Featured post

கிஷோர் - TTF வாசன் இணைந்து மிரட்டும் 'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

 *கிஷோர் - TTF வாசன் இணைந்து மிரட்டும் 'IPL (இந்தியன் பீனல் லா)'  படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*  *'IPL (இந்திய...

Tuesday, 11 November 2025

கிஷோர் - TTF வாசன் இணைந்து மிரட்டும் 'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

 *கிஷோர் - TTF வாசன் இணைந்து மிரட்டும் 'IPL (இந்தியன் பீனல் லா)'  படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* 


*'IPL (இந்தியன் பீனல் லா)'  திரைப்படம் நவம்பர் 28ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது*

























ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் - TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'IPL (இந்தியன் பீனல் லா)' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 


'IPL -இந்தியன் பீனல் லா' திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார். 


இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மதன் குமார் பேசுகையில், ''இந்த விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. 


இந்தப் படத்தின் ஹீரோ வாசன், அவரது ஒரு முகத்தை காண்பித்து நன்றாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி பேசுவதற்கு பல அத்தியாயங்கள் உள்ளது. அவருக்கு இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துகள்.  


இயக்குநர் கருணாநிதி என் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே 25 ஆண்டு கால நட்பு இருக்கிறது. ஒரு நாள் என்னை சந்தித்து யதார்த்தமாக இப்படத்தின் கதையை சொன்னார். இது உண்மை கதை.  எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்று இருக்கக்கூடும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு அதிலிருந்து பிறகு மெல்ல மெல்ல மீண்டு வந்திருப்பார்கள். நாட்டில் நடைபெறுகிற ஒரு விஷயம் தான் . அதனை இப்படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருக்கலாம்.  இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனமே வெளியிடுகிறது. 


இதற்கெல்லாம் தொடக்க புள்ளி என ஒன்று இருக்கிறது. அவர்தான் என்னுடைய இனிய நண்பர் மார்ட்டின் சுரேஷ். கொரோனா காலகட்டத்தின் போது அதிகார வர்க்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர். இவர் சொன்ன சம்பவங்களை தழுவி தான் இப்படத்தின் திரைக்கதையை  இயக்குநர் கருணாநிதி எழுதி, சிறப்பான படத்தை உருவாக்கி இருக்கிறார்,'' என்றார். 


பாடலாசிரியர் கு. கார்த்திக் பேசுகையில், ''இப்படத்திற்காக என்னைத் தொடர்பு கொண்டு, 'ஐபிஎல்' என்றொரு படம்,

இது போன்றதொரு சூழல், கவித்துவமான பாடல் வரிகள் வேண்டும் என இசையமைப்பாளரும், இயக்குநரும் கேட்டுக் கொண்டனர். இந்தப் படத்தில் 'யாவளோ..' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன். 


இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி என்னிடம் பேசும் போது ஒரு மெட்டின் அடிப்படை அமைப்பை அனுப்பி, இதற்கு பாடல் வரிகள் எழுத வேண்டும் என கேட்டார். நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் வாட்ஸப் மூலமாகவே உரையாடினோம். எனக்கு முதலில் முழு திருப்தி கிடைக்கவில்லை. அதன் பிறகு இசையமைப்பாளர், 'முயற்சி செய்து பார்ப்போம். நன்றாக வரும்' என்றார். அதன் பிறகு இசையை இணைத்து, கோர்த்து முழுமையான பாடலாக வழங்கும் போது, அதில் ஒரு ஃபீல் இருந்ததை உணர்ந்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அந்த பாடலுக்கு பொருத்தமான பாடகர், பாடகியையும் தேர்வு செய்திருந்தார். அந்தப் பாடலை சின்மயி பாடியிருந்தார்கள். சிவம் மகாதேவனும் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இது போன்ற வெற்றி பாடலை வழங்கிய இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்திக்கு வாழ்த்துகள். மிகுந்த உயரத்திற்கு செல்வார் என்று நம்புகிறேன்,'' என்றார். 


இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ''இப்படத்தின் இயக்குநர் கருணாநிதி என்னுடைய நண்பர். இயக்குநர் சங்கத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றுபவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்தின் பணியில் ஈடுபட்டிருந்தார். படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் என்னை சந்தித்து, 'இன்னென்ன பிரச்சனை' என்று ஒவ்வொரு பிரச்சனையையும் பட்டியலிடுவார். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பேன். இந்த மேடையில் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் ஒன்றாக சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இசை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், இயக்குநரும் நண்பர்களாக இருக்கிறார்களே, இதுவே இப்படத்தின் வெற்றி. ஏனெனில் பல இயக்குநர்கள் என்னிடம் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று புகார் தெரிவிப்பார்கள். 

ஆனால் தயாரிப்பாளர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். அத்துடன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த படத்தின் மீது இயக்குநர் வைத்திருக்கும் நம்பிக்கையை விட அதிகமாக தயாரிப்பாளர் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் பாடகர்களையும், பாடகிகளையும் வரவழைத்து பாடல்களை பாட வைத்தது தான் உண்மையிலேயே இந்த படத்தை சிறப்பாக விளம்பரப்படுத்தும் நிகழ்வு. இது அனைவரையும் சென்றடையும்.‌ படத்தின் பணியில் மட்டும் பங்கெடுக்காமல் படத்தினை விளம்பரப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கியதற்காக அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தின் பாடல்களை பாடல்கள் திரையிடும்போது நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும். மேடையில் எப்போது நீங்கள் பேசினாலும் உங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிட தவறாதீர்கள். அது தயாரிப்பாளருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும். அவருக்கு நீங்கள் மேடையில் நன்றி தெரிவிக்கும் போது ,அவருடைய வாழ்த்து உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 


கலைஞர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் ஏற்படாமல் சுமுகமாக இயங்க வேண்டும். ஏனெனில் கலைஞர்கள் மக்களின் சொத்து,'' என்றார். 


இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ''இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கும் நடிகை அபிராமியை மட்டும் என்னால் மறக்க இயலாது. நான் இணைந்து பணியாற்ற விரும்பிய நடிகை. அவருடைய சிரிப்பு சிறப்பானது. அழகானது. என்னுடைய இயக்கத்தில் 'உலகை விலை பேச வா' எனும் படத்தில் கார்த்திக் சாரும், அபிராமியும் நடிப்பதாக இருந்தது. அப்படத்தின் பணிகள் பிறகு நடைபெறவில்லை. 


எங்க ஊரிலிருந்து ஒரு பையன் தாறுமாறாக பைக் ஓட்டிக்கொண்டு கண்ட இடங்களில் ஓட்டி வழக்குகளை வாங்கியவன். ஒரே ரகளையாக திரிந்த பையன். இங்கு வந்து அமைதியாக நடித்து நாயகனாக மாறி இருக்கிறார். திடீரென்று அவர் ஹீரோவாகி இருப்பது எனக்கு சந்தோஷம் தான். உன்னால் இந்த திரையுலகம் மேம்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றாக வளர வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்படியே இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். 


