Featured post

.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

 R.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்! பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment...

Friday, 24 April 2026

.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

 R.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!






பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் ஆகியவை மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன.


இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள மண்டாடி, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளுக்கு நகர்ந்துள்ளது.


 நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். உள்ளடக்கமிக்க திரைப்படங்களில் தனது பயணத்தை மாற்றி அமைத்து வரும் அவர், இந்தப் படத்திற்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார். அவரது நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தின் மூலம் சுகாஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவருடன் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையாளர்கள் இணைந்துள்ளனர். G.V. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை S. R. கதிர் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை D. R. K. கிரண் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங் பணியை பிரதீப் E. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளனர்.



தற்போது எடிட்டிங், சவுண்ட் டிசைன், VFX மற்றும் இசை அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அம்சத்திலும் கவனமாக பணியாற்றி, ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை உருவாக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


மண்டாடி திரைப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. “மண்டாடி” என்பது கடல் அலைகள், காற்றின் திசை, நீரோட்டம் போன்றவற்றை ஆழமாக அறிந்து, மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரை குறிக்கும் சொல். இது தலைமைத்துவம், அனுபவம் மற்றும் உறுதியை குறிக்கும் அடையாளமாக இந்தப் படத்தில் பிரதிபலிக்கிறது.


முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் மூலம் கவனம் ஈர்த்துள்ள மண்டாடி, தற்போது தனது அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.


அடுத்த பெரிய அப்டேட்டிற்காக ‘மண்டாடி’ தயாராகிக் கொண்டிருக்கிறது – காத்திருக்கவும்!

RS Infotainment’s MANDAADI Shoot Wrapped After an Intensive Schedule — Post-Production Work in Full Swing*

 *RS Infotainment’s MANDAADI Shoot Wrapped After an Intensive Schedule — Post-Production Work in Full Swing*




Esteemed production house RS Infotainment, headed by Mr. Elred Kumar, is delighted to announce that the shoot of its ambitious sports action drama MANDAADI has been successfully wrapped following an extensive and demanding schedule.



Shot across challenging terrains and coastal backdrops, particularly in the Ramanathapuram belt, the team underwent a rigorous filming process to authentically capture the raw energy and spirit of the story. The intensive schedule featured large-scale action sequences, emotionally charged moments, and visually rich sailboat racing portions, all executed with precision and passion.



Directed by Mathimaran Pugazhendhi, MANDAADI promises a deeply rooted narrative set against a unique sporting backdrop. With the shoot now wrapped, the film has swiftly moved into post-production, where work is progressing in full swing.



Headlined by Soori, who continues to redefine his journey as a powerful performer in content-driven cinema, the film demanded intense physical preparation and dedication. His performance is expected to be one of the standout highlights of the film.



The film also stars Suhas, making his Tamil debut, alongside Mahima Nambiar as the female lead. The ensemble cast includes Sathyaraj, Ravindra Vijay, Mithun and Balasaravanan, all of whom bring depth and authenticity to this emotionally rich narrative.



The technical team is equally formidable, with music composed by G. V. Prakash Kumar, cinematography by S. R. Kathir ISC, production design by D.R.K. Kiran, editing by Pradeep E. Ragav, and action choreography by the renowned Peter Hein, Dhilip Subburayan and Mahesh Mathew. Their combined expertise ensures that MANDAADI is crafted with both technical finesse and emotional resonance.



Currently in post-production, the film’s editing, sound design, VFX, and music composition are progressing at a brisk pace, with the team working meticulously to shape a compelling cinematic experience.



MANDAADI explores a unique coastal world rooted in the lives of fishing communities. The term “Mandaadi” refers to a skilled expert who leads fishing expeditions with deep knowledge of ocean currents, wind direction, and wave patterns — symbolizing leadership, instinct, and resilience, which form the emotional core of the film.



Having already generated intrigue with its striking first look, the film now sails into its next phase, steadily building anticipation among audiences and industry circles alike.



Stay tuned as MANDAADI gears up for its next big reveal.

