Featured post

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*

 *ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100  மில்லியன் பார்வை  நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*   இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ...

Tuesday, 2 December 2025

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*

 *ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100  மில்லியன் பார்வை  நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*  



இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 


பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம்  உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர்  தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன்  தயாரித்துள்ளார்.


இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்


உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.

ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.

அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில்  அவரை இழுத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி நம்மை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது. 


தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு,  ஒரு  வித்தியாசமான திரில்லர் சீரிஸாக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும்  புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும்  பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. 


ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான, மண் சார்ந்த சிறப்பான படைப்புகளை, பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான சட்டமும் நீதியும் சீரிஸ், மாமன் திரைப்படம்,  மக்களின் பேராதாரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.


தற்போது ரேகை சிரீஸும், பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மாறுபட்ட திரில்லர் அனுபவத்தை தரும் “ரேகை” சீரிஸை, ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*

 *ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100  மில்லியன் பார்வை  நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!*  



இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 


பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம்  உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர்  தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன்  தயாரித்துள்ளார்.


இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்


உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.

ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.

அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில்  அவரை இழுத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி நம்மை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது. 


தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு,  ஒரு  வித்தியாசமான திரில்லர் சீரிஸாக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும்  புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும்  பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. 


ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான, மண் சார்ந்த சிறப்பான படைப்புகளை, பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான சட்டமும் நீதியும் சீரிஸ், மாமன் திரைப்படம்,  மக்களின் பேராதாரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.


தற்போது ரேகை சிரீஸும், பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மாறுபட்ட திரில்லர் அனுபவத்தை தரும் “ரேகை” சீரிஸை, ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.

கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant)

 *கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல்  (Cochlear Implant) சிகிச்சைக்கான  சிறந்த மையமாக காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை மேம்படுகிறது*





பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும் தொடர்பு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அத்தகைய மாற்றத்தைச் சாத்தியமாக்குகிறது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. நவீன மருத்துவ முன்னேற்றத்தாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பான நிபுணத்துவத்தாலும், காதுக்குள், உட்செவியில் நுண்கருவி பொருத்தப்பட்டு, பல காலங்களாகப் போராடி வந்த செவிப்புலன் இழப்பில் இருந்து மீட்டு, நம்பிக்கையையும் ஒலியையும் அளிக்கிறது காவேரி மருத்துவமனை.


*அதிநவீன தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கும் நிபுணத்துவப் பராமரிப்பு*

மூன்று சிக்கலான உட்செவி உட்பொருத்தல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. இந்த அறுவை சிகிச்சைகள், ஆழ்ந்த காது கேளாமை கொண்ட ஒரு வளர்ந்த நபரிடமிருந்து இரண்டு குழந்தைகள் வரை நீள்கிறது. அக்குழந்தைகளில் ஒருவர் டவுன் சிண்ட்ரோத்துடனும், இன்னொரு குழந்தை, மொண்டினி உருமாற்றம் எனும் மிகவும் அரிய பிறவி உட்செவி  குறைப்பாட்டுடனும் பாதிக்கப்பட்டவர். ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு மருத்துவ சாதனையை மட்டுமல்ல, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வாழ்க்கையை மாற்றும் அற்புத தருணத்தையும் குறிக்கிறது.


*மேம்பட்ட ENT பராமரிப்பில் தலைமைத்துவம்*

ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் உட்செவி  உட்பொருத்தல் திட்டத்திற்கு, காது, தொண்டை (ENT) துறையின் தலைவரான மருத்துவர் ஆனந்த் ராஜு தலைமை தாங்குகிறார். 600க்கும் மேற்பட்ட வெற்றிகரமான உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சைகள் மற்றும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க மருத்துவர் ஆனந்தின் நிபுணத்துவம், மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்குக் கூட மிக உயர்ந்த தரமான பராமரிப்பைப் பெற்றுத் தருவதை உறுதி செய்கிறது. மயக்க மருந்து நிபுணர்கள், செவிப்புலன் மருத்துவர்கள் (Audiologists) மற்றும் இயல்புமீட்பு சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட குழு அவருக்கு உறுதுணையாக ஒன்றிணைந்து  நோயாளிக்கான மிகச் சிறந்த சிகிச்சையைச் சாத்தியமாக்குகின்றனர்.


