Featured post

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRIS...

Saturday, 6 December 2025

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRISHYAM 3*




 In one of the biggest Pan-India film acquisition deals of the year, Panorama Studios in collaboration with Pen Studios has secured the worldwide theatrical & digital rights to the highly anticipated Malayalam  film Drishyam 3. Written and Directed by Jeethu Joseph and headlined by legendary actor Mohanlal, the film is produced by Aashirvad Cinemas, led by Antony Perumbavoor.

Drishyam stands among the most influential and celebrated cinematic franchises in Indian cinema. With its legacy of record-breaking box office milestones, extraordinary fan engagement, and multiple acclaimed remakes — including the Hindi adaptations produced by Panorama Studios, with Drishyam 2 directed by Abhishek Pathak — the franchise remains one of the most compelling and widely discussed s of contemporary storytelling.

For Panorama Studios, the acquisition is both sentimental and strategic. Kumar Mangat Pathak, Chairman, Panorama Studios, said, “For me, Drishyam is more than a film — it has been a transformative journey for Indian cinema. Acquiring these worldwide rights to the original Malayalam franchise is a proud and emotional moment. With our global distribution strength, we intend to make Drishyam 3 one of India’s biggest international releases.”

Echoing industry optimism, Dr. Jayantilal Gada, Director, Pen Studios, said, “With Drishyam 3, we continue our mission of taking exceptional Indian stories to the world. Our partnership with Panorama Studios strengthens this vision and ensures the film reaches the global platform it truly deserves.”

Producer Antony Perumbavoor added, “With Panorama Studios and Pen Studios coming together, the Malayalam Drishyam 3 will now reach audiences at a scale we always believed it deserved. It’s truly gratifying to see the story move forward with such support and shared vision.”

Actor Mohanlal shared, “Georgekutty has stayed with me for years — in my thoughts, in the audience’s emotions, and in the silence between the lines. Returning to him feels like meeting an old friend with new secrets. I’m excited for the audience to see where his journey leads.”


Director Jeethu Joseph added, “Stories like Drishyam don’t end — they evolve. And seeing this partnership come together feels like the right step for the journey ahead. We’ve always believed this story deserved a global stage, and now, with this collaboration, it feels like the world is finally ready for Georgekutty’s next move.”


The announcement also aligns with Panorama Studios’ expansion into Kerala as part of its long-term commitment to Malayalam storytelling. The studio is actively collaborating with acclaimed talent and emerging filmmakers, strengthening its mission to take Malayalam cinema to national and global audiences.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’

 *ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது!*




மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.


பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்கவைத்துள்ளது. 


பனோரமா ஸ்டுடியோஸின் தலைவர் குமார் மங்கத் பதக் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் தங்களுக்கு உணர்வுப்பூர்வமானது என்றார். மேலும் அவர் கூறுகையில், "’த்ரிஷ்யம்’ ஒரு திரைப்படம் என்பதை தாண்டி இந்திய சினிமாவில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்று என சொல்வேன். அசல் மலையாள ஃபிரான்சைஸின் உலகளாவிய உரிமைகளை நாங்கள் பெற்றிருப்பது பெருமையான, உணர்ச்சிபூர்வமான தருணம். எங்கள் உலகளாவிய விநியோக வலிமையுடன் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தை இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச வெளியீடுகளில் ஒன்றாக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.


பென் ஸ்டுடியோஸ் இயக்குனர் டாக்டர் ஜெயந்திலால் கடா கூறுகையில், "இந்தியக் கதைகளை ’த்ரிஷ்யம் 3’ திரைப்படம் மூலம் உலகிற்கு எடுத்துச் செல்லும் பணியை நாங்கள் தொடர்கிறோம். பனோரமா ஸ்டுடியோஸுடன் நாங்கள் இணைந்திருப்பதன் மூலம் இந்தத் திரைப்படம் உலகளவில் பார்வையாளர்களை சென்றடைவதை உறுதி செய்கிறது" என்கிறார். 


தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மேலும் கூறுகையில், “பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்துள்ளதால் நிச்சயம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ’த்ரிஷ்யம் 3’ திரைப்படம் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் ஆதரவுடன் இந்தப் படம் அடுத்தடுத்த உயரத்தை சென்றடைவது மகிழ்ச்சி” என்றார். 


