Featured post

நவ-21ல் வெளியாகும் ‘இரவின் விழிகள்’

 *நவ-21ல் வெளியாகும் ‘இரவின் விழிகள்’* *குகைக்குள் 5 மணி நேரமாக மாட்டிக்கொண்டு சிக்கித்தவித்த சிக்கல் ராஜேஷின் ‘இரவின் விழிகள்’ படக்குழு*  ம...

Monday, 17 November 2025

நவ-21ல் வெளியாகும் ‘இரவின் விழிகள்’

 *நவ-21ல் வெளியாகும் ‘இரவின் விழிகள்’*










*குகைக்குள் 5 மணி நேரமாக மாட்டிக்கொண்டு சிக்கித்தவித்த சிக்கல் ராஜேஷின் ‘இரவின் விழிகள்’ படக்குழு* 


மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். 


தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். 


மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்.கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர்.


வரும் நம்பர் 21ஆம் தேதி ‘இரவின் விழிகள்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்ஷன் ரியாக்ஷன் மூலம் உலகமெங்கும் வெளியிடுகிறார் ஜெனிஷ். 


'இரவின் விழிகள்' படத்தின் படப்பிடிப்பின் போது சவாலான திகில் நிறைந்த சம்பவங்களை நேரடியாக படக்குழுவினர் எதிர்கொண்டுள்ளனர். அப்படி ஒரு சம்பவத்தை சந்தித்த திகில் இன்னும் கூட விலகாத நிலையில் அதுபற்றி விவரிக்கிறார் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.


“இப்படத்தின் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் நடைபெற்று வந்தபோது நாங்கள் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த காட்டுப்பகுதியில் கொஞ்சம் உள்நோக்கி இன்னும் புதிதாக ஏதாவது லொகேஷன்கள் கிடைக்கிறதா என தேடியபடி படக்குழுவுடன் சென்றோம். அங்கே ஒரு குகை ஒன்று தென்படவே அதற்குள் சென்று காட்சிகளை படமாக்க முடிவு செய்தோம். அதற்கு இன்னும் லைட்டிங் மற்றும் ஜெனரேட்டர் போன்ற உபகரணங்கள் தேவைப்பட்டதால் படக்குழுவினரில் இருந்து இரண்டு பேரை அவற்றைக் கொண்டு வருவதற்காக அனுப்பி வைத்தோம்.


இதற்கிடையே குகைக்குள் சில காட்சிகளை படமாக்குவதற்காக கொஞ்ச தூரம் சென்று காட்சிகளைப்  படமாக்கினோம். அதே சமயம் உபகரணங்களைக்  கொண்டு வருவதாக சென்றவர்கள் இன்னும் வரவில்லையே என்று அவர்களைத் தேடி நாங்கள் குகையிலிருந்து வெளிவருவதற்கு முயற்சித்தோம். ஆனால் அந்த குகையில், எந்த வழியாக நாங்கள் சென்றோம், திரும்பி எந்த பக்கம் போவது என எதுவும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஒரு வழியாக கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் போராடி அந்த குகையை விட்டு வெளியே வந்தோம்.


இன்னொரு பக்கம் படப்பிடிப்பு உபகரணங்களை கொண்டு வர சென்றிருந்த அந்த இரண்டு நபர்களும் திரும்பி, மீண்டும் குகைக்கு வருவதற்கு வழி தெரியாமல், அங்கிருந்த ஊர் மக்கள் சிலரை உதவிக்கு அழைத்துக் கொண்டு இந்த குகைப்பகுதியை நோக்கி வந்தார்கள். வழியில் எங்களைப்  பார்த்ததும் உடன் வந்த ஊர்மக்கள் இங்கே எதற்காக வந்தீர்கள்? இது ஆபத்தான பகுதி... காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட காட்டு மிருகங்கள் சர்வ சாதாரணமாக உலா வரும் இடமாயிற்றே என்று கூறியதும் எங்களுக்கு இன்னும் பயம் அதிகமானது. 


அதன்பிறகு மீண்டும் அந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறும் வரை யாரும் எந்த சத்தமும் காட்டாமல் நடந்து வாருங்கள்.. இல்லையென்றால் சத்தம் கேட்டு வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உண்டு என எச்சரித்ததால் யாரும் எதுவும் பேசாமல் திகிலுடனேயே அந்த பகுதியைக் கடந்து, இரவு எட்டு மணிக்கு ஊருக்குள் திரும்பினோம். 


