Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Tuesday, 5 March 2024

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில், இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி

 *சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில், இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது!*





அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு ஹைப்பர் லிங்க் கதையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 'யாவரும் வல்லவரே'. சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.


படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் 35 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை ஹைப்பர் லிங்க் கதைக்களம் கொண்டது. இளைஞர்கள், குடும்பம் என்று இந்தக் கதைக்கான பார்வையாளர்களைப் பிரிக்க முடியாது. ஆறில் இருந்து அறுபது வரை எல்லோருக்குமான படமாக இது உருவாகி இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு வன்மம், வெறுப்புகள் வளர காரணம் எல்லோர் உள்ளும் தேங்கி இருக்கும் அன்புதான். அந்த அன்பை தொலைத்துவிட்டுதான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதை மீட்டெடுக்கும் முயற்சிதான் இந்தப் படம். 


குடும்பங்களுக்கு நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும் என நம்புகிறேன். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது” என்றார்.   


சமுத்திரக்கனி, யோகி பாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ், சைத்தான் அருந்ததி, 'மெட்ராஸ்' ரித்விகா, தேவதர்ஷினி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் மார்ச்15 அன்று வெளியாகிறது. இவர்களோடு ஒரு மிகப்பெரிய நடிகரோட போட்டோ இந்த படம் முழுக்க டிராவல் ஆகும் என்ற சஸ்பென்சோடு முடித்தார் இயக்குநர் ராஜேந்திர சக்ரவர்த்தி.

Axess Film Factory G Dilli Babu presents

 *Axess Film Factory G Dilli Babu presents* 

*Debut filmmaker Mano Bharathi’s directorial* 

*Aishwarya Rajesh starrer “Valaiyam” launched with a ritual Pooja ceremony* 








The Tamil film industry has always been known for its support and recognition of young filmmakers and their fresh ideas. Producer G. Dilli Babu of Axess Film Factory is one such rare breed who has consistently encouraged and promoted these talented minds. Over 10 years including two years of pandemic, the production house has become the sanctuary for young and new filmmakers, who come up with fresh ideas. Some of his notable movies include Maragadha Nanayam,  Ratchasan, Oh My Kadavule, Bachelor and many more . His latest collaboration is with debut filmmaker Mano Bharathi, a graduate of DG Vaishnav College with experience in TV channels and media houses, as well as several successful short films, showcasing his directorial skills. He has now found the Midas-touch of producer G. Dilli Babu, who will be producing this film. 


The film titled “Valaiyam” is an action-packed thriller starring Aishwarya Rajesh as the protagonist, and newcomer Dev plays another titular role.


Producer G Dilli Babu, Axess Film Factory says, "We at Axess Film Factory have been journeying with a sheer vision to encourage and promote good contents. It's really delightful to see that in a span of 10 year, we have managed to create good entertainers. I thank the friends from film fraternity, press media and film enthusiasts, who had made this happen. We are happy to announce our new project, which will offer a great cinematic experience to all."


The shooting for this exciting project will primarily take place in Chennai, with some additional scenes filmed in the surrounding areas. Chethan, Tamizh, Pradeep Rudra, Harish Peradii, and Suresh Menon alongside few more prominent actors will be performing pivotal roles.


The crew behind the scenes includes Mahendra M. Henry, a former assistant to renowned Director of Photography R. Velraj, ensuring the visual aesthetics of the film are top-notch. The editing will be handled by Bhoopathy, who gained fame through his work on 'Oh My Kadavule'.


Adding to the film's appeal is the music direction by Michael Britto, known for his work on the acclaimed movie 'Lift'. The art direction will be taken care of by Pradeep, who has previously worked on various advertisements and has upcoming projects in his portfolio.


With such a talented team coming together, Valaiyam is sure to captivate audiences with its thrilling storyline, skilled filmmaking, and exceptional performances.

ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி

 *ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் 'வளையம்' திரைப்படம் எளிய பூஜையுடன் தொடங்கியது!*








தமிழ்த் திரையுலகம் எப்போதுமே இளம் இயக்குநர்களின் புது சிந்தனைகளுக்கு ஆதரவு மற்றும் அங்கீகாரம் கொடுக்கும். கடந்த 10 வருடங்களாக ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு இப்படியான இளம் திறமைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். 'மரகத நாணயம்', 'ராட்சசன்', 'ஓ மை கடவுளே', 'பேச்சுலர்' மற்றும் பல படங்களை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் குறிப்பிடலாம். டிஜி  வைஷ்ணவ் கல்லூரி பட்டதாரியான மனோ பாரதி டி.வி சேனல்கள், மீடியா ஹவுஸ் மற்றும் பல வெற்றிகரமான குறும்படங்கள் போன்றவற்றை இயக்கியுள்ளார். அவரது இயக்கத் திறமையைக் கண்டறிந்து அவருடைய புதுப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு கைக்கோத்துள்ளார்.


இந்தப் படம் 'வளையம்' எனத்  தலைப்பிடப்பட்டுள்ளது. அதிரடி த்ரில்லராக உருவாகி வரும் இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான தேவ் நடிகராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.


தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியில் கூறும்போது,​​"சமூகத்துக்குத் தேவையான தரமான, நல்ல கருத்துள்ள படங்கள் மற்றும் பொழுதுபோக்கு கதைகளை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் பயணித்து வருகிறோம். இந்த 10 வருடங்களில் நல்ல படங்களை உருவாக்க முடிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஆதரவு கொடுத்தத் திரையுலக நண்பர்கள், பத்திரிகை ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு எனது நன்றி. அனைவருக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் எங்களின் அடுத்தப் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.


இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையிலும், மேலும் சில கூடுதல் காட்சிகள் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பேராடி மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோருடன் மேலும் சில முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கின்றனர்.


புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜின் முன்னாள் உதவியாளரான மகேந்திர எம். ஹென்றி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் புகழ் பெற்ற பூபதி படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.


'லிஃப்ட்' படப்புகழ் மைக்கேல் பிரிட்டோ படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை பிரதீப் கவனித்துக் கொள்வார். அவர் முன்பு பல்வேறு விளம்பரங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல கதையம்சத்துடன் இத்தகைய திறமையான குழு ஒன்று சேரும் போது, 'வளையம்' நிச்சயம் பார்வையாளர்களை கவர்வது உறுதி.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின்

 *நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் டீசர் மார்ச் 4 அன்று வெளியாகிறது!*



நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில், பரசுராம் பெட்லா இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பேனரில் பிரபல தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஏப்ரல் 5 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வாசு வர்மா பணியாற்றியுள்ளார்.


இந்த திரைப்படத்திற்கான மியூசிக் புரோமோஷனாக படத்தில் இருந்து சார்ட்பஸ்டர் முதல் பாடல் 'நந்தனந்தனா' சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்சேஷனல் ஹிட் ஆகியுள்ளது. அப்படி இருக்கும்போது படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், படத்தின் டீசர் அறிவிப்பு மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. ஃபேமிலி என்டர்டெயினர் மீதான எதிர்பார்ப்பை டீசர் அதிகரிக்கச் செய்வது உறுதி.


*நடிகர்கள்:* விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் மற்றும் பலர்.


*தொழில்நுட்ப குழு:*

ஒளிப்பதிவு: கே.யு. மோகனன்,

இசை: கோபி சுந்தர்,

கலை இயக்குநர்: ஏ.எஸ். பிரகாஷ்,

எடிட்டர்: மார்த்தாண்டன் கே.வெங்கடேஷ்,

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வாசு வர்மா,

தயாரிப்பாளர்கள்: ராஜு - சிரிஷ்,

எழுதி இயக்கியவர்: பரசுராம் பெட்லா

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி

 *குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி' . மகளிர் தினத்தில் வெளியாகிறது.*





பா.இரஞ்சித் தயாரிப்பில்

நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில்  மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி.


பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய  படங்களாகவே

வெளிவந்திருக்கிறது.


'ஜெ பேபி ' படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.


ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும்

படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும்  வெகுவாக பாராட்டியுள்ளனர்.


குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் ,  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.


