Featured post

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்

 *மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!* மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நட...

Friday, 24 October 2025

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்

 *மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!*



மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில்,  பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான “பெத்தி” படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இப்படத்தில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ்  (Vriddhi Cinemas)  சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு ( Venkata Satish Kilaru) தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.


இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கை தீவின்  பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் பங்குபெறும், ஒரு அழகான பாடல் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற, மேஸ்ட்ரோ A.R. ரஹ்மான் இசையைமைக்கிறார்.


“பெத்தி” படம், இயக்குநர் புச்சி பாபு சானாவுக்கு மிகவும் பெருமைக்குரிய முயற்சி ஆகும். இதில், ராம் சரணை இதுவரை காணாத புதிய தோற்றங்களிலும் பல்வேறு வித்தியாசமான லுக்குகளிலும் காட்டத் திட்டமிட்டுள்ளார். தனது கதப்பாத்திரத்திற்காக  முழு அர்ப்பணிப்புடன், கடின உழைப்புடன், அதிரடி காட்சிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் ராம் சரண்.


கருநாடக சக்கரவர்த்தி  சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். R ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார்.


“பெத்தி” படம் வரும்  2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது.


நடிகர்கள் :

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா


தொழில்நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

கலை இயக்கம்: அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்


Mega Power Star Ram Charan, Janhvi Kapoor’s Peddi Song Shoot In Sri Lanka*

 Mega Power Star Ram Charan, Janhvi Kapoor’s Peddi Song Shoot In Sri Lanka*



Mega Power Star Ram Charan’s highly anticipated rural action drama Peddi is progressing at jet speed, with production works taking place as per schedule. Directed by Buchi Babu Sana, the film features Janhvi Kapoor as the female lead. Produced by Venkata Satish Kilaru under Vriddhi Cinemas and prestigiously presented by Mythri Movie Makers and Sukumar Writings, Peddi is being mounted on a grand scale with immense ambition.


Meanwhile, Ram Charan, director Buchi Babu Sana, and other team members have jetted off to Sri Lanka for the next shooting schedule to begin tomorrow. The shoot will take place amidst the picturesque locales of the island nation, where the team will be filming a beautiful song featuring the lead pair- Ram Charan and Janhvi Kapoor. Academy Award-winning maestro AR Rahman is composing the music for the film.


Peddi is a prestigious project for Buchi Babu Sana, who is set to present Ram Charan in a never-before-seen avatar with multiple distinct looks. On his part, Ram Charan is displaying immense dedication, undergoing various makeovers and performing high-octane stunts.


Kannada superstar Shiva Rajkumar plays a powerful role, while Jagapathi Babu and Divyendu Sharma are also part of the prominent cast.


A team of highly skilled technicians is working on the film. R. Rathnavelu is handling cinematography, while National Award-winning editor Navin Nooli is in charge of the editing.


Peddi is slated for a grand pan-India theatrical release on March 27, 2026.


Cast: Global Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma


Technical Crew:

Writer, Director: Buchi Babu Sana

Presents: Mythri Movie Makers, Sukumar Writings

Banner: Vriddhi Cinemas

Producer: Venkata Satish Kilaru

Co producer: Ishan Saksena

Music Director: AR Rahman

DOP: R Rathnavelu

Production Design: Avinash Kolla

Editor: Navin Nooli

Executive Producer: V. Y. Praveen Kumar

Marketing: First Show

PRO: Yuvraaj

கவின்–ஆண்ட்ரியா ஜெரெமையா இணைந்து நடித்திருக்கும் மாஸ்க் - நவம்பர் 21 வெளியீடு

 *கவின்–ஆண்ட்ரியா ஜெரெமையா இணைந்து நடித்திருக்கும் மாஸ்க் - நவம்பர் 21 வெளியீடு*



அதிக எதிர்பார்ப்பில் இருக்கும், கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’, வரும் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மத்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, படக்குழு வண்ணமயமான புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், படத்தின் OTT உரிமையை Zee5 பெற்றுள்ளதாகவும், ஆடியோ உரிமையை T-Series பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தனது முந்தைய படங்களில் சிறப்பாக நடித்த கவின், இம்முறை தனது பல்திறனை வெளிப்படுத்தி, பல்துறை திறமையாளர் ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் திரையை பகிர்ந்து கொள்ள உள்ளார். முதன்முறையாக, ருஹானி ஷர்மா கவினின் ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோ, அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் பாடல் “கண்ணுமுழி” அதன் ஊக்கமூட்டும் நாட்டுப்புற தாளத்தால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இயக்குநர் விகர்னன் அசோக், தனது தனித்துவமான குரலை மாஸ்க் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வருகிறார். சென்னை நகரின் புத்துணர்ச்சியான பின்னணியில் நடக்கும் இந்த படம் உணர்ச்சி, நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த ஒரு டார்க் காமெடி த்ரில்லர் ஆக அமைந்துள்ளது.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் RD ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், R ராமர் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் M விஜய் அய்யப்பன் மேற்கொண்டுள்ளனர். உடை வடிவமைப்பை பூர்த்தி பிரவீன் மற்றும் விபின் சங்கர் கவனித்துள்ளனர். சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மற்றும் விக்கி இயக்கியுள்ளனர். நடன அமைப்பை அசர் மற்றும் விஜி மேற்கொண்டுள்ளனர்.