Breakfast Movie Review

Breakfast Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம breakfast  படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கறது ar. Gandhi krishna .   இந்த படத்துல Raanav , Rosmin ,Sampath Raj , Kasturi , Archana ,Krithik Mohan ,Amitha Ranganthனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



Lakshmi யா நடிச்சிருக்க Amitha Ranganth அப்புறம் kritik mohan யும் husband and wife அ இருக்காங்க. இவங்களுக்குள்ள எப்பவுமே சண்டை வந்துகிட்டே இருக்கும், சுருக்கமா சொல்ல போன tom and jerry மாதிரி அடிச்சிக்கறாங்க. இனிமே கணவன் மனைவியா சேந்து வாழ முடியாது ன்ற முடிவுக்கு ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க. அதுனால divorce க்கும் அப்ளை பண்ணிடுறாங்க. court ல இவங்க case நடக்கும்போது , judge இவங்க கிட்ட நிரந்தரமான முடிவை எடுக்கறதுக்கு முன்னாடி  counselling போகணும் னு தீர்ப்பை சொல்லிடுறாரு. 


அதுனால இவங்களும் psychologist அ போய் சந்திக்கறாங்க. அவங்க தான் kasturi.  இவங்க ரெண்டு பேர்கிட்டயும் advice பண்ணமா ஒரு கதையை சொல்லி இவங்க மனசை மாத்த முயற்சி பண்ணுறாங்க. இந்த கதை தான் இந்த படத்துல highlight னு சொல்லலாம். அந்த கதைல raanav நல்ல படிச்சவர இருப்பாரு ஆனா road cleaner அ வேலை செஞ்சுட்டு இருப்பாரு. இன்னொரு பக்கம் பெரிய businessman அ இருக்காரு sampath raj,  இவரோட பொண்ணு தான் rosmin . raanav யும் rosmin யும் காதலிக்க ஆரம்பிக்குறாங்க. இது sampath க்கு சுத்தமா பிடிக்காது. parents ஓட எதிர்ப்பயும் மீறி கல்யாணம் பண்ணிக்ராங்க. 


ஆரம்புத்துல இவங்க ரெண்டு பேரோட life நல்ல தான் போய்ட்டு இருக்கும். ஆனா பிரச்சனை raanav ஓட குடும்பம் இவங்க கிட்ட வரும்போது தான் ஆரம்பிக்குது. இந்த குடும்பத்தால் இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை வருது, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடுறாங்க. 


அதுக்கு அப்புறம் ஒரு intense ஆனா climax portion அ வைக்கிறாங்க. அது தான் இந்த படத்தோட highlight அ இருக்கு. குடும்பத்துல நடக்கற பிரச்சனைகள், psychological distress னு எல்லாமே ரொம்ப தெளிவா காமிச்சிருக்காங்க. 


g v prakash ஓட music and bgm ரெண்டுமே இந்த கதைக்கு plus point அ அமைச்சிருக்கு. paneerselvam ஓட சினிமாட்டோக்ராபி அப்புறம் bhaskar and sujith ஓட் editing யும் பக்கவா இருக்கு. இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யும் அவங்களுக்கு குடுக்க பட்ட role ல நல்லவே நடிச்சிருக்காங்க. இருந்தாலும் sampath raj அப்புறம் kasturi ஓட நடிப்பு தான் அட்டகாசமா இருந்தது. 


gen z பசங்களுக்கு relate பண்ணிக்கிற மாதிரியான கதையை தான் கொண்டு வந்திருக்காரு டைரக்டர்.ஒரு நல்ல கதைகளம் தான் இது. சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை பாருங்க.

Battle Movie Review

Battle Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம battle  படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கறது narayanan P.   இந்த படத்துல arjun,  aradhya krishna, devadharshini uma, munishkanth, uriyadi surali னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



மணி அ நடிச்சிருக்க arjun prabhakaran north madras அ சேந்தவரு. இவரு lower middle class family  அ சேந்தவர இருந்தாலும் rap நல்ல பண்ணுவாரு. இவரு madhi யா நடிச்சிருக்க aradhya வை சந்திக்குறாரு. madhi ஒரு school ல teacher அ வேலை செஞ்சுட்டு இருப்பாங்க. ஆனா இந்த வேலை இவங்களுக்கு திருப்தி யா இருக்காது, அதுக்கு காரணம் இவங்க school principal தான். இவரு மதி க்கு கம்மியான சம்பளத்தை குடுத்து அதிகமா வேலைய வாங்குவாரு. இப்போ மணி யும் மதி யும் love பண்ணிட்டு இருப்பாங்க. இன்னொரு பக்கம் மதி கிட்ட படிக்கற ஒரு student அ காமிக்கறாங்க. அவங்கதான் மதுமிதா வா நடிச்சிருக்க devadharshini uma . இவங்க ஒரு விதமான depression ல இருப்பாங்க அதுக்கு காரணம் exam pressure தான். 