*தனிப்பயனாக்கப்பட்ட, நோயாளியை-மையப்படுத்திய அணுகுமுறை*

“எந்த இரண்டு நோயாளிகளும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை" என்கிறார் மருத்துவர் ஆனந்த் ராஜு. மேலும், "எங்கள் அணுகுமுறை தனிப்பயனாக்கப்பட்ட, நுணுக்கமான, மற்றும் பல துறைகளை ஒருங்கிணைத்து, அரிதான அல்லது சவாலான காது பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பான  சிகிச்சையை உத்திரவாதம் அளிக்கிறது" என்றார். இந்தத் 

தத்துவத்தின் அடிப்படையிலான அணுகுமுறை, மருத்துவமனையின் சமீபத்திய வெற்றிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது:


● சிக்கலான காது நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணி, வெற்றிகரமான உட்செவு உட்பொருத்துதல் அறுவை சிகிச்சையின் பலனாக,  பல வருட நிசப்தத்தில் இருந்து மீண்டு, ஒலி பெற்று, உலகத்துடனான தனது தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டார்.


● டவுன்’ஸ் நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட, பிறவியிலேயே காது கேளாத ஒரு சிறுவன், அவனது உட்பொருத்துதல் சிகிச்சைக்குப் பிறகு கேட்கும் திறனைப் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்.


● தண்டுவட வளைவும், அரிதான உட்செவி உடற்கூறியல் கொண்ட ஆறு வயது சிறுமிக்கு, உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மற்ற மருத்துவமனைகள் அவளை மறுத்த போதிலும், அவளுடைய வெற்றிகரமான அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவர் ஆனந்த் ராஜுவின் நிபுணத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.


*நிசப்தத்தில் இருந்து ஒலிக்கு: எல்லா வயதினர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துதல்*

காது கேளாமை என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். பிறவியிலேயே காது கேளாமை அல்லது மூளை காய்ச்சல், நாள்பட்ட காது தொற்றுகளுடன் பிறந்த குழந்தைகள் முதல் மனச்சோர்வு மற்றும் தனிமை போன்ற உளவியல் மற்றும் சமூக தாக்கங்களைச் சமாளிக்கும் வயதானவர்கள் வரை என இது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது.  காவேரி மருத்துவமனை, தவறான புரிதல்களைக் கலைவதோடு மட்டுமல்லாமல், விரிவான தீர்வுகளை வழங்கவும் உறுதியாக உள்ளது. காது கேளாமையால் ஒருவரின் வாழ்க்கை நிசப்தத்தாலோ, தனிமையாலோ சூழ்ந்து விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறது காவேரி மருத்துவமனை. 


*விரிவான பராமரிப்பும், வாழ்நாள் முழுமைக்கு ஆதரவும்*

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் உட்செவி உட்பொருத்துதல் சிகிச்சை உண்மையிலேயே மிக விரிவானது. மருத்துவ கணிப்பைப் பெறுவது, அறுவை சிகிச்சை, கருவியைச் செயல்படுத்தல், சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பை ஆகியவற்றை நோயாளிகள் பெறுகிறார்கள். ஆரம்பகால நோயறிதல், குறிப்பாக குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்தல், அவர்களது சிறப்பான பேச்சிற்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அச்சாணியாக அமைகிறது. 


*அனைவருக்குமான நம்பிக்கையும் குணமாகுதலும்*

காவேரி மருத்துவமனையின் செய்தி மிகத் தெளிவானது: சரியான நோயறிதலாலும், மேம்பட்ட சிகிச்சையாலும், எண்ணற்ற மக்கள் கேட்கும் திறனைப் பெற்று மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடிக்க இயலும். அதிநவீன தொழில்நுட்பத்தையும், அக்கறையான பராமரிப்பையும் ஒன்றிணைப்பதன் மூலம், எண்ணற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கேட்கும் திறனை மீட்டெடுப்பதில் புதிய தரத்தைத் தென் சென்னையில் அமைத்து வருகிறது காவேரி  மருத்துவமனை.


நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் எவரேனும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை நிசப்தத்தில் ஒலிக்கும், தனிமையிலிருந்து மீட்டுப் பிறருடன் இணைப்பதற்கும் உதவ ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தயாராக உள்ளது.

