Featured post

LUMIERE 2025 – Pandiaya's Special

 ‘LUMIERE 2025 –  Pandiaya's Special  குறும்படங்களை முழுநீள திரைப்படங்களாக மாற்றும் தளம்! பாண்டிய நாட்டை  சேர்ந்த குறும்பட தயாரிப்பாளர்க...

Sunday, 9 November 2025

LUMIERE 2025 – Pandiaya's Special

 ‘LUMIERE 2025 –  Pandiaya's Special 


குறும்படங்களை முழுநீள திரைப்படங்களாக மாற்றும் தளம்!



பாண்டிய நாட்டை  சேர்ந்த குறும்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு தனித்துவமான வாய்ப்பு!

VV Entertainments மற்றும் Dars Entertainments இணைந்து நடத்தும் “LUMIERE 2025 – Pandiya’s Special” குறும்பட போட்டி டிசம்பர் 18, 2025 அன்று  மதுரை Lady Doak College-ல் நடைபெற உள்ளது.


“உங்கள் குறும்படத்தை ஒரு முழுநீள திரைப்படமாக மாற்றும் கனவு உண்டா?”

அந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பை அளிக்கிறது இந்த போட்டி. திறமையான குறும்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்களுக்கு தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அரங்கமாக இது அமையும். பதிவு செய்யும் கடைசி தேதி: 08.12.2025

பங்கேற்பாளர்கள் QR குறியீட்டின் மூலம் அல்லது கீழே குறிப்பிடப்பட்ட எண்ணுகளுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.


📅 நிகழ்ச்சி நாள்: 18.12.2025

📍 இடம்: Lady Doak College, Madurai


🎥 “Let your journey begin with VV Entertainments & Dars Entertainments!”


📞 தொடர்புக்கு: ‪+91 93842 72666‬ / ‪+91 96774 81111‬

📧 Email: vventertainmentsmedia@gmail.com


📲 Instagram: @vv_entertainments_

Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli, Gangaa Entertainments Production No 2 Launched Grandly

 *Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli, Gangaa Entertainments Production No 2 Launched Grandly*




Young hero Thiru Veer, who is riding high on the stupendous success of his recent blockbuster Pre Wedding Show, has officially announced his next project. The film will feature Aishwarya Rajesh, fresh from the success of Sankranthiki Vasthunnam, as the female lead. The yet-to-be-titled movie marks the directorial debut of Bharat Dharshan and will be produced by Maheswara Reddy Mooli under the banner of Gangaa Entertainments, as Production No. 2.


After impressing audiences with its first production Shivam Bhaje, which garnered critical acclaim, Gangaa Entertainments is all set to back another compelling and entertaining story penned by director Bharat Dharshan himself. The film’s grand launch ceremony was held today in Hyderabad, in the presence of the cast and crew.


Known for his strong content-driven choices, Thiru Veer continues to explore diverse genres, from the critically acclaimed Masooda to the recent Pre Wedding Show. His new film is billed to be a hilarious entertainer that promises a refreshing experience.


The movie boasts a talented team of technicians. CH Kushendar, known for his work on Razakar and Polimera, will handle the cinematography, while Bharath Manchiraju, an associate of MM Keeravani, will compose the music. Thirumala M. Thirupathi of Balagam fame serves as the art director, and Sree Varaprasad of Ka fame is the editor. Anu Reddy Akkati, who is also working on Swayambhu, takes charge of costume design, while popular lyricist Purnachary will pen the lyrics.


The regular shoot of the movie commences from the 19th of this month. It will be released in Telugu, Tamil, Malayalam and Kannada languages.


Cast: Thiru Veer, Aishwarya Rajesh


Technical Crew:


Producer: Maheswara Reddy Mooli

Director: Bharat Dharshan

DoP: CH Kushendar

Music Director: Bharath Manchiraju

Art Director: Thirumala M Thirupathi

Editor: Sree Varaprasad

Costume Designer: Anu Reddy Akkati

Lyricist: Purnachary

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது

 *திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர்  2 “  பிரம்மாண்டமாகத் துவங்கியது !!*




இளம் நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )”  படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில்  அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.


இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார்.  கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில்  மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிப்பில், “புரொடக்ஷன் நம்பர்  2 “  வாக இப்படம் உருவாகிறது.


இந்நிறுவனத்தின்  முதல் தயாரிப்பான சிவம் பஜே ( Shivam Bhaje )  விமர்சகர்களிடம் பெரும்  பாராட்ட்டுக்களைப் பெற்றது. தற்போது  கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இயக்குநர் பரத் தர்ஷன் எழுதியுள்ள மற்றொரு சுவாரஸ்யமான, பொழுதுபோக்கு கதையை தயாரிக்கவுள்ளது.


இந்த திரைப்படத்தின் பிரம்மாண்டமான துவக்க விழா இன்று ஹைதராபாத்தில், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில்  கோலாகலமாக நடைபெற்றது.


நடிகர் திரு வீர் ,  மசூடா  ( Masooda )  மற்றும் ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )  போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து புகழ் பெற்றவர். இப்போது அவர் நடிக்கும் இந்த புதிய படம் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக, பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ரசாகர் மற்றும் பொலிமேரா போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு இப்படத்திற்கு இசையமைக்கிறார். பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.


இந்தப் படத்தின் புது படப்பிடிப்பு வரும் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.


நடிகர்கள்


திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ்


தொழில் நுட்பக் குழு


தயாரிப்பாளர் – மகேஸ்வரா ரெட்டி மூலி

இயக்குநர் – பரத் தர்ஷன்

ஒளிப்பதிவு  – C.H. குஷேந்தர் 

இசையமைப்பாளர் – பரத் மஞ்சிராஜு

கலை இயக்குநர் – திருமலா M. திருப்பதி

எடிட்டர் – ஸ்ரீ வரபிரசாத்

உடை  வடிவமைப்பாளர் -  – அனு ரெட்டி அக்கட்டி

பாடலாசிரியர் – பூர்ணசாரி

மக்கள் தொடர்பு - யுவராஜ்

நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

 *நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !*



மரபும் மாயையும் கலந்த அற்புதமான ஆன்மீக பயணத்துக்கு தயாராகுங்கள்! இளம் நடிகர் விராட் கர்ணா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான பான் இந்திய அனுபவத்தை, நாகபந்தம் மூலம் வழங்கவுள்ளார்.  தொலைநோக்கு இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி அவர்களின் பெருமித தயாரிப்பாக உருவாகி வருகிறது நாகபந்தம். 


இது சாதாரண படம் அல்ல — ஆன்மீகத்தையும் ஆக்ஷனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லர்! விராட் கர்ணா தனது கதாபாத்திரத்திற்காக, முற்றிலும் தன் உடலை மாற்றும் வகையில்,  பெரும் அர்ப்பணிப்புடன்  கடுமையாக உழைத்து வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் தீவிர உழைப்பும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.


இயக்குநர் அபிஷேக் நாமா தலைமையில் உருவாகும் இந்தப் படம், பக்தியும் அதிரடி அம்சங்களும் இணைந்த ஒரு அற்புதமான திரை அனுபவமாக இருக்கும். ஆழமான ஆன்மீக கருப்பொருளுடன் கூடிய வணிக ரீதியான கூறுகளையும் கொண்ட இந்தக் கதை, ஆன்மீக சினிமாவுக்கே புதிய வரையறையை தரவுள்ளது.


படத்தின் முக்கிய சிறப்பம்சமாக உருவாகும் “ஓம் வீர நாகா” எனும் பக்திப் பாடல் தற்போது பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

இப்பாடல் ராமானாயுடு ஸ்டூடியோவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட சிவன் கோவில் செட்டில் படமாக்கப்படுகிறது. ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் தலைமையிலான குழு, அந்தக் கோவிலின் தெய்வீகத் தோற்றத்தை, உயிரோட்டமூட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர்.


