Featured post

Conjuring Movie Review

Conjuring Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம conjuring part 4 ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் releas...

Monday, 4 January 2021

திரௌதி படத்தின் இயக்குனர் மோகன்

 திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் " ருத்ர தாண்டவம் " படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.


G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் " ருத்ர தாண்டவம்" 

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.



இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.


திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா

இந்த படத்தையும்  உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு  செய்கிறார்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

"ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று

 இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும்  எனது அன்பும், வாழ்த்துகளும்! 


"ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். 



திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். 


அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. 


இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். 


அதேசமயம்  அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.


அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். 


அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார். 


திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். 


என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். 


திரையரங்குகள் நிறையட்டும். கொராணா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும். 


விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். 


திரையுலகம் செழிக்க வேண்டும். 


அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். 


அரசாங்கம் கடைகள், மால்கள் , கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. 


திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது. 



வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து,  பாதுகாப்பு விதிகளை அதிகரித்து,  திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

#அன்புசெய்வோம்❤


சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில்

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் 2021-புத்தாண்டு உலக மக்கள் அணைவரும் உடல் நலம், மன அமைதியுடன், நல் எண்ணங்களுடன், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து நட்புடன், ஏழை பணக்காரன் என்றெல்லாம் இல்லாதவாறு அமைய கடவுளை வேண்டி கொள்வதாக நிறுவனர், தலைவர், நடிகர் கோபி காந்தி உலக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாமக்கல்;, ஜன:1- சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் அதன் நிறுவனர், தலைவர் திரைப்பட தாயரிப்பாளரும், நடிகர் கோபி காந்தி விடுத்துள்ள அறிக்கைச் செய்தியில் கூறியுள்ளதாவது கடந்த 2020-ம் ஆண்டு மக்கள் அனைவருக்குமே துயரமான ஆண்டாக அமைத்துள்ளது ‘கொரொனா” என்ற ஒரு பெயரை வைத்து உலக மக்கள் அனைவரையும் வீட்டுச் சிறை வைத்து அரசாங்கம் இந்த மாதிரி ஒரு கடினமாக சூழ்நிலையை சந்தித்தோம், உலக நாடுகளில் அரசியல் செய்பவர்கள் நிதி கொள்ளையடிப்பதற்காக மக்களை துன்புறுத்திய ஆண்டாக அமைந்தது தனால் தற்போது அத்தியாவாசிய தேவைகளான உணவு,உடை இருப்பிடத்திற்கான அனைத்து மூலப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. உலக வரலாற்றில் இது வரை உலகமே பார்க்காத வண்ணம் கொரொனா அரசியல் நடைபெற்ற ஆண்டாக 2020 துன்பங்கள் நிறைந்த ஆண்டாக நிறைவுற்றது குறிப்பிடதக்கதாகும். பிறக்கும் 2021 புத்தாண்டு உலக மக்கள் அனைவரும் உடல் நலத்துடனும் மன அமைதியுடனும், ஒருவருகுகொருவர் விட்டு கொடுத்து, நல்ல மனதுடன், நட்பாகவும், ஏழை,பணக்காரன் என்ற பிரிவுகள் இல்லாமல் அனைவரும் சமமான எண்ணத்துடன் அமையும் ஆண்டாகவும், இயற்கை சீற்றங்களும், விபத்துகளும்  இல்லாத ஆண்டாகவும், விவாசயம் செழிப்படையும் ஆண்டாகவும், அனைத்து தொழில்களும் சிறப்பாக நடைபெறும் ஆண்டாகவும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவாசிய பொருட்ளின் விலைவாசிகள் குறைந்தும், அரசியல் கொள்ளை நடக்காமல் உலகம் முழுவதும் நல்லாட்சி மக்கள் லனுக்கான அரசு நடைபெற வேண்டும். 
 