இந்த திரைப்பட குழுவினரை பார்த்தவுடன் தான் சினிமா ஆரோக்கியமாய் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் படத்தை அவரே வெளியிடுகிறார். இதை நான் வரவேற்கிறேன். 


கே .பாக்யராஜ் - பாரதிராஜா வரிசையில்  பலர் வந்தாலும் இன்றும் அவர்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என்றால், அவர்களுடைய கிரியேஷன் தான் காரணம். அவர்களுடைய எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடுதான் காரணம்.  அந்த வகையில் 'ஐபிஎல்' கூட எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.  


கருணாநிதியை போன்ற திறமையான இயக்குநர்கள் ஏராளமானவர்கள் எங்களுடைய இயக்குநர் சங்கத்தில் உள்ளனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கையும் வைக்கிறேன். 


சினிமாவில் தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளி வரை ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இப்படத்தில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 


பாடலாசிரியர் மோகன் ராஜ் பேசுகையில், ''இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலை எழுதி இருக்கிறேன்.‌ இப்படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி எனக்கு மெட்டை அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு நான் அவருடைய இசை சார்ந்த பணிகளை பார்வையிட்ட போது அவர் கமர்ஷியலாக பணியாற்றுபவர், ஆனால் என்னுடைய பாடல் கதை சார்ந்து இருக்கிறது. நான் எப்படி அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்தேன். அதன் பிறகு இயக்குநருடன் உரையாடினேன். அப்போதுதான் இசையமைப்பாளருக்கு அவருடைய தேவை என்ன என்பதில் ஒரு தெளிவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். 


இந்தப் படத்தில் 'காத்தோடு போகுமா..' எனத் தொடங்கும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலின் சரணத்தில் 'வெட்டவெளி எங்கேயும் காத்து வழித்துணை ஆகுமே .. விழி அறியா தோழனாக தொட்டுத் தொட்டுப் பேசுமே...' என்ற பாடல் வரிகளும், 'நதி மீது வீசும் கல்லால் காயம் ஆகாதே.. அதை வாங்கி உள்ளே வைக்கும் தேங்கி நிற்காதே...' போன்ற வரிகளை என்னுடைய இளமைக் காலத்தில் என் சொந்த கிராமத்தில் இயற்கையுடன் இணைந்து பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இந்த வரிகள் இடம் பெற்றதற்கு இசையமைப்பாளரும், இயக்குநரும் தான் காரணம். அவர்கள் இருவரும் வரிகளை நேசிப்பவர்கள்.‌


நான் பாடலாசிரியர் ஆர்.வி. உதயகுமாரின் ரசிகன். 'பொன்னுமணி' படத்தில் 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா...' அந்த வரிகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த வரிகள் சாதாரணமாக தெரிந்தாலும், அதை எழுத வேண்டும் என்ற யோசனை என்னை வியப்பில் ஆழ்த்தியது,'' என்றார். 


நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ''நான் சினிமாவை கற்றுக் கொண்டிருக்கும்போது, இன்னும் கூடுதலாக கற்றுக் கொடுத்த படம் 'ஐபிஎல்'. இந்த படத்தின் இயக்குநரின் பெயர். எனக்கு மிகவும் பிடித்தமான பெயர். என் அப்பா என்னை ஊட்டி ஊட்டி வளர்த்த பெயர். அவர் பெயர் கருணாநிதி. பெயருக்கு ஏற்றார் போல் இந்த படத்தில் ஒரு அருமையான அரசியலை சொல்லி இருக்கிறார். 


இந்தப் படத்தின் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் சுரேஷ் என்னிடம் சொன்னார். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, இது சீக்கிரம் திரைப்படமாகும். அதற்கு ஏற்ற கதை என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகு இயக்குநர் கருணாநிதி இந்த கதையை என்னை சந்தித்து சொன்னார் அவருடன் சுரேஷையும் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது.


திடீரென்று நம் வாழ்க்கையில் சில தம்பிகள் குறுக்கிடுவார்கள். அது போல் குறுக்கிட்டவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார்.  நான் ஒரு சிக்கலில் இருந்தபோது கேட்காமலேயே கணிசமாக பணம் வழங்கி என்னை அந்தப் பிரச்சனையில் இருந்து மீட்டவர் மதன்குமார். இந்தக் காலத்தில் நேரில் சென்று காலில் விழுந்தாலும் பண உதவி என்பது கிடைப்பது கஷ்டம். அது போன்ற தருணத்தில் மதன்குமாரின் செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருடைய இந்த நல்ல உள்ளத்திற்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.


நடிகை குஷிதா பேசுகையில், ''எனக்கு தமிழ் மொழி தெரியாது. கற்றுக் கொண்டு வருகிறேன். நான் நடித்த 'ஐபிஎல்' தமிழ் திரைப்படம் நவம்பர் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வந்து பார்க்க வேண்டும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார். 


நடிகர் டி டி எஃப் வாசன் பேசுகையில், ''இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன். 


நான் நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலுக்காக நடனம் ஆடும் போது நடன இயக்குநருக்கு என்னுடைய கூச்ச சுபாவம் தெரியும். எனக்கு ஆட வேண்டும் என்ற விருப்பம் உண்டு . ஆனால் ஆடத்தெரியாது. இருந்தாலும் இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன். அதற்காக நடன இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.‌ 


படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார். 


இயக்குநருக்கு முதலில் கர்ணன் - அதன் பிறகு கருணாகரன்-  இறுதியாக அவருடைய அசல் பெயரான கருணாநிதியையே டைட்டிலில் இடம் பெற வைத்திருக்கிறார். 


படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இப்படத்தின் டீசர் வெளியான தருணங்களில் இருந்து நான் என் சைடு ப்ரோமோஷனை தொடங்கி விட்டேன். என்னுடைய முதல் படம். என்னை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதாவது நல்லது நடந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் புரமோட் செய்து கொண்டு வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 


இந்த படத்தின் இரண்டாம் பகுதியில் என்னை நானே திரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவிற்கு இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி மேஜிக் செய்திருந்தார்.  


உண்மை சம்பவத்தை தழுவி, அது சற்று கற்பனையை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். சமூகத்தில் எவ்வளவு அநியாயங்கள் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு சொல்லி இருக்கிறோம். செய்தித்தாள்களில் இது போன்ற சம்பவங்களை பார்வையிடுகிறோம், எளிதாக கடந்து சென்று விடுகிறோம். அந்த செய்திக்கு பின்னால் எந்த அளவு உண்மை இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துச் சொல்கிறது. 

நவம்பர் 28ம் தேதி உங்கள் வீட்டுப் பிள்ளை வாசனின் முதல் படம் 'ஐபிஎல்' வெளியாகிறது. அனைவரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 


நடிகை அபிராமி பேசுகையில், ''எங்களது 'ஐபிஎல்' படத்தை வாழ்த்த வந்த விருந்தினர்களுக்கு நன்றி. முதல் பட தயாரிப்பாளர், முதல் பட இயக்குநர், என்ற பாகுபாடு இல்லாமல் இங்கு வாழ்த்த வருகை தந்த அனைவருக்கும் நன்றி. கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் அனைவராலும் எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய நிறைய விஷயங்கள் இதில் உள்ளது. குடும்பத்தின் கதை உள்ளது, அழகான காதல் கதை உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது, சண்டை காட்சி இருக்கிறது. வாசன் பைக்கிலேயே சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இப்படத்தில் உள்ளது. இந்தப் படத்தை அனைவரும்  திரையரங்குகளில் வந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 


நடிகர் கிஷோர் பேசுகையில், ''சினிமா மக்களின் மீடியம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் இங்கு மேடையில் வீற்றிருக்கும் இயக்குநர் கே. பாக்யராஜ். மக்களுக்காக மக்களுடைய கதைகளை எடுத்து அதன் மூலமாக நிறைய கேள்விகளை உண்டாக்கி தீர்வினை கண்டவர். தற்போது காலம் மாறி இருக்கிறது. சினிமா கிட்டத்தட்ட சிஸ்டத்தின் அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இதுபோன்ற மக்களின் குரலாக ஒலிக்கும், கேள்வி கேட்கும் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையிலான ஒரு படமாக 'ஐபிஎல்' இருக்கிறது. அதில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், உடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படக்குழுவின் துணிச்சலுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன்,'' என்றார் . 


இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''கோயம்புத்தூரில் பீளமேடு பக்கத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் நாங்கள் இருந்தோம் .அங்கிருந்து சித்தா புதூர் எனும் புது ஏரியாவிற்கு குடிபெயர்ந்தோம். அந்த ஊருக்கு செல்லும் வழியில் கேரம் கிளப் என்ற ஒரு விளையாட்டு கூடம் இருந்தது. எனக்கு கேரம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த கிளப்பில் கேரம் விளையாடினேன். புது நபர் என்பதால் என்னுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எதிர்த்து விளையாடினார்கள். நான் நன்றாக விளையாடுவேன். அதனால் தினமும் வெற்றி பெற்றுக் கொண்டே வந்தேன். அங்குள்ளவர்கள் 'ச்சே! இந்த நேரத்தில் நம்மாள் இல்லையே..!' என வருத்தப்பட்டனர். இது தினமும் தொடர்ந்தது. எனக்கும் அந்த நபர் யார், என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அவருடன் விளையாட வேண்டும் என்ற ஆசையும் அதிகரித்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து எங்கள் இருவரையும் கேரம் விளையாட வைத்தனர். அவர் அறிமுகமான பிறகு அவரும் நானும் ஆடத்தொடங்கினோம். அவருடைய ஸ்டைல் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக நான் சற்று பொறுமையாக விளையாடினேன். அவர் தொடர்ந்து நன்றாக விளையாட அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். அவருடைய பலவீனத்தை தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் என் திறமையை வெளிப்படுத்தினேன்.‌ அப்போது அவர் லேசாக வியப்படைந்து என்னை பார்த்தார். கூட்டத்தில் உள்ளவர்கள் அவர் தோல்வியை சந்தித்து விடுவாரோ என்ற பதற்றம் அடைந்தனர், சற்று உணர்ச்சிவசப்பட்டனர். அந்த நேரத்தில் நான் சற்று யோசிக்கத் தொடங்கினேன். அத்துடன் என் ஆட்டத்தின் வேகத்தையும் குறைத்துக் கொண்டேன். கூட்டத்தில் உள்ளவர்கள் அவரை ஹீரோவாக பார்க்கிறார்கள். அதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். பிறகு மெதுவாக விளையாடத் தொடங்க ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். ஆட்டம் நிறைவடைந்த பிறகு அவரை பாராட்டினேன். அதற்கு நான் உங்களை வெற்றி பெறவில்லை. நீங்கள் தான் எனக்கு விட்டுக் கொடுத்தீர்கள். அதற்கு ரொம்ப நன்றி என்று சொன்னார்.‌  அன்றிலிருந்து எனக்கு அவர் தோழனாகி, சிறந்த நண்பன் ஆகி விட்டார். அதன் பிறகு நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். அவர் தொடர்ந்து குறைந்த சம்பளத்தில் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தேன். அவர்தான் எனது நண்பரான பழனிச்சாமி. 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில் இந்தி வாத்தியராக நடித்த பழனிச்சாமி. 'தீனா', 'ரெட்டை ஜடை வயசு', 'ஆயுத பூஜை' என  மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இதை நான் இங்கு ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நட்பு என்பது எப்போதும் உயர்வானது. அதை சம்பாதித்தால் வேறு எதையும் நீங்கள் சம்பாதிக்க வேண்டியதில்லை. இங்கு நான் அவரை அழைத்து வந்து தயாரிப்பாளராக்கினேன். ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் நண்பனை அழைத்து வந்து இயக்குநராக்கி இருக்கிறார். இவர்களுடைய நட்பு என்னை  நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக தயாரிப்பாளருக்கு நான் பிரத்யேகமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இயக்குநர் கருணாநிதி வெற்றிமாறனின் உதவியாளர் என சொன்னார்கள். அவருடைய நம்பிக்கை வெற்றி பெறும்.‌ அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.‌


நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார்கள். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன்.‌ இந்த இடைவெளியில் எங்கள் இயக்குநர் பாரதிராஜா, 'மண்வாசனை' படத்தில் ரேவதியை அறிமுகப்படுத்திவிட்டார்.‌ அடுத்த படத்தில் நடிகை ரஞ்சனியை அறிமுகப்படுத்துவதற்காக போட்டோ ஷுட் நடத்தி காத்திருக்க சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர் பாரதிராஜா 'முதல் மரியாதை' படத்தில் அவரை அறிமுகப்படுத்திவிட்டார். 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் நடித்த நடிகை அம்பிகாவை அவருடைய தங்கை ராதா தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவரிடம் அடுத்த படம் 'தூறல் நின்னு போச்சு' கிராமத்து சப்ஜெக்ட் அதில் அறிமுகப்படுத்துகிறேன் என்று சொன்னேன். இதற்குள் எங்கள் இயக்குநர் அம்பிகாவையும் நடிக்க வைத்தார். இப்படி நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு தவறி தவறிக் கொண்டே இருந்தது. ஆனால் அனைவரும் சிறப்பான உயரத்திற்கு சென்றார்கள். ஏனெனில் எங்களுடைய இயக்குநரின் ஆசி அப்படி.‌ 


அதனால் அபிராமி கதாநாயகியாக நடித்ததை விட, கதையின் நாயகியாக நடிக்கும் போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இப்போதுதான் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 


ஹீரோ வாசன் யூடியூப் பிரபலம் என்பதால் அவர்முதல் படத்திலேயே நன்றாக நடனம் ஆடி இருக்கிறார் அவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் வெற்றி பெறும். 


இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். இது போன்ற கதைகளை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். அதனால் வெற்றியும் கிடைக்கும். இதனால் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்து இருக்கிறது. அதனால் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் அனைவரையும் சந்திக்கிறேன்,'' என்றார். 


இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி பேசுகையில், ''இந்தப் படம் இசையமைப்பாளரிடம் வந்த போது அந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களாகவே நடித்திருந்தார்கள். திரையில் அப்படித்தான் தோன்றினார்கள். அதற்குத்தான் நாங்கள் இசை அமைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக இப்படத்தின் நாயகன் வாசன் தோன்றும் 15 நிமிட சேசிங் காட்சி இருக்கிறது. அது நிச்சயமாக அற்புதமான திரையரங்க அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும். இதற்காக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும்.‌ 


இந்தப் படத்தில் வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 


இயக்குநர் கருணாநிதி பேசுகையில், ''ஐபிஎல்- இந்தியன் பீனல் லா-  இந்திய தண்டனை சட்டம். சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள்... இதன் மூலம் சாதாரண மனிதார்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். 


பத்திரிகைகளில் கொலைகள், விபத்து என நிறைய செய்திகள் வெளியாகும். இவை உண்மையான கொலைகளா, உண்மையான விபத்து தானா என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு பின்னணி குறித்து விசாரித்து பார்த்தால்தான் உண்மை தெரியவரும். அதன் பின்னால் சதிகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அதை எளிதாக கடந்து சென்று விடுவோம்.‌


இது போன்றதொரு செய்தியைத் தான் 'ஐபிஎல்' படத்தில் நாங்கள் விரிவாக பேசியிருக்கிறோம். அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


***

சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக

 சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக திரு. செந்தில் தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன் மற்றும் திரு. சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்க அனைவரும் எதிர்பார்க்கும் புதிய படைப்பாக “லெனின் பாண்டியன்” (Lenin Pandiyan) தற்போது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். 





சமீபத்தில் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள், இப்படத்தின் நாயகனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் தர்ஷன் கணேசன் அவர்களின் வரவிருக்கும் “லெனின் பாண்டியன்” திரைப்படத்துக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை வழங்கினார். இந்நிகழ்வில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் திரு. டி. ஜி. தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன், மேலும் திரு. ராம் குமார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


“லெனின் பாண்டியன்” திரைப்படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் திரைப்பட உலகின் பன்முக திறமையாளராக திகழும் கங்கை அமரன் நடித்துள்ளார். மேலும், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வருகிறார். இவர்களுடன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


திரைப்படத்தின் இசையை திறமையான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருவாக்குகிறார். ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்துக்கு ஆத்தூரி ஜேகுமார், ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கலைமாமணி தளபதி தினேஷ், மற்றும் நடன வடிவமைப்புக்கு விஜயா மாஸ்டர் பொறுப்பேற்றுள்ளனர். படத்தின் பி.ஆர். நடவடிக்கைகளை சதீஷ் (AIM) மேற்கொள்கிறார்.

Director Jalmari Helander praises Jorma Tommila's machine-like intensity in Sisu: Road to Revenge

 *Director Jalmari Helander praises Jorma Tommila's machine-like intensity in Sisu: Road to Revenge*






Nearly a decade after redefining modern action survival language with Sisu, filmmaker Jalmari Helander and Jorma Tommila return with the sequel, Sisu: Road to Revenge. The time with larger scale, larger emotional stakes, and a new thematic frontier - what happens after a man who refuses to die has already survived the unimaginable.


As the franchise moves into the next phase, director Jalmari Helander shares that Tommila brings relentless, almost machine-like intensity and energy to the screen. He says, “It’s always a pleasure to work with Jorma because he is uniquely capable of creating emotions, including rage and grief, with almost no dialogue. We experience what Aatami is feeling and thinking just by his face and gestures.”


Tommila describes Jalmari's character Aatami Korpi as “a family man, until the war began. Then, everything changed. He’s lost everything and thus had nothing else to lose. But somehow, when we see him in this film, Aatami has found a new purpose in life, and has in some ways overcome the horrors of war. Now, he thinks there may still be some kind of future for him.” 


SISU: ROAD TO REVENGE, a sequel to the original sleeper hit Sisu, is a wall-to-wall cinematic action event. Returning to the house where his family was brutally murdered during the war, Aatami — “the man who refuses to die” (Jorma Tommila) — dismantles it, loads it on a truck, and is determined to rebuild it somewhere safe, in their honor. When the Red Army commander (Stephen Lang), who killed his family, returns hellbent on finishing the job — a relentless, eye-popping cross-country chase erupts. A fight to the death full of clever and unbelievable action set pieces.


_Sony Pictures Entertainment India releases Sisu: Road to Revenge in India on 21st November._

சிசு: ரோட் டு ரிவெஞ்ச்* படத்தில் ஜோர்மா டோமிலாவின் இயந்திரத் தீவிரத்தை இயக்குனர் ஜல்மாரி ஹெலாண்டர் பாராட்டுகிறார்

 *சிசு: ரோட் டு ரிவெஞ்ச்* படத்தில் ஜோர்மா டோமிலாவின் இயந்திரத் தீவிரத்தை இயக்குனர் ஜல்மாரி ஹெலாண்டர் பாராட்டுகிறார்






சிசுவுடன் நவீன அதிரடி உயிர்வாழும் மொழியை மறுவரையறை செய்த கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர் ஜல்மாரி ஹெலாண்டர் மற்றும் ஜோர்மா டோமிலா ஆகியோர் தொடர்ச்சியான சிசு: ரோட் டு ரிவெஞ்ச் உடன் திரும்பினர். பெரிய அளவிலான, பெரிய உணர்ச்சிப் பங்குகள் மற்றும் ஒரு புதிய கருப்பொருள் எல்லையுடன் கூடிய காலம் - இறக்க மறுக்கும் ஒரு மனிதனுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது ஏற்கனவே கற்பனை செய்ய முடியாததைத் தாண்டிவிட்டது.


இந்த உரிமை அடுத்த கட்டத்திற்கு நகரும்போது, ​​இயக்குனர் ஜல்மாரி ஹெலாண்டர் டோமிலா இடைவிடாத, கிட்டத்தட்ட இயந்திரம் போன்ற தீவிரத்தையும் ஆற்றலையும் திரைக்குக் கொண்டுவருவதாகப் பகிர்ந்து கொள்கிறார். அவர் கூறுகிறார், "ஜோர்மாவுடன் பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஏனென்றால் அவர் கிட்டத்தட்ட எந்த உரையாடலும் இல்லாமல் கோபம் மற்றும் துக்கம் உள்ளிட்ட உணர்ச்சிகளை உருவாக்கும் தனித்துவமான திறன் கொண்டவர். ஆட்டமி உணருவதையும் நினைப்பதையும் அவரது முகம் மற்றும் சைகைகளால் மட்டுமே அனுபவிக்கிறோம்."


ஜல்மரியின் கதாபாத்திரமான ஆத்தாமி கோர்பியை டாமிலா "போர் தொடங்கும் வரை ஒரு குடும்ப மனிதன். பின்னர், எல்லாம் மாறியது. அவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார், இதனால் இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை. ஆனால் எப்படியோ, இந்த படத்தில் அவரைப் பார்க்கும்போது, ​​ஆத்தாமி வாழ்க்கையில் ஒரு புதிய நோக்கத்தைக் கண்டுபிடித்துள்ளார், மேலும் சில வழிகளில் போரின் கொடூரங்களை வென்றுள்ளார். இப்போது, ​​அவருக்கு இன்னும் ஒருவித எதிர்காலம் இருக்கலாம் என்று அவர் நினைக்கிறார்."


