Featured post

Autograph Movie Review

 Autograph Review ஹாய் மக்களே nov 14 th அன்னிக்கு autograph படத்தை re release பண்ண போறாங்க. 2004 ல வெளி வந்த இந்த படம் ஒரு romanticmovie.  இ...

Wednesday, 12 November 2025

Autograph Movie Review

 Autograph Review


ஹாய் மக்களே nov 14 th அன்னிக்கு autograph படத்தை re release பண்ண போறாங்க. 2004 ல வெளி வந்த இந்த படம் ஒரு romanticmovie.  இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணி produce பண்ணிருக்கறது cheran தான். இந்த படம் அந்த வருஷத்தோட மிக பெரிய blockbuster hit னு தான் சொல்லணும். இந்த படத்துல cheran , Gopika, Sneha, Mallika and Kaniha னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை பல film festival ல premier  பண்ணி இருந்தாங்க. அதோட இந்த படத்தை telugu , kannada அப்புறம் bengali ளையும் remake பண்ணி இருந்தாங்க. 



சோ வாங்க இந்த படத்தோட கதையை பாக்கலாம். sendhil  அ நடிச்சிருக்க cheran ஓட வாழக்கை ல நடந்த விஷங்களை தான் காமிப்பாங்க. இவரோட wedding  க்காக தன்னோட friends and family அ invite பண்ணுறதுக்காக train ல போவாரு. அப்படி போகும் போது தான் இவரோட life ல நடந்த விஷயங்களை காமிப்பாங்க. முதல் ல இவரு school ல படிக்கும் போது kamala ன்ற பொண்ண love பண்ணுவாரு. இந்த school love ரொம்ப calm  அ இருக்கும். kamala கூட நடந்து வரணும் ண்றதுக்காக தன்னோட cycle tyre அ puncture பண்ணிட்டு நடப்பாரு. கடைசில இந்த  பொண்ண 11 th std முடிக்கறதுக்குள்ளயே கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க. இப்போ 14 வருஷம் கழிச்சு செந்தில் பாக்கும்போது kamala க்கு மூணு பசங்க இருக்கும் அப்புறம் இவங்களோட  husband ஒரு விவசாயி யா இருப்பாங்க. இப்போ இவரோட college க்காக kerala க்கு போவாரு. அங்க தான் lathika வா நடிச்ச gopika வை பாப்பாரு. ரெண்டு பேருமே love பண்ண ஆரம்பிப்பாங்க. lathika ஓட family பெரிய பணக்காரங்க. இவங்களுக்கு lathika ஓட love matter தெரிய வரவும் இவளோட cousin ஆனா madhavan ன்ற பையனுக்கு கட்டி வச்சுடுறாங்க. sendhil இவளுக்கும் வந்து invitation கொடுக்கும்போது விதவையா அவங்க பாட்டி கூட 14 வருஷமா இருந்துட்டு இருப்பாங்க. இப்படி love failure ஆச்சே னு நினச்சு ரொம்ப depressed அ இருப்பாரு. அப்போ தான் divya வா நடிச்சிருக்க sneha வை meet பண்ணுறாரு. இவங்க தான் sendhil க்கு full அ support குடுப்பாங்க. இவங்களுக்கு அப்பா கிடையாது அதுனால full family அ இவங்க தான் பாத்துக்கணும். கடைசில இவங்களுக்கு america ல இருந்து ஒரு  நல்ல சம்பந்தம் வரவும், அங்க கல்யாணம் ஆயிட்டு போய்டுவாங்க. ஆனா 3 வருஷம் கழிச்சு இவர்களுக்கும் divorce ஆயிடும். கடைசியா அப்பா அம்மா பாத்த ponnu ஆனா thenmozhi யா நடிச்சிருக்க kanika வை தான் கல்யாணம் பண்ணிப்பாரு. இந்த marriage ல தான் அவரோட school , காலேஜ் , ல படிச்சவங்க , friends  சொந்தக்காரங்க னு  எல்லாருமே சேந்து attend பண்ணுவாங்க. இதோட இந்த படமும் முடிஞ்சிடும். 


இந்த படத்துக்கு இசை அமைச்சது bharathwaj. இந்த படத்துல மொத்தம் 8 songs வரும். எல்லாமே super hit னு சொல்லலாம். ஞாபகம் வருதே ன்ற song  அ சேரன் தான் எழுதி இருந்தாரு. ஓவுவுறு பூக்களுமே ன்ற song ஒரு motivation song மாதிரி அமைச்சிருந்தது அதோட சித்ரா குரல் ல செம hit னு சொல்லலாம்.   இந்த படத்துல மொத்தம் 4 cinematographers work பன்னிருத்தாங்க. ravivarman senthil ஓட school life அ பண்ணிருப்பாரு. vijay milton senthil யும் lathikka வும் கேரளா ல இருந்த scenes அ shoot பண்ணிருப்பாரு. dwarakanath தான் chennai ல நடந்த scenes அ shoot பண்ணாரு. கடைசியா shanky mahendran sendhil ஓட perspective ல இருந்து வர scenes அ shoot பன்னிருத்தரு. இந்த படத்துக்கு நெறய விருதுகளும் கிடைச்சது.  


இப்போ இந்த படத்துல sneha ஓட portions தான் அதிகமா இருக்கும். இவங்களோட expressions, dialogue delivery எல்லாமே அவ்ளோ நேர்த்தியை இருக்கும். முக்கியமா ஓவுவுறு பூக்களுமே song ல இவங்க குடுக்கற expressions லாம் அவ்ளோ perfect அ இருக்கும்.  gopika ஓட dance scenes , இவங்க college scenes எல்லாமே super அ இருக்கும். பல வருஷம் கழிச்சு cheran இவங்கள பாக்க வரும் போது ஒரு matured ஆனா character அ transform ஆயிருக்கிறது னு ரொம்ப அழகா perform பண்ணிருப்பாங்க. அடுத்து kamala அப்புறம் kaniha ஓட scenes லாம் கம்மி தான். இவங்களோட நடிப்பும் அருமையா இருக்கும். rajesh cheran ஓட அப்பாவா , ilavarasu cheran ஓட teacher அ இவங்களோட performance யும் அட்டகாசமா இருக்கும்.  


இப்போ re release க்கு ready ஆயிட்டுருக்க  இந்த படத்துக்கு colour gradation லாம் குடுத்து update பண்ணிருக்காங்க. அதோட dolby atmos sound க்கும் improve பண்ணிருக்காங்க. இந்த படத்தோட running time அ 15 mins க்கு கொறச்சுருக்காங்க. அது மட்டும் இல்ல cheran இந்த படத்தோட re release க்காக 50 lakhs spend பண்ணிருக்காரு னு ஒரு interview ல கூட சொல்லிருக்காரு.  


ஒரு soulful  ஆனா realistic touch ல இருக்கற படம் தான் இந்த autograph . சோ மறக்காம இந்த படத்தோட magic  அ theatre  ல பாத்து enjoy பண்ணுங்க.

மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 *‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*














ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 


நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’ காலத்தில் இருந்தே ராமதாஸ் அண்ணன் எங்கள் டீமுக்கே பெரிய பக்கபலமாக இருந்தார். அவருடைய கேரக்டர் போலவே இந்தப் படமும் அமைந்ததில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை மட்டும் காட்டாமல் விறுவிறுப்பாக ஜாலியாக இயக்கி இருக்கிறார் கிஷோர். உங்கள் அனைவரையும் படம் நிச்சயம் திருப்தி படுத்தும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!”.


இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன், “டில்லி பாபு சார் தேர்ந்தெடுத்த கதை நிச்சயம் நன்றாக இருக்கும். ராமதாஸ் அண்ணன் 10 வருடங்களாக எனக்கு பழக்கம். நல்ல மனிதர். அவருக்கு நல்லதுதான் நடக்க வேண்டும். விஜயலட்சுமியின் நடிப்பு படத்தில் நன்றாக இருந்தது. எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். ஒரு படம் முடியும்போது அதில் அறம் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது இருக்கிறது. இயக்குநர் கிஷோருக்கு வாழ்த்துக்கள்”.


கலை இயக்குநர் மாதவன், “நான் ராஜீவ் அவர்களின் சிஷ்யன். ‘லிஃப்ட்’ படம் செய்து கொண்டிருக்கும்போது துரைதான் என்னை கூப்பிட்டார். ஏனோதானே என்று இந்தப் படம் செய்ய முடியாது. ஒவ்வொரு விஷயமும் கவனமாக செய்திருக்கிறோம். நம்பிக்கை கொடுத்த இயக்குநர், கேமரா மேனுக்கு நன்றி”.


இயக்குநர் சதீஷ் செல்வகுமார், “இங்கு இருக்கும் நம் எல்லோருடைய கதைதான் ‘மிடில் கிளாஸ்’. ரொம்ப முக்கியமான கதை இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.


ஸ்ரீகுமரன் ஃபிலிம்ஸ், ராஜ்சிதம்பரம். “தமிழ்நாட்டில் ‘லப்பர் பந்து’, ‘மாமன்’ படங்களை விநியோகம் செய்திருக்கிறேன். மூன்றாவது படம் ‘மிடில் கிளாஸ்’. படம் வெற்றியடைய செய்வது உங்கள் கையில்தான் உள்ளது”.


இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, “தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் திறமையை ஊக்குவித்தவர் டில்லி பாபு சார். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அதற்கு காரணம் டில்லி பாபு சார் சினிமா மீது வைத்திருந்த ஈடுபாடு. அவர் கேட்டு ஓகே சொன்ன இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு தேவை. கிஷோர் நல்ல இயக்குநர் என்பதை படத்தின் டிரைய்லரே சொல்கிறது. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். முனீஷ்காந்தை கதையின் நாயகனாக பார்ப்பதில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக இருந்தாலும் அவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். இதுபோன்ற கதாபாத்திரத்தை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்த விஜிக்கு வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ராஜூமுருகன், “என் மனதுக்கு நெருக்கமான படம் இது. எளிமையான கதைதான். ஆனால், அது விஷயம் பெரிது. டிவி நிகழ்ச்சியில் சண்டை போடுவதை கொண்டாடும் இந்த வேளையில், கிரிக்கெட்டில் இருநாட்டு கேப்டன்கள் கைக்கொடுக்காமல் போவதை தேசபக்தி என பேசும் சூழலில் இந்தப் படம் பேசும் விஷயம் முக்கியமானது”.


இயக்குநர் விஜய் வரதராஜ், “படம் பார்த்துவிட்டேன். படத்தில் பேசப்பட்ட பல பிரச்சினைகளை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ஆனந்த், “டில்லி பாபு சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ’மிடில் கிளாஸ்’ படம் பார்க்கும்போது டில்லி பாபு சார் முகம்தான் நிறைந்திருந்தது. என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையை அவர் மாற்றியிருக்கிறார். படத்தின் பல தருணங்களை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. இசை அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்”.


எடிட்டர் சான் லோகேஷ், “இந்தப் படத்தில் பல எமோஷன் தருணங்கள் உள்ளது. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்”.


ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், “இதுபோன்ற கதைகள் ஏன் எனக்கு வருவதில்லை என ஏக்கமாக எதிர்பார்த்திருந்தேன். கதை மீது நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் சின்சியராக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கும் பிடிக்கும்”.


இயக்குநர் விஷால் வெங்கட், “டில்லி பாபு சார் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை பொறுப்புடன் அடுத்து எடுத்து செல்லும் தேவ் மற்றும் துரை இருவருக்கும் வாழ்த்துக்கள். சந்தோஷமும் நிம்மதியும் எங்கே என்ற தேடுதல் எல்லோருக்கும் வாழ்க்கையில் இருக்கும். அதை தான் இந்தப் படம் சொல்கிறது. உங்களுக்கும் படம் கனெக்ட் ஆகும். முனீஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் நடிப்பில் கலக்கிவிட்டார்கள். படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.


இயக்குநர் சுப்ரமணியம் சிவா, “நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார். அதை எழுதிய கார்ல் மார்க்ஸ் பணத்திற்கு எப்படி கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்றுதான் ‘மிடில் கிளாஸ்’ கார்ல் மார்க்ஸூம் கஷ்டப்படுகிறார். விஜயலட்சுமி நுணுக்கமாக சிறப்பாக நடித்திருக்கிறார். பணத்திற்கான போராட்டம்தான் இந்தப் படம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ஏ. வெங்கடேஷ், “இயக்குநர் கிஷோர் திறமையாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ மனிதன் எப்படி இருப்பார் என்பதை திரையில் காட்ட முனீஷ்காந்த் சரியான தேர்வு. மிடில் கிளாஸ் நபர்களிடம் எப்போதும் கனவும் ஏக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அவன் வாழ்வை மாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதை அவன் தவற விட்டு அதற்காக போராடும் விஷயம்தான் இந்தப் படத்தின் கதை. விஜயலட்சுமிக்கு இந்தப் படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா, “என் கதையே படமாக இருக்கிறதே என்ற எண்ணம்தான் படம் பார்க்கும்போது எனக்கு தோன்றியது. படத்தின் முதல் ஷாட்டிலேயே இது வேற லெவல் படம் என்பது புரிந்தது. திரைக்கதை புதுமையாக இருந்ததுதான் பெரும்பலம். முனீஷ்காந்த், விஜயலட்சுமி பற்றி பேசாமல் இந்தப் படம் கிடையாது. விஜி அசத்தி இருந்தார். முனீஷ்காந்த் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். தொழில்நுட்பக் குழுவினரின் பணிக்கு வாழ்த்துக்கள். தேவ் மற்றும் துரைக்கு வாழ்த்துக்கள். திரையில் இந்தப் படத்தை என் குடும்பத்தோடு மீண்டும் பார்க்க காத்திருக்கிறேன்”.


பாடகர் ஆண்டனி தாசன், “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளருக்கு நன்றி. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.


இயக்குநர் சக்திவேல், “டில்லி பாபு சார் கம்பெனியில் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்கள்தான். திறமை மீது நம்பிக்கை வைத்தவர்தான் டில்லி பாபு. ’மிடில் கிளாஸ்’ படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நடிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”


இயக்குநர் ரவீந்திரன், “என்னுடைய இரண்டு படங்களுக்கு கோ-டைரக்டராக பணியாற்றினார் கிஷோர். இப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். இந்தக் கதையை முதலில் என்னிடம்தான் சொன்னார். முனீஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சூப்பர். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


நடிகர் குரேஷி, “டில்லி பாபு சாரிடம் வாய்ப்பு கேட்டேன். என்னை மதித்து அவர் கொடுத்த வாய்ப்பு இது. முனீஷ்காந்த், விஜயலட்சுமி நன்றாக நடித்துள்ளார்கள். ராதாரவி சார், கோடாங்கி என எல்லோரும் கலக்கி இருந்தார்கள். ‘மிடில் கிளாஸ்’ என்ற பெயருக்கு ஏற்ப பல விஷயங்கள் படத்தில் இருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


பாடகி சுப்லாஷினி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த பிரணவ்வுக்கு நன்றி. வித்தியாசமான பாடலாக இருக்கும். இந்தப் பாடலுக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவு தேவை”.


இயக்குநர் ராகவ் மிருதுத், “படத்தின் முதல் ஷாட் அருமையாக இருந்தது. பல பெரிய விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற படங்கள்தான் நூறு கோடி வசூலிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா ஸ்டைல் மாறும். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வேண்டும்”.


ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி பாஸ்கர், “டில்லி பாபு சார் மறைவுக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள்”.


இசையமைப்பாளர் பிரணவ், “எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் துரை, தேவ், இயக்குநர் கிஷோருக்கு நன்றி. படத்தில் நிறைய விஷயங்கள் என்னோடு கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. என்னுடைய பெற்றோர், டெக்னீஷியன்ஸ், நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய குரு சந்தோஷ் நாராயணன், மீனாட்சி அக்காவுக்கு நன்றி. படம் 21 ஆம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “’கர்ணன்’, ‘வாழை’, ‘பாரீஸ் ஜெயரஜாஜ்’, ‘ரெட்ரோ’ எனப் பல படங்களில் என்னுடைய பணியாற்றியுள்ளார் பிரணவ். ரொம்ப திறமையானவர். திபு நினன் தாமஸ், பிரணவ் என என்னுடைய அணியில் இருந்து அடுத்தடுத்து இசையமைப்பாளர்கள் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. படம் பெரும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்கள்”


தயாரிப்பாளர் தேவ், “எனக்கு எமோஷனலான தருணம் இது. டில்லி சார் ரொம்ப ஆசைப்பட்டு தொடங்கிய படம் இது. அவர் ஆசியுடன் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது. அவரின் மறைவுக்குப் பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தது. ஆனால், அதற்கான ரூட் மேப் தெளிவாக டில்லி சார் வைத்திருந்தார். அதை துரை அண்ணா தெளிவாக செயல்படுத்தி வருகிறார். டில்லி சார் ஆசைப்பட்டதை கிஷோர் அண்ணா அழகாக திரையில் எடுத்து வந்துள்ளார். நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சரியாக தேர்வு செய்துள்ளார் இயக்குநர். முனீஷ்காந்த் அண்ணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவருக்கு நன்றி. அடுத்து நிறைய படங்கள் அவர் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும். விஜயலட்சுமி மேமின் நடிப்பு தீவிரமாக இருந்தது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.


நடிகை விஜயலட்சுமி பேசியதாவது, “’மிடில் கிளாஸ்’ படத்தில் ரொம்பவே ரசித்து நடித்தேன். கிஷோருக்கு நன்றி. விஜியும் அன்புராணியும் எதிர் எதிர் துருவங்கள். இந்தக் கதைக்கு முனீஷ்காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடியும் எனத் தெரியவில்லை. அவருடன் நடித்தது மகிழ்ச்சி. நாங்கள் நினைத்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் டில்லி பாபு சாரின் ஆசீர்வாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


இயக்குநர் கிஷோர், “இந்தக் கதையை பிடித்து ஒத்துக் கொண்ட டில்லி பாபு சாருக்கு நன்றி. முனீஷ்காந்த், விஜயலட்சுமி என எல்லோரின் கதாபாத்திரத்திற்கும் என்னிடம் ரெஃபரன்ஸ் உள்ளது. ராதாரவி சாரை புதுமையான கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள். காளிவெங்கட், வேலராமமூர்த்தி, குரேஷி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பக் கலைஞர்களும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார்கள். ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதைகளை தாண்டிய ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கும். அடுத்து என்ன என்ற த்ரில்லோடு இந்தப் படம் இருக்கும். படத்தை நிச்சயம் தியேட்டரில் சென்று பாருங்கள்”.


நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது, “கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகுதான் தெரிந்தது கதைதான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குநர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

Vels Film International presents “UNKILL_123” — a psychological thriller about fame and it's consequences

 *Vels Film International presents “UNKILL_123” — a psychological thriller about fame and it's consequences*






Vels Film International Limited, headed by Dr. Ishari K. Ganesh, proudly announces its new film 'UNKILL_123', a gripping psychological thriller that explores how the search for online fame can change a person’s life and mind.

Directed by Sam Anton and written by Sam Anton & Savari Muthu, UNKILL_123 stars Anurag Kashyap in a powerful lead role, along with Sangitha in an emotional performance. The film’s music is composed by Jerard Felix, and cinematography is by Krishnan Vasant.


The story follows the rise and fall of a common man turned social-media influencer whose dream of becoming famous slowly turns into an obsession. It shows how the pressure to stay popular can lead to emotional stress, loneliness, and a loss of identity reflecting the darker side of today’s digital world. The film captures the growing influence of social media in everyday life and the unseen battles behind the filtered smiles where validation, envy, and insecurity collide.


Dr. Ishari K. Ganesh, Chairman and Producer of Vels Film International, said:

“We have all witnessed the rise of influencers who became stars through social media. But very few talk about the emotional cost of that fame, the loneliness, the comparison, and the psychological strain behind the screens. UNKILL_123 is a story that captures both the glamour and the pain of this new-age fame culture.”


*CAST:*

Anurag Kashyap

Sangitha


*CREW:*

Director: Sam Anton

Co-Writer: Savari Muthu

Director of Photography: Krishnan Vasant

Music: Jerard Felix

Art Director: Sowndar Nallasamy

Editor: Naash

Costume Designer: Sindhuja Ashok

Choreography: Azar & Raymond Callanan

Stunts: Kottiswaran

Produced by: Dr. Ishari K. Ganesh

Banner: Vels Film International Limited

PRO: Riaz K Ahmed, Paras Riyaz

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் 'அன்கில்_123'— புகழ் மற்றும் அதன்

 *வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் 'அன்கில்_123'— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்*






வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில்  டாக்டர் இஷரி K கணேஷ் அவர்கள் பெருமையுடன் அறிவிக்கிறார் —

"சமூக ஊடகப் புகழின் பேராசை எவ்வாறு ஒருவரின் வாழ்க்கையையும் மனதையும் மாற்றுகிறது என்பதை ஆராயும் புதிய மனோ தத்துவ திகில்  படம் தான் 'அன்கில்_123' (Unkill_123).


சாம் அன்டன் இயக்கத்தில், சாம் அன்டன் மற்றும் சவாரி முத்து இணைந்து எழுதியுள்ள இந்தப் படத்தில், திறமையான இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் சக்திவாய்ந்த முன்னணி  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நடிகை சங்கீதா உணர்ச்சிகரமான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்க , ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்த் மேற்கொண்டுள்ளனர்.


இந்த கதை, புகழைப் பெறும் கனவுடன் தொடங்கும் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் உடைய  வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது என்பதைக் கூறுகிறது. புகழின் அழுத்தம், தனிமை, மற்றும் அடையாள இழப்பு ஆகியவை எவ்வாறு ஒருவரின் உண்மையான உலகத்தைப் பாதிக்கிறது என்பதை படம் வெளிப்படுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு பதிவிற்கு பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சிப் போராட்டங்களையும் — ஒப்பீடு, பொறாமை, மற்றும் தன்னம்பிக்கை குறைபாடு ஆகியவற்றின் மோதல்களையும் இந்த படம் உண்மையாகச் சித்தரிக்கிறது.


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர் இஷரி K கணேஷ் அவர்கள் கூறியதாவது:


சமூக ஊடகங்கள் மூலம் புகழ்பெற்ற பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த புகழுக்கான உணர்ச்சி விலை பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை — தனிமை, ஒப்பீடு, மற்றும் மன அழுத்தம் ஆகியவை அதன் மறுபக்கம். ‘அன்கில்_123’ இந்த புதிய ‘புகழ் கலாச்சாரம்’ உள்ள பிரகாசத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் வலியையும் வெளிப்படுத்துகிறது.


*நடிகர்கள்:*

அனுராக் கஷ்யப் 

சங்கீதா 


*தொழில்நுட்பக் குழுவினர்*

இயக்கம்: சாம் அன்டன்

இணை எழுத்து: சவாரி முத்து

ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்

இசை: ஜெரார்ட் ஃபெலிக்ஸ்

ஆடலமைப்பு: சிந்துஜா அசோக்

கலை இயக்கம்: சௌந்தர்ராஜ்

நடன அமைப்பு: அஸர் & ரேமண்ட் காலனன்

சண்டை இயக்கம்: கோட்டீஸ்வரன்

தயாரிப்பு: டாக்டர் இஷரி K கணேஷ்

தயாரிப்பு நிறுவனம்: வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Karikaadan Movie Teaser’ Crosses 2 Million Views: A Pan-India Spectacle in the Making

 *’Karikaadan Movie Teaser’ Crosses 2 Million Views: A Pan-India Spectacle in the Making*





A fresh wave of creative energy from the Kannada film industry is capturing nationwide attention once again. Following the phenomenal success of KGF and Kantara, a new Pan-India project titled Karikaadan has entered the spotlight. The Karikaadan Movie Teaser, released recently in five languages: Kannada, Tamil, Telugu, Malayalam, and Hindi,  has amassed over two million views within days, marking a remarkable milestone for a debut franchise.


Karikaadan unfolds as an electrifying fusion of action and supernatural elements, combining cinematic scale with emotional resonance. Conceived as a genre-defying thriller, the film promises intense sequences, stirring music, and breathtaking visuals that transcend linguistic boundaries.


The story is penned by Kaada Nataraj, a passionate artist who transitioned from the corporate world to the creative space. Determined to bring his long-cherished vision to life, Nataraj has meticulously planned every stage of production. His wife Deepthi Damodar, under the banner of Riddhi Entertainments, produces the film, supported by co-producers Ravikumar S.R. and Nataraja S.R., with Prakash S.R. and Diwakar B.M. serving as executive producers.


The film boasts a stellar cast including Kaada Nataraj, Nireeksha Shetty, Yash Shetty, Baby Riddhi Nataraj, Kriti Verma, Bhalarajvadi, Manjuswamy M.G., Vijay Chendur, Vipin, Mahesh Chandru, Surya, Karisubbu, Chandraprabha, Govinde Gowda, Rakesh Poojary, Harish Kundur, Rashmi, Master Aryan, Harshith, and Giri. The screenplay, dialogues, and direction are helmed by Gilli Venkatesh, whose sharp storytelling lends the film its dynamic edge. Known for his impactful presence in reality television and his notable performance in Hulipete, Venkatesh brings both experience and authenticity to the project.


Cinematographer Jeevan Gowda captures the lush landscapes of Chikkamagaluru, Kalasa, Kudremukh, Mandya, and Chikkanayakanahalli with striking visual detail, while editor Deepak C.S. weaves the footage into a seamless, fast-paced narrative. The film’s art direction is by Ravi and Goudalli Shashi, choreography by Ramkiran, and the background score is composed by Shashank Sheshagiri, whose music enhances the film’s emotional and action-driven moments.


With the Karikaadan Movie Teaser setting the internet abuzz and industry circles praising its cinematic ambition, the film is positioned as one of the most awaited Pan-India releases of the year. Combining thrilling action, haunting mystery, and a heartfelt human story, Karikaadan is all set to deliver a grand theatrical experience when it hits screens soon.

டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் 'கரிகாடன்

 டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் 'கரிகாடன்'.





கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட 'கேஜிஎஃப்', 'காந்தாரா ' படங்கள் பெரிய வெற்றி பெற்றுக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே  கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் 'கரிகாடன்' படத்தின் டீசரும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசர் பார்வையாளர்களிடம்  அதிர்வலைகளை ஏற்படுத்திக் கவனிக்க வைக்கிறது.


மாறுபட்ட வகைமையில் ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக

‘கரிகாடன் ‘

உருவாகியுள்ளது.


இப்படத்தில்

காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி,

மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி,

கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய் சந்தூர், சந்திரபிரபா,கரிசுப்பு,

கிரி,பாலராஜாவாடி,

மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ்.

இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி,

ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ், கலை ரவி, கவுடல்லி சாஷி, நடனம் ராம்கிரண்.


ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில்  தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார்.

இணைத் தயாரிப்பு: ரவிக்குமார் எஸ்.ஆர்.


இசையையும் சிலிர்ப்பையும் இணைக்கும் ‘கரிகாடன்’ படத்தின் சாகச மற்றும் அதிரடிப் பயணத்தைத் திரையரங்கில் விரைவில் காணலாம்.


அதிரடி ஆக்சன் காட்சிகள். அசத்த வைக்கும் இசை என்று திரையில் ஒரு மாய அனுபவத்தை உணர வைக்கும் ஒரு படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது.


கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞரான கடா நட்ராஜ், தனது கனவைப் பெரிய திரையில் நனவாக்க வந்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள காடா நடராஜ் கவனமாகத் திட்டமிடப்பட்டு இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.

ரித்தி என்டர்டெயின்மென்ட் ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கும் அவரது மனைவி தீப்தி தாமோதர், சகோதரர் ரவிக்குமார் எஸ்.ஆர். மற்றும் நண்பர் திவாகர் பி.எம். ஆகியோர் அவரது திரை உலகக் கனவை நிறைவேற்றத் துணை நின்றுள்ளனர்.


கரிகாடனின் படக்குழுவில் ஏராளமான திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.


சிறந்த இயக்குநரான கில்லி வெங்கடேஷ், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில்  தனது நிபுணத்துவத்துடன் ‘கரிகாட’னை உருவாக்கியுள்ளார். 


ஜீவன் கவுடாவின் ஒளிப்பதிவு சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா மற்றும் சக்கராயபட்னாவின் அழகைப் படம்பிடித்திருக்கிறது. தீபக் சி.எஸ்.ஸின் எடிட்டிங் படத்தை சாகசம் நிறைந்த சங்கிலித் தொடராக இணைத்துள்ளது.


‘கரிகாடன்’ படத்தின்  டீசர் இப்போது வெளியாகியுள்ளது. படத்தை ரசிக்கத் தயாராக இருக்குமாறு படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Tuesday, 11 November 2025

KINARU meaning “The Well” – is a heart-warming Tamil children’s film, releasing this Children’s Day

 KINARU meaning “The Well” – is a heart-warming Tamil children’s film, releasing this Children’s Day (November 14th). Produced by Madras Stories, the film continues the studio’s vision of creating powerful independent cinema while nurturing new technicians, fresh talent, and young filmmakers. After critically acclaimed titles like Burkha and Lineman — both celebrated in festival circuits, with Burkha winning 5 international awards — Kinaru marks their next step in championing original storytelling rooted in emotion, culture, and childhood innocence.











*THE STORY:*


The film follows four nine-year-old children who are constantly chased away for playing in someone else’s well. Tired of being beaten and humiliated, they decide to dig their own well on their land. But the protagonist’s grandmother believes their family is cursed with water and firmly stops them. How the children learn about identifying groundwater, save money for tools, convince adults, and fight their fears — while winning the grandmother’s trust — forms a moving and adventurous journey of hope, friendship, innocence, and determination.


*AWARDS & FESTIVALS*


* Award Winner – Pegasus Film Festival 2024

* Winner – Award of Merit – Accolade Global Film Competition

* Winner – Award of Merit – Accolade Global Film Competition (Special Mention)

* Winner – Award of Merit – IndieFEST Film Awards – Film Feature

* Winner – Award of Merit – IndieFEST Film Awards – Direction

* Winner – Award of Merit – IndieFEST Film Awards – Cinematography

* Competing at Chennai International Film Festival 2024 – World Cinema Competition


*CAST & CREW*


Director: Harikumaran

Cinematographer: Gautham Venkatesh

Music: Bhuvanesh Selvanesan

Editor: K S Gowtham Raj

Sound Mixing: Daniel (Four Frames)

Sound Design: Kishore Kamaraj

Executive Producer: Srini Suryaprakasham

Producers: Suriya Narayan & Vinod Shekhar

Production Company: Madras Stories

Runtime: 110 minutes | Language: Tamil | Subtitles: English

Publicity Designs: Madan

PRO: Nikil Murukan

கிணறு (Kinaru) – “The Well” எனப் பொருள்படும் குழந்தைகள் படம்,

*கிணறு (Kinaru) – “The Well” எனப் பொருள்படும் குழந்தைகள் படம், குழந்தைகள் தினத்தை (November 14th) முன்னிட்டு திரைக்கு வருகிறது. Madras Stories தயாரித்துள்ள இந்த படம், புதிய இயக்குநர் மற்றும் புதுமையான தொழில்நுட்பக் குழுவை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவானது.*











Burqa மற்றும் Lineman போன்ற விமர்சக பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து, கிணறு குழந்தைத்தனம், நட்பு, நம்பிக்கை, குடும்ப உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையை சொல்லுகிறது. Burkha உலக திரைப்பட விழாக்களில் 5 சர்வதேச விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.


*கதை*


ஒரு கிராமத்தில் நாலு பிள்ளைகள், அருகிலுள்ள வீட்டின் கிணற்றில் விளையாடுவதற்காக அடக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுகிறார்கள். அதனால், தங்களுக்காகவே ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறை நம்பிக்கைகள் மற்றும் தடை அவர்களின் முன்னே நிற்கின்றன. நிலத்தில் தண்ணீர் தேடும் அறிவு, கருவிகளுக்கான சேமிப்பு, பெரியவர்களை நம்ப வைப்பது, பயத்தைத் தாண்டி கனவு நோக்கி ஓடும் இப்பயணம் குழந்தைகளின் கண்களில் அழகாகச் சொல்லப்படுகிறது.