இப்பாடலுக்கான இசையை அபே மற்றும் ஜுனைத் குமார் ஆகியோர் அமைத்துள்ளனர், வரிகளை ஸ்ரீ ஹர்ஷா எழுதியுள்ளார்.

மேலும், பாலிவுட்டின் பிரபல நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யா இந்தப் பாடலுக்கான நடன வடிவமைப்பை மேற்கொள்கிறார்.


மேலும் இந்தப் பாடல் கார்த்திகை மாதத்தில் படமாக்கப்படுவது அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை இன்னும் உயர்த்துகிறது.


இந்தப் படம் இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோவில்களின் பின்னணியில் உருவாகி, நூற்றாண்டுகள் பழமையான நாகபந்தம் எனப்படும் மறைக்கப்பட்ட ஆன்மீக மரபை வெளிக்கொணர்கிறது.

பத்மநாபசுவாமி, புரி ஜகந்நாதர் போன்ற கோவில்களில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷக் கதைகளில் இருந்து ஊக்கம் பெற்று, புராணமும் மர்மமும் கலந்த ஒரு தெய்வீகத் திரில்லராக இது உருவாகி வருகிறது.


படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சௌந்தர்ராஜன் S மேற்கொள்ள, எடிட்டிங் பணிகளை R.C. பிரணவ் மேற்கொள்கிறார்.


நாகபந்தம் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

விரைவில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் துவங்கவுள்ளன.


*நடிப்பு:*

விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்


*தொழில்நுட்பக் குழு:*


கதை, திரைக்கதை, இயக்கம் – அபிஷேக் நாமா

தயாரிப்பாளர்கள் – கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி

ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் S

இசை – அபே, ஜுனைத் குமார்

ஆர்ட் டைரக்டர் – அசோக் குமார்

எடிட்டிங் – R.C. பிரணவ்

CEO – வாசு பொடினி


*

NAGABANDHAM's 'Om Veera Naga': A Monumental Tribute to Lord Shiva, Crafting an Unforgettable Spiritual Experience!*

 NAGABANDHAM's 'Om Veera Naga': A Monumental Tribute to Lord Shiva, Crafting an Unforgettable Spiritual Experience!*



Get ready to embark on a breathtaking journey with NAGABANDHAM, where myth meets magnificence! Young actor Virat Karrna is all set to leave an indelible mark in the world of cinema with this highly anticipated pan-India film. Directed by the visionary Abhishek Nama and produced with immense pride by Kishore Annapureddy and Nishitha Nagireddy, NAGABANDHAM is an epic mythological action entertainer that promises to elevate spiritual storytelling to new heights.


Virat’s dedication to his role is nothing short of inspiring. He has undergone an intense physical transformation, ensuring that he embodies the spirit of his character with authenticity and intensity. This commitment has already captured attention and is set to make audiences even more excited for what’s to come.


NAGABANDHAM isn't just a film—it's an ambitious cinematic venture that unfolds over a stunning visual canvas that engages the senses like never before. Under Abhishek Nama's expert direction, the film seamlessly weaves together elements of devotion and adrenaline-pumping action, promising an unforgettable adventure for viewers. Packed with essential commercial elements and enriched with profound themes, this film aims to captivate audiences while redefining the landscape of spiritual cinema.


Recognizing the film's strong narrative and pan-India appeal, the producers are granting complete creative freedom to the visionary director. Every resource necessary for the project is being poured in, ensuring that no detail is overlooked—no budget constraints will hold this project back! The film is gearing up for jaw-dropping sets and visuals that have never been seen before, transforming the cinematic experience for audiences everywhere.


One of the highlights of NAGABANDHAM is the devotional song, "Om Veera Naga," currently in production. Filmed in a gloriously crafted Shiva Temple set at Ramanaidu Studios, this song infuses divine grandeur into the visuals, enhancing the spiritual ambiance that's central to the film. The talented Ashok Kumar, along with his team, has brought this stunning temple to life, ensuring that every frame reflects the awe-inspiring essence of Lord Shiva.