 
 
மனிதர்கள் மனிதர்களை அழிக்கும் எண்ணங்கள் அடியோடு அழிய வேண்டும், பணத்திற்கு மரியாதை கொடுக்காமல் மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும் எண்ணம் அனைவருககும் வர வேண்டும், மனிதனிடத்தில் மிருகத்தன்மை எண்ணங்களால் கொலை குற்றங்கள் நடந்து வருகிறது அது ஒழிந்து ஒவ்வொரு மனிதனும் அனைத்து  மனிதர்களையும் அன்போடு பார்க்க வேண்டும். அப்போது மனிதனிடத்தில் தோன்றும் மிருகத்தன்மை மாறும் அது போல் அமைய வேண்டும், உலக மக்கள் அனைவருக்கும் சமமான வாழ்க்கை அமைய உலக அரசாங்க ஆட்சி செய்யும் அனைத்து அரசியல்வாதிகள் மனதிலும் பதவி ஆசை, பணத்தாசை, சொகுசான வாழ்ககை ஆசைகள் அகன்று சாதாரன மனிதர்களாக அனைத்து அரசியல்வாதிகள் மனதிலும் எண்ணம் வர வேண்டும் இவ்வாறு இந்த 2021-ம் ஆண்டு அமைய கடவுளை வணங்கிக் கொள்வதாகவும், உலக மக்கள் அனைவருக்கும் தனது 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சர்வதேச சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட தயாரிப்பாளருன நடிகர் கோபி காந்தி.

On behalf of the International RSG Community Service Center, its founder, chairman, filmmaker and

On behalf of the International RSG Community Service Center, its founder, chairman, filmmaker and actor Gopi Gandhi said in a statement that the year 2020 has set a tragic year for all the people of the world under the name 'Corona'. 

The government put everyone under house arrest and faced a difficult situation like this, the year when politicians in the world persecuted the people for looting funds so that the prices of all the basic necessities like food and clothing have gone up. It is noteworthy that 2020 marks the year of the most tragic year in which corona politics took place as never before seen in world history. 

 


 

Happy New Year 2021 is the year when all the peoples of the world will leave each other in good health and peace of mind, with good intentions, with good intentions, with the same mindset as all, regardless of whether they are rich or poor. 

The government must work for the good of the people around the world without lowering the prices of everyday essential commodities and preventing political plunder. Thoughts that destroy human beings must be eradicated, the idea of ​​giving respect to human beings without giving respect to money should come to everyone, murderous crimes are being perpetrated by brutal thoughts in man and it should be eradicated and every human being should look at all human beings with love.

Then the beastliness of man will change and it will be like that, the desire for power, the desire for money, the desire for a luxurious life should spread in the minds of all the politicians who rule the world government so that the people of the world will have an equal life. , Wishes all the people of the world his 2021 New Year. 

Gopi Gandhi is the founder and chairman of the International Social Service Center and a filmmaker and actor.

Mahindra & Ford End Discussions of

 Mahindra & Ford End Discussions of Automotive Joint Venture

 

Mahindra & Mahindra, a part of the USD 19.4 billion Mahindra Group and Ford Motor Company have mutually, amicably determined they will not complete a previously announced automotive joint venture between their companies.  The action followed passing of the December 31, “longstop”, or expiration, date of a definitive agreement the organizations entered into in October 2019.

 

According to the companies, the outcome was driven by fundamental changes in global economic and business conditions – caused, in part, by the global pandemic – since the agreement was first announced.  Those changes influenced separate decisions by Ford and Mahindra to reassess their respective capital allocation priorities.

 

Mahindra said that this decision will not have any impact on its product plan. It is well positioned in its core true SUV DNA and product platforms with a strong focus on financial performance. In addition, Mahindra is accelerating its efforts to establish leadership in electric SUVs.

 

Actress Nikki Galrani Images

 Actress Nikki Galrani Images

 











 

December performance helps NMDC

December performance helps NMDC end the year on a good note

NMDC, the country's largest Iron Ore producer, and a Navratna Company, continued the impressive performance run in the month of December 2020 also. This is the 5th month in 2020, when production and sales showed an uptick when compared to the CPLY.

Iron ore production for the month of December 2020 is 3.86 MT (Million Tonnes) against the production level of 3.13 MT in December 2019, thereby registering a growth of 23.3%.

Iron ore production in Q3 of FY20 is 9.61 MT against the production of 8.56 MT in Q3 of FY19, thereby registering a growth of 12.3% (CPLY).

Iron ore sales for the month of December 2020 is 3.62 MT against the sales level of 3.04 MT in December 2019, thereby registering a growth of 19.1%.

Iron ore sales in Q3 of FY20 is 9.44 MT against the sales in Q3 of FY19 is 8.44, thereby registering a growth of 11.8% (CPLY).

NMDC is steadily improving its performance every month and continues to enhance the production level month on month. The performance of the last few months and December showcases production and sales will exceed last year’s performance, despite the adverse circumstances of 2020. The performance proves NMDC’s ability to battle any challenge and maintain its leadership position in the industry.

