Featured post

பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”:

 *“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!* ச...

Wednesday, 19 August 2026

பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”:

 *“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!*

சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா மற்றும் அவரது மகளின் உணர்வுப்பூர்வமான பயணத்தை ’இருமுடி கட்டு’ திரைப்படத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 வெளியாகிறது.

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 21, 2026) திரையரங்குகளில் வெளியாகிறது.


படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “‘இருமுடி கட்டு’ திரைப்படம் நாளை ரசிகர்களைச் சென்றடைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சிவா நிர்வாணா எங்களிடம் இந்த உணர்வுப்பூர்வமான கதையை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்துவிட்டது. தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான உறவை பார்வையாளர்கள் நிச்சயம் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். அதிலிருந்து விரியும் கதை, மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத ஒரு உலகிற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். ரவிதேஜா சார் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இதுபோன்ற வித்தியாசமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி. 


சிவா நிர்வாணா உணர்வுப்பூர்வமான கதையை கொடுத்துள்ளார். பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. நாளை திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார். 


ரவி தேஜா மற்றும் சிவா நிர்வாணா முதன்முறையாக இணையும் இந்தத் திரைப்படத்தில், பிரியா பவானி சங்கர் காவேரி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர். சிவ் சனானா இணைத் தயாரிப்பாளராகவும், நீரஜ் கல்யாண் டி-சீரிஸின் தலைவராகவும், செர்ரி தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுகின்றனர்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்து, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம், மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் இயக்குநர் சிவா நிர்வாணா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment