Featured post

தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS)

 *தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே.  ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யே...

Saturday, 25 April 2026

தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS)

 *தேர்தலில் வாக்களித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே.  ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவிப்பை பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் Chairman குஷால் கங்காரியா, MD தினேஷ் கங்காரியா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.*



வணிகம் மற்றும் குடியுரிமை பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாக, பி.எம். ஜே. ஜுவெல்ஸ் நிறுவனம், ஏப்ரல் 23 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.


தமிழ்நாடு  முழுவதும் உள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கும்  வகையில், "GO VOTE. GET INKED. CELEBRATE THE MOVEMENT“ எனும் ஸ்லோகன் அதாவது  வாக்களியுங்கள் – விரலில் மை வைத்துக்கொள்ளுங்கள் – அந்த தருணத்தை கொண்டாடுங்கள்” என்ற வலுவான செய்தியுடன் இந்த சலுகையை அறிவித்துள்ளது. 


இந்த சிறப்பு பிரச்சாரத்தின் கீழ், வாக்களித்ததற்கான சான்றாக தங்களது சுட்டுவிரலில் அழியாத மை குறியுடன் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் ஷோரூமுக்கு வருகிற எந்த வாடிக்கையாளருக்கும், உடனடியாக ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 மேலும் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் வகையில், இந்த சலுகை 2026 ஏப்ரல் 30ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த முயற்சி குறித்து  பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் Chairman குஷால் கங்காரியா கூறும்போது, 

வாக்களிப்பதே நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும்,  தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் பங்கேற்பும் நாட்டை வலுப்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். 


தங்கள் ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றும் மக்களை கௌரவிக்கும் விதமாகவே இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  வாக்களித்தபின்,  பெருமையுடன் அந்த விரல் மை குறியுடன் தங்கள் ஷோரூமுக்கு வரும்போது, வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதோடு மட்டுமல்லாமல், வலுவான இந்தியாவை உருவாக்கும் தங்கள் பங்களிப்பையும் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார். 


பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிர்வாக இயக்குநர் தினேஷ் கங்காரியா, 

இந்த திட்டம்,  தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்து வாக்களித்திருந்தாலும்,   சென்னையில் உள்ள தங்களுடைய  எந்த ஷோரூமையும் அணுகி, தங்கள் மை குறியைக் காட்டி ரூ.5,000 தள்ளுபடியைப் பெறலாம் என்று கூறினார்.


சமூக பொறுப்புணர்வு மற்றும் ஜனநாயகத்தின் மீதான அன்பு காரணமாகவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்தாகவும், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும் தெரிவித்த அவர்,  மாநிலம் முழுவதும் வாக்களிப்பு பங்கேற்பை ஊக்குவிப்பதே தங்களுடைய  நோக்கம் என்றார். 


இந்நிகழ்ச்சியில்,  சென்னையில் பிறந்து, தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு, பிரத்யேக வடிவமைப்புடைய கைக்காப்பை அணிந்து, வாக்காளர்களை உற்சாகமாக வாக்களிக்க அழைத்தார்.  அவர் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார். இந்த விளம்பரத்தில்

"வாக்களிப்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது  பெருமை!” என்ற தமிழ் வாசகம் இடம்பிடித்து இருந்தது. 


மகேஷ் பாபு தற்போது புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் “வாரணாசி” என்ற மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.


60 ஆண்டுகளாக நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக விளங்கும் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சிறந்த நகை சேவையை வழங்கி வருகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பல கிளைகளுடன், தரம், நம்பிக்கை மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.


இந்த சலுகை, 2026 ஏப்ரல் 23ஆம் தேதி வாக்களித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். வாங்கும் நேரத்தில் விரல் மை குறியைக் காட்ட வேண்டும். இது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Friday, 24 April 2026

ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு

 *ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*






*250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!*


*சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!*


இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.


“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.


மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரம்மாண்டமான அணியில் சாம் CS தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.


“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது.


இப்படத்தில் சாம் CS ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் CS பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் "கராத்தே பாபு", கார்த்தியின் "சர்தார் 2" படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GV Prakash Kumar’s ‘Happy Raj’ Begins Its Digital Celebration on OTT After a Successful Theatrical Run*

 *GV Prakash Kumar’s ‘Happy Raj’ Begins Its Digital Celebration on OTT After a Successful Theatrical Run*



Following a successful and well-received theatrical run, Happy Raj, starring G. V. Prakash Kumar, is all set to entertain audiences once again as it premieres today on Amazon Prime Video across India and on SimplySouth for audiences outside India.



The film, which emerged as a refreshing new-gen family entertainer in theatres, garnered appreciation for its vibrant storytelling, relatable emotions, and engaging performances. With its digital release, Happy Raj now reaches a wider global audience, bringing its blend of romance, humor, and heartfelt moments straight into homes.



Written and directed by debutant Maria Raja Elanchezian, and produced by Jaivarda of Beyond Pictures and co produced by Jaikanth Suresh who played a pivotal role in aligning and bringing this project together, ensuring its smooth journey from development to release.



The theatrical trailer, unveiled by Dhanush, had earlier ignited strong buzz and set the tone for the film’s success.



Happy Raj features an ensemble cast including Sri Gouri Priya, George Maryan, Abbas, Geetha Kailasam, Adhirchi Arun, and Madurai Muthu, among others, each contributing to the film’s lively and entertaining narrative.



Backed by a strong technical team, the film boasts music by Justin Prabhakaran, cinematography by Madhan Christopher, and editing by Selva RK, ensuring a visually appealing and emotionally engaging experience.



After winning hearts on the big screen, Happy Raj now promises to recreate the same magic on OTT, making it a perfect watch for families and friends to enjoy together from the comfort of their homes.

திரையரங்க வெற்றிக்குப் பிறகு ‘ஹேப்பி ராஜ்’ – டிஜிட்டல் கொண்டாட்டம் (OTT-யில்) தொடக்கம்!

 திரையரங்க வெற்றிக்குப் பிறகு  ‘ஹேப்பி ராஜ்’ – டிஜிட்டல் கொண்டாட்டம் (OTT-யில்) தொடக்கம்!



திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாராட்டுகளைப் பெற்ற ஹேப்பி ராஜ் திரைப்படம், தற்போது தனது டிஜிட்டல் பயணத்தை தொடங்கியுள்ளது. G. V. பிரகாஷ் குமார் நடித்துள்ள இந்தப் படம், இன்று முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் வெளிநாடுகளில் SimplySouth மூலம் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளது.



திரையரங்குகளில் புதிய  விதமான குடும்ப பொழுதுபோக்கு படமாக பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம், தனது உயர்ந்த கதை சொல்லல், நெருக்கமான உணர்ச்சிகள் மற்றும் சுவாரஸ்யமான நடிப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்றது. இப்போது OTT வெளியீட்டின் மூலம், இது மேலும் அதிகமாக ரசிகர்களை சென்றடைகிறது.


இப்படத்தை இயக்குநராக அறிமுகமான மரியா ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கியுள்ளார். ஜெயவர்தன் தயாரிப்பில், Beyond Pictures நிறுவனம் மூலம் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ஜெயகாந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக இருந்து இந்தப் படத்தின் ஆரம்ப புள்ளியிலிருந்து படம் வெளியாவது வரை அனைத்திற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


முன்னதாக, இந்தப் படத்தின் டிரெய்லரை தனுஷ் வெளியிட்டது படத்திற்கு பெரிய வரவேற்பை உருவாக்கி, அதன் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.


Happy Raj படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், அப்பாஸ், கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங்கை செல்வா RK மேற்கொண்டுள்ளார்.


திரையரங்குகளில் பல இதயங்களைக் கவர்ந்த Happy Raj, இப்போது OTT-யிலும் அதே மாயத்தை மீண்டும் உருவாக்கி, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக வீட்டிலிருந்தே ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

 R.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!






பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் ஆகியவை மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன.


இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள மண்டாடி, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளுக்கு நகர்ந்துள்ளது.


 நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். உள்ளடக்கமிக்க திரைப்படங்களில் தனது பயணத்தை மாற்றி அமைத்து வரும் அவர், இந்தப் படத்திற்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார். அவரது நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தின் மூலம் சுகாஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவருடன் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையாளர்கள் இணைந்துள்ளனர். G.V. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை S. R. கதிர் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை D. R. K. கிரண் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங் பணியை பிரதீப் E. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளனர்.



தற்போது எடிட்டிங், சவுண்ட் டிசைன், VFX மற்றும் இசை அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அம்சத்திலும் கவனமாக பணியாற்றி, ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை உருவாக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


மண்டாடி திரைப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. “மண்டாடி” என்பது கடல் அலைகள், காற்றின் திசை, நீரோட்டம் போன்றவற்றை ஆழமாக அறிந்து, மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரை குறிக்கும் சொல். இது தலைமைத்துவம், அனுபவம் மற்றும் உறுதியை குறிக்கும் அடையாளமாக இந்தப் படத்தில் பிரதிபலிக்கிறது.


முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் மூலம் கவனம் ஈர்த்துள்ள மண்டாடி, தற்போது தனது அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.


அடுத்த பெரிய அப்டேட்டிற்காக ‘மண்டாடி’ தயாராகிக் கொண்டிருக்கிறது – காத்திருக்கவும்!

RS Infotainment’s MANDAADI Shoot Wrapped After an Intensive Schedule — Post-Production Work in Full Swing*

 *RS Infotainment’s MANDAADI Shoot Wrapped After an Intensive Schedule — Post-Production Work in Full Swing*




Esteemed production house RS Infotainment, headed by Mr. Elred Kumar, is delighted to announce that the shoot of its ambitious sports action drama MANDAADI has been successfully wrapped following an extensive and demanding schedule.



Shot across challenging terrains and coastal backdrops, particularly in the Ramanathapuram belt, the team underwent a rigorous filming process to authentically capture the raw energy and spirit of the story. The intensive schedule featured large-scale action sequences, emotionally charged moments, and visually rich sailboat racing portions, all executed with precision and passion.



Directed by Mathimaran Pugazhendhi, MANDAADI promises a deeply rooted narrative set against a unique sporting backdrop. With the shoot now wrapped, the film has swiftly moved into post-production, where work is progressing in full swing.



Headlined by Soori, who continues to redefine his journey as a powerful performer in content-driven cinema, the film demanded intense physical preparation and dedication. His performance is expected to be one of the standout highlights of the film.



The film also stars Suhas, making his Tamil debut, alongside Mahima Nambiar as the female lead. The ensemble cast includes Sathyaraj, Ravindra Vijay, Mithun and Balasaravanan, all of whom bring depth and authenticity to this emotionally rich narrative.



The technical team is equally formidable, with music composed by G. V. Prakash Kumar, cinematography by S. R. Kathir ISC, production design by D.R.K. Kiran, editing by Pradeep E. Ragav, and action choreography by the renowned Peter Hein, Dhilip Subburayan and Mahesh Mathew. Their combined expertise ensures that MANDAADI is crafted with both technical finesse and emotional resonance.



Currently in post-production, the film’s editing, sound design, VFX, and music composition are progressing at a brisk pace, with the team working meticulously to shape a compelling cinematic experience.



MANDAADI explores a unique coastal world rooted in the lives of fishing communities. The term “Mandaadi” refers to a skilled expert who leads fishing expeditions with deep knowledge of ocean currents, wind direction, and wave patterns — symbolizing leadership, instinct, and resilience, which form the emotional core of the film.



Having already generated intrigue with its striking first look, the film now sails into its next phase, steadily building anticipation among audiences and industry circles alike.



Stay tuned as MANDAADI gears up for its next big reveal.

Breakfast Movie Review

Breakfast Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம breakfast  படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கறது ar. Gandhi krishna .   இந்த படத்துல Raanav , Rosmin ,Sampath Raj , Kasturi , Archana ,Krithik Mohan ,Amitha Ranganthனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



Lakshmi யா நடிச்சிருக்க Amitha Ranganth அப்புறம் kritik mohan யும் husband and wife அ இருக்காங்க. இவங்களுக்குள்ள எப்பவுமே சண்டை வந்துகிட்டே இருக்கும், சுருக்கமா சொல்ல போன tom and jerry மாதிரி அடிச்சிக்கறாங்க. இனிமே கணவன் மனைவியா சேந்து வாழ முடியாது ன்ற முடிவுக்கு ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க. அதுனால divorce க்கும் அப்ளை பண்ணிடுறாங்க. court ல இவங்க case நடக்கும்போது , judge இவங்க கிட்ட நிரந்தரமான முடிவை எடுக்கறதுக்கு முன்னாடி  counselling போகணும் னு தீர்ப்பை சொல்லிடுறாரு. 


அதுனால இவங்களும் psychologist அ போய் சந்திக்கறாங்க. அவங்க தான் kasturi.  இவங்க ரெண்டு பேர்கிட்டயும் advice பண்ணமா ஒரு கதையை சொல்லி இவங்க மனசை மாத்த முயற்சி பண்ணுறாங்க. இந்த கதை தான் இந்த படத்துல highlight னு சொல்லலாம். அந்த கதைல raanav நல்ல படிச்சவர இருப்பாரு ஆனா road cleaner அ வேலை செஞ்சுட்டு இருப்பாரு. இன்னொரு பக்கம் பெரிய businessman அ இருக்காரு sampath raj,  இவரோட பொண்ணு தான் rosmin . raanav யும் rosmin யும் காதலிக்க ஆரம்பிக்குறாங்க. இது sampath க்கு சுத்தமா பிடிக்காது. parents ஓட எதிர்ப்பயும் மீறி கல்யாணம் பண்ணிக்ராங்க. 


ஆரம்புத்துல இவங்க ரெண்டு பேரோட life நல்ல தான் போய்ட்டு இருக்கும். ஆனா பிரச்சனை raanav ஓட குடும்பம் இவங்க கிட்ட வரும்போது தான் ஆரம்பிக்குது. இந்த குடும்பத்தால் இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை வருது, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடுறாங்க. 


அதுக்கு அப்புறம் ஒரு intense ஆனா climax portion அ வைக்கிறாங்க. அது தான் இந்த படத்தோட highlight அ இருக்கு. குடும்பத்துல நடக்கற பிரச்சனைகள், psychological distress னு எல்லாமே ரொம்ப தெளிவா காமிச்சிருக்காங்க. 


g v prakash ஓட music and bgm ரெண்டுமே இந்த கதைக்கு plus point அ அமைச்சிருக்கு. paneerselvam ஓட சினிமாட்டோக்ராபி அப்புறம் bhaskar and sujith ஓட் editing யும் பக்கவா இருக்கு. இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யும் அவங்களுக்கு குடுக்க பட்ட role ல நல்லவே நடிச்சிருக்காங்க. இருந்தாலும் sampath raj அப்புறம் kasturi ஓட நடிப்பு தான் அட்டகாசமா இருந்தது. 


gen z பசங்களுக்கு relate பண்ணிக்கிற மாதிரியான கதையை தான் கொண்டு வந்திருக்காரு டைரக்டர்.ஒரு நல்ல கதைகளம் தான் இது. சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை பாருங்க.

Battle Movie Review

Battle Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம battle  படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கறது narayanan P.   இந்த படத்துல arjun,  aradhya krishna, devadharshini uma, munishkanth, uriyadi surali னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



மணி அ நடிச்சிருக்க arjun prabhakaran north madras அ சேந்தவரு. இவரு lower middle class family  அ சேந்தவர இருந்தாலும் rap நல்ல பண்ணுவாரு. இவரு madhi யா நடிச்சிருக்க aradhya வை சந்திக்குறாரு. madhi ஒரு school ல teacher அ வேலை செஞ்சுட்டு இருப்பாங்க. ஆனா இந்த வேலை இவங்களுக்கு திருப்தி யா இருக்காது, அதுக்கு காரணம் இவங்க school principal தான். இவரு மதி க்கு கம்மியான சம்பளத்தை குடுத்து அதிகமா வேலைய வாங்குவாரு. இப்போ மணி யும் மதி யும் love பண்ணிட்டு இருப்பாங்க. இன்னொரு பக்கம் மதி கிட்ட படிக்கற ஒரு student அ காமிக்கறாங்க. அவங்கதான் மதுமிதா வா நடிச்சிருக்க devadharshini uma . இவங்க ஒரு விதமான depression ல இருப்பாங்க அதுக்கு காரணம் exam pressure தான். 