A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear Implants

 A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear Implants 






Imagine a world where silence is all you know, and then, suddenly, sound bursts into your life, connecting you to loved ones and the world around you. At Kauvery Hospital, Radial Road, Chennai, this transformation is now a reality for more people than ever, thanks to the hospital’s emergence as a Centre of Excellence for Cochlear Implants. With state-of-the-art technology and dedicated medical expertise, Kauvery Hospital is bringing hope and sound to individuals of all ages battling hearing loss. 

Cutting-Edge Technology Meets Expert Care 

Kauvery Hospital, Radial Road, has reached a significant milestone by successfully performing three complex cochlear implant surgeries. These cases ranged from an adult with profound hearing loss to two children—one with Down syndrome and another with a rare congenital inner-ear condition known as Mondini malformation. Each surgery represents not just a medical achievement but a life-changing moment for the patients and their families. 

Leadership in Advanced ENT Care 

The cochlear implant programme at Kauvery Hospital, Radial Road, is led by Dr Anand Raju, Head of the ENT Department. With over 600 successful cochlear implant surgeries to his name and more than 25 years of experience, Dr Anand’s expertise ensures that even the most challenging and complex cases receive the highest standard of care. He is supported by a multidisciplinary team including anaesthesia specialists, audiologists, and rehabilitation therapists—all working together for optimal patient outcomes. 

Personalised, Patient-Centred Approach 

“No two patients are the same,” says Dr Anand Raju. “Our approach is individualised, meticulous, and multidisciplinary—ensuring safe outcomes, even in rare or challenging ear conditions.” This philosophy was demonstrated in the hospital’s recent successes: 

● An elderly woman with a history of complex ear disease underwent successful cochlear implant surgery, regaining her connection to the world of sound after years of silence. ● A young boy with Down’s syndrome, deaf from birth, experienced the joy of hearing after his implant was activated. 

● A six-year-old girl with scoliosis and a rare inner ear anatomy received a cochlear implant, despite being turned away by other hospitals—her surgery was a testament to the hospital’s commitment and Dr Anand Raju’s expertise. 

From Silence to Sound: Changing Lives at Every Age 

Hearing loss is often a neglected health issue, yet it affects people of all ages—from children born with congenital hearing loss or acquired brain fever and chronic ear infections to elderly individuals dealing with psychological and social impacts such as depression and isolation. Kauvery Hospital is determined to challenge misconceptions and offer comprehensive solutions, believing that hearing loss should not mean a life of silence or loneliness.

Comprehensive Care, Lifelong Support 

At Kauvery Hospital, Radial Road, the cochlear implant programme is truly comprehensive. Patients receive evaluation, surgery, device activation, therapy, and long-term follow-up. The hospital emphasises the importance of early intervention for improving speech and developmental outcomes, particularly in children. 

Hope and Healing for All 

The message from Kauvery Hospital is clear: with the right evaluation and advanced treatment, countless people can rediscover the joy of sound. By bringing together cutting-edge technology and compassionate care, the hospital is changing lives and setting a new standard for hearing restoration in South Chennai.

Tamil Nadu’s Youngest FIDE-Rated Girl: Rayanika Shivaram Creates History

 “Tamil Nadu’s Youngest FIDE-Rated Girl: Rayanika Shivaram Creates History”





Chennai, India:

Six-year-old Rayanika Shivaram has created a historic milestone by becoming Tamil Nadu’s youngest FIDE-rated girl chess player, officially entering the world chess rating list at an exceptionally young age.

*Tamil Nadu Rank No. 1* (Youngest FIDE-rated girl)


*India Rank No. 2* (Youngest rated girl in the country)


*World 9 th Place* in the “youngest active female rated players” category

With her newly secured rating, she now stands as:


Tamil Nadu Rank No. 1 (Youngest FIDE-rated girl)


India Rank No. 2 (Youngest rated girl in the country)


World Rank Top 10 in the “youngest active female rated players” category



Born in 2019 and training  with a disciplined  hour schedule, Rayanika has been consistently outperforming her peers in classical tournaments. She recently delivered strong results in state-level and FIDE-rated events, securing wins against experienced rated players and demonstrating remarkable positional understanding for her age.


Her coaches describe her as “a rare talent with exceptional board vision”, and early predictions suggest she may reach 1400–1500 FIDE rating before completing seven years, positioning her as one of India’s most promising future champions.


Tamil Nadu—already the powerhouse of Indian chess—adds another shining star to its legacy, and the chess fraternity eagerly watches Rayanika’s rapid rise on the international stage.

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’

 *ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் தயாராகிறது! டிசம்பர் 5 ஆம் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்குகின்றன!*



உலகின் மிகப்பெரிய திரைப்படமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஐமேக்ஸின் சிறந்த இருக்கைகளில் அனுபவித்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுங்கள். மேலும், டால்பி விஷன் சினிமாவில் முதல் முறையாக வெளியிடப்படுகிறது. 


இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான ‘அவதார்’ வெளியீட்டை ஒட்டி இந்த மாதம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. ஐமேக்ஸ் மற்றும் டால்பி விஷன் திரையரங்குகளில் சிறப்பு சலுகையுடன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்திற்கான முன்பதிவு டிசம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்குகிறது. 


’அவதார்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் சிறந்த இருக்கைகள், பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் தரமான ஒலியுடன் படத்தை சிறந்த முறையில் கண்டு களிக்க ஐமேக்ஸ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. 


முன்பதிவு தொடங்கும் வேளையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவதார் தீமுடன் கூடிய பாக்ஸ் ஆஃபிஸ் கவுண்டர் அமைக்கப்பட்டிருக்கும். படம் வெளியாகி அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிக ரசிகர்கள் கூட்டம் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் முதல் நாள் முதல் ஷோவை பிரம்மாண்ட முறையில் பார்க்க ஐமேக்ஸ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. 


டிசம்பர் 5 ஆம் தேதி அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கும்.


20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடும்.

IMAX Gears Up for the biggest film of the year Avatar: Fire and Ash as Advance Bookings Open 5th December

 *IMAX Gears Up for the biggest film of the year Avatar: Fire and Ash as Advance Bookings Open 5th December*



_Grab the chance to experience global's biggest event film in the best seats in IMAX and releasing first time ever in Dolby vision cinema. Don’t Miss it_


With massive global buzz around the biggest cinematic event of the year, the month of Avatar begins on an electrifying note. Advance bookings for James Cameron’s Avatar: Fire and Ash will open on 5th December, with a special push across IMAX and Dolby vision cinemas on 5th nationwide.


As audiences eagerly await the next chapter in the epic Avatar saga, IMAX invites fans to be the first to experience the film in the most immersive way possible — with the best seats, unmatched visuals, and unparalleled sound.


In the lead-up to the opening day, the campaign will highlight special Avatar-themed box office counters at all IMAX theatres, giving fans a dedicated, high-energy space to book tickets and build excitement for the film’s release.


With demand expected to surge, IMAX encourages moviegoers to gear up for first-day, first-show bookings to ensure they don’t miss the chance to witness Avatar: Fire and Ash in its full, awe-inspiring scale.


Advance bookings open 5th December across all IMAX locations.


20th Century Studios will release Avatar: Fire and Ash in theatres on 19th December in 6 languages English, Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.

Monday, 1 December 2025

டிட்வா புயல் மழையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

 *டிட்வா புயல் மழையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி முன்னுதாரணமான பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம்!*   


















பலத்த மழையில் நிவாரணப் நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான பி டி செல்வகுமார், டிட்வா புயல் தாக்கத்தினால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருக்கிற, சாலையோரத்தில் அமர்ந்து காய்கறி வியாபாரம் செய்கிற ஏழை எளிய மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக களமிறங்கினார்.


இதற்கான நிகழ்வு, 1.12.2025 திங்கள் கிழமையன்று சென்னை முழுவதும் சிறிது நேரம் கூட விடாமல் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில் கோயம்பேட்டில் நடந்தது.


10க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு காய்கறி வியாபாரம் செய்வதற்கான தள்ளுவண்டிகள், நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கு ராட்சத குடைகள், பாய்கள், 200 பேருக்கு ரெய்ன் கோட்டுகள், போர்வைகள் என 500 பேருக்கு பலவித பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்ற பி டி செல்வகுமார், அந்த மக்கள் பயன்பெறும் வகையில் , ஏராளமான மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்தார்.


கோயம்பேட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பி டி செல்வகுமார், ''மழைக்காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் மழை பெய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் செய்வதே சரியாக இருக்கும். மழையெல்லாம் ஓய்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து செய்வது பயனுள்ளதாக இருக்காது. அதனால்தான் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மழைக்கால நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து செய்யும்'' என்றார்.


'கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதை வைத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா?' என்ற கேள்விக்கு,


''இப்போகூட பாருங்க. இந்தளவு கொட்டுற மழையில யாராச்சும் ஏழை எளிய மக்களுக்கு உதவ முன் வந்திருக்காங்களா? இல்லையே. ஆனா, நாங்க எதையும் பொருட்படுத்தாம இறங்கி சேவை செய்றோம். அப்படியெல்லாம் மக்களைப் பத்தி யோசிச்சு செயல்படுற நான் தேர்தல்ல போட்டியிட ஆசைப்படுறதுல தப்பில்லையே?


நாங்க இந்த மாதிரியான மக்களுக்கான சேவைகளை இன்னைக்கு நேத்து செய்யல. பத்து வருஷமா செய்துக்கிட்டிருக்கோம். அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறை, கலையரங்கம்னு கட்டிக் கொடுத்திருக்கோம். கஜா புயல் காலத்துல, கொரோனா காலகட்டத்துலன்னு பார்த்துப் பார்த்து மக்கள் சேவை செய்திருக்கோம். போன மாசம் பெண் ஆட்டோ ஒட்டுநர்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வாங்கிக் கொடுத்தோம். மக்களுக்கு சேவை செய்ற எத்தனையோ பேருக்கு முன்னுதாரணமா இருக்கோம். அதையெல்லாம் பார்த்து அவங்க பிரதிநிதியா என்னை தேர்ந்தெடுத்தா இதே சமூக சேவையை இன்னும் நல்லா செய்யலாம்'' என்றார்.


'நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் சேர்ந்திருக்கிறாரே? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு ''அவருக்கு 80 வயசு நெருங்குது. இந்த வயசுல அவரு என்னத்த செய்யப் போறாரு? விஜய் இதுவரை நடந்த ஆட்சிகளுக்கு மாற்றா, ஊழல் இல்லாத, சுத்தமான ஆட்சி நடத்த வர்றோம்னு சொல்றாரு. அப்படியிருக்கிறப்போ ஊழல் வழக்குல தண்டிக்கப்பட்ட செங்கோட்டையனை கட்சில சேர்த்திருக்கிறது சரியான அணுகுமுறையில்லைன்னு சொல்வேன். ஆதவ் அர்ஜுனாவும் குற்றச் செயல்கள்ல ஈடுபட்டவர்தான். அவரை மாதிரியான ஆட்களை கூட வெச்சுக்கிட்டா அவர் எதை அடையணும்னு நினைக்கிறாரோ அதை அடைய முடியாது.


ஒருத்தர கடசில சேர்க்குறதுக்கு முன் டிடெக்டிவ் வெச்சு அவர் யாரு, பேக்ரவுண்ட் என்னன்னு அலசி ஆராயணும். திறமையானவங்களா, இளம் வயதுக்காரர்களா, புதியவர்களா, பொருளாதாரம் தெரிஞ்சவங்களா, உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கத் தயாரா இருக்குறவங்களா பார்த்து கட்சில சேர்த்துக்கணும். அதை விட்டுட்டு குற்றவாளிகளை சேர்த்து வெச்சிக்கிட்டா நல்லதில்ல. இதோ பாருங்க, பணம் படைச்ச எத்தனையோ பெரிய பெரிய நடிகர்கள்லாம் இருக்காங்க. அவங்கள்லாம் செய்யாத நலத்திட்ட உதவிகளை நாங்க களமிறங்கிச் செய்றோம். எங்களையெல்லாம் விஜய் கண்ணுக்குத் தெரியாது'' என்றார்.


'வரும் சட்ட மன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திப்பீர்கள்?' என்ற கேள்விக்கு ''சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் அது பற்றி சொல்கிறேன்'' என்றார்.  


நிகழ்வை துவக்கி வைத்துப் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி கே வெங்கடேஷ் கலப்பை மக்கள் இயக்கம் கடந்த 10 வருடங்களில் ஆற்றிய சமூகப் பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.


அடை மழையிலும் விடாது மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.

மகிபால் சிங் சென்னை ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்!!

மகிபால் சிங் சென்னை ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்!!


Picture(L to R) Mahipal Singh and Benigopal L

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மகிபால் சிங், சென்னையில் உள்ள லெட்ஸ் போலில் நடைபெற்ற **சென்னை டைமண்ட்ஸ் 2வது சென்னை ஓபன் டென்பின் போலிம் சாம்பியன்ஷிப்பில்** பட்டம் வென்றுள்ளார்.

