Featured post

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும்

 *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*  A&P குரூப்ஸ் நிறுவனத்த...

Saturday, 31 May 2025

சண்டைக் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படமான " தாவுத் " டைட்டில் லுக் வெளியானது.

 சண்டைக் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படமான " தாவுத் " டைட்டில் லுக் வெளியானது.



கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. 

ஆனால் தற்போது " தாவுத் " என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.


இந்த படத்தை TURM  புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தங்களது இரண்டாவது படைப்பாக மிக பிரமாண்டாமாக தயாரித்துள்ளனர்.


பரோல், உடன்பால், பெண்குயின், சேதுபதி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார்.


சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம்

கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


மற்றும் வத்திகுச்சி, காலா போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு 

செய்திருக்கின்றனர். 


அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார்.


R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய,கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார்.


மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்


தயாரிப்பு - S. உமா மகேஸ்வரி


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன்.

Vembu’ Cinematographer Kumaran’s World Guinness Movie

 *’Vembu’ Cinematographer Kumaran’s World Guinness Movie!*

*Actor Thambi Ramaiah’s kind gesture of appreciating ‘Vembu’ cinematographer Kumaran for a never-before visual attempt*! 






Debut filmmaker Justin Prabhu’s directorial ‘Vembu’ that had its theatrical release recently, has been garnering phenomenal response from all over the places. The film featuring Madras (Johny) fame Hari krishnan and Sheela  of Mandela fame has been appreciated for its core theme and presentation. 


Marimuthu, Jayarao among others have performed pivotal roles in this movie. 


The film with its backdrop set around the current societal scenario deals with the intention of creating awareness about women’s safety, thereby gaining appreciations. The cinematography, handled by Kumaran, has also garnered appreciation for its contribution to the film’s impact.


Sharing his journey in the industry and experience of working in ‘Vembu’, Cinematographer Kumaran says, “Even before I completed my graduation in B.Tech, I got an opportunity work in the film industry. I embarked on my journey as assistant cinematographer to cameraman Vaidhy in the movie ‘Marudhamalai’ and continued to work with him in Malayalam and Kannada movies. Later, I worked in couple of Kannada movies, and worked as ‘Operative Cameraman’ in DOP Velraj sir’s directorial ‘Velai Illa Pattadhaari’. 


Later, I became cinematographer through his next directorial ‘Thanga Magan’, and it was my debut film as cinematography and then cranked camera for the film ‘Engamma Rani’. 


When I worked in the film ‘Badam Geer’, I happened to meet filmmaker Justin Prabhu, who worked as assistant director in that film. Our friendship and bonding helped us collaborate in this movie. We had discussed many stories, and Vembu was the one to get finalised. 


The film was shot in the Krishnagiri region, which is a place most filmmakers don’t usually go to. It looked beautiful and matched the story well. For one scene, we thought it would look nice if it rained. But the area was so remote that we couldn’t even bring in a water tanker to create artificial rain. So we decided to shoot the scene without rain. Surprisingly, it started raining naturally right when we were about to shoot.


We instantly decided to shoot the scene as preplanned under natural rain showers. I felt so blessed during that moment.


It’s truly heartening to hear the positive response from audiences after watching the film. What moved me even more was hearing comments that my visuals carry the signature style of Balu Mahendra sir. While I take it as a great compliment, I also felt a bit nervous being compared to a genius of his stature.


Currently, I have worked a new film ‘Please Open the Door’, which has now become a world record for being the first-ever single shot film with lengthy runtime. It’s getting ready for release. Since we had to shoot the entire film in single shot, it came with many challenges. We brought in some equipment from Bangalore to make sure nothing interrupted the visuals, which became a monstrous challenge during the shoot. I am then working on Kaali Venkat’s next movie, directed by Raghuram. 


The other film down the line is another collaboration with Kaali Venkat, which also features Thambi Ramaiah sir in the lead role. Recently, we shot a courtroom scene  using two cameras with newfangled technique. The entire crew appreciated me, and especially Thambi Ramaiah sir’s appreciation stating, “I am telling this as a director. In the films I have worked so far, none have made this kind of attempt Kumara.’ He has been consistently speaking about this scene picturing to everyone he meets often. This has blessed me with immense happiness. 


My forthcoming film ‘Badam Geer’ is ready for release followed by Sameer Ali Khan’s production and lead role in ‘Tamil Paiyyan Hindi Ponnu’. This film will have beautiful visuals as in 90s Bollywood films. It will be totally in contrast to Vembu movie. Director appreciated me after watching the visuals complimenting that the film doesn’t need DI at all for giving such beautiful visuals. 


Furthermore, I am working in another film titled ‘Nadhamuni’, featuring musical score by Isaignani Ilaiyaraaja, directed by Madhavan, which revolves round the cruel issue of child abuses. Big Boss fame Aiswarya Dutta is performing the female lead role in this movie.’

கின்னஸ் சாதனை படத்தில் பணியாற்றிய 'வேம்பு' பட ஒளிப்பதிவாளர் குமரன்

 *கின்னஸ் சாதனை படத்தில் பணியாற்றிய 'வேம்பு' பட ஒளிப்பதிவாளர் குமரன்*'






*பார்ப்போரிடம் எல்லாம் 'வேம்பு' பட ஒளிப்பதிவாளர் குமரனை பாராட்டி பேசிவரும் தம்பி ராமையா ; காரணம் இதுதான்*


அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள படம் ‘வேம்பு’ மெட்ராஸ் (ஜானி) ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். 


முக்கிய வேடங்களில் மாரிமுத்து, ஜெயராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது உருவாகி, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் குமரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.


தனது சினிமா பயணம் மற்றும் வேம்பு படம் குறித்து குமரன் கூறும்போது, “நான் கல்லூரியில் பி.டெக் படித்து முடிப்பதற்கு முன்பாகவே சினிமாவில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது. மருதமலை படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வைத்தியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவருடன் மலையாளம், கன்னட மொழிகளில்  பணியாற்றி உள்ளேன். கன்னடத்தில் ஒளிப்பதிவாளராக இரண்டு படங்களில் பணியாற்றிய நிலையில் ஒளிபதிவாளர் வேல்ராஜ் இயக்குநராக மாறிய வேலையில்லா பட்டதாரி படத்தில் ஆப்பரேட்டிவ் கேமராமேனாக பணியாற்றினேன். 


அதன்பிறகு அவர் இயக்கிய தங்க மகன் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக மாறினேன். அதுதான் என் முதல் படம். அதன் பிறகு எங்கம்மா ராணி படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளேன். 


பாதாம் கீர் என்கிற படத்தில் பணியாற்றியபோது அந்த படத்தில் உதவி இயக்குநராக ஜஸ்டின் பிரபு வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட நட்பில் அவர் இயக்குநராக அறிமுகமான வேம்பு படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்தேன். பல கதைகளை நானும் அவரும் இணைந்து விவாதித்தோம். அதில் இந்த வேம்பு கதை தான் தயாரிப்பாளருக்குப் பிடித்திருந்தது.


இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற கிருஷ்ணகிரி பகுதி பெரும்பாலும் சினிமாக்காரர்கள் செல்லாத ஏரியா. அழகாகவும் இருந்தது. கதைக்கும் பொருத்தமானதாக இருந்தது. ஒரு காட்சியில் மழை பெய்வது போல இருந்தால் நன்றாக இருக்கும் எனப் பேசி முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடத்தில் செயற்கையாக மழையை பெய்ய வைப்பதற்காக அந்த பகுதிக்குள் தண்ணீர் வண்டியைக் கூட எங்களால் கொண்டுவர இயலவில்லை. அந்த அளவிற்கு வாகன போக்குவரத்திற்கு இடைஞ்சலான பகுதி அது. அதனால் சாதாரணமாகவே அந்த காட்சியை எடுக்கலாம் என நினைத்தபோது, எதிர்பாராத விதமாக மழை பெய்யத் துவங்கியது. 


உடனடியாக நாங்கள் ஏற்கனவே பேசி வைத்திருந்தபடி இயற்கை மழையிலேயே அந்தக் காட்சியை அழகாக எடுத்து முடித்தோம். அந்த சமயத்தில் உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன்.


படம் பார்த்த பலரும் தற்போது பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் பாலுமகேந்திராவின் ஃபிரேம்களை பார்த்தது போல இருக்கிறது என்று சொன்னார்கள். பெருமையாக இருந்தாலும் அப்படி ஒரு ஜாம்பவானுடன் ஒப்பிடுகிறார்களே என பயமாகவும் இருந்தது.


தற்போது சிங்கிள் ஷாட்டில் உலக சாதனையாக உருவாகியுள்ள ‘ப்ளீஸ் ஓப்பன் தி டோர்’ என்கிற படத்தில் பணியாற்றியுள்ளேன். இது ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. சிங்கிள் ஷாட்டில் எடுக்க வேண்டி இருந்ததால் நிறைய சவால்களும் இருந்தன. இதற்காக பெங்களூரில் இருந்து சில சாதனங்களை வரவழைத்து எந்த ஒரு இடத்திலும் காட்சி படமாவது தடைபடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 


 இந்தப் படம் தற்போது கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட இருக்கிறது. அது மட்டுமல்ல உலகத்திலேயே சிங்கிள் ஷாட்டில் அதிக நீளம் கொண்ட படம் இந்த ‘ப்ளீஸ் ஓபன் தி டோர்’ படம் தான்.


அடுத்ததாக காளி வெங்கட் நடிக்கும் படத்தில் பணியாற்றி வருகிறேன். ரகுராம் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.


இன்னொரு படமாக காளி வெங்கட் மற்றும் தம்பி ராமையா இணைந்து நடிக்கும் படத்திலும் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு நீதிமன்றக் காட்சியைப் படமாக்கினோம்.. அந்த காட்சியை இரண்டு கேமராக்களை பயன்படுத்தி ஒரு புதிய யுக்தியில் படமாக்கினேன். படக்குழுவினர் அனைவருமே அதை பாராட்டினார்கள். குறிப்பாக தம்பி ராமையா என்னிடம் வந்து, “ஒரு இயக்குநராக சொல்கிறேன்.. இதுவரை நான் பார்த்த படங்களில் இது போன்று ஒரு காட்சியை யாரும் படமாக்கியது இல்லை குமரா” என்று பாராட்டியதுடன், பார்க்கும் அனைவரிடமும் இந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் பற்றி சிலாகித்துக் கூறி வருகிறார். அது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.


நான் பணியாற்றிய பாதாம்கீர் திரைப்படம் அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இன்னொரு பக்கம் சமீர் அலிகான் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு' படத்தில் பணியாற்றியுள்ளேன். 90களில் வெளியான பாலிவுட் படங்களின் விஷுவல் போல ரம்யமாக இருக்கும். வேம்பு படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒளிப்பதிவை அதில் பார்க்கலாம். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த படத்தின் வியாபாரக் காட்சிகளுக்காக என டி ஐ (DI) பண்ணவே தேவையில்லை. அந்த அளவிற்கு குவாலிட்டியாக எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று இயக்குநர் பாராட்டினார்.


அடுத்ததாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிவரும் நாதமுனி படத்தில் பணியாற்றியுள்ளேன். குழந்தைகளின் மீதான பாலியல் துன்புறுத்தலை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. மாதவன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தாத்தா கதாநாயகியாக நடித்துள்ளார்”. வேம்பு படத்தின் வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

 *வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*






*மாவீரன் "காடுவெட்டி" குரு அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா - இயக்குநர் வ.கௌதமன் பிரகடனம்.*


நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும்  பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன்,  மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர். 'படையாண்ட மாவீரா' இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:


நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றன‌ர். 'பிக் பாஸ்' புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.  தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர். 


நடிகர் இளவரசு பேசுகையில், "தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்," என்றார். 


இயக்குநர் வி.சேகர் பேசுகையில், "இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பலம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்." 


வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், "கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது 'சந்தனக்காடு' தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 


கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், "அண்ணன் கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது 'படையாண்ட மாவீரா' படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 


இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், "கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 'படையாண்ட மாவீரா' படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்," என்றார். 


சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், "இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்," என்றார். 


தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், "படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன்," என்றார். 


தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், "தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், 'படையாண்ட மாவீரா' பிரம்மாண்டத்தின் உச்சம், 'புஷ்பா' படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும்," என்றார். 


இயக்குநர் பேரரசு பேசுகையில், "நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கிவிடக்கூடாது, மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது 'படையாண்ட மாவீரா' வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், "அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்," என்றார். 


நீதிபதி கலையரசன் பேசுகையில், "அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமன் அவர்களை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'படையாண்ட மாவீரா' படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்," என்றார். 


'படையாண்ட மாவீரா' படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், "இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.


இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் 'படையாண்ட மாவீரா'. 


இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார். 


இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி. 


எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் 'சந்தனக்காடு' எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது. 


இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள். 


என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன்.  இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்றார். 


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "தம்பி கெளதமன் மிகுந்த‌ உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும். 


உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் 'படையாண்ட மாவீரா' என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார். 


கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். 'சந்தனக்காடு', 'மகிழ்ச்சி' அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ 'படையாண்ட மாவீரா' மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. 'படையாண்ட மாவீரா' மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார். 


***

உயரத்தைத் தொட்ட இளைஞன்: வெற்றியின் நிழலில் – ஆசிஷ் எனும்

 உயரத்தைத் தொட்ட இளைஞன்: வெற்றியின் நிழலில் – ஆசிஷ்  எனும் இளைஞரின் எவரெஸ்ட் சாதனை;








என் அப்பாவின் கடைசி ஆசை இது - ஆசிஷ் உருக்கம்;


சென்னை, மே 29,

நேற்று சர்வதேச எவரெஸ்ட் தினம் (International Everest Day), உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்டை முதன்முறையாக வென்ற சர் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நார்கே (1953) ஆகியோரின் சாதனைக்கு நினைவுகூரும் நாள். இந்த சிறப்பான நாளில், சென்னைச் சிறுவன் ஆசிஷ் யு, தனது சாதனையுடன் இளைஞர்களுக்கு புதிய முத்திரை பதித்துள்ளார்.


ஆசிஷ் யு (வயது: 18) – சென்னைச் சிறுவன், தனது தந்தை திரு. யு. வெங்கட சுப்பையாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தை வென்றுள்ளார். பள்ளி கல்வியை முடித்ததும் (2024-இல் பன்னிரண்டாம் வகுப்பு), ஒரு வருட இடைவெளியில் அவருடைய பயிற்சி துவங்கியது (டிசம்பர் 2023). அனுபவப் பயணம், அடிப்படை மற்றும் மேம்பட்ட மலை ஏறுதல் பயிற்சிகளை A தரத்தில் முடித்துள்ளார். இதன் பின்னர், ஹிமாலயன் பகுதியில் பல சவாலான நடைபயணங்களையும் மேற்கொண்டார்.


ஆசிஷின் சாதனை:

ஆசிஷ் தனது அணியின் தலைவர் – உலகின் மிகவும் இளம் எவரெஸ்ட் அணித் தலைவர்!

அணியில் 5 பேர் இருந்தனர். 3 பேர் மட்டுமே சிகரத்தை வென்றனர், ஆனால் ஒரு உறவினர் லொட்ஸே சிகரத்தில் இறந்தார்.

எவரெஸ்ட் சிகரம் ஏற்றும் பயணம் 11 மே அன்று துவங்கி 15 மே அன்று வெற்றி கண்டது.

மொத்த பயண காலம்: 37 நாட்கள் (5 ஏப்ரல் – 15 மே).

சுழற்சி பயணம்: 30 ஏப்ரல் – 3 மே.


பிற விவரங்கள்:

மொத்த செலவு: ரூ. 38 லட்சம்.

ஸ்பான்சர்: வேலம்மாள் வித்யாலயா பள்ளி (30 லட்சம்) மற்றும் உதயநிதி ஸ்டாலின் (5 லட்சம்).


சர்வதேச எவரெஸ்ட் தினமான நேற்று (மே 29), ஆசிஷ் தனது வெற்றிப் பயணத்துடன் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். அவரது சாதனை இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த, மேலும் சிகரம் வெல்லும் கனவுகள் எப்போதும் சாத்தியமென சொல்லும்.


இது போன்ற பல சாதனைகளுக்கு உதவியாக இருக்கும் வேலம்மாள் குழுமத்தின் உரிமையாளர் வேல் மோகன் அவர்கள் பல மாணவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களின் லட்சியத்தை அடைய வழிகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Videos - https://we.tl/t-JO51uJ1wRS

Ashish Conquers Everest — A Son’s Tribute

 🏔️ Ashish Conquers Everest — A Son’s Tribute, A Nation’s Pride! 🇮🇳








"This was my father's final wish..." – With these heartfelt words, 18-year-old Ashish, a young man from Chennai, etched his name in history by conquering Mount Everest on May 15, 2025.


On International Everest Day (May 29), the day we remember Sir Edmund Hillary and Tenzing Norgay's legendary climb, Ashish returned to Chennai, having led a five-member team — and became the youngest Everest team leader in the world! 🌍🔥


💔 One teammate tragically passed away

💪 Only three reached the summit.

🧗 Total expedition time: 37 days (Apr 5 – May 15).

🌱 Trained over a year, starting December 2023.

💰 Total cost: ₹38 Lakhs. Sponsored by Velammal Vidyalaya (₹30L) and Minister Udhayanidhi Stalin (₹5L).


This climb is more than a personal victory — it’s a call to all youth to dream big, honor our roots, and protect our planet.


Special thanks to Mr. Vel Mohan, Velammal Group, for empowering dreams like Ashish’s.


📹 Watch the inspiring journey: 

https://we.tl/t-JO51uJ1wRS


#AshishEverest #YoungLeader #Everest2025 #VelammalPride #ChennaiToEverest #DreamBig #YouthInspiration #InternationalEverestDay #EnvironmentMatters

Super Singer Fame Poovaiyar Debuts as Hero

 *Super Singer Fame Poovaiyar Debuts as Hero Through Ram Abdullah Anthony*

8





Producer TS Clement Suresh of Annai Velankkani Studios is producing a content-driven movie titled ‘Ram Abdullah Antony’, set against the backdrops of school students, featuring Super Singer fame Poovaiyar as the protagonist. 


While the trend of directors, producers and music directors transforming into heroes onscreen, Super Singer fame Poovaiyar (Guppies) is now embarking on his journey as an actor in lead role through this film. 


The young boy shot to fame with as a child prodigy for his outstanding singing and instantly became the favourite of Tamil territories for his talent and childlike innocence. He vibed with the Thalapathy Vijay as singer in ‘Verithanam’ song from Bigil, and later shared the screen space together in ‘Master’ as an actor. 


Now with the young chap making his debut as hero, the industry and fans are excited about his new dimension. Following the First Look launch, he has been garnering appreciations from all over the places. 



The story of this film revolves around school students who are led astray during their formative years. Debut director T. Jayavel has written and directed this film as a socially-conscious creation, highlighting how these three students come together to address one of the most pressing global issues. The film’s climax and its powerful dialogue are sure to leave a deep impact  upon the audience. 


TS Clement Suresh is making his maiden production through Annai Velankkani Studios with this film and has produced it on a grand scale. 


Director has crafted this tale revolving around three school kids. Ajay Arnold and Arjun will be seen playing the other school kids alongside Poovaiyar.  Besides, a prominent and well-known actor will be seen playing a crucial character int his film, and talks are on final stage now. Vela Ramamoorthy, Thalaivasal Vijay, Sai Dheena, Kichcha Ravi, Chaams, Vinodhini Vaidyanathan, Bigg Boss Arnav & Raj Mohan are performing important characters in this film. Vanitha Vijaykumar will be making a special appearance in this film. 


The film’s shooting is briskly progressing, and the official announcement on the film’s teaser and trailer release will be made soon. 


 

 *Technical Crew* 


Written and Directed by T. Jayavel 

Cinematography - L.K. Vijay 

Music - T.R. Krishna Chethan 

Editor - Vinoth Sivakumar 

Art - Seenu - S. Irali Mumbai 

Lyrics - Sneghan, T. Jayavel

Stunt - Suresh 

Choreography - Dheena, I. Radhika 

Producer Supervisor - Ekambaram 

Stills - Chandru 

PRO - Johnson 

Designer - Gibson UGA 

Cashier - Thiruveni 

Executive Production - R. Bhavani 

Production - T.S. Clement Suresh

மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர்* *பூவையார்“ கதை

 *‘மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர்* *பூவையார்“  கதை நாயகனாகிறார்!*

  *“ராம் அப்துல்லா ஆண்டனி”.* 






Annai Vailankanni Studios சார்பில், தயாரிப்பாளர் 

TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில்,  அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர்  புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் “ராம் அப்துல்லா ஆண்டனி” தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.


