Featured post

சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

 *சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!* சூப்பர் ஸ்டார்...

Monday, 17 August 2026

Sony Vizha launches Tamil Idol with A.R. Rahman, opening auditions across the state

 Sony Vizha launches Tamil Idol with A.R. Rahman, opening auditions across the state






Beginning 15th August, aspiring singers can audition by submitting their entries online through the Sony LIV app

Music has always been at the heart of Tamil Nadu’s cultural identity. From temple hymns and folk traditions to cinema classics and independent music, every corner of the state has a voice waiting to be heard. Now, that voice has the opportunity to take centre stage as Sony Vizha unveils Tamil Idol, the first-ever Tamil edition of one of the world’s most iconic singing competition formats.

Following the recently announced collaboration between Sony Vizha and A.R. Rahman, the much-awaited project is finally revealed as Tamil Idol, a landmark musical journey that places performance at the forefront, celebrating raw talent, unforgettable stage presence, and the power of music to transform lives. With A.R. Rahman leading the search, the show aims to discover, celebrate, and nurture the next extraordinary Tamil voice.

As Sony Vizha’s flagship global format, Tamil Idol reflects the channel’s commitment to bringing internationally celebrated entertainment formats to Tamil audiences while showcasing the richness of local talent and culture. Produced by Fremantle India, the show will be available across Sony Vizha and Sony LIV, creating a unified entertainment destination where world-class formats and Tamil storytelling come together across both television and digital platforms.

Marking the official beginning of Tamil Idol, A.R. Rahman announced the opening of auditions from 15th August, inviting aspiring singers across Tamil Nadu to register through the Sony LIV app. 

Speaking about the show, A.R. Rahman said, "The search for new voices is at the heart of music, voices that go on to reach millions. Through this journey, we uncover new talent, fresh perspectives, and the untold stories of generations. With Tamil Idol, for the very first time, we bring together the extraordinary voices of Tamil Nadu and give them a platform to be celebrated."

ONLINE AUDITIONS ON SONY LIV APP

Aspiring singers can also audition from anywhere through the Sony LIV app.

Here's how:

Select the Tamil Idol Audition section on the Sony LIV app

Complete the registration by filling in your personal details

Upload three videos that showcase your versatility across different genres of singing

The search for the first-ever Tamil Idol begins! Somewhere out there, the next unforgettable voice is waiting to be heard.


About Sony VIZHA

Sony VIZHA is Sony Pictures Networks India’s (SPNI) Tamil General Entertainment destination, created for audiences who celebrate Tamil culture, storytelling, music, food, festivals, and everyday life. Rooted in the spirit of Vizha-the Tamil word for celebration, the channel brings together original programming, reality formats, movies, and global entertainment curated for Tamil audiences across generations. With flagship shows such as Celebrity MasterChef Tamil and Tamil Idol, Sony VIZHA is committed to delivering premium, progressive, and differentiated Tamil entertainment that is rooted in culture and crafted for a new generation of viewers.

About Sony Pictures Networks India Private Limited (formerly known as Culver Max Entertainment Private Limited):

Sony Pictures Networks India Private Limited (SPNI) is an indirect wholly owned subsidiary of Sony Group Corporation, Japan. A leading media and entertainment conglomerate, SPNI comprises 29 Premium Channels in both SD and HD formats, including leading Hindi General Entertainment Television Channels - Sony Entertainment Television; Sony SAB and Sony PAL; Marathi General Entertainment Channel - Sony Marathi; Bangla General Entertainment Channel - Sony AATH; Tamil General Entertainment Channel – Sony VIzha; Hindi Movie Channels - Sony MAX, Sony MAX 1, Sony MAX 2 and Sony WAH; renowned destination for sports fans - Sony Sports Network comprising Sony Sports Ten 1, Sony Sports Ten 2, Sony Sports Ten 3, Sony Sports Ten 4, Sony Sports Ten 5; Kids Entertainment Channel - Sony YAY!; English Movie Channel - Sony PIX; Factual Entertainment Channel - Sony BBC Earth; Free Ad-Supported Streaming Television (FAST) channel in the US and Canada – Sony KAL; Digital entertainment OTT platform - Sony LIV and the independent production venture for original content and IPs for TV and digital media - Studio NEXT. This Network reaches out to over 700 million viewers in India and is available in over 150 countries.

Recognised as an employer of choice within and outside the media industry, SPNI is a recipient of several awards, including India’s Best Companies to Work For 2021 by the Great Place to Work® Institute, India, Exemplars of Inclusion in AVTAR & Seramount’s Most Inclusive Companies Index 2024 and listed as one of the 100 Best Companies for Women in India for eight consecutive years by AVTAR & Seramount. In recognition of the company’s unique workplace culture and exceptional people practices SPNI won the ET Future Skills 2024 for Best Learning Program Supporting Change Transformation Business Strategy, and the TISS LeapVault CLO Awards 2024 for Best Employee Engagement Program and Best Games Based Learning Program.

SPNI is in its 31st year of operations in India. Besides having overseas subsidiaries, it has a subsidiary MSM-Worldwide Factual Media Private Limited, and an affiliate, Bangla Entertainment Private Limited in India.

Sunday, 16 August 2026

Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan

 Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan India Project Fauzi New Poster Turns Independence Day Into A Tribute To Sacrifice*

 


Rebel Star Prabhas’s most-awaited Pan India Project Fauzi will be hitting the screens worldwide on December 3, 2026. The grand period action spectacle is directed by creative filmmaker Hanu Raghavapudi, produced by Mythri Movie Makers, and presented by T-Series, the film is bankrolled by Naveen Yerneni, Y. Ravi Shankar, and Bhushan Kumar. From the title poster to pre-look to first look, every promotional material has only heightened the anticipation surrounding the movie.

 

The makers of Fauzi have marked Independence Day with a poster that carries a strong emotional and historical undertone. The film has used the national occasion to spotlight the idea of sacrifice behind the freedom that India celebrates today. The poster presents a stark contrast to the festive spirit normally associated with Independence Day. Instead of showing celebration, it takes viewers into a landscape ravaged by conflict. Smoke, flames, ruined surroundings and scattered debris dominate the frame, while the Charminar stands prominently in the distance.

 

Although his face is not shown, Prabhas is presented in an extremely distructive avatar. His clothes are covered in blood and dirt, his body appears battered, and he walks barefoot through the destroyed streets while holding two short guns in both hands. Another character, dressed in traditional Indian attire, is seen walking ahead with a long stick in hand.

 

The image creates an immediate impression of a man caught in the middle of a violent historical conflict. The makers’ Independence Day message gives the poster its emotional core: “Before freedom became a celebration, it was a battle!” It is a reminder that the freedom enjoyed today came after years of struggle, courage and sacrifice.

 

The tribute is further strengthened by the words, “Saluting the spirit of every Fauzi who fought for our tomorrow.” The message transforms the film’s title into an evocative tribute to the fighters whose determination shaped the future.

 

Imanvi is the leading lady opposite Prabhas in the movie that also features veteran actors Anupam Kher, Mithun Chakraborty, Jaya Prada, and Bhanu Chandar in prominent roles.

 

The film boasts a strong technical lineup with cinematography handled by Sudeep Chatterjee, music scored by Vishal Chandrasekhar, production design by Anil Vilas Jadhav, and editing by Kotagiri Venkateswara Rao.

 

Cast: Prabhas, Imanvi, Mithun Chakraborty, Anupam Kher, Jaya Prada, Bhanu Chandar and others.

 

Technical Crew:

Writer, Director: Hanu Raghavapudi

Produced By: Mythri Movie Makers

Presented By: Gulshan Kumar, Bhushan Kumar & T-Series

Producers: Naveen Yerneni, Y Ravi Shankar, and Bhushan Kumar

DOP: Sudeep Chatterjee ISC

Music: Vishal Chandrasekhar

Production designer: Anil Vilas Jadhav

Editor: Kotagiri Venkateswara Rao

Lyrics: Krishna Kanth

Choreographer: Prem Rakshit

Costume Designers: Sheetal Iqbal Sharma, T Vijay Bhaskar

VFX: RC Kamala Kannan

Publicity Designers: Anil-Bhanu

PRO: Yuvraaj

Marketing: First Show

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-

 *ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!*



பிரபாஸின் ஃபௌஜி – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு


ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஃபௌஜி, 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக், ஃபர்ஸ்ட் லுக் என இதுவரை வெளியான ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


ஃபௌஜி படக்குழு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வலுவான உணர்வையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா இன்று கொண்டாடி வரும் சுதந்திரத்தின் பின்னால் இருக்கும் தியாகத்தை மையப்படுத்தும் வகையில் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாளை படக்குழு பயன்படுத்தியுள்ளது.


பொதுவாக சுதந்திர தினம் கொண்டாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இந்த போஸ்டர் அதற்கு முற்றிலும் மாறாக, போரினால் சிதைந்த ஒரு சூழலுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. புகை, தீப்பிழம்புகள், சிதைந்த கட்டிடங்கள் மற்றும் சிதறிக் கிடக்கும் பொருட்கள் நிறைந்த அந்தக் காட்சியில், தொலைவில் சார்மினார் கம்பீரமாக இடம்பெற்றுள்ளது.