நடிகர் மோகன்லால் பகிர்ந்து கொண்டதாவது, “என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், வரிகளுக்கு இடையிலான அமைதியிலும் ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது புதிய ரகசியங்களுடன் என் பழைய நண்பரை சந்திப்பது போல உணர்கிறேன். இந்தமுறை அவரது பயணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலாக உள்ளேன்” என்றார். 


இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்ந்து கொண்டதாவது, “’த்ரிஷ்யம்’ போன்ற கதைகளைக்கு முடிவு என்பதே கிடையாது. அவை அடுத்தடுத்து வளரும். இந்த கூட்டணி அமைந்திருப்பது எங்கள் பயணம் சரியான பாதையில் செல்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்தக் கதை உலகளாவிய பார்வையாளர்களுக்கு தகுதியானது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், இந்தக் கூட்டணியுடன் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஜார்ஜ்குட்டியின் அடுத்த நகர்வு என்ன என்பதைப் பார்க்க தயாராகி விட்டார்கள்” என்றார். 


மலையாள சினிமாவில் நீண்டகால பயணத்திற்கான வலுவான அடித்தளமாக பனோரமா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை அறிவித்துள்ளது. மலையாள சினிமாவை தேசிய மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் திறமையாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரியவும் இந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

ரெட் லேபில்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா !

 'ரெட் லேபில்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா !

















*பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்:  'ரெட் லேபில்' பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!* 


 *வாழ்வியல் படங்களை எடுங்கள்: 'ரெட் லேபில்' பட விழாவில் ஆர்.வி. உதயகுமார் பேச்சு!* 


 *படத்திற்கு தலைப்பு வைத்ததே கதாநாயகி தான் : 'ரெட் லேபில்' படத்தயாரிப்பாளர் வெளிப்படையான பேச்சு!* 


இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்.


 இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.

சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.


 நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.



இந்த 'ரெட் லேபில்' படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.


 *இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்கள் எழில், வசந்தபாலன், மித்ரன் ஜவஹர், நடன இயக்குனர் ஸ்ரீதர், அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.* 


*விழாவில்  கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசும்போது,* 


"தயாரிப்பாளர் முதலில் என்னிடம் கதை கேட்டார். நான் இரண்டு கதைகளைச் சுருக்கமாகச் சொன்னேன். அதில் ஒன்றை தேர்வு செய்தார். ஹாலிவுட் திரையுலகத்தில் முதலில் கதையைத் தேர்ந்தெடுத்து பிறகு தான் மற்றவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த பாணியில் இந்த தயாரிப்பாளர் முதலில் கதாசிரியரை அணுகி என்னிடம் கதை கேட்டார். பிறகு தான் இயக்குநரைத் தேர்ந்தெடுத்தார் .அந்த வகையில்  இந்தப்படம் முறையாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எடுத்து முடித்த பிறகு அதில் நடித்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அவர்கள் காட்சிகளைப் பார்த்துவிட்டுச் சில மாற்றங்களை யோசனையாகக் கூறினார். அதன்படி  ஒரு காட்சி கூட புதிதாக எடுக்காமல் அந்த மாற்றங்களைச் செய்தோம். பெரிய ஆச்சரியமாக இருந்தது ,அது ஒரு வேறு ஒரு விதத்தில் இருந்தது. அந்த வகையில் அவரது அனுபவம் தந்த உதவி மறக்க முடியாதது "என்றார்.


 *நடன இயக்குநர் விஜி சதீஷ் பேசும்போது,* 


" இந்தப் படத்தின் கதாநாயகன் தயாரிப்பாளர் லெனின் கட்டிப் பிடித்து நடிக்க மாட்டேன் என்றார். நான்தான் அப்படி நடிக்க வைத்தேன்.அவரது மனைவி தவறாக நினைக்கக் கூடாது" என்றார்.


 *நடிகர் கார்மேகம் சசி பேசும்போது,* 


"  வளர்ந்து வரும் இந்தக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள்" என்றார்.


