Featured post

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும்

 *தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!* தன்னம்பிக்கைக்...

Wednesday, 19 November 2025

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும்

 *தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!*







தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.


அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார்.


இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார். சமூக நலத்திற்கான தனது பற்றும், மனிதநேயத்தை மையமாக கொண்ட செயல்பாடுகளும் வெளிப்படுத்திய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.

Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu

 Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu


India’s first Bolliger & Mabillard (B&M) Inverted Coaster ‘Tanjora’, and a unique elevated Sky Rail to debut in Chennai, marking Wonderla’s presence in Tamil Nadu

Chennai, 19 November 2025: Wonderla Holidays, India's largest amusement park chain, today 

announced the launch of Wonderla Chennai, its fifth and most ambitious park project, marking a 

futuristic milestone in India’s family entertainment landscape. Spanning across 64.30 acres (of which 

37 acres are currently developed) along Chennai’s scenic Old Mahabalipuram Road and built with an 

investment of over INR 611 crores, Wonderla Chennai represents a bold new chapter, blending a 

fusion of futuristic innovation and ancient Tamil architecture. The park will be officially inaugurated 

on 1st December 2025 by Chief Minister M.K. Stalin along with other chief dignitaries, and will open 

to the public on 2nd December 2025.


The announcement was made at a press conference attended by Arun K. Chittilappilly (Executive 

Chairman & Managing Director), Dheeran Choudhary (COO), Ajikrishnan A G(VP-Engineering) and 

Vyshakh Ravindran (Park Head – Chennai). 


Wonderla Chennai features 43 world-class rides across high thrill, family, kids, and water categories, 

built to entertain up to 6,500 visitors daily. Tickets for Wonderla Chennai start at a base price of 

₹1,489, with a 10% discount available for online bookings and a 20% concession for college students 

presenting a valid ID, along with other curated offers for groups and seasons.


Speaking on the launch, Arun K Chittilappilly, Executive Chairman and Managing Director, Wonderla Holidays said, “Wonderla Chennai is the culmination of a decade-long dream, made possible through the continued support and encouragement of the Government of Tamil Nadu. We’ve created what we believe is India’s most advanced and immersive amusement park. We wanted Wonderla Chennai to truly belong to the people of Tamil Nadu, to reflect their creativity, culture, and warmth. Every corner of the park tells that story, from its temple-inspired design to its authentic local flavours. This launch not only marks our presence across all of South India, but also reflects our deep appreciation for Tamil Nadu’s progressive vision for tourism and infrastructure. We look forward to welcoming families and adventure seekers from across the country”

Dheeran Choudhary, COO, Wonderla Holidays said, “We are proud to continue Wonderla’s legacy of safety, innovation, and operational excellence with the opening of Wonderla Chennai. Every aspect of the park; from ride operations and guest services to hygiene and crowd management, has been planned with precision to deliver a seamless experience. Beyond rides and attractions, we want Wonderla Chennai to become a destination for celebration, a place where families and communities come together to mark festivals, milestones, and shared moments of joy. With thoughtfully designedvalue offerings, curated seasonal events, and accessible pricing, our goal is to make world-class entertainment a part of everyone’s calendar in Tamil Nadu.”

World-Class Rides. Made for Chennai.

Tanjora, India’s first and largest Bolliger & Mabillard (B&M) Inverted Coaster:

A Swiss-engineered masterpiece with multiple inversions, zero-G rolls, and a floorless configuration 

delivering a true sensation of flight.


Spin Mill:

India’s tallest spinning thrill ride at 50 meters ,combining vertical loops, multi-axis motion, and 4.5G 

forces.


Sky Rail:

A 540-meter elevated monorail soaring 12 meters above the park, offering panoramic views from 

Viking-inspired golden gondolas.


Design Meets Culture

Located in Illalur village, Wonderla Chennai’s design takes visitors on a “journey through time and 

space”- transitioning from stone-carved heritage avenues to futuristic ride zones.


➢ Climate-responsive with multiple shaded zones,, natural ventilation, and indigenous 

landscaping

➢ Locally sourced materials like stone and granite to reflect Tamil Nadu’s legacy

Beyond Rides- Dining, Events and Retail Offerings

Wonderla Chennai celebrates Tamil Nadu’s rich culinary diversity through 8 themed dining venues

(1,384 seats), each offering regional specialities such as Dindigul biryani, Chettinad chicken, and 

Chennai-style seafood — alongside international favourites.

Guests can enjoy a mix of buffets, à la carte dining, live cooking counters, and kiosks. Hygiene and 

freshness are ensured through Wonderla’s “Make-Ready-Discard” philosophy, guaranteeing that 

every dish is freshly prepared and served on the same day.


The park’s retail experience has been designed to go beyond souvenirs, featuring merchandise 

inspired by Tamil cinema, and collaborations with local artisans creating Thanjavur and Marapachi 

dolls, supporting regional craft traditions.


Additional guest facilities include spacious changing and locker rooms for individuals and groups, 

first-aid and paramedic stations staffed at all times, and a multipurpose conference hall with 1500 

seating capacity, along with a large 8500 sqft. open-air event space, ideal for corporate gatherings, 

celebrations, and community events. The park also features dedicated baby care/ kids friendly 

zones, and barrier-free pathways to ensure accessibility, safety, and comfort for every guest.


Economic & Environmental Impact

Wonderla Chennai is projected to create over 1,000 direct and indirect jobs, supporting local 

livelihoods and tourism.


The project was facilitated by the Government of Tamil Nadu’s Industrial Guidance & Export 

Promotion Bureau, underscoring the state’s commitment to tourism and entertainment 

infrastructure.

➢ 3.75 crore-litre rainwater harvesting tank

➢ 1,000 kW solar power installation (Phase 2)

➢ 32,000 sq.m of green cover and 1,000+ indigenous trees

➢ Water and ride systems compliant with EN 13814, IS 3328, and IS 10500 standards


With its entry into Tamil Nadu, Wonderla reinforces its leadership in the amusement and leisure 

industry, deepening its presence across South India and paving the way for a stronger national 

footprint in the country’s vibrant tourism and entertainment landscape.

–ENDS–

Wonderla encourages visitors to book their entry tickets in https://bookings.wonderla.com/ advance 

through online portal or customers can buy the tickets directly from the park counters or can contact 

Chennai Park -: 044-35024222, 044-35024300



About Wonderla Holidays Ltd. 

