Featured post

வரலாற்று காவியமாக உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவி

 *வரலாற்று காவியமாக உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரக்ஷனா இந்துசூடனின் கம்பீ...

Monday, 24 November 2025

வரலாற்று காவியமாக உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவி

 *வரலாற்று காவியமாக உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!*



ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் மோகன்.ஜி-யின் கதையில் மிகத்தீவிரமான, ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம் 'திரெளபதி' ஃபிரான்சைஸில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். 


நேதாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து சோழ சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் 'திரௌபதி 2' திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'திரௌபதி' திரைப்படத்தின் நீட்சியாக அதன் வரலாற்று உலகத்தை காட்ட இருக்கிறது.  14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் III இன் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை விரிவடைகிறது. கடந்த காலத்தின் இந்த பிரமாண்டமான மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் முதல் பார்வை போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிகரமான தருணத்தை இரண்டாம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் புள்ளியாக மாறுகிறது. 


முதல் பார்வை போஸ்டரில் நடிகை ரக்ஷனா இந்துசூடன் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்களத்தின் வரலாற்று மற்றும் உணர்ச்சி தருணங்களை ஆழமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, படத்தின் கருவான பெண் சக்தியை பிரதிபலிக்கிறது. 


ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இவர்களுடன் நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் இந்த வரலாற்றுக் கதையில் நடித்துள்ளனர். 


போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் புரோமோஷனல் பணிகள் நடைபெறும். 


*நடிகர்கள்:*

ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கவுரங், திவி, தேவயாணி ஷர்மா, அருணோதயன்.


*தொழில்நுட்பக் குழு:*

வசனங்கள் - பத்மா சந்திரசேகர், மோகன் ஜி.,

இசை - ஜிப்ரான் வைபோதா,

ஒளிப்பதிவு - பிலிப் ஆர்.சுந்தர்,

எடிட்டிங் - தேவராஜ்,

கலை இயக்கம் - கமல்நாதன்,

நடனம் - தணிகா டோனி,

சண்டைக்காட்சி - ஆக்‌ஷன் சந்தோஷ்,

தயாரிப்பு - நேதாஜி புரொடக்ஷன்ஸ் (ஜி. எம் பிலிம் கார்ப்பரேஷன் உடன் இணைந்து),

இயக்கம் - மோகன் ஜி.

*The Majestic First Look of Rakshana Induchoodan as Draupathi Devi From the Historical Epic Draupathi 2 Unveiled

 *The Majestic First Look of Rakshana Induchoodan as Draupathi Devi From the Historical Epic Draupathi 2 Unveiled*



As anticipation builds around the upcoming Tamil-Telugu historical drama *Draupathi 2*, the makers have released the striking first look of *Rakshana Induchoodan* as *Draupathi Devi*. The character, positioned at a crucial narrative intersection in director Mohan G.'s vision, brings a fresh layer of dramatic depth and emotional weight to the film. With this reveal, the team sets the tone for what promises to be one of the most defining roles in the franchise.


Produced by Chola Chakravarthy of Netaji Productions in association with G. M Film Corporation, *Draupathi 2* expands the world established in the 2020 blockbuster *Draupathi* into a far more ambitious and historically rich canvas. Set in the 14th century, the film unfolds against the backdrop of the blood-stained rule of Hoysala emperor Veera Vallalar III, the valour and resistance of the Kadavarayas of Sendhamangalam, and the turbulent shifts triggered by the Mughal invasion of Tamil Nadu. Within this grand reconstruction of the past, the introduction of Draupathi Devi becomes an anchor point that connects the emotional essence of the first film with the expansive narrative arc of this sequel.


The first look presents Rakshana Induchoodan in a dignified and commanding presence, capturing the cultural depth, poise, and strength associated with the character. Her portrayal is designed to deepen the historical and emotional layers of the storyline, bringing a strong feminine force into the film’s dramatic core.


Joining Richard Rishi and Rakshana Induchoodan is a strong ensemble cast, with Natti Natraj playing a key role. The film also brings together Y. G. Mahendran, Nadodigal Barani, Saravana Subbiah, Vel Ramamoorthy, Siraj Johnny, Dinesh Lamba, Ganesh Gaurang, Divi, Devayani Sharma, and Arunodayan, further strengthening the film’s historical scale and dramatic presence.


On the technical front, the film maintains the same creative precision seen in Mohan G.'s previous works. The telugu dialogues are penned by Samrat, while Ghibran Vaibodha scores the music. Philip R. Sundar handles cinematography, capturing the period world with visual depth. Thanika Tony takes charge of choreography, Action Santosh designs the stunts, Devaraj oversees the editing, and Kamalnathan shapes the film’s extensive art direction.


With post-production progressing steadily, the makers are preparing to unveil more promotional material in the coming days as *Draupathi 2* moves toward its release.


*Cast:*

Richard Rishi, Rakshana Induchoodan, Natti Natraj, Y. G. Mahendran, Nadodigal Barani, Saravana Subbiah, Vel Ramamoorthy, Siraj Johnny, Dinesh Lamba, Ganesh Gaurang, Divi, Devayani Sharma, Arunodayan.


*Crew:*

Music - Ghibran Vaibodha

Cinematography - Philip R. Sundar

Editing - Devaraj

Art Direction - Kamalnathan

Choreography - Thanika Tony

Stunts - Action Santosh

Production - Netaji Productions (in association with G. M Film Corporation)

Direction - Mohan G.

செர்பன்ட் (Serpent) படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கலைப்புலி S தாணு!*

 *செர்பன்ட் (Serpent) படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கலைப்புலி S தாணு!*



தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.


பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) படம், நரேட்டிவ் கட் கான்செப்டில் தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான மற்றும் புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது. வழக்கமான முறைகள் மூலம் கதையை முன்வைக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளை பயன்படுத்தி படத்தின் மையக்கரு, திரைக்கதை ஓட்டம் ஆகியவற்றை காட்சி ரீதியாக தெரிவிக்க பாபி ஜார்ஜ் முயன்றுள்ளார். இது ஒரு குறும்படமோ அல்லது பைலட்டோ போல் இல்லாமல், முழு ஸ்கிரிப்ட்டிற்கான சினிமாடிக் பார்வையை வழங்குகிறது.


கதை தான் மையமாக இருக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், பரிச்சயமான நடிகர்கள் அல்லது விரிவான இடங்களுக்கு பதிலாக புதிய முகங்களை தேர்வு செய்துள்ளது படக்குழு. பெரிய நட்சத்திர மதிப்பு இல்லாமல் கூட வலுவான திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை தக்கவைக்க முடியும் என்பதை நிரூபிப்பதே குறிக்கோளாக உள்ளது.


இந்த கதையின் தனித்துவத்தை நம்பிய தயாரிப்பாளர்கள் தீபா ராணி மற்றும் இஸ்மாயில், இதனை தயாரிக்க முன் வந்துள்ளனர். எதிர்மறை முன்னணி பாத்திரத்தில் நடித்த இஸ்மாயில், இந்த திட்டத்தை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பட்ஜெட் வரம்புகள் மற்றும் பெரிய சவால்கள் இருந்தபோதிலும், குழு வெற்றிகரமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷனை முடித்து, மெருகூட்டப்பட்ட தியேட்டர் அனுபவத்தை அடைந்தது.


பலராலும் விரும்பப்படும் இசையமைப்பாளர் சி. சத்யாவின் (எங்கேயும் எப்போதும், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், அரண்மனை 3) ஈடுபாடு படத்தின் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. படக்குழுவின் வித்தியாசமான முயற்சியை உணர்ந்து, இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பு கொண்டுள்ளார். இது படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது.


எடிட்டர் ஸ்ரீநாத், DOP ஸ்டான்லி ஜான், டிஐ ஆனந்த் கிருஷ்ணன், சவுண்ட் என்ஜினியர் பாலாஜி மற்றும் இணை இயக்குநர் ஹரிஷ் உட்பட பல்வேறு திறமையான கலைஞர்கள் இந்த படத்தில் பணி புரிந்துள்ளனர்.