இயக்குநர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் காமெடியன் என அனைவரும் ஹீரோவாக மாறும் கலாச்சாரத்தில் இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி புகழ் பெற்ற  பூவையார் (கப்பிஸ்) இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.  


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எளிய இளம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பூவையார், தன் தனித்துவமான குரலாலும், குணத்தாலும்,  சுட்டித்தனத்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.  இறுதிப்போட்டி வரை கட்டாயமாக வர வைத்து அசத்தியவர்.  தளபதி விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடல் பாடியதோடு, விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து, பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். 


 தற்போது அடுத்த கட்டமாக நாயகனாக இப்படம் மூலம் அறிமுகமாகிறார். இது திரை ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து, பலரும் பூவையாருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 


தவறான பாதையில் செல்லும் பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பள்ளி மாணவர்கள் இணைந்து செயல்படும்  உலகின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையை, சமூக அக்கறை கொண்ட படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் த.ஜெயவேல். இப் படத்தின் இறுதி கட்ட காட்சி, வசனம் அனைவரின் மனதை நிச்சயமாக உலுக்கும்.


Annai Vailankanni Studios நிறுவனத்தின்  சார்பில், முதல் படைப்பாக தயாரிப்பாளர் TS கிளமென்ட் சுரேஷ் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். 


இப்படத்தில், மூன்று சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார் டைரக்டர்.  பூவையாருடன் இணைந்து  இரண்டு பள்ளி மாணவர்களாக அஜய் அர்னால்ட் , அர்ஜூன்  நடிக்கிறார்கள்.  இவர்களுடன் முக்கிய கேரக்டரில் பிரபல நடிகர் நடிக்க பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது. மேலும்,  வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார்.


முழு மூச்சுடன் படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


தொழில் நுட்ப குழு விபரம்: 


எழுத்து, இயக்கம் - த.ஜெயவேல்

ஒளிப்பதிவு -  L.K.விஜய் 

இசை - T.R.கிருஷ்ண சேத்தன் 

எடிட்டர் - வினோத் சிவகுமார் 

கலை -  சீனு / எஸ்.இரளி மும்பை 

பாடல் வரிகள் - சினேகன், T.ஜெயவேல் 

ஸ்டண்ட் - சுரேஷ் 

நடன இயக்குனர் - தீனா, I.ராதிகா 

தயாரிப்பு மேலாளர் - ஏகாம்பரம் 

ஸ்டில்ஸ் - சந்துரு 

மக்கள் தொடர்பு -  ஜான்சன் 

டிசைனர் - கிப்சன் UGA 

கேஷியர் -  திருவேணி 

நிர்வாக தயாரிப்பாளர் -  R. பவானி 

தயாரிப்பு -  T S. கிளமென்ட் சுரேஷ்.

Friday, 30 May 2025

Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட

 Ref: TFAPA/1134/2025    

நாள்: 30-05-2025

 

*Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள்.*



தமிழ் சினிமா துறையில் திரைப்படங்களின் வெற்றிகள் 8 சதவீதமாக குறைந்து ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. இத்தகைய காலகட்டத்தில்,  சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு  ஏற்கனவே 18 சதவீதம் ஜிஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், Local Authorities Entertainment Tax (LBET) என்று 8 சதவீத வரி, 2017 முதல், கடந்த 8 வருடங்களாக தமிழ் நாட்டில் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து சங்கங்களின் கோரிக்கையை மனதில் கொண்டு, இன்று இந்த Local Authorities Entertainment Tax-ஐ தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் மாண்புமிகு     திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு M.P. சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ் சினிமா சார்பிலும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.



நன்றியுடன்,

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் சார்பில்,

 

 

T.G. தியாகராஜன் 

செயல் தலைவர்


T. சிவா                                                

பொதுச் செயலாளர்                            



G. தனஞ்ஜெயன்      

பொருளாளர்

Rajjaputhiran Movie Review

Rajjaputhiran Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம rajaputhiran படத்தோட review அ தான் பாக்க போறோம். Mahaa Kandan direct பண்ண இந்த படத்துல -Prabhu ,Vetri,Krishnapriya, Komal Kumar, R. V. Udhayakumar, Mansoor Ali Khan, Livingston , Thangadurai ல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம். 



ஒரு சின்ன கிராமத்துல இந்த கதை நடக்குது. chellaiya வா நடிச்சிருக்க பிரபு க்கு pattamuthu வ நடிச்சிருக்க வெற்றி தான் ஒரே பையன். இவங்க ரெண்டு பேரும் அவ்ளோ close அ இருக்காங்க. அதோட pattamuthu , poochendu வ நடிச்சிருக்க krishnapriya வை love பண்ணுறாரு. தன்னை புரிஞ்சு பாசம் வச்சிருக்கிற அப்பா அப்புறம் தன்னை உசுருக்கு உசுர love பண்ணற பொண்ணு வாழக்கை ரொம்ப சந்தோசமா போயிடு இருக்கு pattamuthu க்கு. அதே ஊர்ல linga வ நடிச்சிருக்க komal kumar இருக்காரு. இவரு எல்லா fraud வேலையும் பண்ணுறாரு. black money அ white money அ மாத்துறதுக்கு இந்த ஊர் மக்களை அவங்களுக்கே தெரியாம இவரோட இந்த வேலைக்கு பயன் படுத்துறாரு. இந்த மாதிரி ஒரு விஷயத்துல தான் pattamuthu மாட்டிக்குறாரு. இதுல இருந்து தன்னோட பையன வெளில கொண்டு வரணும் னு முயற்சி பண்ணுறாரு chellaiya .  இந்த முயற்சி ல chellaiya ஜெயிச்சாரா ? இதுல இருந்து pattamuthu வெளில வந்தாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படம் complete அ ஒரு family entertainer படம் னு தான் சொல்லணும். அப்பாக்கும் பையன்க்கும் நடுவுல இருக்கற sentiment பாக்குறதுக்கே ரொம்ப அழகா இருக்கும். vetri ஓட நடிப்பு கிராமத்தோட பாணி அப்படியே இருந்தது னு தான் சொல்லணும். அவரோட body language அ இருக்கட்டும், action scenes அ இருக்கட்டும் இல்லனா romantic moments அ இருக்கட்டும் எல்லாமே நல்ல இருந்தது. prabhu ஓட character தான் இந்த படத்துல highlight அ இருந்தது. இவருக்காகவே chellaiya role அ உருவாக்கின  மாதிரி அந்த அளவுக்கு இவரோட நடிப்பு ரொம்ப எதார்த்தமா நல்ல இருந்தது.   komal kumar தான் இந்த படத்துல வில்லன் அ நடிச்சிருக்காரு அதுமட்டுமில்லாம இது தான் இவருக்கு முதல் படம்.  இவரோட நடிப்பும் super அ இருந்தது. கடைசியா thangadurai  எப்பவும் போல அவரோட comedy  அ வச்சு எல்லாரையும் சிரிக்க வச்சுட்டாரு. 