கொஞ்ச நாள் கழிச்சு மதுமிதா தற்கொலை பண்ணிட்டா ன்ற செய்தி வருது. இதுனால எல்லாரும் shock ஆயிடுறாங்க. இன்னொரு பக்கம் மதி ய principal late night ல தன்னொட office க்கு கூப்டு தப்பா நடக்க முயற்சி பண்ணுறாரு. அப்படியே மணி கிட்ட வந்தோம்னா uriyadi surali ன்ற ஒரு music director மணி ய வேலைக்கு எடுத்துக்கிறாரு. மணி rapper ன்றதுனால team எல்லாரும் இவர கலாய்க்குறாங்க. இதுனால மணியும் மனசுலவுல உடைஞ்சு போறாரு. இந்த மாதிரி இவங்க மூணு பேரும் அவங்க life ல நடக்கற இந்த battle அ எப்படி சமாளிக்க போறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


மணி ஒட flashback story touching அ குடுத்து இருந்தாங்க. படத்துல காமெடி scenes னு எதுவுமே கிடையாது. எல்லா scenes யும் ரொம்ப emotional ஆவும் , audience ஒரு scene அ கூட மறக்க கூடாது னு சோகமாவும் வச்ருக்காங்க. படத்தை பாக்கும் போது இதுல வர எல்லா character யும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 



இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது ஜீவா. இவரோட music அ இருக்கட்டும் இல்ல bgm அ இருக்கட்டும் எல்லாமே இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. cinematography அப்புறம் editing யும் நல்ல குடுத்திருக்காங்க. 


இந்த படத்துல நடிச்சிருக்க artist ஒட performance னு பாக்கும்போது arjun அவருக்கு குடுக்க பட்ட கேரக்டர் ல அருமையா நடிச்சிருக்காரு. aradhtya ஓட் நடிப்பு genuine ஆவும் இயல்பாவும் இருந்தது. மத்த supporting actors எல்லாம் அவங்க role அ புரிஞ்சுக்கிட்டு ஒரு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


ஒரு நல்ல கதைகளம் தான் இது. சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை பாருங்க.

சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா-

 *சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ' ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது. இது முழு குடும்பத்தினருக்கான ஒரு கலகலப்பான... வெளிப்படையான மற்றும் இயல்பான நட்சத்திர பேட்டி நிகழ்ச்சியாகும்*



சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச்சுகளும் இடம்பெறுகின்றன. திரையில் இந்த நட்சத்திரங்களை ரசிக்கும் நீண்ட கால சன் டிவி ரசிகர்களுக்கும், இவர்களின் இதுவரை காணாத புதிய பரிணாமத்தைக்காண ஆவலுள்ள இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இது அமைகிறது.


பிரபல ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்டிஸ்ட் ஆன ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, நட்சத்திரங்கள் தங்கள் பாதுகாப்பு அரண்களை தகர்த்து தங்கள் உண்மையான சுயத்துடன் வெளிப்படும் ஒரு தளர்வான மற்றும் சுதந்திரமான களத்தை உருவாக்குகிறது. தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான நகைச்சுவை தருணங்கள் மூலம் ஜெகன் இந்த உரையாடலை வழிநடத்துவது மட்டுமல்லாமல்... அதை தூண்டி விட்டு, அந்த மேஜிக் நிகழ்வதை மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார். அவருடன் ஆபீஸ் கானா ( Office Ganna ) இசைக் குழுவும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஒரு துடிப்பான இசையை வழங்குகிறது.