Shri Sumit Deb, CMD, NMDC commented “The steady growth in performance has helped us end the year on a good note. We are on our way to better the cumulative figures both physical and financial parameters of the previous year. Indian steel industry revival needs support to tide over the crisis and we are doing our best to cater to it. Team NMDC has always kept the nation’s interest in mind, and we hope to continue this excellent performance in the new year.”

--

Sunday, 3 January 2021

*'எக்கோ'வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த பூஜா ஜாவேரி!*

 *'எக்கோ'வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த பூஜா ஜாவேரி!*


*'எக்கோ'வில் ஸ்ரீகாந்துடன் இணையும் மற்றொரு நாயகி பூஜா ஜாவேரி!*


*'எக்கோ'வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த 'விஜய்  தேவரகொண்டா' நாயகி!*




ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'.













இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.


கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-வுடன் 'துவாரகா', தமிழில் அதர்வா-வுடன் 'ருக்குமணி வண்டி வருது' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த 'பூஜா ஜாவேரி' இந்த படத்தின் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.


தற்போது பூஜா ஜாவேரி, ஸ்ரீகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.


 ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.


சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.


*ECHO தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*


ஒளிப்பதிவு: கோபிநாத்

இசை: ஜான் பீட்டர்

எடிட்டிங்: சுதர்ஷன்

கலை: மைக்கேல் ராஜ்

நடனம்: ராதிகா

சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி

தயாரிப்பு நிர்வாகம் : BM சுந்தர்

மக்கள் தொடர்பு : KSK செல்வா

Saturday, 2 January 2021

இன்னும் சில வருடங்களில் நடிப்பில்

 இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு - இயக்குநர் சுசீந்திரன்


சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:


















படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது,


இதேமாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள்.


இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,


நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. நிதி அகர்வால் அருமையாக தமிழ் பேசுகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.


நந்திதா சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள். படப்பிடிப்பில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று தான் தோன்றியது. ஒளிப்பதிவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நேற்த்தியான திறமைக்காரர் திரு.


இப்படம் குடும்ப பாங்கான படம். இப்படத்தை பொழுதுபோக்காக பார்க்காமல் குடும்பத்தோடு வந்து பாருங்கள்.


நாங்கள் அந்த காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். ஆனால் இப்போது டிஜிட்டல் உலகத்தில் 28 நாட்களிலேயே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமை தான் காரணம்.


என் பிள்ளை மனோஜ் எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் ‘ஈஸ்வரன்’ நெகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.


சண்டைப் பயிற்சி காசி தினேஷ் பேசும்போது,


சிம்புவுடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதிலும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளில் சிம்புவின் ஒத்துழைத்ததால் தான் நன்றாக வந்துள்ளது என்றார்.


வசனகர்த்தா பாலாஜி கேசவன் பேசும்போது,


இயக்குநர் சுசீந்திரனுடன் ‘தீபாவளி’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தை திரையில் காணும்போது தான் பல விஷயங்களை இழந்திருக்கிறேன் என்று தோன்றியது. இந்த வாய்ப்பு கொடுத்த சுசீந்திரனுக்கு நன்றி என்றார்.


நடிகர் பாலசரவணன் பேசும்போது,


எனக்கு மிக மிக முக்கியமான படம் ‘ஈஸ்வரன்’. அதற்கு இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. ஒரே நேரத்தில் 3 படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.


எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசக் கூடியவர் சிம்பு. அனைவரிடமும் ஒரே பேச்சு ஒரே முகம் தான். ஒரு நாள் படப்பிடிப்பில் அன்பைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கொடுத்ததால் தான் இன்று அவருக்கு கிடைத்திருக்கிறது என்றார்.


நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது,


சினிமாத் துறைக்கு வரும்போது அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். எனக்கு இருந்தது. அது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டல் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.


அறிமுக நடிகை நிதி அகர்வால் பேசும்போது,


சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிம்பு திறமையானவர். அவர் சிங்கிள் டேக் நடிகர். இரண்டாவது டேக் போகவே மாட்டார் என்றார்.


தயாரிப்பாளர் பாலாஜி கபா பேசும்போது,


இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். அதிலும் இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி கூற வேண்டும். மிகவும் நேர்மையானவர். அவர் கூறியது போல் 28 நாட்களிலேயே படத்தை முடித்துக் கொடுத்தார்.


