Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Friday, 26 April 2024

Tractor, a Tamil movie without a background

Tractor, a Tamil movie without a background score, has been selected for the 14th Dada Saheb Phalke Film Festival. 






The decision to forgo a traditional background score in "Tractor" and instead rely on sync sound and real ambience sound adds another layer of authenticity to the film. By capturing the artist's dialogues on-site and incorporating natural ambient sounds, the filmmakers create a more immersive experience for the audience, allowing them to feel fully immersed in the world of the film.


The movie "Tractor" is more than mere cinematic entertainment to raise meaningful debates and naturally showcase the atrocities that corporate culture is doing in the lives of our farmers.


The film Tractor is produced by Jayanthan, his first venture in film production under the banner Friday Entertainment (France) 

Friday Entertainment is involved in the theatrical distribution of Indian movies. The company has released most of the films from India including Jawan, Jailer, Leo in theatres in France.


This crew mostly debuts, The Director of this movie Ramesh Yanthra is already known for his Documentary films Gudiyam Caves, and The Father of Indian Prehistory and he was a former student of the College of Fine Arts, Chennai. This is his first Feature film and he came from the Information technology Industry.



Co-Incidently this film's male lead Prabakaran Jayaraman 

 and female lead Sweetha Pradhap also from the IT Industry and both are new faces on the screen. Another two-character role was done by Pillaiyarpatti Jayalakhsmi & Director Ramshiva.


This film cinematographer Gowtham Muthusami was the assistant of well-known Cinematographer Rajesh Yadav and Edited by Sudharson, the Sound Design was composed by Rajesh Saseendran and Production design was done by eminent Art Director T.Muthuraj.


Being listed in the official selection of the Dada Saheb Phalke Film Festival is a remarkable accomplishment. It speaks volumes about the quality and creativity of the film, especially considering the rigorous selection process and the high standards set by the festival. It's a testament to the talent and hard work of the filmmakers behind Tractor. This recognition will surely open up more opportunities for the film to reach a wider audience and gain further acclaim. 


The film crew is planning to go to the market segment of the Cannes Film Festival with an international premiere status and plans to have a special screening for Tamils ​​living in Paris.

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் ரத்னம்.. விஷாலின்

 வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் ரத்னம்.. விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.!!



வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளம்பி வருகிறது ரத்னம் திரைப்படம். 


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியாகி உள்ள திரைப்படம் ரத்னம். உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. 


6 முதல் 60 வயது வரை என அனைவரும் கொண்டாடும் வகையில் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து இடங்களிலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 


மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல்  சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது. 

அந்த வரிசையில் ரத்னம் திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைக்கும் என கூறப்படுகிறது. விஷாலின் திரைப்பயணத்தை ரத்னம் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்லும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு

 *”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!*





ES Production & Macha Swag Dance  தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ்  இசையில், எழில்வாணன் வடிவமைத்து   உருவாக்கியிருக்கும்  ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”. இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா &  ரேணுகா(சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி  & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர். 

இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர் 

*இயக்குநர், நடிகர், எழில்வாணன் EV பேசியதாவது....*

 இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு  பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம். இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்.  நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன். என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள்.எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம்... அவர் எனக்கு ஒரு மேஜிக் (Work) எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி...

இரண்டு வருடங்கள் முன்பே இதற்கான நடன அமைப்பை உருவாக்கி விட்டேன், இந்த பாடலுக்கு ரவீனா சரியாக இருப்பார் என்று அவரை அணுகினேன் அவர்  உடனடியாக பண்ணலாம் என ஒத்துக் கொண்டு செய்தார். இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது  மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

*நடிகை ரவீனா பேசியதாவது*

 எங்களை ஆதரிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஆல்பம் பாடலின் ஷூட்டிங் வெறும் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. அத்தனை திட்டமிடலுடன் நடந்து முடிந்தது. ஷூட் ரொம்ப ஜாலியாக நடந்தது. எப்போதும் உடன் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள்  நம்மை காம்போர்ட்டபிளாக வைத்துக் கொண்டால் நாம் சிறப்பாக வேலை செய்வோம், அந்த வகையில் இந்த படக்குழுவினர் என்னை மிகச்சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர்.  எழில்வாணன் மிகத் திறமைசாலி இந்த பாடலின் முழு வேலைகளையும் அவரே செய்துவிட்டார் இந்த துறையின் மீதான காதலில் அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து, இதைச் செய்து வருகிறார். சினிமாத்துறை மீது காதலுடன் இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் படைப்பில்  நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி.  இந்த டீமில் வேலை என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விரைவில் இணையத்தில் வெளியாகும்..உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  

