Featured post

திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா

 *திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்* *கவின் – பிரியங்கா மோகன் ஜோ...

Sunday, 18 January 2026

திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா

 *திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்*



*கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர்*


திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.


கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. கலகலப்பான ஒரு ஆபிஸ் சூழலில் அனைத்தும் கலைந்து கிடக்கும் நிலையில், கேமரா மெதுவாக சுழன்று பின்னே நாற்காலியில் அமர்ந்த நிலையில்  பிரியங்கா மோகன் அறிமுகமாக,  இறுதியாக போஸ்டரில் காணப்பட்ட அதே லுக்கில் கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணியுடன் வீடியோ நிறைவடைகிறது.


இந்த அசத்தலான அறிவிப்பு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள்.


இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேண்டஸி – ரொமான்டிக் – காமெடி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.


இப்படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கவின் – பிரியங்கா மோகன் ஜோடி முதன்முறையாக இணைந்திருப்பதே ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சாண்டி மாஸ்டரும் இணைந்திருப்பது இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கலகலப்பான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும்

ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு

 *ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!*



கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’  வெற்றிப்படமாக மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டமான விஷுவல் கிளிம்ப்ஸை பேஷன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் பிரம்மாண்டமான மாயாஜால காட்சிகள், நகைச்சுவை இந்தப் படத்திலும் இருக்கும் என்பதை உறுதியாகியுள்ளது. 


இதுகுறித்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, “’மரகத நாணயம் 2’ தயாரிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  முதல் பாகத்தின் தீவிர ரசிகன் என்பதால் இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமானது. இந்தமுறை உலகளவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்னும் பல திறமையான நடிகர்களுடன் மிகப் பெரிய அளவில் முழுமையான அல்டிமேட் என்டர்டெய்னராக படம் உருவாகியுள்ளது” என்றார். 


‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை ARK சரவண் இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் & K V துரை ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, RDC மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் கீழ் இணைந்து தயாரித்துள்ளனர். 


*நடிகர்கள்:* இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்கம் – ARK சரவண்,

இசை – திபு நினன் தாமஸ்,

ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,

கலை இயக்கம் – என்.கே. ராகுல்,

படத்தொகுப்பு – திருமலை ராஜன் R,

வசனம் – ராஜேஷ் கண்ணன்,

சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,

தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,

உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,

நடன அமைப்பு – ரகு தாபா,

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் P,

தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,

ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,

ஒலி கலவை – உதயகுமார்,

VFX – ரெசோல் FX,

VFX மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,

மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC,

மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,

பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,

சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.

MARAGADHA NAANAYAM 2 Visual Glimpse Drops — Fantasy Comedy Blockbuster Returns!

 *”MARAGADHA NAANAYAM 2 Visual Glimpse Drops — Fantasy Comedy Blockbuster Returns!”*



The 2017 fantasy comedy caper Maragadha Naanayam wasn't just a blockbuster, it was a rare phenomenon that redefined Tamil cinema's entertainment quotient with its magical adventures and non-stop hilarity. Now, Maragadha Naanayam 2 arrives with expectations skyrocketing since announcement day. Marking the occasion with a stunning visual glimpse, Passion Studios officially launches this sequel promising even bigger laughs, grander magic, and unstoppable fun.


Producer Sudhan Sundaram of Passion Studios shares: "I am delighted to produce Maragadha Naanayam 2, a project close to my heart as a massive fan of the original blockbuster. This is a prestigious endeavor designed to draw universal crowds to theaters with its magical entertainment. Like the first part, Aadhi and Priya Bhavani Shankar play the lead roles. Shot on a grander canvas with an expanded star-cast, we are committed to delivering the ultimate entertainer.”


Maragadha Naanayam 2, directed by ARK Saravan and produced by Sudhan Sundaram, Manish Singhal, Durgaram Choudhary, Dev & KV Durai  under Passion Studios, Dangal TV, RDC Media,  Axess Film Factory & Good Show, features Aadhi and Priya Bhavani Shankar in the lead roles, and the others in the star-cast includes Sathyaraj, Nikki Galrani Pinisetty,  Munishkanth, Anandaraj, Danie, Arunraja Kamaraj, and Muruganandam in pivotal roles.


Dhibu Ninan Thomas handles the music, PV Shankar cranks the camera, NK Rahul designs the art, Thirumalai Rajan R edits, Rajesh Kannan pens the dialogues, and PC Stunts choreographs the action.



*Star-cast* 


Aadhi 

Priya Bhavani Shankar

Sathyaraj

Nikkii Galrani Pinisetty

Munishkanth

Anandaraj

Danie

Arunraja Kamaraj 

Muruganandam


*Technical Crew*


Director- ARK SARAVAN

Music Director- DHIBU NINAN THOMAS

DOP - PV SHANKAR

Art Director- NK RAHUL

Editor-THIRUMALAI RAJAN R

Dialogue – RAJESH KANNAN

Stunts- PC STUNTS

Production Executive - SS SRIDHAR

Costume Designer – A. KEERTHIVASAN

Choreography – RAGHU THAPA

Executive Producer - MOHAN P

Production Manager - S PRABHAKAR

Sound design - SYNC CINEMA

Sound mixing - UDHAYKUMAR

VFX - RESOL FX

VFX Supervisor – KIRAN RAGHAVAN

Marketing & Promotion - DEC

PRO - SURESH CHANDRA-ABDUL A NASSAR

Publicity design – VIYAKI

Legal Advisor - MV BHASKAR

Saturday, 17 January 2026

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியீடு

 *கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியீடு*



கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த 'காட்டாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான கொண்டாட்டமாக மாறியது. ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். 


கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.  இதில் ரசிகர்களும், ஊடகத்தினரும், விருந்தினர்களும் கலந்து கொண்டனர். டீசருக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிரடியான ஆக்சன் காட்சிகளால் நிரம்பிய இந்த டீசர்-  ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவிற்கு திரில் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. இதுவரை கண்டிராத வகையில் பிரமிக்கத்தக்க வைக்கும் சண்டை காட்சிகள் இப்படத்தின் தனி சிறப்பாக இருக்கும் என்பதையும் இந்த டீசர் உணர்த்துகிறது. 


இந்த டீசரில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸ் அடர்ந்த வனத்தில் ஒரு யானையுடன் மோதும் காட்சிகள் நம்ப முடியாத வகையில் யதார்த்தத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் வி எஃப் எக்ஸ் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல்... ஒரு உண்மையான யானையை கொண்டு படமாக்கப்பட்டவை என்பதை மறுப்பு அறிக்கை (பொறுப்பு துறப்பு அறிவிப்பு) தெளிவுப்படுத்துகிறது. இந்த கதாபாத்திரம் ஆண்டனி வர்கீஸின் திரையுலக பயணத்தில் சக்தி வாய்ந்த- மாசான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


'காட்டாளன்' திரைப்படம் எதிர் வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடுகளில் இப்படமும் ஒன்றாக இருக்கும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். 


'ஓங்-பாக்' தொடரில் பணியாற்றியதற்காக சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளரான கெச்சா கம்பாக்டீ மற்றும் அவரது குழுவினரின் தலைமையில் தாய்லாந்தில் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 'ஓங் -பாங்' படங்கள் மூலம் பிரபலமான பாங் என்ற யானையும், 'காட்டாளன்' திரைப்படத்தில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது. டீசரில் காணப்படும் யானை சண்டை காட்சிகள் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ' காந்தாரா' மற்றும் 'மகாராஜா' போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் தென்னிந்திய படங்கள் மூலம் புகழ்பெற்ற பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இசை - இந்த திரைப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். சர்வதேச அளவிலான சினிமாவிற்கு இணையான காட்சி அமைப்பு - ஆக்சன் மற்றும் இசையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு முழுமையான மாஸ் ஆக்சன் திரில்லராக இருக்கும் என்று உறுதி அளிக்கிறது. 