செர்பன்ட்டின் ஃபர்ஸ்ட் லுக்கை மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு வெளியிட்டுள்ளார். இது குழுவிற்கு ஒரு மைல்கல்லாகவும், திரைப்படத் தயாரிப்புக்கான அவர்களின் புதிய அணுகுமுறையின் அங்கீகாரமாகவும் நிற்கிறது. பாம்பை போல விஷமுள்ள மற்றும் கணிக்க முடியாத ஒரு பாத்திரத்தை டைட்டில் குறிக்கிறது, இப்போது படம் அதன் டீஸர் வெளியீடு மற்றும் இறுதி திரையிடலை நோக்கி முன்னேறுகிறது.


கதைசொல்லலில் இந்த தனித்துவமான பரிசோதனை பார்வையாளர்களிடம் எதிரொலிக்கும் மற்றும் முன்னால் பெரிய வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


*நடிகர்கள்:*

இஸ்மாயில், ராஜேஷ் VGR, வெற்றி, விக்னேஷ் ராமமூர்த்தி, விக்கி சந்திரன், குணா ஆறுமுகம், கார்த்திகேயன், ஆமோத் சக்ரபாணி


குழுவினர்:

கதை மற்றும் இயக்கம்: பாபி ஜார்ஜ்

தயாரிப்பு: தீபா ராணி, இஸ்மாயில்

DOP: ஸ்டான்லி ஜான்

எடிட்டர்: ஸ்ரீநாத்

இசை: சி. சத்யா

DI: ஆனந்த் கிருஷ்ணன்

சவுண்ட் என்ஜினியர்: பாலாஜி

இணை இயக்குநர்: ஹரிஷ்

PRO: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

 *விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!*



மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!


பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி  ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த,  மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர்.


வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் உடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு  நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறினார். பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். விஜய் சேதுபதி, நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியதும் வீடியோவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தது.


இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB  Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார். படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான  இசையமைப்பால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில்  தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் அறிமுகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.


*நடிகர்கள் :*


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார். 


*தொழில்நுட்பக் குழு:* 


எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா

வழங்குபவர் : சார்மி கௌர் 

தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects

இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்

CEO : விசு ரெட்டி

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா


Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures’

 *Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures’ #PuriSethupathi Shoot Wrapped Up*



The much-talked-about Pan-India project #PuriSethupathi, in the crazy combination of dashing director Puri Jagannadh and versatile actor Vijay Sethupathi, has officially wrapped its shoot. What began as an intense mass-action entertainer has now reached the final day of filming, and the team marked the occasion by releasing a cheerful and emotional video showcasing moments between Puri, Vijay Sethupathi, and Charmme Kaur.


In the video, Vijay Sethupathi expresses how deeply he will miss working with Puri and the entire unit, calling the journey a memorable and joyful experience. Puri and Charmme shared similar sentiments, highlighting the warm bond developed during the shoot. Vijay even light-heartedly complimented Puri’s jacket, adding a fun touch to the farewell.


The film is jointly produced by Puri Jagannadh and Charmme Kaur under Puri Connects, along with JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. The project features Samyuktha as the female lead, while Tabu and Duniya Vijay Kumar play key roles.


National Award–winning composer Harshavardhan Rameshwar, known for impactful scores in films like Arjun Reddy and Animal, is composing the music for the film. Brahmaji and VTV Ganesh will be seen in hilarious roles.


With the entire shoot now completed, the team is preparing to kick-start promotions. The title and first-look poster will be unveiled soon as the film gears up for Pan India release in five languages- Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi.


*Cast* : Vijay Sethupathi, Samyuktha, Tabu, Vijay Kumar


*Technical Crew:*


Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, CHARMME KAUR , 

JB Narayan Rao Kondrolla,

CHARMME KAUR PRESENTS .. 