தேவி ஸ்ரீ பிரசாத் - ஐஸ்வர்யா ராஜேஷ் அல்லது துருவ் விக்ரம் ஆகியோரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறீர்களா..!? மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். ஜாலி ஓ ஜிம்கானா அவர்களின் பொதுவான முகத்திரையை விலக்கி, அதற்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. எந்த ஒரு திரைப்பட கதாபாத்திரமும் வெளிப்படுத்த முடியாத... உண்மையான கதைகள், எதிர்பாராத விசித்திர பழக்கங்கள் மற்றும் தன்னிச்சையான மகிழ்ச்சி தருணங்களை இந்நிகழ்ச்சி வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திரைப்பட நட்சத்திரங்கள்- முன்னணி இசையமைப்பாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் என பலரும் தங்கள் பாதுகாப்பு அரண்களை முழுமையாக கைவிட்டு, இயல்பாக கலந்து கொள்ளும் ஒரு ஈர்க்கக்கூடிய கலவையாக இந்நிகழ்ச்சி அமைகிறது. துருவ் விக்ரம்- ரவி மோகன்- தேவி ஸ்ரீ பிரசாத் - ஐஸ்வர்யா ராஜேஷ் - மிர்ச்சி சிவா- பிரேம்ஜி - ஹரிஷ் கல்யாண்- மகத் ராகவேந்திரா- வைபவ் - அஸ்வின் கக்குமனு மற்றும் டிஜிட்டல் உலகின் ரசிகர்களுக்கு பிடித்த கோபி - சுதாகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.


நடிகர் ரவி மோகன் இது தொடர்பாக பேசுகையில், '' ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே நடைபெற்ற ஒரு விளையாட்டில், என்னை விட என் ரசிகர்கள் என்னை எவ்வளவு ஆழமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்து நான் வியந்து போனேன். அது எனக்கு பணிவையும், மிகுந்த நகைச்சுவையையும், ஒருவித கனவு போன்ற அனுபவத்தையும் அளித்தது '' என்றார்.


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், '' ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சி என் ரசிகர்கள் இதுவரை கண்டிராத என் ஆளுமையின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது. என் இயல்பான குணங்களை வெளிப்படுத்தி நான் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் நேரத்தை செலவிட்டேன்'' என்றார்


இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், '' நான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அல்ல. உண்மையாகவே நான் மகிழ்ச்சியாக இருந்த தேவி மட்டுமே'' என்றார் .


ஜாலி ஓ ஜிம்கானா ஒவ்வொரு தமிழ் பொது பொழுதுபோக்கு ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. திரையில் இந்த நட்சத்திரங்களுடன் வளர்ந்த ரசிகர்கள்.. இந்த நிகழ்ச்சியை இதமானதாகவும், தனிப்பட்டதாகவும் அவர்கள் சற்றும் எதிர்பாராத தருணங்கள் நிறைந்ததாகவும் காண்பார்கள். தமிழ் டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் அடி எடுத்து வைக்கும் இளம் பார்வையாளர்கள் புத்தம் புதிய இயல்பான மற்றும் தொடர்ச்சியாக பார்க்கத் தூண்டும் ஒன்றை இதன் மூலம் காண்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுக்கும் என இந்த நிகழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது.


சன் நெக்ஸ்ட் பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானவை ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் பார்வையிடலாம். மேலும் 'வடம்', 'டீசல்', 'சுமோ', 'ஃபோர்த் ஃப்ளோர் ', 'கிரானி', 'தீயவர் குலை நடுங்க' போன்ற படங்களையும், 'அயலான்', 'மங்காத்தா', 'தனி ஒருவன்' போன்ற ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களையும் நீங்கள் பார்க்கலாம்.


சன் நெக்ஸ்ட் பற்றி...


சன் நெக்ஸ்ட் ( SUN NXT) என்பது நாடு தழுவிய பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளமாகும். இது ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில்... நான்காயிரத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில்... 44 மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்களை வழங்குகிறது. திரைப்படங்கள்- தொலைக்காட்சி- நேரலை மற்றும் முன்கூட்டிய அணுகல் சலுகைகள் என பலதரப்பட்ட உள்ளடக்கங்களுடன் சன் நெக்ஸ்ட் உயர்தரமான தென்னிந்திய பொழுது போக்கில் இல்லமாக திகழ்கிறது.

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

 *ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*



*' கன்னக்குழியா ' வைரலாகிவரும் “ஹாய்” படத்தின் முதல் சிங்கிள் !*


நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.