சிசு: பழிவாங்கும் பாதை, அசல் ஸ்லீப்பர் ஹிட் சிசுவின் தொடர்ச்சி, ஒரு சுவருக்கு சுவர் சினிமா அதிரடி நிகழ்வு. போரின் போது தனது குடும்பத்தினர் கொடூரமாக கொல்லப்பட்ட வீட்டிற்குத் திரும்பும் ஆத்தாமி - "இறக்க மறுக்கும் மனிதன்" (ஜோர்மா டாமிலா) - அதை இடித்து, ஒரு டிரக்கில் ஏற்றி, அவர்களின் நினைவாக, பாதுகாப்பான இடத்தில் அதை மீண்டும் கட்டியெழுப்ப உறுதியாக இருக்கிறார். தனது குடும்பத்தைக் கொன்ற செம்படைத் தளபதி (ஸ்டீபன் லாங்), வேலையை முடிக்க உறுதியுடன் திரும்பும்போது - இடைவிடாத, கண்களைக் கவரும் நாடுகடந்த துரத்தல் வெடிக்கிறது. புத்திசாலித்தனமான மற்றும் நம்பமுடியாத அதிரடித் தொகுப்புகள் நிறைந்த மரணப் போராட்டம்.


_சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நவம்பர் 21 ஆம் தேதி இந்தியாவில் சிசு: ரோட் டு ரிவெஞ்ச் படத்தை வெளியிடுகிறது._

Monday, 10 November 2025

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து

 *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!!*






*'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக  நடிக்கும், புதிய படத்தின்  டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது  !!*


Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.


டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் இயக்கி வருகிறார்.


சில மாதங்களுக்கு முன்னர் தான் இப்படம்  அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு படு வேகமாக படப்பிடிப்பை முடித்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் துவக்கியுள்ளது. இது திரையுலகினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.  


டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில், விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு  திட்டமிட்டு வருகிறது.

மாஸ்க் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !!*



The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க். 



2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 



இவ்விழாவினில்.., 


நடிகை ருஹானி சர்மா பேசியதாவது.., 


எல்லோருக்கும் வணக்கம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி சாரின் தீவிர ரசிகை நான், அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. எங்களுக்கு ஆதரவளிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி.  இயக்குநர் விகர்னனுக்கு எனக்கு நல்ல கதாப்பாத்திரம் தந்ததற்கு நன்றி. என் கோ ஸ்டார் கவின் அவர் எனக்கு நிறைய ஆதரவாக இருந்தார். கவினுடன் நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிகை,  இப்படத்தைத் தயாரித்துள்ளார்.  அவர் இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வாழ்த்துக்கள்.  ஜீவி பிரகாஷ் எனக்கு டான்ஸ் ஆட மிகச்சிறந்த பாடல்கள் தந்ததற்கு நன்றி. என்னை மிக அழகாகக் காட்டிய  ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. நவம்பர் 21 அனைவரையும் திரையரங்கில் சந்திக்கிறோம் நன்றி. 



நடிகர் பவன் பேசியதாவது…, 


இந்தப்படத்தில் நான் கஷ்டப்படவே இல்லை, கஷ்டப்பட்டதெல்லாம் தயாரிப்பாளர், இயக்குநர் தான். எனக்கு அரசியல்வாதி கேரக்டர் ஏசியில் தான் முழுக்க நடித்தேன். கிளைமாக்ஸ் மட்டும் என்னால் மறக்க முடியாது. ரெடின் கிங்ஸ்லியின் ஒரு காட்சி பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. கவின் சூப்பராக நடித்துள்ளார். வெற்றி சார் கடையைச் சாத்துகிறேன் என்றார், ஆனால் இந்த படத்திற்குப் பிறகு நிறையக் கடைகள் திறப்பார். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறிவிட்டார் வாழ்த்துக்கள்.  படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும்  நன்றி. 



இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது.., 


இயக்குநர் வெற்றிமாறனை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு விகர்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். எனக்கு விகர்ணன் என்ற பெயர் கேட்டவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மகாபாரத கௌரவர்களின் பெயர்,  அதை வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள். எம் ஆர் ராதா மிகப்பெரிய ஆளுமை, அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டு வந்ததற்கு நன்றி. ஆண்ட்ரியா மேடம்  ஒரு படத்தை இயக்கி விட்டால், நடிகை பானுமதி சாதனையைச் சமம் செய்துவிடுவார். பாடுகிறார், நடிக்கிறார் இப்போது தயாரித்துள்ளார் அவர் வெல்ல வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் மிக நல்ல மனிதர், மிகப்பெரிய தயாரிப்பாளராக வாழ்த்துக்கள். ஒரு கவிதைக்கு ஆண் பால் இருந்தால் அது தான் கவின். டாடாவுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாஸ்க் அமைய வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எங்களுடனே இருப்பவர். குழந்தை தொழிலாளராக சினிமாவுக்குள் வந்தவர். சின்ன வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு பாடல் பாடியவர்,  இப்போது அவர்  இரண்டு தேசிய விருதுகள் வாங்கிவிட்டார்.  ஆர் டி ராஜசேகர்  என் குருநாதர் அவர் மாதிரி கேமரா யாராலும் பண்ண முடியாது. கேமரா மாஸ்டர்களில் ஒருத்தர் அவர். மனதால் மிக உற்சாகமான மனிதர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  மாஸ்க் மிகப்பெரிய வெற்றி பெறட்டும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசியதாவது.., 


இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்து, நாம் செய்யும் உழைப்பிற்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். டிரெய்லர் வந்த பிறகு எல்லோரும் பாராட்டினார்கள். படத்தின் வெற்றி இயக்குநரின் கையில் உள்ளது. கவின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா இதுவரை செய்யாத ரோல் செய்துள்ளார்.  ருஹானி சர்மா மிக அழகாக இருக்கிறார். வெற்றி சார் ஷுட்டிங்க் ஸ்பாட்டுக்கு அதிகம் வரமாட்டார். ஆனால் அவர் வழிகாட்டுதல் இருந்தது. ஜீவி சார் ரசிகன் நான், அவர் இசை அருமையாக வந்துள்ளது. சொக்கு சாருடன் நிறையப் பழகியுள்ளேன் அவர் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் நன்றி



கலை இயக்குநர்  விஜய் ஐயப்பன் பேசியதாவது..,

எனக்கு வாய்ப்பு தந்த சொக்கலிங்கம் சாருக்கு நன்றி. எனக்கு மிக உறுதுணையாக இருந்த இயக்குநருக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி . 



