Featured post

பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM

 *பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM' த...

Friday, 1 May 2026

பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM

 *பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM' தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு*









இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள 'எக்ஸாம் -  EXAM' எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எக்ஸாம் -  EXAM'   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 


ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி - இயக்குநர் ஏ. சற்குணம் - துஷாரா விஜயன் - அதிதி பாலன் - ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், '' நாங்கள் 'வா குவாட்டர் கட்டிங் 'எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான 'களவாணி' திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, 'பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்' என எடுத்துச் சொன்னோம்


சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ 'எக்ஸாம்' தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌


சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  'வதந்தி' தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும். 


நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார். 


நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார். 


இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். '' என்றார்.


இயக்குநர் காயத்ரி பேசுகையில், '' அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார். 


ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக-  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.


இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார். 


திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌


பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், '' சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம். 


நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது. 


நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌


அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌


அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள். 


எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்'' என்றார்.

 

நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ' இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி. 


எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌


ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. 


இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம். 


நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 


நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம். 


இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். 


இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை அதிதி பாலன் பேசுகையில், ''  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌


இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது'' என்றார்.


LINK : 

https://youtu.be/8MDZCOZzChM?si=_EmoKSOvaK91u_ND

2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின்

 ‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!



இயக்குநர் தயாள்  பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை வெளியிட்டார் விஜய் சேதுபதி!!



விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது தனது புதிய அப்டேட்டின் மூலம் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது .



படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு ஒரு சக்திவாய்ந்த முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, புகழ்பெற்ற நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சியை வெளியிட்டு, இந்தத் தீவிரமான குற்ற உலகத்திற்கான முதல் வலுவான பார்வையை வழங்கியுள்ளார்.



1 நிமிடம் 27 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிப்பதிவு, சிறைக் கம்பிகளின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் வலுவான, உணர்ச்சி மிகுந்த காட்சிகளை வெளிப்படுத்துகிறது. இந்தக் காட்சிகள் படத்தின் தீவிரம், மர்மம் மற்றும் கதையின் பல அடுக்குகளைக் கொண்ட தன்மையை நுட்பமாக உணர்த்துகின்றன. முதல் பார்வையிலேயே அதன் கரடுமுரடான காட்சித் தன்மை மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், 'பருத்தி வீரன்' சரவணன் சற்குணம் ஆகவும், மாறன் மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.



இந்தக் கதாபாத்திர காட்சிகளை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன் அவர்களும் தனது D Pictures நிறுவனம் மூலம் இணை தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளார்.



சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விரிவாகப் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளில் இறங்கியுள்ளது. பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் சிந்திக்க வைக்கும் திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பக் குழு


கதை, இயக்கம் & இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன் 


திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன் 


ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம் 


எடிட்டிங்: V. பூபதி 


இசை & பின்னணி இசை: தர்புகா சிவா 


பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன் 


ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு 


மேக்கப்: குப்புசாமி 


ஆடை வடிவமைப்பு: ரமேஷ் 


தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன் 


மக்கள் தொடர்பு (PRO): ரேகா.

Makkal Selvan Vijay Sethupathi Unveils Striking Character Visuals from 2M Cinemas-D Pictures' Lakshmikanthan Kolai Vazhakku directed by Dayazh Padmanabhan

 *Makkal Selvan Vijay Sethupathi Unveils Striking Character Visuals from 2M Cinemas-D Pictures' Lakshmikanthan Kolai Vazhakku directed by Dayazh Padmanabhan*


Makkal Selvan Vijay Sethupathi Unveils Striking Character Visuals from Dayazh Padmanabhan’s Lakshmikanthan Kolai Vazhakku Lakshmikanthan Kolai Vazhakku has kept radars ringing with high-intensity anticipation since its beginning. Significantly, the hard-hitting title and swirling curiosities kept the film under spotlights. With the shooting wrapped up, and postproduction nearing completion,  the makers deliver a powerful reveal. Acclaimed actor Vijay Sethupathi has unveiled the film’s character introduction visual, granting a riveting first glimpse into its intense realm.


The 1 minute 27 seconds visual conjures powerful, evocative imagery of the film’s core characters framed behind prison bars, offering a compelling portal into the narrative’s layered intensity. The reveal commands immediate attention with its raw timbre and arresting aesthetics.


The film boasts a promising ensemble cast, including ‘Jiivi’ fame Vetri as Arivumathi, Rangaraj Pandey as Sivanandham, Brigida as Mallika, Saravanan as Sargunam, and Maaran as Murthi, alongside a roster of notable performers who infuse profound depth into the storyline. Elevating these visuals to sublime heights is the masterful musical score by Darbuka Siva.