  'ஜெ பேபி' படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

Monday, 4 March 2024

57 நாட்கள் திரையரங்குகள் கண்ட

 57 நாட்கள் திரையரங்குகள் கண்ட அரணம். 


2024-ஆம் ஆண்டின் முதல் 57 நாள் வெற்றிப்படம் அரணம்.


தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், உத்ரா புரொடக்சன்ஸ் வெளியீட்டில், பாடலாசிரியர் பிரியன் கதைநாயகனாய் "அரணம்" திரைப்படம் ஜனவரி 05 அன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி மார்ச் 01 வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் மொத்தம் 57 நாட்கள் நின்று சாதனை படைத்து விடைபெறுகிறது. 


இந்நல்வாய்ப்பை தந்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் அகமார்ந்த நன்றிகள்.


#அரணம் #பிரியன் #பாடலாசிரியர்பிரியன் #தமிழ்த்திரைக்கூடம் #அரணம்50  #அரணம்50நாள் #Aranam #AranamMovie #Aranam50  #Aranam50days #LyricistPiriyan #ThamizhThiraikkoodam #priyan #Piriyan

Malayalam actor Suraj Venjaramoodu teams up with Chiyaan Vikram

 *Malayalam actor Suraj Venjaramoodu teams up with Chiyaan Vikram!* 

*Malayalam industry’s iconic actor Suraj Venjaramoodu debuts in Tamil Cinema with ‘Chiyaan 62’!*  





Actor Suraj Venjaramoodu has been chosen to portray one of the main roles in 'Chiyaan 62'. He has received prestigious accolades such as Kerala State Award and the National Award for Best Actor. 


The movie caused quite a stir with the news of having top-notch actors such as 'Chiyaan' Vikram and S.J. Suriya in the lead roles, under the direction of S. U. Arunkumar. Adding to the anticipation, Malayalam actor Suraj Venjaramoodu has been confirmed to be part of the cast, further heightening the excitement surrounding the film. It is noteworthy that his exceptional acting in acclaimed movies such as 'Android Kunjappan', 'Driving Licence', 'Jana Gana Mana' and 'The Great Indian Kitchen' has garnered admiration across the fans from all walks of life. Significantly, the actor is making his Tamil debut through this film  'Chiyaan 62', produced by Riya Shibu of H.R. Pictures. 


With the charismatic presence of Chiyaan Vikram, the talented S. J. Suryah and the brilliant Suraj Venjaramoodu, the much-anticipated film 'Chiyaan 62' has ignited a fervor of excitement among their devoted fans. Having already captivated the hearts of film enthusiasts with their remarkable performances that earned them prestigious National honours, this collaboration has raised the bar of expectations to unprecedented heights.


The makers of the film have confirmed the pre-production is nearing completion, and the film’s shooting will commence from April 2024.

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

 *சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!*





*'சீயான் 62' மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!*

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் 'சீயான் 62' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.


'சீயான்' விக்ரம்- எஸ். ஜே. சூர்யா -சுராஜ் வெஞ்சாரமூடு என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த விருது பெற்ற நட்சத்திர கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 


மேலும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Sunday, 3 March 2024

கிராம வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும் ‘லா வில்லா’! - நடிகர்

 கிராம வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும் ‘லா வில்லா’! - நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்


அமைதியான சூழல், ஆரோக்கியமான இருப்பிடம், கிராமத்து உணவு, பம்பு செட்டு குளியல்...! - ஆச்சரியப்படுத்தும் ‘லா வில்லா’ அம்சங்கள்


சென்னைக்கு அருகே இயற்கை சொர்க்க பூமியாக உருவாகியுள்ள ‘லா வில்லா’! - நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்


வேகமான உலகத்தில், அதிவேகமாக பயணிக்கும் மக்கள் இலைப்பாறுவதற்காக விடுமுறை நாட்களை கழிக்க, தேடிச் செல்லும் ரிசார்ட் போன்ற இடங்கள், ஆரவாரம் நிறைந்த, மன அமைதியை கெடுக்கும் இடங்களாக மாறி வரும் நிலையில், அமைதியான சூழல், அழகிய நிலப்பரப்பு, ஆரோக்கியமான உணவு, செயற்கைத்தனமற்ற இயற்கை வாழ்க்கை அனுபவத்தை அளிக்கும் ஒரு அருமையான வில்லா சென்னை அருகே திறக்கப்பட்டுள்ளது.