நடிப்பு : எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா

கருத்து, பாடல் மற்றும் இயக்கம் - எழில்வாணன் EV


இசை: தீபன் மற்றும் வைபவ்


நடன அமைப்பு: மான்சி  & எழில்வாணன் EV


எடிட்டர்: கலைவாணன் (SK21 எடிட்டர்)


தயாரிப்பு - ES Production & Macha Swag Dance

Rathnam Movie Review

Rathnam Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம tamil படமான rathinam தான் பாக்க போறோம். இந்த படம் ஏப்ரல் 26 அன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கு, இந்த படத்தை டைரக்ட் பண்ணிக்கறது hari  . இந்த படத்துல Vishal as Rathnam











Priya Bhavani Shankar as Janani

Samuthirakani

Ramachandra Raju

Gautham Vasudev Menon

Yogi Babu

Murali Sharma னு எல்லாருமே முக்கியமான கதாபாத்திருத்துல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க படம் எப்படி இருக்குனு பாப்போம். 


இந்த கதை ஓட ஸ்டோரி என்னனு பாப்போம்.   சமுத்திரகனி ஒரு எம்எல்ஏ இவருக்கு கீழ ரத்தினம் ஒரு அடியால  இருக்காரு. இவரு மல்லிகா என்ற ஒரு பொண்ண பாக்குறாரு இவங்க நீட் எக்ஸாம் காக படிச்சிட்டு இருக்காங்க.  ஒரு நாள் mallika வ  கொலை பண்றதுக்காக கொலைகாரனுக டார்கெட் பண்ணும்போது அவங்க கிட்ட இருந்து இவங்கள காப்பாத்திடுறாரு ரத்தினம்.  சோ மல்லிகாவ காப்பாற்றுவதற்கு rathinam முன்னாடி வர்றாரு. ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா மல்லிகை ரத்னத்தோட  அம்மா மாதிரியே இந்த புள்ள இருக்கிற மாதிரி ன்ற ஒரே காரணம் தான்.  சோ மல்லிகாவும் அவங்களோட ஃபேமிலியும் லிங்கம் என்ற ஒரு ஆளு னால  நிறைய problem face  பண்றாங்க. இந்த லிங்கம் யாருன்னு பாத்தீங்கன்னா, தமிழ்நாட்டுல நெறய காலேஜ் அ கன்ஸ்ட்ரக்ட் பண்ணிட்டு இருக்குற ஒரு பெரிய பவர்ஃபுல்லான லீடர் சோ இந்த படத்தோட முழு கதையுமே வந்துட்டு ரத்னம் எப்படி அந்த பொண்ண SAFE பண்றாரு, அவங்க அம்மா வோட மறைஞ்சு போன உண்மை,  லிங்கம் ஓட ஹிஸ்டரி என்ன, அவரோட  ரியால் ஐடென்டிட்டி னு  எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சத்துக்கு  வருது.  


சிங்கம் series அ தவிர ஹரியோட நிறைய படங்களை ஆடியன்ஸ் பாத்திருப்போம்.  அவரோட படங்கள்ல ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணுவாங்க பட் ஏதோ ஒரு சில காரணத்துனால ஹீரோ வந்து அந்த லவ்வர் அ அக்சப்ட் பண்றதுக்கு ரொம்ப hesitate பண்ணுவாரு அப்புறம் கடைசில வந்து ஒன்னு சேர்ந்துருவாங்க சோ ரத்தினமும் இதே மாதிரி தான் இருக்காரு.  இந்த படத்தோட பெரிய டிஃபரென்ஸ் என்னன்னா ஹீரோ வந்து ஹீரோயின் ஓட proposal அ எல்லாம் உடனே அக்செப்ட் பண்ணி இருக்காரு ஏன் பார்த்தீங்கன்னா ஹீரோயின் வந்து விஷால் ஓட அம்மா மாதிரியே இருப்பாங்க. சோ  ஒரு பையன ஒரு பொண்ணு லவ் பண்ணும் போது என்ன எல்லாம் பண்ணுவாங்களோ அதெல்லாம் இவரும் பண்றாரு.  விஷால் அ  ஒரு ரவுடி மாதிரி காமிக்கிறாங்க சோ சொசைட்டியோட நல்லதுக்காக அவரூ  கொலை பண்றாரு அதுக்கு அப்புறம் standard ஆனா காமெடி டிராக்ஸ் வருது அண்ட் இதுல யோகி பாபு நடிச்சிருக்காரு.  இந்த story plot  வந்து பாத்தீங்கன்னா ஹீரோயினோட இன்ட்ரோடக்ஷன் அதுக்கப்புறம் ஃபைட் அதுக்கப்புறம் அந்த பொண்ண gangster கிட்ட இருந்து காப்பாத்தறது இந்த மாதிரி தான் இந்த படம் போகுது.  second half  ல  பாத்தீங்கன்னா  முரளி ஷர்மாவுக்கும் விஷாலோட அம்மாவுக்கும் ஆனா லிங்க் அ  ரிவில் பண்றாங்க சோ இப்ப என்ன ஆயிடுச்சுன்னா இந்த மொத்த game  மே  ஹீரோயினோட பிராப்ளம்ம தவிர ஹீரோ ஓட personal problem அ ஆயிடுது. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுன்னு தான் கதையே 