இந்த படத்துல வந்த songs அ இருக்கட்டும் இல்லனா bgm அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த படத்தை வேற லெவல் க்கு எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும். song ல vetri ஓட dance sequence யும் super அ இருந்தது.  ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் audience ஓட கவனத்தை சிதறாத மாதிரி முக்கியமான segments அ மட்டும் வச்சி  படத்தை அழகா edit பண்ணிருக்காங்க. மொத்தத்துல ஒரு அழகான கதைக்களம் , actors ஓட அழகான நடிப்பு காகவே இந்த படத்தை பாக்கலாம். சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and friends க்காக போய் பாத்துட்டு வாங்க.

Manidhargal Movie Review

Manidhargal Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மனிதர்கள் படத்தோட review அ தான் பாக்க போறோம். raam indra direct பண்ணிருக்க இந்த படத்துல Kapil Velavan, Dhaksha, Gunavandhan, Arjundev Saravanan அப்புறம்  Sambasivam ல நடிச்சிருக்காங்க. இந்த படத்துல நடிச்சிருக்க எல்லாருமே புது முகம் தான். raam indhra direct பண்ணற முதல் படம் இது தான் அப்படி இருக்கும் புது முகங்கள் அ வச்சு ஒரு thriller  ஆனா திரைப்படத்தை  எடுக்கறது பெரிய விஷயம் தான். சோ வாங்க இந்த படத்தோட கதை என்ன பாக்கலாம். 

திண்டுக்கல் ல இந்த படத்தோட கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. ஒரு  நாள் night ல நடக்கற கதை தான் இது. ஊர் ல நடக்கற திருவிழா அதுல குடிச்சிட்டு வண்டி ஓட்டுற 6 friends அ காமிக்கறாங்க. திடீருனு பாத்த ஒருத்தன் மர்மமான முறை ல இறந்து கிடைக்கற. இவனை யார் கொன்னது னு யாருக்கும் தெரியல. பயத்துல ஒருத்தர மாதிரி ஒருத்தர் பழி போட ஆரம்பிக்குறாங்க. இதுனால friendship க்கு நடுவுல சந்தேகம், சண்டை னு எல்லாமே வருது. இந்த body அ எடுத்துக்கிட்டு police கிட்ட மாட்டிக்காம ஒரு எடத்துல போய் புதைக்கணும் னு முடிவு பண்ணுறாங்க. அப்படி பண்ணும் போது அவங்களுக்கு இன்னொரு twist காத்துகிட்டு இருக்கு. இதுனால அவுங்க பயந்து ஓடி போறாங்க அவங்க மட்டும் இல்ல audience யுமே இதை எதிர்பாத்துருக்க மாட்டாங்க.  அது என்ன twist ? இவரு எப்படி இறந்தாரு? ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரு பயத்தை குடுக்கற மாதிரி அமைச்சிருக்காங்க. அதுனால பாக்குற audience க்கு இந்த படம் interesting  அ இருக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. Kapil Velavan, Dhaksha, Arjun Dev Saravanan, Gunavanthan, and Sambasivam M K ஓட performances லாம் அற்புதமா  இருந்தது. இவங்க எல்லாருமே அவங்க நடிக்கிற character ஓட tone அ புரிஞ்சுகிட்டு ஒரு  எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்தோட technical team அ பாத்தோம்னா.  ராம் இந்திரா ஓட direction செமயா இருக்கு. ajay abraham ஓட cinematography ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்து ஆகணும். படம் full ஆவே night time ல நடக்குது ன்றத்துல visuals அ இருக்கட்டும், கிராமத்தோட அழகா இருக்கட்டும், கதை ஒரு stage அ விட்டு இன்னொரு stage ல நகரும் போது வர tension அ இருக்கட்டும் எல்லாமே அட்டகாசமா camera ல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். anilesh l mathew ஓட music இந்த படத்தோட கதை க்கு அழகா பொருந்தி இருக்கு. 


இந்த படத்தோட crux என்னனு பாத்தீங்கன்னா நம்பிக்கை உடையும் போது மனிதர்கள் குள்ள ஏற்படுற மாற்றம் என்ன அதுனால என்ன விளைவுகள் ஏற்படுது ன்றது தான். இந்த விஷயத்தை ஒரு கதை மூலமா மக்களுக்கு புரிய வச்சுருக்கிறது நல்ல இருக்கு. ஒரு நல்ல interesting ஆனா கதைக்களம் இந்த மனிதர்கள். கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Icon Star Allu Arjun is rewriting history! From being the first Telugu actor to win a National Award

 *Icon Star Allu Arjun is rewriting history! From being the first Telugu actor to win a National Award to now bagging the prestigious Gaddar Award*



A name that's reverberating across the world, and his image is spreading like a wildfire everywhere. The one and only Icon Star Allu Arjun. He has scripted history by emerging as the very first Telugu actor to have won the national award. Allu Arjun was catapulted into the national spotlight thanks to Pushpa: The Rise, a film that transcended regional boundaries and captivated audiences all over the country.


Now, the Pushpa actor wins another accolade that made his name shine again. He won the prestigious Gaddar Telangana Film award. Gaddar Telangana Film Awards aims to honour and celebrate the cinematic brilliance of Telugu filmmakers and artists. It's a rare and roaring feat for Allu Arjun. His relentless efforts and his love towards cinema blessed him with millions of fans across the world, blockbuster successes, and now the prestigious accolades.


The Telangana government on Thursday announced the winners of the Gaddar Film Awards, with Allu Arjun being named Best Actor for his performance in the blockbuster Pushpa-2: The Rule. Icon Star is ruling the box office and hearts and bringing the honors. After Pushpa 2 stormed the Indian box office with a staggering 1900 CR+ global haul, this new honour marks yet another unforgettable milestone in his legendary journey.


Throughout Telugu-speaking states and beyond, he continues to attract fans with his magnetic charisma, exceptional acting skills, and remarkable journey. His epic cinematic journey from Gangotri to Pushpa was written by Allu Arjun himself with his own blood and sweat. His outstanding performances earned him several awards, including five Filmfare Awards, two Nandi Awards, and a Special Jury Award.


He is all set to rule Indian cinema with many more Iconic performances. Now, the national superstar is ready to create sensation with his next AA22xA6 directed by blockbuster filmmaker Atlee. The pre production has recently began and makers planning to start the shoot soon. The world is waiting.

வரலாற்றை திருப்பி எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற

 *வரலாற்றை திருப்பி  எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். !!*



*கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!*


உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.


இப்போது, அல்லு அர்ஜூன்,  கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில்,  இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.


தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம், முழுமையாக அவர் தன் இரத்தமும், வியர்வையும் செலுத்தி எழுதிய வரலாறாகும்.


ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இந்திய திரையுலகின் உண்மையான ‘ஐகான்’ ஆக விளங்குகிறார்.


இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் தனது அடுத்த திரைப்படமான AA22xA6 மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அல்லு அர்ஜூனின் திரை வருகைக்காக உலகமே காத்திருக்கிறது.

மோஹித் சூரி இயக்கத்தில், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா நடிப்பில்

 மோஹித் சூரி இயக்கத்தில், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  அழுத்தமான காதல் கதையான சையாரா திரைப்படத்தின் டீசரை யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது.




யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய். ஆர். எஃப்) தயாரித்து, மோஹித் சூரி இயக்கத்தில் உருவான சையாரா திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஒய். ஆர். எஃப் மற்றும் மோஹித் ஆகியோர் மீண்டும் ஒன்றிணைவதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இருவரும் காலத்தைக் கடந்த காதல் திரைப்படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர்கள்.


அழுத்தமான காதல் கதையை கொண்ட சையாரா திரைப்படத்தின் டீசரை ஒய். ஆர். எஃப் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் மூலம் இந்தி திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமாகும் அஹான் பாண்டே மற்றும் அவருடன் அனீத் பட்டா (மேலும் மிகுந்த வரவேற்பை பெற்ற வலைத்தளத் தொடரான 'பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை'-இல் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்) கதாநாயகியாக இணைந்து நடிக்கிறார்.


சையாராவின் டீசரை கீழே உள்ள லிங்க்கில் பார்க்கவும்:-


https://youtu.be/nF31d_f4n_A


'சையாரா' என்ற படத்தலைப்பை சார்ந்து மிகப்பெரிய ஆர்வம் நிலவியது மற்றும் படத்தின் டீசர் அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. சையாரா என்றால் வெறுமனே ஒரு உடல் என்று பொருள், ஆனால் கவிதைகளில் ஏதோ ஒன்றையோ அல்லது யாரோ ஒருவரைப் பற்றியோ கண்கூசச் செய்யக் கூடிய, வேற்றுலகைச் சார்ந்த ஒன்றைப் பற்றியோ விவரிக்கப் பயன்படுகிறது. நன்கு மிளிரக் கூடிய, தனித்து இருக்கக் கூடிய ஒரு நட்சத்திரம், எப்போதும் வழிகாட்டும் ஒன்றாக விளங்குகிறது.


ஒய். ஆர். எஃப், அதன் 50 ஆண்டுகால வரலாற்றில், முக்கியமாக யாஷ் சோப்ரா மற்றும் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் சில காதல் படங்களை இந்திய சினிமாவுக்கு வழங்கியதற்காக பெயர் பெற்றது. தற்போது சினிமாவில் தனது 20-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கும் மோஹித் சூரி, ஆஷிகி 2, மலாங், ஏக் வில்லன் உள்ளிட்ட மிகவும் சிறந்த காதல் காவியங்களையும் இயக்கியுள்ளார்.


சையாரா ஜூலை 18,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

Thursday, 29 May 2025

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும்

 *யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் 'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.*





'இராமாயணா' படத்திற்காக யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியது !! 


இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான 'இராமாயணா' படத்திற்காக,  ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: Fury Road, The Suicide Squad புகழ்) மற்றும் இந்தியாவின் 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் கைகோர்த்துள்ளார்கள்.


நடிகர் யாஷ், ராவணனாக நடிப்பதோடு, இப்படத்தின் இணை-தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம், பரந்த எதிர் நாயகனாக ராவணனை மிக பிரம்மாண்டமாகக் காட்டும். ஹாலிவுட் தரத்திலான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கும் நோக்கில், கய் நோரிஸ் இந்தியா வந்து வேலை செய்யும் நிலையில், யாஷ் இதில் நேரடியாக ஈடுபட்டு, இந்திய ஆக்சன் சினிமாவின் தரத்தை புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.


இராமாயணா பாகம் 1 க்காக யாஷ் 60–70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சமீபத்தில் வெளியான படப்பிடிப்பு புகைப்படங்களில், யாஷ் தனது உடல் அமைப்பை மாற்றி, ராவணனாக ஒரு வித்தியாசமான, மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்தத் தோற்றம், இந்திய ஹீரோக்களை உலகளவில் புதிய பார்வையில் காணச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.


இப்படத்தினை நிதேஷ் திவாரி இயக்குகிறார், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்கள். உலகத் தரத்தில் இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட் தர VFX, பிரம்மாண்டமான செட்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்களை ஒன்றிணைத்த ஒரு காட்சித் திருவிழாவாக உருவாகிறது.


'இராமாயணா பாகம் 1' – தீபாவளி 2026, மற்றும் பாகம் 2 – தீபாவளி 2027 வெளியாகவுள்ளது.

Actor-Producer Yash and Mad Max Stunt Director Guy Norris Shoot Massive Action Sequences

 *Actor-Producer Yash and Mad Max Stunt Director Guy Norris Shoot Massive Action Sequences for Namit Malhotra's Ramayana, First Image Out*





_Designed to blend myth, scale, and spectacle — actor-producer Yash joins hands with Hollywood’s legendary stunt director Guy Norris for one of the biggest Indian films in the making._


Ramayana has become one of the most anticipated spectacles in Indian cinema, and the buzz has only grown stronger as actor-producer Yash begins filming for the magnum opus, produced by visionary producer Namit Malhotra. Rocking Star Yash is all set to bring Ravana to life in a larger-than-life action arc, working closely with legendary Hollywood stunt director Guy Norris — celebrated for Mad Max: Fury Road and The Suicide Squad. The film promises to be a landmark in filmmaking— a mythological epic powered by top-tier talent, a world class VFX team, grand sets and an ensemble cast that brings this story to life.  


Norris is currently in India choreographing elaborate, high-octane action sequences tailored for the scale of Ramayana, with Yash’s character at the center of the storm. Known for his close involvement across all aspects of his projects, Yash is actively collaborating with the team to shape a visual spectacle that pushes the limits of Indian action cinema. He is slated to shoot for 60–70 days for Ramayana Part 1.


Recent images from the set reveal Yash in peak physical form — ripped, intense, and battle-ready. His transformation hints at a fierce, reimagined Ravana and a performance that could redefine how Indian action heroes are viewed globally.


Crafted to elevate Indian storytelling for a global stage, Ramayana brings together an extraordinary vision, a stellar ensemble, and world-class talent. With Yash not just leading from the front with Ranbir Kapoor, but also contributing as a co-producer, this is more than just a film — it’s a cinematic milestone in the making. He has been involved with the project from the start, lending his creative insight every step of the way.


Directed by Nitesh Tiwari and produced by Namit Malhotra’s Prime Focus Studios and Yash’s Monster Mind Creations, Ramayana Part 1 is slated for release on Diwali 2026, and the second part on Diwali 2027.

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

 *நடிகர் ராஜேஷ் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்*



நடிகர் ராஜேஷ் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: 


தமிழ் திரையுலகில் நடிகர் ராஜேஷ் அவர்கள் நடிப்பாற்றல் கொண்டவர், பேச்சாற்றல் மிக்கவர், தனித்தன்மை பெற்றவர், தனக்கென்று தனி முத்திரை பதித்தவர், பன்முகக் கலைஞர், பண்பு மிக்க உள்ளம் நிறைந்தவர், தமிழ் திரையுலகில் தமிழை நன்றாக உச்சரிக்கக்கூடிய அற்புதமான கலைஞர். 


அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய குடும்பத்தினருக்கும், கலையுலகத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


T. ராஜேந்தர், எம்.ஏ.

‍‍- இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் 


***

Jinn the Pet Movie Review

 Jinn the Pet Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம jin the pet படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு fantasy படம். இந்த திரைக்கதையை எழுதி தயாரிச்சு இயக்கி இருக்கிறது T R bala . இந்த படத்துல mugen rao வும் bhavya வும் தான் lead role ல நடிக்கிறாங்க இவங்கள தவிர  Bala Saravanan, Imman Annachi, Radha Ravi, Vadivukkarasi, Nizhalgal Ravi, Vinodhini Vaidyanathan, George Vijay, Rithvik ல நடிச்சிருக்காங்க. ஏற்கனவே T R Bala mugen அ வச்சு ஒத்த தாமரை ன்ற ஆல்பம் song அ direct பண்ணிருக்காரு. அப்போ தான் mugen அ வச்சு படம் எடுக்கறதா official அ சொல்லிருந்தாரு . இந்த படத்துல இருந்து இது வரைக்கும் 4 songs அ வெளி இட்டுருக்காங்க. இந்த படம் மே 30 த் அன்னிக்கு ரிலீஸ் ஆகா போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம். 



mugen ஒரு unlucky person அ இருக்காரு. இவரு நினைக்கிறதோ இல்லனா ஆசைப்படுறதோ எதுவுமே நடக்காது அதுனால ஒரு மந்திரவாதி கிட்ட போறாரு. இந்த மந்திரவாதி black magic அ பண்ணுறவரு. தான் நினைச்சதெல்லாம் நடக்கணும் னு mugen கேக்குறாரு அதுக்கு அந்த மந்திரவாதி ஒரு jinn அ குடுக்குறாரு. இதை வாங்கிட்டு ரொம்ப சந்தோசமா இருக்க ஆரம்பிக்குறாரு mugen . தன்னோட bucket list ல என்னனலாம் இருக்கோ அதெல்லாத்தயும் நிறைவேத்துறாரு. ஆனா இந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. ஆசை பட்டு mugen வாங்கிட்டு வந்த jin ஏ கடைசில இவருக்கும் இவரோட குடும்பத்துக்கும்  எதிரியா மாறிடுது. இந்த jin அ கடைசில எப்படி சமாளிச்சு mugen யும் அவரோட குடும்பம் தப்பிக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு. 


இந்த கதை malaysia ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. fantasy, mystery, magic, comedy னு எல்லாமே சூப்பர் அ balance பண்ணி கொண்டு வந்த interesting ஆனா கதைக்களம் தான் இது. இந்த படத்தோட கதை யா இருக்கட்டும் இல்லனா visuals அ இருக்கட்டும் ரெண்டுமே audience அ ஈர்க்கற விதத்துல அமைச்சிருக்கு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் entertaining அ இருக்குனு தான் சொல்லணும். இந்த படத்தோட highlighting  ஆனா scene  ந படத்தோட climax ல இந்த jinn terminator மாதிரியான ஒரு உருவத்தை எடுக்கும். அது பாக்கவே super அ இருக்கும். அப்புறம் இந்த படத்துல CGI அ use பண்ணிருந்தாங்க. அந்த scenes எல்லாமே ஒரு fantasy  கதைக்களத்துக்கு  பக்கவா குடுத்திருந்தாங்க னு தான் சொல்லணும். 

mugen rao ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமா நல்ல இருந்தது னு சொல்லலாம். இவரோட body language , dialogues எல்லாமே இந்த படத்தோட கதைக்கு highlight அ இருந்தது. bhavya ஓட நடிப்பும் அழகா இருந்தது. balasaravanan எப்பவும் போல அவரோட comedy role ல அசத்திட்டாரு னு தான் சொல்லணும். supporting actors அ நடிச்ச Vinodhini Vaidyanathan அப்புறம்  Vadivukkarasi  ஓட screen presence  கம்மியா இருந்தாலும் படத்துக்கு பக்க பலமா இருந்திருக்காங்க. இந்த படத்தோட villain அ நடிச்சிருக்க radha ravi ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திருக்காரு. 


படத்தோட creativity அப்புறம் ஒரு தனித்துவமான கதைகளத்தக்காகவே இந்த படத்தை பாக்கலாம். entertaining அ இருக்கணும் அதே சமயம் fantasy  கதைக்களமா இருக்கணும் நினைச்சிங்கன்னா இந்த படம் உங்களுக்காக தான். கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and friends ஓட சேந்து  theatre  ல போய் பாருங்க. இது ஒரு must  watch movie னு தான் சொல்லுவேன்.

Wednesday, 28 May 2025

Witness The Epic World, The Spectacular Adventurous Teaser Of Super Hero Teja Sajja,

 *Witness The Epic World, The Spectacular Adventurous Teaser Of Super Hero Teja Sajja, Karthik Ghattamaneni, TG Vishwa Prasad, Krithi Prasad, People Media Factory’s Pan India Film Mirai Unleashed, Theatrical Release On September 5th*



Super Hero Teja Sajja who previously captured nationwide attention with HanuMan is coming u with much bigger and ambitious project Mirai produced by the leading production house People Media Factory and helmed by director Karthik Gattamaneni. Backed by TG Vishwa Prasad and Krithi Prasad, the teaser of Mirai was unveiled today, leaving viewers across the country awestruck with its scale, visual aesthetics, and mytho-fantasy world-building.


The teaser ignites with a saintly voice, solemnly foretelling the rise of an unstoppable force- a raw, destructive energy born in the chaos of Kali Yug. Enters The Black Sword (Manoj Manchu), wielding powers beyond mortal reach and beginning his path of annihilation. But this time, it’s not the gods who intervene. It’s their weapon. That divine force is Mirai. Teja makes an entry as an unassuming warrior, clutching a mystical wand, burdened with unanswered questions. As his journey unfolds, he discovers the truth about his destiny, unlocking his hidden potential. In a battle where light and shadow collide, it’s his rise against evil that forms the soul of the story. The film has an unique and very fresh story line that has never been explored on the Indian Screens till date.