 

தலைவரை சவால் செய்யும் வடிவத்தின் அடிப்படையில் நடைபெற்ற ஓபன் டிவிஷன் இறுதிப் போட்டியில், இரண்டாம் சீட் பெனிகோபால் எல்., முதல் சீட் மகிபால் சிங்குக்கு எதிராக முதல் பந்தயத்தை (208-194) வென்றார், இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க இரண்டாவது பந்தயம் ஆடப்பட்டது. இரண்டாவது பந்தயத்தில், மகிபால் மூன்று தொடர் ஸ்ட்ரைக்குகளுடன் தொடங்கி 200 ரன் எடுத்தார், அதேநேரம் பெனிகோபால் 168 ரன்களே எடுத்தார். இதன் மூலம் மகிபால் சாம்பியனாகத் திகழ்ந்தார்!

இதற்கு முன்னர், ஸ்டெப்லேடர் சுற்றின் முதல் போட்டியில், மூன்றாம் சீட் ஆனந்த் பாபு (தமிழ்நாடு), நான்காம் சீட் நவீன் சித்தம் (தெலுங்கானா) ஆகியோரை (222–183) வீழ்த்தினார். அரையிறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெனிகோபால் லஹோட்டி, ஆனந்த் பாபுவை (223 — 191) எளிதாக வென்றார்.

 


Picture (L to R): Double Divisio - Pervez A, Kishan R and Gurunathan, Soban

இரட்டையர் பிரிவில், கர்நாடகாவைச் சேர்ந்த பர்வேஸ் அஹ்மத் மற்றும் கிஷன் ஆர் (737 பின்ஸ்) ஆகியோர், தமிழ்நாட்டைச் சேர்ந்த குருநாத் மற்றும் சோபன் டி (735 பின்ஸ்) ஆகியோருக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை நெருடும் நிலையில், 2 பின்கள் வித்தியாசத்தில் வென்றனர். இரண்டு பந்தயங்களின் மொத்த பின்ஃபாலின் அடிப்படையில் ஆடப்பட்ட டைட்டில் போட்டியின் முதல் பந்தயத்தில், நான்காம் சீட் பர்வேஸ் மற்றும் கிஷன் ஆர் (386) மூன்றாம் சீட் குருநாத் மற்றும் சோபன் (385) ஆகியோரை 1 பின் வித்தியாசத்தில் விஞ்சினர். இரண்டாவது பந்தயத்தில், முன்னேற்றத்தைப் பெற இரு குழுக்களும் கடுமையாகப் போட்டியிட்டன, இறுதி சுற்றில் கிஷன் ஆர் அடித்த ஒரு ஸ்ட்ரைக், கர்நாடக குழுவிற்கு (351-350) பட்ட வெற்றியை நிச்சயித்தது.

 

 ​​​​   

Picture (L to R): Gurunathan and Anand Babu​​Picture (Lto R) Mohit C and Kushal KS

கிரேடு ஏ பிரிவில், முதல் 12 வீரர்கள் 8-பந்தயங்கள் கொண்ட மாஸ்டர்ஸ் சுற்றில் வெற்றியாளரைத் தீர்மானிக்க போட்டியிட்டனர். 8 பந்தயங்களின் முடிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த குருநாத் 1556 மொத்த பின்ஃபாலுடனும், 194.50 சராசரியுடனும் முதலிடத்தில் வந்தார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் பாபு 1544 மொத்த பின்ஃபாலுடனும், 193.00 சராசரியுடனும் இரண்டாம் இடத்தில் வந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த சதீஷ் ஏ.வி. 1485 மொத்த பின்ஃபாலுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

கிரேடு பி பிரிவில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மோஹித் சவுகான், 8 பந்தயங்களில் 1471 மொத்த பின்ஃபாலுடனும், 183.88 சராசரியுடனும் மாஸ்டர்ஸ் சுற்றில் வென்றார். டெல்லியைச் சேர்ந்த குஷால் கே.எஸ். 1429 மொத்த பின்ஃபாலுடன் (சராசரி 178.63) இந்த பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் ஆர். 1407 மொத்த பின்ஃபாலுடன் (சராசரி 175.88) மூன்றாம் இடத்தில் வந்தார்.

 

10 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 95 போலிம் வீரர்கள் கலந்து கொண்ட இந்த சாம்பியன்ஷிப்,  பன்னிரண்டு நாட்கள் நடைப்பெற்றது.