Featured post

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups* As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inch...

Wednesday, 31 December 2025

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups*



As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inches closer to its highly anticipated theatrical release on 19th March 2026, the makers continue to peel back layers of its dark, immersive world. Adding to the rising anticipation, the team has now unveiled a striking new poster revealing Nayanthara as Ganga. Stunning, lethal, and formidable, the first look positions Nayanthara as a defining force within the universe of Rocking Star Yash’s most ambitious project yet.


Known for her star power, emotional depth and versatility, Nayanthara has built a legacy as one of India's iconic actresses. With Toxic, she steps into darker territory - one that amplifies her innate presence while revealing a version of her that feels startlingly new.


Nayanthara’s portrayal of Ganga is visually breathtaking, radiating a fearlessness that matches the film’s massive scale. She commands the frame with a striking composure, wielding a gun with a practiced authority that feels both elegant and dangerous. Set against the opulence of a grand casino entrance, the lavish, high-stakes setting frames Ganga as a woman who owns the room and calls her own shots.


Speaking about casting Nayanthara as Ganga, director Geetu Mohandas said, “We all know Nayan as a celebrated star with a commanding screen presence, and a remarkable career spanning two decades but in Toxic, audiences will witness a talent that had been quietly waiting to explode. I wanted to portray Nayan in a way that she’s never been showcased before. But as the shoot progressed I began to see how closely her own personality echoed the soul of the character. It wasn’t imitation, it was alignment.The depth, the honesty, the restraint, and the emotional clarity she brought were not performances layered on top of the character,they were qualities she already possessed. I found my Ganga, so brilliantly performed by her, and even more unexpectedly, I found a dear friend.”


After redefining box-office history with KGF: Chapter 2, Rocking Star Yash returns to the big screen with Toxic: A Fairytale for Grown-Ups, a project that has been generating extraordinary anticipation across industries. With each reveal, the film continues to signal a bold departure from convention. Earlier, Kiara Advani ignited a firestorm of anticipation with her unveil as Nadia—ethereal yet melancholy, whose elegance and glamour barely conceal the scars. Following Kiara's first look, Huma Qureshi’s dramatic reveal as the enigmatic Elizabeth deepened the mystery, leaving audiences intrigued with her never-seen-before old-world, Gothic glamour.


Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been filmed simultaneously in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages—underscoring its global ambition. The film boasts a formidable technical team, including National Award winner Rajeev Ravi as cinematographer, Ravi Basrur on music, Ujwal Kulkarni on editing, and TP Abid as production designer. High-octane action is choreographed by Hollywood action director JJ Perry (John Wick) alongside National Award-winning duo Anbariv and Kecha Khamphakdee. Produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a grand theatrical release on the long festive weekend of 19th March 2026, coinciding with Eid, Ugadi, and Gudi Padwa.

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக

 *யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும்  நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது !!*



யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது.


தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி  வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே ஒரு வலுவான அடையாளமாக திகழ்கிறது.


கங்கா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா, அச்சமற்ற துணிச்சலுடனும், கம்பீரமான அமைதியுடனும் திரையில் தோன்றுகிறார். கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ ( grand casino) பின்னணியில் நின்று கொண்டு, அந்த இடத்தையே கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் காட்டுகிறார். அழகும் ஆபத்தும் கலந்த அந்த தோற்றம், கதாபாத்திரத்தின் ஆழத்தையும் மர்மத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.


*இந்தக் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ்  (Geetu Mohandas) கூறுகையில்,*


“நயன்தாராவை  ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் டாக்ஸிக் படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்,” என தெரிவித்துள்ளார்.


KGF: Chapter 2 மூலம் இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றிய யாஷ், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மூலம் மீண்டும் ஒரு புதிய உயரத்தை நோக்கி பயணிக்கிறார். இந்த படம், தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கருப்பொருளால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. முன்னதாக, கியாரா அத்வானி நடித்த ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஹூமா குரேஷியின் ( Huma Qureshi’s ) மர்மமான ‘எலிசபெத்’ தோற்றம், பழமையான கோத்திக் அழகுடன் கூடிய புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது.


யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள Toxic: A Fairytale for Grown-Ups திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. ஒளிப்பதிவை தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி மேற்கொள்ள, இசையமைப்பை ரவி பஸ்ரூர் செய்துள்ளார். படத்தொகுப்பில் உஜ்வல் குல்கர்னி, கலை இயக்கத்தில் டி.பி. அபித் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் புகழ் ஜே.ஜே. பெர்ரி (John Wick) உடன் இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி அமைத்துள்ளனர்.


யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.


தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி  (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.


வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19, 2026, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.



Sunday, 28 December 2025

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

 *மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்”  பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!*




*பிரியங்கா மோகன் நடிக்கும்,  கன்னட படமான  “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!*


கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில்  அறிமுகமான பிரியங்கா மோகன்  நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார்.   தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார்.


இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


Vaishak J Films தயாரிப்பில்,  ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம்,  70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான  ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது.


தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான  ஒந்த் கதே ஹெல்லா  Ondh Kathe Hella  படத்தைத் தொடர்ந்து, நீண்ட காலமாக கன்னட படத்தில் தோன்றாமல் இருந்த பிரியங்கா மோகன் தற்போது பெரும் ஆளுமைகள் இணையும் பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார். இதுவரை காதல், குடும்ப உணர்வுகள், கமர்ஷியல் எண்டர்டெய்னர் போன்ற கதைகளில் நடித்து வந்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட, வலுவான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் என்பதே முக்கிய சிறப்பு.


‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற தலைப்பே, இப்படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல” என்பதைக் கூறாமல் கூறுகிறது.   பிரியங்கா மோகன் அழகான பார்பி டால் போல வெண்மை நிற தொப்பி, கருப்பு நிற கையுறை உடன்,  ரெட்ரோ லுக்கில் அசத்துகிறார்“.


தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும், பிரியங்கா மோகன் இப்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்திருப்பது, அவரது நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. மொழி எல்லைகளை தாண்டி, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தேர்வுகள், அவரை பான்-இந்திய நடிகையாக மாற்றும் பாதையில் கூட்டிச் செல்கின்றன.


‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ படம் குறித்து முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவுள்ளது.  இந்நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம், கன்னட சினிமாவில் பிரியங்கா மோகனுக்கு ஒரு புதிய அடையாளத்தையும், தனித்துவமான மைல்கல்லையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

Saturday, 27 December 2025

Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season

 *Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season*




James Cameron’s Avatar: Fire and Ash has firmly established itself as the biggest Hollywood release of 2025 in India, delivering an extraordinary box office performance and reaffirming the franchise’s unmatched appeal with Indian audiences.


Over Christmas Day, the film continued its phenomenal run, outperforming all new releases and maintaining a commanding lead at the box office gearing for a promising second weekend. The sustained momentum highlights not just a strong opening, but exceptional word of mouth across markets.


During the Christmas holiday season, Avatar: Fire and Ash has emerged as the number one choice for family audiences, drawing audiences across age groups to cinemas and reinforcing its status as the ultimate festive big-screen spectacle.


So far, the film has grossed over ₹130 crore at the Indian box office, a milestone that underscores its massive reach, scale and emotional connect with audiences nationwide.


With its continued dominance and holiday seasons pull, Avatar: Fire and Ash stands tall as a defining cinematic success of the year, setting new benchmarks for Hollywood releases in India.

இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' 2025

 *இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது!*




இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடாக மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூலைப் பெற்று இந்திய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனது இருப்பை தக்க வைத்துள்ளது.  


கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பல படங்கள் வெளிவந்தாலும் அதை எல்லாம் தாண்டி, 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாது, இரண்டாவது வார இறுதிக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. 


கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக உள்ளது. மேலும், பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை இந்தத் திரைப்படம் அனைத்து வயதினருக்கும்  கொடுக்கிறது எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 


நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆன இந்தப் படம் இதுவரை, இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 130 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.  


விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வரும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் இந்த ஆண்டில் இந்தியாவில் ஹாலிவுட் திரைப்பட வெளியீடுகளுக்கு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.

Thursday, 25 December 2025

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல் - 🎵டிரைன்

 *நடிகை ஸ்ருதிஹாசன்,  விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல் - 🎵டிரைன் படத்தின் கன்னக்குழிக்காரா !!*  








*🎶 நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !!*


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.


“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது.


விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துபவர். அவரின் அந்த “ரியலிஸ்டிக்” திரைத் தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான ஆன்மாவை சேர்த்தது போல அமைந்துள்ளது. குறிப்பாக, பாடலின் வரிகளில் வரும் சின்ன சின்ன உணர்ச்சிகள், குரலின் ஏற்றத் தாழ்வுகள் மூலம் இன்னும் ஆழமாக மனதில் பதிகின்றது.


இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக, இயக்குநர் மிஷ்கின் இதற்குத் தானே இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இசை, வரிகள், குரல் – மூன்றும் ஒன்றாக இணைந்து, பாடலை ஒரு தனித்த அனுபவமாக மாற்றியுள்ளன.


ஸ்ருதிஹாசனின் மயக்கும் குரலில் “கன்னக்குழிக்காரா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இசை தளங்களில் முன்னணி  வரிசையில் இடம் பிடித்துள்ளது.


ஒரு பக்கம் ஹாலிவுட் படைப்புகள், சலார் முதலாக பான் இந்திய படங்கள் என நடிகையாக கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கும் விரைவில் அவரது அடுத்த இசை முயற்சி மற்றும் திரைப்பட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் ரசிகர்கள் வெளியாகும்.


https://www.youtube.com/watch?v=QMxJ-gJDIBA

Retta Thala Movie Review

Retta Thala Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம retta தலை படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு action thriller படம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்குறது Kris Thirukumaran . இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. இதுல Arun Vijay  double role  ல நடிச்சிருக்காரு. அப்புறம் Siddhi Idnani , Tanya Ravichandran.  Kannada actor Yogi Samy  Hareesh Peradi, John Vijay,  Balaji Murugadoss னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்கு போலாம். 



kaali யா நடிச்சிருக்க arunvijay pondicherry ல இருக்கற ஒரு சாதாரண குடும்பத்தை சேந்தவ. இவனுக்கு ஒரு girlfriend யும் இருக்கும். அவங்க தான் antre வா நடிச்சிருக்க siddhi idnani. இவங்களோட பைனான்சியல் condition ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். அதுனால kaali யா breakup பண்ணிட்டு ஒரு நல்ல future க்காக france ல போய் settle ஆகணும் னு plan பண்ணுறாங்க. அப்போ தான் kaali இவனை மாதிரி இருக்கற இன்னொரு  ஆள பாக்குறான். malpe  upendra  ன்ற character ல நடிச்சிருக்க இந்த arun  vijay goa ல இருக்கற famous ஆனா hitman . இந்த தான் நல்ல chance  னு நினைக்கிற  antre வும் kaali  கிட்ட இவனை போட்டு தள்ளிட்டு அவனோட சொத்தை எடுத்துக்கலாம் னு ஒரு idea வை சொல்லுற. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half ல பாத்தீங்கன்னா kaali  அப்புறம் antre ஓட relationship அ காமிச்சிருப்பாங்க. அதுக்கு அப்புறம் kaali upendra வா meet பண்ணும்போது தான் எல்லாமே தல கீழ மாறிடுது. ஒரு சில காரணங்கள் னால kaali கொஞ்ச நாளைக்கு upendra மாதிரி நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுது. இந்த transition தான் first half ல காமிச்சிருப்பாங்க. அதே மாதிரி goa ல ஒரு gang upendra வை கொலை பண்ணுறதுக்காக wait பண்ணிட்டு இருக்காங்க. 


படத்தோட second half ல full அ cat and mouse chase. நெறய action, twist and turns னு ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. screenplay யும் audience ஓட கவனத்தை  சிதறாத மாதிரி அவ்ளோ interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. முக்கியமா pre climax ல வர surprise தான் யாருமே எதிர்பாத்துருக்க மாட்டாங்க. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது arun vijay ஓட performance super அ இருந்தது. kaali character ல vulnerable அ perform பண்ணிருக்காரு அதே மாதிரி upendra character ல வில்லத்தனத்தோட இருக்காரு. siddhi ஒரு normal heroine அ இல்லாம different அ இருக்காங்க. romance அ விட ரொம்ப realistic அ இருப்பாங்க. பணம் தான் முக்கியம் ன்ற mindset ல இருப்பாங்க. படத்துல நடிச்சருக்க மத்த actors ஆனா John Vijay, Hareesh Peradi, Yogesh  Balaji Murugadoss Tanya Ravichandran யும் அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு நல்ல perform  பண்ணிருக்காங்க. 


படத்தோட technical  aspects னு பாக்கும்போது Sam CS’ ஓட  background score இந்த படத்துக்கு super  அ set  ஆயிருக்கு. முக்கியமா  kannama  ன்ற song  அ நடிகர் dhanush பாடிருக்காரு அது தான் இந்த படத்துல highlight  அ இருக்கு. krish thirukkumaran ஓட direction audience  அ engage பண்ணுற விதத்துல அமைச்சிருக்கு. tijo tomy ஓட cinematography அப்புறம் anthony ஓட editing எல்லாமே பக்காவா இந்த படத்துக்கு set ஆயிருக்கு. 


மொத்தத்துல ஒரு நல்ல action thriller படம் தான் இது. so miss பண்ணாம இந்த படத்தை  theatre ல போய் பாருங்க.

Mark Movie Review

Mark Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mark படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு action thriller படம். max படத்தோட success  அ தொடர்ந்து மறுபடியும் vijay karthikeya  கூட இணைச்சுருக்காரு. இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. இதுல kicha sudeep, Naveen Chandra, Yogi Babu, Shine Tom Chacko, Guru Somasundaram, Nishvika Naidu, and Roshini Prakash. னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ நம்ம இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



kicha sudeep sp ajay markanday ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரு ஒரு suspended police officer . என்னதான் suspend  ஆனாலும் இவரு அவரோட வேலைய பாத்துட்டு தான் இருக்காரு. இப்போ  இங்க politician அ adikeshava வா நடிச்சிருக்காரு shine tom chacko . இவரு அந்த state ஓட CM ஓட பையன தான் இருப்பாரு. இவரோட அம்மா படுத்த  படுக்கையை இருக்கும்போது CM  seat க்காக நெறய வேலை செய்றரு. இதை இவருக்கு தெரியாம ஒரு doctor அவரோட phone ல video வா  record பண்ணுறாரு. இப்போ adikeshava CM ஆகக்கூடாது ன்றதுக்காக opposite கட்சி ல இருக்கற ஒரு ஆளு ajay கிட்ட வந்து சொல்லுறன். இந்த video  எடுக்கறதுக்காக ஒரு பக்கம் ajay போறாரு. இன்னொரு பக்கம் இதை அளிக்கணும் ண்றதுக்காக adikeshava போறாரு. இப்போ என்ன பிரச்சனை ந அந்த phone கடைசியா ஒரு சின்ன பையன் கிட்ட இருக்கும். ஆனா அந்த பையன யாரோ கடத்திடுறாங்க. இப்போ இந்த பையன யாரு கடத்தினா? எதுக்காக கடத்தினாங்க ? ஏன் கடத்தினாங்க ன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கறதுக்காக ajay investigate பண்ண ஆரம்பிக்குறாரு. இனொரு பக்கம் bhadra வா நடிச்சிருக்க naveen chandra ஒரு drug lord அ இருக்காரு. இவரோட lover கூட இவரோட brother ஓடிப்போயிடுறாரு. அதுனால இவரை கொள்ளணும் ண்றதுக்காக்க bhadra காத்துகிட்டு இருக்கான். இன்னொரு பக்கம் நெறய கொழந்தைகளை கடத்துறாங்க அப்படி ஒரு குழந்தைய கடத்தும்போது ajay ஓட அம்மாவையும் குத்திடுவாங்க. இது எல்லாமே எப்படி connect ஆகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


max படத்துல பாத்த அதே template தான் இந்த படத்துலயும் பாக்க முடியும். கதை நகரர விதமா இருக்கட்டும், characters ஓட emotions எல்லாமே interesting அ இருந்தது. ஆனா max அ விட இந்த படத்துல sudeep ஓட performance இன்னும் complicated அ இன்னும் mass அ இருக்குனு தான் சொல்லணும். hero ஓட power அ காமிக்கிறதுக்காக நெறய action scenes , dialogues எல்லாம் வச்சுருக்காங்க. அதுனால hero பாக்குறதுக்கு இன்னும் powerful அ தெரியுது. அதே மாதிரி எல்லா வகையான audience க்கும் இந்த கதை பிடிக்கிற மாதிரி எடுத்து வச்சுருக்காங்க. மறுபடியும் christmas season ல mass action movie மூலமா entry குடுத்திருக்காரு. படத்தோட மொத்த weight யும் இவரு தான் எடுத்துட்டு வந்த மாதிரி இருக்கு. என்ன தான் max படத்துல இருக்கற மாதிரி இதுலயும்  police அ இருந்தாலும், sudeep ஓட performance ஒரே மாதிரி இருக்காது. இவரோட body language , case அ investigate பண்ணுற விதம் னு எல்லாமே different அ தான் இருக்கும். அதுனால mark character audience க்கு புதுசா தான் தெரியும். 


yogibabu ஓட comedy scenes எல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. nishvika naidu ஒரு  special song ல வராங்க அதுல இவங்க performance நல்ல இருந்தது. shine tom chacko , naveen chandra லாம் வில்லன்களா மிரட்டிட்டு போயிருக்காங்க. படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors ஆனா Gopalkrishna Deshpande, Vikranth, Guru Somasundaram னு இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. 


இப்போ இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது Ajaneesh Loknath ஓட music தான் இந்த படத்துக்கு பெரிய பலமா அமைச்சிருக்கு. இந்த படத்துல வந்த 3 songs யும்  ஏற்கனவே செம hit அதா தவிர்த்து bgm எல்லாம் mass  அ இருந்தது. நெறய scenes ல audience க்கு goosebumps வர அளவுக்கு music இருந்தது. இந்த படத்தோட இன்னொரு plus point cinematography தான். visuals எல்லாமே நல்ல இருந்தது. படத்தோட editing யும் நல்ல sharp and short அ இருந்தது. 


மொத்தத்துல  investigation thriller elements எல்லாம் இருக்கற ஒரு mass ஆனா கதைக்களம் தான். சோ  இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

பிரம்மாண்டமான புராண காவிய

 *பிரம்மாண்டமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்!*



ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒரு அற்புதமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இது அவர்கள் இணைந்து பணிபுரிய இருக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர். 


அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் கூட்டணி இதற்கு முன்பு பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அவர்களின் முந்தைய படமான 'அலா வைகுந்தபுரமுலூ' தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது. 


திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. வலுவான கதைசொல்லல், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிப்ரவரி 2027ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜூன் மற்றும் திரிவிக்ரம் கூட்டணி இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை எட்டிப் பிடிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.