“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.


காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகை பெற்றுள்ளது. முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி (chemistry) பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.


Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.


இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள “ஹாய்” படம், அடுத்தடுத்த அப்டேட்களால் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. நயன்தாரா – கவின்  காம்பொ ஜென் மார்டின் இசை, மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் முறையுடன், இந்த படம் ஒரு உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


LINK : https://youtu.be/XXo-VzYUIjo

Thursday, 23 April 2026

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29”

 *கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” திரைப்படத்தை White Carpet Films K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் !!*



*White Carpet Films K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது !!*


தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 8 2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டை இந்நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.


White Carpet Films நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையைச் சேர்ந்த “தேஜாவு” திரைப்படத்தையும், முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான “வித்தைக்காரன்” படத்தையும் தயாரித்து கவனம் பெற்றது. அதேசமயம், விநியோகத் துறையிலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், கர்நாடகாவில் அஜித் நடித்த “துணிவு” மற்றும் தமிழகமெங்கும் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. தயாரிப்பிலும், விநியோகத்திலும் சமநிலையை பேணிக் கொண்டு வளர்ந்து வரும் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக White Carpet Films இன்று திகழ்கிறது.


“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையப்படுத்திய ஒரு உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக, அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.


இந்த படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய முகமாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.


மொத்தத்தில், புதிய முயற்சிகளுக்கும் தரமான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் White Carpet Films நிறுவனம், “29” திரைப்படத்தின் மூலம் தனது வளர்ச்சிப் பாதையில் இன்னொரு முக்கியமான படியை எடுத்து வைக்கிறது. காதல், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படம், மே 8 அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்

 *பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில்,  கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*




*பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures ) தயாரிப்பில் பெரிய அப்டேட் – கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய குடும்ப திரைப்படம்!*


*கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி!*


தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்,  தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி  ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.


இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.


மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக பியாண்ட் பிக்சர்ஸ் மற்றும் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts ) இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்கிறார். மற்றும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) சஞ்சன் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.


மொத்தத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அடுத்த படைப்பை சிறப்பாக வடிவமைத்து கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. கவின் நடிப்பில் உருவாகும் இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்

*Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்*






*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் வெளியீட்டிற்காக கொழும்பு வருகை.*


*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு*


இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்.


இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ளது.


‘என்ஜாய் என்ஜாமி (Enjoy Enjaami)’ என்ற பண்பாட்டு கீதத்தின் மூலம் Dhee அபாரமான புகழைப் பெற்றார். உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்ததுடன், வேர்கள் மற்றும் அடையாளத்தை கொண்டாடும் அதன் உணர்வால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்தப் பாடல் இந்திய சுயாதீன இசையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றதோடு, Dhee-யை உலக இசை வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது.


அவரது கலைத்திறன் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க கௌரவங்களை பெற்றுள்ள அவர், சமகால இசை உலகில் முன்னோடி கலைஞராக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார்.


மேலும், ‘I Wear My Roots Like A Medal’ மற்றும் ‘Can’t You Stay A Little Longer’ போன்ற சுயாதீன பாடல்கள் மூலம் Dhee தனது கலை ஆழத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். இந்தப் பாடல்கள் உணர்வு, அடையாளம் மற்றும் பரிசோதனையான இசை வடிவங்களை ஒருங்கிணைக்கும் அவரது தனித்துவமான திறனை வெளிப்படுத்துகின்றன.


இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படுவதுடன், உலகளாவிய ரசிகர்களாலும் அதிக அளவில் கொண்டாடப்படும் Dhee, எல்லைகளையும் இசை வகைகளையும் கடந்து நிற்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்.


தற்போது, தனது சமீபத்திய சுயாதீன பாடலான ‘VARI VARI’ வெளியீட்டிற்காக அவர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் தேதியன்று கொழும்புவில் இந்த இசை ஆல்ப வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த வெளியீடு அவரது தொடர்ந்து வளர்ந்து வரும் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைகிறது. மேலும், அவரது கதை தொடங்கிய இலங்கை மண்ணுடன் மீண்டும் இணையும் ஒரு சிறப்பு தருணமாகவும் இது விளங்குகிறது.