Naangal Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம naangal ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த உலகத்துல நம்ம ரொம்ப சந்தோசமா இருக்கற ஒரு இடம் னா அது நம்ம இருக்கற வீடு தான். இந்த எடத்துல தான் நமக்கு அதிகமான சந்தோஷமும் கிடைச்சிருக்கு அதே சமயத்துல கஷ்டமும் பட்டிருப்போம். இந்த சந்தோஷத்துக்கும் சரி இல்லனா துக்கத்துக்கும் சரி ஒரே ஒருத்தவங்க தான் காரணம் அது நம்ம குடும்பம் தான். ஆனா எல்லாரோட past story யும் சந்தோசமா இருக்குமா னா கேட்ட அது சந்தேகம் தான். avinash prakash இந்த மாதிரி ஒரு subject அ தான் naangal ல எடுத்துட்டு வந்திருக்காரு.
Naangal Movie Review: https://www.youtube.com/watch?v=4YObPOMjTzM
இந்த படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா ஒரு hill station ல அப்பாவும் அவரோட மூணு பசங்களும் வாழ்ந்துட்டு இருக்காங்க. karthik தான் பெரிய பையன் அடுத்த ரெண்டு பேரும் non identical twins அ இருக்காங்க அவங்க பேரு தான் gautham அப்புறம் dhruv . ஆரம்பத்துல இவங்க அவங்களோட life அ சந்தோசமா வாழ்ந்துட்டு வராங்க. இவங்களோட சந்தோஷம் அலாதியானது ஆனா வீட்ல நடக்கற சின்ன சின்ன பிரச்னைகளால இவங்களோட சந்தோஷம் கம்மியாக ஆரம்பிக்குது. இவங்களோட வீட்ல current ஒ இல்லனா தண்ணியோ எதுவும் இருக்காது. வெளிச்சத்துக்கு oil lamp யும் barrel ல தண்ணியும் பிடிச்சு வைப்பாங்க use பண்ணுறதுக்கு. இதுல இருந்தே பசங்க நல்ல responsible அ இருக்காங்க னு தெரிய வருது ஆனா ராத்திரி இவங்க அப்பா வீட்டுக்கு வரும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. என்னதான் நம்ம பசங்களோட view point ல உலகத்தை பாத்தாலும், இவங்களோட அப்பா பயத்தை வச்சு பசங்கள மிரட்டி தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வைக்குறாரு.
இவரு ரொம்ப strict அ இருக்காரு அதோட பசங்க னா இப்படி தான் இருக்கணும் ன்ற toxic mentality ஓட இருக்காரு. இவரு இந்த மாதிரி இருக்கறதுக்கு காரணம் , ஒரு public school ஓட principal அ இருக்கிறது தான். அதுனால natural லவே இவரு ரொம்ப strict அ இருக்காரு. இன்னொரு பக்கம் இவரோட dominating nature னால பசங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. இவங்க வீட்ல ஒரு நாயை வளப்பாங்க , அந்த நாய்கூட இந்த பசங்கள விளையாட விடமாட்டாரு. theatre ல ஒரு படத்தை பாக்க கூட allow பண்ணமாட்டாரு. ஆனா வீட்ல எந்த ஒரு அழுக்கும் இருக்க கூடாது னு இந்த பசங்க மிரட்டி வச்சுருப்பாரு.
அப்பாவோடதும் சரி பசங்களோட mental peace கொறஞ்சுட்டே போகுது. இந்த மன போராட்டம் தான் இந்த படத்தோட crux னு சொல்லலாம். child abuse ல ஆரம்பிச்சு இது எப்படி psychological அ அதே சமயம் physical அ எவ்ளோ பாதிக்க படுறாங்க ன்றதா ரொம்ப அழகா படத்துல காமிச்சிருக்காங்க. karthick அவங்க அப்பா கிட்ட அடிக்கடி sorry கேட்குறது அடுத்து என்ன நடக்க போகுது அப்பா எப்போ அடிப்பாரு னு தெரியாம பயத்துல வாழ்ந்துட்டு இருக்க பசங்க னு ரொம்ப emotional அ அதே சமயம் எவ்ளோ மன உளைச்சலுக்கு பசங்க ஆளாயிருக்காங்க நும் தெரிய வருது.
இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா இவங்களோட அப்பாக்கு relationship problems னளயும் financial problems நாளையும் ரொம்ப disturb ஆயிருப்பாரு. அதா தான் எப்படி வெளிப்படுத்துறதுனு தெரியாம பசங்கள போட்டு அடிக்கிறது அவங்கள திட்டுறது னு வன்முறையை கை ல எடுக்குறாரு. அதோட இவரு alcohol க்கு ரொம்ப addict ஆவும் இருப்பாரு.
இவரோட மனைவி பத்மா இவரை விட்டு பிரிஞ்சு போயிருப்பாங்க. அதுக்கு முக்கிய காரணம் இவரோட domination தான். இங்கயும் ஒருத்தவங்களோட depression and narcissm னால அவரோட ஒட்டுமொத்த குடும்பமே எப்படி பாதிக்க படுது னு காமிச்சிருக்காங்க. இந்த எடத்துல தான் குடும்பத்துல மூத்த பையன பிறந்த எல்லா responsibility யும் அவங்க தான் எடுக்கணும் ன்ற நிலைமை க்கு தள்ள படுவாங்க அதே மாதிரி தான் இங்க karthick இருப்பாரு. கஷ்டத்துல இந்த மூணு பசங்களும் ஒண்ண எல்லாத்தையும் face பண்ணறாங்க. அதுக்கு அப்புறமா இந்த பசங்க அவங்களோட அம்மாவையும் பாட்டியையும் சந்திக்கறாங்க. அப்போ தான் குடும்பத்தோட இருக்கணும் ன்ற ஒரு ஏக்கம் இவங்களுக்கு வருது. ஏன்னா இவங்கள அரவணைக்கிறதுக்கு அம்மா வீட்ல கிடையாது.
humans ஓட emotions அ காமிக்கிறதுக்காக director யும் cinematographer யும் சேந்து black and white ல frames அ காமிக்கறாங்க. abdhul rafe இந்த பசங்களோட அப்பாவா super அ perform பண்ணிருக்காரு. இந்த படத்துல நெறய language அ use பண்ணிருக்காங்க. dialogues ல tamil , english அப்புறம் அங்க அங்க malayalam
வருது. இதுல ஒரு hindi song யும் குடுத்திருக்காங்க கண்டிப்பா இந்த song எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஒரு கஷ்டமான situation ல ஓவுவுறுத்தவங்களும் எப்படி cope up பண்ணறாங்க ன்றதா சொல்லற விதமா இந்த படத்தோட கதை அமைச்சிருக்கு. family யும் பசங்களோட childhood phase யும் பத்தி அழகா காமிச்சிருக்காங்க. strict அ இருந்த தான் பசங்க ஒழுக்கமா வளருவங்கள ? பசங்க self confident அ இருக்கறதுக்கு அவங்களோட emotions அ மறைக்கிறது முக்கியமா? கொழந்தைகளுக்கு யாரு மேலயும் நம்பிக்கை இல்லனா அது அப்பாவோட தப்பா தான் இருக்கணுமா? ன்ற பல கேள்விகளை நம்மள இந்த படம் யோசிக்க வைக்குது னு தான் சொல்லணும். IFFR film festival ல bright future category ல இந்த படத்தை premiere பண்ண போறாங்க. catagory ஓட title க்கு ஏத்த மாதிரி அப்படியே இந்த படம் apt அ பொருத்தி இருக்கு. கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணாம பாருங்க.
No comments:
Post a Comment