Featured post

BOONIE BEARS: GUARDIAN CODE

 *BOONIE BEARS: GUARDIAN CODE* இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் த...

Wednesday 31 January 2024

Main Atal Hoon Movie Review

Main Atal Hoon Movie Review 

 Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “ரவி ஜாதவ்” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Main Atal Hoon”-ன்ற ஹிந்தி படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்தப்படம் மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் “அடல் பிஹாரி வாஜ்பாய்” பற்றிய journalist சாரங் தர்ஷானேவால் எழுதப்பட்ட “அடல்ஜி” என்ற biography base பண்ணி எடுக்கப்பட்ட ஒரு biopic. இந்தப்படத்துல “பங்கஜ் திரிபாதி, பியுஷ் மிஷ்ரா, தயா ஷங்கர் பாண்டே, பிரமோத் பதக், ராஜா சேவக்” ஆகியோர் நடிச்சிருக்காங்க. இந்தப படத்துக்கு ஒளிப்பதிவு “லாரன்ஸ் டி குன்ஹா” பண்ணியிருக்காங்க. இசை “மான்டி ஷர்மா” மற்றும் படத்தொகுப்பு “பண்டி நாகி”.

இந்த படம் நம்ம நாட்டுல வலது சாரி அரசியலின் எழுச்சிக்கு காரணமாக இருந்த ஒரு அன்பின் அரணை புரிந்து கொள்வதற்கான ஒரு great opportunity-ன்னு சொல்லலாம். ஒரு இளம் கவிஞரா யமுனை நதிக்கரைகளின் ஓரம் வளர்ந்து வந்த வாஜ்பாய் காதலுக்கு eternal symbol-ஆ இருக்கக்கூடிய தாஜ்மஹால்க்கு பின்னாடி உள்ள தொழிலாளர்களின் வலியை பார்த்தாரு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச அன்னைக்கு ஒரு டீ விற்பவர் நம்ம வாஜ்பாயிடம் அப்போதைய பிரதமர் நேருவின் பேச்சு முழுக்க English-ல இருந்ததால தனக்கு எதுவும் புரியலன்னு சொன்னாரு. வாஜ்பாய் இந்தியாவின் மாற்று கருத்துக்கான குரலாக வெளி வந்தார். அந்த குரல் பல வருடங்களுக்கு பெருகிக்கொண்டு வந்தது. இருந்தாலும், இந்த படத்தோட கதை ஆரம்பத்துல சுவாரஸ்யமா தொடங்குனாலும், போகப்போக அவருடைய பேச்சுக்கள் மற்றும் சாதனைகளை சொல்ற வெறும் உரைநடையா தான் இருக்கு. இது எல்லாம் நமக்கு internet-ல தேடினாலே கிடைக்கக்கூடிய விஷயங்கள் தான்.

படத்தோட பெரும் பகுதி ஒரு பிரபலமான தலைவருடைய புகழ நிறைவா சொல்லாத மாதிரி தான் இருக்கு. ஏன்னா அவர் ஒரு ஜனநாயகவாதியாவும், ஹிந்துத்துவாவின் சித்தாந்தவாதியாவும் இருப்பது ஒன்றுக்கு ஒன்று முரண் இல்லை என்பது போல தான் வாழ்ந்தாரு. அவருடைய பழமைவாத சிந்தனையில இருந்து எப்படி உலகத்தப்பத்தின ஒரு பரந்த பார்வையா மாறுனதுன்றது தெளிவா சொல்லப்படவே இல்லை. அதை விட இந்த கதை கொஞ்சம் safe ஆன zone-ல போகுது. அதே மாதிரி காந்தியை பற்றி வாஜ்பாய்க்கு என்ன அபிப்ராயம் இருந்ததுன்றது தெளிவாவே இல்லை. அவருடைய நல்ல நண்பரான சிக்கந்தர் பக்த் பத்தி சொல்லப்படவே இல்லை. வாஜ்பாய் அவர்கள் அரசியல்ல எப்படி நண்பர்களை உருவாக்கி கொண்டார் மற்றும் அவருடைய தாராளவாத கொள்கைகளால அவருடைய தாய் நிறுவனமான RSS-குள்ளயே எப்படி எதிரிகளை சம்பாதிச்சாரு என்றதும் சொல்லப்படலை.

வாஜ்பாய் கதாப்பாத்திரத்துல நடிச்சுருக்குற பங்கஜ் திரிபாதி அந்த கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுக்குற மாதிரி அவரால எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பா நடிச்சு இருக்காரு. வாஜ்பாய் மாதிரியே இவரும் தன்னுடைய பேச்சாற்றலால் பார்ப்பவர்களை hold பண்றாரு. அது வெறுமனே வாஜ்பையுடைய mood and  mannerism-த்தோடு மட்டும் இல்லாம ஒரு நெருக்கடியான சூழ்நிலையில வாஜ்பாயோட அமைதி மற்றும் சாந்தம் எப்படி இருந்துச்சோ அதையும் திரையில தடையின்றி பிரதிபலிச்சிருக்காரு. இதனால தான் வாஜ்பாயுடைய critics கூட அவரை Teflon coated-ன்னு விவரிச்சாங்க. வாஜ்பாயுடைய வயதான காலங்கள்ல வரும் பங்கஜ் திரிபாதி அதற்காக உடல் எடை கூட்டாமல் இருந்தாலும் அவருடைய நடிப்புல இது எல்லாம் நம்ம மனசுல தோணாம போயிடுது.