கொஞ்ச நாள் கழிச்சு மதுமிதா தற்கொலை பண்ணிட்டா ன்ற செய்தி வருது. இதுனால எல்லாரும் shock ஆயிடுறாங்க. இன்னொரு பக்கம் மதி ய principal late night ல தன்னொட office க்கு கூப்டு தப்பா நடக்க முயற்சி பண்ணுறாரு. அப்படியே மணி கிட்ட வந்தோம்னா uriyadi surali ன்ற ஒரு music director மணி ய வேலைக்கு எடுத்துக்கிறாரு. மணி rapper ன்றதுனால team எல்லாரும் இவர கலாய்க்குறாங்க. இதுனால மணியும் மனசுலவுல உடைஞ்சு போறாரு. இந்த மாதிரி இவங்க மூணு பேரும் அவங்க life ல நடக்கற இந்த battle அ எப்படி சமாளிக்க போறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


மணி ஒட flashback story touching அ குடுத்து இருந்தாங்க. படத்துல காமெடி scenes னு எதுவுமே கிடையாது. எல்லா scenes யும் ரொம்ப emotional ஆவும் , audience ஒரு scene அ கூட மறக்க கூடாது னு சோகமாவும் வச்ருக்காங்க. படத்தை பாக்கும் போது இதுல வர எல்லா character யும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 



இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது ஜீவா. இவரோட music அ இருக்கட்டும் இல்ல bgm அ இருக்கட்டும் எல்லாமே இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. cinematography அப்புறம் editing யும் நல்ல குடுத்திருக்காங்க. 


இந்த படத்துல நடிச்சிருக்க artist ஒட performance னு பாக்கும்போது arjun அவருக்கு குடுக்க பட்ட கேரக்டர் ல அருமையா நடிச்சிருக்காரு. aradhtya ஓட் நடிப்பு genuine ஆவும் இயல்பாவும் இருந்தது. மத்த supporting actors எல்லாம் அவங்க role அ புரிஞ்சுக்கிட்டு ஒரு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


ஒரு நல்ல கதைகளம் தான் இது. சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை பாருங்க.

சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா-

 *சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ' ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது. இது முழு குடும்பத்தினருக்கான ஒரு கலகலப்பான... வெளிப்படையான மற்றும் இயல்பான நட்சத்திர பேட்டி நிகழ்ச்சியாகும்*



சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச்சுகளும் இடம்பெறுகின்றன. திரையில் இந்த நட்சத்திரங்களை ரசிக்கும் நீண்ட கால சன் டிவி ரசிகர்களுக்கும், இவர்களின் இதுவரை காணாத புதிய பரிணாமத்தைக்காண ஆவலுள்ள இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இது அமைகிறது.


பிரபல ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்டிஸ்ட் ஆன ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, நட்சத்திரங்கள் தங்கள் பாதுகாப்பு அரண்களை தகர்த்து தங்கள் உண்மையான சுயத்துடன் வெளிப்படும் ஒரு தளர்வான மற்றும் சுதந்திரமான களத்தை உருவாக்குகிறது. தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான நகைச்சுவை தருணங்கள் மூலம் ஜெகன் இந்த உரையாடலை வழிநடத்துவது மட்டுமல்லாமல்... அதை தூண்டி விட்டு, அந்த மேஜிக் நிகழ்வதை மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார். அவருடன் ஆபீஸ் கானா ( Office Ganna ) இசைக் குழுவும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஒரு துடிப்பான இசையை வழங்குகிறது.