Wonderla Holidays Limited is India’s largest and premier amusement park operator, offering world-

class entertainment experiences across its amusement parks and premium resorts. The company 

operates four top-tier amusement parks in Kochi, Bengaluru, Hyderabad, and Bhubaneswar, alongside the acclaimed Wonderla Resort and the newly-introduced, The Isle by Wonderla, a premium waterside retreat in Bengaluru. Known for its thrilling attractions, including custom-designed rides from leading international suppliers, Wonderla continues to set the benchmark in family entertainment. In addition to its parks, Wonderla offers serene, immersive experiences through its resorts, blending leisure and entertainment in one seamless destination. Since its inception in 2000, over 46 million guests have enjoyed Wonderla parks, solidifying its position as India’s most-visited amusement park chain, while its resorts continue to redefine luxury leisure and hospitality.

தமிழ்நாட்டின் புதிய பொழுதுபோக்கு சகாப்தமான வொண்டர்லா சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று திறக்கப்படுகிறது!*

 *தமிழ்நாட்டின் புதிய பொழுதுபோக்கு சகாப்தமான வொண்டர்லா சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று திறக்கப்படுகிறது!*


தமிழ்நாட்டில், வொண்டர்லா சென்னையில்

இந்தியாவின் முதல் பொலிகர் & மாபில்லார்ட் (பி & எம்) இன்வெர்ட்டட் கோஸ்டர் ‘தஞ்சோரா’ மற்றும் தனித்துவமான உயர்த்தப்பட்ட ஸ்கை ரெயில் என இவை அனைத்தும்  அறிமுகமாகிறது. 


இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமான வொண்டர்லா ஹாலிடேஸ், அதன் ஐந்தாவது பெரிய திட்டமான வொண்டர்லா சென்னை அறிமுகத்தை இன்று அறிவித்தது. இது இந்திய குடும்பங்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழா. சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் 64.30 ஏக்கர் பரப்பளவில் (தற்போது 37 ஏக்கர் பரப்பளவு) இது உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ரூ. 611 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட வொண்டர்லா சென்னை, எதிர்கால புதுமை மற்றும் பண்டைய தமிழ் கட்டிடக்கலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்ற முக்கிய பிரமுகர்கள் டிசம்பர் 1, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக வொண்டர்லா சென்னையை திறந்து வைக்கிறார்கள். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வொண்டர்லா சென்னை டிசம்பர் 2, 2025 அன்று முதல் வருகிறது.


அருண் கே. சிட்டிலப்பிள்ளி (நிர்வாகத் தலைவர் & நிர்வாக இயக்குநர்), தீரன் சவுத்ரி (சிஓஓ), அஜிகிருஷ்ணன் ஏ ஜி (துணைப் பொறியியல்) மற்றும் வைஷாக் ரவீந்திரன் (பார்க் தலைவர் - சென்னை) ஆகியோர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 


வொண்டர்லா சென்னையில் தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் 43 உலகத் தரம் வாய்ந்த ரைட்ஸ் (rides) வடிவமைக்கப்பட்டுள்ளது. வொண்டர்லா சென்னைக்கான டிக்கெட்டுகள் அடிப்படை விலை ரூ. 1,489-ல் இருந்து தொடங்குகிறது. ஆன்லைன் முன்பதிவுகளுக்கு 10% தள்ளுபடியும், கல்லூரி அடையாள அட்டையுடன் வரும் கல்லூரி மாணவர்களுக்கு 20% தள்ளுபடியும் தரப்படுகிறது. 


அறிமுக விழாவில் வொண்டர்லா ஹாலிடேஸின் நிர்வாகத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அருண் கே சிட்டிலப்பிள்ளி பகிர்ந்து கொண்டதாவது, “வொண்டர்லா சென்னை எங்களின் பத்து வருட கனவாகும். தமிழக அரசின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஊக்கத்தால் தற்போது இது சாத்தியமாகியுள்ளது. தமிழக மக்களின் கலாச்சாரம், படைப்பாற்றல் போன்றவற்றை இந்தப் பூங்காவில் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் நம்பிக்கை வைத்தது போலவே, இந்தியாவின் மிகவும் மேம்பட்ட மற்றும் ஆழமான பொழுதுபோக்கு பூங்காவாக இது உருவாகியுள்ளது மகிழ்ச்சி. கோயில் பாணியிலான வடிவமைப்பு முதல் உள்ளூர் கலை வரை பூங்காவின் ஒவ்வொரு பக்கமும் ஒரு கதை சொல்லும். இந்த அறிமுகம் தென்னிந்தியா முழுவதும் எங்கள் இருப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பிற்கான தமிழ்நாட்டின் முற்போக்கான தொலைநோக்குப் பார்வைக்கு எங்களின் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வரும் குடும்பங்கள் மற்றும் சாகச விரும்பிகளை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார். 


வொண்டர்லா ஹாலிடேஸின் தலைமை இயக்க அதிகாரி தீரன் சவுத்ரி கூறுகையில், "வொண்டர்லாவின் பாதுகாப்பு, புதுமை மற்றும் செயல்பாட்டு சிறப்பைத் தொடரும் வகையில் வொண்டர்லா சென்னையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ரைட் ஆப்ரேஷன், விருந்தினர் சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பு வரை பூங்காவின் ஒவ்வொரு அம்சமும், தடையற்ற அனுபவத்தை வழங்க துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளது. வொண்டர்லா சென்னை கொண்டாட்டத்திற்கான இடமாகவும், பண்டிகை காலங்களில் குடும்பங்கள் மற்றும் சமூகம் ஒன்றிணையும் இடமாகவும் மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உலகத்தரமான கொண்டாட்ட அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார். 


*சென்னைக்காக உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த சவாரிகள் (Rides):*


இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய பொல்லிகர் & மாபில்லார்ட் (B&M) தலைகீழ் கோஸ்டர் தஞ்சோரா: சுவிஸ் பொறியியலில் உருவாக்கப்பட்ட பூஜ்ஜிய ஈர்ப்பு விசை கொண்ட பல தலைகீழ் மாற்றங்களுடன் கூடிய தஞ்சோரா, விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை தருகிறது. 