சிறந்த நடிப்பு, வித்தியாசமான கதை, உயர்தர தொழில்நுட்ப குழு ஆகியவற்றால் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ திரைப்படம், நவம்பர் 21, 2025 அன்று வெளிவரும் போது பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான சினிமா அனுபவத்தை அளிக்கவுள்ளது.


*நடிகர்கள்:*

கவின்  

ஆண்ட்ரியா ஜெரமையா  

ருஹாணி ஷர்மா  

சார்லி  

ரமேஷ் திலக்  

கல்லூரி வினோத்  

VJ அர்ச்சனா சந்தோக்  


*தொழில்நுட்பக் குழு:*

தயாரிப்பு நிறுவனங்கள்: தி ஷோ மஸ்ட் கோ ஆன் ( TSMGO ) & பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்  

எழுத்து & இயக்கம்: விகர்ணன் அசோக்  

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்  

ஒளிப்பதிவு: RD ராஜசேகர்  

படத்தொகுப்பு: R ராமர்  

கலை இயக்கம்: ஜாக்கி, எம். விஜய் அய்யப்பன்  

பாடல் வரிகள்: கருமாத்தூர் மணிமாறன், கேபர் வாசுகி  

நடன அமைப்பு: அசார், விஜி  

சண்டைக் காட்சிகள்: பீட்டர் ஹைன், விக்கி  

ஆடை வடிவமைப்பு: பூர்த்தி பிரவீன், விபின் ஷங்கர்

தயாரிப்பாளர்கள்: ஆண்ட்ரியா ஜெரமையா & SP. சொக்கலிங்கம்  

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Kavin–Andrea Jeremiah starrer dark comedy thriller ‘Mask’ all set to release on 21st November 2025

 *Kavin–Andrea Jeremiah starrer dark comedy thriller ‘Mask’ all set to release on 21st November 2025*  



The much-awaited dark comedy thriller ‘Mask’, starring Kavin and Andrea Jeremiah in the lead roles, is all set to hit the screens on November 21st, 2025.  


Produced by The Show Must Go On in association with Black Madras Films, the film is directed by debutant Vikarnan Ashok. On the festive occasion of Diwali, the makers unveiled a vibrant new poster extending warm festive wishes to fans while officially announcing that Zee5 has bagged the OTT streaming rights and T-Series has acquired the audio rights for the film.  


Following the success of his previous performances, Kavin is set to captivate audiences once again with his versatility, sharing screen space with the multi-talented Andrea Jeremiah. Ruhani Sharma joins the cast as Kavin’s pair for the first time, alongside an ensemble of seasoned performers including Charle, Ramesh Thilak, Kalloori Vino, and Archana Chandhoke in pivotal roles.  


Adding musical brilliance to the project is National Award-winning composer G.V. Prakash Kumar, whose recently released first single “Kannumuzhi” has already become a chartbuster for its energetic folk beats and infectious rhythm.  


Director Vikarnan Ashok, brings his own unique voice to Tamil cinema with Mask. Set against the lively yet complex backdrop of Chennai, the film is touted to be a dark comedy thriller packed with emotion, humor, and intrigue.  


The film’s stellar technical crew includes RD Rajasekhar as the cinematographer, R. Ramar as the editor, Jacki and M. Vijay Iyyappan as production designers, and Poorthi Pravin and Vipin Shankar handling costume design. The action sequences are choreographed by Peter Hein and Vicky, while Azar and Viji handle the dance choreography.  


With strong performances, a compelling storyline, and top-tier technical craftsmanship, Mask promises to be an engaging cinematic experience for audiences when it releases on November 21st, 2025.  


*CAST:*

Kavin  

Andrea Jeremiah  

Ruhani Sharma  

Charle  

Ramesh Thilak  

Kalloori Vino

Archana Chandhoke  


*CREW:*

Production Company: The Show Must Go On & Black Madras Films  

Mentored by: Vetri Maaran

Written & Directed by: Vikarnan Ashok  

Music Director: G.V. Prakash Kumar  

Cinematographer: RD Rajasekhar  

Editor: R. Ramar  

Art Directors: Jacki, M. Vijay Iyyappan  

Lyricists: Karumathur Manimaran, Kaber Vasuki  

Choreographers: Azar, Viji  

Stunt Directors: Peter Hein, Vicky  

Costume Designers: Poorthi Pravin, Vipin Shankar  

Producers: Andrea Jeremiah & S.P. Chockalingam  

PRO: Riaz K Ahmed, Paras Riyaz

ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்” ; கசிவு திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்

 *“ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்” ; கசிவு திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்* 










*“எழுத்தாளர் பூமணியின் எழுத்துக்களை பேசி நடித்ததே எனக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தது போல தான்” ; எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி* 


*திரைப்படமாக உருவான எழுத்தாளர் பூமணியின் ‘கசிவு’ நாவல் ; அக்-23 முதல் ஒடிடி பிளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது* 


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய கசிவு என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது.


தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க விஜயலட்சுமி, ஹலோ கந்தசாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் வரதன் செண்பகவல்லி இயக்கியுள்ளார். வெற்றிச்செல்வன் இந்த படத்தை தயாரித்துள்ளார். 


பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ள இந்த படம் அக்-23 இரவு முதல் ஓடிடி பிளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதனையடுத்து இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (அக்-23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் பூமணி, இயக்குனர்கள் சுப்பிரமணிய சிவா, அஜயன் பாலா, கேபிள் சங்கர் மற்றும் ராப் பாடகர் அறிவு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக கசிவு திரைப்படம் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது.


இந்த நிகழ்வில் 


*இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசும் போது,* 


“1998 ல் ஐயா பூமணி அவர்கள் தனது  கருவேலம் பூக்கள் நாவலை படமாக இயக்கிய சமயத்தில் அவரிடம் நான் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினேன். எந்த அளவிற்கு அவர் நேர்மையானவர் என்றால் அந்தப் படத்தை தயாரிப்பதற்காக கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் மீதி இருந்த பணத்தை தயாரிப்பு நிறுவனத்திடமே திருப்பி ஒப்படைத்தவர். கரிசல் எழுத்துக்களை மக்கள் மொழியில் கதையாக சொல்லக்கூடிய எழுத்தாளர் பூமணி. ரத்தமும் சதையுமாக மக்கள் பிரச்சனைகளை பேசியவர். மாபெரும் ஆளுமை மிகுந்த எழுத்தாளர். எவ்வளவு சிறந்த மனிதனுக்கும் மோசமான பின் கதைகள் இருக்கும். சாகும் தறுவாயில் அது என்னவென்று சொல்லிவிட்டு உயிரை விடுபவர்களுக்கு அது ஒரு ஆத்ம திருப்தியாக இருக்கலாம். ஆனால் அது அவரை சார்ந்த மற்றவர்களுக்கு கஷ்டத்தை தான் தரும். அதனால் நம் உயிர் போகும் வரை அதை சொல்லாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். என்பதை இந்த கசிவு படத்தில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்” என்று பேசினார்.


*ராப் பாடகர் அறிவு பேசும்போது,*


“இந்த கசிவு கதையை நான் படிக்கவில்லை. ஆனால் படம் பார்த்தபின் இந்த கதை நடக்கும் ஊருக்குள்ளேயே இருந்தது போல, தாத்தா பாட்டி உடன் வாழ்ந்தது போல நினைவுகளை ஏற்படுத்தியது. அவர்கள் வயதில் சில பிழைகளை செய்து அதை தாண்டித்தான் அந்த அனுபவத்தில் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க ஆலோசனை தருகிறார்கள். இந்த படம், பார்ப்பவர்களிடம் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று பேசினார்.


*டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் வேடியப்பன் பேசும்போது,*


“இந்த படத்தின் இறுதி காட்சி மனதுக்கு கஷ்டம் தருவதாக, மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று சொல்வதை நிரூபிப்பது போல இருந்தது. பூமணி அய்யாவின் கருவேலம் பூக்கள் படத்தை ஒரு பார்வையாளராக பார்த்திருக்கிறேன். அவரது வெக்கை நாவலை படமாக்க முயற்சி எடுத்து அவருடன் பலமுறை பேசியிருகிறேன்.. ஆனால் அதை வெற்றிமாறன் படமாக எடுத்துவிட்டார்” என்று பேசினார்.


*எழுத்தாளரும் இயக்குனருமான அஜயன் பாலா பேசும்போது,*


எழுத்தாளர் பூமணி மிகப்பெரிய சாதனையாளர். ஒரு எழுத்தாளர் இயக்குனராக மாறி தனது படத்தை படமாக்க முயற்சிப்பது என்பது அரிது. 23 வருடங்களுக்கு முன்பே கருவேலம் பூக்கள் படம் மூலம் அதை அவர் சாதித்து இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, இலக்கியத்தில் அவர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். கரிசல் எழுத்தாளர்களின் வரிசையில் அவரது பெயரும் எப்போதும் இருக்கும். இந்த படம் நமக்குள் உண்டாக்கும் தாக்கம், அதிர்வு தான் கசிவு என்று சொல்லலாம். இந்த படம் பார்த்ததும் நான் சிறுவயதில் செய்த தவறு என் நினைவுக்கு வந்தது. ஆழ்மனதில் உள்ள குற்ற உணர்ச்சி, அதை எம்.எஸ் பாஸ்கர் சிறப்பாக தனது பொன்னாண்டி கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். முதுகில் கூட நடிப்பை வெளிப்படுத்துபவர் என நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சொல்வார்கள். அவருக்கு அடுத்து அப்படிப்பட்ட ஒரு நடிகர் எம்.எஸ் பாஸ்கர் தான் இந்த கசிவு படத்தின் மூலம் அவருக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என்று பேசினார்.


*இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது.*


“மாதத்திற்கு குறைந்தது 40 படங்களாவது பல்வேறு காரணங்களுக்காக பார்க்கிறேன். வெகு சில படங்கள் தான் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் படித்த திருப்தி அது படமாக வெளியான போது கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. எல்லா மனிதர்களுக்கும் ஒரு கருப்பு பக்கம் இருக்கும். இந்த படத்தின் பொன்னாண்டி கதாபாத்திரம் போல் என்னுடைய தாத்தாவின் மனதிலும் சில விஷயங்கள் இருந்தன. கடைசி காலகட்டத்தில் உண்மை பேசி அதை வெளிப்படுத்தி மன நிறைவுடன் இறந்தார். இந்த கசிவு நாவல் ஒரு வெப் சீரிஸ் மாதிரியான முயற்சி தான். அதில் இது முதல் படம் என்று சொல்லலாம். எம்.எஸ் பாஸ்கர் நடித்தாலே அந்த படம் நன்றாக இருக்கும் என்பது போல ஒரு சூழல் தற்போது உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு இந்த கசிவு படத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இன்று (அக்-23) முதல் இது ஓடிடி பிளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது” என்று பேசினார்.


*ஓடிடி பிளஸ் சையத் பேசும்போது,*


“கேபிள் சங்கர் ஒரு படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்தால் நிச்சயமாக அந்த படம் எங்கள் ஓடிடி பிளஸ் தளத்தில் வெளியாகும். ஆனால் வேறு சில ஓடிடி தளங்களில் வெளியாவதில் பல நடைமுறை சிரமங்கள் இருக்கின்றன. அவர்கள் கர்ஷியலாக நிறைய எதிர்பார்க்கிறார்கள். எம்.எஸ் பாஸ்கர் தேசிய விருது பெற்ற நடிகர் என்பதால் அவர்தான் இந்த படத்திற்கான வியாபார புள்ளியாக இருக்கிறார். அவரால் தான் இந்த படத்தை விற்க முடிந்தது. இன்னும் நிறைய படங்கள் இதுபோல வர வேண்டும்’ என்று கூறினார்.


*தயாரிப்பாளர் வெற்றிச்செல்வன் பேசும்போது,*


“நான் அமெரிக்கா போனதும் தான் தமிழ் மீது எனக்கு அதிக அக்கறை வந்தது. 100 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் உருவாவதற்கு பின்னணியில் ஆயிரம் பக்க உழைப்பு இருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு கதையை எழுதுவதற்கு முன்பாக நிறைய ஆய்வுகள் செய்து தான் எழுதுகிறார். அப்படி பின்னணி கதைகளை கூட புத்தகமாக வெளியிட்டும் இருக்கிறார். அவரது வெக்கை நாவல் அசுரன் படமானபோது பெரிய அளவில் அவருக்கு முழு திருப்தி இல்லை. அதனால் இந்த கசிவு நாவலை படமாக்கும்போது எதையும் மாற்றாமல் அவருடைய எழுத்து, வசனம் மட்டுமே இதில் வைத்திருக்கிறோம். கசிவு திரைப்படம் 16 முதல் 21 வயதுக்குள் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மையில் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. ஆனால் பூமணி ஐயா மீது வைத்திருந்த மதிப்பில் தான் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் மாட்டு கொட்டகையில் கூட படுத்து தூங்கி இருக்கிறார்,. அதனால் தான் அவருக்கு தேசிய விருது தேடி வருகிறது” என்று பேசினார்.


*நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசும்போது,* 


“கரிசல் எழுத்தாளர்கள் என்றால் கி.ராஜநாராயணன், பூமணி இவர்கள்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். என்னிடம் பூமணியின் இந்த கசிவு நாவலில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் வரதன் சொன்னபோது, அதனாலேயே உடனே ஒப்புக்கொண்டேன். இந்த படப்பிடிப்பு நடைபெற்ற கிராமம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் கொஞ்சம் நேரம் கிடைத்தபோது மாட்டு கொட்டகையில் சிறிது நேரம் படுத்து தூங்கினேன்.


என்னைப் பொறுத்தவரை ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்.. கசிவு திரைப்படம் அப்படி ஆத்ம திருப்திக்காக நடித்த படம் தான். சொர்க்கம், நரகம் என்பது நாம் இறந்த பின்னால்தான் என்பது இல்லை. இங்கேயே இருக்கிறது. நாம் செய்த தப்பு கடைசி வரை உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட படம் பார்ப்பதால் எல்லோரும் திருந்தி விட முடியாது. காரணம் எவ்வளவோ சட்ட திட்டங்கள் வந்துவிட்டாலும் முன்பை விட இப்போது குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. எனக்கு இதுபோல நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தாருங்கள். என் நடிப்பை இன்னும் நான் மெருகேற்றிக் கொள்கிறேன். எழுத்தாளர் பூமணி ஐயாவின் எழுத்துக்களை பேசி நடித்ததே எனக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தது போல தான்” என்று கூறினார்.


*இயக்குநர் வரதன் பேசும்போது,*


“கசிவு படத்தை நான் இயக்கினேன் என்று சொல்வதை விட கசிவு தான் என்னை இயக்கியது. எழுத்தாளர் பூமணி ஐயாவை சந்தித்தபோது என்னிடம் மூன்று சிறுகதைகளை கொடுத்தார். நானும் அவரை போலவே கரிசல்காரன் தான். அவர் கொடுத்த கதைகளை குறும்படங்களாக இயக்க வேண்டாம் ஆந்தாலஜி படமாக இயக்கலாம் என்று தான் முதலில் முடிவு செய்தோம். ஆனால் அது சரி வராததால் அந்த மூன்றில் இருந்து கசிவு நாவலை தேர்ந்தெடுத்து முதலில் படமாக இயக்கியிருக்கிறோம். நன்செய், புன்செய் என்பது போல பூமணி ஐயா எழுதிய நான்கு கதைகளை கருஞ்செய் கதைகள் என்கிற பெயரில் தொகுத்து அதில் இது முதல் படமாக வெளியாகி இருக்கிறது என்று சொல்லலாம்.


மலையாளத்தில் எம்டி வாசுதேவன் நாயர் கதைகள் மனோரதம் என்கிற பெயரில் மிகப்பெரிய பட்ஜெட்டில், பெரிய நட்சத்திரங்கள் நடித்து வெளியானது. இங்கே அதுபோன்ற சூழல் தற்போது இல்லை. பொன்னாண்டி கதாபாத்திரத்திற்கு நான் யோசித்து வைத்திருந்ததைப் போலவே பூமணி ஐயாவும் எம்.எஸ் பாஸ்கரை தான் நினைத்து வைத்திருந்தார். இந்த கசிவு படப்பிடிப்பு தளத்தில் பூமணி ஐயா ஒரு பிக்பாஸ் மாதிரி படப்பிடிப்பை மானிட்டர் பண்ணிக்கொண்டே இருந்தார். எம்.எஸ் பாஸ்கரின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருந்ததால் தான் இந்த படத்தை ஏழே நாளில் எடுத்து முடித்தோம்” என்று கூறினார்.


*தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்* 


தயாரிப்பு ; வெற்றிச்செல்வன்


கதை, வசனம் ; சாகித்ய அகாடாமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி


இயக்கம் ; வரதன் செண்பகவல்லி


இசை ; ஜெயா K தாஸ் 


ஒளிப்பதிவு ; முருகன். G


படத்தொகுப்பு ; தமிழ்குமரன். M


பாடகர் ; கிருஷ்ணராஜ்


மக்கள் தொடர்பு ; KSK செல்வா

Happy Birthday Prabhas! 5 Things to Know About India’s Undisputed Rebel Star

 Happy Birthday Prabhas! 5 Things to Know About India’s Undisputed Rebel Star !*









Prabhas, a name that has truly taken over the nation and captured every heart with his powerful screen presence and humble off-screen charm. With a career packed with blockbuster hits and an ever-growing global fan base, he has rightfully earned the title of India’s Undisputed Rebel Star. Every film he does becomes a celebration, every performance a phenomenon. As the beloved actor turns a year older this month, the excitement isn’t limited to India alone; fans across the world are celebrating his special day with immense love and admiration. Here are five things you need to know about this extraordinary Rebel Star!


Undisputed Rebel Star of India


Prabhas has rightfully earned the title of India’s Undisputed Rebel Star, not just for his massive hits but also for his spotless reputation. Known for his humble nature and zero controversies, he’s one of the few stars who exudes trust and stability. For producers, Prabhas is the ultimate “safe zone”, his mere presence guarantees confidence and success.


Prabhas Owns This Month


Every year, October truly belongs to Prabhas! Fans celebrate his birthday month with unmatched enthusiasm as his iconic films return to theatres, turning each screening into a festival. This year too, several re-releases are lined up, Salaar, Eeshwar, and Pournami on October 23, followed by Baahubali: The Epic (both parts combined) on October 31, amplifying the fan frenzy!


Beyond the Big Screen: How Prabhas Quietly Changes Lives


While many stars often publicize their charitable efforts, Prabhas stands apart as someone who quietly contributes without seeking attention. His acts of kindness and generosity go far beyond the limelight. This humility and grounded nature are what make him truly special, a Rebel Star on screen and a noble soul off it, deeply loved and respected by fans.



Mega Line-Up & Rare Release Frequency


Prabhas has an exciting lineup of films ahead, reaffirming his dominance across genres. His upcoming releases include The RajaSaab (January 9, 2026), Salaar: Part 2 – Shouryaanga Parva, the cop drama Spirit, the much-awaited Kalki 2898 AD: Part 2, and the period drama Fauji. Showcasing incredible versatility and mass appeal, Prabhas continues to be a rare superstar who delivers multiple massive films within a short span, a true testament to his “rare release frequency.” For instance, Kalki 2898 AD and Salaar: Part 1 – Ceasefire were released within just one year, proving his consistency and unstoppable momentum.


1000 Cr Box Office Power


Films like Bahubali made Prabhas synonymous with grand, large-scale cinema, turning him into a global name. Whenever an epic or high-vision project is conceived, Prabhas naturally tops every filmmaker’s list. With blockbusters like Kalki 2898 AD and Bahubali consistently crossing the ₹1000 crore mark, he has become the go-to star for directors aiming to create cinematic spectacles of massive scale and impact.

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5

 *பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்* !









இந்திய நாடு முழுக்க  பரவுயிருக்கும் பெயர் — பிரபாஸ்!


பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின்  எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக மாறிவிடுகிறது. இந்த மாதம் அவர் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்.


இதோ அந்த அபாரமான ரெபெல் ஸ்டாரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்!


இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்

பிரபாஸ் “ரெபெல் ஸ்டார்” எனப் போற்றப்படுவதற்குக் காரணம் வெற்றிப் படங்கள் மட்டும் அல்ல — அவரின் நேர்மை, பணிவு, மற்றும் சர்ச்சைகளற்ற  வாழ்வும் தான். தயாரிப்பாளர்களுக்குப் பிரபாஸ் ஒரு நம்பிக்கையின் அடையாளம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே வெற்றி உறுதியானது எனக் கருதப்படுகிறது.


இந்த மாதம் பிரபாஸின் மாதம்!


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பிரபாஸின் ரசிகர்களுக்கே சொந்தம்! அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பழைய படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டும் அதே உற்சாகம் — சலார், ஈஸ்வர், பௌர்ணமி அக்டோபர் 23 அன்றும், மேலும் பாகுபலி: தி எபிக் (இரு பாகங்களும் சேர்ந்து) அக்டோபர் 31 அன்றும் மீள்பதிப்பாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன!


திரைக்குப் பின்னால் அமைதியான மனிதநேயம் மிக்க பிரபாஸ்.


பிரபாஸ் தனது தன்னார்வச் செயல்களை எப்போதும் விளம்பரம் செய்வதில்லை. அவர் புகழை நாடாமல் வெகு அமைதியாக பலருக்கு உதவி செய்து வருகிறார். இது தான் அவரை மற்ற ஸ்டார்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது.  திரையில் அவர் ரெபெல் ஸ்டார், திரைக்குப் பின்னால் உன்னதாமான மனிதர்.


மெகா லைன்அப் மற்றும் அடுத்தடுத்த தொடர்  வெளியீடுகள்


பிரபாஸ் பல்வேறு வகை படங்களில் நடித்து தனது மாறுபட்ட  நடிப்புத் திறமையை நிரூபித்திருக்கிறார். அவரின் அடுத்த படங்களாக தி ராஜா சாப் (ஜனவரி 9, 2026), சலார்: பாகம் 2 – ஷௌர்யாங்க பர்வா, போலீஸ் டிராமா ஸ்பிரிட், கல்கி 2898 AD: பாகம் 2, மற்றும் வரலாற்று டிராமா திரைப்படம் ஃபௌஜி ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. கல்கி 2898 AD மற்றும் சலார்: பாகம் 1 – சீஸ்ஃபயர் ஆகியவை ஒரே ஆண்டில் வெளியானது, அவரின் நிலைத்தன்மை மற்றும் உறுதியைக் காட்டுகிறது.


1000 கோடி வசூல் சக்தி!

பாகுபலி போன்ற படங்கள் பிரபாஸை உலகளவில் அறிமுகப்படுத்தின. மிகப்பெரிய கனவுகளைக் கொண்ட எந்த இயக்குநருக்கும் முதலில் நினைவில் வருவது பிரபாஸ்தான். கல்கி 2898 AD, பாகுபலி போன்ற படங்கள் தொடர்ந்து ₹1000 கோடியை தாண்டி வசூலை பதிவு செய்துள்ளதால், அவர் “மெகா விஷன்” கொண்ட படங்களுக்கு இயல்பான தேர்வாக மாறியுள்ளார்.


*

Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’

 Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Pan India Project- Titled Fauzi, Poster Looks Magnificent*



After creating massive anticipation with a striking concept poster followed by a gripping pre-look, the makers of Rebel Star Prabhas’ much-awaited Pan-India project #PrabhasHanu, directed by creative filmmaker Hanu Raghavapudi, have unveiled its title. Produced by the successful Pan-India banner Mythri Movie Makers and presented by Gulshan Kumar of T-Series, the movie is titled powerfully Fauzi.


The title Fauzi itself speaks volumes, symbolizing Prabhas’ portrayal of a soldier. The title design, bold and stylized, immediately evokes a sense of strength and valor. Set against the backdrop of colonial India in the 1940s, the poster features a burning, tattered British flag, evoking imagery of rebellion and resistance. Scattered flames heighten the tension, while hidden Sanskrit verses and coded symbols hint at deeper mythological and historical undertones, with references to Karna from the Mahabharata, suggesting a protagonist destined to face extraordinary trials.


The verses in the poster convey that he is like Partha (Arjuna), the one who conquered the Padmavyuha; like Karna, yet standing on the side of the Pandavas; and like Ekalavya, a warrior without a Guru, born with innate valor. He embodies both the wisdom of a Brahmin and the righteous duty (Dharma) of a Kshatriya. Together, these traits define the essence of the protagonist’s character.


Prabhas is captured in a close-up that radiates intensity and determination. His piercing gaze, complemented by a sharp mustache, reflects a warrior driven by purpose. We can see the intensity in his eyes. The tagline, “A Battalion Who Walks Alone,” reinforces the idea of a lone hero shouldering the weight of a nation’s struggle, a soldier who fights not just battles, but fate itself.


The Fauzi title poster more than lives up to the hype, setting the stage for what promises to be a spectacle of epic proportions. With Hanu Raghavapudi’s signature blend of emotion and grandeur, the film aims to present Prabhas in a powerful, never-seen-before avatar.


The film features Imanvi as the leading lady opposite Prabhas, alongside an ensemble cast including Anupam Kher, Mithun Chakraborty, Jaya Prada, and Bhanu Chandar in key roles.


Produced by Naveen Yerneni and Y. Ravi Shankar, Fauzi boasts some of the industry’s finest technicians. Sudeep Chatterjee (ISC) handles cinematography, Vishal Chandrasekhar composes the music, Anil Vilas Jadhav oversees production design, and Kotagiri Venkateswara Rao takes charge of editing.


With its potent title, highly impressive poster, and stellar team, Fauzi is turning out to be not just another Pan-India film, but a defining chapter in Prabhas’ cinematic journey.


The film is going to release in Telugu, Hindi, Tamil, Kannada, Malayalam, and Bengali.


*Cast* : Prabhas, Imanvi, Mithun Chakraborty, Anupam Kher, Jaya Prada, Bhanu Chandar, and others.


*Technical Crew:*


Writer, Director: Hanu Raghavapudi

Banner: Mythri Movie Makers

Producers: Naveen Yerneni , Y Ravi Shankar & Bhushan Kumar

DOP: Sudeep Chatterjee ISC

Music: Vishal Chandrasekhar

Production designer: Anil Vilas Jadhav

Editor: Kotagiri Venkateswara Rao

Lyrics: Krishna Kanth

Choreographer: Prem Rakshit

Costume Designers: Sheetal Iqbal Sharma, T Vijay Bhaskar

VFX: RC Kamala Kannan

Publicity Designers: Anil-Bhanu

PRO: Yuvraaj

Marketing: First Show

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு

 *ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் – “ஃபௌசி”  டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது* !



ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி  (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி”  (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக  உருவாகும் இந்தப் படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.


“ஃபௌசி” (Fauzi) எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.   உறுதியான, அழகிய வடிவமைப்பில் இருக்கும் தலைப்பு டிசைன்,  வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர்களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன.

போஸ்டரில் பின்னணியில் காணப்படும் சமஸ்கிருத சுலோகங்கள் மற்றும் குறியீட்டு வடிவங்கள், இந்தக் கதையில் உள்ள புராண மற்றும் வரலாற்று அடுக்குகளைக் குறிக்கின்றன. குறிப்பாக மகாபாரதத்தில் கர்ணன் பற்றிய குறிப்புகள், விசித்திரமான விதியை எதிர்கொள்ளும் நாயகனின் பாத்திரத்தை வலியுறுத்துகின்றன.


அந்த சுலோகங்கள் அவர் பார்த்தா (அர்ஜுனன்) போல பத்மவ்யூஹத்தை வென்றவர், கர்ணன் போல வீரத்துடன் இருந்தாலும் பாண்டவர்களின் பக்கத்தில் நிற்பவர், ஏகலைவன் போல குருவின்றி பிறந்த இயற்கை வீரன் எனக் கூறுகின்றன. அவர் ஒரு பிராமணனின் ஞானத்தையும், ஒரு சத்திரியனின் தர்மத்தையும் இணைத்து நிற்பவர் — இதுவே நாயக கதாப்பாத்திரத்தின் உண்மையான குணம்.


பிரபாஸ் குளோசப் ஷாட்டில்,  கடும் உறுதியான பாவனையில் வீரத்தை வெளிப்படுத்துகிறார். அவரது கண்களில் தெரியும் தீவிரம், கூர்மையான மீசையுடன் கூடிய தோற்றம், தன்னுடைய கடமைக்காக உயிர் அர்ப்பணிக்கும் வீரனின் உருவத்தை எடுத்துக்காட்டுகிறது. “A Battalion Who Walks Alone” எனும் டேக்லைன், ஒரு தேசத்தின் போராட்டத்தை தனியாக சுமக்கும் வீரனின் தனிமையும், அதே சமயம் அவனது உறுதியையும் பிரதிபலிக்கிறது.


““ஃபௌசி”  போஸ்டர் எதிர்பார்ப்பைத் தாண்டி, ஒரு மாபெரும் திரை அனுபவத்திற்கான ஆவலைத் தூண்டுகிறது. உணர்ச்சியும் பிரமாண்டமும் கலந்த ஹனு ராகவபுடியின் தனித்துவமான பாணியில், இந்த படம் பிரபாஸை இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கவுள்ளது.


இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமன்வி ( Imanvi ) நடிக்கிறார். மேலும் மிதுன் சக்ரபோர்த்தி (Mithun Chakraborty) , அனுபம் கெர்,  ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

நவீன் எர்நேனி மற்றும் Y. ரவி சங்கர் தயாரிப்பில் உருவாகும் “ஃபௌசி” , திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டுள்ளது – ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜீ (ISC) செய்கிறார்.விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். 

அநில் விலாஸ் ஜாதவ் புரடக்சன் டிசைன் பணிகளை கவனிக்க, கோதகிரி வெங்கடேஸ்வரராவ் எடிட்டிங் பணிகளை செய்கிறார். 


அதிரடி போஸ்டருடன், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஃபௌசி”, ஒரு சாதாரண பான்-இந்தியா படம் அல்ல, பிரபாஸின் சினிமாப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ள  காவியம்!


ஃபௌசி திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் வங்காள மொழிகளில் வெளியாகவுள்ளது.


*நடிப்பு* : பிரபாஸ், இமன்வி, மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.


*தொழில்நுட்பக் குழு:*


எழுத்து, இயக்கம் : ஹனு ராகவபுடி

தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்

தயாரிப்பாளர்கள் : நவீன் எர்நேனி, Y. ரவி சங்கர், பூஷன் குமார்

ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜீ (ISC)

இசை : விஷால் சந்திரசேகர்

புரடக்சன் டிசைனர் : அனில் விலாஸ் ஜாதவ்

எடிட்டிங் : கோதகிரி வெங்கடேஸ்வரராவ்

பாடல் வரிகள் : கிருஷ்ணகாந்த்

நடன அமைப்பு : பிரேம் ரக்‌ஷித்  

உடை வடிவமைப்பு : ஷீதல் இக்பால் சர்மா, T.விஜய் பாஸ்கர்

VFX : RC. கமலக்கண்ணன்

பப்ளிசிட்டி டிசைனர்கள் : அனில் - பானு

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ (First Show)