சிம்புவைப் பற்றி கூற வேண்டுமென்றால் அவரை நான் இதுவரை மூன்று முறை தான் பார்த்திருக்கிறேன். அவர் என்ன பேசுவாரோ அப்படிதான் அவருடைய செயலும் இருக்கும். சிம்புவிற்கு நன்றி என்றார்.


இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது


சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள்.


ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது. அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும்.


சிம்புவை வைத்து இயக்க போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்கு காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.


இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன்.


நிதி அகர்வாலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.


இப்படம் விரைந்து முடித்து வெளியாவதற்கு தயாரிப்பாளர் பாலாஜி காப்பா தான் காரணம். அவருக்கு மிகப்பெரிய நன்றி.


இப்படத்தில் சிம்னடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் KVதுரை. 


நடிகர் சிம்பு பேசும்போது..


முதலில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்த கலைஞர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் இந்த படம் எப்படி விரைவாக முடிந்தது என்று. ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதியில் நின்றது. அந்த சமயத்தில் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று இப்படத்தின் கதையை கூறினார் இயக்குநர். இப்படத்தின் கதையைக் கேட்டதும், கொரோனாவால் அனைவருக்கும் எதிர்மறையாக, மனைஉளைச்சலில் இருக்கும் சமயத்தில் இப்படத்தின் கதை நேர்மறையாக இருந்தது. ஆகையால், இப்படம் பார்க்கும் அனைவருக்கும் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.. அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். 


என்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். அனைவரும் உங்கள் உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவரிடம் அறிவுரைக் கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் உள்ளத்தில் தான் இறைவன் இருக்கிறான். அதைதான் நான் செய்தேன்.


கொரோனா காரணமாக சிலர் திரையரங்கில் வெளியிடுகிறார்கள், சிலர் ஓடிடியில் வெளியிடுகிறார்கள். அது அவரவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் சினிமா என்றால் தியேட்டரில் பார்ப்பது தான் சுகம். அதனால் இப்படம் தியேட்டரில் தான் வரும். 


‘ஒஸ்தி’ படத்திற்கு தமன் இசையமைத்தார். இரவு பகலாக போனிலேயே பேசி பணியை முடித்துக் கொடுத்தார். நந்திதா ஸ்வேதா, நிதி அகர்வாலுக்கு நன்றி.


பாரதிராஜா அப்பாவை பார்க்கும்போது எனக்கு பெரிய சக்தி கிடைத்தது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இப்படத்தில் எனக்கும் பாலசரவணனுக்கும் நல்ல வைபரேஷன் இருக்கும்.


ஒளிப்பதிவைப் பார்க்கும்போது தெய்வீகமாக இருக்கிறது. வசனம் நன்றாக எழுதியிருக்கிறார்.


என் ரசிகர்களுக்கு ஒன்று கூற ஆசைப்படுகிறேன். இனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை செயல் மட்டும் தான்.


இந்த வருடத்திலேயே 3 படங்கள் வரப்போவதாக கூறினார்கள். அது உண்மைதான். ‘மாநாடு’, ‘பத்து தல’, அதற்கடுத்து ஒரு படம் இருக்கிறது. சுசீந்திரன் சார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறேன் என்றார்.


விழாவின் இறுதியாக 'ஈஸ்வரன்' படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது

ARTISTS                                                                                                                            

SILAMBARASAN TR * BHARATHI RAJANITHI AGARWAL   NANDHITHA * BALA SARAVANAN * MUNEESHKANTH *           ‘STUNT’ SIVA * KAALI VENKAT * ARUL  DAS * VINODHINI     *                  

TECHNICIANSLIST

DIRECTION & STORY * SUSIENTHIRA  MUSIC DIRECTO * THAMAN.S

DIRECTOR OF PHOTOGRAPHY S.THIRUNAVUKKARASU                                          

Art *           SEKAR BALU                     LYRICst YUGABHARATHI                                                                                                                           EDITor * ANTONY                                                                                           PRODUCTION DESIGNer * RAJEEVAN                                                                                        ACTION DIRECTOR * DINESH KASI                                         CHOREOGRAPHER * SHOBI                                                                                                                                                                                         DIALOUGE * BALAJI KESAVAN                                                                                               COSTUME DESIGNER* UTHARA MENON                                                             P.R.O * JOHNSON                                                                                                                       PRODUCTION * D COMPANY                            PRODUCED BY * MADHAV MEDIA  ‘BALAJI KAPA’


.