பிரபாஸின் முகம் இதில் காட்டப்படவில்லை என்றாலும், அவர் மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவரது ஆடைகள் முழுதும் ரத்தமும் அழுக்கும் படிந்திருக்கின்றன. அவரது உடல் கடுமையாகத் தாக்கப்பட்டதைப் போன்று காட்சியளிக்கிறது. சிதைந்த தெருக்களின் வழியாக காலில் செருப்பு ஏதுமின்றி நடந்து வரும் அவர், இரு கைகளிலும் இரண்டு குறுகிய துப்பாக்கிகளை ஏந்தியிருக்கிறார். அவருக்கு முன்னால் பாரம்பரிய இந்திய உடையணிந்த மற்றொரு கதாபாத்திரம் நீண்ட கைத்தடியுடன் நடந்து செல்கிறது.


இந்தக் காட்சி, வன்முறை நிறைந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் மத்தியில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் உணர்வை வெளிப்படுத்துகிறது. படக்குழு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியே இந்த போஸ்டரின் உணர்வுப்பூர்வமான மையமாக அமைந்துள்ளது:


“சுதந்திரம் கொண்டாட்டமாக மாறுவதற்கு முன்பு, அது ஒரு போராக இருந்தது!”


இன்றைய தலைமுறை அனுபவித்து வரும் சுதந்திரம், பல ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டம், துணிச்சல் மற்றும் தியாகத்தின் விளைவாக கிடைத்தது என்பதை இந்த வரிகள் நினைவூட்டுகின்றன.


“நமது நாளைக்காகப் போராடிய ஒவ்வொரு ஃபௌஜியின் வீரத்திற்கும் தலைவணங்குகிறோம்” என்ற வார்த்தைகள் இந்த அஞ்சலியை மேலும் வலுப்படுத்துகின்றன. இந்த வாசகம் படத்தின் தலைப்பையே, எதிர்காலத்தை உருவாக்கிய போராளிகளுக்கான உணர்வுப்பூர்வமான அஞ்சலியாக மாற்றுகிறது.


இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் மூத்த ஆளுமைகளான அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா மற்றும் பானு சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் திறமையான கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜி கையாள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை கோடகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனித்துள்ளார்.


நடிகர்கள்:


பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம்: ஹனு ராகவபூடி

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

வழங்குபவர்கள்: குல்ஷன் குமார், பூஷண் குமார் & டி-சீரிஸ்

தயாரிப்பாளர்கள்: நவீன் ஏர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார்

ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி ISC

இசை: விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ்

படத்தொகுப்பு: கோடகிரி வெங்கடேஸ்வர ராவ்

பாடல்கள்: கிருஷ்ண காந்த்

நடன இயக்கம்: பிரேம் ரக்ஷித்

ஆடை வடிவமைப்பு: ஷீத்தல் இக்பால் ஷர்மா, டி. விஜய் பாஸ்கர்

VFX: ஆர்.சி. கமலா கண்ணன்

பப்ளிசிட்டி டிசைனர்கள்: அனில்-பானு

PRO: யுவராஜ்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ


51 YEARS OF SUPERSTAR RAJINIKANTH: A LEGACY CELEBRATED ON THE SETS OF DHARMAN

 51 YEARS OF SUPERSTAR RAJINIKANTH: A LEGACY CELEBRATED ON THE SETS OF DHARMAN






August 15 marks a landmark day in Indian cinema — the day Superstar Rajinikanth made his unforgettable entry into the world of films. On this day in 1975, Apoorva Raagangal released, marking the beginning of a remarkable cinematic journey that would go on to create one of the most celebrated superstar in Indian cinema.


Fifty-one years since his entry into cinema, the milestone was celebrated on the sets of DHARMAN with a special cake-cutting ceremony in the presence of Superstar Rajinikanth, and Director Ashwath Marimuthu joined with the entire cast and crew of DHARMAN in commemorating this iconic milestone. As the journey continues, the sets of DHARMAN witnessed a special moment in celebrating 51 years of Rajinism — a legacy that continues to inspire, entertain and create history.


DHARMAN, starring Superstar Rajinikanth, is produced by Thiru. Kamal Haasan and R. Mahendran under the banners of Raajkamal Films International and Turmeric Media, marking the celebration on the film's set all the more special.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: 'தர்மன்' படப்பிடிப்புத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: 'தர்மன்' படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை






இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய ஒரு அற்புதமான திரைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.


திரைத்துறையில் அவர் நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் 'தர்மன்' படக்குழுவினர் அனைவரும் இணைந்து, தொடரும் இந்தப் பயணத்தில் 'ரஜினியிசம்' எனும் உத்வேகம் அளிக்கும், மகிழ்விக்கும் மற்றும் வரலாறு படைக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை 'தர்மன்' படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பது படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தை மேலும் சிறப்பானதாக்கியது.