Banners: Puri Connects, 

CEO: Vishu Reddy

Music: Harshavardhan Rameshwar

PRO: Yuvraaj 

Marketing: Haashtag Media

Sunday, 23 November 2025

தமிழ் - தெலுங்கு மொழிகளில் மீண்டும் வெற்றிகொடி கட்டும் என். லிங்குசாமி !

 தமிழ் - தெலுங்கு மொழிகளில் மீண்டும் வெற்றிகொடி கட்டும் என். லிங்குசாமி !



பத்திரிகையாளராக இருந்து படைப்பாளி ஆனவர் லிங்குசாமி, முதல் படத்திலேயே (ஆனந்தம்) மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இயக்கியவர். இரண்டாவது படத்தில் (ரன்) சாக்லெட் பாய் மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியவர், மூன்றாவது படத்தில் (ஜி) அஜீத்தை அதகளம் பண்ண வைத்தவர், நான்காவது படத்தில் (சண்டக்கோழி) விஷால் என்கிற துடிப்பான இளைஞரை சினிமாவிற்கு அடையாளம் காட்டியவர்.


பருத்தி வீரனில் கருப்பு கிராமத்து இளைஞனாக அறியப்பட்ட கார்த்தியை நோக்கி அதே மாதிரியான முரட்டு கிராமத்து கேரக்டர்கள் படையெடுத்தபோது அழகான ஆக்ஷன் ஹீரோவாக்கி, 'பையா 'மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இப்படி ஒவ்வொரு படமும் லிங்குசாமியின் பெயரை சினிமா சரித்திரம் பதிவு செய்து கொண்டது.


இப்போது லிங்குசாமியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு பையாவின் தெலுங்கு வெர்சனான 'ஆவரா'  நேற்று ரீ லீசானது. ஆவராவை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். 


இதுபற்றி கார்த்தி டுவிட்டரில் "ஆவரா எப்போதுமே எனக்கு ஸ்பெஷலான படம். அந்த காதலும், இசையும் எப்போதும் என்னுடனேயே இருக்கிறது. மீண்டும் அந்த படத்தை பெரிய திரையில் பார்த்து எனது நினைவுகளை மீட்டுக் கொண்டுவர ஆவலாக இருக்கிறது. படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.


ஆம்... உண்மையில் 'பையா' கார்த்தியின் சினிமா வாழ்க்கையின் சிறப்பான பாதையை போட்டுக் கொடுத்த படம்.


இதை அடுத்து லிங்குசாமியின் 'அஞ்சான்' மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.


ஆம் இந்தியாவிலேயே முதன் முறையாக மறு எடிட் செய்து வெளியாகும் படம் இது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலான நீளத்தை குறைத்து, காட்சிகளை மாற்றி அமைத்து, ரி-சென்சார் செய்து

 'அஞ்சான்' வெளிவர இருக்கிறது. அதற்காக அவரும், அவரது டீமும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அஞ்சான் மறு வெளியீடு தமிழ் சினிமா சரித்திரத்தில் முக்கிய நிகழ்வாக மாற இருக்கிறது.


இப்படத்தை நடிகர் சிவகுமார், 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தர பாண்டியன், திருப்பதி பிரதர்ஸ் என்.சுபாஷ் சந்திரபோஸ், டைரக்டர்கள் சரண், பிருந்தா சாரதி, பன்னீர் செல்வம், லோகு, மணி பாரதி, சந்தோஷ், தயாரிப்பாளர் ஹெச்.வேணு, ஜி.ஆர்.வெங்கடேஷ், எடிட்டர் ஆண்டனி இவர்களுடன் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்ள் 70 பேர்கள் ஸ்பெஷ்ல் ஷோவில் பார்த்து ரசித்தனர். அத்தைனை பேரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இப் படம் வருகிற 28ம் தேதி திரைக்கு வருகிறது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் . 


சினிமாவை நேசிக்கும், நல்ல சினிமாவை மக்களுக்கு தர நினைக்கும், லிங்குசாமியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி இருக்கிறது.



- johnson pro 

📧 johnmyson@gmail.com

📞 +91 94449 00048

X: @johnsoncinepro

Insta: @johnsoncinepro

FB: Johnson Pro

Hridhu Haroon starrer, “Texas Tiger” first look got released

 Hridhu Haroon starrer, “Texas Tiger” first look got released



Texas Tiger is written and directed by Selvah Kumar Thirumaran, who earlier made waves with Family Padam.


It’s a vibrant, fun-filled new age musical entertainer set against the colorful backdrops of Chennai and mounted on a grand scale.


The film stars Hridhu Haroon (Dude, Thugs, Bad Girl, All We Imagine as Light, Mura) and Samyuktha Vishwanathan (Mr. Bhaarath, I’m a Game) in the lead roles, joined by a stellar supporting cast including Rohini Molleti, Sachana, Wafa Khatheeja, Peter K, Parthiban Kumar, Anthony Daasan and Samyutha Shan.



With music by Osho Venkat, cinematography by Vishnu Mani Vadivu (associate of Ace DOP Thiru) and editing by Praveen Antony. The film promises youthful energy blended with grand visuals. The creative team also includes art direction by K . B Nandhu, stunts by Sugan, lyrics by Kelithee, Adhavan Thamizh, Ridhun Sagar and Aa.pa.Raja, with powerhouse vocals from Therukural Arivu, Sublashini, Kelithee, Adhavan Thamizh and Anthony Daasan.


Feauturing three top dance choreographers, 


Costumes are designed by Maria Milan, with publicity handled by Dinesh Ashok.


Produced by Balaji Kumar, Parthiban Kumar, Selvah Kumar Thirumaran and Sujith under the UK Squad banner. 


The title announcement was a top-trending highlight and received tremendous appreciation.


Filming is currently in progress at various live locations and musical sets across Chennai.

நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் 'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது

 *நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் 'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!*



யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் 'டெக்சாஸ் டைகர்' – சென்னையின் வண்ணமயமான பின்னணியில் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.


யுகே ஸ்குவாட் பேனரின் கீழ், 'ஃபேமிலி படம்' புகழ் இயக்குநர் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் 'டெக்சாஸ் டைகர்'. இளமை துள்ளலாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன் ('ட்யூட்', ’தக்ஸ்’, ‘பேட் கேர்ள்’, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்', 'முரா' ஆகிய திரைப்படங்கள் புகழ்) மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் (Mr. பாரத், ஐ அம் தி கேம்) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.


படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானதும் இணையத்தில் டிரெண்டாகி ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்றது. சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 



*தொழில்நுட்பக்குழு விவரம்:*

தயாரிப்பு: பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித்,

தயாரிப்பு பேனர்: யுகே ஸ்குவாட்,

எழுத்து, இயக்கம்: செல்வகுமார் திருமாறன்,

இசை: ஓஷோ வெங்கட்,

ஒளிப்பதிவு: விஷ்ணு மணி  வடிவு (ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் அசோசியேட்),

படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி,

கலை இயக்கம்: கே.பி. நந்து,

சண்டைப் பயிற்சி: சுகன்,

பாடல் வரிகள்: கெலித்தி, ஆதவன் தமிழ், ரிதுன் சாகர், ஆ.பா. ராஜா,

பாடல்: தெருக்குரல் அறிவு, கெலித்தி, சுபலாஷினி, ஆதவன் தமிழ் மற்றும் அந்தோணி தாசன்,

ஆடை வடிவமைப்பு: மரியா மிலன்,

பப்ளிசிட்டி: தினேஷ் அசோக்.

தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு

 தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !! 






IDAA Productions  மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க,  இளம்  நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”. 


மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம்  இயக்குநர் வினீத் வரபிரசாத்,  சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில்,  மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். 


படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது, இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை, பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இவ்விழாவினில் படத்தின் டைட்டில் புரமோ  வீடியோ,  பத்திரிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக, திரையிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் படம் குறித்த தகவல்களைப் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர். 


இந்நிகழ்வினில்.., 


நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது.., 

முதல் முறை நான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிமுகத்திற்கு இப்படி ஒரு விழா. தாஷமக்கான் குழுவிற்கு என் நன்றி. தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பற்றிருபோம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. சுனில் சார், சத்யராஜ் சார் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். இருவருக்கும் நன்றி. ஃப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவம் தரும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி. 


இயக்குநர் வினீத் வரபிரசாத் பேசியதாவது.., 

டைட்டில் புரமோவிற்கு பலரை அழைக்கத் திட்டமிட்டோம் இறுதியாகப் பத்திரிக்கை நண்பர்கள் முன்பு அறிமுகம் செய்யலாம் என முடிவு செய்த போதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் படத்தில் எனக்கு இந்த மேடை கிடைக்கவில்லை, ஏன் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, நமக்கான மேடையை நாமே உருவாக்கலாம் என ஆரம்பித்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். 8 க்கும் மேற்பட்ட ராப் கலைஞர்கள் அடையாளப்பட்டுள்ளார்கள். ஹரீஷ் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் தான். நிறைய பேர் தயங்கிய ரோல் இது. அவர் வந்ததே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இசை சம்பந்தமான படம், நிறைய விவாதித்து, அலைந்து தேடி, இப்படத்தில் ராப் இசையைக் கொண்டுவந்துள்ளோம். எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இப்படத்தில் கொண்டுவந்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைத்து உதவியாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அமீர் அவர் நடித்த ரோலுக்கு முதலில் வேறு வேறு நபர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார், நம்ம படத்திற்கு இவர் வேலை பார்க்கிறாரே எனக் கடைசியில் அவரையே நடிக்க வைத்துவிட்டோம். அவர் மிகச்சிறந்த கலைஞர். அவருக்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய வெற்றியைத் தரட்டும் நன்றி. 


நடிகை மேகா ராஜன் பேசியதாவது.., 

எனக்கு இந்தப்படத்தில் அற்புதமான ரோல் தந்த இயக்குநர் வினீத்திற்கு நன்றி. டைரக்சன் டீம், கேமரா டீம், ஆர்ட் டீம் என எல்லோரும் மிகக் கச்சிதமாக இணைந்து வேலை செய்தார்கள். சத்யராஜ் சாருடனும், சுனில் சாருடனும் நடித்தது மகிழ்ச்சி. ஹரீஷ் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. 


ஸ்டண்ட் இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது.., 

தாஷமக்கான் வட சென்னையின் மைய பகுதியாக இருக்கும் ஒரு ஏரிவை இயக்குநர் அந்த இடத்தை பலமுறை சுற்றிக்காட்டினார், க்ளைமாக்ஸ் ஃபைடில் 1000 பேர் கலந்துகொள்ளும் ஒரு ஃபைட், அதை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம்.  சிங்கிள் ஷாட் எடுக்கும் போது நிறைய ஒத்துழைப்பு தந்து  அசத்தினார் ஹரீஷ். சிங்கிள் ஷாட் அவ்வளவு பெரிய ஃபைட் சீன் எடுக்கக்   காரணம் இயக்குநர் வினீத் தான். அவர் ஒரு மினி ராஜமௌலி மாதிரி தான்.  படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநருக்கு நன்றி. 


எடிட்டர் மதன் பேசியதாவது.., 

2019 வரை வெறும் டிரெய்லர்கள் தான் செய்து கொண்டிருந்தேன். நண்பர் ரஞ்சித் மூலம் வினீத் அறிமுகமானார். அவரை சந்தித்த 10 நிமிடத்தில் லிஃப்ட் பட வாய்ப்பை தந்தார். அவர் தந்த வாய்ப்பு தான் தமிழ் சினிமாவில் எனக்கு வாழ்க்கை தந்தது. இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. மிகக்கடினமாக உழைத்துள்ளார். ஹரீஷ் உடன் லப்பர் பந்து படத்திற்குப் பிறகு இணைந்துள்ளேன். இப்படத்திற்காக முழுதாக உடலை மாற்றியுள்ளார். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும். ஹீரோயினும் நன்றாகச் செய்துள்ளார். எல்லோருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். என்னை நம்பியதற்கு வினீத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


கலை இயக்குநர்  மணிமொழியன் ராமதுரை  பேசியதாவது.., 

நண்பர்கள் மூலம் தான் இந்தப்பட வாய்ப்பு கிடைத்தது. படத்திற்குள் நிறைய செட் போட்டுள்ளோம். ஹரீஷ் பயங்கரமாக உழைத்துள்ளார். எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள், படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். 


உடை வடிவமைப்பாளர் ரிதேஷ் செல்வராஜ் பேசியதாவது.., 

இயக்குநரைச் சந்தித்தேன். இயக்குநர் எனக்கு வாய்ப்பு தர மாட்டார் எனத்தான் நினைத்தேன். என்னை நம்பி வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என்னால் முடிந்த அளவு உழைத்துள்ளேன். ஹரீஷ் சாரை இதுவரை பார்த்த மாதுரி இருக்கக் கூடாது என காஸ்ட்யூம் செய்துள்ளோம். உங்களுக்குப் பிடிக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் பேசியதாவது.., 

என்னை நம்பிய இயக்குநர் வினீத்திற்கு நன்றி. ஹரீஷ் கல்யாணுக்கு நன்றி. ஹரீஷ் வந்தபிறகு தான் இந்தப்படம் மாறியது. அண்ணாநகரில் இளைஞர்கள்  ராப் செய்துகொண்டிருந்ததை வீடியோ எடுத்து வந்து இது போல செய்யலாம் என்றார். அந்த ராப் கலைஞர்களுடன் வேலை பார்த்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அமீர் இப்படத்தில் சிறப்பாகச் செய்துள்ளார். எல்லா காட்சியிலும் நிறையக் கூட்டம் இருக்கும். இவ்வளவு பேரை வைத்து எடுப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தோன்றும். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி. 


நடன இயக்குநர் அமீர் பேசியதாவது.., 

இயக்குநர் வினீத் அனைவருக்கும் நன்றி. என் பயணம் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த புராஜக்ட் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த உதய் அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் வேறொருவரை அறிமுகம் செய்யத் தான் இயக்குநரைச் சந்தித்தேன், அவர் என்னை நம்பி வாய்ப்பு தந்தார். அவர் கொடுத்த பவுண்ட் படித்த பிறகு, இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனத் தோன்றியது. எனக்கு கோரியோகிராஃபர் ஆக ஆசை, ராஜுசுந்தரம் மாஸ்டர் பாபா பாஸ்கர் மாஸ்டர் பெயருக்கு அடுத்து, அமீர் என்ற பெயர் இருப்பது எனக்குப் பெருமை. ஹரீஷ் கல்யாண் சாருடன் நடித்துள்ளேன், நடன இயக்கமும் செய்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தில் இளைஞர்களுக்குப் பிடித்த ஒரு பாடலை செய்துள்ளேன். எனக்குத் தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. இந்தப்படத்தில் நீங்கள் எதிர்பாராதது நிறைய இருக்கும். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் அனைவருக்கும் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் நன்றி. 


தொழில் நுட்ப கலைஞர்கள்


இயக்குநர் : வினீத் வரபிரசாத் 

இசையமைப்பாளர்: பிரிட்டோ மைக்கேல்

ஒளிப்பதிவாளர் : கார்த்திக் அசோகன்

எடிட்டர்: G. மதன்

சவுண்ட் டிசைன்: தபாஸ் நாயக்

நடன அமைப்பாளர்கள்: ராஜு சுந்தரம், பாபா பாஸ்கர், அமீர்

ஸ்டண்ட் (ஆக்ஷன்): ஓம் பிரகாஷ், தினேஷ் சுப்பராயன்

கலை இயக்குநர் : மணிமொழியன் ராமதுரை

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்: உதயகுமார் பாலாஜி

உடை வடிவமைப்பாளர் : ரிதேஷ் செல்வராஜ்

பப்ளிசிட்டி டிசைனர்: தினேஷ் அஷோக்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)


Title Promo - https://youtu.be/0fs_1ampVWw