Featured post

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!

 *பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!*  நான் சோமிதரன், 'நீளிரா' திரைப்படத்தின் இயக்குநர். ஒரு...

Tuesday, 31 March 2026

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!

 *பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!* 



நான் சோமிதரன், 'நீளிரா' திரைப்படத்தின் இயக்குநர். ஒரு பத்திரிகையாளராக உங்களுடன் இருந்து, பாலு மகேந்திரா அவர்களின் உதவியாளராக பணியாற்றி, ஆவணப் படங்களை இயக்கி இன்று இப்படத்தை இயக்கியுள்ளேன். அதுவும், என் கனவான என் மக்களின் கதையை படமாக எடுத்துள்ளேன். 


தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையை, ஆனால் சொல்ல வேண்டிய கதையை உங்கள் முன் படைத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ஈழ மக்களின் வாழ்க்கையை தமிழ் சினிமாவில் காட்ட வேண்டும் என்பது எனது கனவு மட்டுமல்ல, எத்தனையோ ஈழ மக்களின் கனவு, பாலு மகேந்திரா போன்ற பெரும் கலைஞர்களின் கனவு. 


இப்படத்தின் மீதான உங்கள் விமர்சனங்களை படிக்கவும், காணவும், உங்கள் கருத்துகளை கேட்கவும் ஆவலாக உள்ளேன். உங்கள் விமர்சனம் தான் இப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும். 


இந்த சமயத்தில் ஒரு வேண்டுகோளையும் உங்களிடம் வைக்கிறேன். 'நீளிரா' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி உங்கள் விமர்சனங்களில் குறிப்பிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த கல்யாண காட்சி தான் படத்தின் மிக முக்கியமான பகுதி என்பதால் அதை பற்றி முன்னரே அறிந்து கொள்ளாமல் திரையரங்கில் ரசிகர்கள் காண வேண்டும் என்று நான் விரும்புவதால் இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன். உங்கள் சகோதரனாக,  ஈழ மண்ணின் கலைஞனாக இந்த படத்தை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன். 



நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு

 *நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு*








வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா - சைதன்யா- சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.


தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,


''திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா - சைதன்யா - சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,


''இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.


தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,


''இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.


நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,


''இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.


நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,


''இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.


நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.


இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.


எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. '' என்றார்.

Visual Majesty Unleashed: Jayasurya-Prabhu Deva-Anushka Shetty’s ’ ‘Kathanar’ Trailer Delivers a Dazzling Spectacle

 *Visual Majesty Unleashed:  Jayasurya-Prabhu Deva-Anushka Shetty’s ’ ‘Kathanar’ Trailer Delivers a Dazzling Spectacle*



Producer Gokulam Gopalan’s Sree Gokulam Movies, acclaimed as one of India’s most amazing trailblazers, continues its legacy of fresh storytelling, technical grandeur, and visual splendour. The banner returns with a cinematic feast: Kathanar, starring Jayasurya, Anushka Shetty, and Prabhu Deva alongside an ensemble of industry titans, now igniting sky-high expectations with its recently launched theatrical trailer.


Clocking 2 minutes 49 seconds, the trailer unleashes a cascade of breathtaking moments: stunning visuals, a soaring musical score, crystalline sound design, and the magnetic screen presence of its leads, heralding a fresh fusion of fantasy in an ancient backdrop.


Director Rojin Thomas, whose heartfelt Home won hearts, crafts here an indelible theatrical odyssey. Co-writing the screenplay with R. Ramanand, he promises audiences an epic for the ages. With principal photography wrapped, the post-production team races toward a worldwide 2026 release in up to 15 languages.


Kathanar’s trailer has instantly captivated critics, trade experts, and fans, a rare exemplar of pre-release brilliance.


The stellar cast features Sanoop Santhosh, Sandy, Devika, Nitish Bharadwaj, Vineeth, Harish Uthaman, Srikant Murali, and Kulpreet Yadav in pivotal roles. Shot extensively with cutting-edge virtual production, the film boasts Neil D’Cunha’s cinematography, Rahul Subrahmanian’s evocative score, Rojin Thomas’ editing and VFX supervision, Rajeevan’s production design, and action by Jungjin Park and Kalai Kingson. V. C. Praveen and Baiju Gopalan serve as co-producers, with Krishnamoorthy as executive producer.

நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி

 *நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது!*



புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால பின்னணியில், புதிய ஃபேன்டஸி உலகை இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இந்த படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார். ஆர். ரமானந்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள அவர், ரசிகர்களுக்கு காலத்தைக் கடந்து செல்லும் ஒரு காவிய அனுபவமாக இந்த படம் இருக்கும் என்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 15 மொழிகளில் இந்தப் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


‘கத்தனார்’ டிரெய்லர் வெளியான உடனேயே விமர்சகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே ஒரு படத்தின் டிரெய்லர் இத்தகைய வரவேற்பு பெற்றிருப்பது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


*நடிகர்கள்:* சனூப் சந்தோஷ், சாண்டி, தேவிகா, நிதீஷ் பரத்வாஜ், வினீத், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் குல்ப்ரீத் யாதவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


ஒளிப்பதிவு: நீல் டி’குன்ஹா,

இசை: ராகுல் சுப்ரமணியன்,

எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: இயக்குநர் ரோஜின் தாமஸ், 

கலை இயக்கம்: ராஜீவன்,

ஆக்‌ஷன்: ஜங்ஜின் பார்க் மற்றும் கலை கிங்சன், 

இணைத் தயாரிப்பாளர்கள்: வி.சி. பிரவீன் மற்றும் பைஜு கோபாலன், 

நிர்வாகத் தயாரிப்பாளர்: கிருஷ்ணமூர்த்தி

நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு

 *நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு*



வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா - சைதன்யா- சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.


தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,


''திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா - சைதன்யா - சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,


''இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.


தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,


''இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.


நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,


''இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.


நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,


''இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.


நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.


இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.


எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. '' என்றார்.

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ் நடிக்கும் 'ரீ யூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

 *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ் நடிக்கும் 'ரீ யூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*





*ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிப்பில் அருள் தாஸ்- அகில் சந்தோஷ் இணைந்து நடிக்கும் 'ரீயூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* 


தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரீ யூனியன்'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 


இயக்குநர்  சாட்ஸ் ரெக்ஸ் (Satz Rex) இயக்கத்தில் உருவாகி வரும் ' ரீயூனியன் ' திரைப்படத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன்,சுப்பிரமணியன்,ஜெமினி மணி,சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன் ,கராத்தே ராஜா,சிலுமிசம் சிவா, குட்டி கோபி ,ஹரிஷ் , அருண் உதயன், சரத் , க்ரிஷ்&அய்ஷூ ,காக்காமுட்டை ரமேஷ், பூவையார், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி மேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்திருக்கிறார். முத்தமிழன் ராமு படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை வெங்கடேஷ் குமார்  மேற்கொண்டு இருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் (Kartik Jayas) தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் அருள்தாஸின் தோற்றமும், ஏனைய கதாபாத்திரங்களின் தோற்றமும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

Monday, 30 March 2026

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி

 *விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!*








அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.


நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.

Khelo India Asmita Women’s Kickboxing National League 2025–2026

 Khelo India Asmita Women’s Kickboxing National League 2025–2026




The Tamil Nadu State Amateur Kickboxing Association (TNSKA) successfully organized the Khelo India Asmita Women’s Kickboxing National League 2025–2026 at the Vinayaka Missions Research Foundation, Chennai Campus, from 26th to 29th March 2026.


The prestigious national-level event witnessed enthusiastic participation from women athletes representing various states across India, showcasing exceptional talent, discipline, and sportsmanship in the field of kickboxing. The championship served as a significant platform under the Khelo India Asmita initiative to empower women athletes and promote grassroots development of combat sports in the country.


The competition featured multiple categories and weight divisions, with players demonstrating high standards of technical skill and competitive spirit throughout the four-day event. The league not only highlighted emerging talent but also provided valuable exposure to athletes aiming for national and international recognition.


With excellent coordination by the organizing committee, the event ensured smooth conduct of weigh-ins, matches, accommodation, transportation, and athlete welfare. Coaches, officials, and referees played a vital role in maintaining the professionalism and integrity of the competition.


Tamil Nadu team delivered an outstanding performance, securing the Overall Championship Title with an impressive medal tally:


Gold Medals: 11


Silver Medals: 4


Bronze Medals: 5



This remarkable achievement reflects the continuous efforts, structured training programs, and unwavering support extended by the association and sports authorities.


TNSKA expresses its sincere gratitude to the WAKOIndiaKickboxingFederation, organizing committee members, officials, volunteers from Vinayaka missions Research Foundation, Chennai Campus and all participating teams for their invaluable support in making this event a grand success.


The successful completion of the league marks another milestone in promoting women’s participation in sports and strengthening India’s presence in kickboxing at the global level.


Regards,

Tamil Nadu State Amateur Kickboxing Association (TNSKA)

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026

 கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026




தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் (TNSKA) சார்பில், கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி 26ம் தேதி முதல் 29ம் தேதி மார்ச் 2026 வரை, சென்னை வினாயகா மிஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமை, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டு நெறிமுறைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். கேலோ இந்தியா அஸ்மிதா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டி, மகளிர் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முக்கிய மேடையாக அமைந்தது.


நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு எடைப்பிரிவுகள் மற்றும் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வீராங்கனைகள் உயர்ந்த தரமான திறமைகளை வெளிப்படுத்தினர். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகும் வீராங்கனைகளுக்கு இந்த லீக் ஒரு முக்கிய அனுபவமாக அமைந்தது.


ஒழுங்குபடுத்துநர் குழுவின் சிறப்பான ஒருங்கிணைப்பின் மூலம், எடைப்பரிசோதனை, போட்டி நடத்துதல், தங்கும் வசதி, போக்குவரத்து மற்றும் வீராங்கனைகளின் நலன் ஆகியவை முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் போட்டியின் தரத்தை உயர்வாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.


தமிழ்நாடு அணி சிறப்பான சாதனை புரிந்து, மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது, பதக்க விவரம் பின்வருமாறு:


தங்கம்: 11


வெள்ளி: 4


வெண்கலம்: 5



இந்த சாதனை, வீராங்கனைகளின் கடின உழைப்பு, பயிற்சி திட்டங்கள் மற்றும் சங்கத்தின் உறுதியான ஆதரவை பிரதிபலிக்கிறது.


இந்த போட்டி வெற்றிகரமாக நடைபெற உதவிய 

வாகோ இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்பு

 ஒழுங்குபடுத்துநர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து அணிகளுக்கும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


இந்த லீக் வெற்றிகரமாக நிறைவு பெற்றது, மகளிர் விளையாட்டை ஊக்குவிக்கும் மற்றும் இந்திய கிக் பாக்சிங் வளர்ச்சிக்கு மேலும் ஒரு முக்கிய படியாகும்.


நன்றி,

தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் (TNSKA)