Saturday, 15 August 2026

சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்

 சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்

" ஆல்பாஸ் " இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூரலிகான் காட்டம் !


























ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !


மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக  நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன்.

‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இனறு நடைபெற்ற இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 


இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசியதாவது.., 


“என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க முடிகிறது. ஆனால் எல்லாரும் முன்னாடி நின்று பேசுவது என்றால் ரொம்பவே பதட்டமாகவும், நடுக்கமாகவும் இருக்கிறது. அதனால் மன்னித்துக்கொள்ளுங்கள். இங்கு இந்த விழாவிற்கு வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. 

நிஜமாகவே இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு, எங்களுக்கு நல்லபடியாக ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை பார்த்து எங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்” நன்றி.


இயக்குநர் மைதீன் பேசியதாவது.., 


இன்று இந்த விழாவிற்கு வருகை தந்த ஐயா ஆர் வி உதயகுமார், இயக்குநர் விக்ரமன், அண்ணன் மன்சூர் அலிகான் ஆகிய அனைவருக்கும் நன்றி. 


ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு சார் இப்படத்தில் சில நாட்கள் மட்டும் வேலை செய்து தந்தார். எங்களுக்கு சிக்கல் எழுந்த போது மூத்த ஆளுமையாக இருந்தும் சில நாட்கள் மட்டும் வேலை செய்து தந்தார் அவருக்கு என் மிகப்பெரிய நன்றிகள். 

உதவி இயக்குநர்களின் வலி அவர்களின் அடையாளம் சினிமாவில் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கான வாய்பு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கான அடையாளம் கிடைக்கும். பலர் இன்னும் அந்த வாய்பில்லாமல் இருக்கிறார்கள். 

இந்தப்படத்தில் துஷ்யந்த் நடிக்க வைக்க அணுகியபோது, அவர் அப்பா தான் சொல்வார் என்றார். எனக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் சார் தான் அப்பா என்பது தெரியாது.  ஜெயப்பிரகாஷ்   சாரை சந்தித்து முழு கதையை சொன்னேன். அவர் ஒரு தயாரிப்பாளர், அவர்களின் வலி புரிந்து அக்கறையுடன் அறிவுரை சொல்வார் என நினைத்து முழு கதை சொன்னேன். 

கதை கேட்டு அழகர் கேரக்டர் யார் செய்கிறார்கள் என்று கேட்டார். நான் உங்களை கூட நினைத்திருந்தேன் ஆனால் சம்பளம் பெரிதாகிவிடும் என்றேன், ஆனால் சம்பளம் ஒரு விஷயமே இல்லை நான் நடிக்கிறேன் என்று வந்தார் அவர் மனதுக்கு என் பெரிய நன்றி. 

ஜேம்ஸ் வசந்தன் சாரிடமும் அப்படித்தான் தயங்கி தான் சென்றேன் கதை பிடித்தால் தான் சொல்வேன் என்றார், கதை படித்துவிட்டு இதை அப்படியே எடுத்து விடுவீர்களா? என்றார். நான் கண்டிப்பாக எடுப்பேன் என்றேன் அப்படி என்றால் நான் கண்டிப்பாக இசை அமைக்கிறேன் என்று சொன்னார். அவருக்கு என் நன்றிகள். 


இம்மாதிரியான ஆளுமைகள், உதவிகளால் தான் இப்படம் சாத்தியமானது. நம் தேடலை எப்போதும் நிறுத்தக்கூடாது. என் தயாரிப்பாளர் மோகனா மேடம் அவர்களுக்கு பெரிய நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும். இப்படத்தில் உழைத்த நடிகர் நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., 


“‘ஆல் பாஸ்’ படத்தின் டிரெய்லரும், பாடல்களும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கின்றன. படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோயின் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார். அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஹீரோ எனது நண்பர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் மகன். ஆனால், படத்தில் அவர் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அறிமுகமான காலத்திலிருந்தே தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திலும் நல்ல இசையைத் தந்திருக்கிறார். அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கின்றன.

‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” நன்றி.


இயக்குநர் விக்ரமன் பேசியதாவது..


“இந்தப் படத்தின் குழுவைப் பற்றி எனக்கு பெரிதாகத் தெரியாது. இந்தப் படத்தின் இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தபோது, இயக்குநர் சேரனுக்கு அழைப்பிதழ் வைத்தார். அதேபோல் எனக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது நான், ‘யார் ஹீரோ?’ என்று கேட்டேன். அதற்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் மகன் என்று கூறினார்.

நடிகர் ஜெயப்பிரகாஷுக்கும் எனக்கும் சுமார் 30 வருட பந்தம் இருக்கிறது. அவரை நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாற்றியதே நான்தான். அந்த அளவுக்கு நானும் அவரும் நெருக்கமானவர்கள்.

