Featured post

தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தொழில்முனைவோர் மாநாடு

 *தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தொழில்முனைவோர் மாநாடு 2025 மிகவும் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகிறது!* தமிழ்நாடு மலையாளி சங்கங்களி...

Tuesday, 19 August 2025

தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தொழில்முனைவோர் மாநாடு

 *தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தொழில்முனைவோர் மாநாடு 2025 மிகவும் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகிறது!*



தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு (CTMA) 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக கலாச்சார அமைப்பு. தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையான கேரள மக்களின் சமூக கலாச்சார பண்பாட்டை, தாய் அமைப்பாக CTMA பிரதிபலிக்கிறது.

இந்த ஆண்டு உலக தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு, தொழில்முனைவோர் மாநாட்டை (Entrepreneurship Summit) நடத்துகிறது. தனித்துவமான இந்த நிகழ்வில் புதிய தொழில்நுட்பம், வணிகத்தில் சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார வெற்றிக்காக ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தொழில்முனைவோர் மாநாடு நடக்க இருக்கிறது.


பல தடைகளை கடந்து தங்கள் தொழிலில் வெற்றி பெற்று மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் பேச்சாளர்கள், தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் என பல முக்கியஸ்தர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். ஆகஸ்ட் 21, 2025 அன்று சென்னை ஹயாத் ரீஜென்சியில் நடைபெறும் இந்த மதிப்புமிக்க நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவோர்கள், முன்னணி வணிகர்கள், மேலாண்மை நிபுணர்கள், தொழில்முறை மேலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மேலாண்மை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேசிய மற்றும் உலகளவில் மதிப்புக்க ஆளுமைகளும் உரையாற்ற இருப்பதால் உங்கள் அனைவரின் பங்கேற்பு நிகழ்விற்கு மேலும் பெருமை சேர்க்கும். 


தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பிரவீன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்தியாவை சார்ந்த பல்துறை நிபுணர்கள்:

டாக்டர் சசி தரூர், எம்.பி. , 

டாக்டர் டி.ஆர்.பி. ராஜா,

பி. விஜயன், ஐபிஎஸ்,

பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, 

சச்சின் பிள்ளை, 

ஏ.டி. பத்மசிங் ஐசக், 

சி. சிவசங்கரன், 

பாபி செம்மனூர், 

முருகவேள் ஜானகிராமன், 

ராதிகா சரத்குமார்,

ரவி டீசீ,

சி.கே. குமரவேல்,

கோபிநாத் முதுகாட்,

சுரேஷ் பத்மநாபன்,

புரொபசர். டாக்டர். சஜி கோபிநாத்,

சுரேஷ் கோவிந்த்,

சஞ்சய் கே. ராய்,

டாக்டர். கே. அன்சாரி,

டாக்டர். ஸ்ரீமதி கேசன்,

சிந்து அகஸ்டின்.


மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபுணர்களின் கருத்துகள், நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கும் எதிர்கால புதிய இந்தியாவிற்கும் நிச்சயம் உந்துதலாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறோம். 


*அமைப்பின் மற்ற முக்கிய உறுப்பினர்கள்:*


கெளரவ தலைவர்: எம் பி புருஷோத்தமன்,

சேர்மன்: கோகுலம் கோபாலன்,

பொது செயலாளர்: எம் பி அன்வர்,

பொருளாளர்: ஆர். ராதாகிருஷ்ணன்,

சேர்மன் புராஜெக்ட்ஸ்: சோமன் கைதக்கட்,

மாநாடு ஒருங்கிணைப்பாளர்: ஜி பிரஷீத் குமார்.

Monday, 18 August 2025

வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன்

 வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் துணைவியார் பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார். 



சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான  டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி மற்றும் பிரபல மகேப்பேறு மருத்துவர் திருமதி C வேணி அவர்கள், இன்று காலை மாரடைப்பு  காரணமாக மரணமடைந்தார். 


திருமதி C வேணி 1953 ஆம் வருடம் சின்னக்கண்ணு, புண்ணியகோடி தமபதியருக்கு கடைசி மகளாக பிறந்தார். சென்னையின் பிரபல KMC கல்லூரியில் மருத்துவ படிப்பை Gynaecology பிரிவில் முடித்தார். பின்னர் மருத்துவ கல்லூரி துறையில் தலைவராக ( HOD ) RSRM மற்றும் வேலூர் மருத்துவ கல்லூரிகளில் 40 வருடங்கள் பணியாற்றினார். 

மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவகல்லூரியில் Controller of

Examinations ஆக பணியாற்றியவர், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிருக்கான மருத்துவத்தில் புகழ் பெற்ற நிபுணராக திகழ்ந்தார்.


தனது கணவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களைப் போலவே, வண்ணாரபேட்டை, காசிமேடு பகுதிகளில் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ பணிகள்  செய்து பிரபலமடைந்தார். இதுவரையிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு பணிகள் செய்துள்ளார். 


மக்களுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் செய்து, இந்தியப்பிரதமர் மாண்மிகு திரு மோடி அவர்களாலும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்களாலும் பாராட்டப்பெற்ற திரு டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூக பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


டாக்டர் திருமதி வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று 18.08.2025 காலை 6.15 மணி அளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெங்கடாச்சலம் தெரு,  பழைய வண்ணாரபேட்டை, சென்னை 21  என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. நாளை 19/08/2025 காலை 10 மணிக்கு அவர்களின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காசிமேடு இடுகாட்டில்  அடக்கம் செய்யப்படுகிறது. 



தொடர்புக்கு 

டாக்டர் சரத் ராஜ ஜெயச்சந்திரன் 

+91 98848 66007

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்

 *கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்*

*மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்தப் படம் பாலன்*




மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் திருமதி ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளன.


பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம் "பாலன்" என்ற பெயரில் உருவாகிறது என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.


இந்தப் படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு பணிகளையும், இசையமைப்பாளராக சுஷின் ஷியாம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை விவேக் ஹர்ஷன் மேற்கொள்கின்றனர். "பாலன்" திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலையாள திரையுலகில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மலையாளம் மட்டுமின்றி 2025 ஆண்டிலேயே கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கே.டி. மூலம் கன்னட திரையுலகிலும், யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படம், தமிழில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் இந்தி திரையுலகில் பிரியதர்ஷனின் திரில்லர் திரைப்படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

KVN Productions & Thespian Films’ 'BALAN' Goes on Floors Today

 *KVN Productions & Thespian Films’ 'BALAN' Goes on Floors Today*




A few months ago, KVN Productions, led by Mr. Venkat K Narayana, announced a collaboration with Thespian Films, headed by Mrs. Shailaja Desai Fenn, uniting two powerhouse voices of Malayalam cinema-  director Chidambaram (Manjummel Boys) and writer Jithu Madhavan (Aavesham).


The makers have now revealed the title of the film as 'Balan' which officially goes on floors today.


The project brings together an outstanding creative team, with Shyju Khaled as Director of Photography, Sushin Shyam composing the music, and Vivek Harshan as Editor.


With Balan, KVN Productions foray into Malayalam cinema.


 KVN Productions further strengthens an already ambitious 2025 slate that includes KD (Kannada), Toxic with Yash, Thalapathy 69 (Tamil), and Priyadarshan’s Thriller (Hindi) making it one of the most dynamic production houses to look forward to in Indian cinema.

Saturday, 16 August 2025

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு*

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு*







ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்'  படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர். 


இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.  இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான். தற்போது வரை இந்த படத்தின் வெற்றியை அவர் தன் தலை மீது ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து எங்களின் நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 


இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.


இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்," என்றார்.


இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ''இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் பின்னணியில் ஒரு குட்டி கதை இருக்கிறது. இப்போது அதைப் பற்றி விரிவாக பேச இயலாது. இருப்பினும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது. 'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறள் தான் என் நினைவுக்கு வருகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டது ஏ எல் உதயா தான். இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து நான் தற்போது பேசும் தருணம் வரை உதயா அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.  இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 


இந்தப் படம் வெளியான பிறகு நாங்கள் குழுவாக இணைந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி என்று ஊர் ஊராக பயணித்து ரசிகர்களை சந்தித்தபோது ரசிகர்களையும், ஊடகத்தினரையும் அவர் தனி ஆளாக எதிர்கொண்டார். ரசிகர்கள் அனைவரும் 'கணக்கு எப்படி இருக்க?' என்ற அளவிற்கு நலம் விசாரிக்க தொடங்கி விட்டார்கள். ரசிகர்களின் பேரன்பு எங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் உதயா தான். இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாக நான் உதயாவை தான் குறிப்பிடுவேன். 


கன்னட திரைப்படத்துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழிலும் வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வர செய்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார். 


நடிகர் ஏ. எல். உதயா பேசுகையில், '' பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா, என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன். 


என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது. 


இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.


சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம்.  ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம். 


இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு. 


எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என  பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம். 


இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம். 


இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான். 


சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும்.‌ ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாக சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறோம். இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது. 