Lakshmikanthan Kolai Vazhakku is produced by K.V. Shabarreesh under the banner 2M Cinemas,  and is co-produced by Dayazh Padmanabhan for D Pictures, who has handled story, and direction as well. The ensemble star-cast includes Vetri, Rangaraj Pandey, Brigida Saga, Maaran, Saravanan, Lizzie Anthony, Lokah Kannan, Narmadha, Aruvi Madhan, Kanya Bharathy, Kavitha Bharathy, Subramanyam Shiva and others. 


Shot extensively in and around Chennai, the film has transitioned into post-production and is close on the heels of completion. Positioned as an intense crime drama, Lakshmikanthan Kolai Vazhakku promises a gripping, thought-provoking cinematic journey, propelled by powerhouse performances and a riveting narrative. The official announcement pertaining to the film’s teaser, trailer, audio, and worldwide theatrical release dates will be made soon.


*Technical Team*



Banner: 2M Cinemas & D Pictures 

Story & Direction: Dayazh Padmanabhan


Screenplay & Dialogues: Kavitha Bharathi & Dayazh Padmanabhan


Cinematography: M.V. Paneerselvam


Editing: V. Boopathi


Music & Background Score: Darbuka Siva

Lyrics: Bharathiyar, Bharathidasan, Dayazh Padmanabhan


Production Design: Anbu


Makeup: Kuppusamy


Costume Design: Ramesh


Production Executives: Mariyappan, Kutty Krishnan


Public Relations: Rekha

வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின்

வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!




Zee studios & Drumsticks Productions தயாரிப்பில்,   கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது !! 


Zee studios & Drumsticks Productions  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.  


வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர்  ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் இப்படத்தின்  கதை. 


ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். 


இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு - Zee studios & Drumsticks Productions 

தயாரிப்பாளர்கள் - வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால்

இணை தயாரிப்பாளர்கள் - S வைஷ்ணவி விவேக்சந்தர் மற்றும் வினோத் CJ

எழுத்தாளர் -  இயக்குனர்: 

பிரவீன் S விஜய்

ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட்

இசை: சாம் C S

எடிட்டர்: பிரசன்னா G.K

கலை இயக்குனர்: பிரேம் கருந்தமலை, AM ஆனந்த்ராஜ்

ஆடை வடிவமைப்பாளர்: க்வாசய் 

கீர்த்தி ஆடை வடிவமைப்பு : ஸ்ருதி மஞ்சரி

பாடல்கள் - மோகன்ராஜன், கார்த்திக் நேத்தா, உமா தேவி

விளம்பர வடிவமைப்புகள் : தினேஷ் அசோக்

நிர்வாக மேலாளர் : மணி தாமோதரன்

மக்கள் தொடர்பு : சதீஷ்   AIM

துருவ நட்சத்திரம் படக்குழுவின் அறிக்கை

 *துருவ நட்சத்திரம் படக்குழுவின் அறிக்கை*


“துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் வெளியீட்டிற்கு வழிவகை செய்துள்ளார் மாண்புமிகு நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி.





எங்கள் "துருவ நட்சத்திரம்" திரைப்படத்தின் தயாரிப்பில் செய்யப்பட்டுள்ள பெரும் முதலீடு, மற்றும் இத்திரைப்படத்துடன் தொடர்புடைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் மற்றும் திரை வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். படத் தயாரிப்போடு தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலன்களும் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சில நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் திரைப்படத்தை வெளியிட அவர் உத்தரவிட்டுள்ளார்.


ஒரு வாரத்திற்கும் மேலாக கணிசமான நேரத்தை ஒதுக்கி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி, அவர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி, அதன்பின் திரைப்படத்தை வெளியிடுவதற்கான உத்தரவை பிறப்பித்த மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதன் தயாரிப்பு செலவு சுமார் ரூ.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

FROM TEAM DHRUVA NATCHATHIRAM

 *FROM TEAM DHRUVA NATCHATHIRAM*





*Hon’ble Justice Mr.Senthilkumar Ramamoorthy paves the way for the release of the movie “Dhruva Natchathiram”*


Taking into consideration the substantial investment involved in the production of our film “Dhruva Natchathiram”, as well as the livelihoods and the career of numerous individuals associated with the film, including artists, technicians, cast and crew, the Hon’ble High Court of Madras with Hon’ble Justice Mr.Senthilkumar Ramamoorthy presiding has directed that the film be released subject to certain safeguards to ensure that the interest of all stakeholders connected with the production of our film Dhruva Natchathiram are adequately protected. 


We are grateful to The hon’ble Justice who spent considerable time spread over a week bringing all stake holders to the table, evolving a consensus among them and then passing the order to release the film. 


The film with music by Harris Jayaraj and starring Chiyaan Vikram is directed by Gautham Vasudev Menon with an estimated budget of Rs.80 Crores.