சோ விஷால் ஒரு நல்ல ரவுடி அ இந்த படத்துல நடிச்சிருக்காரு. அவரோட பெர்ஃபார்மன்ஸ் நல்லா suitable அ இருக்கு. ப்ரியா பவானி சங்கர் தான்  மல்லிகாவா நடிச்சிருக்காங்க அண்ட்  அவங்க தான்  விஷாலோட அம்மாவாவும் பண்ணிருக்காங்க. இந்த ரெண்டு role யுமே செமயா பண்ணி இருக்காங்கன்னு தான் சொல்லணும்.  முரளி sharma ஓட ஆக்டிங் வந்து செமையா இருக்கு அவர்கிட்ட நம்மளால எந்த ஒரு flaw 

 வும் கண்டுபிடிக்க முடியாது.   சமுத்திரகனி அ பத்தி சொல்லவே வேண்டாம் சொல்லவே வேண்டாம் அட்டகாசமா பண்ணிருக்காரு. யோகி பாபுவோட காமெடி டிராக்ஸ் எல்லாமே வந்து செமையா இருக்கு.  ஹரியோட ஃபிலிம்ல இருந்து ஆக்சன் சீன பத்தி நம்ம சொல்லவே தேவையில்லை. ஆக்ஷன் stunts எல்லாமே வந்து நல்லா பண்ணி இருக்காங்க  இந்த படத்தோட மியூசிக் அண்ட் BGM  ஓரளவு  ஓகேவா இருக்கு பட் இன்னும் நல்லா பண்ணியிருந்தால் செமையா இருக்கும் சுகமாரோட கேமரா ஒர்க் வந்து ஆக்ஷன் சீன்ஸ் அ PERFECT அ  எடுத்துருக்காரு பட் மத்ததெல்லாம் இன்னும் கூட கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும்.

Thursday, 25 April 2024

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்

 இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்,  பேபி & பேபி !!




விரைவில் திரையில் அழகான ஃபேமிலி எண்டர்டெயினர் பேபி & பேபி !!



GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட,  நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. 


தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரதாப். 


இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாளை தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா செல்வகுமார் இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் திரையில் களமிறங்கியுள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார். 


இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. 


GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். T.P. சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், தயாரிப்பாளர் G.P. செல்வகுமார் இணைந்து  இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.



தொழில் நுட்ப குழு 

இயக்கம் - பிரதாப் 

இசை - D. இமான்

ஒளிப்பதிவு - T.P. சாரதி 

எடிட்டர் - K ஆனந்தலிங்ககுமார்

Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow.

 Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow










Kollywood masala entertainer Hari has highlighted about lengthy single shot in the recent press meet. Rathnam has completed all its censor formalities and has received U/A certificate, with a runtime of 156 minutes (2 hours and 36 minutes)





Rathnam will be releasing in two langues Telugu and Tamil simultaneously. 

Rathanam stars Visal in the main lead, while Priya Bhavani Shankar plays the love interest of Vishal. Samuthirakani, Yogibabu and Gautham Vasudev Menon are playing the crucial roles. 

Produced by Kaarthekeyen Santhanam under the banner of Zee Studios and Stonebench Films, Music is composed by Devi Sri Prasad. 

#Rathnam will be releasing Worldwide from Tomorrow in theatres. Rathnam promises a blockbuster experience to the entire family and friends. Watch the powerful action, drama which is sure to deliver a memorable cinematic experience for the audience. #vishal

#Rathnam #Rathnammovie #Vishal #PriyaBhavaniShankar #SinduriVishal  #DeviSriPrasad #RathnamTrailer

Puratchi Thalapathy Vishal's Irumbu Thirai has hit the screens, following the release of Thalapathy vijay's Ghilli, following this Bicycle Star Voters of TN are none other than Vishal and Vijay which has become the talk of the town now. 