The song’s score is sure to give you goosebumps, thanks to the musical prowess of the dynamic duo Abhe and Junaid Kumar, with lyrics that resonate deeply, penned by the gifted Sri Harsha. Adding another layer of excitement, the esteemed Ganesh Acharya, a renowned choreographer from Bollywood, is on board to choreograph this magnificent piece.


And if that weren’t enough, the timing of the shoot during the auspicious Karthika Masa adds a special significance, elevating the spiritual experience to new heights. 


Set against the backdrop of India’s ancient Vishnu temples, the film uncovers the mystique surrounding Nagabandham, a sacred and secretive tradition rooted in centuries-old rituals. Drawing inspiration from recent high-profile treasure discoveries at temples like Padmanabhaswamy and Puri Jagannath, the narrative weaves a gripping tale of myth, mystery, and divine protection. Through a contemporary lens, the story reimagines long-forgotten customs and spiritual legacies, blending mythology with suspense.


Visually rich and meticulously crafted, the film’s cinematography is helmed by Soundar Rajan S, with RC Pranav taking care of editing.


Nagabandham is set for a multi-language release across Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam.


The team will kick-start the promotional activities soon.


*Cast* : Virat Karrna, Nabha Natesh, Iswarya Menon, Jagapathi Bab, Jayaprakash, Murali Sharma, B.S. Avinash, and others


*Technical Crew:*

Story, Screenplay & Director: Abhishek Nama

Producers: Kishore Annapureddy, Nishitha Nagireddy

Director Of Photography: Soundar Rajan S

Music: Abhe, Junaid Kumar

Production Designer: Ashok Kumar

Editor: RC  Pranav

CEO: Vasu Potini

டிஸ்னியின் 'ஜூடோபியா 2' படத்தில் தைரியமான காவல்துறை அதிகாரி ஜூடி

 *டிஸ்னியின் 'ஜூடோபியா 2' படத்தில் தைரியமான காவல்துறை அதிகாரி ஜூடி ஹாப்ஸிக்கு இந்தியில் குரல் கொடுத்திருக்கிறார் நடிகை ஷ்ரதா கபூர்!*



டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நவம்பர் 28 அன்று வெளியாகும் 'ஜூடோபியா 2' படத்தின் இந்தி வெர்ஷன் அறிவிப்புக்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சிறப்பு சந்திப்பில், தைரியமான காவல்துறை அதிகாரியான ஜூடி ஹாப்ஸூக்கு இந்தியில் குரல் கொடுத்தது பற்றிய தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார் நடிகை ஷ்ரதா கபூர்.


இந்த சந்திப்பில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தான் ஆழமாக உள்வாங்கிக் கொண்டது பற்றி ஷ்ரதா பேசினார், "ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவள் தன் நிலையில் உறுதியாக இருந்ததை நிச்சயமாக என்னால் புரிந்துகொள்ள முடியும். அவள் அதிகாரம் மிக்கவள், தேவைப்படும் தருணத்தில் மென்மையாகவும் இருப்பாள். ஜூடியாக இருந்தது மகிழ்ச்சி!"


மேலும் ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் கிரியேட்டிவ் புராசெஸ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, "அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். வேடிக்கையாகவும் கூலாகவும் இருக்கும் கதாபாத்திரத்திற்கு நான் குரல் கொடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவளுக்குப் பொருந்தும்படி என் குரலை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அவள் கோபம், வேடிக்கை என எல்லாவற்றையும் கவனித்து அதற்கேற்ப குரல் கொடுத்தேன். நீங்கள் உண்மையிலேயே அந்தக் கதாபாத்திரத்தின் குரலாக இருக்க வேண்டும்" என்றார்.


இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக திரையிடல் இருந்தது. அங்கு ஷ்ரத்தா கபூர் ஜூடி ஹாப்ஸின் ஆளுமையை, ஆற்றலை, விடாமுயற்சியை தன் குரல் வழியே முழுமையாக வெளிப்படுத்தியதை பத்திரிகையாளர்கள் கண்டனர்.  