Thursday, 30 April 2026

Kara Movie Review

Kara Movie Tamil Review 

Kara Movie Rating: 4/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் expect பண்ணிட்டு இருந்த kara படத்தோட review வை தான் இன்னிக்கு பாக்க போறோம். vignesh raja இயக்குதுல வெளி வந்த படத்துல Dhanush, Mamita Baiju, Jayaram, Suraj Venjaramoodu, K. S. Ravikumar, கருணாஸ் னு பலர் நடிச்சிருக்காங்க.இது danush உடைய 54 வது படம்.  por tholil படம் ஒரு blockbuster hit னு எல்லாருக்கும் தெரியும். இப்போ மறுபடியும் ஒரு thriller கதையை கொண்டு வந்திருக்காரு director  vignesh raja . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

dhanush ஒரு திருடன் அ இருக்காரு. அதுவும் சாதாரண திருடன் கிடையாது kara ஊர் ல இருக்கற பணக்கார வீடா பாத்து தான் திருடுவாரு. எப்பவுமே ஜாக்கிரதையா வேலைய முடிச்சிட்டு escape ஆகுறவரு, ஒரு நாள் திடுருனு police கைல மாட்டிக்குறாரு. இவரோட wife அ நடிச்சிருக்காங்க mamitha baiju . இவங்களுக்கு danush ஒரு திருடன் ன்றதே தெரியாது. ஆனா இந்த arrest மூலமா இவங்களுக்கு தெரிய வரவும் ரொம்ப மனுசுஒடஞ்சு போயிடுறாங்க. danush அ control க்கு எடுத்துட்டு வர try பண்ணுறாரு police officer suraj . ஆனா எப்படியோ danush இதுல இருந்து தப்பிச்சு ஓடி போய்டுறாரு. திருந்தி வாழனும் ன்ற முடிவுக்கு வர danush , தன்னோட மனைவியை கூட்டிட்டு அவரோட சொந்த கிராமத்துக்கு போறாரு. அப்போ தான் தனுஷ் க்கு ஒரு அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு. danush ஓட அப்பாவா இருக்கற k s ravikumar ஒரு பெரிய கடன் ல மூழ்கி போய் இருப்பாரு. இந்த கடன் ல இருந்து தன்னோட அப்பாவை காப்பாத்துறதும் , அவரோட தப்புக்கு பிராயச்சித்தம் தேடிக்குறதும் தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட கதை 1990 ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அப்போ லாம் banking system அ பத்தி மக்களுக்கு எதுவுமே தெரியாது. இதை சாக்க வச்சு மக்களோட பணத்தை  எப்படி திருடுனாங்க ன்றது தான் இந்த படத்தோட கருவா இருக்கு. financial oppression அ பத்தி detailed அ எடுத்து சொல்லுற மாதிரி இந்த படம் அமைச்சிருக்கு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ thrilling  அ கதையை எடுத்துட்டு போயிருந்தாங்க. 


actors ஓட performance அ வச்சு பாக்கும்போது danush எப்பவும் போல ஒரு அசத்தலான acting அ வெளிப்படுத்தி இருக்காரு. இவரோட character க்கு ஏத்த அந்த emotional aspects எல்லாம் நல்ல perform பண்ணி இருந்தாரு. mamitha baiju வும் super அ நடிச்சு இருந்தாங்க. இவங்க village role எடுத்து பண்ணுறது இது தான் முதல் தடவை.  இருந்தாலும் இவங்க character க்கு இன்னும் detail குடுத்து இருந்த innum நல்ல இருந்திருக்கும். suraj தொடர்ந்து நெறய தமிழ் படங்கள் ல நடிச்சு audience ஓட மனச strong அ நிக்குறாரு னு தான் சொல்லணும். இவரோட நடிப்பும் இந்த படத்துல அட்டகாசமா இருந்தது. supporting actors அ நடிச்ச jayaram அப்புறம் karunas ஓட scenes எல்லாமே நல்ல இருந்தது.  


படத்தோட techincal aspects  அ பாக்கும்போது gv prakash ஓட music and bgm இந்த emotional கதைக்கு நல்ல set யிருந்தது. theni eshwar ஓட cinematography அப்புறம் sreejith sarang ஓட editing னு இது ரெண்டுமே இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. அப்புறம் mayapandi ஓட art direction அ பத்தி சொல்லி ஆகணும். 1990 s ல இருக்கற எல்லா விஷயமும் படத்துல கொண்டு வந்திருக்காரு. படம் பாக்கும்போது audience அந்த period க்கு போன மாதிரி ஒரு feeling அ குடுக்குது.    


actors ஓட strong ஆனா performance , மிரட்டலான திரைக்கதை, super ஆனா screenplay கொண்டது தான் kara . சோ miss பண்ணாம இந்த summer holidays க்கு உங்க family ஓட இந்த படத்தை theatre ல பாக்க மறந்துடாதீங்க.