Teja Sajja, hailed as India’s youngest Pan-India star, roars onto the screen as the underdog-turned-Super Yodha, delivering a powerhouse performance. With magnetic screen presence and fearless execution of high-risk stunts, including a breath-taking action sequence atop a moving train, Teja Sajja proves he’s a force to reckon with.


Manoj Manchu stuns as the menacing antihero with dark powers. His commanding portrayal oozes intensity, making his every move feel like a seismic threat. The teaser also gives us a glimpse of key characters played by Ritika Nayak, Shriya Saran, Jayaram, and Jagapathi Babu.


Director Karthik Gattamneni pulls off a masterstroke with Mirai, blending epic storytelling with a grand visual spectacle. His vision is ambitious and vivid, from incredible action to the intricate character design. The teaser’s final moment, where monkeys bow in reverence as Lord Ram walks, is pure goosebumps material.


Karthik, who wields the camera, captures every frame marvellously, while Gowra Hari’s adrenaline-charged score elevates the experience to another level. The director also penned the screenplay, alongside Manibabu Karanam who also wrote dialogues. Sri Nagendra Tangala is the art director of the movie, whereas Sujith Kumar Kolli is the Executive Producer.


Backed by People Media Factory, the hitmakers behind Karthikeya 2 and Jaat, Mirai marks another massive leap into the Pan-India arena. The production values are absolutely world-class. What’s making waves isn’t just the VFX or cinematic canvas — it’s the revelation that Mirai has been made on an essential, controlled budget while still matching the grandeur of films typically made with hundreds of crore budgets. It’s a compelling reminder that true cinematic impact doesn’t always need blockbuster spending, just bold imagination and sharp execution.


Mirai, the film that has already set the bar sky-high with this teaser, storms into theatres on September 5th. The movie will have a global release in 8 different languages in 2D and 3D formats.


Cast: Super Hero Teja Sajja, Manoj Manchu, Ritika Nayak, Shriya Saran, Jayaram, Jagapathi Babu


Technical Crew:

Director: Karthik Gattamneni 

Producers: TG Vishwa Prasad, Krithi Prasad

Banner: People Media Factory

Executive Producer: Sujith Kumar Kolli

Music: Gowra Hari

Art Director: Sri Nagendra Tangala

Writer: Manibabu Karanam 

Editor: Sreekar Prasad

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media


 https://youtu.be/Uf6allM1yWc

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது

 *தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!*



இந்தியாவில் முதன்முறையாக ஒரு  அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!


ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான  “மிராய்” படத்தோடு வந்துள்ளார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர்  தயாரிக்கும், இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். காட்சியமைப்பிலும், ஃபேண்டஸி கதைக்களத்திலும் பிரம்மாண்டத்திலும் அசத்தும், 

டீசர் இந்தியா முழுவதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 




டீசரில் ஒரு முனிவரின் குரல், கலியுகக் களத்தில் பிறந்த கட்டுப்பாடற்ற சக்தியின் எழுச்சியைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கிறது. அந்த இருண்ட சக்தி தான் தி பிளாக் ஸ்வார்ட் The Black Sword (மனோஜ் மாஞ்சு), மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை கொண்டவர், அழிவுக்கான பயணத்தை தொடங்குகிறார். ஆனால், இந்த முறை கடவுள்கள் அல்ல; அவர்களின் ஆயுதமே எதிர்விளைவு தருகிறது. அதுதான் மிராய்.


தேஜா ஒரு எளிய வீரராக அரங்கேற்றமாகிறார் — ஒரு மர்ம வாய்ந்த சக்தி மிக்க ஆயுதத்துடன், அதன் பலம் குறித்த கேள்விகளுடம் தனது பயணத்தை தொடங்குகிறார். இருளுக்கு எதிரான போரில் தன்னுடைய சக்தியை வலிமையை கண்டடைகிறார், நியாயத்திற்கு உண்மைக்கு ஆதரவாக அவர் எழும் தருணமே கதையின் மையம்.


இந்தியாவின் இளம் பான் இந்தியா நட்சத்திரமான தேஜா சஜ்ஜா, ஒரு சாதாரண மனிதனில் இருந்து சூப்பர் யோதாவாக மாறும் ஹீரோவாக வெளிப்படுகிறார். ரயிலின் மேலே  செய்யும் சாகசம்  உட்பட, பல உயிர் அபாயம் நிறைந்த சாகசங்களை  துணிவுடன் செய்து, அவர் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரம் என்பதை நிரூபிக்கிறார்.


மனோஜ் மாஞ்சு ஒரு படு பயங்கர எதிர் நாயகனாக திகழ்கிறார். அவரது சக்தி வாய்ந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரிதிகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


கார்த்திக் கட்டமனேனி இயக்குநராக மட்டுமல்ல,  மிரட்டலான உலகை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். அவரது காட்சியை உருவாக்கும் திறமை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், அதிரடி சண்டைகள் — இவை அனைத்தும் திரைக்கதையை சிறப்பிக்கின்றன. டீசரின் கடைசி நிமிடத்தில், இராமர் வரும் தருணத்தில் குரங்குகள் தலைவணங்கும் காட்சி, நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கிறது. 


கேமராவை கையாண்டுள்ள கார்த்திக், ஒவ்வொரு பிரேமையும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் இசை அமைப்பாளர் கௌர ஹரி பின்னணி இசை, திரை அனுபவத்தை மேலோங்கச் செய்கிறது. மனிபாபு கரணம் வசனங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா கலை இயக்குநராக, சுஜித் குமார் கொல்லி நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.



கார்த்திகேயா 2 மற்றும் ஜாட் படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் தயாரிப்பில், மிராய் திரைப்படம் இந்திய அளவில் மற்றொரு பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. இப்படம் முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. வெறும் VFX பிரம்மாண்டமாக இல்லாமல் - மிராய் திரைப்படம் அத்தியாவசியமான, கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்களின் பிரமாண்டத்திற்கு இணையாக உள்ளது என்பதுதான் இதன் சிறப்பம்சம். உண்மையான சினிமா தாக்கத்திற்கு எப்போதும் பிளாக்பஸ்டர் செலவு தேவையில்லை, துணிச்சலான கற்பனை மற்றும் கூர்மையான செயல்படுத்தல் மட்டுமே தேவை என்பதற்கு  இது உதாரணமாக இருக்கும்.


இந்த டீசர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள "மிராய்" திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடியாக வெளியாகிறது. இந்த திரைப்படம் 8 வெவ்வேறு மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகளவில் வெளியிடப்படும்.


நடிகர்கள்: சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு


தொழில்நுட்பக் குழு: 

இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி 

தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் 

பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி 

நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி 

இசை: கவுரா ஹரி 

கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எழுத்தாளர்: மணிபாபு கரணம் 

எடிட்டர் - ஶ்ரீகர் பிரசாத்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் - ஹேஷ்டேக் மீடியா


https://youtu.be/Uf6allM1yWc