Featured post

Retta Thala Movie Review

Retta Thala Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம retta தலை படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு action thriller படம். இந்த படத்தோ...

Thursday, 25 December 2025

Retta Thala Movie Review

Retta Thala Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம retta தலை படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு action thriller படம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்குறது Kris Thirukumaran . இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. இதுல Arun Vijay  double role  ல நடிச்சிருக்காரு. அப்புறம் Siddhi Idnani , Tanya Ravichandran.  Kannada actor Yogi Samy  Hareesh Peradi, John Vijay,  Balaji Murugadoss னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்கு போலாம். 



kaali யா நடிச்சிருக்க arunvijay pondicherry ல இருக்கற ஒரு சாதாரண குடும்பத்தை சேந்தவ. இவனுக்கு ஒரு girlfriend யும் இருக்கும். அவங்க தான் antre வா நடிச்சிருக்க siddhi idnani. இவங்களோட பைனான்சியல் condition ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். அதுனால kaali யா breakup பண்ணிட்டு ஒரு நல்ல future க்காக france ல போய் settle ஆகணும் னு plan பண்ணுறாங்க. அப்போ தான் kaali இவனை மாதிரி இருக்கற இன்னொரு  ஆள பாக்குறான். malpe  upendra  ன்ற character ல நடிச்சிருக்க இந்த arun  vijay goa ல இருக்கற famous ஆனா hitman . இந்த தான் நல்ல chance  னு நினைக்கிற  antre வும் kaali  கிட்ட இவனை போட்டு தள்ளிட்டு அவனோட சொத்தை எடுத்துக்கலாம் னு ஒரு idea வை சொல்லுற. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half ல பாத்தீங்கன்னா kaali  அப்புறம் antre ஓட relationship அ காமிச்சிருப்பாங்க. அதுக்கு அப்புறம் kaali upendra வா meet பண்ணும்போது தான் எல்லாமே தல கீழ மாறிடுது. ஒரு சில காரணங்கள் னால kaali கொஞ்ச நாளைக்கு upendra மாதிரி நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுது. இந்த transition தான் first half ல காமிச்சிருப்பாங்க. அதே மாதிரி goa ல ஒரு gang upendra வை கொலை பண்ணுறதுக்காக wait பண்ணிட்டு இருக்காங்க. 


படத்தோட second half ல full அ cat and mouse chase. நெறய action, twist and turns னு ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. screenplay யும் audience ஓட கவனத்தை  சிதறாத மாதிரி அவ்ளோ interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. முக்கியமா pre climax ல வர surprise தான் யாருமே எதிர்பாத்துருக்க மாட்டாங்க. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது arun vijay ஓட performance super அ இருந்தது. kaali character ல vulnerable அ perform பண்ணிருக்காரு அதே மாதிரி upendra character ல வில்லத்தனத்தோட இருக்காரு. siddhi ஒரு normal heroine அ இல்லாம different அ இருக்காங்க. romance அ விட ரொம்ப realistic அ இருப்பாங்க. பணம் தான் முக்கியம் ன்ற mindset ல இருப்பாங்க. படத்துல நடிச்சருக்க மத்த actors ஆனா John Vijay, Hareesh Peradi, Yogesh  Balaji Murugadoss Tanya Ravichandran யும் அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு நல்ல perform  பண்ணிருக்காங்க. 


படத்தோட technical  aspects னு பாக்கும்போது Sam CS’ ஓட  background score இந்த படத்துக்கு super  அ set  ஆயிருக்கு. முக்கியமா  kannama  ன்ற song  அ நடிகர் dhanush பாடிருக்காரு அது தான் இந்த படத்துல highlight  அ இருக்கு. krish thirukkumaran ஓட direction audience  அ engage பண்ணுற விதத்துல அமைச்சிருக்கு. tijo tomy ஓட cinematography அப்புறம் anthony ஓட editing எல்லாமே பக்காவா இந்த படத்துக்கு set ஆயிருக்கு. 


மொத்தத்துல ஒரு நல்ல action thriller படம் தான் இது. so miss பண்ணாம இந்த படத்தை  theatre ல போய் பாருங்க.

Mark Movie Review

Mark Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mark படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு action thriller படம். max படத்தோட success  அ தொடர்ந்து மறுபடியும் vijay karthikeya  கூட இணைச்சுருக்காரு. இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. இதுல kicha sudeep, Naveen Chandra, Yogi Babu, Shine Tom Chacko, Guru Somasundaram, Nishvika Naidu, and Roshini Prakash. னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ நம்ம இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



kicha sudeep sp ajay markanday ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரு ஒரு suspended police officer . என்னதான் suspend  ஆனாலும் இவரு அவரோட வேலைய பாத்துட்டு தான் இருக்காரு. இப்போ  இங்க politician அ adikeshava வா நடிச்சிருக்காரு shine tom chacko . இவரு அந்த state ஓட CM ஓட பையன தான் இருப்பாரு. இவரோட அம்மா படுத்த  படுக்கையை இருக்கும்போது CM  seat க்காக நெறய வேலை செய்றரு. இதை இவருக்கு தெரியாம ஒரு doctor அவரோட phone ல video வா  record பண்ணுறாரு. இப்போ adikeshava CM ஆகக்கூடாது ன்றதுக்காக opposite கட்சி ல இருக்கற ஒரு ஆளு ajay கிட்ட வந்து சொல்லுறன். இந்த video  எடுக்கறதுக்காக ஒரு பக்கம் ajay போறாரு. இன்னொரு பக்கம் இதை அளிக்கணும் ண்றதுக்காக adikeshava போறாரு. இப்போ என்ன பிரச்சனை ந அந்த phone கடைசியா ஒரு சின்ன பையன் கிட்ட இருக்கும். ஆனா அந்த பையன யாரோ கடத்திடுறாங்க. இப்போ இந்த பையன யாரு கடத்தினா? எதுக்காக கடத்தினாங்க ? ஏன் கடத்தினாங்க ன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கறதுக்காக ajay investigate பண்ண ஆரம்பிக்குறாரு. இனொரு பக்கம் bhadra வா நடிச்சிருக்க naveen chandra ஒரு drug lord அ இருக்காரு. இவரோட lover கூட இவரோட brother ஓடிப்போயிடுறாரு. அதுனால இவரை கொள்ளணும் ண்றதுக்காக்க bhadra காத்துகிட்டு இருக்கான். இன்னொரு பக்கம் நெறய கொழந்தைகளை கடத்துறாங்க அப்படி ஒரு குழந்தைய கடத்தும்போது ajay ஓட அம்மாவையும் குத்திடுவாங்க. இது எல்லாமே எப்படி connect ஆகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


max படத்துல பாத்த அதே template தான் இந்த படத்துலயும் பாக்க முடியும். கதை நகரர விதமா இருக்கட்டும், characters ஓட emotions எல்லாமே interesting அ இருந்தது. ஆனா max அ விட இந்த படத்துல sudeep ஓட performance இன்னும் complicated அ இன்னும் mass அ இருக்குனு தான் சொல்லணும். hero ஓட power அ காமிக்கிறதுக்காக நெறய action scenes , dialogues எல்லாம் வச்சுருக்காங்க. அதுனால hero பாக்குறதுக்கு இன்னும் powerful அ தெரியுது. அதே மாதிரி எல்லா வகையான audience க்கும் இந்த கதை பிடிக்கிற மாதிரி எடுத்து வச்சுருக்காங்க. மறுபடியும் christmas season ல mass action movie மூலமா entry குடுத்திருக்காரு. படத்தோட மொத்த weight யும் இவரு தான் எடுத்துட்டு வந்த மாதிரி இருக்கு. என்ன தான் max படத்துல இருக்கற மாதிரி இதுலயும்  police அ இருந்தாலும், sudeep ஓட performance ஒரே மாதிரி இருக்காது. இவரோட body language , case அ investigate பண்ணுற விதம் னு எல்லாமே different அ தான் இருக்கும். அதுனால mark character audience க்கு புதுசா தான் தெரியும். 


yogibabu ஓட comedy scenes எல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. nishvika naidu ஒரு  special song ல வராங்க அதுல இவங்க performance நல்ல இருந்தது. shine tom chacko , naveen chandra லாம் வில்லன்களா மிரட்டிட்டு போயிருக்காங்க. படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors ஆனா Gopalkrishna Deshpande, Vikranth, Guru Somasundaram னு இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. 