எடிட்டர் R ராமர் பேசியதாவது..,


மிக்க மகிழ்ச்சி. வெற்றி சார் என்னை நிறைய ஏமாற்றிவிட்டார் அவர் டிரையாக செய்து செய்து, கலராக எதாவது தாருங்கள் என்று ஏங்கிய நேரத்தில் மாஸ்க் தந்து ஆச்சரியம் தந்தார். ஜீவி சார் இசையைக் கேட்டு நிறைய முறை மிரண்டிருக்கிறேன். அசுரன் பிஜிஎம் இப்போது பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும். மாஸ்க் படத்தையும் தாங்கியுள்ளார். அவர் இசை ஆட வைக்கிறது. சொக்கலிங்கம் ஐயாவிற்கு நன்றி. கவின் சார் உங்களுக்காக இந்தப்படம் பேசும்.  ஒரு ஹீரோவை ஃப்ரேமில் பார்க்கும்போது யாரவது ரிசம்பிள் எடுத்து செய்வார்கள் ஆனால் கவின் இப்படியும் செய்ய முடியுமா என ஆச்சரியப்படுத்திவிட்டார். ஆண்ட்ரியா மேடம் ஒரு அவதாரம் எடுத்துள்ளார் இது அவருக்குத் திருப்புமுனையாக இருக்கும்.  தயாரிப்பாளராக ஜெயிக்க வாழ்த்துக்கள். ருஹானி சர்மா பார்க்கும் போது டாப்ஸி ஞாபகம் வந்தது, திரையில் அந்த ஃபீல் தந்துள்ளார். அவர் மிகப்பெரிய இடத்திற்கு வர வாழ்த்துக்கள். பவன் சார் நடிப்பைப் படம் பார்க்கும் போது என்ஜாய் செய்வீர்கள். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள். சொக்கு சார் அடுத்தடுத்து படம் செய்ய வாழ்த்துக்கள். விகர்னன் கதை சொன்ன போதே ஆச்சரியமாக இருந்தது. படமாக இன்னும் சிறப்பாக வந்துள்ளது. அவ்வளவு உழைப்பை அனைவரும் தந்துள்ளார்கள். இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வெற்றிமாறன் சாருக்கு நன்றி.  நவம்பர் 21 ஆம் தேதி  திரையரங்கில் வெளியாகிறது. மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் நன்றி. 




நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது.., 


இப்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சொக்கலிங்கம், இயக்குநர் விகர்ணன், ஆண்ட்ரியா மேடம் மற்றும் கவின் அனைவருக்கும் நன்றி. விகர்னன் ஒவ்வொரு சீனையும் செதுக்கி செதுக்கி எடுத்துள்ளார். ஆர் டி ராஜசேகர் சாருடன் மூன்றாவது படம் செய்துள்ளேன் நன்றி சார்.  பவனும் நானும் டான்ஸர்ஸ், பல வருட பழக்கம். அவரை வில்லனாகவே மாற்றிவிட்டார்கள் அவர் ஒரு நல்ல டான்ஸர்.இந்தப்படத்தில் பார்ப்பீர்கள். ஜீவி  ஏற்கனவே இரண்டு தேசியவிருது வாங்கிவிட்டார், இனிமேல் சாதிக்க ஏதுமில்லை. விஜய் சேதுபதியுடன் ஒரு படம் நடித்துள்ளேன் மிகவும் இயல்பானவர். ஆண்ட்ரியா மேடம் அவருக்கு இந்தப்படம் மூலம் பணம் கொட்டட்டும். வெற்றிமாறன் சார் தமிழ் சினிமாவின் பெருமை. அவர் மேற்பார்வையில் நானும் நடிப்பது பெருமை. கவின் கூட இருப்பவர்களை  அணைத்துக் கொள்வார், அவருக்கு இந்தப்படம் நல்ல படமாக அமையும் வாழ்த்துக்கள்.


இயக்குநர் நெல்சன் பேசியதாவது.., 


நான் அதிகம் விழாக்களுக்குச் செல்வதில்லை, இந்த விழாவிற்கு வரவேண்டுமென 6 மாதம் முன்பே வெற்றிமாறன் சார் சொல்லி விட்டார். இந்த கதை கேட்ட போது, இதற்கும் வெற்றிமாறனுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைத்தேன். படுபயங்கர குதர்க்கமான கதையாக இருந்தது. இயக்குநரைப் பார்த்தே ஆக வேண்டும் என நினைத்தேன், விகர்ணன் எல்லா க்ரைமுக்கும் செட்டாவது போல் தான் இருந்தார். அவர் சொன்னதையெல்லாம் எடுக்கவே முடியாது. இந்தக்கதை ஐடியா எல்லாம் மிகவும் புதுசாக இருந்தது.விகர்ணன் கதை,  கவின் ஹேட்டர் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஆனால் வெற்றிமாறன் சார் அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஜீவி சார் மியூசிக் சூப்பாராக வந்துள்ளது. கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே, கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான். ஆண்ட்ரியா மேடமுக்கு சவாலான கேரக்டர் வாழ்த்துக்கள். ரெடினை  கண்ட்ரோலாக நடிக்க வைத்திருந்தார்கள் வாழ்த்துக்கள்.  ஒரு குழுவாக அனைவரும்  மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்.


ஜீவி பிரகாஷ் குமார் பேசியதாவது..


மாஸ்க் டீமில்  எல்லோருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள்,  நான் கடைசியாக தான் வந்தேன். ஆண்ட்ரியா மேடமுக்கு வாழ்த்துக்கள். அந்நியன் படத்தில் அவர் முதன் முதலில் பாடும் போது நான் அவர் அருகிலிருந்தேன், அப்போதிலிருந்து அவரைத் தெரியும். அவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார், அவருக்கும் சொக்கலிங்கம் சாருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி சார்  பவன் சொன்ன மாதிரி திரும்ப  கடையை திறக்க வாழ்த்துக்கள்.விகர்ணன் வெற்றிமாறன் சார் சாயலே இல்லாமல் கதை சொன்னார், ஆச்சரியமாக இருந்தது. இந்தப்படம் பரபரவென இருக்கும். ஆர் டி ராஜசேகர் நாங்கள் சினிமாவுக்கு வரும்போதே பெரிய கேமராமேன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கவின் சூப்பராக நடித்துள்ளார். ருஹானி பெரிய ஹீரோயினாக வாழ்த்துக்கள். மாஸ்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.


நடிகை, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா ஜெரேமியா பேசியதாவது..,


நான் ஒரு விழாவில் பங்கு கொண்டு நீண்ட வருடம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு படம் விரைவில் வருகிறது மகிழ்ச்சி. கவினுக்கு இது மிகவும் முக்கியமான படம். ருஹானிக்கு முதல் படம். சொக்கு சாருக்கு தயாரிப்பாளராக முக்கியமான படம். எங்கள் அனைவருக்கும் மெண்டார் வெற்றிமாறன் சார், அவர் தான் எங்களின் பப்பெட் மாஸ்டர். ஆர் டி ராஜசேகர் அவர் கேமரா செய்தால் எல்லோரும் அழகாக இருப்பார்கள். என்னோடு உழைத்த அனைத்து நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள். படம் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