'ஜூடோபியோ 2' நவம்பர் 28 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

SHRADDHA KAPOOR IS THE HINDI VOICE OF THE FIERCE AND DYNAMIC COP JUDY HOPPS IN DISNEY’S ZOOTOPIA 2!

 *SHRADDHA KAPOOR IS THE HINDI VOICE OF THE FIERCE AND DYNAMIC COP JUDY HOPPS IN DISNEY’S ZOOTOPIA 2!*



At a special press conference held for the announcement of the Hindi version of Disney’s highly anticipated film, Zootopia 2, actress Shraddha Kapoor shared her excitement about embodying Judy Hopps in Hindi.


Shraddha Kapoor is the Hindi voice of the fierce and dynamic police officer Judy Hopps, with the film scheduled for release on November 28th.


During the conference, Shraddha spoke candidly about how deeply she identifies with the character of the bunny cop. She emphasized the parallels in their personalities,"Judy Hopps is a character who has a lot in common with me; she has her head firmly on her shoulders and I could definitely relate to her 'enthu cutlet' aspect. She is authoritative when she has to be, and soft when the moment calls for it. It was a lot of fun being Judy."


Shraddha further elaborated on the creative process of lending her voice to an animated character, noting how liberating the experience was: "Giving my voice for an animated character is a very different and freeing experience. As kids, we used to imitate a lot of people, and now to lend my voice to a bunny who is funny and cool was just incredibly enjoyable. I had to modulate my voice to match her—when she’s angry, when she’s being silly—and I was in such a good mood to explore all of that. It requires you to truly be the character's voice."


A major highlight of the event was the screening of a special unit, where the press witnessed Shraddha Kapoor fully embodying Judy Hopps' personality—her energy, perseverance, and warmth—proving that the choice to cast her goes beyond just finding a voice.


_Zootopia 2 will release in Indian theatres on November 28th in English, Hindi, Tamil, and Telugu._

நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர

 *நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர*









*வெள்ளகுதிர*

இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு


*வெள்ளகுதிர இசை வெளியிட்டு விழா*


*நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  இன்று சென்னையில் நடைபெற்றது


இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது.. 

சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது..


இவ்விழாவினில், திரு பாக் கியராஜ், ஆர்கே செல்வமணி திரு தனஞ்செயன்  திரு டி.சிவா, இயக்குனர் ஆர் வி உதயகுமார்,  இயக்குனர் பேரரசு, இயக்குனர் அஜயன் பாலா, திரு குகன், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் ஜெயபிரகாஷம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்..


நடிகர் விதார்த் பேசுகையில்,

வெள்ள குதிர யை தாண்டி இந்த படத்தின் கதாநாயகனான ஓரிக்கும் எனக்கும் உள்ள நட்பு முறையை பற்றி பேசலாம்னு இருக்கேன்.. பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் இருந்து எனக்கு ஓரி அறிமுகம் கூத்துப்பட்டறை நண்பர்களை தாண்டி வெளியில்  எனக்கு நண்பர்கள் கிடையாது அப்படி வெளியில் இருக்கும் ஒரே நண்பர் ஓரிதான்.. அவன் எனக்கு முக்கியமான நண்பன் அவன் வீட்டிற்கு போய் வெளியில் வந்த நேரத்தில் எனக்கு மைனா படம் கிடைத்தது. 

மைனா படம் போல் இந்த படமும் சிரமப்பட்டு எடுத்திருக்கு... இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..


நடிகை அபிராமி போஸ் பேசுகையில். வெள்ள குதிர எனக்கு முதல் தமிழ் படம் மலையாளம் மராட்டி ஹிந்தி என பல  மொழிகளில் நடித்திருந்தாலும், வெள்ள குதிர எனக்கு மிகவும் முக்கியமான படம். தனித்தன்மை வாய்ந்த வாழ்வியல் கதையாக இருந்ததாலும், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்ததாலும் ஒற்றுக் கொண்டேன். குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இசையமைப்பாளர் பரத் ஆசீவகன் பேசுகையில் மூன்று தலைமுறைக்கான இசை குடும்பம் எங்களுடையது.. வெள்ளகுதிர படத்தில் மண்வாசனைகேற்ப மண் மணம் மாறாமல், வரிகளுக்கு ஏற்ப இசையமைத்துள்ளேன் 


இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் பேசுகையில் 

எங்கள் ஊருக்கும் மேல் இருக்கும் மலைப்பகுதியில் ரோடு இல்லாமல் ஜனங்கள் படும் கஷ்டத்தை வைத்து ஒரு படம் பண்ணு என்று தயாரிப்பாளரும் நடிகருமான ஹரிஷ் ஓரி கேட்கையில், அங்கு ஒரு மாதம் தங்கி அவர்கள் படும்பாட்டை பார்த்து படத்தை நான் இயக்கி இருக்கிறேன். வெள்ளகுதிர படத்தை பொறுத்தவரையில் இந்த கதை தான் என்னை இயக்குனராக தேர்ந்தெடுத்தது. முன்னோர்கள் பற்றிய கதையாக இதை எடுத்து இருக்கிறேன் உங்கள் ஆசியோடு இந்த படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.


இயக்குனர் அஜயன் பாலா பேசுகையில் 

எந்த ஒரு நட்சத்திர முகமும் இல்லாத இப்படத்தை வெளியில் கொண்டு வர முனையும் ட்ரீம் வாரியர்ஸ் திரு குகன் அவர்களுக்கு நன்றி என்றும் தமிழ் பண்பாட்டை கொண்டு வந்திருக்கும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 


திரு குகன் அவர்கள் பேசுகையில்   வெள்ள குதிரை படத்தில் இருக்கும் புது தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவறையும் வரவேற்கிறேன். வெள்ள குதிர படத்தை பொருத்தவரையில் அது பெற்றிருக்கும் விருதுகள் அனைத்து தேசத்திலும்   ஒருமித்த கருத்தை காண்பிக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் தனக்கு என்ன வேண்டுமோ அதை தானாக எடுத்துக் கொள்கிறது என்பதை நான் நம்புகிறவன். அந்த மாதிரியான ஒரு நல்ல திரைப்படம் தான் வெள்ளகுதிர. வணிகத்தை தாண்டி ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமைப்படுகிறோம்


திரு பாக்யராஜ் அவர்கள் பேசுகையில்...  வெள்ள குதிர படத்தின் நாயகன் ஹரிஷ் ஒரியை பார்க்கையில் நடிப்பதற்காகவே ஊரை விட்டு வந்து 13 வருடமாக  கூத்துப்பட்டறை கலைஞனாக நடித்து அனுபவம் பெற்று, சிரமப்பட்டு.. இன்று இந்த வெள்ளகுதிர மூலம்  நாயகனாக  அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரைப் பற்றி அவருடைய நண்பர் நடிகர் விதார்த் அழகாக பேசி இருந்தார்.. நடைபாதை இல்லாத மலை உச்சியில் 13 கிலோமீட்டர்,  5 முறை மலை ஏரி படப்பிடிப்பு நடத்துவது என்பது லேசான காரியம் இல்லை அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து 48 நாட்கள் அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்

இயக்குனர் சரண்ராஜ்  செந்தில்குமார் பேச்சில் படத்தின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது. ஓரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...


தயாரிப்பாளர் தனஜெயன் பேசுகையில்.. நேற்று மட்டுமே ஒரு ஒன்பது திரைப்படங்கள் வெளியாகி இருக்கு... இப்படி சினிமாவை நாம் ஒரு கலையாக பார்க்காமல்  வியாபாரமாக பார்த்து ரிலீஸ் பண்ணும் போது நல்ல திரைப்படங்களும் காணாமல் போகிறது. எந்த ஒரு கிராஃப்ட்டும் இல்லாமலேயே படம் எடுக்கும் நிலையும் தற்போது வந்துள்ளது. குறைந்த அளவில் படங்கள் வருமேயானால் அதன் தரமும் நமக்கு தெரிய வரும். நல்ல திரைப்படங்களாக ஒரு நான்கு திரைப்படங்கள் வாரத்திற்கு வந்தது என்றால் அதை மக்களிடம் ஈசியாக கொண்டு சேர்க்க முடியும்.. அந்த வகையில் வெள்ளகுதிர திரைப்படம் நல்ல திரைப்படமாக அமைந்திருக்கு.

