Featured post

PM Narendra Modi Using AA23 Theme Music Reflects Allu Arjun’s Cultural Influence

 *PM Narendra Modi Using AA23 Theme Music Reflects Allu Arjun’s Cultural Influence* Long before Pan India became an industry trend, Allu Arj...

Tuesday, 17 March 2026

ராஜாதிராஜ் யாத்ரா', பிரம்மாண்டமான‌ கிருஷ்ண லீலை நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது

 *'ராஜாதிராஜ் யாத்ரா', பிரம்மாண்டமான‌ கிருஷ்ண லீலை நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது*







*'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது*


*சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் நடைபெறுகிறது*


'ராஜாதிராஜ் யாத்ரா' எனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளையும் தெய்வீக வாழ்க்கையையும் போற்றும் பிரம்மாண்டமான நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது. பல்வேறு நகரங்களில் அரங்கேற்றப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்நாடகம் முதல் முறையாக சென்னையில் நிகழவுள்ளது.


திரு தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள‌ 'ராஜாதிராஜ் யாத்ரா' நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது. 


அமெரிக்காவின் பிராட்வே மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளைப் போல அதிக பொருட்செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட அரங்குகளோடு இசை, நடனம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என‌ பார்வையாளர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் ரசனைக்கும் விருந்து படைக்கும் வகையில் இந்த நாடகம் திகழும். 


சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் 'ராஜாதிராஜ் யாத்ரா' அரங்கேற்றப்படும்.


காட்சி நேரங்கள் பின்வருமாறு:

• *மார்ச் 27 – மாலை 7:00 மணி*

• *மார்ச் 28 – பிற்பகல் 2:00 மணி மற்றும் மாலை 7:00 மணி*

• *மார்ச் 29 – காலை 11:30 மணி மற்றும் மாலை 4:30 மணி*


இந்தி மொழியிலான இந்த நாடகம் அனைத்து மொழி ஆன்மிக அன்பர்கள் மற்றும் கலை ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் தெரிவித்துள்ளது.


'ராஜாதிராஜ் யாத்ரா' இசை, நடனம் மற்றும் கதைசொல்லல் மூலம் கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் தெய்வீக பெருமைகளை முன்வைக்கும் பெரிய அளவிலான கலைப் படைப்பாகும். கோகுலத்தின் குறும்பு குழந்தை முதல் ஞானமுள்ள தத்துவஞானி மற்றும் துவாரகையின் மாமன்னர் என இந்த நிகழ்ச்சி கிருஷ்ணரை பல வடிவங்களில் சித்தரிக்கிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணை, தைரியம் மற்றும் போதனைகளை இந்த நாடகம் எடுத்துரைக்கிறது. மறக்கமுடியாத‌ கலாச்சார அனுபவமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் புக் மை ஷோ தளத்தில் கிடைக்கும்.


***

No comments:

Post a Comment