் sep 9 ஆம் தேதி release பண்ணிருந்தாங்க. sep 9 aam தேதி தான் R M veerappan அவர்களுடைய 99 ஆவுது பிறந்தநாள். தமிழ் சினிமா ல இருக்கற பல பிரபலங்கள் அரசியல் வாதிகள் னு நெறய பேர் அவரோட அனுபவங்களை இந்த documentry ல share பண்ணிருக்காங்க. இந்த documentry ஓட preview யா இந்த வருஷம் april 9 ஆம் தேதி release பன்னிருத்தாங்க. அதுல rajinikanth யும் முதலமைச்சர் stalin யும் அவங்களோட அனுபவங்களை share பண்ணிருப்பாங்க. 


பத்திரிக்கையாளர் ஆனா ரா கண்ணன் பேசும்போது, 1969 ல நடந்த election ல DMK கட்சி தான் ஜெய்க்குது. இதுக்கு மிக முக்கிய காரணம் MGR அவர்கள் தான். இருந்தாலும்  karunanithi அவர்கள் MGR க்கு எந்த ஒரு minister பொறுப்பை கொடுக்கல. அதுமட்டுமில்ல இவங்க ரெண்டு பேருக்கும் நெறய கருத்துவேறுபாடு வரவும் கடைசியா தனிக்கட்சியை ஆரம்பிக்க போறேன் னு MGR முடிவு எடுக்குறாரு. இவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கறதுக்காக veerappan try பண்ணுறாரு அது முடியல. கடைசில veerappan MGR க்கு உறுதுணையா இருந்து ADMK கட்சியை ஆரம்பிக்க உதவி பண்ணிருக்காரு. புது கட்சியை ஆரம்பிக்க போறத MGR announce பண்ணும்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் னு தான் MGR பேசிருப்பாரு. இந்த மாதிரி வரிகளை எழுதி குடுத்தது R M veerpan தான். 


superstar rajinikanth பேசும்போது , Basha படத்தோட 100 days celebration ல rajini பேசுனா அரசியல் னால veerapan ஓட பதவி பறிபோச்சு. என்ன தான் rajini பொதுவான அரசியல் கருத்துகளை வெளி படுத்தினாலும் indirect அ அது அப்போ முதலமைச்சரா இருந்த jayalalitha அவர்களை சுட்டி காமிக்குது னு எல்லாரும் நினைச்சாங்க. இவரு பேசுனதுனால தான் பதவி போய்டுச்சுன்னு கேள்விப்பட்டு அவரோட வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்டுருக்காரு. ஆனா veerapan அதெல்லாம் ஒன்னு  கிடையாது நீங்க கவலைப்படாதீங்க னு சொல்லிருக்காரு. 


முதலமைச்சர் stalin பேசும்போது , அரசியல் ல நம்பகத்தன்மையான ஆட்கள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அந்தவிதத்துல RM veerapan dmk கட்சிக்கு விசுவாசமே இருந்தாரு னு share பண்ணிருக்காரு. இந்த மாதிரி சரத்குமார், திருமாவளவன், தமிழிசை, ரங்கராஜ பாண்டே, ஜெகத்ரட்சகன் னு பலர் அவங்களோட அனுபவங்களை share  பண்ணிருக்காங்க. 


இந்த documentry ஓட மொத்த duration  2 மணிநேரம். இவங்க சொல்லுற விஷயங்களை வச்சு Veerappan  ஒரு எப்படி பட்ட மனிதர் அவரோட journey  எப்படி இருந்தது னு நல்ல புரிஞ்சுக்கலம். இவருக்கு periyar  ஓட கொள்கைகள் ரொம்ப பிடிக்கும். இது தான் முக்கியமான காரணம் dmk  கட்சில சேருறதுக்கு. அதுமட்டுமில்ல அறநிலைத்துறை அமைச்சரா இருந்து srirangam கோயில் ஓட கோபுரத்தை சீரமைச்சிருக்கு இந்த மாதிரி பல interesting  ஆனா விஷயங்களை இந்த documentry  ல குடுத்திருக்காங்க. 


இப்போ நடக்கற அரசியல் யும் அதுல இருக்கற அரசியல்வாதிகளை பத்தி தெரியணும்னா நம்ம கண்டிப்பா கடந்த காலத்துல இந்த காட்சிகள் எப்படி வந்தது யாரெல்லாம் பெரிய ஆட்களா இருந்தாங்க ன்றது தெரிறதும் ரொம்ப முக்கியம். அதுக்கு ஏத்த மாதிரி இந்த documentry யா குடுத்திருக்காங்க. சோ எல்லாரும் பாக்கவேண்டிய documentry படம் தான் இது. சோ miss பண்ணாம பாருங்க.

Sirai Movie Review

Sirai Movie Review, Sirai Movie Rating 4.5/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம sirai படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது suresh rajakumari . vikram prabhu வும் akshay kumar யும் தான் main role ல நடிச்சிருக்காங்க. akshay kumar இந்த படத்தோட producer ஆனா lalit kumar ஓட பையன். இந்த படம் மூலமா இவரு actor அ அறிமுகம் ஆகுறாரு. இந்த படத்தோட கதையை tanakkaran ஓட director tamil தான் எழுதி இருக்காரு. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம். 

Sirai Movie Video Review;

https://youtu.be/0YbtEeh7GPs?si=6ylDjR0sXXVZosG2

kathiravan அ நடிச்சிருக்க vikramprabhu ஒரு நேர்மையான police constable அ இருக்காரு. court க்கு வாய்தா வாங்குறதுக்காக ஒரு கொலை குற்றவாளியான abdul அ நடிச்சிருக்க akshay kumar யா velore ல இருந்து sivagangai க்கு கூட்டிட்டு போறாரு கதிரவன். இவரு கிட்ட இருந்து தப்பிச்சிடலாமா னு abdul யோசிப்பான். ஆனா நேரம் போக போக kathiravan  கிட்ட abdul அவருக்கு நடந்த சோகமான கதையை சொல்லுறாரு. abdul க்கு kalaiarasi யா நடிச்சிருக்க anishma தான் girlfriend அ இருப்பாங்க. எதிர்பாக்காத ஒரு incident abdul ஓட life ல நடந்திருக்கும் அதோட விளைவா தான் ஒருத்தர கொலை பண்ணிருப்பாரு. abdul ஓட situation அ புரிஞ்சுக்குறாரு kathiravan . இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half ல நமக்கு custody ல இருக்கற procedures , police work னு எல்லாமே detailed அ காமிச்சிருப்பாங்க. அதே மாதிரி vikram prabhu ஒரு constable அ அவரால என்ன பண்ண முடியுமோ அதா தான் பண்ணுவாரு. ரொம்ப heroic அ இவரை காமிச்சிருக்கமாட்டாங்க. கதையை எடுத்துட்டு போன விதமும் realistic அ slow அ tension அ build பண்ணுற மாதிரி இருந்தது.  படத்தோட ஆரம்பத்துல வர 20 நிமிஷமும் interval scene நும் தான் இந்த கதைக்கு ரொம்ப முக்கியமா இருக்கு. படத்தோட second half ல தான் கதை ரொம்ப emotional அ போகும். law system எல்லாருக்கும் equal அ இல்லாதனால சில பேர் இதுல மாட்டிகிட்டு எப்படி கஷ்டப்படுறாங்க ன்றது தான் இந்த படத்தோட முக்கிய emotional  core அ இருக்கும்.  abdul அப்புறம் இவரோட  girlfriend kalaiyarasi ஓட life இதுனால தான் பாதிக்கபற்றுக்கும். அதே மாதிரி நெறய எடத்துல twist and turns யும் வச்சுருக்காங்க. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vikramprabhu ஓட acting அ பத்தி சொல்லியே ஆகணும். ஏற்கனவே tanakkaran படத்துல இவரோட performance அட்டகாசமா இருந்தது. இப்போ இந்த படத்துல ஒரு constable அ ஒரு genuine ஆனா performance அ குடுத்திருக்காங்க. இவரோட body language, dialogue delivery னு எல்லாமே பக்காவா இருந்தது. akshay kumar க்கு இது தான் முதல் படமா இருந்தாலும் கொலை குற்றவாளியா அ நடிச்சு ஒரு emotional  ஆனா performance  அ குடுத்திருக்காரு.  ashima ஓட performance  யும் நல்ல இருந்தது. படத்துல நடிச்சிருக்க மத்த supporting  actors யும் அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு நல்ல perform  பண்ணிருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது suresh rajakumari ஓட direction ரொம்ப genuine ஆவும் confident ஆவும் இருந்தது. police procedures எல்லாம் factual  அ குடுத்திருக்காரு. இந்த படத்தோட கதைய sharp ஆவும் emotional ஆவும் கொண்டு வந்திருக்காரு. madhesh ஓட cinematography இந்த கதைக்கு நல்ல set யிருந்தது. justin prabhakaran music இந்த படத்தை ஒரு படி மேல எடுத்துட்டு போயிருக்குனு தான் சொல்லணும். முக்கியமா emotional  scenes  க்கு பக்கவா suit யிருந்தது. philomin raj ஓட editing யும் sharp  and short அ இருந்தது. 


மொத்தத்துல audience ஓட கவனத்தை சிதறாத மாதிரி அமைச்சிருக்க கதைக்களம், actors ஓட அசத்தலான performance , ஒரு social message அ சொல்லுற விதமா அமைச்சிருக்க  படம் தான் இது. சோ உங்க family and friends  ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Tuesday, 23 December 2025

சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

 *"சிறை"  திரைப்பட  முன் வெளியீட்டு விழா !!*










செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”


வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில்,  பட  வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். 


இந்நிகழ்வில்..


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,


முதலில் திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் அவரிடம் இரண்டு வருடங்களாக பேச வில்லை, ஆனால் நான் அழைத்தவுடன் எனக்காக நான் இல்லாமல் விழா நடக்குமா எனக் கேட்டு வந்தார். எஸ் ஏ சி சாரை  சுப்பிரமணி அண்ணன் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது அவரது குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன். கலைப்புலி தாணு, அம்மா சிவா, சுரேஷ் காமாட்சி என அனைவருக்கும் நன்றி.


சிறை ஒரு நிறைவான அனுபவம். முதன் முதலில் கதை கேட்ட போது, இயக்குநர் தமிழ் ஒரு ஒன் லைன் இருக்கிறது என்றார். அவர் சொல்லி முடித்தவுடன் இதில் என் பையனை நடிக்க வைக்கலாமா ? எனக்கேட்டேன், அவர் யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இல்லை எனக்கு வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும் என் பையன் இந்த மாதிரி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்றேன். பின் அவர் இயக்க முடியாத சூழலில் யாரை இயக்குநராக்கலாம் என்றபோது, சுரேஷை பரிந்துரைத்தார். வெற்றிமாறன் சாரிடம் கேட்டோம் தாராளமாகச் செய்யுங்கள் என வாழ்த்தினார். அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என்ற போது, தமிழ் விக்ரம் பிரபு மட்டும் தான் இதற்குப் பொருத்தமானவர் என்றார். எடிட்டிங் பணிகளுக்கு பிலோமின் ராஜ் தான் வேண்டும் என்றேன், அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். மியூசிக் முதற்கொண்டு பிலோமின் மேற்பார்வையில் விட்டுவிட்டேன், இப்படத்தைத் தூக்கி நிறுத்தியது பிலோமின் தான். மாதேஷ் கேமரா அருமையாக செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியில் தெரிய ஒரே காரணம் விஜய் சார் தான். அவர் படம் மாஸ்டர் லியோ தான் எங்களுக்கு அடையாளம் அதை மறக்கவே மாட்டேன். இந்தப்படத்தை நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பீர்கள் எனத் தெரியும் அனைவருக்கும் நன்றி.


இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது..,

 

இந்த புராஜக்டில் இருப்பது எனக்கு பெருமை. பிலோமின் தான் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தார். இயக்குநர் சுரேஷிடம் நான் இல்லாவிட்டாலும் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனச் சொன்னேன். அவ்வளவு அருமையான கதை. இந்தப்படத்திற்கு உயிர் தந்தது நடிகர்கள் தான். விக்ரம் பிரபு, அனந்தா அக்‌ஷய் குமார் எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த என் இசைக் கலைஞர்களுக்கு என் நன்றிகள், முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு என் நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.


நடிகை ஆனந்தா பேசியதாவது..,

 

சிறை என் முதல் படம், எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. நான் விக்ரம் பிரபு சார் ஜோடியாக நடித்துள்ளேன். எனக்கு வாய்ப்பு தந்த லலித் குமார் சார், சுரேஷ் சார் எல்லோருக்கும் நன்றி. நான் திரைக்குடும்பம் இல்லை. நான் ஆசையில் தான் இந்தப்பட ஆடிஷன் சென்றேன். தமிழ் சார் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு என் நன்றி. ஒரு கனவு நனவானது போல இருக்கிறது அனைவருக்கும் நன்றி.


நடிகை அனிஷ்மா பேசியதாவது..,



இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த சுரேஷ் சாருக்கு, லலித் சாருக்கு நன்றி. விக்ரம் பிரபு சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அக்‌ஷய் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். இப்போது நல்ல நண்பராகி விட்டார். இருவருக்கும் மதுரை சென்றது ஒரு ஸ்கூல் போன மாதிரி இருந்தது. சூரி சார் தான் எங்களை வழிநடத்தினார். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.


இயக்குநர் தமிழ் பேசியதாவது..,

 

நன்றி சொல்லத்தான் இந்த மேடைக்கு வந்துள்ளேன். பிலோமின் தான் லலித் சாரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் ஆனால் அவர் வெற்றிமாறன் படம் மாதிரி வேண்டும் என்றார். ஒரு ஒன்லைன் இருக்கிறது என்று உண்மை சம்பவமாகத் தான் இந்தக் கதை பற்றிச் சொன்னேன். இந்தக்கதையை நாம் செய்வோம் என்றார். அதன் பிறகு சுரேஷ் சார் வந்தார் வெற்றிமாறன் உதவியாளர் என்றால் ஓகே என்று லலித் சார் சொன்னார்.  நம் எழுதிய கதையை நாமே பார்த்து அழ வைப்பது மிகப்பெரிய விசயம், அதை சுரேஷ் சார் செய்துள்ளார். நாம் போய் கதை சொன்னால் கதை கேட்க ஒருத்தர் இருக்கிறார் என விக்ரம் பிரபு  சாரிடம் போனேன், அவரும் கதை கேட்டு செய்கிறேன் என்றேன். இந்தக்கதை உண்மை சம்பவம். உண்மையானவர்களைப் பார்த்த ஒரே ஆள் நான் தான், ஆனால் அவர்கள் முகம் மறைந்து இப்போது  அக்‌ஷய், அனிஷா முகம் தான் ஞாபகத்தில் வருகிறது. இதில் எல்லோரும் அவ்வளவு உழைத்தார்கள். பிலோமின்,  மாதேஷ் எல்லோரும் எங்களுடைய குடும்ப டீம்.  என்னை வடிவமைத்தவர் வெற்றிமாறன் சார் தான். விசாரணை ஷீட்டிங்கில் ஏதாவது கதை வைத்திருக்கிறாயா? என்றார். நான் டபுள் ஹீரோ கதை சொன்னேன். உன் பலமே போலீஸ் தான் அதில் உனக்குத் தெரிந்ததை வைத்துக் கதை எழுது என்றார். அப்படி உருவானது தான் டாணாக்காரன், இப்போது சிறை. நான் செய்திருந்தால் கூட இப்படி எடுத்திருக்க மாட்டேன். நான் வெற்றி சார் மாதிரி லாஜிக் பார்ப்பேன் ஆனால் சுரேஷ் மேஜிக்கை செய்து அசத்திவிட்டார். சுரேஷ் சார் என்னை விடச் சிறப்பாகச் செய்து ஜெயித்தது எனக்கு சந்தோசம். படம் ஜெயித்தால் இன்னும் சந்தோசம் நன்றி.


நடிகர் அக்‌ஷய் குமார் பேசியதாவது..,

 

எக்ஸாம் ஹாலுக்கு போனது போல் எல்லாம் மறந்து விட்டது. முதலில் பிலோமின் சாருக்கு நன்றி. அவர் மகனுக்குக் கூட இவ்வளவு செய்திருக்க மாட்டார். மாதேஷ் சாரும் அவர் டீமும் அவ்வளவு எனர்ஜியாக உழைப்பார்கள் அவர்களுக்கு நன்றி. ஜஸ்டின் சார் உங்கள் இசையில் நடித்தது மகிழ்ச்சி. சுரேஷ் சார், தமிழ் சார்,  எந்த நம்பிக்கையில் என்னை நடிக்க வைத்தீர்கள் எனத் தெரியவில்லை, நீங்கள் இது கஷ்டமாக இருக்கும் எனச் சொன்னீர்கள், ஆனால் எல்லாவற்றையும் சொல்லித் தந்தீர்கள் நன்றி. விக்ரம் பிரபு சார் என் முதல் ஷாட்டே உங்களுடன் தான். எனக்கு நிறைய நடிக்க கற்றுத் தந்தீர்கள். நன்றி. சூரி சார் என்னையும், அனிஷாவையும் வீட்டு வேலை செய், சமை என்றெல்லாம் சொன்னார் எதுக்குடா எனத் தோன்றியது, ஆனால் நடிக்கும் போது தான் புரிந்தது. நன்றி. அனிஷா எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கும் தமிழில் அறிமுக படம். வாழ்த்துக்கள். இறுதியாக அப்பா, கண்டிப்பான புரடியூசர். அவர் கண்டிப்பாக இருந்தது எனக்கு உதவியாக இருந்தது. என அம்மா மற்றும் குடும்பத்திற்கு நன்றி. கஷ்டமாக இருந்தாலும் எனக்குப் பிடித்துச் செய்தேன் எல்லோரும் உதவி செய்தார்கள் நன்றி.


இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,

 

சிறை உண்மைக்கதை, உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். தமிழ் என்னிடம் சொல்லும்போது அப்படித்தான் சொன்னார். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே செய்து கொள்ளும் என்பார்கள் இப்படத்திலும் அது தான் நடந்தது. லலித் சார் வெற்றிமாறன் அஸிஸ்டெண்ட் என்றால் ஓகே என்றார், அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஐஸ்டின் எத்தனை சண்டை போட்டாலும் அவர் மிகச்சிறப்பான இசையைத் தருவார். பிலோமின் மிகப்பெரிய உதவியாக இருந்தார். நடிகர்களை கையாள்வது எனக்குக் கஷ்டம் சூரி அதைப்பார்த்துக்கொண்டார்.  மாதேஷ் முதல் அனைத்து கலைஞர்களும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். நடிகர்கள் எல்லோரது பெயரையும் சொல்வது கஷ்டம். எல்லோரும் குறிப்பிட்டு காலகட்டத்தில் முடிக்க பெரும் ஒத்துழைப்பு தந்தனர். விக்ரம் பிரபு சார் கிடைத்தது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். இக்கதாபாத்திரத்திற்காக உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்‌ஷய் கதைக்குள் வந்து, இக்கதாப்பாத்திரத்திற்காக மிக கடினமாக உழைத்தார். உடலை குறைத்து, தாடி மீசை வளர்த்தி, அந்த கதாபாத்திரமாக மாறினார். ஒரு இன்னொசன்ஸ் முகம் தேவைப்பட்டது அனிஷ்மாவிடம் அது இருந்தது, நன்றாக நடித்துள்ளார். அனந்தாவும் அவர் பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார். நான் வீட்டிலிருந்ததை விட வெற்றிமாறன் சாருடன் இருந்தது தான் அதிகம். ரஞ்சித் அண்ணன் தான் என்னை வெற்றிமாறனிடம் அனுப்பினார். அவருக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இந்த படத்திற்குள் ஒரு பொறுப்பு இருக்கிறது அதைச் சரியாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். அந்த பார்வையை எனக்குத் தந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி.  ரொம்ப முக்கியமான படம், நெருக்கமான படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,


தம்பி வெற்றிமாறன் பட்டறையில் தீட்டப்பட்ட இரு திறமைகள் சுரேஷ், தமிழ். இருவரும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் பார்த்தேன் மிக அற்புதமாக உள்ளது. விக்ரம் பிரபு காவலராகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் தந்தையிடம் பெருமையாகச் சொன்னேன். இப்படத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி  விளம்பரம் செய்து வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.


தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசியதாவது..,

 

இந்த வருடம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் தயாரிப்பாளராக ஆக ஆசைப்பட்டதில்லை, இயக்குநராக ஆசைப்பட்டு ஏதோ ஒரு வழியில் தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். என்னை மிக  மரியாதையாக நடத்திய லலித் சாருக்கு என் நன்றி. அக்‌ஷய் சில வருடங்கள் முன் துக்ளக் தர்பார் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார். அவர் மீண்டும் நடிப்பார் என நினைக்கவில்லை. இந்தப்படம் பார்த்துவிட்டேன், சமீபத்தில் ஒரு படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் 2 மணி நேரம் பேசியது இந்தப்படம் தான். லலித் சார் ஆரம்ப காலத்தில் பால் போட்டுக்கொண்டிருந்தார்,  அவர் சொந்த உழைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை பெரிய தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் மிக கண்டிப்பான தெளிவான தயாரிப்பாளர். அவர் ஒரு விசயத்தில் இறங்கினால் கண்டிப்பாக அதை முழுமையான படைப்பாக முடித்துக் கொண்டு வரும் தெளிவு இருந்தால் தான் செய்வார். இந்த வருடத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் என்றால் அது சிறை தான். உங்களுக்கு முழுமையாக முக்கியமான கருத்தை வலுவாக சொல்லி, உங்களைத் திருப்தி படுத்தும் படமாக இருக்கும். யாருமே இதை முதல் இயக்குநரின் படமென சொல்ல முடியாது.  சுரேஷ் அற்புதமாக இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு சாரில் ஆரம்பித்து, ஒவ்வொருவரும் அத்தனை சிறப்பாக நடித்துள்ளனர். முதல் ஃப்ரேமிலேயே இந்தப்படம் உங்களைக் கவர்ந்து விடும். இஸ்லாமிய பெயரை மையப்படுத்தி கடைசியாக வந்த படம் மாநாடு தான், ஆனால் இந்தப்படம் அதைத்தாண்டி ஒரு முக்கிய அம்சத்தைப் பேசும் படமாக வந்துள்ளது. வசூலிலும் இப்படம் ஜெயிக்கும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது..,


சிறை படம் பார்க்கும் வாய்ப்பு லலித் சார் மூலம் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. தமிழை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்து, இந்த கதையை இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ளார் என பெருமையாக இருந்தது. சுரேஷ் எனக்குப் பிடித்த படைப்பாளிகளின் லிஸ்டில் வந்துவிட்டார். விக்ரம் பிரபுவை மிகவும் பிடித்துவிட்டது. அன்னை இல்லம் இனி பிஸியாகிவிடும். வெங்கட்பிரபு  My name is Khan, I am not a terrorist என சொன்ன

ஒன்லைன் தான் மாநாடு படம் செய்யக்காரணமாக இருந்தது. அதைப்போல வலுவான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில் முஸ்லீம் இனத்தவரை கொடுமையாகவே காட்டி வருகிறோம். அதைப்பற்றி அழுத்தமாக இப்படம் பேசுகிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகராக அக்‌ஷய் கிடைத்துள்ளார். இளம் நடிகர்கள் தமிழில் இல்லை அந்தக்குறையை அக்‌ஷய் போக்கவேண்டும். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.


தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது..,

 

இப்படம்  பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், நீங்கள் யார் அஸிஸ்டெண்ட் எனக் கேட்டேன், வெற்றிமாறன் என்றார். உண்மையில் வெற்றிமாறனுக்கு பெருமை சேர்த்துள்ளார். என் பார்வையில் முழுக்க முழுக்க இது இயக்குநரின் படம். சுரேஷ் உழைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். அக்‌ஷய் அடுத்தடுத்து இது போல காதல் படங்கள் செய்ய வேண்டும். விக்ரம் பிரபு பார்த்துப் பிரமிப்பாக இருந்தது. போலீஸாக கம்பீரமாக வாழ்ந்திருக்கிறார். படம் மிக இயல்பாக பிரம்மாதமாக இருந்தது. தயாரிப்பாளர் லலித் மரியாதைக்குரிய நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். சிறை தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்.


இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

 

லலித் எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவு அன்பானவர். கொரோனா காலத்தில் சினிமா மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தது. எல்லோருக்கும் வேலை இல்லை. நான் தாணு சாருக்கு தான் பேசினேன், அவர் 100 முட்டை அரிசி அனுப்புகிறேன் அடுத்து ஒருவருக்கு, போன் செய் என்றார். லலித் சாருக்கு போன் செய்தவுடன் நேரில் வந்து 10 லட்ச ரூபாய் உதவி அளித்தார். அத்தனை அன்பானவர். தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது ஆனால் தயாரிப்பாளர்கள் தான் நன்றாக இல்லை. லலித் சார் மாதிரி எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். சிறை படம் பார்த்தேன். முதல் மூன்று நிமிடங்களில் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது. விக்ரம் பிரபு தமிழில் முக்கியமான ஹீரோவாக வந்துவிடுவார். படம் பார்த்தவுடன் வெற்றிமாறன் படம் போல் இருக்கிறது என்று தோன்றியது. அவர் உதவியாளர் என்றவுடன் மகிழ்ச்சி. வெற்றிமாறனைத் தாண்டி மனித உணர்வுகளைச் சின்ன சின்ன விசயங்களைப் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். தமிழின் முக்கியமான இயக்குநராக வந்துவிடுவார். அக்‌ஷய் எப்படி இப்படி ஒரு ரோல் செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. மிக அற்புதமாக நடித்துள்ளார். முஸ்லீம் பெயரை இந்திய ஒருமைப்பாட்டை அழகாகப் பேசும் படைப்பாக இந்தப்படம் இருக்கிறது. இந்தப்படத்தை யாரும் விளம்பரப் படுத்த தேவையில்லை கண்டிப்பாக வெற்றி பெறும், படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.


இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது…,

 

ஶ்ரீதர் சார் என் மானசீக குரு அதற்குப் பிறகு கவித்துவமான இயக்குநர் பாலுமகேந்திரா, அதற்குப்பிறகு எனக்குப் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திரா சாயல் இல்லாமல் இவர் படம் அதிரடியாக இருக்கும், அவரிடம் 15 வருடம் ஒருத்தர் இருந்துள்ளார் எனில் அவரின் சாயல் இருப்பது ஆச்சரியம் இல்லை. கதையின் கதாப்பாத்திரதை நாம் உருவாக்குகிறோம், அதில் யார் நடித்தாலும் சரியாக இருக்க வேண்டும். அது வெற்றிமாறனிடம் இருக்கும். அவரிடமிருந்து வந்து அருமையான படைப்பை சுரேஷ் தந்துள்ளார். அக்‌ஷய் உங்களுக்கு முதல் படத்தில் நல்ல டீம் கிடைத்துள்ளது. நல்ல ரோல் கிடைத்துள்ளது, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, அதைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர் லலித் எதற்கு செலவு செய்ய வேண்டுமோ அதற்குச் சரியாக செலவு செய்வார். உலகம் முழுக்க தெரியக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். எனக்குக் கல்யாணம் செய்து வைத்தது சிவாஜி சார், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு முதல் படம் நன்றாக அமைந்தது அவருக்கு சமீபமாக நல்ல டீம் கிடைக்கவில்லை என வருத்தம் இருந்தது. இந்தப்படத்தில் கிடைத்தது எனக்கு சந்தோசம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


திருப்பூர் சுப்பிரமணியன் பேசியதாவது..,

 

ஒரு விழாவில் கதாநாயகனாக நடித்தவரை பற்றி ஆஹா ஓஹோ எனப் பேசுவதை விட, எப்போது இயக்குநரின் திறமையைப் பற்றிப் பேசுகிறார்களோ? அது தான் வெற்றிப்படம். இயக்குநரின் திறமையைப் பேசினால் அது வெற்றிப்படமாக இருக்கும். தமிழ் சினிமாவின் வெற்றிகள் குறைந்ததற்குக் காரணம் நடிகர்களின் தலையீடு தான். அவர்கள் தலையிடாமல் இருந்தால் தமிழ் சினிமா இன்னும் பெரிய வெற்றியைத் தரும். லலித் போன் செய்து வாழ்த்த அழைத்தார். படம் பார்த்தேன், நடிகர்கள் எல்லோரும் படத்தின் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளனர். இயக்குநர் அற்புதமாக இயக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். அக்‌ஷய் புதுமுகம் போல தெரியவில்லை அதற்குக் காரணம் இயக்குநர் தான். நல்ல கருத்துள்ள படத்தைத் தந்துள்ளார், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.


நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது..,


சிறை மிகவும் முக்கியமான படம். அக்‌ஷய்க்கு இது பிள்ளையார் சுழி அவருக்கு வாழ்த்துக்கள். நல்லவேளை விசாரணை மாதிரி படம் கிடைக்கவில்லை. நீ மாட்டு சாணி தானே அள்ளினாய், நான் யானை சாணி அள்ளினேன். எல்லாமே அனுபவம் தான். டாணாக்காரன் படம் வெயிலில் உழன்று நடித்த போது, ஜிப்ரானிடம் போன் செய்து எப்படியெல்லாம் மியூசிக் செய்யப் போகிறீர்கள் எனப் பேசினேன். ஆனால் அந்தப்படம் கோவிடால் திரையரங்குக்கு வரவில்லை. இப்போது அதே டாணாக்காரன் டீமுடன் மீண்டும் இப்படம் கிடைத்தது சந்தோசம். உங்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்கு லலித் சாருக்கு நன்றி. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குத் தமிழ் சாருக்கு நன்றி. மாதேஷ் உங்கள் டீமுடன் வேலை பார்த்தது சந்தோசம். அனிஷ்மா, அனந்தா நீங்கள் கொஞ்ச நேரம் வந்தாலும் அட்டகாசமாக நடித்திருக்கிறீர்கள். நான் நடிக்கும் போது, சில காட்சிகளில் எப்படி இசை வரும் என நினைத்தேன். ஜஸ்டின் அற்புதமாகச் செய்துள்ளார். பிலோமின் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து இப்படத்தைச் செய்துள்ளார். நன்றி. சூரிக்கு நன்றி. இன்று இங்கு வந்து படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் பெருமைப்படுகிற டீம் அவர்களுடன் இருப்பது சந்தோசம்.  எல்லோருக்கும் நன்றி.


இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது..,

 

மிக சந்தோசமான மேடை இது. எங்க காலேஜில் இருந்து,  உதவி இயக்குநராக என்னுடன் வந்தவர்களில் ஒருத்தர் சுரேஷ். அவர் வெற்றிமாறனிடம் வேலை பார்ப்பது தெரியும். அவர் சிறை படம் செய்கிறார் என்றவுடன் ஆவலாக இருந்தேன். லலித் சார் பையன் நடித்தது எல்லாம் தெரியாது. படம் பார்த்தேன் அது தந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் முக்கியம். ஒரு கலைஞனாக ஆர்ட்டுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். சுரேஷ் கலைக்கு நேர்மையாக மிக முக்கியமான படத்தைத் தந்துள்ளார். வெற்றி சாரிடம் வேலை பார்த்து அவரிடம் கற்றுக்கொண்டு படம் செய்தாலும், இந்தப்படம் எனக்கு ஆச்சரியம் தந்தது. அந்த மனிதர்களுடன் வாழ்க்கைக்குள் நெருங்கி கூட்டிப்போனது. ஒரு வாழ்க்கையாக அதன் இயல்பைப் பேசியதை முக்கியமாகப் பார்க்கிறேன். எனக்கே கதாநாயகி எப்படியாவது கதாநாயகனுடன் சேர்ந்துவிட வேண்டுமென பதட்டம் வந்துவிட்டது. அட்டகாசமான மேக்கிங் இருந்தது. எடிட்டிங் ரிதமுடன் இருந்தது. ஜஸ்டின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. கலை இயக்குநர் எங்கள் காலேஜ் செட் தான். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். மாதேஷ் ஊரை காட்டிய விதம் அருமை, இந்தப்படத்தில் நெருங்கி பார்க்க முடிந்தது. மிகவும் பிடித்தது. அக்‌ஷய் நன்றாகச் செய்துள்ளார். விக்ரம் பிரபு  இப்படத்தில்  மிகவும் எதார்த்தமாகப்  புதிதாக  நடித்திருந்தார், அவருக்கு வாழ்த்துக்கள். அனிஷ்மா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். தமிழுடைய திரைக்கதை மிக நன்றாக இருந்தது. காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா ? என ஆச்சரியமாக இருந்தது. உண்மைக்கதை எனும் போது ஒத்துக்கொள்ளத் தான்    சுரேஷ் மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன், இப்படத்தை நம்பி எடுத்த லலித் சாருக்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

 

இம்மேடை எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த வருடத்தில் என் உதவியாளராகள் படம் தந்து வருகிறார்கள். சுரேஷ் மாதிரி இயல்பான மிக நிதானமான ஆளைப் பார்க்க முடியாது. நான் செய்வது தவறாக இருந்தாலும், அதை சொல்லும் விதத்தில் அவர்  நேர்மை இருக்கும். மனிதர்களைக் கையாளும் திறமை அவரிடம் உண்டு. அவருக்கு லலித் சார் கார் பரிசு தருகிறார். முதல் படம் எடுக்கும் போது இருக்கும் அழுத்தம் எல்லாத்தையும் விட்டுவிட்டு , மிக இயல்பாக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன் உள்ளது அதைச் சரியாக எடுத்தால் படம் மிகப்பெரிய படமாக வரும் என்றேன். அதைத்தான் ரஞ்சித் பாராட்டினார். ஒரு விசயத்தை பிரச்சனையை அணுகுவதில்,  தீர்ப்பதில், அவருக்கு தனித்திறமை உள்ளது. ஆடுகளம் முடித்தவுடன் வந்து சேர்ந்தவர், என்னுடனே இருந்திருக்கிறார். சிறை படம் பார்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் படம் செய்தால் என்ன தப்பு இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பேன். ஆனால் படம் பார்த்த எல்லோரும் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்கள். படம்  எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிய மகிழ்ச்சி தருகிறது. தமிழுக்கு அவர்  வாழ்க்கையில் போலீஸ் நடைமுறை சார்ந்து நிறைய அனுபவங்கள் இருப்பதால் அது மிகப்பெரிய தாக்கம் கொடுக்கிறது. படத்தில் எடிட் மிக நன்றாக இருந்தது. படத்திற்கு மிக முக்கிய பலமாக மியூசிக் இருந்தது. முதல் ஐந்து நிமிடம் தான் விக்ரம் பிரபு தெரிகிறார் அதன் பிறகு கதாப்பாத்திரம் தான் தெரிகிறது. எல்லா கதாபாத்திரங்களும் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளனர். எல்லாம் ஒன்றாக இணைந்து மிக அழகான படைப்பாக வந்து, நமக்குள் அழுத்தமான கேள்வியைக் கேட்கிறது. அனிஷ்மா சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது. அக்‌ஷய் அந்த கதாபாத்திரத்திற்குள் காணாமல் போயிருக்கிறார். அவர் இயல்பாக நடித்துள்ளார். இத்தனை பேரின் உழைப்பும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. சுரேஷ் எடிட்டரின் உதவி பெரிய பலமாக இருப்பதாகச் சொன்னார், பிலோமின் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இவ்வளவு நாட்களுள் படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, அதை சுரேஷ் சாதித்துள்ளார். இப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியைத் தருவது சந்தோசம். இந்த வாய்ப்பை சுரேஷுக்கு தந்ததற்கு நன்றி. படம் வெளியாகும் முன் கார் தருவதும் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


டாணாக்காரன்  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.


நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.    நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.


 சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில்,  பட  வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.


இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஈழத்து மெல்லிசை மன்னர்" என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ்,


"ஈழத்து மெல்லிசை மன்னர்" என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ்,  தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை  புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார்.  பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள்  ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது.









இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்வில், திருச்சி சிவா (மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:


" நம் தொப்புள்கொடி உறவான ஈழத்து மண்ணிலிருந்து வந்து, இசை உலகையே தன் பக்கம் ஈர்த்த ஒரு மாமனிதரான எம்.பி. பரமேஷ் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழின் பெருமையையும், மெல்லிசையின் இனிமையையும் கட்டிக்காத்தவர். அவரது வரிகளும், குரல் வளமும் அவரது மெட்டுகளும் தொடாத இதயங்கள் இல்லை.


இன்று அவரது குடும்பம் இங்கே ஒன்றுகூடியிருப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. 


அவர், 60 வருடகாலம் கலையுலகில், அதுவும் இசைத்துறையில் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல; அது ஒரு தவம்.


எம்.பி. பரமேஷ் அவர்கள் இன்னும் நூறாண்டுகள் கடந்து தனது இசைச் சேவையைத் தொடர வேண்டும் " என்றார். 


தனது இசையால் தன் காதலி சிவமாலினியின்  மனதை களவெடுத்த கள்ளன் இந்த m.p. பரமேஷ் என்று புன்னகையுடன் சொன்னார். 


இந்த தம்பதிகளின் இசை வாரிசான மகள் பிரபாலினியின் பேச்சையும், பாடியதையும் சொல்லி பாராட்டினார், ஒவ்வொரு தாய் தந்தையினருங்கும் இப்படி ஒரு மகள் தேவை என்று பாராட்டினார். 


தொடர்ந்து இந்தித் திரைப்பட பாடல்களும் தனக்குப் பிடிக்கும் என்றார். கூட்டத்துக்கு வந்திருந்த பலர், அவரை இந்தி பாடல் பாடும்படி கூறினர்.  


அவர், "தமிழர்களான நாம் கலை என்று வந்துவிட்டால் மொழி பார்ப்பதில்லை. 

லதா மங்கேஸ்கர் உள்ளிட்ட இந்தி கலைஞர்களை நான் அங்கீகரிக்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் நமது பி.சுசீலா என்கிற அற்புத பாடகியை அவர்கள் ஏற்பதில்லை" என்றார்.


தொடர்ந்து, கொடிமலர் படத்தில், எம்.எஸ்.வி. இசையில்  .பி. சீனிவாஸ் பாடிய "மவுனமே பார்வையாய்.." என்ற பாடலை பாடி அசத்தினார் திருச்சி சிவா.



இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது:


"  'ஈழத்து மெல்லிசை மன்னர்' எம்.பி. பரமேஷ் ஐயா அவர்களின் இசைப் பயணம் ஒரு மண்ணின் இசை வரலாறு.  பொதுவாக ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் ஒரு பத்தாண்டுகள் புகழுடன் இருப்பதே பெரிய விஷயம். ஆனால், தொடர்ந்து அறுபது ஆண்டுகள் இசையோடு பயணிப்பது என்பது சாதாரணமானதல்ல. 


இன்றைய நவீன காலத்தில் இசை எவ்வளவு மாறினாலும், மெல்லிசையையும் ராகங்களையும் அடிப்படையாகக் கொண்ட இசை எப்போதும் அழிவதில்லை. அந்த இசையைக் கட்டிக்காக்கும் ஒரு தூணாகப் பரமேஷ் ஐயா விளங்குகிறார். 


இந்த முப்பெரும் விழாவை இவ்வளவு நேர்த்தியாக ஏற்பாடு செய்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாகப் பிரபாலினி பிரபாகரன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்."



இலங்கையின் மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் பேசியதாவது:

"இலங்கையின் ஒரு சிறிய கிராமத்தில், இசையின் மீது கொண்ட காதலால் எனது பயணத்தைத் தொடங்கினேன்.  காலச் சூழலால் புலம்பெயர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்குச் சென்றாலும், என் தமிழ் இசையை நான் ஒருபோதும் கைவிடவில்லை. 


இன்று  மதிப்பிற்குரிய திருச்சி சிவா அவர்கள், இயக்குனர் திரு.சீனு ராமசாமி மற்றும் இவ்வளவு திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் எனது அறுபது ஆண்டுச் சேவையைக் கௌரவிப்பது எனக்குப் பெரும் நெகிழ்ச்சியைத் தருகிறது. 


இந்த முப்பெரும் விழா நடப்பதற்குக் காரணமான எனது குடும்பத்தினருக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.."


பிரபாலினி பிரபாகரன் பேசியதாவது:

  

"இந்த மேடையில் இன்று எனது தந்தை அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகளாக எனக்குப் பெருமையாகவும்,  மிகுந்த நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதையும் இசைக்காகவே அர்ப்பணிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். 


அவர் எப்போதுமே தன்னைத் தற்காலத்திற்கு ஏற்ப புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அதனால்தான், இன்று இந்தப் பொற்காலத்திலும் 'நவீனப் பாடல்களை அவரால் உருவாக்க முடிந்தது.


எனது தாத்தாவுன் நினைவு மலரை மறுபதிவு செய்துருக்கிறார் எனது அப்பா. அப்பாவின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தை பாராட்ட நானும் என் சகோதர்ர்களும் சேர்ந்து இன்று இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.


இந்த விழாவிற்கு அழைத்தவுடன், மிகுந்த அன்புடன் இசைந்து வந்து, எங்களை வாழ்த்திய மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்களுக்கும், எனது அன்பிற்குரிய இயக்குநர் திரு சீனு ராமசாமி அவர்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.  


அப்பாவை எப்போதுமே ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக, இந்த நிகழ்வை உலகெங்கும் கொண்டு சேர்க்க வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்குப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அப்பா.. உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளைக் கடந்து ஒலிக்க வேண்டும். உங்களின் மகளாக இந்த விழாவை ஒருங்கிணைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!"

உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’**

 *உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது*



தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் சர்வதேச திரைப்படங்களுடன் ஒப்பிடும் வகையிலான அனிமேஷன் காட்சிகளுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படம், உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகிறது.


வண்ணமிகு, மாயாஜாலம் நிறைந்த பெரிய திரை அனுபவமாக, விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் கண்டு களிப்பதற்கான திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’**, பிரம்மாண்ட காட்சிகள், வேகமான திரைக்கதை மற்றும் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் மூலம் நம்பிக்கை, தைரியம் மற்றும் ஒற்றுமை போன்ற மதிப்புகளை கொண்டாடுகிறது. குடும்பத் திரைப்படங்கள் அரிதாக வெளியாகும் காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சரியான நேரத்தில் இப்படம் திரையரங்குகளை அலங்கரிக்கிறது.


இந்திய அனிமேஷன் துறையின் முக்கிய மைல்கல்லாக திகழவுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படத்தின் முழு அனிமேஷனும் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புகளை லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்ட கியூரியாசிட்டி இங்க் மீடியா உருவாக்கியிருந்த நிலையில், அனிமேஷன் தயாரிப்புப் பொறுப்பை பெங்களூரைச் சேர்ந்த **ஸ்டுடியோ56 அனிமேஷன்** தலைமை ஏற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த டூன்2டாங்கோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகளாவிய நிபுணர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.


**ஸ்டுடியோ56**-ஐ சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட திறமைமிக்க அனிமேஷன் கலைஞர்கள், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இப்படத்தில் பணியாற்றினர். உலகளாவிய நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு, அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பிற்கான உலகளாவிய மையமாக **இந்தியா** வளர்ந்து வரும் பயணத்தில் இவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.


இதிலும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துவது, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தஞ்சாவூரில் பிறந்து, திருச்சிராப்பள்ளியில் வளர்ந்த தொழில்முனைவோர் **ஸ்ரீராம் சந்திரசேகரன்** என்பதுதான்.


குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஊக்கத்தால் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஸ்ரீராம் 2008ஆம் ஆண்டு **Broadvision Kids & Family** நிறுவனத்தை நிறுவினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,


“கடந்த 17 ஆண்டுகளில், அனிமேஷன் துறையில் நாம் படிப்படியாக வளர்ந்துள்ளோம். உள்ளூர் விளம்பரங்களிலிருந்து தொடங்கி, இன்று உலகத் தரத்தில் அனிமேஷன் முழுநீள திரைப்படங்களை உருவாக்கும் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றாக உயர்ந்துள்ளோம். உண்மையில், தமிழ்நாடு உலகின் சிறந்த அனிமேஷன் திறமைகளை உருவாக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எங்களுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வரும் எங்கள் அனிமேஷன் இயக்குநர் ஹரிஷ், லேஅவுட் இயக்குநர் அஷ்வின், காம்போசிட்டிங் இயக்குநர் கார்த்திகேயன், அனிமேஷன் மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் பெங்களூரு, சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழர்கள்,” என்றார்.


இந்தப் படம் குறித்துப் பேசிய Broadvision நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான திருமதி கௌரி ஸ்ரீராம்,

“**‘மிஷன் சாண்டா’** இந்திய அனிமேஷன் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இருக்கும். 44-க்கும் மேற்பட்ட உலகளாவிய தயாரிப்புகள் மற்றும் பல சர்வதேச விருதுகளுடன் வெற்றி பயணம் மேற்கொண்டு வரும் Broadvision Kids & Family, இப்போது டிஸ்னி தரத்திலான கதை சொல்லும் பாணியை இந்த கிறிஸ்துமஸ் அன்று இந்தியக் குடும்பங்களுக்கு பெரிய திரையில் கொண்டு வருகிறது,” என்றார்.


அதிரடி காட்சிகள், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் ஆகியவற்றுடன், **‘மிஷன் சாண்டா’** ஒரு மகிழ்ச்சியான சினிமா விடுமுறை அனுபவத்தை வழங்குவதோடு, இந்திய அனிமேஷன் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் அமைந்துள்ளது.