 *நடிகை அனுஷா பேசும் போது,* 


" நான் இரண்டும் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இதுதான் எனது முதல் மேடை. படத்தை ஊடகங்கள் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவுங்கள் "என்று கேட்டுக் கொண்டார்.


*நடிகர் கெவின் பேசும்போது,* 

குரல் தழுதழுத்தது .


"என்னை வைத்து இயக்குநர் முதலில் 'குப்பை' என்ற குறும்படம் எடுத்தார். அது  திரைப்பட விழாக்களில் 50 விருதுகளைப் பெற்றது. எனக்கு 6 விருதுகள் கிடைத்தன. அந்த இயக்குநரின் தந்தை இன்று இல்லாதது வருத்தம்" என்று கண் கலங்கினார்.


*இயக்குநர் அனுமோகன் பேசும்போது,* 


" நாங்கள் யாரும் சிரமப்பட்டு படம் எடுக்கவில்லை. நாங்கள் ஜாலியாகவே படப்பிடிப்பில் இருந்தோம்" என்றார்.


*கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசும்போது,* 


"டியர், டீசல்  படங்களுக்குப் பிறகு இது எனக்கு மூன்றாவது படம். படப்பிடிப்பில் நான் கேட்டதைக் கொடுத்தார்கள். தேவையானதைச் செய்தார்கள் "என்றார்.


*உடை அலங்கார நிபுணர் திரிபுரசுந்தரி பேசும்போது,* 


" இந்த படத்தில் அனைவரும் நண்பர்கள் போல் இருந்தார்கள்.சம்பளம் தாமதமின்றிக் கிடைத்தது. மிகவும் சரியாக இந்தப் படக் குழு இருந்தது" என்றார்.


*இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன் பேசும்போது,* 


" நான் மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன். தமிழில் இது எனக்கு முதல் படம். இது நல்லதொரு படக் குழு .இயக்குநர்  எது வேண்டும் எது வேண்டாம் என்பதில்  தெளிவாக இருந்தார். தயாரிப்பாளரும் இயக்குநரும் சினிமா மீது பெரிய மோகம் கொண்டவர்கள் .எனக்கு மிகவும் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தார்கள்" என்றார்.


 *நடன இயக்குநர் ஸ்ரீதர் பேசும் போது,* 


"  இந்தப் படத்தின் கதாநாயகன் கெத்தாக மாசாக இருக்கிறார்.

 படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில்  நானும் என் மகளும் இணைந்து ரீல்ஸ் எடுத்துக் கொடுத்திருக்கிறோம். படத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் அவை இருக்கும் என்று நம்புகிறோம் .படத்தில் உள்ள இரண்டு பாடல்களும் பெரிய வெற்றி பெறும். " என்றார்.


*இயக்குநர் மித்ரன் ஜவஹர் பேசும்போது ,* 


"ஆர்.வி. உதயகுமார் 90களில் பிஸியான இயக்குநர். இப்போது நடிகராக பிஸியாக இருக்கிறார்.

வாழ்த்துக்கள் .இந்தப் படக் குழுவினர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.


 *இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,* 


" இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது புதிதாக இருக்கிறது. கதையை நம்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் கதையை நம்பி வருவது வரவேற்கத்தக்கது.  நம்பிக்கைக்குரிய இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்"என்றார்.


*இயக்குநர் பேரரசு பேசும்போது,* 


" இந்தக் கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத்  தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி ,ரஜினி - ஸ்ரீபிரியா போல இந்த லெனின் - அஸ்வின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும். 


ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே. பாலச்சந்தர், டி ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.


பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது. தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால்  நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்.


இந்தப் படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி  ஒரு படத்தில்  பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார் ,வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள்  என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். இந்தச் சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல.ஒவ்வொரு இயக்குநருக்கும்  அவமானம். அதற்காக சின்மயிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள் .ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள் .எஸ் . ஜானகி, பி. சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள்.அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?


குறிப்பாக  இயக்குநரை தயாரிப்பாளரை அவமானப்படுத்த உரிமை யாருக்கும் கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது தொந்தரவு தருவது தவறானதாகும்" என்றார்.