*விருதுகள் & விழாக்கள்*


Pegasus Film Festival 2024 – Award Winner

Accolade Global Film Competition – Award of Merit

Accolade Global Film Competition – Special Mention – Award of Merit

IndieFEST Film Awards – Film Feature – Award of Merit

IndieFEST Film Awards – Direction – Award of Merit

IndieFEST Film Awards – Cinematography – Award of Merit

Chennai International Film Festival 2024 – World Cinema Competition பிரிவில் அதிகாரப்பூர்வ போட்டித் தேர்வு



*குழு விவரம்*


இயக்கம்: ஹரிகுமார்

ஒளிப்பதிவு: கவுதம் வெங்கடேஷ்

இசை: புவனேஷ் செல்வநேசன்

எடிட்டிங்: கே. எஸ். கவுதம் ராஜ்

சவுண்ட் மிக்சிங்: டேனியல் (Four Frames)

சவுண்ட் டிசைன்: கிஷோர் காமராஜ்

தயாரிப்பாளர்கள்: சூர்யா நாராயணன் & வினோத் சேகர்

தயாரிப்பு நிறுவனம்: Madras Stories

மொழி: தமிழ் | உபசுரை: ஆங்கிலம் | காலவரை: 110 நிமிடங்கள்

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: மதன்


குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரசிக்கும், உணர்ச்சியும் நகைச்சுவையும் நிறைந்த குடும்பப்படமாக கிணறு வெளியாகிறது.



***


KINARU meaning “The Well” – is a heart-warming Tamil children’s film, releasing this Children’s Day (November 14th). Produced by Madras Stories, the film continues the studio’s vision of creating powerful independent cinema while nurturing new technicians, fresh talent, and young filmmakers. After critically acclaimed titles like Burkha and Lineman — both celebrated in festival circuits, with Burkha winning 5 international awards — Kinaru marks their next step in championing original storytelling rooted in emotion, culture, and childhood innocence.


*THE STORY:*


The film follows four nine-year-old children who are constantly chased away for playing in someone else’s well. Tired of being beaten and humiliated, they decide to dig their own well on their land. But the protagonist’s grandmother believes their family is cursed with water and firmly stops them. How the children learn about identifying groundwater, save money for tools, convince adults, and fight their fears — while winning the grandmother’s trust — forms a moving and adventurous journey of hope, friendship, innocence, and determination.


*AWARDS & FESTIVALS*


* Award Winner – Pegasus Film Festival 2024

* Winner – Award of Merit – Accolade Global Film Competition

* Winner – Award of Merit – Accolade Global Film Competition (Special Mention)

* Winner – Award of Merit – IndieFEST Film Awards – Film Feature

* Winner – Award of Merit – IndieFEST Film Awards – Direction

* Winner – Award of Merit – IndieFEST Film Awards – Cinematography

* Competing at Chennai International Film Festival 2024 – World Cinema Competition


*CAST & CREW*


Director: Harikumaran

Cinematographer: Gautham Venkatesh

Music: Bhuvanesh Selvanesan

Editor: K S Gowtham Raj

Sound Mixing: Daniel (Four Frames)

Sound Design: Kishore Kamaraj

Executive Producer: Srini Suryaprakasham

Producers: Suriya Narayan & Vinod Shekhar

Production Company: Madras Stories

Runtime: 110 minutes | Language: Tamil | Subtitles: English

Publicity Designs: Madan

PRO: Nikil Murukan

பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா

 ஜோஷினா


பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா


சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால் நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் ஜோஷினா. இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,சினிமாவில் ஆர்வம் வந்த பிறகு அதில் நிலைத்து நிற்கும்படியான தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள உரிய பயிற்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.


சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது முயற்சியால் கதாநாயகி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.


அப்படி இவர் தொடர்பு எல்லைக்குள் இருந்து பெற்ற வாய்ப்பு தான்  'நாட் ரீச்சபிள்' திரைப்படம். கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் 'மிடில் கிளாஸ் 'படம்.

அடுத்து 'துச்சாதனன் ' என்கிற படம்.



அடுத்து வெற்றிவீரன் மகாலிங்கம்  இயக்கும் புதிய படமான 'சூட்கேஸ் 'படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.


தன் சினிமா முயற்சிகள் பற்றி ஜோஷினா பேசும்போது,


"எங்கள் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை.சினிமாவில் எனக்குத் தெரிந்தவர் என்று யாரும் கிடையாது.

ஒரு கட்டத்தில் எனக்கு சினிமாவின் மீது ஆர்வம் வந்தது .

தயக்கமின்றி வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தேன் .யாருடைய பரிந்துரையும் இல்லாமல் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

என்னுடைய தோற்றத்திற்கு எந்த மாதிரியான வாய்ப்புகள் வருகிறதோ அதை ஏற்றுக் கொண்டு அதில் பிரகாசிக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.அதற்கான முன் தயாரிப்புகளில் நான் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.'' என்கிறார்.


'வெற்றியின் ரகசியம் திறமையுடன் உழைப்பதே' என்று பிராங்க்ளின் சொன்னதை  ஜோஷினா மனதில் இருத்தியிருக்கிறார்.


'திறமையை மிஞ்சிவிடக்கூடிய ஆற்றல் நிலையான பயிற்சிக்கு உண்டு'  என்பதையும் அவர் மறந்துவிடவில்லை.அதனால் சில பயிற்சிகளை எடுத்துள்ளார்.


அப்படி என்ன முன் தயாரிப்புகள் செய்து கொண்டுள்ளார் ?

 

" சினிமாவிற்கு நடனமாடத் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நான் பரதநாட்டியம் மட்டுமல்ல சினிமாவுக்கான நடனத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன்.எனக்குப் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் மேலும் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் .அதற்காக, கிடைத்த இடைவெளிகளில் நான் சும்மா இருக்கவில்லை.பைக் ரைட், கார் டிரைவிங் கற்றுக் கொண்டேன்.குதிரை ஏற்றம் ,சிலம்பம் கற்றுக் கொண்டேன்.  இப்படி அடிப்படையான தகுதிகளை நான் அடைந்துள்ளேன்.அதுமட்டுமல்லாமல் கூத்துப் பட்டறை கலைராணி அவர்களிடம் குரல் பயிற்சியும் பெற்றுள்ளேன். திரைப்படத்தில் திரையில் தோன்றும் தோற்றம் போலவே அதற்கு இணையான மதிப்புள்ளது நடிப்பவர்களின் குரல். குரலின் மூலம் ஒரு பாத்திரத்தை மேலும் வலுப்படுத்தலாம்.ஒரு பாத்திரத்துக்கு ஏற்றபடி  எப்படிக் குரலை வெளிப்படுத்துவது, அதில் உள்ள நுணுக்கங்கள் என்ன என்பதையெல்லாம்  கற்றுக் கொண்டுள்ளேன்.

தெலுங்குப் பட வாய்ப்புகளுக்காகத் தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறேன் .எனக்கு ஒரு தெலுங்குப் பட வாய்ப்பும் வந்துள்ளது.


நான் நடிக்கும் பாத்திரத்தில் நானே பேச வேண்டும்; டூப் போடாமல் நானே நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.எனக்கு வரும் வாய்ப்புகளில் என்னை 200% வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகவே இந்த முன் தயாரிப்புகளையெல்லாம் செய்து கொண்டுள்ளேன்."என்கிறார்.


ஆக இதுவரை படை திரட்டிக் கொண்டு இருந்தவர், இப்போது போர் தொடுக்க வந்துள்ளார் எனலாம்.



இவர் கல்கியின் பிரபலமான படைப்பான 'சோலைமலை இளவரசி' பாத்திரத்திற்காக அதே பெயரில் ஒரு போட்டோ ஷூட் எடுத்து முன்பு தன்னை வெளிப்படுத்தி இருந்தார். அண்மையில் வெளிவந்த 'காந்தாரா 2' படத்தின் இளவரசி அதே தோற்றத்தில் இருந்தது கண்டு முதலில் அதிர்ச்சியாகவும் பிறகு ஆச்சரியமாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.


இப்போது 

நடிக்கும் படங்கள்?


"இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள 'மிடில் கிளாஸ்' படத்தில் ராதாரவி அவர்களின் மகளாக நடித்திருக்கிறேன்.படம் விரைவில் வெளியாக இருக்கிறது.


அடுத்து வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் 'சூட்கேஸ்' படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் சாட்டை யுவன்தான் கதாநாயகன்.

அர்னா ட்ரீம் ஒர்க்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் மாடியிலிருந்து கீழே விழும் காட்சியில் எந்த வித பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் டூப் போடாமல் நடித்திருக்கிறேன்.

இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.


.'சூட்கேஸ்' படத்தைப் பொறுத்தவரை பிளாஷ் பேக் காலத்திலும், நிகழ் காலத்திலும் வரும்படியான காட்சிகள் உள்ளன .இரண்டிலும் இரண்டு விதமான பரிமாணங்களைக் காட்டும் வகையான நடிப்பு வாய்ப்புகள் இருந்தன. அதை நான் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.



எஸ் எஸ் ரீல் லைப் கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் ராஜேஷ் ஏசுதாஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கிறேன்.

ஒரு படத்தை இயக்குநர் தமிழ் இயக்குகிறார்.

இது ஒரு கிரைம் திரில்லர்.இந்தப் படத்தின் கதையைக் கேட்டு நடிப்பதற்கு பகத் பாசில் ஒப்புக் கொண்டுள்ளார். தேதிகள் சரியாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். அதே படத்தில் நடிப்பதற்கு ஆடுகளம் கிஷோரும் சம்மதித்துள்ளார். யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரியும்.


 இன்னொரு படத்தை இதுவரை படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த செம்மலர் அன்னம் இயக்குகிறார் .இது ஒரு பெண்ணை மையப் படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் கதை.

இப்படி நம்பிக்கையான வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.


என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டத்தில் ஓர் அறிமுகம் வேண்டுமானால் கிடைக்கலாம் . ஆனால் நின்று நினைக்க வேண்டுமென்றால் திறமை இருந்தால் தான் அது சாத்தியமாகும்.வெற்றி பெற்று நிலைத்திருப்பவர்கள் எல்லாருமே அந்த விதியின் அடிப்படையில் தான் பிரகாசித்து வருகிறார்கள்.

அந்த வழியில் செல்லவே நான் விரும்புகிறேன்.

நான் ஒரு இயக்குநரின் நடிகையாக அவர்கள் எதிர்பார்ப்பதை நடிப்பில் வெளிப்படுத்த, தொழில் ரீதியாக அனைத்து தகுதிகளிலும் கொண்டு இருப்பதாக நினைக்கிறேன் "என்கிறார் நம்பிக்கையுடன்.


V. K. Sundar 

Bhuvan Selvaraj