ஸ்பின் மில்: செங்குத்து சுழல்கள், பல-அச்சு இயக்கம் மற்றும் 4.5ஜி விசையுடன், 50 மீட்டர் உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான சுழலும் த்ரில் சவாரி.


ஸ்கை ரயில்: வைக்கிங் பாணியால் ஈர்க்கப்பட்ட தங்க கோண்டோலாக்களிலிருந்து பரந்த காட்சிகளை வழங்கிறது இந்த ஸ்கை ரயில். பூங்காவிலிருந்து கிட்டத்தட்ட 12 மீட்டர் உயரத்தில் உயரும் 540 மீட்டர் உயர மோனோரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.


*கலாச்சாரத்துடன் கூடிய வடிவமைப்பு:*


இல்லலூர் கிராமத்தில் அமைந்துள்ள வொண்டர்லா சென்னையின் வடிவமைப்பு பார்வையாளர்களை நம் பாரம்பரியத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி நிச்சயம் டைம் டிராவலில் அழைத்து செல்லும். 


➢ இயற்கை காற்றோட்டம் மற்றும் பரந்த நிலப்பரப்பு ஆகியவற்றுடன் காலநிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

➢ தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கல் மற்றும் கிரானைட் போன்ற உள்ளூர் மூலப்பொருட்கள் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


ரைட்ஸ் மட்டுமல்லாது உணவு, நிகழ்வுகள் மற்றும் சில்லறை விற்பனை சலுகைகளும் இங்கு உண்டு!


வொண்டர்லா சென்னை தமிழ்நாட்டின் வளமான உணவு வகைகளை கொண்டாடும் வகையில் எட்டு கருப்பொருட்களுடன், 1384 இருக்கைகளுடன் கூடிய உணவு அரங்குகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச தரத்திலான உணவுகளுடன் திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாடு கோழி மற்றும் சென்னை பாணி கடல் உணவு போன்றவையும் இங்கு கிடைக்கும். 


விருந்தினர்களுக்கான பஃபேக்கள், எ லா கார்டே டைனிங், நேரடி சமையல் கவுண்டர்கள் மற்றும் கியோஸ்க்குகளின் கலவையை அனுபவிக்கலாம். வொண்டர்லாவின் ’Make-Ready-Discard’ கொள்கையின்படி சுகாதாரம் மற்றும் உணவின் தரம் உறுதி செய்யப்பட்டு ஒவ்வொரு உணவும் ஒரே நாளில் புதிதாக தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவதை உறுதி செய்கிறது.


இங்கு அமைக்கப்பட்டுள்ள சில்லறை விற்பனை அங்காடியில் நினைவுப் பொருட்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமாவால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுடன் இணைந்து தஞ்சாவூர் மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை உருவாக்கி, பிராந்திய கைவினை மரபுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கூடுதல் விருந்தினர் வசதிகளில் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கான விசாலமான உடை மாற்றும் அறைகள், லாக்கர் அறைகள், எல்லா நேரங்களிலும் பணியாளர்களைக் கொண்ட முதலுதவி மற்றும் துணை மருத்துவ நிலையங்கள், 1500 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு மண்டபம், 8500 சதுர அடி பரப்பளவு கொண்ட திறந்தவெளி நிகழ்வு இடம் போன்றவை பெருநிறுவனக் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு ஏற்றது. மேலும், இங்கு குழந்தைகளுக்கான பிரத்யேக இடங்கள் மற்றும் ஒவ்வொரு விருந்தினருக்கும் பாதுகாப்பு வசதியையையும் உறுதி செய்கிறது.


*பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்:*


உள்ளூர் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுலாவை ஆதரிக்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை சென்னை வொண்டர்லா உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திட்டம் தமிழ்நாடு அரசின் தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு பணியகத்தால் எளிதாக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்புக்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


➢ 3.75 கோடி லிட்டர் மழைநீர் சேகரிப்பு தொட்டி

➢ 1,000 kW சூரிய சக்தி நிறுவல் (இரண்டாம் கட்டம்)

➢ 32,000 சதுர மீட்டர் பசுமைப் போர்வை மற்றும் 1,000+ பாரம்பரிய மரங்கள்

➢ EN 13814, IS 3328 மற்றும் IS 10500 தரநிலைகளுக்கு இணங்கும் நீர் மற்றும் ரைட் சிஸ்டம்ஸ்


தமிழ்நாட்டில் நுழைவதன் மூலம் வொண்டர்லா, பொழுதுபோக்கு துறையில் அதன் தலைமையை வலுப்படுத்துகிறது. தென்னிந்தியா முழுவதும் அதன் இருப்பை நிலைநிறுத்துவதுடன் நாட்டின் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையில் வலுவான இடம் பிடிக்கிறது. 



வொண்டர்லாவில் நுழைவுச்சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://bookings.wonderla.com/ என்ற இணையதளத்தை அணுகவும். இல்லையெனில், வாடிக்கையாளர்கள் பூங்கா கவுண்டர்களில் இருந்தும் நேரடியாக டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது சென்னை பார்க்கை 044-35024222, 044-35024300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


*வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் பற்றி:*


வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான கேளிக்கை பூங்கா நிறுவனமாகும். அதன் கேளிக்கை பூங்காக்கள் மற்றும் பிரீமியம் ரிசார்ட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வரில் நான்கு உயர்மட்ட கேளிக்கை பூங்காக்களை இயங்கி வருகிறது. அவற்றுடன் பாராட்டப்பட்ட வொண்டர்லா ரிசார்ட் மற்றும் பெங்களூருவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தி ஐல் பை வொண்டர்லா, பிரீமியம் நீர்நிலை ஓய்வு விடுதி ஆகியவையும் உள்ளன. முன்னணி சர்வதேச சப்ளையர்களிடமிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சவாரிகள் உட்பட பல சாகசங்களுக்கு பெயர் பெற்ற வொண்டர்லா, குடும்ப பொழுதுபோக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து

 *ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து உருவாகிய இருண்ட, அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை’,  நவம்பர் 28-ல் வெளியாகிறது!!* 




*ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, “ரேகை”  சீரிஸ் நவம்பர் 28-ல் ஸ்ட்ரீமாகிறது!!* 


~ புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ~


இந்தியாவின் முன்னணி தேசீய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும்,  நாம் கண்டுபிடிக்க முடியாத,  ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய  அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது.


இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய ஒரிஜினல் படைப்பாகும். ராஜேஷ் குமார் உலகின் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிகலாக ஒரு புதிய தீவிரத்தை அவர் இந்தக் கதைக்கு வழங்கியுள்ளார்.


லிங்க்  - https://www.youtube.com/watch?v=ybTJcRA5sg4


உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?


S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.

அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில்  அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும் அதன் பதிலும் இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது. 


இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன்  தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்


எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது.., 

“ஒவ்வொரு குற்றக்கதையும் முதலில் மனித மனதில் தான் பிறக்கிறது. ‘ரேகை’யில் என்னை ஈர்த்தது – சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறு ஐடியா எவ்வாறு சமூகத்தின் இருண்ட மூலைகளுக்கு இழுத்துச் செல்கிறது என்பதே. என் உலகிலிருந்து ஒரு ஐடியாவை புதிய படைப்பாளர் எடுத்து, முற்றிலும் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கும்போது, அந்தக்கதை இன்னும் உயிர்ப்புடம் இருக்கிறது என்பதற்கான சான்று இந்த சீரிஸ்.”


எழுத்தாளர் / இயக்குநர் தினகரன்  M கூறியதாவது.., 

“நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு  வன்முறையைக் குறித்து இந்தத் சீரிஸ் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச்  சிதைக்கிறது. அந்த அசௌகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். ராஜேஷ் குமார் சார் கருவிலிருந்து தொடங்கியதாக இருந்தாலும்,   இந்த கிரைம் உலகின் சம்பவங்கள்  எனக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன. அதை பார்வையாளர்களும் உணர்வார்கள்”


முன்னணி நடிகர் பாலஹாசன்.., 

“வெற்றி கதாப்பாத்திரம் எப்போதும் பதில்களைத் தேடி அலையும் ஒரு மனிதன். ஆனால் அவன் கண்டுபிடிக்கும் உண்மைகள் அவனையே பயமுறுத்துகின்றன. அந்த பயத்தை வெளிப்படுத்தாமல் உள்ளே வைத்துக்கொண்டு நடிப்பது சவாலானது. ‘ரேகை’ எனக்கு மனித உணர்வுகளின் பலவீனத்தை சுமந்து பார்க்கும், அவற்றை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.”


ZEE5 தமிழ் மற்றும்  மலையாளம் – வணிகத் தலைவர் & SVP South Marketing – லாய்டு C சேவியர் கூறியதாவது.., 

“‘ரேகை’ ஒரு திரில்லர் மட்டுமல்ல, நம் பூர்வீகக் கதைகள் ஏன் முக்கியம் என்பதற்கான நினைவூட்டல். இது மர்மத்தின் பின்னால் இருக்கும் மௌனங்களை வெளியில் கொண்டுவருகிறது. மனிதர்களைக் காக்க வேண்டிய அமைப்புகள், சில சமயம் அவர்களை பகடையாக பயன்படுத்தும்  உண்மையைத் தட்டி எழுப்புகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய சக்திகளிடம் சிக்கிக்கொள்ளுகிறது என்பதை இந்தத் சீரிஸ், மிக நிஜமாக காட்டுகிறது. உண்மை, நேர்மை, எமோசன் மூன்றும் கலந்த கதைகளைத் தருவதே எங்களின் முக்கிய நோக்கம். ‘ரேகை’ சீரிஸ் அதைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது.”


ஒருமுறை நீங்கள் ‘ரேகை’யின் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டால்,  அதில் குற்றம் உங்களை  பயமுறுத்தாது — குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை தான் மிகப்பெரிய பயத்தைத் தரும்.


‘ரேகை’ ZEE5-இல் நவம்பர் 28 முதல்!

Tuesday, 18 November 2025

*'A Beautiful Breakup’ Teaser Unveiled – A Haunting Love Story Set for Valentine’s Day 2026

 *'A Beautiful Breakup’ Teaser Unveiled – A Haunting Love Story Set for Valentine’s Day 2026*






A Beautiful Breakup is a romantic supernatural English feature film produced by 5 Natures Movies International (London, UK) and directed by Ajithvasan Uggina. Featuring an original symphonic score composed by the legendary ‘Maestro’ Ilaiyaraaja, the film beautifully blends love, mystery, and music — exploring how destiny intertwines two souls across realms of life and beyond.


Starring Thaksh and Matylda in the lead roles, 'A Beautiful Breakup' is inspired by true events and will be released worldwide on Valentine’s Day 2026.


The official teaser of 'A Beautiful Breakup' has been unveiled to an overwhelming response from viewers, crossing 1.7 million views so far. Within hours of release, the teaser attracted thousands of views and enthusiastic responses across social media platforms. Featuring an enchanting score by Maestro Ilaiyaraaja, the film marks the cinematic debut of Thaksh, a passionate London-based artist with a strong background in theatre and storytelling.


Widely regarded as one of the greatest music composers in the world, Maestro Ilaiyaraaja brings his timeless brilliance to 'A Beautiful Breakup'. His original symphonic composition for the film was recorded with the Bow Tie Orchestra, adding a profound emotional layer that elevates the romantic and supernatural essence of the story. His music — both haunting and soul-stirring — serves as the heartbeat of the film and promises to leave a lasting impression on global audiences.


Featuring top technicians from around the world, 'A Beautiful Breakup' stands as a global cinematic collaboration that blends world-class visuals, sound, and storytelling.


Actor Thaksh, based in London, has honed his craft in acting, scriptwriting, and storytelling. He is currently involved in multiple projects, including two upcoming feature films as an actor and one as a producer — marking him as one of the most exciting emerging talents in international cinema.


Actress Matylda, a UK-based model, beautifully blends European elegance with the vibrant spirit of Indian and global cinema. Her recent film Aghathiyaa, in which she stars alongside Arjun Sarja and Jiiva, showcased her strong on-screen presence and acting range, earning praise for her compelling performance.


The story, based on true mysterious events, follows a couple who take one last holiday together at a quiet old estate, hoping to end their relationship and celebrate their breakup on peaceful terms — unaware that the place holds souls long trapped in silence, waiting to be set free. As they spend time there, hidden secrets and long-buried emotions begin to surface. What starts as a journey of heartbreak slowly turns into a haunting tale of love, forgiveness, and fate — showing that true love never really ends, even when life does.