இப்போ இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது Ajaneesh Loknath ஓட music தான் இந்த படத்துக்கு பெரிய பலமா அமைச்சிருக்கு. இந்த படத்துல வந்த 3 songs யும்  ஏற்கனவே செம hit அதா தவிர்த்து bgm எல்லாம் mass  அ இருந்தது. நெறய scenes ல audience க்கு goosebumps வர அளவுக்கு music இருந்தது. இந்த படத்தோட இன்னொரு plus point cinematography தான். visuals எல்லாமே நல்ல இருந்தது. படத்தோட editing யும் நல்ல sharp and short அ இருந்தது. 


மொத்தத்துல  investigation thriller elements எல்லாம் இருக்கற ஒரு mass ஆனா கதைக்களம் தான். சோ  இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

பிரம்மாண்டமான புராண காவிய

 *பிரம்மாண்டமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்!*



ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒரு அற்புதமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இது அவர்கள் இணைந்து பணிபுரிய இருக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர். 


அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் கூட்டணி இதற்கு முன்பு பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அவர்களின் முந்தைய படமான 'அலா வைகுந்தபுரமுலூ' தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது. 


திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. வலுவான கதைசொல்லல், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிப்ரவரி 2027ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜூன் மற்றும் திரிவிக்ரம் கூட்டணி இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை எட்டிப் பிடிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Allu Arjun & Trivikram to Reunite for a Grand Mythological Epic

 Allu Arjun & Trivikram to Reunite for a Grand Mythological Epic



Strong industry buzz suggests that Icon Star Allu Arjun and acclaimed filmmaker Trivikram Srinivas are set to reunite for a spectacular mythological epic, marking their fourth collaboration together.


This ambitious project is based on a powerful script originally conceived for Allu Arjun and has generated immense excitement among fans and the film fraternity.


Allu Arjun and Trivikram share an exceptional creative legacy, having delivered multiple blockbuster films together. Their previous collaboration, Ala Vaikunthapurramuloo, shattered several box office records across South India and emerged as one of the most celebrated films of its time.


According to industry sources, the upcoming film will be mounted on a never before seen scale, with a massive budget of over ₹1000 crores, making it one of the most ambitious mythological films ever produced in Indian cinema. The film is expected to blend powerful storytelling with grand visuals and cutting-edge technology, redefining the mythological genre for a pan Indian and global audience.


An official announcement is expected in the coming weeks, and the film is scheduled to go on floors in February 2027. Anticipation is already at an all time high as this landmark collaboration promises to set new benchmarks in Indian cinema.

Lyca Productions Subaskaran’s Sigma Teaser Crosses 5 Million+ Views

 *Lyca Productions Subaskaran’s Sigma Teaser Crosses 5 Million+ Views* 






Lyca Productions Subaskaran presents Sigma, marking the directorial debut of Jason Sanjay and starring Sundeep Kishen in the lead role. Ever since its official announcement, Sigma has remained one of the most talked-about projects in Tamil cinema, generating strong buzz across social media and trade circles. The excitement reached new heights with the release of the film’s teaser, which has now crossed 5 million+ views, reflecting the overwhelming reception and growing anticipation among audiences.


Expressing his happiness over the milestone, G. K. M. Tamil Kumaran, Head of Lyca Productions, said, “The response to the Sigma teaser has been truly gratifying. Crossing 5 million-plus views in such a short span reinforces the belief and confidence we had in this project from the very beginning. It is heartening to see audiences connect so strongly with the visuals and the world of Sigma. This kind of reception motivates the entire team, and we are excited to share more updates as the film progresses towards its release.”


Produced on a grand scale, Sigma features Sundeep Kishen in the lead role, supported by a powerful ensemble cast including Faria Abdullah, Raju Sundaram, Sampath Raj, Shiv Pandit, Anbu Thasan, Yog Japee, and others. The film’s technical backbone includes music composed by Thaman S, cinematography by Krishnan Vasant, editing by Praveen KL, and VFX supervision by Hariharasuthan. Sanjeev serves as the co-director, while Suresh Chandra handles public relations.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் 'சிக்மா' திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது

 *லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் 'சிக்மா' திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது!* 






லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய படமாக உள்ளது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி புதிய உச்சமாக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.  


இந்த மைல்கல் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், “'சிக்மா' படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. பார்வையாளர்களும் 'சிக்மா' உலகில் வலுவாக இணைந்திருப்பதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படக்குழுவினருக்கும் இது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. படத்தின் வெளியீடு நெருங்கும்போது அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடுவோம்" என்றார்.


*நடிகர்கள்:* பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி மற்றும் பலர் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக்குழு விவரம்:* 


தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ், 

தயாரிப்பு: சுபாஷ்கரன்,

லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி: ஜி.கே.எம். தமிழ் குமரன்,

இசையமைப்பாளர்: தமன் எஸ், 

ஒளிப்பதிவாளர்: கிருஷ்ணன் வசந்த், 

எடிட்டர்: பிரவீன் கேஎல்,

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: ஹரிஹரசுதன், 

இணை இயக்குநர்: சஞ்சீவ், 

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

 *சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும்  பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!*



தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 


படம் குறித்து அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் பகிர்ந்து கொண்டதாவது, "நான் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திருக்கிறது. 


உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், சடங்குகள் ஆகியவற்றை பேசும் படமாக இது இருக்கும். இந்த விஷயங்களை சீரியஸ் டோனில் இல்லாமல் நகைச்சுவை கலந்து பொழுதுபோக்காக திரையரங்குகளில் மக்கள் ரசிக்கும்படி கமர்ஷியலாக எடுத்திருக்கிறோம்" என்றார்.


படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பற்றி அவர் கூறியதாவது, "இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா மேடம் நடித்திருக்கிறார். அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும்  நடித்திருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் ராமதாஸ் அண்ணனும் நடித்திருக்கிறார். இதுதவிர மற்ற முக்கிய இரண்டு கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும், உசிலம்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள நடிகர்கள் அல்லாத கிராமத்து மக்கள் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்" என்றார்.


தொழில்நுட்பக்குழு பற்றி கேட்டபோது,  "என்னைப் போலவே மணிகண்டன் சாரிடம் பணிபுரிந்த விவேக் விஜயராஜ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  சான் லோகேஷ் எடிட்டராகவும், ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். கிராமத்தில் உள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை மூலமும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தின் மதிப்பை கலகலப்பாக பேசியிருக்கிறோம். திரையரங்குகளில் இந்தப் படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது”

 *“இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது” ; த்ரிகண்டா’ விழாவில் இயக்குநர் ஹாரூண் பேச்சு*












*தயாரிப்பாளர்களே படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையிடலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை -  இயக்குநர் கேபிள் சங்கர்*  


*தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தே மோசடி நடக்குது ; ‘த்ரிகண்டா’ விழாவில் உண்மையை அம்பலப்படுத்திய இயக்குநர் கேபிள் சங்கர்*    


*“மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு*


SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு  கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  & ஷாஜித் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.


இந்த படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது, “படத்தின் டைட்டிலைப் பார்த்தபோது ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தால் ட்ரைலரை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இவர்கள் செய்திருக்கும் செலவு நன்றாகவே தெரிகிறது. அதுவே இந்த படம் ஒரு கமர்சியல் படமாக வரும் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது. டிசம்பர் மாதம் என்பதால் இந்த வருடம் தமிழ் சினிமா எப்படி இருந்தது, லாபம் எவ்வளவு நட்டம் எவ்வளவு என ஒரு விவாதம் அனைவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வருடம் தமிழ் சினிமா நன்றாகவே இருந்தது. நிறைய சிறு முதலீட்டு படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக மாறிய நிகழ்வு இந்த வருடம் நிறைய நடந்திருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் சிறை திரைப்படம் கூட சின்ன பட்ஜெட்டில் உருவானது என்றாலும் வெளியாவதற்கு முன்பே அதன் அனைத்து உரிமைகளும் நல்ல விலைக்கு விற்றுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்திருக்கின்றன.


ஹவுஸ் மேட்ஸ், மிடில் கிளாஸ், ஆரோமலே போன்ற சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துக் கொடுத்திருக்கின்றன. இது பாராட்டத்தக்க விஷயம் தான். இப்படி இருக்கின்ற நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் போன்ற அனுபவம் மிக்க ஆட்கள் சினிமா நன்றாக இல்லை, நடிகர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் அவர் சொல்வது போல இல்லாமல் அனைத்து நடிகர்களும் குறைந்தது நான்கு படங்களாவது பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டரில் கூட்டம் வருகின்ற படம் மட்டும்தான் வெற்றி படம் என்று சொல்ல முடியாது. தயாரிப்பாளர் போட்ட முதலீடு அவருக்கு திரும்பி கிடைத்து விட்டாலே அது வெற்றி படம் தான். வாராவாரம் காந்தாரா போன்ற படங்கள் வெளியாக முடியுமா என்ன ? சின்ன சின்ன படங்கள் வரத்தான் செய்யும். அதற்கான வசூலை பெறத்தான் செய்யும். சினிமா நன்றாக இருக்கிறது. சந்தோஷமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுங்கள்.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை தெலுங்கு சினிமாவில் இது போன்ற மித்தாலஜிக்கல் படங்களை மிக அட்டகாசமாக எடுப்பார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. சுவாரசியமாக இருக்கிறது. மகேந்திரனுக்கு இது ஒரு திருப்புமுனை கொடுக்கும் படமாக இருக்கும். கியூப்பும் UFOவும் தாங்களே தனி ஆளுமை பண்ண கூடாது என்பதற்காக அவர்களுக்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களே தங்களது படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கொடுத்து திரையிட சொல்லலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை. இதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை சரியாக செய்து விட்டால் சின்ன பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில் மிகப்பெரிய செலவு இருக்காது என தெரிகிறது” என்று பேசினார்.


இசையமைப்பாளர் ஷாஜித் பேசும்போது, “இந்த படத்தில் முதலில் ஹர்ஷவர்தன் சார் தான் இசையமைப்பாளராக இருந்தார். அவர் ரொம்பவே பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் முழு நேரமாக செயல்பட முடியவில்லை. இயக்குநர் மணி என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை கொடுத்தார். நான் கேரளாவை சேர்ந்தவன். ஆனால் இங்கே சென்னையில் தங்கியிருக்கிறேன். தெலுங்கு படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். மித்தாலஜிக்கல், ஹாரர், த்ரில்லர் என பல ஜானர்கள் இந்த ஒரே படத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த படத்தில் பயணித்தது மிக சவாலாக இருந்தது. படத்தின் உருவாக்கம், படத்தொகுப்பு எல்லாமே எனக்கு முதலில் புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்தது. மகேந்திரன் மட்டுமல்ல கதாநாயகி சாஹிதியும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் இசைப் பணியில்  எனது மனைவியும் ரொம்பவே உறுதுணையாக இருந்தார்” என்று பேசினார்.


குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சஞ்சய் பேசும்போது, “இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். என் மீது முழு நம்பிக்கை வைத்து இயக்குநர் கொடுத்துள்ளார்” என்று பேசினார்.


படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் பேசும்போது, “தெலுங்கில் நான் மூன்று படங்கள் தயாரித்துள்ளேன். தமிழில் இது எனது முதல் படம். தமிழில் இதை ஏன் தயாரித்திருக்கிறேன் என்றால் குமரிக்கண்டம், பழமையான தமிழர்கள் என இது முழுக்க தமிழுக்கான கதை. இந்த படத்தை துவக்கும்போதே நல்ல மனிதர்கள் இதில் இணைய வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இயக்குநர் மணி உள்ளே வந்தார். அனைவரும் இதில் வந்தார்கள். நாம் நல்ல கதையை தேர்வு செய்யும்போது, மக்கள் அதை பார்க்க முன்வருவார்கள்.. கடந்த வருடத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதில் அதிகப்படியான வசூலை கொண்டு வந்தது சின்ன பட்ஜெட் படங்கள் தான். மகேந்திரனை இந்த படத்தின் கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு காரணம் அவரை எல்லா மொழியில் இருப்பவர்களுக்கும் நன்கு தெரிகிறது. அவர் ஒரு சவுத் இந்தியன் ஸ்டார்” என்று பேசினார்.


நடிகர் கல்லூரி வினோத் பேசும்போது, “மகேந்திரன் எனக்கு நெருக்கமான நண்பர். அவர் முதலில் கதாநாயகனாக நடித்த விழா திரைப்படத்தில் நானும் நடித்திருந்தேன். நாமெல்லாம் பள்ளிக்கூடம் படிக்கப்போன காலத்தில் மகி அவரது தந்தையுடன் நடிக்க போய்க் கொண்டிருந்தார். இந்த படத்தில் அவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளருக்கு  நிச்சயம் இந்த படம் லாபத்தை தரும். இந்த படம் வெளியான பிறகு இயக்குநர் மணிக்கு நிறைய படங்கள் தேடி வரும்” என்று பேசினார்.