இயற்கை அழகின் சரியான கலவையாகவும், கிராமத்து வாழ்க்கையின் அனுபவத்தை கொடுக்கும் ஒரு அமைதியான தளமாகவும்  வடிவமைக்கப்பட்டுள்ள ‘லா வில்லா’ (Laa Villa) மகாபலிபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள கடம்பாடி ஊரில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.


வழக்கமான ரிசார்ட் மற்றும் வில்லாக்கள் போல் இல்லாமல், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வில்லாவில் மொத்தம் மூன்று காட்டேஜ்கள் உள்ளன. ’தினை’, ‘வரகு’ மற்றும் ‘சாமை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த காட்டேஜ்கள் பழமையான கிராமத்து வீடுகள் பாணியில் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, தற்போதைய அதிநவீன தொழில்நுட்ப வசதியோடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


வழக்கமான நீச்சல் குளங்களை தவிர்த்துவிட்டு, கிராமத்து அனுபவத்தைக் கொடுக்கும் பம்பு செட் குளியல் தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எந்தவித பாதிப்பும் இன்றி குளித்து மகிழும்படியான இத்தகைய பம்பு செட் தொட்டிகள் நிச்சயம் மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.


தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே வழங்கும் ‘லா வில்லா’ அதை கிராமத்து பாணியில் சமைத்து, அதே கிராமத்து பாணியில் வழங்குகிறது. அவர்களது பண்ணையில் இயற்கையாக வளறும் காய்கறிகள் கொண்டு சைவ உணவுகளை தயாரிப்பவர்கள் அசைவ உணவுக்காக தங்கள் பண்ணையிலேயே நாட்டுக் கோழி மற்றும் ஆடுகளை வளர்க்கிறார்கள். மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளையும் மண் சட்டியில் அமைத்து, மண் மனம் மாறாமல் வழங்குகிறார்கள். மேலும், சிறுதானிய உணவு வகைகள், களி, வரகு அரிசி பணியாரம், மாப்பிள்ளை சம்பா சோறு என நம் பண்டைய ஆரோக்கியமான உணவுகளையும் வழங்குகிறார்கள்.


நூற்றுக்கும் மேற்பட்ட மாமரங்கள், தென்னை மரங்கள் என வில்லா முழுவதும் ஏகப்பட்ட மரங்கள் நிறைந்திருப்பதால், எப்போதுமே குளிர்ச்சியான உணர்வைக் கொடுப்பதோடு, ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பதற்கான சரியான இடமாகவும் ’லா வில்லா’ உள்ளது.


முழுக்க முழுக்க ஒரு இயற்கை வளம் நிறைந்த கிராமத்துக்குள் இருக்கும் உணர்வை கொடுக்கும் ‘லா வில்லா’ குடும்பத்தோடு விடுமுறை நாட்களை கழிப்பதற்கு சரியான இடமாக மட்டும் இன்றி, அமைதியான சூழலோடு, ஆரோக்கியமான வாழ்விற்கான சரியான இடமாக உள்ளது.


மாட்டு வண்டி சவாரி, விசாயம் செய்யும் முறை, காய்கறி பண்ணைகள் என்று எதிர்காலத்தில் இன்னும் பல அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ‘லா வில்லா’ கிராமத்து வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு அத்தகைய வாழ்க்கையை மீட்டுக்கொடுக்கும் விதமாகவும், கிராமத்து வாழ்க்கையின் மகிமையை அனுபவிக்காதவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாகவும் அமைந்திருக்கும் இயற்கையின் சொர்க்கம் என்றால் அது மிகையல்ல.


பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான லலிதா குமாரியின் தனது கனவு திட்டமாக ஆரம்பித்துள்ள ‘லா வில்லா’-வின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டுபவரும், விவசாயிகளை அங்கீகரித்து கெளரவப்படுத்தி வருபவருமான நடிகர் கார்த்தி, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ‘லா வில்லா’ வை திறந்து வைத்தார்.


For Bokking Contact :- 

Laa Villa Resort

9176454033