 *இயக்குநர் எழில் பேசும்போது,* 


"இவர்களுக்கு இது முதல் படம் போலத் தெரியவில்லை. நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இயக்குநருக்குச் சுதந்திரம் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். தயாரிப்பாளர் நடிக்க வந்துவிட்டால் சில கிறுக்குத்தனங்கள் வந்துவிடும். ஆனால் இந்த தயாரிப்பாளர் லெனின் அப்படி எல்லாம் செய்யாமல் இதை முறையாக உருவாக்கி இருக்கிறார். இயக்குநரிடம் சௌகரியமாக நடந்து கொண்டிருக்கிறார். எனவே படம் நன்றாக வந்துள்ளது. வாழ்த்துகிறேன்" என்றார்.


 *படத்தின் இயக்குநர் கே. ஆர். வினோத்* 

 

பேசுவதற்கு முன் தனது 12 உதவி இயக்குநர்களையும் மேடையில் ஏற்றி  அறிமுகப்படுத்தி சபையினரின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொடுத்தார். இது ஒரு புதிய தொடக்கமாக இருந்தது.


இயக்குநர் தொடர்ந்து பேசும்போது,


"நாங்கள்  வளர்ந்து வரும் படக் குழுவினர். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனவே தான் பலரும் நேரம் காலம் பார்க்காமல் அனைவரும் உழைத்தனர். இது ஒரு தனி மனித முயற்சியல்ல. அனைவரும் சேர்ந்து உழைத்ததால் தான் படம் நன்றாக வந்துள்ளது. உதயகுமார் சார் ஒரு வழிகாட்டி போல் இருந்து தயாரிப்பாளர் இயக்குநரை நம்பி அனைத்தையும் செய்தார். அவரிடம் நான் ஒரு உதவி இயக்குநரைப் போல கற்றுக் கொண்டேன்.கதாநாயகன் படப்பிடிப்பில்  முதல் இரண்டு நாள் சுமாராக நடித்தார். மூன்றாவது நாளிலிருந்து முழு நடிகராக அவர் நடிக்கத் தொடங்கிவிட்டார்.அப்படி நடித்து இப்போது அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்து விட்டார். படம் நன்றாக வந்துள்ளது. இது நாகரிகமான படம். நிச்சயமாக அனைவரையும் திருப்திப் படுத்தும் "என்றார்.


*இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசும்போது,* 


" முதலில் இந்தத் தலைப்பை நான் பாராட்டுகிறேன். நல்ல அழகான தலைப்பு. தயாரிப்பாளர் லெனினை முதலில் பாராட்டுகிறேன். நான் கோயம்புத்தூர் காரனாக இருந்தாலும் எந்த கோயம்புத்தூர்க்காரரும் எனக்கு  வாய்ப்பு கொடுத்ததில்லை. இவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.என்னிடம் வந்ததுமே முதலில் படம் தயாரிக்கிறாயா? யோசனை செய் ,எச்சரிக்கையாக இரு என்றுதான் நான் சொன்னேன். முதலில் அவர் நடித்த 'உன் கூடவே' என்கிற பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு கொடுத்த உந்துதலில் தயாரிப்பாளராக வந்து விட்டார்.  கதாநாயகன் ஆகிவிட்டார். ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே இந்த படப்பிடிப்பு இனிமையாக இருந்தது.


ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்த விட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து  பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது. இப்போது அப்படி இல்லை.அனைவரும் பார்க்கும் படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள் .மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள் .அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து  படமாக எடுக்க வேண்டும். அப்படி இன்று படங்கள் வருவதில்லை. புதியவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்" என்றார்.


 *கதாநாயகி அஸ்மின் பேசும்போது,* 


" நான் கேரளாவில் இருந்து வந்து இருக்கிறேன். அங்கே எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது என் முதல் மேடையாக உணர்கிறேன். பதற்றமாக இருக்கிறது. கதாநாயகியாக எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் நல்ல நண்பராகவும் என்னை ஊக்கப்படுத்துபவராகவும் இருந்தார் .அனைவருக்கும் நன்றி "என்றார்.