இருந்தாலும் இந்த படத்தோட weak writing-னால அவரே நிறைய தடுமாறியிருக்காரு. கற்பனைக்கு எட்டாத sound and production design அவருக்கு எந்த விதத்திலும் உதவல. இயக்குனர் ரவி ஜாதவ், வாஜ்பாயின் மூத்த சகாக்கள் சிலர் வாஜ்பாயை விவரித்ததால், சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் வரும்போது அவர் பேசிய இரட்டைப் பேச்சை ஆராயாமல் மிதமான முகமூடியின் பின்னால் பதுங்கியிருக்கிறார். இந்த படத்துல ஒரு பழமைவாதக் கட்சியில் உள்ள ஒரு தாராளவாதியின் முரண்பாடான கருத்துகளை படம் எடுத்துரைக்கும் நிகழ்வுகள் ரெண்டு இடங்கள்ல வருது. ஒன்னு, பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வாஜ்பாய் மேற்பரப்பைத் தரைமட்டமாக்குவது பற்றி பேசும் லக்னோ பேச்சு, ஆனால் வெவ்வேறு வகுப்புவாத கலவரங்கள் வெடித்ததில் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தாரு. இன்னொன்னு வாஜ்பாய் தான் திருமணம் ஆகாதவர் ஆனால் பிரம்மச்சாரி இல்லை என்று சொன்னதை அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பதிவு பண்ணியிருக்காரு. ராஜ் குமாரி கவுலுக்கும், வாஜ்பாய்க்கும் இடையிலான பிணைப்பை சித்தரிக்க ஏக்தா கவுல் நன்றாக இசையமைத்திருக்கிறார்., ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், இயக்குநர் ஜாதவ் கவிதை இதயத்திற்கும் அரசியல் மனதிற்கும் இடையே உள்ள பிளவுகளை ரொம்ப rare-ஆ தான் explore பண்ணியிருக்காரு.

திரையில் வரும் கதாப்பாத்திரங்கள் என்ன பேசுகிறார்கள். என்ன சித்தரிக்கிறார்கள் என்பது ரொம்பவே கண்காணிக்கப்படுற இந்த காலத்துல, வாஜ்பாய் அவர்களுக்கு அசைவ உணவு மேலயும் , liquor மேலயும் இருந்த soft corner சேர்க்கப்படல. மேலும் அவரோட பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முற்போக்கான கண்ணோட்டத்தை வடிவமைக்க அவரது வெளிநாட்டு வருகைகள் எவ்வாறு உதவியது என்பதை படம் கணக்கில எடுத்துக்கல. அத விட மிக முக்கியமா, பால்ராஜ் மதோக் மற்றும் தத்தோபந்த் தேங்காடி போன்ற ஜனசங்கத்திலும் சங்க பரிவாரத்திலும் இருந்த அவரது எதிர்ப்பாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் இடம் கொடுக்கல. மேலும் ராமர் கோயில் இயக்கம் பற்றி பேசும்போது, மண்டல் கமிஷன் அறிக்கை குறித்து வெளிப்படையாக மௌனம் சாதிக்குது இந்த படம்.

தயா சங்கர் பாண்டே மற்றும் பிரமோத் பதக் ஆகியோர் தீன் தயாள் உபாதாயா மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியாக தாங்கள் நடித்த கதாப்பாத்திரங்களில் நியாயம் காட்டினாலும், லால் கிருஷ்ண அத்வானியாக ராஜ சேவக்கின் நடிப்பு disappointment தருது. இயக்குனர் ரவி யாதவ் இந்த திரைப்படத்தின் இரண்டாவது மிக முக்கியமான கதாப்பாத்திரத்தை கேலிச்சித்திரமாகக் குறைக்கிறார், மேலும் அத்வானியின் மூத்த மற்றும் அவரது நண்பருமான வாஜ்பாயுடன் இருந்த சிக்கலான உறவுக்கு, குறிப்பாக அவர் படத்தின் குரலாக இருக்கும் போது, writing justice பண்ணலன்னு தான் சொல்லணும். அத்வானி ஏன் வாஜ்பாயை ஓரத்தில் இருந்து முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்தார் என்பது பற்றி பேசப்படல. பிரமோத் மகாஜன், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் cheap mimicry பண்ண மாதிரி தான் இருந்துச்சு. அதிலும் particular-ஆ interval-க்கு அப்புறம் திரிபாதி வர்ற episodes BJP உடைய தேர்தல் அறிக்கையில் இருந்ததை tick பண்ற மாதிரி தான் இருந்துச்சு. இவங்க வெளிப்படையாவே கந்தஹார்ல நடந்த plane hijack பதிவு பண்ணாம விட்டுட்டாங்க. 

இந்த படத்தோட narrative  பெரும்பாலும் காங்கிரஸின் ஜனநாயக விரோத வழிகள் குறித்த வாஜ்பாயின் கடுமையான விமர்சனத்தில் தான் dominate பண்ணுது. அதே நேரத்தில் நேருவின் பங்களிப்பை அவர் அங்கீகரிக்கும் போது அவருடைய கருணை புரிகிறது. இந்த படம் நமக்கு கருத்தியல் பிளவு நுண்துளைகளாக இருந்த காலங்களை remind பண்ணுதுன்னே சொல்லலாம். நம்பத்தகுந்த எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாய் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் சில சுவாரஸ்யமான  தருணங்களை திரைப்படம் கவனக்குறைவாக வழங்குவதால், திருத்தம் சரியான நேரத்தில் உள்ளது. Emergency-க்கு பிறகு அவரது அனல் பறக்கும் வார்த்தைகளினால் இந்திரா காந்தியை crony capitalism மற்றும் அதிகாரத் திமிர் என்று அவர் குற்றம் சாட்டியது இப்போ current scenario-க்கும் பொருத்தமா தான் இருக்கு.

No comments:

Post a Comment