கதாநாயகி சாஹிதி அவான்ஷா பேசும்போது, “த்ரிக்கண்டா படம் பவர்ஃபுல் மித்தாலஜி, சைக்காலஜி, ஆக்சன், அற்புதமான விசுவல்ஸ் என எல்லாவற்றையும் உள்ளடக்கி உள்ளது. தமிழ் சினிமா தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு எப்படி திரில்லிங்காக இருந்ததோ படம் பார்க்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படும்” என்று பேசினார்.


நாயகன் மகேந்திரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். மாஸ்டர் படம் எனக்கு தெலுங்கில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சிறு வயதில் நடித்தபோது நான் தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்தேன். எனக்கு அங்கே நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி தெலுங்கில் நல்ல படம் நடிக்கலாம் என நினைத்தபோது தான் இயக்குனர் மணியை சந்தித்தேன். இந்த படம் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம். ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்குப் பிறகும் அதை போட்டு பார்த்துவிட்டு இன்னும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என இயக்குனரும் தயாரிப்பாளரும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அந்த கஷ்டத்திற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி எதிர்பார்த்த ஒரு தெலுங்கு படமாக இந்த படம் இருக்கிறது.


மாஸ்டர் சஞ்சய் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நானே ஒரு குழந்தை நட்சத்திரம், என் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடித்திருப்பதை பார்க்க எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதேபோல சஞ்சய்க்கும் இந்த சினிமா நிறைய கொடுக்கும். நாட்டாமை படத்தில் கே.எஸ் ரவிக்குமார் எனக்கு மாஸ்டர் மகேந்திரன் என்று பெயர் வைத்தார். எத்தனை காலத்திற்கு இப்படி மாஸ்டர் மகேந்திரன் என்கிற பெயரே தொடரும் என்று நினைத்தபோது ஒரு யுனிவர்ஸ் போல லோகேஷ், விஜய் அண்ணா கூட்டணியில் மாஸ்டர் என்கிற படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் என் பெயருக்கும் அது பொருத்தமாக அமைந்துவிட்டது. எனக்கு அது பெருமையான விஷயம் தான். மகேந்திரன் என்று சொன்னால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது” என்று பேசினார்.


இயக்குனர் ஹாரூண் பேசும்போது, “தெலுங்கிலேயே நிறைய கதைகள் இருக்கும்போது, தமிழை தேடி வந்ததற்காக தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026 நிச்சயமாக நல்ல வருடமாக இருக்கும். ஏனென்றால் இனிமேல் நல்ல கதைகள் வரும். நல்ல கதை தான் ஹீரோ. இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுவது ட்ரைலர்கள் தான். நல்ல படம் பண்ணியிருக்கிறோம் என்று நீங்கள் பெருமையுடன் சொல்லலாம். படங்களின் பட்ஜெட்டை பொறுத்து  சாதாரண இடத்திலோ, சத்யம் தியேட்டரிலோ, பீனிக்ஸ் மாலிலோ கூட விழா நடத்தலாம். ஆனால் எல்லா படத்திற்கும் கியூப் கட்டணம் என்பது ஒன்றாக தான் இருக்கிறது. இதை யார் பேசுவார்கள் என்று தெரியவில்லை” என்று பேசினார்.


இயக்குநர் மணி தெலக்குட்டி பேசும்போது, “இந்த படத்தை தமிழில் எடுக்க சென்னையில் முழுக்க ஆதரவு கொடுத்தது மகேந்திரன் தான். குமரிக்கண்டம் பகுதியில் கதை நடப்பது போல இதை ஒரு புனைவு கதையாக உருவாக்கியிருக்கிறேன். இந்த டைட்டில் ஏன் வைத்தோம் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். மெகா ஸ்டார், பவர் ஸ்டார் போல மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” என்று கூறினார்.

Wednesday, 24 December 2025

Mission Santa YoYo to the Rescue Movie Review

Mission Santa YoYo to the Rescue Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo  to the rescue  படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு animation படம். சோ வாங்க இந்த படத்தை பத்தி பாக்கலாம். yoyo அவனோட தாத்தா சொன்ன magic கதைகளை நம்பி northpole க்கு போறான். yoyo ஒரு comfortable ஆனா magical place அ எதிர்பாத்து தான் போயிருப்பான். ஆனா அந்த எடத்துல modern ஆனா ஒரு high tech  factory தான் இருக்கு. சந்தோசமா மக்களுக்கு gifts அ அனுப்புவாங்க னு பாத்த அந்த எடத்துல எல்லாரும் busy அ data வை collect  பண்ணி ஓவுவுறுத்திருக்கும் gifts  அ அனுப்பிட்டு இருப்பாங்க. ஆனா அந்த எடத்துல santa claus தான் இல்ல. 