இயக்குநர் விகர்ணன் பேசியதாவது..,

என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் படத்தில் உதவிய வெற்றிமாறன் சார் உதவியாளர்களுக்கும் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணமான ஆண்ட் ரியா மேடமுக்கு நன்றி. அவர் தான் வெற்றிமாறன் சாரிடம் என் கதையைப் படிக்கத் தந்தார். சொக்கலிங்கம் அண்ணா நிறையப்பேரை வளர்த்துவிட்டுள்ளார், என்னையும் வளர்த்துவிட்டதற்கு நன்றி. ஆர் டி ராஜசேகர் அவர் ஒரு ட்ரீட். ஷீட்டிங்கில் அவர் இருந்தாலே ஜாலியாக இருக்கும். நெல்சன் அண்ணாவே ஒரு ஜானர் தான் அவர் இந்தப்படத்தில் இருக்கிறார் ஆனால் யாருக்கும் தெரியமாட்டார். அவருக்கு நான் நிறையக் கடமைப்பட்டுள்ளேன். விஜய் சேதுபதி அண்ணா.. அசோக் செல்வன் என் நண்பன், உங்களைப் பற்றி நிறையப் பேசுவான். நீங்கள் நல்ல இதயம் கொண்ட மனிதர். வாழ்த்த வந்ததற்கு நன்றி. ருஹானி சர்மா திறமையானவர் சிறப்பாக நடித்துள்ளார். நண்பர் ஜீவி, நீங்கள் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்தீர்கள். நீங்கள் தந்த இசைக்கு நன்றி.  ரெடின் ஒரு அழகான ரோல் செய்துள்ளார். ராமரை எடிட்டிங்கிற்கு கூட்டி வந்ததற்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ஸ்டைலீஷாக எடிட் செய்துள்ளார். ஐயப்பன் அண்ணாவுடன் நிறையப்படம் சேர்ந்து செய்வேன் என் கூடவே இருந்தார் அவருக்கு நன்றி. கவின் ப்ரோ படத்தில் அவர் பெயர் வேலு. இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய் என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல். அவருக்குள் ஒரு கெட்டவனும் இருப்பான், நல்லவனும் ஓரத்தில் இருப்பான். அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி.  அவர் மாதிரி ஒரு லெஜண்ட் நம் திரைத்துறையில் இருப்பது நமக்குப் பெருமை. வெற்றிமாறன் சார் அட்வைஸ் கேட்டால் நீங்கள் வாழ்க்கையில் வளர்வீர்கள். அவர் தந்த வழிகாட்டுதலுக்கு நன்றி. நான் உங்களுடன் படம் செய்வதை என் வீட்டிலேயே யாரும் நம்பவில்லை எனக்கு நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது.., 


விகர்னன் மிக அருமையாகப் பேசினார். வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள். பேச்சுக்கும் அவர் தான் மெண்டார் தான் போல. இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது. விடுதலை ஷீட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த விழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர். விடுதலை ஷீட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்ட பிறகு தான் ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது. கவினுக்கு வாழ்த்துக்கள் திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்க பிடித்திருக்கிறது. இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம், ஆனால் இது தான் பயிற்சி. இது நீண்ட காலம் தாங்கும் வாழ்த்துக்கள். சின்ன வயதில் பீச்சில் சிலை பார்த்தேன் அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் இன்னும் அப்படியே இருக்கிறார். அதே அழகு.  ருஹானி அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஜீவி சார் நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் செய்ய ஆசை வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துக்கள். அர்ச்சனா நிறையப்  படம் நடிக்க வாழ்த்துக்கள். படம்  மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 



விநியோகஸ்தர் அனீஷ் பேசியதாவது.., 


இந்தப்படம் நான் பார்த்து விட்டேன். ஆண்ட் ரியா மேடம் சொன்னது போல் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. படம் முழுக்க நெல்சன் சார் ஸ்டைல் இருக்கிறது. ரெடின் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்போம். ஜீவி சார் அசத்திவிட்டார். வெற்றிமாறன் சார் உங்கள் பங்களிப்புக்கு நன்றி. கவின் சார் இந்தப்படத்திற்குப் பின் பெரிய இடத்திற்குச் செல்வீர்கள். நவம்பர் 21 படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 



தயாரிபபாளர் தாணு பேசியதாவது.., 


என் அகம் ஆளும் வெற்றிமாறன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துக்கள். மாஸ்க் பட பாடல்களும் முன்னோட்டமும் எங்கெங்கும் வெற்றியைப் பெறட்டும். வெற்றிமாறன் சிறப்பான படைப்பாளி,  நண்பரைத் தயாரிப்பாளராக மாற்றியிருக்கும் மனதிற்காகவே வாழ்த்துக்கள். ஜீவி இசை எட்டுத்திக்கும் புகழ் பெறுகிறது. கவின் சிறப்பான நடிகராக மிளிர்கிறார். அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்


ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது.., 


என் குடும்ப விழா போல் இருக்கிறது. எனக்கும் வெற்றிமாறன் சாருக்குமான நட்பு 20 ஆண்டுகளை கடந்து போய்க்கொண்டு உள்ளது. அவர் மேற்பார்வையில் படம் சிறப்பாக வந்துள்ளது. அதே போல் ஜீவி பிரகாஷுன் இசை படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. மிகக் கடுமையான உழைப்பாளிசொக்கலிங்கம் அவருக்கு இப்படம் வெற்றியைத் தர வாழ்த்துக்கள். கவின் இளைஞர்களுக்குப் பிடிக்கும் ஹீரோ வெற்றிப்படம் தர வாழ்த்துக்கள். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார் வாழ்த்துக்கள். இயக்குநருக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 



நடிகர் கவின் பேசியதாவது..,


எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. என் லைஃபில் நான் நம்பும் விசயம்,, அன்றன்று நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன்  செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர். அவர் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மிக ஜாலியானவர் அவரை நான் நண்பராகவே நினைத்துவிட்டேன். அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். விகர்னன் மிகச்சரியாகப் பேசினார். எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்து படத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார். பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி. நவமபர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி. 



இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது.., 


மாஸ்க் படத்தை நான் புதிதாக ஒரு விசயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட் ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார், அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்று தான் படித்தேன். அதில் சில மூமெண்ட்ஸ் மிக மிகப் பிடித்திருந்தது. சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார். நான் ஆண்ட் ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன். அப்படி தான் மாஸ்க் ஆரம்பித்தது. பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம். ஸ்டார் படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம். விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. சொக்கு தான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார். அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவி இப்படத்தில் செய்ய இசை மிக மிகக் கச்சிதமாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது. விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன். ராமர் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அவர் கடைசி சில நாட்களில் அவர் எடிட் செய்த விசயம் மிக நன்றாக இருந்தது. நடிகர்கள்  எல்லோர் நடிப்பும்  ஸ்பெஷலாக இருந்தது. பவன் டான்ஸ் அருமையாக இருந்தது. நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார். சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர், மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர். மாஸ்க் படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன். கவின் தான் அதற்குக் காரணம். கவின் அவருக்குத் தம்பி மாதிரி. அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது. சொக்கலிங்கம் நான் அஸிஸ்டெண்ட்டாக இருக்கும் போது அவர் அஸிஸ்டெண்ட் மேனேஜர். மிகவும் அர்ப்பணிப்பான உழைப்பாளி. அவர் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள் இது  நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை  ஏன் என்றேன். இது செய்தால் இது மாதிரி ரோல் தான் வரும் என்றேன். இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன் என்றார். இருவரும் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள். படத்தில் எல்லா கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். எம் ஆர் ராதா சார் ஒரு ரிபெல், அவர் நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார். அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன், அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி. எம் ஆர் ராதா பேசிய விசயம் தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குரலற்றவர்களின் குரல் தான் இந்தப்படம். எல்லோருக்கும் நன்றி. 