---

MISSION SANTA Set to Light Up Karnataka Theatres This Christmas with a World-Class Animated Spectacle*

 *MISSION SANTA Set to Light Up Karnataka Theatres This Christmas with a World-Class Animated Spectacle



This Christmas, Karnataka audiences are in for a magical cinematic experience as MISSION SANTA, a big-ticket animated feature film, prepares for its theatrical release across leading theaters in India, simultaneously with France, Germany and many more countries.

Positioned as a true family entertainer for the Christmas season, Mission Santa blends global animation quality, emotion-driven storytelling, and joy-filled adventure, making it one of the most anticipated animated theatrical releases for Indian families this Christmas.



*A Film Made for the Big Screen – and for Families*


Mission Santa is a high-energy animated adventure that celebrates hope, courage, action, and adventure, making it a perfect treat for children, parents, and grandparents alike.

Designed specifically for family cinema viewing, the film delivers:

Rich cinematic visuals

Fast-paced adventure and humour

Emotional beats that resonate across ages

Universal themes with strong cultural relatability 


At a time when family films in theatres are rare, Mission Santa brings back the joy of watching a film together on the big screen, just in time for the Christmas holidays.




Pride of Karnataka: A Landmark for Indian Animation


Mission Santa stands out as a proud milestone for Karnataka and Indian animation. The film is made fully by Indian animators, showcasing the world-class capabilities of talent from the state and the country.

While the story, script, and character designs originate from Los Angeles, developed by Curiosity Ink Media, the entire animation work from start to finish has been executed in India by Indian Animation artists, supervised by senior Indian Animation Leads. The film is co- produced with Toon2Tango of Germany, with post-production by Mark13 in Germany and Cosmic Dino in Australia, reinforcing Karnataka’s position as a global animation powerhouse through international collaboration.

This makes Mission Santa not just an international-quality film, but a true “Pride of Karnataka” animation feature, created by Indian hands for audiences worldwide.

 

*A Bold Vision - Global Stories, Indian Animation*


While India has thousands of Animation Institutes of Animators, there is a big Industry secret - Indians are second class citizens in the world of global animation. Lets explain! While Indian studios have long been serving Disney, Dreamworks, Technicolor and other global studios as “back- end” artists, they rarely get the same stakes as the teams working in Los Angeles or Paris for the work. Their Indian subsidiaries got paid a fixed budget as work for hire, with revenues rarely linked to the success or failure of the film. Its like working as a construction worker in building the Taj Mahal - while you can feel the pride of being a part of the Taj, it never really belongs to you.

These subsidiaries did not also have creative say in how the film should look. Indian artists were used, and many times thrown, albeit sadly, like in the case of Technicolor’s shutdown which abruptly threw 2000 Indian artists out of jobs without their salaries and dues paid. While the American and French artists working for the same company were safe, Indian artists were left on the streets. Thus, Indian artists have long held a second class citizenship in the world of Animated Film making - good as workers, not as leaders. While the older generation of Animation artists were accepting of such lopsided realities, the new generation of Animation Leaders and Artists do not want to work as second class talent. They know they have it in them, and want to showcase themselves to the world. Broadvision India, and its animated subsidiary Studio56, boldly embody such new generation of Indian Animation - proud in their heritage, deep in their talent, and not afraid to take risks. With its Animation Production arm Studio56, Broadvision is directly taking the risk as a Producer in global animated films, working end to end from conception to final release in theaters, while also assembling the skillsets needed for such global releases.

While Mission Santa is an international-scale production, it carries deep Indian creative roots, reflecting the growing maturity and confidence of India’s animation ecosystem. Over 150 high- level animation artists of Studio56 Animation — one of the top global theatrical animation production houses, proudly from Karnataka, India — worked on Mission Santa for 20 months from Bengaluru, collaborating directly with equal international partners on a daily basis. This rare synergy highlights Karnataka’s growing stature as a global hub for premium animation filmmaking. Mission Santa’s core team includes several Kannadiga talents, including Animation Director Mr. Harish Krishnamurthy, Layout Director Mr. Ashwin Narayanan, Compositing Director Mr. C Karthikeyan, and long-term Bangalorians Production Head Mr. Roshan Ingole, FX Director Mr. Manraj Singh, Lighting Director Mr. Kunal Deep, and Head of Overall Look Mr. Akhil Magotra.

Speaking about the film’s significance, Ms. Gauri Sriram, Producer & Managing Director of Broadvision India, said:

“This movie is a landmark in the history of Indian animation and is the pride of Karnataka. Broadvision has been a highly successful global animation producer from India with over 44 productions and 8 international awards, and Mission Santa brings Disney-level storytelling this Christmas to Indian families who need a good time out with their kids.”

This balance makes Mission Santa especially appealing to Karnataka audiences, who have long embraced global stories told with heart and craftsmanship.

Christmas Theatrical Release Across Karnataka


Releasing this Christmas across leading theatres in India, Mission Santa will enjoy a wide theatrical release across Karnataka, including:

 

Bengaluru

Mysuru

Mangaluru

Hubballi–Dharwad

Udupi

Tumakuru and other key centres 


The film will be released in English in leading theatres, positioning it as a premium theatrical animation experience for Indian family audiences.



A Step Forward for Animated Cinema in India

With Mission Santa, the makers reinforce a strong belief that animation belongs on the big screen, especially during festive seasons meant for families.


The film represents:

Confidence in theatrical animation

Trust in Indian family audiences

A commitment to elevating children’s and family cinema in India



About Mission Santa:


Mission Santa is a Christmas theatrical animated feature film that combines action, humour, heart, and spectacle in a story crafted for parents and their children alike. Built on international storytelling standards and powered by Indian animation talent, the film promises a joyful, cinematic holiday experience for families across India.

Monday, 22 December 2025

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே” முதல் சிங்கிள் பாடல்!!

 *ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே”  முதல் சிங்கிள் பாடல்!!*



Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படமான  வித் லவ் ( With Love ) படத்திலிருந்து முதல் சிங்கிளான  “ஐயோ காதலே” ரொமான்ஸ் மெலடி பாடல்  வெளியாகியுள்ளது.


முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்பாடலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். 


பள்ளி நாட்களின் இனிய நினைவுகளை ஞாபகப்படுத்தும், ஒரு ஜாலியான, மனதுக்கு நெருக்கமான உணர்வை தரும் இப்பாடல், கேட்டவுடன் அந்த இசைக்குள் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள மனதை மயக்கும் இந்த அற்புதமான மெலடி பாடலை, மோகன் ராஜன் எழுதியுள்ளார். விஜய்நரேன் பாடியுள்ளார். 


முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )”  படத்தில்,  டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.   “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.


Link - https://youtu.be/5yJW-_3-Fko