Featured post

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்

 திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்! 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்...

Friday, 28 February 2025

Suzhal 2 Review

Suzhal 2 Web Series Review

 ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம suzhal season 2 vortex webseries ஓட review அ தான் பாக்க போறோம். இந்த webseries amazon prime ல இன்னிக்கு release ஆயிருக்கு. ஏற்கனவே season one க்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. பொதுவா படங்களுக்கு இருக்கற expectation webseries க்கு வர்ரது கொஞ்ச கஷ்டம் தான் ஆனா தமிழ் ல வந்த webseries ஆனா ayali , vadhanthi , inspector rishi அப்புறம் village எல்லாமே நல்ல hit ஆச்சு னு சொல்லலாம். kathir aishwarya rajesh தான் மறுபடியும் lead roles ல suzhal 2 ல நடிச்சிருக்காங்க. 

Suzhal 2 Web Series Video Review: https://www.youtube.com/watch?v=FW4rwhVOeQc


இதை பத்தி pushkar gayathri பேசும் போது ரெண்டு season யும் ஒரு particular festival அ base பண்ணி தான் எடுத்திருக்கோம் னு சொல்லிருக்காங்க. அது என்னனா season one sambaloor ல இருக்கற ஒரு மலை கிராமத்துல mayana kolli விழா வ base பண்ணி தான் கதை நகரும் அதே மாதிரி ரெண்டாவுது season க்கு kaalipattanam ன்ற கடற்கரை பகுதில அஷ்டகாளி விழா வை base பண்ணி எடுத்திருக்கோம் னு சொல்லிருக்காங்க. இதுக்காக நெறய research பண்ணி அந்த எடத்துல சொல்ல படுற கதைகள் என்னனா னு அங்க இருக்கற மக்கள் கிட்டயே interview எடுத்து உருவான கதை தான் suzhal season 2 vortex . அஷ்டகாளி ன்றது எட்டு காளிகளை குறிக்கும். இதை base பண்ணி தான் கதையை எட்டு பொண்ணுகளை ஒரு crime ஓட prime suspect அ வச்சு கதையை நகர்த்திருக்கோம் நும் சொல்லிருக்காங்க.


சோ வாங்க கதைக்குள்ள போலாம். நந்தினி யா நடிச்சிருக்க aishwarya first season ல கொலை பன்னதுக்காக இப்போ jail ல இருக்காங்க. இவங்களோட case எடுத்து விசாரிக்க ஆரம்பிக்குறாரு sakkarai அ நடிச்சிருக்க kathir . நந்தினி handle பண்ணிட்டுருந்த case க்கு இவரு தான் வெளில இருந்து help பண்ணுறாரு.  வக்கீல் chellappa  வ  நடிச்சிருக்க lal , sakkarai க்கு அப்பா மாதிரி சோ இந்த case அ இவங்க ரெண்டு பேருக்கும் favor அ இருக்கற மாதிரி கொண்டு வந்துடுறாரு. 

இதுக்கு அப்புறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது ஒரு private cottage ல chellappa இறந்து கிடைக்குறாரு. இதை suicide னு எடுத்துட்டு வந்தாலும் ரொம்ப மர்மமா இருக்கு ஏன்னா அந்த cottage ஓட எல்லா கதவுகளும் உள்பக்கமா பூட்டிருக்கு அதோட murder weapon யும் அங்க இல்ல. first episode ல அந்த ரூம் குள்ள இருக்கற closet ல ஒளிஞ்சுக்கிட்டு ஒரு பொண்ணு இருப்பாங்க. இவங்க தான் முதல் suspect அ போலீஸ் எடுத்துக்கறாங்க. மறுபடியும் இது complicate ஆகுது ஏன்னா இந்த closet அ வெளி பக்கமா தான் பூட்டி வச்சிருப்பாங்க. இதுக்கு அப்புறம் தான் இந்த investigation எட்டு episode அ ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போறாங்க. நெறய suspects இந்த வட்டத்துக்குள்ள வராங்க இதை யார் பண்ணறது தான் கதையை இருக்கு. 

first season ல கதை சொல்ற விதம் எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் இந்த சீசன் ஓட first episode unique அ நிக்குது னு சொல்லணும். second episode அ பாத்தீங்கன்னா main characters க்கு இருக்கற relationship அப்புறம் clues எல்லாம் சொல்லற விதமா இருக்கு. அதுக்கு அப்புறம் வர எல்லா episodes யும் பிரச்சனைகளோடு சேந்து investigation நடக்கற மாதிரி ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. அந்த local எடத்துல நடக்கற religious festival , cultural story ஓட connect பண்ணற விதமா கதை நகரதுனால ரொம்ப interesting அ இருக்குனு தான் சொல்லணும். 

first season ல sambaloor ல இருக்கற sets எப்படி audience அ capture பண்ணிச்சோ அதே மாதிரி தான் இந்த season ல kaalipatnam ன்ற கடற்கரை இடம் இருக்கு. ஓவுவுறு location அ இருக்கட்டும் எல்லாமே கதைக்கு ஏத்த மாதிரி ரொம்ப super அ இருந்தது. 

kaalipatnam க்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நெறய வேஷம் போட்டுக்கிட்டு வராங்க அஷ்டகாளி திருவிழா க்கு. இந்த விழா ல என்ன விஷேஷம் ந எட்டு காளிகள் ஒண்ணா சேந்து ஒரு அரக்கனை வதம் பண்ணுவாங்க. முதல் season மாதிரியே இந்த season ளையும் ஒரு festival ஓட சேந்து வர மாதிரி case அ கொண்டு வராங்க. second episode ல chellappa ஓட கொலை நடந்துதுக்கு அப்புறம் நெறய suspects வராங்க. அப்படியே அடுத்த scene ல திருவிழாக்கு வேஷம் போட்டுட்டு வரவங்கள காமிக்கறாங்க. இது visual அ பாக்குறதுக்கு ரொம்ப super அ இருந்தது. 

இவ்ளோ suspects ல யாரு உண்மையான குற்றவாளி னு கண்டுபிடிக்கறதுக்காக sakkarai யும் local inspector moorthy அ நடிச்சிருக்க saravanan யும் ஒண்ணா சேருறாங்க. இதுக்கு அப்புறம் நெறய விஷயங்களை சந்திக்கறாங்க அதோட நெறய twist யும் வருது. அதுல ஒரு scene செம highlight அ இருந்தது. அது என்னனா sakkrai எல்லா suspects யும் nandhini இருக்கற jail ல அடைச்சு வைக்கிற மாதிரி ready பண்ணிடுறாரு. இது வரைக்கும் sakkarai கிட்ட இருந்து எல்லா information யும் collect பண்ணி வச்சிருந்த nandhini இந்த பொண்ணுங்க கிட்ட பேசி யாரு குற்றவாளி னு கண்டுபிடிக்க பாக்குறாங்க. இந்த prison scenes எல்லாம் interesting அ அதே சமயம் tension ஓட இருந்தது னு தான் சொல்லணும். 

last ரெண்டு episodes ல தான் nandhini full fledged இருக்காங்க அது வரைக்கும் அவங்க acting ரொம்ப subtle அ தான் இருக்கு. ஒரு பக்கம் அவங்களோட guilty feeling இன்னொரு பக்கம் அவங்க case அ solve பண்ணறது னு ரெண்டு sides  யுமே அழகா portray பண்ணிருக்காங்க. mystery க்கு ஏத்த மாதிரியே தான் screenplay , dialogues  , background  எல்லாமே அமைச்சிருந்தது. 

ஒரு பக்காவான webseries தான் இது. இதை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment