Featured post

G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on

 *G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on January 22! A Divine Rendition That Captivated Prime Minister Narendra Modi* Thiru...

Tuesday, 20 January 2026

G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on

 *G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on January 22! A Divine Rendition That Captivated Prime Minister Narendra Modi*




Thiruvasagam, one of Tamil literature's most exalted spiritual masterpieces, comes alive in music through acclaimed composer G.V. Prakash Kumar. The first song from this timeless work—composed and rendered by him—will premiere on January 22 via his official YouTube channel. A poignant preview recently enthralled audiences, including the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi, during Pongal celebrations in New Delhi.


The event's spiritual aura, steeped in Tamil cultural richness, soared with Thiruvasagam's celestial echoes. Prime Minister Modi’s rapt attention elevated the moment, as G.V. Prakash Kumar’s soul-stirring vocals and innovative composition revived the text’s devotional fervor in a fresh, contemporary idiom.


Celebrated for fusing tradition with modern flair, G.V. Prakash has forged a singular path across film scores, indie projects, and global stages. This Thiruvasagam endeavor breathes new life into Tamil devotional music, inviting a worldwide audience to its profound depths.


Long envisioning a full musical album of Thiruvasagam, he now materialises this dream step by step, selecting verses, reimagining them for today’s ears while safeguarding their sacred essence. His approach bridges generations, making ancient wisdom emotionally resonant and accessible.


This inaugural track, already blessed with acclaim from the nation’s highest office, drops January 22 on G.V. Prakash Kumar’s YouTube channel, sparking eager anticipation among spiritual music lovers and the global Tamil diaspora.

ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல்,

 *ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல், ஜனவரி 22ல் வெளியாகிறது !!*




*பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!*


தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.


பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம்,  தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.


நவீன இசையில்  பாரம்பரியத்தின் அம்சத்தை இணைப்பதில் தேர்ச்சி பெற்றவர் ஜி.வி. பிரகாஷ். திரைப்பட இசை, தனிப்பாடல்கள், சர்வதேச மேடைகள் என பல தளங்களில் தனது தனித்த குரலை பதித்துள்ள அவர், திருவாசக முயற்சியின் மூலம் தமிழ் ஆன்மிக இசைக்கு புதிய அடையாளம் அளிக்க முனைந்துள்ளார்.


திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.


இந்த முயற்சியின் தொடக்கமாக, மோடி முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல் வரும் ஜனவரி 22 அன்று ஜி.வி. பிரகாஷ் தனது YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.



சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

 *சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்' படத்தின் டிரெய்லர்  வெளியீடு*



தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது.


முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ' மை லார்ட் ' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களை கவனத்தை‌ ஈர்த்திருக்கிறது.  அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிப்பதால் இந்த முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 


தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் -  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக 'மை லார்ட்' படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்...  டிரெய்லர் இடம் பிடித்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.


Link -

https://www.youtube.com/watch?v=KR05JMlq8K8

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை' படக்குழு!

 பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை'  படக்குழு!


'லாரா' திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு 'அறுவடை'  திரைப்படம்.


இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு - கே .கே . விக்னேஷ். பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.


கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் 'அறுவடை' படத்தின்  சார்பில்  கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை  முடித்துள்ளனர்.


அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி 'அறுவடை' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 


'' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை,  மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம்.  விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் " என்றார்.

ஆர்வமும் ஈடுபாடும் : நேதாஜி பிரபு

 ஆர்வமும் ஈடுபாடும்  : நேதாஜி பிரபு






ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு : வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!


தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்'  படத்தின் மூலம் அறிமுகமானார்  நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். 'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு. 


சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில்  அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.


தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில்  30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார்.


இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில்

500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார்.


இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாக களம் இறங்கி உள்ளார் நேதாஜி பிரபு.


எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு ,அர்ப்பணிப்பு, என அத்தனை கோணங்களிலும் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்துள்ளார்.


சினிமா என்பது தன்னை நோக்கிக் காதலுடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களைக் கைவிடாது என்பதற்கு உதாரணமாக அவர்   இதைச் செய்துள்ளார்.சினிமாவை யாரும் ஏனோ தானோ என்றோ அலட்சியமாகவோ  பார்க்கக் கூடாது. தனக்கான தகுதி உள்ளவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதைச் சொல்லும் வகையில் இதைச் செய்துள்ளார் .இதைப் பார்க்கும்போது இது நாள் வரை படை திரட்டி வந்தவர், இப்போது போர் தொடுக்க இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.


நேதாஜி பிரபுவின் இந்த அயராத உழைப்பின், நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவாகியுள்ள  இந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு இங்கே...



காட்சி ஊடகங்கள் அனைத்திலும் முகம் காட்டும் வகையில் நேதாஜி பிரபு ஆர்வமாக இருக்கிறார்.

Monday, 19 January 2026

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

 *அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !!*




*‘கான் சிட்டி’ (Con City)– பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !!* 


தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும்  இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் 


இப்படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு  ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். 


இப்படம், Power House Pictures நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். 


‘கான் சிட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தவுடன் புன்னகை வரவைக்கும் அதே நேரம்,  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  நகரப் பின்னணியில், ஆபிஸ் பேக்குடன் அர்ஜூன் தாஸ் அவரைச் சுற்றி ஹேண்ட் பேக்குடன் அன்னா பென்,  பயணப்பெட்டி பையுடன் யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோருடன் வீல் சேரில் ஒரு வெற்றிக் கோப்பையுடன் குழந்தை அகிலன் என,  முற்றிலும் வித்தியாசனான  இந்த போஸ்டர்,  படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் எனும் ஆவலைத் தூண்டுகிறது. கான் சிட்டி எனும் தலைப்பு இது முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படம் என்பதை உணர்த்துகிறது. 


இதுவரை படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.


புதுமையான டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. 


தமிழில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும்  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.


*தொழில்நுட்ப குழு*


எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங்: அருள் மோசஸ் 

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ராஜ் கமல்

உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

திரௌபதி2 பட குழுவினர் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

 *திரௌபதி2  பட குழுவினர் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்*



இயக்குநர் மோகன் ஜி, நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுமாறு தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவிடம் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீடு மற்றொரு தேதிக்கு மாற்றப்படுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவித்துள்ளார். புதிய தேதி இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் நேரில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை சந்தித்து, அவரது ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

விஸ்வராகம் – சுமதி ராம் வழங்கும், மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி !!

 விஸ்வராகம் – சுமதி ராம் வழங்கும், மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி !!









“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan (எம். எஸ். விஸ்வநாதன்) அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த இசை யாத்திரை, தமிழர்களின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் – 2026 ஜனவரி 14 அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.



இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தனது கவிதைத் தொகுப்பை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்தார். அந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ஒரு வாழ்நாள் இசைப் பயணத்தின் தொடக்கமாக மாறியது. அந்த ஜாம்பவான் விதைத்த இசை விதை, இன்று இசையின் மீதான தூய காதலாக மலர்ந்து ‘விஸ்வராகம்’ என்ற ஆல்பமாக உருவெடுத்துள்ளது. இது MSV – சுமதி ராம் கூட்டுப்பணியின் சின்னமாகவும், அவரது ஒப்பற்ற கலைப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் சமர்ப்பணமாகவும் திகழ்கிறது.


தற்போது, கவிதாயினி சுமதிராம் விஸ்வதுளசியின் கதையை தமிழ் கலாச்சார அம்சங்களுடன் காவிய சாயலில் ஆங்கில நாவலாக உருவாக்கும் முயற்சியில் உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற “லஜ்ஜாவதி” என்ற ஆங்கில இசைத் திரைப்படத்தையும், ஒரு முக்கியமான அமெரிக்க நிகழ்வை மையமாகக் கொண்டு  ஆவணப்படத்தையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இத்திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக சுமதி ராம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது .


ஆங்கில இலக்கியம் பயின்ற சுமதி ராமின் 22 தமிழ் கவிதைகள், எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் இசைக்கோவைகளாக மாற்றப்பட்டுள்ளன. இது வெறும் இசை முயற்சி அல்ல – ஒரு குருவிற்கான மரியாதை, ஒரு மாணவியின் நன்றிக்கடன், இந்திய இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்.


எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள், தனது நீண்ட இசைப் பயணத்தில் ஒரு பெண் பாடலாசிரியருடன் இணைந்து பணியாற்றிய முதல் தருணம் இதுவாகும். இது இசைத்துறையில் பெண்களுக்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்தது.


விஸ்வராகம் – பகுதி 1 (Part I) பாடல்கள்


Audioverse Music (ஆடியோவெர்ஸ் மியூசிக்) லேபிள் மூலம் வெளியிடப்படும் இந்த ஆல்பத்தின் முதல் பகுதியில் இடம்பெறும் பாடல்கள்:


வீணா பிட் –

ராஜேஷ் வைத்யா & எம். எஸ். விஸ்வநாதன்


ஓம்… காற்றைப் போல –

ஹரிஹரன்,

சங்கர் மகாதேவன்,

உன்னிகிருஷ்ணன்,

ஸ்ரீநிவாஸ்,

அனந்த நாராயணன்,

பாம்பே ஜெயஸ்ரீ,

சுஜாதா, 

ஹரிணி, 

கல்பனா


மனசு கொஞ்சம் –

எம். எஸ். விஸ்வநாதன் & பாம்பே ஜெயஸ்ரீ


விஸ்வராகம் –

எஸ். பி. பாலசுப்பிரமணியம்


பகுதி 2 – இன்னொரு இசை அஞ்சலி


இதனைத் தொடர்ந்து, எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம் ஆகியோருக்கான சமர்ப்பண ஆல்பம் – பகுதி 2 வெளியாகவுள்ளது.

மீதமுள்ள பாடல்கள் மாதந்தோறும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட உள்ளன.



சுமதி ராம் – ஒரு பன்முகக் கலைஞர்


சுமதி ராமின் இயக்கத்தில் வெளியான ‘விஸ்வ துளசி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு உன்னத படைப்பாக இன்றும் போற்றப்படுகிறது. இந்தப்படத்தின் இசை படைப்பிற்காக ரெமி விருதை,  இசையமைப்பாளர்கள் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா பெற்றது சிறப்பிற்குரியது.

தற்போது அவர், சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளருடன் இணைந்து மேற்கத்திய மற்றும் பாரம்பரிய இசை கலந்த புதிய ஆல்பத்தை உருவாக்கி வருகிறார்.


மேலும், ‘காந்தி – கருணை மந்திரங்கள்’ (GANDHI – Mantras of Compassion) ஆல்பத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இளையராஜா,  மூன்று முறை கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி  ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம், அவரது கலைப் பயணத்தின் உயரத்தை வெளிப்படுத்துகிறது.



2028 ஜூன் 14 அன்று, எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

அதே நாளில், மலைவாழ் மக்களுக்காக ‘எம். எஸ். வி. மருத்துவமனை’ திறந்து வைக்கப்பட்டது.


இந்த முயற்சியின் பின்னணியைக் கொண்ட ‘ஜெவி’ (GEVI) திரைப்படம், 2026 ஆஸ்கார் விருதுப் போட்டியில் இடம்பெற்றிருப்பதும், இந்த படத்தில் சுமதிராம் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.


ஒரு இசை நன்றி – ஒரு அன்பின் வெளிப்பாடு ‘விஸ்வராகம்’ ஒரு ஆல்பம் மட்டுமல்ல. இது ஒரு மகா இசை அரசருக்கான நன்றிக் கடன், ஒரு மாணவியின் அன்பின் வெளிப்பாடு, ஒரு இசை யுகத்திற்கு செலுத்தப்படும் மரியாதை. ஒரு கவிதாயினியின் ஆழ்ந்த மரியாதையும் கலைப்பணிவும் இதில் வெளிப்படுகின்றன.



ஆச்சார்ய தேவோ பவ!

குரு தேவோ பவ!


PRO R. Mani Madhan

Brand Blitz Entertainment presents* *Filmaker Bharath Mohan’s directorial

 *Brand Blitz Entertainment presents* 

*Filmaker Bharath Mohan’s directorial*

*Shanthu Bhagyaraj’s “Magenta” Teaser explores life and emotions* 




Actor Shanthnu Bhagyaraj has been one among the rarest actors, who has consistently flexed his best to explore his acting potentials. With every film, he has tried exhibiting his best acting nuances, and with slow and steadiness, he has carved a niche of excellence. The teaser of his upcoming film ‘Magenta’ distinctly radiates Shanthnu 2.0 as his expressions and screen presence are totally unique from his erstwhile movies. Kudos to director Bharath Mohan, who has crafted a perfect characterisation for the protagonist. Of course, Anjali Nair has achieved a magnetising charisma with her presence. 


The teaser has instantly garnered colossal response from the film enthusiasts, and the expectations have got decorous for the film’s release. 


The makers will be soon announcing the film’s trailer, audio and worldwide theatrical release date. 


Magenta is written and directed by Bharath Mohan, who earlier fascinated the cinema lovers with critically-acclaimed ‘Igloo’. The film is produced by Dr. JP Leelaram, Raju K, Saravanan B, Rekha L of Brand Blitz Entertainment, and is co-produced by Naveenraja KS. 


While Shanthu Bhagyaraj and Anjali Nair are playing the lead characters, the others in the star-cast include Archana Ravichandran, RJ Ananthi, Bucks, BadavaGopi, Sharath Ravi, Soundarya Priyan among others. 


Dharan Kumar is composing music for this film, which features cinematography by Ballu, editing Pavithran K and Art Direction by Prem Karuthamalai.