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். R  ராமர் எடிட்டிங் பணிகளை கவனிக்க, ஜாக்கி , M, விஜய் ஐயப்பன் கலை இயக்கம் செய்துள்ளனர். ஸ்டண்ட் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், விக்கி வடிவமைத்துள்ளனர்.


இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி

 *ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ‘சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது*




சென்னை: தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின்  லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது . 


சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும்  அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக இருக்கும்.


நடிகர் சந்தீப் கிஷனை இந்தத் திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம். மொழி எல்லைகள் கடந்து ரசிகர்கள் மத்தியில் பான் இந்திய ஸ்டாராக இதன் மூலம் மாற இருக்கிறார் சந்தீப். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி, தமிழ் குமரன் பகிர்ந்திருப்பதாவது, “இயக்குநர் ஜேசன் சஞ்சய் எங்களிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார். திரைக்கதையை திட்டமிட்டபடி, சொன்ன நேரத்திற்குள் படமாக்குவது அவரை முழுமையான இயக்குநராக மாற்றியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பட்ஜெட்டிற்குள்ளும் படமாக்குவதுதான் எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் கனவு. திறமையான நடிகர்களுடன் 65 நாட்களில் 95% படப்பிடிப்பை முடிப்பது என்பது நிச்சயம் புதுமுக இயக்குநராக ஜேசன் சஞ்சயின் சாதனை. லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். அவரது எதிர்காலத்திற்கும் வாழ்த்துகிறோம்” என்றார். 



’சிக்மா’ பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டதாவது, “’சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத படமாக மாற்றும். இவர்களின் திறமை மற்றும் ஆதரவால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி விடும். என்றார்.


தமிழ், தெலுங்கு உட்பட பன்மொழி படமாக உருவாகும் ’சிக்மா’ சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. லைவ் லொகேஷன் மற்றும் கதையின் சாகசத்திற்கு ஏற்ற சிறப்பு செட்டும் அமைக்கப்பட்டுள்ளது.   


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இசையமைப்பாளர்: தமன்,

ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்,

எடிட்டர்: பிரவீன் கே.எல்.,

கலை இயக்குநர்: பெஞ்சமின் எம்.

Jason Sanjay’s Action-Adventure Comedy “Sigma” produced by Lyca productions Nears Completion with 95% Shoot Wrapped

 *Jason Sanjay’s Action-Adventure Comedy “Sigma” produced by Lyca productions   Nears Completion with 95% Shoot Wrapped* 




Subaskaran’s Lyca Productions, one of the most trustworthy production houses in the South, renowned for its high production values and global promotional reach, is thrilled to announce the successful completion of 65 days of shooting for their upcoming action-adventure comedy “Sigma”, directed by Jason Sanjay and produced by Subaskaran  of Lyca productions. The shoot, spanning four months, has now covered 95% of the film’s schedule.


“Sigma” tells the story of a fearless lone wolf—the eponymous sigma—who defies societal norms and pursues ambitious goals with an underdog mentality. The film combines the thrill of a hidden treasure hunt with high-stakes criminal heist elements, delivering a captivating mix of action, adventure, and comedy.


The film features Sundeep Kishan, emerging as a complete action hero whose performances transcend linguistic and regional boundaries, establishing him as a pan-Indian star. Alongside him, the ensemble cast includes Faria Abdullah, Raju Sundaram, Anbu Thasan, Yog Japee, Sampath Raj, Kiran Konda, Magalakshmi Sudharsanan, and several exciting cameo appearances.


Tamil Kumaran, CEO of Lyca Productions, says, “Director Jaoson Sanjay has delivered exactly what he promised. His ability to convert his writing into execution with precise planning makes him a perfect, complete director. It is any production house’s dream to produce projects within budget and on time. Completing 95% of the film within 65 days, with an ensemble of talented artistes, is an incredible feat for a debutant director. We at Lyca are immensely proud to introduce Jason Sanjay as a director and foresee a very prosperous and long career for him.”


Jaoson Sanjay, director of “Sigma”, says: “The title and concept capture the fearless, independent spirit of a ‘sigma’, an outlier who follows his own path, undeterred by societal norms. With elements of treasure hunts, heists, and comedy, the film promises an adrenaline-fueled cinematic journey. Thaman’s electrifying score, Sundeep Kishan’s dynamic action hero presence, and Lyca Productions’ signature grand production values elevate the experience.I am blessed to work with the best professionals in their respective crafts, and without their support, completing the schedule on time would not have been possible. With just one song left, we will move to post-production and aim for an early summer release.”


Chief technicians include music composer Thaman, a top-notch maestro whose electrifying music ignites every scene, amplifying the thrills, emotions, and drama of the story. Cinematographer Krishnan Vasant, editor Praveen K.L., and art director Benjamin M. ensure a visually stunning and high-quality cinematic experience. 


The film which is a multi lingual film in Tamil and Telugu was shot across Chennai, Salem, Thalakona, and Thailand, using a combination of live locations and specially designed sets to bring the adventurous story to life.

Sunday, 9 November 2025

LUMIERE 2025 – Pandiaya's Special

 ‘LUMIERE 2025 –  Pandiaya's Special 


குறும்படங்களை முழுநீள திரைப்படங்களாக மாற்றும் தளம்!



பாண்டிய நாட்டை  சேர்ந்த குறும்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு தனித்துவமான வாய்ப்பு!

VV Entertainments மற்றும் Dars Entertainments இணைந்து நடத்தும் “LUMIERE 2025 – Pandiya’s Special” குறும்பட போட்டி டிசம்பர் 18, 2025 அன்று  மதுரை Lady Doak College-ல் நடைபெற உள்ளது.


“உங்கள் குறும்படத்தை ஒரு முழுநீள திரைப்படமாக மாற்றும் கனவு உண்டா?”

அந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பை அளிக்கிறது இந்த போட்டி. திறமையான குறும்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்களுக்கு தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அரங்கமாக இது அமையும். பதிவு செய்யும் கடைசி தேதி: 08.12.2025

பங்கேற்பாளர்கள் QR குறியீட்டின் மூலம் அல்லது கீழே குறிப்பிடப்பட்ட எண்ணுகளுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.


📅 நிகழ்ச்சி நாள்: 18.12.2025

📍 இடம்: Lady Doak College, Madurai


🎥 “Let your journey begin with VV Entertainments & Dars Entertainments!”


📞 தொடர்புக்கு: ‪+91 93842 72666‬ / ‪+91 96774 81111‬

📧 Email: vventertainmentsmedia@gmail.com


📲 Instagram: @vv_entertainments_