 *கதாநாயகனும் தயாரிப்பாளருமான லெனின் பேசும் போது,* 


"பொன் பார்த்திபன் என்னிடம் கூறிய இரண்டு கதைகளில் என் பட்ஜெட்டுக்கேற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் நாலைந்து கதாநாயகிகள் நடித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். இந்த கதாநாயகியின் படம் வந்து கொண்டே இருந்தது .இவரை நாங்கள் நிராகரித்து விட்டோம் .மீண்டும் மீண்டும் அவரது  போட்டோவைக் காட்டினார்கள்.  முகத்தை கழுவி விட்டு செல்ஃபி எடுத்து ஒரு போட்டோ அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம். அவரும் அப்படியே அனுப்பி இருந்தார் .அவர் தேர்வாகி விட்டார்.

உண்மையைச் சொன்னால் இந்த படத்தின் தலைப்பே அவர் சொன்னதுதான். இதற்கு முன்பு நாங்கள் ஒரு சாதாரண தலைப்பையே வைத்திருந்தோம்.


இயக்குநருக்கும் எனக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மிகவும் பொறுமைசாலியாக இருந்து அனைத்தையும் சமாளித்தார். எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று பொறுமை காட்டினார் .அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .சொன்னது போல் படத்தை எடுத்து முடித்து விட்டார் .

எனக்கு எல்லாமே நேரத்திற்கு நடக்க வேண்டும். நானும் எனது தரப்பில் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுத்து விடுவேன். யாருக்கும் பாக்கி வைப்பதில்லை.பணம் இருந்தால் படப்பிடிப்பு நடத்துவோம்.பணம் இல்லாவிட்டால் படப்பிடிப்பை ரத்து செய்து விடுவோம்.யாருக்கும் பாக்கி வைக்க மாட்டோம்.


ஆர்.வி.உதயகுமார் சார் பற்றி இங்கே சொல்ல வேண்டும். அவர் இந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவாவதற்கு முன்பாகவே அவர் எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில்  நடிக்க வருவதற்கு முன்பே எனக்காக அவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் பெப்சியிலும் பேசி பல சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். அந்த உதவியை மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயமாக பார்க்கும் படியாக இருக்கும். திருப்தி தரும் படமாக இருக்கும் என்பதற்கு நான் 100% உத்திரவாதம் தருகிறேன்" என்றார்.


இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


 *விழாவை பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன்  தொகுத்து வழங்கினார்.*

Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli, Gangaa Entertainments Production No 2 Titled Oh..! Sukumari, Title Poster Is Eye-Catching

 Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli, Gangaa Entertainments Production No 2 Titled Oh..! Sukumari, Title Poster Is Eye-Catching*




Young hero Thiru Veer, and talented actress Aishwarya Rajesh who delivered blockbusters with their respective movies Pre Wedding Show and Sankranthiki Vasthunnam, are working together playing the main leads in the upcoming wholesome family entertainer being directed by debutant Bharat Dharshan and produced by Maheswara Reddy Mooli under Gangaa Entertainments, following the banner’s critically acclaimed first production, Shivam Bhaje.


Today, the makers unveiled the film’s title- Oh..! Sukumari. The makers unveiled an eye-catching title poster that immediately caught attention. It features a blue heart symbol divided by a striking orange lightning bolt, set against a banyan tree in a rural backdrop with villagers running in the background- hinting at emotional turbulence, romance, and unexpected twists in the story.


The film brings together an impressive lineup of skilled technicians. Cinematography is by CH Kushendar, recognized for his work in Razakar and Polimera, while the music is composed by Bharath Manchiraju, an associate of MM Keeravani. The art direction is led by Thirumala M. Thirupathi, known for Balagam, and editing is entrusted to Sree Varaprasad of Ka fame. Costume design is crafted by Anu Reddy Akkati, who is also contributing to Swayambhu, and the lyrics are written by the celebrated Purnachary.


With shooting in full swing, the movie is set to hit screens in Telugu, Tamil, Malayalam, Kannada and Hindi.