According to the production house, 5 Natures Movies International (London, UK), "We wanted to create a story that connects emotionally with audiences across cultures — something that feels both real and surreal, where love becomes an eternal force, even beyond life and death.”


The teaser — already gaining strong traction online — highlights stunning visuals, heartfelt performances, and Ilaiyaraaja’s lush orchestral score recorded by the renowned Bow Tie Orchestra.


The producers are also preparing to unveil a special behind-the-scenes series capturing the making of the original soundtracks — offering audiences an inside look at the symphony orchestra sessions and the creative process behind Maestro Ilaiyaraaja’s hauntingly beautiful score.


'A Beautiful Breakup', produced by 5 Natures Movies International (London, UK) and directed by Ajithvasan Uggina, featuring music by Maestro Ilaiyaraaja and starring Thaksh and Matylda Bajer, will be released worldwide on Valentine’s Day 2026.


🎥 Watch the Official Teaser: https://youtu.be/ojcsPleHlzo


***

'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது


*'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது* 







5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா. 


தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று இது வரை 1.7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 


உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா, 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' படத்திற்கு தனது காலத்தால் அழியாத திறமையின் மூலம் சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்திற்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்துள்ளது. 


இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த திறமை வாய்ந்த கலைஞரான தக்ஷ் திரைத்துறையில் அறிமுகமாகிறார். போலந்து நாட்டின் வார்சாவைச் சேர்ந்த மாடில்டா பாஜர் நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் மற்றும் ஜீவாவுடன் இணைந்து 'அகத்தியா' திரைப்படத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் டீசர், உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டும் வகையில் டீசர் அமைந்துள்ளது. 


உண்மை சம்பவங்களால் உத்வேகம் பெற்ற இயக்குநர் அஜித்வாசன் உக்கினா, இதுவரை சொல்லப்படாத கதையை மர்ம முடிச்சுகளைக் கொண்டு காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் உதவியோடு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைத்துள்ளார். தாங்கள் காதலை நேர்மறையான வகையில் முறித்துக் கொள்ள தனிமையான எஸ்டேட்டுக்கு செல்லும் ஒரு ஜோடி அங்கு நடைபெறும் சம்பவங்களால் எத்தகைய மாற்றங்களை சந்திக்கிறார்கள் என்பதை 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' ரசிகர்களுக்கு சொல்லும். 


"பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக இணைக்கும் கதையை யதார்த்தமாக வழங்கி இருக்கிறோம். இப்படம் காதலின் சக்தியை ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும்," என்று  5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. 


இப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் ஒலிப்பதிவுகளின் படம்பிடித்துள்ள படக்குழுவினர், மனதை மயக்கும் அழகான இசை உருவாகும் செயல்முறையைப் பற்றிய ஒரு சிறப்பு காணொலியை வெளியிடத் தயாராகி வருகின்றனர்.


டீசரைக் காண: https://youtu.be/ojcsPleHlzo


5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கிரிஷ் தயாரிப்பில், அஜித் வாசன் உக்கினா இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில்.உருவாகியுள்ள 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


டீசரைக் காண: https://youtu.be/ojcsPleHlzo


***



மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

 *மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்'  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா*






ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'ப்ரண்ட்ஸ்'  படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் பேசுகையில்,  


''நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் 'ப்ரண்ட்ஸ்'. ப்ரண்ட்ஸ் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது நட்பு, சிரிப்பு.  இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது.‌ தற்போது 4K தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 


திரு‌. ஷானு பேசுகையில், "ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. தயாரிப்பாளர் அப்பச்சனிடம் பேசி, மறு வெளியீட்டிற்கான உரிமையை வாங்கினோம். அப்போதே அவர் இந்த திரைப்படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்த பிறகே அனுமதி வழங்கினார். மிகப்பெரிய திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவிடம் இப்படத்தின் புதுப்பிப்பு பணிகளை வழங்கினோம். இந்தப் படத்திற்காக 5.1 - 7.1-  டால்பி அட்மாஸ் - என மூன்று வெர்ஷன்களில் ஒலிகளை மாற்றி அமைத்திருக்கிறோம்.‌ ஒவ்வொரு ஃபிரேமையும் டி ஐ (DI) செய்து, கலர் கரெக்ஷனையும் செய்திருக்கிறோம். ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை மீண்டும் வழங்குவதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இந்தப் படத்தை எந்த காலத்தில் பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.‌


இந்தப் படத்தை மலையாளத்தில் உள்ளது போல் இல்லாமல் தமிழ் ரீமேக்கில் இரண்டு கதாபாத்திரங்களை இயக்குநர் சித்திக் புதிதாக இணைத்து இருப்பார். அதனால் மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ்' படத்திற்கும்,  தமிழில் வெளியான 'ப்ரண்ட்ஸ்' படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதிலும் வடிவேலுவின் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். இந்தப் படம் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும்,'' என்றார்.


இயக்குநர் கௌதம் ராஜ் பேசுகையில், "நான் பள்ளியில் படிக்கும் போது இந்த படத்தை பார்த்தேன்.‌ தற்போது இந்த படம் மீண்டும் வெளியாகிறது. டிரைலரை பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியாக தரமிக்கதாக இருக்கிறது. 


ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டன் அந்த காலகட்டத்தில் பாசில், சித்திக் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவருடைய லைட்டிங் குவாலிட்டி ஸ்பெஷலாக இருக்கும்.‌ 


இந்தப் படத்தை மீண்டும் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது பல விஷயங்களை நினைவு படுத்தும். அந்த அளவிற்கு இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் மூவி. 


உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த காலத்தில் சித்திக் தான் பான் இந்திய இயக்குநர். அவர் ஒரு கதையை மலையாளத்தில் எடுத்து வெற்றி பெற வைத்து, அதே கதையுடன் தமிழ், தெலுங்கு ,இந்தி என்று ஒவ்வொரு மொழியிலும் இயக்குவார். அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு கதையை இயக்குவார். அவரைப் போல் ஒரு ஸ்கிரிப்ட்டை காமெடி வெர்ஷனில் எழுதி இயக்கக்கூடிய இயக்குநர் தற்போது இல்லை. 


விஜய்யின் கலை உலக பயணத்தில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் தான் கலெக்ஷன் கிங் ஆக அவரை உயர்த்தியது. 


புதுக்கோட்டை அருகில் உள்ள அறந்தாங்கியில் தான் நான் இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் ஊரில் இந்த படம் 40 நாட்கள் ஓடியது. 


சூர்யாவையும் ஊர் முழுவதும் அறிமுகப்படுத்தி சென்றடைய வைத்த படமும் இந்தப் படம் தான். 


லெஜன்ட் இளையராஜாவின் பாடல்களை இப்போது கேட்டாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறது. 


இன்று வரை டிரெண்டில் இருக்கும் நேசமணி கதாபாத்திரம் இந்தப் படத்தில் இருக்கிறது. தற்போது வரை மீம்ஸ் கிரியேட்டர்கள் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். 


இந்தப் படத்தை நீங்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது நிறைய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தும் என நம்புகிறேன். தற்போதுள்ள இளம் தலைமுறை ரசிகர்கள் இதை ஒதுக்குவார்கள், அதை ஒதுக்குவார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. அவர்கள் அனைத்தையும் ரசிக்கிறார்கள். இந்தப் படம் அவர்களுக்கு வேறு ஒரு அனுபவத்தை வழங்கும். இந்தக் குழுவினருக்கு வாழ்த்துகள்,'' என்றார். 


இயக்குநர் கணேஷ் பாபு பேசுகையில், "நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்பது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா என நிறைய ஹீரோக்கள் உள்ளனர். படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் இவர்கள் அனைவருக்கும் இடையே ஒரு போட்டி இருக்கும்.  இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குஷால் தாஸ் கார்டன் மற்றும் ஒய் எம் சி ஏ மைதானத்தில் தான் நடைபெற்றது. குஷால் தாஸ் கார்டன் என்பது சினிமாவிற்கு கோயில் போன்றது.  அவை எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்,'' என்றார். 


இயக்குநர் பொன் குமரன் பேசுகையில், "ஆண்பாவம் பொல்லாதது எனும் படத்தை அண்மையில் திரையரங்கம் ஒன்றில் குடும்பத்தினருடன் பார்த்தேன். பார்த்துவிட்டு வெளியே வரும்போது அங்கு 'ப்ரண்ட்ஸ்' படத்தின் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. என் மனைவி இந்த படம் எப்போது வருகிறது, என்று உற்சாகத்துடன் கேட்டார். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது என்று சொன்னேன். அவருடைய உற்சாகம் காரணமாக இந்தப் படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்ப்பார்கள் என்று நம்பிக்கை ஏற்பட்டது. 


தற்போது கடந்த காலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தை டெக்னிக்கலாக நல்ல குவாலிட்டியுடன் உருவாக்கி இருக்கிறார்கள். நாம் திரையரங்கத்திற்கு செல்லும் போது அதில் ஓடும் படங்கள் காட்சியாகவும், ஓசையாகவும் நல்லதொரு தரமான அனுபவத்தை கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள். அது போன்றதொரு முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர் வினோத் ஜெயின் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன்.


நான் கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கி விட்டு தமிழில் இயக்குவதற்காக அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அப்போது அவர் மற்றொரு கதையை சொல்லி இந்த கதையை திரைப்படமாக உருவாக்கலாம் என சொன்னார். அந்த கதை மிகவும் அதிகம் செலவாகுமே என்று சொன்னதற்கு பரவாயில்லை என்று சொல்லி, தற்போது 'கோல்மால் ' என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். அதே அளவிற்கான நேரத்தையும், பொருளையும் செலவு செய்து 'ப்ரண்ட்ஸ்' படத்தை புதுப்பித்திருக்கிறார். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு தரமான படத்தை தர வேண்டும் என்ற அவருடைய எண்ணம் உயர்வானது,'' என்றார்.


நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், "இந்தப் படத்தின் இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களை தவிர வேறு எந்த வசனங்களையும் நடிகர்கள் பேச அனுமதிக்க மாட்டார். நான் அவருடன் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறேன். ஸ்கிரிப்டில் இருக்கும் டயலாக்கை தவிர வேறு ஒரு வசனத்தை நடிகர்கள் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த படத்தில் இடம்பெற்ற 'ஆணியே புடுங்க வேணாம்' எனும் டயலாக் கோகுல கிருஷ்ணாவும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதிய டயலாக் தான். 


இந்தப் படத்தில் நான் பேசும் 'ஆடு நடந்தது... மாடு நடந்தது..' என்ற வசனம் மட்டும் தான் அவர் அனுமதித்த எக்ஸ்ட்ரா டயலாக். அதற்கும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு இது ஒரு கல்ட் கிளாசிக் டயலாக் என நான் விளக்கம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார். 


ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பு நடந்த போது நானும், சூர்யாவும் கலகலப்பாக பழகினோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவரும், ஜோதிகாவும் காதலித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் தூது சென்றிருக்கிறேன்.  


ப்ரண்ட்ஸ் படத்தை பொருத்தவரை இயக்குநர் ரசித்து ரசித்து உருவாக்கினார். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அது போன்றதொரு சிறந்த இயக்குநர் தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்புதான். நேசமணி அவர் உருவாக்கிய அற்புதமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருப்பார். 


இந்தப் படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது அதற்கு ஒரு ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றால் நமக்கெல்லாம் ஆண்டவனின் ஆசி இருக்கிறது என்றுதான் அர்த்தம்.  


நாங்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது எங்களுக்கு பிடித்த காமெடி படம் எது, என்று கேட்டால்.. நாங்கள் 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டி வரை உறவு' ஆகிய படங்களை சொல்வோம். இந்தப் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். அதேபோல் 'ப்ரண்ட்ஸ்' படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இதனால் இந்த படம் ரீ ரிலீசிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். 


இந்தப் படத்தில் இடம்பெறும் கடிகாரம் உடையும் காட்சியை படமாக்கும் போது விஜய்யும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த காட்சியை படமாக்குவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகும். மீண்டும் படமாக்கும் போது 'ஐயோ நான் பிடிக்கலடா' என்ற டயலாக் சொல்லும்போது மீண்டும் விஜயும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். படத்தை நீங்கள் உற்றுப்பார்த்தால் விஜயும், சூர்யாவும் திரும்பி நின்று கொண்டு சிரிப்பார்கள். 


விஜய் படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்தால் அமைதியாக இருப்பார். ஆனால் நடிக்கும் போது அற்புதமாக நடித்து அசத்தி விடுவார். அது அவருக்கான கடவுள் கொடுத்த பரிசு. அதேபோல் டப்பிங்கிலும் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை தான் பார்ப்பார். அதன் பிறகு எந்த ஒரு பிசிறு இல்லாமல் கச்சிதமாக பேசி விடுவார். எனக்குத் தெரிந்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இது போல் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை பார்த்துவிட்டு டப்பிங்கில்  முதல் முறையிலேயே கச்சிதமாக பேசி விடுவார். அந்த வகையில் விஜய் அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதே போல் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ என்ற பந்தா எதுவும் இல்லாமல் எங்களுடன் சகஜமாக பழகுவார். 


இந்தப் படத்தில் தேவயானி கதாபாத்திரத்திற்காக முதலில் ஜோதிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு சிம்ரனிடம் பேசினார்கள். இறுதியில் தேவயானி தான் நடித்தார்.‌ அப்போது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. 'காதல் கோட்டை' படத்திலிருந்து அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி.‌ அவர் சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் பேரரசு பேசுகையில், "ரமேஷ் கண்ணாவை பற்றிய பல ரகசியங்கள் இப்போதுதான் தெரிகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிக்காமல் பல வேலைகளையும் பார்த்திருக்கிறார். சூர்யா-  ஜோதிகா காதலுக்கு உதவி இருக்கிறார். 


சூர்யா- விஜய் இருவரும் முதலில் 'நேருக்கு நேர்' படத்தில் நடித்தார்கள். அதில் இருவரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். இந்தப் படத்தில் இணைபிரியாத நண்பர்கள்.‌ இந்தப் படத்தை நான் கல்லூரியில் படிக்கும் போது பார்த்தேன்.‌


விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்', சூர்யா நடித்த 'நந்தா' என எந்த படத்தை பற்றி பேசினாலும்.. அப்படத்தின் கதை நினைவுக்கு வரும். ஆனால் 'ப்ரண்ட்ஸ்' படத்தை பற்றி பேசும்போது அதன் கதை நினைவுக்கு வராது. அதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான் நினைவுக்கு வரும். 


என்னை பொருத்தவரை சித்திக் மிகப்பெரும் இயக்குநர். ஆக்ஷன் படத்தை இயக்கலாம், லவ் சப்ஜெக்ட்டை இயக்கலாம், சென்டிமென்ட் படத்தை எடுத்து, மக்களை அழ வைத்துவிடலாம், ஆனால் காமெடி படத்தை இயக்குவது என்பது கடினம்.‌ ஏனெனில் காமெடி படத்திற்கு டைமிங் ரொம்ப முக்கியம்.‌ 'ப்ரண்ட்ஸ்' படத்தில் காமெடி காட்சிகளில் ஐந்து, ஆறு நடிகர்கள் இருப்பார்கள். அனைவரும் டைமிங் உடன் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.


இந்தப் படத்தில் யார் ஹீரோ என்று தெரியாது. விஜயா, சூர்யாவா, வடிவேலா, ரமேஷ் கண்ணாவா என தெரியாது. இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு காட்சியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 


மலையாள இயக்குநர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள். திரைக்கதையில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே படமாக்குவார்கள். நான் மலையாள திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.  


இந்தப் படத்திற்குப் பிறகு நேசமணி என்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது. 


நான் 'திருப்பாச்சி' படத்தில் பணியாற்றும்போது விஜய் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து விட்டார்.‌ அந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லும்போது ஆடு வெட்டும் காட்சியில் பெஞ்சமினை வைத்து தான் கதை சொன்னேன். ஏனெனில் அவர் காமெடியன். அதனால் காட்சியை அப்படி உருவாக்கினேன். படப்பிடிப்புக்கு செல்லும் முன் மீண்டும் விஜயிடம் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அப்போது அவர் தயக்கத்துடன் அந்த ஆடு வெட்டும் காட்சியில் நான் நடித்தால் நன்றாக இருக்குமா எனக் கேட்டார். அந்தக் காட்சியில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது. ஆனால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டதால் அந்த காட்சி அவருக்கு பொருத்தமானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அவர் கேட்டவுடன் 'ஓகே சார் நீங்கள் நடிக்கலாம்' என்று சொல்லிவிட்டேன். விஜய் இன்று மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக முன்னேறி விட்டாலும் அவருக்குள் ஒரு அற்புதமான காமெடி சென்ஸ் இருக்கிறது. என்னுடைய 'திருப்பாச்சி', 'சிவகாசி' ஆகிய இரண்டு படங்களிலும் முதல் பாதி காமெடியாக தான் இருக்கும்.  


ஒரு நடிகருக்கு காமெடி சென்ஸ் இருந்தால் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து விடுவார். அப்போதுதான் நீண்ட காலத்திற்கு திரை உலகில் நட்சத்திரமாக வளர முடியும். சூர்யாவும் 'பிதாமகன்' படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார். 


தற்போதுள்ள சூழலில் புதிய படங்களை வெளியிடுவதில் சவால்கள் உள்ளது. இந்நிலையில் ஒரு படத்தை ரீ ரிலிஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும். அதற்கான தகுதி இந்த 'ப்ரண்ட்ஸ்' படத்திற்கு இருக்கிறது.  தினமும் வெளியாகும் குண்டு வெடிப்பு, வன்முறை, உயிர் பலி போன்ற செய்திகளால் மக்கள் மனதளவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ரிலீஃபாக இந்த 'ப்ரண்ட்ஸ்' படம் அமையும். அதனால் இந்தப் படம் வெளியாகும் போது எந்த அளவிற்கு வெற்றியை பெற்றதோ, அதே அளவிற்கு இந்த படம் மீண்டும் வெளியாகும் போதும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.


***

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார்

 *டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்*






சென்னை, நவம்பர் 14, 2025 — சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது.