 

இயக்குனர் பேரரசு பேசுகையில். கதைக்கு சரியான நாயகனாக தெரிகிறார் நடிகர் ஹரிஷ் ஒரி. இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் ஒரு சிறந்த இயக்குனர்.. படம் வெளியாகித்தான்  அவர் சிறந்த இயக்குனர் என்று தெரிய வேண்டிய அவசியம் இல்லை ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளதால் அவர் ஒரு சிறந்த இயக்குனராக தெரிகிறார். இப்பொழுதெல்லாம் சில இயக்குனர்கள் தனது குருநாதர் யாரென்றே சொல்வதில்லை. அந்த வகையில் தனது குருநாதர் காக்காமுட்டை மணிகண்டன் என்பதை தெரிவித்து பேச ஆரம்பித்த சரண்ராஜ் செந்தில்குமாரை நான் பாராட்டுகிறேன்


இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேசுகையில்... இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் ஒரு மலையையும்,  ஆளையும் பார்த்து கதை எழுதி இருக்கிறாய் பாராட்டுதலுக்குரியது.. ஒரு சுகமான சுமையாக இப்படத்தை சுமந்து இருக்கிறாய் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 


இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசுகையில்... ஒரு திரைப்படம் வெற்றி படம் தோல்வி படம் என்பது வேறு ஆனால் திரைப்படம் திரைப்படமாகவே இப்பொழுது வருவதில்லை அது நினைத்தால் எனக்கு இப்பொழுது அவமானமாகவே இருக்கிறது.. எங்களது  உறுப்பினர்கள் இருந்தால்தான் குறைந்தபட்சமாக ஒரு நல்ல திரைப்படமாகவாது உருவாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது..


இறுதியாக தயாரிப்பாளர், நடிகருமான ஹரிஷ் ஓரி அர்த்தநாரி  பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.. 


இயக்கம் -  சரண்ராஜ்    செந்தில்குமார்

நடிகர் -  ஹரிஷ் ஓரி 

நடிகை - அபிராமி போஸ் 

இசை - பரத் ஆசீவகன்.

ஒளிப்பதிவு - ராம்தேவ்

Saturday, 8 November 2025

மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை

 “மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!



சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.


அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது. நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை “மாண்புமிகு பறை” திரைப்படத்திற்கே சொந்தமானது.


சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது ஒரு சாதாரண கதை அல்ல — பறை என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக்கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது.

“இது பறைக்கு இன்னொரு பிறப்பு; முடிவல்ல, ஆரம்பம்…” பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்துவருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து — குறிப்பாக பிரான்ஸிலிருந்து — தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது.


பறை என்பது இசை மட்டுமல்ல — அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் “மாண்புமிகு பறை.”


தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை: சுபா & சுரேஷ் ராம்

இயக்கம்: எஸ். விஜய் சுகுமார்

ஒளிப்பதிவு: ரா. கொளஞ்சி குமார்

படத்தொகுப்பு: சி. எஸ். பிரேம் குமார்

இசை: தேனிசை தென்றல் தேவா

நடன இயக்கம்: ஜானி

பாடல்கள்: சினேகன்

கலை: விஜய் ஐயப்பன்

தயாரிப்பு நிறுவனம்: சியா புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர்கள்: சுபா – சுரேஷ் ராம்

இணை தயாரிப்பு: ஜெ. எப். நக்கீரன் & கவிதா

நிர்வாக தயாரிப்பாளர்: த. முரளி

மக்கள் தொடர்பு: AIM சதீஷ், சிவா