*Cast* : Thiruveer, Aishwarya Rajesh, Jhansi ,Vishnu o laddu, Aamani, Muralidhar Gowd,  Anandh, Anjimama, Sivanandh, Kota Jayaram, Gavireddy srinivas,Saranya


*Technical Crew:*


Producer: Maheswara Reddy Mooli

Director: Bharat Dharshan

DoP: CH Kushendar

Music Director: Bharath Manchiraju

Art Director: Thirumala M Thirupathi

Editor: Sree Varaprasad

Costume Designer: Anu Reddy Akkati

Lyricist: Purnachary

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன்,மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா

 *திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன்,மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன்  நம்பர்  2 “  படத்திற்கு “ஓ...!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!*


சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )”  படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர், மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெறர சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில்  அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  ஆகிய  இருவரும்  இணைந்து ஒரு அட்டகாசமான  ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.



இப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் ( Bharat Dharshan) இயக்குகிறார்.  கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி (Maheswara Reddy Mooli) தயாரிக்கிறார். புரொடக்ஷன் நம்பர்  2 “  வாக இப்படம் உருவாகிறது. சிவம் பஜே ( Shivam Bhaje ) வெற்றிக்குப் பிறகு, இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.


இன்று படத்தின் தலைப்பு “ ஓ சுகுமாரி” என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள டைட்டில் அறிவிப்பு  போஸ்டர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீல நிற இதயத்தை எழுதியபடி அதனை இரண்டு பாகங்களாகப் பிளக்கும் ஆரஞ்சு மின்னல் குறியீடு, பின்னணியில் பெரிய ஆலமரம், கிராம சூழல், ஓடிக்கொண்டிருக்கும் கிராமவாசிகள்,  இவை அனைத்தும் சேர்ந்து இப்படம் காதல், எமோசன், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கதை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.


இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ரசாகர் (Razakar) மற்றும் பொலிமேரா (Polimera,) போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு ( Bharath Manchiraju) இப்படத்திற்கு இசையமைக்கிறார். பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.  இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.


*நடிகர்கள்*


திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு , ஆமணி, முரளிதர் கவுட், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஶ்ரீனிவாஸ், சரண்யா.



*தொழில் நுட்பக் குழு*


தயாரிப்பாளர் –  மகேஸ்வரா ரெட்டி மூலி

இயக்குநர் – பரத் தர்ஷன்

ஒளிப்பதிவு  – C.H. குஷேந்தர்

இசையமைப்பாளர் –  பரத் மஞ்சிராஜு

கலை இயக்குநர் – திருமலா M. திருப்பதி

எடிட்டர் – ஸ்ரீ வரபிரசாத்

உடை  வடிவமைப்பாளர் -  – அனு ரெட்டி அக்கட்டி

பாடலாசிரியர் – பூர்ணசாரி

மக்கள் தொடர்பு - யுவராஜ்

மார்க்கெட்டிங் – ஹேஷ்டேக் மீடியா


Friday, 5 December 2025

JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 



Chennai, 5 December 2025 – The JioStar leadership team, led by Krishnan Kutty, Head Entertainment Business, South Cluster, JioStar, and Balachandran R, Executive Vice President – Tamil, JioStar, along with R. Mahendran, CEO – Turmeric Media, called on the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. M.K. Stalin, today to brief him on their upcoming flagship event, JioHotstar South Unbound.

 

During the meeting, the team outlined the vision, ambition and cultural significance of the event. They also shared key elements from the Letter of Engagement, reaffirming JioStar’s commitment to supporting talent development, collaborating with leading film and media institutes in Tamil Nadu, and investing in capacity-building initiatives to strengthen the state’s creative ecosystem and empower emerging storytellers.

 

JioHotstar South Unbound, to be held in Chennai on 9th December 2025, will be a landmark celebration of Southern cinema and creativity. The event will bring together leading filmmakers, creators, and talent from across the South and will feature a showcase of JioHotstar’s upcoming South content slate, spotlighting and celebrating the depth, richness and influence of Southern storytelling.