'காட்டாளன்' திரைப்படம் ஏற்கனவே மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் வெளியிடப்படுவதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே வெளியீட்டுக்கான முந்தைய சாதனைகளையும் முறியடித்துள்ளது. ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு மலையாள திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் வெளிநாடுகளில் வெளியிடுவதற்கு 'காட்டாளன்' தயாராகி வருகிறது. அகில இந்திய பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான 'மார்கோ ' படத்திற்குப் பிறகு கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் இதுவாகும். முன்னதாக ஆண்டனி வர்கீஸ் ஸ்டைலான மாஸ் தோற்றத்தில் தோன்றும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. 


ஒரு பான் இந்திய படைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நட்சத்திர நடிகர் சுனில், கபீர் துஹான் சிங், 'புஷ்பா' புகழ் தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாஜ் , பாலிவுட் நடிகர் பார்த் திவாரி மற்றும் மலையாள திரையுலகை சார்ந்த ஜெகதீஷ், சித்திக் , வ்ளாகர் - பாடகர் ஹனன்ஷா, ராப்பர் பேபி ஜீன், ஹிப்ஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


திரைக்கதையை ஜோபி வர்கீஸ்- பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை உன்னி .ஆர் எழுதியுள்ளார் .இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 


தொழில்நுட்ப குழு: 


எக்ஸிகியூடிவ் புரொடியுசர் : ஜூமானா ஷெஃரீப் 

ஒளிப்பதிவு : ரெனாடிவ்

கூடுதல் ஒலிப்பதிவு: சந்துரு செல்வராஜ் 

இசை :  பி அஜனீஸ் லோக்நாத் 

படத்தொகுப்பு : சமீர் முஹம்மத் 

சண்டை பயிற்சி : கெச்சா கம்பாக்டீ - ஆக்சன் சந்தோஷ் 

தயாரிப்பு வடிவமைப்பு : சுனில் தாஸ் 

கிரியேட்டிவ் புரொடியூசர் : திலீப் தேவ் 

புரொடக்ஷன் கண்ட்ரோலர் : தீபக் பரமேஸ்வரன் 

ஒலிப்பதிவு : ராஜா கிருஷ்ணன் எம். ஆர். 

ஒலி வடிவமைப்பு : கிஷன் - சப்தா ரிக்கார்ட்ஸ் 

உடைகள் : தான்யா பாலகிருஷ்ணன் 

ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர் 

பாடலாசிரியர் : சுகைய்ல் கோயா 

புகைப்படம் : அமல் சி. சதார் 

நடனம் : ஷெரிப் 

வி எஃப் எக்ஸ் : 3 டோர்ஸ் 

ஓவர்சீஸ் டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் : பார்ஸ் ஃபிலிம்ஸ் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (S2 மீடியா) 

விளம்பர வடிவமைப்பு : எல்லோ டூத்'ஸ்


https://youtu.be/uxjIcg_Z5sc?si=RhWOpzBY63rTAeNG

Seeking to expand the services of his #VallalarEmploymentServiceMisson, which is credited with having helped over

 Seeking to expand the services of his #VallalarEmploymentServiceMisson, which is credited with having helped over 2.17 lakh youth secure direct employment in the private sector absolutely free of cost, actor @VijaySethuOffl inaugurated a job portal for the mission in Madurai today.  










The portal, vvvsi.in, will directly connect job-seeking youth and job-providing companies on one platform without any fee!

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி

 *இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி*










கட்டணமில்லா vvvsi.com வேலை  வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி*


கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்று, அந்த வாய்ப்புகளை நகர எல்லைகளைத் தாண்டி, கடைசி கிராமங்கள் வரை கட்டணமின்றி கொண்டு சேர்த்ததின் பயனாக, இதுவரை வேலைவாய்ப்பை அணுக முடியாத நிலையில் இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர இந்த இயக்கம் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. இதன் மூலம், பல குடும்பங்களில் பொருளாதார நிலைத்தன்மையும், சமூக முன்னேற்றமும் உருவாகியுள்ளது.