After Strong CinemaCon Response, Rocking Star Yash’s Toxic Release Shifted for Larger Global Release

 After Strong CinemaCon Response, Rocking Star Yash’s Toxic Release Shifted for Larger Global Release*




KVN Productions and Monster Mind Creations today announced that the release of Toxic: A Fairy Tale for Grown-Ups has been rescheduled. The film, which was earlier set to release on June 4, 2026, will now arrive in theatres worldwide on a new date to be announced soon.


The decision follows the film’s presentation at CinemaCon, where it received a strong and encouraging response from global distributors and industry stakeholders. The reception opened up opportunities for a significantly wider international release, prompting the team to revisit and realign their release strategy.


With the film now complete, the makers are currently focused on locking global distribution and forging key international partnerships to ensure Toxic reaches audiences across markets at the scale it demands. The film is written by Yash and Geetu Mohandas, and directed by Geetu Mohandas.


Statement from Yash


“There are films we make, and then there are films that remind us why we fell in love with cinema. Toxic has been one such journey. Presenting our film at CinemaCon and witnessing the overwhelming global response reaffirmed what we have always believed—that this film deserves to reach its fullest potential worldwide.


Toxic is complete, and we are currently aligning global distribution and partnerships. In light of this, we have decided to recalibrate our release timeline. While we will not be releasing on June 4 as announced earlier, we will be releasing at a later, globally aligned date. Toxic will come to theatres across the world soon.


At a time when Indian cinema is finding its voice and stepping onto the global stage with such promise, each of us has a responsibility to raise the bar. As an actor and producer, I see this moment as an opportunity to do my part—for the Indian film industry and for all of us—by taking the time to ensure our film reaches the world with the impact it is meant to have.


Through every step and every change, your support has stayed with me, and I carry it with deep gratitude. Some stories ask for patience. Some journeys demand it. We promise to give you a film to enjoy and celebrate—a film that will stand as a proud moment for Indian cinema.”


Toxic: A Fairy Tale for Grown-Ups stars Yash alongside Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria.


Shot in Kannada and English, the film will also release in dubbed versions in Hindi, Tamil, Telugu, and Malayalam.


Produced by KVN Productions and Monster Mind Creations, the film will release in theatres worldwide on a new date to be announced soon

CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய

 *CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!*




*யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !!*


KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  ( Toxic: A Fairy Tale for Grownups )  திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.


படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ்  ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ்  இயக்கத்தில் உருவாகியுள்ளது.


இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:


“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.


டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.


இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”


இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா   சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்


கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.


KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “டாக்ஸிக்” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.


*After Strong CinemaCon Response, Rocking Star Yash’s Toxic Release Shifted for Larger Global Release*


KVN Productions and Monster Mind Creations today announced that the release of Toxic: A Fairy Tale for Grown-Ups has been rescheduled. The film, which was earlier set to release on June 4, 2026, will now arrive in theatres worldwide on a new date to be announced soon.


The decision follows the film’s presentation at CinemaCon, where it received a strong and encouraging response from global distributors and industry stakeholders. The reception opened up opportunities for a significantly wider international release, prompting the team to revisit and realign their release strategy.


With the film now complete, the makers are currently focused on locking global distribution and forging key international partnerships to ensure Toxic reaches audiences across markets at the scale it demands. The film is written by Yash and Geetu Mohandas, and directed by Geetu Mohandas.


Statement from Yash


“There are films we make, and then there are films that remind us why we fell in love with cinema. Toxic has been one such journey. Presenting our film at CinemaCon and witnessing the overwhelming global response reaffirmed what we have always believed—that this film deserves to reach its fullest potential worldwide.


Toxic is complete, and we are currently aligning global distribution and partnerships. In light of this, we have decided to recalibrate our release timeline. While we will not be releasing on June 4 as announced earlier, we will be releasing at a later, globally aligned date. Toxic will come to theatres across the world soon.


At a time when Indian cinema is finding its voice and stepping onto the global stage with such promise, each of us has a responsibility to raise the bar. As an actor and producer, I see this moment as an opportunity to do my part—for the Indian film industry and for all of us—by taking the time to ensure our film reaches the world with the impact it is meant to have.


Through every step and every change, your support has stayed with me, and I carry it with deep gratitude. Some stories ask for patience. Some journeys demand it. We promise to give you a film to enjoy and celebrate—a film that will stand as a proud moment for Indian cinema.”


Toxic: A Fairy Tale for Grown-Ups stars Yash alongside Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria.


Shot in Kannada and English, the film will also release in dubbed versions in Hindi, Tamil, Telugu, and Malayalam.


Produced by KVN Productions and Monster Mind Creations, the film will release in theatres worldwide on a new date to be announced soon.