இவ்வளவு சிரமப்பட்டு திகிலுடன் நாங்கள் படப்பிடிப்பு நடத்தியதை, ரசிகர்கள் படம் பார்க்கும்போது அதே திகிலை தியேட்டரிலும் உணர்வார்கள்.


அதுமட்டுமல்ல காட்டுக்குள் வழிபடும் கருப்பண்ண சாமியை இந்தக் கதையுடன் பிணைத்து உருவாக்கியுள்ளோம். அதற்கேற்ற மாதிரி அந்த பகுதி மக்களும் பங்கேற்க ‘வாடா கருப்பா’ என்கிற ஆக்ரோஷமான பாடல் ஒன்றையும் அங்கே படமாக்கினோம். படத்தில் இப்பாடல் காட்சி பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என்பது உறுதி” என்று கூறினார். 


வரும் 21 ஆம் தேதி இரவின் விழிகள் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 


*மக்கள் தொடர்பு ; A.ஜான்*

Music Maestro Ilaiyaraaja and Yuvan Shankar Raja sing together for the first time for ‘Kombuseevi

 Music Maestro Ilaiyaraaja and Yuvan Shankar Raja sing together for the first time for ‘Kombuseevi'*





*'Kombuseevi' produced by Star Cinemas Mukesh T. Chelliah and directed by Ponram, featuring Supreme Star Sarathkumar along with Shanmuga Pandian in lead roles, is set to release in December*


Music Maestro Ilaiyaraaja and his son, music composer Yuvan Shankar Raja, have sung together for the first time in the film ‘Kombuseevi’, produced by Star Cinemas Mukesh T. Chelliah and directed by Ponram, starring Captain Vijayakanth’s son Shanmuga Pandian and Supreme Star Sarathkumar. 


The emotionally touching song, penned by lyricist Pa. Vijay, begins with the lines “Amma en thangakani, neethane ellam ini, thaalattum paattu ingae yaar solvaar”. This soulful number has been beautifully rendered by Ilaiyaraaja and Yuvan Shankar Raja together. Composed by Yuvan Shankar Raja, this song will be one of the major highlights of ‘Kombuseevi'.


Ponram, who has made a mark for himself by directing successful commercial films like 'Varutha Padatha Valibar Sangam', 'Rajini Murugan', 'Seemaraja', 'MGR Magan' and 'DSP', has helmed 'Kombuseevi'.


For the first time, Ponram has joined forces with music composer Yuvan Shankar Raja for this film, which marks the maiden combination of Sarathkumar and Shanmuga Pandian.


The film, which is going to be an exciting journey with comedy and action scenes in equal proportion, will be a commercial carnival. It is produced by Mukesh T. Chelliah under Star Cinemas banner in a huge budget. The film's shoot which commenced in Theni was wrapped up in Chennai. 


Newcomer Tharnika plays the heroine. Starring Sujith Shankar, Kalki, Munishkanth, Kali Venkat and George Mariyan among others, the movie has Balasubramaniam doing the cinematography, Dinesh handling the editing, Saravana Abiram taking care of art direction. Stunts - Phoenix Prabhu, Sakthi Saravana; Choreography - Sheriff, Azhar; Stills: CH Balu. Executive Producer: Jayasankar, Selvaraj. 


The film talks about the villages around Theni, Andipatti and Usilampatti and the life of the people there. The movie will be full of action and comedy sequences that are unique to director Ponram.


'Kombuseevi' produced by Star Cinemas Mukesh T. Chelliah and directed by Ponram, starring Sarathkumar and Shanmuga Pandian will release in theatres across the world in December. 


***

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து 'கொம்புசீவி' படத்திற்காக பாடியுள்ளனர்*








*ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது* 


ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'கொம்புசீவி' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.


கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி,

நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் 'கொம்புசீவி' படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.


சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார். 


கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகியுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது சென்னையில் நிறைவுற்றது. 


புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட்,  ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார். நிர்வாக தயாரிப்பு: ஜெயசங்கர், செல்வராஜ்.


தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும். 


ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. 