இதுவரை, இந்த இயக்கத்தின் மூலம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எந்தவித கட்டணமும் இன்றி, 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்களில் பெற்றுத்தந்துள்ளது என்பது, இந்த இயக்கத்தின் சேவை வீச்சையும், நம்பகத்தன்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


இந்த சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் உயரிய நோக்குடன், வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் கட்டணமின்றி ஒரே தளத்தில் நேரடியாக இணைக்கும் வகையில், vvvsi.com என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளம் இன்று மதுரையில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.


இந்த இணையதளத்தை சமூக அக்கறையும் மனிதநேயப் பொறுப்பும் கொண்ட நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொடங்கி வைத்து,


“ஒரு இளைஞனுக்கு வேலை கிடைப்பது என்பது அவன் குடும்பத்தின் எதிர்காலமே மாறுவது போன்றது. அந்த மாற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக, கட்டணமின்றி, வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தொடர்ந்து ஒரு உறுதியான பாலமாக இருந்து வருகிறது” என மனதார பாராட்டினார்.


மேலும், அந்த இயக்கத்தின் தலைவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வின்போது, இயக்கத்தின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். நிகழ்விற்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகளை, இயக்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வீரராஹவன் அவர்கள் முன்னின்று செய்திருந்தார்.


மனிதநேய சிந்தனையும், வள்ளலார் வழியிலான கருணை, சமத்துவம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட இந்த கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதள முயற்சி, இனி தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கையின் புதிய வாசலாக திகழும் என சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் ஆழ்ந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி கெளரவித்த நடிகர் கார்த்தி

 *உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி*…











*விவசாயத் துறைக்கான அர்ப்பணிப்பை கொண்டாடிய ‘உழவர் விருதுகள் 2026’!**


விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகர் ரவி மோகன், நடிகை ரேவதி, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

இவர்களுடன் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில்,

சிறந்த விவசாயி விருது – கோவில்பட்டியைச் சேர்ந்த திருமதி பழனியம்மாள்,


சிறந்த வேளாண் பங்களிப்பு விருது – மதுரையைச் சேர்ந்த திரு. பாமயன்,


சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது – வேலூர் மக்கள் நலச்சந்தை,


நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது – திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு,


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது – குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு

விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி,

“நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம்.


நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்றார்.


இந்த விழாவில், வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், குப்பை மேலாண்மையின் அவசியம், விவசாயத்தில் பெண்களின் பங்கு, சிறு குறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளின் தேவை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.


மொத்தத்தில், விவசாயத்தைப் பற்றியும், அதில் உள்ள சவால்கள், அவற்றுக்கான அவசியமான முன்னெடுப்புகள் என்ன என்பதையும் அனைவருக்கும் முழுமையாக புரிய வைக்கும் நிகழ்ச்சியாக இந்த ‘உழவர் விருதுகள் 2026’ விழா அமைந்தது.

காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம்

 “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !! 




சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு ! 


அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது.


வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது.


நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு வார்த்தைகள் இன்றியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை டீசரில் நிரூபித்துள்ளனர்.


கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.


Zee Studios வழங்க, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரிக்கும் காந்தி டாக்ஸ், திரை மொழியின் வழக்கமான விதிகளை உடைக்கும், மௌனத்தை ஒரு சக்திவாய்ந்த கதையாக்கமாக மாற்றும் வித்தியாசமான திரையரங்கு அனுபவமாக இருக்கும். 