 

The event will be inaugurated by the Hon’ble Deputy Chief Minister of Tamil Nadu, Thiru. Udhayanidhi Stalin, alongside Hon’ble Member of Parliament Padma Bhushan Thiru. Kamal Haasan, who will grace the evening as a distinguished guest.

 

With the participation of top celebrities, creators, and industry leaders from all Southern markets, JioHotstar South Unbound aims to spotlight the region’s artistic impact and reaffirm JioStar’s commitment to nurturing, championing and elevating the Southern entertainment landscape.

JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர்

 *JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு,  JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!*




JioStar Head Entertainment Business, South Cluster, கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil பாலச்சந்திரன் R, மற்றும் CEO – Turmeric Media  R. மகேந்திரன் ஆகியோர்,  இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர்.


இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம்,  தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும் ஆதரவை குழுவினர் உறுதிப்படுத்தினர்.


டிசம்பர் 9, 2025 அன்று சென்னை நகரில் நடைபெறும் JioHotstar South Unbound  நிகழ்வு,  தென்னிந்திய சினிமா மற்றும் படைப்புத் திறனைக் கொண்டாடும் முக்கிய விழாவாகும். தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். JioHotstar இன், புதிய தென் மாநில படைப்புகள், கதைகள்,  இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.


இந்த விழாவை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பாராட்டுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷண் திரு. கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.


தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி படைப்பாளர்கள் பங்கேற்கும் இந்த விழா, தென்னிந்திய கலை மற்றும் கதைக்கூறும் மரபின் தாக்கத்தை உலகுக்கு முன்னிறுத்தும் முக்கிய தருணமாக இருக்கும். மேலும், தென்னிந்திய பொழுதுபோக்கு உலகை உயர்த்த, வளர்க்க, பலப்படுத்த JioStar மேற்கொள்ளும் தொடர்ந்த பங்களிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகிறது.

Grab the best seats for the Event Film of the Year as advance IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY

 *Grab the best seats for the Event Film of the Year as advance IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY*




_Special IMAX ticket-booking counters are activated at key theatres for the biggest cinematic event of the year, releasing on 19th December!_


James Cameron's biggest cinematic event, Avatar: Fire and Ash is set to hit Indian theatres on 19th December in six Indian languages. Amid the rising global buzz, advance IMAX bookings for the film are now officially open across India, giving fans a first chance to secure their seats for one of the year’s most anticipated cinematic events. With PVR INOX leading the IMAX footprint in the country, special IMAX ticket-booking counters have been activated at theatres nationwide to offer audiences a smooth and convenient booking experience.


Supporting the rollout, cinemas including PVR INOX have introduced on-ground Avatar-themed branding along with digital integrations across apps, websites and marketing channels. Fans can now book their IMAX tickets through cinema apps, websites, or directly at theatre counters as anticipation builds for the film’s arrival.


The third chapter in the Avatar saga introduces Varang, the matriarch of the Fire Clan, expanding Pandora’s cultural and emotional landscape.


_Avatar: Fire and Ash releases on 19th December in English, Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada._

அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள்

 *‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது! உங்கள் டிக்கெட்டை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!* 




இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன. 


இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக கொண்டாடப்படும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் இருக்கைகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐமேக்ஸில் முன்னணியில் இருக்கும் PVR INOX நிறுவனம் திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களை திறந்துள்ளது. 


PVR INOX உள்ளிட்ட திரையரங்குகள் செயலிகள், வலைதளங்கள் மற்றும் மார்க்கெட்டிங் சேனல்களில் டிஜிட்டல் ஒருங்கிணைப்புகளுடன் அவதார்-தீம் பிராண்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளன. எனவே, ரசிகர்கள் தற்போது சினிமா செயலிகள், வலைதளங்கள் அல்லது நேரடியாக திரையரங்க கவுண்டர்களிலோ தங்களது ஐமேக்ஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.


‘அவதார்’ திரைப்படத்தின் மூன்றாவது அத்தியாயம் பண்டோரா உலகின் கலாச்சார மற்றும் உணர்ச்சி நிலப்பரப்பை விரிவுபடுத்தும் ஃபயர் குலத்தின் தலைவரான வராங்கை அறிமுகப்படுத்துகிறது.


‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.