***


*

பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக்

 பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக் !! 














வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் படம் சாவு வீடு  நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது !! 


ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம்  சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது. 


இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன்  அஜித் கூறுகையில்..,

ஒரு சாவு வீடு, அங்கு  எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம்,  அதைத்தொடர்ந்து நடக்கும்  சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.   கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன்.கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். 


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 


கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப்,  பேட்டை படத்தில் நடித்த  ஆதேஷ்பாலா 

ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நவம்பர் இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 



தொழில்நுட்பக் குழு 

தயாரிப்பு நிறுவனம் : ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் 

இசை : ட்யூனர்ஸ்

ஒளிப்பதிவு  : பூபதி வெங்கடாசலம்

எடிட்டிங் : சுந்தர் S & ராகேஷ் லெனின்

கலை இயக்கம் : ராஜேஷ் கண்ணா முருகேஷ்

சவுண்ட் டிசைன் & மிக்ஸ் ஸ்டூடியோ : சவுண்ட் வைப்ஸ் ஸ்டூடியோஸ்

சவுண்ட் மிக்ஸ் : T. உதய் குமார்

சவுண்ட் டிசைன் : ரஞ்சித் வேணுகோபால் மற்றும் M. சரவணகுமார்

டிஐ & வி.எஃப்.எக்ஸ் ஸ்டூடியோ : ஐ-மாட் மீடியா

வி.எஃப்.எக்ஸ் : வெற்றி செல்வன்

வஸ்திர வடிவமைப்பு : பொன்னி R

மேக்கப் : ஐஸ்வர்யா

டைட்டில் டிசைன் : போவாஸ்

ஸ்டில்ஸ் : மார்டின்

பப்ளிசிட்டி டிசைன் : ஜின் ஸ்டூடியோஸ் / மோனிக்

புரடக்சன்  மேனேஜர் : கே.என்.ஆர். சாமி

மக்கள் தொடர்பு : ஆர். மணி மதன்

மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ் - சந்தீப் ரெட்டி வங்கா புகழாரம்

 மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ் - சந்தீப் ரெட்டி வங்கா புகழாரம்!


இணையத்தை அதிரவைத்த 'தேரே இஷ்க் மே' டிரெய்லர்; தனுஷ் 'தனது சிம்மாசனத்தை மீண்டும் கைப்பற்றிவிட்டார்' என்று சந்தீப் ரெட்டி வங்கா புகழாரம்!


Link: https://x.com/imvangasandeep/status/1989613847330918410?s=46


இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், நேற்று 'தேரே இஷ்க் மே' திரைப்படத்தின்  அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர். டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே இணையத்தில் புயலை கிளப்பியது. அதன் தீவிரம், உணர்ச்சிகரமான ஆழம் மற்றும் தனுஷின் கம்பீரமான நடிப்பு ஆகியவற்றிற்காக பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது.


இந்த டிரெய்லரால் கவரப்பட்டவர்களில், உணர்ச்சிகரமான மற்றும் சக்திவாய்ந்த கதைகளுக்கு பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவும் ஒருவர். ரசிகர்களின் பாராட்டு குரல்களுடன் இணைந்து, அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில், "தீவிரமாக இருக்கிறது!!! தனுஷ் தனது சிம்மாசனத்தை மீண்டும் கைப்பற்றியது போல் உணர்கிறேன்.... வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


அவரது இந்த பாராட்டு, டிரெய்லர் ஏற்படுத்தியுள்ள பரவலான உணர்வை பிரதிபலிக்கிறது; இது அனைவரின் இதயங்களையும் வென்று, எதிர்பார்ப்பை அதிகரித்து, இந்த ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.


குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Tere Ishk Mein Trailer Sparks Frenzy Online; Sandeep Reddy Vanga Says

 *Tere Ishk Mein Trailer Sparks Frenzy Online; Sandeep Reddy Vanga Says Dhanush ‘Reclaimed His Throne’*


Link: https://x.com/imvangasandeep/status/1989613847330918410?s=46


The makers of Tere Ishk Mein, Aanand L Rai and Bhushan Kumar, unveiled the official trailer of the film last night. The trailer within moments of its release has taken the internet by storm, drawing widespread praise for its intensity, emotional depth, and Dhanush’s commanding presence.


Among those captivated by the trailer is filmmaker Sandeep Reddy Vanga, whose own style is synonymous with powerful, emotionally charged narratives. Joining the chorus of admiration, he tweeted: “Intense!!! Feels like Dhanush just reclaimed his throne.... CONGRATULATIONS 🎊”


His appreciation reflects the larger sentiment the trailer has sparked; it’s winning hearts, building anticipation, and positioning itself as one of the most eagerly awaited films of the year.


Gulshan Kumar, T-Series, and Colour Yellow present 'Tere Ishk Mein', produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi, Tamil and Telugu on 28th November 2025.

Sunday, 16 November 2025

லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்

 *'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்*


*சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் வரலாற்றை பதிவு செய்யும் பெட்டகம் என ப. சிதம்பரம் புகழாரம்*


இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய 'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' (Little India and the Singapore Indian Community: Through the Ages) நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்.


சென்னையில் உள்ள தாகூர் அரங்கில் (தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி) நவம்பர் 15 (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ப. சிதம்பரம், "சிங்கப்பூர் தமிழர்களுக்கு 200 ஆண்டு கால வரலாறு உண்டு. இரு நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளியினர் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அதில் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள். சிங்கப்பூர் அலுவல் மொழியாக தமிழ் இருப்பதால், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் தமிழர்கள் தான் தலையாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, பெருமை. 


அங்குள்ள லிட்டில் இந்தியா வசதியாக, செழிப்பாக இருக்கிறது. நம்மை போல் தான் வாழ்கிறார்கள், ஆனால் நம்மை விட வசதியாக, செழிப்பாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இங்கிருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் லிட்டில் இந்தியாவுக்கு செல்லாமல் இருக்க முடியாது. சிங்கப்பூர் வாழ்க்கையில் இந்தியர்களின் மிகப்பெரிய பங்கு உண்டு. மத வேறுபாடு இல்லாமல் இந்திய மதங்கள் அனைத்தையும் அங்கு பின்பற்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். மாரியம்மன் கோவில் தான் அங்கு முதல் கோவில், தண்டாயுதபாணி கோவில் தைப்பூச விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சீனர்கள் அதிகளவில் கலந்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு மத ஒற்றுமை அங்கு ஓங்கி வளர்ந்துள்ளது.


லிட்டில் இந்தியாவை பற்றிய‌ செளந்தரநாயகியின் நூல் மிகுந்த‌ மகிழ்ச்சியளிக்கிறது. காரணம் நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய வரலாற்றையும் அது பிரதிபலிக்கிறது. இந்நூலை நான் பாராட்டுகிறேன். பல பேரை தொடர்பு கொண்டு தகவல்கள், தரவுகளை அவர் சேகரித்தார். இந்த புத்தககம் லிட்டில் இந்தியாவை படம் பிடித்து காட்டுகிறது, செளந்தரநாயகி தொடர்ந்து எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்," என்றார்.


சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் திரு. எட்கர் பாங் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வீ. சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். 


இப்புத்தகம் சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 25 அன்று வெளியீடு கண்டது. அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜார்ஜ் யோ இதனை வெளியிட்டார். 


இந்த வருடம் சிங்கப்புர் தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு இப்புத்தகத்தை சிங்கப்பூர் நாட்டுக்கு தனது சிறு காணிக்கை என்று எழுத்தாளர் திருமதி. செளந்தரநாயகி வயிரவன் தெரிவித்தார். 


சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


****

Saturday, 15 November 2025

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்

 *தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!*






புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. 


டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இருவரும் இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தருவதற்கு பெயர் பெற்றவர்கள். ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘ஜோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது விஷன் சினிமா ஹவுஸ். தரமான கதை மற்றும்  சிறந்த நடிப்பிற்காக பாராட்டப்பட்ட அந்தப் படம் திரையரங்குகளில் 52 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன் மற்றும் யோகி பாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை தயாரித்து பார்வையாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்தது இந்நிறுவனம். 