இந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் சௌந்தர், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் டேனி, பிரபாகர், ஸ்ரீதர், ஹைடு கார்த்திக், நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வி எஃப் எக்ஸ் மூர்த்தி என அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


அனைத்து தயாரிப்பாளர்களும் நன்மை பெற வேண்டும். அடுத்து நாம் பட வெளியீட்டை ஒழுங்கு படுத்துவது தான் முதன்மையான பணி. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன். தயாரிப்பாளர் கேயார் , தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் போன்றோர்கள் தலைமையில் இருந்த சங்கம் போல் வலுவான சங்கம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அச்சப்படாத தலைவர்கள் இருந்தார்கள் இல்லையா, அது போன்ற தலைவர்கள் வந்தால் மட்டும் தான் சினிமா நன்றாக இருக்கும். 


இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை, அஜ்மலும் ஒரு ஹீரோ தான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி.


இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 'டண்டனக்கா டான்'  என்ற பெயரில் கதையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த 'அக்யூஸ்ட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன்,'' என்றார்.


***

வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா”

 *வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில்  ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!!* 



துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது.


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்  டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய  உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின்  முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி

இசை – ஜேக்ஸ் பீஜாய்

எடிட்டிங் – சாமன் சகோ

நிர்வாக தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி

கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்

தயாரிப்பு வடிவமைப்பு – பாங்லான்

கலை இயக்கம் – ஜிது செபாஸ்டியன்

மேக்கப் – ரோனெக்ஸ் சாவியர்

உடை வடிவமைப்பு  – மெல்வி J, அர்ச்சனா ராவ்

ஸ்டில்ஸ் – ரோஹித் கே.சுரேஷ், அமல் K.சதார்

சண்டைக் காட்சிகள் – யானிக் பென்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு  – ரினி திவாகர், வினோஷ் கையமல்

முதன்மை உதவி இயக்குநர் – சுஜித் சுரேஷ்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

Wayfarer Films’ ‘Lokah – Chapter One: Chandra’ Tamil Nadu Release by AGS Cinemas

 *Wayfarer Films’ ‘Lokah – Chapter One: Chandra’ Tamil Nadu Release by AGS Cinemas*



‘Lokah – Chapter One: Chandra’, the seventh production from Dulquer Salmaan’s Wayfarer Films, will have its Tamil Nadu release through AGS Cinemas. The film will hit theatres as an Onam release. Starring Kalyani Priyadarshan and Naslen in the lead roles, Lokah is written and directed by Dominic Arun. The film has been made on a grand budget. Chandra is the first film in a superhero cinematic universe titled Lokah. Kalyani Priyadarshan plays a superhero character in the film. This is the first part of a cinematic universe that will unfold over multiple instalments. The movie will also be released on EPIQ screens across South India.


The first-look poster and teaser of Lokah had garnered impressive attention from the audience. The stunning visuals and magnificent music in the teaser sparked widespread discussion on social media. The teaser also hinted that the film is set against a backdrop never before seen by Malayalam audiences. Featuring Chandu Salim Kumar, Arun Kurian, and Shanti Balachandran in pivotal roles, the film is eagerly awaited with high expectations from viewers.


Cinematography – Nimish Ravi, Music – Jakes Bejoy, Editor – Chaman Chacko, Executive Producers – Jom Varghese, Bibin Perumbally, Additional Screenplay– Santhy Balachandran, Production Designer– Banglan, Art Director– Jithu Sebastian, Makeup – Ronex Xavier, Costume Designers – Melvy J, Archana Rao, Stills– Rohith K Suresh, Amal K Sadar, Action Choreographer – Yannick Ben, Production Controllers – Rini Divakar, Vinosh Kaimal, Chief Associate Director– Sujith Suresh, Pro - Yuvraaj

Dear Students’ Teaser Takes the Internet by Storm! Nivin Pauly & Nayanthara Reunite for

 Dear Students’ Teaser Takes the Internet by Storm! Nivin Pauly & Nayanthara Reunite for a Complete Entertainer.*



The highly anticipated official teaser for the upcoming film ‘Dear Students’ has been released. The teaser has received a thunderous response from audiences and is going viral across social media platforms, rapidly climbing the trending charts and solidifying its position as a mega-hit.


The film, which marks the reunion of the beloved on-screen duo Nivin Pauly and Nayanthara, is written and directed by the debutant duo George Philip Roy and Sandeep Kumar. The movie is produced by Maverik Movies Pvt. Ltd. in association with Nivin Pauly’s home banner Pauly Jr. Pictures and Rowdy Pictures Pvt. Ltd.


The electrifying teaser gives a glimpse into the vibrant and tumultuous world of school life, hinting at a story that revolves around a group of students mainly. Audiences are celebrating the teaser for its perfect blend of comedy, fun, high-octane action, and thrilling moments, promising a complete commercial entertainer.