இந்த நிகழ்ச்சி, நவீன டெர்மடாலஜி மற்றும் காஸ்மெடாலஜி நிபுணத்துவத்தால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை ஸ்கின் கேர் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் டெர்மிபியூரின் பார்வையை வெளிப்படுத்தியது. அறிவியல் புதுமைகள், தனிப்பயன் சிகிச்சைகள் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட ஸ்கின் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு, இந்த கிளினிக் அழகு, நம்பிக்கை மற்றும் மருத்துவத் தரத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கம் கொண்டுள்ளது.


நடிகை பிரியா ஆனந்த் கூறியதாவது:


“டாக்டர் சௌம்யா எனக்கு மிக நெருங்கிய தோழி. நான் முதல் முறையாக அவருடைய ஸ்கின் கிளினிக்கிற்கு வந்துள்ளேன். இது மிக அழகாகவும், சிறப்பாகவும் உள்ளது. ஸ்கின் கேர் தொடர்பான அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளும் இங்கு உள்ளன. எங்கள்போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று.


இங்கு அமெரிக்காவில் மட்டுமே பொதுவாக காணப்படும் பொலிலேஸ் லேசர் மெஷின் இருப்பதைப் பார்த்ததில் என்னால் மிகவும் மகிழ்ச்சி அடைய முடிந்தது. அதோடு, பல முன்னேறிய வசதிகளும் உள்ளன. பல கிளினிக்குகளுடன் ஒப்பிடும்போது, இங்கு இந்த சேவைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இது அழகு துறைக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.


நான் பல டெர்மடாலஜிஸ்ட்களை சந்தித்துள்ளேன்; பெரும்பாலோர் இத்தகைய தரமான மெஷின்களை வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, நிபுணர்களால் கை ஓட்டமாக தயாரிக்கப்பட்ட லேசர் மெஷின்களைக் கொண்டு வந்துள்ளனர்.


என் தோழியின் கிளினிக்கை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டுகிறேன். இது புதிய தலைமுறைக்கு ஒரு உண்மையான வரப்பிரசாதமாக இருக்கும். நன்றி.”


டாக்டர் சௌம்யா கூறியதாவது:


“இன்றைய தலைமுறைக்கு ஸ்கின் கேர் பற்றிய விழிப்புணர்வு அதிகம் உள்ளது; அதே நேரத்தில், பல்வேறு ஸ்கின் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த ஸ்கின் கிளினிக்கை தொடங்கியுள்ளோம்.


இங்கு பர்மனென்ட் ஹேர் ரிடக்ஷன், பிக்மென்டேஷன் நீக்கம் உள்ளிட்ட பல சிறந்த சிகிச்சைகள் மற்றும் வசதிகளை வழங்குகிறோம்.


பல ஸ்கின் கிளினிக்குகளில் லேசர் மெஷின்கள் இல்லாத சூழலில், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்பம் கொண்ட லேசர் மெஷின்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.


எல்லோருக்கும் ஏற்ற விலையில் உயர்தர ஸ்கின் சிகிச்சைகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள். இந்த கிளினிக்கைத் திறந்து வைத்ததற்கு என் தோழி பிரியா ஆனந்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.”


டெர்மிபியூர் கிளினிக் பற்றி


டெர்மிபியூர் கிளினிக், பிரைம்லேஸ் நிறுவனத்தின் மேம்பட்ட எஸ்தெடிக் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொலிலேஸ் லாங்-பல்ஸ்ட் Nd:YAG லேசர், பிக்மென்டேஷனுக்கான பயாக்சிஸ் ஜெர்மன் லேசர் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட எஸ்திமேக்ஸ் ஹைட்ரோஜெல்லி மாஸ்க் ஆகியவை அடங்கும்.


இந்த முன்னோடியான தொழில்நுட்பங்கள் பிக்மென்டேஷன் திருத்தம், பர்மனென்ட் ஹேர் ரிடக்ஷன், ஸ்கின் ரீஜூவனேஷன், கல்லாஜன் ஸ்டிமுலேஷன் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய மீட்பு ஆகியவற்றுக்கு உலக தரத்திலான தீர்வுகளை வழங்குகின்றன — இது நவீன டெர்மடாலஜி மற்றும் எஸ்தெடிக் மருத்துவத்தில் புதிய தரத்தை அமைக்கிறது.

The Majestic & Mighty Queen’s Chapter Opens, Nayanthara Comes On Board

 The Majestic & Mighty Queen’s Chapter Opens, Nayanthara Comes On Board For Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic #NBK111*



God of the Masses, Nandamuri Balakrishna, who is basking in the glory of consecutive blockbusters, is all set to collaborate once again with blockbuster maker Gopichand Malineni. Following the sensational success of Veera Simha Reddy, the duo reunites for their much-anticipated historical epic, #NBK111. The film will be produced by Venkata Satish Kilaru, currently backing the ambitious pan-India project Peddi, under the prestigious Vriddhi Cinemas banner on a grand scale.


The majestic and mighty queen’s chapter now opens. The gorgeous Nayanthara joins the project as the leading lady opposite Balakrishna in this high-budget cinematic spectacle. Her role will be pivotal to the narrative. This marks the fourth collaboration between Balakrishna and Nayanthara after Simha, Jai Simha, and Sri Rama Rajyam, making it a delightful treat for audiences eager to see this successful on-screen pair once again. The announcement was made today, on the occasion of Nayanthara’s birthday.


The majestic announcement video showcases the ambitious scale, vibrant visual spectacle and sets the stage for the film perfectly.


The grandeur of the film is hinted by director Gopichand Malineni in a prominent way while introducing Nayanthara on the horse. The magnificent visual experience that the makers are promising with the film in another level and never-seen-before scale.


For the very first time, director Gopichand Malineni steps into the realm of historical drama, bringing his signature mass appeal to a grand new genre. Renowned for delivering commercial blockbusters, he is now crafting a monumental narrative that will present Nandamuri Balakrishna in a never-before-seen avatar. Set against a rich historical backdrop, the film promises an intense blend of emotion and action, amplified by spectacular visuals and larger-than-life storytelling.


The remaining cast and crew details will be revealed soon.


*Cast* : Nandamuri Balakrishna, Nayanthara


*Technical Crew:*


Writer, Director: Gopichand Malineni

Producer: Venkata Satish Kilaru

Banner: Vriddhi Cinemas

PRO: Yuvraaj


link : 

https://www.youtube.com/watch?v=T7K-xLuUpls