தற்போது விஷன் சினிமா ஹவுஸ் மீண்டும் நடிகர் ஏகனுடன் இணையும் ’புரொடக்‌ஷன் நம்பர் 3’ படத்தை அறிவித்துள்ளது. ‘ஆஹா கல்யாணம்’ பட புகழ் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கும் இந்தப் படம் எளிமையான பூஜையுடன் தொடங்கியது. புதிய திறமையாளர்களுடன் பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்தப் படம். 


‘ஜோ’, ‘கோழிப்பண்னை செல்லதுரை’ ஆகிய படங்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் பிரபலமான நடிகர் ஏகன் இந்தப் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்கள், ஆழமான நடிப்பு ஆகியவற்றிற்காக பெயர் பெற்ற ஏகன் தமிழ் சினிமாவின் அடுத்தத் தலைமுறை நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். 



‘கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி’ தெலுங்கு படம் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பான் இந்திய ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி இந்தப் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். ‘புரூஸ் லீ பிஜி’ படத்தில் அறிமுகமாகி, மலையாளத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் படமான ‘மின்னல் முரளி’, ‘தீப்பொறி பென்னி’ மற்றும் ’சேஷம் மைக்கேல் ஃபாத்திமா’ படங்களில் சிறப்பாக நடித்த ஃபெமினா ஜார்ஜ் இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். 


தரமான கதைகளை தயாரிப்பது மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் தனது நிலைப்பாட்டை முன்னெடுத்து செல்லும் வகையில், விஷன் சினிமா ஹவுஸ் அர்ப்பணிப்புடன் தனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.

Actor Aegan teams up with Telugu and Malayalam Industry’s promising sensational heroines

 *





Actor Aegan teams up with Telugu and Malayalam Industry’s promising sensational heroines* 


Vision Cinema House, headed by producer Dr.  Arulanandhu and Mathewo Arulanandhu, proudly announces its third Tamil feature film, marking yet another significant step in the company’s mission to champion fresh talent and meaningful storytelling. Over the past few years, Vision Cinema House has emerged as one of the most promising creative forces in Tamil cinema, consistently backing films that stand out for their authenticity, emotional depth, and commitment to nurturing new voices.


Dr. Arulanandhu &  Mathewo Arulanandhu, distinguished entrepreneurs known for their dedication to creating opportunities for young talents in different arenas of his entrepreneurship, the production house made a remarkable entry into Tamil cinema with the critically acclaimed and commercially successful drama “Joe,” starring Rio Raj and Malavika Manoj. The film enjoyed a successful 52-day theatrical run and earned appreciation for its poignant narrative and powerful performances. This success was followed by “Kozhi Pannai Chella Durai,” directed by National Award–winning filmmaker Seenu Ramasamy and featuring actor Aegan and Yogi Babu in lead roles, further solidifying the banner’s growing reputation for producing content-rich, artistically resonant cinema.


Building on this creative momentum, Vision Cinema House is now set to collaborate once again with actor Aegan for its newly announced Production No. 3. The project was officially launched following a traditional script pooja ceremony and will be directed by Yuvaraj Chinnasamy, known for his work in “Aha Kalyanam.” With a clear focus on storytelling that resonates with audiences, the new film brings together an ensemble of emerging talents poised to create a compelling cinematic experience.


Actor Aegan, who has steadily risen in prominence with notable performances in theatre, “Joe,” “Kozhi Pannai Chella Durai,” and the Jio Hotstar series “Kaana Kaanum Kaalangal,” leads the cast. Recognized for his intensity, versatility, and grounded performances, Aegan continues to position himself as one of the most promising faces of the next generation of Tamil cinema.


Actress Sridevi, who turns the Pan-Indian spotlights upon her with a promising performance in the Telugu film “Court: State vs A Nobody’ is playing one of the female lead roles. Significantly, actress Femina George, best known for her memorable debut as the spirited “Bruce Lee Biji” in the Malayalam blockbuster “Minnal Murali” followed by her notable performances in “Theeppori Benny” and “Sesham Mike-il Fathima” is performing another female lead character. 


With its third production now underway, Vision Cinema House continues to strengthen its commitment to cultivating meaningful stories and empowering young artists and filmmakers. The production house remains dedicated to delivering films that combine emotional resonance with strong cinematic craft, further reinforcing its place as an influential and forward-looking force in the Tamil film industry. Additional details regarding the cast and technical crew will be announced in the coming weeks as Production No. 3 begins its creative journey.