இந்தப் படத்தின் டிரெய்லரையும், பாடல்களையும் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் இருந்தது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.


நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது..,


‘ஆல் பாஸ்’  அற்புதமான படம், ஜேம்ஸ் வசந்தன் எனக்கு பிடித்த கலைஞர். நீட் மாணவர்களை 11,12 ஆம் வகுப்பிலேயே அந்த சப்ஜெக்டை படிக்க வையுங்கள் தைரியமாக பேசினார். அவருக்கு என் நன்றிகள். 

ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவது போல விளம்பரம் செய்யுங்கள். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இப்படத்தில் தமிழகத்திற்கு நல்ல கதாநாயகன் நாயகி கிடைத்துள்ளார்கள் பாடல் மிக நன்றாக உள்ளது. மோகன் ராஜன் அற்புதமான பாடல் எழுதி வருகிறார். நடித்த நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். 

நான் கருப்பு படத்தில் க்ளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன் ஆனால் அதை அப்படியே தூக்கி விட்டார்கள், என்ன அநிநியாயம் இது, யூடுயூப்பில் வெளியிடுவோம் என்று அதையும் செய்யவில்லை,  சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராக தயாரிப்பாளராக இருக்கிறேன்.  எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும். 

நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்பாக எழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்’ என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு அழுக்குப்படுத்தும் சனியன்கள் நாட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

‘ஆல் பாஸ்’ ஒரு அற்புதமான பெயர். இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். குறிப்பாக ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் மரியாதை செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது. சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா. ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையை உண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நன்றி, வணக்கம், வாழ்த்துகள்” என்றார்.


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,


“இயக்குநர் ஆர் வி உதயகுமார் அனைவரையும் பற்றி மிக அழகாகப் பேசியதோடு, இந்தப் படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் இணைந்து பணியாற்றிய விதத்தை எடுத்துக்காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்த படக்குழுவிடமும் ஒரு நல்ல வைப்ரேஷனும், எனர்ஜியும், சிறப்பான ஒருங்கிணைப்பும் இருந்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பாடல்கள், அவர் இப்படத்திற்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

தமிழ் சினிமாவில் தற்போது வாரந்தோறும் பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் ‘ஆல் பாஸ்’ சரியான நேரத்தில் வெளியாகி, ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெய்ன்மென்ட் படமாக அமையும் என்று நம்புகிறேன்.

வடசென்னை என்றாலே ஆக்ரோஷம், அடிதடி போன்ற ஒரு பிம்பம் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் வடசென்னையில் மிகவும் இயல்பான, எளிமையான வாழ்க்கை வாழும் மக்கள் அதிகம். அந்த வாழ்வியலை இந்தப் படம் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக குறுகலான தெருக்கள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் என சவாலான இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அந்தச் சவால்களை படக்குழுவினர் சிறப்பாக எதிர்கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் மோகனா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். புதிய தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கும் அவர், நல்ல படத்தை கொடுத்து வெற்றி பெற வேண்டும்.

ஜே.பி. சார் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய மகனையும் இந்தப் படத்தில் பார்த்தேன். நல்ல திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும்.

நாயகி ஜனனி உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள அனைவருக்கும், வினோதினி உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ‘ஆல் பாஸ்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார். நன்றி. வணக்கம்”


நடிகை ஜனனி பேசியதாவது.., 


“இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ஊடக நண்பர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் மைதீன் முதன்முதலில் என்னை சந்தித்து இந்தக் கதையைச் சொன்னபோதே, கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக கதையின் பின்னணியும், படப்பிடிப்பு நடைபெறவிருந்த லொகேஷன்கள் குறித்த அவரது அணுகுமுறையும் என்னை கவர்ந்தது.

இயக்குநர் மைதீன் கதையை மிகவும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன விதத்திலேயே இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. என்னைவிட அவர்கள் மிகப்பெரிய ஆளுமைகள் அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. 

‘ஆல் பாஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” நன்றி.


நடிகர் துஷ்யந்த் பேசியதாவது.., 


“முதலில் விக்ரமன் சார், ஆர் வி உதயகுமார் சார், மன்சூர் அலிகான் சார் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனக்கு இந்த பாசிட்டிவான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மைதீன் மற்றும் தயாரிப்பாளர் மோகனா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படத்தில் பல கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பின்போது பலருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்வளவு பெரிய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது, இந்தப் படம் நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

இந்த கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது திரைப்பயணத்தில் இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் மறக்க முடியாத வகையில் நினைவில் வைத்திருப்பேன்.

இந்தப் படத்தில் எனது தந்தையும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இது என்னுடைய நான்காவது படம். என்னுடைய முதல் படமான ‘ஈசன்’ படத்திற்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இயக்குநர் சசிகுமார் சார் இயக்கிய அந்தப் படத்தில் நான் மிகவும் சிறிய வயதில் நடித்தேன். அப்போது எனக்கு சினிமா மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. ஒரு படத்தில் நடிப்பதே எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. சினிமா பற்றி எதுவும் தெரியாத அந்த காலகட்டத்தில் சசிகுமார் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார்.

2008 முதல் 2026 வரை தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது தந்தை எனக்கு அளித்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படத்தின் இயக்குநர் மைதீன் வடசென்னையை ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் எடிட்டர் சார் முற்றிலும் வித்தியாசமான பார்வையுடன் படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்.

எங்கள் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். டிரெய்லரையும், பாடல்களையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘ஆல் பாஸ்’ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். நன்றி” என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது.., 


இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முழுமையாக கதையைச் சொன்னார். கதையில் இருந்த ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அழகாக எடுத்துச் சொன்னார். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் நடிப்பீர்களா ? என ஆச்சரியமாக கேட்டார். 

‘நடிக்கத்தானே வந்திருக்கிறோம்… கண்டிப்பாக செய்கிறேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.

இயக்குநர் மைதீன் இந்தப் படத்தை மிகவும் இயல்பான படமாக உருவாக்கியிருக்கிறார். நான் முதலில் கேட்ட கதைக்கும், பின்னர் டப்பிங் செய்யும்போது பார்த்த படத்திற்கும் எந்த மாற்றமும் இல்லை. படத்தில் பேசப்படும் வசனங்களாக இருந்தாலும் சரி, காட்டப்படும் வீடுகளாக இருந்தாலும் சரி, அனைத்துமே அந்த வாழ்வியலை விட்டு விலகாமல் இருக்கிறது.

ஒரு சமையல்காரர், ஒரு பெயிண்டர், ஒரு சைக்கிள் கடைக்காரர் என மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து, அவர்களுடைய குடும்பங்கள், குழந்தைகள், அவர்களுக்குள் நடக்கும் சந்தோஷங்கள், சண்டைகள் என மிகவும் இயல்பான விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது.

சினிமாவில் நிறைய அனுபவம் கொண்ட சரத் சார் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவருடைய பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

பாடல்களும் இசையும் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. சில காட்சிகளில் இசை அந்தக் காட்சியின் உணர்வை இன்னும் அழகாக கொண்டு சென்றிருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் சார் பசங்க படத்திற்கும் ஈசன் படத்திற்கும்,  இசையமைத்துள்ளார், இப்போது இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மகிழ்ச்சி. 

வடசென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் காட்டாமல், அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கையை இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது. வடசென்னை மக்கள் இப்படித்தான் இருப்பார்கள், இப்படித்தான் பேசுவார்கள், குழந்தைகளுக்குள் இப்படித்தான் நட்பு இருக்கும் என்பதை மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் காட்டியிருக்கிறார்கள்.

புதிய தயாரிப்பாளராக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கும் மோகனா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டது என்று நிறுத்திவிடாமல், தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” நன்றி.


இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது.., 


ஆல் பாஸ் படத்தில் அனைத்து கலைஞர்களும் மிக அற்புதமாக உழைத்துள்ளார்கள். வினோதினி எங்கேயும் எப்போதும் நடித்த நடிப்பு அவரை என் மனதில் ஆழமாக இருத்தியது. அதே போல் அனைவருமே இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

நான் எல்லா படத்தையும் மனதுக்கு நெருக்கமாக பார்ப்பேன், அப்படி சில படங்களை பார்க்கும்போது, ஏன் இவ்வளவு வன்முறை எனத் தோன்றும். ஆனால் இந்தப்படம் பார்க்கும் போது உங்களுக்கு இப்படி எந்த கேள்வியும் தோன்றாது. மன அமைதி கிடைக்கும். இப்படத்தின் கலை இயக்குநருக்கு தேசிய விருது கிடைக்கும் அந்தளவு உழைத்திருக்கிறார். மோகன் ராஜன் என்னுடன் தான் முதல் படத்தில் பணிபுரிந்தார் அவர் வளர்ச்சி எனக்கு சந்தோசம், இப்படத்தில் நான்கு பாடல் எழுதியுள்ளார். இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து இசை கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.  இயக்குநர் வடசென்னையை யாரும் காட்டாத கோணத்தில் காட்டியுள்ளார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.  நன்றி. 




இப்படத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி. வாத்தியாராக நடித்த அருவி மதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவு செய்த தில்ராஜு, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.

‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ். பாஸ்கர் இப்படத்திற்கும் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன். டி பணியாற்றியுள்ளார். நடன இயக்குநராக ஐ. ராதிகா, சண்டைப் பயிற்சியாளராக மெட்ரோ மகேஷ் பணியாற்றியுள்ளனர்.

ஒப்பனை – எல்.வி. ராஜா, உடைகள் – ஏ.எஸ். வாசன், ஸ்டில்ஸ் – அண்ணாதுரை, விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

வடசென்னையின் மற்றொரு முகத்தை, அப்பகுதி மக்களின் இயல்பான வாழ்வியலுடன் சொல்லும் படமாக ‘ஆல் பாஸ்’ உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் கவனம் பெற்றுள்ளது.

Friday, 14 August 2026

துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது

 *துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!*



துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.


துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.


ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தை இன்னும் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவமாக கொண்டு வருவதற்காக செப்டம்பர் 3-ம் தேதிக்கு வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.


மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாகும் என்றும் துல்கர் சல்மான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளவில் அதிகமான ரசிகர்களை சென்றடையும் வகையில் இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான டிரெய்லர், பான்-இந்தியா அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள டிரெய்லரில் பிரம்மாண்டமான காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் மற்றும் பரபரப்பான சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக “ஐ ம் கேம்” இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலிஷான மற்றும் மாஸ் அவதாரத்தில் தோன்றியுள்ளார்.


தென்னிந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.


இந்த பிரம்மாண்ட படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் இசை உரிமையை Zee Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். டிரெய்லர் மற்றும் முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது, இசையும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹைலைட்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘Lokah: Chapter 1 - Chandra’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ‘ஐ ம் கேம்’. அதேபோல், பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘RDX’-க்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும்.


தொழில்நுட்பக் குழு


லைன் புரொட்யூசர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சாமன் சாக்கோ

புரொடக்‌ஷன் ஹெட்ஸ்: சுஜாய் ஜேம்ஸ், தேவதேவன்

புரொடக்‌ஷன் டிசைனர்: அஜயன் சாலிசேரி

ஆக்ஷன்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா

புரொடக்‌ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஸ்வரன்

அசோசியேட் இயக்குநர்: ரோஹித் சந்திரசேகர்

பாடல்கள்: மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX: தௌஃபீக் (Eggwhite)

போஸ்டர் டிசைன்: Ten Point

சவுண்ட் டிசைன்: Sync Cinema

சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: SBK

மார்க்கெட்டிங் ஹெட்: விஜித் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு - யுவராஜ் 


‘I Am Game’ – செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!


*Dulquer Salmaan’s ‘I Am Game’ Set for September 3 Release; Big Global Release Planned*


Dulquer Salmaan’s highly anticipated film ‘I Am Game’ has a new release date. The film is set to hit theatres worldwide on September 3, 2026, in what is expected to be a massive global release. The film was initially announced as an Onam release on August 20, but the release has now been pushed by two weeks to facilitate a much wider theatrical rollout. Produced by Dulquer Salmaan’s Wayfarer Films, this big-budget fantasy thriller is touted as one of the biggest films of Dulquer’s career. The film is directed by Nahas Hidhayath.


Produced by Dulquer Salmaan and Jom Varghese under the Wayfarer Films banner, ‘I Am Game’ has a screenplay written by Sajeer Baba, Ismail Abu Bakr and Bilal Moidu. The dialogues have been penned by Sajeer Baba, Adarsh Sukumaran and Shabas Rasheed.


Dulquer Salmaan has announced that the film, which has generated tremendous anticipation among fans and moviegoers, will now arrive as an even bigger theatrical release. In a social media post, he stated that the release was being moved to September 3 to take the film to more markets and reach a larger global audience. The actor also confirmed that ‘I Am Game’ will have a pan-Indian release in Malayalam, Tamil, Telugu, Hindi and Kannada, bringing the film to audiences across the country. Dulquer Salmaan and Wayfarer Films stated that the date change was made to ensure that the mega-scale theatrical experience receives a release that matches the film’s enormous canvas and scale.


The film’s trailer and first song, released earlier, have already received an overwhelming response from audiences. The trailer was released in Malayalam, Tamil, Telugu, Hindi and Kannada and generated significant pan-Indian attention. The first song has also emerged as a major hit. The trailer, which kept viewers hooked from start to finish, offered glimpses of spectacular visuals, high-energy action and thrilling chase sequences, promising a grand theatrical experience. The film is expected to be a stylish fantasy thriller unlike anything Malayalam cinema audiences have seen before. Dulquer Salmaan has been presented in an extremely stylish and mass-oriented avatar, adding to the excitement surrounding the project.


Shot across more than 100 locations across South India, ‘I Am Game’ is gearing up to become one of the biggest releases in Malayalam cinema. Marking Dulquer Salmaan’s 40th film, this big-budget fantasy thriller features an impressive ensemble cast including Antony Varghese, Tamil actor-filmmaker Mysskin, Kaayadu Lohar, Kathir, Parth Tiwari and Tamil actress Samyuktha Viswanathan, among others.


Zee Music has acquired the music rights to the film. The music composed by Jakes Bejoy and the action sequences choreographed by Anbariv Masters are expected to be among the major highlights, judging by the trailer and the first song. ‘I Am Game’ is also the next production from Wayfarer Films following the blockbuster success of Lokah: Chapter 1 - Chandra. The film marks director Nahas Hidhayath’s next project after the blockbuster ‘RDX’.


Line Producer: Bibin Perumbilly, Cinematography: Jimshi Khalid, Music: Jakes Bejoy, Editing: Chaman Chacko, Production Heads: Sujoy James, Devadevan, Production Designer: Ajayan Chalissery, Action: Anbariv Masters, Makeup: Ronex Xavier, Costume: Mashar Hamsa, Production Controller: Deepak Parameswaran, Associate Director: Rohith Chandrasekhar, Lyrics: Manu Manjith, Vinayak Sasikumar, VFX: Thoufeeq (Eggwhite), Poster Design: Ten Point, Sound Design: Sync Cinema, Sound Mix: Kannan Ganapathy, Stills: SBK, Marketing Head: Vijith Viswanathan.

அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

 *‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –*

*காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !*


முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.


“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது.


இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன. காதலின் இனிமையான தருணங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த மெலடி, பாடல் வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை போர்த்தொழில் படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.


பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


தற்போது “ஆசை வரமே” பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. காதல், இசை மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு ஒரு அழகான காதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


https://www.youtube.com/watch?v=xwUz3tSlMZ4

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது

 *நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது*



தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது.


உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்தில் அணுகும் மனதைத் தொடும் கதையாகும். தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை குடும்பத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பயணமே இதன் மையக் கருத்தாகும். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கி, ஒரு துணையைத் தேட விரும்பும் அவளது முடிவு, குடும்பம், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் தனக்கான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான தைரியம் ஆகிய கேள்விகளை அவளுக்கு முன்வைக்கிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன் மற்றும் பாலாஜி சக்திவேல் நடித்துள்ள இந்த திரைப்படம், நுணுக்கமான கதை சொல்லலையும் இயல்பான நடிப்பையும் ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பெறும் ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. நூறு சாமி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ZEE5-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இதன் மூலம், பிராந்திய சந்தைகளில் உள்ள பார்வையாளர்களையும் திரைப்படம் சென்றடைந்துள்ளது.


திரைப்படத்தின் டிஜிட்டல் வெற்றியைப் பற்றி பேசிய ZEE5 தமிழ் & மலையாளம் வணிகத் தலைவர் லாய்ட் சேவியர் கூறுகையில், “நூறு சாமி திரைப்படத்திற்கு தமிழ் ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள அன்பான வரவேற்பைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது ஒரு சிறப்பான மைல்கல், குறிப்பாக மனித உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு கதைக்கு இது மிகப் பெரிய சாதனையாகும். குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை கண்டுபிடிக்கும் வாய்ப்பைப் பற்றி இந்த திரைப்படம் பேசுகிறது. இந்த உணர்வுகள் பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களுடன் இணைந்திருப்பதைப் பார்ப்பது மனதிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.


தனது நன்றியைத் தெரிவித்த இயக்குநர் சசி கூறுகையில், “நூறு சாமி திரைப்படத்திற்கு ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து இவ்வளவு அன்பு கிடைப்பதைப் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நேர்மையுடனும் உணர்வுடனும் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த கதை இத்தனை பேருடன் இணைந்து, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம். இந்த திரைப்படத்தை பார்த்து, ஆதரித்து, அன்பைப் பகிர்ந்த அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.


100 மில்லியன் பார்வை நிமிடங்கள் என்ற இந்த மைல்கல், டிஜிட்டல் தளங்களில் உணர்வுபூர்வமான பிராந்திய கதைகளுக்கான பார்வையாளர்களின் வளர்ந்து வரும் வரவேற்பை பிரதிபலிக்கிறது. குடும்பம், உறவுகள் மற்றும் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புக்கான விருப்பத்தை நேர்மையாக சித்தரிக்கும் நூறு சாமி, அதன் திரையரங்கு பயணத்தைத் தாண்டியும் புதிய பார்வையாளர்களை தொடர்ந்து சென்றடைந்து, அவர்களுடன் தனது உறவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.


நூறு சாமி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.