Fans are particularly excited as the teaser signals Nivin Pauly in his much-loved, charismatic, and mischievous avatar. He portrays the character of Hari. Nayanthara is set to play a powerful role as a police officer, adding a layer of intense drama to the film. This project brings Nivin Pauly and Nayanthara back together on screen after a gap of six years, following their 2019 blockbuster, Love Action Drama.


The Mega lineup includes the Redin Kingsley, Aadukalam Murugadoss, Sarath Ravi, Uday Mahesh, Vettai Muthu Kumar, Jayakumar Janakiraman, Vijay Sathya, Mathew Varghese, Raja Rani Pandyan, Deepthi, Kiran Konda, and Kamarudin K. The film also has a strong supporting cast from the Malayalam industry, including Aju Varghese, Sharafudheen, Suresh Krishna, Mallika Sukumaran, Lal, Jagadish, and Johny Antony, making it one of the most star-studded productions of the year.



*Link* : https://www.youtube.com/watch?v=x8P484NvOnk

நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students)

 *நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது!*



நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது.


ரசிகர்களால் பெரிதும்  விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் ( George Philip Roy)மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். Maverik Movies Pvt. Ltd தயாரிப்பில், நிவின் பாலியின் ஹோம் பேனரான Pauly Jr. Pictures மற்றும் Rowdy Pictures Pvt. Ltd. இணைந்து தயாரிக்கின்றன.


இன்று வெளியான அசத்தலான டீசர், பள்ளி வாழ்க்கையின் வண்ணமயமான வாழ்க்கையையும், பரபரப்பான உலகையும் சித்தரிக்கிறது. மேலும் மாணவர்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது. காமெடி, வேடிக்கை, அதிரடி, சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் கலந்த கமெர்ஷியல் எண்டர்டெய்னர் என டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


நிவின் பாலி தனது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும்  துறுதுறுப்புடன் குறும்பு மிக்க  ஹரி என்ற கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அதேசமயம், நயன்தாரா ஒரு வலிமையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது கதைக்கு பெரும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியாகிய ப்ளாக்பஸ்டர் “லவ் ஆக்சன் டிராமா” திரைப்படத்திற்குப் பின், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிவின் பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜனகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன் K உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.


மேலும், மலையாளத் திரையுலகில் இருந்து அஜு வர்கீஸ் (Aju Varghese), ஷரஃபுதீன் (Sharafudheen), சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆன்டனி ஆகியோர் இணைந்துள்ளதால், இந்த ஆண்டு வெளிவரும் மிக அதிக நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.


*‘Dear Students’ Teaser Takes the Internet by Storm! Nivin Pauly & Nayanthara Reunite for a Complete Entertainer.*


The highly anticipated official teaser for the upcoming film ‘Dear Students’ has been released. The teaser has received a thunderous response from audiences and is going viral across social media platforms, rapidly climbing the trending charts and solidifying its position as a mega-hit.


The film, which marks the reunion of the beloved on-screen duo Nivin Pauly and Nayanthara, is written and directed by the debutant duo George Philip Roy and Sandeep Kumar. The movie is produced by Maverik Movies Pvt. Ltd. in association with Nivin Pauly’s home banner Pauly Jr. Pictures and Rowdy Pictures Pvt. Ltd.


The electrifying teaser gives a glimpse into the vibrant and tumultuous world of school life, hinting at a story that revolves around a group of students mainly. Audiences are celebrating the teaser for its perfect blend of comedy, fun, high-octane action, and thrilling moments, promising a complete commercial entertainer.


Fans are particularly excited as the teaser signals Nivin Pauly in his much-loved, charismatic, and mischievous avatar. He portrays the character of Hari. Nayanthara is set to play a powerful role as a police officer, adding a layer of intense drama to the film. This project brings Nivin Pauly and Nayanthara back together on screen after a gap of six years, following their 2019 blockbuster, Love Action Drama.


The Mega lineup includes the Redin Kingsley, Aadukalam Murugadoss, Sarath Ravi, Uday Mahesh, Vettai Muthu Kumar, Jayakumar Janakiraman, Vijay Sathya, Mathew Varghese, Raja Rani Pandyan, Deepthi, Kiran Konda, and Kamarudin K. The film also has a strong supporting cast from the Malayalam industry, including Aju Varghese, Sharafudheen, Suresh Krishna, Mallika Sukumaran, Lal, Jagadish, and Johny Antony, making it one of the most star-studded productions of the year.



*Link* : https://www.youtube.com/watch?v=x8P484NvOnk