தேவி ஸ்ரீ பிரசாத் - ஐஸ்வர்யா ராஜேஷ் அல்லது துருவ் விக்ரம் ஆகியோரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறீர்களா..!? மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். ஜாலி ஓ ஜிம்கானா அவர்களின் பொதுவான முகத்திரையை விலக்கி, அதற்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. எந்த ஒரு திரைப்பட கதாபாத்திரமும் வெளிப்படுத்த முடியாத... உண்மையான கதைகள், எதிர்பாராத விசித்திர பழக்கங்கள் மற்றும் தன்னிச்சையான மகிழ்ச்சி தருணங்களை இந்நிகழ்ச்சி வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திரைப்பட நட்சத்திரங்கள்- முன்னணி இசையமைப்பாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் என பலரும் தங்கள் பாதுகாப்பு அரண்களை முழுமையாக கைவிட்டு, இயல்பாக கலந்து கொள்ளும் ஒரு ஈர்க்கக்கூடிய கலவையாக இந்நிகழ்ச்சி அமைகிறது. துருவ் விக்ரம்- ரவி மோகன்- தேவி ஸ்ரீ பிரசாத் - ஐஸ்வர்யா ராஜேஷ் - மிர்ச்சி சிவா- பிரேம்ஜி - ஹரிஷ் கல்யாண்- மகத் ராகவேந்திரா- வைபவ் - அஸ்வின் கக்குமனு மற்றும் டிஜிட்டல் உலகின் ரசிகர்களுக்கு பிடித்த கோபி - சுதாகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.


நடிகர் ரவி மோகன் இது தொடர்பாக பேசுகையில், '' ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே நடைபெற்ற ஒரு விளையாட்டில், என்னை விட என் ரசிகர்கள் என்னை எவ்வளவு ஆழமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்து நான் வியந்து போனேன். அது எனக்கு பணிவையும், மிகுந்த நகைச்சுவையையும், ஒருவித கனவு போன்ற அனுபவத்தையும் அளித்தது '' என்றார்.


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், '' ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சி என் ரசிகர்கள் இதுவரை கண்டிராத என் ஆளுமையின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது. என் இயல்பான குணங்களை வெளிப்படுத்தி நான் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் நேரத்தை செலவிட்டேன்'' என்றார்


இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், '' நான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அல்ல. உண்மையாகவே நான் மகிழ்ச்சியாக இருந்த தேவி மட்டுமே'' என்றார் .


ஜாலி ஓ ஜிம்கானா ஒவ்வொரு தமிழ் பொது பொழுதுபோக்கு ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. திரையில் இந்த நட்சத்திரங்களுடன் வளர்ந்த ரசிகர்கள்.. இந்த நிகழ்ச்சியை இதமானதாகவும், தனிப்பட்டதாகவும் அவர்கள் சற்றும் எதிர்பாராத தருணங்கள் நிறைந்ததாகவும் காண்பார்கள். தமிழ் டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் அடி எடுத்து வைக்கும் இளம் பார்வையாளர்கள் புத்தம் புதிய இயல்பான மற்றும் தொடர்ச்சியாக பார்க்கத் தூண்டும் ஒன்றை இதன் மூலம் காண்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுக்கும் என இந்த நிகழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது.


சன் நெக்ஸ்ட் பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானவை ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் பார்வையிடலாம். மேலும் 'வடம்', 'டீசல்', 'சுமோ', 'ஃபோர்த் ஃப்ளோர் ', 'கிரானி', 'தீயவர் குலை நடுங்க' போன்ற படங்களையும், 'அயலான்', 'மங்காத்தா', 'தனி ஒருவன்' போன்ற ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களையும் நீங்கள் பார்க்கலாம்.


சன் நெக்ஸ்ட் பற்றி...


சன் நெக்ஸ்ட் ( SUN NXT) என்பது நாடு தழுவிய பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளமாகும். இது ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில்... நான்காயிரத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில்... 44 மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்களை வழங்குகிறது. திரைப்படங்கள்- தொலைக்காட்சி- நேரலை மற்றும் முன்கூட்டிய அணுகல் சலுகைகள் என பலதரப்பட்ட உள்ளடக்கங்களுடன் சன் நெக்ஸ்ட் உயர்தரமான தென்னிந்திய பொழுது போக்கில் இல்லமாக திகழ்கிறது.