2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்”  திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


youtu.be/Dv3qq4-TSv8

Friday, 16 January 2026

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

 தமிழ்நாடு  இயல்  இசை  நாடக  மன்றம் 


பொங்கல்  கலைவிழா

  

கலைச்  சங்கமம் 


தமிழக அரசால்  1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்ட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றமுத்தமிழுக்கும் பெருமை  சேர்க்கும்விதத்தில், 1973 -ம்ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நா டக மன்றம் எனப் பெயர் சூட்டப்ட்டது. கலை, பண்பாட்டு இயக்ககத்தின்ஓர்அங்கமாகத்திகழும், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் தமிழ்நாடு அராசால்  வழங்கப்டும் நிதியுதவியின் மூலம் பழமையான கலை களை வளர்த்தல், அக்கலை களில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய கலை நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பாரம்ப ரியக் கலைகளை பல மாநிலங்களிலும்  உல களவிலும் எடுத்து செல்லுதல் மற்றும் தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய  பங்களிப்பைய்யும் கலை ஞர்களுக்கு விருதுகள் வழங்குதல் மற்றும் நலிந்தநிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் ஆகிய  பணிகளை தமிழ்நாடுஇயல்இசை நாடகமன்றம் மேற்கொண்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்உத்தரவின் படி தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் “கலை சங்கமம்” கலை விழாவாக சிறப்பாக கொ ண்டாட ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்..*தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஒரே நாளில் (18.01.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை  6 மணியளவில் கலை சங்கமம் கலை விழா* அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில்

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொள்ளும் வகையில்   விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவ்விழாவில் அந்தந்த மாவட்டங்களை சார்ந்த சிறப்பிற்குரிய,   பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .


வருகிற 22.01.2026 மாலை 6 மணியளவில் சென்னை, ராஜாஅண்ணாமலை புரம், முத்தமிழ் அரசவையில் இயல் சங்கமமும், 25.01.2026 மற்றும் 26.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் இசை மற்றும் நாட்டிய சங்கமமும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைச் சங்கமம் கலை விழாக்களின் வாயிலாக  "நான்காயிரத்திற்கும் மேற் ட்டகலைஞர்கள்  பங்கு பெறுவார்கள் மன்றத்தால்  செயல்படுத்தப்பட்டு  வரும்  திட்டங்கள்  • நலிந்த நிசலை யில் வாழும் கலை ஞர்களுக்கு திங்கள் தோ றும் நிதியுதவிரூ.3000/-  உயர்த்தப்ட்டு அதற்கான உத்தரவு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் 2021 ஜுன் மாதத்தில்வழங்கப் ட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்உத்தரவின் படி, இந்த ஆண்டு (2025-26) அகவை முதிர்ந்த, நலிவுற்ற நிலையில்வாழும் கலை ஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பத்திருந்த 2,500 கலைஞர்களுக்கும் ஒரே நேரத்தில்  மாதாந்திர நிதியுதவி வழங்குவதற்கு ரூபாய் ஒன்பது கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாண்புமிகு துணை முதலமைச்சர்  திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 05.09.2025 அன்று கலைஞர்களுக்கு ஆவணகள் வழங்கப்ட்டன.


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு, ஆண்டுததாறும்வழங்கப்ட்டு வந்த நிதி  ரூ.3.00 கோ டியிலிருந்து ரூ.4.00 கோ டியாக மாண்புமிகு முதல்வர் அவர்களால் 2025–2026ஆம் ஆண்டு நிதி அறிவித்து உயர்த்தி வழங்கப் ட்டது.


முத்தமிழறிஞர் டாக்டர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக் கலை விழா,  பழங்குடியின் கலை விழா மற்றும் கlaiத் திருவிழாக்கள் நடத்துதல் போன்ற சீர்மிகு கலைப் பணிகளை மன்றம் செய்படுத்தியது 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்வழிகாட்டுதலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஓன்றிய அளவில்மட்டு இல்லாமல் உலக அளவில்  தலை சிறந்த கலை நிறுவனமாகச் செயல் ட்டுவருகிறது . இச்செய்திகளை  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் மற்றும்தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத் தலைவர்  திரு. வாசகை சந்திரசேகர்  அவர்களும், உறுப்பினர்  செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் அவர்களும் தெரிவித்தார்கள்.