Featured post

Kara Movie Review

Kara Movie Tamil Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் expect பண்ணிட்டு இருந்த kara படத்தோட review வை தான் இன்னிக்கு பாக்க போறோம். v...

Wednesday, 26 July 2023

எனது மாண்புமிகு பத்திரிகை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்

 எனது மாண்புமிகு பத்திரிகை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் 


நமது கில்டு சங்கத்தில் தொடர்ந்து சங்கத்தை மூடியே ஆக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் சக்கரவர்த்தி துரைசாமி ஜம்பு பன்னீர்செல்வம் எம்சி சேகர் கொளஞ்சியப்பன் கமலநாதன் ஜோசப் முகமது பருக் மற்றும் பத்து நபர்கள் ஆகியோர் சேர்ந்து நேற்று சங்கத்திற்கு வந்து சங்கத்தை நடத்த விடாமல் சங்க ஊழியர்களை வேலை செய்ய விடாமல் காவல்துறையையும் மதிக்காமல் கலவரம் செய்தார்கள் சக்கரவர்த்தி என்பவர் நேற்று நான் சங்கத்தை திறந்து பணிகளை செய்வதற்காக வந்த பொழுது என்னுடன் சேர்ந்து எனது சங்க ஊழியர்களையும் உள்ளே வைத்து வெளியே பூட்டி தகராறு செய்தார் பிறகு காவல்துறை வந்தவுடன் காவல்துறையின் உத்தரவை சிறிதும் மதிக்காமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டு கலவரம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் தகராறு செய்து கொண்டே இருந்தார் அதுமட்டுமின்றி எந்த உறுப்பினர்களையும் உள்ளே அனுமதிக்காமல் வெளியே நின்று கொண்டு அவர்களை மிரட்டி வந்த வழியாகவே திரும்பிப் போக செய்தார் காவல்துறை எவ்வளவு தான் கூறியும் இந்த சக்கரவர்த்தி என்பவர் சிறிதும் அதை மதிக்காமல் சங்கத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற நோக்கத்துடனே செயல்பட்டுக் கொண்டிருந்தார் மாலை ஐந்து மணி அளவில் சங்கத்தை மூடிவிட்டு நாளை வந்து செயல்பட வேண்டும் என்று கூறிய பொழுது சங்கத்தை மூட நாங்கள் விடமாட்டோம் என்று சக்கரவர்த்தி துரைசாமி ஜம்பு சேகர் பன்னீர்செல்வம் கொளஞ்சியப்பன் ஜோசப் முகமது பரூக்  இன்னும் பத்து நபர்கள் சேர்ந்து கொண்டு உள்ளே படுத்துக்கொண்டு தகராறு செய்துவிட்டு என்னை சங்கத்தை பூட்ட விடாமல் காவல்துறையின் ஆணையையும் மதிக்காமல் செயல்பட்டார்கள் அதனால் காவல் துறையிடம் நான் ஒரு புகார் கொடுத்து சங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறிவிட்டு வந்த சமயத்தில் இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே அமர்ந்து குடித்துவிட்டு உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் எப்படி திருடலாம் என்று திட்டம் போட்ட பின் காலை காவல்துறையை நம்பி நாங்கள் இருந்த சமயத்தில் காவல்துறை அங்கு இல்லாத நேரம் பார்த்து சக்கரவர்த்தி என்பவர் நமது சங்கத்தின் மிக மிக முக்கியமான ஆவணங்களையும் மிக முக்கியமான பொருட்களையும் திருடி சென்று விட்டார் இவர்கள் ஒரு இரவிலேயே சுமார் 50 ஆண்டுகள் பழமை மிகுந்த மிக முக்கியமான கோடிகளுக்கான தஸ்தாவாதிகளை துரைசாமியின் உத்தரவின் கீழ் திருடி சென்றது தெரிகிறது மிக முக்கியமான சங்கத்தின் சொத்து பத்திரத்தையும் திருடி சென்றுள்ளார் இதுவரை சங்கத்தில் இவ்வாறு நடந்ததே இல்லை இவர்கள் உள்ளே வந்து அனைத்து தஸ்தாவதிகளையும் திருடி சென்று விட்டார்கள் இதை அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிரவும் இவர்களுக்கு ஒரு முடிவு கட்டாமல் சங்கத்தையோ எந்த விஷயத்தையோ இவர்கள் செய்ய விட மாட்டார்கள் சங்கத்தை மூடியே ஆக வேண்டும் என்று முழு முயற்சியாக வேலை செய்து கொண்டு வருகிறார்கள் நமது தாய் வீட்டிற்கு பிரச்சினை என்று வரும்பொழுது சில வெறி நாய்கள் நமது தாய் வீட்டை கொதர வேண்டும் என்று துடிக்கும் நேரத்தில் நாம் அனைவரும் சகோதரர்களாய் ஒன்று திரண்டு நமது தாய் வீட்டை காக்க வேண்டும் சிறு மனஸ்தாபங்கள் இருந்தால் கூட நாம் சங்கத்திற்காக நமது தாய் வீட்டிற்க்காக இணைவோம் என்பதை நமது ஒற்றுமை என்ன என்பதை இந்த வெறி நாய்களுக்கு காட்டுவோம் ஒன்றிணைந்திடுவோம் நமது சங்கத்தையும் நமது மானத்தையும் மீட்டிடுவோம் எங்கு என்பதை இன்று சொல்கிறேன்.



இப்படிக்கு உங்கள் சகோதரன் ஜாகுவார் தங்கம்

No comments:

Post a Comment