இவருக்கு பதிலா ஒரு hologram தான் இருக்கு. இந்த hologram தான் என்னபண்ணும் னு order குடுத்துட்டு இருக்கும். yoyo ஒரு jolly ஆனா பையன் ஆனா அவனுக்கு இந்த இடம் பிடிக்காது. இப்போ northpole அ cyber scrooge ன்ற ஒரு hacker  control ல எடுத்துடுறான். அங்க இருக்கற data எல்லாத்தயும் நான் அழிக்க போறேன் னு மிரட்டுற. இதுனால yoyo இப்போ உண்மையான santa claus அ கண்டுபிடிக்கறதுக்கான mission ல எறங்குறான். இந்த கதைல பாத்தீங்கன்னா holiday adventure ஓட சேந்து digital technology அ criticism பண்ணுற மாதிரியும் இருக்கு. இந்த மாதிரி டெக்னாலஜி வளந்தனால tradition எப்படி கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வர்ரது ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. 


northpole ல இருக்கற factory ஒரு business மாதிரி தான் run பண்ணிட்டு இருப்பாங்க. christmas magic அ technology replace பண்ண மாதிரி இருக்கும். உங்களுக்கே தெரியும் santa claus கூட elves தான் helpers அ இருப்பாங்க. ஆனா இந்த எடத்துல elves க்கு பதிலை ELF னு சொல்ல படுற robots தான் இருக்கும். இந்த robots எல்லாமே efficient அ இருக்கறதுக்கு தான் program பண்ணிருப்பாங்க வேற எந்த emotions யும் இருக்காது. உண்மையான elves எல்லாரும் call center ல தான் வேலை பாத்துட்டு இருப்பாங்க. அதுமட்டுமில்ல இவங்க எல்லாரும் ரொம்ப depressed ஆவும் இருப்பாங்க. இவங்களோட வேலையே கோவப்படுற customers அ handle பண்ணுறது. இந்த இடத்துக்கு incharge அ இருக்காங்க coco. christmas அ ஒரு celebration அ பாக்காம gift எல்லா இடத்துக்கும் போச்சா, எதனை எடுத்துக்கு போயிருக்கு, எதனை இடத்துக்கு போகல னு analayse, பண்ணி report ready பண்ணிட்டு இருப்பாங்க. இவங்களும் ரொம்ப stressed அ தான் இருப்பாங்க. 


இந்த படத்துல technology மனுஷங்களோட life அ எப்படி control ல எடுத்துக்குது ன்றதா ரொம்ப தெளிவா காமிச்சிருப்பாங்க. machine தான் christmas ஓட சந்தோசத்தை எடுத்துட்டு போன மாதிரி இருக்கும். இந்த factory ல இருக்கற lighting எல்லாம் பாத்தீங்கன்னா ரொம்ப cold அ இருக்கும். ஒரு உயிரோட்டமே இருக்காது. இன்னும் சொல்ல போன online shoping பண்ணுற பொருட்கள் எல்லாம் ஒரு warehouse  ல போட்டு அடைச்சு வச்சிருப்பாங்க ல அந்த மாதிரி தான் இந்த factory  இருக்கும். இந்த படத்துல சொல்ல வர கருத்துகள் எல்லாமே வெறும் வார்த்தைகள் னால இல்ல visuals ஆவே சொல்லிருப்பாங்க. இந்த படத்துல முக்காவாசி robots தான் இருப்பாங்க. caring அ அனுப்பவேண்டிய gifts க்கு பதிலா speed அ போய் gifts சேருதா னு தான் பாக்குறாங்க. camera ஓட angle அ வச்சே machine க்கும் மனுஷங்களுக்கும் இருக்கற வித்யாசத்தை காமிக்கறாங்க. இதெல்லாம் பாக்க நல்ல இருந்தது. இந்த எடத்துல yoyo மட்டும் தான் colourful அ இருப்பான். production hall அ மட்டும் இந்த factory ல safe அ வச்சிருப்பாங்க. ஆனா அதுக்கான meaning ஏ இந்த technology மூலமா அழிஞ்சு போயிருக்கும். இந்த மாதிரி indirect காமிக்க்ர விஷயங்கள் எல்லாம் நல்ல இருந்தது. 


இப்போ santa வை கண்டுபிடிக்கறதுக்காக yoyo  robots யும் மனுஷங்களும் இருக்கறமாதிரி ஒரு team  அ உருவாக்குறான். இதுல இவனோட தாத்தா வும் இருப்பாரு. இவரு ஒரு wild  ஆனா character அதுமட்டும் இல்லாம தாறுமாறா experiment  பண்ணுற scientist  மாதிரியும் தெரிவாரு. இவங்ககூட cookie ன்ற reindeer யும் இருக்கும். அதே மாதிரி snowflake  னு gifts அ pack  பண்ணுற drone  யும் இருக்கும். இந்த படத்தோட director  யும் பாத்தீங்கன்னா classic ஆனா christmas  விஷயங்களை காமிச்சிருக்கமாட்டாரு. இங்க வர santas எல்லாம் bike வச்சுட்டு biker gang மாதிரி தான்  இருப்பாங்க. அதுவும் tatoos போட்டுகிட்டு leather jacket மாட்டிகிட்டு இருப்பாங்க. அதுமட்டுமில்ல நல்ல rock songs தான் கேட்பாங்க. usual அ snowglobes எல்லாம் ஒரு decoration item அ தான் use பண்ணுவாங்க ஆனா இங்க snowglobe அ santas ஒரு portal மாதிரி பயன்படுத்துவாங்க. ஒரு எடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறதுக்கு இந்த snowglobe அ பயன்படுத்துறாங்க. நெறய ancient spells அப்புறம் high tech விஷயங்களையும் இந்த santas அ use பண்ணுவாங்க. அதுமட்டும் இல்ல ஓவுவுறு snowglobe ல christmas tradition ஓட ஒரு piece ஒளிஞ்சு இருக்கும். இப்போ இந்த gang ஓட வேலை எல்லா snowglobe யும் கண்டுபிடிக்கிறது தான். இந்த team ரொம்ப perfect அ இருக்கமாட்டாங்க ஆனா இவங்களோட bonding super அ இருக்கும். இதுவே ஒரு fresh ஆனா topic அ இந்த படத்துல அமைச்சிருக்கு. அப்புறம் snowflake, என்னதான் இது ஒரு drone அ இருந்தாலும் இது அடிக்கற comments எல்லாமே அட்டகாசமா இருக்கும். 


இந்த பாத்தோட visuals, background music and bgm னு எல்லாமே நல்ல இருந்தது. இந்த படத்துல emotional ஆனா விஷயங்களையும் நல்ல எடுத்துருந்தாங்க. உதாரணத்தக்கு villain அ வர பொண்ணு அவளோட சின்னவயசுல  ல ஒரு விஷயத்தை இழந்திருப்பா. இழந்த விஷயம் திருப்பி கிடைக்காது ன்றதா ஞாபக படுத்திரு மாதிரி தான் இவளுக்கு christmas இருக்கும். அதுனால இவளுக்கு christmas பிடிக்காது. அதே மாதிரி technology வளர வளர santa சந்தோச பட்ட சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் மறைஞ்சு போய்டும் அதுனால அவரும் ஒரு மாதிரி depressed ஆயிடுவாரு. இந்த christmas holidays ன்றது நினைவுகளை cherish பண்ணுறதுக்காக தான். எல்லாரோட வாழக்கை ளையும் வலி தர கூடிய விஷயங்கள் நடந்திருக்கலாம் ஆனா அதா accept பண்ணி move ஆகணும் ன்றதா இந்த படத்துல சொல்லிருக்காங்க. இது கொழந்தைகளுக்கான படமா இருந்தாலும் இதுல சொல்லற message கொஞ்சம் matured அ தான் இருக்கும். கொழந்தைகளுக்கு எந்த அளவுக்கு இந்த message புரியும்  னு தெரில 


கதை சரியா climax அ touch பண்ண ஒடனே நம்மள characters ஓட emotions அ நல்ல புரிஞ்சுக்க முடியும். santa வை ரொம்ப tired அ தான் காமிச்சிருப்பாங்க. ஆனா yoyo அவனோட memories அ share பண்ண ஆரம்பிப்பான். மத்தவங்க கூட connect ஆகுறதும் நினைவுகளை cherish பண்ணுறதும் தான் magic னு சொல்ல வராங்க. இதை program லாம் பண்ண முடியாது. 


மொத்தத்துல ஒரு நல்ல jolly ஆனா movie தான் இது. இந்த christmas holidays க்கு உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை enjoy பண்ணி பாருங்க.