Sequel of 'Thupparivaalan' an enthralling detective thriller starring Vishal in the lead role is likely to resume shoot in April 2024. Watch this space for more interesting titbits.





Wednesday, 24 April 2024

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !



பெரியார் வழியில்

 பெண்களின் தீண்டாமையைப் பற்றிப்

பேசும் புதிய பாடல் ஆல்பம் 'தீட்டு'


பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார்.


மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து  ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது  உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். 


சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா?


இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் 'தீட்டு' என்கிற பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது.


 'தீட்டு' ஆல்பத்தின் பாடலைப் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் கூறியதாவது,


"நமது அறிவார்ந்த முன்னோர்கள்  இயற்கையான பெண்களின் உடலியல் மாற்றமான மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கும் விதத்தில் அவர்களது அவஸ்தையைப் புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தனிமைப் படுத்தினர்.


அதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிற்காலத்தினர் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுமையைப் புகுத்தின இதையே பெண்களுக்குக் காலங்காலமாக இழைத்து வருகின்றனர்.


இதைப் பற்றிய விழிப்புணர்வு ஆண்கள் மத்தியில் ஏற்பட வேண்டி உள்ளது. அதற்காகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம். நல்லதொரு துள்ளல் இசையில் பாடலாக்கி, 

பெண்மையைப் போற்றும் பாடலாக உருவாக்கி இருக்கிறோம்.


பாடல் விரைவில் வெளியாக உள்ளது" என்றார்.


இந்தப் பாடல் ஆல்பத்தை இயக்கி உள்ளவர் நவீன் லக்ஷ்மன்.இதில்

ஆதேஷ் பாலா,ரதி நடித்துள்ளனர்.

பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.

பாடலை வி.ஜே.பி ரகுபதி எழுதியுள்ளார்.

பாடலை கானா பாலா பாடியுள்ளார்.


இந்தப் பாடல் ஆல்பத்தை

அருண்குமார், மோனிஷா நவீன் தயாரித்துள்ளனர்.

Tuesday, 23 April 2024

On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth

 *On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!*



The Visionary Prasanth Varma has become a household name across the country after the Pan India sensation Hanu-Man. The creative director is bringing us another Epic Adventure from The Prasanth Varma Cinematic Universe (PVCU). The film titled Jai Hanuman is a sequel to Hnau-Man which was announced towards the end of the prequel. The script was already locked and the movie will be crafted on a big canvas. The movie will feature a stellar cast and popular craftsmen will be part of it.


The director who started the pre-production works of the movie on the momentous day of the inauguration of the Ayodhya Ram Temple has come up with a new poster for the Hanuman Jayanthi occasion. The poster sees Lord Hanuman standing valiantly on the cliff with a mace in hand, even though the dragon that is approaching him breathing fire. Prasanth Varma is bringing Dragons to the Indian screen for the first time. The poster gives hints about the kind of experience we are going to get with top-end VFX and other technicalities.


The movie Jai Hanuman will be released on IMAX 3D. The other details of this magnum opus are awaited.


Today, the team will be celebrating 100 days event of Hanu-Man.

ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து

 *ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து  அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது!  இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம் !!*



பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற  ஹனுமான் படத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் வர்மா  அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு சாகச காவியத்தை ரசிகர்களுக்கு  கொண்டு வருகிறார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் ப்ரீக்வுலாக உருவாகவுள்ளது. , ஹனுமான் படத்தின் முடிவில் இப்படம்  அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதை  ஏற்கனவே முழுமையாக தயாராகிவிட்டது.  இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.  இப்படத்தில் முன்னணி  நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர்  மற்றும் பிரபலமான தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர்,  ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம், இப்படம் மூலம் பிரசாந்த் வர்மா முதல் முறையாக டிராகன்களை இந்திய திரைக்கு கொண்டு வருகிறார். உலகத்தரத்திலான VFX மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்துடன், ரசிகர்களுக்கு இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத அனுபவத்தை இப்படம் வழங்கும். 



ஜெய் ஹனுமான் திரைப்படம் ஐமேக்ஸ் 3டியில் வெளியாகவுள்ளது. இந்த மாபெரும் படைப்பு குறித்த மற்ற விவரங்கள்  விரைவில் வெளியாகும்.


படக்குழு இன்று, ஹனுமான் படத்தின்  100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடுகிறது.