Mr.
P. Moorthy, Minister for Commercial Taxes and Registration, Government
of Tamil Nadu, inaugurated the oxygen-generating plant donated by
Walmart and the Walmart Foundation to Doctors For You at the
Thirumangalam General Hospital in Madurai
மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் வால்மார்ட்டின் வால்மார்ட் அறக்கட்டளை சார்பில் ‘டாக்டர்ஸ் பார் யூ’ திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி துவக்கி வைத்தார். வால்மார்ட் அறக்கட்டளை மற்றும்
பிளிப்கார்ட் ஆகியவை பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் கோவிட்–19 நிவாரணப் பணிகளுக்கான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. மேலும் இந்த அறக்கட்டளை இன்டர்நேஷனல் மெடிக்கல் கார்ப் மூலம் சென்னையில் உள்ள சுகாதார மையங்களுக்கும், அமெரிகேர்சின் ‘டாக்டர்ஸ் பார் யூ’ திட்டத்தில் மதுரை, ஈரோடு மற்றும்
கள்ளக்குறிச்சியில் உள்ள சுகாதார மையங்களுக்கும் 5 கிரையோஜெனிக் திரவ சிலிண்டர்கள் மற்றும் 89 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் (இடமிருந்து வலமாக) வால்மார்ட் குளோபல் சோர்சிங், ஆரோக்கியம் மற்றும் சுகாதார பிரிவின் இந்தியாவிற்கான தலைவர் ஹேமந்த் அக்ரஹரி மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கார்ப்பரேட் மற்றும் அரசு விவகாரங்கள் பிரிவின் தென் பிராந்திய இயக்குனர் கிறிஸ்டோபர் காஸ்டெலினோ ஆகியோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment